22 ஜனவரி, 2011

மோதல்கள் நடந்த இடங்களில் சிறப்பான புனர்வாழ்வு நடவடிக்கை ஐ. நா. பிரதி செயலாளர் திருப்தி


முன்னர் மோதல்கள் இடம்பெற்ற பகுதிகளில் இடம்பெயர்ந்த மக்களை மீள்குடியமர்த்தும் நடவடிக்கைகள் மற்றும் அப்பகுதிகளை மீளக் கட்டியமைக்கும் நடவடிக்கைகள் சிறப்பான முறையில் முன்னெடுத்துச் செல்லப்பட்டிருப்பதாக இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருக்கும் ஐக்கிய நாடுகள் சபையின் மனித நேய விவகாரங்களுக்கான பிரதிச் செயலாளரும், உடனடி நிவாரணப் பிரதி இணைப்பதிகாரியுமான கத்தரின் ப்ராங்க் தெரிவித்துள்ளார்.

இடம்பெயர்ந்து மீளக்குடியமர்ந்த மக்களின் வாழ்க்கைத் தரத்தைக் கட்டியெழுப்புவதற்கும், அம்மக்கள் எதிர்கொள்ளும் சவால்களை வெற்றிகொள்வதற்கும் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. எனினும், மோதல்களால் இடம்பெயர்ந்து மீளக்குடியமர்ந்த மக்களுக்கான உதவிகள் வழங்கப்பட்டிருந்தாலும் அவர்கள் தமது வாழ்க்கையை ஆரம்பித்து ஒரு நிலைக்குக் கொண்டுவருவது சிரமமானதாகவே அமையும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

மீள்குடியமர்ந்த மக்களுக்கான தேவைகள் எதுவும் நிறைவேற்றப்படாமல் இல்லை. அவர்கள் பாடசாலைகளுக்குச் செல்கிறார்கள், பாடசாலைகள், வைத்தியசாலைகள், இயங்குகின்றன. அடிப்படை சமூக சேவைகள் வழங்கப்படுகின்றன. வாழ்க்கைத் தரத்தைக் கட்டியெழுப்புவதற்கான அடிப்படைத் தேவைகள் அனைத்தும் பூர்த்தி செய்துகொடுக்கப்ப ட்டுள்ளன.

இம்மக்களுக்கான உதவிகளை வழங்குவதற்கே நாம் இருக்கின்றோம். இலங்கை அரசாங்கம் இம்மக்களின் உட்கட்டுமானத் தேவைகளை நிறைவேற்ற முதலீடுகளைச் செய்துள்ளது. இந்த முதலீடுகள் பாதிக்கப்பட்ட மக்களின் தேவைகளுடன் இணைந்தவையாக இருந்தால் மேலும் சிறப்பாக அமையும் என்றும் கத்தரின் குறிப்பிட்டார்.

மூன்று நாள் விஜயத்தை மேற்கொண்டு கடந்த 19ஆம் திகதி இலங்கைக்கு வந்த ஐக்கிய நாடுள் சபையின் மனித நேய விவகாரங்களுக்கான பிரதிச் செயலாளரும், உடனடி நிவாரணப் பிரதி இணைப்பதிகாரியு மான கத்தரின் ப்ரங்க், நேற்று முன்தினம் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கிழக்கு மாகாணத்திற்கும், வடக்கின் முல்லைத்தீவு மாவட்டம் தேறாவில், வவுனியா உள்ளிட்ட பகுதிகளுக்குச் சென்று மீள் குடியமர்ந்திருக்கும் மக்களையும் பார்வை யிட்டிருந்தார். மோதல்களால் இடம்பெயர்ந்து மீள்குடியமர்த்தப்பட்ட மக்களின் நிலைமைகள் மற்றும் மீள்குடியமர்த்துவதற்கு முன்னெடுக்கப்பட்டிருக்கும் நடவடிக்கைகள் சிறப்பாக அமைந்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை, அண்மையில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் பாதிக்கப்பட்ட மக்களின் தேவைகளை நிறைவேற்றுவதற்கு 51 மில்லியன் அமெரிக்க டொலர் உதவி தேவையெனக் கோரிக்கை விடுத்திருந்த அவர், எதிர்வரும் 6 மாதங்களுக்கு அவர்களுக்குத் தேவையான நிவாரணங்கள் வழங்கப்பட வேண்டியிருப்பதாகவும் சுட்டிக்காட்டியிருந்தார்.

