8 ஜூன், 2011

மரணத்தை வரவேற்கிறேன் கடாபி

லிபிய ஜனாதிபதி கடாபி தனது நாட்டுக்கெதிரான இராணுவ நடவடிக்கைகளை எதிர்த்து மரணிக்கும் வரை போராடப் போவதாகவும் மரணத்தை வரவேற்பதாகவும் அறிவித்துள்ளார்.

மேற்படி தகவல் அடங்கிய அவரது குரல் பதிவை அந்நாட்டின் தேசிய தொலைக்காட்சி நேற்று ஒளிபரப்பாக்கியுள்ளது.

இக்குரல் பகுதிவில் அவர் தனது ஆதரவாளர்களை திரிபோலியில் உள்ள இல்லத்தில் கூடுமாறும் கேட்டுக் கொண்டுள்ளார்.

மேற்படி தகவலானது கடாபியின் பாப் அல் அஸீசியா இல்ல வளாகத்தில் குண்டுத்தாக்குதல்கள் இடம்பெற்றதன் பின்னரே வெளியாகியுள்ளது.

கடாபியின் இல்ல வளாகத்தை இலக்கு வைத்து நேட்டோ படைகள் நேற்று பல தடவைகள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

நேட்டோ படைகள் லிபிய இராணுவத்திற்கெதிரான படைநடவடிக்கைகளை மார்ச் மாதம் 19 ஆம் திகதி ஆரம்பித்தது.

எதிர்வரும் செப்டம்பர் மாத இறுதி வரை தனது படை நடவடிக்கைகளை தொடர கடந்த வாரம் தீர்மானித்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
மேலும் இங்கே தொடர்க...

இந்தியாவின் உதவியோடு தருஸ்மன் அறிக்கையை நிராகரிக்கும் எண்ணம் இல்லை: பீரிஸ்

எமது நாட்டுக்கு எதிரானதாக அமைந்துள்ள தருஸ்மன் அறிக்கையை இந்தியாவின் உதவியோடு நிராகரிக்கும் நோக்கம் இலங்கை அரசுக்கு கிடையாது. அவ்வாறு இந்தியாவைக் கோரும் எண்ணமும் இல்லை. இந்தியா ஊடாக நிராகரிக்க முற்பட்டால் அது எமது நாட்டுக்கு பாதகமாகவே அமையும் என்று வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் நேற்று சபையில் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற அமர்வின் போது மே மாதம் 25 ஆம் திகதி ஜனநாயக தேசியக் கூட்டணி எம்.பி. அனுரகுமார திசாநாயக்கவினால் நிலையியற் கட்டளை 23 இன் கீழ் இரண்டின் அடிப்படையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் வகையிலேயே அமைச்சர் பீரிஸ் இதனைத் தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில், இலங்கை அரசாங்கத்தின் இந்தியாவுடனான கூட்டு அறிக்கை தொடர்பில் அனுர குமார திசாநாயக்க எம்.பி. யினால் கேட்கப்பட்ட கேள்விகளும் கூறப்பட்ட காரணங்களும் மற்றும் சாட்டப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளும் எந்த வகையிலும் அடிப்படையற்றவை என்பதை முதலில் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.

அரசாங்கத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி வெளிவிவகார அமைச்சர் என்ற வகையில் நான் இந்தியாவுக்கு சென்றதும் அங்கு உயர்மட்ட தலைவர்களை சந்தித்து கலந்துரையாடல்களை மேற்கொண்டதும் எமது நாட்டின் தேவைகள் கருதியதாகும். இதற்காக இந்தியா எமக்கு அழைப்பு விடுக்கவில்லை.

அங்கு மேற்கொள்ளப்பட்ட கூட்டு அறிக்கையின் பிரகாரம் காங்கேசன்துறைக்கும் ரயில் பாதையமைக்கும் திட்டம் குறித்து உள்வாங்கப்பட்டுள்ளது. மாறாக காங்கேசன்துறை துறைமுகத்தினதும் பலாலி விமான நிலையத்தினதும் நடவடிக்கைகளை இந்தியாவுக்கு தாரைவார்ககும் அளவில் எதுவும் கூறப்படவில்லை. இவ்வாறு அனுரகுமார எம்.பி. யினால் குற்றஞ்சாட்டப்பட்டிருப்பதானது இங்கு ஏதோ பாரிய தவறு இழைக்கப்பட்டிருப்பதாக சுட்டிக் காட்டப்படுவதாகவே அமைந்திருக்கின்றது.

மேலும் இந்த ரயி“ல பாதை அமைக்கும் விடயம் சம்பந்தமாக இரு தரப்பிலிருந்தும் விரிவாக கலந்துரையாடல்களை மேற்கொண்டதன் பின்னரே உடன்பாடு ஒன்றுக்கு வர வேண்டும் என்பது அந்த கூட்டு அறிக்கையில் தெளிவாக கூறப்பட்டிருக்கின்றது.

அதேபோல சம்பூர் அனல் மின் நிலையம் தொடர்பிலும் இங்கு தவறான அர்த்தம் கற்பிக்கப்பட்டிருக்கின்து. அது முற்றிலும் தவறானதாகும். அதாவது இலங்கை இந்திய அரசுகளின் மேற்படி கூட்டு அறிக்கையானது எந்தவித பாதகத்தையும் கொண்டிருக்கவில்லை. எனனே இது தொடர்பில் முன்வைக்கப்பட்டிருக்கின்ற கருத்துகள் குற்றச்சாட்டுக்கள் அடிப்படையற்றவையாகும். இது இவ்வாறிருக்க தருஸ்மன் அறிக்கை தொடர்பாக இந்தியாவின் உதவியை நாடுவதற்காகவே இந்தியா சென்றிருப்பதாகவும் இங்கு கூறப்பட்டிருக்கின்றது.

மேலும் தருஸ்மன் அறிக்கை விவகாரத்தை இந்தியாவின் உதவியோடு நிராகரிப்பதற்கான நோக்கம் இலங்கை அரசுக்கு கிடையாது. அது எமது நாட்டுக்கும் நல்லதல்ல. இது விடயம் சம்பந்தமாக நாம் இந்திய உயர்மட்டத்துடன் மட்டுமல்ல, வேறு பல நாடுகளுடனும் பேச்சுக்களை நடத்தியுள்ளோம்.

இந்த அறிக்கை தொடர்பில் சர்வதேச அளவிலான தேடல்கள் வேண்டுமென சர்வதேசத்தின் பல நாடுகள் கோரிக்கை விடுத்திருக்கின்ற போதிலும் இந்தியாவிடமிருந்து எந்த கருத்தும் வெளிப்படவில்லை. இந்நிலையில் தருஸ்மன் அறிக்கையை இந்தியாவூடாக நிராகரிக்க முற்படும் பட்சத்தில் அது எமது நாட்டுக்கு பாதகமாக அமைந்துவிடும்.

22 அணிசேரா நாடுகளின் உயர் மட்ட பிரதிநிதிகளுடனும் நாம் இந்த அறிக்கை சம்பந்தமாக கலந்துரையாடல்களை மேற்கொண்டுள்ளோம். எல்லாவற்றுக்கும் மேலாக இந்திய உயர்மட்டத்துடனான பேச்சுக்கள்,சந்திப்புக்கள் மிகவும் பெறுமதிமிக்கவையாக அமைந்தன.

இது ஒருபுறமிருக்க இந்த தருஸ்மன் அறிக்கையானது ஐக்கிய நாடுகள் சபையானது அறிக்கை அல்ல. அது ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகத்தினால் தமக்கு ஆலோசனை வழங்கும் வகையில் நியமிக்கப்பட்ட குழுவொன்றினால் தயாரிக்கப்பட்ட அறிக்கையாகும் என்பதை நாம் முன்னரே கூறியிருந்தோம்.

