31 மே, 2010

இலங்கை திரைப்பட விழாவில் பங்கேற்க நமீதா மறுப்பு


இலங்கையில் நடைபெறும் சர்வதேச இந்திய திரைப்பட விழாவில் பங்கேற்க மாட்டேன் என்று நடிகை நமீதா கூறியுள்ளார்.

அதன் தொடக்க விழாவில் சிறப்பு நடனமாட அவருக்கு விழாக்குழு சார்பாக அழைப்பு விடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், இதுகுறித்து நமீதா கூறியிருப்பதாவது:

இலங்கை திரைப்பட விழாவுக்காக சில தினங்களுக்கு முன் என்னிடம் தொடர்பு கொண்டார்கள். விழாவில் நடனமாடுமாறு கேட்டுக் கொண்டனர். அதற்காக பெரும் தொகை தருவதாக கூறினர்.

இலங்கையில் நடைபெறும் அந்த விழா தொடர்பாக தமிழ் திரையுலகில் எதிர்ப்பு இருக்கும்போது என்னால் கலந்துகொள்ள முடியாது என்று தெரிவித்துவிட்டேன்.

திரையுலகில் எனக்கு வாழ்வு கொடுத்தது தமிழர்கள் தான். எனது புகழுக்கு காரணமும் அவர்களே. எனவே, என்னிடம் வேறு யாரும் அறிவுரை கூறும் முன்னர், நானே அந்த விழாவில் பங்குபெற முடியாது என்று பதில் கூறிவிட்டேன்.

வாழ வைத்த தமிழர்களுக்கு துரோகம் செய்ய விரும்பவில்லை.

இவ்வாறு நமீதா கூறியுள்ளார்.

இலங்கையில் ஏராளமான அப்பாவித் தமிழர்களை ராணுவத்தினர் சுட்டுக் கொன்றது மற்றும் போர்க்குற்றம் தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும் என்று சர்வதேச மன்னிப்பு சபையும் ஐநா சபையும் கோரிக்கை விடுத்துள்ளன.

இதனிடையே இலங்கை ராணுவத்தின் அத்துமீறலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அந்நாட்டில் நடைபெறும் திரைப்பட விழாவில் பங்கேற்க மாட்டோம் என்று தமிழ் திரையுலகம் சார்பில் அறிவிக்கப்பட்டது.

மேலும், சர்வதேச திரைப்பட விழாவை இலங்கையில் நடத்தக் கூடாது என்றும் அந்த விழாவில் பங்கேற்கக் கூடாது என்றும் அதன் விளம்பரத் தூதரான நடிகர் அமிதாப் பச்சனுக்கு தமிழ் திரையுலகம் சார்பில் ஏற்கெனவே கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும் இங்கே தொடர்க...

30 ஆண்டுகளுக்கு பிறகு இலங்கையில் மக்கள் தொகை கணக்கெடுப்பு அடுத்த ஆண்டு நடக்கிறது

.



இலங்கையில் கடந்த 1981-ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதன் பின்னர் வடக்கு மற்றும் மேற்கு மாகாணங்களில் ராணு வத்துக்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையே உள்நாட்டு போர் நடைபெற்று வந்தது.

எனவே, அங்கு 30 ஆண்டுகளாக மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்படவில்லை. தற்போது போர் முடிவுக்கு வந்து விட்டது.

எனவே, அடுத்த ஆண்டு (2011) மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்த இலங்கை அரசு முடிவெடுத்துள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் நடந்த பாராளுமன்ற தேர்தலின் போது வடக்கு மாகாணத்தில் 25 சதவீதத்துக்கும் குறைவாக வாக்குகள் பதிவாகின.

இதன் மூலம் பெரும் பாலான மக்கள் அங்கிருந்து வேறு பகுதிக்கு குடிபெயர்ந்து இருக்கலாம் என இலங்கை அரசு கருதுகிறது. தற்போது கணக்கெடுப்பு நடத்துவதன் மூலம் இலங்கையின் மக்கள் தொகை 2 கோடியே 10 லட்சமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் இங்கே தொடர்க...

கிளிநொச்சியில் சடலங்கள் மீட்பு : இன்று மீண்டும் தேடுதல்

கிளிநொச்சி கணேசபுரத்தில் கண்டுபிடிக்கப்பட்ட சடலங்களைத் தொடர்ந்து, மேலும் சடலங்கள் இருக்கலாம் என்ற சந்தேகத்தில், இன்று அந்தச் சுற்று வட்டத்தில் மீண்டும் தேடுதல் நடவடிக்கை எடுக்கப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

கிளிநொச்சி கணேசபுரத்தில் மீளக் குடியமர்ந்த மக்கள், நேற்று முன்தினம் மலசலக் குழியைத் துப்புரவு செய்த வேளை, அதற்குள் இருந்து பொலித்தீன் பைகளில் சுற்றிய நிலையில் சடலங்கள் கிடப்பதைக் கண்டனர்.

உடனே அவர்கள் பொலிஸாருக்குத் தகவல் தெரிவித்தனர். ஸ்தலத்துக்கு விரைந்த பொலிஸார், அவ்விடத்தில் இருந்து நேற்று முன்தினம் 3 சடலங்களை மீட்டனர். அதனைத் தொடர்ந்து நேற்று மேலும் 3 சடலங்கள் மீட்கப்பட்டன.

அங்கு வந்த கிளிநொச்சி மாவட்ட நீதவான் சடலங்களைப் பார்வையிட்டு, மேலும் அவ்விடத்தில் தேடுதல் நடவடிக்கையை மேற்கொள்ள உத்தரவிட்டார்.

இதற்காக அவ்விடத்திற்கு நிலம் தோண்டும் கனரக வாகனங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. இன்று நீதவான் முன்னிலையில் நிலத்தை மேலும் தோண்டும் நடவடிக்கை மேற்கொள்ளப்படிகிறது.

மீட்கப்பட்ட சடலங்கள் 5 அல்லது 6 மாத காலத்திற்கு முன் கொலை செய்யப்பட்டு போடப்பட்டிருக்கலாம் எனக் கூறப்படுகின்றது.
மேலும் இங்கே தொடர்க...

அரசின் நடவடிக்கை வெளிப்படையாக அமைய வேண்டும் : ததேகூ

தமிழ் மக்களின் ஏகப் பிரதிநிதிகளாக ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இன்று நாட்டின் மூன்றாவது அரசியல் சக்தியாகவும் பரிணமித்துள்ளது. இந்நிலையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைப் புறக்கணித்து விட்டு தீர்வுகள் முன்வைக்கப்படுமாயின் அது நியாயத் தன்மையுடையதாக அமையாது என்று கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.

அரசாங்கத்தினால் எடுக்கப்படுகின்ற தன்னிச்சையான தீர்மானங்களும் அது சார்ந்த திட்ட வரைபுகளும் வெளிப்படைத் தன்மை கொண்டதாக அமைய வேண்டும் என்றும் அவர் சொன்னார்.

புதிய நாடாளுமன்றம் அமைந்ததன் பின்னர் தமிழர் பிரச்சினைகளுக்கு உரிய தீர்வு காணும் வகையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உள்ளிட்ட தமிழ்க் கட்சிகளுடன் பேச்சு நடத்தப்படும் என்று அரசாங்கம் அறிவித்திருந்த போதிலும், அது இதுவரையில் நடைபெறாதிருப்பது குறித்து கருத்து வெளியிடுகையிலேயே செல்வம் எம்.பி. மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில்,

"பல வருட காலமாக எதிர்நோக்கப்பட்டும் அரசாங்கங்களினால் இழுத்தடிக்கப்பட்டும் வருகின்ற தேசிய இனப் பிரச்சினைக்குத் தீர்வு எனும் விடயம் ஒளிவு மறைவு கொண்டதாக அமையக் கூடாது என்பதை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தொடர்ந்தும் வலியுறுத்தி வருகின்றது.

சர்வதேசத்தின் மத்தியஸ்தத்துடன் முன்வைக்கப்படுகின்ற நியாயமானதும் ஏற்றுக் கொள்ளக்கூடியதுமான தீர்வுகளைத் தமிழ் மக்களும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் வரவேற்கும்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைப் பொறுத்தவரை இந்நாட்டில் மூன்றாவது அரசியல் சக்தியாகவும் மக்கள் செல்வாக்குப் பெற்ற அமைப்பாகவும் அது திகழ்கின்றது. இதன் மூலம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைத் தமது பிரதிநிதித்துவக் கட்சியாக தமிழ் மக்கள் ஏற்றுக் கொண்டுள்ளனர்.

இவ்வாறானதோர் நிலையில் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கான தீர்வுகளை அணுகும் விடயத்தில் அரசாங்கம் முதலில் எம்மை அழைத்து எமது தரப்பு ஆலோசனைகளையும் உள்வாங்க வேண்டிய தேவை இருக்கின்றது.

எந்தச் சந்தர்ப்பத்திலும் எம்மை ஒதுக்கித் தள்ளிவிடவோ அல்லது புறக்கணித்து விடவோ அரசாங்கம் முயற்சிக்கக் கூடாது.

இவ்வாறான புறக்கணிப்புகள், ஓரங்கட்டுதல்கள் ஆகியவையே தேசிய இனப் பிரச்சினை உருவாவதற்கும் அது இந்த அளவில் உச்சம் பெற்றிருப்பதற்கும் காரணமாக அமைந்துள்ளன. அரசாங்கத்திற்கு இவ்விடயத்தில் கடமையும் பொறுப்பும் இருக்க வேண்டும்.

தமிழர் பிரச்சினைக்குத் தீர்வு காணும் விடயத்தில் 13ஆவது திருத்தச் சட்டத்திற்கு அப்பால் செல்லவும் தான் தயாராக இருப்பதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கடந்த காலங்களில் பகிரங்கமாக கூறி வந்தார். இதே நிலைப்பாட்டை இந்தியா உள்ளிட்ட உலக நாடுகளுக்கும் தெரிவித்து வந்தார்.

ஆனால் இன்று அந்த அறிவிப்புகளும் நிலைப்பாடுகளும் தடம்புரண்ட நிலையில் காணப்படுவதாகவே இருக்கின்றது.

உறுதி மொழிகளும் நிலைப்பாடுகளும் தீர்வாக அமைந்து விடப்போவதில்லை என்பதையும் அதனை நடைமுறையில் சாத்தியப்படுத்துவதன் ஊடாகவே தீர்வுகளுக்கான வழி பிறக்கும் என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும்.

அரசாங்கம் மனசாட்சியுடன் நடந்து கொள்ளவில்லை என்பது அதன் தற்கால நடவடிக்கைகள் எடுத்துக் காட்டி வருகின்றன.

இதுவரை காலமும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு உத்தியோகபூர்வமாக அழைப்பெதனையும் அரசாங்கம் விடுவிக்கவில்லை. அமைச்சர்கள் கூறுவதாகவே ஊடகங்கள் செய்தி வெளியிடுகின்றன.

அது மட்டுல்லாது தீர்வுத் திட்டம் தொடர்பிலான வரைபொன்றை அரசாங்கம் தயாரித்திருப்பதாகவும் அதனை இந்தியாவிடம் கையளிக்கவிருப்பதாகவும் கூறப்படுகின்றது. இதனை எம்மால் ஏற்றுக்கொள்ள முடியாது. இந்தியாவின் தலையீடுகள், அழுத்தங்களை முழுமையாக ஆதரிக்கின்ற நாம் எமது மக்கள் தொடர்பிலான விடயங்களில் எமது ஆலோசனைகளும் உள்வாங்கப்பட வேண்டும் என்பதை விரும்புகிறோம்.

ஆகவேதான் எம்மை புறக்கணித்துவிட்டு எட்டப்படுகின்ற தீர்மானங்கள் நிறைவுடைத் தன்மை கொண்டதாக அமையாது என்பதையும் ஆரம்பத்திலேயே கூறி வைக்க விரும்புகிறோம்.

எமக்கான தீர்வுகள் வழங்கப்பட வேண்டுமே தவிர திணிக்கப்படுவதை எம்மால் ஏற்றுக் கொள்ள முடியாது. அதற்கு நாம் உடன்படப் போவதுமில்லை" என்றார்.
மேலும் இங்கே தொடர்க...

பொன்சேகாவுக்கு முறையான உரிமைகள் வழங்க வேண்டும் இலங்கை மந்திரியிடம் அமெரிக்கா வற்புறுத்தல்


இலங்கை அதிபர் தேர்தலில் மஹிந்தா ராஜபஹ்சா வுக்கு எதிராக ராணுவ தளபதி சரத் பொன்சேகா போட்டியிட்டு தோல்வி அடைந்தார். அதைத் தொடர்ந்து இலங்கை அரசுக்கு எதிராக செயல்பட்டதாகவும், அதிபர் ராஜபக்சேவை கொல்ல சதி திட்டம் தீட்டியதாகவும் பொன்சேகா மீது குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டார்.

இந்த நிலையில் இலங்கை வெளியுறவுத் துறை மந்திரி பெய்ரிஸ் அமெரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அப்போது, பொன்சேகாவுக்கு முறையான உரிமைகள் வழங்க வேண்டும் என்று தெற்கு மற்றும் மத்திய ஆசியாவிற்கான அமெரிக்க துணைச் செயலாளர் ராபர்ட் பிளாக் தெரிவித்து உள்ளார்.

இதுபற்றி செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், இலங்கை அரசு போர் குற்றம் சாட்டப்பட்ட வழக்கில் பொன்சேகாவுக்கு முறையான உரிமைகளை வழங்கியதாக தெரியவில்லை. இந்த வழக்கில் வெளிப்படையான நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். அதனால் இலங்கை அரசு இதை மிக முக்கியமானதாக கருதி செயல்பட வேண்டும், என்றார்.
மேலும் இங்கே தொடர்க...

சட்டவிரோதப் பயண எச்சரிக்கை

ஆஸ்திரேலிய அரசு வெளியிட்டுள்ள பத்திரிகை அறிவித்தல் ஒன்று
இலங்கையிலிருந்து ஆஸ்திரேலியாவிற்கு கடல் வழியாய் சட்டவிரோதப் பயணம் செய்வதற்கு எதிராக இலங்கை பத்திரிகைகளில் ஆஸ்திரேலிய அரசாங்கம் அறிவித்தல்களை வெளியிட்டு வருகின்றது.

சட்டவிரோதக் குடியேற்றத்துக்கு எதிராக எச்சரிக்கை விடுக்கும் விதமாகவும், மக்களுக்கு இது தொடர்பில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும் இந்த பத்திரிகை அறிவித்தல்கள் அமைந்துள்ளன.

இலங்கையர்களின் புகலிடக் கோரிக்கைகள் பரிசீலிக்கப்படுவதை ஆஸ்திரேலியா இடைநிறுத்தியுள்ளது இந்த அறிவித்தல்களில் விளக்கப்பட்டுள்ளது.

"முறையற்ற விதத்தில் படகு மூலம் ஆஸ்திரேலியாவிற்கு செல்ல முயற்சித்து உயிரைப் பணயம் வைக்க வேண்டாம், மனிதர்களைக் கடத்துபவர்களினால் தப்பான பாதையில் செல்ல வேண்டாம்." என்றும் இதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

"பயனற்ற பயணத்திற்காக பணத்தை வீணாக்க வேண்டாம்" என்றும் இந்த அறிவித்தல்களில் ஆஸ்திரேலிய அரசாங்கம் குறிப்பிட்டுள்ளது.

பொருளாதார இழப்பு, உயிரிழப்பு, பிற நாடொன்றில் தடுத்துவைப்பு, பிற நாடொன்றில் நிர்க்கதியாகுதல், நாடு கடத்தப்படுதல் போன்ற நிலைகளை மக்களுக்கு எடுத்துரைக்கும் வகையில் அறிவித்தல்கள் வெளியாகி வருகின்றன.
மேலும் இங்கே தொடர்க...

பெளர்மணி-அமாவாசையில் அதிகரிக்கும் சுறா தாக்குதல்!

பெளர்மணி, அமாவாசை நாட்களில் தான் சுறா மீன்கள் மக்களை அதிகம் தாக்குதவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.

அதிலும் கருப்பு, வெள்ளை நீச்சல் உடைகளில் குளிப்பவர்களையே சுறாக்கள் அதிகம் தாக்குவதும் தெரியவருகிறது.

அமெரிக்காவைப் பொறுத்தவரை குறிப்பாக ஆகஸ்ட் மாதங்களில் தான் சுறா தாக்குதல்கள் அதிகமாக உள்ளதாகவும் ஆய்வு தெரிவிக்கிறது.

அமெரிக்காவில் புளோரிடா மாகாணத்தில் உள்ள வோலுசியா பகுதி கடற்கரையில் தான் உலகிலேயே மிக அதிக அளவில் சுறா தாக்குதல்கள் நடக்கின்றன.

இந்தப் பகுதியில் கடந்த 50 ஆண்டுகால சுறா தாக்குதல்களை புளோரிடா பல்கலைக்கழகம் ஆய்வு செய்ததில் இந்த விவரங்கள் தெரியவந்துள்ளன.

1996ம் ஆண்டு முதல் 2008ம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலத்தில் உலகில் நடந்த சுறா மீன்களின் தாக்குதலில் 5ல் ஒன்று மத்திய புளோரிடாவில் தான் நடந்துள்ளது.

அதிலும் குறிப்பாக பெளர்ணமி மற்றும் அமாவாசை தினங்களில் தான் அதிகளவில் தாக்குதல்கள் நடந்துள்ளன. இந்த நாட்களில் கடலில் அலைகள் அதிகமாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

பெளர்ணமி மற்றும் அமாவாசை தினங்கள் மீன்களின் இனப்பெருக்க நாட்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நாட்களில் சுறாக்கள் உண்ணும் மீன்களின் நடமாட்டத்துக்கும் சுறாக்களின் தாக்குதல்களுக்கும் தொடர்பு இருக்கலாம் என்றும் தெரிகிறது.

ஆகஸ்ட் மாதத்தில் ஏன் இந்தத் தாக்குதல்கள் அதிகம் நடக்கின்ற என்றால், அமெரிக்காவில் அது கோடை காலம் என்பதால், அந்த மாதத்தில் கடற்கரையில் அதிக மக்கள் கூடுவதே காரணம் என்கிறது ஆய்வு.
மேலும் இங்கே தொடர்க...

மாஜி பெண் விடுதலைபுலிகளுக்கு வேலை



கொழும்பு:இலங்கையில் உள்ள பிரபல ஆடை தயாரிப்பு நிறுவனம், முன்னாள் பெண் விடுதலைப் புலிகள் 1,200 பேருக்கு தங்களது நிறுவனத்தில் வேலை வாய்ப்பு அளிக்க முன்வந்துள்ளது.இலங்கையின் பிரபல தனியார் ஆடை தயாரிப்பு நிறுவனம் "த்ரீ ஸ்டார்' பி.லிட்., கொழும்பில் இந்நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்நிறுவனம், முன்னாள் பெண் விடுதலைப் புலிகள் 1,200 பேருக்கு வேலை வாய்ப்பு அளிக்க திட்டமிட்டுள்ளது. புலிகள் அமைப்பில் இருந்த ஏராளமான பெண்கள்,

இறுதிக்கட்ட போர் முடிந்த பின், கைது செய்யப்பட்டனர். இவர்கள், சிறப்பு நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர். அங்கு அவர்களின் மன அழுத்தத்தை போக்கும் வகையிலான பயிற்சிகள் மற்றும் வேலை வாய்ப்புகள் தொடர்பான பயிற்சிகள் அளிக்கப்பட்டன. இந்த பயிற்சியை முடித்த 1,200 பேருக்கு தான், தற்போது வேலை அளிக்க இந்த தனியார் நிறுவனம் முன்வந்துள்ளது. முதல்கட்டமாக, 150 பெண்கள் இன்று முதல் பணியில் சேர்த்துக் கொள்ளப்படவுள்ளனர்.
மேலும் இங்கே தொடர்க...

