6 செப்டம்பர், 2010

துரோக, சரணாகதி, சரணடைதல்



தமிழ் பேசும் மனிதர்கள் குறிப்பாக இலங்கையில் வாழ்கின்றவர்கள் இன்று பல்வேறு தளங்களில் பிரச்சனைகளை எதிர்நோக்கி இருப்பதுடன் பின்தங்கிய நிலையிலும் உள்ளார்கள் என்றால் மறுப்பதற்கில்லை. இவர்களது வாழ் நிலை மற்றும் மனநிலை என்பன மிகவும் பாதிப்படைந்து கவலைக்கிடமாகவும் நம்பிக்கையிழந்தும் காணப்படுகின்றன. இந்த நிலையில் சர்வதேச சமூகங்கள் மற்றும் இந்திய சிறிலங்கா அரசாங்கங்கள் இம் மனிதர்களுக்கு நம்பிக்கையளிக்களிக்கின்ற எந்தவிதமான செயற்பாடுகளையே தொடர்ந்தும் முன்னெடுக்காதிருக்கின்றனர். இவ்வாறு இவர்கள் ஒன்றும் செய்யாமலிருப்பது ஆச்சரியமான விடயமல்ல. ஆனால் இம் மனிதர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் தேசிய கட்சிகளும் புலம் பெயர்ந்த தமிழ் பேசும் மனிதர்களும் குறிப்பாக புலம் பெயர் விடுதலைப் புலிகளின் தலைமைகளும் மற்றும் பிற இயக்கத் தலைமைகளும் கூட இவர்கள் மீது அக்கறையுடன் செயற்படுவதாக தெரியவில்லை. ஆனால் பத்திரிகைகளில் மட்டும் தமது உயிரைக் கொடுத்து வேலை செய்கின்றளவிற்கு அறிக்கைகள் மட்டும் விடுகின்றார்கள். உண்மையில் ஒவ்வொருவரும் எரிகிற வீட்டில் கூரையைப் பிடுங்குவதுபோல் தமிழ் பேசும் மனிதர்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் கஸ்டங்கள் முரண்பாடுகளில் குளிர்காய்வதுடன் தமது கட்சிகள்; அல்லது அமைப்புகள் இயக்கங்கள் என்பவற்றையே உறுதியாக நிலைநிறுத்துவதற்கும் நியாயப்படுத்துவதற்குமே முயற்சிக்கின்றனர். இதன்மூலம் தமது அதிகாரங்களை பெறுவதற்கும் தக்கவைப்பதற்கும் பதவிகளைக் காப்பாற்றுவதற்கும் மட்டுமல்ல மேலும் மேலும் அவர்களிடம் பணம் கறப்பதற்கும் அதைப் பெருக்குவதையுமே நோக்கமாக கொண்டுள்ளனர். இதற்காகவே இதுகால வரையான தமிழ் பேசும் மனிதர்களின் சமூக அரசியல் சுழல்கள் அதிகமாகப் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது. இன்றும் அவ்வாறே நடைபெற்று வருகின்றன. இதற்காக அண்மைக் காலங்கள்வரை அதிகம் பயன்படுத்தப்பட்ட சொற்கள் போராட்டம், வீரம், துணிவு, வெற்றி மற்றும் துரோகி….என்பன போன்று பல. இன்று துரோகி என்பது பரவலாகவும் மற்றும் சரணாகதி, சரணடைதல், சமாதானம் போன்ற சொற்களே அதிகமாக பயன்படுத்தப்படுகின்றன. ஆகவே துரோக அரசியல், சரணாகதி அரசியல், சரணடையும் அரசியல், சமாதான அரசியல் என்பவற்றின் பண்புகள் மற்றும் அதன் சாதக பாதக அம்சங்கள் தொடர்பாக நாம் புரிந்துகொள்ள வேண்டிய அவசியம் உள்ளது. அப்பொழுதுதான் நாம் அவற்றை விளங்கிக்கொண்டு முன்நோக்கி செயற்பட முடியும். மேலும்; இதுகாலவரை நாம் எவ்வாறன அரசியலை முன்னெடுத்தோம் என்றும் இனி எவ்வாறன அரசியலை முன்னெடுக்காலாம் எனவும் ஆராயவும் சிந்திக்கவும் முடியும்.

இன்று விடுதலைப்புலிகள் ஆகக் குறைந்தது இலங்கையிலாவது ஒரு அமைப்பாக சக்திவாய்ந்தவர்களாக இல்லை. அவர்களது இருப்பு இல்லை என்பது ஏற்றுக்கொள்வதற்கு கடினமாக இருந்தபோதும், உண்மையான யதார்த்த நிலையை ஏற்றுக்கொள்வதே முன்நோக்கிச் செல்வதற்கு வழிவகுக்கும். ஆகவே தொடர்ந்தும் புலிகளது தலைமையையும் அவர்களது கடந்தகால செயற்பாடுகளையும் விமர்சிப்பது என்பது பயனற்றது. ஆனால் புலம் பெயர் சுழலில் வாழுகின்ற புலிகளின் தலைமைகள் பலர் இன்றும் செயற்படுகின்றனர். புலிகளின் தலைவர் பிரபாரகன் இல்லாதபோது இவர்களுக்கு இடையிலான பிளவுகள் மற்றும் முரண்பாடுகள் ஏற்படுவதுடன்; தமக்குள் சண்டை பிடிப்பார்கள் என்பதும் அனைவரும் எதிர்பார்த்த ஒன்று. ஆகவே இவ்வாறு இவர்கள் தமக்குள் பதவி அதிகாரம் மற்றும் முக்கியமாக பணத்திற்காக இழுபறிப்படுவதும் சண்டைபிடித்து ஒருவரை ஒருவர் காட்டிக் கொடுப்பதும் ஒன்றும் ஆச்சரியமான விடயமல்ல. ஏனனில் இவர்களின் அடிப்படை அரசியல் தமிழ் பேசும் மனிதர்களின் தேசிய விடுதலைக்கான அரசியலை பெயரளவிலும் பிரச்சாரளவிலும் முதன்மையானதான கொண்டிருந்தார்கள். இவ்வாறன அரசியலைப்; பயன்படுத்தி தமிழ் பேசும் மனிதர்களிடம் பெருமளவான பணத்தை வசூலித்து பின் அவர்கள் மீதே அதிகாரத்தை பிரயோகித்தும் அடக்கியும் வந்தமையே புலித்தலைமையின் கடந்தகால அரசியல் வரலாறு. இன்று இவ்வாறு தமக்குள் பிளவுபட்டிருக்கும் புலிகள் குறிப்பாக புலம் பெயர் புலித் தலைமைகள் ஒவ்வொரும் ஒவ்வொரு பாதைகளில் அதாவது எதிர்எதிர் பாதைகளில் தமது குறுகிய நலன்களுக்காகவும் நோக்கங்களுக்காக தொடர்ந்தும் செயற்படுகின்றனர். ஆகவே புலித் தலைமையின் கடந்தகால ;செயற்பாடுகளை விமர்சனக் கண்ணோடு நோக்குவதன் மூலம் அவர்களின் ஆரம்ப காலத்திலிருந்து முள்ளிவாய்க்கால் வரையான செயற்பாடுகளிலிருந்து நாம் பாடங்கள் கற்பது பயனுள்ளதாகும். அதேவேளை புலம் பெயர் புலிகளின் தலைமைகளின் செயற்பாடுகள் தொடர்பாக தொடர்;ச்சியான கடுமையான விமர்சனங்களை முன்வைப்பதும் முக்கியமானதாகும். ஏனனில் ஏற்கனவே பலவழிகளில் நசிந்துபோயிருக்கும் தமிழ் பேசும் மனிதர்களை தமது குறுகிய நலன்களுக்காக இவர்கள் தொடர்ந்தும் பயன்படுத்தாமலிருப்பதற்கு இவ்வாறான ஆரோக்கியமான விமர்சனங்கள் உதவும். மேலும் கடந்தகால வரலாற்றை பக்கச் சார்பற்றவகையில்; கற்பதே, நாம் மேற்கொண்டு ஆரோக்கியமான சிந்தனைகள் செயற்பாடுகள் மூலம் முன்நோக்கிச் செல்வதற்கு உதவும்;.

தமிழ் தேசிய விடுதலைப் போராட்டம் உருவாக்கிய “துரோக அரசியல்” என்பது தொடர்பான நாம் தெளிவான ஒரு பார்வையைக் கொண்டிருக்கவேண்டும். ஆயுதப்போராட்டக் காலங்களில் குறிப்பாக புலிகளின் தனிச்சையான ஆதிக்கமிருந்தபோது இச் சொல்லும் அதனடிப்படையிலான செயற்பாடும் மிகப் பிரபல்யமாகவும் இருந்தது. இதற்கு முன்பு பாராளுமன்ற அரசியலிலும் இச் சொல் பயன்படுத்தப்பட்டபோதும் ஆயுதப்போராட்டத்தின்போதுதான் “துரோக அரசியல் செய்பவர்கள்” என்பவர்கள் கொலைசெய்யப்பட்டு அழிக்கப்படுமளவிற்கு வளர்ந்து ஒரு அரசியல் செயற்பாடாக கட்டமைக்கப்ட்டது. தனி நபர் நலன்களுக்காக, தமது பதவிகளைக் காப்பதற்காக, தனிப்பட்ட குரோதங்களுக்காக, கருத்துமுரண்பாடுகளுக்காக என பல உள்மனக்; காரணங்களுக்காக அரசியல் என்ற முகமுடி அணிந்து அரசியல் காரணங்கள் பல கூறி துரோகி என்ற பட்டமளித்து பல மனித உயிர்களை ஒவ்வொரும் இயக்கங்களும் கொலை செய்தன.. இதன் தாக்கத்தால் பயத்தால் பல மனிதர்கள் தாம் துரோகி பட்டம் பெறக்கூடாது என்பதற்காகவே ஆதரவாளராக செயற்பட்டனர் அல்லது நடப்பவற்றைப் பார்த்துக்கொண்டு மௌனிகளாக இருந்தனர். இவ்வாறுதான்; தமிழ் பேசும் சமூகத்தில் “துரோகி” என கட்டமைக்கப்பட்ட சொல்லினால் ஏற்பட்ட மிகமோசமான எதிர்விளைவுகள் ஆரம்பமாகின. அதாவது போராட்டத்தின் ஆரம்ப காலத்தில் போராட்ட இயக்கங்களுக்கு சார்பாகவோ ஆதரவாகவோ இல்லாது சிறிலங்காவின் சிங்கள கட்சிகள் சார்ந்து அல்லது இடதுசாரி கட்சிகள் சார்ந்து செயற்படுகின்றவர்களுக்கு இயக்கங்களால் துரோகி என முத்திரை குத்தப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்டது. பின் போராட்டமானது புலிகளின் தலைமையால்;; ஏதேச்சதிகாரத்துடன் முன்னெடுக்கப்பட்டபோது புலிகளுக்கு எதிரானவர்கள் அதாவது புலிகளைப் போலவே தமிழ் தேசிய விடுதலைக்காகப் போராடியதாக கூறிய பிற தமிழ் இயக்கங்கள்; உட்பட அனைவரும் “துரோகி” என முத்திரை குத்தப்பட்டு கொத்துக்கொத்தாக சுடப்பட்டும் எரிக்கப்பட்டும் குண்டுகள் வைத்தும் அழிக்கப்பட்டனர். அதாவது தமிழ் பேசும் மனிதர்களின் போராட்டத்திற்கு ஆதரவாக தமது புரிந்துணர்வினடிப்படையில் பல்வேறு தளங்களில் வழிகளில் முனைப்புடன் அர்ப்பணிப்புடனும் ஈடுபாட்டுடன் செயற்பட்ட பலர் புலிகளின் அரசியலை ஏற்கவில்லை அல்லது உடன்படவில்லை என்ற ஒரு காரணத்திற்காகவே “துரோகி”யாக முத்திரை குத்தப்பட்டு கொலை செய்யப்பட்டனர். இவர்களுக்கே இந்த நிலைமை எனின் புலிகளை விமர்சித்தவர்களது நிலை தொடர்பாக நாம் புரிந்துகொள்ளலாம். இதன் விளைவாக, “துரோக அரசியல்” செய்பவர்களுக்கு எதிராக வழங்கப்பட்ட மரண தண்டனை என்பது தமிழ் பேசும் மனிதர்களின் சமூகத்திலிருந்த கொஞ்சநஞ்ச ஐனநாயக விழுமியங்களையும் இறுதியாக குழித்தோண்டி புதைத்தது. அதாவது புலிகளின் அரசியலுக்கு மாற்றான அனைத்து அரசியல் செயற்பாடுகளுக்கும் தடைவிதிக்கப்பட்டது அல்லது மட்டுப்படுத்தப்பட்டது அல்லது புலிகளின் தலைமையின் கீழ் கொண்டுவரப்பட்டது. பிற ;இயக்கங்களும் ஒன்றும் சளைத்தவர்கள் அல்ல. குறிப்பாக இந்திய இராணுவம் இருந்த காலத்தில் இவர்களது அதிகார அடாவடித்தனம்; புலிகளின் சதாரண அங்கத்தவர்கள் ஆதரவாளர்கள் மற்றும் பொது மனிதர்களுக்கு எதிராகவும் மிகவும் மோசமான முறையில் நடாத்தப்பட்டது. இதனால் அடக்கப்பட்ட மனிதர்களின் விடுதலைக்காக நடைபெறவேண்டிய ஆரோக்கியமான போராட்டத்தில், கனவு கண்ட புதிய சமுதாயத்தில் இருக்கவேண்டிய சகல ஐனநாயக விழுமியங்களும் பன்முகத் தன்மைகளும் அனைத்து இயக்கங்கள் அரசியல் கட்சிகள் என்பவற்றால் இல்லாது செய்யப்பட்டது. இதற்காக பொறுப்பு ஏற்கவேண்டியது சமூகப் பிரக்ஞை கொண்டு ஒவ்வொருவரதும் தார்மிக கடமையாகும்.

புலிகளின் ஆதிக்கம் இல்லாது போனதற்குப் பின்பான இன்றைய சுழலில் துரோகி என்றால் என்ன அது யார் என்பதற்கான வரைவிலக்கணம் விளக்கம் அளிக்க முடியாதளவு சிக்கலாக்கியுள்ளது. அதாவது புலிகளின் அங்கத்தவர்களுக்கு எதிராகவே இன்று இது அதிகம் பயன்படுத்தப்படுகின்றது. இதன் விளைவாக இன்று புலிகள் இயக்க அங்கத்தவர்கள் தமக்குள்ளையே ஒருவரை ஒருவர் மாறி மாறி “துரோகி” என அழைக்குமளவிற்கு “துரோகி” என்ற சொல் மிகவும் மலினப்படுத்தப்பட்டுவிட்டது. இதற்கு தளத்திலும் புலத்திலும் இருந்த விடுதலைப் புலிகளின் தலைவர்களின் செயற்பாடே காரணமாக இருக்கின்றது. இதற்கு போராட்ட ஆரம்ப காலத்திலிருந்து மாத்தையா வரை தொடர்ந்து பின் அண்மைக் கால உதாரணமான கருணா மற்றும் பிள்ளையான் தொடங்கி இன்றைய கே.பி மற்றும் நெடியவன் வரை இது பரந்து இருக்கின்றது எனக் கூறினால் மிகையல்ல. புலிகளின் அரசியல் பார்வையில் பிரபாகரனின் இறுதி முடிவு கூட “துரோக அரசியல்” எனவே கருதப்படவேண்டியுள்ளது. ஏனனில் தன்னுயிரைக் காப்பாற்ற சரணடைய முயன்றுள்ளார். ஆல்லது சயனைட் அருந்தாது தப்பிக்க முனைந்துள்ளார். ஆனால் என்ன நடந்தது என்பது அவருக்கும் அவரைச் சுற்றியிருந்தவர்களுக்கு மட்டுமே வெளிச்சம். ஆனால் புலிகளால் கட்டமைக்கப்பட்ட பிரகாரனின் விம்பம் இறுதிநேரத்தில் உடைபட்டது என்பது மட்டும் உண்மையானது என்பதை இன்று பலர் ஏற்றுக்கொள்கின்றனர். இவ்வாறான “அரசியல் துரோகி” களுக்கு தண்டனை என்ன?

பொது மனிதர்களுக்கு எதிராகவும் ஐனநாயக மறுப்பு கொண்ட அரசியல் செயற்பாடுகளிலும் ஒருவர் ஈடுபடுவாரானால் அவருக்கான அதிகபட்ச தண்டனை என்பது நிச்சயமாக மரண தண்டனையாக இருக்கக் கூடாது.. மரண தண்டனை என்பது அகராதியிலிருந்தே எடுக்கப்படவேண்டிய ஒன்று என்பது எனது உறுதியாக நிலைப்பாடு ஆகும். ஏனனில் எனது செயற்பாடு பேச்சு எழுத்து என்பவற்கு மாறான அல்லது எதிரான ஒரு மனிதரின் செயற்பாட்டுக்காக பேச்சுக்காக எழுத்திற்காக அவரது உயிரை எடுப்பது என்பது ஐனநாயக விரோதம் மட்டுமல்ல காட்டுமிராண்டித்தனமான அநாகரிகமான செயற்பாடாகும். ஒருவருக்கான தண்டனை என்பது அவரை ஆரோக்கியமான வழிகளில் நேர்மறை மனிதப் பண்புகளுடன் மாற்றுவதற்கான வழிவகையாக இருக்கவேண்டுமேயொழிய அவரையே அழிப்பதாக இருக்கக்கூடாது. ஏனனில் காலோட்டத்தில் ஒருவர் மீது குத்தப்படும் எதிர்மறை முத்திரை என்பது நேர்மறை முத்திரையாக மாறுவதற்கான சந்தர்ப்பமும் வாழ்வில் ஒவ்வொரு கணமும் ஒவ்வொருவருக்கும் இருக்கின்றது. இது ஆரோக்கியமான முன்னேற்றமான மாற்றமா என்பது சிந்தனைக்கு உரியதாக இருக்கலாம். ஏனனில் ஒருவர் தனது எல்கை;குட்பட்ட அறிவுக்கும் அனுபவத்திற்கும் ஏற்பவே தான் எதிர்நோக்கும் சூழலைப் புரிந்துகொள்வதுடன் அதனடிப்படையில் செயற்;படுவார்.

உதாரணமாக இன்று தமிழ் தேசிய அரசியலில் இருக்கின்ற முக்கியமான தலைவர்கள் சிலர் அல்லது பலர் முன்பு பல்வேறு இயக்கங்களில் போராளிகளாக இருந்தவர்கள். அந்த இயக்கங்கள் புலிகளினால் ஒரு காலத்தில் தடைசெய்யப்பட்டபேர்து இவர்களுக்கு துரோகி பட்டம் வழங்கப்பட்டது. காலமாற்றத்தின் பின் இவர்கள் புலிகளுடன், அவர்களின் ஆயுதப்போராட்டத்தின் மீது; நம்பிக்கை வைத்து, அல்லது வேறு வழி ஒன்றுமில்லை என அதில் இணைந்து, அல்லது அவர்களது அரசியலுக்குள் சரணாகதி அடைந்து, அல்லது மாமனிதர் மற்றும் நாட்டுப்பற்றாளர் பட்டங்கள் என பல காரணங்களுக்காக புலிகளின் அரசியலை பின்நாட்களில் முன்னெடுத்தனர் அல்லது முன்னெடுக்கின்றனர். இவ்வாறு புலிகளால்; துரோகி என முத்திரை குத்தப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்ட பலர் பிற்காலங்களில் மாமனிதர் நாட்டுப்பற்றாளர் என புலிகளின் தலைடுமையால் அலங்கரிக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டதும் நடைபெற்றதுண்டு. அதேவேளை மிகச் சிறந்த போரளிகள் என் புலிகளால் பொது மனிதர்களால் போற்றப்பட்ட பலர்; துரோகிகள் என குற்றம் சுமத்தப்பட்டு மரணதண்டனை பெற்றவர்களும் உண்டு. ஆகவே காலம் ஒருவரை பலவாறு மாற்றுகின்றது. புலித்தலைமையை அன்று போற்றிய அரசியல்வாதிகள்; பலர், புலிகளின் ஆதிக்கம் இல்லாத இன்றைய காலத்தில் இந்தியா மற்றும் இலங்கை அரசாங்கங்களிடம் மீண்டும் அரசியல் சரணாகதி அடைந்துள்ளனர் என்பது கவனிக்கப்படவேண்டிய ஒரு விடயம்.

ஆகவே ஒருவரை துரோகி என்பது சர்வதிகாரமாகவும் சமூகத்திலிருக்கின்ற ஐனநாயக பண்புகளை வழிகளையும் முடுவதாகவுமே இருக்கும். ஒவ்வொருவருக்கும் மற்றவர்களது ஐனநாயக உரிமைகளை பறிக்காதவரை மறுக்காதவரை தான் விரும்பும் அரசியலை தனது வழிகளில் செய்வதற்கான தார்மீக உரிமை இருக்கின்றது. இதை ஒவ்வொருவரும் மதிக்கவேண்டும். இங்கு துரோகம் எனப்படுவது சார்பு நிலையானது மட்டுமே. இதில் யார் சரி பிழை என்பதை எதிர்கால வரலாறு மட்டுமே தீர்மானிக்கும். ஆகவே ஒருவரது அரசியலை துரோக அரசியல் என முத்திரை குத்துவதைக் கைவிட்டு அவரவர் பாதையில் அடக்கப்பட்டிருக்கும் மனிதர்களின் விடுதலைக்கான தமது பங்களிப்பு, பொறுப்பு என்ன என்பதை உணர்ந்து செயற்படுவதே சரியான நிலைப்பாடாக இருக்கும். மேலும் மனித நலன்களுக்கா செயற்பட விரும்புகின்றவர்கள் புரிந்துகொள்ளவேண்டியதும் அறிந்துகொள்ள வேண்டியதும் என்னவெனில் யார் அடக்கப்பட்ட மனிதார்களின் சார்பாக, அவர்களின் விடுதலைக்காக, சமூக மாற்றத்திற்கா உழைக்கின்றார்கள் என்பதே. இதைப் புரிந்துகொள்ளாதவரை, “துரோக, சரணகதி, சரணடைதல், சமாதான” அரசியல் என்ற பல முத்திரைகளை பிறர் மீது குத்தி குறுகிய பார்வையையும் செயற்பாட்டையுமே நாம் கொண்டிருக்க முடியும். ஒருவர் தனது சிந்தனை மற்றும் தான் செய்யும் செயற்பாடு என்பவை அடக்கப்பட்ட மனிதர்கள் அரசியல் சமூக அபிலாசைகளை உரிமைகளை அடிப்படையாகக் கொண்டது என்ற பிரக்ஞை இருக்கும் பொழுது மட்டுமே அவர் அம் மனிதர்கள் சார்ந்து தனது அரசியலை தான் விரும்பிய வழிகளில் முன்னெடுக்கின்றார் எனலாம். இவ்வாறன பிரக்ஞையில்லாதவர் தனது அற்ப சொற்க நல்ன்களுக்காக சரணாகதி அரசியலையே முன்னெடுப்பார். இருப்பினும் என்ன அரசியலை முன்னெடுப்பது என்பது ஒருவரது தெரிவு. ஆதைப் பற்றி நாம் நமது அரசியலின் அடிப்படையில் விமர்சனங்களை முன்வைப்பதற்கான உரிமை மட்டுமே நமக்குள்ளது.; நமக்கு எதிரான அரசியல் செய்கின்றார் என்பதற்காக அவர்களது உரிமைகளை மறுப்பதோ அடக்குவதோ அழிப்பதோ அல்லது மரண தண்டணை விதிப்பதோ நமத உரிமையல்ல. இது நாம் கனவு காணும் சமூகத்திற்கு எதிரான, ஐனநாயகத்திற்கு எதிரான, தனிமனித உரிமைக்கு எதிரான செயற்பாடாகவே இருக்கும். ஆகவே “துரோக அரசியல்” என்ற சொல்லுக்கும் நாம் விடை கொடுக்க வேண்டியவர்களாக உள்ளோம்.

சரணாகதி அரசியல் என்பது தமது சொந்தப் புத்தியிலும் பலத்தில் நிற்காது, தாம் அல்லது அடக்கப்பட்ட மனிதர்கள் முகம் கொடுக்கும் பிரச்சனைகளுக்கும்; அவற்றுக்குத் தேவையான முடிவுகள் தீர்வுகள் என்பன தொடர்பாக அரசாங்கத்திடம் அல்லது அதிகாரத்தில் இருப்பவர்களிடம் முழுமையாக விட்டுவிடுவதுடன் தம்மையும் அவர்களிடம் முழுமையாக அர்ப்பணித்து அவர்கள் கூறுவதை எந்த மறுப்பும் விமர்சனமும் இல்லாது ஏற்பதும் என்பதாகக் கூறலாம். உதாரணமாக இலங்கையில் உள்ள தமிழ் அரசியல் கட்சிகளும் அதனது தலைவர்களும் தமது அதிகாரங்களிலும் பதவிகளிலும் கட்சியை வளர்ப்பதில் மட்டுமே குறியாக இருக்கின்றனர். ஏனனில் இவர்களது அரசியல் செயற்பாடுகள் தமிழ் பேசும் மனிதர்களது அரசியல் அபிலாசைகளையும் கோரிக்கைகளையும் உறுதியாக இலங்கை இந்திய மற்றும் சர்வதேச அரசாங்கங்களிடம் முன்வைப்பதாகவோ அதற்கான செயற்பாடுகளை முன்னெடுப்பாதாகவோ தெரியவில்லை. ஏனனில் யார் ஆட்சியிலில் அல்லது அதிகாரத்தில் இருக்கின்றார்களோ அவர்களிடம் ஒவ்வொருமுறையும் அவர்கள் முன்வைக்கும் முடிவுகளுக்கும் தீர்வுகளுக்கும் அற்ப சலுகைகளுக்கும் தாம் சரணாகதி அடைவதுதான் இவர்களது பிரதான அரசியலாக என்றும் இருந்திருக்கின்றது. இதன் மூலம் தமிழ் பேசும் மனிதர்களது அரசியலை ஒவ்வொருமுறையும்; குழிதோண்டிப் புதைப்பதாகவே இவர்கள் வரலாறு இருக்கின்றது. இதில் இரண்டுவிதமான போக்குகள் உள்ளன. ஒன்று இலங்கையில் எதிர்கட்சியாக இருந்து கொண்டு, இந்திய ஆளும் அரசாங்கத்திடம் சரணாகதி அடைவது. உதாரணமாக அன்றிலிருந்து இன்றுவரையான தமிழர் விடுதலைக் கூட்டணியிலிருந்து இன்றைய தமிழ் தேசிய கூட்டணி வரையிலான கட்சிகளின் அரசியலும்;; அதன் தலைமைகளினதும் அரசியல் போக்கும் மரபும் இவ்வறானதாகவே உள்ளது. இரண்டாவது போக்கு இலங்கையில் ஆளும் அரசாங்கத்திடம் சரணாகதி அடைவது. உதராணமாக தமிழ் தேசிய கூட்டணிக்கு எதிரானவர்களது கட்சிகளின் கூட்டணி அரசியல் இந்த வகைக்குள் அடங்கும். இந்த வகைக்குள் முன்னாள் புலிகளின் தளபதிகள் இருப்பதுதான் இன்றைய முரண்நகை. இந்த முன்னால் புலிகளின் தளபதிகள், இன்று பேசும் அரசியலை கேட்டால் இவர்களா புலிகளின் அரசியலை முன்னெடுத்தவர்கள் என ஆச்சரியப்படவைக்கின்றது. அந்தளவிற்கு அரசாங்கத்திடம் சரணாகதி அடைந்துள்ளார்கள். இவர்களது பழைய மொழியில் இதுதான் “துரோக அரசியல்”. இவ்வாறு இவர்களது அரசியல் நிலைப்பாட்டில் தலைகீழ் மாற்றம் ஏற்படுவதற்கு காரணம் புலிகள் இயக்கத்தில் இருந்த அரசியல் இன்மையா அல்லது ஒவ்வொரு தனிபர்களிடம் இருந்த அவர்களது சொந்த அரசியல் அறிவின் பற்றாக்குறையும் சாதிய பிரதேச வர்க்க நிலைப்பாடுமா என்பது நம் சிந்தனைக்குரிய விடயம்.

