31 மே, 2010

மீள்குடியேற்றம் முழுமை பெற்றதும் திருமுறிகண்டி ஆலயம் மக்கள் பிரதிநிதிகளிடம்



இந்து கலாசார திணைக்கள பணிப்பாளர் விளக்கம்

முல்லைத்தீவு திருமுறிகண்டி பகுதியில் மக்களின் குடியேற்றம் முழுமை பெற்றதும் திருமுறிகண்டி ஆலய நிர்வாகம் மக்கள் பிரதிநிதிகளிடமே ஒப்படைக்கப்படும். அதுவரை ஜனாதிபதி செயலகத்தின் பணிப்பிற்கமைய தற்காலிக ஏற்பாடாக இந்து கலாசார நிதியம், முல்லைத்தீவு அரச அதிபர், பிரதேச செயலாளர் அடங்கிய பரிபாலன சபையே ஆலயத்தை நிர்வகித்து வருமென இந்துசமய கலாசார திணைக்களத்தின் பணிப்பாளர் திருமதி சாந்தி நாவுக்கரசன் தெரிவித்துள்ளார்.

இவ்வாலயத்தை அரசு பொறுப்பேற்றுள்ளது என்பதும் ஆலய நிதியை அரசு கையாள்கிறது என்பதும் தவறான கருத்தாகுமென இந்து சமய இந்து கலாசார திணைக்களம் அறிவித்துள்ளது.

கொழும்பு – யாழ். ஏ-9 பாதையில் முல்லைத்தீவு மாவட்டத்தில் திருமுறிகண்டியில் கோயில் கொண்டெழுந்தருளியிருக்கும் விநாயகப் பெருமானின் ஆலய நிர்வாகம் தொடர்பாக தவறான கருத்துக்கள் நிலவி வந்துள்ளன.

உண்மை நிலையை விளக்கும் பொருட்டு இந்து சமய இந்து கலாசார திணைக்களத்தின் பணிப்பாளர் சாந்தி நாவுக்கரசன் மேற்படி அறிக்கையை வெளியிட்டுள்ளார்.

அறிக்கையில் மேலும் தெரிவித் துள்ளதாவது கடந்த வருடம் யுத்தம் முடிவுற்ற பின்னர் ஏ-9 பாதை திறக்கப்பட்டு பொதுமக்களுக்கான வாகனப் போக்குவரத்து ஆரம்பமானவுடன் திருமுறிகண்டி ஆலயத்தை பொதுமக்கள் தரிசித்துச் செல்லவேண்டும் என்ற தொடர்ச்சியான கோரிக்கைகள் திணைக்களத்துக்கு விடுக் கப்பட்டன.

இதனைத் தொடர்ந்து இவ்வாலயத் துக்கென குருக்கள் ஒருவரை நியமித்து முறையான பூஜைகளை நடத்தும் ஒழுங்கு களை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி செயலகத்திலிருந்து இந்துசமய கலாசார அலுவல்கள் திணைக்களத்துக்குப் பணிப் புரை வழங்கப்பட்டது.

அதற்கமைவாகவே குருக்கள் ஒருவர் நியமிக்கப்பட்டு வழமையான பூஜைகள் ஆரம்பிக்கப்பட்டன. இதன் தொடர்ச்சியாக ஆலயத்தின் சூழலை முகாமை செய்து கொள்வதற்காக திணைக்களத்தின் மூலம் முகாமையாளர் ஒருவரும் நியமிக்கப்பட்டார்.

இவ்வாலயம் தொடர்பாக திணைக் களத்தில் பேணப்படும் கோவையின் ஆதாரங்களுக்கமைய 1992ஆம் ஆண்டி லிருந்து தலைவர், செயலாளர், பொரு ளாளர் மற்றும் செயற் குழு உறுப்பி னர்கள் அடங்கிய பொதுமக்கள் நிர் வாகம் ஏற்படுத்தப்பட்டு புதிய யாப்பு விதிகள் உருவாக்கப்பட்டு அப்பிரதேச மக்களாலேயே அவ்வாலயம் நிர்வகிக் கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி செயலக பணிப்பிற்கமைய தற்காலிக ஏற்பாடாகவே திணைக்களம் இந்து கலாசார நிதியம், முல்லைத்தீவு மாவட்ட அரச அதிபர், பிரதேச செயலாளர் அடங்கிய பரிபாலன சபை ஒன்று உருவாக்கப்பட்டு இவ்வாலயம் நிர்வகிக்கப்பட்டு வருகின்றது.

சட்டபூர்வமாக இவ்வாலயத்தை அரசு பொறுப்பேற்றுள்ளது என்பதும் ஆலய நிதியை அரசு கையாள்கிறது என்பதும் மிகவும் தவறான கூற்றுக்களாகும். ஆலயத்தின் திருப்பணி வேலைகளுக்கும், சுற்றுச்சூழல் வசதிகளுக்குமாகவே ஆலய வருமானம் பயன்படுத்தப்படுகின்றது என்பதே உண்மையாகும்.

இப்பிரதேசத்தில் பொதுமக்கள் குடியேற்றம் முழுமைபெறும் போது இப்பிரதேசத்தைச் சேர்ந்த பொது மக்கள் பிரதிநிதிகளிடம் இவ்வாலய நிர்வாகம் கையளிக்கப்படவுள்ளது.

அத்துடன் மிகுதியான ஆலய வருமானம் இப்பிரதேச நலன்புரிப் பணிகளான ஆதரவற்ற சிறுவர் கல்வி, முதியோர் இல்லங்களின் பராமரிப்பு போன்ற வற்றுக்கு மட்டுமே முன்னுரிமை யளித்து செலவிடப்பட திட்டமிடப் பட்டுள்ளது.

இவ்வாலயம் தொடர்பான நிர்வாக ரீதியான தீர்மானங்கள் அனைத்தும் முல்லைத்தீவு மாவட்ட அரச அதிபருடன் கலந்தாலோசிக்கப்பட்டே மேற்கொள்ளப் படுகின்றன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக