2 நவம்பர், 2009

தமிழக இலங்கை அகதிகள் குறித்து முதல்வர் அவசர ஆலோசனை




உள்ள இலங்கை அகதிகளின் நிலை குறித்து முதல்வர் கருணாநிதி இன்று அவசர ஆலோசனை நடத்தவுள்ளார். அமைச்சர்கள், துறை அதிகாரிகள் இதில் கலந்து கொள்கின்றனர்.

இதுகுறித்து முதல்வர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில்,

"இலங்கையில் தமிழ் அகதிகள் முள்வேலி முகாம்களுக்குள்ளே அவதிப்படுவதை எண்ணி கண்ணீர் உகுத்து அவர்களை அந்த முகாம்களில் இருந்து விடுவிக்க தமிழகத்தில் இருந்து திமுக, காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் ஆகிய கட்சிகளை சேர்ந்த 10 நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒரு குழுவாகச் சென்றனர்.

அவர்கள் நிலை அறிய செய்த இந்த ஏற்பாட்டின் விளைவாக மாபெரும் வெற்றியோ, மகத்தான வெற்றியோ கிடைக்கா விட்டாலும்கூட, அடைபட்டிருந்த 3 லட்சம் பேர்களில் சுமார் ஒரு லட்சம் பேரையாவது இதுவரை அந்த கூண்டுகளில் இருந்து வெளியே கொணர்ந்து அவர்கள் சொந்த இருப்பிடங்களுக்கு செல்வதற்கான வழிவகை செய்யப்பட்டுள்ளது.

அது போதுமானதல்ல. மேலும் அவர்கள் அனைவரையும் விடுவித்து, வாழ்வாதாரங்களை வகுத்தளித்து மீண்டும் அமைதியான நல்வாழ்வு பெற்றிட இந்திய அரசின் முயற்சிகளும், அதற்காக நமது தூண்டுதல்களும் தொடங்கப்பட வேண்டுமென்றே கருதுகிறோம்.

இந்த நிலையில் ஏற்கனவே நான் இந்திய மண்ணில் அகதிகளாக குடியேறியிருக்கின்ற இலங்கை தமிழர்களை இந்த மண்ணின் நிரந்தர குடிமக்களாக ஆக்கிட வேண்டும் என்று, அதற்கான முயற்சியிலே ஈடுபட்டு நமது வேண்டுகோளை பரிசீலிப்பதாக இந்திய பேரரசின் சார்பிலும் வாக்களிக்கப்பட்டிருக்கிறது.

இதற்கிடையே இலங்கை முகாம்களில் இருக்கின்ற தமிழர்களை விடுவிக்க வேண்டும் என்ற முயற்சி ஒரு புறமிருக்க தமிழ்நாட்டில் தொடர்ந்து பல ஆண்டு காலமாக இலங்கையில் இருந்து வந்த தமிழ் அகதிகள் நிலை என்ன என்பதைச் சுட்டிக்காட்டுகின்ற வகையிலும், இன்னும் சொல்லப்போனால் நம் நெஞ்சத்தைக் குத்திக்காட்டுகின்ற நிலையிலும் நவம்பர் 11ஆம் திகதியிட்ட ஓர் ஆங்கில வார இதழின் தமிழ் பதிப்பில் வெளிவந்துள்ள நீண்ட கட்டுரை ஒன்றை நான் படிக்க நேர்ந்தது.

இலங்கையில் அகதிகளாக உள்ள தமிழர்கள் வாடி வதங்குவது ஒரு புறமிருக்க, இங்கே நமது தமிழ் மண்ணில் அகதிகளாக வந்து சேர்ந்துள்ள பல்லாயிரக்கணக்கான இலங்கை தமிழ் மக்கள் தாங்கள் வாழ்வதற்குரிய அடிப்படை ஆதாரங்கள், வசதிகள் எதுவுமின்றி எத்துணை துன்பங்களுக்கு உள்ளாகியிருக்கிறார்கள் என்பதை புகைப்படங்களோடு அந்த வார ஏடு வெளியிட்டுள்ள காட்சிகளைக் கண்டு, கண்ணீர் பெருக்கியதோடு அவர்கள் கவலைகளை உடனடியாகத் தீர்ப்பதற்கு அவசர நடவடிக்கை மேற்கொள்வது தான் நமது கடமை ஆகும் எனக் கருதினேன்.

இலங்கைத் தமிழ் அகதிகளைப் பாதுகாக்க வேண்டும்

இலங்கைத் தமிழ் அகதிகளைப் பாதுகாத்திடவும், அவர்கள் தம் பட்டினி போக்கிடவும், படிப்பு வாய்ப்பு வழங்கிடவும், அவர்களது குறைகளை நீக்கி தாய் மண்ணில் வாழ வழியின்றி தமிழ் மண்ணில் வாழ்வதற்கு வந்தவர்களை அமைதியாக வாழச் செய்திட இங்குள்ள தமிழக அரசின் அதிகாரம் பெற்ற எல்லா துறையினருக்கும் பொறுப்பு உண்டு.

இதை நிலை நாட்டி அவர்களுக்கு வாழ்வளிக்கும் வகையில் உழைத்திடுவோம் என்ற உறுதியோடு செயல்பட வேண்டும் என தொடர்புடைய துறையினர் அனைவருக்கும் ஆலோசனை வழங்கி- ஆய்வுகள் மேற்கொண்டு, ஆவன செய்திடவும்- அவர் தம் அல்லல் போக்கிடவும் அட்டியின்றி உடனே அரும்பணிகள் தொடரப்பட வேண்டும் என்று ஆணையிடுவதற்கு வாய்ப்பாக இன்று தமிழக தலைமைச் செயலகத்தில் சம்பந்தப்பட்ட அமைச்சர்கள், அதிகாரிகள் ஆகியோரை அழைத்து விவாதிக்கவிருக்கிறேன்.

இலங்கைத் தமிழ் அகதிகளுக்கு இன்னல் இம்மியளவும் இல்லாத வகையில் இன்புற்று வாழ்ந்திட இன்றைய கூட்டத்தின் வாயிலாக தேவையான நிதி ஒதுக்கி, அவர் தம் தேவைகள் நிறைவு செய்யப்பட வழி வகுக்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனந்தசங்கரி வலியுறுத்தல்

இந்நிலையில் இலங்கை தமிழ் ஐக்கிய விடுதலை முன்னணித் தலைவர் ஆனந்தசங்கரி முதல்வர் கருணாநிதிக்கு எழுதியுள்ள கடிதத்தில்,

"இந்தியாவில் உள்ளது போல அதிகாரங்களைப் பகிர்ந்தளித்தால் பெரும்பான்மையான தமிழர்களுக்கு ஓரளவு திருப்தி ஏற்படும். இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி அதிகாரப் பகிர்வுக்கு இலங்கைக் குழுவைச் சம்மதிக்க வைக்க வேண்டும். இது தொடர்பாக மத்திய அரசுக்கு நீங்கள் (கருணாநிதி ) அழுத்தம் கொடுக்க வேண்டும்.

போரினால் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு உரிய நிவாரண உதவியைப் பெற்றுத் தரவும் முயற்சிகளை நீங்கள் மேற்கொள்ள வேண்டும்" என்று வலியுறுத்தியுள்ளார்.
மேலும் இங்கே தொடர்க...
ஓஷியானிக் கப்பலிலுள்ளவர்கள் இலங்கையர்கள் என நிரூபிக்கப்பட்டால் அந்நாட்டின் உதவி நாடப்படும்-இந்தோனேஷியா தெரிவிப்பு




கடற்பரப்பில் தரித்திருக்கும் அவுஸ்திரேலிய கப்பலிலுள்ள இலங்கை அகதிகளுக்கும் இந்தோனேஷிய அதிகாரிகளுக்குமிடையேயான நெருக்கடி தொடர்ந்து கொண்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. குறித்த கப்பலில் இருக்கும் அகதிகள் இலங்கை பிரஜைகள் என ஊர்ஜிதம் செய்யப்படும் பட்சத்தில் இலங்கையின் உதவி நாடப்படுமென இந்தோனேஷிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதேவேளை, அவுஸ்திரேலிய கப்பலிலுள்ள இலங்கை அகதிகளுக்கு எதிர்வரும் 06 ஆம் திகதிவரை காலக்கெடு விதிக்கப்பட்டுள்ளதாகவும் காலக்கெடு முடிந்தவுடன், அடுத்த கட்ட நடவடிக்கை என்ன என்பதை அவுஸ்திரேலியாவே தீர்மானிக்க வேண்டுமெனவும் இந்தோனேஷியா தெரிவித்துள்ளது.

மேலும், இந்தோனேஷியா கடற்பகுதிக்குள் குறித்த கப்பல் வருவதற்கு நாம் தாராளமனப்பான்மையுடன் நடந்து கொண்டோம். இலங்கையர்கள் தொடர்ந்தும் கப்பலுக்குள்ளேயே உள்ளனர். இங்கு அவர்கள் 06 ஆம் திகதிவரை இருக்கலாம் என இந்தோனேஷிய வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் டியூக்கு பைஸாஷியா தெரிவித்துள்ளார்.

கப்பலில் இருப்போர் இலங்கையர்கள்தானா என்று வினவியமைக்கு இந்தேõனேஷிய வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் பதிலளிக்கையில், கப்பலுக்குள் இருப்பவர்கள் இலங்கையர்கள் என அவுஸ்திரேலிய அரசாங்கம் அறிவித்துள்ளது. எனினும் இந்தேõனேஷிய அதிகாரிகளினால் இன்னும் உறுதி செய்யப்படவில்லை என்றும் அவர் சொன்னார்.

மேலும் கப்பலுக்குள் இருக்கும் அனைவரையும் விசாரணை நடத்திய பின்னர் அவர்கள் எந்த நாட்டு பிரஜைகள் என்பதை நாம் ஊர்ஜிதம் செய்வோம் என்றும் அவர் பதிலளித்துள்ளார். இதேவேளை, ஓஷியானிக் வைக்கிங் எனப்படும் கப்பலிலுள்ள 78 பேரில் புகலிடம் கோருவோரும் பெரும்பாலானோர் கடந்த சில வருடங்களை இந்தோனேஷியாவில் கழித்தார்களா என்பதை தன்னால் உறுதிப்படுத்த முடியவில்லையென அவுஸ்திரேலியா வெளிவிவகார அமைச்சர் ஸ்டீபன் ஸ்மித் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, பெரும்பாலான புகலிடம் கோருவோர் இந்தோனேஷியாவில் ஐந்து வருடங்களை கழித்ததாகவும் அங்குள்ள ஐ.நா. அலுவலகம் தங்களுக்கு அகதிகள் அந்தஸ்த்து வழங்கியுள்ளதாகவும் தகவல்களை அனுப்பியுள்ளனர். ஓஷியானிக் வைக்கிங்கிலுள்ள அனைவரும் தமிழர்கள் எனவும், கடந்த இரண்டு வாரங்களுக்கு மேலாக அவர்கள் குறித்த கப்பலிலேயே இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது. மேலும், அவுஸ்திரேலியா அவர்களை அகதிகளாக ஏற்றுக் கொள்ளாத வரையில் கப்பலைவிட்டு தாங்கள் இறங்கப் போவதில்லையெனவும் தெரிவித்துள்ளனர். இதனிடையே இப்பிரச்சினை தீர்வுக்குவர எவ்வளவு காலம் நீடிக்கும் என தெரியவில்லையென்று அவுஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் ஸ்மித் தெரிவித்துள்ளார்.

அவர் தொடர்ந்தும் கூறுகையில், இதற்கென நாம் ஒரு காலத்தையோ ஒரு நேரத்தையோ குறிப்பிட முடியாது. இது மிகவும் கடினமானதும், குளறுபடியானதுமான விடயமாகும் என்று தெரிவித்துள்ளார். மேலும் இந்தோனேஷிய கடற்பரப்பிலிருந்தும் இவர்கள் பிடிபட்டதன் காரணமாக இந்தோனேஷிய அரசாங்கத்துடன் பேசி ஒரு முடிவை காண அவுஸ்திரேலியா முயன்று வருகின்றது என்றும் அவர் குறிப்பிட்டார்.

அத்துடன், இப்பிரச்சினையை முடிவுக்குக் கொண்டுவரும் வகையில், எமது முழு பலத்தையும் உறவையையும் வைத்து இந்தோனேஷியாவுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார். அவுஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் ஸ்மித் இது தொடர்பில் மேலும் கூறுகையில், மக்கள் கடத்தப்படுவதை முறியடிக்க அவுஸ்திரேலியாவும், இந்தோனேஷியாவும் தொடர்ந்தும் ஒரு முகமாக நின்று செயற்படுவதுடன் தமது உறவுகளை வலுப்படுத்துமெனவும் தெரிவித்துள்ளார்
மேலும் இங்கே தொடர்க...
இடம்பெயர்ந்த சகலரும் 2010ஆம் ஆண்டு ஜனவரிக்குள் மீள் குடியமர்த்தப்படுவர்- ஜனாதிபதி பல்கேரிய ஜனாதிபதியிடம் தெரிவிப்பு



இடம்பெயர்ந்து முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள மக்கள் ஒவ்வொரு நாளும் மீளக்குடியமர்த்தப்படுகின்றனர். இடம்பெயர்ந்த சகலரும் 2010 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்திற்குள் மீள் குடியமர்த்தப்படுவார்கள் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். ஒரு நாள் விஜயத்தை மேற்கொண்டு இலங்கைக்கு வருகைதந்த பல்கேரிய ஜனாதிபதி ஜோர்ஜி பார்வனொவ் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை அலரிமாளிகையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். இதன் போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இந்த சந்திப்பு தொடர்பில் ஜனாதிபதி செயலகம் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;

பயங்கரவாதத்தை ஒழித்ததுடன் இலங்கையை மீண்டும் கட்டியெழுப்புவதற்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ எடுத்துள்ள முயற்சிகள் வரவேற்கத் தக்கதாகும் என்று தெரிவித்துள்ள பல்கேரிய ஜனாதிபதி இன மற்றும் மத ரீதியில் மக்களை ஐக்கியப்படுத்தி இலங்கையின் இறைமை மற்றும் ஒருமைப்பாட்டை பாதுகாத்து ஜனநாயகத்திற்குள் பிரவேசிக்கும் வரையில் மனித உரிமைகளை பாதுகாத்து இடம்பெயர்ந்த மக்கள் அவர்களின் சொந்த இடங்களுக்கு அனுப்பிவைக்கப்படுவர் என நான் நம்புகின்றேன் என்றார்.

இச்சந்திப்பில் இரு நாடுகளுக்கிடையில் பொருளாதாரம், கலாசாரம் மற்றும் ஏனைய துறைகளை மேம்படுத்தல் தொடர்பில் அரசியல் மற்றும் இணக்கப்பாட்டின் அடிப்படையில் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்தல் தொடர்பில் இருநாட்டு தலைவர்களும் கலந்துரையாடியுள்ளனர். இந்த சந்திப்பின் போது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மேலும் தெரிவித்துள்ளதாவது;

முன்னதாக 2 இலட்சத்து 80 ஆயிரம் பேர் இடம்பெயர்ந்திருந்தனர். அந்த தொகை தற்போது 1 இலட்சத்து 60 ஆயிரமாக இருக்கின்றது . மீள் குடியேற்ற நடவடிக்கை தொடர்ச்சியாக ஒவ்வொரு நாளும் முன்னெடுக்கப்படுகின்றது. இடம்பெயர்ந்த சகலரும் 2010 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்திற்குள் மீளக்குடியமர்த்தப்படுவார்கள் என்றார். இந்த சந்திப்பிற்கு பின்னர் பல்கேரிய அரச வர்த்தக கைத்தொழில் சபைக்கும் இலங்கை வர்த்தக கைத்தொழில் சபைக்கும் இடையில் ஒப்பந்தங்களும் கைச்சாத்திடப்பட்டன.

கூட்டறிக்கை இதேவேளை, இரு நாடுகளும் இணைந்து வெளியிட்டுள்ள கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: இரு நாட்டு தலைவர்களுக்கும் இடையில் நடைபெற்ற சந்திப்பில் அரசியல் பேச்சுக்களை நடத்துவதற்கும் பொருளாதாரம், கலாசாரம் மற்றும் பரஸ்பர நலன்களைக் கொண்ட பல்வேறு விடயங்கள் குறித்து இரு நாடுகளும் ஒத்துழைப்பை ஏற்படுத்திக் கொள்வதற்கும் வாய்ப்புக்கள் உள்ளதாக இரு தலைவர்களும் உடன்பாடு தெரிவித்துள்ளனர். ஐக்கியநாடுகள் மற்றும் ஏனைய சர்வதேச நிறுவனங்களிலிருந்தும் இரு தர்ப்பினரும் பூரண ஒத்துழைப்பை பெறுவதாக சுட்டிக்காட்டப்பட்டது.

தமிழீழ விடுதலைப் புலிகளை தோற்கடித்ததை அடுத்து நாட்டில் அரசாங்கம் மேற்கொண்டுவரும் புனர்நிர்மாண பணிகள் பற்றியும் இடம்பெற்றுள்ள முன்னேற்றங்கள் பற்றியும் ஜனாதிபதி எடுத்துக் கூறினார். இடம் பெயர்ந்தவர்களை சொந்த இடங்களில் குடியமர்த்துவது, ஜனநாயக கோட்பாடுகளுக்கு அமைய மனித உரிமைகளுக்கு மதிப்பு கொடுப்பது, இலங்கை இறைமையையும் பிராந்திய ஒருமைப்பாட்டையும் பேணுவது உட்பட சகல, இன, சமுதாய பங்களிப்புடன் ஜனாதிபதியின் முயற்சிகள் வெற்றிகரமாக நிறைவேறும்.
மேலும் இங்கே தொடர்க...
யுத்தத் குற்றச்சாட்டுக் குறித்து அமெரிக்காவின் விசாரணைகளை தடுக்க நடவடிக்கை அவசியம்- ஜே.வி.பி



அமெரிக்காவில் கிறீன் காட் வதிவிட விசா விண்ணப்பத்தை தாக்கல் செய்துள்ள ஜெனரல் சரத் பொன்சேகா மீது யுத்தக் குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக விசாரணைகளை நடத்த அமெரிக்கா முன்னெடுத்து வரும் முயற்சிகளை தடுத்து நிறுத்த அரசாங்கம் இராஜதந்திர ரீதியில் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென ஜே.வி.பி. தெரிவித்துள்ளது. வதிவிட விசாரணை வரையறைகளை மீறிய அமெரிக்காவின் இந்த முயற்சியானது இலங்கையின் இறையாண்மையை மீறும் செயலாகும் என்றும் சுட்டிக்காட்டியுள்ளது. பெலவத்தையில் உள்ள ஜே.வி.பி. தலைமையகத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை அவசரமாக நடத்தப்பட்ட ஊடகவியலாளர் மாநாட்டில் உரையாற்றும் போதே அதன் தலைவர் சோமவன்ச அமரசிங்க இதனைத் தெரிவித்தார். அங்கு அவர் மேலும் கூறுகையில்:

அமெரிக்காவிற்கு தனிப்பட்ட விஜயத்தை மேற்கொண்டுள்ள ஜெனரல் சரத் பொன்சேகா அந்த நாட்டின் கிறீன் காட் வதிவிடத்திற்காக விண்ணப்பத்தை தாக்கல் செய்துள்ளார். இவ்வாறானதொரு விண்ணப்பம் தாக்கல் செய்யப்படும் போது அமெரிக்க உள்நாட்டு பாதுகாப்பு அமைச்சால் வதிவிடம் கோருபவரால் அந்நாட்டுக்கு அச்சுறுத்தல் ஏற்படுமா என்பது தொடர்பாக விசாரணைகளை நடத்துவது வழக்கம். ஆனால் இந்த வரையறையை மீறி ஜெனரல் பொன்சேகாவுடன் பயங்கரவாதத்திற்கு எதிராக நடத்தப்பட்ட யுத்தம் தொடர்பாக யுத்தக் குற்றச்சாட்டு விசாரணைகளை நடத்துவதற்கான முயற்சிகளை அமெரிக்கா முன்னெடுத்துள்ளது.

இவ்வாறான விசாரணைகள் நடத்துவதற்கு அமெரிக்காவிற்கோ அல்லது வேறு எந்த நாட்டுக்கோ எந்தவொரு அதிகாரமும் கிடையாது. இது எமது இறையாண்மையை மீறும் செயலாகும். ஜெனரல் சரத் பொன்சேகா அல்லது இலங்கைப் பிரஜை எவரானாலும் கிறீன் காட் வதிவிட விண்ணப்பத்தை முன்வைக்கும் போது அமெரிக்காவினால் ஒரு வரையறைக்குட்பட்ட ரீதியிலேயே விசாரிக்க முடியும். இதனை மீற முடியாது. ரஎனவே பயங்கரவாதத்தை முழுமையாக ஒழிக்க முன்னின்று உழைத்தவர் அவர் நாட்டுக்கு மிக முக்கியமானவர் அத்துடன் அவர் அரசாங்கத்தில் பதவி வகிக்கும் உயர் அதிகாரி. எனவே அரசாங்கம் இவ்விடயம் தொடர்பில் இராஜதந்திர ரீதியில் தலையிட்டு எமது நாட்டின் இறையாண்மையை பாதிக்கும் வகையிலான விசாரணைகளை தடுத்து நிறுத்தி நாட்டுக்கு தனது பங்களிப்பை வழங்கிய சரத் பொன்சேகாவை பாதுகாக்க வேண்டும். அதனை விடுத்து ஏனைய விசாரணைகளை இராஜதந்திர ரீதியில் அணுகாது உதாசீன மனப்பான்மையோடு செயற்பட்டது போன்று இப்பிரச்சினையிலும் அமைதியாக இருக்காது இதனைத் தடுத்து நிறுத்துவதற்காக ஜே.வி.பி. அனைத்து நடவடிக்கைகளையும் முன்னெடுக்கும். உயிரைப் பணயம் வைத்து போராட நாம் தயார்.

இப்பிரச்சினையை ஒரு போதும் குறுகிய அரசியல் நோக்கங்களுக்காக பயன்படுத்த வில்லை. 30 வருட கால பயங்கரவாதத்தை ஒழிப்பதற்கு முன்னின்ற தேசப்பற்றாளனைப் பாதுகாத்து தேசத்தின் இறையான்மையை பாதுகாக்கவே முயற்சிக்கின்றோம். ஜெனரல் சரத் பொன்சேகா அரசியலுக்கு வருகிறாரா? இல்லையா என்பது தற்பொழுது உள்ள பிரச்சினையல்ல. அது தொடர்பில் நாம் கவனம் எடுக்கவில்லை. அவர் அரசியலுக்கு வரும் போது சரியான நேரத்தில் வருவார் என்று சோமவன்ச தெரிவித்துள்ளார். இந்த ஊடகவியலாளர் மாநாட்டில் ஜே.வி.பி.யின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா, பிமல் ரட்ணாயக்க எம்.பி. ஆகியோரும் கலந்து கொண்டனர்
மேலும் இங்கே தொடர்க...

