12 மே, 2011

ஐ.நா. அறிக்கைக்கான ஐரோப்பிய ஒன்றியத்தின் ஆதரவு ஆச்சரியத்தையும் கவலையையும் ஏற்படுத்துகின்றது: டலஸ்

ஐக்கிய நாடுகள் சபையின் தருஷ்மன் அறிக்கைக்கு ஐரோப்பிய ஒன்றியம் ஆதரவு தெரிவித்துள்ளமை ஆச்சரியத்தையும் கவலையையும் அளிக்கின்றது. ஐக்கிய நாடுகள் சபையின் அங்கத்துவ நிறுவனமான யுனிசெப் அமைப்பு புலிகள் தொடர்பில் தெரிவித்துள்ள கருத்துக்கள் குறித்து அவதானம் செலுத்தவேண்டியது அவசியமாகும் என்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொருளாளரும் அமைச்சருமான டலஸ் அழகப்பெரும தெரிவித்தார்.

ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகத்தின் குழுவினால் முன்வைக்கப்பட்டுள்ள அறிக்கைக்கு ஆதரவு தெரிவிப்பதாக ஐரோப்பிய ஒன்றியம் குறிப்பிட்டுள்ளமை குறித்து விபரிக்கையிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் இது தொடர்பில் மேலும் கூறுகையில்

தருஷ்மன் அறிக்கைக்கு ஆதரவு வழங்குவதாக ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளமை குறித்து ஆச்சரியமடைகின்றோம் என்பதுடன் கவலையும் அடைகின்றோம். தருஷ்மன் அறிக்கையக்ஷினது பக்கச்சார்பான உள்ளடக்கங்களைக்கொண்டுள்ளது.

அதனை ஏற்றுக்கொள்ளமாட்டோம் என்று ஏற்கனவே அறிவித்துவிட்டோம். எந்தவிதமான அடிப்படையும் அற்ற வகையில் இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அந்த வகையில் இந்த அறிக்கைக்கு ஐரோப்பிய ஒன்றியம் ஆதரவு வழங்கியமை தொடர்பிலேயே ஆச்சரியமும் கவலையையும் அடைகின்றோம்.

அதாவது ஐக்கிய நாடுகள் சபையின் அங்கத்துவ நிறுவனமான யுனிசெப் அமைப்பு புலிகள் அமைப்பு தொடர்பில் கடந்த காலங்களில் தெரிவித்துள்ள கருத்துக்களை அனைவரும் பரிசீலனை செய்துபார்க்கவேண்டும்.

அதாவது புலிகள் அமைப்பு சிறுவர்களை போராளிகளாக இணைத்துக்கொண்டதாக யுனிசெப் அறிக்கை ஏற்கனவே தெரிவித்திருந்தது. அது தொடர்பில் நாங்கள் அவதானம் செலுத்தவேண்டியுள்ளது.

மேலும் இவ்வாறு சிறுவர்களை படையில் இணைத்துக்கொண்டதக்ஷிக ஐ.நா. வின் அங்கத்துவ அமைப்பினாலேயே கூறப்படும் புலிகள் அமைப்பை தருஷ்மன் அறிக்கையானது ஒழுக்கமுள்ள அமைப்பு என்று குறிப்பிட்டுள்ளது. எனவே இது குறித்து நாம் சிந்திக்கவேண்டும் என்று குறிப்பிட்டார்.

இதேவேளை ஐக்கிய நாடுகள் சபை என்பது எமது அமைப்பாகும். அதன் செயலாளர் பான் கீ. மூன் எமது செயலாளர் ஆவார். இந்நிலையில் தருஷ்மன் அறிக்கை தொடர்பில் ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபை மனித உரிமை பேரவை அணிசேரா நாடுகள் அமைப்பு உள்ளிட்ட சர்வதேச சமூகத்துக்கு நாங்கள் தெளிவுபடுத்துவோம். வெளிவிவகார அமைச்சர் வெளிநாட்டு பயணங்களை மேற்கொண்டு சர்வதேச சமூகத்தை தெளிவுபடுத்துவார் என்று அண்மையில் அரசாங்கத்தின் முக்கிய அமைச்சர்கள் தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில் நிபுணர் குழுவின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்களில் ஆக்கபூர்வமான நோக்கங்களை இலங்கை அரசாங்கம் அங்கீகரிக்கும் என்று நம்புவதாகவும் அவ்வறிக்கையின் உள்ளடக்கங்கள் குறித்து ஐ.நா. செயலாளர் நாயகத்துடன் பேச்சு நடத்துவதை ஊக்குவிக்கின்றோம் என்றும் ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும் இங்கே தொடர்க...

14 குற்றச்சாட்டுக்களின் கீழ் ராஜரட்ணம் குற்றவாளியாக இனங்காணப்பட்டார்




இலங்கையை பூர்வீகமாகக் கொண்ட அமெரிக்க செல்வந்தரான ராஜ் ராஜரட்ணம் பங்குச்சந்தை மோசடி தொடர்பிலான வழக்கில் அவர் மீது சுமத்தப்பட்ட 14 குற்றச்சாட்டுக்களின் கீழ் குற்றவாளியாக இனங்காணப்பட்டுள்ளார்.

அமெரிக்காவில் நேற்று இடம்பெற்ற இவருக்கெதிரான வழக்கு விசாரணையின்போது 14 குற்றச்சாட்டுக்களும் நிரூபிக்கப்பட்டதுடன் இறுதிப் தீர்ப்பினை ஜூலை மாதம் 29 ஆம் திகதி வெளியிடுவதென 12 பேர் கொண்ட ஜூரிகள் சபை அறிவித்துள்ளது.

இதன்படி அவருக்கு 15 முதல் 19 வருடங்கள் வரையான சிறைத் தண்டனை விதிக்கப்படலாமென தெரிவிக்கப்படுகின்றது.

அமெரிக்க பங்குச்சந்தையில் 63.8 மில்லியன் டொலரை சட்டவிரோதமான முறையில் சம்பாதித்தமை தொடர்பாகவே இவர் மீதான குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டிருந்தன.

130 கோடிக்கும் அதிகமான டொலர் பெறுமதியான சொத்துக்களைக் கொண்டவரான ராஜரட்ணம் பிரபல போப்ஸ் சஞ்சிகையின் உலகின் செல்வந்தர் பட்டியலில் 559 ஆவது இடத்தை பிடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் இங்கே தொடர்க...

பொன்சேகாவினாலேயே ஐ.நா. நிபுணர் குழு அறிக்கைக்கு உரிய பதிலளிக்க முடியும்

ஐக்கிய நாடுகளின் நிபுணர் குழு அறிக்கைக்கு உரிய பதிலளிக்கக்கூடியவர் முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவே ஆவார்.

இறுதிக்கட்ட யுத்தத்தின் போது என்ன நடந்தது என்பது பற்றி முழுமையான விபரங்கள் அவருக்கே தெரியும். எனவே அரசாங்கம் அரசியல் பழிவாங்கல்களை நிறுத்தி அவரை விடுதலை செய்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார்.

ஐ.நா. நிபுணர் குழுவின் அறிக்கையினை கண்டிராத அதனை வாசிக்காத மக்களிடம் அதற்கெதிராக கையொப்பம் பெறுவது அவர்களை ஏமாற்றும் செயலாகவே அமைந்துள்ளது. எனவே அவ்வறிக்கையினை அவர்கள் வாசித்தறிய கூடிய தமிழ் மற்றும் சிங்கள மொழிகளிலும் மொழி பெயர்த்து வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.

நேற்று எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டின் போதே அவர் இதனை தெரிவித்தார். அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது.

ஐ.நா நிபுணர் குழு அறிக்கையினை எத்தனை பேர் வாசித்துள்ளார்கள்? எத்தனை ஊடகங்கள் அதனை தமிழ் மற்றும் சிங்கள மொழிகளில் முழுமையாக வெளியிட்டுள்ளன? இப்படியான நிலையில் சாதாரண மக்களிடம் அதற்கெதிராக கையெழுத்து பெறுவது அவர்களை ஏமாற்றும் செயலாகும்.

குறித்த அறிக்கையில் என்ன குறிப்பிடப்பட்டுள்ள என்பதை சகலரும் தெரிந்து கொள்ளும் வகையில் அதனை தமிழ் சிங்கள மொழிகளில் மொழி பெயர்த்து வழங்க வேண்டும். அதன் பின்னரே அதற்கு எதிராக அவர்களிடம் கையெழுத்துக்களை பெற வேண்டும்.

ஐ.நா நிபுணர் குழுவினை முழுமையாக நிராகரிப்பதாக கூறி வந்த அரசாங்கம் தற்போது அந்த அறிக்கை தொடர்பில் ஐ.நா செயலாளர் நாயகத்திற்கு தெளிவுபடுத்தவுள்ளதாக கூறுகிறது. இதிலிருந்து என்ன தெரிகிறது. இந்த அறிக்கை தொடர்பில் முறையான நடவடிக்கைகளை முன்னெடுக்கும் நிலைப்பாட்டில் அரசாங்கம் இல்லை. அதனாலேயே இந்த தடுமாற்றம்.

உண்மையில் யுத்தத்தின் இறுதி கட்டத்தின் போது என்ன நடந்தது என்பது பற்றி ழுழு தகவல்களை அறிந்தவர் முன்னாள் இராணுவ தளபதி சரத் பொன்சேகாவே. அவராலேயே ஐ.நா நிபுணர் குழுவின் அறிக்கைக்கு உரிய பதில் கூற முடியும் அத்தோடு இலங்கையின் கீர்த்தியினையும் எமது இராணுவத்தினரையும் காப்பாற்ற முடியும் .

இவ்வாறான விடயங்களை கருத்தில் கொண்டு 2600 ஆவது புத்த ஜயந்தியிலாவது முன்னாள் இராணுவ தளபதி சரத் பொன்சேகாவை விடுதலை செய்ய அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும் இங்கே தொடர்க...

ஐ.நா. அறிக்கையினை ஐரோப்பிய ஒன்றியம் வரவேற்றமைக்கு இலங்கை ஆட்சேபம்

ஐ.நா. நிபுணர் குழுவின் அறிக்கையினை ஐரோப்பிய ஒன்றியம் வரவேற்றுள்ளமை தொடர்பில் இலங்கை ஆட்சேபம் தெரிவித்துள்ளது.

ஐ.நா.வுக்கான இலங்கையின் நிரந்தர பிரதிநிதி கலாநிதி பாலித கொஹன இந்த ஆட்சேபத்தினை தெரிவித்துள்ளார்.

ஐரோப்பிய ஒன்றியத்தின் அறிக்கை தொடர்பில் இன்னர் சிட்டி பிரஸ் பாலித கொஹனவிடம் கேள்வி எழுப்பிய போது சர்வதேச மனிதாபிமானிகள் தமது மனச்சாட்சியை தூய்மையாக்க முயற்சிக்கின்றனர் என்று தெரிவித்துள்ளார். ஐ.நா. நிபுணர் குழு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள பாரதூரமான குற்றச்சாட்டுக்கள் மீதான சுயாதீனமான விசாரணைகள் இலங்கையில் நல்லிணக்க செயற்பாட்டிற்கும் நிரந்தர சமாதானத்திற்கும் பாதுகாப்பிற்கும் பங்காற்ற வேண்டுமென ஐரோப்பிய ஒன்றியம் நேற்று முன்தினம் விடுத்த அறிக்கையில் தெரிவித்திருந்தது.

இதேவேளை கொழும்பில் பொதுப் பூங்காக்களின் நிர்வாகத்தை கடற்படையினர் பொறுப்பேற்பது குறித்து இன்னர் சிட்டி பிரஸ் பாலித கொஹனவிடம் கேள்வி எழுப்பியபோது அதற்கு பதிலளித்த அவர் படையினர் “ 2 இலட்சம் பேர் வேலையற்று இருக்கின்றனர்.

அப்படையினர் யுத்தத்திற்காகவே திரட்டப்பட்டனர். இப்போது அவர்கள் சிவில் பணிகளில் பயிற்றுவிக்கப்படுகின்றனர் என்றார்.
மேலும் இங்கே தொடர்க...