tag:blogger.com,1999:blog-73753642620584035282024-02-19T14:17:20.281+05:30புதிய பாதைUnknownnoreply@blogger.comBlogger5912125tag:blogger.com,1999:blog-7375364262058403528.post-3478729197717508022012-07-03T22:55:00.003+05:302012-07-03T22:55:38.347+05:30<br />
bbbUnknownnoreply@blogger.com0tag:blogger.com,1999:blog-7375364262058403528.post-52348106141322829662011-11-18T16:08:00.000+05:302011-11-18T16:09:07.310+05:30நிலாவுக்கு சென்றவர்களால் கூட பயங்கரவாதத்தை ஒழிக்க முடியவில்லை: பிரதமர்<div style="text-align: justify;"> <img src="http://www.virakesari.lk/news/admin/images/d_m_-jayaratna_1_1.jpg" style="border: 0px dotted #FF9933; " align="left" border="0" /><br /> நிலாவுக்கு சென்றவர்களால் கூட பயங்கரவாதத்தை ஒழிக்க முடியாமல் போனது. ஆனால் இலங்கை, உள்நாட்டு பயங்கரவாதப் போரை பல சவால்களுக்கு மத்தியில் எதிர்கொண்டு வெற்றிகரமாக அழித்துள்ளது என்று பிரதமர் டி.எம். ஜயரத்ன தெரிவித்தார்.<br /><br />இன்று பாதுகாப்பு அமைச்சில் நடைபெற்ற விசேட நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலே பிரதமர் மேற்கண்டவாறு கூறினார்.<br /></div>Unknownnoreply@blogger.com0tag:blogger.com,1999:blog-7375364262058403528.post-4236260266200851352011-11-18T15:52:00.004+05:302011-11-18T16:06:08.671+05:30வெள்ளைக்கொடி விவகார வழக்கில்சரத் பொன்சேகாவிற்கு மூன்று வருட சிறை<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi1-n6sslDWrFvJ4oRwIQyWKTflu58xUwN30P-EI02omjzhxZqKKlBr5sVBU5PXKN7o9ymmlpprsWFlGJUpe-fqiWzkI9-Ecyzhl80c4nrq5qNc7nMF358d8NG_Yl3ynvoTH8nir95qnvQ/s1600/09.jpg"><img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 174px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi1-n6sslDWrFvJ4oRwIQyWKTflu58xUwN30P-EI02omjzhxZqKKlBr5sVBU5PXKN7o9ymmlpprsWFlGJUpe-fqiWzkI9-Ecyzhl80c4nrq5qNc7nMF358d8NG_Yl3ynvoTH8nir95qnvQ/s320/09.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5676282618233016466" border="0" /></a><br /><br /><br /><br /><br /><div style="text-align: justify;"> வெள்ளைக்கொடி விவகார வழக்கில் முன்னாள் இராணுவத்தளபதியும் கூட்டுப்படைகளின் பிரதானியுமான ஜெனரல் சரத்பொன்சேகாவை குற்றவாளியாக இனங்கண்ட நீதிபதிகள் குழு அவருக்கு 3 வருட சிறைத்தண்டனை வழங்கி தீர்ப்பளித்தது.<br /><br />அவருக்கு எதிராக சட்டமா அதிபர் திணைக்களத்தினால் மூன்று குற்றச்சாட்டுகளை முன்வைத்து தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் தீர்ப்பை கொழும்பு மேல் நீதிமன்ற நீதவான் தீபாலி விஜயசுந்தர இன்று வெள்ளிக்கிழமை வாசித்தார்.<br /><br />வடக்கில் இறுதிக்கட்ட யுத்தத்தின் போது வெள்ளைக்கொடியுடன் சரணடைவதற்கு வருகை தந்த விடுதலைப்புலிகள் அமைப்பைச்சேர்ந்த முக்கியஸ்தர்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளரின் உத்தரவின் பேரில் சுட்டுக்கொல்லப்பட்டதாக முன்னாள் இராணுவத்தளபதி சரத்பொன்சேகா கூறியதாக சண்டே லீடர் பத்திரிகையில் வெளியான செய்தி தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் விசாரணையே ட்ரயல் அட்-பார் முறையில் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் நடைபெற்றுவந்தது.<br /><br />மேல் நீதிமன்ற நீதிபதி தீபாலி விஜயசுந்தர தலைமையிலான எச்.என்.பி.பி வராவௌ, சர்பிக் ரஷீன் ஆகிய நீதிபதிகள் குழு முன்னிலையில் நடைபெற்றது.<br /><br />மேற்படி வெள்ளைக்கொடி வழக்கினால் நீதிமன்றத்தை அண்மித்த பகுதிகளில் பாதுகாப்பு கடமையில் ஆயிரத்துக்கு மேற்பட்ட பொலிஸார் குவிக்கப்பட்டிருந்ததுடன் தீவிர சோதனை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டிருந்தமைக் குறிப்பிடத்தக்கது.<br /><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhu7gQGi2n1VnTUWAoTjDRFNwXAUyzRcKRltklZTCmMYS6S7k_xnsE36laK5q0SwbAnm2g1ny39dIcEWKIipLN620aCjECeYzJw8aMX6AvQrvREWzfGEq83FY-YSWUJ0D4uzlkCh0Irazk/s1600/01.jpg"><img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 125px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhu7gQGi2n1VnTUWAoTjDRFNwXAUyzRcKRltklZTCmMYS6S7k_xnsE36laK5q0SwbAnm2g1ny39dIcEWKIipLN620aCjECeYzJw8aMX6AvQrvREWzfGEq83FY-YSWUJ0D4uzlkCh0Irazk/s320/01.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5676282261645670674" border="0" /></a><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiKrRZT8e-rciauOUm7SP72gewmnM5zrKnab_WHaJwwAF_DEPnXl6JEQ3HdQaB9NSppcHbu1FTi-xX4gR9i6VaECBGexsFAMXG6Z7qB8zJWw70NsU8XO-XLBxHg8tlyKnadBvMg-gp99WQ/s1600/08.jpg"><img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 139px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiKrRZT8e-rciauOUm7SP72gewmnM5zrKnab_WHaJwwAF_DEPnXl6JEQ3HdQaB9NSppcHbu1FTi-xX4gR9i6VaECBGexsFAMXG6Z7qB8zJWw70NsU8XO-XLBxHg8tlyKnadBvMg-gp99WQ/s320/08.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5676282428893026370" border="0" /></a><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi1-n6sslDWrFvJ4oRwIQyWKTflu58xUwN30P-EI02omjzhxZqKKlBr5sVBU5PXKN7o9ymmlpprsWFlGJUpe-fqiWzkI9-Ecyzhl80c4nrq5qNc7nMF358d8NG_Yl3ynvoTH8nir95qnvQ/s1600/09.jpg"><img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 174px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi1-n6sslDWrFvJ4oRwIQyWKTflu58xUwN30P-EI02omjzhxZqKKlBr5sVBU5PXKN7o9ymmlpprsWFlGJUpe-fqiWzkI9-Ecyzhl80c4nrq5qNc7nMF358d8NG_Yl3ynvoTH8nir95qnvQ/s320/09.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5676282618233016466" border="0" /></a><br /><br /></div>Unknownnoreply@blogger.com0tag:blogger.com,1999:blog-7375364262058403528.post-74034457083732388182011-11-18T15:48:00.000+05:302011-11-18T15:49:17.543+05:30பொன்சேகாவின் ஆதரவாளர்கள் நீதிமன்ற வளாகத்தில் ஆர்ப்பாட்டம்<img src="http://www.virakesari.lk/news/admin/images/300fonseka_6.jpg" style="border: 0px dotted #FF9933; " align="left" border="0" /><br /> <br /><div style="text-align: justify;"> பொன்சேகாவின் ஆதரவாளர்கள் நீதிமன்ற வளாகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.<br /><br />வெள்ளைக்கொடி விவகார வழக்கில் முன்னாள் இராணுவத்தளபதியும் கூட்டுப்படைகளின் பிரதானியுமான ஜெனரல் சரத்பொன்சேகாவிற்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் ஐந்தாயிரம் ரூபா அபராதமும் விதிக்கப்பட்டமையையடுத்தே இந்த ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.<br /></div>Unknownnoreply@blogger.com0tag:blogger.com,1999:blog-7375364262058403528.post-88989810610382516792011-11-17T19:34:00.004+05:302011-11-17T19:50:29.390+05:30உதட்டோடு உதடு முத்தமிடும் பிரபலங்கள்: சர்ர்சையைக் கிளப்பியுள்ள புதிய விவகாரம்<div style="text-align: justify;"><br /><div style="text-align: justify;"> <span>இத்தாலியைச்</span> <span style="font-family:Latha;font-size:78%;color:#000000;"><img src="http://www.virakesari.lk/news/admin/images/300imam.jpg" style="border: 0px dotted #FF9933; " width="290" align="left" border="0" height="140" /></span><span>சேர்ந்த</span> <span>பிரபல</span> '<span>பெனிட்டன்</span>' <span>என்ற</span> <span>ஆடை</span> <span>நிறுவனம்</span> <span>வெளியிட்டுள்ள</span> <span>விளம்பரங்கள்</span> <span>சில</span> <span>பலத்த</span> <span>சர்ச்சையைக்</span> <span>கிளப்பியுள்ளன</span>.<br /><br /><span>இதில்</span> <span>ஒரு</span> <span>விளம்பரத்தில்</span> <span>கத்தோலிக்க</span> <span>மதத்</span> <span>தலைவர்</span> <span>போப்</span> <span>எகிப்து</span> <span>இமாம்</span> <span>ஒருவருடன்</span> <span>உதட்டோடு</span> <span>உதடு</span> <span>முத்தமிட்டுக்</span> <span>கொள்வது</span> <span>போன்ற</span> <span>காட்சி</span> <span>இடம்</span> <span>பெற்றுள்ளது</span>.<br /><br /><span>இன்னொரு</span> <span>விளம்பரத்தில்</span> <span>அமெரிக்க</span> <span>ஜனாதிபதி</span> <span>பராக்</span> <span>ஒபாமாவும்</span>, <span>சீன</span> <span>ஜனாதிபதி</span> <span>ஹூஜிண்டாவோவும்</span> <span>உதட்டோடு</span> <span>உதடு</span> <span>முத்தம்</span> <span>கொடுத்துக்</span> <span>கொள்வது</span> <span>போன்று</span> <span>உள்ளது</span>.<br /><br /><span>மேலும்</span> <span>ஒபாமா</span>, <span>ஹூகோ</span> <span>சாவேஸை</span> <span>முத்தமிடுவது</span> <span>போலவும்</span>, <span>சர்கோஸி</span> <span>ஏஞ்சலா</span> <span>மேர்கலை</span> <span>முத்தமிடுவது</span> <span>போலவும்</span>, <span>வடகொரியத்</span> <span>தலைவர்</span> <span>கிம்</span> <span>ஜொங்கும்</span> <span>தென்கொரிய</span> <span>ஜனாதிபதி</span> <span>மயுங்கும்</span> <span>முத்தமிடுவது</span> <span>போலவும்</span> <span>விளம்பரங்களை</span> <span>அந்நிறுவனம்</span> <span>வெளியிட்டுள்ளது</span>.<br /><br />“<span>மசஏஅபஉ</span>" (<span>வெறுப்பில்லை</span>) <span>என்ற</span> <span>தொனிப்பொருளில்</span> <span>கிரபிக்ஸ்</span> <span>கலை</span> <span>மூலம்</span> <span>இவ்விளம்பரத்தை</span> <span>உருவாக்கி</span> <span>அந்நிறுவனம்</span> <span>வெளியிட்டுள்ளது</span>.<br /><br /><span>அதேபோல</span> <span>இஸ்ரேல்</span> <span>பிரதமர்</span> <span>பெஞ்சமின்</span> <span>நெதன்யாகு</span>, <span>பாலஸ்தீனத்</span> <span>தலைவர்</span> <span>முகம்மது</span> <span>அப்பாஸ்</span> <span>ஆகியோர்</span> <span>முத்தமிடும்</span> <span>நிலையில்</span> <span>உள்ள</span> <span>விளம்பரத்தினையும்</span> <span>அந்நிறுவனம்</span> <span>தயாரித்துள்ளது</span>.<br /><br /><span>இந்த</span> <span>விளம்பரங்களை</span> <span>இத்தாலியின்</span> <span>முக்கிய</span> <span>இடங்களில்</span> <span>வைத்துள்ளதோடு</span>, <span>உலகம்</span> <span>முழுவதும்</span> <span>கொண்டு</span> <span>செல்லவும்</span> <span>திட்டமிட்டுள்ளது</span>.<br /><br /><span>இந்த</span> <span>விளம்பரங்கள்</span> <span>தற்போது</span> <span>பெரும்</span> <span>சர்ச்சையை</span> <span>ஏற்படுத்தியுள்ளன</span>.<br /><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgtL9lrfZ9ez4qkbQwGCJOrpPByMZSeYbVmItUFLPFDN7NzRv_dfv9iRZkPMiZxK2lgD03Rwtna0j8ZtaiaZAZEs-vUuBCJF5noLDkfj59Au8SoU_9g1nJKQRWU77RntcO6MN51CAPBmfE/s1600/06.jpg"><img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 209px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgtL9lrfZ9ez4qkbQwGCJOrpPByMZSeYbVmItUFLPFDN7NzRv_dfv9iRZkPMiZxK2lgD03Rwtna0j8ZtaiaZAZEs-vUuBCJF5noLDkfj59Au8SoU_9g1nJKQRWU77RntcO6MN51CAPBmfE/s320/06.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5675968494954460434" border="0" /></a><br /><span>போப்பின்</span> <span>புகைப்படத்தினை</span> <span>உபயோகித்தமைக்காக</span> <span>வத்திக்கான</span> <span>கடும்</span> <span>கண்டனத்தினை</span> <span>தெரிவித்துள்ளது</span>.<br /><br /><span>மேலும்</span> <span>பல</span> <span>நாடுகள்</span> <span>இதற்</span><span><span>கு</span></span> <span>கண்டனம்</span> <span>தெரிவித்துள்ளமை</span> <span>குறிப்பிடத்தக்கது</span>.<br /><br /><br /><br /><br /><br /><br /><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj3YY5JpBw5HVykphhyphenhyphenjBzLrwH23ByLsiCMwcptv1QrYnTjWBYM1cQFNo_Nm4s2UvSXlRjwgjUFUQ9NQT8sZghxx0gsS2v0JSVHfnPCehxy7AQlf5vKNHY37YdxQM5vhV2w9Xu-n5bkli8/s1600/02.jpg"><img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 204px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj3YY5JpBw5HVykphhyphenhyphenjBzLrwH23ByLsiCMwcptv1QrYnTjWBYM1cQFNo_Nm4s2UvSXlRjwgjUFUQ9NQT8sZghxx0gsS2v0JSVHfnPCehxy7AQlf5vKNHY37YdxQM5vhV2w9Xu-n5bkli8/s320/02.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5675968478580813186" border="0" /></a><br /><br /><br /><br /><br /></div></div>Unknownnoreply@blogger.com0tag:blogger.com,1999:blog-7375364262058403528.post-67495662786653831762011-11-17T16:53:00.002+05:302011-11-17T16:57:11.984+05:30அஷ்ரப் நகர் காணிப்பிரச்சினை: உரிய ஆவணங்கள் வைத்திருப்போர் வெளியேற்றப்படமாட்டார்கள் அமைச்சர் ஹக்கீமிடம் வனபாதுகாப்பு அதிகாரி உறுதி<a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhMdX2xSeWffEHJ9wStxcTBk-jrpnmmGpwC-QRVYtPn-RRjtUuL98gGU08gRqXzVhXK0Kow_0HBgxyagVk7Ph_T93KX8G1iqrNhI0HKLLJQvKW3UCGejaB_2CFhKbbDJiPCtZqMj566_y4/s1600/91071-radhakrishnantv_blogspot_com.jpg"><img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 100px; height: 75px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhMdX2xSeWffEHJ9wStxcTBk-jrpnmmGpwC-QRVYtPn-RRjtUuL98gGU08gRqXzVhXK0Kow_0HBgxyagVk7Ph_T93KX8G1iqrNhI0HKLLJQvKW3UCGejaB_2CFhKbbDJiPCtZqMj566_y4/s320/91071-radhakrishnantv_blogspot_com.