30 ஏப்ரல், 2011

இரண்டாயிரம் ஆண்டுகள் பழைமையான கப்பல் ரோமில் கண்டுபிடிப்பு




ரோமானிய பேரரச காலத்திற்குரிய சுமார் 2 ஆயிரம் வருடங்கள் பழைமையான கப்பலொன்று ரோமின் புராதன ஒஸ்டியா துறைமுகத்திற்கருகில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

வீதிப்புணரமைப்பு நடவடிக்கைகளின் போதே இது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இக்கப்பலானது சுமார் 11 மீற்றர் நீளமானதாகும், மேலும் இதுவரை குறித்த பிரதேசத்தில் கண்டுபிடிக்கப்பட்ட புராதன கப்பல்களில் மிகவும் பெரியதாகக் கருதப்படுகின்றது.

இதன் முன்பகுதியும் பின்பகுதியும் சிதைவடைந்து விட்டதாக இதனைக் கண்டுபிடித்த தொல்பொருள் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்

அகழ்வாராய்ச்சிப் பணிகள் தொடர்ந்து இடம்பெற்று வருவதாகவும், இக்கண்டுபிடிப்பானது மிகவும் முக்கியமானதொரு நிகழ்வெனவும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

ஒஸ்டியா எண்டிகா என்றழைக்கப்படும் இத்துறைமுக நகரமானது 2,500 ஆண்டுகளுக்கு முன்னர் உருவாக்கப்பட்டதாகும். _
மேலும் இங்கே தொடர்க...

அதிகாரப் பகிர்வு குறித்து மீண்டும் 12 இல் சந்திப்பு

அரசாங்கத்துக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குமிடையிலான நான்காம் சுற்றுப் பேச்சுவார்த்தை நேற்று வெள்ளிக்கிழமை கொழும்பில் இடம்பெற்றது.

இதன்போது, அதிகாரப்பகிர்வு தொடர்பில் அரசாங்கம் தனது பங்காளிக்கட்சிகளுடன் கலந்தாலோசித்த பின்னர் எதிர்வரும் 12ஆம் திகதி தமிழ்த்தேசிய கூட்டமைப்புடன் மீண்டும் சந்தித்துப் பேசுவதற்கு இணக்கம் காணப்பட்டுள்ளது.

இதேவேளை, தடுத்து வைக்கப்பட்டுள்ள முன்னாள் போராளிகளினது பெயர்ப்பட்டியலைப் பார்வையிடுவதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்வதெனவும் இப்பேச்சுவார்த்தையின் போது அரச தரப்பினர் உறுதியளித்ததாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் யாழ். மாவட்ட எம்.பி.யுமான சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.

இச்சந்திப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் திருகோணமலை மாவட்ட எம்.பி.யுமான இரா. சம்பந்தன் தலைமையில் கூட்டமைப்பின் பேச்சாளர் சுரேஷ் பிரேமச்சந்திரன், சட்டத்தரணி எம்.சுமந்திரன் ஆகிய எம்.பி.க்களுடன் சட்டத்தரணி கனக ஈஸ்வரனும் அரச தரப்பிலிருந்து அமைச்சர்களான நிமல் சிறிபால டி சில்வா, பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் மற்றும் எம்.பி.க்களான ரஜீவ விஜேசிங்க, சஜின் வாஸ் குணவர்தன ஆகியோரும் கலந்துகொண்டிருந்தனர்.

நேற்றைய பேச்சின்போது இது வரையில் கலந்துகொண்டிருந்த சிரேஷ்ட அமைச்சர் ரத்னசிறி விக்கிரமநாயக்க கலந்துகொண்டிருக்கவில்லை. அவருக்குப் பதிலாகவே ரஜீவ விஜேசிங்க எம்.பி. இணைக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

நேற்றைய சந்திப்பு தொடர்பில் சுரேஷ் எம்.பி. மேலும் தகவல் தருகையில், அரசாங்கத்துக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குமிடையில் பல சுற்றுக்களாக பேச்சுக்கள் இடம்பெற்று வருகின்றன.

நேற்றைய பேச்சுக்களின் போது அதிகாரப்பகிர்வு தொடர்பிலான ஆரம்பக்கட்ட விடயங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டது. மாகாண சபைக்கும் மத்திய அரசுக்குமிடையிலான பொதுவான தன்மைகள் குறித்தும் பேசப்பட்டது. இது தொடர்பில் அரசாங்கத்தில் அங்கம் வகிக்கின்ற ஏனைய அரசியல் கட்சிகளினது ஆலோசனைகளையும் பெறவேண்டியிருப்பதால் அவற்றுடன் கலந்துரையாடல் ஒன்றை மேற்கொள்ள வேண்டியிருப்பதாக தெரிவித்த அரச தரப்பு பேச்சுவார்த்தைக்குழு, ஏனைய கட்சிகளினது ஆலோசனைகளைப் பெற்றதன் பின்னர் மீண்டும் மே மாதம் 12ஆம் திகதி சந்தித்து பேசுவதற்கும் ஆலோசனையை முன்வைத்தது. அரச தரப்பின் இந்த ஆலோசனையை ஏற்றுக்கொண்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அன்றைய தினம் மீண்டும் சந்திப்பதற்கு இணக்கம் தெரிவித்திருக்கின்றது.

மேலும் தமிழ் மக்கள் எதிர்கொள்கின்ற அன்றாட பிரச்சினைகள், முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ள முன்னாள் போராளிகளின் விடயங்கள் மற்றும் அவர்களின் விபரங்களை அறிவதற்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அழைத்துச் செல்லப்பட இருந்தும் இறுதி நேரத்தில் அரச தரப்பினக்ஷில் அது தவிர்க்கப்பட்ட நிலைமைகள் தொடர்பாகவும் இங்கு பேசப்பட்டன.

இதற்குப் பதிலளித்த அரச தரப்பினர், முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களது பெயர் விபரங்களை பார்வையிடுவதற்கு அவர்களது பெற்றோர் மற்றும் உறவினர்களுக்கு அனுமதி அளிக்கப்படும் என்றும் இது தொடர்பில் ஊடகங்கள் வாயிலாக அறிவித்தல்கள் விடுக்கப்படும் என்றும் உறுதி அளித்துள்ளனர். அரசாங்கத்தினால் இவ்வாறு பல தடவைகள் இதற்கு முன்னரும் உத்தரவாதங்கள் அளிக்கப்பட்டிருக்கின்றன. ஆனால், அவற்றில் ஒன்றுகூட நிறைவேற்றப்படவில்லை. இந்நிலையில் இம்முறை வழங்கப்பட்ட உத்தரவாதமும் எந்தளவு சாத்தியமாகும் என்பதைப் பொறுத்திருந்தே பார்க்க வேண்டியுள்ளது.

இதேவேளை, தமிழர் விவகாரம் தொடர்பிலான இந்த இருதரப்பு பேச்சுக்கள் நீண்டு கொண்டிருப்பதால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு உடன்பாடு இல்லை என்பதையும் இது மிக விரைவில் அதாவது இன்னும் இரண்டு அல்லது மூன்று மாதகாலப்பகுதிக்குள் நிறைவடைய வேண்டும் என்பதையும் வலியுறுத்தி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாட்டை தெளிவுபடுத்தினோம்.

இதனை ஏற்றுக்கொண்ட அரசதரப்பு மிக விரைவிலேயே தீர்வுகளைக் கண்டு பேச்சுக்களை நிறைவு செய்து கொள்வதென தெரிவித்திருக்கின்றது என்றார்.
மேலும் இங்கே தொடர்க...

யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் நேற்று ஆர்ப்பாட்டம் ஒன்றில் ஈடுபட்டனர்.

மாணவ ஒன்றியத் தலைவரின் இடைநிறுத்தை கண்டித்தே இவர்கள் இந்த ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பல்கலைக்கழக வளாகத்தின் பிரதான வாயில்கள் மூடப்பட்டிருந்தன.
மேலும் இங்கே தொடர்க...

மட்டக்களப்பு- கொழும்பு வீதியில் விபத்து: ஐவரைக் காணவில்லை

மட்டக்களப்பு - கொழும்பு பிரதான வீதி மன்னம்பிட்டிய பகுதியில் வேன் ஒன்று நேற்று இரவு விபத்துக்குள்ளானதில் ஐவர் காணாமற் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்களே இவ் விபத்தில் சிக்கியதாகவும் இவர்கள் நீரில் அடித்துச் செல்லப்பட்;டிருக்கலாம் எனவும் நம்பப்படுகின்றது. இதேவேளை வேனில் இருந்த ஒருவர் காப்பாற்றப்பட்டுள்ளார்.
மேலும் இங்கே தொடர்க...

வன் ஹாய் கப்பலை காட்சிப்படுத்தி மக்களை மடையர்களாக்க முயற்சி: ஐ.தே.கட்சி



வன் ஹாய் 502 கப்பலை அம்பாந்தோட்டை மஹிந்த ராஜபக்ஷ துறைமுகத்துக்கு கொண்டு வந்ததன் மூலம் நாட்டு மக்களை மடையர்களாக்க முயற்சித்துள்ள அரசாங்கம் தனது ஏமாற்று நடவடிக்கையினூடாக கப்பல் கண்காட்சியொன்றை நடத்தியிருப்பதாக பிரதான எதிர்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி பரிகாசித்துள்ளது.

நாடு அபிவிருத்தி பாதையில் இட்டுச் செல்லப்படுவதற்கு ஐக்கிய தேசியக் கட்சி இடையூறாக நிற்கப்போவதில்லை. ஆனால் அரசாங்கம் மக்களை ஏமாற்றிக்கொண்டிருப்பதையும்,ஏமாற்று அரசியல் நடத்திக் கொண்டிருப்பதையும் வெளிப்படுத்த வேண்டிய பொறுப்பு எதிர்கட்சிக்கு இருக்கின்றது என்றும் அக்கட்சி தெரிவித்துள்ளது.

எதிர்க் கட்சி அலுவலகத்தில் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டிலேயே அக்கட்சியின் பதுளை மாவட்ட எம். பி. ஹரின் பெர்னாண்டோ மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இங்கு அவர் மேலும் கூறுகையில்:

அம்பாந்தோட்டை மஹிந்த ராஜபக்ஷ துறைமுகத்திற்கு சர்வதேச கப்பல் ஒன்று வருகை தந்தமையானது மகிழ்ச்சிக்குரிய விடயமாகும். எனினும் இவ்விடயத்தில் மக்களை மடையர்களாக்கி அவர்களை ஏமாற்றுவதற்கு அரசாங்கம் முயற்சிப்பது தான் பாரிய விடயமாகும்.

இந்த துறைமுகத்துக்கு சர்வதேச கப்பல்கள் வருகை தரமுடியாது என ஐக்கிய தேசியக் கட்சி கூறியிருந்தது. இதற்காகவே இந்த கப்பல் வருவிக்கப்பட்டிருக்கின்றது.

அதாவது அம்பாந்தோட்டை துறைமுகத்துக்கு சர்வதேச கப்பல்கள் வருகை தரமுடியும் என்பதை அரசாங்கம் கப்பல் கண்காட்சி நடத்தியிருக்கின்றது. உண்மையில் இங்கு வருகை தந்த வன் ஹாய் 502 கப்பலானது 4800 கொள்கலன்களை உள்ளடக்கக் கூடியதாகும். ஆனாலும் இது அம்பாந்தோட்டை துறைமுகத்துக்கு வந்த போதிலும் அதில் 2800 கொள்கலன்களே இருந்தன.

மேலும் இந்தளவு கொள்கலன்களை ஏற்றிய கப்பலொன்று பயணிப்பதற்கு 12.5 மீற்றர் கடல் ஆழமே போதுமானதாகும். அது மட்டுல்லாது 5000 கொள்கலன்களைக் கொண்ட கப்பல் பயணிப்பதற்கு இந்த கடல் ஆழம் தாராளமாக போதுமானது .ஆனால் பிரச்சினை அது அல்ல அம்பாந்தோட்டை துறைமுகத்தின் செயற்கைப் பகுதியின் சுமார் 16 மீற்றர் ஆழத்தின் கீழ் பாரிய கற்பாறைகள் இருப்பதாக துறைமுக அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் தெரிவித்திருக்கின்றார். அதுமட்டுமல்லாது அதனை அகற்றுவதற்கு பாரிய நிதி செலவாகும் என்றும் அவரே குறிப்பிட்டிருக்கிறார்.

இந்த துறைமுகம் அமைப்பதற்கு 6.3 வீத வட்டியிலேயே கடன் பெறப்பட்டிருக்கின்றது. எனவே இது நாட்டு மக்களின் பொதுப்பிரச்சினை என்பதால் இது குறித்து பேசுவதற்கும் விமர்சிப்பதற்கும் எதிர்கட்சி என்ற வகையில் எமக்கு சகல உரிமைகளும் இருக்கின்றன.

துறைமுக அதிகாரி சபையின் கூற்றின் பிரகாரமே ஐக்கிய தேசியக் கட்சி அம்பாந்தோட்டை துறைமுகத்தின் நிலைமைகளை வெளிப்படுத்தி இருக்கின்றது. அம்பாந்தோட்டை துறைமுகத்தில் கொள்கலன்களை ஏற்றி இறக்குவதற்கான வசதிகளோ அல்லது அங்கு கப்பல்கள் வருமிடத்து எரிபொருள் நிரப்பும் வசதி வாய்ப்புக்களோ இல்லை.

இந்நிலையில் வேறு பகுதிக்கு செல்ல வேண்டிய கப்பலொன்றை பணம் செலவிட்டு அம்பாந்தோட்டை துறைமுகத்துக்கு கொண்டு வந்து கண்காட்சி நடத்தியிருக்கின்ற அரசாங்கம் மக்களை மடையர்களாக்க முயற்சிக்கின்றது.

எமது நாடு அபிவிருத்தியடைவதற்கும், தொழில் வாய்ப்புக்கள் அதிகரிக்கப்படுவதற்கும் ஐக்கிய தேசியக் கட்சி ஒரு போதும் தடையாக நிற்பதில்லை. ஆனாலும் மக்களை ஏமாற்றுவதைப் பார்த்து கொண்டிருக்க முடியாது.

அம்பாந்தோட்டை துறைமுகம் என்ற பெயரில் அரசாங்கம் எவ்வாறான ஏமாற்று நடவடிக்கைகளை கையாண்டு வருகின்றது என்பதற்கான சகல ஆதாரங்களும் இருக்கின்றன அவற்றை எதிர்வரும் மூன்றாம் திகதி வெளிப்படுத்துவேன் என்றார்.
மேலும் இங்கே தொடர்க...

யுத்தத்தின் வெற்றியினை பொய்யாக்குவதற்கு முயலும் சர்வதேச சூழ்ச்சியை முறியடிப்பதற்கு கைகோர்ப்போம்


யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டதன் பின்னர் மே தின கொண்டாட்டங்கள் இம்முறை சுதந்திரமாக நடத்தப்படவிருக்கின்ற நிலையில் யுத்த வெற்றியினை பொய்யாக்குவதற்கு சர்வதேசம் சூழ்ச்சிகளை மேற்கொண்டுவருகின்றது.

அந்த சூழ்ச்சிகளிலிருந்து நாட்டையும் ஜனாதிபதியையும் மீட்பதற்கு தொழிலாளர்கள் கைகோர்க்க வேண்டும் என்று அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் தொழிற்சங்கங்கள் கோரிக்கை விடுத்துள்ளன. தொழிலாளர்களின் உரிமைகளை பெற்றுக்கொடுத்த அரசாங்கத்தை காப்பாற்றுவதற்காக மே தினத்தில் உரத்த குரலில் எமது நிலைப்பாட்டை உலகிற்கு எடுத்துரைக்க வேண்டியது தொழிலாளர்களின் கடப்பாடாகும் என்றும் அந்த சங்கங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.

அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் தொழிற்சங்கங்கள் கொழும்பில் நடத்தவுள்ள மே தினம் தொடர்பில் விளக்கமளிக்கும் ஊடகவியலாளர் மாநாடு மகாவலி கேந்திர நிலையத்தில் நேற்று நடைபெற்றது. அந்த ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்ட சுமார் 15 தொழிற்சங்க பிரதிநிதிகளே மேற்கண்டவாறு தெரிவித்தனர்.

இந்த ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்ட சுதந்திர சேவையாளர் சங்கத்தின் தலைவர் லெஸ்லி தேவேந்திர கருத்து தெரிவிக்கையில், யுத்தம் நிறைவடைந்ததன் பின்னர் வீதியில் இறங்கி சுதந்திரமாக பேரணிகளை நடத்தி எமது உரிமைகளை வென்றெடுப்பதற்கான உரிமைக் குரலை கொடுக்கும் வகையிலான சூழல் இன்றிருக்கின்றது. இவ்வாறான நிலையில் யுத்தத்தின் வெற்றியை பொய்யாக்குவதற்கு சர்வதேச ரீதியில் சூழ்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன. ஐ.நா. செயலாளர் நாயகத்தினால் நியமிக்கப்பட்டுள்ள தருஷ்மன் குழுவின் அறிக்கையும் அதனையே எடுத்தியம்புகின்றன.

இவ்வாறான நிலையில் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்கள் பொய்யென்பதை உலகிற்கு உரத்த குரலில் எடுத்துரைப்பதற்கு மே தினத்தன்று கொழும்பில் கைகோர்க்கவேண்டும்.

தொழிலாளர்களின் உரிமையை அரசாங்கமும் ஜனாதிபதியும் காப்பாற்றிவருகின்ற நிலையில் ஜனாதிபதியையும் அரசாங்கத்தையும் சூழ்ச்சியிலிருந்து காப்பாற்றுவதற்காக நாட்டில் வாழ்கின்ற 75 இலட்சம் தொழிலாளர்களும் கொழும்பில் கைகோர்க்கவேண்டும்.

சம்பள உயர்வு கோரிக்கையை முன்வைத்த போது வரவுசெலவுத்திட்டத்தின் மூலமாக அரச ஊழியர்களுக்கு சம்பளவுயர்வு வழங்கப்பட்டதுடன் கொடுப்பனவும் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதேபோல தனியார் துறையினருக்கு நிவாரணம் வழங்கும் வகையில் வருமான வரியின் தொகை அதிகரிக்கப்பட்டுள்ளது.

தொழிலாளர்களுக்கு தோள்கொடுக்கும் அரசாங்கம் தனியார் துறையினருக்கு ஓய்வூதிய திட்டமொன்றை அறிமுகப்படுத்துவதற்கு எடுத்த முயற்சியை எதிரணியினர் தடுத்துவருகின்றனர். இந்த திட்டம் தனியார் துறையினருக்கு எதிரானது அல்ல என்றார். அரச சேவை தொழிலாளர் சங்க தலைவர் இந்த ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்ட அரச சேவை தொழிலாளர் சங்க தலைவர் பியதாஸ கருத்து தெரிவிக்கையில், ஒவ்வொரு மே தினமும் தொழிலாளருக்கு முக்கியமானது என்றாலும் இந்த மே தினம் வரலாற்று மேதினமாகும். தொழிலாளர்கள் முகம்கொடுக்கின்ற தோல்வி, வெற்றிகளை இனங்கண்டே அடுத்த தொழிலாளர்கள் தினத்திற்கான உரிமை குரலுக்கான கோஷங்கள் ஆராயப்படும்.

இந்த அரசாங்கத்திடமிருந்து பல உரிமைகளை தொழிலாளர்கள் வென்றெடுத்து கொண்டனர். தனி நபர் வருமானமும், தேசிய வருமானமும் அதிகரித்துள்ளது. அதன் பெறுபேறுகள் தொழிலாளர்களுக்கு சமாந்தரமாக கிடைக்காது.

எந்தவொரு அரசாங்கமும் செய்யாததை இந்த அரசாங்கம் தொழிலாளர்களுக்கு செய்துள்ளது. அதன் பயனாகவே பொருளாதார அபிவிருத்தியின் பெறுபேற்றை சகல துறையினரும் அபிவிருத்தி செய்து வருகின்றனர்.

1956 ஆம் ஆண்டிலிருந்து 1977 ஆம் ஆண்டு வரையிலும் தொழிலாளர்கள் பெற்றுக்கொள்ளவேண்டிய உரிமைகள் பெற்றுக்கொள்ளப்பட்டன. எனினும் தொழிலாளர்களுக்கும் அரசாங்கங்களுக்கும் இடையில் இருந்த ஐக்கியம் 1978 ஆம் ஆண்டிருலிருந்து 1994 ஆம் ஆண்டு வரை ஆட்சியிலிருந்த அரசாங்கங்களுடன் இருக்கவில்லை.

