26 டிசம்பர், 2009

புனர்வாழ்வு அழிக்கப்பட்ட புலிகளை அவர்களின் குடும்பங்களுடன் இணைந்து வாழ வழியேற்படுத்துவதே புனர்வாழ்வாகும்- தலைவர் சித்தார்த்தன்!


அரசினால் புனர்வாழ்வு வழங்கப்பட்டுவரும் புலிகளை அவர்களின்

குடும்பங்களுடன் இணைந்து வாழ அனுமதிப்பதே புனர்வாழ்வாகும் என புளொட்
இயக்கத்தின் தலைவர் சித்தார்த்தன் தொலைக்காட்சி ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷவை நம்பிக்கையின் அடிப்படையில் ஆதரிக்கவுள்ளதாக தெரிவித்துள்ளதுடன், புலிகள் இயக்கத்தில் இருந்து
கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள உறுப்பினர்களை அரசு விடுவிக்கவேண்டும் என அரசை கோரியுள்ளதாகவும் புளொட் தலைவர் தனது செவ்வியில் தெரிவித்துள்ளார்.
மேலும் இங்கே தொடர்க...
26.12.2009.

1815பேர் உறவினர் நண்பர் வீடுகளிலிருந்து அழைத்துச் செல்லப்பட்டு துணுக்காய், மாந்தை பகுதிகளில் குடியேற்றம்


- நிவாரணக் கிராமங்களிலிருந்து வெளியேறி நண்பர்கள், உறவினர்களுடன் தங்கியுள்ள சுமார் 1815பேர் இன்று முல்லைத்தீவு, துணுக்காய், மாந்தை பகுதியில் சொந்த இடங்களில் குடியமர்த்தப்படவுள்ளதாக முல்லைத்தீவு அரசஅதிபர் இமெல்டா சுகுமார் தெரிவித்துள்ளார். துணுக்காய் பிரிவைச் சேர்ந்த 1200பேரும், மன்னார் மாந்தை கிழக்குப் பிரிவைச் சேர்ந்த 615பேரும் இன்று அழைத்துச் செல்லப்படவுள்ளனர். முல்லைத்தீவு மாவட்டத்தில் மாந்தை கிழக்கு, துணுக்காய் பிரதேச செயலாளர் பிரிவுகளில் இதுவரையில் 10,000பேர் வரையில் மீளக்குடியமர்த்தப்பட்டுள்ளனர். இங்கு குடியேற்றப்பட்ட அனைவருக்கும் தேவையான வசதிகள் செய்துகொடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். வைத்தியசாலை வசதிகள், கூட்டுறவு கடைகள், பாடசாலைகள் இயங்க ஆரம்பித்து விட்டதுடன் போக்குவரத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. சொந்த இடங்களில் மீளக்குடியேறுவதற்கான விருப்பத்தைத் தெரிவித்து பதிவுகளை மேற்கொண்டுள்ளவர்களில் 1815பேரே இன்று அனுப்பி வைக்கப்படவுள்ளனர். இதேவேளை, ஒட்டுசுட்டான் கிழக்கு பகுதியில் மேலும் 328 குடும்பங்கள் மீளக் குடியமர்த்தப்பட்டுள்ளதாகவும் இமெல்டா சுகுமார் தெரிவித்துள்ளார்.

கொழும்புக்கு கொண்டுவரப்பட்டுள்ள கப்பல் நான்காம் கட்டப்போரின்போது புலிகளால் கொள்வனவு செய்யப்பட்டது-







இலங்கைக் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டு கொழும்புத் துறைமுகத்திற்கு கொண்டுவரப்பட்ட கப்பல் புலிகளின் நான்காம் கட்ட ஈழப்போரில் கொள்வனவு செய்யப்பட்டதென கடற்படை தெரிவித்துள்ளது. குறித்த கப்பல் ஆயுதக் கடத்தலுக்காக கொள்வனவு செய்யப்பட்டுள்ளதாகவும், ஆனால் புலிகளால் ஒருமுறையேனும் இக்கப்பலில் ஆயுதங்களைக் கடத்த முடியவில்லையென்றும் கடற்படையினர் கூறியுள்ளனர். பிரித்தானியா லொய்டர்ஸ் நிறுவனத்தினரிடமிருந்து இக்கப்பல் கொள்வனவு செய்யப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளதென தெரிவித்துள்ள கடற்படையினர், இவற்றில் சிலவை ஜப்பானிய தயாரிப்புக்கள் எனவும் குறிப்பிட்டுள்ளனர். புலிகள் மொத்தம் 5 கப்பல்களைக் கொள்வனவு செய்ததாகவும் எஞ்சிய 4 கப்பல்களில் ஒன்று கனடாவின் கட்டுப்பாட்டில் உள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன.

முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் பிரதேசத்திலிருந்து இரண்டு ராடர்கள் கைப்பற்றல்-


முல்லைத்தீவு வெள்ளைமுள்ளிவாய்க்கால் பகுதியில் வைத்து இரண்டு ராடர் இயந்திரங்களை பொலீசார் மீட்டுள்ளனர். இந்த ராடர் இயந்திரங்கள் புலிகளால் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளதாகவும், இந்த ராடர் இயந்திரங்கள் ஜப்பானில் உற்பத்தி செய்யப்பட்டவையென்றும் பொலீசார் மேலும் தெரிவித்துள்ளனர். இந்த ராடர்கள் சுமார் 80மில்லியன் ரூபாய் பெறுமதி வாய்ந்தவை என்று தெரிவித்துள்ள பொலீசார், கடற்படையினரை உளவுபார்க்கவே இவை பயன்படுத்தப்பட்டிருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளனர். ராடர்கள் மீட்கப்பட்ட பகுதியில் தொடர்ந்தும் தேடுதல் நடவடிக்கைகளை படையினரும், பொலீசாரும் இணைந்து மேற்கொண்டு வருவதாக கூறப்பட்டுள்ளது.

42இலங்கையர்கள் மத்திய கிழக்கிலிருந்து நாடு திரும்பினர்-


மத்திய கிழக்கு நாடுகளுக்கு வேலைவாய்ப்புக்கென சென்றிருந்த நிலையில் அங்கு பல்வேறு இன்னல்களை அனுபவித்த 42பேர் இன்று நாடு திரும்பியுள்ளனர். இவர்கள் இன்று அதிகாலையில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர். குறித்த இலங்கையர்கள் வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தினால் நாட்டுக்கு அழைத்துவரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சவூதி அரேபியா, குவைத் மற்றும் கட்டார் ஆகிய நாடுகளுக்கு வேலைவாய்ப்புக்களைப் பெற்றுச் சென்றவர்களே இவ்வாறு இன்று நாடுதிரும்பியுள்ளனர். எசமானர்கள் மற்றும் எசமானிகளால் பல்வேறு இன்னல்களை அனுபவித்தவர்களையே நாட்டுக்கு அழைத்து வந்துள்ளதாகவும் வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் மேலும் தெரிவித்துள்ளது.

இனந்தெரியாத ஆயுததாரிகளால் தம்புள்ள வர்த்தகர் படுகொலை-



மாத்தளை மாவட்டம் தம்புள்ளை நகரில் வர்த்தகர் ஒருவர் இனந்தெரியாத ஆயுததாரிகளினால் கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் இன்று அதிகாலை 5மணியளவில் இடம்பெற்றதாக தம்புள்ளைப் பொலிசார் தெரிவித்துள்ளனர். குறித்த வர்த்தகரின் வர்த்தக நிலையத்திற்கு சென்ற இனந்தெரியாத ஆயுததாரிகள் குறித்த வர்த்தகர்மீது கூரிய ஆயுதங்களினால் தாக்கி கொலை செய்துவிட்டு தப்பிச் சென்றதாகவும் பொலீசார் தெரிவித்துள்னர். சம்பவத்தில் உயிரிழந்தவர் 55வயதுடைய தம்புள்ளைப் பிரதேசத்தைச் சேர்ந்தவரெனவும் தெரிவிக்கப்படுகிறது. இதன்போது குறித்த வர்த்தக நிலையத்தில் கடமையாற்றிய மேலுமிருவர் ஆயுததாரிகளின் தாக்குதலுக்கு உள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலீசார் குறிப்பிட்டுள்ளனர்.

இந்தியக் கடற்படையால் கைதுசெய்யப்பட்ட மீனவர்களில் 99பேர் விடுதலை-






இந்தியக் கடற்பரப்பில் வைத்து கைதுசெய்யப்பட்ட மீனவர்களில் 99பேர் விடுவிக்கப்பட்டுள்ளதாக மீன்பிடி வளத்துறை அமைச்சு குறிப்பிட்டுள்ளது. இவ்வாறு விடுவிக்கப்பட்ட இலங்கை மீனவர்களை நாட்டுக்கு திருப்பியழைத்து வருவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சு குறிப்பிட்டுள்ளது. இந்தியக் கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டின்பேரில் கடந்தமாதம் இந்த மீனவர்கள் இந்தியக் கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டிருந்தனர். இவர்களை விடுவிப்பதற்காக இந்தியத் தூதரகம் ஊடாக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
மேலும் இங்கே தொடர்க...

ராமேஸ்வரம் - தலைமன்னாருக்கு கப்பல் போக்குவரத்து: எம்.பி., தகவல்






இருந்து இலங்கை தலைமன்னாருக்கு கப்பல் போக்குவரத்து துவங்க திட்டம் உள்ளது,'' என, காங்கிரஸ் எம்.பி., சுதர்சன நாச்சியப்பன் கூறினார்.திருவண்ணாமலையில் நேற்று காங்கிரஸ் உறுப்பினர் சேர்க்கை குறித்த விழிப்புணர்வு பேரணி எம்.பி., சுதர்சன நாச்சியப்பன் தலைமையில் நடந்தது.பேரணிக்கு பின் நிருபர்களிடம் அவர் கூறியதாவது:


மத்திய அரசு இலங்கை தமிழர்களின் முழு வாழ்வாதாரத்துக்கு திட்டங்களை செயல்படுத்தி உள்ளது. அங்கு தேர்தல் நடக்க உள்ளதால் திட்டங்கள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டு உள்ளது. அது பிப்ரவரி மாதம் துவங்கப்படும். அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்படும்.ராமேஸ்வரத்தில் இருந்து தலைமன்னாருக்கு கப்பல் போக்குவரத்து துவங்க திட்டங்கள் தீட்டப்பட்டுள்ளது.


வரும் 2010 ஆகஸ்டு 31ம் தேதிக்குள் இலங்கை முகாமில் உள்ள தமிழர்கள் அவர்களின் சொந்த ஊர்களில் குடியமர்த்தப்படுவார்கள். அதன் பிறகு அங்குள்ள முகாம்கள் மூடப்படும்.இலங்கை தமிழர் பகுதிகளில் விவசாயத்தை பெருக்க விதை, மருந்து, விவசாய கருவிகள் வழங்கப்படும். யாழ்ப்பாணம் மாணவர்கள் கல்வி திட்டங்களை மேம்படுத்த கோரிக்கை விடுத்தனர்.


இதற்காக இந்திராகாந்தி பல்கலைக்கழகம் நிறுவ திட்டம் உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.பேட்டியின் போது காங்கிரஸ் மனித உரிமையியல் துறை மாவட்ட செயலாளர் தேவேந்திரன், துணை தலைவர் சின்னதுரை, நகர செயலாளர் புரு�ஷாத்தமன் உட்பட பலர் உடன் இருந்தனர்.
மேலும் இங்கே தொடர்க...
கள்ள நோட்டுகளுடன் இந்தியர் கைது


நேபாளத் தலைநகர் காத்மாண்டில் நேபாள,​​ இந்திய கள்ள ரூபாய் நோட்டுகளை வைத்திருந்ததாக ஜகாங்கீர் ஷேக் கைது செய்யப்பட்டார்.​ இவர் இந்தியாவைச் சேர்ந்தவர்.​ அவரிடமிருந்து 2,92,000 மதிப்புள்ள நேபாள ரூபாய் நோட்டுகளும் 5,000 மதிப்புள்ள இந்திய ரூபாய் நோட்டுகளும் கைப்பற்றப்பட்டன.​ ​​ ஜகாங்கீர் யார் வெறும் கள்ள நோட்டு வியாபாரியா அல்லது பயங்கரவாதிகளின் ஏஜெண்டா என்ற கோணத்தில் விசாரணை நடைபெறுகிறது.​ அவருடைய சந்தேகத்துக்குரிய நடமாட்டம் குறித்து மக்கள்தான் போலீஸýக்குத் தகவல் அளித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இலங்கைக்கு சீனா ரூ.1800 கோடி உதவி!