ஆனால் இந்திய இலங்கை அரசாங்கங்கள் தமக்குள் முரண்பாடுகள் இருந்தபோதும் தமக்கிடையில் புரிந்துணர்வுடன் செயற்பட்டு ஒரு ஆழமான உறவை;; வைத்துள்ளார்கள். இதனால்தான் இலங்கை இந்திய ஆட்சியாளர்கள் தமது தேவைகளுக்கும் நல்ன்களுக்கும் ஏற்ப பயன்படுத்தும் அரசியலாக தமிழ் பேசும் மனிதர்களின் அரசியல் என்பது சுதந்திரத்திற்கு முன்வு இருந்து இப்டூ;பாழுது வரை இருக்கின்றது. இது தமிழ் பேசும் மனிதர்களைப் பொருத்தவரை மிகவும் துரதிர்ஸ்டமானது. மறுபுறம் இவர்களது மொழியில் பார்த்தால், சமூக மாற்றத்திற்காக செயற்படுகின்றவர்களின் அரசியலின் அடிப்படையில், அடக்கப்பட்ட மனிதர்களின் அரசியலின் அடிப்படையில், புலிகள் உட்பட தமிழ் இயக்கங்கள் மற்றும் தேசிய அரசியல் கட்சிகள் என ஒவ்வொருவரும் முன்னெடுத்த முன்னெடுக்கின்ற அரசியல் என்பது அடக்கப்பட்ட பொது மனிதர்களுக்கு எதிரான “துரோக, சரணாகதி அரசியல்” என்றால் மிகையல்ல. இதற்காக இவர்களுக்கு துரோகி பட்டம் அளித்து மரண தண்டடை அளிப்பதல்ல அடக்கப்பட்ட மனிதர்களின் அரசியலை முன்னெடுப்பவர்களின் பொறுப்பு. மாறாக இவர்களது பொறுப்பான பணியானது, அடக்கப்பட்ட மனிதர்களிடம் இவ்வாறான சுய நல பிழைப்பு அரசியல்வாதிகளை அம்பலப்படுத்துவதாகவே இருக்கவேண்டும். அடக்கப்பட்ட பொதுமனிதர்கள் இவ்வாறான அரசியல்வாதிகளைக் புரிந்துகொண்டு புறக்கணிக்குமளவிற்கு பிரக்ஞை கொண்ட அரசியல் செயற்பாட்டாளர்கள் செயற்படவேண்டும்.

இலங்கை இந்திய அரசாங்கங்களிடம் சரணாகதி அடைந்ததைவிட யுத்த காலத்தில் அதாவது புலிகள் அதிகாரத்திலிருந்தபோது மட்டும் புலிகளின் தலைமையிடம் சரணாகதி அடைந்தவர்கள் தான் மேற்குறிப்பிட்ட தமிழ் தேசிய அரசியல்வாதிகள். இவர்கள் மட்டுமல்ல இவர்களைப்போல மனித உரிமை, ஐனநாயகம் கதைத்த மேலும் பலர் இவ்வாறு புலிகளிடம் சரணாகதியடைந்தவர்களாக இருந்திருக்கின்றனர். இதற்கு காரணம் அன்று புலிகள் தொடர்பாக உருவாக்கப்பட்ட அதீத நம்பிக்கை ஐதீகங்கள் மயக்கம் மற்றும் பிம்பங்கள் என்பனவாகும். இவ்வாறு கட்டமைக்கப்பட்ட கருத்தாதிக்கத்தால் அல்லது அவர்களது வெற்றிகரமான தாக்குதல்களின் விளைவாக அதில் மயக்கமடைந்து அவர்களது பிற்போக்கான அரசியல் செயற்பாடுகளையும் ஐனநாயக வீரோத போக்குகளையும் மறந்து அவர்களை ஏற்றுக்கொண்ட பலர் இன்றுவரை மீண்டும் விழித்து எழவில்லை என்பது கவலைக்கிடமானது. இதில் பல கலாநிதிகள் பேராசிரியர்கள் மற்றும் கல்விமான்களும் அடக்கம் என்பதும் இன்றுவரை இவ்வாறன புலம் பெயர் புலித்தலைமைகளுக்காக குரல் கொடுப்பதும் செயற்படுவதும் தமிழ் தேசிய அரசியலில் ஒரு துர்ப்பாக்கியமான நிகழ்வாகும். இலங்கை வாழ் தமிழ் பேசும் மனிதர்கள் தமது; அரசியல் உரிமைகளைப் வெறவேண்டுமாயின் இவ்வாறான சரணாகதி அரசியலுக்கு முதலில் முற்றுபுள்ளி வைக்கவேண்டியது அவசரமான அவசியமான செயற்படாகும். அடக்கப்பட்ட மனிதர்களின் விடுதலைக்கான, அவர்களின் நல்வாழ்வுக்கா, சமூக மாற்றத்திற்கான அரசியலை, தமக்கிருக்கும் ஜனநாயக வழிகளில் உறுதியுடனும் வெளிப்படையாகவும் முன்வைத்து பல்வேறு வழிகளில் செயற்படுவதனுடாக தமது நோக்கத்தை பிரக்ஞையுள்ள அரசியற் செயற்பாட்டாளர்கள் அடையலாம். இதுமட்டுமல்ல இவ்வாறான செயற்பாடுகள் மூலம் தமது ஐனநாயக எல்லைகளை மேலும் பரந்தளவில் விரிவாக்கிக்; கொண்டு முன்னே செல்லலாம். இன்றைய சுழலில் இவ்வாறன செயற்பாடுகளை இலங்கை இந்தியாவில் மட்டுமல்ல

தொடரும்

நம்பிக்கையுடன்
நட்புடன்
மீராபாரதி



மேலும் இங்கே தொடர்க...

இன்று 'லைலத்துல்கத்ர்' : ஆயிரம் மாதங்களைவிட சிறந்த ஓர் இரவு!

முஸ்லிம்களின் புனித தினங்களில் ஒன்றாகக் கருதப்படும் 'லைலத்துல்கத்ர்' இரவு இன்று அனுஷ்டிக்கப்படுகிறது.

றமழான் மாதம் ஆரம்பித்து இன்று 26 தினங்களாகின்றன. இன்று 27ஆம் இரவாகும். றமழான் மாதத்தின் 27ஆம் இரவு, ஆயிரம் மாதங்களை விடவும் சிறந்த ஓர் உயர்வான இரவாக முஸ்லிம்கள் இதனைக் கருதுகின்றனர். இன்று இரவு முழுவதும் விழித்திருந்து நற்காரியங்களில் (அமல்களில்) ஈடுபடுவர்.

இலங்கையிலுள்ள அனைத்து முஸ்லிம் பள்ளிகளிலும் மற்றும் அனைத்து முஸ்லிம் கிராமங்களிலும் இன்று பின்னேரம் முதல் நாளை அதிகாலை வரை விசேட சமய நிகழ்சச்சிகள் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளன.

இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் முஸ்லிம் சேவை விசேட நிகழ்ச்சிகளை இன்றிரவு நடத்துகிறது. முஸ்லிம்கள் பொதுவாக பாவமன்னிப்புத் தேடுவதில் இன்றிரவைச் செலவிடுவர்.

மரணத்தின் பின் ஒரு நிரந்தர வாழ்க்கை இருப்பதாக முஸ்லிம்கள் திடமாக நம்புகின்றனர். அந்த நிரந்தர வாழ்வில் சுவர்க்கம், நரகம் என இரண்டு ஏற்பாடுகள் இறைவனால் வழங்கப்பட்டுள்ளதாகக் கருதுகின்றனர்.

அதில் உலகில் நன்மை புரிந்து இறைவனை விசுவாசித்தவர்களுக்கு(இறை விசுவாசிகளுக்கு) சுவர்க்கமும் இறைவனை மறந்து பாவச்செயல்களில் ஈடுபட்டவர்களுக்கு (பாவிகளுக்கு) நரகமும் கிடைக்கும் என்பதே முஸ்லிம்களின் பிரதான நம்பிக்கை, கோட்பாடு, சித்தாந்தம்.

இந்த அடிப்படையில் நரக விடுதலை கிடைக்க இன்றைய இரவை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ளவேண்டும்.

மனித குலம் உலகில் தோன்றியதன் நோக்கம், மண்ணுலக வாழ்வையடுத்து வரும் மரணத்தின் பின்னர் சுவர்க்கம் சென்றுவிட வேண்டும் என்பதில் முஸ்லிம்கள் அதிக நாட்டம் கொண்டுள்ளனர்.

அதனடிப்படையில் நற்காரியங்கள் செய்யவேண்டும் என்பதையும் இறைவனை மட்டுமே வழிபடவேண்டும் என்பதையும் முஸ்லிம்கள் தமது பிரதான கடமைகளாகக் கருதுகின்றனர்.