ஐக்கிய நாடுகள் சபையின் மத்திய உடனடி நிதியிலிருந்து 6 மில்லியன் அமெரிக்க டொலர் ஒதுக்கப்பட்டிருப்பதாகவும் ஐக்கிய நாடுகள் சபையின் மனித நேய விவகாரங்களுக்கான பிரதிச் செயலாளரும், உடனடி நிவாரணப் பிரதி இணை ப்பதிகாரியுமான கத்தரின் ப்ராங்க் அறிவித்திருந்தார்.
மேலும் இங்கே தொடர்க...

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டோருக்கு பாரபட்சமின்றி மேலதிக நிவாரணம்



மீள்கட்டுமானப் பணிகளை மேற்கொள்ளவும், நிவாரணம் வழங்கவும்
10 பேர் கொண்ட அமைச்சுகளின் உயரதிகாரிகள் குழு நியமனம்
வடக்கு, கிழக்கு உட்பட சில மாகாணங்களில் அண்மையில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் காரணமாகப் பாதிக்கப்பட்ட சகலருக் கும் மேலதிக நிவாரணம் வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இதற்கென தற்போதைய சுற்றறிக்கை அறிவுறுத்தல்களைத் தளர்த்தியும், வருமானத்தைக் கருத்திற்கொள்ளாமலும் நிவாரணம் வழங்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இதற்காக 10 அமைச்சுகளின் அதிகாரிகள் குழுவொன்றும் நியமிக்கப்பட்டுள்ளது.

இடர் முகாமைத்துவ அமைச்சர் மஹிந்த அமரவீர முன்வைத்த பிரேரணைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியதாக அமைச்சர் அனுர பிரியதர்ஷன யாப்பா தெரிவித்தார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று (21) முற்பகல் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் அமைச்சர் யாப்பா, அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவித்தார்.

வடக்கு, கிழக்கு, வடமத்திய மாகாணங்களிலும் அதேபோல் மத்திய, ஊவா மாகாணங்களிலும் அண்மையில் ஏற்பட்ட இயற்கை அனர்த்தத்தில் 2,80,000 குடும்பங்களைச் சேர்ந்த 10,61,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் அமரவீர அமைச்சரவையில் அறிவித்துள்ளார்.

இவர்கள் அனைவருக்கும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பணிப்பின் பேரில் தேவையான புகலிடம் மற்றும் சமைத்த உணவு, உலருணவு போன்ற உடனடித் தேவைகள், அனைத்து உதவிகளையும் அரசாங்கம் பெற்றுக்கொடுத்த தாகவும் அமைச்சர் அமரவீர அறிவித்துள்ளார்.

அதேபோல் பாதிக்கப்பட்டவர்களுக்கு மேலதிக நிவாரணம் வழங்க வேண்டு மென்றும் இதற்கு சுற்றறிக்கை அறிவுறுத்தல் தளர்த்தப்பட வேண்டுமென்றும் அமைச்சர் பிரேரித்துள்ளார்.

இதனையடுத்து, பாதிக் கப்பட்டவர்கள் யாராக இருந்தாலும் வருமானத்தைப் பாராமலும், அவர்கள் எங்கு தங்கியிருக்கிறார்கள் என்பதைக் கருத்திற் கொள்ளாமலும் நிவாரணம் வழங்க அமைச்சரவை அங்கீகாரம் வழங் கியதாக அமைச்சர் யாப்பா குறிப்பிட்டார்.

அதேநேரம் பாதிக்கப்பட்டவர்களுக்கு மேலதிக நிவாரணங்களை வழங்கவும் மீள் கட்டுமானப் பணிகளை மேற்கொள்ளவும் ஆராயும் பொருட்டு சம்பந்தப்பட்ட 10 அமைச்சுகளின் பிரதிநிதிகளைக் கொண்ட அதிகாரிகள் குழுவொன்றை நியமிக்கவும் அமைச்சரவை தீர்மானித்ததாக அமைச்சர் யாப்பா மேலும் தெரிவித்தார்.
மேலும் இங்கே தொடர்க...

சன் சீ ஆட்கடத்தல் கப்பல் விவகாரம்: பிரதான சந்தேக நபர் கைது

எம்.வி. - சன் சீ கப்பல் 492 இலங்கையர்களை பிரித்தானிய கொலம்பியத் தீவுகளுக்குச் சட்டவிரோதமாக அழைத்துச் சென்ற சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபரைக் கைது செய்திருப் பதாக தாய்லாந்து அதி காரிகள் தெரிவித்துள்ளனர்.

