28 மே, 2010

அகதிகளை அவுஸ்திரேலியா துஸ்பிரயோகம் செய்வதாக குற்றச்சாட்டு

அரசியல் தஞ்சம்கோரி சரணாகதி அடையும் இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அகதிகளை அவுஸ்திரேலியா துஸ்பிரயோகம் செய்து வருவதாக சர்வதேச மன்னிப்புச்சபை தனது ஆண்டறிக்கையில் குற்றம் சுமத்தியுள்ளது. உலகின் 159 நாடுகளில் மனிதஉரிமை மீறல் சம்பவங்கள் இடம்பெற்று வருவதாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது. இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அகதிகள் தொடர்பில் அவுஸ்திரேலியா சர்வதேச மனிதஉரிமை சட்டங்களுக்கு அமைவான முறையில் செயற்பட வேண்டுமெனவும் சபை குறிப்பிட்டுள்ளது. சரணாகதி கோரும் மக்களுக்கு அடைக்கலம் வழங்க வேண்டிய பொறுப்பு அவுஸ்திரேலியாவிற்கு இருப்பதாகவும் சர்வதேச மன்னிப்புச்சபை சுட்டிக்காட்டியுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக