7 செப்டம்பர், 2010

அமைதிப்படை நினைவிடத்தில் இந்திய ராணுவ தளபதி அஞ்சலி





கொழும்பு : இலங்கை சென்றுள்ள இந்திய ராணுவ தளபதி வி.கே.சிங், அங்குள்ள இந்திய அமைதிப் படையின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார். இந்திய ராணுவ தளபதி வி.கே. சிங், ஐந்து நாள் அரசு முறைப் பயணமாக இலங்கை சென்றுள்ளார். கடந்த 1987ல் இலங்கை சென்ற இந்திய அமைதி காக்கும் படையில் பணியாற்றி, உயிர் நீத்த 1,165 இந்திய வீரர்களின் நினைவாக, கொழும்பில் நினைவிடம் அமைக்கப்பட்டுள்ளது. நேற்று இங்கு சென்ற ராணுவ தளபதி வி.கே.சிங் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். அங்கிருந்த குறிப்பேட்டில் அவர், இந்திய அமைதிப் படையில் தானும் பணியாற்றியதாகவும், இலங்கையில் அமைதியை ஏற்படுத்துவதற்காக இந்திய வீரர்கள் பாடுபட்டதாகவும் குறிப்பிட்டார். இலங்கை ராணுவ தளபதி ஜெகத் ஜெயசூர்யா உள்ளிட்டோரும், நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினர். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்கு முன்னதாக, இலங்கை அதிபர் ராஜபக்ஷே, பிரதமர் ஜெயரத்னே, ராணுவ செயலர் கோத்தபயா ராஜபக்ஷே, வெளியுறவு அமைச்சர் பெரிஸ் உள்ளிட்டோரையும், ராணுவ தளபதி வி.கே.சிங், சந்தித்து இரு தரப்பு உறவு குறித்து ஆலோசனை நடத்தினார்.
மேலும் இங்கே தொடர்க...

வட.கிழ. மக்களின் மேம்பாட்டுக்கு இந்தியா உதவும் : இந்திய இராணுவத் தளபதி உறுதி

யுத்தத்தால் பாதிக்கப்பட்ட வடக்கு, கிழக்கு மக்களின் சமூக மேம்பாட்டுக்கு இந்தியா கூடிய கவனம் செலுத்தும் என்று இந்திய இராணுவத்தளபதி விஜயகுமார் சிங் பிரதமர் டீ.எம். ஜயரத்னாவிடம் உறுதியளித்தார்.

இந்திய இராணுவத் தளபதி விஜயகுமார் சிங் இன்று காலை பிரதமர் டீ.எம். ஜயரத்னவை அவரது உத்தியோகபூர்வ வாசஸ்தளத்தில் சந்தித்து உரையாடினார்.

இச்சந்திப்பின் போது வடக்கு கிழக்கிலிருந்து இடம்பெயர்ந்த மக்களுக்கு அடிப்படை வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பது சம்பந்தமாக இரு தரப்பினரும் கலந்துரையாடினர்.

அங்கு கருத்து தெரிவித்த இந்திய இராணுவத்தளபதி விஜயகுமார் சிங்,

"யுத்தத்தால் பாதிக்கப்பட்ட வடக்கு கிழக்கு மக்களின் சமூக மேம்பாட்டுக்கு இந்தியா கூடிய கவனம் செலுத்தும். அம்மக்களின் பொருளாதார மற்றும் சமூக அபிவிருத்தியை முன்னெடுக்க அரசுக்கு தற்போது நல்லதொரு சந்தர்ப்பம் கிடைத்துள்ளது" என்றார்.

பிரதமர் டீ.எம். ஜயரத்ன, வடக்கு மற்றும் கிழக்கு மக்களின் அத்தியாவசிய தேவைகளை நிறைவேற்றுவதற்கு அரசாங்கம் இந்திய அரசின் உதவியுடன் துரித நடவடிக்கை எடுத்து வருவதாகக் கூறினார்.
மேலும் இங்கே தொடர்க...

சர்வாதிகார ஆட்சிக்கு ஜே.ஆரின் அரசியலமைப்பே போதுமானது :விமல் வீரவன்ச

சர்வாதிகார ஆட்சிக்கு ஜே.ஆர். ஜெயவர்த்தனவின் அரசியலமைப்பே போதுமானது.

புதிய திருத்தங்கள் எதுவும் தேவையற்றது. வெளிப்படை தன்மை குறித்து பேசும் ஐக்கிய தேசியக் கட்சி, இந்திய இலங்கை ஒப்பந்தம் மற்றும் போர் நிறுத்த ஒப்பந்தம் போன்றவற்றின் வெளிப்படைத் தன்மை குறித்தும் பதில் கூற வேண்டும் என்று தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் அமைச்சருமான விமல் வீரவன்ச தெரிவித்தார்.

பாராளுமன்றத்திற்கு பொறுப்பு கூறாத ஆணைக்குழுக்களும் பொது மக்கள் நிர்ணயிக்காத ஜனாதிபதியின் பதவிக் காலமும் நாட்டிற்கு தேவையில்லை. உத்தேச திருத்த யோசனைகளினால் சிறுபான்மை இன மக்களுக்கோ ஜனநாயகத்திற்கோ எவ்விதமான பாதிப்பும் இல்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.

பத்தரமுல்லையில் அமைந்துள்ள தேசிய சுதந்திர முன்னணியின் தலைமையலுவலகத்தில் நேற்று திங்கட்கிழமை நடைபெற்ற விசேட செய்தியாளர் மாநாட்டிலேயே அமைச்சர் விமல் வீரவன்ச மேற்கண்டவாறு கூறினார்.

இவர் இங்கு தொடர்ந்து உரையாற்றுகையில் 1978 ஆம் ஆண்டில் ஜே.ஆர். ஜயவர்தனாவில் கொண்டு வரப்பட்ட அரசியலமைப்பு நாட்டிற்கு மிகவும் ஆபத்தானதொன்றாகும். இதனை திருத்தி அமைக்க வேண்டும் என்ற தேவை சகலருக்கும் இருந்தது. அதனையே தற்போதைய அரசாங்கம் முன்னெடுத்துள்ளது.

உத்தேச அரசியலமைப்பில் நிறைவேற்று அதிகாரத்திற்கு காணப்படும் அதிகாரங்களை குறைப்பதற்கான முதல் கட்ட நடவடிக்கைகளையே தற்போது முன் வைக்கப்பட்டுள்ள திருத்த யோசனையாகும்.

எதிர்வரும் நாட்களில் முன்வைக்கப்படும் திருத்த யோசனைகள் தேர்தல் முறை செனட்சபை, சகல இன மக்களுக்கான பொதுவான தீர்வுத்திட்டம் என பல்வேறு திருத்த யோசனைகளை அரசாங்கம் முன் வைக்க உள்ளது. திருத்த யோசனைகள் தொடர்பில் தமது விருப்பு வெறுப்புக்களை வெளிப்படுத்த பாராளுமன்ற அமர்வில் எதிர்க் கட்சிகளுக்கு சந்தர்ப்பம் உள்ளது.

அரசாங்கத்தினால் முன் வைக்கப்பட்டுள்ள திருத்த யோசனைகள் சர்வாதிகார ஆட்சிக்கே வழி வகுக்கும் என கூறுவதால் எல்லாவிதமான உண்மை தன்மையும் இல்லை. தற்போதைய அரசியலமைப்பு இருந்த கடந்த காலப் பகுதியில் கறுப்பு ஜூலை ஊடாக அடக்கு முறை என பல்வேறு ஜனநாயக விரோத செயற்பாடுகள் இடம்பெற்றன. அதேபோன்று தான் சுயாதீன ஆணைக் குழுக்களுமாகும். எவருக்கும் கட்டுப்படாத ஆணைக்குழு நாட்டிற்கு எதற்கு? எனவேதான் அனைத்து ஆணைக்குழுக்களும் ஜனாதிபதியின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது. நிறைவேற்று அதிகாரம் தொடர்பில் திருத்தங்கள் தேவை என்பதில் உறுதியாக உள்ளோம் என்றார்.
மேலும் இங்கே தொடர்க...

முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்தி தொடர்பாக ஆராய எம்.பிக்கள் குழு விஜயம்


முல்லைத்தீவு மாவட்டத்தில் முன்னெ டுத்து வரும் அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பாக ஆராயும் பொருட்டு பாராளு மன்ற உறுப்பினர்கள் அடங்கிய குழு அடுத்த வாரம் முல்லைத்தீவு செல்லவுள்ளது. மீன் பிடித்துறை, நீர்ப்பாசனத்துறை மேம்பாடுகள் தொடர்பாக விரிவாக ஆராயவுள்ளதாக வட மாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜி.ஏ. சந்திரசிறி தெரிவித்தார்.
மேலும் இங்கே தொடர்க...

வடக்கு, கிழக்கு மக்களின் குறைபாடுகளை தீர்த்து வைப்பது அரச அதிபர்களின் பொறுப்பு


வடக்கு கிழக்கு மாகாணங்களில் நிலவும் மக்களின் தேவைகள் குறைபாடுகளை இனங்கண்டு இதனைத் தீர்த்து வைப்பது அரசாங்க அதிபர்களினது பொறுப் பாகுமென பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சர் ஜோன் செனவிரத்ன தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்தில் நேற்று ஆரம்பமான நாடளாவிய மாவட்டச் செயலாளர்களின் மாநாட்டினை ஆரம்பித்து வைத்து உரையாற்றிய அமைச்சர் புதிய சிந்தனை, வினைத் திறமையுடனான செயற்பாடுகள் மூலமே சிறந்த அரச நிர்வாகத்தைக் கட்டியெ ழுப்ப முடியுமென குறிப் பிட்டதுடன் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவ்வாறு செயற் பட்டதாலேயே பல வெற்றிகளைச் சந்திக்க முடிந் துள்ளது எனவும் குறிப்பிட்டார்.

மாவட்டச் செயலாளர்களின் மாநாடு முதற்தடவையாக இம்முறை யாழ். மாவட்டச் செயலாளர் அலுவலகத்தில் நேற்றும் ஆரம்பமாகி இரண்டு நாள் நிகழ்வாக இடம்பெறுகிறது. இம்மாநாட்டில் அமைச்சர் ஜோன் செனவிரத்ன, பிரதியமைச்சர் டிலான் பெரேரா ஆகியோர் கலந்து கொண்டுள்ளதுடன் நாடளாவிய சகல மாவட்டச் செயலாளர்களும் இதில் பங்கேற்கின்றனர். அமைச்சர் ஜோன் செனவிரத்ன மேலும் தெரிவிக்கையில்,

புதிய சிந்தனையூடான செயற்பாடுகள் பல வெற்றிகளை ஈட்டுவதற்கு வழிவகுக்கும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சர்வதேச நாடுகளுடன் சிறந்த நல்லுறவைக் கொண்டுள்ளமைக்கும் பல்வேறு எதிர்ப்புகளுக்கும் சவால்களுக்கும் வெற்றிகரமாக முகங்கொடுப்பதற்கும் புதிய சிந்தனையே உறுதுணையாக அமைந்துள்ளது, மாவட்டச் செயலாளர்கள் இதனைத் தம் செயற்பாடுகளில் மேற்கொள்ளும் போது சிறந்த அரச நிர்வாகத்தை கட்டியெழுப்ப முடியும் எனவும் தெரிவித்தார்.

மாவட்டச் செயலாளர்கள் மாநாட்டைய டுத்து பிரதேச செயலாளர்களுக்கான மாநாடும் யாழ்ப்பாணத்தில் இடம்பெறவு ள்ளது. இதற்கென நாடளாவிய பிரதேச செயலாளர்களும் அழைக்கப்பட்டுள்ளதாக அமைச்சின் உயரதிகாரியொருவர் நேற்றுத் தெரிவித்தார்.
மேலும் இங்கே தொடர்க...

