30 ஜூன், 2010

ஆப்கானிஸ்தானில் ராணுவம் நடத்திய `திடீர்' தாக்குதலில் 150 தலீபான்கள் பலி



ஆப்கானிஸ்தானில் தஞ்சம் புகுந்து இருந்த பாகிஸ்தான் தலீபான் தீவிரவாதிகள் மீது அமெரிக்க ஆப்கானிஸ்தானிய ராணுவத்தினர் நடத்திய திடீர் தாக்குதலில் 150 தீவிரவாதிகள் பலியானார்கள்.

பாகிஸ்தானில் இருந்து தப்பி ஓடிவந்தவர்கள்

பாகிஸ்தானில் தெற்கு வசிரீஸ்தான் பகுதியில் அந்த நாட்டு ராணுவம் தீவிரவாதிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுத்து வருவதால், தலீபான் தீவிரவாதிகள் பெரும் அளவில் அங்கு இருந்து தப்பி அருகில் உள்ள ஆப்கானிஸ்தான் நாட்டில் தஞ்சம் புகுந்து உள்ளனர்.

ஆப்கானிஸ்தானில் உள்ள குனார் மாநிலம் பாகிஸ்தான் எல்லையில் உள்ளது. இங்கு உள்ள மார்வாரா மாவட்டத்தில் 200-க்கும் மேற்பட்ட தலீபான் தீவிரவாதிகள் முகாமிட்டு இருந்தனர். இந்த தகவல் கிடைத்ததும், அமெரிக்க ஆப்கானிஸ்தான் ராணுவத்தினர் திடீர் தாக்குதல் நடத்துவது என்று தீர்மானித்தனர்.

விமானத்தில் 700 வீரர்கள்

ராணுவ வீரர்கள் நள்ளிரவில் ஹெலிகாப்டர்களில் அழைத்துவரப்பட்டு குனார் மாநில மலைப்பகுதிகளில் இறக்கப்பட்டனர். கிட்டத்தட்ட 700-க்கும் மேற்பட்ட வீரர்கள் ஹெலிகாப்டர்கள் மூலம் இறக்கப்பட்டனர். பொழுது விடிவதற்கு முன்பே அவர்கள் அங்கு முகாமிட்டு இருந்த தலீபான்கள் மீது தாக்குதல் நடத்த தொடங்கினார்கள்.

தலீபான்களும் உஷாராகி பதிலடி கொடுத்தனர். இந்த சண்டை மிகப்பயங்கரமாக இருந்தது. ஞாயிற்றுக்கிழமை காலை தொடங்கிய தாக்குதல், மறுநாள் காலையில் தான் முடிந்தது. இதில் 150 தலீபான்கள் பலியானார்கள். அவர்களில் பலர் பாகிஸ்தான் தலீபான்கள் ஆவார்கள். மெரிக்க ஆப்கானிஸ்தான் ராணுவ தரப்பில் 2 பேர் பலியானார்கள்.

துணைக்கவர்னர் உதவியுடன்

இந்த தாக்குதல் பற்றி முன்கூட்டியே எச்சரிக்கை எதுவும் விடப்படவில்லை என்று அமெரிக்க ராணுவ அதிகாரி ஒருவர் கூறினார். இந்த பகுதியின் துணைக்கவர்னர் தீவிரவாத இயக்கத்தில் கமாண்டராக இருந்தவர். இதனால் அவருக்கு இந்த பகுதியை பற்றி நன்கு தெரியும். இதனால் அவர் உதவியுடன் தான் ராணுவம் தாக்குதலுக்கான திட்டத்தை வகுத்தது. என்றும் அந்த அதிகாரி தெரிவித்தார்.
மேலும் இங்கே தொடர்க...

கொரிய பிரதேசத்தில் பதட்டம் அமெரிக்கா-தென்கொரியா கடற்படை பயிற்சிக்கு போட்டியாக சீனா


தென்கொரியாவுடன் சேர்ந்து கொண்டு அமெரிக்கா கொரிய கடல் பகுதியில் கடற்படை பயிற்சியில் ஈடுபட்டு உள்ளது. இதற்கு போட்டியாக சீனாவும் தன் கடல் எல்லையில் கடற்படை பயிற்சியிலும் ஆயுத சோதனையிலும் ஈடுபடப்போவதாக அறிவித்து உள்ளது. இந்த பயிற்சியும், சோதனையும் 6 நாட்களுக்கு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

இதன்காரணமாக இன்று (புதன்கிழமை) முதல் 5-ந் தேதி வரை நள்ளிரவு முதல் மாலை 6 மணி வரை அந்த பகுதிக்குள் கப்பல்கள் நுழைவதற்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது.
மேலும் இங்கே தொடர்க...

உர விற்பனை மோசடி : சம்மாந்துறையில் நால்வர் கைது

அம்பாறை மாவட்ட சம்மாந்துறைப் பகுதியில் மகிந்த சிந்தனை திட்டத்தினூடாக வழங்கப்பட்ட உரமூடைகளை மோசடி செய்து பதுக்கி வைத்திருந்த நால்வரைப் பொலிசார் கைது செய்துள்ளனர்.