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5675924809268175474" border="0" /></a><br /><br /><br /><br /><div style="text-align: justify;">அம்பாறை மாவட்டத்தில் சர்ச்சைக்குள்ளாகி இருக்கும் அஷ்ரப் நகரின் காணிப் பிரச்சி னையை பொறுத் தவரை அங்கு சட்ட பூர்வமாக வசிப்பவர்களும், சட்ட ரீதியான உறுதிப் பத்திரங்களை யும், உரிய ஆவணங்களையும் தம் வசம் வைத்திருப்போரும் அங்கிருந்து வெளியேற்றப்பட மாட்டார்கள் என்றும் அம்மாவட்டத்திற்கு பொறுப்பான வனப் பாதுகாப்பு அதிகாரி லலித் கமகே. நீதியமைச்சரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங் கிரஸ் தலைவ ருமான ரவூப் ஹக்கீமிடம் தெரிவித்துள்ளார்.<br /><br />அமைச்சர் ஹக்கீமுக்கும், அம்பாறை மாவட்ட வன பாதுகாப்பு அதிகாரி லலித் கமகேயிற்கும் இடையிலான இந்தச் சந்திப்பு கொழும்பில் அமைச்சரின் இல்லத்தில் செவ்வாய்க்கிழமை பிற்பகல் இடம்பெற்றது.<br /><br />இந்தச் சந்திப்பை தொடர்ந்து அடுத்த கட்டமாக வன பாதுகாப்பு உயர் அதிகாரி லலித் கமகே உடன் அட்டாளைச்சேனை பிரதேச சபைத் தலைவர் ஏ.எல்.எம். நகூர் மற்றும் ஒலுவில் பள்ளிவாசல் நிருவாக சபையினர் சந்தித்து கலந்துரையாடவும், பின்னர் வன வள பாதுகாப்பு அமைச்சர் அநுர பிரியதர்சன யாப்பா, தாம் உயர் அதிகாரிகள் மற்றும் பாதிக்கப்பட்ட தரப்பினருடன் பேச்சுவார்த்தை நடத்தவும் தீர்மானிக்கப்பட்டிருப்பதாகவும் அவசியமேற்படின் ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தை நடத்துவதாண்கவும் அமைச்சர் ஹக்கீம் தெரிவித்தார்.<br /><br />இந்தச் சந்திப்பின் போது மாவட்ட வனப் பாதுகாப்பு அதிகாரி வரைபடங்கள் மற்றும் ஆவணங்கள் சகிதம் அமைச்சர் ஹக்கீமிடம் சம்பந்தப்பட்ட பிரதேசத்தில் நில அமைப்பை விளக்கிக் கூறியதோடு, சர்ச்சைக்குள்ளாகியுள்ள இடங்களையும் சுட்டிக்காட்டி விபரித்தார். சட்ட விரோதமான குடியிருப்புகளே பிரச்சினையை ஏற்படுத்தக் கூடியன எனவும் அவர் கூறினார்.<br /><br />சம்பந்தப்பட்ட பிரதேசத்தில் மிக நீண்டகாலமாக வசிப்போர் சட்ட பூர்வமான உறுதிப்பத்திரங்களையும் ஆவணங்களையும் வைத்திருப்பதாகவும், அவர்களை அங்கிருந்து வெளியேற்ற மேற்கொள்ளப்படும் முயற்சி குறித்து மக்கள் அச்சமடைந்துள்ளதாகவும், அதன் விளைவாக பதற்ற நிலை தோன்றியுள்ளதாகவும், அவ்வாறான நடவடிக்கை கைவிடப்பட வேண்டுமென்றும் அமைச்சர் ஹக்கீம் வனப் பாதுகாப்பு அதிகாரியிடம் கூறினார்.<br /><br />குறிப்பிட்ட பிரதேசத்தில் இராணுவ முகாம் அமைக்கப்படுவது பற்றி அமைச்சர் ஹக்கீம் கூறியபோது, அது தற்காலிகமான தென்று தெரிய வருவதாக வனப் பாதுகாப்பு அதிகாரி பதிலளித்தார். படையினர் அங்கு நிலைகொண்டுள்ளது பற்றி அமைச்சர் தெரிவித்த போது அண்மையில் அப் பகுதி மக்கள் நடத்திய ஆர்ப்பாட்டத்தை அடுத்து இராணுவத்தினரது எண்ணிக்கை அப் பிரதேசத்தில் சற்று அதிகரிக்கப்பட்டிருப்பதாக அந்த அதிகாரி மேலும் தெரிவித்தார்.<br /><br />முன்னதாக கடந்த வெள்ளிக்கிழமை இரவு நிந்தவூரில் தமக்கும், அஷ்ரப் நகரில் காணிப் பிரச்சினை காரணமாக பாதிப்புக்குள்ளாகி இருக்கும் மக்களுக்கும் இடையில் இடம்பெற்ற சந்திப்பை தொடர்ந்து, மறு நாள் சனிக்கிழமை தாம் அப்பிரதேசத்திற்கு நேரில் சென்று இராணுவ பிரிகேடியர் சூள அபய நாயக்க மற்றும் கொமாண்டர் உஷான் ஆகியோரை அங்கு வரவழைத்து வன பாதுகாப்பு அதிகாரியுடனும் சம்பந்தப்பட்ட அமைச்சருடனும் கலந்தாலோசித்து இப் பிரச்சினைக்கு சுமுகமான தீர்வை காணும் வரை அம் மக்களை வற்புறுத்தி வெளியேற்ற வேண்டாம் என்றும் கூறியதாகவும் தெரிவித்தார்.<br /><br />சர்ச்சைக்குரியதென கூறப்படும் பிரதேசம் எழுபத்தாறு ஏக்கர் விஸ்தீரணத்தை கொண்டது என்றும், அந்த காணிகளுக்கு சொந்தமான பதினாழு குடும்பத்தினரில் ஏழு குடும்பத்தினர் சம்பந்தப்பட்ட வழக்கில் அவர்களுக்கு சாதகமான தீர்வுகள் வழங்கப்பட்டுள்ள நிலையில் ஏனைய ஏழு குடும்பத்தினர் சம்பந்தப்பட்ட வழக்குகள் விசாரணையில் இருப்பதாகவும் நீதியமைச்சர் ஹக்கீம் ஊடகங்களுக்கு தெரிவித்தார்.<br /><br />இவ்வாறான சூழ்நிலையில் அத்தகையோரை அங்கிருந்து வெளியேற்றுவதற்கு முயற்சி மேற்கொள்ளப் படுமானால், அது முற்றிலும் அநீதியானதென்றும் அவர் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.<br /></div>Unknownnoreply@blogger.com0tag:blogger.com,1999:blog-7375364262058403528.post-42729251780431924422011-11-17T16:32:00.003+05:302011-11-17T16:50:03.243+05:302 மணி நேரத்தில் அடையாள அட்டை ஜனவரி முதல் புதிய நடைமுறை இரட்டைப் பிரஜகீவுரிமை உள்ளோருக்கும் வசதி தாயகம் திரும்புவோரும் விண்ணப்பிக்கலாம்<a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiFa6u_lg30hG1GfGPs_ptrSTLrfbAbuMd23gfuE2cfqQEK43WqXuILChD2p3B1JulGVl8gFvwPTsn2vKJYTcEXPOOB7m_EznCykGjkM6K-xvCnrpHh6Tj6X_rGkX84cl06_T3HcecW7lk/s1600/attai_29.jpg"><img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 300px; height: 200px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiFa6u_lg30hG1GfGPs_ptrSTLrfbAbuMd23gfuE2cfqQEK43WqXuILChD2p3B1JulGVl8gFvwPTsn2vKJYTcEXPOOB7m_EznCykGjkM6K-xvCnrpHh6Tj6X_rGkX84cl06_T3HcecW7lk/s320/attai_29.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5675922970958280306" border="0" /></a><br /><a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiXWdWin_B38ZRMfjDLtb2rHjq7yh_Skb5OPU_6OS6m76VlkCT8gpijpatLdF2cgFyPN0xWRRLeFTlmu6tQGLUHxLfa0sJsRWz5qzRgrbY2rf6YEgiQHQNFQwixfYkLyIIITuHteGXAbf8/s1600/attai_29.jpg"><br /></a><br /><br /><div style="text-align: justify;"><br /><br />'ஒரே நாள்' சேவையின் கீழ் இரண்டு மணி நேரத்தில் தேசிய அடையாள அட்டை வழங்கும் நடவடிக்கை 2012 ஜனவரி மாதம் முதல் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக ஆட்பதிவு திணைக்களத்தின் ஆணையாளர் ஜகத் பீ. விஜேவீர தெரிவித்தார்.<br /><br />தினமும் சுமார் 1000 பேர் ஒரே நாள் சேவையின் கீழ் அடையாள அட்டையை பெற்றுக் கொள்வதற்காக திணைக்களத்துக்கு வருகை தருகின்றனர். திணைக்களத்தின் ஏனைய கருமங்களுடன் ஒரே நாள் சேவை நடவடிக்கைகளை மேற்கொள்ளும் போது காலதாமதம் ஏற்படுவதுடன் விண்ணப்பதாரிகளும் அசெளகரியங்களுக்குள்ளாகின்றனர்.<br /><br />இதன் காரணமாக திணைக்கள பிரதேச கட்டடத்துடன் கூடிய புதிய கட்டடத்தினுள் ஒரே நாள் சேவை மையம் அமையவுள்ளது.<br /><br />விண்ணப்பதாரிகளின் படிவங்களை பெற்றுக்கொள்வது முதல் அடையாள அட்டையை வழங்குவது வரை இலத்திரனியல் முறையில் இலக்கங்கள் வழங்கப்படும். திரையில் தமக்குரிய இலக்கம் தெரிந்தவுடன் விண்ணப்பத்தை ஒப்படைக்கலாம். அதேபோன்று புதிய அடையாள அட்டை 2 மணி நேரத்துள் தயாரானவுடன் விண்ணப்பதாரிக்குரிய இலக்கம் திரையில் தெரிவிக்கப்படும்.<br /><br />உரிய விண்ணப்பதாரி கால் கடுக்க நீண்ட நேரம் வரிசையில் நிற்க வேண்டிய தேவை ஏற்படமாட்டாது. தினமும் பிற்பகல் 2.00 மணி வரை விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படும் எனவும் ஆட்பதிவு ஆணையாளர் ஜகத் பீ. விஜேவீர தெரிவித்தார்.<br /><br />கொழும்பு - 05 கெப்பிட்டிபொல மாவத்தையிலுள்ள ஆட்பதிவு திணைக்களத்தில் நேற்று விசேட செய்தியாளர் மாநாடொன்று நடைபெற்ற போதே ஆணையாளர் ஜகத் பீ. விஜேவீர மேற்கண்டவாறு தெரிவித்தார்.<br /><br />இதேவேளை புலம்பெயர்ந்துள்ள இலங்கையர் தாம் இரட்டைப் பிரஜாவுரிமையை பெற்றிருந்தால் தேசிய அடையாள அட்டையை பெற்றுக் கொள்ள முடியும் எனவும் ஆட்பதிவு திணைக்கள ஆணையாளர் ஜகத் பி. விஜேவீர தெரிவித்தார்.<br /><br />அத்துடன் தமிழகத்திலிருந்து நாடு திரும்பும் தமிழர்களும் தேசிய அடையாள அட்டைக்காக விண்ணப்பிக்க முடியும் என அவர் தெரிவித்தார்.<br /><br />புலம்பெயர்ந்துள்ள எமது இலங்கையர்கள் இரட்டைப் பிரஜாவுரிமை பெற்றிருக்காவிடின் அதற்காக விண்ணப்பித்த பின்னர் பிரஜாவுரிமை கிடைத்த தினத்திலிருந்து அவர் தேசிய அடையாள அட்டையை பெற தகுதியுடையவராக கருதப்படுவார். இரட்டை பிரஜாவுரிமை பெற்றுக்கொண்ட ஒருவர் ஆட்பதிவு திணைக்களத்தின் 009411583122, 009411585043 என்ற தொலைபேசி இலக்கத்துடன் அல்லது 0094 11 593634, 009411583190 என்ற பெக்ஸ் இலக்கத்தின் மூலமோ அல்லது (info@rpd.gov.lk) என்ற ஈமெயில் ஊடாகவோ தொடர்புகொண்டு அறிய முடியும் எனவும் ஆட்பதிவு திணைக்கள ஆணையாளர் தெரிவித்தார்.<br /><br />இதேபோன்று தமிழகத்திலிருந்து நாடு திரும்பும் இலங்கையர் தாங்கள் நாடு திரும்பியதற்கான கப்பல் மூலம் அல்லது விமானம் மூலம் ஆவணத்துடன் தாங்கள் வதியவிருக்கும் பகுதி பிரதேச செயலாளரூடாக தேசிய அடையாள அட்டைக்கு விண்ணப்பிக்க முடியும் என்றும் ஆட்பதிவு திணைக்கள ஆணையாளர் தெரிவித்தார்.<br /></div>Unknownnoreply@blogger.com0tag:blogger.com,1999:blog-7375364262058403528.post-18215782607901277052011-11-17T16:28:00.001+05:302011-11-17T16:28:55.443+05:30நோர்வே அறிக்கையை ஆராய்ந்ததன் பின்னரே நிலைப்பாட்டை அறிவிக்கலாம்: ஐ.தே.க.<img src="http://www.virakesari.lk/news/admin/images/tissa-attanayake_1.jpg" style="border: 0px dotted #FF9933; " align="left" border="0" /><div style="text-align: justify;"> இலங்கையில் முன்னெடுக்கப்பட்ட சமாதான பேச்சுவார்த்தைகளின் தோல்வி தொடர்பில் நோர்வேயில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையை ஆராய்ந்துகொண்டிருக்கின்றோம். அறிக்கையை ஆராய்ந்ததன் பின்னரே அது தொடர்பில் கருத்து வெளியிட முடியும் என்று ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச் செயலாளரும் எம்.பி. யுமான திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்தார்.<br /><br />இலங்கை சமாதான பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்தமை தொடர்பில் நோர்வேயில் அண்மையில் வெளியிடப்பட்ட அறிக்கை தொடர்பில் விபரிக்கையிலேயே திஸ்ஸ அத்தநாயக்க மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.<br /></div>Unknownnoreply@blogger.com0tag:blogger.com,1999:blog-7375364262058403528.post-16806915682581528702011-11-17T16:22:00.000+05:302011-11-17T16:23:21.957+05:30என்னை வீட்டுக்கு அழைத்துச் செல்லுங்கள் "கண்ணீருடன் பெற்றோரிடம் கூறிய ரிஸானா<img src="http://www.virakesari.lk/news/admin/images/rizana-300.jpg" style="border: 0px dotted #FF9933; " align="left" border="0" /><div style="text-align: justify;"> குழந்தையொன்றைக் கொலை செய்ததாகக் கூறி சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள இலங்கைப் பணிப்பெண்ணான ரிஸானாவை அவரது பெற்றோர்கள் சந்தித்தபோது, 'என்னை வீட்டுக்கு அழைத்துச் செல்லுங்கள்" என்று அழுது கொண்டே கெஞ்சியுள்ளார்.<br /><br />தனது தந்தை மற்றும் தாயைக் கண்ட ரிஸான இருவரையும் கட்டிப்பிடித்து கதறி அழுதுள்ளார். எல்லாம் வல்ல அல்லாஹ் எனது குழந்தையைத் திரும்பப் பெற வழி செய்வார் என ரிஸானாவின் தாய் இதன்போது கூறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.<br /><br />ரிஸானாவைக் காப்பாற்ற வேண்டுமாயின் அது குழந்தையைப் பறிகொடுத்த பெற்றோரினால் மாத்திரமே முடியும் என்று சட்ட வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். ரிஸானா இலங்கையை விட்டுச்சென்றபின் முதன்முதலாக நேரில் சந்திப்பதற்கு சந்தர்ப்பம் கொடுத்தமைக்கு நன்றியும் தெரிவித்துள்ளனர்.<br /><br />ரிஸானாவைக் காப்பாற்றும் பொருட்டு இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் தலைவர் கிங்ஸிலி ரணவக்க, வெளிவிவகார அமைச்சின் மேலதிகச் செயலாளர் இப்ராஹிம் அன்சார் மற்றும் மொஹமட் றொப் உட்பட பலர் ரியாத்துக்குச் சென்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.<br /></div>Unknownnoreply@blogger.com0tag:blogger.com,1999:blog-7375364262058403528.post-57144113936297736872011-11-17T16:21:00.001+05:302011-11-17T16:21:23.061+05:30வட, கிழக்கு மீள்குடியேற்றத்துக்காக 1336 மில்லியன் ரூபா ஒதுக்கீடு: கெஹலிய<div style="text-align: justify;"> வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் 97 வீதமானோர் மீள்குடியேற்றப்பட்டுள்ளனர். மேலும் 3110 குடும்பங்கள் மீள்குடியேற்றப்பட உள்ளதோடு மீள்குடியேற்ற நடவடிக்கைகளுக்காக ஆயிரத்து 336 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளரான அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல தெரிவித்தார்.<br /><br />அரசாங்க தகவல் திணைக்களத்தில் சற்றுமுன் நடைபெற்ற அமைச்சரவையின் தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டிலேயே மேற்கண்ட தீர்மானம் அறிவிக்கப்பட்டுள்ளது.<br /><br />முல்லைத்தீவில் ஆயிரத்து 672 குடும்ங்களும் திருகோணமலை மூதூர் பகுதியில் 1272 குடும்பங்களும் மன்னாரில் 166 குடும்பங்களும் மீள்குடியேற்றப்பட உள்ளன.<br /></div>Unknownnoreply@blogger.com0tag:blogger.com,1999:blog-7375364262058403528.post-52644257960833237292011-11-17T16:18:00.001+05:302011-11-17T16:18:27.930+05:30வெள்ளைக்கொடி வழக்கு வெள்ளியன்று தீர்ப்பு<img src="http://www.virakesari.lk/news/admin/images/sarath-fonseka-court.jpg" style="border: 0px dotted #FF9933; " align="left" border="0" /><br /> <br /><div style="text-align: justify;"> முன்னாள் இராணுவத்தளபதியும் கூட்டுப்படைகளின் பிரதானியுமான ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கு எதிராக சட்டமா அதிபர் திணைக்களத்தினால் மூன்று குற்றச்சாட்டுகளை முன்வைத்து தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் தீர்ப்பு கொழும்பு மேல் நீதிமன்றத்தில் நாளை வெள்ளிக்கிழமை வழங்கப்படவிருக்கின்றது.<br /><br />வடக்கில் இறுதிக்கட்ட யுத்தத்தின் போது வெள்ளைக்கொடியுடன் சரணடைய வந்த விடுதலைப் புலிகள் அமைப்பைச்சேர்ந்த முக்கியஸ்தர்கள் பாதுகாப்பு அமைச்சு செயலாளரின் உத்தரவின் பேரில் சுட்டுக்கொல்லப்பட்டதாக முன்னாள் இராணுவத்தளபதி சரத் பொன்சேகா கூறியதாக சண்டே லீடர் பத்திரிகையில் வெளியான செய்தி தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் விசாரணையே ட்ரயல் அட்-பார் முறையில் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.<br /><br />மேல் நீதிமன்ற நீதிபதி தீபாலி விஜயசுந்தர தலைமையிலான எச்.என்.பி.பி வராவெல, சர்பிக் ரஷீன் ஆகிய நீதிபதிகள் குழு முன்னிலையில் நடைபெற்ற மேற்படி வழக்கின் தீர்ப்பை நாளை வெள்ளிக்கிழமை வழங்குவதற்கு நீதிபதிகள் குழு 2011 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 18 ஆம் திகதி தீர்மானித்தது.<br /></div>Unknownnoreply@blogger.com0tag:blogger.com,1999:blog-7375364262058403528.post-86128498060268976332011-11-16T14:12:00.001+05:302011-11-16T14:12:52.613+05:30மீள்குடியமர்த்தப்படாதிருக்கும் மக்கள் : அரசின் திட்டமிட்ட சதி என்கிறார் யோகேஸ்வரன்<img src="http://www.virakesari.lk/news/admin/images/yoheswaran-mp_2.jpg" style="border: 0px dotted #FF9933; " align="left" border="0" /><div style="text-align: justify;"> <br /> அம்பாறை மாவட்டத்துக்குட்பட்ட தங்கவேலாயுதபுரம்இ கஞ்சிகுடிச்சாறு ஆகிய பிரதேச மக்களை மீள்குடியேற்றுவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டு. மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சீ. யோகேஸ்வரன் கோரிக்கை விடுத்துள்ளார்.<br /><br />லண்டன் நலன்புரிச் சங்கத்தின் உதவிக்கரம் அமைப்பின் அனுசரணையில் மாணவர்களுக்கு பாடசாலை உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு தங்கவேலாயுதபுரம் பாடசாலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. அந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.<br /><br />அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்இ தங்கவேலாயுதபுரத்தில் இருந்து 425 குடும்பங்களும்இ கஞ்சிக்குடிச்சாறு கிராமத்திலிருந்து 406 குடும்பங்களும் இடம்பெயர்ந்துள்ளன. இவர்கள் இன்னும் மீள்குடியேற்றப்படவில்லை. இந்நிலையில் அரசாங்கம்இ கிழக்கு மாகாணத்திலிருந்து இடம்பெயர்ந்த அனைத்து மக்களையும் மீள்குடியேற்றிவிட்டோம் என சர்வதேசத்துக்கும் அறிவித்துள்ளது. இது மிகவும் கவலைக்குரிய விடயமாகும்.<br /><br />நாட்டில் சமாதானம் மலர்ந்துள்ள இக்காலப் பகுதியில் இப்பகுதி மக்கள் இதுவரை மீள்குடியேற்றப்படாதுள்ளமை அரசின் திட்டமிட்ட சதி நடவடிக்கை என்றே கருத வேண்டியுள்ளது.<br /><br />ஆகவேஇ மேற்படி கிராமங்களில் சகல அடிப்படை வசதிகளையும் ஏற்படுத்தி அம்மக்களை அங்கு மீள்குடியமர்த்த அரசாங்கம் துரிதமாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென வேண்டுகோள் விடுக்கின்றேன் எனவும் தெரிவித்தார்.<br /></div>Unknownnoreply@blogger.com0tag:blogger.com,1999:blog-7375364262058403528.post-34121412575511634562011-11-16T14:06:00.001+05:302011-11-16T14:06:51.629+05:30மறைந்த தோழர் சிவதாசன் அவர்களுக்கு புளொட் அஞ்சலி-<div style="text-align: justify;">தோழர் சிவதாசன் அவர்களின் மறைவையொட்டி அன்னாருக்கு புளொட் அமைப்பு தனது அஞ்சலியினைத் தெரிவித்துக் கொண்டுள்ளது.<br />தோழர் சிவதாசன் அவர்கள் தனது இளம்பராயத்திலேயே பொதுவுடமைக் கொள்கையினால் ஈர்க்கப்பட்டு இலங்கைக் கம்யூனிஸ்ட் கட்சியில் தன்னை இணைத்துக்கொண்டு இடையறாது ஒடுக்கப்பட்ட மக்களுக்காக குரல்கொடுத்து வந்தவர். அத்துடன் தொழிற்சங்க இயக்கத்திலும் தொழிலாளர் நலன்சார்ந்த போராட்டங்களிலும் அவர் ஆற்றிய பங்கு அளப்பரியது. தீண்டாமைக்கெதிரான போராட்டங்களில் மிகவும் தீவிரமாக ஈடுபட்ட தோழர் சிவதாசன் அவர்கள் தனது இறுதி மூச்சுவரை தான் கொண்டிருந்த கொள்கையினின்று வழுவாது இயங்கியவர்.<br />80களில் தமிழ்த்தேசிய விடுதலைப் போராட்டம் முனைப்புப் பெற்றிருந்த வேளையில் அவர் தன்னை முற்போக்கு சக்திகளுடன் இணைத்துக்கொண்டு இயங்கினார். முதலாவது வடக்கு-கிழக்கு மாகாணசபையிலும் உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர் ஈழ மக்கள் ஜனநாயக கட்சியில் இணைந்து இரண்டு தடவைகள் பாராளுமன்ற உறுப்பினராக தெரிவுசெய்யப்பட்டிருந்தார் அவ்வேளைகளில் அடித்தட்டு மக்களுக்கு தன்னாலான அனைத்து உதவிகளையும் தான் சார்ந்த அமைப்பின் ஊடாக செய்துவந்தார். சிறந்த அரசியல் அனுபவம் கொண்டவரும், அடித்தட்டு வர்க்க மக்களின் சிறப்பான வாழ்வுக்காக பல்வேறு நெருக்குவாரங்களுக்கும் மத்தியிலும் அயராது தன்னை ஈடுபடுத்தி வந்தவருமான தோழர் சிவதாசன் அவர்களின் மறைவு சமூகத்திற்கு ஒரு பேரிழப்பாகும்.<br />அன்னாருக்கு புளொட் அமைப்பினராகிய நாம் எமது இதய அஞ்சலிகளைத் தெரிவிப்பதுடன், அன்னாரின் மறைவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் அவர் சார்ந்த கட்சியினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்ளுகின்றோம்.<br /></div>Unknownnoreply@blogger.com0tag:blogger.com,1999:blog-7375364262058403528.post-86329277788488896582011-11-16T14:02:00.000+05:302011-11-16T14:03:07.633+05:30கொழும்பு பல்கலைக்கழக வளவுக்குள் பிரவேசிக்க விஞ்ஞான பீடத்தினருக்குத் தடை<div style="text-align: justify;"> கொழும்பு பல்கலைக்கழகத்தின் கலை மற்றும் விஞ்ஞான பிரிவு மாணவர்களுக்கு நேற்று 15ஆம் திகதி செவ்வாய்க்கிழமை பகல் 12 மணி முதல் பல்கலைக்கழக வளவுக்குள் உட்பிரவேசிக்கத் தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டுள்ளது என்று பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட மாணவர் ஆலோசகர் பேராசிரியர் பிரேம குமார டி சில்வா தெரிவித்துள்ளார்.<br /><br />நேற்று முன்தினம் இரவு கொழும்பு பல்கலைக்கழக கலை மற்றும் விஞ்ஞான பிரிவு மாணவர்களுக்கு இடையில் ஏற்பட்ட வாக்குவாதம் மோதலில் முடிந்து மூன்று மாணவர்கள் காயமடைந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.<br /><br />அதனால் பல்கலைக்கழகத்தில் முறுகல் நிலை ஏற்படுவதைத் தவிர்க்க இரு பீட மாணவர்களுக்கும் பல்கலைக்கழக வளவுக்குள் பிரவேசிக்க நேற்று தடை விதிக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.<br /><br />அமைதியை நிலை நாட்ட பல்கலைக்கழக வளாகத்தில் பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.<br /></div>Unknownnoreply@blogger.com0tag:blogger.com,1999:blog-7375364262058403528.post-76594370796060241552011-07-13T13:05:00.001+05:302011-07-13T13:05:45.723+05:30வாகரை பிரதேசத்தில் ஆயுதங்கள் மீட்பு<div style="text-align: justify;"> வாகரைப் பிரதேசத்தில் ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.<br /><br />சட்டவிரோத ஆயுதக் குழு ஒன்றினால்பதுக்கி வைக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படும் ரீ56 ரக துப்பாக்கிகள் 35 உள்ளிட்ட பல ஆயுதங்கள் இவ்வாறு கண்டு பிடிக்கப்பட்டதாக இராணுவத்தினர் தெரிவித்துள்ளனர்.