24 அக்டோபர், 2010

நுரைச்சோலை அனல் மின்நிலையத்தில் ஏற்பட்ட தீ கட்டுப்படுத்தப்பட்டுள்ளது

புத்தளம் நுரைச்சோலை அனல் மின்நிலையத்தில் ஏற்பட்ட தீவிபத்து கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.புத்தளம் நுரைச்சோலை அனல் மின்நிலையத்தில் இன்று காலை தீவிபத்து ஏற்றப்பட்டது இதன் காரணமாக அப்பிரதேசம் முழுவதும் புகை மண்டலமாகக் காணப்படுகின்றது.

இத்தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதில் கடற்படையினரும், விமானப்படையினரின் ஹெலிகெப்டர்களும் ஈடுபடுத்தப்பட்டன.

இத்தீ விபத்தில் எவருக்கும் சேதம் ஏற்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் இங்கே தொடர்க...

ஜ.ம.மு தொழிற்சங்க பிரிவு செயலாளர் பாரதிதாசன் கைது

ஜனநாயக மக்கள் முன்னணியின் தொழிற்சங்க பிரிவு செயலாளர் பாரதிதாசன் பயங்கரவத குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

விடுதலைப்புலிகளுக்கு உதவிகளை வழங்கினார் என குற்றச்சாட்டின் பேரில் இவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும் இங்கே தொடர்க...

விடுதலைப் புலிகளுடன் தொடர்பை பேணிய மூவர் தலவாக்கலையில் கைது

தமிழீழவிடுதலைப் புலிகள் இயக்கத்துடன் தொடர்புடைய முன்னாள் உறுப்பினர் என கூறப்படும் ஒருவரையும், அவருடன் தொடர்புடைய இருவரையும் மத்திய மாகாண பயங்கரவாத தடுப்புப் பிரிவினர் இன்று நுவரெலியா தலவாக்கலை பிரதேசத்தில் வைத்து கைது செய்துள்ளனர்.

கண்டியில் அமைந்துள்ள பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினர் சில தினங்களுக்கு முன் தலவாக்கலை பிரதேசத்தில் பெரும் தொகையான ஆயுதங்களைக் கைப்பற்றினர். இதனுடன் தொடர்புடையதாக சந்தேகத்தின் பேரில் இவர்கள் கைது செய்யப்பட்டள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடமிருந்து இரண்டு ரீ.56 ரக துப்பாக்கிகளும் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

கைது சைய்யப்பட்ட சந்தேக நபர்கள் சம்பந்தமாக மேலதிக விசாரணைகளை மத்திய மாகண பயங்கரவாத புலனாய்வுப்பிரிவினர் மேற்கொண்டுள்ளனர்.
மேலும் இங்கே தொடர்க...

இந்தியாவிலிருந்து தாயகம் திரும்பும் அகதிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு

இலங்கையில் நிலவும் அமையான சூழலை அடுத்து இலங்கையிலிருந்து அகதிகளாக இந்தியா சென்றவர்கள் தமது சொந்த இடங்களுக்கு திரும்பும் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக இந்திய இணையத்தலம் செய்தி வெளியிட்டுள்ளது. ஐ.நா. வின் புள்ளிவிபரவியல் அறிக்கையில் இத்தகவல்கள் குறிப்பிடப்பட்டுள்ளதாக அச்செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் யுத்தம் இடம்பெற்ற காலப்பகுதியில் இலங்கையின் வடக்கு, கிழக்குப் பகுதிகளிலிருந்து இந்தியாவிற்கு தப்பி சென்ற 67 பொதுமக்கள் ஐ.நாவின் அகதிகள் உயர்ஸ்தானிகராலயத்தின் உதவியுடன் நாடு திடும்பியுள்ளனர்.

இந்தியாவிலுள்ள 112 முகாம்களில் 71,654 இலங்கை அகதிகளும் வெளியிடங்களில் 32,467 இலங்கை அகதிகளும் தங்கியுள்ளதாக கடந்த ஜூலை மாதம் இந்திய அரசாங்கத்தினால் வெளியிடப்பட்ட புள்ளிவிபரவியல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் இங்கே தொடர்க...

மலேசியாவில் “தமிழ் அகதிகள் மாநாடு'

மலேசியாவில் அகதிகளாகத் தஞ்சம் புகுந்துள்ள ஈழத்தமிழர்கள் சுதந்திரவாழ்வை உறுதிப்படுத்தும் முதலாவது மாநாடு இன்று மலேசியாவில் இடம்பெறவுள்ளது.மலேசியா கோலாலம்பூரில் இன்று காலை இந்நிகழ்வு இடம்பெறவுள்ளது.

30 வருடங்களாக இடம்பெற்று வந்த உள்நாட்டு போர் காரணமாக இடம்பெயர்ந்து மலேசியாவில் அகதிகளாகத் தஞ்சம் புகுந்துள்ள ஈழத்தமிழர்கள் பல இன்னல்களுக்கு முகம்கொடுத்து வாருவதாக தெரிவிக்கப்படுகிறது.

