27 டிசம்பர், 2009

பயங்கரவாதம் ஒழிக்கப்பட்ட இலங்கையை உலகின் அதி சிறந்த நாடாக மாற்றுவேன்
மினுவாங்கொடையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ





பயங்கரவாதம் ஒழிக்கப்பட்ட இலங் கையை உலகின் அதிசிறந்த நாடாக்குவதே தமது ஒரே நோக்கம் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்று (27) மினுவாங்கொடை நகர சபை கூட்டத்தில் கூடியிருந்த ஒரு இலட்சத்துக்கு மேற்பட்ட மக்கள் கூட்டத்தினரிடையே உரையாற்றிய போது கூறினார்.
தொடர்ந்தும் பேசிய அவர் மேலும் கூறியதாவது:

தெளிவான மற்றும் உறுதியான நோக்கத்தை கொண்டுள்ள தம்மீது சேறு பூசும் பிரசாரங்களை செய்ய எந்த நியாயமும் இல்லை.

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தமது வெற்றியை உறுதிப்படுத்தும் நோக்கில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மேற்கொண்டுவரும் பிரசாரக் கூட்டத்தொடரில் இது இரண்டாவது கூட்டமாகும்.

ஜனாதிபதி தேர்தலை அரசியல் சேறு பூசும் நடவடிக்கையாகவே எதிர்க்கட்சியினர் மாற்றியுள்ளனர். அவர்கள் அரசியல் தரிசனம்இ கொள்கைஇ பொருளாதார அல்லது அபிவிருத்தி நோக்கு ஆகிய வற்றைப் பற்றி ஒரு வார்த்தையேனும் பேசுவதில்லை.

மஹிந்த சிந்தனையில் 95 சதவீதத்தை நிறைவேற்றியுள்ள தான் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை ஒழிக்கவில்லை என்பதைப்பற்றி மட்டுமே பேசுகின்றனர்.

ஆனால் மஹிந்த சிந்தனையை நிறைவேற்ற மக்கள் ஆணை வழங்கிய ஆறு வருடங்களில் இன்னும் இரண்டு வருடங்கள் மிகுதியாக உள்ளதை அவர்கள் மறந்துவிடக்கூடாது என்பதை ஜனாதிபதி சுட்டிக்காட்டினார். நிறைவேற்று ஜனாதிபதி முறையை ஒழிப்பதற்கு ஜனாதிபதிக்கு அதிகாரம் இல்லை. அதற்கு பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெற்றுக்கொள்ள மக்கள் முன் செல்ல வேண்டும் என்று ஜனாதிபதி மேலும் கூறினார்.

இதனை செய்வதற்கு எதிர்க்கட்சியினர் தனக்கு எந்த ஒத்துழைப்பும் வழங்கவில்லை. எனினும் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் மட்டுமன்றி பாராளுமன்றத்திலும் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை மக்கள் தமக்கு பெற்றுத்தருவார்கள் என்று நம்புவதாகவும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ குறிப்பிட்டார்.

நாற்பது வருட கால அரசியல் அனுபவம் உள்ள நாம் நாற்பது நாட்கள் அனுபவத்தை மட்டுமே பெற்றுள்ள அறியாக் குழந்தையுடன் போட்டியிட வேண்டியுள்ளது. எனினும் அரசியல் அனுபவத்தின் இடைவெளிக்கு சமமான அதிகப்படி வாக்குகளால் தான் வெற்றி பெறப்போவதாகவும் கூறினார்.

எதிர்க்கட்சியினரின் அரசியல் நோக்கம் ராஜபக்ஷ குடும்பத்தினர் மீதான பழி வாங்கும் நோக்கமே யாகும்.

ஆனால் பொய்க்கு ஆயுள்குறைவுஇ இன்று இங்கு கூடியிருக்கும் இல ட்சக்கணக்கான மக்கள் பொய்க்கும் சேறு பூசுவதற்கும் குறைந்த ஆயுளே உள்ளது என்பதை நிரூபித்துக்காட் டப் போகிறார்கள் என்று குறிப்பிட் டார்.

இக் கூட்டத்தில் உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினரும் தேசிய சுதந்திர முன்னணியின் தலைவருமான விமல் வீரவன்ச பேசும்போதுஇ

ஊழலையும் விரயத்தையும் ஒழிக்கப்போவதாக கூறும் பொன்சேகா யுத்தம் முடிவுற்றபோது பாதுகாப்பு அமைச்சுக்குத் தெரியாமலே ஆயுதங்களை கொண்டு வருவதற்கு முயற்சித்ததாக கூறினார்.

அந்த ஆயுதக் கப்பலை கொண்டுவந்தவர் சரத் பொன்சேகா. ஆனால் அதனை கோதாபய ராஜபக்ஷவின் பேரில் போடுவதற்கு மக்கள் விடுதலை முன்னணியும் ஐக்கிய தேசிய கட்சியும் சேநு பூசும் பிரசாரங்களை மேற்கொள்வதாக அவர் மேலும் கூறினார்.

அமைச்சர்கள் மைத்திரிபால சிரிசேனஇ தினேஷ் குணவர்தனஇ பாட்டலி சம்பிக்க ரணவகஇ மேர்வின் சில்வா ஆகியோரும் இங்கு உரையாற்றினர்.



புலிகளுடன் உடன்படிக்கை செய்து முஸ்லிம்களை ஏமாற்றியவர் ஹக்கீம்
முஸ்லிம்கள் அவரை ஆதரிக்கக் கூடாது - பசில்


அனைத்து அரசாங்கங்களிலும் அமைச்சராக விருந்து பிரபாகரனு டன் உண்டு குடித்து உறவாடி சமாதானப் பேச்சுவார்த்தையிலும் ஈடுபட்ட ரவூப் ஹக்கீமிற்கு வட க்கு முஸ்லிம்களை மீள்குடியேற்ற முடியாமற் போனதென ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் பசில் ராஜபக்ஷ எம்.பி. தெரிவித்தார்.

புத்தளம் ஆலங்குடாவில் நேற்று நடைபெற்ற அ. இ.மு.கா. கட்சியின் மாநாட்டில் சிறப்பதிதி யாகக் கலந்துகொண்டு உரையாற் றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் தமதுரையில் மேலும் தெரிவிக்கையில்;

புலிகளுடன் புரிந்துணர்வு உடன்படிக்கையை மேற்கொண்டு முஸ்லிம் மக்களை ஏமாற்றிய மு. கா. தலைவருக்கு ஒருபோதும் முஸ்லிம்கள் ஆதரவளிக்க கூடாது. உங்கள் எதிர்காலத்தை சபீட்சமயமாக்க நடவடிக்கை களை மேற் கொள்ளும் ஜனாதிபதிக்கு உங்கள் பூரண ஆதரவினை வழங்குங்கள்
மேலும் இங்கே தொடர்க...



இராணுவ ஆட்சியை நிறுவ முயலும் பொன்சேகா முஸ்லிம்களை அடிமைகளாகவே நடாத்துவார்





அ. இ. மு. கா வன்னி மாவட்ட மாநாட்டில் ரிஷாட்

நான்கு வருட நல்லாட்சி மூலம் முஸ்லிம்களின் எதிர்பார்ப்பினை உணர்ந்து செயற்பட்டவர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவே.

அவரை மீண்டும் ஜனாதியாக்க முஸ்லிம் சமூகம் பூரண ஆதரவினை வழங்குவது உறுதியென அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.

தமது சுய நலத்துக்காக தேர்தலுக்காக முஸ்லிம்களை வழிநடத்த முயலும் ரவூப் ஹக்கீம் தொடர்ந்து அமைச்சராக இருந்தும் முஸ்லிம் சமூகத்துக்காக ஒரு பாடசாலையையோ அல்லது ஒரு மலசல கூடத்தைத் தானும் அமைத்துக் கொடுத்த தில்லையெனவும் அமைச்சர் தெரிவித்தார்.

இராணுவ ஆட்சியொன்றை அமைத்து நாட்டைக் குட்டிசுவராக்க முயலும் சரத் பொன்சேகா முஸ்லிம்களை அடிமைச் சூழலிலேயே வழிநடத்துவார். அதற்கு எவரும் துணைபோகக் கூடாதெனவும் அமைச்சர் தெரிவித்தார்.

அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸின் வட மாகாணத்திற்கான வருடாந்த மாநாடு புத்தளம் ஆலங்குடாவில் அமைச்சர் ரிசாத் பதியுதீன் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் மேலும் தெரிவிக்கையில்இ ரவூப் ஹக்கீம்இ மனோ கணேசன்இ மங்கள சமரவீர போன்றோர் தற்போது பொன்சேகாவிடம் சோரம் போயுள்ளனர்.

தமது பதவிக்காலத்தை மேலும் நீடிப்பதற்காகப் போராடிய சரத் பொன்சேகா ஆறு மாதத்தில் நிறைவேற்று ஜனாதிபதிப் பதவியை விட்டுக்கொடுப்பதென்று கூறுவது எத்தகைய பொய். அவருக்குப் போய் ரவூப் ஹக்கீம் ஆதரவு வழங்குவது விந்தையிலும் விந்தை


அமெரிக்க பிரஜா உரிமை பெற்றுள்ள பொன்சேகா எவ்வாறு இலங்கை ஜனாதிபதியாக வர முடியும்?












அமெரிக்க
பிரஜா உரிமை பெற்றுள்ள சரத் பொன்சேகா எவ்வாறு இலங்கை ஜனாதிபதியாக வர முடியும் என்று ஐக்கிய தேசிய மாற்று முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சரத் கோங்கஹகே நேற்று கேள்வி எழுப்பினார்.

நான் இரட்டை பிரஜா உரிமை கொண்டவரல்ல என்று சரத் பொன்சேகா இதுவரை மறுக்கவில்லை. எனவே இதற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

இதற்கான ஆலோசனைகள் மேற் கொள்ளப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

ஜனாதிபதி வேட்பாளரான சரத் கோங்கஹகே ஏற்பாடு செய்திருந்த முதலாவது ஊடகவியலாளர் மாநாடு நேற்றுக் காலை இலங்கை மன்றக் கல்லூரியில் இடம்பெற்றது. அவர் இங்கு மேலும் உரையாற்றுகையில்:-

கடந்த 30 வருட காலமாக மிகவும் பரபரப்புடனும்இ சூடுபிடித்தும் காணப்பட்ட எமது நாட்டில் தற்பொழுது தான் அமைதியான சூழல் காணப்படுகின்றது.

மிகவும் கஷ்டத்திற்கு மத்தியில் உருவாக்கப்பட்ட இந்தச் சூழலை மீண்டும் குழப்புவதற்கு பலர் முயற்சிக் கின்றனர்.

சரத் பொன்சேகாவை ஜனாதிபதியாக்கி இந்த நாட்டில் இராணுவ நிர்வாகத்தை ஏற்படுத்த பலர் முயற்சிக்கின்றனர். இதனை அனுமதிக்க முடியாது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இந்த நாட்டிற்காக பாரிய சேவையாற்றியவர். நான் வெற்றி பெற முடியாது. எனினும் முன்றாவது இடத்திற்கு வர முடியும்.

ஐக்கிய தேசிய கட்சியோ அதன் சின்னமோ இம்முறை வாக்குச் சீட்டில் இல்லை. ஐ. தே. க. மக்கள் மனதிலிருந்து விடுபட்டுள்ளது. குரல் கொடுக்க இல் லாதவர்களுக்கு குரல் கொடுப்பதற்காகவே இன்று நான் களத்தில் குதித்துள்ளேன். இந்த மக்களை எனக்கு வாக்களிக்குமாறு கேட்டுக் கொள்கின்றேன்.

தற்பொழுது படை வீரர்கள் முன்னெடுத்த நடவடிக்கைகளை கொச்சைப்படுத்தவும்இ சர்வதேச நீதிமன்றில் நிறுத்தவும் பலர் முயற்சிக்கின்றனர்.

சரத் பொன்சேகா சன்டே லீடர் பத் திரிகையில் ஒரு விடயத்தை கூறிவிட்டு அதற்கு அடுத்த வார பத்திரிகைகளில் வேறு விடயத்தை கூறுகிறார்.

வெளிநாடுகளின் பின்னணியிலேயே இவர் செயற்படுகின்றார். தனது தனிப்பட்ட குரோதத்தை வெளிக்காண்பிப்பதற்காக பல்வேறு பொய்யான தகவல்களை சரத் பொன்சேகா வெளியிட்டு வருகின்றமை மிகவும் கவலைக்குரிய விடயமாகும்.

தற்பொழுது வைராக்கியமான அரசியல் நடவடிக்கை முன்னெடுக்கப்படுகின்றது. இதனை நடுநிலைப்படுத்துவதற்காக சகல மதத் தலைவர்களும் முன்வர வேண்டும் என நான் கேட்டுக் கொள்கின்றேன்.

ஆயுதங்கள் கொள்வனவு செய்யவில்லை என்று இடத்திலும்இ அவ்வாறு வந்த ஆயுதத்தை நானே திருப்பி அனுப்பினேன் என்றும் பாதுகாப்புச் செயலாளர் தலையிட்டு அதனை திருப்பி அனுப்பினார் என்றும் இன்னுமொரு இடத்திலும் சரத் பொன்சேகா கூறியுள்ளார்.

ஆனால் பாதுகாப்பு படைகளின் பிரதம அதிதியாக இருந்தவாறே அவரே கையொப்பமிட்ட கடிதம் எம்மிடம் உள்ளது. எனவே சரத் பொன்சேகா முன்னுக்கு பின் முரணாக கூறுவது தெளிவாக விளங்குகின்றது என்றார்.

சரத் பொன்சேகா தோல்வி பெறுவது உறுதி. எனவே தான் அமெரிக்க பிரஜா உரிமையை இதுவரை ரத்துச் செய்யாமல் வைத்துள்ளார். ஏனெனில் தோல்விய டைந்தவுடன் மீண்டும் அமெரிக்கா செய் வதே அவரது நோக்கமாகும் என்றும் குறிப்பிட்டார்



தமிழ்த் தேசியக்; கூட்டமைப்பு எம்.பி சிவாஜிலிங்கம் இன்று நாடு திரும்பினார்-


இந்தியாவிற்குள் நுழைவதற்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் திருச்சி விமான நிலையத்திலிருந்து திருப்பியனுப்பப்பட்ட தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் இன்றுகாலையில் நாடு திரும்பியுள்ளார். கடந்த ஒருவாரகாலம் லண்டனில் தங்கியிருந்த அவர் டுபாய் ஊடாக இந்தியாவிற்கான பயணத்தை நேற்று மேற்கொண்டிருந்த போதிலும் இந்தியாவிற்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டு இந்திய குடிவரவு குடியகல்வு திணைக்கள அதிகாரிகளினால் நேற்று டுபாய்க்கே திருப்பி அனுப்பப்பட்டிருந்தார். டுபாயிலிருந்து இன்றுகாலை அவர் கொழும்பை வந்தடைந்துள்ளார். தஞ்சாவூரில் நேற்றுமுதல் இடம்பெறுகின்ற ஈழத்தமிழர் வாழ்வுரிமை மாநாட்டில் பங்கேற்கவே அவர் நேற்று திருச்சி சென்றிருந்ததாக கூறப்பட்டுள்ளது.

மெனிக்பாம் முகாம் விரைவில் மூடப்படும் -

-மனித உரிமைகள் அமைச்சர் மஹிந்த சமரசிங்க- யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்த மக்கள் தங்கவைக்கப்பட்டுள்ள மெனிக்பாம் முகாம் விரைவில் மூடப்படும் என மனித உரிமைகள் அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார். எதிர்வரும் ஜனவரி 31ம் திகதிக்கு முன் முகாமில் தங்கியுள்ள சகல மக்களையும் தமது சொந்த இடங்களில் மீள்குடியேற்றிவிட முடியும் என அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார். அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட 180நாள் காலக் கெடுவிற்குள் மக்களை மீள்குடியேற்றுவதற்கு தீவிர முயற்சி எடுக்கப்பட்டு வருவதாவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். இடம்பெயர் முகாம்களில் தற்போது 80ஆயிரம் மக்கள் மட்டுமே தங்கியிருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். நிலக்கண்ணிவெடி அகற்றும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், வாக்குறுதி அளிக்கப்பட்ட காலத்திற்குள் மக்களை மீள்குடியேற்ற முடியும் எனவும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார். சுதந்திர இடம்நகர்விற்கான சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ள போதிலும் மக்கள் குறுகிய காலத்திற்குள் முகாம்களுக்கு திரும்புவதன் மூலம் முகாம்களின் நிலைமை சிறந்த வகையில் காணப்படுகின்றமை உறுதிப்படுத்தப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

தொடருந்து பருவச் சீட்டுக்களைப் பயன்படுத்தி பேருந்துகளில் செல்வதற்கு ஏற்பாடு-

தொடருந்து பருவச் சீட்டுக்களைப் பயன்படுத்தி பேருந்துகளில் செல்வதற்கான வசதியினை ஏற்படுத்துவதற்கு ரயில்வே திணைக்களம் திட்டமிட்டுள்ளது. உத்தேசத் திட்டம் அடுத்த வருடத்திலிருந்து அமுல்படுத்தப்படவுள்ளதாக தொடருந்துச் சேவைகள் வணிக அத்தியட்சகர் விஜே சமரசிங்க தெரிவித்துள்ளார். தொடருந்துகளில் செல்லும் பயணிகள் சில வேளைகளில் தமது பயண முடிவுவரை தொடருந்திலேயே செல்லமுடியாத நிலை ஏற்படும்போது இந்த திட்டத்தின்மூலம் அவர்கள் பேருந்துகளில் பயணிக்க முடியுமென அவர் தெரிவித்துள்ளார். தொடருந்து தடம்புரண்டாலோ அல்லது விபத்துகள் இடம்பெற்றாலோ பயணிகள் தமது தொடருந்து பருவச் சீட்டைக் கொண்டு இலங்கை போக்குவரத்து சபை பேருந்துகளில் செல்வதற்கு ஏதுவாக இத்திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. அதேபோன்று பேருந்து ஊழியர்களின் பணிப்புறக்கணிப்பு போன்ற சந்தர்ப்பங்களில் பேருந்து பருவச்சீட்டுக்களைப் பயன்படுத்தி தொடருந்துகளில் பயணிப்பதற்கான திட்டமொன்றும் எதிர்காலத்தில் அறிமுகப்படுத்தப்படவுள்ளது என்றும் விஜே சமரசிங்க மேலும் தெரிவித்துள்ளார்.

இந்தோனேசியா மெராக் துறைமுகத்தில் உள்ள இலங்கையர்களில் ஒருவர் கடத்தல்-

இந்தோனேசியாவின் மெராக் துறைமுகத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கை அகதிகளில் ஒருவர் குடிவரவு அதிகாரிகளால் கடத்திச்செல்லப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. வைத்தியசாலையொன்றில் வைத்து நேற்று குறித்தநபர் கடத்திச் செல்லப்பட்டுள்ளதாக இந்தோனேசியத் தகவல்கள் தெரிவிக்கின்றன. 30வயதுடைய ஜீ.சரவணன் என்ற இளைஞனே கடத்தப்பட்டுள்ளார். குறித்த கப்பலில் தங்கியிருந்த அகதியொருவர் கடந்த 23ம்திகதி கடுமையான சுகயீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு துணையாக வைத்தியசாலையில் இருந்தவரே கடத்தப்பட்டுள்ளார். மேலும் நேற்று வைத்தியசாலையில் இந்தோனேசிய குடிவரவு குடியகல்வு அதிகாரிகள் உள்ளிட்ட சிலர் சோதனைகளை நடத்தியதாக கூறப்படுகிறது. கடத்திச் செல்லப்பட்டவரை நேற்றிரவு 8மணியளவில் கப்பலுக்கு அழைத்துவர நடவடிக்கை எடுப்பதாக தெரிவிக்கப்பட்டபோதிலும் இதுவரை கப்பலுக்கு அவர் அழைத்துவரப்படவில்லை என்று கூறப்படுகிறது.

சுனாமியின்போது மாத்தறை சிறையில் இருந்து காணா நிலையில் வேறு பெயரில் இருந்தவர் கைது

- 2004ம் ஆண்டு சுனாமி அனர்த்தத்தின்போது மாத்தறை சிறைச்சாலையிலிருந்து காணாமற் போனதாக சந்தேகிக்கப்படும் கைதியொருவரை தற்போது பொலீசார் கைதுசெய்துள்ளனர். குருநாகல் மற்றும் கொழும்பு ஆகிய பகுதிகளில் ஆங்கிலம் மற்றும் யோகா ஆகியவற்றைப் பயிற்றுவித்து வந்த நிலையிலேயே அவர் இன்று கைதுசெய்யப்பட்டுள்ளார். போலியான பெயர்கொண்டு போலியான அடையாள அட்டையுடன் கைதுசெய்யப்பட்டுள்ள நபர் வாகனக் கொள்ளையொன்றில் குற்றவாளியாகக் கருதப்பட்டு மாத்தறை சிறைச்சாலையில் தண்டனை அனுபவித்து வந்துள்ளார். 2004ம் ஆண்டு டிசம்பர் 26ம் திகதி ஏற்பட்ட சுனாமி அனர்த்தத்தின்போது மாத்தறை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த கைதிகள் சிலரும் உயிரிழந்திருந்தனர். இவ்வாறு உயிரிழந்தவர்களின் பட்டியலில் கைதுசெய்யப்பட்டுள்ள நபரின் பெயரும் உள்ளடக்கப்பட்டுள்ளதாக பொலீஸ் ஊடகப்பேச்சாளர் சிரேஸ்ட பொலீஸ் அத்தியட்சகர் ஐ.எம்.கருணாரத்ன தெரிவித்துள்ளார்.



மேலும் இங்கே தொடர்க...
அமெரிக்காவில் அல் காய்தா பயங்கரவாதி கைது: வெடிமருந்து மூலம் நடுவானில் விமானத்தை தகர்க்க சதி




வெடி பொருள் கொண்டு தகர்க்க முயன்ற அமெரிக்க விமானம். டெட்ராய்ட் விமான நிலையத்தில் தரையிறங்கிய பின்னர் அதை சோதனையிட செல்லும் போலீஸôர்.
வாஷிங்டன், டிச. 26: அமெரிக்க விமானத்தை வெடிபொருள் வைத்து நடுவானில் தகர்க்க முயன்ற அல் காய்தா பயங்கரவாதியை பயணிகள் மடக்கிப் பிடித்தனர்.

இந்த விமானம் சனிக்கிழமை நெதர்லாந்து தலைநகர் ஆம்ஸ்டர்டம் நகரிலிருந்து 278 பயணிகளுடன் அமெரிக்காவில் உள்ள டெட்ராய்ட் நகருக்கு சென்று கொண்டிருந்தபோது இந்த சம்பவம் நடந்தது.

கிறிஸ்துமஸ் தினத்தில் அமெரிக்க மக்களுக்கு துயரத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த சதி தீட்டப்பட்டிருக்கலாம் என்றும் ஆனால் அதிர்ஷ்டவசமாக பயங்கரவாதி மடக்கிப் பிடிக்கப்பட்டான் என்றும் போலீஸôர் தெரிவித்தனர்.

பிடிபட்ட அல் காய்தா பயங்கரவாதி உமர் பாரூக் அப்துல் முதாலாப் நைஜீரியாவைச் சேர்ந்தவர். லண்டனில் பொறியியல் படிப்பு படித்து வருகிறார்.

நார்த்வெஸ்ட் ஏர்லைன்ஸ் விமானம் வெள்ளிக்கிழமை இரவு ஆமஸ்டர்டம் நகரிலிருந்து அமெரிக்காவில் உள்ள டெட்ராய்ட் நகருக்குப் புறப்பட்டது. விமானம் டெட்ராய்ட் நகரில் தரையிறங்குவதற்கு 25 நிமிடங்களுக்கு முன்னர், ஒரு இருக்கையில் இருந்து பட்டாசு வெடித்தது போன்ற சத்தத்துடன் புகை வந்தது. அருகில் இருந்த பயணிகள் பீதி அடைந்து விமான பணியாளர்களுக்கு தகவல் கொடுத்தனர். அந்த இருக்கையில் இருந்த இளைஞர், தான் வைத்திருந்த வெடி மருந்துக்கு நெருப்புவைக்க முயன்றது தெரியவந்தது. அருகில் இருந்த பயணிகளும் விமானப் பயணியாளர்களும் அவரை மடக்கிப் பிடித்து நெருப்பை அணைத்தனர்.

வெடி மருந்தை வெடிக்க வைப்பதற்காக அவன் வைத்திருந்த கருவி குறிப்பிட்ட நேரத்தில் சரியாக வேலை செய்யாததால் பெரும் நாசம் தவிர்க்கப்பட்டது. இருப்பினும் நெருப்பு காரணமாக அந்த பயங்கரவாத இளைஞனும் அருகில் இருந்த 2 பயணிகளுக்கும் சிறிது காயம் ஏற்பட்டது.

விமான ஓட்டி அந்த நபரைப் பிடித்து விமானத்தின் முன்பகுதிக்கு கொண்டு சென்றார். பின்னர் விமானம் டெட்ராய்ட் நகரில் தரையிறங்கிய உடன் தனியாக நிறுத்தப்பட்டது. விமானத்தை போலீஸôர் சுற்றி வளைத்தனர். பின்னர் வெடிகுண்டு ஏதாவது உள்ளதா என்று சோதனை செய்தனர். அந்த பயங்கரவாத இளைஞன் கைது செய்யப்பட்டான்.÷

அவன் வைத்திருந்த வெடிமருந்து திரவமாகவும் திடப் பொருளும் கலந்ததாக இருந்தது. அதை வெடிக்க வைக்கும் முயற்சி தோல்வியடைந்ததால் பலர் உயிர் தப்பினர் என்று அமெரிக்க புலனாய்வு அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

அந்த இளைஞன் தனது காலில் வெடி மருந்தை மறைத்து வைத்திருந்தான். ஒரு ஊசி மூலம் அதை ரசாயனத்துடன் கலந்து வெடிக்க வைக்க முயன்றுள்ளான்.

பிடிபட்ட பயங்கரவாதிக்கு ஏற்பட்ட தீ காயம் காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அமெரிக்க புலனாய்வு அதிகாரிகள் மருத்துவமனையிலேயே விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த விமானம் நைஜீரியாவிலிருந்து ஆம்ஸ்டர்டம் நகரில் தரையிறங்கி பின்னர் அங்கிருந்து அமெரிக்கா புறப்பட்டதாக தெரிகிறது.

அல் காய்தா பயங்கரவாதி அமர்ந்திருந்த இருக்கைக்கு 3 வரிசைக்கு முன்பு அமர்ந்திருந்த சையத் ஜாப்ரி இதுகுறித்து கூறும்போது, பட்டாசு வெடிப்பது போன்று சத்தம் வந்தது. நெருப்பு புகை வந்து திரும்பியபோது அவனை பலர் மடக்கி பிடித்துக் கொண்டிருந்தனர் என்றார்.

இதற்கிடையே பிடிபட்ட பயங்கரவாதி லண்டனில் பொறியியல் படிப்பு படித்து வருவதாக தெரிய வந்துள்ளதால் லண்டன் போலீஸôர் அது குறித்து விசாரணையை தொடங்கி உள்ளனர்.

கடந்த 2001-ம் ஆண்டு செப்டம்பர் 11-ம் தேதி அமெரிக்காவில் சர்வதேச வர்த்தக மையம் மீது விமானத்தை மோதி அல் காய்தா தீவிரவாதிகள் தாக்குல் நடத்தினர். இதில் ஏராளமானோர் கொல்லப்பட்டனர். இந்த பயங்கர

தாக்குதலுக்குப் பின் அந்த நாட்டில் பாதுகாப்பு பல மடங்கு பலப்படுத்தப்பட்டுள்ளது. அமெரிக்கா செல்லும் எல்லா விமானங்களிலும் பலத்த சோதனை மேற்கொள்ளப்படுகிறது. இருப்பினும் நைஜீரியா இளைஞர் வெடி மருந்து எடுத்துச் சென்றதை கண்டுபிடிக்க முடியவில்லை
மேலும் இங்கே தொடர்க...
சேதமடைந்த வட பகுதி வைத்தியசாலைகள்
சகல வசதிகளுடனும் மீளத் திறப்பு










புலிகள் இயக்கத்தினால் சேதமாக்கப்பட்ட கிளிநொச்சி பிரதான ஆஸ்பத்திரி அடங்கலான கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் உள்ள பல பிரதான ஆஸ்பத்திரிகள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன. இவற்றுக்குத் தேவையான மருத்துவர்கள் அடங்கலான ஆளணி மற்றும் வசதிகள் வழங்கப்பட்டுள்ளதாக வடமாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் சந்ரசிறி தெரிவித்தார்.

100 படுக்கையறை வசதிகளுடன் கிளிநொச்சி வைத்தியசாலை ஆரம்பிக்கப்பட்டுள்ளதோடு எக்ஸ்ரே வசதி, இரத்த வங்கி வசதி என்பன வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

முழங்காவில் ஆதார வைத்தியசாலையும் மீண்டும் இயங்கத் தொடங்கியுள்ளதோடு இங்கு 03 மருத்துவர்கள் உட்பட பணியாளர்கள் சேவையாற்றி வருகின்றனர்.

முல்லைத்தவு வைத்தியசாலையும் மீண்டும் இயங்கத் துவங்கியுள்ளதோடு வைத்தியசாலைக்குத் தேவையான மருத்துவ அதிகாரிகள் மற்றும் பணியாளர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். 04 அம்பிய+லன்ஸ் வண்டிகளும் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.

மீள்குடியேற்றப் பணிகளுடன் இணைந்ததாக சேதமாக்கப்பட்ட வைத்தியசாவைகள் துரிதமாகப் புனரமைக்கப்பட்டு மக்கள் நலனுக்காக திறக்கப்பட்டு வருகின்றது. மோதல்கள் இடம்பெற்றபோது புலிகள் பல வைத்தியசாலைகளை தமது கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருந்திருந்தது தெரிந்ததே.


நீண்டகால குடிநீர்ப் பிரச்சினைக்குத் தீர்வு

மலையகத்தின் நீண்டகால பிரச்சினையாக உள்ள குடிநீர் திட்டம் இதுவரை சீராக நடைபெறாமல் இருந்தது. இதற்குத் தீர்வாக 2003 ஆம் ஆண்டு முன்னைநாள் வீடமைப்பு, நிர்மாணத்தறை அமைச்சராக இருந்த சௌயமியமூர்த்தி தொண்டமான அவர்களால் அப்போது 03 குடிநீர் அபிவிருத்தித் திட்டங்கள் முன்வைக்கப்பட்டன.

மஹிந்த சிந்தனையின் மூலம் மேற்குறிப்பிட்ட 03 அபிவிருத்தித் திட்டங்கள் இப்பொழுது அமுலாக்கப்படுகின்றது. குறிப்பாக மலையகத்திலுள்ள கினிகத்தேனை, ஹட்டன், மற்றும் மஸ்கெலியா ஆகிய நகரம் மற்றும் சுற்றுப் பிரதேச மக்கள் குடிநீருக்கு மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகியிருந்தனர்.

அம்பகமுவ பிரதேச சபைக்குட்பட்ட பிரதேசங்களினூடாக ஹட்டன் நகர சபையும் சேர்ந்து இன்று நீர்ப்பாசனத்துறை அமைச்சர் அத்தாவுல்லா அவர்களால் மேற்குறிப்பிட்ட 03 அபிவிருத்தி திட்டங்கள் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது. இவ்வைபவத்தில் இளைஞர் வலுவ+ட்டல் அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான், பிரதியமைச்சர்களான முத்து சிவலிங்கம், ஜெகதீசன் மற்றும் ஹட்டன்-டிக்கோயா நகர சபைத் தலைவர் நந்தகுமார், பிரதேச சபையின் செயலாளர் நகுலேஸ்வரன் மற்றும் மாகாண சபை உறுப்பினர்கள் கலந்து சிறப்பித்தார்கள். ஹட்டன் நகரம் மற்றும் சுற்றுவட்டாரத்திற்கு குடிநீர் வழங்காததையடுத்து நீர் விநியோகம் செய்யவும், கினிகத்தேனை நகரம் மற்றும் சுற்றுப்புற மக்கள் நலன்கருதி லொனொக்கில் இருந்து நீரை விநியோகம் செய்யவும் மஸ்கெலியாவிற்கு புரொன்ஸ்விக் இலிருந்து நீரை விநியோகம் செய்யவும் அபிவிருத்தித் திட்டமாக அமைகின்றது.

நீண்ட நாட்களாக மலையத்தில் நிலவிவந்த குடிநீர்ப் பிரச்சினை இந்த மஹிந்த சிந்தனை அபிவிருத்தித் திட்டம் மூலம் தீர்வு அடைய சாத்தியமாயிற்று
மேலும் இங்கே தொடர்க...
மாத்தயாவின் பெயரை பிரபாகரன் உச்சரித்ததுமே தனக்கு ஆபத்து என்பதைகருணா உணர்ந்து கொண்டார்''





அலி சாஹிர் மெளலானா

பிரத்தியேக பேட்டி


ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளராக தனது அரசியல் வாழ்க்கையை ஆரம்பித்து ஐ. தே. க. எம்.பியாக பாராளுமன்றத்திற்குள் பிரவேசித்தவர் தான் அலி சாஹிர் மெளலானா. இந்தப் பெயரை கேட்டதும் முதலில் ஞாபகத்துக்கு வருவது இன்று அமைச்சராகவிருக்கும் கருணா அம்மான் தான். நீண்ட ஒரு இடைவெளிக்குப் பின்னர் நாடு திரும்பியுள்ள அலி சாஹிர் மெளலானாவை கொழும்பில் சந்திக்கும் வாய்ப்பு தினகரனுக்குக் கிடைத்தது. தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு சந்திப்பதற்கான நேரத்தையும் ஒதுக்கிக் கொண்டு அவரது வருகைக்காக காத்திருந்தோம். நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் வெற்றிக்கு தன் பங்களிப்பையும் வழங்க வேண்டும் என்ற எண்ணத்தில் அலரி மாளிகையில் ஜனாதிபதியை சந்தித்துவிட்டு வரும் அவரை சந்தித்த போது, அவர் கொழும்புக்கு வந்து விட்டார் என்ற செய்தி கேட்டு, அவரைச் சந்திக்க நண்பர்கள், ஆதரவாளர்கள் சிலரும் வந்திருந்தனர். அவர்களை சற்று நேரம் பொறுத்துக் கொள்ளுமாறு கூறி தினகரன் வாசகர்களுக்காக கடந்த கால நிகழ்வுகளை பகிர்ந்து கொண்டார் அலி சாஹிர்.

உங்கள் அரசியல் பிரவேசம் எவ்வாறு அமைந்தது?

நான் 1987களிலிருந்து ஆரம்பிக்கிறேன். எனது உயர் கல்வியை முடித்துக் கொண்டு (கம்பியூட்டர் சயன்ஸ்) அமெரிக்காவிலிருந்து நாடு திரும்பியிருந்தேன். இலங்கை - இந்திய ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டிருந்தது. 13ஆவது திருத்தச் சட்டமும் கொண்டு வரப்பட்டு மாகாண சபைகள் முறையும் அறிமுகப்படுத்தப்பட்டிருந்ததுடன் ஜனாதிபதித் தேர்தலும் அறிவிக்கப்பட்டிருந்தது. அப்போதைய ஜனாதிபதியாக ஆர். பிரேமதாஸாவும் எதிர்க்கட்சியில் திருமதி ஸ்ரீமாவோ பண்டாரநாயக்கவும் வேட்பாளராக போட்டியிட்டனர்.

திருமதி பண்டாரநாயக்க என்னை மட்டு. மாவட்ட ஸ்ரீல. சு. க. அமைப்பாளராக நியமித்தார். அத்துடன் திருமதி பண்டாரநாயக்காவின் மாவட்ட முகவராகவும் நியமிக்கப்பட்டேன்.

இலங்கை - இந்திய சமாதான உடன்படிக்கையில், எந்த வகையிலும் முஸ்லிம் மக்களின் ஆலோசனை பெறப்படவில்லை என்பதை திருமதி ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க சுட்டிக்காட்டினார். இச்சந்தர்ப்பத்தில் ஆர். பிரேமதாச ஜனாதிபதியாக தெரிவானார். இதன்பின்னர் புலிகளுடன் சமாதான பேச்சுக்கள் ஆரம்பமாகின. இந்தியப் படையினர் திருப்பி அனுப்பப்பட்டனர். புலிகள் முஸ்லிம்கள் மீது மோசமான தாக்குதலையும் நடத்தினர். காத்தான்குடி படுகொலை, வடக்கிலிருந்து முஸ்லிம்கள் விரட்டப்பட்டமை போன்ற நிகழ்வுகள் நடைபெற்றன. நான் அகதிகள் நிவாரண அமைப்பு (ஞிஞிலி) என்ற அரச சார்பற்ற நிறுவனம் ஊடக சுயாதீனமாக செயற்பட்டேன்.

1994 ஆம் ஆண்டு கிழக்கில் நடத்தப்பட்ட உள்ளூராட்சி சபைத் தேர்தலில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிட்டு ஏறாவூர் பிரதேச சபைத் தலைவராக தெரிவானேன். ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், ஐ. தே. க. போன்ற கட்சிகளின் பலத்த சவால்களுக்கு மத்தியில் இந்த வெற்றியை ஈட்ட முடிந்தது.

சிரேஷ்ட அமைச்சர்களான எம். எச். மொஹமட், அன்று வெளிவிவகார அமைச்சராக இருந்த ஏ. சீ. எஸ். ஹமீத் போன்றோரின் அழைப்பையேற்று ஐ. தே. கவில் இணைந்து கொண்டேன். முன்னாள் ஜனாதிபதி டி. பி விஜேதுங்க பாராளுமன்றத்தைக் கலைத்ததன் காரணமாக பொதுத் தேர்தல் வந்தது. அதில் போட்டியிட்டு மட்டக்களப்பு மாவட்டத்தின் ஐ. தே. க. பாராளுமன்ற உறுப்பினராக தெரிவானேன். 1977களிலிருந்து மட்டக்களப்பு மாவட்டத்தில் ஒருவரேனும் எம்.பி.யாக அதுவரை தெரிவு செய்யப்பட்டிருக்கவில்லை. 1987களில் தேவநாயகம் தோற்கடிக்கப்பட்ட பின்னர் தேசிய கட்சிகளில் போட்டியிடுபவர்கள் பாதகச் செயல் செய்வதாகவே முத்திரை குத்தப்பட்டார்கள்.

இந்தத் தேர்தலில் எதிர்க்கட்சி வேட்பாளர் 45,000 வாக்குகளை மட்டுமே பெற்றிருந்தார். நான் 115,000 வாக்குகளைப் பெற்று வெற்றியீட்டினேன்.

கருணா அம்மான் விவகாரம் வரையில் நான் பாராளுமன்ற உறுப்பினராகவே இருந்தேன்.

கருணா அம்மானுடனான உறவை எவ்வாறு வளர்த்துக் கொண்டீர்கள்?

அமைச்சர் முரளிதரன் மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரியில் கல்வி பயின்றவர். நான் மட்டக்களப்பு சென் மைக்கல் கல்லூரியில் கல்வி கற்றேன். முரளிதரன் என்னைவிட வயதில் இளையவர். நான் விளையாட்டு வீரர் என்ற அடிப்படையில் அடிக்கடி நாம் சந்தித்துக் கொள்வோம். என் மீது அவருக்கு எப்பவும் மரியாதையுண்டு.

1977இல் க. பொ. த. உயர்தரத்தை முடித்துக் கொண்டு இந்தியா சென்றேன். அங்கு எனது முதலாவது பட்டப்படிப்பை முடித்துக் கொண்டு கலிபோர்னியா சென்றேன். 1987களில் மீண்டும் நாடு திரும்பினேன். நான் வரும் போது முற்றிலுமாக மாறிப் போயிருந்தது.

1977 - 83 போன்ற காலகட்டங்களில் ஏற்பட்ட இனக்கலவரங்கள் காரணமாக புலிகள் இயக்கத்துக்கு ஆட்சேர்ப்பு அதிகமாயிற்று. இளைஞர், யுவதிகள் கூட்டம் கூட்டமாக சென்று இணைந்து கொண்டனர். க. பொ. த. உயர்தரத்தில் பயின்றுக் கொண்டிருந்த கருணா அம்மானும் இதில் ஒருவராக இணைந்துக் கொண்டார். இனி எமக்கு இலங்கையில் எதிர்காலம் இல்லை என்ற எண்ணத்தில் இயக்கத்தில் இணைந்து கொண்டார். இந்தியா சென்று பயிற்சிகளையும் பெற்றார்.

1990களில் புலிகளுக்கும் அரசுக்கும் இடையேயான சமாதான பேச்சு ஆரம்பமானது. அரச தரப்பில் பிரதான சமாதான தூதுவராக அமைச்சர் ஏ. சி. எஸ். ஹமீது நியமிக்கப்பட்டிருந்தார். இந்தக் காலக் கட்டத்தில் கேர்ணல் கருணாவை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. நான் அப்போது எம்.பியாக இருக்கவில்லை. கருணா அம்மானுடன் கரிகாலனையும் சந்திக்கும் வாய்ப்பும் கிடைத்தது.

அமைச்சர் ஏ. சி. எஸ். ஹமீத், பல்கலைக்கழக மானிய ஆணைக் குழுவின் தலைவராக இருந்த அர்ஜுன அலுவிகாரே ஆகியோருடன் புலிகளைச் சந்தித்தோம். கிழக்கு பல்கலைக்கழகத்தை மீண்டும் திறப்பது தொடர்பாக பேச்சு நடத்தினோம். கருணா உடனடியாக அதற்கு செவிமடுத்தார். புலித் தலைமையின் கவனத்திற்கும் உடனடியாகக் கொண்டு வந்தார். மட்டக்களப்பு விமானப் படைத் தளத்தில் நடைபெற்ற சந்திப்பின் போது கிழக்கில் தமிழ் - முஸ்லிம் மக்களிடையே ஏற்படும் தப்பபிப்பிராயங்கள் களையப்படுவது குறித்தும் பேசினோம். குறிப்பாக முஸ்லிம் பிரதேசங்களில் நிர்வாக நடவடிக்கைகளுக்காக புலிகளால் நியமிக்கப்படுகின்ற முஸ்லிம் ஏஜென்டுகள் தரமானவர்கள் அல்ல. தகுதி வாய்ந்தவர்கள் அல்ல மக்களை மதிக்கத் தெரிந்தவர்கள் அல்ல என்பதை ஏ. சி. எஸ். ஹமீத் சுட்டிக் காட்டியிருந்தார். இதனால் முஸ்லிம் மக்கள் மத்தியில் அதிருப்தி நிலவுவதாகவும் சுட்டிக் காட்டியிருந்தார். உடனடியாக குறிப்பிட்ட நபர்களை நீக்கவும் தகுதியானவர்களையும் கனம் பண்ணத் தெரிந்தவர்களையும் நியமித்தார்.

இவரது செயல் என்னை வெகுவாக கவர்ந்தது. எப்போதும் அன்பாக அவர்களில் ஒருவனாக என்னை ‘அண்ணன்’ என அன்புடன் அழைப்பார்.

சமாதானப் பேச்சு பலனளிக்கவில்லை. ராஜீவ் காந்தி கொல்லப்பட்டார், பிரேமதாசவும் கொல்லப்பட்டார். 1994இல் சந்திரிகா குமாரதுங்க கொண்டு வந்த சமாதானப் பேச்சும் தோல்வியடைந்தது.

2002 ஐ. தே. க. கட்சி வந்ததும் ரணில் விக்கிரமசிங்க பிரதமரானார். கருணா மீண்டும் கிழக்கு மாகாணத்திற்கு அரசியல் பிரிவு பொறுப்பாளராக வந்தார். நான் மக்களின் புனர்வாழ்வு, புனரமைப்பு தொடர்பாக பிரதமரின் ஆலோசகராக செயற்பட்டேன். இந்தக் காலக்கட்டத்தில் கருணாவை மீண்டும் சந்திக்க முடிந்தது.

அண்ணன் சில அரசியல்வாதிகள் ஊழல் நிறைந்தவர்களாகத்தான் காணப்படுகிறார்கள். என்றாலும் நான் உங்கள் மீது மதிப்பு வைத்துள்ளேன். நாங்கள் உங்களுக்கு ஒத்துழைப்பு வழங்குகிறோம் என கருணா கூறினார். சிறுசிறு சம்பவங்கள் தொடர்பாக கருணாவின் கவனத்திற்கு கொண்டு வந்த போதெல்லாம் கருணா உடனுக்குடன் தீர்வு வழங்கினார். இதனூடாக எமது நட்பு மேலும் வளர்ந்தது.

களமுனைகளில் கருணா என்பவர் மிகவும் முரட்டுத் தனமாவர் முர்க்கத்தனமானவர் என்பதை நான் கேள்விபட்டிருக்கிறேன். ஆனால் அவர் எனக்கு மரியாதை செய்வதை நேரடியாக பார்த்திருக்கிறேன். நான் அவரை அம்மான் என்றே அழைப்பேன். இவரிடம் விஷயமிருக்கிறது. மக்களை மதிக்கத் தெரிந்தவர் என்பதை உணர்ந்தேன்.

இந்த வேளையில்தான் சமாதான உடன்படிக்கை செய்யப்பட்டு பேச்சுவார்த்தைகளும் ஆரம்பமாகின. ஒஸ்லோ, தாய்லாந்து, ஜேர்மன் எனப் பல சுற்றுப் பேச்சுக்கள் இடம்பெற்றன. 5ஆவது சுற்று பேச்சுவார்த்தை ஒஸ்லோவில் நடைபெற்றது. அரசாங்கம் சமஷ்டி முறையை முன்வைத்தது.

சமஷ்டி முறை தொடர்பாக ஆராய்வதற்கு புலிகள் இயக்கம் ஆயத்தமாகவுள்ளது என்பதை உறுதிப்படுத்தும் வகையில் தமிழ்ச்செல்வன், அன்டன் பாலசிங்கம், கருணா அம்மான் ஆகியோர் கொள்கையளவில் இணக்கம் தெரிவித்ததுடன் அதற்கு அடையாளமாக கையெழுத்தையும் இட்டனர்.

இவர்கள் நாடு திரும்புவதற்கு முன்னதாக பிரபாகரனின் காதில் இந்த விடயம் போடப்பட்டு விட்டது. நியூயோர்க்கிலிருந்து வந்திருந்த உருத்திர குமாரன் பிரபாகரனிடம் இதனை கூறிவிட்டார். அரசாங்கம் முன்வைக்கும் ஆலோசனைக்கு கருணா இணக்கம் தெரிவிக்கிறார். தனது அதிகாரத்தையும் மீறி செயற்படுகிறார் எனப் பிரபாகரனிடம் தெரிவித்து விட்டார். அன்டன் பாலசிங்கத்துடன் தொலைபேசியில் தொடர்பு கொண்ட பிரபாகரன் காரசாரமாக பேசியதால் அன்டன் பாலசிங்கம் இலங்கை வராமலேயே லண்டன் சென்று விட்டார். அதன் பின்னர் அவர் பிரபாகரனுடன் பேசவே இல்லை.

கருணா கிளிநொச்சி திரும்பியதும் பிரபாகரன் கடுமையான வார்த்தை பிரயோகங்களை பயன்படுத்தியதுடன், ‘மாத்தயா’ போன்று நீயும் எனக்கு துரோகம் செய்ய எண்ணுகிறாயா? என்ற கேள்வியை கேட்டுள்ளார்.

‘மாத்தயா’ என்ற பெயர் கேட்ட உடனேயே கருணா அம்மான் தன்னை சுதாகரித்துக் கொண்டார். இது ஒருவகையாக சமிக்ஞை என்பதும் தெளிவானது.

பிரபாகரனின் தலைமையில் 20 தலைவர்கள் இருந்தனர். ஒவ்வொரு துறைக்கும் ஒருவர் என்றபடி இருந்தனர். கல்வி, பொலிஸ், நீதி, விளையாட்டு, வருவாய் என்ற 20 பேர் இருந்தனர். இது தான் பிரபாகரனின் அமைச்சரவை இந்த 20 பேர்களுள் கிழக்கு மாகாணத்தை பிரதிநிதித்துவப்படுத்துவதற்கு ஒருவரேனும் இருக்கவில்லை. சிலர் எந்த ஆயுத போராட்டத்திலும் ஈடுபடாதவர்களாக இருந்தனர். அவர்களும் பிரபாகரனுடன் சேர்ந்து கொண்டு கருணாவுக்கு நிந்தனை செய்தார்கள். கருணா மிகவும் புண்பட்டுப் போனார். எனினும் கருணா லாவகமாக பிரபாகரனிடம் சமாளித்துவிட்டு வெளியேறினார். உடனடியாக சர்வதேச கண்காணிப்புக் குழுவுடன் தொடர்பு கொண்டு மட்டக்களப்பு செல்வதற்கு தனக்கு ஹெலிக்கொப்டர் ஏற்பாடு செய்து தருமாறு கூறினார். எனினும் ஹெலிகொப்டர் கிளிநொச்சிக்கு வரமுடியாது என்றும் ஓமந்தைக்கு வரமுடியும் என்பதால் அங்கு வரும்படி கூறினார்கள்.

கிளிநொச்சியில் ஹெலி தரையிறங்கும் இடம் புலிகளின் தலைவரின் இடத்துக்கும் மிக அருகே அமைந்திருந்தது. ஹெலி வருவதும் கருணா அதில் புறப்படுவதும் தெரிந்துவிடும் என்பதால் இந்த ஏற்பாடு செய்யப்பட்டது. இதுவே பிரபாகரனுடனான இறுதி சந்திப்பாக இருந்தது.

இரவோடு இரவாக கருணா அம்மான் ஓமந்தை வந்து அங்கிருந்து மட்டக்களப்புக்கு வந்து சேர்ந்தார்.

மட்டக்களப்புக்கு வந்த கருணா அம்மான் என்னோடு தொடர்பு கொண்டார். அண்ணன் நான் உங்களுடன் உடனடியாக பேச வேண்டும் என்றார்.

நான் ஒருவரை ஒருவர் கொல்வதும், மறைந்து திரிவதும் எத்தனைக் காலத்துக்கு? இது தான் சரியான சந்தர்ப்பம். இதனை தவற விடக்கூடாது. நாம் ஒருவரோடு ஒருவர் அமர்ந்து பேசி பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும். சமாதானம் ஏற்படுத்த வேண்டும் என்பதை வெளிப்படையாக தெரிவித்தார்.

இவர்கள் இன்னமும் யுத்தம் என்ற மனப்பான்மையிலேயே இருக்கிறார்கள். எனக்கு விளங்கவில்லை. ஆட்சேர்ப்பு செய்யும்படி கூறுகிறார்கள். ஆயுதம் வந்த வண்ணம் இருக்கிறது என்றார்.

இவர் செல்லும் பாதை வேறு என்பதை உணர்ந்தேன். அவர் எதனை விரும்புகிறார் என்பதை உணர்ந்தேன். அவர் தலைமையுடன் முரண்படுகிறார் என்பதைக் கண்டேன். அவரது முடிவு சரியானதாக தென்பட்டது.

2004 சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க பாராளுமன்றத்தை கலைத்தார். மே 3ம் திகதி தேர்தல் தினம். கருணா என்னை தொலைபேசியில் அழைத்தார். இவர்களுடன் தொடர்ந்தும் செயலாற்ற முடியவில்லை.

பிரபாகரன், பொட்டு அம்மான் ஆகியோர் பிரச்சினைகளை வளர்க்கின்றனர் என்று கூறினார்.

எதற்காக இயக்கத்தில் இணைந்து செயற்பட ஆரம்பித்தோமோ அது இன்று நடைபெறவில்லை. கிழக்கு மக்களை அவர்கள் வாட்டி வதைக்கிறார்கள்.

கிழக்கிலிருந்து களமுனைக்கு கொண்டு சென்ற இளைஞர், யுவதிகளில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு உதவிகள் செய்ய வேண்டும் என்ற ஆலோசனையை பல முறை பிரபாகரனின் அமைச்சரவையில் சமர்ப்பித்திருக் கிறேன். அவை பிரபாகரனின் கவனத்திற்கு கொண்டு வரப்படாமலேயே கிழித்து குப்பையில் போடப்பட்டன.

அண்ணன் நான் உங்களுடன் இணைந்து வேலை செய்யப் போகிறேன். எனக்கு ஆலோசனை வழங்குவதுடன் என்னை வழிநடத்துங்கள் எனக் கூறினார். எதனையும் நம்ப முடியாத நிலை.

தனக்கு தனது ஆதங்கங்களை வெளியில் சொல்லவும், மக்களின் பிரச்சினைக்கு தீர்வை எவ்வாறு கொண்டு வருவதும் நம்பகத்தன்மையான ஒருவர் வேண்டும் என்று நினைத்த கருணாவுக்கு நான் நம்பிக்கையுள்ள நண்பனாகத் தென்பட்டேன். இன்று வரை எந்த ரகசியத்தையும் நான் வெளியே சொன்னதில்லை. இப்போதுதான் நான் வெளியே கூறுகிறேன்.

ஏனெனில் கருணா இன்று அனைவராலும் அங்கீகரிக்கப்பட்ட ஒருவர். நான் ஒருபோதும் அவரை வீழ்த்த விரும்பவில்லை. அவருக்காக ஐ. தே. க.விலிருந்து விலகிச் செல்வதற்கும் நான் வகித்த சகல பதவிகளையும் தியாகம் செய்யவும் நேர்ந்தது.

இதனை எண்ணி வருந்துகிஹர்களா?

இல்லை. ஒருபோதும் இல்லை. நான் நிறைய தியாகங்கள் செய்துள்ளேன். அவை அனைத்தும் நாட்டுக்காக என்பதை எண்ணி மகிழ்ச்சியடைகிறேன். அது இன்று நாட்டுக்கு சமாதானத்தை கொண்டு வந்திருக்கிறது. சமாதான உடன்படிக்கையின் படி புலிகள் அரச கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் பிரவேசிக்கலாம் என்ற சரத்தும் உள்ளடக்கப்பட்டிருந்தது. இதன்படி ஆயுதம் எதுவுமின்றி அவர் வந்து போகலாம். ஆனால் வன்னி புலிகள் ஆயுதங்களுடன் சர்வதேச கண்காணிப்புக் குழுவினரின் உதவியுடன் வந்தது மட்டுமல்ல பொது மக்களையும் தாக்கினர். கண்காணிப்புக்குழு இந்த விடயத்தில் ஒரு தலைப்பட்சமாக நடந்து கொண்டது.

காயமடைந்தவர்களை கொண்டு செல்வதற்காகச் சென்ற அம்பியூலன்ஸ் சாரதியையும் சுட்டனர். இந்தச் சந்தர்ப்பத்தில் கருணா எதுவுமே செய்ய முடியாத நிலையில் இருந்தார். தனது ஆதங்கத்தை என்னிடம் கொட்டித் தீர்த்தார். தானும் பதிலுக்கு தாக்குதல் நடத்துவதா? எனக் கேட்டார். இல்லை.

இந்தச் சந்தர்ப்பத்தில் நாம் மெளனமாக பின்வாங்கிச் செல்வது நல்லது. இல்லையேல் இரத்த ஆறு ஓடும் நிலை ஏற்பட்டுவிடும் எனக் கூறி பாரிய அழிவை தடுத்து நிறுத்தினேன்.

தமிழ் மக்களுக்கு அநீதி இழைக்கப்படுகிறது. எமது மக்கள் தாக்கப்படுகிறார்கள். கொல்லப்படுகிறார்கள் என்பதற்காகவே நாம் இந்த போராட்டத்தில் இறங்கினோம். இன்று எமது ஆட்களே எமது மக்களை அழிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனரே என வருத்தப்பட்டார்.

அண்ணன் நான் கொழும்புக்கு செல்ல வேண்டும். ஏற்பாடு செய்யுங்கள். வெளி உலகுக்கு நான் இவற்றைக் கூற வேண்டும். கண்காணிப்புக்குழு பக்கச்சார்பாக நடந்து கொள்கிறது எனக் கூறியதுடன் என் மீது நம்பிக்கையும் வைத்தார்.

கருணா என்னுடன் தொடர்புகளை வைத்திருக்கிறார் என்பதற்காக நான் புலிகளினால் அச்சுறுத்தப்பட்டேன். எனக்குத் தெரியாமலேயே என்னை பின் தொடர்ந்தனர். நான் செல்லும் வாகனம் மீது துப்பாக்கி பிரயோகம் செய்தனர்.

எனது மைத்துனர் இரண்டு முறை கடத்தப்பட்டார். எனது குழந்தைகள் பாடசாலைக்கு செல்லும் போது கூட புலிகள் அவர்கள் பின் தொடர்ந்தனர். கருணாவை நான் எனது வீட்டில் மறைத்து வைத்திருக்கிறேன் எனச் சந்தேகப்பட்டனர். பொட்டு அம்மானின் சகாக்கள் ஊடுருவி ஐ. தே. க. வேட்பாளராக இருந்த சுந்தரம் பிள்ளை என்பவரை சுட்டுக் கொன்றனர். பொட்டு அம்மானின் சகாவான ரமணன் என்பவர் தான் அவரை சுட்டுக் கொன்றார். தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் வேட்பாளராக என்னால் அறிமுகப்படுத்தப்பட்டு கருணா அம்மான் ஊடாக நியமிக்கப்பட்ட ராஜன் சத்தியமூர்த்தியும் கொல்லப்பட்டார். இவர் வேறுயாருமல்ல, மட்டக்களப்பு மேயராக இருக்கும் சிவகீதா பிரபாகரனின் தந்தையார் தான் இவர். இவரது படுகொலையுடன் கருணாவை மேலும் ஆத்திரமடையச் செய்தது.

1999 ஏப்ரல் 2 தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் ஐ. தே. க. வேட்பாளராக நான் போட்டியிடக் கூடாது என்ற நிபந்தனையை ரவூப் ஹக்கீம் ஐ. தே. க விடம் முன்வைத்தார். நான் போட்டியிடுவதாயின் ஸ்ரீல. மு. கா. விலேயே போட்டியிட வேண்டும் எனத் தெரிவித்தார். நான் என்றுமே இன ரீதியான, பிரதேச ரீதியான கட்சிகளை விரும்புவதில்லை. அவற்றில் இணைந்து போட்டியிட விரும்பியதுமில்லை.

வன்னிப் புலிகளின் ஊடுருவலைத் தொடர்ந்து கருணா தனது சகாக்களுடன் தொப்பிகல பகுதிக்கு பின்வாங்கினார். தனி ஒரு மனிதராக கருணா அம்மான் மட்டும் புலிகள் இயக்கத்திலிருந்து பிரியவில்லை. 6000 போராளிகளுடன் அவர் பிரிந்தார். அழிவுகளையும் உயிரிழப்புகளையும் தவிர்ப்பது தான் அவரது நோக்கம். இயக்கத்திலிருந்த போராளிகளை அவர்களின் பெற்றோரிடமே ஒப்படைத்தார். யுனிசெப் ஊடாக இவர்கள் கையளிக்கப்பட்டனர். தான் கொழும்பு செல்ல வேண்டும் என்று கூறியதுடன் சாரதி ஒருவருடன் வாகனமொன்று ஏற்பாடு செய்யுமாறு கூறினார்.

கருணா உங்களுடன் எப்படி தொடர்பு கொண்டார்?

என்னுடைய கையடக்கத் தொலைபேசிக்கு அழைப்புகளை எடுப்பார். வேறுபட்ட தொலைபேசிகளினூடாக என்னோடு பேசுவார். எனது கையடக்க தொலைபேசி அன்று முதல் இன்று இப்போது வரையிலும் எந்நேரமும் எவரும் பேசக் கூடிய நிலையில் தான் இருக்கும்.

2004 ஏப்ரல் 12 ஆம் திகதி தொப்பிகலவுக்கு அண்மித்த பகுதிக்கு சாரதியுடனும் மற்றுமொரு நபருடனும் நான் சென்றேன். சமிக்ஞைக்காக இன்னுமொரு வாகனத்தை பின் தொடர்ந்து கருணா அனுப்பியிருந்தார். இந்தப் பகுதியை அண்மித்த போது கருணா ஒரு வயல் வெளி போன்ற திறந்த வெளிப் பகுதியில் புஷ்ஷேர்ட் ஒன்றை அணிந்தவாறு கையில் பிரிவ்கேஸ் ஒன்றுடனும் நின்றிருந்தார்.

கருணா புலிகளால் மிகவும் தேடப்பட்டு வந்த நபர். அவரது தலைக்கு மில்லியன் கணக்கான ரூபாய்களை வழங்கவும் புலிகள் ஆயத்தமாக இருந்தனர்.

உயிரோடோ, பிணமாகவோ, கருணாவை பிடிக்க வேண்டும் என்றே புலிகள் நினைத்தனர். இதனால் எவரையும் நம்பத் தயாராகாத நிலையிலேயே நானே நேரடியாகச் சென்றேன். கருணாவுடன் 4 பெண்களும் இருந்தனர்.

அவர்கள் நால்வரும் பெண்கள் பிரிவில் போராளிகளாக இருக்கலாம். அவர்களை வாகனத்தில் ஏற்றுவதற்கு முன்னர் எக்காரணம் கொண்டும் தங்களுடன் எதுவித ஆயுதங்களும் எடுத்து வரக் கூடாது என்பதை கூறினேன். கருணா உட்பட ஏனையோர் தங்களது பயணப் பொதிகளை திறந்து ஒவ்வொன்றாக காட்டினர்.

கருணா தனது பெட்டியை திறந்து காட்டினார். அதில் ஆவணங்கள் மட்டுமே இருந்தன. “அண்ணன் ஒரு போதும் உங்களை பிரச்சினைக்குட்படுத்த மாட்டேன்” எனக் கூறினார்.

கருணாவை கொழும்புக்கு அழைத்து வரும் டிரான்போர்ட் வேலை மட்டும் தான் செய்தேன் என்பது வெளியில் எல்லோருக்கும் தெரியும். ஆனால் இதற்கு பின்னணியில் நடந்த உரையாடல்கள், அச்சுறுத்தல்கள், அழுத்தங்கள் என்ன என்பது எவருக்கும் தெரியாது. உயிரை பணயம் வைத்து இந்தக் காரியத்தை செய்தேன்.

அதன் பலனை இன்று அனைவரும் அனுபவிக்கின்றனர். வடக்கில் இறுதி யுத்தத்தில் எவ்வளவு இழப்புக்கள் ஏற்பட்டன. புலித் தலைவர்களின் கதி என்னவாயிற்று. இதே நிலை கிழக்கிலும் ஏற்பட்டு விடக் கூடாது என்பதைத் தான் கருணாவும் நினைத்தார். நானும் நினைத்தேன்.

2004 ஆம் ஆண்டு கிழக்கு மாகாணத்தில் விடுதலைப் புலிகள் அமைப்பில் ஏற்பட்ட பிளவுக்கும் எனக்கும் எவ்வித தொடர்பும் இல்லை. பிளவு ஏற்பட்டதன் பின்னர் கருணா அம்மான் என்னுடன் தொடர்புகள் வைத்திருந்தார் என்றதிற்காக எனக்கு ஏற்பட்ட பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாகவே பாராளுமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு நாட்டை விட்டு வெளியேற வேண்டியும் இருந்தது. 2006 ஆம் ஆண்டு எனக்கு அச்சுறுத்தல்களும் பயமுறுத்தல்களும் ஏற்பட்டபோது ஐக்கிய தேசியக் கட்சி என்னை தனிமைப்படுத்திவிட்டது. இதனாலேயே நான் நாட்டை விட்டும் வெளியேறினேன்.

விடுதலைப் புலிகள் அமைப்பை பலவீனமடையச் செய்தது தனது கட்சி தான் என ஐ. தே. கட்சியினர் கூறிக் கொண்டிருக்கிறார்களே?

ஐக்கிய தேசியக் கட்சி தனது அரசியல் நோக்கத்திற்காகத்தான் இந்த விடயத்தில் என்னை தொடர்பு படுத்திக் கூறியிருப்பதும் எனக்கு களங்கத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

விடுதலைப் புலிகள் அமைப்பிலிருந்து அமைச்சர் முரளிதரன் அன்று பிரிந்திருந்தார். இந்தப் பிரிவுக்கும் எனக்கும் தொடர்பில்லை. மோதல் தவிர்ப்புக்கான முயற்சியில் ஈடுபட்டோமே தவிர புலிகளைப் பலவீனப்படுத்தும் நோக்கத்துடன் செயற்படவில்லை. அது ஒரு மனிதாபிமான நடவடிக்கையே.

இங்கிருந்து சென்றதன் பின்னர் அங்கு என்ன செய்தீர்கள்?

2007 ஆம் ஆண்டு ஐ. நா. கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வந்திருந்த போது என்னைச் சந்தித்து மீண்டும் நாடு திரும்புமாறும் அரசியலில் ஈடுபடுமாறும் பாதுகாப்பான நிலை உருவாகியிருப்பதாகவும் கூறினார். அத்துடன் இலங்கைத் தூதரகத்தில் உயர் பதவியொன்றையும் வழங்கினார்.

இப்போது நாடு திரும்பியதன் நோக்கம் என்ன? அரசியலில் ஈடுபடுவீர்களா? ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவு வழங்குவீர்களா?

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ என்பவர் எனது நல்ல நண்பர். அதே நேரம் மக்களின் ஜனாதிபதியாக பார்க்கிறேன். அவரை 1970 களில் இளம் அரசியல்வாதியாக சந்தித்திருக்கிறேன். எனது மாமனாரான அலவி மெளலானாவுடன் பல தடவைகள் அவரை நான் சந்தித்திருக்கிறேன். என்னாலான சிறு உதவிகளை அந்தக் காலத்தில் நான் செய்திருக்கிறேன்.

எளிதில் மறந்துவிட முடியாத நபர் அவர். கருணா அம்மானுடன் ஜனாதிபதியை சந்திக்கச் சென்றபோது ஜனாதிபதி கடந்த காலங்களில் நான் செய்த சிறு உதவியையும் மறக்காமல் நினைவு கூர்ந்தார். “அண்ணன் நீங்கள் எனக்கு மட்டும் உதவியதாகவே நான் நினைத்துக் கொண்டிருக்கிறேன்” என கருணா என்னிடம் வேடிக்கையாக கேட்டார்.

என்னை யாரும் இங்கு அழைக்கவில்லை. நானாகத்தான் வந்தேன். நான் வகித்த பதவி இரண்டு வருடங்களுக்கானது. விமான நிலையத்தில் எனது நண்பர் கருணா என்னை வரவேற்றார்.

இன்று தமிழ் சிங்கள, முஸ்லிம் மக்கள் அனைவருமே சுதந்திரத்தை அனுபவிக்கின்றனர். மட்டக்களப்பு மட்டுமல்ல, நாட்டில் எந்தப் பாகத்துக்கும் சென்று வரலாம்.

நான் என்றுமே பிரதேச ரீதியான, கட்சிகளை விரும்பியதில்லை. இணைந்து செயற்பட எண்ணியதும் இல்லை. இது என்னுடைய சுபாவம். என் மக்களுக்கு நன்றாக தெரியும்.

மட்டக்களப்பில் 1,15,000 வாக்குகளை பெற்று வெற்றியீட்டியதாக கூறினீர்கள். அந்த ஆதரவு இன்றும் இருக்கிறது என நினைக்கிஹர்களா?

இருக்கிறது மட்டுமல்ல. இன்னும் அதிகரித்திருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும். என்னிடம் கேட்பதை விட என் மக்களிடம் இதைக் கேட்கலாம்.

அரசுக்கு ஆதரவு வழங்குவதற்காக ஏதாவது நிபந்தனைகளை வைக்கிஹர்களா?

ஒரு போதும் இல்லை. அது என் வழக்கமும் அல்ல.

அடுத்தத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் கீழ் போட்டியிடுவீர்களா?

ஆம். நிச்சயமாக அரசுடன் இணைந்து செயற்படுவேன். அது தான் சிறந்தது என நினைக்கிறேன். அப்போது தான் மக்களுக்கு ஏதேனும் செய்ய முடியும்.

ஐ. தே. க. - ஜே. வி. பி. கூட்டு பற்றி கூறுவதாயின்?

ஐக்கிய தேசியக் கட்சிக்கென்று சில தனிப்பட்ட நல்ல கொள்கைகள் உண்டு. ஜே.வி. பி.யுடன் இணையும் என்று நான் நினைக்கவே இல்லை.

ஜே. வி. பி யினரின் அரசியல் ஒரு குளறுபடியானது. எந்நேரமும் எதிர்மறை சிந்தனையாளர்கள்.

சரத் பொன்சேகா ஒரு இராணுவ அதிகாரி. அவர் ஒரு அரசியல்வாதியல்ல. இப்போது அரசியல் பேசுகிறார்.

தமிழ், முஸ்லிம் மக்கள் சிறுபான்மையினர் என்றும் அவர்கள் பெரும்பான்மையிடம் வாழக் கற்றுக் கொள்ள வேண்டும் என்று கூறியிருப்பது, எமது மக்களின் மனதை புண்படுத்தியிருக்கிறது.

இவர் ஒரு நிறைவேற்று அதிகாரத்திற்கு வந்தால் நிச்சயமாக சிறுபான்மையினர் அதிர்ச்சியடைந்துவிடுவார்கள் என்றும் அலி சாஹிர் மெளலானா தனது நேர்காணலின் போது தெரிவித்தார்.
மேலும் இங்கே தொடர்க...


நாளாந்த
பிரச்சினையின் முடிவுக்கும் அரசியல் தீர்வுக்கும் வழிவகுக்கும் தீர்மானமே இன்றைய தேவை



அதிகாரப் பகிர்வுத் தீர்வுத் திட்டம் பிராந்திய சபைகளை உருவாக்குவதாலேயே அதை எதிர்த்ததாக ரணில் விக்கிரமசிங்ஹ ஒரு பத்திரிகைப் பேட்டியில் பின்னர் கூறினார். அந்தத் தீர்வுத் திட்டத்தை எதிர்ப்பதற்குப் பேரினவாதிகள் கூறிய காரணமும் இது தான். இந்த விடயத்தில் ரணிலும் பேரினவாதிகளும் ஒன்றாகச் சங்கமித்தார்கள்.

ஜனாதிபதித் தேர்தலில் யாரை ஆதரிப்பது என்பது பற்றித் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இன்னும் உத்தியோகபூர்வமாக அறிவிக்கவில்லை. முடிவொன்றை எடுப்பதற்காகக் கூட்டப்பட்ட கூட்டம் எந்த முடிவும் எடுக்காமலே கலைந்தது. கூட்டமைப்பைத் தவிர மற்றைய எல்லா அரசியல் கட்சிகளும் தத்தமது நிலைப்பாட்டுக்கு அமைவான முடிவுக்கு வந்து விட்டன. பெரும்பாலான மக்களும் முடிவுக்கு வந்து விட்டார்கள். ஆனால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புப் பாராளுமன்ற உறுப்பினர்களால் இன்னும் ஒரு முடிவுக்கு வர இயலாதிருக்கின்றது.

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் என்ன செய்ய வேண்டும் என்பது பற்றித் தீர்மானிப்பதில் எவ்வித சிரமும் இருக்க வேண்டியதில்லை. தமிழ் மக்கள் அளிக்கும் ஒவ்வொரு வாக்கும் அவர்கள் இன்று நாளாந்த வாழ்வில் முகங்கொடுக்கும் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கும் இனப் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கும் உதவுவதாக இருக்க வேண்டும்.

புலிகள் ஆயுத பலத்துடன் இருந்த காலத்தில் பெரும்பாலான தமிழ் மக்கள் சுதந்திரமாக வாக்களிக்க முடியவில்லை. மக்கள் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பதைப் புலிகளே தீர்மானித்தார்கள். தேர்தல் பகிஷ்கரிப்பையும் அவர்களே தீர்மானித்தார்கள். தீர்மானிக்கும் சுதந்திரம் மக்களுக்கு இருக்கவில்லை. இப்போது மக்கள் சுதந்திரமாகத் தீர்மானிக்கலாம். தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத் தலைவர்களும் சுதந்திரமாகத் தீர்மானிக்கலாம். யுத்தத்தில் புலிகள் தோற்கடிக்கப்பட்டதால் தமிழ் மக்ளுக்குக் கிடைத்த பல சுதந்திரங்களுள் வாக்களிப்புச் சுதந்திரமும் ஒன்று.

நீண்ட காலத்துக்குப் பின் கிடைத்த சுதந்திரத்தைச் சரியான முறையில் தமிழ் மக்கள் பிரயோகிக்க வேண்டும். அளிக்கும் வாக்கு பிரயோசனமானதாக இருக்க வேண்டியது அவசியம். கட்டுப்பணத்தையே காப்பாற்ற முடியாத வேட்பாளர்களுக்கு அளிக்கும் வாக்குகள் கிணற்றில் போட்டதற்குச் சமன். அந்த வாக்குகளால் தமிழ் மக்களுக்குத் துளியளவு கூடப் பலனில்லை. பிரதான வேட்பாளர்களில் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பதே தமிழ் மக்களுக்கு முன்னாலுள்ள தெரிவு.

புதிய ஜனநாயக முன்னணியின் வேட்பாளர் சரத் பொன்சேகாவும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வேட்பாளர் மஹிந்த ராஜபக்ஷவும் பிரதான வேட்பாளர்களாக உள்ளனர். ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் உறுப்புக் கட்சிகள் அனைத்தும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாகச் செயற்படுகின்றன. நீண்ட காலமாகத் தமிழ் மக்களின் ஜனநாயக உரிமைகளுக்காகக் குரல் கொடுத்து வரும் இடதுசாரிக் கட்சிகளும் இந்த அணியில் உள்ளன. ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் ஆட்சிக் காலத்தில் சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழு அமைக்கப்பட்டது. இனப் பிரச்சினையின் தீர்வுக்கான ஆலோசனைகளைத் தயாரிப்பதற்கான இக் குழு அதன் அறிக்கையை ஜனாதிபதியிடம் கையளித்திருக்கின்றது. இந்த அறிக்கையில் அடங்கியுள்ள ஆலோசனைகள் பதின்மூன்றாவது அரசியலமைப்புத் திருத்தத்திலும் பார்க்கக் கூடுதலான அதிகாரங்களைக் கொண்டனவாக உள்ளன. இதே நேரம், பதின்மூன்றாவது திருத்தத்திலும் பார்க்கக் கூடுதலான அதிகாரங்களைக் கொண்ட தீர்வை நடைமுறைப்படுத்தப் போவதாக ஜனாதிபதி இலங்கை மக்களுக்கு மாத்திரமன்றி இந்தியாவுக்கும் உறுதியளித்திருக்கின்றார்.

இவற்றை ஒன்று சேர்த்துப் பார்க்கும் போது, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தெரிவு இனப் பிரச்சினையின் தீர்வுக்கு வழிவகுக்கும் என்ற நம்பிக்கை ஏற்படுகின்றது.

புதிய ஜனநாயக முன்னணியின் வேட்பாளராக பொன்சேகா போட்டியிடுகின்றார். இந்தக் கட்சியின் பெயரும் சின்னமும் இப்போது தான் மக்களுக்குத் தெரிய வருகின்றன. நாட்டின் எந்தப் பகுதியிலாவது இக் கட்சிக்கு அலுவலகம் இருப்பதாகத் தெரியவில்லை. இனப் பிரச்சினையைப் பற்றியும் அதன் தீர்வைப் பற்றியும் இந்தக் கட்சி எப்போதேனும் அறிக்கையாவது வெளியிட்டதாக இல்லை. எனவே இனப்பிரச்சினையின் தீர்வுக்கும் பொன்சேகாவின் கட்சிக்குமிடையே வெகு தூரம்.

ஐக்கிய தேசியக் கட்சியும் மக்கள் விடுதலை முன்னணியும் பொன்சேகாவை ஆதரிக்கும் பிரதான கட்சிகள். எப்போதும் ஐக்கிய தேசியக் கட்சியின் நிழலாகச் செயற்படும் ஜனநாயக மக்கள் முன்னணியும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸஞிம் பொன்சேகாவுக்கு ஆதரவளிக்கும் மற்றைய கட்சிகள். இவ்விரு கட்சிகளும் சில வாரங்களுக்கு முன் பொன்சேகாவை இனவாதி என்று முத்திரை குத்தியவை. இப்போது பொன்சேகாவைத் தலையில் தூக்கி வைத்துப் போற்றுகின்றார்கள். இதற்குப் பெயர் தான் சந்தர்ப்பவாதம். இந்தச் சந்தர்ப்பவாதத்துக்குத் தமிழ் பேசும் மக்களைப் பகடைக் காய்களாக்குவது வேதனை தருகின்றது. சில வாரங்களுக்கு முன் இவர்களுக்கு இனவாதியாகத் தோன்றியவர் இப்போது தமிழ் மக்களின் நண்பனாக இவர்களால் சித்தரிக்கப்படுவது வியப்பை அளிக்கின்றது.

பொன்சேகாவின் பிரதான ஆதரவாளர்களான ஐக்கிய தேசியக் கட்சியும் மக்கள் விடுதலை முன்னணியும் எந்தக் காலத்திலும் தமிழ் பேசும் மக்களின் நலனில் அக்கறை செலுத்திய கட்சிகளல்ல. மக்கள் விடுதலை முன்னணி சிங்களப் பேரினவாதத்தின் இன்னொரு முகம். பச்சை பச்சையாக இனவாதம் பேசுபவர்கள் ஒரு முகம். மக்கள் விடுதலை முன்னணியினர் இடதுசாரி வேஷம் போட்டு இனவாதம் பேசும் முகம். பதின்மூன்றாவது திருத்தத்தை நடைமுறைப் படுத்துவதற்கே இவர்கள் எதிரானவர்கள். அத் தீர்வுக்கு மேலான தீர்வுக்குப் பொன்சேகாவுடன் ஒத்துழைப்பார்களா?

சிறுபான்மையினரின் நண்பன் போல வேஷம் போட்டுக் கொண்டு கருவறுக்கும் கட்சியே ஐக்கிய தேசியக் கட்சி. தமிழ் மக்களின் நலனுக்கு முரணாகச் செயற்படும் வரலாற்றை இக் கட்சி கொண்டிருக்கின்றது.

பண்டா - செல்வா ஒப்பந்தம் நடைமுறைக்கு வர விடாமல் தடுத்ததில் ஐக்கிய தேசியக் கட்சிக்குப் பிரதான பங்கு உண்டு. அந்த ஒப்பந்தம் கைவிடப்படும் நிலையை உருவாக்கிய சூத்திரதாரி ஐக்கிய தேசியக் கட்சியே.

மாவட்ட சபை தருவதாக 1965 ஆம் ஆண்டு தமிழரசுக் கட்சியுடன் ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டது ஐக்கிய தேசியக் கட்சி. அந்த ஒப்பந்தத்தின் அடிப்படையிலேயே தமிழரசுக் கட்சியின் ஆதரவைப் பெற்று ஆட்சி அமைத்தது. ஆனால் மாவட்ட சபையைக் கொடுக்கவில்லை. அரசாங்கத்தின் இறுதிக் காலத்தில் தமிழரசுக் கட்சித் தலைவர்களை அழைத்து, மாவட்ட சபை தருவது சாத்தியமில்லை என்று டட்லி சேனநாயக கூறினார்.

பொது சன ஐக்கிய முன்னணியின் அதிகாரப் பகிர்வுத் தீர்வுத் திட்டத்தையும் ஐக்கிய தேசியக் கட்சி எதிர்த்தது. அத் தீர்வுத் திட்டம் தமிழ் பேசும் மக்களுக்குக் கூடுதலான அதிகாரங்களை வழங்குவதால் பகிரங்கமாக எதிர்க்க அக் கட்சி விரும்பவில்லை. தமிழ் மக்களின் நண்பனாகக் காட்டிக் கொண்டு தமிழ் மக்களின் நலன்களுக்குத் தடையாகச் செயற்படுவது ஐக்கிய தேசியக் கட்சியின் வழமையான பாணி. அதற்கமைய அதிகாரப் பகிர்வுத் தீர்வுத் திட்டத்துக்கு எதிராக எங்கும் பேசவில்லை. பாராளுமன்றத்திலும் பேசவில்லை. ஆனால் பாராளுமன்றத்தில் குப்பாடித்தனமாக நடந்து அத் தீர்வுத் திட்டம் வாக்கெடுப்புக்கு வருவதைத் தடுத்தார்கள்.

அதிகாரப் பகிர்வுத் தீர்வுத் திட்டம் பிராந்திய சபைகளை உருவாக்குவதாலேயே அதை எதிர்த்ததாக ரணில் விக்கிரமசிங்ஹ ஒரு பத்திரிகைப் பேட்டியில் பின்னர் கூறினார். அந்தத் தீர்வுத் திட்டத்தை எதிர்ப்பதற்குப் பேரினவாதிகள் கூறிய காரணமும் இது தான். இந்த விடயத்தில் ரணிலும் பேரினவாதிகளும் ஒன்றாகச் சங்கமித்தார்கள். தமிழ் மக்களுக்குக் கூடுதலான அதிகாரங்களை வழங்கக் கூடாதென்பது இவ்விரு சாராரினதும் நிலைப்பாடு.

ஐக்கிய தேசியக் கட்சியின் வரலாற்றில் இன்று வரை இனப் பிரச்சினைக்கான தீர்வுத் திட்டமொன்றை முன்வைத்தது கிடையாது. அதற்காக முயற்சித்ததும் கிடையாது. அதேநேரம் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி எந்தவொரு வெளிநாட்டினதும் நிர்ப்பந்தம் இல்லாமல் தீர்வுகளை முன்வைத்திருக்கின்றது.

பிரதான வேட்பாளர்கள் இருவரில் இனப் பிரச்சினைக்கான தீர்வு நடைமுறையை ஆக்கபூர்வமாக முன்னெடுத்துச் செல்லக் கூடியவர் யார் என்பதைத் தீர்மானிப்பதில் கூட்டமைப்புக்குத் தடுமாற்றம் இருக்குமேயானால் இவர்கள் யதார்த்தத்தைச் சரியாகப் புரிந்து கொள்ளவில்லை என்று அர்த்தம்.

சரத் பொன்சேகாவின் கட்சிக்கு (அன் னக் கட்சி) இனப் பிரச்சினை பற்றிய சிந்தனை இல்லை. அவரை ஆதரிக்கும் ஐக்கிய தேசியக் கட்சியும் மக்கள் விடு தலை முன்னணியும் அரசியல் தீர்வுக்குத் தடையாகச் செயற்பட்ட வரலாற்றைக் கொண்டவை. பதின்மூன்றாவது திருத்தமே வேண்டாம் என்கிறது மக்கள் விடுதலை முன்னணி. இந்த நிலையில் பதின் மூன்றாவது திருத்தத்திலும் கூடுதலான தீர்வை நடைமுறைப்படுத்தப் போவதாகப் பொன்சேகா கூறுவதைப் போன்ற வேடிக்கை வேறெதுவும் இருக்க முடியாது.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவைப் பொறுத்த வகையில் பதின்மூன்றாவது திருத்தத்திலும் பார்க்கக் கூடுதலான அதிகாரங்களைக் கொண்ட தீர்வை நடைமுறைப்படுத்துவது தொடர்பான நம்பிக்கையைத் தோற்றுவித்திருக்கின்றார். சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழுவின் அறிக்கை இந்த நம்பிக்கையைத் தோற்றுவிக்கின்றது. இந்தியாவுக்கு அவர் அளித்திருக்கும் வாக்குறுதி இந்த நம்பிக்கையைத் தோற்றுவிக்கின்றது. சொல்பவற்றைச் செய்து காட்டிய வரலாறு இந்த நம்பிக்கையைத் தோற்றுவிக்கின்றது.

இவற்றைச் சீர்தூக்கிப் பார்த்துத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மேலும் தாமதிக்காமல் சரியான முடிவுக்கு வர வேண்டும். அந்த முடிவு பதின்மூன்றாவது அரசியலமைப்புத் திருத்தத்திலும் பார்க்கக் கூடுதலான அதிகாரங்களுடைய ஒரு தீர்வை நடைமுறைக்குக் கொண்டு வருவதற்கும் அதை அடிப்படையாகக் கொண்டு படிப்படியாக முழுமையான தீர்வை அடைவதற்கும் வழிவகுப்பதாக அமைய வேண்டும். அதுவே தமிழ் மக்களுக்கு நன்மை பயக்கும் முடிவு.

முழுமையான அரசியல் தீர்வை ஒரே நேரத்தில் அடைய வேண்டும் என்ற நிலைப்பாடு யதார்த்தபூர்வமானதல்ல. சாத்தியமானதுமல்ல. ஒவ்வொரு கட்டத்திலும் தமிழ்த் தலைமை விட்ட தவறுகளின் விளைவாக இந்த நிலை உருவாகியிருக்கின்றது. முழுமையான தீர்வு இல்லாமல் வேறு எதையும் ஏற்பதில்லை என்று தமிழ்த் தலைவர்கள் பிடிவாதம் பிடிப்பார்களேயானால் தீர்வு தள்ளிப் போவது மாத்திரமன்றித் தமிழ் மக்கள் முகங் கொடுக்கும் நாளாந்த பிரச்சினைகள் நாளுக்கு நாள் அதிகரிக்கும் நிலை உருவாகுவதையும் தவிர்க்க முடியாது.

யுத்தம் நடத்திய அரசாங்கம் என்று குற்றச்சாட்டுச் சுமத்துவது அர்த்தமற்றது. முப்பது வருட காலத்தில் வெவ்வேறு அரசாங்கங்கள் புலிகளுக்கு எதிரான யுத்தத்தை நடத்தியிருக்கின்றன. ஒவ்வொரு அரசாங்கமும் மேற்கொண்ட சமாதான முயற்சிகள் புலிகளால் குழப்பப்பட்ட நிலையிலேயே யுத்தம் அவசியமாகியது. இன்றைய அரசாங்கத்தின் சமாதான முயற்சியையும் புலிகள் சீர்குலைத்தனர். பேச்சுவார்த்தையில் பங்குபற்றப் புலிகள் மறுத்தனர். அப்போதும் அரசாங்கம் யுத்தத்தை நாடவில்லை. பேச்சுவார்த்தைக்கு முயற்சித்தது. ஆனால் மாவிலாறுப் பிரச்சினையைத் தோற்றுவித்துப் புலிகளே யுத்தத்துக்கு வழிவகுத்தனர்.

இன்று யுத்தம் முடிந்துவிட்டது. புலிகள் தோற்கடிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலை தமிழ் மக்களுக்கும் நன்மை பயப்பதாகவே உள்ளது. புலிகளின் கட்டுப்பாடுகளாலும் தான் தோன்றித்தனமான செயற்பாடுகளாலும் தமிழ் மக்கள் அனுபவித்த துன்பங்கள் அனைத்தும் இப்போது நீங்கிவிட்டன.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புப் பாராளுமன்ற உறுப்பினர்களும் இப்போது சுதந்திரமாகச் செயற்பட முடியும். ஒவ்வொரு பாராளுமன்ற உறுப்பினரும் சுதந்திரமாகத் தனது கருத்தை வெளியிடுவதாலேயே தேர்தலில் யாரை ஆதரிப்பது என்பது பற்றி இன்னும் அவர்களால் தீர்மானத்துக்கு வர இயலவில்லை. இது யுத்தத்தின் விளைவாக இவர்களுக்குக் கிடைத்த சுதந்திரம். புலிகளின் செல்வாக்குக்கு உட்பட்டிருந்த காலத்தில் அவர்கள் கூறுவதையே இவர்கள் முடிவாக எடுக்க வேண்டியிருந்தது.

யுத்தத்தின் முடிவு தமிழ் மக்களுக்கும் சாதகமாகவே அமைந்துள்ளது. இந்த நிலை அரசியல் தீர்வுக்கும் சாதகமானது. தமிழ் மக்களும் தலைவர்களும் இச் சந்தர்ப்பத்தைச் சரியான முறையில் பயன்படுத்த வேண்டும்





வெற்று வாக்குறுதிகளால் தீர்வு சாத்தியமாகாது









ஜனாதிபதித் தேர்தலில் யாரை ஆதரிப்பது என்பதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் இழுபறி நிலை நிலவுவது இன்று இரகசியமல்ல.
இனப் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கா கத் தமிழ்க் கட்சிகள் ஐக்கியப்பட வேண்டும் என்ற கோஷத்தின் அடிப்படையில் ஒன்று சேர்ந்தவர்கள் இன்று மூன்று பிரிவுகளாக பிளவுபட்டு நிற்பது இதுவரை காலமும் அவர்களுக்கிடையே கொள்கை உடன்பாடு இருக்கவில்லை என்பதையும் வெளிச் சக் தியொன்றின் அழுத்தம் காரணமாகவே ஒன்றாகச் செயற்பட்டார் கள் என்பதையும் வெளிப்படுத்துகின்றது.

எவ்வாறாயினும், கடந்த காலத்தைப் பற்றி இப்போது அசைபோட் டுக் கொண்டிருப்பதால் ஆகப் போவது எதுவுமில்லை. தமிழ் மக்களின் உடனடி மற்றும் நீண்ட கால நலன்களைப் பேணு வதற்கான வழிவகைகள் பற்றிய சிந்தனையே இன்றைய தேவை.

தமிழ் மக்கள் இன்று எதிர்நோக்கும் பிரச்சினைகளையும் இனப் பிரச்சினைக்கான தீர்வு முயற்சியின் இன்றைய நிலையையும் கவ னத்தில் எடுத்துப் பார்க்கும் போது தமிழ்த் தலைவர்கள் ஆறு தசா ப்தங்களை வீணாக்கிவிட்டார்கள் என்ற முடிவுக்கே வர வேண்டி யுள்ளது.

இனப் பிரச்சினைக்குத் தீர்வு காணும் முயற்சியைத் தவ றான தடங்களில் முன்னெடுத்ததன் விளைவே இந்த நிலை.

பிர ச்சினையின் தீர்வு எவ்வளவு காலத்துக்குப் பின்தள்ளப்படுகின் றதோ அவ்வளவுக்குத் தமிழ் மக்களின் துன்பங்கள் தொடர்வ தாக இருக்கும். எனவே பிரச்சினையின் தீர்வுக்கான வழிமு றையை நிதானமாகச் சிந்தித்துப் பின்பற்ற வேண்டிய கடப்பாடு தமிழ்த் தலைவர்கள் அனைவருக்கும் உண்டு.

சிங்களத் தலைவர்கள் ஏமாற்றிவிட்டார்கள் என்று தமிழ்த் தலைவர் கள் அடிக்கடி கூறுவது வழக்கம். செய்துகொண்ட உடன்படிக் கையை நிறைவேற்றவில்லை என்றும் வாக்குறுதிகளை மீறினார் கள் என்றும் தமிழ்த் தலைவர்கள் கூறுகின்றார்கள்.

உடன்படிக் கைகள் தோல்வியடைந்ததற்குத் தமிழ்த் தலைவர்களே பிரதான பொறுப்பாளிகள். வாக்குறுதிகள் விடயத்திலும் தமிழ்த் தலைவர் கள் தங்கள் பொறுப்பைத் தட்டிக்கழிக்க முடியாது.

யாராவது வாக்குறுதி அளிக்கும் போது அதை அப்படியே ஏற்றுக் கொள்வது சரியான தலைமைத்துவக் குணாம்சமாகாது. ஆதரவை பெறுவதற்காக எந்த வாக்குறுதியையும் அளிப்பார்கள்.

அது நடை முறைச் சாத்தியமானதா என்பது பற்றியும் வாக்குறுதி அளிப்பவ ருக்குப் பக்கபலமாக உள்ள அரசியல் சக்திகளின் நிலைப்பாடு பற்றியும் நிதானமாக ஆராய்ந்த பின்னரே அதை ஏற்பதா இல் லையா என்ற முடிவுக்கு வர வேண்டும். அவசரப்பட்டு வாக் குறுதியில் நம்பிக்கை வைத்துச் செயற்பட்ட பின்னர் ஏமாற்றப் பட்டுவிட்டோம் எனக் கூறுவதில் அர்த்தமில்லை.

நடக்கவிருக்கும் ஜனாதிபதித் தேர்தலிலும் வேட்பாளர்கள் தாராள மாக வாக்குறுதிகளை அளிக்கலாம். அந்த வாக்குறுதியை நடை முறைப்படுத்துவதற்கான வல்லமையும் சாதக சூழ்நிலையும் அவ ருக்கு உண்டா என்பது பற்றியே முதலில் சிந்திக்க வேண்டும்.

இனப் பிரச்சினைக்கான தீர்வைப் பொறுத்த வரையில் இன்றைய நிலையில் பதின்மூன்றாவது திருத்தமே யதார்த்தபூர்வமானது.

பாரா ளுமன்றத் தேர்தலின் பின் மூன்றிலிரண்டு பெரும்பான்மையுடன் பதின்மூன்றாவது திருத்தத்திலும் பார்க்கச் சற்றுக் கூடுதலான அதிகாரங்களைக் கொண்ட தீர்வை நடைமுறைப் படுத்துவதும் சாத்தியமாகலாம்.

இத்தகைய தீர்விலிருந்து படிப்படியாக முன் னேறிச் செல்வதற்குச் சாதகமான சூழ்நிலையை உருவாக்குவதில் தமிழ்த் தலைவர்களுக்குக் கூடுதலான பொறுப்பு உண்டு.

சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழு ஜனாதிபதியிடம் சமர்ப்பித்துள்ள அறி க்கை பதின்மூன்றாவது திருத்தத்திலும் பார்க்கக் கூடுதலான அதி காரங்களைக் கொண்டதாக இருப்பதால் அதை நடைமுறைக்குக் கொண்டு வருவது தீர்வு முயற்சியில் சிறப்பான ஆரம்பமாக இருக்கும். இதற்கேற்ற வகையில் தமிழ்த் தலைவர்கள் செயற் படுவார்களென நம்புகின்றோம்.




வடக்கு முஸ்லிம்கள் மே மாதம் முழுமையாக மீள்குடியேற்றம்
புத்தளம் - மன்னார் வீதி ஜனவரியில் திறப்பு:
அமைச்சர் ரிஷாட்டுக்கு ஜனாதிபதி புகழாரம்




வடக்கிலிருந்து வெளியேற்றப்பட்ட சகல முஸ்லிம்களும் மே மாதமளவில் சொந்த இடங்களில் முற்றாக மீள்குடியேற்றப்படுவ ரென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். இதற்கு வசதியாக புத்தளத்தி லிருந்து மன்னார் செல்லும் பாதை அடுத்த மாதம் திறந்து வைக்கப்படுமெனவும் ஜனாதிபதி கூறினார்.

அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸின் வடமாகாண மாநாடு நேற்று புத்தளம் ஆலங்குடாவில் நடைபெற்றது. அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தலைமையில் நடந்த இந்த மாநாட்டில் சுமார் ஐம்பதினாயிரம் பேர் கலந்து கொண்டனர். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பிரதம அதிதியாகக் கலந்துகொண்டார். இங்கு தமிழில் உரையாற்றிய ஜனாதிபதி:-

முஸ்லிம் மக்களை பணயக் கைதிகளாக வைக்க நாம் ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம். முஸ்லிம்களை நாம் முழுமையாகப் பொறுப்பேற்கிறோம்.

முஸ்லிம்கள் எனது சகோதரர்கள். என்னை முழுமையாக நம்புங்கள். முஸ்லிம்கள் தொடர்பாக என்மீது பல்வேறு அபாண்டமான குற்றச்சாட்டுக்கள் எதிர்க் கட்சிகளால் சுமத்தப்பட்டன. ஐந்து வேளைத் தொழுகையை நான் நிறுத்தி விடுவேனெனக் கூறினார்கள். இப்போது உண்மை நிலையை நீங்கள் புரிந்திருப்பீர்கள். அவ்வாறான பொய்களெல்லாம் எதிர்க் கட்சிகளினாலும் அதன் தலைவர்களினாலும் பரப்பப்பட்டவை. அவர்களை நம்பாதீர்கள். அவர்கள் உங்களை ஏமாற்றப்பார்க்கிறார்கள்.

நான் கடந்த தேர்தலில் கூறியவைகளை முழுமையாக நிறைவேற்றி இருக்கிறேன். நீங்கள் கடந்த 19 வருடங்களாக இந்தப் பகுதிகளில் அகதிகளாக வாழ்கின்ஹர்கள். நீங்கள் பட்ட கஷ்டங்களை நான் நன்கறி வேன். அவற்றை தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளேன். முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் புலிகளோடு ஒப்ப ந்தம் செய்தார். அதன் பின்பு, வடக்கிலிருந்து முஸ்லிம்கள் விருப்பத்துடன் தான் வெளி யேறினரென்று ஹக்கீமும் அவரது சகபாடி களும் கூறினர். அதன்பின்பு உங்களைப் பற்றி அவர்கள் எவ்வித அக்கறையும் கொள்ளவில்லை. இப்படிப்பட்டவர்கள்தான் இப்போது உங்கள் மத்தியில் பேச வருகிறார்கள். இவர்களை நீங்கள் அடையாளம் காண வேண்டும்.

ப்படியானவர்கள்தான் இரு இனங்க ளையும் பிளவுபடுத்த முயன்றனர். அது பலிக்கவில்லை. முஸ்லிம்களின் நிம்மதியைக் கெடுத்து அகதிகளாக்கியவர்களை நீங்கள் ஒருபோதும் நம்பவேண்டாம்.

வடக்கிலிருந்து வெளியேற்றப்பட்ட உங் களது கஷ்டங்களை நான் நன்கறிவேன். அதனால்தான் ஐக்கிய நாடுகள் வரை சென்று பேசினேன். அதேநேரம், மஹிந்த சிந்தனையிலும் வடக்கு முஸ்லிம்களின் பிரச்சினைகள் தொடர்பாகவும் குறிப் பிட்டிருக்கிறோம்.

ஆகவே, தேர்தல் காலங்களில் வந்து பொய் கூறுபவர்களை நம்பாதீர்கள். பொய்களுக்கு என்றுமே அடிபணிந்து விடாதீர்கள். என்றுமே நான் உங்கள் நண்பன். இந்த நட்பு என்றும் தொடரும். என்னை முழுமையாக நம்புங்கள் என்றார் ஜனாதிபதி.

அமைச்சர் ரிஷாட் பதியுதீன் பற்றிக் குறிப்பிட்ட ஜனாதிபதி, வடக்கு முஸ்லிம் மக்களுக்காக அயராது பாடுபடும் ஒரு செயல்வீரன் ரிஷாட். அவரது பணிக்கு என்றும் உறுதுணையாக இருப்பேன்.

எனது ஆலோசனையின் பேரில் இடம்பெயர்ந்து நிவாரணக் கிராமங் களிலிருந்த சுமார் 3 இலட்சம் தமிழ் மக்களை மிக கண்ணியமாக நடாத்தி அம்மக்களின் தேவைகள் அனைத்தையும் பூரணமாக நிறைவேற்றிக் கொடுத்தவர் அமைச்சர் ரிஷாட்.

இதனால் எனக்கும் எனது அரசுக்கும் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் நல்லபிப்பிராயம் ஏற்படுவதற்கு வழியேற்படுத்திக் கொடுத்தார்.

அவருக்கு இச்சந்தர்ப்பத்தில் அவரது மக்களின் முன்னிலையிலேயே நன்றி தெரிவிக்கிறேன்.

மிக இளவயதில் அமைச்சராக உயர்ந்து இன்று வடமாகாண முஸ்லிம்களின் அன்பையும் ஆதரவையும் பெற்றுள்ளார். எனது அரசாங்கத்தில் இவர் அமைச்சராக இருப்பது ஒரு சிறப்பான விடயமாகும் என்றும் கூறினார்.

அமைச்சர்கள் அமீர் அலி, நஜீப் . மஜீத், மில்ரோய் பெர்னாண்டோ, எஸ். எம். சந்திரசேன, சம்பிக்க ரணவக்க பிரதியமைச்சர்களான கே..பாயிஸ், நிஜாமுதீன், மாகாண அமைச்சர் எம். எல்..எம். ஹிஸ்புல்லாஹ், ஜனாதிபதியின் ஆலோசகர் பசில் ராஜபக்ஷ, ஆளுனர் அலவி, எஸ்.பி.திஸாநாயக்க, ஜனாதிபதி ஆலோசகர் அஸ்வர் ஆகியோரும் இதில் கலந்துகொண்டனர்.
மேலும் இங்கே தொடர்க...