தோல்வியடைந்த முன்னாள் அமைச்சர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்களைஇல்லங்களில் இருந்து வெளியேறுமாறு எச்சரிக்கை

அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ இல்லங்களில் ,வெளியேறாது தொடர்ந்தும் அங்கு தங்கியிருக்கும் தேர்தலில் தோல்வியடைந்த முன்னாள் அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களை அங்கிருந்து வெளியேறுமாறு பொதுநிர்வாகம் மற்றும் உள்நாட்டு அலுவல்கள் அமைச்சு எச்சரிக்கை விடுத்துள்ளது.

கெப்படிகொல மாவத்தையில் உள்ள அரசாங்கத்திற்கு சொந்தமான உத்தியோபூர்வ இல்லங்களில் தங்கியிருந்த முன்னாள் அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களை தேர்தல் முடிவடைந்து இருவாரங்களுக்குள் அங்கிருந்து வெளியேறுமாறு அறிவிக்கப்பட்டிருந்த போதிலும் அவர்கள் எவரும் இதுவரை அங்கிருந்து வெளியேறவில்லை.

இந்த வீடுகளில் தங்கியிருக்கும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.எஸ்.செல்லசாமி மற்றும் துரைரட்ணசிங்கம் ஆகியோர் இம்மாதம் இறுதி வரை அங்கு தங்கியிருக்க அனுமதி கோரியிருந்தனர். வேறு எவரும் அவ்வாறான கோரிக்கைகளை விடுவிக்கவில்லை எனவும் இதன் காரணமாக அரச உடமைகளை கையகப்படுத்தும் சட்டத்தின் கீழ் வழக்கு தாக்கல் செய்து பிஸ்கல் அதிகாரத்தை பயன்படுத்தி வீடுகளை கைப்பற்றவுள்ளதாகவும் பொதுநிர்வாக மற்றும் உள்நாட்டு அலுவல்கள் அமைச்சின் செயலாளர் டி.திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
மேலும் இங்கே தொடர்க...

கிளிநொச்சியிலிருந்து புங்குடுதீவிற்குச் சென்ற குடும்பஸ்தர் படுகொலை

கிளிநொச்சியிலிருந்து புங்குடுதீவிற்குச் சென்ற குடும்பஸ்தர் ஒருவர் 10 ஆயிரம் ரூபாவிற்காக அடித்து நேற்று மாலை படுகொலை செய்யப்;பட்டுள்ளார். கொல்லப்பட்டவர் கிளி;நொச்சியைச் சேர்ந்த 56 வயதுடைய சோமசுந்தரம் சுப்பிரமணியம் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

நேற்றுக் காலை கிளிநொச்சியிலிருந்து புங்குடுதீவிற்கு சென்றுவிட்டு மீண்டும் கிளிநொச்சி திரும்புவதற்காக அப்பகுதியிலுள்ள ஆலடிச் சந்தியில் பஸ்ஸிற்கு காத்துக் கொண்டிருந்த வேளை மது அருந்துவதற்காக அப் பகுதியில் வந்த இருவரிடம் மதுபானச்சாலை எங்கே என்று கேட்டுள்ளார். மதுபானச்சாலையைக் காட்டுவதாக அழைத்துச் மேற்படி இருவரும் அவரது தலையின் பின்புறமாக கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்து விட்டு அவரிடம் இருந்த 10 ஆயிரம் ரூபாவையும் அபகரித்துக் கொண்டு தப்பிச் சென்றுள்ளனர். சடலம் புங்குடுதீவுப் பகுதியில் உள்ள தென்தென்திடல் பிள்ளையார் கோவில் வீதியில் மீட்கப்பட்டது.

சடலம் தற்போது யாழ் போதனா வைத்தியசாலை பிரேத அறையில் காவற்துறையினரால் ஒப்படைக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பாக காவற்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
மேலும் இங்கே தொடர்க...

மீள்குடியேற்றம் முழுமை பெற்றதும் திருமுறிகண்டி ஆலயம் மக்கள் பிரதிநிதிகளிடம்



இந்து கலாசார திணைக்கள பணிப்பாளர் விளக்கம்

முல்லைத்தீவு திருமுறிகண்டி பகுதியில் மக்களின் குடியேற்றம் முழுமை பெற்றதும் திருமுறிகண்டி ஆலய நிர்வாகம் மக்கள் பிரதிநிதிகளிடமே ஒப்படைக்கப்படும். அதுவரை ஜனாதிபதி செயலகத்தின் பணிப்பிற்கமைய தற்காலிக ஏற்பாடாக இந்து கலாசார நிதியம், முல்லைத்தீவு அரச அதிபர், பிரதேச செயலாளர் அடங்கிய பரிபாலன சபையே ஆலயத்தை நிர்வகித்து வருமென இந்துசமய கலாசார திணைக்களத்தின் பணிப்பாளர் திருமதி சாந்தி நாவுக்கரசன் தெரிவித்துள்ளார்.

இவ்வாலயத்தை அரசு பொறுப்பேற்றுள்ளது என்பதும் ஆலய நிதியை அரசு கையாள்கிறது என்பதும் தவறான கருத்தாகுமென இந்து சமய இந்து கலாசார திணைக்களம் அறிவித்துள்ளது.

கொழும்பு – யாழ். ஏ-9 பாதையில் முல்லைத்தீவு மாவட்டத்தில் திருமுறிகண்டியில் கோயில் கொண்டெழுந்தருளியிருக்கும் விநாயகப் பெருமானின் ஆலய நிர்வாகம் தொடர்பாக தவறான கருத்துக்கள் நிலவி வந்துள்ளன.

உண்மை நிலையை விளக்கும் பொருட்டு இந்து சமய இந்து கலாசார திணைக்களத்தின் பணிப்பாளர் சாந்தி நாவுக்கரசன் மேற்படி அறிக்கையை வெளியிட்டுள்ளார்.

அறிக்கையில் மேலும் தெரிவித் துள்ளதாவது கடந்த வருடம் யுத்தம் முடிவுற்ற பின்னர் ஏ-9 பாதை திறக்கப்பட்டு பொதுமக்களுக்கான வாகனப் போக்குவரத்து ஆரம்பமானவுடன் திருமுறிகண்டி ஆலயத்தை பொதுமக்கள் தரிசித்துச் செல்லவேண்டும் என்ற தொடர்ச்சியான கோரிக்கைகள் திணைக்களத்துக்கு விடுக் கப்பட்டன.

இதனைத் தொடர்ந்து இவ்வாலயத் துக்கென குருக்கள் ஒருவரை நியமித்து முறையான பூஜைகளை நடத்தும் ஒழுங்கு களை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி செயலகத்திலிருந்து இந்துசமய கலாசார அலுவல்கள் திணைக்களத்துக்குப் பணிப் புரை வழங்கப்பட்டது.

அதற்கமைவாகவே குருக்கள் ஒருவர் நியமிக்கப்பட்டு வழமையான பூஜைகள் ஆரம்பிக்கப்பட்டன. இதன் தொடர்ச்சியாக ஆலயத்தின் சூழலை முகாமை செய்து கொள்வதற்காக திணைக்களத்தின் மூலம் முகாமையாளர் ஒருவரும் நியமிக்கப்பட்டார்.

இவ்வாலயம் தொடர்பாக திணைக் களத்தில் பேணப்படும் கோவையின் ஆதாரங்களுக்கமைய 1992ஆம் ஆண்டி லிருந்து தலைவர், செயலாளர், பொரு ளாளர் மற்றும் செயற் குழு உறுப்பி னர்கள் அடங்கிய பொதுமக்கள் நிர் வாகம் ஏற்படுத்தப்பட்டு புதிய யாப்பு விதிகள் உருவாக்கப்பட்டு அப்பிரதேச மக்களாலேயே அவ்வாலயம் நிர்வகிக் கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி செயலக பணிப்பிற்கமைய தற்காலிக ஏற்பாடாகவே திணைக்களம் இந்து கலாசார நிதியம், முல்லைத்தீவு மாவட்ட அரச அதிபர், பிரதேச செயலாளர் அடங்கிய பரிபாலன சபை ஒன்று உருவாக்கப்பட்டு இவ்வாலயம் நிர்வகிக்கப்பட்டு வருகின்றது.

சட்டபூர்வமாக இவ்வாலயத்தை அரசு பொறுப்பேற்றுள்ளது என்பதும் ஆலய நிதியை அரசு கையாள்கிறது என்பதும் மிகவும் தவறான கூற்றுக்களாகும். ஆலயத்தின் திருப்பணி வேலைகளுக்கும், சுற்றுச்சூழல் வசதிகளுக்குமாகவே ஆலய வருமானம் பயன்படுத்தப்படுகின்றது என்பதே உண்மையாகும்.

இப்பிரதேசத்தில் பொதுமக்கள் குடியேற்றம் முழுமைபெறும் போது இப்பிரதேசத்தைச் சேர்ந்த பொது மக்கள் பிரதிநிதிகளிடம் இவ்வாலய நிர்வாகம் கையளிக்கப்படவுள்ளது.

அத்துடன் மிகுதியான ஆலய வருமானம் இப்பிரதேச நலன்புரிப் பணிகளான ஆதரவற்ற சிறுவர் கல்வி, முதியோர் இல்லங்களின் பராமரிப்பு போன்ற வற்றுக்கு மட்டுமே முன்னுரிமை யளித்து செலவிடப்பட திட்டமிடப் பட்டுள்ளது.

இவ்வாலயம் தொடர்பான நிர்வாக ரீதியான தீர்மானங்கள் அனைத்தும் முல்லைத்தீவு மாவட்ட அரச அதிபருடன் கலந்தாலோசிக்கப்பட்டே மேற்கொள்ளப் படுகின்றன.
மேலும் இங்கே தொடர்க...

குவைத்திலிருந்து 36 பணிப்பெண்கள் நேற்று நாடு திரும்பினர்

விசா காலாவதி காரணமாக குவைத்திலுள்ள இலங்கை தூதரகத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளோரில் 36 பணிப் பெண்கள் நேற்று நாடு திரும்பியுள்ளனரென வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்தது.

நேற்று காலை இவர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்ததுடன், மேலும் சிலர் எதிர்வரும் வாரங்களில் நாட்டுக்குத் திரும்பவுள்ளதாக பணியகத்தின் உயரதிகாரியொருவர் நேற்றுத் தெரிவித்தார்.

இலங்கையிலிருந்து குவைத் நாட்டுக்குப் பணிப்பெண்களாகச் சென்ற இவர்கள் பல்வேறு காரணங்களினால் மீண்டும் நாட்டுக்குத் திரும்புவதற்குத் தீர்மானித்துள்ள துடன் குவைத்திலுள்ள இலங்கைத் தூதரகத்தில் தங்கியுள்ளனர். இந் நிலையில் இவர்களின் விசா காலாவதியாகியுள்ள தெனவும் அவ்வதிகாரி தெரிவித்தார்.

வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் மேற்கொண்ட நடவடிக்கையினால் இவர்கள் கட்டம் கட்டமாக இலங்கைக்கு அழைத்து வரப்படுகின்றனரெனவும் அவர் மேலும் தெரிவித்தார்
மேலும் இங்கே தொடர்க...

யாழ்ப்பாணம், அம்பாந்தோட்டையில் இந்திய பிரதி உயர்ஸ்தானிகராலயங்கள்? இரு நாடுகளின் உயர்மட்ட குழுக்கள் ஆராய்வு


இலங்கையில் புதிதாக இரண்டு இந்திய பிரதி உயர் ஸ்தானிகராலயங்களை ஸ்தாபிப்பது தொடர்பாக இரு நாடுகளினதும் உயர்மட்டக் குழுக்கள் ஆராய்ந்து வருவதாக வெளிவிவகார அமைச்சு வட்டாரங்கள் தெரிவித்தன.

யாழ்ப்பாணத்திலும் அம்பாந் தோட்டையிலுமே இந்திய பிரதி உயர் ஸ்தானிகராலயங்கள் ஸ்தாபிக்கப்படுவது தொடர்பாக ஆராயப்பட்டு வருகின்றது.

கண்டியில் தற்போது இயங்கி வரும் இந்திய பிரதி உயர் ஸ்தானிகராலயத்துக்கு மேலதிகமாகவே யாழ்ப்பாணத்திலும் அம்பாந்தோட்டையிலும் இவற்றை நிறுவுவது தொடர்பாக இரு நாடுகளிடையிலும் கலந்தாலோசிக்கப்பட்டு வருவதாகவும் அமைச்சின் அதிகாரியொருவர் தெரிவித்தார்.

ஜனாதிபதியின் இந்திய விஜயத்தின் போது இவ் விடயம் தொடர்பாக ஆராயப்படுமெனவும் எதிர்பார்க்கப்ப டுகிறது.
மேலும் இங்கே தொடர்க...

1948 தொலைபேசி ஊடாக இலவச சுகாதார ஆலோசனை


புகையிலைப் பாவனை மற்றும் புகைப்பிடித்தல் பழக்கவழக்கங்களிலிருந்து தவிர்ந்து கொள்வதற்காக தொலைபேசி ஊடாக இலவச ஆலோசனை வழங்கும் சேவையொன்று இன்று 31ம் திகதி அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்படவிருக்கி ன்றது.

உலக புகையிலை பாவனை எதிர்ப்பு தினத்தின் நிமித்தம் சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேனவின் ஆலோசனைக்கு அமைய அங்குரார்ப்பணம் செய்யப்படுகின்ற இச்சேவைக்கு நாடு சுதந்திரமடைந்த வருடமான 1948ம் ஆண்டே இலக்கமாக வழங்கப்பட்டிருப் பதாக அமைச்சின் அதிகாரியொருவர் நேற்று தெரிவித்தார்.

1948 என்ற தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொள்வதன் மூலம் புகையிலை பாவனை, புகைப் பிடித்தல் பழக்கவழக்கம் என்பவற்றைத் தவிர்ந்து கொள்வதற்கான ஆலோசனைகள் வழங்கப்படும்.

இப்பழக்கவழக்கங்களால் ஏற்படும் பாதிப்புக்கள் குறித்தும் தெளிவு படுத்தப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

இந்த ஆலோசனைச் சேவையில் உளவள மருத்துவ நிபுணர்களும், பொதுமருத்துவ நிபுணர்களும் ஆலோசனை வழங்குவர் என்றும் அவர் கூறினார்.
மேலும் இங்கே தொடர்க...

புனர்வாழ்வு பெற்ற 150 பேருக்கு இன்று நிரந்தர தொழில் நியமனம்

‘தனியார் ஆடைத் தொழிற்சாலையில் மேலும் 1500 பேருக்கு தொழில் வாய்ப்பு


புனர்வாழ்வு அளிக்கப்பட்ட முன்னாள் புலி உறுப்பினர்கள் 1500 பேருக்கு விரைவில் நிரந்தர தொழில் வாய்ப்பு வழங்கும் பொருட்டு அரசாங்கத்துடன் உடன்படிக்கையில் கைச்சாத்திட்டுள்ளதாக ட்ரைஸ்டார் ஆடைத் தொழிற்சாலையின் தலைவர் தேசமான்ய கலாநிதி குமார் தேவபுர தெரிவித்தார்.

இதன் முதற்கட்டமாக 150 பேருக்கு இன்று திங்கட்கிழமை நியமனம் வழங்கப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

இன்று திங்கட்கிழமை கொழும்பு இரத்மலானையிலுள்ள தங்களது ட்றை ஸ்டார் ஆடைத் தொழிற்சாலையில் நிரந்தர நியமனம் வழங்கப்படுமென நேற்று முன்தினம் கொழும்பு நிப்போன் ஹோட்டலில் இது சம்பந்தமாக விளக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் அவர் தெரிவித்தார். இந்த நியமனம் வழங்கும் நிகழ்வில் புனர்வாழ்வு அமைச்சர் டி.யூ. குணசேகர, மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன், தொழில் அமைச்சர் காமினி லொக்குகே உட்பட தொழில்வாய்ப்பு பெறும் யுவதிகளின் பெற்றோர்களும் கலந்து கொள்ளவுள்ளனர்.

இவ்வாறு நியமனம் பெறும் யுவதிகளுக்கு தங்குமிட வசதி, உணவு உட்பட பல வசதிகள் இலவசமாக வழங்கப்படும் எனவும் ஒவ்வொரு யுவதிகளுக்கும் ஆகக் குறைந்தது இரண்டாயிரத்து ஐநூறு ரூபா சம்பளமாக வழங்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

ட்றை ஸ்டார் ஆடைத்தொழில் நிறுவனம் நாடளாவிய ரீதியில் 16 ஆடைத் தொழிற்சாலைகளை கொண்டிருப்பதுடன் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களை வேலையில் அமர்த்தி அவர்களுக்கு கவர்ச்சிகரமான சம்பளத்தை வழங்கி வருகின்றது
மேலும் இங்கே தொடர்க...

பெளத்தத்தை பாதுகாக்கவும் மதமாற்றத்தை தடுக்கவும் சட்டம்

எதிர்கால சந்ததியினருக்காக பெளத்த மதத்தையும் மகா சங்கத்தையும் பாதுகாப்பதற்காக ஐந்து சட்டங்களை அறிமுகப் படுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ள தென பிரதமர் டி. எம். ஜயரத்ன தெரிவித்தார்.

அமைச்சரவையின் கடந்த முறை கூட்டத்தில் இது பற்றி பிரஸ்தாபிக்கப் பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

பெளத்தம் தொடர்பான விடயங்களில் அரசாங்கத்துக்கு ஆலோசனை வழங்க முன்னணி பெளத்த பிக்குகள் அடங்கிய சங்க சபையொன்றை அமைப்பது தொடர்பாகவும் பிரேரணையில் முன்வைக்கப்பட்டுள்ளது. அத்துடன், பலவந்த மத மாற்றத்தை தடுத்தல் மற்றும் பெளத்தம் தொடர்பான புதிய நடைமுறைகள் பற்றி மத வட் டாரங்களிடையிலான கலந்துரை யாடல் நடத்துவது பற்றியும் பிரேரணைகள் முன்வைக்கப்பட வுள்ளன.

மேற்படி சட்டப் பிரேரணைகளுடன் கிராமப்புற விகாரைகளின் உட்கட்டமைப்பு மற்றும் தேவைகளுக்கு நிதி வழங்குதல், விகாரைகளுக்கு சொந்தமான காணிகளை அரசாங்கத்துக்கு குத்தகைக்கு வழங்குதல் ஆகியவையும் இடம்பெறுவதாக பிரதமர் டி. எம். ஜயரத்ன தெரிவித்தார்.
மேலும் இங்கே தொடர்க...

மருந்து தட்டுப்பாடு ஐந்து நாட்களில் முழுமையாக நீங்கும்




கப்பல்கள், விமானம் மூலம் மருந்துகள் வருகை;ஒரே தலைமையின் கீழ் நடஇ, நடஙஇ


அரசாங்க ஆஸ்பத்திரிகளில் அத்தியாவசிய மருந்துப் பொருட்களுக்கு நிலவும் தட்டுப்பாடு அடுத்துவரும் ஐந்து நாட்களில் முழுமையாக நீங்கும் என்று சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேன நேற்றுத் தெரிவித்தார்.

அதேநேரம், அரசாங்க ஆஸ்பத்திரிகளில் இனிமேலும் மருந்துப் பொருள் தட்டுப்பாடு ஏற்படாதிருப்பதை உறுதிப்படுத்துவதற்காக வாராவாரம் கூடி ஆராய்ந்து நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் அமைச்சர், மருந்துப் பொருள் தட்டுப்பாட்டுக்கான காரணத்தைக் கண்டறிய நியமித்த குழுவுக்கும் ஆலோசனை வழங்கியுள்ளார்.

அரசாங்க ஆஸ்பத்திரிகளுக்கு மருந்துப் பொருட்கள் கிடைக்க வழி செய்யும் நிறுவனங்களுக்கிடையில் ஒழுங்கு முறையான தொடர்பாடலும், இணைப்பும் இல்லாததே மருந்துப் பொருள் தட்டுப்பாட்டுக்கு முக்கியமாகப் பங்களித்ததாக மருந்து பொருள் தட்டுப்பாட்டுக்கான காரணத்தைக் கண்டறிய நியமிக்கப்பட்ட குழு சுட்டிக்காட்டி இருந்தது.

இதனடிப்படையில், அரசாங்க மருந்தாக்கல் கூட்டுத்தாபனமும் (ஙூஙீணீ) அரச மருந்துப் பொருள் உற்பத்திக் கூட்டுத்தாபனமும் (ஙூஙீசீணீ) ஒரே தலைமையின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது. இதற்கான நடவடிக்கையை அமைச்சர் மேற்கொண்டிருந்தார்.

இதேவேளை, அரசாங்க ஆஸ்பத்திரிகளில் நிலவும் 95 வகையான அத்தியாவசிய மருந்துப் பொருட்களுக்கான தட்டுப்பாட்டை துரிதமாக நீக்குவதற்கும் ஏற்கனவே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அந்தடிப்படையில் அமைச்சரின் ஆலோசனைக்கு அமைய மருந்துப் பொருள் விநியோகப்பிரிவு பணிப்பாளர் அரசாங்க மருந்தாக்கல் கூட்டுத்தாபன பிரதி முகாமையாளர் தேசிய மருந்துப் பொருள் அதிகார சபையின் மருந்தாளர், சுகாதார அமைச்சின் பிரதம மருந்தாளர், திறைசேரியின் பிரதிநிதி ஆகியோர் அடங்கிய விசேட குழுவொன்று இந்தியாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டு 95 வகையான அத்தியாவசிய மருந்துப் பொருட்களைத் துரிதமாகக் கொள்வனவு செய்து இல ங்கைக்குக் கொண்டு வரவும் ஏற்கனவே ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தற்போது இந்த 95 வகையான அத்தியாவசிய மருந்துப் பொருட்களும் கட்டம், கட்டமாக கடல் மார்க்கமாகவும், ஆகாய மார்க்கமாகவும் இந்திய விநி யோகஸ்தர்களால் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்படுவதாகவும், அவை உடனுக்குடன் ஆஸ்பத்திரிகளுக்கு அனுப்பி வைக்கப் படுவதாகவும் அமைச்சர் கூறினார்.

அரசாங்க ஆஸ்பத்திரிகளில் மருந்துப் பொருட்களுக்கு இனிமேல் தட்டுப்பாடு ஏற்படாதிருப்பதற்கு தேவையான சகல ஒழுங்குகளும் செய்யப்பட்டு வருகின்றன. அதேநேரம் தற்போதைய மருந்துப் பொருள் தட்டுப்பாட்டைத் துரிதமாக நிவர்த்திக்கவும் நடவடிக்கை எடுக் கப்பட்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
மேலும் இங்கே தொடர்க...

30 மே, 2010

கிளிநொச்சி கணேசபுர பகுதியில் மலசலக்கூடக் குழியில் மனித சடலங்கள்


கிளிநொச்சி கணேசபுர பகுதியில் மலசலக்கூடக் குழியில் மனித சடலங்கள் இன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சி கணேசபுரம் பகுதியில் ஐக்கிய நாடுகள் சபை அலுவலகத்திற்கு அண்மையில் உள்ள காணியில் இருக்கும் மலசலக்கூடக் குழியை துப்பரவு செய்யும் போதே சுமார் இருபதுக்கும் மேற்பட்ட சடலங்கள் சில பொலித்தீன் பைகளில் கட்டபட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

இந் நிலையில் காணியின் உரிமையாளர் பொலிஸாருக்கு குறித்த சம்பவத்தை அறிவித்த பின்னர் நீதவான் உட்பட பொலிஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றுள்ளனர். இதனை தொடர்ந்து குறித்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொள்வதோடு குறித்தப் பகுதியில் இன்னும் பல சடலங்கள் புதைக்கப்பட்டிருக்கலாம் என நம்பப்படுகின்றது.
மேலும் இங்கே தொடர்க...

மன்னார் மாணவர் மத்தியில் கையடக்கத் தொலைபேசி பாவனை : பெற்றோர்



மன்னாரில் கல்வி கற்கும் பாடசாலை மாணவர்கள் தொடர்ந்தும் கையடக்கத் தொலை பேசிகளைப் பயன்படுத்தி வருவதனால், அவர்களின் கற்றல் நடவடிக்கைகள் பாதிப்படைந்து வருவதாக சமூக ஆர்வலர்கள், மாணவர்களின் பெற்றோர் ஆகியோர் கவலை தெரிவிக்கின்றனர்.

பாடசாலைகளில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள போதும், மாணவர்கள் மறைமுகமாக கையடக்கத் தொலை பேசிகளை பாடசாலைகளுக்கு கொண்டு சென்று பயன்படுத்தி வருவதாகப் பெற்றோர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

அதேவேளை, மாணவர்கள் மாலை நேர வகுப்புக்களுக்குச் செல்லும் போது கையடக்கத் தொலைபேசிகளில் பதிவு செய்து வைத்துள்ள சினிமாப் பாடல்களை உரத்த சத்தமாகப் போட்டுக் கேட்டுக் கொண்டே வீதிகளில் நடந்து செல்வதாக சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

சில மாணவர்கள் ஆபாச வீடியோக் காட்சிகளைப் பதிவு செய்து பாடசாலைகளுக்கும் தனியார் கல்வி நிலையங்களுக்கும் கொண்டு சென்று பார்ப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.

எனவே பாடசாலை நிர்வாகமும் தனியார் நிறுவனங்களும் இவ்விடயத்தில் கவனம் செலுத்தி கையடக்கத் தொலைபேசி பாவனைகளைக் கட்டுப்படுத்த உடன் நடவடிக்கை எடுக்குமாறு சமூக ஆர்வலர்களும் பெற்றோர்களும் கோரிக்கை விடுக்கின்றனர்
மேலும் இங்கே தொடர்க...

இலங்கையில்,இந்தியா அதிகாரம் செலுத்தவில்லை:





இலங்கையில்,இந்தியா அதிகாரம் செலுத்தவில்லை: ஜனாதிபதி மஹிந்த ராஜபஹ்சா
விடுதலைப்புலிகளுடன் நடந்த போரில் இலங்கை ராணுவம் வெற்றி பெற்ற முதலாம் ஆண்டு விழா கொழும்புவில் கொண்டாடப்பட்டது. அப்போது அதிபர் ராஜபக்சே பேட்டி அளித்தார். அதன் விவரம் வருமாறு:-

தனி ஈழம் கேட்டுவிடுதலைப்புலிகள் போராடினார்கள் அதை இலங்கை அரசு ஒப்புக் கொள்ளவில்லை. அதற்காக அவர்கள் வன்முறையில் ஈடுபட்டனர். நான் பதவிக்கு வந்ததும் அவர்கள் மீது நடவடிக்கை எடுத்தேன். அவர்களுடன் பேச்சுவார்த்தை நடந்த விரும்பினேன். அதற்கு மறுத்து விட்டனர். இதனால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டியதாகிவிட்டது.

விடுதலைப்புலிகளை வெற்றி பெற்று இருந்தாலும் அந்த இயக்கம் முற்றிலும் அழித்து விட்டதாக நான் கருத வில்லை. ஏனெனில் விடுதலைப்புலிகளின் ஆதரவாளவர்கள் மற்றும் அந்த இயக்கத்தை சேர்ந்தவர்கள் பலர் இன்னும் இருக்கிறார்கள் அவர்கள் பல நாடுகளில் பரவிக்கிடக்கின்றனர்.

விடுதலைப்புலிகளுடன் நடந்த போரின் போது 20 ஆயிரம் தமிழர்களை இலங்கை ராணுவம் கொன்று குவித்ததாக கூறப்படுவது தவறு. இலங்கை ராணுவம் மிகவும் கட்டுப்பாடானது. போரின் போது பொது மக்களுக்கு எந்த வித பாதிப்பும் இன்றி அவர்கள் நடந்து கொண்டனர்.

இலங்கை அரசின் முகாமில்தான் பிரபாகரனின் தாயார், தந்தை மற்றும் அவரது இயக்கத்தை சேர்ந்தவர்கள் இருந்தனர் அவர்களை நாங்கள் துன் புறுத்த வில்லை. அப்படி இருக்கும் போது பொது மக்களை கொலை செய்வோமா? ஏனெனில் அவர்கள் அனைவரும் எங்கள் நாட்டு மக்கள்தான்.

இலங்கை ராணுவ முகாம்களில் இருந்த 3 லட்சம் பேரில் 30 ஆயிரம் தமிழர்கள் தங்கள் கிராமங்களில் மீண் டும் குடியமர்த்தப்பட்டு விட்டனர். மீதமுள்ளவர்கள் இந்த ஆண்டு இறுதிக்குள் குடியமர்த்தப்படுவார்கள். விடுதலைப்புலிகளுடன் நடந்த போரின் போது எங்களுக்கு ராணுவ உதவியையும் ஆலோ சனை களையும் வழங்கி இந்தியா உதவி செய்தது. இதற்காக அவர்களுக்கு நன்றி தெரி வித்து கொள்கிறேன். போரின் போது சீனாவில் மட்டுமின்றி இந்தியா, சீனா, பாகிஸ்தான், ஐரோப்பிய நாடுகள், இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவில் கூட ஆயுதங்களையும் வாங்கினோம்.

இந்தியாவுக்கு எதிராக சீனாவுடன் இலங்கை உறவு வைத்திருப்பதாக கருதக் கூடாது. இந்தியாவுடன் இலங்கை நட்புறவுடன் திகழ் கிறது. அது மட்டுமின்றி இந்தியாவை மிக உயர்வாக கருதுகிறோம்.

எங்கள் மீதுஇந்தியா அதிகாரம் செலுத்த வில்லை. மாறாக இளைய சகோதரி யிடம் அன்பு செலுத்துவது போன்று மிக பரிவாக நடந்து கொள்கிறது. வருகிற ஜூன் 8-ந்தேதி இந்தியாவுக்கு வருகை தர இருக்கிறேன். அப்போது பல விஷயங்கள் குறித்து விவாதிக்க இருக்கிறேன்.

பொருளாதார வளர்ச்சி குறித்த பேச்சுக்கு முக்கியத்துவம் தரப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் இங்கே தொடர்க...

வன்னி மக்கள் நலன்கருதி மா.ச. தேர்தலில் ததேகூ போட்டி :




அரியநேத்திரன் முகாம்களில் தங்கி அவதிப்படும் அனைத்து வன்னிப் பகுதி மக்களையும் மீளக்குடியமர்த்தி, அவர்களுக்கு நிம்மதியான, நிரந்தரமான வாழ்வை விடிவை ஏற்படுத்திக்கொடுப்பதை வலியுறுத்தி வடக்கு மாகாண சபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு போட்டியிடும். என கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் பி.அரியநேத்திரன் தெரிவித்துள்ளார்.

வடக்கு மாகாண சபைக்கு அண்மையில் தேர்தல் நடைபெற இருப்பதாக பொருளாதார அபிவிருத்தி அமைச்சரான பசில் ராஐபக்ஷ நேற்று தெரிவித்திருந்தார். இதையொட்டி வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையிலேயே அரியநேத்திரன் மேற்கண்டவாறு தெரிவித்திருக்கின்றார்.

அந்த அறிக்கையில் அவர் மேலும்,

"வடக்கில் குறிப்பாக வன்னியில் பெருந்தொகை மக்கள் இடம் பெயர்ந்த நிலையில் இடைத்தங்கல் முகாம்களிலும் புனர்வாழ்வுக் கிராமங்களிலும் வசிக்கிறார்கள். இந்த நிலையில் அந்த பிரதேசத்தில் தற்போது தேர்தல் நடத்துவதானது விரும்பத்தக்கதல்ல. இதை அரசு புரிந்துகொள்ள வேண்டும்.

மாறாக ஒரு தேர்தலை நடத்தி அரசு தனது இருப்பை நிரூபிக்க எத்தனித்தால் தமிழ் தேசிய கூட்டமைப்பு அந்த தேர்தலில் பங்குபற்றுவது தவிர்க்கமுடியாததொன்றாக அமைந்துவிடும்.

அத்துடன், கடந்த வாரம் வன்னிக்குச் சென்றிருந்தோம். அந்த மக்களின் அவலங்களை நேரில் கண்டோம்.

சர்வதேசத்துக்கு அரசு கூறிவருவது போன்று அங்கு எதுவும் நடக்கவில்லை. மீள்குடியேற்றம் என்ற பெயரில் அரசு ஏமாற்று நாடகத்தையே அரங்கேற்றி வருகிறது. இதனை அம்பலப்படுத்தவும் அந்தத் தேர்தலைப் பயன்படுத்தலாம்.

அல்லற்படும் அந்த மக்களின் அவலங்களுக்கு ஏற்ற தீர்வைப் பெற்றுக் கொடுக்கவாவது வடக்கு மாகாண நிர்வாகத்தை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கைப்பற்றியாக வேண்டும். அந்த நிர்வாகத்தைக் கைப்பற்றுவதன் மூலம் வன்னி மக்களின் அவலங்களுக்கு முடிவைக் காணலாம். சர்வதேசத்துக்கு அரசு அறிவித்து வருவது போன்று மக்கள் வன்னியில் மீளக் குடியமர்த்தப்படவில்லை. இன்னமும் அகதி நிலையிலேயே அந்த மக்கள் பசி, பட்டினியுடன் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

அந்த மக்களுக்கு விடிவு கிடைத்து சகஜவாழ்வுக்கு அவர்கள் திரும்ப, மாகாண சபைத் தேர்தலைப் பயன்படுத்தவேண்டிய தேவையுள்ளது" எனத் தெரிவித்துள்ளார்.
மேலும் இங்கே தொடர்க...

மன்னாரில் மத்தியஸ்த சபைகள் : சமூக ஆர்வலர் வேண்டுகோள்

மன்னார் மாவட்டத்தில் இவ்வளவு காலமும் மத்தியஸ்த சபைகள் இயங்காத நிலையிலும் யுத்தத்தைக் காரணம் காட்டி இச்சபைகளின் நியமனங்கள் பல முறையும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன. இதன் விளைவாக மன்னாரில் பல்வேறு பிணக்குகள் தீர்க்கப்படாமல் இருந்து வருகின்றன.

எனவே இனியும் காலதாமதமின்றி மேற்படி சபைகளை உடன் அமைக்க நடவடிககை எடுக்குமாறு மன்னார் மாவட்ட சமூக ஆர்வலரும் , சிரேஷ்ட ஊடகவியலாளருமான மக்கள் காதர் நீதி அமைச்சரைக் கேட்டுள்ளார்.

மன்னார் நகரம், நானாட்டான், முசலி மாந்தை , மடு உதவி அரசாங்க அதிபர் பிரிவு என 5 வலயங்களிலும் மன்னார் மக்கள் குடியமர்த்தப்பட்டுள்ளனர். இதனால் அங்கு பல்வேறு பிரச்சினைகள் தினமும் ஏற்படுகின்றன.

எனவே தற்போதைய புதிய அமைச்சர்கள் இனிமேலும் காலதாமதம் செய்யாது, மத்தியஸ்த சபைக்குத் தகுதியானோரிடமிருந்து விண்ணப்பங்களைப் பெற்று மாவட்டத்தில் சீரான நீதி நிர்வாகம் நடைபெற வழியேற்படுத்த வேண்டும் என தனது வேண்டுகோளில் இவர் வலியுறுத்தியுள்ளார்.
மேலும் இங்கே தொடர்க...

நகர வாழ்க்கை கசந்தது; காடு வா என்றது' காட்டுக்கே திரும்பினார் இளம்பெண்

"வீடு போ போ என்கிறது; காடு வா வா என்கிறது' என்று நமது வீட்டில் உள்ள தாத்தா, பாட்டிகள் சொல்ல கேட்டிருப்போம்.

÷ஆனால், கம்போடியாவில் ஒரு இளம் பெண் 2 ஆண்டுகள் நரக வேதனையை நகரத்தில் அனுபவித்தாரோ என்னவோ, மீண்டும் காட்டுக்கே சென்றுவிட்டார்.

÷கம்போடிய நாட்டில் ரத்னகிரி மாவட்டத்தில் 1989-ல் காட்டெருமைகளை மேய்த்துக் கொண்டிருந்த ரோசோம் பி.ஜியெங் என்ற பெண் காணாமல் போனார். அப்போது அவருக்கு வயது 8.

÷2007-ல் ஒரு விவசாயியின் தோட்டத்தில் உணவு திருட முற்பட்டபோது உடலில் ஆடையின்றியும், அழுக்காகவும் அவர் மீட்கப்பட்டார். பின்னர் அவரது தந்தை சல்லெü கண்டுபிடிக்கப்பட்டு தந்தை வசம் அவர் ஒப்படைக்கப்பட்டார்.

÷அவரால் சாதாரண மனிதர்களைப் போல பேச முடியவில்லை. குரங்குகள் போலவே அவரது செய்கைகளும், நடவடிக்கைகளும் இருந்தன.

÷மனிதர்களைப் போல உணவு எடுத்துக் கொள்ள மறுத்ததால் அவர் தொடர்ந்து நோய்களால் பாதிக்கப்பட்டார்.

÷மனிதர்களை விட விலங்குகளே மேல் என நினைத்தார் போலும், அவரது தந்தையிடம் இருந்து தப்பி காட்டுக்கு செவ்வாய்க்கிழமை சென்றுவிட்டார்.

÷காட்டில் உள்ள ஆவிகள்தான் அவரை மீண்டும் காட்டுக்கு அழைத்துச் சென்றுவிட்டது எனவும், அவரை அடர்ந்த காடுகளில் தேடி வருகிறோம் எனவும் அவரது தந்தை சல்லெü தெரிவித்தார்.

÷அவர் காட்டுக்குதான் தப்பிச் சென்றிருக்கக் கூடும் என உள்ளூர் காவல்துறை தலைவர் மா விச்செட்டும் தெரிவித்தார்.

÷மனிதன் பாதி - மிருகம் பாதி இரண்டும் கலந்த கலவை பெண் என்றும், காட்டுப் பெண் என்றும் கம்போடிய மக்கள் அப் பெண்ணை வர்ணித்து வந்தனர்.
மேலும் இங்கே தொடர்க...

தெல்தெனியாவில் ஆணின் சடலம் மீட்பு

தெல்தெனியா பொலிஸ் பிரிவைச் சேர்ந்த றம்புக்வெல்ல என்ற இடத்தில் ஒரு ஆணின் சடலம் கண்டெடுக்கப்பட்டதாக தெல்தெனிய பொலிசார் தெரிவித்தனர்.

நேற்று முன் தினம் மாலை தமக்குக் கிடைத்த ஒரு தகவலின் அடிப்படையில் இச்சடலம் கண்டெடுக்கப்பட்டதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

விக்டோரியா நீர்த்தேக்கப் பகுதியை அண்மித்த, பாதுகாப்பு வலயத்தில் இச்சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. தெல்தெனியா பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
மேலும் இங்கே தொடர்க...

சிலாவத்துறையில் சிலர் கைது என்ற செய்தி உண்மையில்லை:பொலிஸ் தரப்பு

சிலாவத்துறை பிரதேசத்திற்கு விஜயம் மேற்கொண்ட அமைச்சர் பசில் ராஜபக்ஷ தலமையிலான குழுவினருக்கு எதிர்ப்பு தெரிவித்தார்கள் எனும் குற்றச்சாட்டின் பெயரில் சிலர் கைது செய்யப்பட்டார்கள் என வெளியான தகவல்களில் உண்மை இல்லை எனப் பொலிஸ் தரப்பு தெரிவிக்கின்றது.

மன்னார் மாவட்டத்தில் முன்னெடுக்கப்பட்டிருக்கும் அபிவிருத்திப் பணிகளை மக்கள் பாவனைக்கு ஒப்படைக்கும் பொருட்டு இம்மாதம் 27ஆம் திகதி வட மாகாண அபிவிருத்தி, மீள்குடியேற்றம் என்பனவற்றுக்கான ஜனாதிபதி செயலணியின் தலைவரும், பொருளாதார அபிவிருத்தி அமைச்சருமான பசில் ராஜபக்ஷ தலைமையிலான உயர் மட்டக் குழுவினர் மன்னாருக்கான விஜயத்தினை மேற்கொண்டிருந்தனர்.

மன்னார் நகரப்பகுதியில் மேற்கொள்ளப்பட்டிருக்கும் அபிவிருத்திப் பணிகளைப் பார்வையிட்ட பின், அமைச்சர் பசில் ராஜபக்ஷ சிலாவத்துறைப்பகுதிக்கு விஜயத்தினை மேற்கொண்டிருந்தார். இதன் போது குறித்த பிரதேசத்தில் மீள்குடியேறியிருக்கும் மக்கள் தாம் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் அமைச்சரிடம் கோரிக்கை முன் வைப்பதற்காகக் காத்திருந்தனர்.

ஆயினும் குறித்த பிரதேசம் கடற்படையினரின் பாதுகாப்புக்குட்பட்ட பகுதியாக இருந்ததால் பிரதேசவாசிகள் தமது கோரிக்கையைச் சமர்ப்பிக்க எடுத்த முயற்சி பலனற்றுப் போனது. இந்நிலையில், அவர்கள் தாம் கொண்டு சென்ற கோரிக்கையடங்கிய மகஜரைத் தலைக்கு மேல் உயர்த்தி அமைச்சரின் பார்வைக்குக் காட்டியிருக்கின்றனர்.

இச்சம்பவம் தவறாக புரிந்து கொள்ளப்பட்டதனாலேயே பிரதேசவாசிகளில் சிலர் பொலிஸ் விசாரணைகளுக்கு உள்ளானதாகத் தகவல்கள் வெளியாகியிருந்தன.

இது தொடர்பில் பொலிஸ் தரப்பிலிருந்து கிடைக்கப்பெற்ற தகவல்களின் படி எவரும் கைது செய்யப்படவில்லை எனவும் குறித்த சம்பவத்துடன் தொடர்புபட்டவர்கள் எனச் சொல்லப்பட்டவர்களிடமிருந்து சம்பவம் தொடர்பில் வாக்கு மூலம் பெறப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் இங்கே தொடர்க...

முல்லையில் கண்ணிவெடி அகற்றப்படும்வரை மீள்குடியேற்றமில்லை: அமைச்சர்

"யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்து வவுனியா அகதிமுகாம்களிலுள்ள முல்லைத்தீவு மாவட்ட மக்களை உடனடியாக அவர்களது சொந்த இடங்களில் குடியேற்ற முடியாது. அந்த மாவட்டத்தில் புதைக்கப்பட்டுள்ள அனைத்துக் கண்ணிவெடிகளும் அகற்றப்பட்டமை தொடர்பில் உத்தியோகபூர்வமாக அறிக்கை சமர்ப்பிக்கப்பட்ட பின்னரே அவர்களை மீளக்குடியேற்ற முடியும்" என மீள்குடியேற்ற அமைச்சர் மில்ரோய் பெர்ணான்டோ வீரகேசரி வாரவெளியீட்டுக்குத் தெரிவித்தார்.

இது தொடர்பாக மேலும் கருத்துத் தெரிவித்த அவர்,

"இந்த மாவட்டத்தில் தமிழீழ விடுதலைப் புலிகள் பாரியளவில் கண்ணிவெடிகளைப் புதைத்து வைத்திருக்கின்றனர். இவற்றை அகற்றும் பணிகள் துரிதமாக இடம்பெற்று வருகின்றன.

முள்ளிவாய்க்கால் பிரதேசத்திலேயே அதிகளவில் கண்ணி வெடிகள் புதைத்து வைக்கப்பட்டுள்ளமை இப்போது தெரிய வந்துள்ளது. இருப்பினும் அந்த மாவட்டத்தில் கண்ணி வெடிகள் முழுமையாக அகற்றப்பட்டமை தொடர்பில் சம்பந்தப்பட்ட தரப்பிலிருந்து உத்தியோகபூர்வமான அறிக்கை எமக்குக் கிடைத்த பின்னரே அகதி முகாம்களிலுள்ள முல்லைத்தீவு மாவட்ட மக்களை அவர்களது சொந்த இடங்களில் குடியேற்ற முடியும்.

இதற்கு இன்னும் ஒரு மாத காலமேனும் தேவைப்படலாம்.

வவுனியாவிலுள்ள ஆறு நலன்புரி வலயங்களில் ஒன்றினை இன்னும் இரண்டொரு தினங்களில் நாம் மூடவுள்ளோம். மீதியாக ஐந்து வலயங்களே உள்ளன. இவற்றில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களில் பெரும்பாலானோர் முல்லைத்தீவு மாவட்டத்தைச் சேர்ந்தவர்களே. இவர்கள் அனைவரையும் குடியேற்றிய பின்னர் இந்த வலயங்களையும் மூடக்கூடியதாகவிருக்கும்.

மீள்குடியேற்றப்படும் மக்களுக்கு வழங்கப்படும் கூரைத் தகடுகள் இந்தியாவிலிருந்தே எமக்குக் கிடைக்கின்றன. கூரைத் தகடுகளை ஏற்றிய கப்பல்கள் இந்தியாவிலிருந்து கொழும்பை வந்தடைந்ததும் அவற்றினைத் மீள்குடியேற்றப்பட்ட மக்களுக்குத் துரிதமாக வழங்க நடவடிக்கை எடுத்துள்ளோம்.

அந்தந்தப் பிரதேச செயலகங்கள் ஊடாக கிராம சேவகரிடம் இவை ஒப்படைக்கப்படடு மீள்குடியேறிய மக்களுக்கு வழங்கப்படும். மேலும், கடந்த காலங்களில் மீள்குடியேற்றப்பட்ட மக்களுக்கு உலக உணவுத் திட்டத்தின் உதவியுடனேயே அரசாங்கம் ஆறுமாத காலத்துக்கான நிவாரணங்களை வழங்கி வருகிறது.

இவை முடிவுறும் நிலையிலிருந்தாலும் அவற்றினைத் தொடர்ந்து வழங்குவது குறித்து உலக உணவுத் திட்டத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். பெரும்பாலும் இது சாத்தியப்படும்" எனவும் கூறினார்
மேலும் இங்கே தொடர்க...

மலேஷியாவின் கோடீஸ்வரர் பட்டியலில் இரு தமிழர்கள்

மலேஷியாவில் உள்ள 40 கோடீஸ்வரர்களின் பட்டியலில் இரண்டு தமிழர்களுக்கும் இடம் கிடைத்துள்ளது.

உலகின் உயர்ந்த கட்டடங்களில் ஒன்றான மலேஷியாவின் பெட்ரொனஸ் டவரின் உரிமையாளரான 72 வயதான அனந்த கிருஷ்ணன், 40,000 கோடி மதிப்புள்ள சொத்துக்களின் அதிபதியாவார்.

மலேஷியாவின் மிகப் பிரபலமான கையடக்கத் தொலைபேசி இணைப்பு நிறுவனமொன்றை தற்போது இவர் நிர்வகித்து வருகின்றார்.

அடுத்தவர் ஏ. கே. நாதன் என்பவராவார். 54 வயதான இவர் உலோக மற்றும் கட்டட நிர்மாணப் பணிகளில் ஈடுபட்டு வருபவர் ஆவர்
மேலும் இங்கே தொடர்க...

யாழ்ப்பாணத்தில் தும்பு, பதனீர் வெல்லம் தொழிற்சாலைகள் திறந்து வைப்பு

யாழ். குடாநாட்டினுள் கைத்தொழில் அபிவிருத்தி மற்றும் பாரம்பரிய கைத்தொழில் அபிவிருத்தி ஊக்குவிப்புத் திட்டத்தின் கீழ் தும்பு மற்றும் பதநீர் வெல்லம் உற்பத்தித் தொழிற்சாலைகள் திறந்து வைக்கப்பட்டுள்ளன.

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, வடமாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜீ.ஏ. சந்திரசிறி ஆகியோர் இந்த தொழிற் சாலைகளை திறந்து வைத்தனர். அன்றைய தினமே உற்பத்திகளும் ஆரம்பமாகின.

அத்துடன் வேலணை மேற்கு பனை, தென்னை வள அபிவிருத்திக் கூட்டுறவுச் சங்கத்திற்கான புதிய விற்பனை நிலையமொன்றும் திறந்து வைக்கப்பட்டது. உள்ளூர் உற்பத்திகளை ஊக்கவிக்கும் முகமாக இந்த விற்பனை நிலையம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

விற்பனை நிலையத்தை வடமாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜீ. ஏ. சந்திரசிறியும் பாரம்பரிய கைத்தொழில் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவும் திறந்து வைத்தனர்.

பனம் வெல்லம், புழுக்கொடியல், பனை ஓலையால் உற்பத்தி செய்யப்பட்ட உற்பத்தி உள்ளிட்ட பொருட்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.

இந்நிகழ்வில் பாராளுமன்றக் குழுக் களின் பிரதித் தலைவர் முருகேசு சந்திரகுமார், பாராளுமன்ற உறுப்பினர் சில்வேஸ்த்திரி அலென்ரின் உதயன், வடமாகாண உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் திருமதி விஜயலட்சுமி உள்ளிட்ட பிரமுகர்களும் கலந்து கொண்டனர்.

வேலணை கிழக்கு பனை தென்னை வள அபிவிருத்திக் கூட்டுறவுச் சங்கத்தின் தும்பு உற்பத்தி நிலையத்தின் பணிகளை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வடமாகாண ஆளுநர் சந்திரசிறி ஆகியோர் தொடக்கி வைத்தனர்.

பனைசார் தொழில்களையும் உள்ளூர் உற்பத்திகளையும் ஊக்குவிக்கும் பொருட்டு இத்தொழிற்சாலை திறந்து வைக்கப்பட் டுள்ளது. இவர்கள் தொழிற்பேட்டைக்கான மின்பிறப்பாக்கியை இயக்கி வைத்ததுடன் தொழில் நடவடிக்கைகளையும் ஆரம்பித்து வைத்தனர்.

அச்சுவேலியில் தும்புப்பொருள் உற்பத்தி தொழிற்சாலையின் தொழிற்சாலை அலுவலகமும்

தொழிற்பேட்டையையும் அமைச் சர் டக்ளஸ் தேவானந்தா, வடமாகாண ஆளுநர் ஜீ.ஏ. சந்திரசிறி ஆகியோ ரால் திறந்துவைக்கப்பட்டன.

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் நிதியுதவியின் கீழ் புனரமைப்புச் செய்யப்பட்ட இந்த தொழிற்சாலை யில் 40 பெண்களுக்கு பயிற்சிகள் வழங்கப்பட்டு அவர்கள் முதற்கட்ட மாக பணியில் ஈடு படுத்தப்படவுள் ளதாகவும் பின்னர் இத்திட்டம் விரிவுபடுத்தப்படவுள்ளதாகவும் அச்சு வேலி பனை தென்னை வள அபி விருத்தி கூட்டுறவுச் சங்க பொது முகா மையாளர் செல்வராசா தெரிவித்தார்.

சுன்னாகத்தில் அமையப் பெற்றுள்ள பதனீர் வெல்ல உற்பத்தி நிலையத் தையும் அமைச்சரும் வட மாகாண ஆளுநர் ஜீ.ஏ. சந்திர சிறியும் திறந்து வைத்தனர்.
மேலும் இங்கே தொடர்க...

சோமாவதி, அக்போபுர விகாரைகளில் ஜனாதிபதி நேற்று வழிபாடு

கந்தளாய் அக்போபுர ரஜமஹா விகாரைக்கும் பொலன்னறுவை சோமாவதி விகாரைக்கும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்று விஜயம் செய்தார்.

கந்தளாய் அக்போபுர விகாரையில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட புத்த பெருமானின் வணக்கஸ்தலத்தையும் ஜனாதிபதி திறந்து வைத்தார்.

அக்போபுர விகாரைக்கு வருகை தந்த அடியார்களுடனும் ஜனாதிபதி கலந்துரையாடினார்.

இதனையடுத்து பொலன்னறுவை சோமாவதி விஹாரைக்குச் சென்று வழிபாட்டில் ஈடுபட்டார். சோமாவதி சைத்தியவுக்கு வருகை தந்திருந்த அடியார்களுடனும் ஜனாதிபதி கலந்துரையாடினார்.

ஜானாதிபதியுடன் அமைச்சர் மைத்திரிபால சிறிசேன, பிரதியமைச்சர்களான சந்திரசிறி சூரியாரச்சி, சிறிபால கம்லத், ரொஷான் ரணசிங்க எம்.பி., ஜனாதிபதியின் செயலணியின் தலைவர் காமினி செனரத் ஆகியோரும் இந்த விஜயத்தின் போது கலந்து கொண்டனர்.
மேலும் இங்கே தொடர்க...

ஐ. தே. க. பல குழுக்களாகப் பிளவு: மறுசீரமைப்பு செயற்பாடு குழப்பத்தில்

ஐக்கிய தேசிய கட்சியின் மறுசீரமைப்பு செயற்பாடுகளை ஆரம்பத்திலேயே முடக்குவதற்கான சதி முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக கட்சியின் உள்ளகத் தகவல்கள் மூலம் தெரிய வருகின்றது.

மறுசீரமைப்புச் செயற்பாடுகளில் ஒருவருக்கொருவர் முரண்படும் விதத்தில் சிலர் பரஸ்பரம் கருத்துகளைப் பரிமாறி சதி செய்து வருவதாகத் தகவல்கள் தெரிவித்தன. இந்நிலையில், ஐ.தே.க.வை மறுசீரமைப்பதற்கான முயற்சியை மீண்டும் முடக்கப்படுவதற்கான சாத்தியம் உள்ளதாக கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர் ஒருவர் வாரமஞ்சரிக்குத் தெரிவித்தார்.

கட்சிக்குள் குழுக்களும் பிரிவுகளும் மேலும் மேலும் உருவாகுவதையும் மற்றும் கட்சி மீண்டுமொருமுறை இர ண்டாகப் பிளவுபடுவதையும் எவ்விதத்திலும் தவிர்க்க முடியாதுபோகுமென்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைத்துவத்திற்கு சஜித் பிரேமதாசவை நியமிக்க வேண்டுமெனக் குரல் எழுப்பும் சில பாராளுமன்ற உறுப்பினர்கள், ரகசியமாக ரணில் விக்கிரமசிங்கவைச் சந்தித்து இரட்டைவேட நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாகக் கட்சி வட்டாரங்கள் கூறுகின்றன. இதேவேளை ரவி கருணாநாயக்கவுக்கும் சஜித் பிரேம தாசவுக்குமிடையிலான மோதல் தற்போது பகிரங்கமாக இடம்பெறத் தொடங்கியுள்ளது.

அதேநேரம், கட்சித் தலைவர் பதவிக்கு மீண்டும் ரணில் விக்கிரமசிங்கவையே நியமிக்க வேண்டுமெனப் பகிரங்கமாகக் கூறுவோர், ரகசியமாக சஜித் பிரேமதாசவுடன் ரகசியப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருவதாகவும் தெரியவந்துள்ளது.

தலைமைத்துவத்திற்கு இருவர் போட்டியாக வரும் பட்சத்தில் ரகசிய வாக்கெடுப்பு நடத்தப்பட்டால் சஜித் பிரேமதாச அரசியலில் அநாதரவாகும் நிலையே ஏற்படுமென்றும் கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

கட்சி மறுசீரமைப்பு யோசனையின்படி தலைமையைத் தேர்ந்தெடுக்க ரகசிய வாக்கெடுப்பு நடத்தப்பட்டால் அது சஜித் பிரேமதாசவைத் தனிமைப்படுத்துவ தாகவே முடியுமென்றும் அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

இதனிடையே, இடைக்கிடை தலை மைத்துவத்தை மாற்ற தேர்தல் நடத்துவது கட்சியைப் பலவீனப்படுத்துவதாகவே அமையுமென்று ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளதாகவும் கட்சி வட்டாரங்கள் மேலும் தெரிவித்தன
மேலும் இங்கே தொடர்க...

கொழும்பு விழா: நடிகர்களுக்கு எச்சரிக்கை

சர்வதேச இந்திய திரைப்பட கழக சின்னம்
சர்வதேச இந்திய திரைப்பட கழக சின்னம்
கொழும்பில் நடத்தப்படக்கூடிய விருது வழங்கும் விழாவில் கலந்துகொள்ளும் நட்சத்திரங்களுக்கு எதிராக தென்னிந்திய திரைத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

அடுத்த மாதம் கொழும்பில் நடத்தப்படுவதாகத் திட்டமிடப்பட்டுள்ள சர்வதேச இந்திய திரைப்பட கழகத்தின் விருது வழங்கும் விழாவை 'இரத்தக் கறை படிந்துள்ள' இலங்கையில் நடத்தக்கூடாது என்று தென்னிந்திய திரைத்துறை சங்கங்கள் கோரிக்கை விடுத்துள்ளன.

தமது கோரிக்கையை மீறி கொழும்பில் விழா நடக்கும் பட்சத்தில், அதில் கலந்துகொள்ளும் நட்சத்திரங்களின் படங்களை திரையிடாமல் புறக்கணிக்கப்போவதாக தென்னிந்திய திரைத்துறையைச் சேர்ந்த பல்வேறு அமைப்புகள் வெள்ளியன்று சென்னையில் நடத்திய கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

தென்னிந்தியத் திரைப்படக் கலைஞர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள், ஊழியர்கள், தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள் மற்றும் திரைப்பட உரிமையாளர்கள் ஆகியோர் இணைந்து இந்த முடிவை எடுத்துள்ளதாக இந்தக் கூட்டத்தின் முடிவில் எடுக்கப்பட்ட தீர்மானம் கூறுகிறது.

"இந்த விருது வழங்கும் விழாவை வேறு எங்கு வேண்டுமானாலும் நடத்திக்கொள்ளுங்கள். ஆனால் இரத்தக் கறை படிந்த இலங்கையில் நடத்தப்படுவதைத்தான் தாங்கள் எதிர்ப்பதாக" அத்தீர்மானம் கூறுகிறது.

ஆனால் திட்டமிட்டபடி ஜூன் 3-5 தேதிகளில் கொழும்பில் இந்த விழா நடக்கும் என்று இதன் ஏற்பாட்டாளர்கள் அறிவித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
மேலும் இங்கே தொடர்க...

29 மே, 2010

நல்லிணக்க ஆணையத்துக்கு ஆதரவு"

செய்தியாளர் சந்திப்பில் ஹில்லாரி கிளிண்டனுடன் ஜி.எல்.பீரிஸ்
செய்தியாளர் சந்திப்பில் ஹில்லாரி கிளிண்டனுடன் ஜி.எல்.பீரிஸ்
அமெரிக்க ராஜாங்க அமைச்சருடன் இலங்கை வெளியுறவு அமைச்சர்
இலங்கயில் யுத்தத்துக்கு பின்னர் நல்லிணக்கத்தைக் கொண்டுவருவது தொடர்பில் அரசாங்கம் தன்னளவில் ஏற்படுத்தியுள்ள ஆணையத்துக்கு அமெரிக்காவின் ஆதரவு கிடைத்துள்ளது.

இலங்கையில் உள்நாட்டளவில் ஆணையம் அமைக்கப்படுதற்கு தான் ஆதரவு தருவதாகக் கூறியுள்ள அமெரிக்க ராஜாங்க அமைச்சர் ஹில்லாரி கிளிண்டன் அம்மையார், இந்த ஆணையத்துக்கு போர்க்குற்ற குற்றச்சாட்டுகளை விசாரிப்பதற்கான அதிகாரமும் வழங்கப்பட வேண்டுமென கேட்டுக்கொண்டார்.

போர்க் குற்ற குற்றச்சாட்டுகள் தொடர்பில் சுயாதீன சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என உள்நாட்டளவிலும் சர்வதேச அளவிலும் விமர்சகர்கள் விரும்புகின்றனர்.

ஆனால் இலங்கையில் யுத்தத்தின் கடைசி ஏழு ஆண்டுகள் காலப் பகுதியில் இருந்து படிப்பினைகளைப் பெற்று, இன நல்லிணக்கத்துக்கான வழிவகைகளையும் ஆராய்வதற்காக எட்டு பேர் கொண்ட ஆணையத்தையே இலங்கை அரசாங்கம் அண்மையில் அமைத்துள்ளது.

பீரிஸ்- கிளிண்டன் சந்திப்பு

இந்நிலையில் வாஷிங்டனில் இலங்கை அமைச்சர் ஜி.எல்.பீரிஸுடன் உரையாடிவிட்டு செய்தியாளர்களிடம் கருத்து வெளியிட்ட கிளிண்டன் அம்மையார் இந்த ஆணையத்துக்கு தான் ஆதரவு தெரிவிப்பதாகக் கூறினார்.

"இலங்கையில் அரசியல் ரீதியிலும் இன ரீதியிலும் நல்லிணக்கம் ஏற்படுவதை அமெரிக்கா வலுவாக ஆதரிக்கிறது. உள்நாட்டளவில் நெருக்கடி மிக்க காலகட்டங்களில் இருந்து வெளிவந்திருந்த மற்ற நாடுகளில் இப்படியான விசாரணை ஆணையங்கள், நடந்த தவறுகளுக்கு பதில் தருவதிலும், நடந்த சம்பவங்களுக்கு காரணமானவர்கள் அவற்றுக்கு பொறுப்பேற்கவைப்பது என்பதிலும் முன்னேற்றத்தை ஏற்படுத்தியிருந்தன. மற்ற இடங்களில் அமைக்கப்பட்டிருந்த இப்படியான ஆணையங்கள் பயன்படுத்தியிருந்த சிறந்த வழிகளை எல்லாம் இலங்கையில் தற்போது அமைக்கப்பட்டுள்ள ஆணையம் கைகொள்ள வேண்டும்." என்றார் அவர்.

'நடந்த சம்பவங்கள்' என்று குறிப்பிட்டு அந்த சம்பவங்களுக்கு தனிப்பட்ட ரீதியில் யார் பொறுப்பேற்க வேண்டும் என்பதை ஆராய்கின்ற அதிகாரம் இலங்கை நல்லிணக்க ஆணையத்துக்கு வழங்கப்பட்டுள்ளது. ஆனால் 'போர்க் குற்றங்கள்' என்பது இந்த ஆணையத்துக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தில் எந்த ஒரு இடத்திலும் குறிப்பிடப்பட்டிருக்கவில்லை.

இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களும் இந்த வாரம் அல்ஜசீரா தொலைக்காட்சிக்கு அளித்திருந்த ஒரு செவ்வியில், "குற்றம் இழைத்தவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படலாம். ஆனால் பயங்கரவாதத்தை தோற்கடித்தமைக்காக எவர் ஒருவரும் தண்டிக்கப்பட மாட்டார்கள்" என்று குறிப்பிட்டிருந்தார்.

விமர்சனங்கள்

இலங்கை அரசாங்கத்தால் அமைக்கப்பட்டுள்ள ஆணையம் தொடர்ந்து சர்வதேச அளவிலும் உள்நாட்டு அளவிலும் விமர்சனங்களை எதிர்கொண்டு வருகிறது.

புதிய ஆணையத்துக்கு எதிராக எழுந்துள்ள சமீபத்திய விமர்சனம் என்பது, இலங்கை அரசாங்கத்தில் முந்தைய விசாரணைக் குழுக்களின் உறுப்பினராகவும் இலங்கை அரசாங்கத்தின் ஆலோகராகவும் இருந்த எம்.சி.எம். இக்பால் என்பவரிடமிருந்து வந்துள்ளது.

"இப்படியான விசாரணை ஆணையங்கள் நீதியை நிலைநாட்டுவதில் அடுத்ததுடுத்து ஆட்சியில் இருந்தவர்களும் தொடர்ந்தும் தவறிவந்துள்ளனர் . தவிர தற்போது நியமிக்கப்பட்டுள்ள ஆணையத்தின் உறுப்பினர்கள் பக்கச்சார்பின்றி செயல்படக்கூடியவர்கள் அல்ல." என்றும் இவர் தெரிவித்துள்ளார்.
மேலும் இங்கே தொடர்க...

மனித உரிமை தொடர்பில் அரச ஆணைக்குழுவின் விசாரணை போதுமானது என பாலித கொஹன தெரிவிப்பு

மனித உரிமை மீறல் தொடர்பான விசாரணைகளை நடத்த அரசாங்கத்தின் ஆணைக்குழு போதுமானதென ஐக்கிய நாடுகளுக்கான இலங்கையின் வதிவிடப் பிரதிநிதி பாலித கொஹன தெரிவித்துள்ளார். உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவிற்கு பூரண அதிகாரங்கள் காணப்படுவதாகவும், வேறு ஓர் சர்வதேச ஆணைக்குழுவின் விசாரணைகள் தேவையில்லையெனவும் அவர் கூறியுள்ளார். பாராளுமன்ற சட்டத்தின் அடிப்படையில் உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழு உருவாக்கப்பட்டுள்ளதாகவும், விசாரணைகளை நடாத்துவதற்கு தேவையான சகல அதிகாரங்களும் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இறுதிக்கட்ட யுத்தத்தின்போது இருதரப்பினராலும் உரிமைமீறல்கள் இடம்பெற்றிருக்கலாமெனவும், விசாரணைகள் நடத்தப்பட வேண்டுமெனவும் பல்வேறு மனிதஉரிமை அமைப்புக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றன. மற்றுமொரு ஆணைக்குழு விசாரணை நடத்தினால் குழப்பநிலை உருவாகும். உரிய ஆதாரங்களின்றி இவ்வாறான விசாரணைகளை நடத்த சர்வதேச அமைப்புக்கள் வலியுறுத்தக்கூடாது. குற்றாவாளிகளை கண்டுபிடிப்பதனை மட்டும் நோக்காகக் கொண்டு ஆணைக்குழு உருவாக்கப்படவில்லை. ஏனைய விடயங்கள் தொடர்பிலும் ஆணைக்குழு கவனம் செலுத்தும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்
மேலும் இங்கே தொடர்க...

வவுனியாவில் பல்வேறு அபிவிருத்தித் திட்டங்கள்-


வவுனியாவில் பல்வேறு அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுப்பதற்கு பல மில்லியன் ரூபாய்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதுடன் அபிவிருத்திப் பணிகளும் முன்னெடுக்கப்பட்டு வருவதாக வவுனியா மாவட்ட அரசஅதிபர் பீ.எஸ்.எம்.சார்ள்ஸ் தெரிவித்துள்ளார். ஹேன்ரிப் திட்டத்தின் ஊடாக 43கிராமங்கள் அடையாளம் காணப்பட்டு 100மில்லியன் ரூபா செலவில் நெடுங்கேணி பகுதிக்கு நீர்விநியோக திட்டத்தை அமுல்படுத்தவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். இதேவேளை 43மில்லியன் ரூபாய் செலவில் நவீனசந்தை மற்றும் பஸ் நிலையமும், 23மில்லின் ரூபாய் செலவில் பயிற்சி நிலையமொன்றும், பலநோக்குக் கூட்டுறவுச் சங்கத்திற்கு அரிசி ஆலையொன்றும் அமைக்கப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதனிடையே வவுனியா பஸ் நிலையத்தினுள் தனியார் வாகனங்கள் செல்வதற்கு விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்டுள்ளது. வவுனியா நகரசபையின் கூட்டத்தொடரில் எதிர்க்கட்சி உறுப்பினர் எஸ்.குமாரசாமி இவ்விடயத்தை கவனத்திற்கு கொண்டுவந்தையடுத்து தடை நீக்கப்பட்டுள்ளது.
மேலும் இங்கே தொடர்க...

இலங்கை ஆணைக்குழுவின் செயற்பாட்டில் ஹிலாரி கிளிண்டன் நம்பிக்கை


இறுதிக்கட்ட யுத்தம் தொடர்பிலான உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழு உறுதிமொழிகளை நிறைவேற்றுமென அமெரிக்க இராஜாங்கச்செயலர் கிலாரி கிளிண்டன் நம்பிக்கை வெளியிட்டுள்ளார். குறித்த ஆணைக்குழு யுத்தக்குற்றச் செயல்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக பக்கச் சார்பற்ற விசாரணைகளை நடத்தி தண்டனை வழங்குமென எதிர்பார்ப்பதாகவும் அவர் கூறியுள்ளார். இலங்கை மக்களின் விருப்பங்களையும் அபிலாசைகளையும் பூர்த்திசெய்யும் வகையில் ஆணைக்குழுவின் நடவடிக்கைகள் அமையவேண்டுமென்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ_டன் நேற்றையதினம் நடைபெற்ற சந்திப்பின் பின்னரான ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் இவற்றைத் தெரிவித்துள்ளார். மூன்று தசாப்தகால யுத்தத்தில் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டவர்கள் இலங்கை மக்களே. இலங்கை அரசு யுத்தக் குற்றங்கள் தொடர்பில் நிச்சயமாக விசாரணை மேற்கொள்ள வேண்டுமென உள்நாட்டு மனித உரிமைக் குழுக்கள் வலியுறுத்துகின்றன. இலங்கையில் யுத்தக் குற்றங்கள் தொடர்பாக ஆராய்வதற்கு நியமிக்கப்பட்டுள்ள விசேட குழுவிடம் நம்பிக்கை வைக்க முடியும். இதன்மூலம் இலங்கையின் நிரந்தர சமாதானத்தை நிலைநாட்ட முடியும். இந்தக்குழு சுயாதீனமாகவும், நீதியாகவும் தமது கடமைகளை நிறைவேற்றி வருகின்றது. இதற்கு அமெரிக்கா பூரண ஒத்துழைப்பினை வழங்கும் என்றும் ஹிலாரி கிளிண்டன் மேலும் தெரிவித்துள்ளார்.
மேலும் இங்கே தொடர்க...

கீரிமலை வைரவர் ஆலயத்தில் பொங்கலிட ஒருசிலருக்கே அனுமதி

கீரிமலை கவுனாவத்தை ஆலயத்தில் இன்று சனிக்கிழமை இடம்பெற்ற வருடாந்த பொங்கல் நிகழ்விலும் மற்றும் வேள்வியிலும் பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டார்கள். அதிகாலை முதல் மக்கள் யாழ். குடாநாட்டின் பல பகுதிகளிலிருந்தும் வேள்வி நடைபெற்ற இடத்தில் கூடினார்கள்.

ஆலயம் உயர் பாதுகாப்பு வலயத்தில் இருப்பதனால் கடந்த இருபது வருடங்களுக்கும் மேலாக கவுனாவத்தை வைரவர் ஆலயம் அமைந்துள்ள இடத்தில் மக்கள் சென்று தமது நேர்த்திக் கடனை நிறைவேற்ற அனுமதிக்காத நிலைமை தொடர்ந்து காணப்படுகின்றது.

இந்த வகையில் இவ்வாண்டும் ஆலய பிரதம குரு உட்பட மட்டுப்படுத்தப்பட்ட மக்கள் அங்கு பொங்கலிடவும் ஒரு கடா, ஒரு கோழி வெட்டவும் அனுமதிக்கப்பட்டது.

ஏனைய பல நூற்றுக்கணக்கான கடாக்கள் மற்றும் கோழிகள் ஆலயம் அமைந்துள்ள இடத்திலிருந்து சுமார் இரண்டு கிலோ மீற்றர் தூரத்தில் உள்ள தனியார் காணியொன்றில் வெட்டப்பட்டன. கடாக்கள் மிகவும் கோலாகலமாக உழவு இயந்திரங்களில் ஏற்றப்பட்டு, மாலைகள் அணிவிக்கப்பட்டு அதிகாலை 3.30 மணி முதல் கடா வெட்டப்படும் இடத்திற்குக் கொண்டு வரப்பட்டன.
மேலும் இங்கே தொடர்க...

பிரிட்டனில் குடியேற கட்டுப்பாடு: புதிய அரசு முடிவு

நாடுகளிலிருந்து பிரிட்டனில் குடியேறுவோர் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்த புதிதாக பொறுப்பேற்றுள்ள டேவிட் கேமரூன் அரசு முடிவு செய்துள்ளது. குறிப்பாக ஐரோப்பிய நாடுகள் அல்லாத பிற நாடுகளிலிருந்து அதாவது இந்தியா போன்ற நாடுகளிலிருந்து பிரிட்டன் குடியுரிமை கோருவோரைக் கட்டுப்படுத்த முடிவு செய்துள்ளது. இத்தகவலை குடியேற்றத்துறை அதிகாரி டேமியன் கிரீன் தெரிவித்துள்ளார்.

÷பிரிட்டன் மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு இத்தகைய முடிவை எடுத்துள்ளதாக அவர் கூறினார்.

÷2009-ம் ஆண்டில் பிரிட்டனில் நிரந்தர குடியுரிமை கோரி குடியேறியவர்களில் முதலிடத்தில் இந்தியர்கள் உள்ளனர். கடந்த ஆண்டில் மட்டும் 26,535 பேர் பிரிட்டனில் குடியேறியுள்ளனர். இது ஒட்டுமொத்தமாக குடியேறியவர்களுடன் ஒப்பிடுகையில் 13 சதவீதம் அதிகமாகும். ஆனால் முந்தைய ஆண்டைக் காட்டிலும் 124 சதவீதம் அதிகமாகும்.

÷இந்தியர்களுக்கு அடுத்தபடியாக பாகிஸ்தானிலிருந்து குடியேறியவர்களின் எண்ணிக்கை 20,945 மற்றும் வங்கதேசத்தவர்களின் எண்ணிக்கை 12,040 ஆகும்.

÷1990-ம் ஆண்டுகளில் கடைப்பிடிக்கப்பட்டதைப் போன்று கடுமையான கட்டுப்பாடுகளைப் பின்பற்றுவதன் மூலம் பிரிட்டனில் குடியேறுவோரின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்த முடியும் என்று நம்புவதாக கிரீன் குறிப்பிட்டார்.

÷மாணவர்கள், பணியாளர்கள், திருமணம் முடிந்து இங்கு குடியேறுவோர் என பல தரப்பினரையும் எவ்விதம் கட்டுப்படுத்தப் போகிறோம் என்பதை வரும் வாரங்களில் பார்க்கலாம் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

÷அரசு கொண்டு வர உள்ள இத்தகைய கட்டுப்பாடுகள் நடைமுறை சாத்தியமில்லாதது. இதை எதிர்த்து நீதிமன்றம் செல்லப் போவதாக பிரிட்டனில் பணிபுரியும் பிற நாட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் இங்கே தொடர்க...

இலங்கைப் பிரச்னைக்கு அரசியல் தீர்வு காண ராஜபட்சவிடம் வலியுறுத்த வேண்டும்: பிரகாஷ் காரத்


சென்னை, மே 28: இலங்கைத் தமிழர் பிரச்னைக்கு அரசியல் தீர்வு காண அந்த நாட்டு அதிபர் ராஜபட்சவிடம் இந்தியா வலிறுத்த வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் பிரகாஷ் காரத் கூறினார்.

வரும் ஜூன் 8-ம் தேதி இந்தியாவுக்கு வரும் ராஜபட்சவிடம், போரினால் பாதிக்கப்பட்ட இலங்கைத் தமிழர்களுக்கு விரைந்து மறுவாழ்வு அளிக்குமாறு வலியுறுத்தவும் மத்திய அரசுக்கு அவர் வேண்டுகோள் விடுத்தார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் இலங்கைத் தமிழர் பிரச்னைக்குத் தீர்வு என்ற தலைப்பிலான கருத்தரங்கம் சென்னையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

அதில் பங்கேற்று பிரகாஷ் காரத் பேசியது: இலங்கையில் போர் முடிந்து ஓராண்டாகிறது. அந்த நாட்டில் ஜனநாயகத்தை முன்னெடுத்துச் செல்ல இப்போது வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. தமிழர்களுக்கு அதிகாரப் பகிர்வு அளிப்பது குறித்து இலங்கையில் அரசியல் தலைவர்கள் பேசி வந்தனர்.

ஆனால், போரில் இலங்கைக்கு கிடைத்த ராணுவ வெற்றி, அதிகாரப் பகிர்வு குறித்த பேச்சுகளை பின்னுக்குத் தள்ளியுள்ளது. இலங்கையைப் பொறுத்தவரை இரண்டு முக்கியமானப் பிரச்னைகள் இப்போது உள்ளன. தமிழர் பகுதிகளில் மீண்டும் சகஜ நிலையை ஏற்படுத்த வேண்டும்.

இலங்கைத் தமிழர் மறுவாழ்வு தொடர்பாக பேசியுள்ள ராஜபட்ச, போரினால் இடம்பெயர்ந்த தமிழர்கள் அனைவரையும் மீண்டும் அவர்களது பகுதிகளில் குடியமர்த்த மேலும் 3 மாதம் ஆகும் என்று தெரிவித்துள்ளார். ஏற்கெனவே, இந்த ஆண்டு ஜனவரிக்குள் அனைத்துத் தமிழர்களும் வீடுகளுக்கு அனுப்பப்படுவார்கள் என்று அவர் தெரிவித்திருந்தது குறிஷீப்பிடத்தக்கது.

தமிழர்களுக்கு அதிகாரப் பகிர்வு கிடைக்கும் வகையில் அரசியல் சட்டத்தை சீரமைக்க வேண்டும். இலங்கையில் உள்ள சிங்களர்கள் மற்றும் தமிழர்களின் அரசியல் தலைவர்கள் அரசியல் தீர்வை நோக்கி பணியாற்ற வேண்டும். பிரச்னைகளை ஜனநாயக ரீதியில் பேசித் தீர்ப்பதற்கு பொதுவான தளம் உருவாக்கப்பட வேண்டும். ராஜபட்ச இந்தியாவுக்கு ஜூன் 8-ம் தேதி வருகிறார்.

அப்போது, இலங்கைத் தமிழர்களுக்கு விரைந்து மறுவாழ்வு அளிக்கவும், இந்தப் பிரச்னைக்கு அரசியல் தீர்வு காணவும் ராஜபட்சவை இந்தியா வலியுறுத்த வேண்டும் என்றார் பிரகாஷ் காரத். இந்தக் கருத்தரங்கில் மார்க்சிஸ்ட் கட்சியின்

மாநிலச் செயலர் ஜி.ராமகிருஷ்ணன், மத்தியக் குழு

உறுப்பினர் டி.கே. ரங்கராஜன் உள்ளிட்டோர்

பங்கேற்றனர்.
மேலும் இங்கே தொடர்க...

குப்பைத்தொட்டியிலிருந்து சிசு மீட்பு; பிரசவித்து வீசிய தாயும் கைது





மஸ்கெலியா - லக்கம் கடை வீதியில் குப்பைத்தொட்டி ஒன்றிலிருந்து நேற்றுக் காலை சிசுவொன்று மீட்கப்பட்டுள்ளது.

காலை 5.45 அளவில் கடைவீதியில் குப்பை கொட்டுவதற்காகச் சென்ற ஒருவர் வழங்கிய தகவலையடுத்து மஸ்கெலியா பொலிஸார் ஸ்தலத்திற்கு விரைந்து சிசுவை மீட்டெடுத்தனர். சிசு எறியப்படுவதற்கு ஒரு மணித்தியாலத்திற்கு முன்பு பிறந்துள்ளதாகத் தெரியவந்துள்ளது.

குப்பைத் தொட்டியில் சிசுவின் அழுகைச் சத்தத்தைக் கேட்டவர் ஏனையவர் களுக்கும் கூறியுள்ளார். எனினும், உயிருடன் கிடந்த சிசுவை காலை 6.45 அளவில் பொலிஸார் வந்து மீட்டு மஸ் கெலியா வைத்தியசாலைக்குக் கொண்டு சென்றனர். பின்னர் சிசு நாவலப்பிட்டி வைத்தியசாலைக்குக் கொண்டுசெல்ல ப்பட்டது. சிசு தேகாரோக்கியமாக உள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன. இதேவேளை, இந்தச் சிசுவைப் பிரச வித்துக் குப்பைத் தொட்டியில் எறிந்த தாயை நேற்றுக் காலை 9 மணியளவில் பொலிஸார் கண்டு பிடித்தனர். குப்பைத் தொட்டியிலிருந்து குறித்த ஒரு வீடுவரை உதிரச் சொட்டுகள் காணப் பட்டதை அடிப்படையாக வைத்து அந்த இளம் தாய் கண்டறிப்பட்டாள்.
மேலும் இங்கே தொடர்க...

28 மே, 2010

அச்சமும் பீதியுமின்றி வாழ்கிறோம்’; யாழ். மக்கள் நன்றி தெரிவிப்பு

நாட்டின் ஏனைய பிரதேசங்களில் வாழும் மக்களுக்குக் கிடைக்கும் சகல வசதிகளும் தமக்கும் தற்போது கிடைத்து வருவதாக யாழ்ப்பாண மக்கள் தெரிவிக் கிறார்கள்.

அதேபோன்று, அச்சமும் பீதியும் இன்றி வாழ்வதற்கான சூழலை ஏற்படுத்தித் தந்த ஜனாதிபதிக்கு நன்றி தெரிவிப்பதாகவும் அந்த மக்கள் கூறுகிறார்கள்.

இலங்கை தகவல் தொடர்பாடல் முகவர் நிலையம் (ஐஇபஅ) அண்மையில் யாழ் நூலகத்தில் நடத்திய பயிற்சி நெறியிலும் கண்காட்சியிலும் கலந்துகொண்ட ஆசிரிய, ஆசிரியைகளும் மக்களும் இந்தக் கருத்தைத் தெரிவித்தனர். இதற்கென அரச தகவல் மையம் (1919), இ-குடிசன மதிப்பீடு, விசேடமாக விவ சாய சமூகத்தை இலக்காகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள www.gowiy .lkஇணையத்தளம், மக்களுக்கு சுகாதார தகவல்களை வழங்குவதற்கான இணையத்தளம் உள்ளிட்ட இணையங்கள் பயன்படுத்தப்பட்டன.

மக்களின் வாழ்வாதாரத் தகவல்களைத் தொடர்பாடல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தித் தயாரிக்கப்பட்டுள்ள மென்பொருள்களையும் தகவல், தொழில்நுட்பங்களையும் மக்கள் அவதானிக்கக் கூடியதாக இருந்தது. மக்களின் அன்றாட அலுவல்களை இலகுபடுத்திக்கொள்வதற்குத் தகவல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவது பற்றியும் விரிவாக விளக்கமளிக்கப் பட்டது.
மேலும் இங்கே தொடர்க...

தடம்புரண்ட பயணிகள் ரயில் மீது சரக்கு ரயில் மோதி 75 பேர் பலி



மேற்கு வங்கத்திலிருந்து மும்பை நோக்கிச் சென்று கொண்டிருந்த பயணிகள் ரயிலொன்று நேற்று குண்டு வைத்துத் தகர்க்கப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவத்தில் 75 பேர் கொல்லப்பட்டனர்; மேலும் 200க்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்தத்தாக்குதலுக்கு நக்ஷலைட்டுகளுக்கு சார்பான அமைப்பொன்று உரிமை கோரியுள்ளது.

நேற்று நள்ளிரவு 1.35 அளவில் நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலினால் பயணிகள் ரயில் தடம்புரண்டது. இந்த வேளையில், இந்த வழியால் வந்த சரக்கு ரயில் வண்டியொன்று மோதியதிலேயே உயிரிழப்புக்கள் ஏற்பட்டதாக ஆரம்ப விசாரணைகளிலிருந்து தெரியவருகிறது. மேற்கு வங்க மாநிலம் அவுராவில் இருந்து மும்பை குர்லாவுக்கு நேற்றிரவு ஞானேஸ்வரி சூப்பர் டீலக்ஸ் எக்ஸ்பிரஸ் ரெயில் புறப்பட்டு சென்றது. நள்ளிரவு 1.35 மணிக்கு அந்த ரயில் மேற்கு வங்க மாநிலம் மேற்கு மிட்னாபூர் மாவட்டம் சரக்பூர் அருகே சர்திகா ரயில் நிலையத்தை கடந்து சென்று கொண்டிருந்தது. அப்போது மாவோயிஸ்டுகள் ரயில் தண்டவாளத்தில் குண்டுகளை வெடிக்க வைத்தனர்.

இதனால் ஞானேஸ்வரி சூப்பர் டீலக்ஸ் எக்ஸ்பிரஸ் ரெயில் பெட்டிகள் அடுத்தடுத்து கவிழ்ந்தன. மொத்தம் 13 பெட்டிகள் தடம் புரண்டு விழுந்தன. அந்த பெட்டிகள் அனைத்தும் அருகில் உள்ள தண்டவாளத்தின் மீது சரிந்து கிடந்தன சரக்கு ரயில், கவிழ்ந்து கிடந்த ஞானேஸ்வரி எக்ஸ்பிரஸ் பெட்டிகள் மீது பயங்கர சத்தத்துடன் மோதியது. இதில் கவிழ்ந்து கிடந்த பெட்டிகள் நொறுங்கின. சரக்கு ரயிலும் கவிழ்ந்தது.

கண் இமைக்கும் நேரத்துக்குள் இந்த கோர சம்பவம் நடந்தது. ரயில் பெட்டிகள் மீது சரக்கு ரயில் மோதிய போது அந்த பகுதியே குலுங்கியது. ஏற்கனவே காயங்களுடன் போராடிக் கொண்டிருந்த பயணிகளை சரக்கு ரயில் மோதியதில் பலர் உயிரிழந்தனர்.

காயங்களுடன் போராடிக் கொண்டிருந்த பயணிகள் மீட்கப்பட்டு ஹெலிகொப்டர்கள் மூலம் சரக்பூருக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்குள்ள மருத்துவமனைகளில் அவர்கள் அனுமதிக்கப்பட்டனர். அதிக காயம் அடைந்தவர்கள் மிட்னாபூர் மருத்துவமனைகளுக்கு மாற்றப்பட்டனர். 125க்கும் மேற்பட்ட பயணிகள் ஹெலிகொப்டர்கள் மூலம் மீட்கப்பட்டனர்.

இதனையடுத்து மத்திய அமைச்சர் பிரணாப் முகர்ஜி, ரயில்வே துறை அமைச்சர் மம்தாவை அழைத்து விசாரித்தார், இந்த நிலைமை குறித்து பிரதமரிடம் விளக்கப்பட்டது.

சம்பவத்தை அடுத்து இப்பகுதியில் ஹவுரா வழியாக செல்லும் ரயில்கள் ரத்து செய்யப்பட்டன
மேலும் இங்கே தொடர்க...

வடக்குக்கு விரைவில் மாகாணசபை தேர்தல்








நாட்டின் ஏனைய பிரதேச மக்கள் அனுபவிக்கும் சகல ஜனநாயக உரிமைகளையும் வடக்கு மக்களும் அனுபவிக்கும் வகையில் வடக்கில் மாகாண சபை மற்றும் உள்ளூராட்சி சபை தேர்தல்களை விரைவில் நடத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்குமென வடக்கு அபிவிருத்திச் செயலணியின் தலைவரும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சருமான பசில் ராஜபக்ஷ கிளிநொச்சியில் தெரிவித்தார்.

மன்னார் கிளிநொச்சி மாவட்டங்களுக்கு நேற்று முன்தினம் விஜயம் செய்த அமைச்சர் பசில் ராஜபக்ஷ மன்னாரிலும் கிளிநொச்சியிலும் பல்வேறு அபிவிருத்தித் திட்டங்களை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்துவைத்ததுடன் கிளிநொச்சி, சுன்னாகம், வவுனியா கிளிநொச்சிக்கான மின்சார இணைப்புத் திட்டத்தை ஆரம்பித்து வைத்து உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

நேற்று முன்தினம் கிளிநொச்சிக்கு விஜயம் செய்த அமைச்சர் பசில் ராஜ பக்ஷ, கிளிநொச்சி மின் இணைப்புத் திட்டத்தின் பூர்வாங்க நடவடிக்கைகளை ஆரம்பித்துவைத்ததுடன் கிளிநொச்சி அரசாங்க வைத்தியசாலையில் சத்திரசிகிச்சைப் பிரிவையும் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைத்தார்.

பயங்கரவாத சூழல் நிலவிய இருபது வருட காலத்திற்குப் பின்னர் கிளிநொச்சி அரசாங்க வைத்தியசாலையில் நேற்று முதல் சத்திர சிகிச்சைப்பிரிவு செயற்பட ஆரம்பித்துள்ளதுடன் முதலாவது நோயாளியும் சத்திர சிகிச்சைப் பிரிவில் சத்திரசிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். இதனையடுத்து கிளிநொச்சி வைத்திய சாலையில் இடம்பெற்ற மாவட்ட சுகாதார அத்தியட்சகர் கெப் வாகனம் வழங்கும் வைபவத் திலும் அமைச்சர் கலந்து கொண்டார்.

ஆசிய அபிவிருத்தி வங்கி மற்றும் ‘ஜய்க்கா’ நிறுவனங்கள் வடக்கின் சகல மாவட்டங்களிலு முள்ள சுகாதார அத்தியட்சகர்களுக்கு ‘கெப்’ வாகனங்களையும் ‘குரூஷர்’ வாகனங்களையும் வழங்கியது டன் பிரதேச சுகாதார அதிகாரிகளுக்கென 20 மோட்டார் சைக்கிள்களையும் பகிர்ந்தளித்தார்.

இந்நிகழ்வில் ஆசிய அபிவிருத்தி வங்கியின் தலைவர் ஜப்பானிய ‘ஜய்க்கா’ நிறுவனப் பிரதிநிதிகளுடன் அமைச்சர் சரத் அமுனுகமவும் கலந்து கொண்டார்.

தொடர்ந்து உரையாற்றிய அமைச்சர் பசில், வடக்கு மக்களின் சகல தேவைகளையும் பெற்றுக்கொடுப்பதில் அரசு மிகுந்த கவனம் செலுத்தியுள்ளது. அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, ரிசாட் பதியுதீன் ஆகியோரின் பங்களிப்போடு இதற்கான திட்டங்கள் முன்னெடுக்கப்படும்.

வடக்கில் மின்சாரம், குடிநீர், வீதி அபிவிருத்தி உட்பட சகல அடிப்படை வசதிகளும் உட்கட்டமைப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவுள்ளன. அதற்காக சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் தயாராக வுள்ளன.
மேலும் இங்கே தொடர்க...

அகதிகளை அவுஸ்திரேலியா துஸ்பிரயோகம் செய்வதாக குற்றச்சாட்டு

அரசியல் தஞ்சம்கோரி சரணாகதி அடையும் இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அகதிகளை அவுஸ்திரேலியா துஸ்பிரயோகம் செய்து வருவதாக சர்வதேச மன்னிப்புச்சபை தனது ஆண்டறிக்கையில் குற்றம் சுமத்தியுள்ளது. உலகின் 159 நாடுகளில் மனிதஉரிமை மீறல் சம்பவங்கள் இடம்பெற்று வருவதாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது. இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அகதிகள் தொடர்பில் அவுஸ்திரேலியா சர்வதேச மனிதஉரிமை சட்டங்களுக்கு அமைவான முறையில் செயற்பட வேண்டுமெனவும் சபை குறிப்பிட்டுள்ளது. சரணாகதி கோரும் மக்களுக்கு அடைக்கலம் வழங்க வேண்டிய பொறுப்பு அவுஸ்திரேலியாவிற்கு இருப்பதாகவும் சர்வதேச மன்னிப்புச்சபை சுட்டிக்காட்டியுள்ளது.
மேலும் இங்கே தொடர்க...

ஜெர்மனியில் புலிகளுக்காக நிதி திரட்டிய பெண் இலங்கையில் கைது




ஜெர்மனியில் புலிகள் இயக்கத்திற்கு நிதி திரட்டி வந்ததாகக் கூறப்படும் பெண்ணொருவர் இலங்கையில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளதாக அரச தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இலங்கையில் யுத்தம் இடம்பெற்றுக் கொண்டிருந்த வேளையில் அதற்கெதிராக ஜெர்மனியில் பாரிய போராட்டங்களை முன்னெடுத்தவர் இவரென்று கூறப்படுவதுடன், ஜெர்மனியிலுள்ள இந்திய தூதரகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டம் நடத்தியவர்களில் முக்கியமானவர் இவரென்றும் தெரிவிக்கப்படுகின்றது. இவர் புத்தளம் பகுதியைச் சேர்ந்த ஒருவரது உறவினராவர். தற்போது இவர் குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.






மேலும் இங்கே தொடர்க...

ஊடகவியலாளர் மாநாட்டிலிருந்து திடீரென வெளியேறிய பீரிஸ்


அமெரிக்காவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் இன்று இனால் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் மாநாட்டின் போது அமைச்சர் திடீரென வெளியேறியதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இனால் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் மாநாட்டில் அமைச்சர் ஜி.எல். பீரிஸ் திடீரென காரணம் எதுவும் கூறாமல் அங்கிருந்து வெளியேறிச் சென்றுவிட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
மேலும் இங்கே தொடர்க...

ஆப்கானிலிருந்து தன் படைகளை வாபஸ் பெற பிரிட்டனின் புதிய அரசு முடிவு

கடந்த சனிக்கிழமையன்று, பிரிட்டன் மூத்த அதிகாரிகள் மற்றும் புதிய அரசின் வெளியுறவு செயலாளர் வில்லியம் ஹகுவ்வுடன் ஆப்கான் வந்திறங்கிய ஒரு குழு, ஆப்கானிஸ்தானிலிருந்து மிக விரைவில் பிரிட்டிஷ் படைகளை திரும்ப பெற போவதாக அறிவித்துள்ளது.

இது தொடர்பாக, ராணுவ செயலாளர் லியம் பாக்ஸ், சர்வேதேச பிரிட்டன் செயலாளர் அன்றேவ் மிட்செல் உட்பட பல மூத்த அதிகாரிகள் தங்களை இம்மாதமே லண்டன் வந்து சந்திக்குமாறு ஆப்கான் அதிபர் ஹமித் கர்சாயை கேட்டுக்கொண்டுள்ளனர்.

புதிய வெளியுறவுச் செயலாளர் ஹகிவ் கூறுகையில், ஆப்கானில் தற்போது 10,000 பிரிட்டிஷ் படைகள் உள்ளதாக தெரிவித்தார். புதிய அரசின் மிக விரைவுத் திட்டத்தில், ஆப்கானிலிருந்து படைகளை வாபஸ் பெறுவதும் ஒன்று என்று அவர் தெரிவித்தார்.

ஆப்கான் வரும் முன் ராணுவ செயலாளர் லியம் பாக்ஸ் தெரிவிக்கையில், ஆஃப்கானிஸ்தானின் தங்கள் பயணம் வெறும் படைகளை திரும்பப் பெற மட்டுமே நடத்தப்பட உள்ளது என்றார்.

'நாங்கள் எண்ணிக்கையில் மிக குறைவாக உள்ளோம் என்பதனை நான் இங்கு ஒத்துக்கொண்டே ஆக வேண்டும் எங்கள் கொள்கைகளை நாங்கள் ஒரு முறை திரும்ப மாற்றியமைக்க வேண்டும். பிரிட்டன் நாட்டின் பாதுகாப்பே எங்களுக்கு முக்கியம்.நாங்கள் ஒன்னும் சர்வதேச போலீஸ் கிடையாது! நாங்கள் ஆப்கானை மேம்படுத்துவதற்கு வரவில்லை! மாறாக அவர்களால் பிரிட்டன் மக்களுக்கு அச்சுறுத்தல் இருக்கக்கூடாது என்பதற்காகவே வந்தோம்.

நான் எங்கள் படைகளை சந்தித்து பேச உள்ளேன். எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் இங்கிருந்து மாயமாக வேண்டும்!' என்று பாக்ஸ் சூச்சகமாக தெரிவித்தார்.

அமெரிக்காவிற்கு அடுத்து பிரிட்டன் தான் அதிக அளவில் தன் படைகளை ஆஃப்கானில் வைத்துள்ளது. முழுவதுமாக மொத்தம் 130 வெளிநாட்டுப் படைகள் ஆப்கானில் முகாமிட்டுள்ளனர். வரும் மாதங்களில் தாக்குதல்களை தீவிரமாக்க அமெரிக்கா ஒருபுறம் பேசிகொண்டிருக்க, பிரிட்டன் புதிய அரசின் இம்முடிவு, ஆப்கான் மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது என்றால் அது மிகையாகாது.
மேலும் இங்கே தொடர்க...

அரசியல் தீர்வும் அபிவிருத்தியும் தமிழ் மக்களுக்கு முக்கியமானவை

வட மாகாணத்துக்கான சில அபிவிருத்தித் திட் டங்களின் செயற்பாடு நேற்று அமைச்சர் பசில் ராஜபக்ஷவினால் ஆரம்பித்து வைக்கப்பட்டுள் ளது. மன்னார், பள்ளிமுனையில் வாழும் மக்களுக்கு நீர் விநியோகத் திட்டமும் கிளிநொச்சி மற்றும் சுன்னா கம் மின் நிலையங்கள் தடையின்றி மின்சாரம் விநி யோகிப்பதற்கான திட்டமும் நேற்று முதல் நடைமுறை க்கு வருகின்ற அதே வேளை மன்னாரிலும் கிளிநொ ச்சியிலும் வைத்தியசாலைகளுக்கான புதிய கட்டடங்க ளும் திறந்து வைக்கப்பட்டுள்ளன. இவற்றுக்கு ஏழாயி ரம் மில்லியன் ரூபாவுக்கு மேல் செலவாகியுள்ளது.

வடபகுதி மக்களுக்குப் பிரதேச அபிவிருத்தி அரை நூற் றாண்டுக்கு மேல் எட்டாக்கனியாகவே இருந்து வந்து ள்ளது. ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கம் பதவிக்கு வந்த பின்னரே இம்மக்கள் அபிவிருத்தியை அனுபவிக்கத் தொடங்கியுள்ளனர்.

வட மாகாணம் அபிவிருத்தியில் பின்தங்கியிருந்ததற்கு அரை நூற்றாண்டுக்கு மேலாக அம் மாகாண மக்களின் அரசியல் தலைமையை நியாயமான முறையிலும் நியா யமற்ற முறையிலும் தமதாக்கிக் கொண்டிருந்தவர்களே முழுப் பொறுப்பாளிகள். வடபகுதி மக்களை வெவ் வேறு காலகட்டத்தில் வெவ்வேறு கட்சிப் பெயர்களில் பாராளுமன்றத்தில் பிரதிநிதித்துவப்படுத்திய தலைவர் கள் அபிவிருத்தியில் சிறிதளவேனும் அக்கறை செலு த்தவில்லை.

இனப் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதே தங்கள் பிரதான பணி என்று இத் தலைவர்கள் கூறிய போதிலும் அந்தப் பணியையும் சரியான முறையில் முன்னெடுக்கவில்லை.

துப்பாக்கி முனையில் அரசியல் தலைமையைக் கைப்பற் றிய புலிகள் அபிவிருத்திச் செயற்பாட்டுக்கு இடமளிக் காதது மாத்திரமன்றி இருந்த ஓரிரு தொழிற்சாலைக ளையும் முடமாக்கினார்கள. முன்னைய தலைவர்களை போல இவர்களும் இன விடுதலைக்குப் பின்னரே அபி விருத்தி என்ற நிலைப்பாட்டைக் கொண்டிருந்தனர்.

