30 மே, 2010

நகர வாழ்க்கை கசந்தது; காடு வா என்றது' காட்டுக்கே திரும்பினார் இளம்பெண்

"வீடு போ போ என்கிறது; காடு வா வா என்கிறது' என்று நமது வீட்டில் உள்ள தாத்தா, பாட்டிகள் சொல்ல கேட்டிருப்போம்.

÷ஆனால், கம்போடியாவில் ஒரு இளம் பெண் 2 ஆண்டுகள் நரக வேதனையை நகரத்தில் அனுபவித்தாரோ என்னவோ, மீண்டும் காட்டுக்கே சென்றுவிட்டார்.

÷கம்போடிய நாட்டில் ரத்னகிரி மாவட்டத்தில் 1989-ல் காட்டெருமைகளை மேய்த்துக் கொண்டிருந்த ரோசோம் பி.ஜியெங் என்ற பெண் காணாமல் போனார். அப்போது அவருக்கு வயது 8.

÷2007-ல் ஒரு விவசாயியின் தோட்டத்தில் உணவு திருட முற்பட்டபோது உடலில் ஆடையின்றியும், அழுக்காகவும் அவர் மீட்கப்பட்டார். பின்னர் அவரது தந்தை சல்லெü கண்டுபிடிக்கப்பட்டு தந்தை வசம் அவர் ஒப்படைக்கப்பட்டார்.

÷அவரால் சாதாரண மனிதர்களைப் போல பேச முடியவில்லை. குரங்குகள் போலவே அவரது செய்கைகளும், நடவடிக்கைகளும் இருந்தன.

÷மனிதர்களைப் போல உணவு எடுத்துக் கொள்ள மறுத்ததால் அவர் தொடர்ந்து நோய்களால் பாதிக்கப்பட்டார்.

÷மனிதர்களை விட விலங்குகளே மேல் என நினைத்தார் போலும், அவரது தந்தையிடம் இருந்து தப்பி காட்டுக்கு செவ்வாய்க்கிழமை சென்றுவிட்டார்.

÷காட்டில் உள்ள ஆவிகள்தான் அவரை மீண்டும் காட்டுக்கு அழைத்துச் சென்றுவிட்டது எனவும், அவரை அடர்ந்த காடுகளில் தேடி வருகிறோம் எனவும் அவரது தந்தை சல்லெü தெரிவித்தார்.

÷அவர் காட்டுக்குதான் தப்பிச் சென்றிருக்கக் கூடும் என உள்ளூர் காவல்துறை தலைவர் மா விச்செட்டும் தெரிவித்தார்.

÷மனிதன் பாதி - மிருகம் பாதி இரண்டும் கலந்த கலவை பெண் என்றும், காட்டுப் பெண் என்றும் கம்போடிய மக்கள் அப் பெண்ணை வர்ணித்து வந்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக