3 ஜூலை, 2011

பயங்கரவாத குற்றத் தடுப்புப் பிரிவால் கனேடிய தமிழர் ஒருவர் சித்திரவதை

கனடாவின் குடியுரிமையை பெற்ற இலங்கை தமிழர் ஒருவர் இலங்கையின் சிறையில் சித்திரவதை செய்யப்பட்டதாக "த நெசனல் போஸ்ட்' செய்தி வெளியிட்டுள்ளது. சுமார் 3 ஆண்டுகளாக 40 வயதான ரோய் மனோஜ்குமார் சமாதானம் என்பவர் இலங்கைச் சிறையில் வைக்கப்பட்டிருந்தார்.

இந்தநிலையில் தாம் ஆயுதம் கடத்தியதாக பொய்யான வாக்குமூலம் வழங்கும் வரை சித்திரவதை செய்யப்பட்டதாகவும் பயமுறுத் தப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தற்போது கனடாவுக்கு திரும்பியுள்ள அவர், தாம் இலங்கையில் மூன்று இடங்களுக்கு அழைத்து செல்லப்பட்டு அடைக்கப்பட்டதாகக் குறிப்பிட்டுள்ளார்.

தாம் மிகமோசமான முறையில் இலங்கை யின் பயங்கரவாத தடுப்புப் பிரிவினரால் நடத்தப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை அரசாங்கம், அதன் மேல் சுமத் தப்பட்டுள்ள போர்க்குற்றச்சாட்டுகளை நிராகரித்து வருகிறது. எனினும் அந்த நாட்டின் சிறைகளில் சித்திரவதைகள் இடம்பெறுவதற்கு தாம் ஒரு சாட்சி என்று மனேஜ்குமார் குறிப் பிட்டுள்ளார். இலங்கையின் பயங்கரவாத தடுப்புப் பிரிவினர் தமிழ் வர்த்தகர்களிடம் கப்பம் பெறுகின்றனர்.

அத்துடன் பணம் பறிப்பதற்காக எப்போதும் பயங்கரவாத தடுப்புப் பிரிவில் 50 பேர் வரை தடுத்து வைக்கப்பட்டு விசாரணை செய்யப் பட்டு வருகிறார்கள் என்றும் மனோஜ்குமார் தெரிவித்துள்ளார்.
மேலும் இங்கே தொடர்க...

இலங்கையின் யுத்தக் குற்றச்சாட்டை ஐ.நா. சபை விசாரிக்க வேண்டும்: ம.ம.ச.க

இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் யுத்தக்குற்றச்சாட்டு மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபை விசாரணைகள் மேற்கொள்ள வேண்டும் என மலேஷிய அரசியல் கட்சி ஒன்று கோரிக்கை விடுத்துள்ளது. மலேஷிய மக்கள் சக்தி கட்சியே இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளது. இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளுமாறு அந்த கட்சியினர் மலேஷியாவிலுள்ள ஐ.நா பணியகத்திடம் மனுவொன்றை கையளித்துள் ளனர்.

ஐ.நா சபையின் நிபுணர் குழு அறிக்கை யின்படி இலங்கை மீது அனைத்துலக குற்ற வியல் நீதிமன்றம் விசாரணைனகளை மேற் கொள்ள வேண்டும் என அந்த கட்சியின் பொதுச் செயலாளர் ஆர். கண்ணன் தெரிவித் துள்ளார்.

மலேஷியா இலங்கையில் முதலீடுகளை செய்துள்ள ஒரு நாடாகும். இதனால் இலங்கை யிலுள்ள தமிழ் மக்கள் சுதந்திரமாகவும் அவர்களுக்குரிய உரிமையுடனும் வாழுவ தற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண் டும் என மலேஷிய அரசாங்கம் வலியுறுத்த வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, பலஸ்தீனத்தில் இடம்பெற்ற யுத்தக்குற்றச்சாட்டுகள் தொடர்பிலும் ஐ.நா சபை விசாரணைகளை மேற்கொள்ள வேண் டும் என மலேஷிய மக்கள் சக்தி கட்சி வேண்டுகோள் விடுத்துள்ளது.
மேலும் இங்கே தொடர்க...