48 வயதுடைய நடேசன் ஜீயநந்தன் என்பவரையும், சட்டவிரோதமாக வெளிநாட்டுக்கு ஆட்களைக் கடத்தும் சம்பவங்களுடன் தொடர்புடைய மேலும் 7 பேரையும் தாய்லாந்து அதிகாரிகள் கடந்த ஞாயிற்றுக்கிழமை கைது செய்திருப்பதாக குளோப் அன்ட் மெயில் செய்தி வெளியிட்டுள்ளது.

முன்னாள் புலித் தலைவர்கள் உட்பட மேலும் பல இலங்கை யர்கள் கப்பல்கள் மூலம் கனடாவுக்குள் நுழைய விருப்பதாக கனேடியப் புலனாய்வு அதிகாரிகள் எச்சரித்திருந்த நிலையில், தாய்லாந்து அதிகாரிகள் நடத்திய திடீர் சோதனையின் போதே முக்கிய சந்தேக நபர் கைது செய்யப்பட்டார்.

சன் சீ கப்பல் விவகாரத்தில் ஜீயநந்தன் தொடர்புபட்டிருந்தாலும், இதனைத் திட்டமிட்ட முக்கியமான நபர் இவரல்ல என்று குளோப் அன்ட் மெயிலுக்குக் கருத்துத் தெரிவித்த கனேடிய அதிகாரிகள் கூறியுள்ளனர். கனடாவுக்குள் சட்ட விரோத குடியேற்ற வாசிகளை அழைத்து வந்த நடவடிக்கை தொடர்பிலான விசாரணைகள் தொடர்ந்து வருவதாக அந்த அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அவுஸ்திரேலியா, கனடா உள்ளிட்ட பல நாடுகளுக்குச் சட்ட விரோதமாகச் செல்லுபவர்கள் தாய்லாந்தை இடைத்தங்கல் இடமாகப் பயன்படுத்தி வருவதால், தாய்லாந்திலிருந்தே கூடுதலான சட்ட விரோத வாசிகள் ஏனைய நாடுகளுக்குச் செல்வதாக விசாரணைகள் கூறுகின்றன.

அதேநேரம் முன்னாள் புலிப் போராளித் தலைவர்கள் 50 பேர் உட்பட 400 தமிழர்கள் சட்ட விரோதமாக கனடா நுழைவதற்கு முயற்சிப்பதாக கனேடிய புலனாய்வு அதிகாரிகள் எச்சரித்துள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.
மேலும் இங்கே தொடர்க...

மீள் குடியேற்றம் செய்யப்பட்டோர் குறித்து ஐ நா கவலை





வவூனியா முகாமில் இருந்து செல்லும் ஒரு குடும்பம்
இலங்கையின் வடபகுதியில் போரினால் இடம்பெயர்ந்து மீள குடியேறியுள்ள மக்களில் பெரும்பாலானவர்களுக்கு அடிப்படை சேவைகள், இருப்பிடம் மற்றும் குடிநீர் போன்ற விடயங்கள் போதுமான அளவவில் கிடைக்கவில்லை என்று ஐநாவின் துணை பொதுச் செயலாளரான கத்தரின் பரக் கூறியுள்ளார்.

வியாழக்கிழமை வட பகுதிக்கு சென்று வந்த அவர், வெள்ளிக் கிழமையன்று கொழும்பில் செய்தியாளர்களை சந்தித்தார். வடபகுதியில் மீளக்குடியேறிய மக்கள் இன்னமும் மிகவும் பலவீனமான நிலையிலேயே இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

வடக்கின் எதிர்காலம் என்பது அங்கு மக்களில் முதலீடு செய்வது என்பதிலேயே தங்கியுள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.

அவர்கள் தங்கள் வாழ்க்கையை கொண்டு நடாத்த அவர்களுக்கு தேவையான திறன்களை வளர்ப்து, வாழ்க்கை வசதிகள் மற்றும் சமூக மேம்பாடு ஆகியன அவசியமானவையாக இருக்கின்றன என்றும் அவர் கூறியுள்ளார்.

மட்டக்களப்பில் வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்புக்களை வான் மூலமாக தான் பார்வையிட்டதாகக் கூறிய அவர், அந்தப் பகுதிக்கான தனது விஜயம் அங்கிருக்கின்ற பிரச்சினைகளை முன்னெடுத்துச் செல்ல உதவும் என்றும் கூறியுள்ளார்.

அந்தப் பகுதி மக்களின் நிவாரணத்துக்காக 51 மில்லியன் அமெரிக்க டாலர்களை உதவியாக அவர் கோரியுள்ளார்.
மேலும் இங்கே தொடர்க...