மலேசியாவில் அகதிகளாகத் தஞ்சம் புகுந்துள்ள ஈழத்தமிழர்கள் அவர்கள் வாழ்வதற்காக எவ்வித வாழ்வாதார வசதிகளும் செய்து கொடுக்கப்படவில்லை குறிப்பாக முறையான வேலைவாய்ப்பு அனுமதி,தங்குமிடம்,உணவு,கல்வி வசதிகள் செய்துக்கொடுக்கப்படவில்லை என மலேசிய மாற்றுசெயலணி சார்பில் வெளியிடப்பட்டிருக்கும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மலேசிய அரசாங்கத்தின் மனிதபிமான அடிப்படையில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.இவ்வாறு காணப்பட்ட 72 இலங்கை அகதிகளை மீட்டெடுத்து அவர்களைமூன்றாம் தரப்பு நாடுகளில் குடியமர்த்த செயற்பட்டிருக்கும் மலேசிய மாற்றுசெயலணி தலைவர் கலைவாணர் முழு பொறுப்பையும் ஏற்று நடத்துகிறார்.

மலேசியாவில் அகதிகளாகத் தஞ்சம் புகுந்துள்ள ஈழத்தமிழர்கள் வாழ்வு உறுதிப்படுத்த முடியும் என்பதற்காகவே இம்மாநாடு நடத்தப்படுவதாக தெரிவித்துள்ளது.
மேலும் இங்கே தொடர்க...

இனப்பிரச்சினையின் தீர்வுக்கான அரசியல் செயற்பாடுகள் தேசிய ரீதியாக இடம்பெற வேண்டும்

இனப் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கான முதலாவது அடியெடுப்பாக மாகாண சபையைக் கருதலாம். ஒற்றையாட்சியில் மத்திப்படுத்தப்பட்ட அதிகாரங்கள் என்ற நிலையிலிருந்து ஒற்றையாட்சியில் பகிர்ந்தளிக்கப்பட்ட அதிகாரங்கள் என்ற நிலையை நோக்கிய மாற்றமே மாகாண சபை முறை.

தமிழ் மக்களின் அரசியலைப் பொறுத்த வரையில் எந்தக் காலத்திலும் தேசிய இனப் பிரச்சினையே பிரதான பிரச்சினையாகப் பேசப்பட்டு வருகின்றது. பொருளாதாரம், அபிவிருத்தி, வேலைவாய்ப்பு போன்ற பிரச்சினைகள் எதுவும் தமிழ் மக்களுக்கு இல்லை என்பது இதன் அர்த்தமல்ல. நாட்டின் ஏனைய மக்களைப் போல இவர்களும் இப் பிரச்சினைகளுக்கு முகங் கொடுக் கின்றார்கள். ஆனால் தமிழ் மக்களின் தலைவர்களாக உரிமை கோருபவர்கள் தேர்தல் காலங்களில் மாத்திரமன்றி எப்போதும் இனப் பிரச்சினை பற்றியே பேசுகின்றார்கள். இப்போது தமிழ் மக்களின் மீள்குடியேற்றம் பற்றிப் பேசுகின்ற போதிலும் அதுவும் இனப் பிரச்சினையின் தீர்வோடு சம்பந்தப் பட்டதே. இனப் பிரச்சினைக்குத் தீர்வு கிடைத்திருந்தால், அல்லது தீர்வை நோக்கிய நகர்வாவது இடம் பெற்றிருந்தால் இன்றைய மீள்குடியேற் றப் பிரச்சினை தோன்றியிருக்காது.

தாங்களே தமிழ் மக்களின் உண்மையான பிரதிநிதிகள் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் உரிமை கோருகின்றார்கள். தேர்தலில் மக்களால் தெரிவு செய் யப்படும் உறுப்பினர்களின் எண் ணிக்கையிலேயே பிரதிநிதித்துவ உரிமை தங்கியுள்ளது என்ற அடிப் படையிலேயே தாங்களே உண்மையான பிரதிநிதிகள் என்று இவர்கள் கூறு கின்றனர். இவர்களுடைய இந்த வரையறையின் அடிப்படையில் பிரச்சினையைப் பார்ப்போம்.

தமிழ் மக்கள் பெரும்பான்மையாக வாழும் பிரதேசங்களிலிருந்து முதலில் தமிழரசுக் கட்சியும் பின்னர் தமிழர் விடுதலைக் கூட்டணியும் இப்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் கூடுதலான பாராளுமன்ற உறுப்பி னர்களைப் பெற்றிருக்கின்றன. இவர் களுடைய வாதத்தின்படி, இந்த மூன்று கட்சிகளுமே கடந்த அரை நூற்றாண்டுக்கு மேலாகத் தமிழ் மக்களின் அங்கீகரிக்கப்பட்ட பிரதிநிதிகள். ஒரு வாதத்துக்காக இதை ஏற்றுக் கொள்வோம்.

கடந்த அரை நூற்றாண்டுக்கு மேற்பட்ட காலப் பகுதியில் நடைபெற்ற எல்லாத் தேர்தல்களிலும் இனப் பிரச்சினையை மாத்திரமே இவர்கள் பேசுபொருளாக முன்வைத்தார்கள். இனப்பிரச்சி னையின் தீர்வுக்காக அயராது உழைப்போம் என்ற வாக்குறுதியின் அடிப்படையில் மக்களின் வாக்குகளைப் பெற்றார்கள்.

அரசியலில் அரை நூற்றாண்டு சாதாரண காலமல்ல. முழுமையான நிவாரண த்தைப் பெற முடியாவிட்டாலும், பாதிப்புக்கு உள்ளாகிய மக்களுக்குக் கணிசமான நிவாரணத்தைப் பெற்றுக் கொடுக்கக்கூடிய காலம். இக்காலப் பகுதியில் இந்திய வம்சாவளி மக்களுக்கும் பிரச்சினை இருந்தது. அவர்கள் பிரசாவுரிமையும் வாக் குரிமையும் பறிக்கப்பட்டு நாடற் றவர்கள் என்ற நிலைக்குத் தள்ளப் பட்டிருந்தனர். இப்போது அவர்களுக் குப் பிரசாவுரிமையும் கிடைத்திருக் கின்றது. வாக்குரிமையும் கிடைத் திருக்கின்றது. சமகாலத்தில் இனப் பிரச்சினைக்கு முகங்கொடுத்த இலங்கைத் தமிழ் மக்களுக்கு எவ்வித நிவாரணமும் இல்லை. இருந்த நிலையிலும் பார்க்கக் கூடுதலான பாதிப்புகளுக்கே அவர்கள் உள்ளாகியிருக்கின்றனர்.

இக் காலப் பகுதியில் இலங்கைத் தமிழ் மக்களின் அரசியல் தலைமையை ஏற்றிருந்தவர்கள் காலத்துக்குக் காலம் வெவ்வேறு கட்சிப் பெயர்களில் செயற்பட்ட போதிலும் ஓரே அணியினர் என்பது வெளிப்படையானது. இனப்பிரச்சினைக்கான தீர்வு முயற்சி யில் எவ்வித முன்னேற்றமும் ஏற் படாததற்கு இத்தலைவர்கள் தார்மீகப் பொறுப்பு ஏற்க வேண்டும்.

இந்த அரை நூற்றாண்டு காலப் பகுதிக் குள் தமிழ் மக்கள் படிப்படியாக மோசமான நிலைக்குத் தள்ளப்பட்டனர். தாங்க முடியாத இழப்புகளுக்கும் அழிவுகளுக்கும் உள்ளாகினார்கள். இவற்றுக்கெல்லாம் அரசாங்கமே காரணம் என்று தமிழ்த் தலைவர்கள் கூறுகின்ற போதிலும் இத் தலைவர்களின் தீர்க்கதரிசனமற்ற செயற்பாடுகளே பிரதான காரணம். இனப் பிரச்சினையின் தீர்வுக்கு மாத்திரம் முன்னுரிமை அளித்து இவர்கள் செயற்பட்டிருந்தால் தமிழ் மக்களுக்கு அவலநிலை ஏற்பட்டிருக்காது.

பதின்மூன்றாவது திருத்தம்

இப்போது உடனடியாக நடைமுறைப்படுத்தக் கூடியதாக உள்ள தீர்வு பதின்மூன்றாவது திருத்தத்தின் கீழான மாகாண சபை. இது இனப்பிரச்சினைக்கு இறுதித் தீர்வல்ல என்பதில் மாறுபட்ட கருத்துக்கு இடமில்லை. எனினும் இதை ஏற்பதால் இருந்த நிலையிலும் பார்க்கத் தமிழ் மக்கள் பின்னுக்குத் தள்ளப்படுவதற்கான சாத்தியம் இல்லை. தற்காலிகமாகவாவது சில அதிகாரங்கள் கிடைக்கின்றன. எனவே மாகாண சபைகளை ஏற்பதால் தமிழ் மக்கள் இழக்கப் போவது எதுவுமில்லை. அதே நேரம், மாகாண சபைகளை ஏற்பது இறுதித் தீர்வை முன்னெடுப்பதற்குத் தடையாகவும் அமையாது.

இனப் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கான முதலாவது அடியெடுப்பாக மாகாண சபையைக் கருதலாம். ஒற்றையாட்சியில் மத்திப்படுத்தப்பட்ட அதிகாரங்கள் என்ற நிலையிலிருந்து ஒற்றையாட்சியில் பகிர்ந்தளிக்கப்பட்ட அதிகாரங்கள் என்ற நிலையை நோக்கிய மாற்றமே மாகாண சபை முறை. முழுமையான அதிகாரப் பகிர்வு தான் ஐக்கிய இலங்கையில் இனப் பிரச்சினைக்கான இறுதித் தீர்வாக முடியும். எனவே, அதிகாரப் பகிர்வை நோக்கிய முதலாவது நகர்வு என்று மாகாண சபையைக் கூறலாம்.

இதைவிட மாகாண சபைக்கென ஒதுக்கப்பட்ட விடயங்களை மாகாண சபை கையாள முடியும். இவ்விடயங்கள் மாகாணத்தில் வாழும் மக்களின் நாளாந்த வாழ்க்கையோடு நேரடியாகச் சம்பந்தப்பட்டவை. இது மக்களுக்கு அனுகூலமான நிலை.

தமிழ்த் தலைவர்கள் மாகாண சபையை நிராகரிக்கின்றார்கள். இன்று நிராகரிக்கின்ற தலைவர்களில் சிலர் மாகாண சபை அறிமுகப்படுத்தப்பட்ட நேரத்தில் நேரடியாகவும் மறைமுகமாகவும் வரவேற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

பாராளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் மாகாண சபையை வரவேற்றவர்களில் ஒருவர். புலிகளும் ஐக்கிய தேசியக் கட்சியும் சேர்ந்து மாகாண சபை செயற்பட முடியாத நிலையைத் தோற்றுவித்த போது அதை வன்மையாக எதிர்த்தவர்களுள் இவரும் ஒருவர்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முக்கியஸ்தர்களான இரா. சம்பந்தன், மாவை சேனாதிராசா ஆகியோர் தமிழர் விடுதலைக் கூட்டணியின் வழிவந்தவர்கள். தமிழர் விடுதலைக் கூட்டணி முதலாவது மாகாண சபைத் தேர்தலில் வேட்பாளர்களை நிறுத்தாத போதிலும், அத் தேர்தலில் தமிழ் மக்கள் எல்லோரும் வாக்களிக்க வேண்டும் என்று அறிக்கையொன்றின் மூலம் வேண்டுகோள் விடுத்தது. தமிழர் விடுதலைக் கூட்டணி மாகாண சபையை அப்போது நிராகரிக்கவில்லை என்பதே இதன் அர்த்தம்.

இப்போது இத் தலைவர்கள் மாகாண சபையை நிராகரிப்பதற்குப் பின்வரும் காரணங்களைக் கூறுகின்றார்கள்.

1. வடக்கும் கிழக்கும் பிரிக்கப்பட்டுவிட்டன.

2. பதின்மூன்றாவது திருத்தத்திலுள்ள முக்கியமான சில அதிகாரங்கள் இப்போது மாகாண சபைக்கு இல்லை.

3. அரைகுறைத் தீர்வுகளை ஏற்ற முடியாது.

வடக்கு, கிழக்கு மாகாணங்கள் இணைந்த மாகாண சபை செயற்பட முடியாத நிலை ஏற்பட்ட பின் அம் மாகாண சபையைச் செயற்படுத்துவதற்கான எந்த நடவடிக்கையையும் தமிழ்த் தலைவர்கள் மேற்கொள்ளவில்லை. தமிழ்த் தலைவர்கள் முன்முயற்சி எடுத்து அம் மாகாண சபைக்கு உயிரூட்டியிருந்தால், இரண்டு மாகாணங்களும் இணைந்திருப்ப தைச் சிங்கள அரசு வழிச் சமூகம் சந்தேகக் கண்கொண்டு பார்க்கும் நிலை தோன்றுவதைத் தவிர்க்க முடிந்திருக்கும்.

பதின்மூன்றாவது திருத்தத்தின் முக்கியமான அதிகாரங்கள் மாகாண சபைக்கு வழங்கப்படவில்லை என்று வெளியே இருந்துகொண்டு கூறுவதிலும் பார்க்க மாகாண சபையை ஏற்றுச் செயற்படுத்திக்கொண்டு அந்த அதிகாரங்களைப் பெறுவதற்கு முயற்சிப்பது தான் ஆக்கபூர்வமானது.

அரைகுறைத் தீர்வை ஏற்க முடியாது என்ற நிலைப்பாடு சரியானதல்ல. உடனடியாகச் சாத்தியமான தீர்வை ஏற்றுக்கொண்டு முழுமையான தீர்வை அடைவதற்கான முயற்சியைத் தொடர்வது தான் சரியான அணுகுமுறை. ஒன்றுமே இல்லாத நிலையிலும் பார்க்க ஏதாவது கிடைப்பது மேலானதே.

அடுத்து என்ன?

ஒரு தீர்வை நிராகரிப்பது அதனிலும் கூடுதலான தீர்வை அடைவதற்காக இருக்க வேண்டுமேயொழிய அந்தகாரத்துக்குச் செல்வதாக அமையக் கூடாது.

இப்போது மாகாண சபையை நிராகரிக்கும் தலைவர்கள் அதனிலும் மேலான தீர்வுக்கான தங்கள் திட்டத்தை மக்களுக்குத் தெளிவுபடுத்த வேண்டும். தீர்வொன்றைத் தயாரித்திருக்கின்றோம் என்று கூறுகின்றார்கள். அது எத்தகைய தீர்வு என்பது மக்களுக்குத் தெரியாது.

மாகாண சபையிலும் பார்க்கக் கூடுதலான அதிகாரங்களைக் கொண்ட தீர்வு அவசியமான தேவைதான். அத்தகைய தீர்வுக்கான ஆலோசனைகளை முன்வைத்து அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்துவதும் நியாயமானதே. அதுமட்டும் தீர்வைக் கொண்டு வருவதற்குப் போதுமானதல்ல.

தீர்வொன்றை நடைமுறைப்படுத்துவதற்கு அகவய உணர்வுகள் மாத்திரம் போதாது. புறவயச் சூழ்நிலையும் சாதகமானதாக இருத்தல் வேண்டும். இன்றைய நிலையில் புறவயச் சூழ்நிலை சாதகமானதாக இல்லை. தமிழ் மக்களின் உரிமைக் கோரிக்கையைச் சிங்கள மக்கள் பிரிவினையாகப் பார்க்கும் நிலை இன்று நிலவுகின்றது என்ற உண்மையிலிருந்து நாம் விலகிச் செல்ல முடியாது. தமிழ்த் தலைமை தனிநாட்டுக்கான ஆயுதப் போராட்டப் பாதையிலே சில காலம் பயணித்ததன் விளைவு இது.

நடைமுறையிலுள்ள அரசியலமைப்பின் படி, பெரும்பான்மையான மக்களின் ஆதரவுடனேயே கூடுதலான அதிகாரங்களைக் கொண்ட தீர்வொன்றை நடைமுறைப்படுத்த முடியும். அதற்கேற்ற சூழ்நிலையை உருவாக்கும் பொறுப்பு தமிழ்த் தலைவர்களுக்கும் உண்டு.

மாகாண சபையை ஏற்பதும், அதேநேரம், ஐக்கிய இலங்கையில் அரசியல் தீர் வையே தமிழ் மக்கள் நாடி நிற்கின் றார்கள் என்ற அபிப்பிராயத்தைச் சிங்கள மக்களிடம் ஏற்படுத்தும் வகையில் செயற்படுவதும் சாதகமான சூழ்நிலையைத் தோற்றுவிப்பதற்கான வழிகள். மேலான தீர்வுக்காக அரசாங்கத்துடன் நடத்தும் பேச்சுவார்த்தை இதற்குச் சமகாலத்தில் இடம்பெற முடியும்.

இனப் பிரச்சினையின் தீர்வை நோக்கிய அரசியல் செயற்பாடுகள் வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்குள் மட்டுப்படுத்தப்பட்டி ருக்காது தேசிய ரீதியாக வியாபிக்க வேண்டியதன் அவசியத்தை எல்லோரும் ஏற்றுக்கொண்டாக வேண்டும்.
மேலும் இங்கே தொடர்க...

ஐ.நா.வின் 65வது ஆண்டு நிறைவு

ஐக்கிய நாடுகள் சபையின் 65வது நிறைவு தினம் எதிர்வரும் 26ம் திகதி பெளத்தாலோக மாவத்தை கொழும்பு-7 இல் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் அலுவலகத்தில் நடைபெறவுள்ளது.

ஐக்கிய நாடுகள் சபையின் தினம் 24ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை வருவதால், 26ம் திகதி திங்கட்கிழமை 65வது ஆண்டு நிறைவு விழாவைக் கொண்டாட வதிவிட இணைப்பதிகாரியால் ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது. இதனை முன்னிட்டு முகவர்களுக்கான நிகழ்வும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மேலும் இங்கே தொடர்க...

www.bcgrsrilanka.com புனர்வாழ்வு பெறுவோர் விபரங்கள் இணையத்தில் www.bcgrsrilanka.com




தடுப்பு முகாம்களில் இருப்பவர்கள், கைது செய்யப்பட்டு சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டிருப்போர் புனர்வாழ்வு அளிக்கப்பட்டு வருவோர் பற்றிய விபரங் களை மக்கள் அறிந்து கொள்வதற்கான இணையத்தளம் யாழ்ப்பாண செயலகத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.www.bcgrsrilanka.com

இணையத்தளத்தின் முகவரி சூசூசூ.ஸஷகிஙுஙூஙுடுங்ஹடூகூஹ.ஷச்ஙி என்பதாகும். இந்த இணையத்தளம் அதிகளவு ஊடகவிய லாளர்களுக்கு பயனுடையதாக விருக்குமென கருதப்படுகிறது.
மேலும் இங்கே தொடர்க...

அடையாள அட்டையின் இலக்கம் உடஊ இலக்கமாக மாற்றம் நவம்பர் முதல் அமுல்

ஊழியர் சேமலாப நிதியத்தில் அங்கம் வகிப்பவரின் அங்கத்துவ இலக்கம் அவரது தேசிய அடையாள அட்டையின் இலக்கமாக மாற்றம் செய்யப்படுகிறது. இந்த நடைமுறை நவம்பர் மாதம் முதல் அமுலுக்கு கொண்டுவரப்படவுள்ளது.

இத் திட்டத்தின் கீழ் சகல ஊழியர் களையும் இணைத்துக்கொள்ளும் நட வடிக்கையை தொழில் உறவுகள் அமைச் சின் கீழுள்ள ஊழியர் சேமலாப நிதிய பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.

ஊழியர் சேமலாப நிதியத்திலிருந்து பணத்தை மீளப்பெறுபவர்கள் தாமதமின்றி பணத்தைப் பெறுவதற்கும் தேவையற்ற ஆவணங்களை சமர்ப்பிக்கவும் அவசியமில்லை எனவும் தொழில் அமைச்சு தெரிவிக்கிறது.

புதிய நடைமுறையின்படி, ஊழியர் சேமலாப நிதியத்துக்குரியவரின் அங்கத்துவ இலக்கத்தை தேசிய அடையாள அட்டையின் இலக்கமாக மாற்றுவதற்குரிய படிவங்களை சகல தனியார் நிறுவனங்களுக்கு அனுப்ப ஊழியர் சேமலாபநிதிய திணைக்களம் நடவடிக்கை எடுத் துள்ளது.
மேலும் இங்கே தொடர்க...

இலங்கையின் பொருளாதாரம்; நாணய நிதியம் திருப்தி


இலங்கையின் பொது நிதிக் கையாள்கை பலமான முன்னேற்றத்தைக் கண்டிருப்பதுடன் உள்ளூர்ப் பொருளாதாரம் எதிர்கொள்ளும் சவால்களுக்கு சாதகமான சூழ்நிலை ஏற்பட்டிருப்பதாக சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.

இலங்கை பொருளாதார திட்டங்களை முன்னெடுக்கும் விதம் தமக்குத் திருப்தியளிப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் பணிப்பாளர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பொது நிதிக் கையாள்கை மற்றும் மூலதனச் சந்தை, வர்த்தக அபிவிருத்தி போன்றவற்றில் மேலும் முன்னேற்றம் காணப்படுவதுடன், பொருளாதார ஸ்திரத்தன்மை குறித்து நாணய நிதியம் திருப்தி தெரிவித்துள்ளது.

சமூகச் செலவீனங்களுக்குக் கூடுதலான வரிகளை அறவிட வேண்டுமென சர்வதேச நாணய நிதியம் சிபாரிசு செய்திருப்பதாகவும், புனரமைப்பு மற்றும் உட்கட்டுமானப் பணிகளில் கூடுதல் முதலீடுகள் செய்ய வேண்டுமென்றும் அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் இங்கே தொடர்க...

இரண்டு தசாப்தங்களில் இலங்கை பொருளாதார அபிவிருத்தியை எட்டும் - ஜேர்மன் தூதுவர்

இரண்டு தசாப்தங்களில் இலங்கை பொருளாதார ரீதியில் அபிவிருத்தியடைந்த நாடாக மாறிவிடும் என இலங்கைக்கான ஜேர்மன் தூதுவர் ஜென் புளெட்னர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

அண்மையில் கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கருத்துத் தெரிவித்த போதே ஜேர்மன் தூதுவர் இதனைக் கூறியுள்ளார்.

அவர் அங்கு மேலும் கருத்துத் தெரிவிக்கையில், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் தற்பொழுது முன்னெடுக்கப்பட்டிருக்கும் அபிவிருத்தித் திட்டங்கள் இலங்கையை பொருளாதார ரீதியில் அபிவிருத்தியடைந்த நாடாக மாற்றிவிடும் என அவர் தெரிவித்தார்.

இலங்கையில் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தித் திட்டங்களுக்கு ஜேர்மன் தொடர்ந்து ஆதரவு வழங்கும்.

இதன் ஒரு அங்கமாகக் கிழக்கு மாகாணத்தில் கட்டுமானப் பணிகளில் ஈடுபட்டிருக்கும் இளைஞர்களுக்குத் தொழில்சார் பயிற்சிகளை வழங்கவுள்ளோம். இத்திட்டத்துக்கு மூன்று மில்லியன் யூரோ செலவிடப்படவுள்ளது.

இந்தத் திட்டத்தின் கீழ் இளைஞர்களுக்கு ஆங்கில மொழிப் பயிற்சி மற்றும் கணனிப் பயிற்சிகள் வழங்கப் படும்.

இதற்கு மேலதிகமாக அவர்களுக்கு மேசன் தொழில், தச்சுத் தொழில் மற்றும் மின் இணைப்பு தொழில்நுட்ப பயிற்சிகள் வழங்கப்படும்.

இந்த திட்டத்தின் முடிவில் 2000 இளைஞர், யுவதிகள் சிறந்த எதிர் காலத்தைப் பெற்றிருப்பார்கள் என்று தெரிவித்தார்.

இதேவேளை கட்டமானப் பயிற்சியாளர்களுக்கு நாடளாவிய ரீதியில் காணப்படும் தட்டுப்பாட்டை நீக்குவதற்கு ஜேர்மன் உதவிகளை வழங்க முன்வந்திருப்பதாக நிர் மாண மற்றும் பொறியியற்துறை அமைச்சின் மேலதிக செயலாளர் ஈ.ஏ. ஏக்க நாயக்க தெரிவித்தார்.
மேலும் இங்கே தொடர்க...

கடற்கரையில் கண்டெடுத்த டப்பா வெடித்து 8 வயது சிறுவன் பலி மேலும் 4 சிறார்கள் காயம்: மூதூரில் சம்பவம்



மூதூர் கடற்கரையில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்கள் கண்டெடுத்த டப்பா ஒன்று வெடித்ததில் எட்டு வயதுச் சிறுவன் கொல்லப்பட்டதோடு மேலும் நான்கு சிறார்கள் காயமடைந்தனரென பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவம் நேற்று சனிக்கிழமை காலை 9.45 அளவில் மூதூர் தக்வா நகர் வட்டம் கடற்கரை பகுதியில் நடந் துள்ளதாக பொலிஸார் கூறினர்.

ஐந்து சிறுவர்களும் கடற்கரையில் விளையாடிக்கொண்டிருந்தபோது அங்கு கண்டெடுத்த டப்பா ஒன்றை திறக்க முற்பட்டுள்ளனர். அப்போது அது பாரிய சத்தத்துடன் வெடித்துச் சிதறியதாக நேரில் கண்டவர்கள் தெரிவித்தனர்.

இந்த வெடிப்புச் சம்பவத்தில் காயமடை ந்த ஐந்து சிறார்களும் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். இவர்களில் முகாஜிதீன் சர்பான் என்ற எட்டு வயதுச் சிறுவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தா ரென ஆஸ்பத்திரி வட்டாரங்கள் கூறின.

காயமடைந்தவர்களில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவரும் அடங்குகின்றனர். காயமடைந்தோரின் விபரம் வருமாறு,

ஜுனூது நகூர் ஸல்மான், (வயது – 10), ஜுனூது நகூர் சாஜித் (வயது 05), ஜுனூது நகூர் சையிப் (வயது- 03) என்பவர்களுடன் யாரியா கரீம்- இம்ராக் (வயது 08) ஆகியோரே காயமடைந்த வர்களாவர்.
மேலும் இங்கே தொடர்க...

உள்ளூராட்சி தேர்தல் சட்ட மூலம்: அடிமட்ட மக்களுக்கும் அதிகாரம் கிடைக்க வழியேற்படுகிறது

யோசனைகளை சமர்ப்பிப்பதை விடுத்து எதிர்ப்பதால் பலன் இல்லை
உள்ளூராட்சித் தேர்தல் திருத்தச் சட்டத் தின் மூலம் உள்ளூராட்சி மன்றங்களைப் பலப்படுத்துவது அடிமட்ட மக்களுக்கும் அதிகாரம் கிடைக்க வழியேற்படுவதாக முன்னாள் அமைச்சரும் மலையகத் தமிழ் அமைப்புகளின் ஒன்றிய ஒருங்கிணைப் பாளருமான பீ. பீ. தேவராஜ் ‘வாரமஞ் சரி’க்குத் தெரிவித்தார்.

இந்தச் சட்டமூலத்தில் உள்ள குறைகளை நிவர்த்திப்பதற்கான திருத்த ஆலோ சனைகளைச் சமர்ப்பிப் பதைவிடுத்து எதிர்ப்பதால் எந்தப் பலனும் ஏற்படப் போவதில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

உள்ளூராட்சித் தேர்தல் வட்டார முறையும் விகிதாசார முறை யும் கலந்து வருவதில் சிறு பான்மையினருக்குப் பாதிப் பில்லை. என்னவாக இருந்தாலும் அரசாங்கம் கொண்டு வரும் யோச னையை எவ்வாறு நடைமுறைப் படுத்தப் போகின்றது என்பதைப் பார்க்க வேண்டும்.

குறைபாடுகள் இருந்தால், நடைமுறைப்படுத்த வேண்டிய வழிமுறைகளை நாம் முன்மொழிய வேண்டும்’ என்று தெரிவித்த முன்னாள் அமைச்சர் தேவராஜ், உள்ளூராட்சி மன்றங்களைப் பலப்படுத்தி மத்திய அரசாங்கம் நேரடியாகக் கையாள்வதற்கான யோசனை இருப்பதால், மாகாண சபைக்கான அதிகாரப் பகிர்வு குறைந்துவிடும் எனச் சிலர் கருதுகிறார்கள். அவர்களது கண்ணோட்டம் அதுவாக உள்ளது.

ஆனால், உள்ளூராட்சி மன்றமொன்றில் சிறுபான்மைப் பிரதிநிதித்துவம் கட்டாயமானது (ணிஹடூனீஹசிச்ஙுஞி) எனச் சொல்லப்பட்டுள்ளது. ஒரு சபைக்குள் சகல இனப் பிரதிநிதித்துவமும் இடம்பெறும் வகையிலேயே பட்டியல் இடப்படும். சிறு சிறு பிரதேசங்களைப் பிரிக்காமல் குறிப்பிட்ட மக்களின் செறிவினைக் கொண்டிருக்கும் சபையினை நாம் முன்மொழிய முடியும். புதிதாக சில கிராம சேவையாளர் பிரிவுகளையும், பிரதேச செயலகப் பிரிவுகளையும் பிரேரிக்க முடியும். இதற்கு மக்கள் கூடுதல் பங்களிப்பைச் செய்ய வேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
மேலும் இங்கே தொடர்க...

சர்வதேச தரத்துக்கு பல்கலைக்கழகங்கள் வெளிவாரி மாணவர்கள் தொடர்பாக புதிய நடைமுறை

இலங்கையிலுள்ள பிரபல்யமான ஐந்து பல்கலைக்கழகங்கள் சர்வதேச பல்கலைக் கழகமாக தரமுயர்த்தப்படவுள்ளன. இதேபோன்று பல்கலைக்கழகங்களுக்கு சேர்த்துக் கொள்ளப்படவுள்ள வெளிவாரி மாணவர்களின் கல்வித் தரம் தொடர்பாகவும் புதிய நடைமுறைகளை கடைப்பிடிக்க வுள்ளதாக பல்கலைக்கழகங்களின் மானிய ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் மொஹான் சமரநாயக்க தெரிவித்தார்.

வருடாந்தம் பல்கலைக்கழகங்களுக்கு சுமார் 21,000 மாணவர்கள் சேர்த்துக் கொள்ளப்படும் போது சுமார் 50,000 மாண வர்கள் வெளிவாரியாக சேர்த்துக் கொள்ளப் படுகின்றனர். பட்டதாரிகளாக வெளியேறும் இவர்களுக்கு தகுந்த தொழிலை பெற்றுக் கொள்வதற்கும் திறமையானவர்களாகவும், தரமானவர்களாகவும் இருக்க வேண்டும் என்பதற்காகவே இப்புதிய நடைமுறை செய்யப்படுகிறது.

இது எவ்வகையிலும் வெளிவாரி மாணவர்களின் எண்ணிக்கையை குறைக்கும் நடவடிக்கை அல்ல என்றார். அத்துடன் பல்கலைக்கழக கல்வி இன்று உலகத்தில் சர்வதேச தரத்தில் இருக்கும் நிலையில் இலங்கையிலும் பல்கலைக்கழகங்களை சர்வதேச தரத்துக்கு உயர்த்த வேண்டும்.

கொழும்பு, பேராதனை, களனி, ஸ்ரீ ஜயவர்தனபுர மற்றும் மொரட்டுவ பல் கலைக்கழகங்களை முதற் கட்டமாக சர்வதேச தரத்துக்கு தரமுயர்த்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இவை ஒக்ஸ்போர்ட், ஹாவர்ட், கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகங்கள் போன்று தரமுயர்த்தப்படும் போது வெளிநாட்டு மாணவர்களுக்கும் இங்கு வந்து கல்வி கற்கும் சந்தர்ப்பம் கிடைக்கும்.

எமது பல்கலைக்கழகங்களின் தரம் உயர்த்தப்பட்டு பாரிய மாற்றங்களை காணும் பட்சத்தில் எமது நாட்டைவிட்டு சென்றுள்ள புத்திஜீவிகள் மீண்டும் இலங்கை வருவார்கள். எமது நாட்டிலிருந்து வெளியேறும் செலாவணி எமது நாட்டிற்குள்ளேயே தங்கிவிடும்.

வெளிவாரி மாணவர்களை சேர்த்துக் கொள்ளும் நடவடிக்கையை தரமானதாக மாற்றும் அதேவேளை மேலே குறிப்பிடப்பட்ட மாற்றங்களை உருவாக்குவதற்காக உயர் கல்வி அமைச்சு பல்கலைக்கழக கட்டமைப்புக்களுக்கான திருத்தங்களை செய்து வருகிறது.

உள்வாரி மாணவர்களுக்கு மட்டுமன்றி வெளிவாரி மாணவர்களை சேர்த்துக்கொள் ளும் போதும் ஆங்கில அறிவு கட்டாயமாக கருதப்படுவதுடன், கணனி அறிவும் முக்கியமாக கருதப்படும். வெளிவாரி மாணவர்களை சேர்த்துக்கொள்ளும் விடயம் பற்றிய முழுமையான சுற்று நிருபம் சகல பல்கலைக்கழகங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

அத்துடன் இலங்கையில் தனியார் பல்கலைக்கழகங்களை அமைப்பது தொடர்பாக அரசு உறுதியான நிலைப் பாட்டில் உள்ளது.

இலங்கையிலிருந்து வருடாந்தம் 8000 முதல் 10,000 வரையிலான மாணவர்கள் வெளிநாடுகளுக்கு செல்கின்றனர். உலகில் வருடாந்தம் 2.8 மில்லியன் மாணவர்கள் வெளிநாட்டுக்கு கல்விக்காக செல்கின்றனர். இத்தொகை 8 மில்லியன் வரை அதிகரிக்கும் அபாயம் உள்ளது.

தனியார் பல்கலைக்கழகங்களின் தேவை இன்று உலகில் அதிகரித்து வருகிறது. இலங்கையிலும் தனியார் பல்கலைக் கழகங்கள் அமைக்கப்படவுள்ளன.

இதற்கு முதலில் பாராளுமன்றத்தில் சட்டம் கொண்டுவரப்படுவதுடன் பல்க லைக்கழகங்களின் தரத்தை நிர்ணயிப்பதற்கான குழுவும் அமைக்கப்படும் என்றும் பேராசிரியர் மொஹான் சமரநாயக்க தெரிவித்தார்.
மேலும் இங்கே தொடர்க...