31 ஆகஸ்ட், 2010

சரத் பொன்சேகாவின் விசாரணை ஒத்திவைப்பு

நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா தொடர்பான இரண்டாவது இராணுவ நீதிமன்ற விசாரணைகள் நாளை பிற்பகல் 2 மணி வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில் சுகவீனமுற்றதன் காரணமாக நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா இன்று நீதிமன்றில் முன்னிலையாகவில்லையென இராணுவ தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும் இங்கே தொடர்க...

அதிகாரம் உரியமுறையில் பயன்படுத்தப்படவேண்டும் - ஜனாதிபதி

அதிகாரத்தை உரிய முறையில் பயன்படுத்த வேண்டும் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

சப்ரகமுவ மாகாணத்தில் இன்று இடம் பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்.

அதிகாரம் நிரந்தமற்றது, அதிகாரங்கள் மூலம் கிடைக்கபெறும் பிரதிலாபங்கள் தொடர்ந்து நீடிக்குமா? என்பது சந்தேகமே எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நிதி கொடுக்கல் வாங்கல்களின் போது அரச சேவையாளர்கள் பொறுப்;புடன் செயற்பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை தம்மால் முன்னெடுக்கப்படும் கொடுக்கல் வாங்கல்கள், அரச ராஜதந்திர முறையில் இடம்பெறுவதாக ஜனாதிபதி குறிப்பிட்டார்.

அரச சேவையாளர்கள் பொறுப்பற்ற முறையில் கொடுக்கல் வாங்கல்களில் ஈடுப்படுவார்களானால், பல்வேறு இன்னல்கள்களுக்கும் தண்டனைக்கும் முகங்கொடுக்க வேண்டும் எனவும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ குறிப்பிட்டார்.
மேலும் இங்கே தொடர்க...

அரசியல் அமைப்பு மாற்றத்திற்கு ஆதரவு வழங்காவிட்டால் ஐ.தே.க மேலும் பலவீனமடையும்: அப்துல்காதர்

புதிய அரசியல் அமைப்பு மாற்ற யோசனைகளுக்கு ஐ.தே.க. ஆதரவு தெரிவிக்காவிட்டால் ஐ.தே.க. எதிர்காலத்தில் மேலும் பலவீனம் அடைந்து விடும் என்று கண்டி மாவட்டப் பாராளுமன்ற அங்கத்தவர் ஏ.ஆர்.எம்.அப்துல்காதர் கம்பளையில் வைத்துத் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது-

ஐ.தே.க. அங்கத்தினர் பலர் மேற்படி யோசனைக்கு ஆதரவு தெரிவிக்கவுள்ளனர். இதற்கு ரணில் விக்கிரமசிங்க ஒரு சந்தர்ப்பம் வழங்காது விட்டால் இன்னும் பல அங்கத்தவர்கள் கட்சியை விட்டும் நீங்குவர். இதனால் கட்சி சின்னாபின்னமாகி விடும். பல பாராளுமன்ற அங்கத்தவர்களை இழப்பது தவிர்க்க முடியாத ஒன்றாகி விடும் என்று கூறினார்.

ரணில் விக்கிரமசிங்க யாரை நம்பி ஐ.தே.க. ஆதரவாளர்களை கைவிட்டாரோ அவர்கள் இப்போது ரனில் சிக்கிரமசிங்கவை கைவிட்டு விட்டனர்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கம்பளையிலுள்ள எனது சிறிய வீட்டிற்கு வந்தார். இது நாட்டின் இராஜா ஒரு குடிசைக்கு வந்த மாதரியாகும். இது சாதாரண விடய மல்ல. இந்நாட்டு முஸ்லிம்கள் அனைவரையும் ஜனாதிபதி கௌரவித்ததாகவே நான் கருதுகிறேன் என்றார்;.
மேலும் இங்கே தொடர்க...

எமது முயற்சியில் ஒரு பங்காளராக இணைந்துகொள்ளுமாறு உங்களை அழைக்கும் நோக்குடன் இந்த மடலை வரைகிறேன்.

NERDO, President Mr.S.Thavarathinam

அன்புடையீர்,

போருக்குப் பிந்திய மீள் கட்டுமானம் மற்றும் போரினால் பாதிப்புற்றவர்களுக்கான வலுவூட்டல் செயற்பாடுகள் மூலம் எமது மக்கள் எதிர்கொண்ட துன்பங்களிலிருந்து அவர்களை விடுவிக்கும் எமது முயற்சியில் ஒரு பங்காளராக இணைந்துகொள்ளுமாறு உங்களை அழைக்கும் நோக்குடன் இந்த மடலை வரைகிறேன்.
ஒவ்வொரு தேசமும் தனிச் சிறப்பு வாய்ந்த துன்பச் சூழல்களுடன் போராடிக்கொண்டிருக்கின்றன. தமிழர்களின் இன்றைய துயரத்தை உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் இருக்கும் அனைத்துத் தமிழர்களினதும் துணையுடனே கையாள முடியும். இது மனிதாபிமான நோக்கத்தைக் கொண்ட ஒரு முயற்சி என்பதுடன், சுயகௌரவம், சகோதரத்துவம், நீதியான சமாதானம், வறுமை ஒழிப்பு என்பவற்றையும் இலக்காகக் கொண்டது என்பதை உறுதிப்படுத்துகிறோம்.
உங்களுடைய உதவி இந்த விடயத்தில் மிகவும் அவசரமாகத் தேவைப்படுகிறது. உங்களுடைய நேரடிப் பங்களிப்புடன், அறிவுசார், பொருளாதார மற்றும் திட்ட ஆலோசனைகளையும் உங்களிடம் நாம் வேண்டி நிற்கிறோம். உங்களுடைய அனுபவங்களுடன் இந்த உயர்ந்த இலக்கை அடைய நாம் விரும்புகிறோம்.
கருத்திட்டங்களை அமைப்பதில் நாம் உங்களுக்கு ஒத்துழைப்பு வழங்குவதுடன், அவற்றை நடைமுறைப்படுத்துவதிலும், அடைவுகளை கண்காணிப்பதிலும், அவை வெற்றிகரமாகச் செயற்படுவதை உறுதிப்படுத்துவதிலும் நாம் உங்களுக்குத் துணை நிற்போம். கணக்கு விபரங்களை கிரமமாக உங்களுக்கு அறியத்தருவதுடன், கணக்காய்வுகளையும் நாம் மேற்கொள்வோம். மக்களின் தேவைகளை அடிப்படையாகக் கொண்டு பொருத்தமான திட்டங்களை தெரிவசெய்யும் சுதந்திரம் உங்களுக்க உண்டு. திட்டம் அமுலாக்கப்படும் இடத்துக்கு நீங்கள் நேரில் செல்ல முடியும் என்பதுடன், அங்கு என்ன நடைபெறுகிறது என்பதை நேரில் கண்டறிவதுடன், விரும்பினால் நீங்களே அதனை முன்னெடுத்துச் செல்லவும் முடியும்.
திட்டத்தின் ஆரம்பத்திலிருந்து முடிவு வரையில் வெளிப்படைத்தன்மை பிரதான கொள்கையாக இங்கு கடைப்பிடிக்கப்படும்.
எங்களுடைய மக்கள் மிகவும் மனிதநேயமற்ற ஒரு யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு, அதிலிருந்து மிகுந்த சிரமங்களில் மத்தியில், பலரது உயிர்களையும், அவயவங்களையும் காவு கொடுத்து நிற்கின்றனர். உள நெருக்கீடுகளினாலும், வெளியில் சொல்ல முடியாத துயரங்களினாலும் அவர்களது வாழ்வு முடமாகிப்போயுள்ளது.
எவ்வாறாயினும், இந்தத் துயரங்களிலிருந்து நாம் மீண்டெழுந்து, சமத்துவமான, பாதுகாப்பான, சுயகௌரவத்துடன் கூடிய, சமாதானமான ஒரு வாழ்வை நோக்கி நாம் முன்னோக்கிச் சென்றாகவேண்டும்.
எங்களுடைய மக்களுடைய தேவைகள் வரையறையற்றவை. அனாதை இல்லங்களிலிருந்து முதியோர் இல்லங்கள் வரையிலும், உடல் ரீதியாகவும், உள ரீதியாகவும் பாதிக்கப்பட்ட அனைவருக்காகவும், நிவாரணப் பணிகளிலிருந்து புனர்வாழ்வுத் தேவைகளை நோக்கி அவர்களது வாழ்வை நகர்த்துவதற்கு நம் ஒவ்வொருவருக்கும் இங்கு ஒரு வகிபாகம் உண்டு.
எங்களுடைய வரலாற்றின் இந்த முக்கியமான கட்டத்தில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்துவதற்கு எம்முடன் இணைந்துகொள்ளுங்கள். எமது இளம் சமுதாயம் பல தசாப்தங்களாக தமது கல்வியை இழந்து நிற்கிறது. ஆரம்பப் பாடசாலைகளிலிருந்து உயர் கல்வி வரையிலும், தொழிற்கல்வியிலிருந்து தொழில்நுட்பப் பயிற்சி வரையிலும் அவசரமாக பல செயற்பாடுகளை மேற்கொள்ளவேண்டியுள்ளது.
திறன்மிக்க, கல்வியறிவுடைய பணியாளர்கள் இன்மையால் எமது சமூகத்தின் வளர்ச்சி பாதிக்கப்பட்டுள்ளது. தொழில்முறைசார் கல்வியும், பயிற்சியும் இல்லாமல் எமது மக்களின் வாழ்வை மீளக் கட்டியெழுப்பும் பணிகளை முன்னோக்கி நகர்த்த முடியாது. சிறையிலுள்ள ஆயிரக்கணக்கான முன்னாள் விடுதலைப் புலிப் போராளிகள் தமது வாழ்வை முன்கொண்டு செல்வதற்கு அவர்கள் தொழில்முறைசார் கல்வியைப் பெறவேண்டியிருக்கிறது. போரினால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களை சமூக பொருளாதார ரீதியாக கட்டியெழுப்புவதன் மூலமே பாதிக்கப்பட்ட ஒவ்வொருவரது வாழ்விலும் இயல்புத்தன்மையைக் கொண்டுவர முடியும்.
இதுதான் எமது பிரதான இலக்கு.
ஏராளமான விதவைகளுக்கும், அங்கவீனர்களுக்கும் வாழ்வாதாரங்களை வழங்க உங்கள் உதவி தேவைப்படுகிறது. வன்னி மற்றும் வாகரைப் பிரதேசங்களைச் சேர்ந்த மக்கள் தமது சொந்த நிலங்களிலேயே ஏழைகளாக்கப்பட்டுள்ளதுடன், பலர் வேறிடங்களுக்குச் சென்றுமுள்ளனர். பெரும்பாலான மக்கள் வறுமைக் கோட்டுக்குக் கீழே வாழ்ந்து வருகின்றனர். சரியான நேரத்தில் இவர்களுக்கு ஏதாவது செயல்பூர்வமான உதவிகள் கிடைத்தாலொழிய, இவர்கள் ஒரு நிரந்தர வெறுமைக்குள் தள்ளப்பட்டுவிடுவார்கள்.
இவர்கள் தமது வாழ்வை மீண்டும் ஆரம்பிப்பதற்கு எதையுமே இப்போது கொண்டிருக்கவில்லை. தொடர்ச்சியான புறக்கணிப்பினால், இவர்கள் தமது நம்பிக்கையை இழந்து வருகிறார்கள். அவர்கள் கொண்டிருக்கிருக்கும் ஒரே நம்பிக்கை நாம்தான். எம்மால் இவர்களுக்கு உதவ முடியாவிட்டால், வேறு எவர்தான் உதவுவர்?
மேலும் இங்கே தொடர்க...

யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு எகெட் நிறுவனம் உதவி



யுத்தத்தினால் இடம்பெயர்ந்து மீளக்குடியமர்த்தப்பட்டுள்ள வாகரைப்பிரதேச செயலாளர் பிரிவின் மிகவும் பின் தங்கிய கிராமமான தோனிநாட்ட மடுக்குளம் கிராம மக்களுக்கு எகெட் நிறுவனத்தினால் உலர் உணவுப்பொருட்கள் வழங்கப்பட்டன.

தமிழ் தேசயக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.லோகேஸ்பரன், மற்றும் வாகரை பிரதேச செயலாளர் எஸ்.ராகுளநாயகி ஆகியோரின் வேண்டு கோளின் பேரில் இவ் உலர் உணவுப்பொருட்கள் வழங்கப்பட்டன.

இக்கிராமத்திலுள்ள 48 குடும்பங்களுக்கான உலர் உணவுப்பொருட்கள் வழங்கப்பட்டதாக எகெட் நிறுவனத்தின் ஊடகப் பொறுப் பொறுப்பதிகாரி மைக்கல் தெரிவித்தார்.

இவ் உலர் உணவுப்பொருட்கள் வழங்கும் நிகழ்வில் அப்பகுதியின் இராணுவ முகாம் பொறுப்பதிகாரி மற்றும் கிராம உத்தியோகத்தர் எஹெட் நிறுவன உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்
மேலும் இங்கே தொடர்க...

பாக்., ஆக்கிரமிப்பு காஷ்மீரில் சீன படைகள்; இந்தியா கவனத்துடன் ஆய்வு செய்கிறதாம்





புதுடில்லி: பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் சீன படைகள் குவிக்கப் பட்டிருப்பதாகவும், இந்திய, பாக்., சர்வதேச எல்லையில் சீன படையினர் நோட்டமிட்டதாகவும் வந்த செய்தியை அடுத்து இது குறித்து கவனமாக ஆய்வு செய்து , உண்மை இருக்கிறதா என உரிய முறையில் கண்காணிக்கும் என இந்திய வெளியுறவு துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.



கடந்த 26 ம் தேதி நியூயார்க் டைம்ஸ் பத்திரிகை இந்த தகவலை வெளியிட்டிருந்தது. இது குறித்து மத்திய அரசு கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் ரோடு மற்றும் ரயில் பாதை அமைப்பது தொடர்பான பணியில் ஏழாயிரம் முதல் 11 ஆயிரம் சீன படை வீரர்கள் அங்கு குவிந்ததாகவும் கூறப்பட்டுள்ளது. சீன தனது போக்குவரத்து பலத்தை வலுப்படுத்தும் நோக்கில் இந்த ஏற்பாடு செய்யப்படுவதாகவும் கூறப்படுகிறது. பாக்., கில் சீனபடைகள் கடல்படை தளம் அமைத்துள்ளதாகவும் தெரிகிறது. இதன் மூலம் கல்ப் பகுதிகளுக்கு எளிதில் செல்ல முடியும் .



பாக்., ஆக்கிரமிப்பு காஷ்மீரில் எந்தவொரு பணியும் செய்ய சீனா உதவி செய்யக்கூடாது என்றும் இந்திய தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் சீன இவ்வாறு களம் இறங்கியிருக்கிறது.

இந்த விஷயம் குறித்து வெளியுறவு துறை அமைச்சக செயலர் விஷ்ணுபிரசாத் கூறுகையில் இதில் உண்மை இருக்கிறதா என ஆய்ந்து வருகிறோம். இருக்கும் பட்சத்தில் பாதுகாப்பு விஷயத்தில் இந்தியா தக்க நடவடிக்கை எடுக்கும் என்று கூறியுள்ளார்.



சீன படைகள் நடமாட்டம் குறித்து பா.ஜ., மூத்த தலைவர்களில் ஒருவரான யஸ்வநத்சின்கா கூறுகையில், சீன படைகள் இந்த அளவிற்கு அத்துமீறி நடந்திருப்பதன் மூலம் ஐக்கியமுற்போக்கு கூட்டணி ஆட்சியின் பலவீனம வெளிச்சத்திற்கு வந்துள்ளது என குறை கூறியுள்ளார்.
மேலும் இங்கே தொடர்க...

ஹைதராபாத் சார்மினார் கட்டடத் தூண் இடிந்து விழுந்தது

ஹைதராபாத்திலுள்ள உலகப்புகழ் பெற்ற சார்மினார் கட்டிடத்தின் தூண் ஒன்று ஞாயிறன்று 10 மணியளவில் பயங்கர சத்தத்துடன் இடிந்து விழுந்தது.

இதன் 4 தூண்களும் அழகிய கலை வேலைப்பாடுகளுடன் கட்டப்பட்டவை. இதற்கு சார்-4, மினார்-தூண் எனப் பெயரிட்டுள்ளனர்.

இந்தக் கட்டிடம் 400 ஆண்டுகள் பழைமை வாய்ந்தது. எனவே தான் இதைக் காண உலகம் முழுவதிலும் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் ஹைதராபாத்தில் குவிகிறார்கள்.

இந்நிலையில் ஞாயிறன்று இரவில், தூணின் ஒரு பகுதி பயங்கர சத்தத்துடன் கீழே இடிந்து விழுந்தது. இதைப் பார்த்ததும் சுற்றுலா பயணிகள், வியாபாரிகள் அலறியடித்து ஓடினர்.

கட்டிடம் இடிந்தபோது எவரும் அருகில் இருக்கவில்லை. இதனால் உயிரிழப்பு தவிர்க்கப்பட்டது.

கடந்த 2 மாதமாக ஹைதராபாத்தில் மழை பெய்து வருகிறது. மேலும் சார்மினார் கட்டிடத்தில் ஆல மரம், அரசமரம் போன் றவை ஆங்காங்கே வளர்ந்துள்ளன.

இதனால்தான் தூணின் ஒரு பகுதி இடிந்திருக்கும் என்று சார்மினார் பகுதி வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

ஹைதராபாத்தைச் சேர்ந்த முகமது அயூப் என்பவர் கூறுகையில்,

"400 ஆண்டுகள் பழைமை வாய்ந்த சார்மினார் கட்டிடத்தை அரசு முறையாகப் பராமரிக்கவில்லை. இதனால் அக்கட்டிடம் எந்த நேரத்திலும் முழுமையாக இடிந்து விழும் அபாயம் உள்ளது" என்றார்.

நேற்றும் இன்றும் சார்மினார் கட்டிடத்தில் ஏற பயணிகள் தயக்கம் காட்டி வருகின்றனர். இதனால் அங்கு சுற்றுலாப் பயணிகள் கூட்டம் குறைவாக இருந்ததாக ஹைதராபாத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும் இங்கே தொடர்க...

கனடா நோக்கி மேலும் ஒரு கப்பல் பயணம்



சட்டவிரோத ஆட்கடத்தல் நடவடிக்கைகளை மேற் கொள்ளும் நோக்கில் மேலும் ஒரு கப்பல் தாய்லாந்தில் இருந்து கனடா நோக்கி பயணிக்க இருப்பதாக தெரிவிக்க ப்பட்டுள்ளது.

'கிளோப் அன்ட் மெயில்"என்ற சஞ்சிகை இந்த தகவலை வெளியிட்டு ள்ளதுடன், அந்த கப்பலில் பயணிக்க இருப்பவர்களின் பெரும் பாலானோர் இலங்கை தமிழர்கள் எனவும் தெரிவித்துள்ளது.

தாய்லாந்திற்கான இரண்டு வார கால சுற்றுலா வீஸா பெற்று பாக்கோக் வரும் இலங்கையர்கள், பின்னர் அங்கிருந்து கனடா நோக்கி, சட்ட வீரோத ஆட் கடத்தல் படகு மூலம் செல்வதாக அந்த செய்தியில் தெரிவிக்கப்படுகிறது.

சுற்றுலா பயணிகளாக வரும் இவர்கள் தங்கியிருக்கும் தமது விடுதிகளை விட்டு அதிகளவில் வெளியேறுவது இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை, இதே போன்ற உத்தியிலோயே சன் சீ பக்கலும் கனடாவை சென்றுள்ளதாக தாய்லாந்து காவல் துறையினர் தெரிவித்ததாக அந்த செய்தியில் குறிப்பிடப் பட்டுள்ளது.

இவர்கள், பாக்கொக்கில் இருந்து தெற்கே உள்ள மீன்பிடி பிரதேசமான சொங்கால சென்று அங்கிருந்தே கனடா சென்றுள்ளதாக தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் கனடா சென்றடைந்துள்ள சன் சீ கப்பல் அகதிகள் தொடர்பான விசாரணைகள் தொடர்ந்தும் இடம் பெறுவதாக கனேடிய தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த கப்பலில் பயணித்த ஒவ்வொரு பயணியிடமிருந்தும் சராசரியாக 50 ஆயிரம் டொலர்கள் அற விட்டிருப்பதாக கனேடிய பொது பாதுகாப்பு துறை அமைச்சர் விக் டோஸ் தெரிவித்துள்ளார்.

இதனடிப்படையில் இரண்டு கோடி டொலர்களுக்கு மேல் இந்த பயணிகள் செலுத்தியிருக்கலாம் என அவர் சந்தேகம் வெளியிட்டுள்ளார்.
மேலும் இங்கே தொடர்க...

இந்திய வெளியுறவுச் செயலாளர் நிருபமா ராவ் வட பகுதிக்கு விஜயம்




நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இலங்கை வந்துள்ள இந்திய வெளியுறவுச் செயலாளர் நிருபமா ராவ் அடங்களான உயர் மட்டக் குழுவினர் இன்று வட பகுதிக்கு விஜயம் செய்து, அங்கு முன்னெடுக்கப்படும் அபிவிருத்திப் பணிகளை பார்வையிட உள்ளனர்.