அந்த வகையில், இன்றைய இரவில் முஸ்லிம்கள் நித்திரை விழித்து, நற்காரியங்கள் புரிந்து இறைவனிடம் (அல்லாஹ்விடம்) பாவமன்னிப்புக் கோரி, நரக விடுதலைக்காக பிரார்த்திப்பார்கள்.

இறைவனின் அன்பும் பாவமன்னிப்பும் பெற்று, அனைத்து முஸ்லிம் பெருமக்களுக்கும், விடுதலையடையும் நற்பாக்கியம் கிட்டவேண்டுமென வாழ்த்துகிறோம்.
மேலும் இங்கே தொடர்க...

ஜனாதிபதியின் வழியிற் சென்றால் மட்டுமே பொருளாதாரத்தில் துரித வளர்ச்சி காணமுடியும்: பூஜித

நாட்டின் தலைவரான ஜனாதிபதியின் வழியிற் சென்றால் மட்டுமே நாம் ஏனைய ஆசிய நாடுகளைப் போன்று பொருளாதாரத்தில் துரித வளர்ச்சி காணமுடியும் என மத்திய பிராந்திய பிரதி பொலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுந்தர தெரிவித்தார்.

கண்டி அங்கும்புர பொலிஸ் பிரிவில் தற்காலிக பொலிஸ் நிலையம் ஒன்றை நேற்று திறந்து வைத்த பின் உரை நிகழ்த்தும் போதே அவர் இதனை தெரிவித்தார். இங்கு மேலும் உரையாற்றிய அவர்,

தென்கிழக்காசிய நாடுகள் சில துரித அபிவிருத்தி அடைய அந்நாட்டுத் தலைவர்கள் காரணமாயிருந்தனர். இதே விதமாக எமது நாடும் பொருளாதாரத் துறையில் துரித வளர்ச்சி காணவேண்டுமாயின் நாம் அனைவரும் ஜனாதிபதியின் வழியில் செல்லவேண்டும்.

நாட்டின் தலைவர் செல்லும் வழியில் பொலிஸ் அதிகாரிகள் அனைவரும் செல்வது அத்தியாவசியமாகும்.

உள்நாட்டு யுத்தத்தில் வெற்றி கண்ட போதும் பொருளாதாரத்துறையில் இன்னும் வெற்றி காண வில்லை. பொருளாதார அபிவிருத்தியை நாம் துரிதமாக அடைய வேண்டியுள்ளது.

எமக்கு இன்று திறமையான தலைமைத் துவமொன்று உண்டு. சிங்கப்பூர், ஜப்பான், கொரியா போன்ற நாடுகள் துரித பொருளாதார அபிவிருத்தியை அடைய காரணமாக இருந்தது அந்நாட்டுத் தலைவர்களின் விடா முயற்சி அயராத உழைப்பு என்பனவாகும்.

எமக்கும் தற்போது பலமான தலைமைத்துவமொன்று உள்ளது. ஆகவே எமது பொருளாதாரத்தை துரிதமாக முன்னேற்றுவதற்கு தலைவர் வழியிற் செல்லவேண்டும். ஆந்த அடிப்படையில் பொலீஸ் அதிகாரிளும் நாட்டின் தலைவர் காட்டும் வழியில் செல்வது அவசியமாகுமெனவும் அவர் கூறினார்.
மேலும் இங்கே தொடர்க...

தேசிய சிறைக்கைதிகள் வாரம் இன்று ஆரம்பம்

தேசிய சிறைக்கைதிகள் வாரம் இன்று காலை மட்டக்களப்பில் ஆரம்பமாகியது. சிறைக்கைதிகள் கொடிதினத்தையொட்டிய முதலாவது கொடி மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் கே.விமலநாதனுக்கு மாவட்ட செயலகத்தில் வைத்து சிரைச்சாலை அத்தியட்சகர் கித்சிறி பண்டாரவினால் அணிவிக்கப்பட்டது.

சிறைச்சாலையில் இடம்பெற்ற வைபவத்தில் கண்பார்வை குறைந்த கைதிகளுக்கு மூக்குகண்ணாடிகள் வழங்கப்பட்டன. லயன்ஸ் கழக அனுசரணையுடன் இந்நிகழ்வு இடம்பெற்றது. சிறைக்கைதிகள் நலன்புரி சங்க தலைவர் மற்றும் சிறைச்சாலை அதிகாரிகள் இவ்வைபவத்தில் பங்கெடுத்தனர்.

தொடர்ந்து 7 நாட்களுக்கு வைபவங்கள் மட்டக்களப்பு சிறைச்சாலையில் இடம்பெறவுள்ளதாக சிறைச்சாலை நலன்புரி அதிகாரி எஸ்.ஸ்ரீனிவாசன் தெரிவித்ததார்
மேலும் இங்கே தொடர்க...

மக்கள் பிரதிநிதிக்கே இந்த நிலை என்றால் சாதாரண மக்களின் நிலை என்ன? சகாயமணி மனைவி

தனது கணவனை கடத்தியவர்கள் யார் எனத் தனக்கு நன்றாகத் தெரியும். எனது கணவன் ஓர் மக்கள் பிரதிநிதி. மக்கள் பிரதிநிதிக்கே இந்த நிலை என்றால் சாதாரண மக்களின் நிலை என்ன? என்று தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் உறுப்பினர் பிரகாசம் சகாயமணியின் மனைவி கேள்வி எழுப்பியுள்ளார்.

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் உறுப்பினரான சகாயமணி கடந்த மாதம் 23ஆம் திகதி கடத்தி செல்லப்பட்டு இன்றுடன் 13 நாட்களாகின்றன.

இந்நிலையில் உறுப்பினர் பிரகாசம் சகாயமணியின் வீட்டிற்கு, கிழக்கு மாகாண முதலமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் இன்று சென்றார்.

இதன் போதே சகாயமணியின் மனைவி சந்திரகாந்தனிடம் இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளார். இங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த சகாயமணியின் மனைவி,

எனது கனவர் கடத்தப்பட்டு இதுவரை எவ்வித முடிவுகளும் கிடைக்கவில்லை. குறிப்பாக மாநகர மேயர் சிவகீதா பிரபாகரன் இது தொடர்பில் எவ்வித நடவடிக்கையினையும் மேற்கொள்ளவில்லை. நான் இன்னும் ஓரிரு நாட்களில் எனது கணவன் வீடு திரும்பவில்லை என்றால் மாநகர சபை மேயருக்கு எதிராக உண்ணாவிரதம் இருந்து எனது பிள்ளைகளுடன் தீக்குளிக்கவும் தயங்கமாட்டேன் என மிகவும் மன வேதனையுடன் தெரிவித்தார்.

இதனையடுத்து சந்திரகாந்தன் சகாயமணியின் குடும்பத்தாருக்கு ஆறுதல் கூறியதுடன் வெகு விரைவில் இது தொடர்பில் தாம் முக்கிய தீர்மானம் ஒன்றை மேற்கொள்ளவுள்தாகவும் குறிப்பிட்டடார்.
மேலும் இங்கே தொடர்க...

ஐ.நாவுக்கான இலங்கைப் பிரதிநிதியாக சவேந்திர சில்வா

ஐக்கிய நாடுகள் சபைக்கான இலங்கையின் பிரதி நிரந்தர வதிவிடப் பிரதிநிதியாக மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா நியமிக்கப்படவுள்ளதாகவும் அவர் எதிர்வரும் 15ஆம் திகதி தனது கடமைகளைப் பொறுப்பேற்கவுள்ளதாகவும் வெளிவிவகார அமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இராணுவத்தின் 58ஆவது படைப்பிரிவுக்குத் தலைமை தாங்கிய சவேந்திர சில்வா விடுதலைப் புலிகளுடனான யுத்தத்தின் போது சிறந்த தலைமைத்துவம் வழங்கியமைக்காக தலைசிறந்த மூன்று விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது
மேலும் இங்கே தொடர்க...

நல்லூர் தேர் திருவிழா நாளை: நேத்திராவில் நேரடி ஒளிபரப்பு




வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர்க் கந்தனின் தேர்த்திருவிழா நாளை 7 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை நடைபெறவுள்ளது.

நல்லூர் கந்தனின் தேர்த்திருவிழா காலை 7 மணிக்கு ஆரம்பமாகும். அலங்காரக் கந்தன் அலங்கரிக்கப் பட்ட தேரில் ஆரோகணித்து பக்தர்க ளுக்கு அருட்காட்சியளிக்கவிருக் கிறார்.

இந்த நிகழ்வுகளை, நேத்திரா ரீ.வி. நாளை காலை 6.15 முதல் நேரடி ஒளிபரப்பு செய்யவுள்ளது.
மேலும் இங்கே தொடர்க...

பொறுப்புடன் முடிவெடுப்போம் அரியநேத்திரன் எம்.பி





“தமிழ்த் தேசிய கூட்டமைப்பானது வடக்கு கிழக்கில் பலம் பொருந்திய கட்சி. தமிழ் மக்கள் நலனில் பொறுப்புடன் செயற்பட வேண்டிய கட்சி என்பதால் அரசியலமைப்பு திருத்தம் தொடர்பாக, விரிவாக ஆராய்ந்து முடிவு எடுப்போம் “தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் எம்.பி. அரியநேத்திரன் தெரிவித்தார்.

முஸ்லிம் காங்கிரஸ் ஆதரிக்கின்றது என்பதற்காக ஆதரிக்கவும் முடியாது, ஐக்கிய தேசியக் கட்சி எதிர்க்கின்றது என்பதற்காக எதிர்க்கவும் முடியாது. இன்று கூடி முடிவெடுப்போம் என அவர் கூறினார்.
மேலும் இங்கே தொடர்க...

இரண்டாம் தவணை விடுமுறையின் பின்னர் நாட்டிலுள்ள அரசாங்க தமிழ், சிங்கள பாடசாலைகள் யாவும் நாளை 07 ஆம் திகதி மீண்டும் திறக்கப்படும்

இரண்டாம் தவணை விடுமுறையின் பின்னர் நாட்டிலுள்ள அரசாங்க தமிழ், சிங்கள பாடசாலைகள் யாவும் நாளை 07 ஆம் திகதி மீண்டும் திறக்கப்படுவதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. எனினும் முஸ்லிம் பாடசாலைகள் இம்மாதம் 13 ஆம் திகதியே ஆரம்பமாகும் எனவும் கல்வி அமைச்சின் செயலாளர் சுனில் எஸ். சிறிசேன அறிவித்துள்ளார்.

இதேவேளை க.பொ.த. (உ/த) பரீட்சை விடைத்தாள் திருத்தும் நிலையங்களாக பயன்படுத்தப்படும் பாடசாலைகள் இரண்டாம் தவணை விடுமுறையின் பின்னர் இம்மாதம் 13 ஆம் திகதியே திறக்கப்படும்.

விடைத்தாள் திருத்தும் பணிகளில் ஈடுபடவுள்ள பிரதான பரீட்சகர்களுக்கான அறிவுறுத்தல் கூட்டம் எதிர்வரும் 10 ஆம் திகதி நடைபெறுமெனவும்
மேலும் இங்கே தொடர்க...

யாழ். அதியுயர் பாதுகாப்பு வலயம் 6 கிராம அதிகாரிகள் பிரிவில் 9ம் திகதி மீள்குடியேற்றம்

யாழ்ப்பாணத்தில் உயர் பாதுகாப்பு வலயங்களை நீக்க இனிவரும் காலங்களில் படைத் தரப்பினர் நடவடிக்கை எடுப்பார்கள். இதன் ஒரு பகுதியாக வடமராட்சியில் 9ம் திகதி இரண்டாம் கட்டமாக ஆறு கிராம அலுவலர்கள் பிரிவுகளின் மக்களின் மீள்குடியமர்வு இடம்பெறும் என யாழ். அரச அதிபர் திருமதி இமெல்டா சுகுமார் கூறினார். உலக அஞ்சல் தினத்தையொட்டி நடைபெற்ற கூட்டத்தில் அரச அதிபர் திருமதி இமெல்டா சுகுமார் மேலும் பேசும்போது,

இருபது வருடங்களாக இடம்பெயர்ந்துள்ள மக்கள் தமது சொந்த இடங்களில் குடியமர்த்தப்படவுள்ளனர். உயர்பாதுகாப்பு வலயமான வலிகாமம் வடக்குப் பகுதிகளில் உள்ள மக்கள் தமது சொந்த மண்ணில் குடியேற வாய்ப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

யாழ் மாவட்டத்தில் உள்ள உயர் பாதுகாப்பு வலயங்களை நீக்குவதற்காக யாழ் தலைமையக படைகளின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த ஹத்துருசிங்க நடவடிக்கை மேற் கொண்டுள்ளார் எனவும் அரச அதிபர் தெரிவித்தார்.
மேலும் இங்கே தொடர்க...

கிளிநொச்சியில் ஆடைத் தொழிற்சாலை: பயிற்சி நிலையம் ஆரம்பம் 1500 யுவதிகளுக்கு தொழில் வாய்ப்பு


கிளிநொச்சி மாவட்டத்தைச் சேர்ந்த 1500 யுவதிகளுக்கு தனியார் துறையில் தொழில் வாய்ப்பை பெற்றுக் கொடுக்க அரசாங்கம் நடடிவக்கை எடுத்துள்ளதாக வட மாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜீ.ஏ. சந்திரசிறி தெரிவித்தார்.

இதற்கமைய ட்ரைஸ்டார் நிறுவனம் கிளிநொச்சியில் தொழிற்சாலை ஒன்றை அமைக்கவுள்ளதுடன் எதிர்வரும் 13ம் திகதி பயிற்சி நிலையம் ஒன்றை ஆரம்பித்து வைக்கவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

தனியார் ஆடைத் தொழிற்சாலையில் தொழில்வாய்ப்பை பெற்றுக் கொடுக்கும் திட்டத்தின் முதற்கட்டமாக 80 யுவதிகளுக்கும் கொழும்பில் மேற்பார்வையாளர்களுக்கான பயிற்சிகள் வழங்கப்படவுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.

சுமார் ஐம்பது மில்லியன் ரூபா செலவில் இந்த திட்டம் முன்னெடுக்கப்பட வுள்ளது. முதற்கட்டமாக தேர்ந்தெடுக்க ப்பட்ட 80 யுவதிகளுக்கு பயிற்சி வழங்கும் ஆரம்ப நிகழ்வு இன்று இரத்மலானை யிலுள்ள ட்ரைஸ்டார் நிறுவனத்தில் இடம்பெறவுள்ளது.

மூன்று மாத காலம் பயிற்சிகள் வழங்கப்படவுள்ளன. உணவு, தங்குமிட வசதிகளுடன் மாதமொன்றுக்கு ஒருவருக்கு தலா 10 ஆயிரம் ரூபா கொடுப்பனவாக வழங்கப்படவுள்ளது என்று ஆளுநர் தெரிவித்தார். பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ விடுத்த வேண்டு கோளுக்கமைய இந்த தொழில் வாய்ப்பை வழங்க மேற்படி நிறுவனம் முன்வந்துள்ளதாக ஆளுநர் சுட்டிக்காட்டினார்.

எதிர்வரும் 13ம் திகதி திங்கட்கிழமை கிளிநொச்சியில் அமைக்கப்படவுள்ள தொழிற்சாலைக்கு அடிக்கல் நடப்படவுள்ள துடன் அங்கு ஆரம்பிக்கப்படவுள்ள பயிற்சி நிலையத்திற்கு 50 தையல் இயந்திரங்களும் வழங்கப்படவுள்ளன.

தொழிற்சாலை அமைக்கப்படும் இடம் தொடர்பாக இரு தரப்பினரும் இன்னும் ஓரிரு தினங்களில் கலந்து ஆலோசித்து இவ்வார இறுதிக்குள் உரிய தீர்வை காணவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். இதேவேளை ஏனையோ ருக்கு கிளிநொச்சியிலேயே பயிற்சிகள் வழங்கப்படவுள்ளது. இவ்வாறு தொழிற் பயிற்சி வழங்குவதன் மூலம் இந்தப் பிரதேச மக்களுக்கும் மேலும் ஊக்குவிப்பாக அமையும் என்றும் தெரிவித்தார்.
மேலும் இங்கே தொடர்க...

அரசியலமைப்பு திருத்தம் 8ம் திகதி சபையில்; பிரதமரால் சமர்ப்பிப்பு; 9 1/2 மணி நேர விவாதம்

15க்கு மேற்பட்ட ஐ.தே.க. எம்.பிக்கள் ஆதரவாக வாக்களிப்பர்



அரசியலமைப்புக்கான 18வது திருத்தயோசனை நாளை மறுதினம் 8ம் திகதி பாராளு மன்றத்தில் சமர்ப்பிக்கப்படவிருக் கின்றது.

இத்திருத்த யோசனையைப் பிரதமர் டி.எம்.ஜயரட்ன சபையில் சமர்ப்பிப்பார். இதற்காக பாராளுமன்ற அமர்வு காலை 9.30 மணி முதல் இரவு 7.00 மணி வரை நடாத்துவதற்கு கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

இத்திருத்த யோசனையை நாளை மறுதினம் சபையில் சமர்ப்பித்து அதே தினம் விவாதம் நடாத்தவும், சபையில் நிறைவேற்றுவதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொருளாளரும், இளைஞர் விவகார அமைச்சருமான டலஸ் அழகப்பெரும தினகரனுக்கு நேற்றுத் தெரிவித்தார்.

நாட்டு நலனைக் கருத்தில் கொண்டு மேற்கொள்ளப்படுகின்ற இத்திருத்தத்திற்கு கடந்த பொதுத் தேர்தலில் யானைச் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்ற 15க்கும் மேற்பட்ட எம்.பிக்கள் ஆதரவாக வாக்களிக்க விருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அரசியலமைப்புக்கான 18வது திருத்த யோசனை 160க்கும் மேற்பட்ட வாக்கு களைப்பெற்று சபையில் நிறைவேறும் எனவும் அவர் கூறினார்.

அரசியலமைப்புக்கான 18வது திருத்த யோசனைக்கு எதிரான போராட்டங்களை முன்னெடுக்கப் போவதாக ஐ.தே.க., ஜே.வி.பி. ஆகிய கட்சிகள் கூறியுள்ளன. ஆனால் அதே கட்சிகளின் பிரதிநிதிகள் நாட்டில் ஜனநாயகம் இல்லை என்கின்றனர். நாட்டில் ஜனநாயகம் இல்லாவிட்டால் இவர்களால் எவ்வாறு இத் திருத்த யோசனைக்கு எதிர்ப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும்?