அக்காலப்பகுதியில் தொழிலாளர்கள் மீதான தாக்குதல்கள், தனியார் மயம் மற்றும் பொலிஸாரின் அடாவடித்தனம் அதிகரித்திருந்தது. இதனால் தொழிலாளருக்கும் அரசாங்கத்திற்கும் இடையில் விரிசல் ஏற்பட்டது எனினும் 2005 ஆம் ஆண்டிற்கு பின்னர் அரசாங்கத்திற்கு எதிராக தொழிலாளர்களின் ஆர்ப்பாட்டங்கள் மற்றும் வேலைநிறுத்தங்கள் புள்ளிவிபர தகவல்களின் பிரகாரம் குறைந்தே இருக்கின்றன.

இவ்வாறு தொழிலாளர்களின் உரிமைகளை பாதுகாத்து வருகின்ற அரசாங்கத்திற்கு எதிராக சர்வதேச ரீதியில் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற சூழ்ச்சியை முறியடிப்பதற்கு சகலரும் மே தினத்தில் கைகோர்க்கவேண்டும் என்றார். _
மேலும் இங்கே தொடர்க...

மேதின பாதுகாப்பு கடமையில் 8 ஆயிரம் பொலிஸார் ஈடுபடுவர்

மே தினத்தினை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் விசேட பாதுகாப்புக் கடமைகளுக்கென எண்ணாயிரம் பொலிஸார் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளதுடன் அவர்களில் ஐயாயிரம் பேர் தலைநகரில் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபடுத்தப் படுவார்கள் என்று பொலிஸ் மா அதிபர் மஹிந்த பாலசூரிய தெரிவித்தார்.

பிரதான அரசியல் கட்சிகள் மற்றும் தொழிற்சங்கங்களின் 11 மேதின கூட்டங்கள் மற்றும் ஊர்வலங்கள் கொழும்பில் நடைபெறவுள்ளதாலேயே தலைநகரின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. தேவை ஏற்படின் இராணுவத்தின் உதவியும் பெறப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

நேற்று பொலிஸ் தலைமையகத்தில் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டின் போதே அவர் இதனை தெரிவித்தார். இது தொடர்பில் மேலும் அவர் தெரிவித்ததாவது , நாட்டில் சுமுகமானதும் அமைதியானதுமான ஒரு சூழல் காணப்படுவதால் மேதின நிழ்வுகளில் பெருந்திரளான மக்கள் கலந்து கொள்வார்கள். ஆகையினால் அவர்களுக்கு விசேட பாதுகாப்பு வழங்கவேண்டியுள்ளது.

மே தின நிகழ்வில் கலந்து கொள்ளும் கட்சி ஆதரவாளர்கள் தொழிற்சங்க உறுப்பினர்கள் தமது கூட்டங்கள் ஊர்வலங்களை முன்னெடுக்கும் அதே வேளை, குழப்பங்களை ஏற்படுத்தாமல் செயற்பட வேண்டும்.

மே தின நிகழ்வுகளில் கலந்து கொள்ள வருபவர்களின் நலன் கருதி மே தின நிகழ்வுகள் நடைபெறும் இடங்களில் பல்வேறு வசதிகள் செய்யப்பட்டுள்ளன. வாகன தரிப்பிட வசதிகள் மற்றும் மக்கள் தொடர்பாடல் மையம் என்பன அவற்றில் குறிப்பிடத்தக்கவையாகும்.

ஊர்வலங்கள் மற்றும் கூட்டங்களின் போது தமது உறவினர்கள் அல்லது நண்பர்கள் காணாமற்போனால் பொலிஸ் நடமாடும் தகவல் மையத்தில் அறிவிக்கலாம். மே தின நிகழ்வுகள் நடைபெறும் சகல பகுதிகளிலும் இந்த பொலிஸ் நடமாடும் மக்கள் தொடர்பு மையங்கள் செயற்படும். _
மேலும் இங்கே தொடர்க...

ஐ.நா. ஊழியர்களுக்கு பாதுகாப்பளிப்பது அரசாங்கத்தின் பொறுப்பு: பர்ஹான் ஹக்

மே தினத்தை முன்னிட்டு நாளை கொழும்பில் ஆர்ப்பாட்டம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதால் இலங்கையிலுள்ள ஐ.நா. ஊழியர்களுக்கு பாதுகாப்பளிக்க வேண்டியது இலங்கை அரசாங்கத்தின் பொறுப்பாகும் என்று ஐக்கிய நாடுகள் சபையின் பிரதிப் பேச்சாளர் பர்ஹான் ஹக் தெரிவித்துள்ளார்.

ஐ.நா. நிபுணர் குழுவின் அறிக்கைக்கு எதிராக இலங்கை மக்களின் எதிர்ப்பை காண்பிக்கும்வகையில் மே தினத்தன்று பாரிய ஆர்ப்பாட்டப் பேரணிகளை நடத்துவதற்கு அரசாங்கம் திட்டமிட்டிருந்தது.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் நடைபெற்ற ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அமைப்பாளர்கள் கூட்டத்தில் இவ்விடயம் குறித்து ஆராயப்பட்டிருந்தது. ஐ.நா. நிபுணர் குழுவின் அறிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் நாளாக மே தினம் அமைய வேண்டும் என்றும் கருத்து தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையிலேயே ஐ.நா.வின் பேச்சாளர் நேற்று முன்தினம் வியாழக்கிழமை இவ்வாறு தெரிவித்துள்ளார்.

நியூயோர்க்கில் நேற்று முன்தினம் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் கருத்துத் தெரிவித்த ஐ.நா.வின் பிரதிப் பேச்சாளர் பர்ஹான் ஹக் ஐ.நா. அமைப்பின் பணிகள் எவ்வித தடங்கல்களும், பாதுகாப்பு அச்சுறுத்தல்களும் இன்றி தொடர்வதை உறுதிப்படுத்துவதற்காக ஐ.நா. ஊழியர்களுக்கும் சொத்துக்களுக்கும் பாதுகாப்பளிக்க வேண்டிய பொறுப்பு இலங்கை அரசாங்கத்துக்கு உள்ளது.

2010ஆம் ஆண்டு யூலையில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றதைக் கருத்தில்கொண்டு இலங்கையிலுள்ள ஐ.நா. அலுவலகங்களின் வழமையான நடவடிக்கைகளுக்கு இடையூறு ஏற்படுவதை தடுக்கத் தவறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று தெரிவித்துள்ளார்.

ஐ.நா.வின் பேச்சாளர் இவ்வாறு தெரிவித்துள்ளபோதிலும் கொழும்பிலுள்ள ஐ.நா. அலுவலகம் தமக்கு இலங்கை அரசாங்கத்தினால் அளிக்கப்பட்டுள்ள பாதுகாப்பு தொடர்பாக மகிழ்ச்சியடைவதாக இணையத்தளமொன்றுக்கு தெரிவித்துள்ளது. இதேவேளை மேதினத்தன்று ஐ.நா. நிபுணர் குழுவின் அறிக்கைக்கு எதிராக ஆர்ப்பாட்டங்களையோ, கிளர்ச்சிகளையோ நடத்தும் எண்ணம் எதுவும் அரசாங்கத்திடம் இல்லையென்று வெளிவிவகார அமைச்சர் ஜி.எல் பீரிஸ் நேற்று முன்தினம் தெரிவித்திருந்தார்.

கொழும்பிலுள்ள வெளிநாட்டுத் தூதுவர்களை சந்தித்து விளக்கமளித்தபோதே அமைச்சர் இவ்வாறு கூறியிருந்தார். நிபுணர் குழுவின் அறிக்கையை ஐக்கிய நாடுகள் சபையின் ஆவணமென்ற ரீதியில் இலங்கை அரசாங்கம் பார்க்கவில்லை என்றும் அவர் இந்தச் சந்திப்பின்போது எடுத்துக்கூறியுள்ளார்.


................................................................................................................................................................................

கருணாவின் பிரிவு புலிகளுக்கு பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது ஐ.நா. நிபுணர் குழு அறிக்கை பாகம் 03
கருணாவின் பிரிவு புலிகளுக்கு பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது ஐ.நா. நிபுணர் குழு அறிக்கை பாகம் 03 32. எல்.ரி.ரி.ஈ. தற்கொலைக் குண்டுத்தாக்குதலைத் தோற்றுவித்து, இரா ணுவ, அரசியல் மற்றும் சிவில் இலக்குகளுக்கு எதிராக அதனைப் பிரயோகித்தது. இந்திய பிரதம மந்திரி ராஜீவ் காந்தி (1991) அத்துடன் இலங்கை ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாச (1993) மற்றும் அதிக எண்ணிக்கையிலான இலங்கை அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மிதவாதப் போக்குடைய தமிழ் அரசியல் தலைவர்களின் கொலைகளுக்கு ஆண் மற்றும் பெண் எல்.ரி.ரி.ஈ. தற்கொலைக் குண்டுதாரிகள் பொறுப்பாகவிருந்தனர். அநேகமான சந்தர்ப்பங்களில் பல சிவில் பிரஜைகளின் உயிர்களைப் பறித்த பொருளாதார மற்றும் சமய இலக்குகள் மீதும் அது தற்கொலைத் தாக்குதல்களை மேற்கொண்டது. எல்.ரி.ரி.ஈ. புறந்தள்ளும் அரசியலைப் பின்பற்றியதோடு, 1990 ஆம் ஆண்டில் வடக்கில் தம் வீடுகளில் இருந்து முஸ்லிம் மக்களை துரத்தியதோடு, அதன் கட்டுப்பாட்டில் இருந்த எல்லைக் கிராமங்களில் வசித்த சிங்கள மற்றும் முஸ்லிம் மக்களைப் படுகொலை செய்தது. தமிழ் மக்களை கட்டுப்பாட்டில் வைத்திருப்பதற்காக அதிகமாக வன்முறை, அச்சுறுத்தல் மற்றும் பயமுறுத்தலை எல்.ரி.ரி.ஈ.பிரயோகித்தது. வலுக்கட்டாயமாக ஆட்சேர்ப்பதில், சிறுவர்கள் சிறுமியரை உள்ளிட்ட வயது குறைந்தவர்களை படைவீரர்களாகப் பாவிப்பதில் எல்.ரி.ரி.ஈ. ஈடுபட்டதும் தெரிந்த விடயமே. அதன் நடைமுறை காரணமாக கனடா, ஐரோப்பிய ஒன்றியம், இந்தியா, ஐக்கிய இராஜதானி மற்றும் ஐக்கிய அமெரிக்கக் குடியரசு ஆகியவற்றை உள்ளிட்ட நாடுகள் இவ்வமைப்பை தடை செய்ததோடு, 2001 செப்டெம்பர் 11 இன் பின்னர் தடை செய்வது மேலும் தீவிரமடைந்தது.

33. 1990ஆம் ஆண்டுகள் தொடக்கம்

மே 2009 வரை, எல்.ரி.ரி.ஈ. இலங்கையின் வடக்கிலும் கிழக்கிலும் பாரிய நிலப்பரப்பினை தன் ஆதிக்கத்தின் கீழ் வைத்திருந்ததோடு, அரசாங்கப் படையினரும் எல்.ரி.ரி.ஈ.இனரும் பிரதேசத்தின் கட்டுப்பாட்டுக்காக போட்டியிட்ட போது, நாளடைவில் இந்த எல்லைக் கோடு மாற்றமடைந்தது. நடப்பிலுள்ள ஒரு தேசத்தை அது செயற்படுத்தி தானே அது என்ற தோற்றத்தை முன்வைக்க முனைந்தது. இதனை நோக்காகக் கொண்டு நன்கு வடிவமைக்கப்பட்ட சர்வதேச உபாயம் ஒன்றை அது அபிவிருத்தி செய்ததோடு, தன் கட்டுபாட்டில் உள்ள பிரதேசத்தில் அதன் காவல் அமைப்பு, சிறைச்சாலைகள், நீதி மன்றங்கள், உள்வரவுத் திணைக்களம் வங்கிகள், மற்றும் சில சமூக சேவைகள் ஆகியவற்றை நிறுவியது. தரை, வான் மற்றும் கடல் திறன்கொண்ட முன்னேறியதொரு இராணுவத்தையும் அது கட்டியெழுப்பியதோடு, விரிவானதொரு உளவு பார்க்கும் அமைப்பின் உதவியுடன் கெரில்லா மற்றும் பாரம்பரிய நடைமுறைகளையும் மேற்கொண்டது.