இந்திய வெளியுறவுச் செயலாளர் அடங்களாக குழுவினர் நேற்று இரவு கட்டுநாயக்க விமான நிலையத்தில் வரவேற்கப்பட்டனர்.

நிருபமா ராவ் இன்று வவுனியா, கிளிநொச்சி மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய பிரதேசங்களுக்கு விஜயம் செய்கிறார். மெனிக்பாம் முகாமிற்கு சென்று இடம்பெயர்ந்த மக்களின் நலன்குறித்து நேரில் பார்வையிட உள்ள அவர், பின்னர் மகிழங்குளம் பகுதியில் கண்ணிவெடி அகற்றும் பணிகளை அவதானிக்க உள்ளார்.

யாழ், கிளிநொச்சி ஆகிய பகுதிகளுக்கும் செல்ல உள்ள அவர் அப்பகுதியில் முன்னெடுக்கப்படும் அபி விருத்திப் பணிகளையும் பார்வையிடுவார்.

நாளை திருகோணமலைக்குச் செல்ல உள்ள நிருபமா ராவ் நாளை மறுதினம் ஜனாதிபதி வெளியுறவு அமைச்சர் ஆகியோரை சந்திப்பார்.
மேலும் இங்கே தொடர்க...

வடமாகாண விவசாய அமைச்சு கிளிநொச்சிக்கு இடமாற்றம்

வட மாகாண விவசாய, நீர்ப்பாசன, கால் நடைகள், மீன்பிடி மற்றும் காணி அமைச்சும், அதன் கீழுள்ள சகல திணைக் களங்களும் நாளை (1) முதல் கிளிநொச்சி நகருக்கு இடமாற்றப்படுகின்றது.

இதற்கமைய நாளை புதன்கிழமை தொடக்கம் குறித்த அமைச்சும் அதன் கீழ் இயங்கும் சகல திணைக்களங்களும் கிளிநொச்சியிலிருந்து செயற்படவுள்ளதாக வட மாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜி. ஏ. சந்திரசிறி தெரிவித்தார்.

சுமார் 30 மில்லியன் ரூபா செலவில் இந்த அமைச்சுக்கான அலுவலகமும், திணைக்களத்துக்கான கட்டடங்களும் புனரமைக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். வடக்கு, கிழக்கு மாகாணங்கள் தனித் தனியாக பிரிக்கப்பட்ட பின்னரும் கூட வட மாகாண சபையின் சகல அமைச்சுக்களும் திணைக்களங்களும் திருகோணமலை, வரோதயர் நகரிலேயே இயங்கி வருகின்றன.

இந்நிலையில் தற்போது அரசாங்கம் வடக்கில் முன்னெடுத்துவரும் அபிவிருத்தி வேலைத்திட்டம், விவசாயத்திட்டங்களை உரிய முறையில் உடனுக்குடன் நடை முறைப்படுத்தும் நோக்குடனே இந்த அமைச்சை உடனடியாக கிளிநொச்சிக்கு மாற்றத் தீர்மானித்ததாக அளுநர் மேலும் தெரிவித்தார்.

மாகாண அமைச்சின் செயலாளர் சி. பத்மநாதன் தலைமையில் அமைச்சின் செயற்பாடுகளும், விவசாய, நீர்ப்பாசன, கால்நடை, காணி ஆகிய திணைக்களங்களும் செயற்படவுள்ளன.

இம்முறை பெரும் போகத்தின் போது வட மாகாணத்தில் அதிக நெற்செய்கையை மேற்கொள்ளவும் மேலதிகமாக 40 ஆயிரம் ஏக்கரில் பயிர்ச்செய்கையை மேற்கொள்ளவும் அரசாங்கம் தீர்மானித்துள்ளது என் றும் வட மாகாண ஆளுநர் தெரி வித்தார்.
மேலும் இங்கே தொடர்க...

வவுனியா மெனிக்பாம் நிவாரணக் கிராமம் : முல்லைத்தீவு மக்களை விரைவில் மீளக் குடியமர்த்துமாறு பசில் பணிப்பு






வவுனியா மெனிக்பாம் நிவாரணக் கிராமத்தில் எஞ்சியுள்ள முல்லைத்தீவு மாவட்டத்தைச் சேர்ந்த 8607 குடும்பங்களையும் துரிதமாகக் குடியமர்த்த தேவையான நடவடிக்கைகளை மேற்கொள் ளுமாறு அமைச்சர் பசில் ராஜபக்ஷ முல்லைத்தீவு அரசாங்க அதிபர் வேதநாயகத்துக்குப் பணிப்புரை விடுத்துள்ளார்.

முல்லைத்தீவு மாவட்டத்திற்கு நேற்று முன் தினம் நேரில் சென்ற அமைச்சர் பசில் ராஜபக்ஷ மாவட்ட அரசாங்க அதிபர் வேதநாயகம் தலைமையில் உயர் மட்ட அதிகாரிகளை சந்தித்துக் கலந்து ரையாடியுள்ளதுடன், மீள் குடியேற்றம் தொடர்பான சகல அதிகாரிகளுக்கும் விசேட பணிப்புரைகளையும் வழங்கியுள்ளார்.

இச்சந்திப்பு முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் அலுவலகத்தில் நடைபெற்றதுடன் இதன் போது மாவட்ட ரீதியாக மேற்கொள்ளப்பட்டு வரும் செயற்திட்டங்களின் முன்னேற்றம் குறித்தும் ஆராயப்பட்டுள்ளது.

கண்ணிவெடி அகற்றும் நடவடிக்கை யைத் துரிதப்படுத்துமாறு சம்பந்தப் பட்டவர்களைக் கேட்டுக் கொண்ட அமைச்சர் கண்ணிவெடி அகற்றிய பகுதிகளில் உடனடியாக மீள் குடியேற்றங்களை மேற்கொள்ளுமாறும் பணிப்புரை விடுத்துள்ளார்.

மீள் குடியேற்றப்பட்ட மக்களுக்கான கொடுப்பனவுகள் நிவாரணங்களைத் தாமதமின்றி பெற்றுக்கொடுக்குமாறு அதிகாரிகளைப் பணித்துள்ள அமைச்சர்; தற்காலிக வீடுகள் அமைப்பதை நிறுத்தி விட்டு அவர்களுக்கான நிரந்தர வீடுகளை அமைத்துக் கொடுக்க நடவடிக்கை எடுக்குமாறும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

இச்சந்திப்பு தொடர்பில் தெரிவித்த முல்லைத்தீவு அரசாங்க அதிபர்; முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள சிறுநீர்ப்பாசனக் குளங்களைப் புனரமைத்து விவசாயத்திற்கான நடவடிக்கைகளை ஏற்படுத்திக் கொடுக்குமாறும் கேட்டுக்கொண்டதாகத் தெரிவித்தார்.

குறிப்பாக மீள் குடியேற்றப்படாத பிரதேசங்களில் விரைவாக கண்ணிவெடிகளை அகற்றி மீள் குடியேற்றத்தை மேற்கொள்ள உரிய நடவடிக்கை எடுக்குமாறும் அமைச்சர் கேட்டுக்கொண்டதாக அரச அதிபர் மேலும் தெரிவித்தார்.
மேலும் இங்கே தொடர்க...

அரசியலமைப்பு திருத்த சட்டமூலம் 8ஆம் திகதி பாராளுமன்றத்தில் 160 எம். பிக்களின் ஆதரவு கிடைக்குமென்கிறார் மைத்திரிபால

உத்தேச அரசியலமைப்புத் திருத்தச் சட்ட மூலம் எதிர்வரும 8ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும். மேற்படி திருத்தச் சட்ட மூலத்திற்கு நேற்று அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியதோடு உச்சநீதிமன்றத்தின் அனுமதிக்காக முன்வைக்கப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி செயலாளரும் அமைச்சருமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

புதிய யாப்பு திருத்தத்தின் பிரகாரம், ஜனாதிபதியொருவர் இரு தடவைக்கு மேல் பதவிவகிக்க முடியாது என்ற சரத்து நீக்கப்பட்டு வரையறையின்றி எத்தனை தடவையும் போட்டியிட முடியும் என திருத்தப்பட்டுள்ளது.

ஜனாதிபதி மூன்று மாதத்திற்கு ஒரு தடவை கட்டாயம் பாராளு மன்ற அமர்வுகளில் பங்கேற்க வேண்டும் எனவும் யாப்பு திருத் தப்படவுள்ளதோடு அரசியல மைப்பு சபைக்கு உறுப்பினர்களை நியமிக்கும் அதிகாரத்தை அமைச்சரவைக்கு வழங்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் கூறினார்.

உத்தேச அரசியலமைப்பு திருத்தச் சட்டம் குறித்து விளக்க மளிக்கும் விசேட ஊடகவியலாளர் மாநாடு நேற்று சுகாதார அமைச்சில் நடைபெற்றது. இங்கு கருத்துத் தெரிவித்த அமைச்சர் மேலும் கூறியதாவது, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் விசேட அமைச்சரவைக் கூட்டம் நேற்று காலை அலரி மாளிகையில் நடைபெற்றது.

உத்தேச திருத்தச் சட்ட மூலத்தை பிரதமர் டி. எம். ஜெயரத்ன அமைச்சரவைக்கு சமர்ப்பித்தார். யாப்புத் திருத்தத்தில் உள்ளடங்கும் விடயங்கள் குறித்து வெளி விவகார அமைச்சர் ஜி. எல். பீரிஸ் அமைச்சரவைக்கு விளக்க மளித்தார்.

தற்பொழுதுள்ள யாப்பின் பிரகாரம் ஜனாதிபதி விரும்பிய போது பாராளு மன்றத்திற்கு சமுகமளிக்கலாம். ஆனால் புதிய திருத்தத்தின்படி ஒவ்வொரு மூன்று மாதத்திற்கும் ஒரு தடவை கட்டாயம் ஜனாதிபதி பாராளுமன்ற அமர்வுகளில் பங்கேற்க வேண்டும். பாராளுமன்றத்திற்கு பொறுப்பு கூறும் நபராக ஜனாதிபதி பதவியை மாற்றும் நோக்கத்துடனே இந்த புதிய திருத்தம் செய்யப்படவுள்ளது.

இது தவிர, ஜனாதிபதியாக 2 தடவை மட்டுமே பதவி வகிக்க முடியும் என தற்போதைய யாப்பில் வரையறுக்கப் பட்டுள்ளது. ஆனால் மக்கள் குறித்த நபர் தொடர்ந்தும் ஜனாதிபதியாகப் பதவி வகிக்க வேண்டும் என விரும்பினால் அதற்கு இடமளிக்க வேண்டும்.

அதற்கேற்ப ஒருவர் எத்தனை தடவை வேண்டுமானாலும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடக் கூடியவாறு அரசியல் யாப்பு திருத்தப்படவுள்ளது. இதனூடாக மக்களின் இறைமையை உறுதிப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படவிருக்கிறது. இதன் மூலம் முன்னாள் ஜனாதிபதிகளுக்கும் மீண்டும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட முடியும்.

இதேநேரம் 17ஆவது திருத்தச் சட்டத்திலும் திருத்தம் செய்ய அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. 2001ம் ஆண்டில் ஜே.வி.பி.யுடன் இணைந்து அமைக்கப்பட்ட பொதுஜன ஐக்கிய முன்னணி அரசாங்கம் 17ஆவது திருத்தச் சட்டத்தை அவசர அவசரமாக நிறைவேற்றியது. அதில் பல குறைபாடுகள் உள்ளன. அவற்றைத் திருத்துவது மிக அவசியம்.

978ஆம் ஆண்டு யாப்பில் உயர் பதவிகளுக்கு நியமனம் வழங்கும் அதிகாரம் அமைச்சரவைக்கு வழங்கப்பட்டிருந்தது. ஆனால் 2001ல் கொண்டு வரப்பட்ட திருத்தத்தின் படி அந்த அதிகாரம் ஜனாதிபதி, பிரமர், சபாநாயகர், எதிர்க்கட்சித் தலைவர், சிறுகட்சிகள் என கட்சி பிரதிநிதிகளுக்கே வழங்கப்பட்டது. எதிர்க்கட்சிகளின் தாமதம் காரணமாக அரசியலமைப்பு சபையை இயங்க வைக்க முடியாமல் போனது.

இதனால் அரசியலமைப்பு சபைக்கு உறுப்பினர்களை நியமிக்கும் அதிகாரம் யாப்பினூடாக அமைச்சரவைக்கு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இது தவிர அரசியலமைப்பு சபை உறுப்பினர்களின் தொகை 5ஆக குறைக்கப்படவிருக்கின்றது. உயர் பதவிகளுக்கு நியமனம் வழங்கும் அதிகாரமும் அமைச்சரவைக்கு வழங்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

உச்ச நீதிமன்றம், மேன்முறையீட்டு நீதிமன்றம் மேல் நீதிமன்றம் போன்றவற்றிற்கு நீதிபதிகளை நியமிக்கும் அதிகாரம் தொடர்ந்து ஜனாதிபதியிடமே இருக்கும்.

புதிய திருத்தத்தின் பின்னர் சுயாதீன ஆணைக்குழுக்கள் ஒழுங்காக இயங்கும்.

நாட்டின் அபிவிருத்திப் பணிகளை ஒழுங்காக முன்னெடுக்கும் வகையில் அரசியலமைப்பில் திருத்தம் மேற்கொள்வதாக கடந்த ஜனாதிபதி மற்றும் பாராளுமன்றத் தேர்தல்களில் நாம் உறுதி அளித்தோம். அதன்படி புதிய திருத்தங்கள் மேற்கொள்ளம் படவிருக்கின்றது.

உத்தேச அரசியலமைப்பு திருத்த மூலம் தொடர்பான விவாதம் 8ஆம், 9ஆம் திகதிகளில் நடைபெற்று அது நிறைவேற்றப்படும். யாப்புத் திருத்தம் பாராளுமன்றத்தில் 160 எம்.பி. களை விட அதிகமானவர்களின் ஆதரவுடன் நிறைவேற்றப்படும் என எதிர்பார்க்கிறோம். இதற்கு சர்வஜன வாக்கெடுப்பு தேவையில்லை. இதற்குத் தேவையான 2/3 பெரும்பான்மை பலம் எம்மிடமுள்ளது என்றார்.
மேலும் இங்கே தொடர்க...

400 ஆண்டுகளுக்கு பின் சீறும் இந்தோனேசிய எரிமலை





கபன்ஜாஹே (இந்தோனேசியா), ஆக.30: இந்தோனேசியாவின் சுமத்ரா தீவில் சினாபங் எரிமலை மீண்டும் சீற்றம் கொண்டுள்ளது. 400 ஆண்டுகளுக்கு முன்னர் சீற்றம் கொண்டு தனிந்த இந்த எரிமலை ஞாயிற்றுக்கிழமையில் இருந்து மீண்டும் சீற்றம் அடைந்துள்ளது.

திங்கள்கிழமை இரண்டாவது நாளாக எரிமலை தீக்குழம்பை கக்கியது. இதனால் அப்பகுதியை சுற்றி புகை மண்டலமாக காட்சி அளிக்கிறது.

இதைத்தொடர்ந்து அப்பகுதியை சுற்றி அமைந்துள்ள கிராமங்களைச் சேர்ந்த மக்களும், எரிமலையின் அடிவாரத்தில் வசித்து வந்த மக்களும் அவசரமாக வெளியேறத் தொடங்கியுள்ளனர்.

எரிமலையில் இருந்து 6 கிலோ மீட்டர் சுற்றளவு வரை அபாயமான பகுதியாக இந்தோனேசிய அரசு அறிவித்துள்ளது. அப்பகுதியில் வசிக்கும் மக்களை உடனே வெளியேறுமாறும் அறிவுறுத்தியுள்ளது.

இதையடுத்து ஆயிரக்கணக்கான மக்கள் அரசு ஏற்படுத்தியுள்ள தாற்காலிக முகாம்களில் அடைக்கலம் அடைய தொடங்கியுள்ளனர். இதுவரை 3000 பேர் முகாம்களை வந்தடைந்துள்ளதாகவும், இன்னும் ஆயிரக்கணக்கான மக்கள் வந்து கொண்டிருப்பதாகவும் அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

எரிமலை சீற்றத்தால் 2,400 மீட்டர் உயரம் வரை புகை மூட்டம் காணப்படுகிறது. அப்பகுதி முழுவதும் அதிக அனலாகவும் உள்ளது. இதனால் அப்பகுதி வழியாக விமானங்கள் செல்ல வேண்டாம் என்றும் அரசு கேட்டுக்கொண்டுள்ளது. எரிமலை சீற்றத்தை பார்ப்பதற்கே பயமாக இருப்பதாகவும், எரிமலை புகை கலந்த காற்று சுவாசிப்பதற்கு நெடியுடையதாக இருப்பதாகவும் அப்பகுதியில் வசிக்கும் ஒருவர் தெரிவித்துள்ளார்.

1600-க்குப் பிறகு... சுமத்ரா தீவின் வடக்குப் பகுதியில் அமைந்துள்ள சினாபங் எரிமலை கடந்த 1600-ம் ஆண்டு சீற்றம் கொண்டது. இதையடுத்து தென்கிழக்கு ஆசியாவில் உள்ள சீற்றமிக எரிமலை பட்டியலில் சினாபங்கும் சேர்த்துக் கொள்ளப்பட்டது. தென்கிழக்கு ஆசியாவில் மொத்தம் 69 சீற்றமிகு எரிமலைகள் உள்ளன.
மேலும் இங்கே தொடர்க...

இலங்கை அதிபர் பதவி: ராஜபட்சவுக்கு ஆதரவாக சட்டத் திருத்தம்





இலங்கை அதிபராக ராஜபட்ச 3-வது முறையாகத் தொடர்வதற்கு வழி செய்யும் சட்டத் திருத்த மசோதாவுக்கு அந்நாட்டு அமைச்சரவை திங்கள்கிழமை ஒப்புதல் அளித்தது.

இந்த மசோதா விரைவில் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என்று தெரிகிறது. இலங்கையில் இப்போதுள்ள அரசியல் சாசன சட்டப்படி, அதிபராக ஒருவர் இரண்டு முறை மட்டுமே பதவியில் இருக்க முடியும். இப்போது அதிபராகவுள்ள ராஜபட்ச 2-வது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.இதனிடையே அவரே முன்றாவது முறையாகவும் பதவியில் தொடர வகை செய்யும் வகையில் சட்டத் திருத்தம் கொண்டு வரப்படவுள்ளது. இதனால் அவர் 2016-ம் ஆண்டு இலங்கை அதிபர் தேர்தலிலும் போட்டியிட முடியும்.

ஆனால் இந்த மசோதா நிறைவேற நாடாளுமன்றத்தில் 3-ல் இரண்டு பங்கு உறுப்பினர்களின் ஆதரவு தேவை. இதற்காக சில எதிர்க்கட்சிகளின் ஆதரவை ராஜபட்ச நாடுவார் என்று தெரிகிறது.
மேலும் இங்கே தொடர்க...

சீனாவில் நிலநடுக்கம்; 7300 வீடுகள் சேதம்; 14 பேர் காயம்




சீனாவில் யுன்னான் மற்றும் சிசுயான் ஆகிய 2 மாகாணங்களில் நேற்று திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் வீடுகள் மற்றும் கட்டிடங்கள் குலுங்கின. இதை தொடர்ந்து 7,354 வீடுகள் சேதமடைந்தன. 122 வீடுகள் முற்றிலும் சேதம் அடைந்தன.

இதனால் பீதி அடைந்த மக்கள் வீடுகளை விட்டு வெளியே ஓட்டம் பிடித்தனர். நிலநடுக்கத்தை தொடர்ந்து இடிபாடுகளில் சிக்கி 14 பேர் காயம் அடைந்தனர். யுன்னான் மாகாணத்தில் குயாஜியோ பகுதியில் பெரும்பாலான ரோடுகள் மண்ணுக்குள் புதைந்தன. நிலநடுக்கம் 4.8 ரிக்டர் அளவில் பதிவாகி இருந்தது.

இந்த ஆண்டு சீனாவில் 2-வது முறையாக நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் சீனாவின் தெற்கு பகுதியில் உள்ள குயின்காய் மாகாணத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 2800 பேர் பலியாகினர். ஆயிரக்கணக்கானவர்கள் காயம் அடைந்தனர்.
மேலும் இங்கே தொடர்க...

ஜெயலலிதாவுக்கு உச்சகட்ட பாதுகாப்பு கேட்டு அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் தலைமை செயலாளரிடம் மனு






அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா கோவை, திருச்சி பொதுக் கூட்டங்களில் கலந்து கொண்டு பேசினார். அடுத்ததாக மதுரையில் பேச திட்ட மிட்டுள்ளார். இந்த நிலையில் ஜெயா டி.வி. இயக்குனருக்கு கொலை மிரட்டல் கடிதம் ஒன்று வந்தது. மதுரை மாவட்டம் கள்ளந்திரி பகுதியில் இருந்து கே.அறிவொளி பெயரில் இந்த கடிதம் வந்தது. அந்த கடிதத்தில் மதுரை பொதுக்கூட்டத்தை ரத்த செய். இல்லையென்றால் குண்டு வீசி கொன்று விடுவதாக மிரட்டல் விடுக்கப்பட்டது.

இதையடுத்து ஜெயா டி.வி. சார்பில் டி.ஜி.பி. மற்றும் சென்னை போலீஸ் கமிஷனரிடம் புகார் கொடுக்கப்பட்டது.

அ.தி.மு.க. சார்பில் பொருளாளர் ஓ.பன்னீர் செல்வம் எம்.எல்.ஏ., தலைமை நிலைய செயலாளர் கே.ஏ. செங்கோட்டையன் எம்.எல்.ஏ., எம்.எல்.ஏ.க்கள் பி.கே. சேகர்பாபு, செந்தமிழ் செல்வன் ஆகியோர் தலைமை செயலாளர் மற்றும் உள்துறை செயலாளரிடம் இன்று மனு கொடுத்தனர்.

மனு குறித்து செங்கோட்டையன் நிருபர்களிடம் கூறியதாவது:-

கோவை, திருச்சியில் நடந்த பொதுக்கூட்டத்தில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா கலந்து கொண்டார். அவருக்கு உரிய பாதுகாப்பு கொடுக்கவில்லை.

மதுரையில் கூட்டம் நடத்த திட்டமிட்டுள்ளோம். அதில் ஜெயலலிதா கலந்து கொள்ளக்கூடாது என கொலை மிரட்டல் விடுவிக்கப்பட்டுள்ளது. இது பற்றி போலீஸ் டி.ஜி.பி.யிடம் மனு கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை.

எனவே ஜெயலலிதாவுக்கு உச்சச்கட்ட பாதுகாப்பு கொடுக்க வேண்டும் என்று தலைமை செயலாளர் ஸ்ரீபதி, உள்துறை செயலாளர் ஞானதேசிகனை சந்தித்து மனு கொடுத்துள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் இங்கே தொடர்க...

30 ஆகஸ்ட், 2010

இலங்கைப் பெண்ணைத் துன்புறுத்திய சவூதி தம்பதியர் கைது

இலங்கைப் பணிப்பெண்ணைத் துன்புறுத்திய தம்பதியர், சவூதி அரேபிய பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இலங்கைப் பணிப்பெண் மீது 24 ஆணிகளை அடித்துக் கொடூரமாகத் துன்புறுத்தியதாக கூறப்பட்டு, மேற்படி தம்பதியர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர் பணிபுரிந்த வீட்டுச் சொந்தக்காரரான 35 வயது ஆணையும் 29 வயதான அவரது மனைவியையுமே இவ்வாறு சவூதி அரேபியா பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட தம்பதியினர் தமது குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

கடந்த 28 ஆம் திகதி பாதிப்புக்குள்ளாகிய பெண்மணிக்கு நியாயம் பெற்றுத் தருமாறு இலங்கைத் தரப்பு, சவூதி அரேபியாவிடம் கோரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

குறித்த பெண் வாக்குமூலம் அளிப்பதற்காக சவூதி அரேபியா செல்வார் எனவும் அதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் இலங்கை வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது.
மேலும் இங்கே தொடர்க...

இரு காரணங்களால், என்னை விடுதலை செய்யக் கோர விரும்பவில்லை: குமரன் பத்மநாதன்






பகுதி 4: டி.பி.எஸ்.ஜெயராஜ் – ‘கே.பி‘ செவ்வி டி “சமகால நடப்புகள்”

தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் சர்வதேச பொறுப்பாளரும் பிரபாகரனுக்குப் பின் அவ்வமைப்பின் தலைவராக அறிவிக்கப்பட்டவருமான குமரன் பத்மநாதனை (கே.பி.), சிரேஷ்ட ஊடகவியலாளர் டி.பி.எஸ். ஜெயராஜ் ‘டெய்லிமிரர்’ ஆங்கில பத்திரிகைக்காக கண்ட விசேட செவ்வியின் நான்காவது பாகம், ஓகஸ்ட் 28ஆம் திகதி அப்பத்திரிகையில் வெளியாகியது. அப்பாகத்தின் தமிழாக்கம் இது:

கேள்வி : அண்மைக் காலத்தில் நடந்த முக்கிய நிகழ்வுகள் பற்றி விளக்கமாக கூறினீர்கள். நன்றி. இவ்விடயங்கள் தொடர்பாக புதிய விளக்கங்களை நீங்கள் தந்துள்ளீர்கள். ஆனால், இப்போது நான் சமகால நடப்புகள் பற்றி கேட்க விரும்புகிறேன்.

இந்த அரசாங்கத்துடனான , குறிப்பாக பாதுகாப்பு அமைச்சின் செயலாளரான கோத்தாபய ராஜபக்ஷவுடனான உங்கள் தொடர்புகள் பற்றி தொடங்க விரும்புகிறேன். நீங்கள் ஏற்கெனவே உங்களை கைது செய்தமை, பாதுகாப்பு செயலாளருடனான உங்கள் முதல் சந்திப்பு என்பன பற்றி கூறியிருக்கிறீர்கள். நீங்கள் இருவரும் நல்லதொரு உறவை பேணுகிறீர்கள். ஆனால், இதைப்பற்றி பல குற்றச்சாட்டுக்கள் வருகின்றன. பல எதிர்க்கட்சி தலைவர்களும் ஊடகங்களின் ஒரு பகுதியும் உங்களிடையே இரகசியமான சந்தேகத்துகிடமான சில கூட்டுசெயற்பாடுகள் நடைபெறுவதாகக் குற்றஞ் சுமத்துகின்றனர். நீங்கள் என்ன சொல்லுகிறீர்கள்?

பதில் : நான் கூறுவது உண்மையானது. இது மிகவும் எளிமையான கதை… எமக்கிடையில் எந்தவிதமான உடன்பாடும் இல்லை. எம்மிடையே இருந்தது புரிந்துணர்வு மட்டுமே. நேர்மையான புரிந்துணர்வு. நாம் இருவரும் சில பொது இலக்குகளை கொண்டுள்ளோம். எனவே, நாம் அந்த பொது நோக்கங்களுக்காக இணைந்து வேலை செய்கின்றோம். இதுதான் எம்மிடையிலான உடன்பாடு. வேறேதுமில்லை.

கேள்வி: தயவுசெய்து இதை இன்னும் விளக்கமாக கூறமுடியுமா? இந்தக் கருத்துடன்பாடு என்னவென்று குறிப்பிட்டுச் செல்லுங்கள்.

பதில் : தமிழீழ விடுதலைப் புலிகளுடனான யுத்தம் இப்போது முடிந்துவிட்டது. யுத்தத்தை திட்டமிட்டு ஒருங்கிணைந்து நடத்திய பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ இப்போது வேறு பாத்திரமொன்றை ஏற்றுள்ளார். அவருக்கு சமாதானத்தை பேணிப் பாதுகாக்க வேண்டியும் வரக்கூடிய வன்முறைக் கிளர்ச்சிகளை தடுக்க வேண்டியும் உள்ளது. யுத்தத்தால் உருவான பிரச்சினைகளுக்கு இணக்கமான முறையில் தீர்வுக்காண நிறையவே செய்யவேண்டியுள்ளது என்பதை அவரும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அரசாங்கமும் உணர்ந்துள்ளனர். முன்னாள் எல்.ரீ.ரீ.ஈ. உறுப்பினர்கள் பலர் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். மீள்குடியமர்த்தப்படும் உள்நாட்டில் இடம்பெயர்ந்தோருக்கு புனர்வாழ்வு அளிக்கப்பட வேண்டும். வழமை நிலை திரும்ப வேண்டும். ஜனாதிபதியும் அவரது சகோதரர்களும் இந்த பிரச்சினைகளுக்கு தீர்வுகளை விரும்புகின்றனர்.

அதே சமயம், நானும் இந்த பிரச்சினைகள் பற்றி கரிசனையாக உள்ளேன். இயன்றளவு விரைவாக இளைஞர்களும் யுவதிகளும் விடுவிக்கப்படுவதை நானும் விரும்புகின்றேன். இவர்களுக்கு புதுவாழ்வு வழங்க வேண்டும்.

இடம்பெயர்ந்து மீள்பவர்கள் மீளக்குடியமர்த்தப்பட வேண்டும், புனர்வாழ்வு அளிக்கப்படவேண்டும் என நான் விரும்புகின்றேன். இதானால்தான் இந்த விடயங்களில் எம்மிடையே உடன்பாடு காணப்படுகின்றது. இந்த விடயங்களில் ஓரளவு ஈடுபடுவதற்கு எனக்கு பாதுகாப்பு செயலாளர் ஒரு சந்தர்ப்பத்தை தந்திருக்கின்றார். இதுதான் எமது கருத்துடன்பாடு அல்லது உடன்பாடு கண்ட விடயம்.

கேள்வி: ஆனால், இந்த விடயங்களில் ஈடுபடுவதற்கு மீளமைக்கப்பட்ட எல்.ரீ.ரீ.ஈ. இன் முன்னாள் தலைருக்கு இப்படியான வாய்ப்பு ஏன் வழங்கப்படுகின்றது என்பதே பலருக்கு புதிராக உள்ளது..?

பதில் : பாதுகாப்பு செயலாளர் அல்லது அரசாங்கத்தின் பொறுப்புவாய்ந்த அமைச்சர் ஒருவர் அல்லது ஒரு உத்தியோகத்தரே இதற்கு பதிலளிக்க மிகப்பொருத்தமானவர் என நான் நினைக்கின்றேன். எனது பார்வையில் அல்லது அரசாங்கத்தின் சிந்தனையின் பின்னணியில் என்ன உள்ளது என, நான் நினைப்பதை வைத்துக்கொண்டு மட்டும்தான் என்னால் பதிலளிக்க முடியும்.

கேள்வி: சரி… அந்த விதத்திலேயே கூறுங்கள். இந்த வாய்ப்பு உங்களுக்கு ஏன் வழங்கப்பட்டது என எண்ணுகின்றீர்கள் என்று எனக்குக் கூறுங்கள்?

பதில் : அவர்கள் ஒரு சிக்கலான, இக்கட்டான நிலைமையில் உள்ளனர் என நான் நினைக்கின்றேன். அவர்கள் இடம் பெயர்ந்தவர்களையும் தடுப்புக்காவலில் உள்ளவர்களையும் இயன்றளவு விரைவாக புனர்வாழ்வு அளிக்க அல்லது விடுவிக்க விரும்புகின்றனர். இது தாமதமாக ஆக, சர்வதேச விமர்சனமும் அதிகரித்துக்கொண்டே செல்லும். அதேசமயம் இன்னொரு பக்கத்தில் அவர்கள் பாதுகாப்பு என்ற பார்வையில் நோக்கும்போது எச்சரிக்கையாகவும் செயற்படுகின்றனர். பிரிவினைவாதம் மீண்டும் உயிர்ப்பிக்கப்படும் வகையில் அல்லது அரசியல் சார்ந்த வன்முறை மீண்டெழும் வகையில் உள்நோக்கம் கொண்ட பகுதியினரால் இந்த மீள்குடியேற்றப்பட்ட, விடுவிக்கப்பட்ட மக்கள் பயன்படுத்தப்படக்கூடாது என அவர்கள் எண்ணுகின்றார்கள். இதனால்தான் அரசாங்க அதிகாரங்கொண்டோர் கவனமாக உள்ளனர். இதனால் விடயங்கள் தாமதமாகின. இந்த மெதுவான நகர்வு, அரசாங்கம் மீதான விமர்சனத்துக்கும் வழிவகுத்தது.

எனவே, அரசாங்கம் பாதுகாப்பு நலன்களை பேணும் அதேசமயம், இந்த பிரச்சினைகளுக்கு விரைவான தீர்வுகாண உதவக்கூடிய வழிவகைகளை தேடிக் கொண்டிருக்கிறது. இந்த இடத்தில்தான் நான் வருகிறேன் என நான் நினைக்கிறேன்.

இந்த விடயங்களில் ஓர் அரிய பாத்திரத்தை வகிக்க அவர்கள் எனக்கு ஒரு சந்தரப்பத்தை தருகின்றனர். இது இராமாயணத்தில் கடலுக்கு குறுக்காக அணைகட்ட உதவிய அணிலின் பாத்திரம் போன்றதாகும். இது வாழ்க்கையில் அர்த்தமுள்ள ஒன்றை செய்வதற்கு எனக்கு வாய்ப்பை அளிக்கின்றது. எனவே நான் மகிழ்ச்சியாக இருக்கின்றேன்.

கேள்வி : ஆனால், ஓர் ‘அரசு சாரா நிறுவனம்‘ அல்லது ‘அரசு சாரா நிறுவனங்களின் தொகுதி‘யிடம் அல்லாமல் உங்களிடம் ஏன் வழங்கப்பட்டது? ஏன் அரசாங்கத்துடன் சேர்ந்துள்ள தமிழ் கட்சிகளிடம் இது இல்லை?

பதில் : ஏன் அரச சார்பற்ற நிறுவனங்கள் மற்றும் தமிழ் கட்சிகளுக்கு இப்படியான பாத்திரம் வழங்கவில்லை என்பது பற்றி நீங்கள் கேட்டீர்கள். மீண்டும் சொல்கிறேன், நான் கேள்விப்பட்டதை வைத்துக்கொண்டு, நான் என்ன நினைக்கின்றேன் என்பதை மட்டும்தான் என்னால் கூறமுடியும்.

கடந்த காலத்தில் பெற்ற விரும்பத்தகாத அனுபவங்கள் காரணமாக அநேகமான அரச சார்பற்ற நிறுவனங்களை அரசாங்கம் நம்பவில்லை என நான் நினைக்கின்றேன். இதனால்தான் பல அரச சார்பற்ற நிறுவனங்களுக்கு மட்டுப்படுத்தப்பட்ட அனுமதி வழங்கப்படுகிறது என நான் நினைக்கின்றேன். தமிழ்கட்சிகளும் முன்னர் கிடைத்த வாய்ப்புகளை தவறாக பயன்படுத்தினர் அல்லது துஷ்பிரயோகம் செய்தன. இதனால் அவர்கள் மீதும் நம்பிக்கையற்று உள்ளனர். புனர்வாழ்வு அளிக்கப்படும் முன்னாள் புலிகள் ஆயிரக்கணக்கில் உள்ளனர். இவர்களது பிரச்சினை பாதுகாப்பு மற்றும் அரசியல் என்பவற்றுடன் தொடர்புறுகின்ற, மிகவும் கவனமாகக் கையாள வேண்டிய விடயமாக உள்ளது.

விமர்சனங்கள் வருகின்றபோதும், அரசாங்கம் இந்த விடயத்தில் எந்தவிதத்திலும் ஆபத்துக்கு முகங்கொடுக்கும் நிலை வருவதை விரும்பவில்லை. பழைய புலி உறுப்பினர்களுடன் கலந்து பழக சகல நிறுவனங்களையும் அதுமதித்து, பாதுகாப்பு சிதைவடையும் ஆபத்துக்கு முகங்கொடுக்கும் நிலைமை ஏற்படுவதனை விட, விமர்சனத்துக்கு உள்ளாவதே மேல் என அவர் நினைக்கின்றார். இப்படியான நிலைமையில் எனக்கு ஓர் இடம் கிடைத்துள்ளது. புனர்வாழ்வுக்கு தயாராக்கப்படும் முன்னாள் புலிகளுடனும் வேறு பிரயோசனப்படக்கூடிய சிலருடனும் கலந்து பழகுவதற்கு என்னை அனுமதிக்க அரசாங்கம் தயாராக உள்ளது.

அவர்கள் என்னை நம்புகின்றனர். அத்துடன் நான் அவர்களிடம் பிடிபட்டுள்ளதால் என்னையிட்டுப் பயப்பட வேண்டியதில்லை. என்னைப் பொறுத்தவரையில் எனது மக்களுக்கு, குறிப்பாக முன்னைநாள் புலி உறுப்பினர்களுக்கு சேவை செய்யக்கிடைத்த இந்த வாய்ப்பை நான் விருப்போடு ஏற்றுக்கொள்கிறேன்.

கேள்வி : இந்தவகையில் உங்களுக்கு உற்சாகம் அளிப்பது என்ன?

பதில் : முன்னாள் புலித் தலைவர்களில் மிக மூத்தவராக நான் இப்போது இருக்கின்றேன் என நினைக்கின்றேன். இன்றைய தமிழ் மக்களின் பரிதாப நிலையை காணும்போது நான் மிகுந்த குற்றவுணர்வுக்கு ஆளாகின்றேன். இந்த இளைஞர், யுவதிகளின் கதியை பார்க்கும்போது எனக்கு மிகுந்த கவலையாகவும் துன்பமாகவும் இருக்கிறது.

இந்த பிள்ளைகளில் பலர் தமது விருப்பத்துக்கு மாறாக வலுக்கட்டாயமாக படையில் சேர்க்கப்பட்டவர்கள் என்பதை என்னால் மறுக்க முடியாது.

வன்னிப்பிரதேச சாதாரண மக்களை (சிவிலியன்) காணும்போது நான் பெரிதும் கழிவிரக்கம் கொள்கின்றேன். அவர்கள் ஒரு காலத்தில் செழிப்போடு வாழ்ந்தவர்கள். இப்போது போரின் காரணமாக துன்பகரமான வறுமையில் உள்ளனர். இதனால்தான் நான் அவர்களுக்கு இயன்றளவு உதவி செய்து, சிறிதாவது பிராயச்சித்தம் செய்ய விரும்புகின்றேன்.

இன்னுமொரு காரணம் உள்ளது. நான் சென்ற வருடம் கேள்விப்பட்ட கதை. பிரபாகரனும் வேறு தலைவர்களும், சென்ற மே மாத நடுப்பகுதியில் கூடிப் பேசிய ஒரு சந்தர்ப்பத்தில் “எமது மக்களுக்கும் உறுப்பினர்களுக்கும் என்ன நடக்கும்?” என ஒருவர் கேட்டார். அதற்கு “கே.பி. இருக்கிறார். அவர் மக்களையும் உறுப்பினர்களையும் கவனித்துக்கொள்வார்” என பிரபாகரன் கூறினாராம்.

சில மாதங்களுக்கு முன் இது உண்மையில் நடந்த சம்பவம்தான் என்றும், பிரபாகரன் இவ்வாறு வெளிப்படையாக என்னைக் குறிப்பிட்டார் எனவும் உறுதி செய்யும் தகவல் ஒன்று எனக்கு கிடைத்தது.

எனக்கு பொறுப்பளிக்கப்பட்ட இறுதிக்கட்டம், இந்த மக்களை கவனித்து கொள்வதுதான். இந்த வகையில் எனது உறுதியை வலுப்படுத்தியுள்ளது.

இதுதான் நான் ஊக்கத்துடன் இருக்கக் காரணம். நான் வடக்கு- கிழக்கு புனர்வாழ்வு மற்றும் அபிவிருத்திக்கான நிறுவனத்தை (சஉதஈஞ) தோற்றுவித்தேன். இது ஒழுங்கு முறையாக ஜுலை 06, 2010இல் பதிவு செய்யப்பட்டது. எமக்கு வடக்கு- கிழக்கில் நடமாடவும் மீள்குடியமர்த்தப்பட்டவர்களுடனும் புனர்வாழ்வு அளிக்கப்படுவோருடனும் கலந்து பழக பாதுகாப்பு அனுமதி தரப்பட்டுள்ளது.

கேள்வி: சஉதஈஞ பற்றி பேசமுன் மிகச்சொற்ப காலத்தில் (சஎஞ) அரச சார்பற்ற நிறுவனம் என்ற அங்கீகாரம் உங்களுக்கு கிடைத்ததாகத் தெரிகிறது. சஉதஈஞ வுக்கு பாதுகாப்பு அனுமதியும் நடமாட்ட சுதந்திரமும் கிடைத்துள்ளது. இது உயர்மட்டங்களில் ஆதரவு இல்லாது சாத்தியமாகியிருக்காது. பாதுகாப்பு செயலாளரின் ஆசீர்வாதத்துடன் தானே சஉதஈஞ இந்த அங்கீகாரத்தையும் நடமாட்ட சுதந்திரத்தையும் பெற்றுக்கொண்டது?

பதில்: ஆம்… நாம் சகல விதிமுறைகள், நடைமுறைகளுக்கூடாகவும் சென்று விண்ணப்பித்தோம். ஆனால் பாதுகாப்புச் செயலாளரின் ஆதரவின்றி இவ்வளவு விரைவான அனுமதி கிடைத்திருக்கும் என நான் நினைக்கவில்லை.

கேள்வி: முன்னைய விடயத்துக்கு மீண்டும் போக அனுமதியுங்கள். கோட்டாபய ராஜபக்ஷவுடனான உங்கள் விசேடமான உறவின் காரணமாக மட்டுமே, நீங்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஒருவராக இருந்தபோதும் நீங்கள் சில செயல்களில் சுதந்திரத்தை அனுபவிக்க முடிகின்றது என்பது தெட்டத் தெளிவாகிறது.

நீங்கள் முன்னர் கூறியதுபோல உங்களுக்கிடையே உடன்பாடு எதுவுமில்லை… சில தொடர்புடைய மனிதநேய நோக்கங்களை நிறைவேற்ற வேண்டும் என்பதே உங்களிடையேயான கருத்துடன்பாடாக இருந்தது. இப்படியான மிகவும் நல்ல உறவு எப்படியான சூழலில் பரிணமித்தது? தொடர்ந்து வளர்கின்றது என நீங்கள் விளக்குவீர்களா?