அனுர குமார திசாநாயக்க எம்.பி. யின் கேள்வியின் பிரகாரம் நாம் இந்தியாவின் நோக்கத்திற்காக அங்கு செல்லவில்லை. மாறாக எமது தேவைக்காகவே சென்றோம். அவ்வாறு சென்றமைக்கான பெறுபேறுகள் திருப்திகரமானவையாகும்.

எனவே தவறான அர்த்தங்களைக் கற்பிக்கும் வகையில் அனுர குமார எம்.பி. யினால் சாட்டப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் அடிப்படையற்றவை என்பதை இந்த பாராளுமன்றத்துக்கு தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.
மேலும் இங்கே தொடர்க...

மின்னல் தாக்கி 31 பேர் உயிரிழப்பு

ஜனவரி மாதம் தொடக்கம் மே மாதம் வரையிலான ஐந்து மாத காலப் பகுதியில் நாட்டின் பல பாகங்களில் மின்னல் தாக்கத்திற்குள்ளாகி 31 பேர் பலியாகியுள்ளதுடன் பலர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் காலநிலை அவதான நிலையம் தெரிவிக்கின்றது.

மின்னல் தாக்கத்தினால் கடந்த ஏப்ரல் மாதத்திலேயே அதிகமானவர்கள் பலியாகியுள்ளனர். அம் மாதத்தில் மாத்திரம் 20 பேர் பலியாகியுள்ளதாக காலநிலை அவதான நிலையத்தின் அதிகாரியொருவர் தெரிவித்தார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவித்ததாவது, மின்னல் தாக்கத்தினால் ஜனவரி மாதம் 02, மார்ச் மாதம் 05, ஏப்ரல் மாதம் 20 பேரும், மே மாதம் 04 பேரும் என்ற அடிப்படையிலேயே 31 பேர் பலியாகியுள்ளனர். அநுராதபுரம், பொலன்னறுவை, அம்பாறை, இரத்தினபுரி உள்ளிட்ட கிராம பகுதியிலேயே இந்த மின்னல் தாக்கம் அதிகமாக இருந்தது.
மேலும் இங்கே தொடர்க...

ஐ.நா. மனித உரிமை பேரவைக் கூட்டத்தில் கலந்துகொண்ட குழு நாடு திரும்பியது

ஜெனிவாவில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைப் பேரவையின் 17 ஆவது கூட்டத் தொடரில் கலந்துகொள்ளும் நோக்கில் ஜெனிவா சென்றிருந்த இலங்கை தூதுக்குழுவினர் நேற்று நாடு திரும்பினர்.

தூதுக்குழுவுக்கு தலைமைதாங்கிய பெருந்தோட்டக் கைத்தொழில் மற்றும் மனித உரிமைகள் அமைச்சர் மஹிந்த சமரசிங்க நீர்ப்பாசன முகாமைத்துவ அமைச்சர் நிமால் சிறிபால டி. சில்வா மற்றும் சட்டமா அதிபர் மொஹான் பீரிஸ் ஆகியோரே நேற்று நாடு திரும்பினர்.

ஜெனிவாவில் நடைபெற்ற மனித உரிமை பேரவையின் 17 ஆவது கூட்டத் தொடரில் இலங்கையின் சார்பில் அமைச்சர் மஹிந்த சமரசிங்க விசேட உரையாற்றியிருந்தார்.

அத்துடன் ஐக்கிய நாடுகள் சபை மனித உரிமை பேரவையின் ஆணையாளர் நாயகம் நவநீதம் பிள்ளை மற்றும் மனித உரிமை பேரவையின் அங்கத்துவ நாடுகளின் பிரதிநிதிகள் ஆகியோரை அமைச்சர் சமரசிங்க தலைமையிலான குழுவினர் சந்தித்து பேச்சு நடத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
மேலும் இங்கே தொடர்க...

