
பல்கலைக்கழகத்தில் சிங்கள தமிழ் மாணவர்களிடையே நேற்றிரவு மோதல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இன்று இடம்பெறும் யுத்தக் கொண்டாட்டங்களுக்கு பணம் கொடுக்கும்படியும் புலிகளின் தலைவர் பிரபாகரன் கொல்லப்பட்டதனை கொண்டாடப் போவதாகவும் குடிபோதையில் சென்ற சிரேஸ்ட சிங்கள மாணவர்கள் இளைய தமிழ் மாணவர்களிடம் பணம் கேட்டதாகவும் அதில் ஏற்பட்ட முறுகல் பின்னர் கைகலப்பில் முடிவுற்றதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
எனினும் இதனை அறிந்த சிரேஸ்ட தமிழ் மாணவர்கள் இரவோடு இரவாகச் சென்று சிங்கள மாணவர்கள் மீது கடும் தாக்குதல் நடத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து காவற்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று நிலமையைக் கட்டுப்பாட்டுள் கொண்டு வந்துள்ளதாகவும் சிங்கள மாணவர்களுக்கு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும் துணை வேந்தர் உள்ளிட்டவர்கள் பல்கலைக்கழகத்தில் உடனடி நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
பெயர்ந்து தமது சொந்த இடங்களில், கிராமங்களில் குடியமர்ந்த மக்கள் நலன்கருதி அமெரிக்கா 2.25 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்கியுள்ளது. ஐக்கிய நாடுகளின் அகதிகளுக்கான உயர் ஸ்தானிகர் இந்நிதியை சுமார் 9,000 குடும்பங்களுக்குப் பகிர்ந்தளிப்பார் எனத் தெரிவிக்கப்படுகிறது.
ம்பில் நடைபெறவுள்ள யுத்த வெற்றிக் கொண்டாட்ட நிகழ்வுகளில் கலந்து கொள்ள ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.