பதில்: நல்லது. நான் எப்படி மலேசியாவில் பிடிப்பட்டேன், கொழும்புக்கு கொண்டுவரப்பட்டேன். எமது முதல் சந்திப்பு எவ்வாறு இருந்தது என்பன பற்றி முன்னரே கூறியிருக்கிறேன். அதன்பின் தொடர்ந்து வந்த சந்திப்பில் மூன்றாவது என்றுதான் நினைக்கின்றேன்… கோட்டாபய ராஜபக்ஷ ஒட்டுமொத்தமாக இந்த நிலைமைப்பற்றி நான் என்ன நினைக்கின்றேன்… நான் எதிர்காலத்தில் என்ன செய்ய விரும்புகின்றேன் என்பது பற்றி நேரடியான கேள்விகளை என்னிடம் கேட்டார். அப்போது நான் என்னைப் பொறுத்தவரை யுத்தம் முடிந்துவிட்டது என்றும் ஈழத்திற்கான ஆயுதப் போராட்டத்தை மீண்டும் தொடங்குவது இனிமேல் முடியாதது என்பதை பூரணமாக உணர்ந்துவிட்டேன் என்றும் தெளிவாகக் கூறினேன். மக்களின் கதிபற்றி நான் மிகவும் குற்றவுணர்வுடன் உள்ளேன் என்றும் எனக்கு ஒரு வாய்ப்புத் தரப்படுமானால் நான் இந்த மக்களுக்கு சிறு அளவிலாவது குறைந்த பட்சம் பிராயச்சித்தம் என்றவகையில் உதவி செய்ய விரும்புகிறேன் என்று கூறினேன். அப்போது பாதுகாப்பு செயலாளர் தானும் இடம்பெயர்ந்தோரை விரைவில் விடுவித்து மீள்குடியேற்றம் செய்யவும், முன்னாள் புலி உறுப்பினர்களுக்கு புனர்வாழ்வு அளிக்கவும் விரும்புவதாகக் கூறினார். இந்த வகையில் காரியங்களை விரைவுபடுத்த நம்பத்தகுந்த ஆட்கள் தனக்கு தேவைப்படுவதாகவும் கூறினார். இந்த செயன்முறையில் தனக்கு உதவ நான் விரும்புவேனா என என்னிடம் அவர் கேட்டார். நான் ‘ஆம்’ எனக் கூறினேன்.

சில நாட்களின் பின், இராணுவ புலனாய்வு தலைவர் ஜெனரல் கபில ஹெந்தவிதாரண எனது வேண்டுகோளை தானும் பாதுகாப்பு செயலாளரும் விரிவாக ஆராய்ந்ததாகவும் அப்போது ஒரு சாதகமான தீர்மானம் எடுக்கப்பட்டதாகவும் என்னிடம் தெரிவித்தார். அதன்பின் இந்த தொடர்செயற்பாட்டில் பங்கு கொள்ளும்வகையில் சுதந்திரமான செயற்பாட்டுக்கு எனக்கு அனுமதி வழங்கப்பட்டது.

கேள்வி: நீங்கள் ஆலோசகராக ஆக்கப்பட்டீர்களா?

பதில்: நீங்கள் கேட்பதுபோல அது முறைசார்ந்ததாகவோ அல்லது உத்தியோக பூர்வமானதாகவோ இருக்கவில்லை. ஆனால், சில தொடர்புடைய விடயங்கள் தொடர்பில் என்னுடன் ஆலோசிக்கப்பட்டது. அத்துடன் தடுப்பு காவலிலிருந்த உறுப்பினர்களுடனும் வடக்கிலிருந்த சிலருடனும் கலந்து பழகவும் நான் அனுமதிக்கப்பட்டேன்.

கேள்வி : நேரில் சென்று பேசவா…?

பதில் : இல்லை, நேரடியாக அல்ல. முதலில் தொலைபேசி மூலம் மட்டும்தான். பின்னர் தடுத்துவைக்கப்பட்டிருந்தவர்களின் பெற்றோரின் பிரதிநிதிகளை வடக்கிலிருந்து கொழும்புக்கு கொண்டுவரவும் அவர்களை சந்திக்கவும் முடிந்தது. அப்படியான ஒரு சந்திப்பின்போதுதான் யாழ்ப்பாணப் பல்கலைகழக மாணவர்கள் தடுத்து வைக்கப்பட்டிருப்பது பற்றிக் கூறி கவலைப்பட்டனர்.

அப்போது அங்கிருந்த அதிகாரிகளில் ஒருவரிடம், இந்த விடயம் தொடர்பில் ஆராய்ந்து சாதகமான நடவடிக்கையை எடுக்கும்படி பாதுகாப்பு செயலாளரிடம் அவரால் வேண்டுகோள் விடுக்க முடியுமா எனக்கேட்டேன். இதை அவர் செய்தார். பாதுகாப்பு அமைச்சின் செயலாளர், இவர்களை விடுவிக்க கொள்கையளவில் உடனடியாகவே சம்மதம் தெரிவித்தார். பின்னர் கட்டங்கட்டமாக விடுவிக்கப்பட்டனர். இப்போது எந்தவொரு பல்கலைக்கழக மாணவர்களும் தடுப்புக்காவலில் இல்லை. அதுபோலவே புனர்வாழ்வு அளிக்கப்படுவோரும் வகைரீதியாக விடுவிக்கப்பட்டு வருகின்றனர்.

கேள்வி: உங்களுக்கு உத்தியோக ரீதியான பதவி எதுவுமில்லை. ஆனால் குறித்து வைக்கப்பட்ட உத்தியோகபூர்வமல்லாத விசேடமான ஒருவகை பாத்திரம் வகிக்கின்றீர்கள் என நான் கருதுகிறேன். இதனால்தான் இந்த விடயங்களில் இணைந்து செயற்படவும் நல்லதொரு பாத்திரத்தை வகிக்கவும் உங்களால் முடிந்தது என நான் கருதுகிறேன்…?

பதில் : ஆம். அது நான் சஉதஈஞ வை உருவாக்கமுன். இப்போது இவ்வாறான விடயங்களில் நான் சஉதஈஞ வை பிரதிநிதித்துவப்படுத்துகிறேன்.

கேள்வி: அப்படியானால் அரசாங்கமே உண்மையில் பொறுப்பாகவிருந்து கொள்கைகளை தீர்மானித்து, அவற்றை செயற்படுத்தியது. ஆனால், ஆலோசகர் என்ற வகையில் ஒரு மேலதிகமான ஒரு பாத்திரத்தை நீங்கள் வகித்தீர்களா?

பதில் : அப்படியேதான். ஆம், அரசாங்கம்தான் அதை கையாண்டது. உதாரணமாக, முன்பு புலி உறுப்பினராகவிருந்து புனர்வாழ்வு வழங்கப்படுவோர், புனர்வாழ்வு ஆணையாளர் நாயகத்தின் நிறுவகத்தின் கீழ் வந்தனர். இந்த விடயத்தில் மிகப்பொருத்தமான ஒருவரைத்தான் அரசாங்கம் நியமித்துள்ளது என்பதை நான் கூறியாக வேண்டும். இந்த வேலைக்கு மிகப் பொருத்தமானவர்தான் பிரிகேடியர் சுதந்த ரணசிங்க. பாதுகாப்பு வதிவிடப் புனர்வாழ்வு மையத்தில் (டஅதஇ) தங்கவைக்கப்பட்டிருப்போரின் நலனில் அக்கறையும் அர்ப்பணிப்பும் அவரிடம் நிறையவே உண்டு.

கேள்வி: அப்படியானால் இந்த விடயங்களில் நீங்கள் செய்தது என்ன அல்லது செய்துகொண்டிருப்பது என்ன?

பதில் : என்னிடம் ஒரு கருத்து அல்லது அபிப்பிராயம் கேட்கப்படும்போது, நான் எனது ஆலோசனைகளை சமர்ப்பிப்பேன். சில ஏற்கப்பட்டுள்ளன. வரையப்படும் திட்டங்கள் பற்றி கேட்கப்படும் போது நான் எனது அபிப்பிராயங்களை கூறுவேன். ஒரு பிரச்சினை அல்லது நியாயமான ஒரு வேண்டுகோள் எனது கவனத்துக்கு கொண்டுவரப்பட்டால், சம்பந்தப்பட்ட- நான் தொடர்புடைய உத்தியோகத்தர்களுடன் நேரடியாக அல்லது வேறுவழியில் தொடர்பு கொண்டு, இதை அவர்களுக்கு தெரியப்படுத்துவேன். நானும் சில விடயங்களை முன்னெடுத்து ஆலோசனைகளை சமர்ப்பிப்பேன். இந்த விடயங்களில் ஈடுபட்டுள்ள அதிகாரிகள், உத்தியோகத்தர்களில் கிட்டத்தட்ட எல்லோருமே இந்த துரதிஷ்டசாலியான மக்களின் கதியையிட்டு நிறைந்த அனுதாபங்கொண்ட நேர்மையான ஆட்களாக உள்ளனர். இதனால் கருத்துகள், ஆலோசனைகளை அதிஉயர் அளவில் உள்வாங்குபவர்களாக உள்ளனர். இதனால் விடயங்களை செய்துகொள்ளுதல் ஒருபோதும் பெரிய பிரச்சினையாக இல்லை. அரசாங்கத்தினால் நடைமுறைப்படுத்தப்படும் செயற்றிட்டங்களுக்கு நாமும் உதவி செய்கின்றோம். அதிகமாக இது சஉதஈஞ ஊடாகவே செய்யப்படுகின்றது.

கேள்வி: ஆனால் ஆட்களை விடுவிப்பதிலும் புனர்வாழ்வு அளிப்பதிலும் மெதுவான முன்னேற்றமே காணப்படுகிறதே? ஏன்?

பதில் : நான் அங்கு அவதானித்ததிலிருந்து இந்த பிரச்சினைகளை வினைத்திறனுடனும் விரைவாகவும் தீர்க்க வேண்டும் என்பதில் அரசாங்கத்தின் பக்கத்தில் நேர்மையான சிந்தனை உள்ளதை காண முடிகிறது. அவர்கள் இரண்டு விசாலமான வகையினரை இனங்கண்டுள்ளனர். ஒரு வகையினர் ஏதாவது வன்முறையில் ஈடுபட்டவர்கள், எல்.ரீ.ரீ.ஈ இல் பல வருடங்களாக இருந்தவர்கள், கரும்புலி அல்லது தற்கொலைத்தாக்குதல் சத்தியப்பிரமாணம் எடுத்துக்கொண்டவர்கள் என சந்தேகிக்கப் படுவர்களை உள்ளடக்கிய பகுதியினர் ஆவர். இந்த வகையில் கிட்டத்தட்ட 1400 பேர் உள்ளனர். இவர்களில் அதிகமானோர் நீதிமன்றத்தில் நிறுத்தப்படுவார்கள்.

ஏனையவர்கள் மென்பகுதியினர் என்ற வகையில் அடங்குவர். இவர்கள் எர்.ரீ.ரீ.ஈ. உடன் சொற்பகாலம் அனுபவம் கொண்டவர்கள் அல்லது அண்மைக்காலத்தில் கட்டாயமாக சேர்க்கப்பட்டவர்கள் அல்லது வங்கி, பொலிஸ் போன்ற எல்.ரீ.ரீ.ஈ. இன் நிர்வாக தொழிற்பாட்டில் சம்பந்தபட்டவர்கள். இவர்கள் எண்ணிக்கை 11,000க்கு மேல் உள்ளது. ஆனால் தற்போது 7,000 – 8,000 என்ற அளவுக்கு குறைந்துவிட்டது. இது, இவர்கள் ஒருவகை ஒழுங்கில் விடுவிக்கப்பட்டதன் விளைவாகும்.

இவர்கள் ஒவ்வொருவரையும் கவனிப்பதற்கு அரசாங்கம் ஒரு நாளைக்கு தலா 400 ரூபா செலவு செய்கின்றது. அரசாங்கம் நிச்சயமாக இயன்றளவு விரைவில் இவர்களை விடுவித்து, செலவழிக்கப்படும் பணத்தை மீதப்படுத்தவே விரும்பும். ஆனால் நடைமுறைப் பிரச்சினை உள்ளது. நான் முன்னர் கூறியது போன்று, உள்நோக்கம் கொண்ட சிலரால்- விடுவிக்கப்பட்ட உறுப்பினர்கள் தவறாகப் பயன்படுத்தப்பட்டு மீண்டும் வன்முறையில் ஈடுபட ஊக்குவிக்கப்படலாம் என அரசாங்கம் பயப்படுகின்றது.

இதை தடுப்பதற்கு, புனர்வாழ்வுக்கு உட்படுத்தப்படும் எவரும் வேலையின்றியோ அல்லது எதுவும் செய்யாமல் சும்மாவோ வேலை இல்லாதிருப்பதை உறுதிப்படுத்துவது ஒரு வழியாகும். இதற்காகவே தொழில் திறன் செயற்றிட்டங்களை வகுத்து, இவர்களை பயிற்றுவித்து வருகின்றனர். இவ்வாறானவர்கள் இலங்கையில் அல்லது வெளிநாட்டில் நல்ல வேலைவாய்ப்புகளை பெற்றுக் கொள்வர். இதனால்தான் மெதுவான முன்னேற்றம் காணப்படுகிறது.

கேள்வி: இருப்பினும் விடுவிப்பதற்கான, நாள் குறிக்கப்பட்ட ஒரு கால எல்லையை ஏன் வகுக்க முடியவில்லை?

பதில் : நான் ஏற்கனவே சொன்ன காரணங்களால்தான் இது நடக்கவில்லை. ஆனால் பாதுகாப்பு செயலாளர் இந்த மென் பகுதியினர் ஆறு தொடக்கம் ஒன்பது மாதங்களுக்குள் பூரணமாக விடுவிக்கப்படுவர் என தான் நம்பிக்கை கொண்டிருப்பதாக கூறியிருப்பதை நான் கட்டாயம் சொல்லவேண்டும். இந்த காலக்கெடுவை எதிர்கொள்ளும் வகையில் சகல முயற்சிகளும் மேற்கொள்ளப்படும் என நான் நினைக்கின்றேன்.

ஆனால், இந்த பிரச்சினை பற்றி வெளிநாட்டில் வாழும் இலங்கைத் தமிழர்களுக்கு ஒரு விடயத்தை கூறவிரும்புகின்றேன். இவர்கள் விமர்சிப்பதை விட்டு விட்டு, நிதி ரீதியாக உதவவேண்டும். முதலீடு செய்யவும் வேண்டும். புனர்வாழ்வு அளிக்கப்படுவோருக்கு பயிற்சியும் வேலையும் வழங்க இவர்கள் நிதி உதவி வழங்குவார்களாயின் இவர்களை விரைவில் விடுதலை செய்யலாம்.

வெறுமனே விமர்சிப்பதற்கு பதிலாக, வெளிநாட்டில் வாழும் தமிழர்கள் உண்மையில் அக்கறை உடையவர்களாக இருப்பின், நிதி உதவி வழங்குவதன் மூலம் ஏன் விரைவான விடுப்புகளை உறுதி செய்யக்கூடாது..? பாதுகாப்பு செயலாளர் இவர்களை இயன்றளவு விரைவில் விடுவிக்கவே விரும்புகிறார்கள் என்பதை எனது அனுபவத்திலிருந்து உறுதியாகக் கூறுகிறேன்.அவரை குறை கூறுவதற்கு பதிலாக, ஏன் உதவி செய்து முயன்று பார்க்கக்கூடாது?

கேள்வி: பாதுகாப்புச் செயலரையும் உங்களையும் பற்றி வினவ அனுமதியுங்கள். நீங்கள் அவருடன் எவ்வளவு காலத்துக்கு ஒரு தடவை தொடர்பு கொள்வீர்கள்?

பதில்: அது இப்படித்தான்… நான் அவருக்கு ஏதாவது தகவல் வழங்க விரும்பினால், எம் இருவருக்கும் இடையில் இணைப்பாளராக நியமிக்கப்பட்ட உத்தியோகத்தர் ஊடாகத் தெரிவிப்பேன். அவரும் இதேபோலத்தான் செய்வார். இதைவிட, இடம்பெயர்ந்தோர், புனர்வாழ்வு அளிக்கப்படுவோர் தொடர்பான பிரச்சினைகளைப் பற்றிப் பேசுவதற்கு நாம் நேரடியாகவும் சந்தித்துள்ளோம். அண்மைக்காலமாக நாங்கள் சஉதஈஞ வை ஸ்தாபித்தன்பின் பாதுகாப்பு செயலாளர் அதில் மிகுந்த அக்கறை காட்டுகின்றார். ஒவ்வொரு வாரமும் எமது முன்னேற்றத்தைப்பற்றி அறிந்து கொள்வார். தேவையானால் அவரின் கீழ் உள்ள அதிகாரிகளை நான் அணுகுவேன்.

கேள்வி: உங்கள் இதயம் தொட்ட விடயம் பற்றிப் பேசுவோம். சஉதஈஞ பற்றி சொல்லுங்கள். அது எப்படி உருவானது? சஉதஈஞ ஊடாக நீங்கள் என்ன செய்ய செய்ய எண்ணியுள்ளீர்கள்?

பதில் : முன்னாள் புலி உறுப்பினர்கள் மற்றும் வன்னியில் உள்ள இடம்பெயர்ந்தோர் தொடர்பான பிரச்சினைகளைப் பற்றியும் நாம் பேசிக்கொண்டிருந்த போது இந்த பிரச்சினைகளை கையாள அரசு சார்பற்ற சமூகசேவை நிறுவனம் தேவை என நான் உணர்ந்தேன். இந்த நிறுவனம், அரச கட்டுப்பாடின்றி இயங்க முடியும். ஆனால், இந்த முயற்சிகள் தொடர்பில் அரசின் ஒட்டுமொத்தமான முயற்சிகளுடன் இணைந்து செயற்படலாம். அரசாங்க அதிகாரிகள் இந்தக் கருத்தை ஏற்றுக்கொண்டனர்.

எனவே, சில ஆயத்தங்களை செய்யத் தொடங்கினோம். ஆனால் விடயங்கள் பெரிதாக நடக்கத் தொடங்கவில்லை. போதிய பணம் இன்மை ஒரு பிரச்சினையாக காணப்பட்டது. பின்னர் வெளிநாட்டில் வாழும் தமிழர்கள் சிலரின் ஒரு வாரகால சுற்றுப்பயணம் இவ்வருடம் ஜுனில் வந்தது.

கேள்வி : குறுக்கீடு செய்வதற்கு வருந்துகின்றேன்… அந்த சுற்றுப்பயணம் எப்படி ஒழுங்குபடுத்தப்பட்டது?

பதில் : சில வெளிநாட்டு தமிழர்கள் இலங்கைக்கு வந்து பார்த்து, நேரடியாகவே உண்மை நிலையை அறிந்து கொள்வதே இந்தத் திட்டம். முதலில் நாம் இந்த வருகை மே மாதத்தில், முள்ளிவாய்க்கால் யுத்த ஆண்டு நிறைவுடன் பொருந்தி வரவேண்டும் என நினைத்தோம். ஆனால், சில காரணங்களாலும் வெள்ள நிலைமை காரணமாகவும் இதை நாம் ஜுன் மாதத்திற்கு ஒத்திவைக்க வேண்டியேற்பட்டது.

முதலில் நாம் 20 பேருக்கு மேல் கொண்டுவர எண்ணியிருந்தோம். 22 பேரின் வருகைக்கான ஏற்பாடுகளை செய்தோம். பயண ஒழுங்குகள் தொடர்பான காரணங்களால் தொகையை குறைப்பது நல்லது என கொழும்பிலிருந்து அதிகாரிகள் கருதினர். இதனால் இது 12 பேராக குறைக்கப்பட்டது. ஆனால், கடைசி நேர பிரச்சினைகள் காரணமாக 9 பேர் மட்டுமே வர முடிந்தது.

கேள்வி : ஆக, அது எப்படி நடந்தது? தயவு செய்து பற்றி மேலும் கூறுங்கள்?

பதில் : வெளிநாட்டில் வசிப்போரின் வருகை, எமது திட்டங்களுக்கு ஊக்குவிப்பாக அமைந்தது. இங்கு வந்தவர்கள் இருந்த நிலைமை பற்றி நேரடி அனுபவம் பெற்றுக்கொண்டனர். ஒருவரைத் தவிர, மற்றைய யாவரும் உண்மை நிலைவரத்தை விளங்கிக் கொண்டனர். அவர்கள் சஉதஈஞ இன் தேவையை உணர்ந்துகொண்டனர். சிலர் நன்கொடை வழங்கினர். பெரிய தொகையாக அது இல்லாதபோதும் அது, விடயங்களை நகர்த்த போதுமானதாக இருந்தது. அரசாங்கம் அவர்களின் வருகைபற்றி திருப்தி அடைந்து, வெற்றியாக வருவது சாத்தியம் என்பதை ஒத்துக்கொண்டது.

வடக்கு மீனவர் சங்கத்தின் சங்கங்களின் சமாஜத்தின் தலைவர் எஸ்.தவரத்தினம் உள்ளார். நான் சஉதஈஞ இன் செயலாளர்.


கேள்வி: வின் செயற்பாடு அமைப்புப்பற்றி மேலும் கூறமுடியுமா?

பதில் : நல்லது. நாம் இப்போதுதான் தொடங்கியுள்ளோம். இப்போது வளங்கள் மட்டுப்படுத்தப்பட்டவையாகவே உள்ளன. கரிசனை உள்ளவர்களிடமிருந்து நன்கொடை பெற விரும்புகிறோம். சில நிதிகள் இப்போது கசிய ஆரம்பித்துள்ளன.

வவுனியாவில் உள்ள எமது அலுவலகம் மிகவும் எளிமையானது. எமக்கு பெரிய கட்டிடங்களோ அதிகளவு ஊழியர்களோ கட்டுப்படியாகாது. இங்கு இரண்டு உத்தியோகத்தர்கள் உள்ளனர். ஒருவர் யாழ்ப்பாணத்தவர், மற்றையவர் மலைநாட்டைச் சேர்ந்தவர். ஒருவர் அலுவலக வேலைகளை கவனிக்கின்றார். மற்றவர் கள உத்தியோகத்தர். அவர்களுக்கு சம்பளம் வழங்கப்படுகிறது. வன்னியிலிருந்து இடம்பெயர்ந்த ஒரு பெண் தொண்டர் என்ற வகையில் ஒருவர் தட்டெழுத்தாளராக இருக்கிறார். அவருக்கு சம்பளமாக ஒரு தொகை வழங்கப்படுகிறது.

சம்பளமின்றி, பகுதிநேர அடிப்படையில் உதவிசெய்யும் சில தொண்டர்களும் உள்ளனர். இவர்களில் அநேகமானோர் எனக்கு தனிப்பட்ட முறையில் – எமது ஊரான மைலிட்டியை சேர்ந்தவர்கள். அல்லது காங்கேசன்துறை நடேஸ்வராக் கல்லூரி மற்றும் தெல்லிப்பளை மஹாஜனக் கல்லூரி என்பவற்றிலும் பழைய மாணவர்கள் என பலவகையிலும் தெரிந்தவர்கள். சிலர் யாழ்ப்பாணம் பல்கலைகழகத்தில் என்னோடு படித்தவர்கள். இவர்களில் சிலர் பாடசாலை அதிபர்கள், அரசாங்க உத்தியோகத்தர்கள், அல்லது வங்கி ஊழியர்களாவர். நான் 1981இல் வெளிநாடு சென்றபின் இவர்களுடன் எனக்கு எந்த தொடர்பும் இருக்கவில்லை என்பதை குறிப்பிடவேண்டும். நான் எல்.ரீ.ரீ.ஈ. இல் இணைந்து வேலை செய்தபடியாலும் இவர்கள் இலங்கையில் இருந்த காரணத்தாலும், அவர்கள் பாதுகாப்பு கருதி நான் இவர்களுடன் தொடர்பாடலைத் தவிர்த்தேன்.

இப்போது இவர்கள் என்னோடு இணைந்து, பாதிக்கப்பட்ட மக்களுக்கு சில சேவைகளை செய்ய முயல்கின்றனர். இதில் 25-30 பேர்வரையில் உள்ளனர். எமக்கு வினைத்திறன் மிக்க தொண்டர்கள் தேவை. எனவே இது படிப்படியாக அதிகரிக்கும் என நினைக்கின்றேன்.

கேள்வி : சஉதஈஞ இது வரை செய்தது என்ன? உங்கள் எதிர்கால திட்டம் என்ன?

பதில் : எமது முதல்மாத முன்னேற்றம் கொஞ்சமானதே. சஉதஈஞ மூலமாக, கிளிநொச்சியில் உள்ள இரண்டு பாடசாலைகளில் ஒவ்வொன்றுக்கும் 15,000 ரூபா வீதம் தவணைப் பரீட்சை வினாத்தாள் அச்சிடுவதற்காக வழங்கினோம். மகாவித்தியாலயம், இராமநாதபுரம் மேற்கு தமிழ் கலவன் பாடசாலை என்பனவாகும். இங்கு கே. புவனேஷ்வரன் என்னும் வலுக்குறைந்த இளைஞனுக்கு க.பொ.த.(உ.த.) பரீட்சைக்கு சென்றுவர உதவியாக 5,000 ரூபா கொடுத்தோம்.

இதைவிட க.பொ.த. (உ.த.) பரீட்சைக்கு தயாராகும் புனர்வாழ்வு அளிக்கப்படும் 358 பிள்ளைகளுக்கு ஒவ்வொரு நாளும் பணிஸும் தேநீரும் வழங்கப்படுகிறது. 28 நாட்களுக்கு இவ்வாறு செய்யப்படும். இதுபோல க.பொ.த. (சா.த.) பரீட்சை எழுதப்போகும் 119 பிள்ளைகளுக்கும் சில ஆசிரியர்களுக்கும் உத்தியோகத்தர்களுக்கும் பணிஸும் தேநீரும் வழங்குவதற்கான செலவு 450, 000 ரூபாவினை சஉதஈஞ முழுமையாக செலுத்திவிட்டது.

கேள்வி : ஆனால் வெளிநாட்டில் வாழும் புலம்பெயர்ந்த தமிழர்களால் நடத்தப்படும் சில ஊடக அமைப்புகள் சஉதஈஞ வை விமர்சிக்கின்றன. இது அரசாங்கம் செய்யவேண்டிய வேலை. இதை நீங்கள் செய்ய வேண்டிய தேவை இல்லை என கூறுகின்றன.

பதில் : இவர்கள் இப்படித்தான் சொல்வார்கள். ஆனால் இங்கு உண்மைநிலை வேறாக உள்ளது. புலம்பெயர்ந்த தமிழர்களின் இந்த பிரிவினர் போலன்றி நாம் அரசாங்கத்தை தாக்குவதோ அல்லது குறைகளை குத்திக்காட்டிக் கொண்டோ இருப்பதில்லை. புலம்பெயர்ந்து வாழும் தமிழர் போலன்றி இங்கு அடிமட்டத்தில் வேலை செய்யும் நாம், அரசாங்கத்துடன் பங்குதாரர்களாக உள்ளோம்.

இது “நாங்களும் அவர்களும்” என்ற மாதிரி இல்லை. இது “நாங்கள்’ என்னும் நிலைமையாகும். இங்கு அரசாங்கமும் நாமும் ஒற்றுமையாக எமது மக்களுக்கு உதவுவதற்காக எம்மாலானதை அதி சிறப்பாக செய்யவேண்டும். அரசாங்கத்துக்கும் சிலவிடயங்களால் நிதித்தட்டுப்பாடு உள்ளது. அப்படியானால் சும்மா குந்திக்கொண்டிருந்து, அரசாங்கத்தை குறை கூறிக்கொண்டு எதுவும் செய்யாமல் இருக்க முடியுமா?

இப்படிக் கதைக்கும் புலம்பெயர்ந்த தமிழர்கள் ஒன்றை விளங்கிக் கொள்ள வேண்டும். அரசாங்கம் நினைத்திருந்தால் பாதுகாப்பு காரணங்களைக் காட்டி புனர்வாழ்வு அளிக்கப்படும் பிள்ளைகளை க.பொ.த.(உ.த.) பரீட்சைக்கு தோற்றவிடாமல் தடுத்திருக்கலாம். அவர்கள் அப்படிச் செய்யவில்லை. கஷ்டங்கள் இருந்தபோதும், பரீட்சைகளை எழுத ஒழுங்கு செய்தார்கள், உணவு வழங்கினார்கள், போக்குவரத்து ஏற்பாடு செய்தார்கள், ஆட்களையும் வழங்கினார்கள். அவுஸ்திரேலிய அரச சார்பற்ற நிறுவனமொன்று கற்றல் சாதனங்களையும் மேலதிக ஆசிரியருக்கான செலவையும் எழுதுகருவிகளையும் கொடுத்துதவியது. நாம் இதற்கான ஒழுங்குகளை தளத்திலிருந்து மேற்கொண்டோம். பின்பு சஉதஈஞ விலிருந்து நாம் பணிஸும் தேநீரும் வழங்கி உதவினோம்.

எனவே, இது அரசாங்கம், அவுஸ்திரேலிய சஎஞ, புலம்பெயர்ந்த சமூகம் ஆகிய மூன்று பகுதியினர்களுக்கு உதவ மேற்கொண்ட கூட்டு முயற்சியாகும். இதில் அரசாங்கம் சிரமத்திலும் செலவிலும் பெரும் பங்கை தாங்கிக் கொண்டது. புலம்பெயர் தமிழர்கள் இப்படியான முட்டாள்தனமான தாக்குதல்களை நிறுத்திக்கொள்ள வேண்டும்.
கேள்வி : இடம்பெயர்ந்தவர்களுக்கான எதிர்கால செயற்றிட்டங்கள் எவை?

பதில் : ஆம்; எம்மிடம் நிறைய திட்டங்கள் உண்டு. அவற்றை செயற்படுத்துவதை நோக்கி வேலை செய்கிறோம். கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் மீள் குடியமர்த்தப்பட்ட மக்களுக்காக கிளிநொச்சி, முல்லைத்தீவு நகரங்களில் மேலும் இரண்டு அலுவலகங்களை திறக்க திட்டமிட்டுள்ளோம்.

வவுனியா, மன்னார் வீதியில் ‘அன்பு இல்லம்’ என அழைக்கப்படும் வீடு ஒன்றை அமைப்பது தொடர்பாக திட்டமிடப்படுகின்றமை குறிப்பான ஒரு செயற்றிட்டமாகும். போரினால் அநாதைகளாகிய பிள்ளைகளுக்கும்- கை, கால், கண் இழந்தோருக்கும் கவனிக்க யாருமே இல்லாத மிகவும் வயதுபோனவர்களுக்கும் பாதுகாப்பான வதிவிடம் வழங்க விரும்புகிறோம். ஏற்கெனவே கொழும்பிலிருந்து இயங்கும் தமிழ் கத்தோலிக்க கன்னியாஸ்த்திரி ஒருவர் 40 பேரைக் கொண்ட இவ்வாறான இல்லமொன்றை நடத்தி வருகின்றார். இவருக்கு உதவி செய்ய சிங்கள கத்தோலிக்க கன்னியாஸ்த்திரிகள் குழுக்களாக வருகின்றனர். நாம் இந்த அருட் சகோதரியுடன் இணைந்து சஉதஈஞ இன் உதவியுடன் அவரது சேவையை விரிவாக்க திட்டமிட்டுள்ளோம்.

புனர்வாழ்வு அளிக்கப்படும் முன்னாள் புலி உறுப்பினர்களுக்கும் சில இடம்பெயர்ந்தோருக்கும் கூட விஞ்ஞான முறையிலான விவசாயத்தை கற்பிக்கவும் கடைப்பிடிக்கவுமாக 200 ஏக்கர் அளவில் மாதிரிப் பண்ணை ஒன்றை அமைப்பதும் எமது இன்னொரு திட்டமாகும். கை, கால் இல்லாதவர்களையும் வறுமையில் வாழும் வயோதிபர் ஆகியோரையும் பெருமளவில் கொண்ட வவுனியா நகரத்திலிருந்து 25 மைல் தூரத்தில் உள்ள கிராமம் ஒன்றையும் நாம் இனங்கண்டுள்ளோம். சமுதாய மையதிட்டமாக இந்த கிராமத்தை வேலை வாய்ப்பும் கவனிப்பும் வழங்கும் மாதிரிக் கிராமமாக உருவாக்க நாம் திட்டமிட்டு வருகின்றோம்.

இன்னொரு திட்டம் அம்புலன்ஸ் சேவை ஒன்றை ஏற்படுத்துவது ஆகும். இலண்டனில் உள்ள ஒரு நலன்விரும்பி, ஒரு அம்புலன்ஸ் வாகனம் வழங்க சம்மதித்துள்ளார். இதை நாம் கிளிநொச்சியிலிருந்து இயக்குவோம்.

கேள்வி : இப்படி குறிப்பான செயற்றிட்டங்கள் தவிர விரிந்த அளவில் அனைத்தையும் உள்ளடக்கிய அபிவிருத்தி பெருந்திட்டங்களை அமுலாக்கும் எண்ணம் உங்களிடம் உண்டா?

புதில் : ஆம்… எமக்கு அந்த எண்ணம் உண்டு. அவுஸ்திரேலியாவில் வசிக்கும் தமிழாரான அறிஞர் ஒருவர் எமது மீன்பிடித்துறையை மீட்டெடுக்கவும் கட்டியெழுப்பவும் என ஒருங்கிணைந்த அபிவிருத்தி திட்டமொன்றை தயாரித்துள்ளார். மீன்பிடித்துறை , யுத்தம் காரணமாக மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது என நான் நினைக்கின்றேன்.

இந்த திட்டத்தின் அடிப்படையில் ‘கரையோர மீன்பிடித் தொழில் புனருத்தாபன நிகழ்ச்சித்திட்டம்’ என பெயரிடப்பட்ட ஒரு குறுகியகால செயற்திட்டத்தை சஉதஈஞ வகுத்துள்ளது. தற்போதுள்ள மீளாய்வு வள்ளங்களை புனரமைப்பு செய்வதும் மீன்பிடி வள்ளங்களை புனரமைப்பு செய்வதும் வலைபோன்ற மீன்பிடி உபகரணங்களை வழங்குவதும் இதனுள் அடங்குகிறது. சரியாக அமுலாக்கப்பட்டால் 3,300 குடும்பங்களுக்கு இது முழு வேலைவாய்ப்பை வழங்கும்.

விவசாயம், பால்பண்ணை, விலங்கு வளர்ப்பு துறைகளை மீண்டும் வளர்த்தெடுப்பதற்கான ஆய்வுகள் நடைபெறுகின்றன. ஒரு அறிஞர் ஏற்கனவே விவசாயத்துக்கான பெருந்திட்டம் ஒன்றை வகுப்பதிலும் செலவை மதிப்பீடு செய்வதிலும் ஈடுபட்டுள்ளார். பால்பண்ணை, விலங்கு வளர்ப்பு அபிவிருத்தி திட்டமொன்றை உருவாக்க இன்னொரு அறிஞர் விரைவில் வருவார்.

எமது இன்னொரு திட்டம் தொழில்திறன். கல்வி, தொழில்நுட்ப கல்வி ஆகியவற்றை வழங்கும் பயிற்சி நிறுவனம் ஒன்றை ஏற்படுத்துவது ஆகும். ஆரம்பத்தில் முன்னாள் புலி உறுப்பினராக இருந்து, புனர்வாழ்வு அளிக்கப்படுவோருக்கு குறுகிய பாடநெறிகள், மோட்டார் பொறிமுறை, குழாய் பொருத்துதல், இலத்திரனியல், தரைத்தோற்றக்கலை என பல துறைகளையும் நாம் இந்த குறுகிய கால பாடநெறித் தராதரப் பத்திரங்களை பெறுவோருக்கு வேலைவாய்ப்பை தேடிக்கொள்ளவும் தேவையெனில் உயர்கல்வியை தொடரவும் வசதிகளை ஏற்படுத்திக்கொடுக்க எண்ணுகிறோம். இறுதியாக இதை நாம் முழுவசதிகொண்ட தொழில்நுட்பக் கல்லூரியாக விருத்தி செய்ய விரும்புகின்றோம்.

அடுத்த எமது திட்டம், நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் கலாசார நிகழ்வுகளை தொடராக நடத்துவதாகும். புனர்வாழ்வு அளிக்கப்படும் முன்னைநாள் புலி உறுப்பினர்களே இதில் பங்குபெறுவர்.

பிரபலமான சிங்கள திரைப்பட நடிகை அனோஜா வீரசிங்க, 60 புனர்வாழ்வு அளிக்கப்படும் புலி உறுப்பினர்களுக்கு ஒரு பயிற்சிப் பட்டறையை நடத்துகின்றார். அவரது அர்ப்பணிப்பு என்னைக் கவர்ந்தது. எமது பிரபலமான பாடகர்களில் ஒருவாரான சாந்தன் இரண்டு பிள்ளைகளுடன் தடுப்பில் உள்ளார். இவர்கள் உழைப்பை ஒன்று சேர்த்து முன்னாள் புலி உறுப்பினர்கள் பற்றி நல்ல எண்ணத்தை உருவாக்கி, சமாதானம் -நல்லெண்ணம் பற்றிய செய்தியை பரப்பும் வகையில் கலைவிழாக்களை நடத்தத் திட்டமிடுகின்றோம்.

கேள்வி : இந்த விடயங்களில் அரசாங்கம் எங்கு வருகிறது?

பதில் : நான் முன்பு கூறியது போல, நாம் சுயாதீனமாக வேலை செய்வோம். ஆனால் அரசாங்கத்தின் பங்காளராக இருப்போம். அரசின் ஆதரவு அல்லது அனுமதியின்றி வடக்கு- கிழக்கில் அல்லது இலங்கையின் எந்த பகுதியிலும் எவரும் தொழிற்படமுடியாது என்பதுதான் இன்றைய நிலை. வடக்கு- கிழக்கில் எமக்கு ஆயுதப்படைகளின் முழு ஆதரவும் தேவை. இதுவே யதார்த்தமாக இருக்கும்போது, எமது சுயாதீனத்தை தக்கவைத்துக் கொண்டு அரசாங்கத்துடன் ஒத்திசைவாக வேலை செய்ய வேண்டும்.

அரசாங்கம் சஉதஈஞ வைப் பிரச்சினை அல்லாத ஒன்றாகவே பார்க்கின்றது. அரசாங்கம் இதற்கு உதவி கொடுக்கும். தொடர்பாடலுக்கு அனுமதிக்கும். உதாரணமாக, மாதிரிப்பண்ணை அமைக்க அரசாங்கம் எமக்கு நிலம் தரும். அரசாங்கத்தின் ‘வடக்கின் வசந்தம்’, ‘கிழக்கின் உதயம்’ போன்ற திட்டங்களுடன் முடியுமானபோது இணைந்து கொள்ளவும் உதவி பெறவும் சஉதஈஞ எண்ணுகின்றது.

கேள்வி : உங்கள் திட்டம் எல்லாம் நன்றாகத்தான் இருக்கின்றன. ஆனால், அவற்றை நடைமுறைப்படுத்த உங்களிடம் வளங்கள் உண்டா?

பதில் : இல்லை. இன்னும் இல்லை. ஆனால் நாம் ஆரம்ப விருத்தி நிலையில் உள்ளோம். முதலில் அபிவிருத்தியை பொறுத்தவரையில் எமது மக்கள் பல தசாப்தங்கள் பின்னோக்கிப் போய்விட்டனர் என்பதை அங்கீகரிப்பதற்கு தாமும் யாதார்த்த பூர்வமாக இருக்க வேண்டும். உதாரணமாக, வடக்கில் புகையிரதப்பாதை இல்லை.

எமது சமுதாயம் எமது கல்விப் பாரம்பரியம் பற்றி பெருமைப்பட்டு கொண்டிருந்தது. இன்று எமது பாடசாலைகள் அழிக்கப்பட்டுவிட்டன. பிள்ளைகள் மரத்தின் கீழ் குந்தியிருந்து படிக்கின்றனர். பிள்ளைகளில் பலர் வறுமை காரணமாகவும், சீருடை, காலணி, பாடப்புத்தகம் என்பன இல்லாததாலும் பாடசாலை செல்வதில்லை. நாம் இந்த நிலைமை பற்றி ஒரு ஆய்வை மேற்கொண்டுள்ளோம்.

எமது திட்டங்கள் செயலாக வரத்தொடங்கி, மக்கள் எம்மைப்பற்றி அறியவரும்போது வெளிநாட்டிலுள்ள எமது தமிழ் உறவுகளிடமிருந்து பெருமளவு உதவியையும் அனுசரணையையும் பெறுவோம் என நாம் நம்புகின்றோம். ஏற்கனவே சில தகுதிவாய்ந்த வெளிநாட்டில் வாழ்வோர் இங்கு வந்து தமது கல்விசார்ந்த, வண்மை சார்ந்த நிபுணத்துவத்தை கொண்டு அடிப்படையில் வழங்கச் சம்மதித்துள்ளனர். சிலர் விசேட செயற்றிட்டங்களுக்கு நிதி வழங்க ஒத்துக் கொண்டுள்ளனர். சஉதஈஞ எமது மக்களின் உதவியுடன் படிப்படியாக நன்றாக இயங்கும் என நம்பிக்கையோடு உள்ளேன்.

கேள்வி : ஊடகங்களுடன் நிறையத் தொடர்புள்ள, வெளிநாட்டில் வாழும் தமிழர்களில் தமது கருத்தை அழுத்திப் பேசவல்ல ஒரு பகுதியினர் உங்களுக்கும் சஉதஈஞ வுக்கும் எதிராக நச்சுத்தனமான பிரசாரம் ஒன்றை செய்துக்கொண்டிருக்கின்றனர். உங்களை அரசாங்கத்தின் கைக்கூலி என்றும் சஉதஈஞ என்பது வெளிநாட்டிலிருந்து தமிழ் மக்களின் பணத்தை வரவழைத்து அரசாங்கத்தின் கஜனாவில் சேர்ப்பதற்கான ஒரு தந்திரம் என்றும் குற்றஞ் சாட்டுகின்றனர். இப்படியான பாதகமான நிலைமையில் நீங்கள் வெற்றி பெறலாம் என நம்புவது எப்படி?