<br /><br />துப்பாக்கிகள், விமான ஏவுகணைகள் மற்றும் குண்டுகள் உள்ளிட்ட பல ஆயுதங்கள் இவ்வாறு மீட்கப்பட்டுள்ளன.<br /></div>Unknownnoreply@blogger.com0tag:blogger.com,1999:blog-7375364262058403528.post-6347752589726709562011-07-13T13:04:00.001+05:302011-07-13T13:04:20.040+05:30நோர்வேயிடமிருந்து பணம் வாங்கிய அமைச்சர்களின் பட்டியல் எம்மிடமுண்டு : குணவன்ச<div style="text-align: justify;"> இன்றைய அரசாங்கத்தை நாங்களே உருவாக்கினோம் எனவே 13 ஆவது சீர்திருத்தத்தை அமுல்படுத்தும் அதிகாரம் ஆட்சியாளர்களுக்கு கிடையாது என்று எல்லே குணவன்ச தேரர் தெரிவித்தார். நோர்வேயிடமிருந்து பணம் வாங்கிய அமைச்சர்களின் பட்டியல் எம்மிடமுள்ளது. எனவே அவ்வாறானவர்கள் வாய் திறக்காமல் மௌனமாக இருப்பது நல்லது என்றும் தேரர் சுட்டிக்காட்டினார்.<br /><br />கொழும்பில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம் பெற்ற தேசிய அமைப்புக்களின் ஒன்றியத்தின் ஊடகவியலாளர் மாநாட்டில் உரையாற்றும் போதே எல்லே குணவன்ச தேரர் இதனைத் தெரிவித்தார்.<br /><br />இங்கு தேரர் மேலும் உரையாற்றுகையில்; இந் நாட்டில் வாழும் சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்கள் 13 ஆவது திருத்தத்தை கோரவில்லை. இந்தியாவே பலாத்காரமாக எம் மீது இதனை சுமத்தியது. தமிழ் மக்களுக்கு பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டும் என கூறுகின்றனர். ஆனால் பிரச்சினை என்ன என்பதை தெரிவிக்கப்படவில்லை.<br /><br />லியம் பொக்ஸ், யசூசி அகாசியென வெளிநாட்டவர்கள் அடிக்கடி இலங்கைக்கு படையெடுக்கினற்னர்.<br /><br />இதன் பின்ணியில் சதித்திட்டமொன்று உள்ளது. இன்று சில அமைச்சர்கள் நோர்வேயினை மீண்டும் பிரச்சினைக்கு தீர்வு மீண்டும் இணைத்துக் கொள்ள வேண்டும் என்கிறார்கள். இவ்வாறாக நோர்வேயிடமிருந்து எவ்வளவு பணம் வாங்கினார்கள் என்ற பட்டியல் எம்மிடம் உள்ளது.<br /><br />இவர்கள் யுத்தத்தில் பாதிக்கப்பட்ட படையினருக்கு ஒரு தோடம் பழத்தையேனும் வழங்கியதில்லை. ஆனால் அடிக்கடி நோர்வேக்கு பயணத்தை மேற்கொள்வதில் அக்கறையுடன் செயற்படுவார்கள்.<br /><br />மாகாண சபைகளால் என்ன நன்மைகள் கிடைத்துள்ளது. சைக்கிள் கூட இல்லாதவர்கள் மாகாண சபை உறுப்பினர்களாகி ப்ராடோ சொகுசு வாகனத்தில் பவனி வரும் நிலைமையே உருவானது. இதற்கு வீணாக நாட்டின் பணம் செலவு செய்யப்படுகின்றது என்றார்.</div>Unknownnoreply@blogger.com0tag:blogger.com,1999:blog-7375364262058403528.post-50608373201873288442011-07-13T13:02:00.001+05:302011-07-13T13:02:29.552+05:30அமெரிக்காவின் நிதி குறைப்பு நடவடிக்கையால் பாகிஸ்தானுக்குப் பாதிப்பில்லை: இராணுவம் அறிவிப்பு<div style="text-align: justify;"> <br /> அமெரிக்காவின் நிதி குறைப்பு நடவடிக்கையால், பாகிஸ்தானின் தீவிரவாதத்துக்கு எதிரான நடவடிக்கை பாதிப்பு அடையாது என அந்நாட்டின் இராணுவ செய்தி தொடர்பாளர் மேஜர் ஜெனரல் அத்தர் அபாஸ் தெரிவித்துள்ளார்.<br /><br />அமெரிக்க அரசினால் பாகிஸ்தானுக்கு வருடாந்தம் வழங்கப்பட்ட 2.7 பில்லியன் அமெரிக்க டொலர் தொகையிலிருந்து பாகிஸ்தான் இராணுவத்திற்காக ஒதுக்கப்பட்டிருந்த 800 மில்லியன் டொலரை நிறுத்தியுள்ளதாக அமெரிக்க அரசு தெரிவித்ததையடுத்து கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.<br /><br />அல்-கொய்தா அமைப்பின் தலைவர் ஒசாமா பின்லேடன் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து அமெரிக்கா பாதுகாப்புச் செலவீனங்களை குறைக்க வேண்டும் என அந்நாட்டின் மனித உரிமை அமைப்புகள் கோரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.<br /></div>Unknownnoreply@blogger.com0tag:blogger.com,1999:blog-7375364262058403528.post-80066152440794755792011-07-13T13:00:00.001+05:302011-07-13T13:00:56.385+05:30வடக்கிற்கு செல்வதற்கான பாதுகாப்பு முன் அனுமதி முறை முற்றாக நீக்கம்<div style="text-align: justify;"> வடக்கிற்கு செல்வதற்காக பாதுகாப்பு அமைச்சின் முன் அனுமதியை பெற்றுக்கொள்ளவேண்டும் என்ற நடைமுறை முற்றாக நீக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது. இந்த நடைமுறை நேற்று செவ்வாய்க்கிழமை முதல் அமுல்படுத்தப்பட்டுள்ளதாகவும் அமைச்சு விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.<br /><br />வெளிநாட்டுக் கடவுச்சீட்டை உடையவர்கள் யாழ்ப்பாணம் செல்வதற்கு பாதுகாப்பு அமைச்சின் அனுமதி பெறும்முறை கடந்த சில மாதங்களாக அமுலில் இருந்த அந்த நடைமுறை கடந்த வாரம் நீக்கப்பட்டது.<br /><br />இந்நிலையில் ராஜதந்திரிகள், உள்ளூர் மற்றும் சர்வதேச அரச சார்பற்ற நிறுவன அதிகாரிகள் வடகிற்கு பிரயாணம் செய்வதற்கு முன் அனுமதி பெறவேண்டியிருந்த நடைமுறை நேற்று முதல் நீக்கப்பட்டுள்ளது.<br /><br />எனினும் இராணுவ முகாம்கள் மற்றும் இராணுவ அதிகாரிகளை சந்திக்கச் செல்வதற்கு இன்னும் பாதுகாப்பு அமைச்சு அனுமதியை பெற வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.<br /></div>Unknownnoreply@blogger.com0tag:blogger.com,1999:blog-7375364262058403528.post-28832039616047643212011-07-13T12:58:00.001+05:302011-07-13T12:58:33.132+05:30சிலாபம் வைத்தியசாலை அறுவை சிகிச்சை பிரிவு வைத்திய நிபுணர்கள் வேலைநிறுத்தம்<div style="text-align: justify;"> <br /> சிலாபம் பொது வைத்தியசாலையின் வைத்திய நிபுணர்களும் ஊழியர்களும் மேற்கொண்ட வேலைநிறுத்த போராட்டத்தினால் அறுவை சிகிச்சை நடவடிக்கைகள் இடைநிறுத்தப்பட்ட நிலையில் நோயாளிகள் நீர்கொழும்பிற்கு மாற்றப்பட்டுள்ளனர்.<br /><br />இரண்டு அறுவை சிகிச்சை கூடங்களினதும் குளிரூட்டி பழுதடைந்த நிலையில் அதனை திருத்தித் தருமாறு முன்வைத்த கோரிக்கை நிறைவேற்றப்படாததை அடுத்தே இந்த வேலை நிறுத்த போராட்டத்தில் வைத்தியர்களும் ஊழியர்களும் ஈடுபட்டனர்.<br /><br />சிலாபம் வைத்தியசாலை புத்தளம் மாவட்டத்தின் மிகப்பெரிய வைத்தியசாலையாக விளங்குவதோடு, கல்பிட்டிய, ஆனைமடுவ பிரதேச வைத்தியசாலையிலுள்ள நோயாளிகள் இங்கு மாற்றப்படுகின்றனர்.<br /><br />இங்கு ஒரு நாளைக்கு குறைந்தது 30 அறுவை சிகிச்சைகள் வரை இடம்பெறுவதோடு, இரு அறுவைசிகிச்சை கூடங்களிலும் 7 வைத்திய நிபுணர்கள் சேவையாற்றுவது குறிப்பிடத்தக்கது.</div>Unknownnoreply@blogger.com0tag:blogger.com,1999:blog-7375364262058403528.post-9968863359538099562011-07-13T12:56:00.000+05:302011-07-13T12:57:09.300+05:30ரொஹான் குணரட்ணவுக்கு எதிராகக் கனடியத் தமிழர் பேரவை வழக்குத் தாக்கல்<div style="text-align: justify;"> <br /> இலங்கையில் இருந்து வெளிவரும் லக்பிம பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் ரொஹான் குணரட்ண, கனடியத் தமிழர் பேரவை தொடர்பாகக் கூறிய கருத்துக்களுக்காக, கனடியத் தமிழர் பேரவை கனடாவின் மாகாணங்களில் ஒன்றான ஒன்ராரியோ மாநிலத்தில் இவ்வழக்கினைத் தாக்கல் செய்துள்ளது.<br /><br />சிங்கப்பூரில் உள்ள நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் பாதுகாப்புக் கற்கைகள் பற்றி விரிவுரையாற்றும் ரொஹான் குணரட்ண லக்பிமவுக்கு அளித்த பேட்டியில் கனடியத் தமிழர் பேரவை, கனடாவில் புலிகளின் முதன்மையான முன்ணனி அமைப்பு என்றும், விடுதலைப்புலிகள் கனடியத் தமிழர் பேரவை என்ற பெயரின் கீழ் செயற்பட்டு வருவது குறித்துக் கனேடிய அரசு விசாரணை நடத்தி வருவதாகவும் தெரிவித்திருந்தார். ரொஹான் குணரட்ணாவின் இக் கூற்று உண்மைக்குப் புறம்பானவை என்றும், பொய்களால் சோடிக்கப்பட்டவை என்றும், இவ் வழக்கில் தெரிவிக்கப்பட்டுள்ளது.<br /><br />கனடியத் தமிழர் பேரவை ஆனது, தமிழ்க் கனேடியர்களின் குரலாக ரொரன்ரோ மாநகரத்தில் தலைமையகத்தைக் கொண்டு கனடா முழுவதும் பல் கிளைகளை நிறுவி, கனடாவில் உள்ள மத்திய, மாகாண, மாநகரசபை அரசாங்கங்களுடனும், அரசியல்வாதிகளுடனும் தொடர்புகளைப் பேணி இயங்கி வரும் ஒரு அரசசார்பற்ற நிறுவனமாகும். கனடியத் தமிழர் பேரவை அதன் அங்கத்துவர்களால் தெரிவு செய்யப்பட்ட பல்துறை சார்ந்த கல்விமான்கள், தொழில் விற்பன்னர்ளை உள்ளடக்கிய ஒரு பணிப்பாளர் குழுவினரால் வழிநடத்தப்படுகின்றது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.<br /><br />ரொஹான் குணரட்ணவுக்கு எதிரான இம் மானநஸ்ட வழக்கில் கனடியத் தமிழர் பேரவையின் தலைவர் உமாசுதன் சுந்தமூர்த்தி, கனேடியத் தமிழ் பேரவையின் பேச்சாளர் டேவிட் பூபாலபிள்ளை ஆகியோர் வாதிகளாகவும், ரொஹான் குணரட்ண, அக் கூற்றைப் பிரசுரித்த லக்பிம பத்திரிகை நிறுவனர் ஆகியோர் பிரதிவாதிகளாகவும் சேர்க்கப்பட்டுள்ளனர்.<br /><br />இவ்வழக்கின் ஆவணப் பிரதிகள், சிங்கப்பூரில் உள்ள ஒரு சட்டத்தரணி குழுவினரால், ரொஹான் குணரட்ணவுக்கு சேர்க்கப்பட்டுள்ளன என்பதும், இன்று வரை தனக்கெதிரான வழக்கினை எதிர்த்து அவர் பதில் மனு தாக்கல் செய்யவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.<br /></div>Unknownnoreply@blogger.com0tag:blogger.com,1999:blog-7375364262058403528.post-90742608455041576882011-07-13T12:53:00.000+05:302011-07-13T12:54:00.037+05:302020 இல் சந்திரனுக்கு மனிதனை அனுப்பி நேரடியாக ஆய்வு மேற்கொள்ள சீனா முடிவு<div style="text-align: justify;"> <br /> விண்வெளி ஆராய்ச்சி மற்றும் தொழில்நுட்பத்தில் அமெரிக்கா அளவிற்கு சீனா முன்னேற ஆர்வமாக உள்ள நிலையில், 2020 ஆம் ஆண்டில் சந்திரனுக்கு மனிதனை அனுப்பி அங்கு நேரடியாக ஆய்வுகளை மேற்கொள்ள சீனா முடிவு செய்துள்ளது.<br /><br />சீனா தனக்கென்று விண்வெளியில் ஓர் ஆய்வு மையத்தை அமைக்கத் திட்டமிட்டுள்ளதோடு, அதற்காக பொருட்கள், கருவிகளை ரொக்கட் மூலம் கொண்டு செல்லும் பணிகள் இந்த ஆண்டு இறுதியில் இடம்பெறவுள்ளது.<br /><br />2013 இல் சந்திரனில் சீனா தனது ஆராய்ச்சியை ஆரம்பிக்கும் என எதிர்ப்பார்க்கப்படுவதோடு, அதற்கான நிதியை சீன அரசு ஒதுக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.</div>Unknownnoreply@blogger.com0tag:blogger.com,1999:blog-7375364262058403528.post-52618323344540680352011-07-12T12:52:00.002+05:302011-07-12T12:53:14.412+05:3011 வயது சிறுவனிடம் பிரதேச அரசியல்வாதி பாலியல்<div style="text-align: justify;"> பிரதேச அரசியல்வாதி ஒருவர் 11 வயதுச் சிறுவனை பாலியல் ரீதியாகத் துன்புறுத்தியுள்ள சம்பவம் கொபெஹிகனை என்ற இடத்திலேயே இடம்பெற்றுள்ளது.<br /><br />இச் சம்பவம் குறித்து சிறுவனின் தாயார் செய்த முறைப்பாட்டை அடுத்து அந்த அரசியல்வாதி கைதுசெய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.<br /><br />கடந்த ஞாயிற்றுக்கிழமை சிறுவன் தனது இளைய சகோதரனுடன் வீட்டில் தனிமையில் இருந்துள்ளார். இதன்போது, அப்பக்கமாக வருகை தந்த சந்தேக நபரான கொபெஹிகனை பிரதேச சபையின் எதிர்க்கட்சி உறுப்பினர், தனிமையில் இருந்த மேற்படி 11 வயதுடைய சிறுவன் மீது பாலியல் ரீதியான துன்புறுத்தலை மேற்கொண்டுள்ளார்.<br /><br />தாய் வீட்டிற்குத் திரும்பியதும் பாதிக்கப்பட்ட சிறுவன் தனக்கு நேர்ந்தவற்றைத் தாயாரிடம் எடுத்துக் கூறவே அவர் பொலிஸில் முறைப்பாடு செய்தார். பாதிக்கப்பட்ட சிறுவன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.<br /></div>Unknownnoreply@blogger.com0tag:blogger.com,1999:blog-7375364262058403528.post-65836670139380282782011-07-12T12:49:00.001+05:302011-07-12T12:49:42.657+05:30தப்பிச் சென்ற 40 ஆயிரம் இராணுவத்தினரைத் தேடி வேட்டை: பேச்சாளர்<div style="text-align: justify;"> இராணுவத்திலிருந்து சட்டவிரோதமாக தப்பிச்சென்ற 40 ஆயிரத்துக்கும் அதிகமானவர்களை குறி வைத்து பாரிய தேடுதல் வேட்டை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இவர்கள் நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருப்பதோடு அண்மையில் அதிகரித்து வரும் பல்வேறு வகையான குற்றச் செயல்களின் பின்னணியிலும் தொடர்புபட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது என்று இராணுவ பேச்சாளர் மேஜர் ஜெனரல் உபயமெதவல தெரிவித்தார்.<br /><br />"இதுவரையில் தப்பிச்சென்ற 9 ஆயிரம் பேரை இராணுவ பொலிஸார் கைது செய்துள்ளனர். ஏனையோரையும் விரைவில் கைது செய்து தண்டனை வழங்குவோம். எனவே தப்பிச் சென்ற வீரர்கள் சரணடைந்து சட்டபூர்வமான விலகலைப் பெற்றுக் கொள்ள வேண்டும்" என்றும் அவர் குறிப்பிட்டார்.<br /><br />இது தொடர்பாக இராணுவப் பேச்சாளர் மேலும் கூறுகையில்,<br /><br />"கடந்த யுத்த காலப் பகுதியில் பெருந்தொகையான இராணுவ வீரர்கள் சட்டவிரோதமாக படைகளில் இருந்து தப்பிச்சென்றிருந்தனர். இவர்கள் அனைவரையும் கைது செய்யும் நோக்கில் பல தேடுதல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன. அது மட்டுமன்றி சட்டபூர்வமான விலகலை பெற்றுக்கொள்ள கால அவகாசமும் வழங்கப்பட்டது. ஒரு சிலர் சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்டு இராணுவத்திலிருந்து உத்தியோகபூர்வமாக விலகிக் கொண்டனர்.<br /><br />ஆனால் பெருந்தொகையானோர் சரணடையவில்லை. இதுவரையில் 40 ஆயிரம் பேர் சட்டவிரோதமாக இராணுவத்திலிருந்து தப்பிச் சென்று பொது வாழ்க்கையில் ஈடுபடுகின்றனர். இது இராணுவ சட்டப்படி தண்டனைக்குரிய குற்றமாகும். உத்தியோகபூர்வமான விலகலைப் பெற்றுக்கொள்ளாமல் இராணுவ வீரர்களால் பொது வாழ்லில் ஈடுபட முடியாது.<br /><br />எனவே சட்டவிரோதமாக வெளியில் உள்ள இராணுவ வீரர்கள் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலானவர்கள். உள்நாட்டில் அண்மைக் காலங்களாக நடைபெற்று வரும் கொலை, கொள்ளை, கடத்தல் உட்பட பல்வேறு குற்றச் செயல்களிலும் தப்பிச் சென்ற இராணுவ வீரர்கள் ஈடுபட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. எனவே இவர்களை விரைவில் கைது செய்து இராணுவச் சட்டத்தின் அடிப்படையில் நடவடிக்கை எடுப்போம்" என்றார்.<br /></div>Unknownnoreply@blogger.com0tag:blogger.com,1999:blog-7375364262058403528.post-28165649749808859212011-07-12T12:47:00.000+05:302011-07-12T12:48:13.087+05:30புகலிடம் கோரும் இலங்கையரை வரவேற்கத் தயாரில்லை : நியூசி.பிரதமர் ஜோன் கீ<div style="text-align: justify;"> நியூஸிலாந்திற்கு வரும் வழியில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கையைச் சேர்ந்த சுமார் 85 புகலிடக் கோரிக்கையாளர்களும் வரவேற்கப்படவில்லையென அந்த நாட்டு பிரதமர் ஜோன் கீ தெரிவித்துள்ளார்.<br /><br />கடந்த சனிக்கிழமை இந்தோனேசியாவில் டன்ஜீங் பினாங் கடற்பரப்பில் மேற்படி அகதிகளை ஏற்றிச் சென்ற கப்பல் நங்கூரமிட்டு நின்ற போது அகதிகள் பொலிசாரால் கைது செய்யப்பட்டு இந்தோனேசியாவில் தடுத்து வைக்கப்பட்டிருந்தனர். அவர்கள் கப்பலிலிருந்து இறங்குவதற்கும் மறுத்து வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.<br /><br />"நாங்கள் நியூஸிலாந்திற்கு செல்ல விரும்புகின்றோம் எங்களது எதிர்கால வாழ்க்கை நியூஸிலாந்திலேயே உள்ளது. நாங்கள் நியூஸிலாந்திற்குச் செல்ல வேண்டும்" என எழுதப்பட்ட பதாதைகளை கப்பலிலுள்ள அகதிகள் வைத்திருந்தனர்.<br /><br />"புகலிடக் கோரிக்கையாளர்களின் நிலைமை குறித்து எங்களுக்குத் தெரியும். ஆனால் அவர்களுக்கு நியூஸிலாந்து உதவியளிக்காதென" அந்நாட்டுப் பிரதமர் கூறினார்.<br /><br />அகதிகளில் சிலர் நியூஸிலாந்திற்கு வரவேண்டுமெனக் கூறி கொடிகளையும் பதாதைகளையும் தாங்கியவாறும் காணப்படுவதை என்னால் விளங்கிக் கொள்ள முடியும். அவர்கள் வரவேற்கப்படவில்லையென்பதே எங்களது தகவல் என ஜோன் கீ குறிப்பிட்டார்.<br /></div>Unknownnoreply@blogger.com0tag:blogger.com,1999:blog-7375364262058403528.post-58839169591266255072011-07-11T13:16:00.001+05:302011-07-11T13:16:31.302+05:30நீதி, சுதந்திரமான தேர்தல் வடக்கில் இடம்பெறுவதற்கான சூழல் இல்லை: ஜே.வி.பி. குற்றச்சாட்டு<div style="text-align: justify;"> வட பகுதியில் நீதியானதும் சுதந்திரமானதுமான தேர்தல் இடம்பெறுவதற்கான சூழ்நிலை இல்லாது போயுள்ளதோடு, அரசாங்கத்தின் அடக்குமுறை தலைதூக்கி சிவில் நிர்வாகம் அற்றுப் போயுள்ளது என்று ஜே.வி.பி.யின் பிரசாரச் செயலாளரும் எம்.பி. யுமான விஜித ஹேரத் குற்றஞ்சாட்டினார். நாட்டில் "அரசாங்கம்'' என்பது பெயரளவில் மட்டுமே உள்ளதே தவிர, செயலில் எதுவும் இல்லையென்றும் அவர் தெரிவித்தார்.<br /><br />பெலவத்தையிலுள்ள ஜே.வி.பி.யின் தலைமையகத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கருத்து தெரிவித்தபோதே விஜித ஹேரத் எம்.பி. இதனைத் தெரிவித்தார்.<br /><br />இங்கு அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,<br /><br />வடக்கில், உள்ளூராட்சி சபைத் தேர்தலில் போட்டியிடும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் வேட்பாளர் வீட்டில் நாய் கழுத்து வெட்டப்பட்டு வீசப்பட்டுள்ளது. அத்தோடு வேட்பாளர்களின் வீடுகளில் அச்சுறுத்தல் விடுக்கப்பட்ட சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.<br /><br />எமது ஆதரவாளர்கள் கிளிநொச்சியில் பிரசாரங்களை நடத்தியபோது சிறு இராணுவக் குழுவினரால் தடுக்கப்பட்டுள்ளனர். சுதந்திரமாக பிரசாரங்களை முன்னெடுக்க முடியாத நிலை உருவாகியுள்ளது.<br /><br />வட பகுதிக்கு அண்மையில் கொழும்பிலிருந்து சென்ற அரச தொலைக்காட்சி குழுவினர் அங்குள்ள தாய்மாரை அழைத்து அரசாங்கத்தின் அபிவிருத்திகள் தொடர்பாக பேட்டி எடுத்துள்ளனர்.<br /><br />ஆனால் இப்பேட்டி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தாய்மார் தாம் அனுபவிக்கும் துன்பங்கள் தொடர்பிலும் காணாமல் போன உறவுகள் தொடர்பாகவும் கண்ணீர் மல்க கருத்துக்களை வெளியிட்டுள்ளனர். இதனால் ஏமாந்து போன படப்பிடிப்புக் குழுவினர் ஏமாற்றத்துடன் கொழும்பு திரும்பியுள்ளனர்.<br /><br />வடக்கில் இன்று சிவில் நிர்வாகம் இல்லை. அரசாங்கத்தின் அடக்கு முறையே தலைதூக்கியுள்ளது. நாட்டில் இன்று அரசாங்கம் என்பது பெயரளவிலேயே உள்ளது. செயலில் எதுவும் இல்லை. மக்கள் பிரச்சினைகளை அடையாளம் கண்டு தீர்வுகளை வழங்க முடியாமல் உள்ளது.<br /><br />யுத்தம் முடியட்டும் சம்பள உயர்வை வழங்குகிறோம். வாழ்க்கைச் செலவை குறைப்போம். வரிகளை குறைப்போம், மக்கள் மீது சுமைகளை சுமத்தமாட்டோமென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அரசாங்கம் மக்களுக்கு அறிவித்தது.<br /><br />இன்று யுத்தம் முடிந்து இரண்டு வருடங்கள் கடந்து விட்டது. எதுவுமே நிறைவேற்றப்படவில்லை.<br /><br />ஜனாதிபதியின் பதவிக் காலத்தை நீடிக்கும் சட்டத்தை அமுல்படுத்த வேண்டும் என்றார்கள். அதுவும் நிறைவேற்றப்பட்டது. ஸ்திரமான அரசாங்கம் தேவை என்றார்கள். அதனையும் பெற்றுக் கொண்டனர்.<br /><br />சிறப்புரிமைகள் சலுகைகளை வழங்கி மூன்றிலிரண்டு பெரும்பான்மையையும் பெற்றுக் கொண்டனர். ஆனால் மக்களுக்கு சலுகைகள் எதுவும் வழங்கப்படவில்லை. மாறாக சுமைகளையே அதிகரித்துள்ளனர். நுரைச்சோலை, கொத்மலை அனல் மின் நிலையங்கள் பல இலட்சம் ரூபா செலவில் கோலாகலமான வைபவங்களை நடத்தி ஜனாதிபதியால் திறந்து வைக்கப்பட்டது.<br /><br />நாட்டில் எதிர்காலத்தில் மின் துண்டிப்பு என்ற பேச்சுக்கே இடமில்லை எனத் தெரிவித்தனர். ஆனால் இன்று பொதுமக்களுக்கு அறிவிக்காமலேயே மின் துண்டிப்பு மேற்கொள்ளப்படுகிறது. இலங்கை மின்சார சபை திறைசேரிக்கு 2000 மில்லியன் ரூபா கடனை செலுத்த வேண்டியுள்ளது.<br /><br />ஊழியர்களின் சம்பள நிலுவை 900 மில்லியன் ரூபா செலுத்தப்படாதுள்ளது. பல கோணங்களில் மின்சார சபை நெருக்கடியில் சிக்கியுள்ளது. அனல் மின்நிலையங்கள் இயங்காமையின் பின்னணியில் "சதிகாரரர்கள்'' இருப்பதாக அமைச்சர் தெரிவிக்கின்றார்.<br /><br />அரசாங்கத்தின் இயலாமையை மூடி மறைப்பதற்கு ""சதித் திட்டம்'' என்ற வார்த்தை தாரக மந்திரமாக பயன்படுத்தப்படுகிறது.<br /><br />முன்னாள் சுகாதார அமைச்சரும் இந்நாள் சுகாதார அமைச்சரும் டெங்கை முற்றாக ஒழிப்போம் பி.ரி.ஐ. பக்டீரியாவை பயன்படுத்துவோம் என்றெல்லாம் உறுதி மொழிகளை வழங்கினர்.<br /><br />ஆனால் டெங்கு நோயாளர்களின் தொகை 11,110 ஆக அதிகரித்துள்ளது. 82 பேர் மரணமடைந்துள்ளனர்.<br /><br />ஒவ்வொரு வாரத்திலும் 900 டெங்கு நோயாளர்கள் கண்டு பிடிக்கப்படுகின்றனர். இவ்வாறு முழு நாடுமே சீர்குலைந்து சின்னாபின்னமாகியுள்ளது. பொருளாதாரம் பின்னடைவைக் கண்டுள்ளது.<br /><br />ஆனால் அரசாங்கத்திடம் எதுவிதமான திட்டங்களும் இல்லை. கடந்த உள்ளூராட்சி சபைத் தேர்தல் நடந்து முடிந்த பின்னர் எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டது. இந்த உள்ளூராட்சி சபைத் தேர்தல்களுக்கு பின்னரும் விலையேற்றங்கள் இடம்பெறும்.<br /><br />எதுவிதமான நிர்வாகத் திறனும் இல்லாத மக்கள் மீது சுமைகளை அதிகரிக்கும் இந்த அரசாங்கத்தை மக்கள் தேர்தலில் தோல்வியøடயச் செய்ய வேண்டும் என்றார்.</div>Unknownnoreply@blogger.com0