31 ஆகஸ்ட், 2010

சரத் பொன்சேகாவின் விசாரணை ஒத்திவைப்பு

நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா தொடர்பான இரண்டாவது இராணுவ நீதிமன்ற விசாரணைகள் நாளை பிற்பகல் 2 மணி வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில் சுகவீனமுற்றதன் காரணமாக நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா இன்று நீதிமன்றில் முன்னிலையாகவில்லையென இராணுவ தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும் இங்கே தொடர்க...

அதிகாரம் உரியமுறையில் பயன்படுத்தப்படவேண்டும் - ஜனாதிபதி

அதிகாரத்தை உரிய முறையில் பயன்படுத்த வேண்டும் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

சப்ரகமுவ மாகாணத்தில் இன்று இடம் பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்.

அதிகாரம் நிரந்தமற்றது, அதிகாரங்கள் மூலம் கிடைக்கபெறும் பிரதிலாபங்கள் தொடர்ந்து நீடிக்குமா? என்பது சந்தேகமே எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நிதி கொடுக்கல் வாங்கல்களின் போது அரச சேவையாளர்கள் பொறுப்;புடன் செயற்பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை தம்மால் முன்னெடுக்கப்படும் கொடுக்கல் வாங்கல்கள், அரச ராஜதந்திர முறையில் இடம்பெறுவதாக ஜனாதிபதி குறிப்பிட்டார்.

அரச சேவையாளர்கள் பொறுப்பற்ற முறையில் கொடுக்கல் வாங்கல்களில் ஈடுப்படுவார்களானால், பல்வேறு இன்னல்கள்களுக்கும் தண்டனைக்கும் முகங்கொடுக்க வேண்டும் எனவும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ குறிப்பிட்டார்.
மேலும் இங்கே தொடர்க...

அரசியல் அமைப்பு மாற்றத்திற்கு ஆதரவு வழங்காவிட்டால் ஐ.தே.க மேலும் பலவீனமடையும்: அப்துல்காதர்

புதிய அரசியல் அமைப்பு மாற்ற யோசனைகளுக்கு ஐ.தே.க. ஆதரவு தெரிவிக்காவிட்டால் ஐ.தே.க. எதிர்காலத்தில் மேலும் பலவீனம் அடைந்து விடும் என்று கண்டி மாவட்டப் பாராளுமன்ற அங்கத்தவர் ஏ.ஆர்.எம்.அப்துல்காதர் கம்பளையில் வைத்துத் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது-

ஐ.தே.க. அங்கத்தினர் பலர் மேற்படி யோசனைக்கு ஆதரவு தெரிவிக்கவுள்ளனர். இதற்கு ரணில் விக்கிரமசிங்க ஒரு சந்தர்ப்பம் வழங்காது விட்டால் இன்னும் பல அங்கத்தவர்கள் கட்சியை விட்டும் நீங்குவர். இதனால் கட்சி சின்னாபின்னமாகி விடும். பல பாராளுமன்ற அங்கத்தவர்களை இழப்பது தவிர்க்க முடியாத ஒன்றாகி விடும் என்று கூறினார்.

ரணில் விக்கிரமசிங்க யாரை நம்பி ஐ.தே.க. ஆதரவாளர்களை கைவிட்டாரோ அவர்கள் இப்போது ரனில் சிக்கிரமசிங்கவை கைவிட்டு விட்டனர்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கம்பளையிலுள்ள எனது சிறிய வீட்டிற்கு வந்தார். இது நாட்டின் இராஜா ஒரு குடிசைக்கு வந்த மாதரியாகும். இது சாதாரண விடய மல்ல. இந்நாட்டு முஸ்லிம்கள் அனைவரையும் ஜனாதிபதி கௌரவித்ததாகவே நான் கருதுகிறேன் என்றார்;.
மேலும் இங்கே தொடர்க...

எமது முயற்சியில் ஒரு பங்காளராக இணைந்துகொள்ளுமாறு உங்களை அழைக்கும் நோக்குடன் இந்த மடலை வரைகிறேன்.

NERDO, President Mr.S.Thavarathinam

அன்புடையீர்,

போருக்குப் பிந்திய மீள் கட்டுமானம் மற்றும் போரினால் பாதிப்புற்றவர்களுக்கான வலுவூட்டல் செயற்பாடுகள் மூலம் எமது மக்கள் எதிர்கொண்ட துன்பங்களிலிருந்து அவர்களை விடுவிக்கும் எமது முயற்சியில் ஒரு பங்காளராக இணைந்துகொள்ளுமாறு உங்களை அழைக்கும் நோக்குடன் இந்த மடலை வரைகிறேன்.
ஒவ்வொரு தேசமும் தனிச் சிறப்பு வாய்ந்த துன்பச் சூழல்களுடன் போராடிக்கொண்டிருக்கின்றன. தமிழர்களின் இன்றைய துயரத்தை உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் இருக்கும் அனைத்துத் தமிழர்களினதும் துணையுடனே கையாள முடியும். இது மனிதாபிமான நோக்கத்தைக் கொண்ட ஒரு முயற்சி என்பதுடன், சுயகௌரவம், சகோதரத்துவம், நீதியான சமாதானம், வறுமை ஒழிப்பு என்பவற்றையும் இலக்காகக் கொண்டது என்பதை உறுதிப்படுத்துகிறோம்.
உங்களுடைய உதவி இந்த விடயத்தில் மிகவும் அவசரமாகத் தேவைப்படுகிறது. உங்களுடைய நேரடிப் பங்களிப்புடன், அறிவுசார், பொருளாதார மற்றும் திட்ட ஆலோசனைகளையும் உங்களிடம் நாம் வேண்டி நிற்கிறோம். உங்களுடைய அனுபவங்களுடன் இந்த உயர்ந்த இலக்கை அடைய நாம் விரும்புகிறோம்.
கருத்திட்டங்களை அமைப்பதில் நாம் உங்களுக்கு ஒத்துழைப்பு வழங்குவதுடன், அவற்றை நடைமுறைப்படுத்துவதிலும், அடைவுகளை கண்காணிப்பதிலும், அவை வெற்றிகரமாகச் செயற்படுவதை உறுதிப்படுத்துவதிலும் நாம் உங்களுக்குத் துணை நிற்போம். கணக்கு விபரங்களை கிரமமாக உங்களுக்கு அறியத்தருவதுடன், கணக்காய்வுகளையும் நாம் மேற்கொள்வோம். மக்களின் தேவைகளை அடிப்படையாகக் கொண்டு பொருத்தமான திட்டங்களை தெரிவசெய்யும் சுதந்திரம் உங்களுக்க உண்டு. திட்டம் அமுலாக்கப்படும் இடத்துக்கு நீங்கள் நேரில் செல்ல முடியும் என்பதுடன், அங்கு என்ன நடைபெறுகிறது என்பதை நேரில் கண்டறிவதுடன், விரும்பினால் நீங்களே அதனை முன்னெடுத்துச் செல்லவும் முடியும்.
திட்டத்தின் ஆரம்பத்திலிருந்து முடிவு வரையில் வெளிப்படைத்தன்மை பிரதான கொள்கையாக இங்கு கடைப்பிடிக்கப்படும்.
எங்களுடைய மக்கள் மிகவும் மனிதநேயமற்ற ஒரு யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு, அதிலிருந்து மிகுந்த சிரமங்களில் மத்தியில், பலரது உயிர்களையும், அவயவங்களையும் காவு கொடுத்து நிற்கின்றனர். உள நெருக்கீடுகளினாலும், வெளியில் சொல்ல முடியாத துயரங்களினாலும் அவர்களது வாழ்வு முடமாகிப்போயுள்ளது.
எவ்வாறாயினும், இந்தத் துயரங்களிலிருந்து நாம் மீண்டெழுந்து, சமத்துவமான, பாதுகாப்பான, சுயகௌரவத்துடன் கூடிய, சமாதானமான ஒரு வாழ்வை நோக்கி நாம் முன்னோக்கிச் சென்றாகவேண்டும்.
எங்களுடைய மக்களுடைய தேவைகள் வரையறையற்றவை. அனாதை இல்லங்களிலிருந்து முதியோர் இல்லங்கள் வரையிலும், உடல் ரீதியாகவும், உள ரீதியாகவும் பாதிக்கப்பட்ட அனைவருக்காகவும், நிவாரணப் பணிகளிலிருந்து புனர்வாழ்வுத் தேவைகளை நோக்கி அவர்களது வாழ்வை நகர்த்துவதற்கு நம் ஒவ்வொருவருக்கும் இங்கு ஒரு வகிபாகம் உண்டு.
எங்களுடைய வரலாற்றின் இந்த முக்கியமான கட்டத்தில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்துவதற்கு எம்முடன் இணைந்துகொள்ளுங்கள். எமது இளம் சமுதாயம் பல தசாப்தங்களாக தமது கல்வியை இழந்து நிற்கிறது. ஆரம்பப் பாடசாலைகளிலிருந்து உயர் கல்வி வரையிலும், தொழிற்கல்வியிலிருந்து தொழில்நுட்பப் பயிற்சி வரையிலும் அவசரமாக பல செயற்பாடுகளை மேற்கொள்ளவேண்டியுள்ளது.
திறன்மிக்க, கல்வியறிவுடைய பணியாளர்கள் இன்மையால் எமது சமூகத்தின் வளர்ச்சி பாதிக்கப்பட்டுள்ளது. தொழில்முறைசார் கல்வியும், பயிற்சியும் இல்லாமல் எமது மக்களின் வாழ்வை மீளக் கட்டியெழுப்பும் பணிகளை முன்னோக்கி நகர்த்த முடியாது. சிறையிலுள்ள ஆயிரக்கணக்கான முன்னாள் விடுதலைப் புலிப் போராளிகள் தமது வாழ்வை முன்கொண்டு செல்வதற்கு அவர்கள் தொழில்முறைசார் கல்வியைப் பெறவேண்டியிருக்கிறது. போரினால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களை சமூக பொருளாதார ரீதியாக கட்டியெழுப்புவதன் மூலமே பாதிக்கப்பட்ட ஒவ்வொருவரது வாழ்விலும் இயல்புத்தன்மையைக் கொண்டுவர முடியும்.
இதுதான் எமது பிரதான இலக்கு.
ஏராளமான விதவைகளுக்கும், அங்கவீனர்களுக்கும் வாழ்வாதாரங்களை வழங்க உங்கள் உதவி தேவைப்படுகிறது. வன்னி மற்றும் வாகரைப் பிரதேசங்களைச் சேர்ந்த மக்கள் தமது சொந்த நிலங்களிலேயே ஏழைகளாக்கப்பட்டுள்ளதுடன், பலர் வேறிடங்களுக்குச் சென்றுமுள்ளனர். பெரும்பாலான மக்கள் வறுமைக் கோட்டுக்குக் கீழே வாழ்ந்து வருகின்றனர். சரியான நேரத்தில் இவர்களுக்கு ஏதாவது செயல்பூர்வமான உதவிகள் கிடைத்தாலொழிய, இவர்கள் ஒரு நிரந்தர வெறுமைக்குள் தள்ளப்பட்டுவிடுவார்கள்.
இவர்கள் தமது வாழ்வை மீண்டும் ஆரம்பிப்பதற்கு எதையுமே இப்போது கொண்டிருக்கவில்லை. தொடர்ச்சியான புறக்கணிப்பினால், இவர்கள் தமது நம்பிக்கையை இழந்து வருகிறார்கள். அவர்கள் கொண்டிருக்கிருக்கும் ஒரே நம்பிக்கை நாம்தான். எம்மால் இவர்களுக்கு உதவ முடியாவிட்டால், வேறு எவர்தான் உதவுவர்?
மேலும் இங்கே தொடர்க...

யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு எகெட் நிறுவனம் உதவி



யுத்தத்தினால் இடம்பெயர்ந்து மீளக்குடியமர்த்தப்பட்டுள்ள வாகரைப்பிரதேச செயலாளர் பிரிவின் மிகவும் பின் தங்கிய கிராமமான தோனிநாட்ட மடுக்குளம் கிராம மக்களுக்கு எகெட் நிறுவனத்தினால் உலர் உணவுப்பொருட்கள் வழங்கப்பட்டன.

தமிழ் தேசயக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.லோகேஸ்பரன், மற்றும் வாகரை பிரதேச செயலாளர் எஸ்.ராகுளநாயகி ஆகியோரின் வேண்டு கோளின் பேரில் இவ் உலர் உணவுப்பொருட்கள் வழங்கப்பட்டன.

இக்கிராமத்திலுள்ள 48 குடும்பங்களுக்கான உலர் உணவுப்பொருட்கள் வழங்கப்பட்டதாக எகெட் நிறுவனத்தின் ஊடகப் பொறுப் பொறுப்பதிகாரி மைக்கல் தெரிவித்தார்.

இவ் உலர் உணவுப்பொருட்கள் வழங்கும் நிகழ்வில் அப்பகுதியின் இராணுவ முகாம் பொறுப்பதிகாரி மற்றும் கிராம உத்தியோகத்தர் எஹெட் நிறுவன உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்
மேலும் இங்கே தொடர்க...

பாக்., ஆக்கிரமிப்பு காஷ்மீரில் சீன படைகள்; இந்தியா கவனத்துடன் ஆய்வு செய்கிறதாம்





புதுடில்லி: பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் சீன படைகள் குவிக்கப் பட்டிருப்பதாகவும், இந்திய, பாக்., சர்வதேச எல்லையில் சீன படையினர் நோட்டமிட்டதாகவும் வந்த செய்தியை அடுத்து இது குறித்து கவனமாக ஆய்வு செய்து , உண்மை இருக்கிறதா என உரிய முறையில் கண்காணிக்கும் என இந்திய வெளியுறவு துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.



கடந்த 26 ம் தேதி நியூயார்க் டைம்ஸ் பத்திரிகை இந்த தகவலை வெளியிட்டிருந்தது. இது குறித்து மத்திய அரசு கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் ரோடு மற்றும் ரயில் பாதை அமைப்பது தொடர்பான பணியில் ஏழாயிரம் முதல் 11 ஆயிரம் சீன படை வீரர்கள் அங்கு குவிந்ததாகவும் கூறப்பட்டுள்ளது. சீன தனது போக்குவரத்து பலத்தை வலுப்படுத்தும் நோக்கில் இந்த ஏற்பாடு செய்யப்படுவதாகவும் கூறப்படுகிறது. பாக்., கில் சீனபடைகள் கடல்படை தளம் அமைத்துள்ளதாகவும் தெரிகிறது. இதன் மூலம் கல்ப் பகுதிகளுக்கு எளிதில் செல்ல முடியும் .



பாக்., ஆக்கிரமிப்பு காஷ்மீரில் எந்தவொரு பணியும் செய்ய சீனா உதவி செய்யக்கூடாது என்றும் இந்திய தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் சீன இவ்வாறு களம் இறங்கியிருக்கிறது.

இந்த விஷயம் குறித்து வெளியுறவு துறை அமைச்சக செயலர் விஷ்ணுபிரசாத் கூறுகையில் இதில் உண்மை இருக்கிறதா என ஆய்ந்து வருகிறோம். இருக்கும் பட்சத்தில் பாதுகாப்பு விஷயத்தில் இந்தியா தக்க நடவடிக்கை எடுக்கும் என்று கூறியுள்ளார்.



சீன படைகள் நடமாட்டம் குறித்து பா.ஜ., மூத்த தலைவர்களில் ஒருவரான யஸ்வநத்சின்கா கூறுகையில், சீன படைகள் இந்த அளவிற்கு அத்துமீறி நடந்திருப்பதன் மூலம் ஐக்கியமுற்போக்கு கூட்டணி ஆட்சியின் பலவீனம வெளிச்சத்திற்கு வந்துள்ளது என குறை கூறியுள்ளார்.
மேலும் இங்கே தொடர்க...

ஹைதராபாத் சார்மினார் கட்டடத் தூண் இடிந்து விழுந்தது

ஹைதராபாத்திலுள்ள உலகப்புகழ் பெற்ற சார்மினார் கட்டிடத்தின் தூண் ஒன்று ஞாயிறன்று 10 மணியளவில் பயங்கர சத்தத்துடன் இடிந்து விழுந்தது.

இதன் 4 தூண்களும் அழகிய கலை வேலைப்பாடுகளுடன் கட்டப்பட்டவை. இதற்கு சார்-4, மினார்-தூண் எனப் பெயரிட்டுள்ளனர்.

இந்தக் கட்டிடம் 400 ஆண்டுகள் பழைமை வாய்ந்தது. எனவே தான் இதைக் காண உலகம் முழுவதிலும் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் ஹைதராபாத்தில் குவிகிறார்கள்.

இந்நிலையில் ஞாயிறன்று இரவில், தூணின் ஒரு பகுதி பயங்கர சத்தத்துடன் கீழே இடிந்து விழுந்தது. இதைப் பார்த்ததும் சுற்றுலா பயணிகள், வியாபாரிகள் அலறியடித்து ஓடினர்.

கட்டிடம் இடிந்தபோது எவரும் அருகில் இருக்கவில்லை. இதனால் உயிரிழப்பு தவிர்க்கப்பட்டது.

கடந்த 2 மாதமாக ஹைதராபாத்தில் மழை பெய்து வருகிறது. மேலும் சார்மினார் கட்டிடத்தில் ஆல மரம், அரசமரம் போன் றவை ஆங்காங்கே வளர்ந்துள்ளன.

இதனால்தான் தூணின் ஒரு பகுதி இடிந்திருக்கும் என்று சார்மினார் பகுதி வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

ஹைதராபாத்தைச் சேர்ந்த முகமது அயூப் என்பவர் கூறுகையில்,

"400 ஆண்டுகள் பழைமை வாய்ந்த சார்மினார் கட்டிடத்தை அரசு முறையாகப் பராமரிக்கவில்லை. இதனால் அக்கட்டிடம் எந்த நேரத்திலும் முழுமையாக இடிந்து விழும் அபாயம் உள்ளது" என்றார்.

நேற்றும் இன்றும் சார்மினார் கட்டிடத்தில் ஏற பயணிகள் தயக்கம் காட்டி வருகின்றனர். இதனால் அங்கு சுற்றுலாப் பயணிகள் கூட்டம் குறைவாக இருந்ததாக ஹைதராபாத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும் இங்கே தொடர்க...

கனடா நோக்கி மேலும் ஒரு கப்பல் பயணம்



சட்டவிரோத ஆட்கடத்தல் நடவடிக்கைகளை மேற் கொள்ளும் நோக்கில் மேலும் ஒரு கப்பல் தாய்லாந்தில் இருந்து கனடா நோக்கி பயணிக்க இருப்பதாக தெரிவிக்க ப்பட்டுள்ளது.

'கிளோப் அன்ட் மெயில்"என்ற சஞ்சிகை இந்த தகவலை வெளியிட்டு ள்ளதுடன், அந்த கப்பலில் பயணிக்க இருப்பவர்களின் பெரும் பாலானோர் இலங்கை தமிழர்கள் எனவும் தெரிவித்துள்ளது.

தாய்லாந்திற்கான இரண்டு வார கால சுற்றுலா வீஸா பெற்று பாக்கோக் வரும் இலங்கையர்கள், பின்னர் அங்கிருந்து கனடா நோக்கி, சட்ட வீரோத ஆட் கடத்தல் படகு மூலம் செல்வதாக அந்த செய்தியில் தெரிவிக்கப்படுகிறது.

சுற்றுலா பயணிகளாக வரும் இவர்கள் தங்கியிருக்கும் தமது விடுதிகளை விட்டு அதிகளவில் வெளியேறுவது இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை, இதே போன்ற உத்தியிலோயே சன் சீ பக்கலும் கனடாவை சென்றுள்ளதாக தாய்லாந்து காவல் துறையினர் தெரிவித்ததாக அந்த செய்தியில் குறிப்பிடப் பட்டுள்ளது.

இவர்கள், பாக்கொக்கில் இருந்து தெற்கே உள்ள மீன்பிடி பிரதேசமான சொங்கால சென்று அங்கிருந்தே கனடா சென்றுள்ளதாக தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் கனடா சென்றடைந்துள்ள சன் சீ கப்பல் அகதிகள் தொடர்பான விசாரணைகள் தொடர்ந்தும் இடம் பெறுவதாக கனேடிய தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த கப்பலில் பயணித்த ஒவ்வொரு பயணியிடமிருந்தும் சராசரியாக 50 ஆயிரம் டொலர்கள் அற விட்டிருப்பதாக கனேடிய பொது பாதுகாப்பு துறை அமைச்சர் விக் டோஸ் தெரிவித்துள்ளார்.

இதனடிப்படையில் இரண்டு கோடி டொலர்களுக்கு மேல் இந்த பயணிகள் செலுத்தியிருக்கலாம் என அவர் சந்தேகம் வெளியிட்டுள்ளார்.
மேலும் இங்கே தொடர்க...

இந்திய வெளியுறவுச் செயலாளர் நிருபமா ராவ் வட பகுதிக்கு விஜயம்




நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இலங்கை வந்துள்ள இந்திய வெளியுறவுச் செயலாளர் நிருபமா ராவ் அடங்களான உயர் மட்டக் குழுவினர் இன்று வட பகுதிக்கு விஜயம் செய்து, அங்கு முன்னெடுக்கப்படும் அபிவிருத்திப் பணிகளை பார்வையிட உள்ளனர்.

இந்திய வெளியுறவுச் செயலாளர் அடங்களாக குழுவினர் நேற்று இரவு கட்டுநாயக்க விமான நிலையத்தில் வரவேற்கப்பட்டனர்.

நிருபமா ராவ் இன்று வவுனியா, கிளிநொச்சி மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய பிரதேசங்களுக்கு விஜயம் செய்கிறார். மெனிக்பாம் முகாமிற்கு சென்று இடம்பெயர்ந்த மக்களின் நலன்குறித்து நேரில் பார்வையிட உள்ள அவர், பின்னர் மகிழங்குளம் பகுதியில் கண்ணிவெடி அகற்றும் பணிகளை அவதானிக்க உள்ளார்.

யாழ், கிளிநொச்சி ஆகிய பகுதிகளுக்கும் செல்ல உள்ள அவர் அப்பகுதியில் முன்னெடுக்கப்படும் அபி விருத்திப் பணிகளையும் பார்வையிடுவார்.

நாளை திருகோணமலைக்குச் செல்ல உள்ள நிருபமா ராவ் நாளை மறுதினம் ஜனாதிபதி வெளியுறவு அமைச்சர் ஆகியோரை சந்திப்பார்.
மேலும் இங்கே தொடர்க...

வடமாகாண விவசாய அமைச்சு கிளிநொச்சிக்கு இடமாற்றம்

வட மாகாண விவசாய, நீர்ப்பாசன, கால் நடைகள், மீன்பிடி மற்றும் காணி அமைச்சும், அதன் கீழுள்ள சகல திணைக் களங்களும் நாளை (1) முதல் கிளிநொச்சி நகருக்கு இடமாற்றப்படுகின்றது.

இதற்கமைய நாளை புதன்கிழமை தொடக்கம் குறித்த அமைச்சும் அதன் கீழ் இயங்கும் சகல திணைக்களங்களும் கிளிநொச்சியிலிருந்து செயற்படவுள்ளதாக வட மாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜி. ஏ. சந்திரசிறி தெரிவித்தார்.

சுமார் 30 மில்லியன் ரூபா செலவில் இந்த அமைச்சுக்கான அலுவலகமும், திணைக்களத்துக்கான கட்டடங்களும் புனரமைக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். வடக்கு, கிழக்கு மாகாணங்கள் தனித் தனியாக பிரிக்கப்பட்ட பின்னரும் கூட வட மாகாண சபையின் சகல அமைச்சுக்களும் திணைக்களங்களும் திருகோணமலை, வரோதயர் நகரிலேயே இயங்கி வருகின்றன.

இந்நிலையில் தற்போது அரசாங்கம் வடக்கில் முன்னெடுத்துவரும் அபிவிருத்தி வேலைத்திட்டம், விவசாயத்திட்டங்களை உரிய முறையில் உடனுக்குடன் நடை முறைப்படுத்தும் நோக்குடனே இந்த அமைச்சை உடனடியாக கிளிநொச்சிக்கு மாற்றத் தீர்மானித்ததாக அளுநர் மேலும் தெரிவித்தார்.

மாகாண அமைச்சின் செயலாளர் சி. பத்மநாதன் தலைமையில் அமைச்சின் செயற்பாடுகளும், விவசாய, நீர்ப்பாசன, கால்நடை, காணி ஆகிய திணைக்களங்களும் செயற்படவுள்ளன.

இம்முறை பெரும் போகத்தின் போது வட மாகாணத்தில் அதிக நெற்செய்கையை மேற்கொள்ளவும் மேலதிகமாக 40 ஆயிரம் ஏக்கரில் பயிர்ச்செய்கையை மேற்கொள்ளவும் அரசாங்கம் தீர்மானித்துள்ளது என் றும் வட மாகாண ஆளுநர் தெரி வித்தார்.
மேலும் இங்கே தொடர்க...

வவுனியா மெனிக்பாம் நிவாரணக் கிராமம் : முல்லைத்தீவு மக்களை விரைவில் மீளக் குடியமர்த்துமாறு பசில் பணிப்பு






வவுனியா மெனிக்பாம் நிவாரணக் கிராமத்தில் எஞ்சியுள்ள முல்லைத்தீவு மாவட்டத்தைச் சேர்ந்த 8607 குடும்பங்களையும் துரிதமாகக் குடியமர்த்த தேவையான நடவடிக்கைகளை மேற்கொள் ளுமாறு அமைச்சர் பசில் ராஜபக்ஷ முல்லைத்தீவு அரசாங்க அதிபர் வேதநாயகத்துக்குப் பணிப்புரை விடுத்துள்ளார்.

முல்லைத்தீவு மாவட்டத்திற்கு நேற்று முன் தினம் நேரில் சென்ற அமைச்சர் பசில் ராஜபக்ஷ மாவட்ட அரசாங்க அதிபர் வேதநாயகம் தலைமையில் உயர் மட்ட அதிகாரிகளை சந்தித்துக் கலந்து ரையாடியுள்ளதுடன், மீள் குடியேற்றம் தொடர்பான சகல அதிகாரிகளுக்கும் விசேட பணிப்புரைகளையும் வழங்கியுள்ளார்.

இச்சந்திப்பு முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் அலுவலகத்தில் நடைபெற்றதுடன் இதன் போது மாவட்ட ரீதியாக மேற்கொள்ளப்பட்டு வரும் செயற்திட்டங்களின் முன்னேற்றம் குறித்தும் ஆராயப்பட்டுள்ளது.

கண்ணிவெடி அகற்றும் நடவடிக்கை யைத் துரிதப்படுத்துமாறு சம்பந்தப் பட்டவர்களைக் கேட்டுக் கொண்ட அமைச்சர் கண்ணிவெடி அகற்றிய பகுதிகளில் உடனடியாக மீள் குடியேற்றங்களை மேற்கொள்ளுமாறும் பணிப்புரை விடுத்துள்ளார்.

மீள் குடியேற்றப்பட்ட மக்களுக்கான கொடுப்பனவுகள் நிவாரணங்களைத் தாமதமின்றி பெற்றுக்கொடுக்குமாறு அதிகாரிகளைப் பணித்துள்ள அமைச்சர்; தற்காலிக வீடுகள் அமைப்பதை நிறுத்தி விட்டு அவர்களுக்கான நிரந்தர வீடுகளை அமைத்துக் கொடுக்க நடவடிக்கை எடுக்குமாறும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

இச்சந்திப்பு தொடர்பில் தெரிவித்த முல்லைத்தீவு அரசாங்க அதிபர்; முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள சிறுநீர்ப்பாசனக் குளங்களைப் புனரமைத்து விவசாயத்திற்கான நடவடிக்கைகளை ஏற்படுத்திக் கொடுக்குமாறும் கேட்டுக்கொண்டதாகத் தெரிவித்தார்.

குறிப்பாக மீள் குடியேற்றப்படாத பிரதேசங்களில் விரைவாக கண்ணிவெடிகளை அகற்றி மீள் குடியேற்றத்தை மேற்கொள்ள உரிய நடவடிக்கை எடுக்குமாறும் அமைச்சர் கேட்டுக்கொண்டதாக அரச அதிபர் மேலும் தெரிவித்தார்.
மேலும் இங்கே தொடர்க...

அரசியலமைப்பு திருத்த சட்டமூலம் 8ஆம் திகதி பாராளுமன்றத்தில் 160 எம். பிக்களின் ஆதரவு கிடைக்குமென்கிறார் மைத்திரிபால

உத்தேச அரசியலமைப்புத் திருத்தச் சட்ட மூலம் எதிர்வரும 8ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும். மேற்படி திருத்தச் சட்ட மூலத்திற்கு நேற்று அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியதோடு உச்சநீதிமன்றத்தின் அனுமதிக்காக முன்வைக்கப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி செயலாளரும் அமைச்சருமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

புதிய யாப்பு திருத்தத்தின் பிரகாரம், ஜனாதிபதியொருவர் இரு தடவைக்கு மேல் பதவிவகிக்க முடியாது என்ற சரத்து நீக்கப்பட்டு வரையறையின்றி எத்தனை தடவையும் போட்டியிட முடியும் என திருத்தப்பட்டுள்ளது.

ஜனாதிபதி மூன்று மாதத்திற்கு ஒரு தடவை கட்டாயம் பாராளு மன்ற அமர்வுகளில் பங்கேற்க வேண்டும் எனவும் யாப்பு திருத் தப்படவுள்ளதோடு அரசியல மைப்பு சபைக்கு உறுப்பினர்களை நியமிக்கும் அதிகாரத்தை அமைச்சரவைக்கு வழங்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் கூறினார்.

உத்தேச அரசியலமைப்பு திருத்தச் சட்டம் குறித்து விளக்க மளிக்கும் விசேட ஊடகவியலாளர் மாநாடு நேற்று சுகாதார அமைச்சில் நடைபெற்றது. இங்கு கருத்துத் தெரிவித்த அமைச்சர் மேலும் கூறியதாவது, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் விசேட அமைச்சரவைக் கூட்டம் நேற்று காலை அலரி மாளிகையில் நடைபெற்றது.

உத்தேச திருத்தச் சட்ட மூலத்தை பிரதமர் டி. எம். ஜெயரத்ன அமைச்சரவைக்கு சமர்ப்பித்தார். யாப்புத் திருத்தத்தில் உள்ளடங்கும் விடயங்கள் குறித்து வெளி விவகார அமைச்சர் ஜி. எல். பீரிஸ் அமைச்சரவைக்கு விளக்க மளித்தார்.

தற்பொழுதுள்ள யாப்பின் பிரகாரம் ஜனாதிபதி விரும்பிய போது பாராளு மன்றத்திற்கு சமுகமளிக்கலாம். ஆனால் புதிய திருத்தத்தின்படி ஒவ்வொரு மூன்று மாதத்திற்கும் ஒரு தடவை கட்டாயம் ஜனாதிபதி பாராளுமன்ற அமர்வுகளில் பங்கேற்க வேண்டும். பாராளுமன்றத்திற்கு பொறுப்பு கூறும் நபராக ஜனாதிபதி பதவியை மாற்றும் நோக்கத்துடனே இந்த புதிய திருத்தம் செய்யப்படவுள்ளது.

இது தவிர, ஜனாதிபதியாக 2 தடவை மட்டுமே பதவி வகிக்க முடியும் என தற்போதைய யாப்பில் வரையறுக்கப் பட்டுள்ளது. ஆனால் மக்கள் குறித்த நபர் தொடர்ந்தும் ஜனாதிபதியாகப் பதவி வகிக்க வேண்டும் என விரும்பினால் அதற்கு இடமளிக்க வேண்டும்.

அதற்கேற்ப ஒருவர் எத்தனை தடவை வேண்டுமானாலும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடக் கூடியவாறு அரசியல் யாப்பு திருத்தப்படவுள்ளது. இதனூடாக மக்களின் இறைமையை உறுதிப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படவிருக்கிறது. இதன் மூலம் முன்னாள் ஜனாதிபதிகளுக்கும் மீண்டும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட முடியும்.

இதேநேரம் 17ஆவது திருத்தச் சட்டத்திலும் திருத்தம் செய்ய அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. 2001ம் ஆண்டில் ஜே.வி.பி.யுடன் இணைந்து அமைக்கப்பட்ட பொதுஜன ஐக்கிய முன்னணி அரசாங்கம் 17ஆவது திருத்தச் சட்டத்தை அவசர அவசரமாக நிறைவேற்றியது. அதில் பல குறைபாடுகள் உள்ளன. அவற்றைத் திருத்துவது மிக அவசியம்.

978ஆம் ஆண்டு யாப்பில் உயர் பதவிகளுக்கு நியமனம் வழங்கும் அதிகாரம் அமைச்சரவைக்கு வழங்கப்பட்டிருந்தது. ஆனால் 2001ல் கொண்டு வரப்பட்ட திருத்தத்தின் படி அந்த அதிகாரம் ஜனாதிபதி, பிரமர், சபாநாயகர், எதிர்க்கட்சித் தலைவர், சிறுகட்சிகள் என கட்சி பிரதிநிதிகளுக்கே வழங்கப்பட்டது. எதிர்க்கட்சிகளின் தாமதம் காரணமாக அரசியலமைப்பு சபையை இயங்க வைக்க முடியாமல் போனது.

இதனால் அரசியலமைப்பு சபைக்கு உறுப்பினர்களை நியமிக்கும் அதிகாரம் யாப்பினூடாக அமைச்சரவைக்கு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இது தவிர அரசியலமைப்பு சபை உறுப்பினர்களின் தொகை 5ஆக குறைக்கப்படவிருக்கின்றது. உயர் பதவிகளுக்கு நியமனம் வழங்கும் அதிகாரமும் அமைச்சரவைக்கு வழங்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

உச்ச நீதிமன்றம், மேன்முறையீட்டு நீதிமன்றம் மேல் நீதிமன்றம் போன்றவற்றிற்கு நீதிபதிகளை நியமிக்கும் அதிகாரம் தொடர்ந்து ஜனாதிபதியிடமே இருக்கும்.

புதிய திருத்தத்தின் பின்னர் சுயாதீன ஆணைக்குழுக்கள் ஒழுங்காக இயங்கும்.

நாட்டின் அபிவிருத்திப் பணிகளை ஒழுங்காக முன்னெடுக்கும் வகையில் அரசியலமைப்பில் திருத்தம் மேற்கொள்வதாக கடந்த ஜனாதிபதி மற்றும் பாராளுமன்றத் தேர்தல்களில் நாம் உறுதி அளித்தோம். அதன்படி புதிய திருத்தங்கள் மேற்கொள்ளம் படவிருக்கின்றது.

உத்தேச அரசியலமைப்பு திருத்த மூலம் தொடர்பான விவாதம் 8ஆம், 9ஆம் திகதிகளில் நடைபெற்று அது நிறைவேற்றப்படும். யாப்புத் திருத்தம் பாராளுமன்றத்தில் 160 எம்.பி. களை விட அதிகமானவர்களின் ஆதரவுடன் நிறைவேற்றப்படும் என எதிர்பார்க்கிறோம். இதற்கு சர்வஜன வாக்கெடுப்பு தேவையில்லை. இதற்குத் தேவையான 2/3 பெரும்பான்மை பலம் எம்மிடமுள்ளது என்றார்.
மேலும் இங்கே தொடர்க...

400 ஆண்டுகளுக்கு பின் சீறும் இந்தோனேசிய எரிமலை





கபன்ஜாஹே (இந்தோனேசியா), ஆக.30: இந்தோனேசியாவின் சுமத்ரா தீவில் சினாபங் எரிமலை மீண்டும் சீற்றம் கொண்டுள்ளது. 400 ஆண்டுகளுக்கு முன்னர் சீற்றம் கொண்டு தனிந்த இந்த எரிமலை ஞாயிற்றுக்கிழமையில் இருந்து மீண்டும் சீற்றம் அடைந்துள்ளது.

திங்கள்கிழமை இரண்டாவது நாளாக எரிமலை தீக்குழம்பை கக்கியது. இதனால் அப்பகுதியை சுற்றி புகை மண்டலமாக காட்சி அளிக்கிறது.

இதைத்தொடர்ந்து அப்பகுதியை சுற்றி அமைந்துள்ள கிராமங்களைச் சேர்ந்த மக்களும், எரிமலையின் அடிவாரத்தில் வசித்து வந்த மக்களும் அவசரமாக வெளியேறத் தொடங்கியுள்ளனர்.

எரிமலையில் இருந்து 6 கிலோ மீட்டர் சுற்றளவு வரை அபாயமான பகுதியாக இந்தோனேசிய அரசு அறிவித்துள்ளது. அப்பகுதியில் வசிக்கும் மக்களை உடனே வெளியேறுமாறும் அறிவுறுத்தியுள்ளது.

இதையடுத்து ஆயிரக்கணக்கான மக்கள் அரசு ஏற்படுத்தியுள்ள தாற்காலிக முகாம்களில் அடைக்கலம் அடைய தொடங்கியுள்ளனர். இதுவரை 3000 பேர் முகாம்களை வந்தடைந்துள்ளதாகவும், இன்னும் ஆயிரக்கணக்கான மக்கள் வந்து கொண்டிருப்பதாகவும் அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

எரிமலை சீற்றத்தால் 2,400 மீட்டர் உயரம் வரை புகை மூட்டம் காணப்படுகிறது. அப்பகுதி முழுவதும் அதிக அனலாகவும் உள்ளது. இதனால் அப்பகுதி வழியாக விமானங்கள் செல்ல வேண்டாம் என்றும் அரசு கேட்டுக்கொண்டுள்ளது. எரிமலை சீற்றத்தை பார்ப்பதற்கே பயமாக இருப்பதாகவும், எரிமலை புகை கலந்த காற்று சுவாசிப்பதற்கு நெடியுடையதாக இருப்பதாகவும் அப்பகுதியில் வசிக்கும் ஒருவர் தெரிவித்துள்ளார்.

1600-க்குப் பிறகு... சுமத்ரா தீவின் வடக்குப் பகுதியில் அமைந்துள்ள சினாபங் எரிமலை கடந்த 1600-ம் ஆண்டு சீற்றம் கொண்டது. இதையடுத்து தென்கிழக்கு ஆசியாவில் உள்ள சீற்றமிக எரிமலை பட்டியலில் சினாபங்கும் சேர்த்துக் கொள்ளப்பட்டது. தென்கிழக்கு ஆசியாவில் மொத்தம் 69 சீற்றமிகு எரிமலைகள் உள்ளன.
மேலும் இங்கே தொடர்க...

இலங்கை அதிபர் பதவி: ராஜபட்சவுக்கு ஆதரவாக சட்டத் திருத்தம்





இலங்கை அதிபராக ராஜபட்ச 3-வது முறையாகத் தொடர்வதற்கு வழி செய்யும் சட்டத் திருத்த மசோதாவுக்கு அந்நாட்டு அமைச்சரவை திங்கள்கிழமை ஒப்புதல் அளித்தது.

இந்த மசோதா விரைவில் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என்று தெரிகிறது. இலங்கையில் இப்போதுள்ள அரசியல் சாசன சட்டப்படி, அதிபராக ஒருவர் இரண்டு முறை மட்டுமே பதவியில் இருக்க முடியும். இப்போது அதிபராகவுள்ள ராஜபட்ச 2-வது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.இதனிடையே அவரே முன்றாவது முறையாகவும் பதவியில் தொடர வகை செய்யும் வகையில் சட்டத் திருத்தம் கொண்டு வரப்படவுள்ளது. இதனால் அவர் 2016-ம் ஆண்டு இலங்கை அதிபர் தேர்தலிலும் போட்டியிட முடியும்.

ஆனால் இந்த மசோதா நிறைவேற நாடாளுமன்றத்தில் 3-ல் இரண்டு பங்கு உறுப்பினர்களின் ஆதரவு தேவை. இதற்காக சில எதிர்க்கட்சிகளின் ஆதரவை ராஜபட்ச நாடுவார் என்று தெரிகிறது.
மேலும் இங்கே தொடர்க...

சீனாவில் நிலநடுக்கம்; 7300 வீடுகள் சேதம்; 14 பேர் காயம்




சீனாவில் யுன்னான் மற்றும் சிசுயான் ஆகிய 2 மாகாணங்களில் நேற்று திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் வீடுகள் மற்றும் கட்டிடங்கள் குலுங்கின. இதை தொடர்ந்து 7,354 வீடுகள் சேதமடைந்தன. 122 வீடுகள் முற்றிலும் சேதம் அடைந்தன.

இதனால் பீதி அடைந்த மக்கள் வீடுகளை விட்டு வெளியே ஓட்டம் பிடித்தனர். நிலநடுக்கத்தை தொடர்ந்து இடிபாடுகளில் சிக்கி 14 பேர் காயம் அடைந்தனர். யுன்னான் மாகாணத்தில் குயாஜியோ பகுதியில் பெரும்பாலான ரோடுகள் மண்ணுக்குள் புதைந்தன. நிலநடுக்கம் 4.8 ரிக்டர் அளவில் பதிவாகி இருந்தது.

இந்த ஆண்டு சீனாவில் 2-வது முறையாக நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் சீனாவின் தெற்கு பகுதியில் உள்ள குயின்காய் மாகாணத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 2800 பேர் பலியாகினர். ஆயிரக்கணக்கானவர்கள் காயம் அடைந்தனர்.
மேலும் இங்கே தொடர்க...

ஜெயலலிதாவுக்கு உச்சகட்ட பாதுகாப்பு கேட்டு அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் தலைமை செயலாளரிடம் மனு






அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா கோவை, திருச்சி பொதுக் கூட்டங்களில் கலந்து கொண்டு பேசினார். அடுத்ததாக மதுரையில் பேச திட்ட மிட்டுள்ளார். இந்த நிலையில் ஜெயா டி.வி. இயக்குனருக்கு கொலை மிரட்டல் கடிதம் ஒன்று வந்தது. மதுரை மாவட்டம் கள்ளந்திரி பகுதியில் இருந்து கே.அறிவொளி பெயரில் இந்த கடிதம் வந்தது. அந்த கடிதத்தில் மதுரை பொதுக்கூட்டத்தை ரத்த செய். இல்லையென்றால் குண்டு வீசி கொன்று விடுவதாக மிரட்டல் விடுக்கப்பட்டது.

இதையடுத்து ஜெயா டி.வி. சார்பில் டி.ஜி.பி. மற்றும் சென்னை போலீஸ் கமிஷனரிடம் புகார் கொடுக்கப்பட்டது.

அ.தி.மு.க. சார்பில் பொருளாளர் ஓ.பன்னீர் செல்வம் எம்.எல்.ஏ., தலைமை நிலைய செயலாளர் கே.ஏ. செங்கோட்டையன் எம்.எல்.ஏ., எம்.எல்.ஏ.க்கள் பி.கே. சேகர்பாபு, செந்தமிழ் செல்வன் ஆகியோர் தலைமை செயலாளர் மற்றும் உள்துறை செயலாளரிடம் இன்று மனு கொடுத்தனர்.

மனு குறித்து செங்கோட்டையன் நிருபர்களிடம் கூறியதாவது:-

கோவை, திருச்சியில் நடந்த பொதுக்கூட்டத்தில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா கலந்து கொண்டார். அவருக்கு உரிய பாதுகாப்பு கொடுக்கவில்லை.

மதுரையில் கூட்டம் நடத்த திட்டமிட்டுள்ளோம். அதில் ஜெயலலிதா கலந்து கொள்ளக்கூடாது என கொலை மிரட்டல் விடுவிக்கப்பட்டுள்ளது. இது பற்றி போலீஸ் டி.ஜி.பி.யிடம் மனு கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை.

எனவே ஜெயலலிதாவுக்கு உச்சச்கட்ட பாதுகாப்பு கொடுக்க வேண்டும் என்று தலைமை செயலாளர் ஸ்ரீபதி, உள்துறை செயலாளர் ஞானதேசிகனை சந்தித்து மனு கொடுத்துள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் இங்கே தொடர்க...