பதில் : ஆம். இப்போதுள்ள நிலைமை பற்றி நீங்கள் கூறுவது சரியே. ஆனால். இது ஒரு தற்காலிகமான நிலைமை என்றுதான் நான் நினைக்கின்றேன். இந்த எதிரான பிரசாரத்தை அவிழ்த்துவிட்டுள்ள பகுதியினர் சிறுபான்மையினரே. ஆனால் நீங்கள் கூறியதுபோல் வெளிநாடுகளில் இவர்களுக்கு ஊடகங்கள் மீது கிட்டத்தட்ட தனியாதிக்கம் உண்டு. இதனால் இவர்களின் உண்மைப் பலத்தைவிட கூடுதலாக இவர்களுக்கு செல்வாக்கு உள்ளது. இருந்தாலும் அவர்கள் சிறுபான்மையினரே. இவர்களது பிரசாரம்- பொய்களிலும் தவறான வழிகளிலும் தங்கியுள்ளது.

நான் நம்பிக்கை வைத்திருப்பதும் தங்கியிருப்பதும் சத்தியம் மீதுதான். முதலில் எமது வலையமைப்பில் எமது செயற்றிட்டங்கள் பற்றியும் செலவுகளையும், கிடைத்தபணம், செலவு செய்த பணம் என்பவற்றின் கணக்கறிக்கைகயையும் விரிவாக அவர்களது நேர்மையான விசாரணைகளுக்கும் பதிலளிப்போம். நாம் இந்த விடயங்களில் திறந்த தன்மையுடன் வெளிப்படையாக உள்ளோம் என மக்கள் மேலும் மேலும் அறியவரும்போது, இந்த பொய்ப்பிரசாரம் நிலைத்து நிற்கமுடியாது போகும்.

இரண்டாவதாக, எமது ஆதரவையும் உதவிகளையும் பெற்றுக்கொண்டவர்கள் உண்மை நிலைமைப்பற்றி வெளிநாட்டில் வாழும் தமது உறவினரருக்கும் நண்பர்களுக்கும் தெரிவிப்பார்கள் என்னும் நம்பிக்கையோடு உள்ளோம். அவர்கள் நேரடியாகவே விடயங்களை அவதானிக்கவும் தமது சொந்த முடிவுக்கு வரவும் உதவ தயாராகவுள்ளோம். எம்மிடம் மறைப்பதற்கு எதுவுமில்லை. எம்மோடு தொடர்பு கொண்டால் வடக்கு- கிழக்குக்கு பயணம் செய்ய விரும்புவோருக்கு உதவி செய்யவும் சஉதஈஞ தயாராகவுள்ளது. தேவையெனில் சஉதஈஞ வின் பிரதிநிதி ஒருவரை, கட்டுநாயக்க விமான நிலையத்தில் நிறுத்தி வைக்கலாம் எனவும் யோசிக்கின்றோம்.

ஆகவே, படிப்படியாக உண்மை வெல்லும், சஉதஈஞ வெற்றியடையும்.

கேள்வி : நீங்கள் எப்போதும் நன்மையே நடக்கும் என எண்ணுபவர் என நான் காண்கிறேன். நீங்கள் சில புனர்வாழ்வு அளிக்கப்படுபவர்களுடனான ஒரு சந்திப்பின்போது ‘நம்பிக்கைதான் வாழ்க்கை‘ என கூறும் காட்சியை வீடியோ துண்டம் ஒன்றில் பார்த்தேன். நான் உங்கள் மனோநிலையை விளங்கிக் கொள்கிறேன். ஆனால் இவ்வளவு பயமுறுத்தும் தடைகளையும் மீறி உங்களால் வெற்றியடைய முடியும் என நீங்கள் நினைக்கின்றீர்களா?

பதில் : பிரபாகரன் என்னிடம் வெளிநாட்டு கொள்வனவு (ஆயுதம் வாங்குதல்) பொறுப்பை 1983இல் தந்தபோது, நான் ஒரு கற்றுக்குட்டியாக இருந்தேன். நான் மிகவும் சாதாரண பின்னணியிலிருந்து வந்தவன். எனது தந்தை அரசியல்ரீதியாக விளக்கமுடையவராக இருந்தார். ஆனால் அவர் ஒரு சாதாரண மீனவராக இருந்தார். நான் உயர் குழாத்தினர் படிக்கும் பாடசாலைகளில் கல்வி பெறவில்லை. எனது ஆங்கில அறிவு குறைவாக இருந்தது. நான் இலங்கை, இந்தியாவுக்கு வெளியே எங்கும் போயிருக்கவில்லை. எல்.ரீ.ரீ.ஈ. ஆயுத வியாபாரத்தில் முக்கியமான எவரையும் அறிந்திருந்த அனுபவமில்லாத இயக்கமாக இருந்தது.

ஆயினும் நான் எனது பகுதியை மெதுவாகவும் நிதானமாகவும் விருத்தி செய்தேன். நாங்கள் ஆயுதங்களை பல்வேறுப்பட்ட மூலங்களிலிருந்து, உலகளாவிய ரீதியில் கொள்வனவு செய்து வடக்கு- கிழக்கில் கப்பலில் ஒழுங்கு தவறாமல் அனுப்புமளவான நிலைமைக்கு எல்.ரீ.ரீ.ஈ. இன் சக்தியை வளர்த்தேன். நான் வெளிநாட்டில் ஆயுதங்களை கொள்வனவு செய்யும் வரையில் எல்.ரீ.ரீ.ஈ.யால் யுத்தத்தை வெற்றிகரமாக நீடிக்க முடிந்தது. என்னால் ஆயுதங்களை தொடர்ச்சியாக வாங்கக் கூடியதாக இருந்ததே இதற்கான காரணம்.

சாவையும் அழிவையும் கொண்டுவந்த ஒரு கடமைப் பொறுப்பில் அப்போது என்னால் வெற்றி பெறக் கூடியதாக இருந்தது என்றால், முன்னர் போலல்லாது மக்களையும் வாழ்க்கையையும் அழிப்பதற்குப் பதிலாக மக்களுக்கு உதவுவதும் வாழ்க்கையை மீளக்கட்டியெழுப்புவதுமான இலக்கை கொண்ட இந்தப் புதிய கடைமைப் பொறுப்பில் ஏன் என்னால் வெற்றியடைய முடியாது?

கேள்வி : நீங்கள் மனந்தளர்ந்து போகவேண்டுமென இதைக் கூறவில்லை. அத்துடன் உங்கள் ஆற்றலையும் விசேட திறமையையும் நான் மறுத்துரைக்கவும் இல்லை. ஆனால் இங்குள்ள மிகப்பெரிய வித்தியாசம் என்னவென்றால் நீங்கள் தடுப்புக் காவலில் இருக்கிறீர்கள். சுதந்திர மனிதனாக இல்லை. முன்பு போலன்றி விடயங்களை செய்வதற்கு உங்களால் சுதந்திரமாக நடமாட முடியாது. அத்தோடு உங்களுக்கு வயது போய்விட்டது. நல்ல ஆரோக்கியத்துடனும் இல்லை. அத்துடன் உங்களுக்கெதிராக அதிதீவிர அமுக்கக் குழு ஒன்று கடுமையாக வேலை செய்கின்றது. இதனால்தான் நான் சந்தேகப்படுகிறேன்.

பதில் : ஒருவிதத்தில் நீங்கள் சொல்வது சரி. ஆனால் நான் வெற்றிபெறுவேன் என நினைக்கின்றேன். ஆம், தடுத்து வைத்திருக்கப்பட்டிருப்பதும் காரியங்களை நேரில் போய் செய்வதற்கு பதிலாக தொலைபேசி, ஸ்கைப், இணையம் என்பவற்றை பயன்படுத்த வேண்டியிருப்பதும் விரக்தியடையச் செய்யும்தான். ஆனால் நான் யதார்த்தத்தை எதிர்கொள்ள வேண்டும். நான் தடுப்புக்காவலில் இருக்கக்கூடும். ஆனால் குறைந்தபட்சம் மக்களுக்காக சிலவற்றை செய்யும் வாய்ப்பு எனக்கு இருக்கிறது என நினைப்பதுண்டு.

என் மனதின் ஆழத்திலிருந்து ஒரு விடயத்தை உங்களுக்கு சொல்கிறேன். இது எனக்கு வழங்கப்பட்ட மூன்றாவது பெரிய பொறுப்பும் வாய்ப்பும் ஆகும்.

முதலாவதுதான் பிரபாகரனால் ஆயுதக்கொள்வனவு செய்ய நியமிக்கப்பட்டது. நான் அதில் வெற்றிபெற்றேன். இரண்டாவது பொறுப்பு நான் மீண்டும் இயக்கத்தில் இணைந்தபோது யுத்த நிறுத்தமொன்றை கொண்டு வருவதும் தலைமையையும் இயக்கத்தையும் காப்பாற்றுவதாகவும் இருந்தது. நான் அதில் தோல்வி அடைந்தேன்.

இப்போது இது எனது மூன்றாவது பெரிய கடமைப் பொறுப்பு. இதில் எனது நோக்கமும் தூரநோக்கும் மக்களுக்கு உதவுவதாக உள்ளது. நான் ஒரு இயக்கத்துக்கு ஆயுதம் வழங்கவோ அல்லது அதை காப்பாற்ற முயலவோ இல்லை. இந்த முறை நான் மக்களின் வாழ்வை மீண்டும் கட்டியெழுப்புவதற்காக அவர்களுக்கு உதவுகின்ற உயர்ந்த பெறுமதிமிக்க பொறுப்பில் இருக்கிறேன். எனவே நான் நிச்சயம் வெற்றிபெறுவேன்.

கேள்வி : மக்களுக்கு உதவும் உங்கள் இலட்சியத்தில் தடையோ கட்டுப்பாடோ இல்லாமல் நீங்கள் ஈடுபடும் வகையில் உங்களை விடுவிக்கும்படி நீங்கள் ஏன் வேண்டுகோள் ஒன்றை விடுக்கக் கூடாது?

பதில் : இரண்டு காரணங்களால் நான் இப்படியான வேண்டுகோளை விடுக்க மாட்டேன். முதலாவதாக ஆயிரக் கணக்கான முன்னாள் எல்.ரீ.ரீ.ஈ. உறுப்பினர்கள் இன்னும் விடுவிக்கப்படாத நிலையில், நான் சுதந்திரமாக இருக்க விரும்பவில்லை. நிலைவரம் முன்னேற்றம் கண்டு முன்னாள் உறுப்பினர்களில் பெரும்பகுதியினர் விடுவிக்கப்பட்டு அல்லது நீதிமன்றத்துக்கு கொண்டுவரப்படும் நிலைமை வரும்போது நானும் சுதந்திரமாக இருப்பது பற்றி யோசிக்க முடியும்.

அடுத்த காரணம், இப்படி செய்வது அரசாங்கத்துக்கு சங்கடத்தை ஏற்படுத்தலாம். ஏற்கனவே அரசாங்கம், குறிப்பாக பாதுகாப்பு செயலாளர் என் காரணமாக எதிர்க்கட்சியினரால் கடுமையாக விமர்சிக்கப்படுகின்றார். இதை மேலும் சிக்கலாக்க நான் விரும்பவில்லை. சரியான நேரத்தில் பாதுகாப்பு அமைச்சராகவுள்ள ஜனாதிபதி, பாதுகாப்பு செயலாளருடன் ஆலோசித்து எல்.ரீ.ரீ.ஈ. பற்றி முழுதான ஒரு கொள்ளைத் தீர்மானத்தை எடுப்பார். எனது கதி என்னவாகும் என்பதை நான் அறியேன். அதுவரை இந்த நிலைமையில் கீழ் எது முடியுமோ அதை நான் செய்வேன்.

ஒரு நன்மையான விடயம் என்னவென்றால் அர்ப்பணிப்பு உள்ள ஒரு அணி சஉதஈஞ வைச் சுற்றி மெதுவாக உருவாகின்றது. எனவே எனது நடமாட்டம் மட்டுப்படுத்தப்பட்டிருப்பினும், இந்த அணி உற்சாகமாக வேலை செய்யும். ஆனால் இயலுமாயின் என்னை வவுனியாவில் நிலைப்படுத்தும்படி நான் கேட்டிருக்கிறேன்.

கேள்வி : அரசாங்கம் உங்களை பயன்படுத்திக் கொள்கின்றது, உங்களை பின்னர் தட்டிக் கழித்துவிடும் என்றும் சிலர் கூறுகின்றனர். நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள்?

பதில் : நான் நம்பிக்கையில், விசுவாசத்தில், நல்லெண்ணத்தில் வேலை செய்கின்றேன். நான் அப்படி நடக்கும் என்று நினைக்கவில்லை. ஆனால், விவாதத்திற்காக அப்படி நடக்கும் என வைத்துக் கொள்வோம். அப்போதும் கூட குறைந்தப்பட்சம் இப்போது நான் செய்வது போன்று சிலருக்கு உதவி செய்வதில் வெற்றி கண்டிருப்பேன். அது எனக்கு போதும்.

கேள்வி : மறுபுறத்தில் நீங்கள் அரசியலுக்கு வருவதுபற்றி பல தமிழ் அரசியல்வாதிகள் கவலையடைந்துள்ளனர். அப்படியான எண்ணம் ஏதும்..?

பதில் : இல்லை… இயலுமாக இருந்தாலும்கூட நான் அரசியலுக்கு வரவிரும்பவில்லை. தமிழர்களால் தெரிவு செய்யப்பட்டவர்கள் அரசியலை நடத்தட்டும். நான் செய்ய விரும்புவதெல்லாம், புனர்வாழ்வு வழங்கப்படும் முன்னாள் புலி உறுப்பினர்களினதும் உள்நாட்டில் இடம் பெயர்ந்தோரினதும் நலன்களை கவனிப்பதையே. இப்போது எமது மக்களுக்கு தேவையாயிருப்பது அரசியல்வாதிகள் அல்ல. மாறாக மனித நேயர்களே.

கேள்வி : சஉதஈஞ வடக்கு- கிழக்கில் உள்ள சகல மக்களுக்காகவும் உழைக்குமா?

பதில் : அதுதான் எனது நீண்டகால நோக்காக உள்ளது. ஆனால் இப்போதைக்கு முன்னாள் எல்.ரீ.ரீ.ஈ. அங்கத்தவர்கள் , இடம்பெயர்ந்தோர் மீது மட்டும் எமது கவனத்தைக் குவிப்போம்.

கேள்வி : நாம் நீண்ட நேரம் பேசிவிட்டோம். இன்னும் பேச வேண்டிய விடயங்கள் நிறைய உள்ளன. இன்னொரு நேரத்தில் பேசக் கூடியதாக இருக்கலாம். ஆனால் நாம் முடிக்கும்முன் நீங்கள் இலங்கையருக்கென பொதுவாகவும் தமிழருக்கென குறிப்பாகவும் சொல்ல விரும்பும் செய்தி உண்டா?

பதில் : தொலைதூரத்திலிருக்கும் கனடாவிலிருந்து தொலைபேசிமூலம் இந்த உரையாடலை நடத்தியதற்கு நன்றி. இதை நாம் விரைவில் மீண்டும் செய்யவேண்டும். அப்போது சஉதஈஞ எவ்வளவு சாதித்துள்ளது என்பதை உங்களுக்கு சொல்லக் கூடியதாக இருக்கும்.

ஆம். என்னிடம் இரண்டு செய்திகள் உள்ளன. முதலாவது, எனது தமிழ் உறவுகளுக்கு நான் சொல்வது இதுதான்… போர் முடிந்துவிட்டது. பிரபாகரன் மற்றும் சிரேஷ்ட தலைவர்கள் எம்மோடு இல்லை. தமிழ் ஈழம் ஒரு தோற்றுப்போன இலட்சியம். ஆயுதப் போராட்டம் இன்னும் முடியவில்லை என்னும் பொறுப்பில்லாதவர்கள் கூற்றை நம்பி ஏமாந்துவிடாதீர்கள். தயவு செய்து மோதல் மனப்பாங்கை விட்டொழித்து, உடைந்துப்போன எமது மக்களின் வாழ்க்கையை மீளக் கட்டியெழுப்ப உதவுங்கள். வெளிநாட்டில் வாழும் தமிழர்களிடமும் தமிழ்நாட்டு அரசியல்வாதிகளிடமும் வீணான அலங்காரப்பேச்சுகளை தவிர்த்து, அதற்கு பதிலாக இலங்கைத் தமிழர்கள் ஏனையோருடன் இணைந்து செழிப்புடனும் ஒத்திசைவுடனும் வாழ உதவுங்கள் என நான் வேண்டுகோள் விடுக்கின்றேன். எமக்கு இணக்கப்பாடும் ஒத்துழைப்பும்தான் தேவை. மோதலும் முரண்பாடும் தேவையில்லை.

இரண்டாவது செய்தி… எனது இலங்கை உறவுகளுக்கானது. எல்.ரீ.ரீ.ஈ. ஐ சேர்ந்த நாங்களும் வேறு போராட்டக் குழுக்களும் எமது இழந்துபோன உரிமைகளை மீண்டும் வென்றெடுக்க ஆயுதப்போராட்டத்தை தொடங்கினோம். நாம் தமிழ் ஈழம்தான் இதற்கு விடை என நினைத்தோம். அந்த இலட்சியம் எமது வழிமுறைகளை நியாயப்படுத்தும் என நினைத்தோம். எமது ஆயுதப் போராட்டத்தின் போது இலங்கை மக்களின் பெரும் துன்பத்துக்கும் கெடுதிக்கும் நாம் காரணமாகினோம். சிலவேளைகளில் நாகரீகமடைந்த நடத்தையில் எல்லா நியமங்களையும் பார்க்கும்போது நடந்தவற்றையிட்டு அதிர்ச்சியடைவேன். எல்.ரீ.ரீ.ஈ. யின் ஒரு சிரேஷ்ட தலைவர் அல்லது முன்னாள் தலைவர் என்ற வகையில் இதற்காக இலங்கையர்கள் எல்லோரிடமிருந்து மனதார மன்னிப்புக்காக இறைஞ்சுகின்றேன். தயவு செய்து எம்மை மன்னித்து, சகல இலங்கையருக்குமாக ஒரு நல்ல எதிர்காலத்தை அமைப்பதில் முன்னிற்க எமக்கு உதவுங்கள்.

கேள்வி : இந்த உரையாடலுக்கு நன்றி. உங்கள் நல்ல நோக்கங்கொண்ட முயற்சிகள் வெற்றிபெற வாழ்த்துகிறேன். தனிப்பட்ட மீட்சிக்கான உங்கள் பயணமும் வெற்றிபெற வாழ்த்துகிறேன். நீங்கள் உங்கள் சேரிடத்தை அடைவீர்கள் என நான் நம்புகிறேன். அதற்காக பிரார்த்திக்கிறேன்.

பதில் : உங்கள் வாழ்த்துக்களுக்கும் நேர்காணலுக்கும் மீண்டும் நன்றி கூறுகிறேன். நம்பிக்கைதான் வாழ்க்கை.


மேலும் இங்கே தொடர்க...

“கவர்ச்சிகரமான பேச்சை விடுத்து இலங்கை தமிழர்களுக்கு உதவுங்கள்” தமிழக தலைவர்களுக்கு பத்மநாதன் வேண்டுகோள்



விடுதலைப்புலிகளின் வெளிநாட்டு ஒருங்கிணைப்பாளராக இருந்தவர் கேபி என்கிற பத்மநாதன். கைது செய்யப்பட்ட இவர் இலங்கை ராணுவ காவலில் உள்ளார். இவர் ஒரு பத்திரிகைக்கு டெலிபோனில் பேட்டி அளித்துள்ளார். அப்போது அவர் கூறியதாவது:-

தற்போது எங்களுக்கு (இலங்கை தமிழர்களுக்கு) சமரசத்துடன் கூடிய இணக்கமான சூழ்நிலையும்,, ஒற்றுமையும்தான் தேவை. அதை விடுத்து எதிர்க்கும் போக்கு மற்றும் மனக் கசப்பு போன்றவை தேவையில்லை.

தற்போது நான் கைது செய்யப்பட்டிருந்தாலும், போரினால் பாதிக்கப்பட்டுள்ள தமிழர்கள் வாழும் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் மறுவாழ்வு மற்றும் வளர்ச்சி நிறுவனத்தின் சமூக சேவகராக உள்ளேன். இந்த நிறுவனம் இலங்கை அரசின் ஆதரவுடன் செயல்படுகிறது.

தற்போது நான் டெலிபோன், இ மெயில், பேக்ஸ் போன்றவற்றை பயன்படுத்துகிறேன். எங்கள் மக்களுக்கு தற்போது அரசியல்வாதிகள் தேவையில்லை. மனிதாபி மானிகள் தான் தேவை.

விடுதலைப்புலிகள் இயக்கத்தில் இருந்த ஆயிரக்கணக்கானவர்கள் தற்போது மறுவாழ்வு, மற்றும் மறு சீரமைப்பு சிறப்பு முகாம்களில் உள்ளனர். அவர்களின் வாழ்வு மீண்டும் நல்ல முறையில் அமைய வேண்டும். அதற்கான அனைத்து வசதிகளையும் இலங்கை ராணுவ செயலாளர் கோதபயராஜ பக்சே செய்து உதவி வருகிறார்.

கைது செய்யப்பட்டு சிறப்பு முகாம்களில் இருக்கும் அவர்களை இன்னும் 6 மாதங்களில் விடுவிப்பதாக தெரிவித்துள்ளார். வட கிழக்கு மாகாண மறுவாழ்வு மற்றும் வளர்ச்சி நிறுவனம் கடந்த ஜூலை மாதம் தொடங்கப்பட்டது.

அகதிகளின் குழந்தைகள் கல்வி பயில பள்ளிகளுக்கு நிதி உதவி அளித்து வருகிறது. போரில் அனாதையான குழந்தைகளை பராமரிக்க வவுனியாவில் அன்பு இல்லம் தொடங்க திட்டமிட்டுள்ளது. மேலும் சண்டையின் போது கை, கால்கள் மற்றும் பார்வை இழந்தவர்களும் இங்கு பராமரிக்கப்பட உள்ளனர்.

போரில் காயம் அடைந்த வர்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களுக்காக வவுனியா அருகே ஒரு மாதிரி கிராமம் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் 200 ஏக்கர் பரப்பளவில் ஒரு பண்ணை தொடங்க திட்டமிடப் பட்டுள்ளது. கைது செய்யப்பட்டுள்ள விடுதலைபுலிகளின் வாழ்வை சீரமைக்க அங்கு நடவடிக்கைகள் மேற்கொள்ள உள்ளன. இது கிளிநொச்சி அல்லது வவுனியாவில் அமைக்கப்படும் போரில் விடுதலைப்புலிகள் தோல்வி அடைந்தால் எங்கள் மக்களையும் (இலங்கை தமிழர்களை) இயக்கத்தையும் பாதுகாக்கும் பொறுப்பை பிரபாகரன் என்னிடம் ஒப்படைத்துள்ளார். அந்த கடமையை நான் செய்து வருகிறேன்.

இந்த நிலையில் இலங்கை தமிழர்கள் குறித்து தமிழ்நாட்டில் உள்ள தலைவர்கள் தேவையற்ற அலங்கார கவர்ச்சிகரமான வார்த்தைகளால் வீணாக பேச வேண்டாம். எங்கள் வாழ்வுக்கு தேவையான ஆக்க பூர்வமான உதவிகளை செய்யுங்கள்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் இங்கே தொடர்க...

முன்னேஸ்வர மிருக பலிக்கு பொலிஸாரும் உடந்தை : தேசிய பிக்கு முன்னணி

சிலாபம் முன்னேஸ்வரம் ஸ்ரீ பத்தரகாளி அம்மன் கோவிலில் கடந்த புதன்கிழமை நடத்தப்பட்ட மிருக பலி பூசையினைத் தடுத்து நிறுத்த நடவடிக்கைகளை மேற்கொள்ளாத பொலிசார் அதிகமான மிருகங்கள் பலியிடப்படுவதற்கு உந்துசக்தியாக இருந்தனர் என தேசிய பிக்கு முன்னணியின் தேசிய அமைப்பாளர் ஹெடில்லே விமலசார தேரர் தெரிவித்துள்ளார்.

மிருக பலி பூசைக்கு எதிராக தேசிய பிக்கு முன்னணி ஏற்பாடு செய்த அமைதியான பாதயாத்திரைக்கும், சத்தியாக்கிரகத்திற்கும் இடையூறு விளைவித்து பொலிசார் நடந்து கொண்ட விதம் அனுமதிக்க முடியாத ஒன்று என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இச்சம்பவம் தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

"இந்து மதத்தின் பெயரால் சிலாபம் முன்னேஸ்வரம் காளி கோவிலில் கடந்த புதன்கிழமை அதிக எண்ணிக்கையிலாக ஆடுகளும், கோழிகளும் பலியிடப்பட்டுள்ளன.

பௌத்த விகாரைக்குச் சொந்தமான இடம் ஒன்றில் அமைக்கப்பட்டுள்ள இந்தக் கோவிலில் இவ்வாறான சம்பவம் வருடந்தோரும் இடம்பெற்று வருகின்றமை கவலைக்குரிய விடயமாகும்.

சமயத்தின் பெயரால் செய்யப்படும் இவ்வாறான பாவச் செயலைத் தடுத்து நிறுத்துமாறும், இது தொடர்பாக கலந்துரையாடுவதற்கு சந்தர்ப்பம் ஒன்றை ஏற்படுத்தித் தருமாறும் கோரி பொலிஸ் மா அதிபருக்கு கடிதம் ஒன்றை அனுப்பினோம். அப்போது பிரதி பொலிஸ் மா அதிபர் அனுர சேனநாயக்காவுடன் கலந்துரையாட சந்தர்ப்பமும் ஏற்படுத்தித் தரப்பட்டது.

இந்து காங்கிரஸ் செயலாளர் கந்தய்யா நீலகாந்தனும் அந்த பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டார்.

இந்தச் செயலை நிறுத்துவதற்கு வேண்டிய சட்ட விடயங்கள் தொடர்பில் நாம் அவருக்கு விளக்கினோம். அப்போது, இது தொடர்பாக நடவடிக்கை எடுப்பதாக பிரதி பொலிஸ் மா அதிபர் எமக்குத் தெரிவித்தார். பின்னர் நாம் சிலாபம் பொலிசிலும் ஒரு முறைப்பாட்டைச் செய்தோம்.

மிருக பலி பூசையினை நிறுத்தாவிட்டால் நாம் அமைதியான பாத யாத்திரை ஒன்றையும், சத்தியாக்கிரகப் போராட்டத்தையும் அவ்விடத்தில் நடத்துவோம் எனவும் அந்த முறைப்பாட்டில் தெரிவித்திருந்தோம்.

எனினும் பொலிசார் இதனை நிறுத்துவதற்குப் பதிலாக அந்தச் செயலுக்குப் பாதுகாப்பு வழங்கியதுடன் எமது பாதயாத்திரைக்கும், சத்தியாக்கிரகப் போராட்டத்திற்கும் இடையூறு விளைவித்தனர்.

எமக்கு அவ்விடத்தில் பிரச்சினையை ஏற்படுத்தும் எந்த நோக்கமும் இல்லை என நாம் பொலிசாருக்குத் தெரிவித்த போதும் எம்மைத் தடுக்க பொலிசார் யுத்தமொன்றுக்கு வருவதுபோல வந்தனர்.

இந்த மிருக பலி பூசையினை நடத்துவதற்குப் பின்னணியாக அப்பிரதேசத்தின் மிருக பண்ணை நடத்துவோர் இருந்துள்ளனர். பௌத்த விகாரை ஒன்றுக்கருகில் பூக்கள் விற்கப்படுவது போல அவர்கள் இங்கு பலிக்காக மிருகங்களை விற்பனை செய்கின்றனர். இவ்வாறு பலியிடப்படும் மிருகங்களை வாங்க ஒரு பிரிவினர் உள்ளதாக அறிந்தோம்.

இந்தச் செயலை நடத்த அனுமதிப்பதானது பௌத்த நாடான இலங்கைக்கு அபகீர்த்தியை ஏற்படுத்தியுள்ளதுடன், இந்து மதத்திற்கும் இழிவுடன், அவமரியாதையையும் ஏற்படுத்தியுள்ளது" என்றார்.
மேலும் இங்கே தொடர்க...

நிருபமா ராவ் - கிழக்கு முதலமைச்சர் புதனன்று சந்திப்பு

இந்திய வெளியுறவு செயலாளர் நிருபமா ராவ் கிழக்கு மாகாண முதலமைச்சரும்,தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சித் தலைவருமான சிவனேசத்துரை சந்திரகாந்தனைச் சந்நித்துப் பேசவுள்ளார்.

இச்சந்திப்பு எதிர்வரும் முதாலாம் திகதி கிழக்கு மாகாண சபையில் இடம் பெறவுள்ளது.

திருகோணமலையிலுள்ள முதலமைச்சர் அலுவலகத்தில் இடம்பெறும் இச்சந்திப்பில் கிழக்கு மாகாண அபிவிருத்தி, மீள் குடியேறிய மக்களின் பிரச்சினைகள், தற்போதைய நிலவரம் என்பன குறித்துப் பேச்சு நடத்தப்படவுள்ளதாக முதலமைச்சரின் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.
மேலும் இங்கே தொடர்க...

மீள்குடியேறிய மக்களுக்கு லிபிய அமைப்பின் கிளை உதவி

லிபியாவின் சர்வதேச இஸ்லாமிய அமைப்புப் பணியகத்தின் இலங்கைக் கிளையினர் யுத்தத்தின் பின்னரான மீள்குடியேற்றம், பள்ளிவாயல்கள் மற்றும் பாடசாலைகள் பற்றிய ஆய்வு ஒன்றை மேற்கொள்வதற்காக வடமாகாணம் சென்றனர்.

யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, நயினாதீவு, சாவகச்சேரி, கிளிநொச்சி, முல்லைத்தீவு ஆகிய இடங்களுக்கு அவர்கள் விஜயம் செய்தனர்.

யாழ்ப்பாணம் ஒஸ்மானியா மகா வித்தியாலயத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில், மீள்குடியேறிய மக்களுக்கு உலர் உணவுப் பொதிகளை மேற்படி அமைப்பினர் வழங்கினர்.

இவ்வைபவத்தில் அஷ்ஷேக் எம்.இஸட்.சிபார், நவாஸ் மௌலவி, அஷ்ஷேக் கமருஸ்ஸமான், ஆர்.கே.அனிஸ் ஆகியோர் கலந்து கொண்டு உலர் உணவுப் பொருட்களை மக்களுக்கு வழங்கினர்.
மேலும் இங்கே தொடர்க...

ஐ.நா. குழுவின் விசாரணை முயற்சிக்கு மத்தியிலும் ஜனாதிபதி ஐ.நா. பயணம்

அடுத்த மாதம் ஐக்கியநாடுகள் ஸ்தாபனத்தின் பொதுச் சபைக் கூட்டத் தொடர்களில் கலந்து கொள்வதற்காக நியூயோர்க் செல்ல இருக்கும் இலங்கைத் தூதுக்குழுவிற்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமைதாங்க இருக்கிறார். வர்த்தகம், கைத் தொழில் ஆகிய துறைகளை சேர்ந்த தலைவர்களும் ஜனாதிபதியுடன் இந்த விஜ யத்தில் கலந்து கொள்வார்கள். இலங்øக யில் வர்த்தகம், முதலீடு ஆகியவற்றை ஊக் குவிப்பது பற்றி அவர்கள் அமெரிக்க வர்த் தக, கைத்தொழில் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த இருக்கிறார்கள். இந்த பணயத்தின் போது ஜனாதிபதி ராஜபக்ஷ மெக்ஸிகோ, ஜேர்மனி ஆகிய நாடுகளுக்கும் தனிப்பட்ட விஜயத்தை மேற்கொள்ள இருக்கிறார்.

ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின் மிலேனியம் அபிவிருத்தி குறிக்கோள்கள் தொடர்பான உயர்மட்ட முழுநிறைவுக் கூட்டத்திலும் பொதுச் சபையின் கூட்டத் தொடர்களிலும் ஜனாதிபதி கலந்து கொள்வார்.

மிலேனியம் அபிவிருத்திக் குறிக்கோள்கள் தொடர்பான கூட்டத்தில் ஜனாதிபதி உரையாற்றுவதற்கு செப்டெம்பர் மாதம் 22ஆம் திகதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த மூன்று நாள் உச்சி மகாநாட்டுக் கூட்டத்தில் 150க்கும் அதிகமான உலகத் தலைவர்கள் உரைநிகழ்த்த இருக்கிறார்கள். செப்டெம்பர் மாதம் 23ஆம் திகதி ஆரம்பமாக இருக்கும் பொதுச் சபைக் கூட்ட அமர்வுகளின் தொடர்ச்சியாக மிலெனியம் அபிவிருத்திக் குறிக்கோள்கள் தொடர்பான உச்சிமகாநாடு நடைபெறும். ஆரம்ப தினமான செப்டெம்பர் மாதம் 22ஆம் திகதி பிறேஸில், அமெரிக்கா, சுவிற்ஸர்லாந்து, மாலாவி, பாகிஸ்தான், கொஸ்டா றிக்கா ஆகிய நாடுகளின் தலைவர்களை அடுத்து ஜனாதிபதி ராஜபக்ஷ 7ஆவது தலைவராக உரைநிகழ்த்துவாரென பட்டியல்படுத்தப்பட்டுள்ளது.

பொதுச் சபைக் கூட்டத்தில், ஜனாதிபதி ராஜபக்ஷ கடந்த வருடம் தமிழீழ விடுதலைப்புலிகள் தோற்கடிக்கப்படமை தொடர்பான விடயங்களை எடுத்தக் கூறுவாரென வெளிவிவகார அமைச்சு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இலங்கை தொடர்பான ஐக்கியநாடுகள் குழு விசாரணை செய்ய முயற்சிசெய்துவரும் விடயங்களை உள்ளடக்கியதாக இந்த உரை இருக்குமென கருதப்படுகிறது என்று இவ்வட்டாரங்கள் தெரிவித்தன.

ஜனாதிபதி ராஜபக்ஷவின் விஜயத்தின் போது பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருக்கும். ஐக்கியநாடுகள் ஸ்தாபனத்திற்கு வெளியே ஆர்ப்பாட்டங்களும் பேரணிகளும் நடத்தப்படலாம் என்று வெளிவிவகார அமைச்சுக்கு தகவல்கள் கிடைத்துள்ளன. இந்த ஆர்ப்பாட்டங்களும் பேரணிகளும் புலம்பெயர் தமிழர்களாலோ விடுதலைப்புலிகளாலோ அல்ல என்றும் முன்னாள் இராணுவ தளபதி சரத் பொன்சேகாவை ஆதரிக்கும் புலம்பெயர் சிங்கள மக்கள் குழு ஒன்றினால் என்றும் தெரியவருவதாக அமைச்சு வட்டாரங்கள் குறிப்பிட்டுள்ளன. எவ்வாறாயினும், கடந்த மாதம் லொஸ் ஏஞ்ஜல்ஸில் நடத்தப்பட்ட இதேபோன்ற ஒரு ஆர்ப்பாட்டத்தில் 15 பேருக்கும் குறைவானோரே கலந்து கொண்டார்கள் என்றும் இவ்வட்டாரங்கள் தெரிவித்தன.

ஜனாதிபதிக்கு அளிக்கப்பட இருக்கும் வரவேற்பு வைபவத்தின் போதும் நியுயோர்க் பௌத்த விகாரைக்கான அவரது விஜயத்தின் போதும் பாதுகாப்பு நிலைமையை உன்னிப்பாக கண்காணிக்குமாறும் இந்த இரண்டு வைபவங்களிலும் கலந்து கொள்ள இருக்கும் பார்வையயாளர்ளை தெரிவு செய்வதில் மிகக் கவனமாக இருக்கும்படியும் நியூயோர்க்கிலுள்ள ஐக்கியநாடுகள் சபைக்கான இலங்கைத் தூதரகத்திடம் அமைச்சு அறிவித்துள்ளது. பிரதானமாக, எந்தவித அரசியல் முரண்பாடுகளையோ சர்ச்சைகளையோ தவிர்த்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

எதிர்பார்க்கப்பட்டது போல, நியூயோர்க் ஆசிய சங்கத்தில் அடுத்த மாதம் நடத்த இருந்த பகிரங்க சொற்பொழிவை தவிர்த்துக் கொள்வதென ஜனாதிபதி தீர்மானித்தள்ளார். வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் செப்ரெம்பர் மாதம் 17ஆம் திகதி மாலை 6.30க்கு ஆசிய சங்க கூட்டத்தில் உரைநிகழ்த்த இருக்கிறார். யுத்தத்தின் பின்னரான இலங்கை என்ற பொருள் பற்றி அமைச்சரின் உரை அமையும்.
மேலும் இங்கே தொடர்க...

லட்சக்கணக்கில் தினமும் யாழ் குடா நோக்கி சுற்றுலா பயணிகள் வருகை

வடபகுதி நோக்கி சுற்றுலாப் பயணிகளாகப் படையெடுத்து வருகின்றனர். தினமும் யாழ்.குடாநாட்டிற்கு லட்சத்திற்கும் அதிகமானவர்கள் இவ்வாறு வருவதாக யாழ் மாவட்டச் செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இவ்வாறு அதிக அளவில் வரும் சுற்றுலாப் பயணிகளைச் சமாளிக்கக்கூடிய வசதிகள் குடாநாட்டில் இல்லை எனவும் இதனால் வரும் சுற்றுலாப் பயணிகள் பெரும் சிரமங்களை எதிர்நோக்க வேண்டியிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

போர் முடிந்த பின்னர் உருவாகியிருக்கும் புதிய சூழலில் சுற்றுலாப்பயணிகளாக வடபகுதிக்குப் பெருமளவில் சிங்கள மக்களும் புலம்பெயர் நாடுகளில் இருந்து தமிழ் மக்களும் வந்தவண்ணம் இருக்கின்றனர்.இதனால் குடாநாட்டில் சனத் தொகை திடீரென அதிகரித்திருக்கிறது.

திடீரென அதிகரித்திருக்கும் சனத்தொகைப் பெருக்கத்தினால் போக்குவரத்து நெருக்கடிகளும் நகரப் பகுதியில் எதிர்பாராத வகையிலான சனநெரிசலும் ஏற்பட்டுள்ளது.

இதேவேளை கடைகளிலும் சந்தைகளிலும் பொருட்களின் விலையும் அதிகரித்திருக்கின்றன. இதனால் உள்ளூர் உணவுப்பொருட்கள், பழங்கள், கைவினைப்பொருட்களுக்கு கிராக்கி ஏற்பட்டுள்ளது.

சுற்றுலாப் பயணிகளாக வருகின்றவர்கள் யாழ்ப்பாணக் குடாநாட்டின் பல பிரதேசங்களுக்கும் சென்று வருகின்றனர். அத்துடன் குடாநாட்டில் அதிகளவிலான கோவில்களின் திருவிழாக்காலம் இது என்பதால் பிரசித்தி பெற்ற கோவில்களிலும் கூட்டம் அதிகமாகவே காணப்படுகின்றது.

குடாநாட்டில் இப்படி நெருக்கடி அதிகரித்திருப்பதற்குக் காரணம் நடைபெற்ற போரின் காரணமாக பெருமளவு பிரதேசங்கள் சிதைந்திருப்பதும் நீண்டகாலமாக அபிவிருத்திகள் எதுவும் நடைபெறாமையுமே என்று யாழ். செயலகத்தின் திட்டமிடற் பிரிவைச் சேர்ந்த பொறுப்பு வாயந்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இதனால் வசதி குறைந்த சாதாரண வீடுகளுக்கு அதிக வாடகை கொடுத்து அவற்றைப் பெற்றுக்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது என்றும் அவர் மேலும் தெரிவிக்கின்றார்.

இந்த விடுதிகள் யாழ்ப்பாண நகர், நகருக்கு வெளியேயான மானிப்பாய், பண்டத்தரிப்பு, சுன்னாகம், கொக்குவில், கோண்டாவில், மல்லாகம், சாவகச்சேரி, உரும்பராய், ஊர்காவற்றுறை, வேலணை, பருத்தித்துறை, நெல்லியடி, மீசாலை, பளை போன்ற இடங்களில் உருவாகியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது
மேலும் இங்கே தொடர்க...

மலேசியாவில் இலங்கையர் மூவர் கடத்தல்: இருவர் உயிருடன் மீட்பு - ஒருவர் பலி

மலேசியாவில் இலங்கையர் மூவர் கப்பம் கோரிக் கடத்தப்பட்டு இருக்கின்றார்கள். அவர்களில் ஒருவர் கடத்தல்காரர்களால் சித்திரவதைகள் செய்யப்பட்டு உயிரிழந்துள்ளார்.

ஏனைய இருவரும் பொலிஸாரால் உயிருடன் மீட்கப்பட்டுள்ளார்கள். பொலிஸார் இவர்கள் அடைத்து வைக்கப்பட்டிருந்த இடத்தைப் புலனாய்வுத் தகவல்களின் அடிப்படையில் கண்டுபிடித்தனர்.

அந்த இடத்தை நேற்று இரவு சுற்றி வளைத்து முற்றுகையிட்டனர். இருவரை மாத்திரம் உயிருடன் காப்பாற்ற முடிந்தது.

இக்கடத்தல் சம்பவத்தின் சூத்திரதாரியும், சூத்திரதாரியின் சகா ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்கள். கடத்தல் சம்பவத்தின் சூத்திரதாரி ஒரு ரிசேர்வ் பொலிஸ் ஆவார்.
மேலும் இங்கே தொடர்க...

விடுதலைப்புலிகள் அமைப்பு தமிழ் மக்களின் அரசியல் கட்டமைப்பு : நியூசிலாந்து உயர் நீதிமன்றம்

தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பு தமிழ் மக்களுக்கு சுயாட்சி அதிகாரத்தை ஏற்படுத்தவும், அவர்களுக்கு தனிநாட்டை அமைத்துக்கொடுக்கும் இலட்சியத்தை கொண்டதுமான ஒரு அரசியல் அமைப்பாகவே செயற்பட்டுவந்ததாக நியூசிலாந்து உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது:

நியூசிலாந்தில் அடைக்கலத்தஞ்சம் கோரிய விடுதலைப்புலிகளுக்கு ஆயுதங்களை எடுத்துச் சென்ற கப்பலில் முன்னர் பணியாற்றிய ஈழத்தமிழர் ஒருவருக்கு எதிராக நியூசிலாந்து உயர் நீதிமன்றத்தில் நியூசிலாந்து அரசு மேற்கொண்ட வழக்கை நிராகரித்துள்ள நீதிமன்றம் அவருக்கு அடைக்கலத்தஞ்சம் வழங்கப்பட வேண்டும் என கடந்த வெள்ளிக்கிழமை (27) பரிந்துரை செய்துள்ளது. மேலும் தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பு தமிழ் மக்களின் சுயாட்சி மற்றும் அவர்களுக்கு தனிநாட்டை அமைத்துக்கொடுக்கும் இலட்சியத்தை கொண்ட ஒரு அரசியல் அமைப்பாகவே செயற்பட்டுவந்ததாக நியூசிலாந்து உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

அரசியல் மாற்றங்களை ஏற்படுத்த தவறிய இலங்கை அரசே விடுதலைப்புலிகளின் போராட்டத்திற்கான பாதையை ஏற்படுத்தியிருந்தது. இந்த சம்பவங்கள் விடுதலைப்புலிகளை ஒரு அரசியல் அமைப்பாக கருதவே வழியேற்படுத்தியுள்ளது என அது மேலும் தெரிவித்துள்ளது.

விடுதலைப்புலிகளின் ஆயுதக்கப்பலில் பணியாற்றியதாக குற்றம் சுமத்திய நியூசிலாந்து அரசு மூன்று ஈழத்தமிழ் மக்களின் அடைக்கலத்தஞ்சக் கோரிக்கையை நிராகரித்திருந்தது. அவர்களில் இருவர் மீண்டும் சிறீலங்காவுக்கு நாடுகடத்தப்பட்டுள்ளனர். எனினும் கப்பலில் கப்டனாக பணியாற்றியவர் நியூசிலாந்து அரசின் முடிவுக்கு எதிராக மேன்முறையீடு செய்திருந்தார்.

இவ்வாறான வழக்குகளில் இந்திய நீதிமன்றத்தின் தீர்ப்புக்களை நியூசிலாந்து அரசு முன்வைத்தபோது அதனை ஏற்றுக்கொள்ள உயர் நீதிமன்றம் மறுத்துள்ளது. நியூசிலாந்தில் விடுதலைப்புலிகள் அமைப்புக்கு தடை விதிக்கப்படவில்லை என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

விடுதலைப்புலிகளை தடைசெய்யும் பிரேரனைகளை 2000 ஆம் ஆண்டு நியூசிலாந்து அரசு முன்வைத்தபோது, அதற்கு எதிராக நியூசிலாந்தில் வாழும் தமிழ் மக்கள் மேற்முறையீடு செய்திருந்தனர். உலகின் மனித உரிமைகள் கோட்பாடுகளின் அடிப்படையில், ஒரு மனிதன் தனக்கு எதிரான வன்முறைகளுக்கு எதிராக போரடமுடியும் என்பதே இந்த மேற்முறையீட்டின் அடிப்படையாக கொள்ளப்பட்டது. அதன் பின்னர் நியூசிலாந்து அரசு விடுதலைப்புலிகளை தடைசெய்யும் தனது திட்டத்தை கைவிட்டிருந்தது.
மேலும் இங்கே தொடர்க...

கல்வித்துறை அபிவிருத்தி; சிறுவர் மேம்பாடு வடக்கு கிழக்கில் முன்பள்ளி ஆசிரியருக்கு நம்பிக்கை நிதியம்


வடக்கு, கிழக்கு மாகாணத்தில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட முன் பள்ளி ஆசிரியர்களுக்கு மாதாந்தம் கொடுப்பனவுகளை வழங்கும் பொருட்டு ((இஏஐகஈதஉச பதமநப ஊமசஈ) சிறுவர் நம்பிக்கை நிதியம் ஒன்றை ஸ்தாபிக்க அரசாங்கம் தீர் மானித்துள்ளது.

இந்த நிதியத்தை ஸ்தாபிப்பதற் காக அமைச்சரவை அங்கீகாரம் கிடை க்கப் பெற்றுள்ளதாக சிறுவர் மேம் பாட்டு மற்றும் மகளிர் விவகார பிரதியமைச்சர் எம். எல். ஏ. எம். ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.

இந்த நிதியத்திற்கு முதற் கட்ட மாக (நஅயஉ பஏஉ இஏஐகஈதஉச) சேவ் த சில்ரன் அமைப்பு 100 மில் லியன் ரூபா நிதியை வழங்கியு ள்ளதாக தெரிவித்த அவர், வெகு விரைவில் இது ஆரம்பிக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

இந்த நிதியத்திற்காக பல்வேறு அமைப்புகளிடமிருந்து நிதியுதவிக ளைப் பெறவும் திட்டமிட்டுள்ளதாக தெரிவித்த பிரதியமைச்சர், இதற்காக திறைசேரியும் அனுமதி வழங்கியுள் ளது என்றும் குறிப்பிட்டார்.

மாதாந்தம் 2000 ரூபாவை கொடுப் பனவாக வழங்க திட்டமிட்டுள்ளது டன் முதற்கட்டமாக 500 முன்பள்ளி ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள் ளனர் என்றும் தெரிவித்தார்.

இதேவேளை, வடக்கு, கிழக்கிலு ள்ள முன்பள்ளி ஆசிரியர்களுக்கு சிறுவர் மேம்பாட்டு, மகளிர் விவ கார அமைச்சின் கீழ் உள்ள சிறுவர் செயலகத்தின் ஊடாக பயிற்சிகள் வழங்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதன் முதற் கட்டமாக கிழக்கு மாகாணத்திலுள்ள மட்டக்களப்பு, அம்பாறை மற்றும் திருகோணமலை ஆகிய மாவட்டங்களில் 15ற்கும் மேற்பட்ட பகுதிகளில் முற்றிலும் இல வசமாக வதிவிட பயிற்சிகள் வழங்கப் பட்டு சான்றிதழ்களும் வழங்கப்பட்டுள் ளன. இவ்வாறு சான்றிதழ்கள் வழ ங்கப்படுபவர்களுக்கே மாதாந்தம் கொடுப் பனவுகளும் வழங்க தீர்மானிக்கப்பட் டுள்ளது.

ஒவ்வொரு பகுதிகளிலிருந்தும் 50 முன்பள்ளி ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு கொழும்பிலிருந்து துறைசார் வளவாளர்கள், விரிவுரையாளர்கள் அழைத்து வரப்பட்டு திட்டமிட்ட பயிற்சிகள் வழங்கப்பட்டு வருவதாகவும் பிரதி அமைச்சர் சுட்டிக் காட்டினார்.

வடக்கு, கிழக்கின் கல்வித் துறையின் அபிவிருத்தியையும் சிறுவர் மேம்பாட் டையும் கருத்திற் கொண்டே தமது அமைச்சு இந்த நிதியத்தை புதிதாக ஸ்தாபித்து அதன் மூலம் கொடுப்பனவு களை வழங்க திட்டமிட்டுள்ளது என்றார்.

அடுத்த கட்டமாக வட மாகாணத் திலும் இந்த பயிற்சி பட்டறைகளை நடாத்த ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட் டுள்ளன என்றும் அவர் மேலும் தெரி வித்தார்.
மேலும் இங்கே தொடர்க...

துறைமுக அதிகார சபை ஏல விற்பனை: பாதாள உலக கோஷ்டியின் மிரட்டல் பொலிஸ், இராணுவத்தால் முறியடிப்பு

துறைமுக அதிகார சபையின் ஏல விற்பனை நடவடிக்கைகள் கடந்த வார இறுதியில் இடம்பெற்றபோது பொலிஸாரும் இராணுவமும் இணைந்து மேற்கொண்ட முற்றுகையின் போது பாதாள உலகத்துடன் தொடர்புடைய நான்கு பேர் கைது செய்யப்பட்டனர். அத்துடன் பாதாள உலக தொடர்புகளுடன் கூடியவர்கள் என சந்தேகிக்கப்படும் சிலர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டதாகவும் கூறப்படுகிறது.

மேற்படி ஏல விற்பனையை பாதாள உலக கோஷ்டியொன்று தமது கட்டுப்பாட்டில் வைத்திருப்பதாக பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷவுக்கு தகவலொன்று கிடைத்துள்ளது. அதனையடுத்து அவர் படையினருக்கும் பொலிஸாருக்கும் ஏல விற்பனை சுமுகமாக நடைபெறும் சூழலை ஏற்படுத்துமாறு பணிப்புரை விடுத்துள்ளார். அதனையடுத்தே மேற்படி முற்றுகை இடம்பெற்றுள்ளது.

ஏல விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த பொருட்களின் விலைகள் குறிப்பிட்ட பாதாள உலக கோஷ்டிக்கு முன்னரே கிடைத்ததாக விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது. இதனையடுத்து மிரட்டல் நடவடிக்கைகள் மூலம் அப்பொருட்கள் தமக்கு குறைந்த விலையில் கிடைக்கும் வகையில் பாதாள கோஷ்டியினர் செயற்பட்டதாக கூறப்படுகிறது. பாதாள கோஷ்டியினர் குறிப்பிடும் விலையை விட அதிகமாக கேட்பவர் தாக்கப்படுவார் அல்லது அந்த இடத்தில் இருந்து விரட்டப்படுவார் அல்லது அவருக்கு மரண அச்சுறுத்தல் விடுக்கப்படும்.

பொருட்களைக் குறைந்த விலைக்கு இவ்வாறு பெற்றுக்கொள்ளும் பாதாள கோஷ்டி துறைமுகத்துக்குள்ளேயே அப்பொருட்களை மீண்டும் அதிக விலைக்கு விற்று விடுகின்றது.

கடந்த வார இறுதியில் இடம்பெற்ற ஏல விற்பனை மூலம் கிடைத்த வருமானம் கடந்த 20 வருடங்களில் பெற்ற மிகப் பெரிய வருமானமாகும்.

எதிர்கால துறைமுக ஏல விற்பனையின் போது பாதுகாப்புப் படையினரும் பொலிஸாரும் காவல் பணிகளில் ஈடுபட வேண்டுமென பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ அறிவுறுத்தியுள்ளார்.

துறைமுக ஏல விற்பனையின் போது பாதாள உலக கோஷ்டியினரின் மிரட்டல் நடவடிக்கைகளால் அரசாங்கம் கோடிக்கணக்கான ரூபா வருமானத்தை இழந்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும் இங்கே தொடர்க...

சமய நிலையங்களை மையமாக்கி கிராமங்கள் அபிவிருத்தி செய்யப்படும் பிரதமர் தெரிவிப்பு




அனைத்து சமய நிலையங்களையும் மையமாகக் கொண்ட கிராம அபிவிருத்தியை ஏற்படுத்தும் தேசிய வேலைத் திட்டமொன்றை அரசாங்கம் ஆரம்பித்துள்ளதாகவும், இந்தத் திட்டத்துக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் ஏற்கனவே பெறப்பட்டுள்ளதாகவும் பிரதமர் குறிப்பிட்டார்.

சமய அபிவிருத்தி மற்றும் அனைத்து சமய நிலையங்களையும் மேம்படுத்துவது தொடர்பான தேசிய வேலைத் திட்டத்தின் கீழ் மொனராகலை மாவட்ட வேலைத் திட்டத்தை கதிர்காமம் கிரிவிஹாரை வளவில் கடந்த வெள்ளிக்கிழமை (27) ஆரம்பித்து வைத்து உரையாற்றிய போதே பிரதமர் இவ்வாறு தெரிவித்தார்.

சகல கிராமங்களிலும் சமயத்தலைவர், கிராம சேவகர், சமுர்த்தி அதிகாரி, விவசாய அதிகாரி உள்ளிட்ட பொறுப்பு வாய்ந்த அதிகாரிகளுடன் கூடிய குழுவொன்றை அமைத்து அதன் மூலம் கிராமத்தை அபிவிருத்தி செய்வதே உத்தேசத் திட்டத்தின் நோக்கமென்று பிரதமர் அங்கு சுட்டிக்காட்டினார். பெளதிக வளங்களினால் மட்டும் ஒரு நாட்டை அபிவிருத்தி செய்து சிறப்பான பயனை பெறமுடியாது. அதற்கு சமயம் மூலமான அபிவிருத்தியும் சேர்ந்தால்தான் உண்மையான பயனைப் பெறமுடியும்.

ஒருசிலர் தமது பிறப்பு சான்றிதழில் மட்டும் தமது சமயத்தைக் குறிப்பிடுகின்றனர். இதுபல பிரச்சினைகளைத் தோற்றுவிக்கும்.

30 வருடங்கள் இந்நாட்டில் தமக்குத் தேவையான சமயத்தை முன்னெடுக்க சுதந்திரம் இல்லாமல் இருந்தது. எதிர்காலத்தில் அவ்வாறு ஏற்படாதவாறான சமய சூழலை கட்டியெழுப்புவது அவசியமாகும்.

இந்நிலையில் கஷ்டப் பிரதேசங்களில் உள்ள அனைத்து சமய நிலையங்களையும் மேம்படுத்துவதற்குத் தேவையான ஆலோசனைகள் கிடைத்துள்ளதாகக் கூறிய பிரதமர், அவற்றில் பலயோசனைகளை நடைமுறைப்படுத்தத் தீர்மானித்துள்ளதாகவும் கூறினார்.

ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழகத்தின் வேந்தரும் கிரிவிஹாரையின் விகாராதிபதி யுமான அலுத்வெவ சோரத தேரர், ஊவா மாகாண முதலமைச்சர் சசீந்திர ராஜபக்ஷ ஆகியோரும் இங்கு உரையாற்றினர்.
மேலும் இங்கே தொடர்க...

அரச இலவச மருந்தை மோசடி செய்வோருக்கு ஆயுள் தண்டனை சட்டத்திருத்தம் விரைவில் வருகிறது






அரசாங்கத்தினால் நோயாளர்களுக்கு இலவசமாக வழங்கப்படும் மருந்து வகைகளைத் தனியார் மருந்தகங்களுக்கு சட்ட விரோதமான முறையில் வழங்குபவர்களுக்கு ஆயுள் தண்டனை விதிக்கக் கூடிய வகையில் சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்படவிருக்கின்றது.

இம்மருந்து வகைகளைக் கொள்வனவு செய்து விற்பனை செய்யும் தனிநபர்களுக்கும் இத்தண்டனையை விதிக்கக் கூடிய வகையில் சட்டம் திருத்தப்படும் என்று சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

அரச ஆஸ்பத்திரிகளில் நோயாளர்களுக்கு இலவசமாக வழங்கப்பட வேண்டிய ஒரு தொகை மருந்து வகைகளை புறக் கோட்டையிலுள்ள தனியார் மருந்தகமொன் றுக்கு நபரொருவர் வழங்கியுள்ளார். இந் நபருக்கும், இம் மருந்து வகைகளை கொள்வனவு செய்த தனியாருக்கும் ஆயுள் தண்டனை வழங்கப்படும்.

இதற்கு ஏற்ற வகையில் சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார். இலங்கை மருந்துப் பொருள் உற்பத்தி யாளர்கள் சங்கத்தின் வருடாந்த அமர்வு நேற்று முன்தினம் கொழும்பில் நடை பெற்றது. இந்த அமர்வில் பிரதம அதிதி யாகக் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப் பிட்டார்.

அவர் தொடர்ந்தும் உரையாற்று கையில், அரசாங்க ஆஸ்பத்திரிகளில் நோயாளர்களுக்கு இலவசமாக வழங்கப் படும் மருந்து வகைகளின் ஒரு தொகுதி புறக்கோட்டையில் தனியார் மருந்தக மொன்றில் விற்பனைக்காக வைக்கப்பட் டிருந்த சமயம் இரு வாரங்களுக்கு முன் னர் கைப்பற்றப்பட்டுள்ளது. இது தொடர் பான புலன்விசாரணையை குற்றப் புல னாய்வு திணைக்களத்தினர் மேற்கொண்டு வருகின்றனர்.

“எமக்கு இந்த மருந்து வகைகள் கொண்டு வந்து தரப்பட்டது. அதனை வாங்கி நாம் விற்பனை செய்தோம். மற்றபடி எமக்கு எதுவும் தெரியாது என்று தனியார் மருந்தக வர்த்தகர் வாக்கு மூலம் அளித்துள்ளார். இது எந்த வகையிலும் ஏற்றுக் கொள்ள முடியாத பதிலாகும். குறித்த வர்த்தகர் சிறுபிள்ளை அல்லவே. இப்படியான அர்த்தமற்ற கூற்றுக்களை நம்புவதற்கு அரசாங்கமோ, நானோ தயாரில்லை.

இப்படியான மோசடிகள் நீண்டகாலமாக இடம் பெற்று வந்தாலும் அவற்றைக் கட்டுப்படுத்துவதற்கு உரிய நடவடிக்கை உடனுக்குடன் எடுக்கப்படாததால் அவை கட்டுப்படுத்த முடியாத நிலையை அடைந்திருக்கின்றது. இவ்வாறான முறைகேடுகளை கட்டுப்படுத்துவதற்கும் தற்போது நடைமுறையிலுள்ள சட்ட ஏற்பாடுகளும் போதியதாக இல்லை. அதன் காரணத்தினால் இவ்வாறான மோசடிகளைக் கட்டுப்படுத்துவதற்கு ஏற்றவகையிலான சட்டத் திருத்தத்தை பாராளுமன்றத்தில் முன்வைக்கவுள் ளேன்.

இப்படியான செயலில் ஈடுபடுவோரு க்கு ஆயுள் தண்டனை வழங்கக் கூடிய வகையில் சட்டத்தில் திருத்தம் செய்து பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கு உத் தேசித்திருக்கின்றேன் என்றார்.
மேலும் இங்கே தொடர்க...

கிளிநொச்சியில் 54,000 ஏக்கரில் நெற்செய்கை விவசாயிகளுக்கு இலவச விதைநெல் வயல் பண்படுத்தலுக்கு 8000 ரூபா






இவ்வாண்டின் பெரும் போகத்தில் கிளிநொச்சி மாவட்டத்தில் 54,000 ஏக்கரில் நெற்பயிர்ச்செய்கையை மேற்கொள்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது டன் இதற்கான சகல உதவிகளையும் அரசாங்கம் விவசாயிகளுக்குப் பெற்றுக் கொடுக்கவுள்ளது.

விவசாயிகளுக்கான விதை நெல்லை இலவசமாக வழங்குவதுடன் ஒரு விவசாயக் குடும்பத்திற்கு தலா இரண்டு ஏக்கர் வயலை உழுவதற்கான 8,000 ரூபாவையும் அத்துடன் உரமானியத்தையும் அரசாங்கம் வழங்குவதென தீர்மானிக் கப்பட்டுள்ளது.

நேற்றைய தினம் கிளிநொச்சியில் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷவின் தலைமையில் நடைபெற்ற மாவட்டத் திற்கான முன்னேற்ற மீளாய்வுக் கூட்டத்திலேயே இது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

நேற்றைய இக் கூட்டத்தில் அமைச்சர்கள் டக்ளஸ் தேவானந்தா, பி. தயாரத்ன, சம்பிக்க ரணவக்க, வடமாகாண ஆளுநர் ஜீ. ஏ. சந்திரசிறி, வட மாகாண அபிவிருத்திக்கான ஜனாதிபதி செயலணியின் செயலாளர் திவாரட்ன, மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ரூபவதி கேதீஸ்வரன் உட்பட உயர் மட்ட அரச அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டுள்ளனர்.

பல வருடங்களுக்குப் பின்னர் கிளிநொச்சி மாவட்டத்தில் முழுமையான, நெற்பயிர்ச்செய்கைக்கு வழி வகுத்தல், சேனைப் பயிர்ச்செய்கையை ஊக்குவித்தல், மீள்குடியேற்ற நடவடிக்கை, வீடமைப்பு, கண்ணிவெடி அகற்றலை விரைவுபடுத்தல், யுத்தத்தினால் பாதிப்படைந்த அரச அலுவலகங்கள் மற்றும் பாடசாலைக் கட்டிடங்களைப் புனரமைத்தல் உட்பட அடிப்படைப் பொதுவசதிகள் தொடர்பில் இங்கு முக்கிய கவனம் செலுத்தப்பட்டு ள்ளது.

இது தொடர்பில் குறிப்பிட்ட கிளிநொச்சி அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன், மேற்படி விடயங்களை விரைவுபடுத்துதல் தொடர்பில் விரிவாகக் கலந்துரையாடப்பட்டதுடன் சம் பந்தப்பட்ட அதிகாரிகளின் கருத்துக்களும் ஆலோச னைகளும் இது தொடர்பில் பெற்றுக் கொள்ளப் பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

மீள் குடியேற்றப்பட்டுள்ள குடும்பங்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவது மற்றும் அவர்களுக்கான வீடமைப்பு தொடர்பிலும் விரிவாக ஆராயப்பட்டுள்ளதாகத் தெரிவித்த அவர்; யுத்தத்தினால் பாதிக்கப்பட் டோருக்கு வீடுகளை அமைத்துக் கொடுப்பது தொடர்பில் ஆராய்வ தற்காக இந்திய விசேட குழுவொ ன்றும் நேற்று முன்தினம் கிளி நொச்சிக்கு விஜயம் செய்திருந்ததாக வும் தெரிவித்தார்.
மேலும் இங்கே தொடர்க...