ராமநாதபுரம்
மாவட்டம், மண்டபம் மீனவர்களை மீண்டும் இலங்கைக் கடற்படையினர் தாக்கியதோடு, வலைகளையும் வெட்டி வீசியுள்ளனர் என இந்தியச் செய்திகள் தெரிவிக்கின்றன.
இலங்கை கடற்படையின் இந்தத் தாக்குதலைக் கண்டித்து, ராமேஸ்வரம் மீனவர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள நிலையில், ராமநாதபுரத்தில் நடந்த மீனவர்களுக்கான கூட்டத்தில், கடற்படை கமாண்டர் அகர்வால், "தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் தாக்கமாட்டார்கள்" என உறுதியளித்தார்.
இதனிடையே மண்டபம் பகுதியிலிருந்து 200க்கும் அதிகமான விசைப் படகுகள் நேற்று முன்தினம் மீன்பிடிக்கக் கடலுக்குச் சென்று, நேற்று கரை திரும்பின. இதில் சில படகுகளில் சென்றவர்கள், கச்சத்தீவுப் பகுதியில் இந்திய எல்லையில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர்.
அங்கு வந்த இலங்கைக் கடற்படையினர், படகை சுற்றி வளைத்து, மீனவர்களை தாக்கினர். ஆல்பர்ட் என்பவருக்கு காலில் காயம் ஏற்பட்டது. கென்னடி, பெரியதுரை என்பவரது விசைப் படகில் இருந்த மீன்பிடி வலைகளையும் அவர்கள் வெட்டி எறிந்தனர்.
மீனவர்கள் கூறுகையில்,
"ரோந்து படகில் வந்த இலங்கைக் கடற்படையினர், "இப்பகுதிக்கு ஏன் வந்தீர்கள்?" எனக் கேட்டுத் தாக்கினர்.
பிற படகிலிருந்த வலைகளையும் அவர்கள் வெட்டி எறிந்தனர்'' என்றனர்.
தமிழக மீனவர்களைத் தாம் தாக்கவில்லை என இலங்கைக் கடற்படை ஒருபுறம் கூறி வந்தாலும், மறுபுறம் அவர்களின் தாக்குதல் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றது.
மாவட்டம், மண்டபம் மீனவர்களை மீண்டும் இலங்கைக் கடற்படையினர் தாக்கியதோடு, வலைகளையும் வெட்டி வீசியுள்ளனர் என இந்தியச் செய்திகள் தெரிவிக்கின்றன.இலங்கை கடற்படையின் இந்தத் தாக்குதலைக் கண்டித்து, ராமேஸ்வரம் மீனவர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள நிலையில், ராமநாதபுரத்தில் நடந்த மீனவர்களுக்கான கூட்டத்தில், கடற்படை கமாண்டர் அகர்வால், "தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் தாக்கமாட்டார்கள்" என உறுதியளித்தார்.
இதனிடையே மண்டபம் பகுதியிலிருந்து 200க்கும் அதிகமான விசைப் படகுகள் நேற்று முன்தினம் மீன்பிடிக்கக் கடலுக்குச் சென்று, நேற்று கரை திரும்பின. இதில் சில படகுகளில் சென்றவர்கள், கச்சத்தீவுப் பகுதியில் இந்திய எல்லையில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர்.
அங்கு வந்த இலங்கைக் கடற்படையினர், படகை சுற்றி வளைத்து, மீனவர்களை தாக்கினர். ஆல்பர்ட் என்பவருக்கு காலில் காயம் ஏற்பட்டது. கென்னடி, பெரியதுரை என்பவரது விசைப் படகில் இருந்த மீன்பிடி வலைகளையும் அவர்கள் வெட்டி எறிந்தனர்.
மீனவர்கள் கூறுகையில்,
"ரோந்து படகில் வந்த இலங்கைக் கடற்படையினர், "இப்பகுதிக்கு ஏன் வந்தீர்கள்?" எனக் கேட்டுத் தாக்கினர்.
பிற படகிலிருந்த வலைகளையும் அவர்கள் வெட்டி எறிந்தனர்'' என்றனர்.
தமிழக மீனவர்களைத் தாம் தாக்கவில்லை என இலங்கைக் கடற்படை ஒருபுறம் கூறி வந்தாலும், மறுபுறம் அவர்களின் தாக்குதல் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றது.

ளின் சூதாட்ட பூமியாக இலங்கை மாற்றியமைக்கப்பட்டுள்ளது. வரலாற்றில் என்றுமே இல்லாத அளவிற்கு படுமோசமான அட க்குமுறைகள் மேலோங்கிய ஜனநாயக விரோத ஆட்சி தற்போதைய நடை முறையிலுள்ளது. எனவே எதிர்காலச் சந்ததியினருக்காக நாட்டின் ஜனநாயகத்தை பாதுகாக்க வேண்டிய கட்டாய தேவை ஏற்பட்டுள்ளது என்று சர்வாதிகாரத்திற்கு எதிரான மக்கள் பேரணி தெரிவித்துள்ளது. காலத்தை வீணடிக்காது சர்வாதிகாரிகளிடமிருந்து நாட்டைப் பாதுகாக்க அனைவரும் பேதமின்றி செயற்பட முன்வர வேண்டும்.
உணவுத் திட்டத்திற்கு நன்கொடையாளர்களிடமிருந்து கிடைக்கின்ற நிதியுதவி குறைவடைந்துள்ளமை காரணமாக இலங்கையில் இடம்பெயர்ந்துள்ள மக்களுக்கான நிவாரண உணவு விநியோக நடவடிக்கைகள் பாதிப்படைந்துள்ளதாக அந்த நிறுவனம் தெரிவித்திருக்கிறது.
க்கொம் நிறுவன ஊழியர்கள் 2000 பேரை வெளியேற்றுவதற்கான முயற்சிகளை அரசாங்கம் மேற்கொண்டு வருவதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளரும் எம்.பி.யுமான திஸ்ஸ அத்தநாயக்க குற்றம் சாட்டினார். பிழையான கொடுக்கல் வாங்கல்கள் மற்றும் நிர்வாக சீர்குலைவினால் ரெலிகொம் நிறுவன வருமானம் வீழ்ச்சியடைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

கடத்திய ரசிகர் கைது தமிழ் பட உலகில், கவர்ச்சியின் உச்சமாகப் பார்க்கப்படுபவர் நடிகை நமீதா. ஜவுளிக்கடை திறப்பு, டிவி நிகழ்ச்சிகள், பொதுவிழாக்களிலும் அதிகமாகப் பங்கேற்று வருகிறார்.