அரசியலமைப்பு திருத்தம் நிறைவேறியதும் எதிர்க் கட்சிகளின் கோஷம் மறைந்துவிடும்

மக்கள் ஆதரவு எமக்கு உண்டு என்கிறார் அமைச்சர் சுசில் பிரேம் ஜயந்த

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமைத்துவத்தைப் பிடிக்காத சில அரசியல் கட்சிகளும் வெளிநாட்டு சக்திகளும் அரச சார்பற்ற நிறுவனங்களுமே அரசியலமைப்புத் திருத்தத்திற்கு எதிராக கோசமெழுப்பி வருகின்றன. அரசியல மைப்புத் திருத்தத்தின் ஊடாக சர்வாதிகார ஆட்சியே உருவாகுமென எதிர்க் கட்சியினர் கூறுவது அர்த்தமற்ற வெறும் கோஷம் மட்டுமே ஆகும் என்று ஐ.ம.சு. முன்னணி செயலாளரும் அமைச்சருமான சுசில் பிரேம் ஜயந்த தெரிவித்தார்.

அரசியலமைப்புத் திருத்தம் தொடர்பாக அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள அவர், 18ஆவது திருத்தம் மூலம் மக்களின் இறைமை மேலும் உறுதிப்படுத் தப்படும் என்று கூறியுள்ளார்.

அடுத்த ஜனாதிபதித் தேர் தலிலும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவைத் தோற்கடிக்க முடியாது என்பதை பிரதான எதிர்க் கட்சியும் சில அரசியல் கட்சிகளும் இப்பொழுதே ஏற்றுக்கொண்டுள்ளன.

எமக்கு பெரும்பான்மை மக்களின் ஆதரவுள்ள நிலையில் யாப்புத் திருத்தத்திற்கு மக்கள் ஆதரவு கிடையாது என சில அரசியல்வாதிகள் கூறுவது நகைப்புக்குரியதாகும். இவ்வாறு குற்றச்சாட்டு கூறுபவர்களால் உச்ச நீதிமன்றத்திற்கு செல்லக்கூட முடியவில்லை. ஐ.தே.க வுக்குள் ஏற்பட்டுள்ள கடும் பிளவு காரணமாக ஐ. தே. க எம்.பிக்கள் யாப்புத் திருத்தத்திற்கு ஆதரவு வழங்கி வருகின்றனர். மூன்றில் இரண்டை விட அதிக பெரும்பான்மையுடன் அரசியலமைப்புத் திருத்தம் நிறைவேற்றப்பட்டால் ஐ.தே.க வினதும் எதிர்க் கட்சிகளினதும் கோசங்கள் காணாமல் போய்விடும்.

ஜனாதிபதி முறையை ஒழிக்க வேண்டும் என்று கோரிய எதிர்க் கட்சிக்கு கடந்த ஜனாதிபதித் தேர்தலில் 40 வீதவாக்குகளும் அதற்கு எதிராக 58 வீத வாக்குகளும் அளிக்கப்பட்டன.

பலமான ஆட்சியினூடாக துரித அபிவிருத்தி ஏற்படவேண்டும் என்பதே மக்களின் அபிலாஷையாகும். அந்த நோக்கத்தை நிறைவேற்றுவதற்கு இந்த யாப்புத் திருத்தத்தினூடாக வழியமைக்கப்படும் என்றார்.
மேலும் இங்கே தொடர்க...

நல்லூர்க் கந்தன் ஆலய தேர்த்திருவிழா இன்று






நல்லூர்க் கந்தன் ஆலய தேர்த்திருவிழா இன்று 7ம் திகதி காலை ஏழு மணியளவில் நடைபெறுகிறது. தற்போதைய சுமுகமான சூழ்நிலையில் நாடெங்கும் இருந்து பெருந்தொகையான மக்கள் நல்லூர்க் கந்தன் உற்சவத்துக்கு வருகை தந்திருப்ப தனால் பக்தர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை யாழ். மாநகர சபை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது.

குடிநீர், மலசல கூட வசதிகள் என்ப வற்றையும் மாநகர சபை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது. யாழ். மாநகர சபையின் சுகாதாரப் பகுதியினர் முக்கியமான சில இடங்களில் மருத்துவ முகாம்களையும் அமைத்துள்ளனர். பொலிஸார் பாதுகாப்புக் கடமையில் அமர்த்தப்பட்டுள்ளனர்.

நல்லூர் ஆலயத்தின் மேற்கு வீதியில் அமைந்துள்ள மங்கையர்க்கரசி வித்தியால யத்தில் திருவிழாக் காலத்திற்கான தற்கா லிக பொலிஸ் நிலையம் திறக்கப்பட்டுள்ளது. இதேவேளை, இ.போ.ச. மற்றும் தனியார் பஸ்கள் விசேட சேவைகளை நடத்துகின்றன.

தென் இலங்கையில் உள்ள பெருமளவு வர்த்தக நிறுவனங்கள் தங்களின் வர்த்தகப் பொருட்களை விளம்பரப்படுத்தும் வகையில் ஆலய வீதிகளில் பொருட்களை காட்சிப்படுத்தியுள்ளன. தாகசாந்தி நிலை யங்களும் அமைக்கப்பட்டுள்ளன.
மேலும் இங்கே தொடர்க...

மக்களின் சுயாதிபத்தியத்துக்கும் ஜனநாயகத்துக்கும் 18வது திருத்தம்




நாட்டு மக்களின் சுயாதிபத்தியத்தை உறுதிப்படுத்தவும், ஜனாதிபதியொருவர் இரண்டாவது பதவிக் காலத்தில் சர்வாதிகாரியாக செயற்படுவதைத் தவிர்ப் பதற்கும் அரசியலமைப்புக்கான 18வது திருத்தம் வழிவகுக்கும் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்றுத் தெரிவித்தார்.

அச்சு மற்றும் இலத்திரனியல் ஊடகங்களின் உரிமையாளர்கள், பத்திரி கைகளின் ஆசிரியர்கள் மற்றும் இலத்திர னியல் ஊடகங்களின் முக்கியஸ்தர்கள் மத்தியில் உரையாற்றும் போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு குறிப் பிட்டார்.

அலரி மாளிகையில் நடைபெற்ற நிகழ்வில், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இங்கு தொடர்ந்தும் உரையாற்றுகையில், அரசியலமைப்புக்கான 18வது திருத்தம் இரண்டு முக்கிய அம்சங்களை உள்ளடக்கி யுள்ளது. ஜனாதிபதி பதவியை இரண்டு தடவைகள் வகித்த ஒருவர் மூன்றாவது தடவையும் அப்பதவியை வகிக்க வேண்டுமென மக்கள் விரும்பினால் அதற்கு அரசியலமைப்பு தடையாக இருப்பது நாட்டு மக்களின் சுயாதிபத்தியத்தை நிராகரிப் பதாகிவிடும்.

அதேநேரம், ஜனாதிபதி பதவியை இரண்டு தடவைகள் தான் வகிக்க முடியும் என்ற கட்டுப்பாடு இருப்பதால் ஜனாதிபதியொருவர் இரண்டாவது பதவிக் காலத்தில் சர்வாதிகாரி போன்று செயற்பட லாம். ஏனெனில் அவர் தேர்தலுக்கு செல்ல வேண்டிய தேவை இல்லா திருப்பதினாலாகும். இக் குறைபாடுகளை அரசியலமைப் புக்கான 18வது திருத்தம் நிவர்த் திப்பதாக அமைந்திருக்கின்றது.

அரசியலமைப்புக்கான 18வது திருத்தம் தொடர்பாக மஹிந்த சிந்தனை தொலை நோக்கில் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. இத் திருத்தம் தொடர்பாக ஐக்கிய தேசியக் கட்சியினருடன் ஏற்கனவே நடந்த பேச்சுவார்த்தைகளின் போது தெளிவாக எடுத்துக் கூறியுள்ளோம். அவர்கள் அச்சமயம் இதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை.

இத்திருத்தம் தொடர்பாக பொதுமக்களும் ஊடகங்களும் கடந்த மூன்று மாதங்களாகக் கலந்துரையாடி வருகின்றன.