மீள்குடியேற்றப் பணி ஜனவரிக்குள் பூர்த்தி

ஜனாதிபதி அறிவிப்பு; பல்கேரியாவுடன் ஒப்பந்தம் கைச்சாத்து


வடக்கில் இடம்பெயர்ந்துள்ள சகல மக்களும் எதிர்வரும் ஜனவரி மாதத்திற்குள் மீள்குடியேற்றப்பட்டு விடுவரென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

தொடர்ச்சியான மீள்குடியேற்றத்தின் மூலம் 280,000மாக விருந்த இடம்பெயர்ந்த மக்கள் தொகையை 160,000மாக குறைக்க முடிந்துள்ளதாகத் தெரிவித்துள்ள ஜனாதிபதி, எதிர்வரும் 2010 ஜனவரிக்குள் மீள்குடியேற்ற நடவடிக்கையை பூரணப்படுத்த முடியுமெனவும் தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கான உத்தியோகபூர்வ விஜயத்தினை மேற்கொண்டுள்ள பல்கேரிய ஜனாதிபதி ஜோர்ஜி பார்வனோவிற்கும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கும் இடையிலான சந்திப்பொன்று நேற்று ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்றுள்ளது.

இச்சந்திப்பு அரசியல் மற்றும் இரு நாடுகளுக்குமிடையிலான பரஸ்பர ஒத்துழைப்பு ரீதியானதாக அமைந்ததுடன் இரு நாடுகளுக்குமிடையிலான பொருளாதாரம், கலாசாரம் உள்ளிட்ட பல்வேறு துறைகள் சம்பந்தமாகவும் இதன் போது ஆராயப்பட்டுள்ளன.

பயங்கரவாதம் ஒழிக்கப்பட்ட பின்னர் நாட்டை மீளக் கட்டியெழுப்ப அரசாங்கம் மேற்கொண்டுவரும் பிரயத்தனம் சம்பந்தமாகவும் அதன் பிரதிபலன்கள் தொடர்பாகவும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பல்கேரிய ஜனாதிபதிக்குத் தெளிவுபடுத்தியுள்ளார்.

இதனைச் கேட்டறிந்த பல்கேரிய ஜனாதிபதி, பயங்கரவாதம் ஒழிக்கப்பட்டதன் பின்னர் மீள நாட்டைக் கட்டியெழுப்ப ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மேற்கொண்டுவரும் நடவடிக்கைகளைப் பாராட்டியுள்ளார்.

இன மற்றும் மத ரீதியான மக்களின் ஒத்துழைப்புடன் இலங்கையின் இறைமை மற்றும் ஐக்கியத்தைப் பாதுகாப்பதிலும் ஜனநாயக வழியில் மனித உரிமைகள் பாதுகாக்கப்படுவதிலும் நாம் நம்பிக்கை கொண்டிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அதேவேளை இடம்பெயர்ந்தோர் மீள தமது கிராமங்களில் மீளக்குடியேற்ற ப்படுவதிலும் அவர் தமது நம்பிக்கையைத் தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கான ஒருநாள் விஜயத்தை மேற்கொண்டிருந்த பல்கேரிய ஜனாதிபதிக்கும் வெளிவிவகார அமைச்சர் ரோஹித போகொல்லாகமவுக்குமிடையில் நேற்றுக் காலை ஒரு உத்தியோகபூர்வ சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

இதன் போது பல்கேரிய ஜனாதிபதியுடன் வந்திருந்த அந்நாட்டின் வர்த்தகத் தூதுக் குழுவுடனான முக்கிய பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றுள்ளதுடன் இரு நாடுகளுக்கிடையிலுமான பொருளாதாரத் தொடர்புகள் மற்றும் முதலீடுகள் தொடர்பாக முக்கிய கவனம் செலுத்தப் பட்டுள்ளன. இப்பேச்சுவார்த்தையி னையடுத்து பல்கேரிய வர்த்தக மற்றும் கைத்தொழில் சம்மேளனத்திற்கும் இலங்கை வர்த்தக கைத்தொழில் சம்மேள னத்துக்குமிடையில் உடன்படிக்கையொன்றும் கைச்சாத்திடப்பட்டுள்ளது.

இவ்வுடன்படிக்கைக்கிணங்க இலங்கைக்கும் பல்கேரியாவுக்குமிடையில் பொருளாதார ஒத்துழைப்பை முன்னேற்றும் பல்வேறு செயற்றிட்டங்களும் நடைமுறைப்படுத்தப்படவுள்ளன.

நேற்றைய இச்சந்திப்புகளுக்குப் பின் பல்கேரிய ஜனாதிபதி தலைமையிலான தூதுக்குழுவினருக்கு ஜனாதிபதி மாளிகை யில் நேற்று மதிய போசன விருந்தளித்து கெளரவிக்கப்பட்டது. (



மேலும் இங்கே தொடர்க...
புளொட்டின் பிரான்ஸ் கிளை அமைப்பாளர் பிரபாவுக்கு புளொட் கண்ணீர் அஞ்சலி!!

மிழீ க்ள் விடுலைக் ம்


:




anicandil2.gif




புளொட் அமைப்பின் பிரான்ஸ் கிளையின் அமைப்பாளரான யாழ். வடமராட்சி பொலிகண்டியைச் சேர்ந்த இராஜமனோகரன் பிரபாகரன் நேற்று முன்தினம் (30.10.2009) பிரான்ஸ்சில் அகால மரணமானார் என்பதை புளொட் அமைப்பினராகிய நாம் ஆழ்ந்த துயருடன் அறியத் தருகின்றோம். மானிப்பாயை பிறப்பிடமாகவும், ருயி மெகுல், பென்டின், பிரான்ஸை வதிவிடமாகவும் கொண்ட இராஜமனோகரன் பிரபாகரன், இராஜமனோகரன் பரமேஸ்வரி (இந்தியா) தம்பதிகளின் புதல்வரும், முரளிதரன் (பிரான்ஸ்), கிருபாகரன் (இந்தியா) ஆகியோரின் சகோதரருமாவார். தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் சிரேஸ்ட உறுப்பினரான இவர், 1984, 85களில் புளொட் அமைப்பில் இராணுவப் பயிற்சி பெற்றிருந்தார். 1987 இலங்கை - இந்திய உடன்படிக்கையின் பின்னர் வெளிநாடு சென்றிருந்த அவர், கழகத்தின் பணியில் சுவிஸ்கிளை முன்னெடுத்து வந்த வேலைத்திட்டங்களில் அர்ப்பணிப்புடன் செயலாற்றி வந்தார். பின்னர் பிரான்ஸில் வசித்துவந்த அவர், கழகத்தின் பிரான்ஸ் கிளையின் அமைப்பாளராக மரணிக்கும் வரையில் கடமையாற்றினார். வெளிநாட்டில் வசிக்கும் நிலையிலும் தமிழ் மக்களின் நலனைக் கருத்திற் கொண்டு கழகம் முன்னெடுத்த பணிகளில் பல்வேறு சவால்களையும், இடர்களையும் சந்தித்தபோதிலும் மனந்தளராது எமது கட்சியைப் பலப்படுத்துவதில் தீவிரமாக ஈடுபட்டு வந்தார். புலம்பெயர் நாடுகளில் உள்ள கழக உறுப்பினர்களையும், ஆதரவாளர்களையும் ஒருங்கிணைக்கும் பாரிய பொறுப்பினையும் ஏற்று அதனை செவ்வனே செய்து வந்ததுடன், யுத்தம் காரணமாக வடக்கில் இடம்பெயர்ந்த மக்களின் அவலங்களை வெளிக்கொணர்ந்து, அம்மக்களுக்கான உதவிகள் சென்றடைவதற்கான வேலைத்திட்டங்களிலும், அவர்களுக்கான உதவிகளைப் பெற்றுக் கொடுக்கும் நடவடிக்கைகளிலும் முனைப்புடன் ஈடுபட்டார். அன்னாரின் பிரிவினால் துயருற்றிருக்கும் தாய், சகோதரர்கள், உறவினர்கள் மற்றும் அனைவரோடும் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தினராகிய நாமும் இப்பெருந்துயரினை பகிர்ந்து கொண்டு, எமது கண்ணீர் அஞ்சலிகளைக் காணிக்கையாக்குகின்றோம்.
-தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (புளொட்)
மேலும் இங்கே தொடர்க...