30 ஏப்ரல், 2010

வீடியோ காட்சி போலி: நித்யானந்தாவுடன் இருப்பது நான் அல்ல; ரஞ்சிதா பரபரப்பு தகவல்






பெங்களூரை தலைமை இடமாக கொண்டு உலகம் முழுக்க தியான பீடங்கள் நடத்தி வந்த நித்யானந்தா சாமியார், நடிகை ரஞ்சிதாவுடன் இருப்பது போன்ற காட்சிகளை கடந்த மாதம் 2-ந்தேதி ஒரு தொலைக்காட்சி ஒளிபரப்பியது.

நித்யானந்தாவிடம் சீடராக இருந்த லெனின் என்பவர் அந்த காட்சியை எடுத்ததாக கூறினார். அதன் அடிப்படையில் கர்நாடக சி.ஐ.டி. போலீசார் வழக்குப் பதிவு செய்து கடந்த 21-ந்தேதி நித்யானந்தாவை கைது செய்தனர்.

நித்யானந்தாவை தற்போது காவலில் எடுத்து போலீசார் விசாரித்து வருகிறார்கள். இந்த விசாரணையில் இதுவரை முக்கிய தகவல்கள் எதையும் நித்யானந்தா வெளியிடவில்லை. நான் தவறு எதுவும் செய்யவில்லை என்று திரும்ப, திரும்ப கூறி வருகிறார்.

இந்த நிலையில் இந்த வழக்கில் நடிகை ரஞ்சிதாவையும் கைது செய்து விசாரணை நடத்த வேண்டும் என்று சிலர் கோரிக்கை விடுத்தனர். அதன் பேரில் கர்நாடக போலீசார், நடிகை ரஞ்சிதாவை தேடிவருவதாக தகவல்கள் வெளியானது.

ஆனால் ரஞ்சிதா கேரளாவில் இருப்பதாகவும், ஓரிரு நாளில் பெங்களூர் வந்து போலீசாரிடம் ஆஜராகி வாக்குமூலம் அளிக்கப்போவதாகவும் நேற்று ஒரு பரபரப்பு தகவல் வெளியானது.

தன்னைப் பற்றி யூகத்தின் அடிப்படையில் வெளியாகும் இந்த தகவல்கள் அனைத்தும் தவறானவை என்று முதன் முதலாக ரஞ்சிதா தெரிவித்துள்ளார். படுக்கை அறை காட்சிகள் வெளியாகி கடந்த 2 மாதமாக பல்வேறு பரபரப்பு தகவல்கள் பரவிய போதும் ரஞ்சிதா மவுனமாக இருந்து வந்தார். தற்போது அவர் டெல்லி வக்கீல்கள் மூலம் அதிகாரப்பூர்வமாக தன் கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.

நித்யானந்தாவுடன் வீடியோவில் இருப்பது நான் அல்ல. எனவே இனியும் அந்த காட்சிகளை வெளியிட்டால் மான நஷ்ட வழக்கு தொடருவேன் என்று ரஞ்சிதா எச்சரித்துள்ளார்.

இது தொடர்பாக ரஞ்சிதாவின் வக்கீல் பிரசாந்த் மென்டிரட்டா கூறியதாவது:-

எனது கட்சிக்காரர் நடிகை ரஞ்சிதா எல்லாரும் நினைப்பது போல நித்யானந்தா சாமியாரின் தீவிர பக்தை அல்ல. பிடதியில் உள்ள ஆசிரமத்தில் தங்கி இருந்து பணிவிடைகள் செய்யவும் இல்லை. ஆனால் மன அமைதிக்காக நித்யானந்தா சாமியாரை சந்தித்துள்ளார்.

நித்யானந்தா பீடத்தில் போடப்படும் ரகசிய ஒப்பந்தம் ஒன்றில் ரஞ்சிதா கையெழுத்துப் போட்டுக்கொடுத்து இருப்பதாக ஒரு தகவல் வெளியாகி உள்ளது. அதிலும் எந்த உண்மையும் இல்லை. அது தவறான தகவல்.

அதுபோல நித்யானந்தாவுடன், அந்த டேப் பில் இருப்பது ரஞ்சிதாவே அல்ல. அது போலியாக தயாரிக்கப்பட்டுள்ளது. அந்த வீடியோ காட்சிகள் முழுவதும் எடிட் செய்து காட்சிகளை ஒன்று சேர்த்துள்ளனர். கோர்ட்டில் இந்த வழக்கு நிற்காது.

ரஞ்சிதாவுக்கு எதிராக திட்டமிட்டு மிகப்பெரிய சதியை அரங்கேற்றி உள்ளனர். இதை ஒரு முடிவுக்கு கொண்டு வரும்வரை போராட அவர் முடிவு செய்துள்ளார்.கடந்த 2 மாதமாக நிலவும் இந்த சர்ச்சையால் ரஞ்சிதாவின் வாழ்க்கையே பாழாகிவிட்டது. அவரது நற்பெயர் தேவை இல்லாமல் கெட்டுள்ளது. மன உளைச்சல் ஏற்பட்டு, வருவாய் இழப்பும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இதற்கு காரணமான நித்யானந்தாவின் சீடர் லெனின் மீது ரஞ்சிதா மான நஷ்ட வழக்கு தொடர உள்ளார். தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பான நித்யானந்தா படுக்கை அறைக்காட்சிகளை இரண்டு இணையத்தளங்கள் வெளியிட்டுள்ளன. உள்நோக்கத்துடன் அவை திரித்து வெளியிடப்பட்டுள்ளன.

அந்த வீடியோ காட்சிகளை வரும் 2-ந்தேதி (ஞாயிறு) மாலை 5 மணிக்குள் அகற்றி விட வேண்டும். கூகுள் மற்றும் யூடியூப் இணையத் தளங்களுக்கு ரஞ்சிதா நோட்டீசு அனுப்பி உள்ளார். 2-ந்தேதிக்கு பிறகும் அந்த காட்சிகள் இருந்தால் இந்திய தண்டனை சட்டம் மற்றும் தகவல் தொழில் நுட்ப சட்டத்தின் கீழ் அந்த 2 இணையத் தளங்கள் மீது மான நஷ்ட வழக்கு தொடரப்படும்.

இந்த எச்சரிக்கையை 2 இணையத்தளங்களுக்கும் பேக்ஸ் மற்றும் கூரியர் மூலம் ரஞ்சிதா அனுப்பி உள்ளார்.

இவ்வாறு ரஞ்சிதா வக்கீல் பிரசாந்த் கூறினார்.

நடிகை ரஞ்சிதா தற்போது எங்கு இருக்கிறார் என்று அவரிடம் கேட்கப்பட்டது. அதற்கு வக்கீல் பிரசாந்த் கூறுகையில், ரஞ்சிதா, அவர் குடும்பத்தினருடன் பாதுகாப்பான ஒரு இடத்தில் இருக்கிறார் என்றார். எந்த மாநிலத்தில் இருக்கிறார் என்று கேட்டபோது வேறு எதையும் தெரிவிக்க மறுத்துவிட்டார்.
மேலும் இங்கே தொடர்க...

பிரபாகரன் தாயாருக்கு சிகிச்சை அளிக்க தயார்: மத்திய-மாநில அரசு வக்கீல்கள் தகவல்





சென்னையில் சிகிச்சை பெறுவதற்காக மலேசியாவில் இருந்து வந்த பிரபாகரனின் தாயார் திரும்பி அனுப்பப்பட்டார். இதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீதான விசாரணை இன்று சென்னை கோர்ட்டில் நீதிபதி தர்மாராவ், சசிதரன் ஆகியோர் முன்னிலையில் வந்தது. அப்போது தமிழக அரசு வக்கீல் ராஜா கலிபுல்லா கூறியதாவது:-

பிரபாகரனின் தாயார் பார்வதியம்மாளிடம் இருந்து அரசுக்கு இதுவரை எந்த கோரிக்கையும் வரவில்லை. அவர் மனு கொடுத்தால் நிபந்தனையின் அடிப்படையில் சிகிச்சைக்கு அனுமதிக்க தயார்.

இவ்வாறு அவர் கூறினார்.

மத்திய அரசு வக்கீல் ரவீந்திரன் கூறுகையில், தமிழக அரசு கேட்டுக்கொண்டால் இது தொடர்பாக மத்திய அரசு பரிசீலிக்க தயாராக உள்ளது என்றார்.

இதையடுத்து நீதிபதிகள் கூறுகையில், பார்வதியம்மாளுக்கு சிகிச்சை அளிப்பது தொடர்பாக 2 வாரத்துக்குள் மனு கொடுக்கப்படும். அந்த மனுவை மத்திய-மாநில அரசுகள் பரிசீலித்து 4 வாரத்துக்குள் முடிவை தெரிவிக்க வேண்டும் என்றனர்.
மேலும் இங்கே தொடர்க...

போலீஸ் காவல் முடிந்தது நித்யானந்தா, இன்று சிறையில் அடைக்கப்படுகிறார்; நான் ஆண் அல்ல என்று வாக்குமூலம்




பாலியல் மற்றும் கொலை மிரட்டல் புகார்கள் தொடர்பாக நித்யானந்தா சாமியார் கடந்த 21-ந் தேதி இமாச்சல பிரதேசத்தில் கைது செய்யப்பட்டார். பெங்களூர் அழைத்து வரப்பட்ட அவரை போலீசார் காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இன்று (வெள்ளிக்கிழமை) நித்யானந்தா சாமியாரின் போலீஸ் காவல் முடிகிறது. எனவே இன்று 8-வது நாளாக போலீசார் தீவிர விசாரணை நடத்தினார்கள். பல்வேறு கேள்விகளை கேட்டு வாக்குமூலம் பதிவு செய்தனர்.

இன்று மாலை நித்யானந்தாவை ராம்நகர் கோர்ட்டில் ஆஜர்படுத்த போலீசார் திட்டமிட்டுள்ளனர். அவரை மீண்டும் காவலில் எடுத்து விசாரிக்க போலீஸ் தரப்பில் மனு கொடுப்பார்கள் என்று தெரிகிறது. ஆனால் மீண்டும் போலீஸ் காவல் கிடைப்பது அரிது.

நித்யானந்தாவை சிறையில் அடைக்க மாஜிஸ்திரேட் உத்தரவிடுவார். இதையடுத்து ராம்நகர் சிறையில் நித்யானந்தா அடைக்கப்படுவார் என்று தெரிகிறது. நித்யானந்தாவிடம் போலீசார் நடத்தி வரும் விசாரணை இன்னும் முடியவில்லை.

நேற்றும், இன்றும் போலீசார் கேட்ட எல்லா கேள்விகளுக்கும் நித்யானந்தா சமர்த்தாக, ஒழுங்காக பதில் சொன்னதாக தெரிய வந்துள்ளது. முதல் 5 நாட்கள் நித்யானந்தா எந்த பதிலையும் ஒழுங்காக சொல்ல வில்லை.

எந்த கேள்வி கேட்டாலும், ஏதாவது மந்திரம் சொல்லி சமாளித்தப்படி இருந்தார். ஆனாலும் போலீசார் மனம் தளராமல் விசாரித்து சில தகவல்களை பெற்றுள்ளனர். அந்த தகவல்களை வெளியிட போலீசார் மறுத்து விட்டனர்.

இதற்கிடையே நேற்று போலீஸ் விசாரணையின் போது யாரும் யோசிக்காத புது குண்டு ஒன்றை நித்யானந்தா தூக்கிப் போட்டது தெரிய வந்துள்ளது. நேற்று விசாரணை நடந்து கொண்டிருந்த போது ஒரு போலீஸ் அதிகாரி, இதுவரை எத்தனை பெண்களுடன் செக்ஸ் தொடர்பு வைத்திருந்தீர்கள்? என்று கேட்டார்.

அதற்கு நித்யானந்தா, நீங்கள் நினைத்துக் கொண்டிருக்கும் அந்த விஷயம் தவறு. ஏனெனில் நான் ஆண் கிடையாது. ஆணே இல்லாத ஒரு நபர் எப்படி ஆசைக்கு அடி பணிந்து பெண்களுடன் செக்ஸ் உறவு கொண்டிருக்க முடியும். அதற்கு வழியே இல்லை. நான் கடவுள் மாதிரி. வேண்டுமானால் நீங்கள் எனது ஆண்மையை பரிசோதித்துப் பார்த்துக் கொள்ளுங்கள் என்றார்.

நித்யானந்தாவின் இந்த பதிலால் பெங்களூர் சி.ஐ.டி. போலீசார் ஒரு நிமிடம் அரண்டு போய்விட்டனர். நித்யானந்தா ஆணும் இல்லாத, பெண்ணும் இல்லாத திருநங்கையாக இருக்குமோ என்று குழப்பம் அடைந்தனர். சிறிது நேரம் கழித்தே விசாரணையை திசை திருப்ப நித்யானந்தா செய்யும் நாடகம் என்று தெளிவான நிலைக்கு வந்தனர்.

முன்னதாக ஒரு கட்டத்தில் நித்யானந்தாவுக்கு ஆண்மை பரிசோதனை செய்து பார்க்கலாம் என்று பெங்களூர் போலீசார் தீர்மானத்துக்கு வந்தனர். இதற்காக பெங்களூரில் உள்ள 4 அரசு ஆஸ்பத்திரியை தொடர்பு கொண்டு போலீசார் பேசினார்கள்.

இந்த நிலையில் நித்யானந்தாவின் பாஸ்போர்ட்டில் அவர் ஆண் என்று குறிப்பிட்டுள்ளதை போலீசார் கண்டுபிடித்தனர். இதனால் நித்யானந்தா தான் ஆண் இல்லை என்று சொன்னதை போலீசார் கண்டு கொள்ளவில்லை.

இதற்கிடையே தடயவியல் சோதனையிலும் அவர் ஆண் என்று கூறப்பட்டுள்ளது. இதன் காரணமாக நித்யானந்தாவுக்கு ஆண்மை பரிசோதனை நடத்தும் முடிவை போலீசார் கைவிட்டு விட்டனர்.

நித்யானந்தா தினமும் பூஜைக்கு பயன்படுத்தும் கமண்டலம் தங்கத்தால் தயாரிக்கப்பட்டது. அது போல அவர் அணியும் செருப்பும் தங்கத்தால் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

அமெரிக்காவுக்கு செல்லும் போது அவர் தங்க செருப்பு அணிந்து சென்றதாக கூறப்படுகிறது. இது பற்றி வருமான வரித்துறையினரும், சுங்க இலாகா அதிகாரிகளும் விசாரணையை தொடங்கி உள்ளனர்.

இதற்கிடையே நித்யானந்தாவின் உதவியாளர் கோபிகா எங்கே போனார் என்பது மர்மமாக உள்ளது? அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்பதும் புரியாத புதிராக உள்ளது.

நித்யானந்தாவின் நிழல் போல அவர் உலா வந்தார். நித்யானந்தா எந்த நாட்டுக்கு சென்றாலும் கூடவே கோபிகாவும் செல்லும் அளவுக்கு செல்வாக்கு பெற்றிருந்தார்.

ரஞ்சிதா பிடதி ஆசிரமத்தில் செல்வாக்கு பெறத் தொடங்கியதும், அவருடன் நித்யானந்தா தீவிரமாக பழகத் தொடங்கியதும் கோபிகா கோபம் அடைந்து, சீடர் லெனினை தூண்டி விட்டு நித்யானந்தா செக்ஸ் லீலைகளை அம்பலப்படுத்தி இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள்.

அமெரிக்காவை சேர்ந்த ஒரு இந்திய பெண், தன் கணவரை விவாகரத்து செய்து விட்டு நித்யானந்தாவுக்கு பணிவிடைகள் செய்து வந்ததாக சில தினங்களுக்கு முன்பு ஒரு தகவல் வெளியானது. அந்த பெண் தான் கோபிகாவாக இருக்கலாம் என்ற சந்தேகமும் போலீசாரிடம் எழுந்துள்ளது.

கோபிகா அமெரிக்காவுக்கு தப்பிச் சென்றிருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை நடந்து வருகிறது.
மேலும் இங்கே தொடர்க...

கிறிஸ்மஸ் தீவுகளில் அகதிகள் ஆர்ப்பாட்டம்



அகதிகள் அந்தஸ்து மறுக்கப்பட்ட 25 பேர் கிறிஸ்மஸ் தீவுகளில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை நடத்தியுள்ளனர்.

கிறிஸ்மஸ் தீவுகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 25 இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அகதிகளே இவ்வாறு எதிர்ப்பு போராட்டங்களை நடத்தியுள்ளனர்.

தமது அகதி அந்தஸ்து மறுக்கப்பட்டதால் புகலிடம் இன்றி ஆத்திரமுற்ற குறித்த அகதிகள் எதிர்ப்பு போராட்டங்களை நடத்தியுள்ளனர்.

எதிர்வரும் நாட்களில் மேலும் பல அகதிகளுக்கு அடைக்கலம் மறுக்கப்படலாம் என அவுஸ்திரேலிய குடிவரவு அமைச்சர் கிறிஸ் ஈவன்ஸ் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

"அடைக்கலம் மறுக்கப்பட்ட மக்களைக் கட்டுப்படுத்துவது மிகவும் கடினமானது.

ஆப்கானிஸ்தானின் ஹஸ்ரா என்ற சிறுபான்மை இனத்தவர்களே பெரும்பாலும் ஆர்பாட்டங்களை நடத்தி வருகின்றனர். இவர்களுக்கே அடைக்கலம் மறுக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் நிலைமைகள் சுமூகமடைந்து வருவதனால், அவர்களின் புகலிடக் கோரிக்கைகள் நிராகரிக்கப்படலாம். மேலும் அவர்களை மீண்டும் இலங்கைக்குத் திருப்பி அனுப்பவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது " என்றார்.
மேலும் இங்கே தொடர்க...

நல்லூரில் நட்சத்திர விடுதி : 10ஆம் திகதி இறுதி முடிவு




யாழ். நல்லூரில் ஐந்து நட்சத்திர விடுதி அமைக்கும் பணிகள் தொடர்பில் எதிர்வரும் 10ஆம் திகதி இறுதி முடிவு எடுக்கப்படும். யாழ். பல்கலைக்கழக பேராசிரியர்கள் மற்றும் மாவட்ட உள்ளூர் தலைவர்கள் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்களின் ஆலோசனையின் கீழ் விடுதி தொடர்பிலான இறுதித் தீர்மானம் எடுக்கப்படும் என யாழ் மேயர் யோகேஸ்வரி பற்குணராஜா தெரிவித்துள்ளார்.

பி.எல்.சி வங்கியின் அனுசரணையுடன் 400 மில்லியன் ரூபா செலவில் 80 அறைகள் கொண்ட உல்லாசப் பயணிகளுக்கான நட்சத்திர விடுதி அமைக்கும் பணியில் பல பாகங்களில் இருந்தும் வந்த எதிர்ப்புக்களைத் தொடர்ந்தே இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக மேயர் குறிப்பிட்டார்.

குறிப்பாக 4 விடயங்களை அடிப்படையாகக் கொண்டு ஆட்சேபனை தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒன்று, நல்லூர் கந்தசுவாமி கோயிலுக்கு சமீபமாக நட்சத்திர விடுதியை நிர்மாணிக்க உத்தேசிக்கப்பட்டிருப்பது. யாழ்ப்பாணத்திலுள்ள பெரும்பாலான இந்து தமிழர்கள் இதற்குக் கடும் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.

இரண்டு, நட்சத்திர விடுதி அமைக்கப்படவுள்ள காணி. இது பண்டைய கால தமிழ் மன்னரான சங்கிலியனின் கோட்டை அமைந்திருந்த இடம்.

மூன்று, யாழ்ப்பாணக் குடாநாட்டு மக்களின் அடிப்படை வசதிகள்,பொருளாதாரத் தேவைகள் இன்னமும் பூர்த்தி செய்யப்படாதிருக்கும் நிலையில், 400 கோடி ரூபா செலவில் நட்சத்திர விடுதி அமைப்பது முக்கியமான ஒன்றல்ல என்ற கருத்து.

நாங்உ, பாரிய செலவினத்தில் இந்த நட்சத்திர விடுதி அமைக்கப்படுவதால் யாழ்ப்பாணத்தில் சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதற்கு அது உதவியாக அமையாது என்ற அபிப்பிராயம்.
மேலும் இங்கே தொடர்க...

சிரச ஊடகவியலாளருக்கு ‘கேக்’ ஊட்டிய மேர்வின்

ஊடகத்துறை அமைச்சுப் பொறுப்பை கையேற்ற பிரதியமைச்சர் மேர்வின் சில்வா ஊடகவியலாளர்களுக்கு “கேக் ஊட்டி” மகிழ்வித்தார்.

தகவல் ஊடகத்துறை பதிலமைச்சர் மேர்வின் சில்வா நேற்றுக்காலை அமைச்சில் தமது பொறுப்புக்களை உத்தியோக பூர்வமாகக் கையேற்றார்.

அந் நிகழ்வில் அவர் வெட்டுவதற்காக வைக்கப்பட்டிருந்த “கேக்”கை அவர் ஊடகவியலாளர்களை அழைத்து வெட்ட வைத்ததுடன் அவர்களுக்கு “கேக்” ஊட்டியும் மகிழ்வித்தார்.

கடந்த காலங்களில் சில ஊடக நிறுவனங்களுக்கிடையில் சர்ச்சைகள் ஏற்பட்டன. அத்தகைய கசப்பான சம்பவங்களை மறந்து சகோதரத்துவத்துடன் ஊடகங்கள் செயற்பட வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்திய அமைச்சர் “சிரச” ஊடகவியலாளரைக் குறிப்பிட்டு “கேக்” வெட்ட அழைத்தார். அவ்வாறு வெட்டப்பட்ட “கேக்”கை சிரச ஊடகவியலாளர் அமைச்சருக்கு ஊட்ட அமைச்சரும் அவ்வூடகவியலாளருக்கு திருப்பி ஊட்டினார். அத்துடன் “திவயின” ஊடகவியலாளருக்கும் அமைச்சர் ஊட்டினார்.

இதன் போது ஊடகவியலாளர்கள் கரங்களைத் தட்டி ஆரவாரித்துத் தமது மகிழ்ச்சியை வெளியிட்டமை குறிப்பிடத்தக்கது.
மேலும் இங்கே தொடர்க...

10 ஆயிரம் முன்னாள் புலிகளுக்கு புனர்வாழ்வு அளிப்பதில் முன்னுரிமை




சிறைச்சாலைகளை மறுசீரமைப்பதும் முக்கிய பணி என்கிறார் அமைச்சர் டியூ



புலிகள் இயக்கத்தின் முன்னாள் உறுப்பினர்கள் பத்தாயிரம் பேருக்குப் புனர்வாழ்வு அளிப்பதும் சிறைச்சாலைகளை மறுசீரமைப்பதும் தமது முக்கிய பணியாகுமென்று புனர்வாழ்வு, சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் டியூ குணசேகர தெரிவித்தார். சிறைச்சாலை செயற்பாடுகளில் அரசியல் அழுத்தங்கள், பழிவாங்கல்களுக்கு இடமளிக்கப்போவ தில்லை என்றும் அமைச்சர் கூறினார்.

பொரளையிலுள்ள அமைச்சில் நேற்று (29) கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டதன் பின்னர் அமைச்சர் குணசேகர இந்தக் கருத்துகளைத் தெரிவித்தார்.

அமைச்சர் குணசேகர நேற்றுக் காலை 10. 45 இற்கு சுபவேளையில் கடமைகளைப் பொறுப்பேற்று ஆவணங்களில் கைச்சாத்திட்டார். இந்நிகழ்வுக்குப் பிரதமர் டி. எம். ஜயரத்ன பிரதம அதிதியாகக் கலந்துகொண்டார். பிரதியமைச்சர் விஜித் விஜயமுனி சொய்ஸா மற்றும் நிதிப் பிரதியமைச்சர் சந்திரசிறி கஜதீர, புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம் பிரிகேடியர் ரணசிங்க, சிறைச்சாலைகள் ஆணையாளர் வீ. ஆர். சில்வா, பாராளுமன்றத்தின் முன்னாள் செயலாளர் நாயகம் சாம் விஜேசிங்க, கட்சி முக்கியஸ்தர்கள், அதிகாரிகள் எனப் பெருந்திரளானோர் கலந்துகொண்டனர்.

அமைச்சர் டியூ மேலும் கூறியதாவது,

“நாட்டின் பதில் அரச தலைவராக பிரதமர் விளங்குகின்ற சமயத்தில், அவர் இந்நிகழ்வுக்குப் பிரதம அதிதியாகக் கலந்துகொள்வது பெருமையளிக்கிறது. அவருக்கும் எனக்கும் நான்கு தசாப்தகால உறவு உண்டு. அவர் கண்டியில் கல்வி கற்றபோது வகுப்புகளுக்குச் செல்வதை விடுத்து கம்யூனிஸ்ட் கட்சியின் கூட்டங்களில் பங்கேற்றிருக்கிறார்.

1956 இல் 1970 இல், 1994 இல், 2004 இல், 2010 இல் அரசாங்கத்தை அமைப்பதற்குப் பெரும்பங்காற்றி இருக்கிறார். மிகவும் சிரேஷ்ட அரசியல் தலைவர். அவர் பிரதமராக இருப்பதைவிட பதில் அரச தலைவர் என்பது இப்போதுதான் தெரியும். இது ஒரு புதிய அமைச்சு, இதனைப் பொறுப்பேற்றபோது அதன் பொறுப்புகள் புரியவில்லை. பின்னர்தான் தெரிந்துகொண்டேன். 30 வருடகால யுத்தத்தால் பாதிக்கப்பட்ட தமிழ், சிங்கள, முஸ்லிம் மக்களுக்குப் புனர்வாழ்வு அளிக்கவேண்டும்.

இதில் வடக்கு, கிழக்கு மக்கள் பெரும் எதிர்பார்ப்புடன் உள்ளார்கள். புலிகள் இயக்கத்தின் முன்னாள் உறுப்பினர்கள் 10 ஆயிரம் பேருக்குப் புனர் வாழ்வளித்து அவர்களை சமூகத்தில் உள்வாங்கவேண்டும். சிறைச்சாலைகளை மறுசீரமைப்பதுடன், சிறைக்குச் செல்வோரின் எண்ணிக்கையைக் குறைக்கவேண்டும்.

இதற்குப் பொலிஸ், நீதித்துறையினர் ஒத்துழைப்பு அவசியம். இன்று சிறுவர், முதியோர், பெண்கள் எனப் பல பிரிவினரும் சிறையில் உள்ளனர். இவர்களைக் குறைக்க வேண்டும். நான் நீர்கொழும்பு சிறையில் மூன்று மாதம் இருந்தேன். எமக்கு வெளியில் எந்தத் தொடர்பும் இருக்கவில்லை. விஜேகுமாரதுங்கவும், சந்திரிகாவும் காலை ஆறு மணிக்கே வந்துவிடுவார்கள். எனக்காக சரத் முத்தெட்டுவேகம பாராளுமன்றத்தில் ஒரு மாதம் போராடினார். அதன் பின்னர் தான் வீட்டிலிருந்து எமக்கு உணவு வந்தது.

ஆகவே, சிறைச்சாலைகளில் அரசியல் அழுத்தம், பழிவாங்கல்களுக்கு இடமளிக்கமாட்டேன். சமூகத் தேவைகளின் அடிப்படையில்தான் சிறை வைக்கின்றோம். அவர்களை சிறந்த பிரஜைகளாக்கி மீண்டும் வீடுகளுக்கு அனுப்பவேண்டும். குற்றச் செயல்கள் உருவாக வறுமையும் காரணம்.

சிறைச்சாலை உத்தியோகத்தர்களை சமூகம் ஏற்றுக்கொள்ளும் நிலைக்குக் கொண்டு வருவேன். அவர்களை வெளிநாடுகளுக்கு அனுப்பி பயிற்சியளிக்க வேண்டும். அப்போதுதான் பாதாள உலகத்திற்கும் சிறைக்குமான உறவைத் தடுக்க முடியும். இதுவிடயத்தை உளவியல் நோக்கில் சிந்தித்து செயலாற்ற வேண்டும் என்றார் அமைச்சர்
மேலும் இங்கே தொடர்க...

முள்ளிவாய்க்காலில் மீட்கப்பட்ட சைக்கிள், மோட்டார் சைக்கிள்கள் உரியவரிடம் கையளிப்பு : ஆளுநர்


புதுக்குடியிருப்பு அம்பலவன் பொக்கனை, முள்ளிவாய்க்கால் பகுதிகளில் கைவிடப்பட்ட நிலையில் மீட்கப்பட்ட சுமார் 17 ஆயிரம் மோட்டார் சைக்கிள்கள் மற்றும் ஒரு லட்சம் சைக்கிள்கள் என்பன உரியவர்களிடம் கையளிக்கப்படவுள்ளன.

வன்னியில் இடம்பெற்ற இறுதிக்கட்ட மோதல்களின் போது பொதுமக்கள், புதுக்குடியிருப்பு அம்பலவன் பொக்கனை, முள்ளிவாய்க்கால் மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் கைவிட்டுச் சென்ற மோட்டார் சைக்கிள்கள் சைக்கிள்களே உரியவர்களிடம் படிப்படியாக கையளிக்கப்படவுள்ளதாக வடக்கு மாகாண ஆளுநர் ஜி.ஏ. சந்திரசிறி தெரிவித்துள்ளார்.

எனவே மேற்படி போர் அனர்த்தங்களின்போது சைக்கிள் மற்றும் மோட்டார் சைக்கிள்களை கைவிட்டுச் சென்றவர்கள், பொலிஸ் அறிக்கையின் போட்டோ பிரதி இரண்டு, அடையாள அட்டை 2 பிரதி, வாகனங்களின் உரிமைச் சான்றிதழ் இரு பிரதி மற்றும் ஆவணங்களுடன் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி கேதீஸ்வரனிடம் தொடர்பு கொண்டு எதிர்வரும் 5ஆம் திகதிக்கு முன்னர் பெற்றுக் கொள்ளலாம் என வடக்கு மாகாண ஆளுநர் ஜி.ஏ. சந்திரசிறி தெரிவித்துள்ளார்.

முதற்கட்டமாக 5000 மோட்டார் சைக்கிள்களும் 7 ஆயிரம் சைக்கிள்களும் இவ்வாறு வழங்கப்படவுள்ளன.
மேலும் இங்கே தொடர்க...

நான்கு கோரிக்கைகளை முன்வைத்து எச்சரிக்கை : யாழில் துண்டுப்பிரசுரம்


வர்த்தக நிலையங்களில் சிங்கள பெயர்ப்பலகை எழுதுதல், சுற்றுலாப் பயணிகளுக்கு வாடகை வீடு கொடுத்தல், சிங்களவர்களுக்கு வீடு,காணி விற்றல், தனியார் சிற்றூர்திகளில் சிங்கள பாடல்களை ஒலிபரப்புதல் ஆகிய நான்கு விடயங்களுக்கும் தீர்வு காணுமாறு கோரி யாழில் துண்டுப்பிரசுரம் விநியோகிக்கப்பட்டுள்ளது.

தமிழ்ப் பற்றுள்ள தேசிய விடுதலை இயக்கம் என்ற அமைப்பு சார்பில் யாழ்ப்பாணத்தில் இந்தத் துண்டுப்பிரசுரம் வழங்கப்பட்டுள்ளது.

அதில்,

‘இன்று தமிழ் மக்களாகிய நாம் மிகப்பெரிய ஆபத்திற்குள் சிக்கியுள்ளோம். எமது மண்ணை ஆக்கிரமித்து நிற்கும் சிங்கள பேரினவாத அரசும் இராணுவமும் எமது இருப்பை அழித்துவிட பல உத்திகளை வகுத்துள்ளது. இந்த உத்திகளில் சிலவே தென்னிலங்கையில் இருந்து அதிகளவிலான சிங்களவர்கள் சுற்றுலாப் பயணிகள் எனும் போர்வையில் எமது மண்ணை ஆக்கிரமித்து தமிழ் மக்களாகிய எம்மை சிறுபான்மையினராக்கும் முயற்சிகளில் இறங்கியுள்ளனர்.

இந்த நடவடிக்கைகள் ஒருவார காலத்திற்குள் முடிவுக்கு வருதல் வேண்டும். இல்லையேல் நீங்கள் கடும் விளைவுகளை எதிர்நோக்கவேண்டி ஏற்படும்.

அதியுச்ச தண்டனைகளையும் பெறுவீர்கள்.

எமது சக்தியான விடுதலைப் புலிகளின் இயங்குநிலை ஸ்தம்பிதமடைந்துள்ள இதேவேளை எம்முடன் ஒத்துழைத்து சிங்களமயமாக்கலில் எமது தாய்மண்ணையும் தாய்மொழியையும் எதிர்கால சந்ததியையும் காப்போம்’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் இங்கே தொடர்க...

சுவிஸில் புளொட்டின் மேதின ஊர்வலம்.. (அறிவித்தல்)

சுவிஸில் உள்ள இடதுசாரிகள் மற்றும் முற்போக்கு முன்னணிகளுடன் ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி (ஈபிஆர்எல்எப் -பத்மநாபா) அமைப்புடன் இணைந்து தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) அமைப்பால் சுவிஸில் நாளைமறுதினம் சனிக்கிழமை காலை 9.00மணிக்கு சூரிச் கெல்வெதியா பிளாத்ஸ் எனுமிடத்தில் ஆரம்பமாக உள்ள மேதின ஊர்வலத்தில் கழக தோழர்கள் ஆதரவாளர்களையும் பொதுமக்களையும் கலந்து சிறப்பிக்குமாறு தோழமையுடன் கேட்டுக் கொள்கிறோம்.
தொடர்புகட்கு.. 076.3681546 079.6249004
மேலும் இங்கே தொடர்க...