34. வன்முறை மற்றும் அரச அடக்குமுறை காரணமாக அதிக எண்ணிக்கையிலான தமிழர்கள் மற்றும்“ ஏனையோர் சிறந்த பொருளாதார சந்தர்ப்பங்களுக்காக வெளிநாடுகளில் தஞ்சம் புகுந்ததால் இலங்கையின் புலம்பெயர்ந்த தமிழ் சனத்தொகை உலகின் பல பாகங்களிலும் கிட்டத்தட்ட ஒரு மில்லியன் வரை 1980ஆம் ஆண்டுகள் முதல் வளர்ச்சியடைந்து புலம்பெயர்ந்தவர்கள் யுத்தம் நடைபெற்ற காலம் பூராவும், அவர்களுள் சிலர் ஏன் ஏது என்று கேட்காது எல்ரிரிஈ இனருக்கு ஆதரவு வழங்கி, யுத்தம் நடைபெற்ற முழுக்காலப்பகுதியிலும் நிதிகளை வழங்கி, எல்ரிரிஈ தவறிழைக்கவில்லை என வாதாடி முக்கியதொரு பங்கினை வகித்தனர். ஆயினும், ஆதரவு அனைத்தும் சுயமாகவே வழங்கப்படவில்லை. இலங்கைக்கு வெளியே அதிக எண்ணிக்கையிலான தமிழ் அகதிகள் வாழும் நாடுகளுக்கு எல்.ரி.ரி.ஈ. அச்சுறுத்தலை உள்ளிட்ட அதன் நடைமுறைகளை விரிவாக்கி, அதனை தனிநாட்டுக்கான தமிழ் மக்களின் அபிலாசை என வருணனை செய்து அதனை அடைவதற்கான வழியாகப் பிரயோகித்தது. அது எவ்வித விமர்சனத்தையும் சகிக்காததோடு, எல்ரிரிஈ இன் வன்செயல்களினால் பாதிக்கப்பட்டவர்கள் குரல் எழுப்புவதற்கான எந்தவொரு சந்தர்ப்பத்தையும் அளிக்கவில்லை.

(14) ஆ. சட்டத்தின் நல்லாட்சி மற்றும் மனித உரிமைகள் படிப்படியாக அழிந்துபோதல்

35. இலங்கையின் 1978ஆம் ஆண்டின் அரசியல் யாப்பு நாட்டின் கூறுபடாத சுபாவத்தை வலியுறுத்துவதோடு, தேசத்தின் தலைவர், அரசாங்கத்தின் தலைவர் மற்றும் ஆயுதப் படைகளின் தளபதி ஆக பதவி வகிக்கும் நிறைவேற்று ஜனாதிபதி ஒருவருக்கு பரவலான மற்றும் குவிசார்ந்த அதிகாரங்களை வழங்குகிறது“ மேலும், தனது வரையறைக்கு உட்பட்டவாறு ஜனாதிபதி எந்தவொரு அமைச்சுக்கும் தலைமை தாங்கலாம். தற்போது, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, பாதுகாப்பு, நிதி மற்றும் திட்டமிடல், துறைமுகங்கள் மற்றும் விமானப் போக்குவரத்து, போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் ஆகிய ஐந்து அமைச்சுக்களுக்குப் பொறுப்பாகவுள்ளார். உயர் நீதிமன்றம் மற்றும் மேன்முறையீட்டு நீதி மன்றம் ஆகியவற்றுக்கான தலைவர்களையும் நீதிபதிகளையும் நியமிப்பதற்கான ஜனாதிபதியின் அதிகாரத்தையும் அரசியல் யாப்பு நிலைநாட்டுகிறது. மேலும், நெருங்கிய குடும்பத்தினரை ஜனாதிபதி நியமிப்பதற்கான கட்டுப்பாடுகளும் இல்லை என்பதேர்டு, அத்தகைய தெரிவுகளைப் பாவிப்பதால், தற்போதைய அரசாங்கம் உறவினர்களுக்குச் சலுகை அளிக்கிறது என்ற விமர்சனத்தை எதிர்நோக்குகிறது.

36. அவசரகாலச் சட்டத்தின் கீழான நீடிக் கப்பட்ட காலப்பகுதிகள், அரசியல் யாப்பு அனுமதித்த அவசரகால ஒழுங்குவிதிகளைப் பாவித்தல், ஜனாதிபதியின் அதிகாரங்களை மேலும் வலுப்படுத்தல், அது போன்று நீதித்துறை உள்ளிட்ட அரச நிறுவனங்களில் அரசியல் ஈடுபாடு அதிகரித்தல், அத்தோடு சுயாதீனமாகத் தட்டிக் கேட்பதை நலிவடையச் செய்தல். 1989 இல் சிறியதொரு இடைவெளியைத் தவிர 1983 முதல் 2001 வரை மற்றும் மீண்டும் 2005 முதல் இன்று வரை அவசரகாலச் சட்ட ஆட்சி அமுலில் இருந்து வருகிறது. ஏனைய விடயங்களுள், தற்போது அமுலில் உள்ள அவசரகால ஒழுங்குவிதிகள் 1979 ஆண்டு பயங்கரவாதத் தடுப்பு சட்டத்துடன் சேர்ந்து, அரசாங்கத்துக்கு அசாதாரணமான அதிகாரங்களை வழங்குவதோடு, அதிகாரத்தின் துஷ்பிரயோகம் மற்றும் உரிமைகள் மீறல்கள் பற்றி ஆராய்வதற்கான நீதி மன்றங்களின் ஆளுமையைக் கட்டுப்படுத்துகின்றன. ஏனைய சட்டங்களும், குறிப்பாக 1982ஆம் ஆண்டின் 20ஆம் இலக்க சட்டவிலக்கு உரிமைச் சட்டம் (1977 ஆகஸ்ட் முதல் 1988 டிசம்பர் 16 வரைக்கும் ஏற்புடைத்தான) பாரிய உரிமை மீறல்கள் தொடர்பாக நடவடிக்கை எடுப்பதற்கான அரசாங்கத்தின் கடமையை மிகுந்த அளவில் நலிவடையச் செய்துள்ளன. சட்டத்தை அமுல் செய்வதற்காக அல்லது வேறு விதமாக பொது மக்களின் அக்கறைக்காக நல்ல நோக்குடன் சட்டப்படி அல்லது சட்டவிரோதமாக எந்தவொரு நடவடிக்கை தொடர்பாகவும் எந்தவொரு அமைச்சர், இராணுவ அதிகாரி அல்லது அவர்கள் பணிப்பின் கீழ் செயற்படும் எந்தவொரு நபருக்கு எதிராகவும் சட்ட நடவடிக்கை எடுப்பதை இது தடை செய்துகிறது. தண்டனையிலிருந்து விலக்கீட்டுரிமையை முறைசார்ந்ததாக்குவதன் மூலம், சட்டவிலக்கு உரிமைச் சட்டம் பயங்கரமானதொரு முன்மாதிரியை வழங்குகிறது.

37. அநேகமாக சூத்திரகாரர்கள் தண்டிக்கப்படாத காணாமப்போதல்கள், சட்டத்துக்குப் புறம்பான கொலைகள் மற்றும் சித்திரவதை உள்ளிட்ட மனித உரிமைகள் மீறல்கள், அத்தகைய துஷ்பிரயோகங்களுக்கு எதிரான முறைசார்ந்த சட்ட மற்றும் அரசியலமைப்பின் கீழான பாதுகாப்புக்கள் இருந்த போதிலும், நேருவதற்கான சாதகமான சூழலை உருவாக்குவதற்கு இந்நடைமுறைகள் உதவியுள்ளன. சட்டத்திலான பாதுகாப்பு இருந்த போதிலும் கற்பழிப்பு, பாலியல் துன்புறுத்தல் மற்றும் பாலியலைப் பயன்படுத்தல் ஆகியவற்றை உள்ளிட்ட பாலியல் சார்ந்த வன்முறைகளும் நேர்ந்துள்ளன. வலுக்கட்டாயமான காணாமல்போதல்கள் மற்றும் ஏனைய பாரிய மனித உரிமைகள் மீறல்கள் பற்றிய தொடர்ச்சியான அமைப்பினை ஆராய்வதற்கான பல ஜனாதிபதி ஆணைக்குழுக்கள், சில சந்தர்ப்பங்களில், உண்மையைக் கண்டறியும் முக்கிய தேவையை நிறைவு செய்துள்ளன. ஆயினும், இவை எதுவும் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியை வழங்குவது அல்லது மீறல்களின் முறைசார்ந்த சுபாவம் பற்றி நடவடிக்கை எடுக்க வழிவகுக்கவில்லை. இந்நோக்கில் பார்க்கும் போது, தண்டனையிலிருந்து விலக்கீட்டுரிமைக்கு எதிராகச் செயற்படுவதற்கு, உண்மையை நிலைநாட்டுவதற்கு அல்லது நீதியைப் பெற்றுக் கொள்வதற்கு விசாரணை ஆணைக்குழுக்கள் பயனுறு கருவியாக அமையவில்லை.

38. அரசாங்க நிறுவனங்களைப் பலப்படுத்தி அவற்றின் சுயாதீனத் தன்மையை உறுதிப்படுத்துவதற்கான முயற்சிகள் 2001 இல் 17ஆம் திருத்தத்தை நிறைவேற்றுவதற்கு வழிகோலின. ஜனாதிபதியின் அதிகாரங்களை அரசியல் யாப்பினூடாக கட்டுப்படுத்துவதை நோக்காகக் கொண்ட அது பொலிஸ், தேர்தல்கள், மனித உரிமைகள், லஞ்சம், நிதி மற்றும் பகிரங்கச் சேவை ஆகியவற்றுக்கான ஆணைக்குழுக்களின் நியமனங்களை மேற்பார்வை செய்வதற்கான சுயாதீன அரசியல் யாப்புச் சபையை ஏற்படுத்தியது. மேலும், ஏனையவற்றுக்குப் புறம்பாக, உயர் நீதித் துறை, நீதிச் சேவை ஆணைக்குழு மற்றும் சட்ட மா அதிபர் நியமனங்களை இச்சபை அனுமதிக்க வேண்டியிருந்தது. அண்மைக் கால ஜனாதிபதிகள் எவ்விதப் பாரிய விளைவுமின்றி அதனைப் புறக்கணிக்க முடியுமென்பதால் இத்திருத்தம் ஒப்பீட்டளவில் பயனற்றதாகியுள்ளது. 2010 செப்டெம்பரில் பாராளுமன்றம் 18ஆம் திருத்தத்தை நிறைவேற்றியது. அது 17ஆம் திருத்தத்தை பயனற்றதாக்கியதோடு, அதன் சுயாதீனக் கட்டுப்பாடுகளுக்கான நடவடிக்கைகளை அகற்றி ஜனாதிபதியின் பதவிக்கால மட்டுப்படுத்தல்களை இல்லாமலாக்கியது.

39. மூன்று தசாப்தங்கள் நடைபெற்ற யுத்தம் காரணமாக சகல பிரஜைகளின் மனித உரிமைகள் பாதிக்கப்பட்டு, சுயாதீன நிறுவனங்கள் தரமிழந்து சட்டத்தின் நல்லாட்சி நலிவடைந்தது. எல்ரிரிஈ இக்கு எதிரான அதன் இறுதித் தாக்குதலுக்கு அரசாங்கம் தயாராகிய போது, மனித உரிமைகள் மேலும் பாதிப்படைந்ததோடு, பல நடவடிக்கைகள் காரணமாக சுயாதீன செய்தி அறிக்கை விடுத்தல், கருத்து வேறுபாடு மற்றும் மனிதாபிமான நடவடிக்கைகளுக்குக் கூட மேலும் பாரிய கட்டுப்பாடுகள் ஏற்பட்டன. 2006 ஆரம்பத்தில் இருந்து, இராணுவ நடவடிக்கைகள் பற்றி அறிக்கை விடுக்கும் ஊடகவியலாளர்களுக்கு மேலும் கட்டுப்படுத்தும் வழிகாட்டல்களை பாதுகாப்புச் செயலாளர் விடுத்ததோடு, நடவடிக்கைகளை எதிர்மாறாகச் சித்தி ரிப்பது ஒரு குற்றச் செயலாக ஆக்கப்பட்டது. பிரபல்யமான தாக்குதல்கள், காணாமல்போதல்கள் மற்றும் கொலைகைளை உள்ளிட்ட ஊடகங்கள் மீதான மேலதிக தாக்கங்கள், அதிக அளவிலான சுய தணிக்கைக்கு வழிவகுத்தது. இனங்காணப்படாத மூலங்களில் இருந்து உள்நாட்டு ஆர்வலர்கள் மற்றும் ஊடகவியலாளர்களுக்கு எதிரான அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டதோடு, அதன் விளைவாக சிலர் நாட்டை விட்டுச் சென்றனர். விசா மறுத்தல் அதிகரிப்பு மற்றும் இரத்துச் செய்தல் சர்வதேச பணியாட்டொகுதியினர் மற்றும் அரச சார்பற்ற அமைப்புக்களை அச்சத்துக்குள்ளாக்கியதோடு, சில சந்தர்ப்பங்களில், அவர்கள் தம் நிலைமைகளை விட்டுக் கொடுக்க வேண்டியும் ஏற்பட்டிருக்கலாம்.

(16) யுத்தத்தின் இறுதிக் கட்டங்களை நோக்கி

40. யுத்தத்தின் இறுதிக் கட்டங்களாக மாறுவதற்கான காட்சியை தோற்றுவிப்பதில் குறைந்த பட்சம் மூன்று மேலதிக காரணிகள் முக்கியமானவையாகும்.