ஜனநாயக வழித் தலைவர்களும் ஆயுதம் ஏந்தியவர்க ளும் இனப் பிரச்சினையின் தீர்வுக்குப் பின்னரே அபி விருத்தி எனக் கூறிய போதிலும் இரண்டையுமே கோட்டை விட்டனர் என்பதே உண்மை. கற்பனாவாதச் சிந்தனை கள் காரணமாக இனப் பிரச்சினையைச் சிக்கலாக்கியது தான் இவர்களின் சாதனை.

தமிழ் மக்களைப் பொறுத்த வரையில் இனப்பிரச்சினைக் கான தீர்வும் பிரதேச அபிவிருத்தியும் சம அளவில் முக்கியத்துவம் பெற வேண்டியவை. இனத்தின் கெளர வமும் இருப்பும் அரசியல் தீர்வில் தங்கியுள்ள அதே வேளை மக்களின் நாளாந்த பெளதீகத் தேவைகளின் பூர்த்தி அபிவிருத்தியில் தங்கியுள்ளது.

எனவே, இம் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தலைவர்கள் அர சியல் தீர்வை அடைவதற்கு அளிக்கின்ற அதேயளவு முக்கியத்துவத்தை அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கும் அளிக்க வேண்டும்.

தமிழ் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்துவதாக இப்போது உரிமை கோருபவர்கள் அரசியல் தீர்வைப் பெறுவதற் குச் சரியான அணுகுமுறையைப் பின்பற்றவில்லை. அபி விருத்தியின் பக்கம் இவர்கள் திரும்பவேயில்லை.

இனி மேல் தங்கள் போக்கை மாற்றிக் கொள்ள வேண்டும். எதிர்ப்பு அரசியலால் எதையும் சாதிக்க முடியாது. வட க்கு, கிழக்கு அபிவிருத்திக்கு அரசாங்கம் முக்கியத்து வம் அளிக்கின்றது. சமகால யதார்த்தத்துக்கு அமை வான அரசியல் தீர்வுக்கும் தயாராக இருக்கின்றது. தமிழ் மக்களின் நலன் கருதித் தமிழ்த் தலைவர்கள் இவ்விடயங்களில் அரசாங்கத்துடன் இணக்கமாகச் செய ற்பட முன்வர வேண்டும்.
மேலும் இங்கே தொடர்க...

ஜீ. எல். பீரிஸ் - ஹிலாரி இன்று சந்திப்பு






அமெரிக்காவுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டிருக்கும் இலங்கை வெளிவிவகார அமைச்சர் இன்று வெள்ளிக்கிழமை அமெரிக்க இராஜாங்க செயலாளர் ஹிலாரி கிளின்டனைச் சந்தித்து பேச்சு நடத்தவுள்ளார். இச்சந்திப் பானது திட்டமிட்டபடி வொஷிங்டனிலுள்ள அமெரிக்க இராஜாங்கச் செயலகத்தில் (இலங்கை நேரப்படி) இன்று மாலை நடைபெறவிருப்பதாக அமைச்சு வட்டார ங்கள் தெரிவித்தன.

இராஜாங்கச் செயலாளர் ஹிலாரி கிளின்ரனின் விசேட அழைப்பினையேற்றே வெளிவிவகார அமைச்சர்ஜீ. எல். பீரிஸ் நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு கடந்த 23ம் திகதி அமெரிக்காவுக்குப் பயணமானார்.

அமைச்சரின் அமெரிக்காவுக்கான விஜயத்தையடுத்து, அந்நாட்டு மக்களுக்கு விதிக்கப்பட்டிருந்த இலங்கைக்கான பயண எச்சரிக்கை அமெரிக்க அரசாங்க த்தினால் திரும்பப் பெறப்பட்டுள்ளமை யானது பாரிய திருப்பு முனையாக அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

அமெரிக்காவின் நியூயோர்க் நகரத்தை கடந்த 25ம் திகதி செவ்வாய்க்கிழமை சென்றடைந்த அமைச்சர் பீரிஸ் ஐக்கிய நாடுகள் சபையின் செயலகத்துக்கு விஜயம் செய்ததுடன் அங்கு ஐ. நா. செயலாளர் நாயகம் பான் கீ மூன் உள்ளிட்ட முக்கிய பிரதிநிதிகளையும் சந்தித்து பேச்சு நடத்தினார்.

ஐ. நா. செயலாளர் நாயகத்தின் பிரதான ஆலோசகர் விஜே நம்பியார், பிரதி செயலாளர் நாயகம் ஷின் பாஸ்கோ உள்ளிட்ட ஐ. நாவின் பல சிரேஷ்ட அதிகாரிகளையும் அமைச்சர் சந்தித்து நாட்டின் சமாதானம், அபிவிருத்தி, புனர்நிர்மாணம், மீள்குடியேற்றம் ஆகியவை குறித்து கலந்துரையாடினார். இச்சந்திப்புக்களில் அமைச்சருடன் ஜ. நா.வின் இலங்கைக்கான தூதுவர் கலாநிதி பாலித கொஹன, பிரதி நிரந்தர பிரதிநிதி பந்துல ஜயசேகர மற்றும் கவுன்சிலர் மக்ஸ்வெல் கீகல் ஆகியோரும் பங்குபற்றினர்.

அதனைத் தொடர்ந்து அமைச்சர் பீரிஸ் நியூயோர்க்கில் உள்ள சர்வதேச தந்திரோபாய கற்கைகளுக்கான கேந்திரத்தில் நடைபெற்ற கலந்துரையாடலில் கலந்து கொண்டார். இதில் அமைச்சர் கருத்து தெரிவிக்கையில்; இலங்கை மக்கள் கடந்த கால் நூற்றாண்டு காலத்தில் காணமுடியாத சந்தோஷத்தை தற்போது அனுபவித்து வருவதாக கூறினார்.

சமாதான முன்னெடுப்பு, நிறைவடையும் கட்டத்தில் உள்ள மீள்குடியேற்றம், குறிப்பாக வடக்கில் அமுல்படுத்தப்பட்டு வரும் புனர்நிர்மாணம், சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிப்பு இதனால் முதலீட்டாளர்களுக்கு ஏற்பட்டுள்ள சாதகமான சூழ்நிலை, இலங்கை யாப்பில் புதிய திருத்தங்களை மேற்கொள்ளக்கூடிய சாத்தியக்குகூறுகள் உள்ளிட்ட பல்வேறுபட்ட விடயங்கள் தொடர்பாகவும் அமைச்சர் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.

தற்போது அமெரிக்காவின் தலைநகரான வொஷிங்டன் டி.சியை வந்தடைந்திருக்கும் அமைச்சர் பீரிஸ், வெளியுறவு அலுவல்களுக்கான அமெரிக்க காங்கிரஸின் பிரதிநிதி ஹோவோர்ட் பேர்மன், இரா ஜாங்க உப குழுவின் தலைவர் நீட்டா லோகேய், அமெரிக்க காங்கிரஸ் உறுப் பினர்கள் மற்றும் செனற்சபை உறுப் பினர்களையும் சந்தித்துப் பேச்சு நடத் தியுள்ளார். வொஷிங்டனுக்கான இலங்கைத் தூதுவர் ஜஸிய விக்கிரமசூரியவும் இதில் கலந்துகொண்டார்.
மேலும் இங்கே தொடர்க...

இலங்கையில் அமெரிக்க பிரஜைகளுக்கான பயண எச்சரிக்கை உடனடி ரத்து

இலங்கையில் பாதுகாப்பு நிலைமை முன்னேற்றமடைந்துள்ளதையடுத்து அமெரிக்கா விடுத்திருந்த பயண எச்சரிக்கையை அமெரிக்க ராஜாங்க திணைக்களம் ரத்துச் செய்துள்ளது.

அமெரிக்க ராஜாங்க திணைக்களம் இது தொடர்பான அறிவிப்பை கடந்த புதன்கிழமை விடுத்துள்ளது.

‘2009 நவம்பர் 19 ஆம் திகதி இலங்கைக்காக விடுக்கப்பட்ட பயண எச்சரிக்கையை 2010 மே 26 ஆம் திகதி அமுலாகும் வகையில் ரத்துச் செய்யப்பட் டுள்ளது’ என்று ராஜாங்க திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

2009 மே 18 ஆம் திகதி இலங்கை அரசாங்கம் தமிஸழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்த வெற்றியை பிரகடனம் செய்தது. யுத்தம் முடிவுற்றதாக பிரகடனப்படுத்தப்பட்டதையடுத்து புலிகள் இயக்கம் கொழும்பிலோ அல்லது இலங்கையின் வேறு எந்த இடத்திலோ எந்தவொரு தாக்குதலையும் நடத்தவில்லை என்று ராஜாங்க திணைக்களத்தின் அறிக்கைகளில் மேலும் கூறப்பட்டுள்ளது.

மோதல் முடிவுற்ற சில தினங்களில் இலங்கையில் சுற்றுலாப் பயணத்துறை முன்னேற்றம் காணத் தொடங்கியது. அது முதல் சுற்றுலாத்துறை தொடர்ந்து அபிவிருத்தியடைந்து வரும் நிலையில் கடந்த வருடத்துடன் ஒப்பிடும் போது நடந்து முடிந்த சில மாதங்களில் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை இரு மடங்காக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும் இங்கே தொடர்க...

மக்கள் தலைவனின் நாற்பதாண்டு அரசியல் நினைவுத் தடங்கள் மர்லின் மரிக்கார்


ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அரசியல் வாழ்வில் பிரவேசித்து நேற்று (27ம் திகதியுடன்) நாற்பது வருடங்கள் பூர்த்தியாகின்றன.

1970ம் ஆண்டு மே மாதம் 27ம் திகதி பாராளுமன்ற உறுப்பினரானதுடன் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அரசியல் வாழ்வு ஆரம்பமானது. தனது 24வது வயதில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, லங்கா சமசமாஜக் கட்சி, இலங்கைக் கம்யூனிஸ்ட் கட்சி ஆகியவற்றை உள்ளடக்கிய ஐக்கிய முன்னணி வேட்பாளராக பெலியத்த தேர்தல் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

அதனைத் தொடர்ந்து அரசியல் வாழ்வில் கட்டம் கட்டமாக வளர்ச்சிப் படிகளில் காலடி பதித்தார்.

ஸ்ரீல.சு. கட்சி தலைமையிலான பொதுஜன ஐக்கிய முன்னணி 1994ம் ஆண்டில் ஆட்சி பீடமேறிய போது அந்த ஆட்சியில் தொழிலமைச்சராகவும் அதன் பின்னர் கடற்றொழில் நீரியல் வளத் துறை அமைச்சராகவும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பதவி வகித்தார். இக்காலப் பகுதியில் தொழிலாளர்களதும் மீனவ சமூகத்தினதும் மேம்பாட்டுக்காக அளப்பரிய பல வேலைத் திட்டங்களை அவர் மேற்கொண்டார்.

இதனைத் தொடர்ந்து 2002-2004ம் ஆண்டு காலப் பகுதியில் அவர் எதிர்க்கட்சித் தலைவராகப் பதவி வகித்தார். இந்த சந்தர்ப்பத்தில் நாட்டு மக்களின் விமோசனத்திற்காகத் தொடராகக் குரல் கொடுத்தார்.

அதனைத் தொடர்ந்து 2004ம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் போட்டியிட்டு வெற்றி பெற்றுப் பிரதமராக நியமிக்கப்பட்டார். இக்காலப்பகுதியில் கமநெகும, மகநெகும திட்டங்களை அவர் நாட்டுக்கு அறிமுகப்படுத்தினார். வீதிகளை கொங்கிஹட் போட்டு செப்பனிடும் முறை நாட்டுக்கு அறிமுகப்படுத்தப்பட்டதும் இந்தக் காலகட்டத்தில்தான்.

அதன் பின்னர் 2005ம் ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டு இலங்கையின் ஐந்தாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாகப் பதவியேற்றார்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நாட்டுக்கும், நாட்டு மக்களுக்கும் அளித்த சிறந்த தலைமைத்துவத்தின் பயனாக இரண்டாவது தடவையாகவும் ஜனாதிபதியாக மக்களால் தெரிவு செய்யப்பட்டிருக்கின்றார்.

ஐ.நா. சபையில் தமிழில் உரையாற்றியமை, சார்க் அமைப்பின் தலைமைப் பொறுப்பை ஏற்றமை, முப்பது வருட பயங்கர வாதத்தை முடிவுக்குக் கொண்டு வந்தமை, ஜீ.15 அமைப்பின் தலைமை என்பன ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பதவிக் காலத்தில் குறிப்பிடக் கூடிய சிறப்பம்சமாக உள்ளன.



மேலும் இங்கே தொடர்க...

அரசியலமைப்பு மாற்றத்திற்கு சுதந்திரக் கட்சியின் மத்திய குழு அங்கீகாரம் அலரி மாளிகையில் ஜூன் 7இல் வருடாந்த மாநாடு



ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் வரு டாந்த மாநாடு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் ஜூன் மாதம் 7 ஆம் திகதி அலரி மாளி கையில் நடைபெறவுள்ளது.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்தியகுழுக் கூட்டம் ஜனாதிபதி தலைமையில் நேற்று முன்தினம் கூடிய போது இதற்கான தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக அக்கட்சி யின் சிரேஷ்ட உபதலைவர்களில் ஒருவரும், மேல் மாகாண ஆளுநரு மான அலவி மெளலானா நேற்றுத் தினகரனுக்குத் தெரிவித்தார்.

இம்முறை நடைபெறவுள்ள வரு டாந்த பொதுக் கூட்டத்திற்கான நிக ழ்ச்சி நிரல் தயாரிப்பது தொடர்பாக ஆராய்வதற்கென கூட்டப்பட்ட இந்த மத்திய குழுக் கூட்டத்தின் போது பல்வேறு அரசியல், முக்கிய விடய ங்கள் தொடர்பாகவும் விரிவாக ஆராயப்பட்டதாக அவர் மேலும் தெரிவித்தார்.

ஜனாதிபதி தேர்தல் மற்றும் பொதுத் தேர்தலில் அரசாங் கம் அடுத்தடுத்து அமோக வெற்றி யீட்டியதையடுத்து அலரி மாளிகை யில் முதற்தடவையாக இந்த மாநாடு பிரமாண்டமான முறையில் நடைபெறவுள்ளதால் இம்முறை பாரிய ஏற்பாடுகள் மேற்கொள்ள ப்பட்டுள்ளன.

பாராளுமன்றத்தில் அறுதிப் பெரும்பான்மையைப் பெற்றுள்ள அரசாங்கம் நாட்டினதும், மக்களி னதும் நலனை கருத்திற்கொண்டு அரசியலமைப்பு உட்பட பல்வேறு மறுசீரமைப்புக்களை மேற்கொள்ள வுள்ளது.

அரசியலமைப்பு மாற்றங்கள், ஆணைக்குழுக்களின் நியமனங்கள், பாராளுமன்றத்தில் அரசாங்கம் முன் வைக்கவுள்ள பல்வேறு விடயங்கள் தொடர்பாக நேற்று முன்தினம் நடைபெற்ற மத்திய குழுக் கூட்ட த்தின் போது விரிவாக ஆராயப்பட் டதுடன் அதற்கான அங்கீகாரத்தை யும் மத்திய குழு வழங்கியதாக ஆளுநர் அலவி மெளலானா குறிப் பிட்டார்.

அரசியலமைப்பு மாற்றங்கள், மறு சீரமைப்புக்கள், ஆணைக்குழுக்களின் நியமனங்கள் போன்ற விடயங்கள் தொடர்பாக 7 ஆம் திகதி நடை பெறவுள்ள வருடாந்த மாநாட்டில் முன்வைக்கப்பட்டு பின்னர் பாராளு மன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என் றும் அவர் சுட்டிக்காட்டினார்.

இதேவேளை அரசாங்க ஊழிய ர்களுக்கான சம்பள அதிகரிப்பு தொடர்பாகப் பேசப்பட்டதாக தெரி வித்த அவர் இது தொடர்பாக பரிசீலிக்கப்பட்டு அடுத்து முன் வைக்கப்படவுள்ள வரவு - செலவு திட்டத்தில் சேர்த்துக் கொள்வத ற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் குறிப்பிட்டார்.
மேலும் இங்கே தொடர்க...

அடுத்த அதிமுக ஆட்சி, பழைய செயலகத்தில்'





ஜெயலலிதா
அதிமுக ஆட்சி புனித ஜார்ஜ் கோட்டையில்தான் -- ஜெயலலிதா
அதிமுக மீண்டும் அடுத்து வரும் தேர்தலில் தமிழகத்தில் ஆட்சியைப் பிடித்தால், அரசு, பழைய தலைமைச் செயலகத்தில்தான் இயங்கும் என்று முன்னாள் முதல்வரும் அதிமுக பொதுச்செயலாளருமான ஜெயலலிதா கூறியுள்ளார்.

தமிழ்நாட்டில் அடுத்து அதிமுக ஆட்சியைப் பிடிக்கும்போது, புதிதாகக் கட்டப்பட்ட தலைமைச் செயலகத்தில் அதன் அரசு அமையாது என்றும், ஏற்கெனவே செயல்பட்டு வந்த புனித ஜார்ஜ் கோட்டையில்தான் அமையும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.


புனித ஜார்ஜ் கோட்டை, சென்னை
'பழைய கோட்டையில்தான் ஆட்சி'

இன்று மாலை சென்னையில் நடைபெற்ற அதிமுக செயற்குழுக் கூட்டத்தில் கட்சித் தொண்டர்களிடம் பேசியபோது, ஜெயலலிதா, இதைத் தெரிவித்தார்.

இதன் மூலம், அதிமுக ஆட்சிக்கு வந்தால், கோடிக்கணக்கான ரூபாய் செலவில் கட்டப்பட்டு கடந்த மார்ச் மாதம் திறக்கப்பட்ட புதிய தலைமைச் செயலகக் கட்டடத்தைப் பயன்படுத்தாது என்று ஜெயலலிதா சுட்டிக்காட்டியுள்ளார்.

இது தமிழக அரசியலில் மேலும் ஒரு சர்ச்சையை ஏற்படுத்தக்கூடு்ம் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், கட்சியிலிருந்து மூத்த பிரமுகர்கள் சிலர் திமுகவில் சேர்வது பற்றி அவர் பேசும்போது, கட்சியை விட்டுப் போன தலைவர்ளைப் பற்றிக் கவலைப்படவில்லை என்றும், தொண்டர்களை மையமாகக் கொண்ட கட்சி அதிமுக என்றும் தெரிவித்தார்.
மேலும் இங்கே தொடர்க...

கிளிநொச்சிக்கு மின்சார வழங்கல் திட்டம்

கிளிநொச்சிக்கு மின்சார வழங்கல் திட்டம்

கிளிநொச்சிக்கு மின்சார வழங்கல் திட்டம்
இலங்கையின் வடக்கே கிளிநொச்சிக்கும், யாழ் மாவட்டம் சுன்னாகத்துக்கும் மின்சாரம் வழங்கும் புதிய திட்டத்துக்கான வேலைகள் தொடங்கியுள்ளன.

இந்த இரு நகரங்களுக்கும், தேசிய மின்வழங்கல் வலைப்பின்னல் ஊடாக அதிசக்தி வாய்ந்த 132 கிலோ வோட்ஸ் மின்சாரம் வழங்குவதற்கான வேலைத்திட்டங்கள் இன்று கிளிநொச்சி நகரில் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ச அவர்களினால் ஆரம்பித்து வைக்கப்பட்டிருக்கின்றன.

இந்த வேலைத்திட்டத்தின் கீழ் 132 கிலோ வாட்ஸ் சக்தியுள்ள மின்சாரம் கிளிநொச்சியில் அமையவுள்ள மின் விநியோக நிலையத்திற்கும் யாழ்ப்பாணம் சுன்னாகத்தில் உள்ள மின்விநியோக நிலையத்திற்கும் கிடைக்கும் என்றும், அந்த நிலையங்களில் இருந்து 33 கிலோ வோட்ஸ் மின்சாரம் கிளிநொச்சி மாவட்டத்திற்கும், யாழ் குடாநாட்டிற்கும் வழங்கப்படும் என்றும் மின்சாரசபை அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர். இரண்டு வருடங்களில் இந்த வேலைத்திட்டங்கள் நிறைவேற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

தற்போது வவுனியாவில் உள்ள மின்வழங்கல் நிலையத்தில் இருந்து கிளிநொச்சி நகரத்திற்கும், முல்லைத்தீவு மாவட்டத்தின் மல்லாவிக்கும் மின்சாரம் வழங்கப்பட்டிருக்கின்றது. இதேவேளை, மாங்குளத்தில் இருந்து முல்லைத்தீவு நகரத்திற்கு மின்விநியோகம் வழங்குவதற்கான இணைப்பு வேலைகள் நடைபெற்று வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றார்கள். இதேவேளை யாழ்ப்பாணத்திற்கு மின்பிறப்பாக்கிகள் ஜெனரேற்றக்கள் மூலமாகவே மின்சாரம் வழங்கப்பட்டு வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

இன்றைய கிளிநொச்சி வைபவத்தில் உரையாற்றிய பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ச அவர்கள், இந்த மின்விநியோகத் திட்டத்திற்கு ஜப்பானிய அரசும், ஆசிய அபிவிருத்தி வங்கியும் நிதியுதவி வழங்கியிருப்பதாகத் தெரிவித்தார்.

யுத்தம் நடைபெற்ற பிரதேசங்களில் இராணுவத்தினர் கண்ணிவெடிகளை அகற்றி வருகின்ற அதேவேளை, வடக்கிற்கு முழுமையான மின்சார வசதியை ஏற்படுத்துவதற்கான வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்படுகின்றது. இதேபோன்று வீதிகளை அமைத்தல், சுகாதார வசதிகள், பாடசாலைகளை ஆரம்பித்தல், நீர்ப்பாசன வசதிகளை ஏற்படுத்துதல் உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளையும் ஏற்படுத்துவதற்கான அபிவிருத்திப் பணிகளை அரசாங்கம் வடக்கில் மேற்கொண்டு வருவதாகவும் அவர் கூறினார்.
மேலும் இங்கே தொடர்க...

27 மே, 2010

சரத் பொன்சேகாவிற்கெதிரான மூன்றாவது இராணுவ நீதிமன்றமும் ஆரம்பம்



இராணுவத்தினரால் தடுத்து வைக்கப்பட்டுள்ள முன்னாள் இராணுவத் தளபதியும், நாடாளுமன்ற உறுப்பினருமான சரத் பொன்சேகாவுக்கு எதிரான மூன்றாவது இராணுவ நீதிமன்றமும் அமைக்கப்பட இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. தனது பதவிக் காலத்தில் சட்டவிரோதமான ஆயுதக் கொள்வனவுகளில் ஈடுபட்டார் என்ற குற்றச்சாட்டை விசாரிப்பதற்காகவே இந்த மூன்றாவது நீதிமன்றம் அமைக்கப்பட உள்ளது. இந்நிலையில் ஜெனரல் சரத் பொன்சேகா தொடர்பான இரண்டாவது இராணுவ நீதிமன்றம் விசாரணை இம் மாதம் 24 ஆம் திகதியன்று இடம்பெற்ற போது இரண்டாவது நீதிமன்ற விசாரணைகளை ரத்துச்செய்யமாறு மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் சரத்பொன்சேகா மனுதாக்கல் செய்திருந்தார். எனவே இந்த விசாரணை எதிர்வரும் ஜூன் மாதம் 3ஆம் திகதி; வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இருப்பினும் பொன்சேகாவுக்கு எதிராக மூன்றாவது இராணுவ நீதிமன்றமும் அமைக்கப்பட இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் இங்கே தொடர்க...

தமிழீழம் தொடர்பாக பிரசாரம் செய்த இருவர் கைது

நாடு கடந்த தமிழீழம் தொடர்பாக கிழக்கு மாகாணத்தில் பிரசாரம் செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டு இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பாண்டிருப்பு மற்றும் எருவில் பகுதிகளைச் சேர்ந்த இவர்கள் கல்முனை மற்றும் களுவாஞ்சிக்குடிப் பகுதிகளைச் சேர்ந்தவர்கள் எனவும், இவர்கள் இருவரும் நாடு கடந்த அரசாங்கத்திற்கு ஆதரவளிக்கும்படி மக்களிடம் பிரசாரம் செய்து வந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
மேலும் இங்கே தொடர்க...

வவுனியாவுக்குச் சென்ற தனியார் பஸ் விபத்து: 50 பேர் காயம்

வவுனியாவுக்குச் சென்ற தனியார் பஸ் விபத்து: 50 பேர் காயம்
கொழும்பிலிருந்து வவுனியாவிற்குச் சென்று கொண்டிருந்த தனியார் பஸ் ஒன்று அநுராதபுரம் பகுதியில் இன்று காலை விபத்துக்குள்ளானதில் 50 பேர் காயடைந்துள்ளனர்.

விபத்துக்குள்ளான பஸ் வண்டியில் 50 பேர் காயமடைந்ததோடு இவர்களில் 28 பேர் படுகாயங்களுக்குள்ளானதாகவும் இவர்கள் அநுராதபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்ப்படுகின்றது.
மேலும் இங்கே தொடர்க...

குழந்தை கடத்தல் வழக்கில் பாதிரியார் கைது




கிருஷ்ணகிரி : குழந்தை கடத்தல் வழக்கில் தொடர்புடைய, விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த, மேலும் ஒரு பாதிரியார் கைது செய்யப்பட்டார். கிருஷ்ணகிரியில், மூன்று மாத ஆண் குழந்தை மற்றும் மூன்று வயது சிறுவன் ஆகியோரை கடத்திய, தனலட்சுமி (35) மற்றும் சென்னை கிரிஜா, கணவர் சிவா, ராணி மற்றும் பாதிரியார் அல்போன்ஸ் சேவியர் ஆகிய ஐந்து பேரை போலீசார் கைது செய்தனர். கடத்தப்பட்ட இரு சிறுவர்களை மீட்டு, பெற்றோரிடம் ஒப்படைத்தனர். குழந்தைகள் கடத்தல் தொடர்பாக, விழுப்புரம் மாவட்டம் ரெட்டணையை சேர்ந்த, பாதிரியார் செல்வம் (44) என்பவரை போலீசார் கைது செய்தனர். பாதிரியார் செல்வத்திடம் நடத்திய விசாரணையில், கிடைத்த தகவலின்படி, கிரிஜாவை காவலில் எடுத்து விசாரிக்க, போலீசார் கிருஷ்ணகிரி குற்றவியல் நடுவர் மன்றத்தில், மனுதாக்கல் செய்தனர்.
மேலும் இங்கே தொடர்க...

கட்டுநாயக்க, இரத்மலானை உட்பட 13 உள்ளூர் விமான நிலையங்கள் அபிவிருத்தி

கட்டுநாயக்க, இரத்மலானை விமான நிலையங்கள் உட்பட மேலும் 13 உள்ளூர் விமான நிலையங்களை முழுமையாக அபிவிருத்தி செய்யும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இது தொடர்பில் முன்னெடுக்கப்படவுள்ள செயற்திட்டங்கள் தொடர்பில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு வழிகாட்டல்களை வழங்கியுள்ளார்.

இந்நிகழ்வு அலரி மாளிகையில் நடைபெற்றதுடன் நவீன தொழில்நுட்பத்தின் உதவியுடன் விமானப் பயணிகளுக்குக் கூடுதல் வசதிகளைப் பெற்றுக் கொடுக்கும் வகையில் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையம் முழுமையான அபிவிருத்திக்கு உள்ளாக்கப்படுவது தொடர்பிலும் ஆராயப்பட்டது.

நேற்று முன்தினம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் துறைமுகங்கள் மற்றும் விமான சேவைகள் அமைச்சின் செயற்திட்ட மீளாய்வு நிகழ்வு அலரி மாளிகையில் நடை பெற்ற போது மேற்படி விடயங்கள் தொடர்பில் முக்கிய கவனம் செலுத்தப் பட்டன. கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு 23 விமான சேவை நிறுவனங்களைச் சேர்ந்த விமானங்கள் வந்து போகின்றன. 46 மார்க்கங்கள் ஊடாக இச்சேவைகள் இடம்பெறுகின்றன.

நாட்டில் தற்போது நிலவும் அமைதிச் சூழலில் உல்லாசப் பிரயாணிகளின் வருகை 50 வீதத்தால் அதிகரித்துள்ளதுடன் விமான நிலையத்தை பயன்படுத்தும் பயணிகளின் தொகையும் ஐம்பது வீதத்தால் அதிகரித்துள்ளது. இதனைக் கருத்தில்கொண்டு கட்டுநாயக்க விமான நிலையம் முழுமையான அபிவிருத்திக் குள்ளாக்கப்படவுள்ளது. இதுவரை காலமும் வருடத்திற்கு 4.2 மில்லியன் என்ற வீதத்திலேயே மக்கள் விமான நிலையத்தை உபயோகப்படுத் தியுள்ளனர். எதிர்வரும் 2012ம் ஆண்டில் இதனை 6 மில்லியனாக அதிகரிப்பதே அரசாங்கத்தின் எதிர்பார்ப்பாகும்.

தற்போது மேற்கொள்ளப்படவுள்ள அபிவிருத்தியின் கீழ் விமான நிலைய போக்குவரத்துக்கான விசேட சொகுசு ரயில் சேவை, தீர்வையற்ற வர்த்தக நிலையங்கள் விமானங்களுக்கிடையில் மாறும் பயணிகளுக்கான ஹோட்டல் வசதிகளை மேம்படுத்தல் போன்ற நடவடிக்கைகளும் இடம்பெறவுள்ளன.

இந்நிகழ்வில் அம்பாந்தோட்டை மத்தள புதிய விமான நிலையம் தொடர்பிலும் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன. வருடத்திற்கு ஒரு மில்லியன் பிரயாணிகள் உபயோகப்படுத்தும் வகையில் சகல வசதிகளையும் அங்கு ஏற்படுத்துவது தொடர்பில் இதன்போது ஆராயப்பட்டது.

3500 மீற்றர் நீள ஓடு பாதை அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளதுடன் முதற் கட்டமாக 10 விமானங்கள் தரித்து நிற்கக் கூடிய வசதிகள் ஏற்படுத்தப்படவுள்ளன. சர்வதேச எட்டு விமான மார்க்கங்களை உபயோகிப்பதற்கும் சம்பந்தப்பட்ட நாடுகளின் அனுமதி பெறப்பட்டுள்ளன. அத்துடன் இத்திட்டத்தின் சமகாலத்தில் இரத்மலானை உட்பட 13 உள்ளூர் விமான நிலையங்களை அபிவிருத்தி செய்யவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
மேலும் இங்கே தொடர்க...

மன்னார் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்கள்: ரூ.7000 மில். செலவில் அபிவிருத்தி திட்டங்கள்


*
பள்ளிமுனை நீர்விநியோகம்
*
வவுனியா - கிளிநொச்சி, சுன்னாகம் மின் விநியோகம்
*
மன்னார், கிளிநொச்சி வைத்தியசாலைகள் புனரமைப்பு


மன்னார், கிளிநொச்சி மாவட்டங்களில் சுமார் 7000 மில்லியன் ரூபா செலவில் மேற்கொள்ளப்பட்ட குடிநீர், மின் விநியோகம், நீர்ப்பாசனம், மற்றும் சுகாதார அபிவிருத்தித் திட்டங்கள் இன்று உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்படவுள்ளன.

வட மாகாண அபிவிருத்தி, மீள்குடியேற்றம் என்பனவற்றுக்கான ஜனாதிபதி செயலணியின் தலைவரும், பொருளாதார அபிவிருத்தி அமைச்சருமான பசில் ராஜபக்ஷ தலைமையில் இந்த அபிவிருத்தி திட்டங்களுக்கான ஆரம்ப நிகழ்வுகள் இன்று நடைபெறவுள்ளதாக வட மாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜி. ஏ. சந்திரசிறி தினகரனுக்குத் தெரிவித்தார்.

மன்னார், கிளிநொச்சி பகுதிகளில் மீளக் குடியமர்த்தப்பட்ட மக்களின் நலன் கருதி, அவர்களது வாழ்க்கை தரத்தை மேம்படுத்தும் பொருட்டே அரசாங்கம், வடக்கின் வசந்தம் வேலைத் திட்டத்தின் ஊடாக இந்த அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார். வட மாகாண சபை, இலங்கை மின்சார சபை, ஆசிய அபிவிருத்தி வங்கி, மற்றும் ஜப்பான் சர்வதேச உதவி நிறுவனம் ஆகியவற்றின் ஒத்துழைப்பு மற்றும் நிதி உதவியுடன் இந்த திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.

மின்சாரம்

வட மாகாணத்தில் தேசிய மின்சார கட்டமைப்பை மேம்படுத்தி, வட பகுதி மக்களின் அன்றாட வாழ்வை மேம்படுத்தும் நோக்கில் 69.4 மில்லியன் அமெரிக்க டொலர் செலவில் பல்வேறு மின்சார அபிவிருத்தி திட்டங்கள் ஆரம்பித்து வைக்கப்படவுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சின் செயலாளர் எம். எம். சி. பேர்டினன்டோ தெரிவித்தார். வவுனியாவிலிருந்து கிளிநொச்சி வரை 132 கிலோ வோல்ட் மின் இணைப்புக்களை ஆரம்பிக்கும் திட்டத்திற்கென ஜப்பான் அரசாங்கம் 33.6 மில்லியன் அமெரிக்க டொலர்களையும், கிளிநொச்சி முதல் சுன்னாகம் வரை 132 கிலோ வோல்ட் ‘கிரிட்’ உப நிலையங்களை அமைக்கும் திட்டத்திற்கு ஆசிய அபிவிருத்தி வங்கி 32.9 மில். அமெரிக்க டொலர்களையும் கடனுதவியாக வழங்குகின்றது.

நீர் விநியோகம், நீர்ப்பாசனம்

மன்னார், பள்ளிமுனை பிரதேச மக்களின் நலன் கருதி 35 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்டுள்ள பள்ளிமுனை நீர் விநியோக திட்டமும் இன்று ஆரம்பித்து வைக்கப்படவுள்ளது.

ஆசிய அபிவிருத்தி வங்கி இதற்கான நிதி உதவியை வழங்குவதாக தெரிவித்த வட மாகாண ஆளுநர், இதன்மூலம் பள்ளிமுனை கிராமத்தைச் சேர்ந்த 500 குடும்பங்கள் நன்மையடையவுள்ளன என்றார். அத்துடன் வவுனியா மன்னார் மக்களின் நலன் கருதி உலர் வளப் பகுதியில் நீர் விநியோக திட்டத்திற்கான அடிக்கல்லும் இன்று நாட்டப்படவுள்ளது என்றும் குறிப்பிட்டார்.

சுகாதாரம்

மன்னார், கிளிநொச்சி மக்களின் சுகாதார துறையை மேம்படுத்தும் நோக்கில் இரு வைத்தியசாலைகளின் பல பகுதிகள் புனரமைக்கப்பட்டு மீள ஆரம்பிக்கப்படவுள்ளன. இதற்கென வட மாகாண சபையினால் சுமார் 130 மில்லியன் ரூபா செலவு செய்யப்பட்டுள்ள துடன், நெகோர்ட் அமைப்பின் ஊடாக புனர்நிர்மாண பணிகள் மேற்கொள்ளப்பட்டு ள்ளன. 80 மில்லியன் ரூபா செலவில் மன்னார் வைத்தியசாலையின் முன்று மாடிக் கட்டடம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. இவற்றில் இரு மாடிகளில் சத்திரசிகிச்சை வார்ட்கள் இரண்டும், கீழ் மாடியில் சத்திரசிகிச்சை கூடமும் அமைக்கப்பட்டு ள்ளது. சகல வசதிகளுடன் குளிரூட்டப்பட்டு ள்ளது.

சுமார் 50 மில்லியன் ரூபா செலவில் கிளிநொச்சி வைத்தியசாலையின் பல பகுதிகள் புனரமைக்கப்பட்டுள்ளன. குளிரூட்டப்பட்ட இரு வார்ட்களும், அவசர சேவை பிரிவும், சத்திரசிகிச்சை வார்ட்டும் இன்று மக்களிடம் கையளிக்கப்படவுள்ளதாக வட மாகாண ஆளுநர் மேலும் குறிப் பிட்டார். பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தலைமையில் நடைபெறவுள்ள இந்த வைபவங்களில் அமைச்சர்களான பாடலி சம்பிக்க ரணவக்க, ரிஷாத் பதியுதீன், பிரதியமைச்சர் பிரேமலால் ஜயசேகர, ஆசிய அபிவிருத்தி வங்கி தலைவர் ஹருஹிகோ, குருரோடா, இலங்கைக்கான ஜப்பான் தூதுவர் குனிஓ தக்கஹாஷி, ஜப்பான் சர்வதேச உதவி நிறுவனத்தின் பிரதான பிரதிநிதி அக்கிரா ஷிமூரா, மாவட்ட செயலாளர்கள் மாவட்ட பாதுகாப்பு படைகளின் கட்டளை அதிகாரிகள் உட்பட முக்கியஸ்தர்கள் பலர் கலந்து கொள்ளவுள்ளனர்
மேலும் இங்கே தொடர்க...

போர் நடந்த இடங்களில் அமைதி : மந்திரி பெரிஸ் தகவல்





இலங்கையில் 25 ஆண்டுகளாக சண்டை நடந்த பகுதியில், 2 லட்சத்து 97 ஆயிரம் பேர் மீண்டும் குடியமர்த்தப்பட்டுள்ளனர் என, வெளியுறவுத் துறை அமைச்சர் பெரிஸ் தெரிவித்துள்ளார். போர் நடந்த இடங்களில் அமைதி தற்போது தவழ்வதாகவும் அவர் தெரிவித்தார். இலங்கை வெளியுறவுத் துறை அமைச்சர் பெரிஸ், அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஹிலாரி கிளின்டனை சந்தித்து பேசுகிறார்.

இலங்கை அமைச்சர் பெரிஸ், நிருபர்களிடம் கூறியதாவது: இலங்கையில் கடந்த 25 ஆண்டுகளாக சண்டை நடந்த பகுதிகளில், 2 லட்சத்து 97 ஆயிரம் மக்களை மீண்டும் குடியமர்த்தியுள்ளோம். தற்போது இலங்கையில் புதிய சூழல் நிலவுகிறது. இலங்கையில் பயங்கரவாதம் முறியடித்த பிறகு, அளப்பரிய தன்னம்பிக்கை ஏற்பட்டுள்ளது. கடந்த 25 ஆண்டுகளாக இல்லாத அரசியல் ஸ்திரத்தன்மை தற்போது ஏற்பட்டுள்ளது.

புலிகளுடனான போர் முடிந்த பிறகு, வேறெந்த பயங்கரவாத நடவடிக்கையும் நடக்கவில்லை. மக்களின் மனநிலை மாறிவிட்டது. கடும் போர் நடந்த பகுதியில் சீரமைப்பு நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. தற்போது நாங்கள் எந்த பாகுபாடும் பார்ப்பதில்லை. திரிகோணமலை, கிளிநொச்சி பகுதிகளில் தொழிற்சாலைகள், ஓட்டல்கள் போன்றவை செயல்படத் துவங்கியுள்ளன. இலங்கையில் புலிகளுடனான உச்சகட்டப் போர் நடந்த போது, போர் குற்றங்கள் நடந்ததாக ஒரு சில அமைப்புகள் தெரிவிக்கின்றன. இதற்கான ஆதாரங்கள் ஏதும் இல்லை. இவ்வாறு பெரிஸ் கூறினார்.
மேலும் இங்கே தொடர்க...