நிபுணர் குழுவின் பரிந்துரைகளை பான் கீ மூன் ஏற்றுக் கொண்டாராம்: பர்ஹான் ஹக்

இலங்கையின் போர்க்குற்றங்கள் தொடர்பில் நியமிக்கப்பட்ட நிபுணர் குழுவின் குறித்த பரிந்துரையை ஐக்கிய நாடுகளின் செயலாளர் நாயகம் பான் கீ மூன் ஏற்றுக் கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

ஐக்கிய நாடுகளின் செயலாளர் நாயகம் பான் கீ மூனின் பிரதிப் பேச்சாளர் பர்ஹான் ஹக் இதனைத் தெரிவித்துள்ளார். இன்னர் சிற்றி பிரஸ் ஊடகத்திற்கு நேற்று முன்தினம் அளித்த செவ்வியின் போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இறுதிக் கட்ட போரின் போது ஐக்கிய நாடுகள் அமைப்பினர் கிளிநொச்சியிலிருந்து வெளியேறியமை, சேத விபரங்களை வெளியிடாமை போன்ற விடயங்கள், சர்வதேச சட்டங்களுக்கு அமைய, தமிழீழ விடுதலைப்புலிப் போராளிகள் சரணடைய பான் கீ மூனின் பிரதம அதிகாரி விஜய் நம்பியார் வழங்கியதாக கூறப்படும் உறுதி, அதன் பின்னர் சரணடைந்தவர்கள் கொலை செய்யப்பட்டமை தொடர்பிலான பரிந்துரையே அதுவாகும் என்று பர்ஹான் ஹக் குறிப்பிட்டார்.

கடந்த ஏப்ரல் மாதம் முதல் இந்த விடயங்கள் குறித்து ஆராயப்பட்டு வருவதாகவும் தெரிவிக் கப்படுகின்றது.

அத்துடன் ஐக்கிய நாடுகளின் ஏனைய முகவர் நிறுவனங்களிடமும் நிபுணர் குழு அறிக்கை பற்றி கலந்தாலோசிக்கப்பட்டு வரு கிறது. இதேவேளை, எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க பான் கீ மூனை நாளை மறுதினம் 5ஆம் திகதி சந்திப்பார் என்றும் பர்ஹான் ஹக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் இங்கே தொடர்க...

சனல் 4 அலைவரிசை ஒளிபரப்பிய படத்தின் மூலப்பிரதிகள் கண்டுபிடிப்பு: பஷில்

"இலங்கையின் கொலைக்களங்கள்'' என்ற தலைப்பில் சனல் 4 அலைவரிசையினால் ஒளிபரப்பப்பட்ட படத்தை தயாரிப்பதற்கு பயன்படுத்தப்பட்ட உண்மையான, மாற்றம் எதுவும் செய்யப்படாத வீடியோ பதிவுகள் கிடைத்துள்ளதாக பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஷில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

கொலன்னாவ பிரதேசத்தில் நேற்று முன்தினம் நடைபெற்ற வைபவமொன்றில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். நாட்டுக்கு எதிரான சில வெளிநாட்டுச் சக்திகளுக்கு இந்நாட்டிலுள்ள சிலர் உதவுவதாக அவர் குறிப்பிட்டார். சில டொலர்களுக்கும் யூரோக்களுக்கும் அடிமையாக வேண்டாம் என தாம் அவர்களை கோருவதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

இதேவேளை, சனல் 4இல் வெளியான காட்சியில் பின்னணியில் இருப்பவர்கள் சிங்கள மொழியில் உரையாடுவதைப் போன்றே வீடியோ அமைந்திருந்தது.

ஆனால், தற்போது இலங்கையிலுள்ள தனியார் தொலைக்காட்சி ஒன்றிடமிருந்து தமக்கு கிடைத்ததாக இலங்கை அரசாங்கம் கூறுகின்ற, மாற்றம் செய்யப்படாத அசல் வீடியோ என்று வெளியிடப்பட்டுள்ள வீடியோ காட்சியில் பின்னணியில் இருப்பவர்கள் தமிழ் மொழியில் உரையாடுவதை போன்று காட்சி அமைந்திருக்கின்றது.

சனல் 4 வீடியோவிலும், தற்போது இலங்கை யில் வெளியாகியிருக்கும் வீடியோவிலும் "காட்சிகளில் பெரிதளவு வித்தியாசங்கள் இருப்பதாகத் தோன்றவில்லை'.

பின்னணியில் கேட்கும் மொழியில் மட்டுமே வித்தியாசம் தெரிகிறது. சனல் 4 தொலைக்காட்சி வீடியோவில் சிங்கள மொழி யில் குரல்கள் கேட்கின்றன. ஆனால் தற்போது இலங்கையில் வெளியாகியுள்ள வீடியோக் காட்சியில் பின்னணிக் குரல்கள் தமிழ் மொழியில் கேட்கின்றன இதேவேளை, இலங்கையின் இறுதிக் கட்டப் போரில் இடம்பெற்றதாகக் கூறப்படும் போர்க் குற்றங்கள் பற்றி சுயாதீனமான விசாரணைகள் நடத்தப்பட வேண்டுமென்று ஐ.நாவும் பல் வேறு நாடுகளும் கோரி வருகின்றமை குறிப் பிடத் தக்கது.
மேலும் இங்கே தொடர்க...