16 டிசம்பர், 2009

ஜனாதிபதி தேர்தல் நியாயமாகவும் சுதந்திரமாகவும் நடக்க வேண்டும்




இலங்கையில் நடைபெறவுள்ள அதிபர் தேர்தலும் அதை அடுத்து நடக்கவுள்ள நாடாளுமன்ற தேர்தலும் சுதந்திரமாகவும்இ முறைகேடுகள் இல்லாமலும் நம்பகத்தன்மையுடனும் நடக்க வேண்டியது மிகவும் அவசியம் என்றும் டேவிட் மிலிபாண்ட் பிரிட்டிஷ் நாடாளுமன்றத்துக்கு அளித்த பதிலில் தெரிவித்துள்ளார்.

அவ்வாறான ஒரு நடவடிக்கைதான் அனைத்து சமூகத்தின் நம்பிக்கையையும் பெற்று நாட்டின் எதிர்காலத்தை வடிவமைக்க உதவும் என்றும் அவர் கூறியுள்ளார்.

இலங்கையின் எதிர்காலத்தில் தங்களுக்கும் ஒரு பங்கு உள்ளது என்று கருதுபவர்கள் அனைவரும்இ அனைத்து விடயங்களையும் உள்ளடக்கிய ஒரு அரசியல் தீர்வு முன்வைக்கபடுவதற்கு பங்காளிகளாக இருந்து உடன்பட வேண்டியது மிகவும் அவசியமானது என்றும் டேவிட் மிலிபாண்ட் தெரிவித்துள்ளார்.

அங்கு உள்நாட்டு மோதல் ஏன் ஏற்பட்டது என்பதனை அனைவரும் உணர்ந்து நடந்து கொள்ள வேண்டியதும் தேவை என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஜி எஸ் பி பிளஸ் வரிச்சலுகை தொடர்பில் இலங்கையில் நிலவும் மனித உரிமைகள் நிலவரம் தொடர்பில் ஐரோப்பிய ஆணையம் எழுப்பியுள்ள கவலைகள் குறித்து இலங்கை அரசு உடனடியாக கவனம் செலுத்த வேண்டும் என்று ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளியுறவு அமைச்சர்கள் அந்நாட்டிடம் தொடர்ந்து தெரிவித்து வருவதாகவும் டேவிட் மிலிபாண்ட் பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
மேலும் இங்கே தொடர்க...
இலங்கையில் இணக்கப்பாடு ஏற்படுவது மிகவும் முக்கியம் என்று பிரிட்டன் கூறுகிறது


Vollbild anzeigen

இலங்கையில் அனைத்து சமூகங்களுக்கும் இடையே ஒரு உண்மையான இணக்கப்பாடு ஏற்படுவது மிகவும் முக்கியம் என்றும்இ அங்கு நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் இடம் பெயர்ந்த மக்கள் அனைவரும் வாக்களிக்க வழி செய்யப்பட வேண்டும் என்றும் பிரிட்டிஷ் வெளியுறவுச் செயலர் டேவிட் மிலிபாண்ட் பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

இலங்கை நிலவரம் தொடர்பாக நேற்று பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தில் எழுத்துபூர்வமாக அளித்த ஒரு பதிலேயே இதை அவர் தெரிவித்துள்ளார்.

அண்மையில் இடைத்தங்கல் முகாம்களில் இருந்த மக்கள் சுதந்திரமாக நடமாடலாம் என்று இலங்கை அரசு அறிவித்துள்மை சாதகமான முன்னேற்றம் என்றும் டேவிட் மிலிபாண்ட் தெரிவித்துள்ளார்.

இருந்தபோதிலும் மனிதநேயப் பணியாளர்களுக்கு இடைத்தங்கல் முகாம்களுக்கு சென்று வரவும்இ முன்னாள் போராளிகளை சந்திக்கவும் முழுச் சுதந்தம் வழங்கப்பட வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

இலங்கையில் அனைத்து சமூகங்களின் நியாயமான கோரிக்கைகளும் அபிலாஷைகளும் நிறைவேறும் வகையில் எல்லா விடயங்களையும் உள்ளடக்கிய ஒரு அரசியல் தீர்வு முன்வைக்கப்படும் வகையில் இலங்கை அரசுடனும் சர்வதேச சமூகத்துடனும் நேரடியாக பிரிட்டிஷ் அரசு இணைந்து செயற்படும் என்றும் டேவிட் மிலிபாண்ட் பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தின் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி தேர்தல் நியாயமாகவும் சுதந்திரமாகவும் நடக்க வேண்டும்
மேலும் இங்கே தொடர்க...



