29 நவம்பர், 2009

குழந்தையொன்றை பிறிதொருவருக்கு வழங்கிய வைத்திய அதிகாரி உள்ளிட்ட மூவர் மன்னாரில் கைது-

மன்னார் பிரதேசத்தில் அண்மையில் காணாமற்போனதாக தெரிவிக்கப்பட்ட பிறந்து 07 நாட்களான ஆண்குழந்தை பொலீசாரினால்; மீட்கப்பட்டுள்ளது. நிதிபெறும் நோக்குடன் இக்குழந்தையை சட்டவிரோதமாக பிறிதொருவரிடம் கையளிக்க முனைந்தபொழுதே பொலீசார் மூவரைக் கைதுசெய்துள்ளனர். சுகவீனமுற்ற குழந்தையொன்றுக்கு சிகிச்சையளிக்கும் நோக்கில் அதன் தந்தை மன்னாரிலுள்ள தனியார் வைத்தியசாலையில் அனுமதித்துள்ளார். இருநாட்களின் பின்னர் அக்குழந்தை தொடர்பாக அவரின் தாயார் வைத்தியசாலையுடன் தொடர்புகொண்டபோது குழந்தையை மேலதிக சிகிச்சைக்காக கொழும்புக்கு அனுப்பியநிலையில் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து வைத்தியத் தரப்பினர்மீது சந்தேகம்கொண்ட தாய் கடந்த 27ம் திகதி மன்னார் பொலீசில் தெரிவித்த முறைப்பாட்டையடுத்து வைத்தியர் உட்பட மூவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக மன்னார் பொலீசார் தெரிவித்துள்ளனர். சந்தேகநபர்களை எதிர்வரும் 04ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு மன்னார் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேலும் இங்கே தொடர்க...
சுன்னாகம் கந்தவரோதயக் கல்லூரி ஸ்தாபகர் நினைவு விழா மற்றும் முன்னைநாள் அதிபர் அமரர் திரு.வீ.சிவசுப்பிரமணியம் அவர்களின் நூறாவது பிறந்ததின நிகழ்வில் புளொட் தலைவர் பங

யாழ். சுன்னாகம் ஸ்கந்தவரோதயக் கல்லூரி பழைய மாணவர் சங்கத்தின் (கொழும்பு) ஏற்பாட்டில் யாழ். ஸ்கந்தரோதயக் கல்லூரியின் ஸ்தாபகர் திரு.கந்தையா அவர்களின் நினைவு விழாவும், அக்கல்லூரியின் முன்னைநாள் அதிபர் அமரர்.திரு.வி.சிவசுப்பிரமணியம் (வைசர்) அவர்களின் நூறாவது பிறந்ததின நினைவு விழாவும் கொழும்பு, வெள்ளவத்தை, உருத்திரா மாவத்தையில் அமைந்துள்ள தமிழ்ச்சங்கம், சங்கரப்பிள்ளை மண்டபத்தில் இன்று (29.11.2009) மாலை 4.30மணிமுதல் இரவு 7.30வரை இடம்பெற்றது. இந்நிகழ்வில் மங்கள விளக்கேற்றல், தேவாரம், வாழ்த்துப்பா நிகழ்வுகளைத் தொடர்ந்து திரு.ச.மகேந்திரன் அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார். இதனைத் தொடர்ந்து திரு.க.நீலகண்டன், கலாநிதி.மு.கதிர்காமநாதன், திரு.ந.கருணைஆனந்தன், புளொட் தலைவர் திரு.தர்மலிங்கம் சித்தார்த்தன், டொக்டர் டபிள்யூ.திசேரா, கலாநிதி என்.தணிகாசலம்பிள்ளை, டொக்டர் சி.சிவானந்தராசா, திரு.து.ரகு ஆகியோர் சிறப்புரையாற்றினர்.


இங்கு உரையாற்றிய புளொட் தலைவர் திரு.த.சித்தார்த்தன் அவர்கள், ஸ்கந்தவரோதயக் கல்லூரியின் ஸ்தாபகர் கந்தையா மற்றும் அதன் முன்னைநாள் அதிபர் அமரர் வி.சிவசுப்பிரமணியம் அவர்களின் குணங்களைப் பற்றியும், பாடசாலையின் சிறப்பு பற்றியும், அங்கு தான் பயின்ற காலங்களையும் எடுத்துக் கூறினார்.


இங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், யாழ். ஸ்கந்தவரோதயக் கல்லூரியானது என்னுடைய பேரனாருடைய முகாமைத்துவத்தின் கீழ் இருந்தது. இந்நிலையில் 60ம் ஆண்டுத் தேர்தலின்போது உடுவில் தொகுதியில் எனது தந்தையாருடன் எதிர்த்துப் போட்டியிடுவதற்கு, வீ.பொன்னம்பலம் அவர்களுக்கு லீவு கொடுக்கப்பட்டு அவர் தேர்தலில் போட்டியிட்டார். அது மாத்திரமல்ல அந்த தேர்தல் காலங்களில் வீ.பொன்னம்பலம் அவர்கள் எங்களுடைய பகுதிக்கு வருகின்றபோது எங்களது வீட்டுக்கு வந்து தேனீர் அருந்திச்செல்வது ஒரு வழக்கமாகக் கொண்டிருந்தார். அதேபோல் எனது தந்தையாரும் வீ.பொன்னம்பலம் அவர்களின் அளவெட்டிப் பகுதிகளுக்கு செல்கின்றபோது வீ.பொன்னம்பலம் அவர்களின் வீட்டிற்குச் சென்று தேனீர் அருந்திச் செல்வதையும் வழக்கமாகக் கொண்டிருந்தார். அப்படியான ஒரு அரசியலில் கருத்து முரண்பாடுகள் இருந்தாலும் தனிமனித பண்புக்கள் அன்று நிறைந்திருந்தது.


இந்த பண்புகள் முழுக்கமுழுக்க அழிக்கப்பட்டு, மாற்றுக்கருத்துக் கட்சிகளைச் சேர்ந்தவர்கள் ஒருவரை ஒருவர் கண்டு பயந்து ஒதுங்கி வாழுகின்ற ஒரு நிலைப்பாட்டில் கடந்த மே 18ற்கும் பின்பு ஒரு மாற்றம் வருவதை சுவிஸ் மாநாட்டில் நான் அறிந்து கொண்டேன். அங்கு அனைவரும் ஒருவருக்கொருவர் கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டோம். முகத்தை முகம்கொடுத்துக் கதைக்காதவர்கள் கூட ஒருவரையொருவர் பார்த்து அன்னியோன்யமாக கதைக்கின்ற, ஒன்றாக இருந்து உணவருந்துகின்ற நிலைகள் எல்லாம் அங்கு நிலவியது. சுவிஸ் மகாநாட்டில் வேறு எதையும் முழுமையாக சாதிக்காது விட்டாலும் ஒரு அரசியல் நாகரீகத்தையும், பண்பையும் மீண்டும் கட்டியெழுப்புவதற்கு அந்த மகாநாடு ஒரு அடித்தளமாக அமைந்தது என்றே நான் கருதுகிறேன்.


தற்போதைய நிலையில் தமிழ் சமூகத்தின் கல்வியானது ஒரு பின்தங்கிய நிலைமையில் இருக்கின்றது. இன்றைக்கு முகாம்களில்கூட பாடசாலைகளை நடத்தி அந்தப் பிள்ளைகள் பரீட்சைகளில் தோற்றச் செய்வதற்காக பல அதிகாரிகள், ஆசிரியர்கள் எல்லாம் கடுமையாக உழைத்திருக்கிறார்கள். தமிழ் சமூகத்தைப் பொறுத்தமட்டில் கல்விதான் அவர்களின் ஒரு மூலதனமாக இருந்திருக்கிறது. அது இன்று முற்றாக அழிக்கப்பட்டிருக்கின்ற நிலைமையில் இதனை மீளக் கட்டியெழுப்பும் கடமையானது தனியாக கல்விச் சமூகத்தினுடைய மாத்திரம் என்று கருதாமல், தமிழ் சமூகத்தில் இருக்கின்ற அனைவருமே தங்களால் இயன்றளவு உதவிகளைப் புரிந்து வடகிழக்கில் முற்றாக அழிந்துள்ள எங்களுடைய கல்விச் செயற்பாடுகளை மீண்டும் ஆரம்பிப்பதற்கு உதவ வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.


மேலும் இங்கே தொடர்க...
அழுத்தங்கள் விடுக்கப்பட்ட போது மோதலை நிறுத்த முடியாத கட்டம்:சரத் பொன்சேகா


மோதல்களை நிறுத்துமாறு இந்தியா அழுத்தங்களை கொடுத்த வேளை, இராணுவத்தினர் விடுதலை புலிகளுடனான் மோதலில், மோதல்களை நிறுத்த முடியாத ஒரு கட்டத்தை அடைந்திருந்தனர் எனத் தெரிவித்தார் சரத் பொன்சேகா.

விடுதலை புலிகளுடனான மோதல்களை நிறுத்துமாறு இந்தியா உட்ப பல்வேறு தரப்பினரால் விடுக்கபட்ட அழுத்தங்களையும் தாண்டி மோதல்கள் தொடர்ந்தது குறித்து ஊடகவியலாளர் ஒருவர் கேட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

எதிர்வரும் ஜனாதிபத் தேர்தலில் பொது வேட்பாளராக 'அன்னம்' சின்னத்தில் தான் போட்டியிடவுள்ளதாக ஜெனரல் சரத் பொன்சேகா இன்று உத்தியோக பூர்வமாக அறிவித்துள்ளார். எனினும் புதிதாக பதிவு செய்யப்பட்ட ஒரு கட்சியின் கீழ் தனது ஜனாதிபதி ஆட்சி நிலவுமெனவும் அவர் தெரிவித்தார். ஜனாதிபதி வேட்பாளராக இன்று இடம்பெற்ற முதலாவது ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் இதனை அறிவித்துள்ளார்.

இதன் போது தான் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்படும் பட்சத்தில் நிறைவேற்றும் வேலைத்திட்டங்கள் தொடர்பான கொள்கைகளை இதன் போது சரத் பொன்சேகா வெளியிட்டார்.

அங்கு அவர் உரையாற்றுகையில் ,நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை இல்லாதொழிப்பதற்கு எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் மக்கள் உதவ வேண்டும் எனக் கோரிக்கை விடுத்த அவர் விடுதலை புலிகளுடனான் யுத்த வெற்றி அரசியல் தலைமைத்துவமும் காரணம் எனவும் தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,"பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை வாக்குகளைப் பெற்று அரசியலமைப்பை மாற்றுவதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்பேன். எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மாத்திரமன்றி அரசாங்கத்தில் அங்கம் வகிக்கின்ற பெரும்பாலான உறுப்பினர்கள் ஆதரவு வழங்க தயாராகவுள்ளனர். " எனத் தெரிவித்தார்.

மேலும்,நாட்டையும் மக்களையும் சர்வாதிகார ஆட்சியில் இருந்து மீட்கவே முன்வந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
மேலும் இங்கே தொடர்க...
தற்காலிக அடையாள அட்டை விநியோக பணிகளில் ஓய்வு பெற்ற அரச ஊழியர்கள்

எதிர்வரும் ஜனவரி மாதம் 26 ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலுக்காக தற்காலிக அடையாள அட்டைகளை விநியோகிக்கும் நடவடிக்கைகளுக்கு அரச சேவையிலிருந்து ஓய்வு பெற்றவர்களை இணைத்துக்கொள்ள ஆட்பதிவு திணைக்களம் தீர்மானித்துள்ளது.