​ இலங்கைக்கு சுமார் ரூ.1840 கோடி நிதியுதவி அளிக்க சீனா முன்வந்துள்ளது.​ ​ இலங்கையில் 30 ஆண்டுகால போரினால் சீர்குலைந்துள்ள உள்கட்டமைப்பை மீண்டும் சீரமைத்தல் மற்றும் அந்நாட்டின் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்காக இந்த நிதியுதவியை அளிக்க சீனா முன்வந்துள்ளது.​ சீனாவுக்கு மூன்று நாள் அரசு முறைப் பயணமாகச் சென்றுள்ள இலங்கை கருவூலத்துறை அமைச்சர் ஜெயசுந்தரேவிடம் இந்த நிதி உதவி குறித்து சீனா உறுதி அளித்துள்ளது.​ இதுதொடர்பாக இலங்கைக்கும்,​​ சீனாவுக்கும் இடையே மூன்று ஒப்பந்தங்களும் கையெழுத்தாகியுள்ளன.​ சீனா சென்றுள்ள ஜெயசுந்தரே,​​ சீனாவின் வர்த்தக இணை அமைச்சர் சென் ஜியானை வெள்ளிக்கிழமை சந்தித்துப் பேசினார்.​


அப்போது, ​​ இலங்கையில் சீனாவின் நிதியுதவியுடன் செயல்படுத்தப்படும் வளர்ச்சித் திட்டங்கள் குறித்து விளக்கினார்.​ தவிர, ​​ இலங்கையில் இன்னும் செயல்படுத்தப்படவுள்ள திட்டங்கள்,​​ அதற்கு சீனாவிடம் இருந்து இலங்கை எதிர்பார்க்கும் உதவி ஆகியவை குறித்தும் ஜெயசுந்தரே எடுத்துக்கூறினார்.இதையடுத்து அந்நாட்டுக்கு மேலும் உதவிகளை செய்ய சீனா தயாராகவுள்ளதாக சென் ஜியான் உறுதியளித்துள்ளார்.​ இருவரின் சந்திப்புக்கு பின்னர் சீன அரசு தரப்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது.​ ​ இந்த சந்திப்பின்போது மகிந்த ராஜபட்ச தலைமையிலான அரசு,​​ நாட்டின் உள்கட்டமைப்பை விரைந்து மேம்படுத்துவதற்கும்,​​ மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்துவதற்கும் முன்னுரிமை அளித்து செயல்பட்டுவருவதாக ஜெயசுந்தரே கூறியதாகவும் அந்நாட்டு அரசு தரப்பு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது

Friday, December 25, 2009

சுனாமி இலங்கையை தாக்கி இன்றுடன் ஐந்தாண்டு பூர்த்தி













சுனாமி
பேரலை இலங்கையைத் தாக்கி இன்றோடு ஐந்தாண்டுகள்நிறைவடைகின்றன.

இந்தப் பேரலைகள் இலங்கை யின் 11 கரையோர மாவட்டங்களில் வாழ்ந்த சுமார் 39 ஆயிரம் பேர்க ளின் உயிர்களைக் காவு கொண்ட துடன்இ கோடிக் கணக்கான ரூபாய் பெறும தியான சொத்துக்களையும் அழித்தன.

இந்தப் பேரழிவை வருடா வருடம் நினைவு கூரும் வகையில் இத்தினத்தை தேசியப் பாதுகாப்பு தினமாக அரசாங்கம் பிரகடனப் படுத்தியுள்ளது.

அந்த வகையில் இவ்வருட தேசிய பாதுகாப்பு தினத்தின் பிரதான வைபவம் குருநாகல் நகரில் பிரதமர்

ரத்னசிறி விக்கிரமநாயக்கா தலைமையில் நடைபெறுகின்றது. இதேவேளை சுனாமி அனர்த்தம் காரணமாக மிக மோசமாக பாதிக்கப்பட்ட அம்பாறை மாவட்டம் உட்பட சுனாமி பேரலை அனர்த்தத்திற்கு முகம் கொடுத்த சகல மாவட்டங்களிலும் இன்று மத வழிபாடுகளும்இ ஆராதனைகளும் விசேட துஆ பிரார்த்தனைகளும் நடை பெறுகின்றன. அன்னதானங்களும் வழங் கப்பட ஏற்பாடாகியுள்ளன.

இதேநேரம் சுனாமி பேரலை அனர்த்தம் உட்பட அனர்த்தங்களால் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி தெரிவிக்கும் வகையில் இன்று காலை 9.25 மணி முதல் காலை 9.27 வரையும் மெளனமாக இருக்குமாறு அரசாங்கம் நாட்டு மக்களைக் கேட்டுள்ளது
முல்லைத்தீவில் மீள்குடியேறிய மாணவர்களுக்கு சைக்கிள்கள் கையளிப்பு














முல்லைத்தீவு
கரச்சி மற்றும் மல்லாவி பகுதியில் மீளக்குடியமர்த்தப்பட்ட பகுதி மாணவர்களுக்கு 150 சைக்கிள்களையும்இ முல்லைத்தீவு வலய கல்வி அலுவலக அலுவலர்களுக்கு 5 மோட்டார் சைக்கிள்களையும் வடமாகாண ஆளுநர் ஜீ..சந்திரசிறி வழங்கினார்.

முல்லைத்தீவு கரச்சி பலநோக்கு கூட்டுறவு சங்க கட்டடத்தில் நடைபெற்ற வைபவத்தின் போது மாணவ மாணவிகளுக்கு 75 சைக்கிள்களையும் மூன்று மோட்டார் சைக்கிள்களையும் வழங்கினார். முல்லைத்தீவு மல்லாவி மத்திய கல்லூரியில் நடைபெற்ற மற்றுமொரு நிகழ்வின்போது அங்குள்ள மாணவஇ மாணவிகளுக்கு 75 சைக்கிள்களையும்இ 2 மோட்டார் சைக்கிள்களையும் ஆளுநர் வழங்கினார்.

“புதியபாதை சுந்தரம்” 28வது நினைவு தினம்


புதியபாதை
ஆசிரியர்
சதாசிவம் சிவசண்முகமூர்த்தி(சுந்தரம்)
யாழ்-சுழிபுரம்


புதியபாதை ஆசிரியரும் விடுதலையின் பெயரால் படுகொலை செய்யப்பட்ட முதலாவது பத்திரிகையாளருமான சதாசிவம் சிவசண்முகமூர்த்தி அவர்களின் 28வது நினைவு தினம் எதிர்வரும் ஜனவரி 2ம் திகதியாகும் இதனை முன்னிட்டு, ஜனவரி 16ம் திகதி கனடா ரொறன்ரோ நகரில் தமிழ் ஊடகத்துறையினர் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் முகமாகஊடகங்;களின் தவறான செய்திகள், ஆய்வுகள் உரிமை போராட்டத்தை எவ்வளவு தூரம் பின் நகர்த்தியுள்ளதுஎன்ற கருப்பொருளில் கருத்தரங்கம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.


புதியபாதை சுந்தரம் 28வது நினைவு தினம்
இடம்: 2401 டெனிசன் வீதி, மார்க்கம், ஒன்ராறியோ, கனடா
காலம்: ஜனவரி 16ம் திகதி சனிக்கிழமை 2010ஆண்டு
நேரம்: மாலை 4:00 மணி

ஊடகத்துறையை காப்போம்! உண்மையை
எடுத்து கூறுவோம்!

-புதியபாதை ஏற்பாட்டுகுழு

மேலதிக தொடர்புகட்கு: 416-613 2771


ஈழத் தமிழ் பெண்மையை இழிவு படுத்தும் தமிழ் வாணிக்கு மனநலம் பாதிப்பா ?


ஈழத் தமிழ் பெண்மையை இழிவு படுத்தும் தமிழ் வாணிக்கு மனநலம் பதிப்பா பிரித்தானியாவில் தனது சகோதருடன் வாழ்த்து வந்த தமிழ் வாணிபிரித்தானியாவில் சற்று மனநலம் பாதிக்கப்பட்டதால் மனநலம் பேணுவதற்காகசிறிலங்காவின் வன்னிக்கு விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிக்குசென்றதாகவும் பிரித்தானிய குடியுரிமைகொண்ட, தமிழ்வாணி ஞானகுமார் பி.பி.சி. தமிழோசைக்கு தெரிவித்து இறுத்தார் [பிரித்தானியாவில் மனம் சரிஇல்லை என்பதற்காக வன்னி விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டு பகுதிக்குசென்ற முதல் பெண் இவர்தான்]


சிறிலங்கா அரசு மேற்கொண்ட பாரிய இறுதியுத்தத்தில் சிக்கி, வன்னிமக்களுடன் இடம்பெயர்ந்த வேளை, இடைத்தங்கல்முகாம்களில் தடுத்துவைக்கப்ப்பட்டிருந்தார். பிரித்தானிய அரசின் கடும்அழுத்தத்திற்கு
மத்தியில் கடந்த செப். மாதம் 8 ஆம் திகதி, அங்கிருந்துவிடுவிக்கப்பட்டு,பிரித்தானியா செல்ல அனுமதிக்கட்டார்.சிறிலங்காவின்இறுதி யுத்த நடவடிக்கைகளின் போது மக்களோடு மக்களாக இருந்தஅவரின்
அனுபவங்களை கண்டிறியவும், இடைத்தங்கல் முகாம்களின் உண்மையானநிலைமை பற்றிதெளிவுறவும் தமிழ் மக்கள் சார்பில் தற்போதுள்ள ஒரே ஒருஆதாரபூர்வமானநபரகாக இவர் இருப்பதால் அவரை பல இணைய தளங்கள் முண்டியடித்து அவரதுசெவ்வியை வெளியிட்டன இவரது செவ்வி ஒன்றுக்கு ஒன்று முரண்பட்டதாகவேஇருந்தது புலிகளின் கட்டுப் பாட்டு பகுதியில் தான் இருத்த வேலை இவர்புலிகளை அங்கு காணவில்லை என்றும்


புலிகள் தன்னை வந்து சந்திக்க வில்லைஎன்றும் புலிகள் மக்களை மனித கேடயமாக பயன்படுததவில்லை என்றும்பிரித்தானியா காடியன் ஆங்கிலப் பத்திரிகைக்கும் பி பி சி தமிழோசைக்கும்முள்ளிவாய்க்காலில் இருந்து மீண்ட தமிழ்வாணி நேர்காணல் ஒன்றை வழங்கிஇருந்தார் உலகமே அறிந்த உண்மையை உலகுக்கு மறைத்த[ இப்படி முழுபூசணிக்காயை சோற்றில் மறைக்கிறாயே இது நியாயமா? ...]இவர் அன்று

வெளியிடாத ஒரு அப்பட்டமான பொய்யை இன்று [ தடுப்புமுகாமில் பெண்கள்பணத்துக்காகவும் உணவுக்காகவும் படையினரால்உடலுறவுக்குள்ளாக்கப்படுகிறார்கள்: தமிழ்வாணி }வேடிக்கையான ஒரு விஷயம்இன்று கவனத்துக்கு வருகிறது. தமிழ் பெண்மையை இழிவு படுத்தமுனைந்திருப்பது எதனால்? இன்று தமிழ் மக்கள் முகாங்களைவிட்டு வெளியில் வந்து நடமாடுவதை சகிக்க முடியாமல் விடுதலைப்புலிகளின்ஆதரவு இணைய தளங்களில் தமிழ் பெண்களை இழிவு படுத்துவதன் நோக்கம் என்ன ?இவரின் இந்த செயல் ஒட்டு மொத்த போராட்டத்தையும் இழிவு படுத்து செயல்என்பதை ஏன் புலிகளின் இனைய தளங்களாக இருந்தாலும் சரிv புலிகளைஎதிர்க்கும் அமைப்புக்களாக இருந்தாலும் இதைக் கண்டிக்க வில்லை தமிழீழவிடுதலைக்கான போராட்டம்,

மண் விடுதலைக்கானe போராட்டம் மட்டும்தான்! என்றுஎம்மில் பலர் இன்னமும் எண்ணியும் எழுதியும் வருகின்றார்கள். தமிழீழவிடுதலைப் போராட்டம் என்பது, தமிழ் மண்ணை மட்டும் மீட்பதற்கான போராட்டம்அன்று! பெண்ணிய அடிமைத்தனம், சாதி ஒடுக்குமுறை, வர்க்க பேதம் போன்ற பலசமூகக் குறைபாடுகளைக் களைவதற்கான போராட்டங்களையும், தமிழ் மொழி மீட்பு,மண்மீட்பு, நெறி மீட்பு, போன்றவற்றிற்கான போராட்டங்களையும், ஒருங்கு
சேர,அமைந்த போரரட்டத்தை போராட்டத்தின் வயது எல்லைக்குள் [௨௫] பிறந்த ஒருபிரித்தானிய குடியுரிமை பெற்று வாழும் இவர் எப்படி எங்கள் ஈழத்துபெண்மையை இழிவு படுத்த முடியும் இவர் இவரின் விடுதலைக்காக அன்று இவரின்பெண்மையை அடவு வைத்து விடுதலை அடத்தாரா ? அல்லது எமது மக்கள் நிம்மதியாகவாழ்ந்தால் புலிகளின் போராட்டம் மழுங்கடிக்கப்படும் என்ற புலிகளின்m கபடநாடகமா ?ஒரு நாட்டு மண்ணின் விடுதலைக்காக-

மொழியின் விடுதலைக்காக -இனத்தின் விடுதலைக்காக - பிற வெளிச் சக்திகளால் மழுங்கடிக்கப்பட்டுள்ளதமிழ்ப்பண்பாட்டின் விடுதலைக்காக - வெளிச் சக்திகளுடன் போராடி வருகின்றஅதே வேளையில், தனது சொந்த இனத்திலேயே புரையோடிப் போயிருக்கும். சமுதாயக்கொடுமைகளையும் களைந்து எறிய புறப்பட்ட எங்கள் ஈழத்தின் கண்மணிகளை இழிவுபடுத்த நினைத்த ஈனப் பிறவியே நீயும் ஒரு பெண்தானே ?தெரிந்தோ, தெரியாமலோ,பெண்ணினமும் துணை போயிருக்கின்றது என்பதுதான் வேதனையான உண்மை! ஒரு சிலவிசமிகள் தாங்கள் பிரபல்யம் ஆக வேண்டும் தமது இணைய தளங்கள் பிரபல்யம் ஆகவேண்டும் என்ற நோக்கத்துக்காக மட்டுமே செயல்படுகின்றன இது கண்டிக்கப்படவேண்டும் பெண்களின் உரிமை பேசும் அமைப்புக்களின் மவுனம் தமிழ்வாணிஞானகுமாரின் கருத்துக்கு உடன்பாடா ?தயவு செய்து எமது பெண்களை இழிவுபடுத்தாமல் எமது மக்களுக்கு இனி வரும் காலங்களில்


என்ன நன்மை செய்யாலாம் என்பதை கருத்தில் எடுக்குமாறு சிரம் தாழ்த்தி
கேட்ட்கிறேன் இனி வரும் காலங்களில் காணப்பட வேண்டிய மாற்றங்களையும் ...
எமது மக்களின் துயர் துடைக்க உதவிக்கரம் நீட்டுங்கள் பின் குறிப்பு;தமிழ் வாணிக்கு ஒரு சகோதரர் இருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றது தயவுசெய்து அவருக்கு பணிவுடன் ஒரு அன்பான வேண்டுகோள் உங்கள் தங்கையை ஒரு நல்லமனநல மருத்துவரிடம் காண்பிக்கவும் இவர் போன்ற சிறு பில்லைத்தனமானசெயல்தான் இன்றைய தமிழ் மக்களின் அவலம் என்பதையும் தமிழ் மக்களின் ஒட்டுமொத்த போராட்டத்தையும் கொச்சைப்படுத்த இடம் கொடுக்காமல் நல்லமருத்துவரிடம் காண்பிக்கவும் வயிற்றுப்பிழைப்புக்காக ஊடகம் நடத்தலாம்,தியாகங்களைக் கொச்சைப்படுத்த முயல்வது துரோகமாகும்.


இது தமிழ் இணையதளத்தின் கருத்தல்ல : அழகியா ஜெயகுமாரின்கருத்து


நன்றி தமிழ்
மேலும் இங்கே தொடர்க...