மட்டு. - கொழும்பு ரயில்சேவை இன்றிரவு வழமைக்குத் திரும்பும் : ரயிவே திணைக்க No Image ம்



மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள வெள்ள நிலை காரணமாக தடைப்பட்டிருந்த மட்டக்களப்புக்கும் பிற இடங்களுக்குமிடையிலான ரயில் சேவை இன்றிரவு முதல் வழமைக்குத் திரும்பும் என ரயில்வே திணைக்களம் தெரிவிக்கின்றது.

சத்துருக்கொண்டானில் ரயில் பாதை வெள்ளத்தில் சேதமடைந்த நிலையில் நேற்று முன் தினமிரவு மட்டக்களப்பிலிருந்து கொழும்பு நோக்கிப் புறப்பட்ட பயணிகள் ரயில் விபத்துக்குள்ளானதையடுத்து குறிப்பிட்ட சேவைகள் தடைப்பட்டிருந்தன.

இதன் காரணமாக மட்டக்களப்பு - கொழும்பு இடையிலான ரயில் சேவை ஏறாவூர் வரை மட்டுப்படுத்தப்பட்டிருந்தது.

வெள்ளத்தில் சேதடைந்த ரயில் பாதையைத் திருத்தும் பணிகள் தற்போது முடிவடைந்துள்ளதால் இன்றிரவு மட்டக்களப்பிலிருந்து கொழும்புக்கான ரயில் புறப்படும் என ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.



ராஜரட்ணத்திற்கு எதிராக ஐ. அமெ. பெடரல் யூரி சபை குற்றப்பத்திரிகைத் தாக்கல்


No Image


நிதி மோசடிகள் பலவற்றுடன் தொடர்புடையவர் எனக் குற்றம் சுமத்தப்பட்ட நிலையில் கைது செய்யப்பட்ட கோடீஸ்வர வர்த்தகரான ராஜ் ராஜரட்ணத்திற்கு எதிராக ஐக்கிய அமெரிக்க பெடரல் யூரி சபை குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்துள்ளது.

அவருக்கு எதிராக 17 குற்றச்சாட்டுகளை முன்வைத்து 36 பக்கங்களுடனான குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பங்கு பத்திர மோசடி, நிதி ரீதியான சூழ்ச்சி ஆகியன அவருக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள பிரதான குற்றச்சாட்டுக்களாகும்.

அத்துடன், கெலியான் நிறுவனத்துடன் 21 மில்லியன் அமெரிக்க டொலர்கள் பெறுமதியான ஹெஜிங் ஒப்பந்தத்தை மேற்கொண்டு அந்தரங்க கொடுக்கல் வாங்கல்களை அவர் மேற்கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

அதேவேளை, அமெரிக்க நீதிமன்றம் ஒன்றின் முன்னிலையில் விசாரிக்கப்படும் பாரிய நிதி மோசடி வழக்காக இது கருதப்படுகிறது.

கடந்த அக்டோபர் மாதம் அமெரிக்க பெடரல் பொலிஸார் ராஜ் ராஜரட்ணத்தைக் கைது செய்த நிலையில், நீதிமன்ற அனுமதிக்கிணங்க அவரின் தொலைபேசி கலந்துரையாடல்களும் இரகசியமான முறையில் செவிமடுக்கப்பட்டனஎன்க் கூறப்படுகின்றது


இலங்கை மீதான மனித உரிமைமீறல் விசாரணைக்கு உதவத் தயார் : அமெரிக்கா


No Image

ஐக்கிய நாடுகள் சபை மேற்கொள்ளும் இலங்கையின் மனித உரிமை மீறல்களுக்கான விசாரணைகளுக்கு தாம் ஒத்துழைக்கத் தயார் என அமெரிக்கா அறிவித்துள்ளது.

அதேவேளை, இலங்கை அரசாங்கமும், மனித உரிமை மீறல்களைக் கட்டுப்படுத்த வேண்டும் என அமெரிக்கா கோரிக்கை விடுத்துள்ளது. அத்துடன் தமிழர் பிரச்சினைக்கு உரிய தீர்வு காணப்படவேண்டும் என்றும் அமெரிக்க வேண்டுகோள் விடுத்துள்ளது.

அமரிக்க ராஜாங்க திணைக்களத்தின், நாளாந்த செய்தியாளர் சந்திப்பின் போது, அமெ. பொதுமக்கள் விவகாரங்களுக்கான பிரிவின் உதவிச்செயலாளர் பிலிப் ஜே க்ரெளலி இந்த கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.

முன்னர் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பில் விசாரணைகள் நடத்தப்படவேண்டும் என்றும் அமெரிக்க தொடர்ந்தும் வலியுறுத்தி வருவதாக பிலிப் க்ரௌலி மேலும் குறிப்பிட்டுள்ளார் .


சிறுமி மர்ம மரணம் குறித்து உரிய விசாரணை இன்றேல் வேலை நிறுத்தம் : பம்பேகம பிரதேசவாசிகள் (படங்கள்)


No Image
நான்கு மாதங்களுக்கு முன்பு வீட்டு வேலைக்கு அமர்த்தப்பட்ட கண்டி தெல்தோட்டை லூல்கந்துர பகுதியைச் சேர்ந்த இராமையா குமுதினி என்ற 16 வயது சிறுமியின் மரணத்தில் மர்மம் நிலவுவதாகவும் இது தொடர்பில் உரிய விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்றும் இல்லாவிடின் தொடர்ச்சியான வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாகவும் அப்பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.

அதேவேளை, குமுதினி வேலை செய்த அதே வீட்டில் பணிபுரிந்த பாலசுப்ரமணியம் ஜெயந்தி (27) என்ற யுவதியும் காணாமல் போயுள்ளதாக அவரது பெற்றோர்கள் தெரிவித்துள்ளனர்.ஜெயந்தியும் லூல்கந்துர தோட்டத்தைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இது தொடர்பில் தெரியவருவதாவது,
கடந்த 4 மாதங்களுக்கு முன்னர் இராமையா குமுதினி என்ற சிறுமி எஹலியகொட பம்பேகம எனும் பகுதி தோட்ட முகாமையாளரின் வீட்டில் வேலைக்கு அமர்த்தப்பட்டார். இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமையன்று (11.12.2009) குமுதினி வேலை செய்த வீட்டிலிருந்து அவசர தொலைபேசி அழைப்பொன்று வந்துள்ளது.

முகாமையாளரின் சாரதி பேசுவதாகவும் குமுதினி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அங்கு விரைந்த குமுதினியின் பெற்றோருக்கு, எஹலியகொட வைத்தியசாலையில் உயிரற்ற தமது மகளின் உடலையே காணக் கிடைத்தது.

மேலும் அவ்வுடம்பில் காயங்கள் இருந்ததையும் அவர்கள் அவதானித்துள்ளனர். இதையடுத்து முகாமையாளரின் வீட்டுக்குச் சென்ற போது அவர் குடும்பத்துடன் தலைமறைவாகியுள்ளமை தெரியவந்தது.

அதே வேளை குமுதினியுடன் வேலை செய்த ஜெயந்தி என்பவரின் நிலை குறித்தும் தகவல்கள் தெரியவில்லை. இச்சந்தர்ப்பத்தில் எஹலியகொடை பொலிஸ் நிலையத்தில் இது குறித்து முறைப்பாடு செய்ய பெற்றோர் சென்ற போதிலும் முகாமையாளர் இன்றி இம்முறைப்பாட்டை ஏற்க முடியாது என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதனைத்தொடர்ந்து மனித அபிவிருத்தி ஸ்தாபனத்தாரின் உதவியுடன் அப்பிரதேச காவல்துறை அலுவலகத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது.
மேலும் இங்கே தொடர்க...

ஐ.ம.சு.மு: 160 தேர்தல் தொகுதிகளிலும் பிரசார முன்னேற்பாடுகள் பூர்த்தி

17ம் திகதியின் பின் தேர்தல் விஞ்ஞாபனம்

160 தேர்தல் தொகுதிகளிலும் தேர்தல் பிரசார பணிகளை முன்னெடுக்கும் பணி பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக ஐ. ம. சு. முன்னணி செயலாளர் நாயகமும் அமைச்சருமான சுசில் பிரேம் ஜெயந்த் தெரிவித்தார். வேட்பு மனுத் தாக்கல் செய்யப்பட்ட பின் ஐ. ம. சு. முன்னணியின் தேர்தல் விஞ்ஞாபனம் வெளியிடப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

மகாவலி நிலையத்தில் நேற்று (15) நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கருத்துத் தெரிவித்த அமைச்சர் மேலும் கூறியதாவது,

33 கூட்டுக் கட்சிகளுடன் இணைந்து நாடளாவிய ரீதியில் பிரசாரப் பணிகளை முன்னெடுப்ப தற்கான சகல ஒழுங்குகளும் மேற்கொள்ளப் பட்டுள்ளன. தேர்தல் குழுக்கள் அமைக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. வீடு வீடாகச் சென்று பிரசாரப் பணிகளை முன்னெடுப்பதற்கான முன்னேற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது.

தேர்தலுக்கான திகதி அறிவிக்கப்பட்டும் கூட மாகாண சபைத் தேர்தலில் காணப்பட்ட ஊக்கம் கூட எதிர்க்கட்சி தரப்பில் இம்முறை கிடையாது. ஆனால் 2005ல் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலைவிட சிறந்த முறையில் இம்முறை தேர்தல் பிரசாரப் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

நாடுபூராவும் உள்ள 1800 பிரதேச சபை உறுப்பினர்களுக்கு தேர்தல் பிரசார பணிகள் முன்னெடுப்பது தொடர்பாக அறிவுறுத்தல்கள் இலக்குகள் அடங்கிய கடிதங்கள் அனுப்பப்பட்டுள்ளன. மக்கள் தாமாக விரும்பி ஜனாதிபதியின் வெற்றிக்காக செயற்பட ஆரம்பித்துள்ளனர்.

ஐ. ம. சு. முன்னணியின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு உட்கட்டமைப்பு அபிவிருத்தி இளைஞர்களுக்கான தொழிற்பயிற்சி அடங்களான பல எதிர்காலத் திட்டங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன.


மேலும் இங்கே தொடர்க...

நம்பகத்தன்மையற்ற பொன்சேகா மக்களிடமிருந்து அந்நியமாகிறார்

இன்று சொல்வதை நாளை மறுப்பவர் - ஐ.ம.சு.மு அமைச்சர்கள்

தான் முதலில் தெரிவித்த கருத்தை 24 மணி நேரத்திற்குள் மாற்றிச் செல்லும் சரத் பொன்சேகாவின் நம்பகத்தன்மை தொடர்பில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இவருக்கு பிரதேச சபை உறுப்பினருக்குள்ள அரசியல் ஞானம் கூட கிடையாது என ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணித் தலைவர்கள் தெரிவித்தனர்.

இலங்கையை சர்வதேச நீதிமன்றத்தின் முன்னால் நிறுத்த முயற்சிக்கும் உள்நாட்டு வெளிநாட்டு சக்திகளுக்குத் தேவையான சாட்சிகளை பொன்சேகா வழங்கி வருவதாகவும் வாக்குப் பெறுவதற்காக இராணுவத்தைக் ‘காட்டிக்கொடுக்கும் இத்தகையோருக்கு ஜனவரி 26ஆம் திகதி மக்கள் தக்க பதிலை வழங்குவர் எனவும் அவர்கள் குறிப்பிட்டனர். ஐ. ம. சு. முன்னணி ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் மாநாடு நேற்று (15) மகாவலி நிலையத்தில் நடைபெற்றது. இங்கு கருத்துத் தெரிவித்த அமைச்சர் ஜோன் செனவிரத்ன கூறியதாவது:-

தனக்கு அவதூறு ஏற்படுத்தும் வகையில் செய்தி வெளியிடுவதாக சில ஊடகங்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்துள்ள பொன்சேகா பாரதூரமான செய்தியை வெளியிட்ட சண்டே லீடர் பத்திரிகைக்கு எதிராக வழக்குத் தொடர தயங்குகிறார். இவர் வெளியிட்ட கூற்று தவறுதலாக பிரசுரிக்கப்படவில்லை. திட்டமிட்டே வெளியிடப்பட்டுள்ளது.

இவர் நவம்பர் 16ம் திகதி தனது பதவியை இராஜினாமா செய்த போதும் ஆறு மாதங்களுக்கு பின்னரே ஐ. தே. க.வுடனும் ஜே. வி. பியுடனும் இவர் தேர்தலில் போட்டியிடுவது குறித்த இரகசியமாக பேசி வந்துள்ளதாகத் தெரிகிறது. பதவியில் இருக்கையிலே தனது உயரதிகாரிக்கு எதிராக தேர்தலில் போட்டியிட இவர் சதி செய்துள்ளார். தான் எங்கு செல்கிறோம் என்று தெரியாமல் குழம்பிப் போயுள்ள போன்சேகாவுக்கு பிரதேச சபை உறுப்பினருக்கு உள்ள அரசியல் ஞானம் கூட கிடையாது என்றார்.

அமைச்சர் ராஜித சேனாரத்ன கூறியதாவது:-

கீர்த்தி மிக்க இராணுவத்தளபதியான பொன்சேகா இன்று கீழ்த்தரமான அரசியல்வாதி என்ற நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார். தேர்தல் வெற்றிக்காக எத்தகைய மோசமான காரியத்திலும் இறங்கும் நிலைக்கு வந்திருக்கிறார்.

இறுதிக்கட்ட யுத்தத்தின் போது இவர் இலங்கையில் இருக்கவில்லை. அதனை அவரே ஏற்றுக்கொண்டுள்ளார். அவரின்றியே இறுதிக்கட்ட யுத்தம் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டது.

ஊடகவியலாளர் ஒருவர் வழங்கிய தகவல்படியே சரணடைய வந்த புலித்தலைவர்களை படையினர் கொலை செய்ததாக தான் கூறியதாக பொன்சேகா தெரிவித்துள்ளார். ஊடகவியலாளர்களின் ஆலோசனைப்படியா இவர் யுத்தத்தை முன்னெடுத்தார்.

இவர் ஜனாதிபதியானால் கூட உடகவியலாளர்கள் சொன்ன விடயங்களை அறிவிக்க ஊடகவியலாளர் மாநாடு நடத்துவார். பின்னர் அதனை மறுக்க மாநாடு நடத்துவார்.

மேற்படி குற்றச்சாட்டின் உண்மைத் தன்மையை பாதுகாப்பு செயலாளரிடம் கேட்டுத் தெரிந்து கொண்டிருக்க முடியும். தான் கூறிய கூற்றை 24 மணி நேரத்தில் மாற்றிக்கூறும் பொன்சேகாவின் நம்பகத் தன்மை தொடர்பில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இவரின் கூற்று காரணமாக பொன் சேகாவுக்குக் கிடைக்க விருந்த வாக்குகளை இழக்க நேரிட்டுள்ளது.

குடும்ப அரசியலை ஒழிக்கவே போட்டியிடுவதாக பொன்சேகா கூறியுள்ளார். ஆனால் பசில் வடக்கு, கிழக்குப் பகுதிகளை சிறப்பாக அபிவிருத்தி செய்து வருவதோடு கோட்டாபே யுத்தத்தை வெற்றிகரமாக முன்னெடுத்தார்.

தான் கூறிய கூற்றைத் தானே மறுப்பதன் மூலம் பொன்சேகாவின் பேச்சுக்களுக்கு முக்கியத்துவம் இல்லாமல் போயுள்ளது. அவரின் கருத்துக்கள் செல்லாக் காசுகளாகிவிட்டன என்றார்.


மேலும் இங்கே தொடர்க...

இலங்கையில் தமிழர் சுட்டுக் கொல்லப்படும் வீடியோ உண்மை -பிரிட்டிஷ்

பத்திரிக்கை

போர் பகுதியில் சரணடைய முற்பட்டவர்களை இலங்கை இராணுவம் சுட்டதாக சேனல்4 செய்திவெளியிட்டது

இலங்கையில் விடுதலைப் புலிகளுடனான போரின் இறுதிக் காலப்பகுதியில், இலங்கை இராணுவத்தினர் கைதிகளை சுட்டுக் கொல்லுவதாக குற்றஞ்சாட்டி அது தொடர்பில் வெளியான வீடியோப் படங்கள் ஆதாரமானவையே என்று பிரிட்டிஷ் நாளிதழ் ஒன்று கூறுகிறது.

ஜனவரியில் எடுக்கப்பட்டதாக கூறப்படும் இந்த வீடியோ ஐரோப்பாவை தளமாகக் கொண்டு இயங்கும் ஒரு மனித உரிமை அமைப்பு வெளியிட்டிருந்தது.

இந்த வீடியோப் படப்பதிவில் இலங்கை இராணுவ சீருடையில் இருப்பதைப் போன்று தோன்றும் ஒருவர் நிர்வாணமாகவும், கண்கள் கட்டப்பட்ட நிலையிலும் இருந்த இருவரை சுட்டுக் கொல்வதாக காண்பிக்கிறது.

பிபிசி உட்பட இந்த வீடியோப் படப் பதிவு பல தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகியது.

ஆனால் இந்த வீடியோ புனையப்பட்ட ஒன்று என்று இலங்கை இராணுவம் கூறுகிறது.

எனினும் சுயாதீனமான தடயவியல் நிபுணர் ஒருவர் நடத்திய ஒரு ஆய்வில் அந்த வீடியோ படப்பதிவில் ஏமாற்றும் செயலோ அல்லது ஒட்டி வெட்டும் வேலையோ இடம் பெறவில்லை என்று தெரியவந்துள்ளதாக அந்த அந்த நாளிதழ் கூறுகிறது.
மேலும் இங்கே தொடர்க...