இச்சம்பவம் நேற்றுக் காலை நடைபெற்றுள்ளதாகப் பொலிசார் தெரிவித்தனர்.

சுமார் 10 லட்சம் ரூபா பெறுமதியான 124 உரமூடைகள் இவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்டுள்ளதாகப் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எஸ்.தகநாயக்கா தெரிவித்தார்.

பொலிஸ் நிலையத்தில் வைக்கப்பட்டுள்ள உரமூடைகளை நீதிமன்றத்தில் ஒப்படைக்கவுள்ளதாகப் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி தெரிவித்தார்.

6500 ருபா பெறுமதியான உரமூடைகள் மகிந்த சிந்தனைத் திட்டத்தின்கீழ் 350 ரூபாவுககு வழங்கப்பட்டு வருகின்ற போதிலும், உரமூடைகளைப் பதுக்கி வைத்து மேற்படி நபர்கள் 2,500 ரூபாவுக்கு விற்பனை செய்து வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் இங்கே தொடர்க...

அமெரிக்காவில் இந்திய விஞ்ஞானி அடித்துக் கொலை


அமெரிக்காவில் சீமென்ஸ் நிறுவனத்தில் விஞ்ஞானியாக இருந்தவர் திவ்யந்து சின்கா (49). இந்தியாவைச் சேர்ந்தவர்.

இவர் நியூஜெர்சி நகரில் உள்ள ஓல்டு பிரிஜ் என்ற இடத்தில் வசித்து வந்தார்.

கடந்த வெள்ளிக்கிழமை அவர் வீட்டின் அருகே நடந்து சென்றார். அவருடைய 2 மகன்களும் உடன் சென்றனர்.

அப்போது அங்கு 3 வாலிபர்கள் காரில் வந்தனர். அவர்கள் திவ்யந்து சின்கா மற்றும் 2 மகன்களையும் அடித்து உதைத்தனர். அதில் 3 பேரும் படுகாயம் அடைந்தனர். அவர்களை ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். சிகிச்சை பலனின்றி திவ்யந்து சின்கா உயிர் இழந்தார்.

இது தொடர்பாக போலீசார் 3 பேரையும் கைது செய்தனர். எதற்காக அவர்கள் தாக்கினார்கள் என்ற விவரம் வெளியிடப்பட வில்லை. இனவெறி காரணமாக தாக்குதல் நடந்ததா? என்றும் தெரியவில்லை.

அமெரிக்க போலீசார் இதுபற்றி கூறும்போது, விசாரணை முற்றிலும் முடிந்த பிறகே தகவல் சொல்ல முடியும் என்றனர்
மேலும் இங்கே தொடர்க...

கே .பி பத்மநாதனின் அனுசரணையுடன் தாயகம் சென்ற வெளிநாட்டு தமிழ் குழுவினரில் ஒருவரின் வீடியோ

மேலும் இங்கே தொடர்க...

சபையில் ஒழுங்கீனம் : மேர்வின் சில்வாவுக்கு சபாநாயகர் எச்சரிக்கை

நாடாளுமன்றத்தில் சபை ஒழுங்கை மீறும் வகையில் செயற்பட்டால், அமர்விலிருந்து வெளியேற்றப்பட நேரிடும் எனப் பெருந்தெருக்கள் பிரதி அமைச்சர் மேர்வின் சில்வாவுக்கு சபாநாயகர் சாமல் ராஜபக்ஷ எச்சரிக்கை விடுத்துள்ளார்.

'அப்பி வெனுவென் அப்பி' என்ற திட்டத்திற்காகப் பயன்படுத்தப்பட்ட நிதி குறித்து, ஜனநாயக தேசிய முன்னணி எம்.பி. சுனில் ஹந்துன்னெட்டி இன்று சபையில் கேள்வி எழுப்பினார். இதற்குப் பதிலளித்துப் பேசிய மேர்வின் சில்வா கோபமாகப் பதிலளித்ததையடுத்தே மேற்படி எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

சபாநாயகரின் எச்சரிக்கையைத் தொடர்ந்து பிரதி அமைச்சர் மேர்வின் சில்வா அமைதியானார்.
மேலும் இங்கே தொடர்க...

பொதுமன்னிப்பு வழங்க உதவுங்கள் : தமிழ்க் கைதிகள் பரிசுத்த பாப்பரசர். தந்தையிடம் கோரிக்கை

நீண்ட காலமாக சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள், தமக்கு பொதுமன்னிப்புப் பெற்றுத் தர இலங்கை அரசை வலியுறுத்துமாறு பரிசுத்த பாப்பரசர் 16ஆவது ஆசீர்வாதப்பர் ஆண்டகையிடம் கடிதம் ஊடாக கோரியுள்ளனர்.

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுத் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள், இலங்கைக்கான கத்தோலிக்க திருச்சபையின் பேராயர், பரிசுத்த தந்தை ஆகியோரிடம் இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளனர்.

யுத்தம் நிறைவடைந்து ஒரு வருடம் நிறைவடைந்த நிலையிலும் தமக்கு இன்னமும் நியாயம் வழங்கப்படவில்லை எனவும், தம்மை விடுதலை செய்வதற்கு நடவடிக்கை எடுக்குமாறு அரசிடம் வலியுறுத்த வேண்டுமெனவும் பரிசுத்த பாப்பரசரிடமும், இலங்கைப் பேராயரிடமும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நாடு முழுவதிலும் உள்ள சிறைச்சாலைகளில் தமிழ் அரசியல் கைதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் முதியோர், பெண்கள், குழந்தைகள் அடங்கியுள்ளனர் எனவும் கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் தாம் விடுத்த கோரிக்கைகளுக்கு இதுவரை காலமும் தமக்கு உரிய பதில் கிடைக்கவில்லை எனவும் அவர்கள் சுட்டிக் காட்டியுள்ளனர்.

பரிசுத்த தந்தை இது விடயத்தில் தலையிட்டு, தமக்கு நியாயம் பெற்றுத் தர வேண்டும் என தமிழ் அரசியல் கைதிகள் அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளனர்.
மேலும் இங்கே தொடர்க...

ஐநா நிபுணர் குழுவைச் சந்திக்கத் தயார் : ஜெனரல் சரத்

ஐக்கிய நாடுகள் அமைப்பின் பொதுச் செயலாளர் பான் கீ மூன் நியமித்த நிபுணர்கள் குழு, நாட்டின் உள்விவகாரங்களில் தலையிடுவதாகக் கருதக்கூடாது. நிபுணர் குழுவைச் சந்திக்க நான் என்றும் தயாராகவே உள்ளேன் என்று ஜெனரல் சரத் பொன்சேகா பிபிசிக்கு வழங்கிய பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

யுத்த காலத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் விசாரணை நடத்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் இணக்கம் தெரிவித்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

"ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் ஐக்கிய நாடுகள் அமைப்பு ஏற்படுத்திக் கொண்ட இணக்கப்பாட்டின் அடிப்படையிலேயே இந்த நிபுணர்கள் குழு உருவாக்கப்பட்டுள்ளது.

ஒரு நாட்டின் நடவடிக்கைகள் தொடர்பில் சர்வதேச ரீதியில் சந்தேகம் எழுந்தால் அதனை நிவர்த்திக்க சம்பந்தப்பட்ட நாடு முன்வர வேண்டியது அவசியம்.

ஐக்கிய நாடுகள் அமைப்புடன் முறுகல்களை ஏற்படுத்திக் கொள்ள நாம் ஒருபோதும் முயற்சிக்கக் கூடாது.

இலங்கைப் பிரஜை என்ற ரீதியில் இவ்வாறான விசாரணைகளுக்கு முழு ஆதரவளிக்க நான் என்றும் தயங்கப் போவதில்லை.

ஜீ.எஸ்.பி. பிளஸ் சலுகைத் திட்டம் தொடர்பில் ஐரோப்பிய ஒன்றியம் விதித்துள்ள நிபந்தனைகள் நியாயமானவை. அதனை உள்விவகாரத் தலையீடாகக் கருதத் தேவையில்லை" என்றார்.

அதேவேளை, இலங்கையின் உள்விவகாரங்களில் தலையீடு செய்ய எவருக்கும் இடமளிக்கப்பட மாட்டாது எனவும், நிபுணர்கள் குழு இலங்கை வர அனுமதி அளிக்கப்பட மாட்டாது எனவும் அரசாங்கம் திட்டவட்டமாக அறிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் இங்கே தொடர்க...

யாழ். அரசாங்க அதிபராக இமெல்டா நாளை பதவியேற்பு வடக்கின் நிர்வாக சேவையில் மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன.

இதனடிப்படையில் யாழ். புதிய அரசாங்க அதிபராக திருமதி இமெல்டா சுகுமார் நாளை பதவியேற்கவுள்ளார்.

யாழ். அரச அதிபராக இருந்த கணேஷ் ஓய்வு பெறவிருப்பதையடுத்தே, திருமதி இமெல்டா பொது நிர்வாக உள் நாட்டலுவல்கள் அமைச்சினால் நியமிக்கப்பட்டுள்ளார்.

அதேவேளை, முல்லைதீவு புதிய அரசாங்க அதிபராக வேதநாயகம் பதவியேற்கவுள்ளதாக அரச தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த 2002 ஆம் ஆண்டு முதல் முல்லைத்தீவு மாவட்ட அரச அதிபராக இமெல்டா சுகுமார் கடமையாற்றியமை குறிப்பிடத்தகக்து
மேலும் இங்கே தொடர்க...

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்காவின் பாதுகாப்புப் பிரிவு தலைவருக்கு சிறைத்தண்டனை

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் பாதுகாப்பு பிரிவு தலைவர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் கருணாரத்னவுக்கு கண்டி மேல் நீதிமன்றம் நான்கு வருட சிறைத்தண்டனையும் 50 ஆயிரம் அபராதமும் விதித்துத் தீர்ப்பளித்துள்ளது.

கண்டி மேல் நீதிமன்ற நீதிபதி பிரீத்தி பத்மன் சுரேஷன் இத்தீர்ப்பினை வழங்கியுள்ளார்.

2001 ஆம் ஆண்டு நவம்பர் 21ஆம் திகதி ஹங்குராங்கெத்த பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி குணரத்தன பண்டாரவை, பொரமதுல்ல மகா வித்தியாலய மைதானத்தில் வைத்து அச்சுறுத்தினார் என்ற குற்றச்சாட்டின் பேரில் இவருக்கு இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
மேலும் இங்கே தொடர்க...

மீள்குடியேற்றம் குறித்து ஆராய்வதற்கு இந்திய நிபுணர்குழு இலங்கை வரும்





வன்னியில் இடம்பெற்று வரும் மீள்குடியேற்றம் தொடர்பாக ஆராய இந்தியாவின் விஷேட நிபுணர்கள் குழுவொன்று இலங்கை வரவுள்ளது. எதிர்வரும் இரண்டு மாதத்திற்குள் முகாம்களில் எஞ்சியுள்ள 47 ஆயிரம் மக்கள் அவர்களின் சொந்த இடங்களிலேயே மீள்குடியமர்த்தப்படுவார்கள் என்று மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்தார்.

மீள்குடியேற்ற அமைச்சில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற விசேட செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் மேற்கண்டவாறு கூறினார்.

இவர் இங்கு தொடர்ந்து தெரிவித்ததாவது,

வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் இடம்பெயர்ந்த மக்களை மீள்குடியமர்த்தும் நடவடிக்கைகள் இறுதிக்கட்டத்தை சந்தித்துள்ளது. இம் மீள்குடியேற்ற பணிகளுக்கு இந்திய அரசாங்கம், சர்வதேச செஞ்சிலுவை சங்கம், யுனிசெப் உட்பட பல்வேறு சர்வதேச அமைப்புகளும் நிறுவனங்களும் பல வழிகளில் உதவிகளை வழங்கியுள்ளன. அடுத்த இரண்டு மாதத்திற்குள் முகாம்களில் எஞ்சியுள்ள அனைத்து மக்களும் மீள்குடியமர்த்தப்படுவர். இவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்கவும் வாழ்வாதாரத்திற்கு தேவையான வளங்களை வழங்கவும் அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

மீள்குடியமர்த்தப்படும் மக்களுக்கு சகல வசதிகளுடன் கூடிய நிரந்தர வீடுகளை ஏற்படுத்திக் கொடுக்கவும் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது. இதனடிப்படையிலேயே இந்திய அரசாங்கம் 50 ஆயிரம் வீடுகளை அமைப்பதற்கு நிதி வழங்க முன்வந்துள்ளதும் மேலும் ஒரு இலட்சத்து 70 ஆயிரம் வீடுகள் தேவைப்படுகின்றது. மீள்குடியேற்றப்படும் அனைத்து மக்களுக்கும் தலா 75 ஆயிரம் ரூபாவும் ஆறு மாதத்திற்கு தேவையான பொருட்களும் பிரதேச செயலகம் ஊடாக வழங்கப்படுகின்றது. அரசாங்கத்தினால் வழங்கப்படும் இந்த நிவாரணங்கள் கிடைக்கப் பெறாதவர்கள் பிரதேச செயலக அதிகாரிகளிடம் தெரிவிக்க முடியும்.

அத்தோடு வடக்கு கிழக்கு பிரதேசங்களில் காணப்படும் பாதுகாப்பு வலயங்கள் மற்றும் இராணுவ தடைகள் என்பவை தொடர்பாக பாதுகாப்பு செயலாளரினதும் ஜனாதிபதியினதும் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. வன்னியில் மக்கள் தமது தொழில்களை சுமூகமான முறையில் செய்து கொள்வதற்கு தேவையான அனைத்து வசதிகளும் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளது. கடலில் மீன் பிடித்தலும் காடுகளுக்கு சென்று விறகுகளை வெட்டவும் விவசாயம் செய்யவும் அனுமதி பெறுவதில் எவ்விதமான தடைகளும் கிடையாது.
மேலும் இங்கே தொடர்க...

பிரபாகரனின் தாயாரின் கருத்தை கேட்டு மனுத்தாக்கல் செய்ய வேண்டும்




தமிழகத்தில் சிகிச்சை பெறுவது குறித்து பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மாளின் கருத்தைக் கேட்டு மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று மத்திய அரசுக்கு சென்னை மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் தாயார் பார்வதி அம்பாள். இவர் மருத்துவ சிகிச்சை பெறுவதற்காக மலேசியாவில் இருந்து சென்னைக்கு வந்தார். ஆனால் தமிழகத்தில் அனுமதிப்பதற்கு தடை விதிக்கப்பட்டு இருப்பதாக கூறி இந்திய குடியுரிமை அதிகாரிகள் அவரை அனுமதிக்கவில்லை.