இந்த சேவையில் இணைந்துகொள்ள விரும்பும் அரச சேவையிலிருந்து ஓய்வு பெற்றவர்கள் எதிர்வரும் டிசம்பர் மாதம் 4ஆம் திகதிக்கு முன்னர் விண்ணப்பிக்குமாறு ஆட்பதிவு திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.விண்ணப்பித்தவர்கள் பிரதேச செயலாளர் அலுவலகங்களினூடாக இணைத்துக் கொள்ளப்படவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இவர்களுக்கான சேவைக் காலம் எதிர்வரும் டிசம்பர் மாதம் 10ஆம் திகதி முதல் 2010ஆம் ஆண்டு மார்ச் மாதம் 9ஆம் திகதி வரை எனவும் அந்த திணைக்களம் தெரிவித்துள்ளது.நாடு முழுவதிலும் உள்ள 67 வயதிற்கு குறைந்த, அரச சேவையிலிருந்து ஓய்வு பெற்றவர்கள் இதற்காக விண்ணப்பிக்க முடியும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

இதற்காக பெயர், பிறந்த திகதி, வயது, ஓய்வு பெறுவதற்கு முன்னர் கடமை புரிந்த நிறுவனம், இறுதியாக கடமை புரிந்து நிறுவனம், ஓய்வூதிய கொடுப்பனவு, நிரந்தர முகவரி, தொலைபேசி இலக்கம் ஆகிவற்றை உள்ளடக்கிய விண்ணப்பமொன்றை அனுப்பி வைக்குமாறு அந்த திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.

இச்சேவையில் இணைந்துகொள்ள விரும்பும் ஓய்வுபெற்ற அரச ஊழியர்கள் தமது விண்ணப்பங்களை பின்வரும் முகவரிக்கு அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

ஆட்பதிவு திணைக்களம்,
C-45 கெப்பட்டிபொல வீதி,
கொழும்பு
மேலும் இங்கே தொடர்க...
த.தே. கூ நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் நாடு திரும்பினார்



தங்கியிருந்த தமிழ் தேசியக கூட்டமைப்பின் மற்றுமொரு பாராளுமன்ற உறுப்பினரான செல்வராஜா கஜேந்திரன் நேற்று சனிக்கிழமை நாடு திரும்பியுள்ளார்.

யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரான இவர் கடந்த மூன்று வருடங்களாக ஐரோப்பிய நாடுகளில் தங்கியிருந்தார். இறுதியாக நோர்வே நாட்டில் தங்கியிருந்து அங்கிருந்து நேரடியாக நேற்றைய தினம் நாடு திரும்பியுள்ளார்.

ஏற்கனவே வெளிநாடுகளில் தங்கியிருந்த அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான பத்மினி சிதம்பரநாதன் , செல்வம் அடைக்கலநாதன் மற்றும் எம்.கே.சிவாஜிலிங்கம் ஆகியோர் சில வாரங்களுக்கு முன்பு நாடு திரும்பியிருந்தமை தெரிந்ததே. தற்போது மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரான எஸ்.ஜெயானந்தமூர்த்தி மட்டுமே தொடர்ந்தும் வெளிநாட்டில்(லண்டன்) தங்கியிருக்கின்றார்.
மேலும் இங்கே தொடர்க...
தபால் மூல வாக்காளர்களின் நன்மை கருதி வாக்காளர் பட்டியல்கள் பார்வைக்கு


ஜனவரி 26ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிக்கவுள்ள தபால் மூல வாக்காளர்களின் நன்மை கருதி 2008 ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட வாக்காளர் பட்டியல்கள் பார்வைக்கு வைக்கப்படவுள்ளன.

எதிர்வரும் டிசம்பர் 2 ஆம் திகதி முதல் அலுவலக நேரங்களில் மாவட்டச் செயலகங்கள் மற்றும் கச்சேரிகளிலும் இவை வைக்கப்பட்டிருக்கும் என தேர்தல் ஆணையாளர் அலுவலகம் தெரிவிக்கிறது.

தேர்தலுக்குரிய வாக்காளர் பதிவேடுகள் வைக்கப்பட்டிருக்கும் இடங்கள் வருமாறு:

பொதுநிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சு கொழும்பு 07, தொழில் செயலகம் நாரஹேன்பிட்டிய கொழும்பு 05, கல்வியமைச்சு இசுருபாய பத்தரமுல்லை, பதிவாளர் நாயகம் திணைக்களம் டென்சில் கொப்பேகடுவ மாவத்தை, பத்தரமுல்லை மாவட்ட செயலகம்/ கச்சேரி டாம் வீதி கொழும்பு 12 ,அஞ்சல் திணைக்கள தலைமையகம் டீ. ஆர். விஜேவர்தன மாவத்தை கொழும்பு 10, வீடு மற்றும் பொதுவசதிகள் அமைச்சு செத்சிறிபாய ,பத்தரமுல்லை தரைப்படை தலைமையகம் கொழும்பு 03, கடற்படை தலைமையகம் கொழும்பு 01, விமானப் படை தலைமையகம் கொழும்பு 02, பொலிஸ் தலைமையகம் கொழும்பு 01, சிவில் பாதுகாப்பு திணைக்களம் இல. 23 ஸ்டேஷன் றோட் பம்பலப்பிட்டி கொழும்பு 04.

தபால் மூல வாக்களிப்புக்காக விண்ணப்பிக்க வேண்டிய வழிமுறைகள் வருமாறு:

கொழும்பு மாவட்டத்தில் பதிவு செய்த வாக்காளர்களின் விண்ணப்பங்கள் யாவும் பிரதித் தேர்தல் ஆணையாளர் ,கொழும்பு மாவட்டம், 395 பழைய கோட்டே றோட் ,ராஜகிரிய 10107 என்ற விலாசத்திற்கு அனுப்பப்பட வேண்டும்.

யாழ்ப்பாணம் கிளிநொச்சி மாவட்ட வாக்காளர்களின் விண்ணப்பங்கள் யாழ்ப்பாண மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலருக்கும் வவுனியா மன்னார் முல்லைத்தீவு மாவட்ட வாக்காளர்களின் விண்ணப்பங்கள் வவுனியா மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலருக்கும் அனுப்பப்படல் வேண்டும்.

ஏனைய மாவட்ட வாக்காளர்களின் விண்ணப்பங்கள் யாவும் அந்தந்த மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலருக்கு அனுப்பப்படல் வேண்டும். இதற்குரிய விண்ணப்பப் படிவங்களை தேருநர் பதிவேடுகள் காட்சிக்கு வைக்கப்பட்ட இடங்களில் பெற்றுக் கொள்ள முடியும் என அரச தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்பட வேண்டிய கால இடைவெளி மட்டுப்படுத்தப்பட்டிருப்பதால் விண்ணப்பதாரிகள் தாமதியாது தங்களது விண்ணப்பங்களை உரிய அத்தாட்சிப்படுத்தும் அலுவலர் ஊடாக அனுப்பி வைக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
மேலும் இங்கே தொடர்க...
ngsj;j tpfhiu vupg;G jkpo;kf;fspd; jPh;Tf;F tpNkhrdj;ij jukhl;lhJ khwhf td;Kiw rKjhafkhfNt rh;tNjrj;jpw;F vLj;Jf;fhl;Lk;!

fdlhtpd; nuhwd;Nuh fpq;];ud; tPjpapy; mike;jpUe;j ngsj;j tpfhiu vupf;fg;gl;lij ehk; td;ikahf fz;bf;fpd;Nwhk;. ,t;tpjkhd eltbf;iffs; jkpo;kf;fspd; tpbaYf;F ve;jtpj tpNkhrdj;ijAk; jukhl;lhJ. fle;j fhyq;fspy; tpLjiyg;Gypfs; mikg;gpdhy; Nkw;nfhs;sg;gl;l ,g;gbahd jhf;Fjy;fNs> mtHfis xU gaq;futhj mikg;ghf rh;tNjr ehLfs; gyTk; Kj;jpiu Fj;Jtjw;F topNfhypaJ.

MfNt Myaq;fs;> Njthyaq;fs;> gs;spthry;fis jhf;Ftjd; %yk; vjph;fhy ,isQh; rKjhaj;jpw;Fk; td;Kiwia Nghjpj;J cyfpNyNa xh; fPo;j;jukhd ,dkhf vkJ jkpopdj;ij cyfpw;F fhl;Ltjw;Nf ,t;thwhd rk;gtq;fs; toptFj;Js;sd. ,tw;iw tpLj;J mikjp Kiwapy; vkJ kf;fspd; cupik Nghuhl;lj;ij ,q;Nf Nkw;nfhz;L ehk; td;Kiwfspw;F vjpuhdth;fs; vd;gij fNdba muRf;Fk; gy;fyhr;rhuj;jpid nfhz;Ls;s fNdba kf;fspw;Fk; vLj;Jfhl;Ltjd; %yNk fNdba kf;fspdJ Mjuit vkJ kf;fsJ cupik Nghuhl;lj;jpw; F ntd;nwLf;f KbAk;.

fle;j fhyq;fspy; tPjpkwpg;G Nghuhl;lk;> neLQ;rhiy kwpg;G Nghuhl;lk; vd;W Nkw;nfhs;sg;gl;l Nghuhl;lq;fs; vjd; %yKk; fNdba ehl;L kf;fis ntd;nwLf;f Kbatpy;iy. khwhf mt; kf;fspd; vjph;g;gpidjhd; re;jpf;f Neupl;lJ. jhafj;jpYk; ,t;thwhd td;Kiwfis Ngzpte;NjhNu ,q;Fs;s ,isQh;fs;> Atjpfs; kj;jpapYk; mjid Nghjpj;J vkJ vjph;fhy rKjhaj;ijNa rPuopj;J eLtPjpf;F nfhz;LtUk; eltbf;ifapy;

mikjpahd Kiwapy; fNdba rl;ljpl;lq;fSf;F cl;gl;L ehk; Nkw;nfhs;Sk; Nghuhl;lq;fs;> Mh;g;ghl;lq;fs; %yNk gy;fyhr;rhu rKjhaj;ijAk;> fNdba murpidAk; vkJ gf;fk; khwhf tzf;f jyq;fs; kPjhd td;Kiwfs;> mlhtbjdq;fs; %yk; ehk; ve;jnthU rf;jpiaAk; ntd;nwLf;f KbahJ. ,tw;iw fle;jfhy mDgtq;fspDlhf ngw;W nfhz;Ls;sNghJk;> kPz;Lk; mNj ghzpapy; gazpg;gJ vkJ r%fj;ij xh; jtwhd fz;Nzhl;lj;Jld; ghh;g;gjw;Nf toptFf;Fk;.

MfNt tUq;fhy re;jjpfshf tsh;e;JtUk; md;ghd ,isa r%fj;jpdNu ,t;thwhd td;Kiw eltbf;iffis iftpl;L cupaKiwapy; rl;ljpl;lq;fSf;F cl;gl;L nrayhw;WkhW NfhUfpd;Nwhk;. tzf;f ];jyq;fis vupg;gJ> Ehy; epiyaj;jpw;F jPitg;gJ> Clfj;Jiwia mr;RWj;JtJ> th;j;jf epiyaq;fis cilg;gJ> thfdq;fis mbj;J nehUf;FtJ ,it vJTk; vkJ ePz;lfhy epahg+h;tkhd murpay; cupik Nghuhl;lj;jpw;F cjt Nghtjpy;iy vd;gij czh;e;J nrayhw;WkhW Nfl;Lnfhs;fpd;Nwhk;. rpy Mz;LfSf;F Kd;dh; tPjp rz;ilfspy;

ntWkdNt Cl;lg;gLk; czh;r;rpfSf;fhf cq;fsJ vjph;fhyj;ij tPzbf;fhky; mtw;iw MNuhf;fpakhd Kiwapy; Kd;ndLj;J jhafj;jpy; xh; Nfhu Aj;jj;jpw;F Kfk; nfhLj;J Jtz;LNghAs;s kf;fspd; tpbaYf;fhd xh; murpay; cupikia fNdba kw;Wk; rh;tNjr ehLfspd; gq;fspg;Gld; ntd;nwLg;gjw;fhd Kaw;rpfis Kd;ndLf;FkhW jq;fis Nfl;L nfhs;fpd;Nwhk;.

midj;J mlf;FKiwfisAk; cilj;njwpNthk;

jkpoPo kf;fs; tpLjiy fofk;-PLOTE

[dehaf kf;fs; tpLjiy Kd;dzp-DPLF

jfty; gpur;rhu gpupT-fdlh




மேலும் இங்கே தொடர்க...