மகிந்தவை விசாரிக்க அம்னெஸ்டி கோரிக்கை








இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்ச அவசர பயணமாக அமெரிக்கா சென்றுள்ள நிலையில், இலங்கையில் நடைபெற்றதாகக் கூறப்படும் போர்குற்றங்கள் மற்றும் சித்தரவதை தொடர்பாக அவருக்குரிய பங்கு குறித்து அமெரிக்கா விசாரிக்க வேண்டுமென சரவதேச மனித உரிமைகள் அமைப்பான அம்னெஸ்டி இண்டர்நேஷனல் கோரியுள்ளது.

இது பற்றி அந்நிறுவனத்தின் ஆசிய பசிபிக் பகுதிக்கான இயக்குனர் சாம் ஜாஃப்ரி பிபிசியிடம் கூறுகையில் இலங்கை இராணுவத்தின் மீது, நம்பத்தகுந்த, பாரதூரமான மனித உரிமை மீறல் தொடர்பான குற்றச்சாட்டுக்கள் இருப்பதாக தெரிவித்தார்.

இலங்கை இராணுவத்தின் தலைமை தளபதியாக அதிபர் மகிந்த ராஜபக்சே இருக்கிறார். எனவே இந்த மனித உரிமை மீறல்கள் நடந்தபோது இராணுவ அதிகார கட்டளைத்தொடரின் அதி உயர் பதவியில் இருந்தவர் என்ற முறையில் பொறுப்பேற்றல் தொடர்பான குற்றச்சாட்டுகள் அவர் மீது சுமத்தப்பட உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

அம்னெஸ்டியின் இந்த கோரிக்கை தவறானது, சட்டரீதியில் சாத்தியமற்றது என்கிறார் இலங்கை ஆளும் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான ராஜீவ் விஜய சிங்க.

இது தொடர்பாக பிபிசியிடம் கருத்து தெரிவித்த அவர், ஒரு நாட்டின் தலைவருக்கு முன்பு ஒருவர் குற்றச்சாட்டுக்களை முன்வைக்கும் முன் அவர் மீதான குற்றங்களை நீதிமன்றம் உறுதி செய்ய வேண்டும் என்று தெரிவித்தார்.

இதை உலக நீதிமன்றங்கள் செய்ய வேண்டும் என்றும் கூறிய அவர், சூடானின் ஜனாதிபதிக்கு இது போல நடந்துள்ளதாகவும் தெரிவித்தார்.

மேலும், இத்தகைய உலக நீதிமன்றங்கள் செயல்பட உதவும் சர்வதேச ஒப்பந்தங்கள் பலவற்றில் அமெரிக்கா கைச்சாத்திடவில்லை வில்லை என்பதோடு, அமெரிக்கா செய்த போர் குற்றங்கள் தொடர்பில் அந்த நாடு இதுவரை பொறுப்பேற்க விரும்பவில்லை என்பது உலகுக்குத் தெரியும் என்பதால், மஹிந்த மீதான புகார்கள் தொடர்பில் அமெரிக்கா நடவடிக்கை எடுக்க வாய்ப்பில்லை என்றும் ராஜீவ் விஜயசிங்க வாதிட்டார்.

புறக்கணிப்பு கோரிக்கை

இதற்கிடையே, இலங்கையில் அடுத்த வாரம் நடைபெறவுள்ள இலக்கிய விழாவை துருக்கியின் நன்கு அறியப்பட்ட எழுத்தாளரான ஆர்ஹான் பாமுக் அவர்களும் மற்றவர்களும் புறக்கணிக்க வேண்டும் என்று சர்வதேச அளவில் புகழ் பெற்ற எழுத்தாளர்களான நோம் சாம்ஸ்கி மற்றும் அருந்ததி ராய் ஆகியோர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

காலி இலக்கிய விழாவில் எழுத்தாளர்கள் கலந்து கொள்வது, இலங்கையில் பேச்சு சுதந்திரத்தை நசுக்கும் செயலை நியாயப்படுத்துவது போலாகும் என இவர்கள் கூறுகின்றனர்.

ஆயினும் இந்தக் கோரிக்கையை விழா ஏற்பாட்டாளர்கள் விமர்சித்துள்ளனர். இந்த இலக்கிய விழாவானது நன்மை செய்வதற்கான உந்துசக்தி என்று அவர்கள் வர்ணித்துள்ளனர்.
மேலும் இங்கே தொடர்க...