ஓய்வூதிய சட்டமூலம் வாபஸ் பெறப்படவில்லை: அநுரகுமார

ஊழியர் ஓய்வூதிய நன்மைகள் நிதியச் சட்டமூலத்தை (தனியார் ஓய்வூதிய சட்டமூலம்) வாபஸ் பெறுவதாக அரசாங்கம் அறிவித்தபோதிலும் அந்த சட்டமூலம் பாராளுமன்ற ஒழுங்குப் பத்திரத்திலிருந்து இன்னும் அகற்றப்படவில்லை என்று அநுரகுமார திஸாநாயக்க எம். பி. சபையிஸ் நேற்று சுட்டிக்காட்டினார்.

இதன்போது எழுந்த சபை முதல்வரும் அமைச்சருமான நிமால் சிறிபால டீ சில்வா ஒழுங்குப் பத்திரத்தில் விடயதானங்களை இணைப்பதற்கும் அதிலிருந்து நீக்குவதற்கும் சம்பிரதாயம் இருக்கின்றது அதன் பிரகாரம் வாபஸ் பெறப்படும் என்று பதிலளித்தார்.

பாராளுமன்ற சபாநாயகர் சமல் ராஜபக்ஷ தலைமையில் நேற்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் 1 மணிக்கு கூடியது சபையின் பிரதான நடவடிக்கைகள் நிறைவடைந்ததன் பின்னர் எழுந்த அநுரகுமார திஸாநாயக்க எம். பி. பாராளுமன்றத்தின் இன்றைய ஒழுங்குப் பத்திரத்தின் 14 ஆவது பிரேரணையாக ஊழியர் ஓய்வூதிய நன்மைகள் நிதியச் சட்ட மூலத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான மதிப்பீடு உள்ளடக்கப்பட்டுள்ளது.

எனினும் இந்த சட்டமூலம் வாபஸ் பெறப்பட்டதாக அரசாங்கத்தினால் கூறப்பட்டது. இதற்கான தீர்மானங்கள் அமைச்சரவையினால் மட்டுமன்றி ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியின் மத்திய குழுவிலும் எட்டப்பட்டதாக அமைச்சர்களால் பல தடவைகள் கூறப்பட்டது.

அவ்வாறு அறிவிக்கப்பட்ட போதிலும் இன்றைய பாராளுமன்ற ஒழுங்குப் பத்திரத்திலிருந்து நீக்கப்படவில்லை. அப்படியாயின் சட்டமூலம் வாபஸ் பெறப்பட்டுள்ளதா? இல்லையா? என்பதனை தெரிந்துகொள்ள வேண்டும் என்று சபாநாயகரின் கவனத்திற்கு கொண்டு வந்தார். இதற்கு பதிலளிக்கும் வகையில் கருத்து தெரிவித்த சபாநாயகர், இதுபற்றி கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் கலந்துரையாடமுடியும் என்று சுட்டிக்காட்டினார். மீண்டும் குறுக்கிட்ட அநுரகுமார எம். பி. இது கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் கேட்கப்பட வேண்டிய விடயம் இல்லை.

சம்பிரதாயத்தின் பிரகாரம் சட்ட மூலமொன்றை வாபஸ் பெறுவதென்றால் அதனை சபையில் தான் செய்ய வேண்டும் என்று சுட்டிக்காட்டிய போது இதற்கான நடவடிக்கைகள் கூடிய விரைவில் எடுக்கப்படும் என்று சபாநாயகர் பதிலளித்தார். இதனிடையே எழுந்த எதிர்க்கட்சியின் பிரதம கொறடாவும் எம். பி.யுமான ஜோன் அமரதுங்க இந்த சட்டமூலத்தை வாபஸ் பெறுவதற்கான அமைச்சரவை தீர்மானம் எட்டப்பட்டுள்ளதா எனக் கேள்வி எழுப்பினார்.

இவ்வாறான சர்ச்சைக்கு மத்தியில் எழுந்த சபை முதல்வரும் அமைச்சருமான நிமால் சிறிபால டீ சில்வா இந்த சட்டமூலத்தை வாபஸ் பெறுவதற்கு அரசாங்கம் தீர்மானித்துவிட்டது. எனினும் அதற்கான சம்பிரதாயம் ஒன்று இருக்கிறது. அதன் பிரகாரம் தான் செய்ய வேண்டும்.

இவ்வாறான விடயங்கள் கட்சித் தலைவர்கள் கூட்டத்திலேயே கலந்துரையாடப்பட்டு சபைக்கு கொண்டு வரப்பட வேண்டும். இந்த சம்பிரதாயம் தெரியாமல் போனது பற்றி நாம் கவலைப்படுகின்றோம் என்றார்.
மேலும் இங்கே தொடர்க...

ஐ.நா.நிபுணர் குழுவின் அறிக்கைக்கு பதிலை இன்னமும் எதிர்பார்த்துள்ளேன்: மூன்



ஐக்கிய நாடுகள் சபையின் நிபுணர் குழுவின் அறிக்கை விடயத்தில் இலங்கை அரசாங்கத்தின் பதிலை தான் இன்னும் எதிர்பார்த்திருப்பதாகவும் பொறுப்புக்கூறுதல் விடயத்தில் இலங்கை அரசாங்கத்துடன் தொடர்ந்து பேசவுள்ளதாகவும் ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூன் தெரிவித்துள்ளதாக இன்னர் சிற்றி பிரஸ் குறிப்பிட்டுள்ளது.

இலங்கை அரசாங்கத்தின் பதிலை நான் எதிர்பார்த்துக்கொண்டிருக்கின்றேன். அவர்கள் பதிலை விரைவாக அனுப்பினால் அதனடிப்படையில் நான் புதிய விடயங்களை தெரிந்துகொள்ளக்கூடியதாக இருக்கும் என்றும் கடந்த திங்கட்கிழமை நியுயோர்க்கில் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் பான் கீ. மூன் கூறியுள்ளார்.

இதேவேளை நான் ஆசிய குழுவை சந்தித்ததாகவும் தான் இரண்டாம் தடவையும் ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகமாக தெரிவு செய்யப்படுவதற்கு அவர்கள் ஆதரவு வழங்கவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நிபுணர் குழுவின் அறிக்கையின் பரிந்துரைகளில் அதிகமானவை இலங்கை அரசாங்கம் எடுக்கவேண்டிய நடவடிக்கைளாகும் என்றும் தெரிவித்துள்ள அவர் நிபுணர் குழுவின் பரிந்துரைகளை முழுமையாக அமுல்படுத்துவதற்காக நான் இலங்கை அரசாங்கத்துடன் தொடர்ந்து பேச்சு நடத்துவதாகவும் கூறியுள்ளார்.
மேலும் இங்கே தொடர்க...

நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்த சிலர் முயற்சி: விமல் வீரவன்ச

நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்த சிலர் முயற்சிப்பதாக நிர்மாணத்துறை, பொறியியல் சேவைகள், வீடமைப்பு மற்றும் பொது வசதிகள் அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்தார்.

பொலன்னறுவை ஹிங்குரான்கொடை கிராமத்திலுள்ள 46 குடும்பங்களுக்கு வீடுகளை நிர்மாணிப்பதற்கான அடிக்கல் நாட்டும் வைபவத்தின் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரவிக்கையில், ஜெனிவா மனித உரிமைகள் பேரவையின் அமெரிக்கப் பிரதிநிதி இலங்கையை விமர்சனம் செய்வதன் மூலமும், செனல் 4 வீடியோ பதிவுகளை காண்பிப்பதன் மூலமும் இலங்கையில் யுத்தக் குற்றங்கள் மேற்கொள்ளப்பட்டதாக பிரச்சாரப்படுத்தி சிலர் பிரச்சினைகளை தோற்றுவித்து வேண்டுமென்றே மோதல்களை உருவாக்கி நாட்டை மீண்டும் பழைய நிலைக்கு கொண்டு செல்ல முயற்சிப்பதாகக் கூறினார்.
மேலும் இங்கே தொடர்க...