இவர்களது செயற்பாடுகளே இவர்களது கூற்றுக்களைப் பொய்ப்பிக்கின்றன. அதனால் அரசியலமைப்பு திருத்த நடவடிக்கைக்கு இவர்களது செயற்பாடுகள் எந்தப் பாதிப்பையுமே ஏற்படுத்தாது எனவும் அவர் கூறினார்.

அரசியலமைப்புக்கான 18வது திருத்தத்தின் கீழ் இரண்டு தடவைகள் ஜனாதிபதி பதவியை வகித்தவர், ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கு யாப்பில் விதிக்கப்பட்டிருக்கும் கட்டுப்பாடு நீக்கப்படுகின்றது. இக்கட்டுப்பாடு நீக்கப்பட்ட பின்னர் இரண்டு தடவைகள் ஜனாதிபதி பதவியை வகித்த ஒருவர் எத்தனை தடவையும் வேண்டுமானாலும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடவும், ஜனாதிபதி பதவியை வகிக்கவும் இடமளிக்கப்படுகின்றது.
மேலும் இங்கே தொடர்க...

160 இற்கும் மேற்பட்ட ஆதரவை 48 மணித்தியாலத்தினுள் பெறுவோம்’






அரசியலமைப்புக்கான 18வது திருத்த யோசனை அடுத்துவரும் 48 மணித்தியாலங் களுக்குள் 160க்கும் மேற்பட்ட ஆதரவான வாக்குகளைப் பெற்றுக் கொள்ளும் என்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளரும், அமைச்சருமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

ஸ்ரீல.சு. கட்சியின் மீரிகம தொகுதி ஆதரவாளர்கள் மத்தியில் உரையாற்றும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அமைச்சர் தொடர்ந்தும் உரையாற்றுகையில், அரசியலமைப் புக்கான 18வது திருத்த யோசனை ஜனாதிபதியின் பதவிக் காலத்தை நீடிப்பதற்கானதல்ல. மாறாக ஜனாதிபதி பதவியை இரண்டு தடவைகள் வகித்தவர் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கு விதிக்கப்பட்டிருக்கும் கட்டுப்பாட்டை நீக்கவே நடவடிக்கை எடுத்திருக்கின்றோம்.

இன்று ஐக்கிய தேசியக் கட்சியும், மக்கள் விடுதலை முன்னணியும் பெயர்ப்பலகையு டன் மாத்திரமே உள்ளன. மாறாக அவை செயற்றிறன் உள்ள கட்சிகள் அல்ல. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நாட்டுக்கும், நாட்டு மக்களுக்கும் அளித்து வரும் தூரநோக்கு மிக்க சிறந்த தலைமைத்துவத்தின் காரணமாகவே அக்கட்சிகள் பெயர்ப்ப லகைக்குள் முடங்கிப் போய் விட்டன.

மக்கள் விடுதலை முன்னணியினரால் விமர்சிக்கத்தான் முடியும். மாறாக அரசாங்கம் நடாத்த முடியாதவர்கள். அதனால் தான் அவர்கள் எமது அரசிலிருந்து இடைநடுவில் வெளியேறினர்.

மறைந்த முன்னாள் பிரதமர்களான டி.எஸ்.சேனநாயக்க, டட்லி சேனநாயக்க போன்ற ஐ.தே.க. தலைவர்கள் நாட்டை அபிவிருத்தி செய்யப் பாரிய பங்களிப்பு செய்துள்ளனர்.

ஆனால் தற்போதைய ஐ.தே.க. தலைவர் ரணில் விக்கிரமசிங்க அக்கட்சியையே இல்லாமலாக்கி விட்டார்.

அரசியலமைப்புக்கான 18வது திருத்த யோசனை நாளை மறுதினம் 160க்கும் மேற்பட்ட வாக்குகளால் சபையில் நிறைவேறும். இதில் எதுவித சந்தேகமுமே இல்லை என்றார்.
மேலும் இங்கே தொடர்க...

18வது திருத்தம் வரலாற்றில் இடம் பிடிக்கும் - பிரதமர்






பாராளுமன்றத்தில் அதிக பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்படும் அரசியலமைப்புத் திருத்தமாக 18வது திருத்தம் வரலாற்றில் இடம்பிடிக்கும் என்று பிரதமர் டி. எம். ஜயரட்ன நேற்று கம்பளையில் தெரிவித்தார்.

அரசியலமைப்பின் 18வது திருத்தத்திற்கு ஆதரவை தெரிவிக்கும் ஊர்வலங்களையும் பொதுக் கூட்டங்களையும் அங்குரார்ப்பணம் செய்து வைக்கும் நிகழ்வு கம்பளை நகரில் நேற்று காலையில் நடைபெற்றது. இக் கூட்டத்தில் ஐ. தே. கட்சியின் கண்டி மாவட்ட எம். பி. ஏ.ஆர். எம். அப்துல் காதரும் கலந்துகொண்டார்.

இந்நிகழ்வில் பிரதமர் டி. எம். ஜயரட்ன தொடர்ந்தும் உரையாற்றுகையில், அரசியலமைப்புக்கான 18வது திருத்தம் நாட்டில் புதிய யுகத்தை ஏற்படுத்தும். அதனூடாக நாட்டில் மறுமலர்ச்சியும், சுபீட்சமும் ஏற்படும். அரசியலமைப்பு என்பது நாட்டுக்கு உகந்தவகையில் இருக்க வேண்டும். அதற்கேற்ப அவ்வப்போது திருத்தங்களைச் செய்வது அவசியம். இதைவிடுத்து காலங்கடந்த அரசியலமைப்பால் நாட்டுக்கு எந்த நன்மையுமே கிடைக்காது.

ஜனாதிபதி பதவியை இரு தடவைகள் வகிப்பவர் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கு விதிக்கப்பட்டிருக்கும் தடையை நீக்குவதற்கு இத்திருத்தம் வழி செய்கிறது.

இதற்காக சர்வஜன வாக்கெடுப்பை நடாத்தத் தேவையில்லை என உச்ச நீதிமன்றமும் கூறியுள்ளது.

இதன்படி தாய்நாட்டின் மீது அன்பு, பற்றுக்கொண்ட தலைவர் மூன்றாவது தடவையும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதில் என்ன தவறு இருக்கின்றது. அதற்கு இடமளிக்கப்பட வேண்டும். அவரை திரும்பவும் ஜனாதிபதியாகத் தெரிவு செய்வதா? இல்லையா என்பதை மக்கள் தீர்மானிக்க வேண்டும் அதுவே ஜனநாயக முறைப்படி சரியானதுமாகும்.

இந்தத் திருத்தத்திற்கு ஆதரவு நல்க ஐ. தே. க. வின் பல முக்கியஸ்தர்கள் ஏற்கனவே முன் வந்திருக்கின்றார்கள். இதனால் அற்ப அரசியல் நோக்கங்களைக் கைவிட்டு பொது நோக்கோடு இத் திருத்தத்திற்கு ஆதரவு நல்க சகல எம். பிக்களும் முன்வரவேண்டும் என்றார்.

இந்நிகழ்வின் போது அரசியலமைப்பு திருத்தத்திற்கு ஆதரவு தெரிவித்து பிரதமர் டி. எம். ஜயரட்ன தலைமையில் ஊர்வலமும் நடாத்தப்பட்டன.
மேலும் இங்கே தொடர்க...

சர்வாதிகார தன்மையை நீக்கவே அரசியலமைப்பில் திருத்தம் பாராளுமன்றத்திற்கு கூடுதல் அதிகாரம்




ஜனாதிபதி பதவியை மக்களுக்கு நெருக்கமானதாக்குவோம்


1978 அரசியலமைப்பின் 17வது திருத்தச் சட்டத்திலுள்ள சர்வாதிகாரத் தன்மையை நீக்குவதற்காகவே நாம் அரசியலமைப்பில் திருத்தம் கொண்டு வரவுள்ளோமென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

இதன் மூலம் பாராளுமன்றத்துக்கு முழு அதிகாரம் வழங்கப்படுவதுடன் ஆறு வருடத்திற்குப் பின் தேர்தலில் போட்டியிடலாமென தெரிவித்த ஜனாதிபதி, பதவிக் காலத்தை நீடிப்பதற்காகவே இதனைச் செய்வதாக கூறப்படும் கூற்றுக்கள் உண்மைக்குப் புறம்பானவை எனவும் தெரிவித்தார்.

ஜே.ஆர். ஜயவர்தன ஏற்படுத்திய அரசியலமைப்பேயன்றி இது எம்மால் தயாரிக்கப்பட்ட அரசியலமைப்பல்ல என குறிப்பிட்ட ஜனாதிபதி, பாராளுமன்ற த்திற்கு அதிகாரம் பெற்றுக் கொடுப்பதே எமது நோக்கம் எனவும் தெரிவித்தார்.

எமக்குத் தெளிவான, நீண்ட பயணம் உள்ளது. மேற்கொள்ள வேண்டிய செயற்திட்டங்கள் உள்ளன. அரசியலமைப்பு விடயத்தை காரணங்காட்டிக் கொண்டு நாம் காலத்தை வீணடிக்க விரும்பவில்லை. நாட்டைக் கட்டியெழுப்ப வேண்டிய கடமையைத் தட்டிக்களிக்க முடியாது எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

பதுளையிலுள்ள ஊவா மாகாண சபைக் கட்டடத்தில் நடைபெற்ற ஊவா மாகாண பெளத்த மத மாநாட்டிற்குத் தலைமை வகித்து நாட்டின் நிலைவரங்கள் தொடர்பாக மதத் தலைவர்களுக்கு தெளிவுபடுத்துகையிலேயே இவ்வாறு தெரிவித்தார். அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா உட்பட அமைச்சர்கள், பிரதியமைச்சர்கள், மாகாண முதல்வர், மாகாண அமைச்சர்கள் உட்பட முக்கியஸ் தர்கள் பலரும் கலந்து கொண்டனர். இம் மாநாட்டில் தொடர்ந்து உரையாற்றிய ஜனாதிபதி,

ஊவா மாகாணத்தைப் போன்றே பல்வேறு பிரதேசங்களிலும் பிரச்சினை.

அரசியலமைப்புச் சபைக்கு உறுப்பினர் களை நியமிப்பது அரசியல் கட்சித் தலைவர்களே. அவ்வாறானவர்கள் தேர்தலில் வெற்றிபெற்று வருபவர்களல்ல. குற்றம் செய்த பொலிஸ் அதிகாரியொருவரை இடமாற்றம் செய்வதற்குக் கூட தற்போதைய அரசியலமைப்பில் அதிகாரமில்லை. அதனால்தான் நாம் பாராளுமன்றத்திற்கு முழு அதிகாரத்தையும் பெற்றுக் கொடுக்க முயற்சிக்கிறோம்.

ஜனாதிபதி பதவியை மக்களுக்கு மிக நெருக்கமானதாக்கு வோம் என நாம் கடந்த தேர்தலின் போது மக்களுக்கு கூறினோம். அதற்கேற்பவே நாம் பாராளு மன்ற அதிகாரத்தைப் பலப்படுத்துவதுடன் மூன்று மாதத்துக்கு ஒரு முறை ஜனாதிபதி பாராளுமன்றத்துக்குச் சென்று வர வழிவகுப்போமெனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

ஜனாதிபதி பதவிக் காலத்தை நீடிப்பது தமது நோக்கமல்ல எனக் குறிப்பிட்ட ஜனாதிபதி, ஆறு வருடத்தின் பின் தேர்தலில் நின்று மக்கள் நிராகரித்தால் அதனை நாம் ஏற்போம் எனவும் மேலும் தெரிவித்தார். பெளத்த மதத் தலைவர்களின் வேண்டு கோள்களை செவிமடுத்த ஜனாதிபதி அதற்குரிய நடவடிக்கைகளை எடுப்பதாகவும் கூறினார்.
மேலும் இங்கே தொடர்க...

தமிழரசுக் கட்சியின் மானிப்பாய் தொகுதி முன்னைநாள் பாராளுமன்ற



திரு.வி.தர்மலிங்கம் அவர்களின் 25வது நினைவு தின நிகழ்வுகள் யாழ். கோப்பாய் தாவடியில் அமைந்துள்ள அன்னாரின் நினைவுத் தூபிக்கு அருகாமையில் 02.09.2010 காலை 8.30அளவில் ஆரம்பமாகி நடைபெற்றது திரு.கௌரிகாந்தன் அவர்களின் தலைமையில் ஆரம்பமான நிகழ்வில் முதலில் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டதுடன், மலராஞ்சலி நிகழ்வும் நடைபெற்றது. புளொட் தலைவரும் அமரர் வி.தர்மலிங்கம் அவர்களின் புதல்வருமான திரு.தர்மலிங்கம் சித்தார்த்தன், திரு.கௌரிகாந்தன், தமிழரசு கட்சியின் மத்தியகுழு உறுப்பினர் குலநாயகம், முன்னாள் தபாலதிபர் திரு.கணேசவேல், முன்னாள் கோட்டக்கல்வி அதிகாரி தற்பரானந்தன், முன்னாள் வன்னி பாராளுமன்ற உறுப்பினர் வை.பாலச்சந்திரன், வவுனியா நகரசபை எதிர்க்கட்சித் தலைவர் ஜி.ரி.லிங்கநாதன், வவுனியா நகரசபை உறுப்பினர்கள் சுரேந்திரன், குமாரசாமி மற்றும் பல முக்கியஸ்தர்களும், பொதுமக்களும் கலந்து கொண்டிருந்தனர்.


































































































மேலும் இங்கே தொடர்க...

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை ஏற்றுக்கொள்ள முடியாது: சந்திரிக்கா

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை ஏற்றுக்கொள்ள முடியாது என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.

18 ஆவது அரசியல் திருத்தம் குறித்து கருத்து வெளியிடுகையில் சந்திரிக்கா இதனைத் தெரிவித்துள்ளார்.

18 ஆவது அரசியல் அமைப்பு திருத்தம் கண்டிக்கப்பட வேண்டியது. ஜனநயாகத்தை விரும்பும் நபர் என்ற வகையில் அரசாங்கத்தின் உத்தேச அரசியல் அமைப்புத் திருத்தங்களை எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாதென முன்னாள் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

ஆட்சியாளர்கள் அதிகாரத்தை கைப்பற்ற முயற்சிக்கக் கூடாது எனவும், அதிகாரம் வழங்கப்பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

2000ஆம் ஆண்டு தமது ஆட்சிக் காலத்தில் முன்வைக்கப்பட்ட அதிகாரப் பகிர்வுத் திட்டத்தின் மூலம் நிறைவேற்று அதிகார முறைமையை இல்லாதொழிக்க முயற்சித்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமைக்கு தாம் எப்போதும் ஆதரவளிக்கவில்லை எனவும், தற்போதைய வெளிவிவகார அமைச்ர் ஜீ.எல்.பீரிஸ் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை ஓராண்டு காலத்திற்கு நீடிக்குமாறு கோரியதாகவும் தெரிவித்துள்ளார்.

அதிகாரப் பேராசை தமக்குக் கிடையாது எனவும், இதனால் மீண்டுமொருமுறை தேர்தலில் போட்டியிடும் உத்தேசம் கிடையாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில் ஐக்கிய தேசியக் கட்சியின் நடவடிக்கைகளினால் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை இல்லாதொழிக்க முடியவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் இங்கே தொடர்க...

புதிய கிரிக்கெட் ஸ்டேடியம் ஜனாதிபதியால் திறந்து வைப்பு

பதுளையில் புதிதாக அமைக்கப்பட்ட கிரிக்கெட் ஸ்டேடியம் ஒன்றை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்டி நேற்று திறந்துவைத்தார்.

இலங்கை கிரிக்கெட் சபையால் அமைக்கப்பட்ட குறித்த ஸ்டேடியத்தை ஜனாதிபதி திறந்து வைத்ததோடு முதல் தடவையாக துடுப்பாட்டத்திலும் ஈடுப்பட்டார்.

இந்நிகழ்வில் சி.பி ரத்நாயக்க, அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா, அமைச்சர் டிலான் பெரேரா முதலானோர் கலந்துக் கொண்டனர்.
மேலும் இங்கே தொடர்க...

அரசியல் அமைப்புத் திருத்தங்களுக்கு ஆதரவளிப்பது குறித்து நாளை தீர்மானிக்கப்படும்: த.தே.கூ

18 ஆவது அரசியல் திருத்தங்களுக்கு ஆதரவளிப்பது குறித்து நாளை தீர்மானிக்கப்படும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமசந்திரன் தெரிவித்துள்ளார்.

கட்சியின் உறுப்பினர்கள் நாளைய தினம் கூடி அரசியல் அமைப்பு திருத்தங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் இங்கே தொடர்க...

முன்னாள் புலி உறுப்பினர்கள் 508 பேர் விடுதலை



அரசினால் புனர்வாழ்வு அளிக்கப்பட்ட விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முன்னாள் உறுப்பினர்களான 508 இளைஞர், யுவதிகள் இன்று பெற்றோரிடம் கையளிக்கப்பட்டார்கள்.

வவுனியா பம்பைமடு புனர்வாழ்வு நிலையத்தில் இடம்பெற்ற இந் நிகழ்வில் புனர்வாழ்வு மற்றும் சிறை மற்றும் சிறைச்சாலைகள் மறு சீரமைப்பு பிரதி அமைச்சர் விஜித முனி சொய்சா கலந்து கொண்டார்.

508 பேரையும் அவரவர் பெற்றோரிடம் பிரதி அமைச்சர் ஒப்படைத்தார். விடுதலை செய்யப்பட்ட வர்களில் 246 பேர் அண்மையில் இடம் பெற்று முடிந்த கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றியவர்கள் ஆவர்.

விடுவிக்கப்பட்டவர்களில் மூன்று மாதங்களுக்கு முன்னர் இராணுவத்தினரால் மணம் முடித்து வைக்கப்பட்ட 50 தம்பதிகளும் அடங்குகின்றார்கள். இராணுவத்தினரிடம் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முன்னாள் உறுப்பினர்கள் 11 ஆயிரம் பேர் சரண் அடைந்திருந்தார்கள் என்றும் இன்னமும் 7500 பேர் வரையில் விடுவிக்கப்படாமல் புனர்வாழ்வு முகாம்களில் புனர்வாழ்வளிக்கப்பட்டு வருகின்றனர் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

இவர்களில் குற்றச் செயல்களில் முன்பு ஈடுபட்டவர்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்படும் என்றும் ஏனையோர் படிப்படியாக விடுதலை செய்யப்படுவார்கள் என்றும் பிரதி அமைச்சர் விஜித முனி சொய்சா அங்கு தெரிவித்துள்ளார்
மேலும் இங்கே தொடர்க...