அதனால் அரசியலமைப்புக்கான 18வது திருத்தம் மக்களின் சுயாதிபத்தியத்தை உறுதிப்படுத்தவும் ஜனாதிபதியொருவர் இரண்டாவது பதவிக் காலத்தில் சர்வா திகாரி போன்று செயற்படுவதை தவிர்ப்ப தையும் அடிப்படையாகக் கொண்டிருக் கின்றது.

இதேநேரம் அரசியலமைப்புக்கான 17வது திருத்தம் அவசர அவசரமாக நிறைவேற்றப்பட்ட ஒன்றாகும். அதில் நிறைய குறைபாடுகள் உள்ளன. அத்திருத் தத்தின் கீழ் உருவாக்கப்பட்ட நிறுவனங்களுக்கு அரசியல் வாதிகளால்தான் பிரதிநிதிகள் நியமிக்கப்பட்டனர்.

அதனால் அப்பிரதிநிதிகளும் அரசியல் கட்சி சார்பானவர்களாகவே செயற்பட்டனர். அவர்கள் சுதந்திரமானவர்களாக இருக்கவில்லை.

எதிர்க்கட்சியினர் 17வது திருத்தம் குறித்து குரல் எழுப்புகின்றனர். ஆனால் அவர்கள் இத்திருத்தத்தின் கீழான அரசியலமைப்புச் சபைக்குத் தங்களது பிரதிநிதிகளை சிபார்சு செய்யாததால் தான் அச்சபை நீண்ட காலமாக இயங்கவில்லை. அரசியலமைப்புக்கான 17வது திருத்தத்தைத் திருத்துமாறு 143 எம்.பிக்கள் கையெழுத்திட்டு கோரிக்கை விடுத்துள்ளனர். இவர்களில் ஐ.தே.க. எம்.பிக்களும் அடங்கியுள்ளனர். பாராளுமன்றம் மக்களால் தெரிவு செய்யப்பட்ட மக்கள் பிரதிநிதிகளைக் கொண்ட நிறுவனமாகும். ஆயினும் தற்போதைய 17வது திருத்தம் பாராளுமன்றத்தின் செயற்பாடுகளை வெளியிலுள்ளவர்களுக்கு கையளிப்பதாக உள்ளது.

இதற்கு இடமளிக்க முடியாது. அதனால் தான் புதிய திருத்தம் பாராளுமன்ற சபையாக உருவாக்கப்பட்டிருக்கின்றது. இது பாராளுமன்ற உறுப்பினர்களையே அங்கத்தவர்களாகக் கொண்டிருக்கும். இது மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சபையாகும். பாராளுமன்றத்திற்கு வகை சொல்லும் ஸ்தாபனமாகவும் திகழும்.

தற்போதைய 17வது திருத்தத்தின் கீழ் உருவாக்கப்பட்ட அரசியலமைப்புச் சபைக்கு ஒரு கட்சி அதன் உறுப்பினரை நியமிக்காவிட்டால் அச்சபை இயங்க முடியாது.

ஆனால் புதிய ஏற்பாட்டின் கீழ் அவ்வாறு நியமிக்காவிட்டாலும் பாராளுமன்ற சபையைத் தொடர்ந்தும் இயங்கச் செய்வதற்கான அதிகாரம் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ளது என்றார்.

இந்நிகழ்வில் பத்திரிகை ஆசிரியர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த ஜனாதிபதி, ‘நான் சந்தித்த புத்திஜீவிகள் சகலரும் இத்திருத்தத்தை வர வேற்கின்றார்கள்.

அதனால் இத்திருத்தத்தை எந்த நிலையிலும் வாபஸ் பெற வேண்டிய தேவை ஏற்படாது என்றும் குறிப்பிட் டார்.

இச்சந்திப்பின் போது அமைச்சர் களான மைத்திரிபால சிறிசேன, பசில் ராஜபக்ஷ, டளஸ் அழகப்பெரும, நிமல் சிறிபால டி சில்வா, கெஹலிய ரம்புக்வெல்ல, பேராசிரியர் ஜீ. எல். பீரிஸ், பிரதியமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன ஆகியோரும் பிரசன்னமாகி இருந்தார்கள்.
மேலும் இங்கே தொடர்க...