எனவே அவர் திரும்பிச் சென்று விட்டார். இது குறித்து தமிழகத்தில் சர்ச்சை எழுந்தது. இந்த நிலையில் சென்னையில் மேல் வழக்கு தொடரப்பட்டது. அவரை தமிழகத்தில் தங்க வைத்து சிகிச்சை அளிக்க அனுமதிக்கவும். சிகிச்சை செலவை ஏற்றுக் கொள்ளவும் மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை மேல் நீதிமன்றம் விசாரித்து, சிகிச்சை பெறுவது தொடர்பாக தமிழக அரசுக்கு பார்வதி அம்மாள் மனு கொடுக்க வேண்டும் என்றும் அதை மத்திய அரசுக்கு தமிழக அரசு அனுப்பி வைக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது.

இந்த நிலையில் சில நிபந்தனைகளுடன் பார்வதி அம்மாளுக்கு சிகிச்சைக்கான அனுமதியை மத்திய அரசு வழங்கியது. ஆனால் அதை பார்வதி அம்மாள் ஏற்றுக் கொள்ளவில்லை. எனவே பல நிபந்தனைகளை மத்திய அரசு தளர்த்தியது.

இந்த நிலையில் வழக்கு, நீதிபதிகள் தர்மராவ், கே. கே. சசிதரன் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. மத்திய அரசு தரப்பில் ஆஜரான மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் ரவீந்திரன், இந்திய தூதரகம் மூலம் மலேசிய அரசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு இருப்பதாக தெரிவித்தார். பார்வதி அம்மாள் இலங்கைக்குச் சென்றுள்ளதால் அங்குள்ள இந்திய தூதரகம் மூலம் தகவல் தெரிவிக்கப்பட்டு இருப்பதாகவும் அவர் கூறினார். அதற்கு நீதிபதிகள், அவரிடம் எப்போது இந்தத் தகவல் கூறப்பட்டது? அதற்கு பார்வதி அம்மாள் என்ன பதில் சொன்னார்? போன்ற விவரங்களை இன்னும் சில நாட்களுக்குள் மனுவாக மத்திய அரசு தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டனர்
மேலும் இங்கே தொடர்க...

அரச ஊழியர் சம்பள அதிகரிப்பு 2011 பட்ஜட்டில் வெளியாகும்’

அரசாங்க ஊழியர்களுக்கான சம்பள உயர்வு தொடர்பான அறிவிப்பு எதிர்வரும் நவம்பர் மாதம் சமர்ப்பிக்கப்படவிருக்கும் 2011ம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் வெளியாகும் என பதில் நிதியமைச்சர் கலாநிதி சரத் அமுனுகம நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

வரவு- செலவுத் திட்ட யோச னைகளை சபையில் சமர்ப்பித்து உரையாற்றிக் கொண்டிருக்கையில் எதிரணி எம்.பிக்கள் எழுப்பிய கேள் விக்கு பதிலளிக்கும் வகையிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு குறிப் பிட்டார். அமைச்சர் தொடர்ந்தும் உரையாற்றுகையில், கடந்த காலங்களைப் போன்று தொழிற்சங்கங்களுடன் கலந்துரையாடி 2011ம் ஆண்டுக்கான வரவு- செலவுத் திட்டத்தில் அரச ஊழியர்களுக்கான புதிய சம்பள உயர்வுக் கட்டமைப்பு அறிவிக்கப்படும்.

அதேநேரம் தற்போது எதுவிதமான ஓய்வூதிய திட்டத்திற்கும் உட்படாத அரச மற்றும் தனியார் துறை ஊழியர்களுக்கென ஓய்வூதிய நிதியமொன்றும் உருவாக்கப்படும். இது தொடர்பான வாக்குறுதியை ஜனாதிபதி வழங்கியுள்ளார் என்றார்
மேலும் இங்கே தொடர்க...

சரத் அமுனுகம இருமணி நேரம் உரை; சபையில் ஐ. தே. க. கூச்சல்; குழப்பம்




ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கத்தின் 2010ம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டம் பாராளுமன்றத்தில் நேற்று பிற்பகல் சமர்ப்பிக்கப்பட்டது.

பதில் நிதியமைச்சரான கலாநிதி சரத் அமுனுகம இவ்வரவு - செலவுத் திட்டத்தைச் சபையில் சமர்ப்பித்து உரையாற்றினார்.

இவ்வரவு - செலவுத் திட்டத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள மக்கள் நலனோம்பு திட்டங்கள் தொடர்பாக அமைச்சர் கலாநிதி சரத் அமுனுகம சபையில் உரையாற்றத் தொடங்கியதும் பிரதான எதிர்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி எம்.பிக்கள் கூச்சல், குழப்பம், எழுப்பி இடையூறு செய்தனர்.

இருப்பினும் பதில் நிதியமைச்சர் எதிரணியினரின் இடையூறுகளைப் பொருட்படுத்தாது மக்கள் நலனோம்புத் திட்டங்களை சபையில் சமர்ப்பித்தார். பாராளுமன்றம், சபாநாயகர் சமல் ராஜபக்ஷ தலைமையில் நேற்று பிற்பகல் 2.00 மணிக்குக் கூடியது. சபை அமர்வின் வழமையான தொடக்க நிகழ்வைத் தொடர்ந்து சபாநாயகரின் அறிவிப்போடு பதில் நிதியமைச்சரான கலாநிதி சரத் அமுனுகம பிற்பகல் 2.03 மணிக்கு சபையினுள் வரவு - செலவுத் திட்ட யோசனையுடன் வருகை தந்தார். அமைச்சரின் வருகையோடு ஆளும் கட்சி எம்.பிக்கள் தங்கள் மேசைகள் மீது தட்டி ஆரவாரம் தெரிவித்தனர்.

அமைச்சர் வரவு - செலவுத் திட்ட உரையை பிற்பகல் 2.07 மணியளவில் ஆரம்பித்தார். வரவு - செலவு திட்ட உரையை அமைச்சர் நிகழ்த்தத் தொடங்கியதும் சபையில் பூரண அமைதி நிலவியது.

இருப்பினும், அரசின் மக்கள் நலனோம்பு திட்டங்களை அமைச்சர் அறிவிக்கத் தொடங்கிய சமயம் எதிரணியிலுள்ள ஐ. தே. க. எம்.பிக்கள் கூச்சல், குழப்பம் செய்து இடையூறு செய்தனர். குருநாகல் மாவட்ட ஐ. தே. க. எம்.பி. தயாசிறி ஜயசேகர ஒழுங்குப் பிரச்சினை எழுப்பியதும் கூச்சல், குழப்பம் ஏற்பட்டன. என்றாலும் இந்த எதிர்ப்பு நடவடிக்கைகளில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு மற்றும் ஜனநாயக தேசியக் கூட்டமைப்பு எம்.பிக்கள் எவரும் கலந்துகொள்ளவில்லை.

அமைச்சர் அமுனுகம இவ்வரவு - செலவுத் திட்ட உரையை சுமார் இரண்டு மணித்தியாலங்கள் நிகழ்த்தினார்.

அரசாங்கத்தின் வரவு - செலவுத் திட்டம் நேற்று சபையில் சமர்ப்பிக்கப்பட்டு அமைச்சர் உரையாற்றிய சமயம் சபாநாயகர் கலறியில் மேல் மாகாண ஆளுநர் எஸ். அலவி மெளலானா, கொழும்பிலுள்ள வெளிநாட்டுத் தூதுவர்கள், அமைச்சுக்களின் செயலாளர்கள், திணைக்களங்கள், கூட்டுத்தாபனங்கள், நியதிச் சபைகள் என்பவற்றின் தலைவர்கள், பணிப்பாளர்கள் எனப் பெருந்தொகையானோர் வருகை தந்திருந்தனர். அமைச்சர் வரவு - செலவுத் திட்ட உரையை மாலை 4.07 மணியளவில் நிறைவு செய்தார். அதனைத் தொடர்ந்து சபை அமர்வு இன்று 9.30 மணி வரையும் ஒத்தி வைக்கப்பட்டது
மேலும் இங்கே தொடர்க...

கொழும்பு நகரம் விஸ்தரிப்பு; புதிய நகரமைக்கவும் திட்டம்


கொழும்பு நகரை விரிவாக்கும் திட்டம் முன்னுரிமை அடிப்படையில் செயற்படுத்தப்படவுள்ளது.

நிதி, திட்டமிடல் பதில் அமைச்சர் கலாநிதி சரத் அமுனுகம நேற்று பாராளுமன்றத்தில் இதனை அறிவித்தார். வரவு செலவுத் திட்டத்தைச் சமர்ப்பித்து கொள்கை விளக்க உரையை நிகழ்த்தியபோது அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,

“நகரங்கள் மற்றும் நகரமயமாக்கல் அபிவிருத்திகளை முன்னிலைப்படுத்தியதாக எமது நகர அபிவிருத்தி உபாயம் காணப்படும். கொழும்பு நகரத்திற்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் மேல் மாகாணத்தில் மிகச் சிறந்த நகர அபிவிருத்தியினைப் பிரதிபலிக்கும் வகையில் கொழும்பு நகரம் விரிவாக்கப்படுவதற்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

கெரவலப்பிட்டிய, கடவத்தை, கடுவலை மற்றும் கொட்டாவை போன்ற புதிய நகர மயமாக்கப்பட்ட இடங்களை இணைக்கும் வெளிச்சுற்று வட்டப் பாதையை உள்ளடக்கியதாக இப்புதிய அபிவிருத்தி காணப்படும். கம்பஹா மற்றும் கொழும்பு மாவட்டங்களின் எல்லை வர்த்தக மையங்களின் நுழைவாயிலாகக் காணப்படும். 450 ஏக்கர் நிலப்பரப்பில் புதிய நகரமொன்றினை உருவாக்குவதற்கு கொழும்பு தெற்கு துறைமுகத்தினை அண்டிய பகுதி வரைக்கும் கொழும்பு நகரம் விரிவாக்கப்படும்” என்றார்.
மேலும் இங்கே தொடர்க...

வடக்கு அபிவிருத்தி பணிகளை முன்னெடுக்க 2 பில்லியன் டொலர் மூன்று வருடங்களில் முழுமையாக பூர்த்தி

வட பகுதியில் போருக்குப் பின்னரான அபிவிருத்திப் பணிகளை முன்னெடுக்கவென சுமார் 20 ஆயிரம் கோடி ரூபா (2 பில்லியன் அமெ. டொலர்) செலவிடப்படு வதாக பதில் நிதி, திட்டமிடல் அமைச்சர் கலாநிதி சரத் அமுனுகம தெரிவித்தார்.

அவுஸ்திரேலியா, இந்தியா, சீனா, ஜப்பான், சுவிற்சர்லாந்து, ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி திட்டம், உலக வங்கி, ஆசிய அபிவிருத்தி வங்கி ஆகியன வழங்கியுள்ள இந்த நிதியைக் கொண்டு அடுத்த இரண்டு மூன்று வருடங்களில் அபிவிருத்திப் பணிகளைப் பூர்த்தி செய்ய முடியுமென்று அமைச்சர் கூறினார்.

வரவு செலவுத் திட்டத்தை நேற்று (29) பாராளுமன்றத்தில் சமர்ப்பித்து உரையாற்றிய அமைச்சர் கலாநிதி அமுனுகம, வடக்கின் வசந்தம், கிழக்கின் உதயம் அபிவிருத்தித் திட்டங்களை நடைமுறைப்படுத்திய அனுபவங்களைக் கொண்டு ஏனைய மாகாணங்களில் பின்தங்கிய 10 ஆயிரம் கிராமங்களை அபிவிருத்தி செய்ய அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாகவும் அடுத்த ஓகஸ்ட் மாதம் இது நடைமுறைப்படுத்தப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

அவர் மேலும் உரையாற்றுகையில்,

சிறந்த வாழ்க்கை முறையினை உருவாக்குவதற்கு நடுத்தரத்திலிருந்து நீண்ட காலம் வரையான அனைத்துமுள்ள டங்கிய மீள் கட்டமைப்பு உபாயமொன் றினை பிணக்கினால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களுக்கும் எடுத்துச் செல்வதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. தலைமன்னாரிலி ருந்து மதவாச்சியையும், ஓமந்தையிலிருந்து காங்கேசன்துறையினையும் இணைக்கும் வடக்கின் புகையிரதப் பாதைகளை அமைத்தல், அதேபோன்று ஏ-9 மற்றும் ஏ-32 போன்ற தேசிய பெருந்தெருக்கள் நிர்மாணமும் திட்டமிடப்பட்டுள்ளது.

நீர் வழங்கல், பாதைகள் , பாடசாலைகள், வைத்தியசாலைகள், நீதிமன்றங்கள், குடிநீர், நீர்ப்பாசனம் மற்றும் வாழ்வாதார நிகழ்ச்சித் திட்டங்களை செயற்படுத் துவதற்கான நிதியேற்பாடுகளும் உறுதி செய்யப்பட்டுள்ளன. பிணக்கினால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் புனரமைப்பு மற்றும் மீள் கட்டமைப்பு நிகழ்ச்சித் திட்டங்களை செயற்படுத்துவதற்கான உதவிகள் அவுஸ்திரேலியா, இந்தியா, சீனா, ஜப்பான், சுவிற்சர்லாந்து, ஐக்கிய நாடுகள் சபை, உலக வங்கி மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கி என்பவற்றிடமிருந்து பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளன.

பிணக்கினால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களின் ஒருங்கிணைந்த அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டத்திற்காகப் பயன்படுத்தப்பட்ட மொத்த நிதி ஏறக்குறைய 2 பில்லியன் ஐ. அ. டொலர்களாகும். இப்பிரதேசங்களில் அடுத்த இரண்டு முதல் மூன்று வருடங்களுக்கான அபிவிருத்தி தேவைகளை நிறைவேற்றுவதற்கு இது அரசாங்கத்தினை இயலச் செய்யும். எமது ஜனாதிபதி அடிக்கடி குறிப்பிடுவது போல; அபிவிருத்தியற்ற சமாதானமும் சமாதானமற்ற அபிவிருத்தியும் அர்த்தமுள்ளதாக இருக்கமாட்டாது. தற்பொழுது பிணக்கு முடிவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளதுடன், அப் பிரதேசங்களின் துரித அபிவிருத்திக்கு அரசாங்கம் தனது முழுமையான கவனத்தினைச் செலுத்தியுள்ளது.

இந்த அபிவிருத்தி முன்னெடுப்புகளை விரைவாக நிறைவு செய்தல், வடக்கு, தெற்கு இணைப்பினை ஏற்படுத்துவதன் மூலம் குறிப்பிடத்தக்க மாற்றத்தினை அடைந்துகொள்வதுடன், வடக்கு மற்றும் கிழக்கில் முதலீட்டு வாய்ப்புகளை அடிப்படையாகக் கொண்ட துறைகளை விருத்தி செய்வதற்கு வடக்கில் உறுதியான பொருளாதார அடிப்படையொன்றினை கட்டியெழுப்ப முடியும்.

ஜனாதிபதி “மஹிந்த சிந்தனை” எதிர்கால தூர நோக்கு” இதீனைச் சமர்ப்பிக்கையில் துரித மாகாண அபிவிருத்தி முன்னெடுப்புகளுக்கும் உத்தரவாதம் வழங்கினார். அத்தகைய முன்னெடுப்புகள் நிரல் அமைச்சுக்களினாலும் அதேபோன்று மாகாண சபைகளினாலும் மேற்கொள்ளப்பட்ட பல்வேறுபட்ட அபிவிருத்தி நடவடிக்கைகளின் மூலம் செயற்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன.

இவற்றின் மூலம் “ரஜரட்ட நவோதய”, “வயம்ப புபுதுவ”, “புபுதமு வெல்லஸ்ஸ”, “கந்துறட்ட உதானய”, “சப்ரகமுவ அறுணாலோகய” மற்றும் “ரன் அறுண” என்பவற்றினை செயற்படுத்துவதற்கு மூன்று வருட உபாய மொன்று செயற்படுத்தப்படும். பிணக்கினால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களின் அபிவிருத்தியில் “வடக்கின் வசந்தம்” மற்றும் “கிழக்கின் உதயம்” செயற் திட்டங்களைச் செயற்படுத்தியதிலிருந்து பெறப்பட்ட பிரத்தியேகமான அனுபவங்கள் இந்த முன்னெடுப்புக்களை செயற்படுத்துவதிலும் பயன்படுத்தப்படும்.

இந்த பிராந்திய அபிவிருத்தி முன்னெடுப்புகளில் ஆரம்ப நடவடிக்கையாக, நாடு முழுவதிலும் பரந்து வாழும் 10,000 வசதி குறைந்த கிராம மக்களுக்கு குடிநீர், பாதை வசதி, மின்சாரம் மற்றும் தரமான வீடு போன்ற வசதிகளை செய்து கொடுப்பதற்கு இலக்கிடப்பட்டுள்ளது. 2010 வரவு செலவுத்திட்டம் மூலதன ஏற்பாடுகளை செய்துள்ளபோதிலும் ஜனாதிபதி பிராந்திய தலைவர்கள், அலுவலர்கள் மற்றும் பிற அக்கறை செலுத்துனர்கள் ஆலோசனை வழங்கல் செயன்முறையில் ஈடுபடுவதற்கு முன்மொழிந்துள்ளார்.
மேலும் இங்கே தொடர்க...

2010 வரவு செலவு திட்டம் மக்கள் மேம்பாட்டு திட்டங்களுக்கு கூடுதல் நிதி

அரசாங்கத்தினால் சமர்ப்பிக்கப்ப ட்டுள்ள 2010ம் ஆண்டுக்கான (நடப் பாண்டு) வரவு -செலவுத் திட்டத் தில் மக்களுக்கு நன்மை பயக்கும் திட்டங்களுக்கு பெருந்தொகை நிதி யொதுக்கீடுகள் செய்யப்பட்டுள் ளன.

இலவச பாடப் புத்தகங்கள், இலவச போஷாக்குணவு, சீரு டைகள் (பாடசாலை) போக்கு வரத்து மானியங்களுக்கென பெருந் தொகை நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

சமுர்த்தி திட்டம், இளைப்பாறல் நன்மைகள், கர்ப்பிணித் தாய் மார்கள், பாலூட்டும் தாய் மார்கள் நன்மை பயக்கும் வகையிலும் பெருமளவு நிதி ஒதுக்கீடுகள் செய்யப்பட்டுள்ளன.

சுமார் 2 மில்லியன் விவசாயிகள் நன்மை பெறும் வகையில் உர மானியங்கள், மானியக் கடன்கள் உத்தரவாத விலையில் நெல் கொள்வனவு ஆகிய செலவி னங்களுக்கென 35,000 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இலவச சுகாதார சேவையினை தொடரும் வகையிலும் நிதி ஒதுக் கப்பட்டுள்ளது. 2010ம் ஆண்டுக்கான (நடப்பாண்டு) வரவு செலவுத் திட் டம் நேற்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. பதில் நிதி, திட்டமிடல் அமைச்சர் கலாநிதி சரத் அமுனுகம இதனைச் சபையில் சமர்ப்பித்து உரையாற்றினார். இதன் போது, எதிர்கால மேம்பாட்டுத் திட்டங்கள், நிதி ஒதுக்கீடுகள், தொடர் பாக அவர் தெரிவித்த விடயங் களை இங்கே ஒரே பார் வையில் தருகிறோம்
மேலும் இங்கே தொடர்க...