13 டிசம்பர், 2010

லண்டனில் புலம் பெயர்ந்தோரின் செயற்பாடு: ஜனநாயக விழுமியங்களை மீறும் செயல் - அசாத்சாலி கண்டனம்


இலங்கையிலுள்ள பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்கள் எங்கள் நாட்டின் 30 ஆண்டு கால பயங்கரவாத யுத்தத்தின் பக்க விளைவுகளி னால் தங்களுக்கு ஏற்பட்டிருந்த பாதிப்புக்களில் இருந்து வாழ்க்கையை மீண்டும் புதிதாக புனர்நிர்மாணம் செய்யும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுக் கொண்டிருக்கும் அதேவேளையில், இலங்கையில் மீண்டும் இனங்களிடையே நல்லிணக்கத்தையும், ஒற்றுமையையும், ஐக்கியத்தையும் ஏற்படுத்தும் இன்றைய அரசாங்கத்திற்கு பூரண ஒத்துழைப்பும் நல்கி வருகிறார்கள்.

ஆயினும், பிரிட்டனில் வாழும் விரல் விட்டு எண்ணக் கூடிய ஒரு சில தீய சக்திகள் இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ லண்டன் மாநகரில் ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழக மாணவ ஒன்றியத் தில் நிகழ்த்த இருந்த உரைக்கு தடை ஏற்படுத்தக் கூடிய வகையில் முட்டுக்கட்டைகளை விதித்தமை, உண்மையிலேயே வேதனைக்குரிய கண்டிக்கக் கூடிய விடயம் என்று கொழும்பு மாநகரின் முன்னாள் பிரதி மேயர் எம். அஸாத் எஸ். சாலி விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

அஸாத் சாலி மன்றத்தின் தலைவரான இவர், ஜனநாயக பாரம்பரியத்தின் தாயகம் என்று பெருமையாக தன்னைப் பற்றி பறைசாற்றிக் கொள்ளும் பிரிட்டன், ஜனநாயக பாரம்பரியத்திற்கு ஏற்புடைய வகையில், எங்கள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, இலங்கையின் இனப் பிரச்சினைக்கு எடுக்கவுள்ள சட்டபூர்வமான, நியாயமான நடவடிக்கைகள் என்ன என்பதை முழு உலகத்திற்குமே விளக்கி கூறுவதற்கு எடுத்த முயற்சியை தடை செய்வதற்கு உதவியுள்ளது.

அதற்கு, பிரிட் டனில் உள்ள சில தமிழ் அதிருப்தி யாளர்களும், புலிகளின் ஆதரவாளர்களும் எங்கள் நாட்டைச் சேர்ந்த தேசத் துரோக சக்திகளும் செயற்பட்டமை உண்மையிலேயே வேதனைக்குரிய விடயம் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

பயங்கரவாதிகளினால் நாட்டில் ஏற் படுத்தப்பட்ட ரத்தக் களரியைப் போக்கி, மீண்டும் அமைதியையும், சமாதானத்தையும் ஏற்படுத்தி, நாட்டை வளப்படுத்தும் முயற்சியில் இறங்கியிருக்கும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு இவ்விதம் துரோகமிழைப்பதை ஜனநாயகத்தின் மீது அசையாத நம்பிக்கை கொண்டுள்ள எவரும் அங்கீகரிக்க முடியாது என்றும் தெரிவித்துள்ளார்.

பயங்கரவாத யுத்தத்தினால் பல்லாயிரக் கணக்கான அப்பாவிகள் இரு தரப்பிலும் உயிரிழந்தும், ஊனமுற்றும் வேதனைகளை அனுபவித்து இருக்கிறார்கள். இந்த பயங்கரவாத யுத்தத்தின் போதே, எங்கள் நாட்டின் இனங்களிடையே பகைமை யுணர்வும், நம்பிக்கையின்மையும் வலுப் பெற்று விளங்கியது.

ஆயினும், இப்போது சமாதானம் ஏற்பட்டிருக்கின்றதனால், இலங்கையில் உண்மையான இன ஒற்றுமை தோன்றியிருக்கிறது. இதனைப் பயன்படுத்தி நாட்டில் உண்மையான சமாதானத்தையும், பொருளாதார வளர்ச் சியையும் ஏற்படுத்துவதற்கும் முயற்சி செய்து வரும் ஜனாதிபதி அவர்களுக்கு, இத்தகைய முட்டுக்கட்டைகளை விதிப்பவர்களுக்கு நிச்சயம் மக்களின் ஆதரவு கிடைக்காது என்றும் அஸாத் சாலி கண்டனம் தெரி வித்துள்ளார்.

இலங்கை ஜனாதிபதிக்கு ஒரு வெளி நாட்டில் அபகீர்த்தியை ஏற்படுத்துவதற்கு மேற்கொள்ளப்படும் இத்தகைய சதிமுயற்சி கள், இலங்கையின் ஒவ்வொரு பிரஜைக்கும் செய்யும் அபகீர்த்தியாகவும், மன்னிக்க முடியாத தேசத் துரோக செயற்பாடாகவும் நாம் கருத வேண்டும்.

இவ்விதம் தேசிய இன உணர்வின்றி, தங்களின் சொந்த நன்மைக்காக, வெளிநாடுகளில், அகதி அந்தஸ்துடன், வேதனைகளை அனுபவித்து வரும் ஒரு சில அடிவருடிகளின் இந்த தீய செயற்பாட்டினால், வெளிநாடுகளில் உள்ள எல்லா புலம் பெயர்ந்த தமிழ் மக்க ளுக்கும் நன்மைக்கு பதில் தீமையையே ஏற்படுத்தும் என்றும் அஸாத் சாலி தமது அறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

ஒரு தேசத்தில் இனங்களிடையே பிரிவி னையும், பகைமை உணர்வும் நிலவினால் அந்த நாடு முன்னேற்றம் அடைவது சாத்தியமல்ல. இன ஒற்றுமையை ஏற்படுத்துவதன் மூலமே எமது நாட்டின் தனித்துவத்தையும், கலாசார பாரம்பரியங்களை பேணிப்பாதுகாத்து, நன்மையடைய முடியும் என்றும் குறிப்பிட்டு இருக்கும் அஸாத் சாலி, மறப்போம் மன்னிப்போம் என்ற நல்லுணர்வுடன், கடந்த கால விளைவுகளினால் நாம் பெற்ற பாடத்தை பயன்படுத்தி, இனங்களிடையே நல்லெண்ணத்தையும் ஒற்றுமையையும் வளர்ப்பதற்கு முன்வர வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இதனால் தான் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், தமிழ்த் தேசிய கூட்டமைப்பு ஆகியன இன்று, நாட்டில் இன ஒற்றுமை யையும், பொருளாதார முன்னேற்றத்தையும் மேற்கொண்டு வரும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு தங்கள் நேசக்கரத்தை நீட்டியுள்ளார்கள்.

ஆகவே, ஜனாதிபதிக்கு எதிரான இத்தகைய எதிர்ப்பு ஆர்ப்பாட் டங்களுக்கு இனிமேலாவது வெளிநாடுகளில் முற்றுப்புள்ளி வைப்பது அவசியம் என்றும் அஸாத் சாலி தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சி எதிர்காலத்திலாவது பிரிவினை வாதிகளையும் புலிகளையும் ஆதரிக்கும் தேசத்துரோக செயற்பாடுகளை கைவிட வேண்டும் என்றும் அஸாத் சாலி மேலும் தெரிவித்தார்.
மேலும் இங்கே தொடர்க...

வறக்காப்பொலவில் மேலும் நான்கு கொள்ளையர்கள் பலி காட்டுப்பகுதிகளில் இராணுவம், பொலிஸ் தேடுதல்

வறக்காபொல நகைக் கடை கொள்ளையுடன் தொடர்புடைய மேலும் நால்வர் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி கொல்லப்பட்டுள்ளனர்.

அம்மேபுஸ்ஸ காட்டுப் பகுதியில் வைத்து மடக்கிப் பிடிக்கப்பட்ட சந்தேக நபர்கள் கொள்ளையிட்டதாக கூறப்படும் நகைகள் மற்றும் கொள்ளைக்கு பயன்படுத்துவதற்காக மறைத்து வைக்கப்பட்டிருக்கும் ஆயுதங்களை காண்பிக்க அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். இதன்போது சந்தேக நபர்கள் பொலிஸார் மீது துப்பாக்கி சூடு நடத்த முற்பட்ட வேளையிலேயே பொலிஸார் நடத்திய பதில் துப் பாக்கிப் பிரயோகத்தில் கொல்லப்பட்டுள் ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த கொள்ளைச் சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் இருவரை மடக்கிப் பிடிக்கும் பொருட்டு காட்டுப் பகுதியில் பொலிஸாரும், இராணுவத்தினரும் தொடர்ந்தும் சுற்றி வளைத்து தேடுதல் நடத்தி வருவதாக பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். பொலிஸ் மற்றும் இராணுவத்தின் துப்பாக்கிச் சூட்டில் மொத்தம் ஆறு கொள்ளையர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

கடந்த வெள்ளிக்கிழமை வறக்காப்பொலை நகைக்கடையில் புகுந்த கொள்ளையர்கள் நகைகளை கொள்ளையடித்து விட்டு தப்பிச் சென்றுள்ளனர். இதனையடுத்து பொலிஸார் கொள்ளையர்களை பிடிப்பதாக பொலிஸார் மோட்டார் ரோந்து நடவடிக்கை யின் மூலம் பொலிஸார் கொள்ளையர்களை பின் தொடர்ந்து சென்றுள்ளனர்.

இதன் போது கொள்ளையர்கள் நடத்திய துப் பாக்கிப் பிரயோகத்தில் இரண்டு பொலிஸ் சார்ஜன்ட் கொல்லப்பட்டதுடன் மேலும் இரு பொலிஸார் காயமடைந்து கேகாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை வறக்காப்பொல பொலிஸா ரும், இராணுவமும் தொடர்ந்தும் சுற்றி வளைப்பு தேடுதல் நடவடிக்கைகளை மேற் கொண்டு வருகின்றனர்.
மேலும் இங்கே தொடர்க...

வீண் ஆர்ப்பாட்டங்களை கைவிட்டு பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு உதவுங்கள்



புலம் பெயர்ந்து வாழும் தமிழர்கள் சிலர் தொடர்ச்சியாக தமது நிம்மதியான வாழ்க்கையை குழப்பிவருகின்றார்கள் என்ற நிலைப்பாடு வட பகுதியில் வாழும் தமிழ் மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளதாக யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி இமெல்டா சுகுமார் தெரிவித்தார்.

வடக்கில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு எவ்வாறான உதவி ஒத்துழைப்புக்களை வழங்கலாம் என்று புலம்பெயர் தமிழர்கள் ஆக்கப்பூர்வமாக சிந்தித்து செயற்படுவதை விடுத்து வீணான ஆர்ப்பாட்டத்திலும், வட மாகாணம் தொடர்பில் கூறப்படும் பொய்யான தகவல்களை திரிவுபடுத்தி வெளியிடும் விடயத்திலேயே தமது நேர காலங்களை கழித்து வருவதாக அவர் மேலும் தெரிவித்தார்.

ஒரு சிலர் தம்மால் முடியுமான உதவி, ஒத்துழைப்புக்களை வழங்கி வருகின்றனர். இந் நிலையில் வன்னியில் வாழும் மக்களுக்கு புலம் பெயர் தமிழர்கள் உதவாவிட்டாலும் பரவாயில்லை. தொல்லை செய்ய வேண்டாம் என்று அவர் கேட்டு கொண்டார்.

வெளிநாடுகளில் வாழும் தமிழர்கள் வட பகுதியில் வாழும் தமிழ் மக்களின் நிலைமைகளை அறியாமலேயே பல்வேறு கருத்துக்களை வெளியிட்டும், ஆர்ப்பாட்டங்களையும் நடத்தி வருவதாக அவர் சுட்டிக்காட்டினார். வட பகுதி மக்கள் யுத்தத்தினால் முழுமையாக பாதிக்கப்பட்டவர்கள். தமது உறவுகளையும் உடன் பிறப்புக்களையும், சொத்துச் செல்வங்களையும் இழந்து கஷ்டப்பட்டவர்கள் தற்பொழுது யுத்தம் முடிவுற்ற பின்னர் மீண்டும் அமைதியான சூழலில் இயல்பு வாழ்க்கை நடத்த ஆரம்பித்துள்ளனர்.

இங்குள்ள மக்களை பாதுகாப்பாக மீட்டெடுத்தது தொடக்கம் இன்று வரை அரசாங்கமும், பாதுகாப்புப் படையினரும் தம்மாலான பூரண ஒத்துழைப்புக்களை வழங்கி வருகின்றனர்.

மக்கள் மத்தியில் துரிதமாக இயல்பு வாழ்க்கை ஏற்படுத்தும் வகையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலை மையிலான அரசாங்கம் கோடிக்கணக்கான நிதிகளை ஒதுக்கீடு செய்து பாரிய அபி விருத்தி பணிகளை முன்னெடுத்து வரு கின்றது.

பொருளாதார அபிவிருத்தி அமைச்சு, வட மாகாண சபை, ஆகியவற்றின் ஊடாக வும் பல்வேறு திட்டங்கள் சிறந்த முறை யில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என்றார்.

தமது எதிர்காலத்தை மீண்டும் ஆரம் பித்துள்ள மக்களின் வாழ்வாதாரத்தை மேம் படுத்துவதற்கான வசதிகளை அரசாங்கம் செய்து கொடுத்து வருகின்றது. இந்நிலையில் புலம் பெயர்ந்து வாழும் சில தமிழர்களின் செயற்பாடுகள் இந்த மக்களுக்குப் பாரிய பாதிப்பை ஏற்படுத்தும் ஏன்றார்.

யுத்தத்தின் கஷ்டங்களை அனுபவிக்காமல் தமது வசதிகளை பயன்படுத்தி வெளிநாடு களுக்குச் சென்றவர்களில் சிலரே இவ்வாறு செயற்படுகின்றனர். ஆனால் அவர்கள் இங்கு ள்ள மக்களின் நிலைமைகளை பற்றி சிந்தித்து பார்ப்பதில்லை.

30 வருட காலத்தின் இறுதி முடிவு பூச்சி யமாகவே உள்ளது. எனவே இனியாவது இருக்கின்ற மக்களை பாதுகாத்து இவர் களுக்கு தேவையான வசதிகள் செய்து கொடுக்கப்பட வேண்டும்.

புலம் பெயர்ந்த மக்களுக்கு முடியுமாயின் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசாங்கத்துடன் இணைந்து உங்களால் செய்ய முடியுமான உதவி ஒத்துழைப்புக்களை வழங்குங்கள் என்று நான் கேட்டுக் கொள் கின்றேன்.

வடக்கில் வாழும் ஒரு குடும்பத்தை புலம் பெயர்ந்து வாழும் ஒருவர் பொறுப் பெடுத்தாலே இந்த மக்களின் வாழ்வில் பாரிய மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என என்று அரசாங்க அதிபர் சுட்டிக் காட்டினார்.
மேலும் இங்கே தொடர்க...

தொழில் பெற்றுத் தருவதாக பண மோசடி மாகாண சபை உறுப்பினர்கள் 3 பேர் மீது ஒழுக்காற்று நடவடிக்கை



அரசாங்க ஆஸ்பத்திரிகளில் சுகாதார சுத்திகரிப்பாளர் தொழில் பெற்றுத் தருவதாகக் கூறி பணம் பெற்றுக் கொண்ட மாகாண சபை உறுப்பினர்கள் மூவருக்கு எதிராக ஒழுக்காற்று விசாரணை நடத்தப்படும் என்று சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேன நேற்றுத் தெரிவித்தார்.

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய குழு நாளை செவ்வாய்க்கிழமை கூடவிருக்கின்றது. இக்கூட்டத்தின் போது இவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று விசாரணை நடத்துவதற்கான குழு நியமிக்கப்படும் எனவும் அமைச்சர் கூறினார்.

இக்குழுவின் விசாரணையின் அடிப்படையில் இவர்களுக்கு எதிரான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதும் அவர்களை மாகாண சபை உறுப்பினர்கள் பதவியிலிருந்து வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டார். அரசாங்க சுகாதாரத் துறைக்கென சுகா தார சுத்திகரிப்பாளர்களாக 850 பேர் நேற்று சேர்த்துக் கொள்ளப்பட்டனர்.

இவர் களுக்கு நியமனக் கடிதம் வழங்கும் வைபவம் கொழும்பு – 7 லுள்ள ஜோன் டி சில்வா கலையரங்கில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் உரையாற்றும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார்.

இது தொடர்பாக அமைச்சர் மைத்திரிபால சிறிசேன மேலும் குறிப்பிடுகையில், சுகாதார சுத்திகரிப்பாளர் தொழில் பெற் றுத் தருவதாக இரு மாகாண சபை உறுப்பினர்கள் ஒன்றரை இலட்சம் ரூபா படி இருவரிடமும், மற்றொருவரிடம் 75 ஆயிரம் ரூபாவை மற்றொரு மாகாண சபை உறுப்பினரும் பெற்றுள்ளனர். இவர்கள் பணம் பெற்றதற்கும், அப்பணம் வங்கியில் வைப்பிலிடப்பட்டதற்குமுரிய ஆவணங்கள் தம்மிடமுள்ளன.

இந்த விடயம் தொடர்பாக ஸ்ரீ ல. சு. கட்சியின் மத்திய குழுவின் கவனத்திற்குக் கொண்டு வந்து அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும்.

இதேவேளை அரசாங்க சுகாதாரத் துறையில் தொழில் பெற்றுத் தருவதாகக் கூறி வேறு எவராவது பணம் பெற்றிருந்தால் அவர்கள் தொடர்பான தகவல்களையும் ஆவணங்களையும் தமக்கு வழங்குமாறும் அவர்களுக்கு எதிராகவும் ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
மேலும் இங்கே தொடர்க...

இலங்கை நிர்வாக சேவைக்கு மேலும் 130 அதிகாரிகள் புதனன்று நியமனக் கடிதங்கள் வழங்கப்படும்



அரசாங்கத்தின் அபிவிருத்தித் திட்டங்களை விரைவுபடுத்தும் வகையில் இலங்கை நிர்வாக சேவைக்கு மேலும் புதிதாக 130 அதிகாரிகள் நியமிக்கப்படவுள்ளனர்.

இவர்களுக்கான நியமனக் கடிதம் வழங்கும் வைபவம் நாளை மறுதினம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் அலரி மாளிகையில் நடைபெறவுள்ளது. இந்நிகழ்வில் ஜனாதிபதியிடமிருந்து புதிய நிர்வாக சேவை அதிகாரிகள் தமக்கான நியமனக் கடிதங்க ளைப் பெற்றுக் கொள்வரென பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சு தெரிவித்தது.

பொதுநிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சு இதற்கான எற்பாடுகளை மேற்கொண்டுள்ளதுடன் நாடளாவிய ரீதியில் நிலவும் வெற்றிடங்களுக்கு இவர்கள் நியமிக்கப்படவுள்ளதாகவும் அமைச்சின் உயரதிகாரியொருவர் தெரிவி த்தார்.

இதேவேளை, அண்மையில் அமைச்சுக்களின் செயலாளர்களை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சந்தித்தபோது; இது விடயமாக அவர்களுடன் கலந்துரை யாடினார். இதன்போது முக்கிய விடயமொன்றையும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

இளம் நிர்வாக சேவை உத்தியோகத்தர்களுக்கு சேவைக்கான அனுபவம் போதாது எனக் காரணம் காட்டி ஏற்கனவே பதவியிலிருப்போர் 55 வயது க்குப் பின்னரும் தமது பதவிக் காலத்தைத் தொடரும் நிலை உள்ளது. இனி இத்தகைய நீடிப்புக்கு இடமில்லை எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

இது விடயத்தில் அமைச்சின் செயலாளர்கள் தமது கவனத்தைச் செலுத்த வேண்டியதன் அவசியத்தையும் ஜனாதிபதி வலியுறுத்தினார். இளம் உத்தியோகத்தர்களுக்குக் கிடைக்கும் வாய்ப்பை தவறவிட இடமளிக்கக் கூடாது எனவும் ஜனாதிபதி கேட்டுக்கொண்டார்.

இது தொடர்பில் அமைச்சின் செயலாளர் தெரிவிக்கையில்; ஏற்கனவே 55 வயதை எட்டியவர்கள் தமது சேவைக்காலத்தில் பெற்றுக்கொள்ளாத விடுமுறையைக் காரணங்காட்டியும் தமது சேவையை நீடித்துக்கொள்ள முனை கின்றனர். அத்தகைய நடவடிக்கைகளுக்கும் இடமளிக்கப்படமாட்டாது என்றார்.

இலங்கை நிர்வாக சேவை ஆட்சேர்ப் புக்காக கடந்த வருடத்தில் திறந்த போட் டிப் பரீட்சை நடத்தப்பட்டதுடன் சுமார் 20,000 பேர் இப்பரீட்சைக்கு தோன்றினர். இப்பரீட்சையில் அதிக புள்ளிகள் பெற்ற வர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களுக்கான வாய்மூல பரீட்சையொன்றும் நடத்தப்பட்டது.

இப்பரீட்சையிலிருந்தே 130 பேர் தேர்ந் தெடுக்கப்பட்டுள்ளனர் என அரச சேவை இணைந்த சேவைகள் பணிப்பாளர் பிரசாத் பியசேன தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரி விக்கையில், வருடாந்தம் ஓய்வுபெறுவோர் வெவ்வேறு காரணங்களுக்காக பதவி விலகுவோர் ஆகியன கருத்திற்கொள் ளப்பட்டே வெற்றிடங்களுக்கேற்ப நிர்வாக சேவைக்கு ஆட்சேர்ப்பு செய்யப்படுகின்றன. 2009ம் வருடத்தில் நடத்தப்பட்ட பரீட் சைக்கிணங்கவே மேற்படி 130 பேருக்கு நியமனம் வழங்கப்படுவதுடன் 2010ம் ஆண்டுக்கான ஆட்சேர்ப்பு விபரங்கள் வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளன எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
மேலும் இங்கே தொடர்க...