25 ஏப்ரல், 2011

கனிமொழி மீது சி.பி.ஐ குற்றப்பத்திரிகை தாக்கல்

2ஜி ஊழல் ஒதுக்கீடு வழக்கில் கடந்த சி.பி.ஐ தாக்கல் செய்யப்பட்ட துணை குற்றப் பத்திரிகையில் கனிமொழி பெயர் இடம்பெற்றுள்ளது.

2 ஜி வழக்கில் கடந்த 2 ஆம் திகதி டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் 80 ஆயிரம் பக்கங்களைக் கொண்ட முதல் குற்றப் பத்திரிகையை சிபிஐ தாக்கல் செய்யப்பட்டது.

இந்த துணை குற்றப்பத்திரிகையில் கனிமொழி, சரத் குமார் ஆகியோர் பெயர்கள் சேர்க்கப்பட்டுள்ளன.
மேலும் இங்கே தொடர்க...

பொன்சேகாவின் நலன் கருதி சிவனொலிபாத மலையடிவாரத்தில் பூஜை

சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் இராணுவத் தளபதி சரத்பொன்சேகாவின் நலனுக்காக பூஜை ஒன்று இடம்பெற்றது.

மனைவி அனோமா பொன்சேகா உட்பட குழுவினர் சிவனொளிபாத மலை அடிவாரத்தில் உள்ள நல்லதண்ணி என்ற இடத்தில் இப்பூஜையை நடத்தினர்.

கட்சி ஆதரவாளர்கள் பலர் இதில் கலந்து கொண்டதோடு, அவர் விடுதலையாகி பொது சேவையில் ஈடுபட வேண்டுமென அங்கு பௌத்த பிராத்தனைகள் மற்றும் பௌத்த வழிபாடுகள் என்பனவும் இடம் பெற்றன.
மேலும் இங்கே தொடர்க...

பெற்றோலிய வாகனங்களுக்கு வரி அதிகரிப்பு

பெற்றோலில் இயங்கும் வாகனங்களுக்கான வரி அதிகரிக்கவுள்ளதாக சுங்க ஆணையாளர் அஜந்த டயஸ் தெரிவித்துள்ளார்.

ஆயிரத்து 600 சி.சிக்கு மேற்பட்ட கொள்ளவுடைய வாகனங்களுக்கான வரி 24 சதவீதமாகவும் 2000-3000 சி.சி. கொள்ளவுடைய வாகனங்களுக்கான வரி 74 சதவீதமாகவும் 3000 சி.சியை விட அதிக கொள்ளளவுடைய வாகனங்களுக்கான வரி 100 சதவீதம் அதிகரிக்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.
மேலும் இங்கே தொடர்க...

சட்டவிரோதமாக பணத்தை கடத்தமுயன்ற சீன பிரஜை கைது

அமெரிக்க டொலர் மற்றும் சீன யுவான் நாணயங்களை கடத்த முயன்ற சீன நாட்டைச் சேர்ந்த நபர் ஒருவரை கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து சுகங்கத் திணைக்கள அதிகாரிகளினல் கைது செய்யப்பட்டுள்ளதாக எமது விமான நிலைய செய்தியாளர் தெரிவித்தார்.

குறித்த நபரிடமிருந்து 57இலட்சம் மதிப்புடைய அமெரிக்க டொலர் மற்றும் சீன யுவான் என்பவற்றை கைப்பற்றியுள்ளனர்.

குறித்த நபர் 27வயதுடையவர் என்றும் வீதி அபிவிருத்தி பணிகளுக்காக இலங்கைக்கு வந்தவர் என்றும் முதற்கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
மேலும் இங்கே தொடர்க...

சத்திய சாயி பாபா மறைவக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அனுதாபம்

உலக மக்களுக்கு அருளும் உன்னதமான சேவைகளும் செய்த சத்திய சாயி பாபாவுக்கு மோட்சம் கிட்டட்டும் என பிரார்த்திக்கிறேன் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

சத்ய சாயி பாபா சமாதி அடைந்தமையையடுத்து விடுத்துள்ள அனுதாபச் செய்தியிலேயே ஜனாதிபதி இவ்வாறு கூறியுள்ளார்.

அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: தலைசிறந்த பண்புகளைக் கொண்ட சாயிபாபாவை அவர்களின் பக்தர்கள் என்றும் மறக்க மாட்டார்கள் எனவும் சத்திய சாயிபாபா அவர்களுக்கு மோட்சம்கிட்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இங்கே தொடர்க...

தொழிலாளர் தினம்


தோழமை உணர்வுள்ள சுவிஸ் வாழ் தமிழ்மக்களே! கழகத்தோழர்களே!தோழமைக்கட்சி உறுப்பினர்களே! ஆதரவாளர்களே!

சுவிற்சர்லாந்து சூரிச் மாநிலத்தில் 2011 மே முதலாம் திகதி சுவிஸ்தொழிற்சங்கங்கள், இடதுசாரி அமைப்புக்கள், முற்போக்கு முன்னணிகள் மற்றும்உலகில் உரிமைக்காகப் போராடும் பல இன மக்களும் கலந்துகொள்ளும்தொழிலாளர் தினத்தில் பேதங்கள் இன்றி நாமும் கலந்துகொண்டு . இலங்கைதாயகத்தில் தமிழினத்தின் ஜனநாயக அரசியல் தீர்வை அரசு அங்கீகரிக்கசர்வதேசம் தனது நியாயமான பங்களிப்பை செய்யக்கோரி குரல் கொடுத்துஎமதின உரிமைப் போராட்டத்தை ஜனநாயக வழியில் உறுதியான வெற்றிக்குஇட்டுச்செல்ல வலுச்சேர்ப்போமாக.எம் ஒவ்வொருவரையும் இந்த போராட்டத்தில் இணைத்துக் கொள்ள வேண்டியகட்டாயக் கடமையில் உள்ளோமென்பதை நாம் ஒவ்வொருவரும் நன்குஅறிவோம். அந்தவகையில் கடைமையுணர்வுள்ள ஒவ்வொரு தமிழரும்தம்மாலி யன்ற பங்களிப்பினை செய்ய வேண்டும் என ..வி.கழகம்
தோழமையுடன் கேட்டுக் கொள்ளும்; அதேவேளையில். மக்களின் விடுதலைக்குதோள் கொடுக்க விரும்பும் அனைவரையும் இவ்மேதின ஊர்வலத்திற்குதோழமையுடன் அழைக்கின்றோம்.

இம்முறை மேதின ஊர்வலமானது சூரிச் பிரதான புகையிரத நிலையத்திற்குஅருகில் உள்ள ளுih Pழளவ (டுயபநசளவசயளளந)ல் இருந்து காலை 10.00 மணிக்குஆரம்பமாகி டீüசமடiPடயவண (டீநடடநஎரநல) யில் முடிவடையும்!!!

அனைத்து அதிகாரங்களும் உழைக்கும் மக்களுக்கே.!

தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (PLOTE)
ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி (D:PL:F)
சுவிஸ்கிளை

தொடர்புகட்கு: 078 3038783, 078 3336175, 079 6249004
மேலும் இங்கே தொடர்க...