41. முதலாவதாக, இலங்கை அரசாங்கமும் எல்ரிரிஈயும் நோர்வையை அனுசரணையாளர்களாக பணியாற்றுமாறு கேட்டுக் கொண்டபோது 2000 ஆம் ஆண்டில் குறுகிய காலப்பகுதியொன் றிலான சமாதானச் செயற்பாடு ஆரம்பித்தது. பெப்ரவரி 2002 இல் தரப்பினர் போர் நிறுத்த உடன்படிக்கையொன்றுக்கு இணங்கியதோடு, நேரடிப் பேச்சுக்களை ஆரம்பிக்கு முன்பதாக ஆண் பெண் பாகுபாடு பற்றிய உப குழுவொன்றை நிறுவுவதன் மூலம் எல்ரிரிஈ இன் பக்கத்தில் இருந்து மற்றும் தெற்கில் இருந்து பெண்கள் கலந்துரையாடுவதை உள்ளிட்ட நம்பிக்கையைக் கட்டியெழுப்பும் பல நடவடிக்கைகளை மேற்கொண்டன. டோக்கியோ இணைத் தலைமைகள் ஊடாக (ஐரோப்பிய ஒன்றியம், ஜப்பான், நோர்வே மற்றும் ஐக்கிய அமெரிக்கக் குடியரசு) அரசியல் முன்னேற்றத்தைக் கண்காணித்த மீளிணக்கப்பாடு மற்றும் அபிவிருத்தி பற்றிய டோக்கியோ மாநாட்டின் அடிப்படையில் (2003) சர்வதேச சமூகம் இச்செயற்பாட்டுக்கு ஆதரவு வழங்கியது. போர் நிறுத்த ஒப்பந்தத்தின் தரப்பினரால் ஏற்படுத்தப்பட்ட சுயாதீன சர்வதேச அமைப்பான இலங்கைக் கண்காணிப்புத் தூதுக்குழு, அரசாங்கம் அதனைக் கலைத்து உத்தியோகபூர்வமாக போர் நிறுத்த ஒப்பந்தத்தை ரத்து செய்த 2008 ஜனவரி வரை கள மீறல்களைக் கண்காணித்து வந்ததது. ஏப்ரல் 2003 இல் எல்.ரி.ரி.ஈ.ஒரு தலைப்பட்சமாக போர் நிறுத்த ஒப்பந்தத்தை ரத்து செய்திருந்தது. அதன் பின்னர் போர் நடவடிக்கைகள் 2006 இல் மீண்டும் ஆரம்பித்ததைத் தொடர்ந்தும் போர் நிறுத்த ஒப்பந்தம் பெரும்பாலும் பெயரளவில் மாத்திரம் இருந்த போதிலும் அது தொடர்ந்தும் உத்தியோகபூர்வ ரீதியில் இருந்ததால் இலங்கை கண்காணிப்புத் தூதுக்குழுவின் நடைமுறையிலான சர்வதேச பிரசன்னத்தை அது உறுதி செய்தது.

42. தொடர்ச்சியான இனவாதப் பிரிவு மற்றும் சகிப்புத் தன்மை இன்மை ஆகியவற்றை முன்னெடுத்துச் சென்ற இரு தரப்பினரிடையேயும் காணப்பட்ட தீவிரப் போக்கு நீண்ட காலமாக இருந்து வந்த மோதலைத் தீர்ப்பதற்கான முன்னைய சமாதானத்தை ஏற்படுத்தும் முயற்சிகள் பட்டியலில் இவ்வாறாக இந்த சமாதானச் செயற்பாட்டையும் விரைவில் சேர்த்து விட்டது. கடுந்தீவிரப்போக்குடைய சிங்களத் தேசியவாதிகள் ஆரம்பத்திலிருந்தே போர்நிறுத்த ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுவதை எதிர்த்தனர்“ மேலும், ஏப்பிரல் 2003 இல் ஒப்பந்தத்தை ரத்து செய்ய எல்.ரி.ரி.ஈ. எடுத்த முடிவும் வடகிழக்கில் இடைக்கால சுயாட்சி அதிகார சபை ஒன்றை அமைப்பதற்கான அதன் ஒரு தலைப்பட்சமான பிரேரணையும் சிங்கள தேசியவாத எதிர்ப்பினை மேலும் உக்கிரமடையச் செய்து, அரசியல் கட்சிகளின் ஆழமான தேசிய கூட்டணியை ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணியை திடீரெனத் தோற்றுவித்தது. ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணி தற்போதைய ஜனாதிபதியின் தலைமையின் கீழ் 2005 இல் நடைபெற்ற தேர்தல்களில் சுமாரான வெற்றியை ஈட்டியதோடு, இறுதி யுத்தத்தை மேற்கொள்வதற்கான அரசியல் ஆதரவையும் அது வழங்கியது.

(17)

43. இரண்டாவதாக, மார்ச் 2004 இல் பொதுவாக கேணல் கருணா என்றழைக்கப்படும் எல்ரிரிஈ இன் கிழக்குத் தளபதி, விநாயகமூர்த்தி முரளீதரன், சுமார் 5,000 போராளிகளைத் தன்னுடன் சேர்த்துக் கொண்டு எல்.ரி.ரி.ஈ. இல் இருந்து பிரிந்து சென்றார். பின்னர் அவர் பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சியொன்றான, தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் (ரிஎம்விபி) அமைப்பினை அமைத்து, அது துணை இராணுவப் பிரிவொன்றைப் பேணும் அதே வேளையில், பதவியில் இருக்கும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணியின் உறுப்பினராகச் சேர்ந்தார். இப்பிளவு எல்.ரி.ரி.ஈ. இக்குப் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது. எல்ரிரிஈ இன் தலைமைத்துவத்தில் கருணாவிற்கு இருந்த இடத்தைக் கவனிக்குமிடத்து, மிகவும் இரகசியமான இவ்வமைப்புப் பற்றிய ஆழ்ந்த அறிவு அவருக்கு இருந்ததோடு, இறுதி யுத்தத்திற்குத் தயாராகும் போது அரசாங்கம் அதனைப் பயனுறு விதத்தில் பாவித்துக் கொண்டது. மேலும், எல்.ரி.ரி.ஈ.பற்றி அதிருப்தி கொண்டிருந்த ரி.எம்.வி.பி.யி.ன் துணை இராணுவப் படைகள், அத்துடன் முன்னாள் தமிழ் போராளிக் குழுக்களின் உறுப்பினர்களை எல்ரிரிஈ க்கு எதிரான இராணுவ நடவடிக்கையிலும் தமிழ் பொதுமக்களுக்கு இடையே உளவு பார்க்கும் நடவடிக்கைகளிலும் அரசாங்கம் ஈடுபடுத்தியது.

44. மூன்றாவதாக, சர்வதேச காரணிகளும் முக்கியமானவையாக இருந்தன. பயங்கரவாத அமைப்புக்களுக்கு மற்றும் அவர்களின் சர்வதேச வலைப்பின்னல்களுக்கு எதிராக போர் தொடுத்திருக்கும் நாடுகளுடன், "பயங்கரவாதத்துக்கு எதிரான உலகளாவிய யுத்தம்' என்ற திட்டத்தின் ஓர் அங்கமாக ஐக்கிய அமெரிக்கக் குடியரசு மற்றும் ஏனைய மேற்கத்திய அரசாங்கங்கள் ஒத்துழைப்பதற்காக எடுத்த முயற்சி எல்.ரி.ரி.ஈ. இக்குப் பாரிய விளைவுகளைக் கொண்டிருந்தது. ஏற்கனவே பல நாடுகளால் பயங்கரவாத அமைப்பு என பட்டியலிடப்பட்ட எல்.ரி.ரி.ஈ. உள்நாட்டு மற்றும் சர்வதேச மட்டத்தில் மேலும் தனிமையாக்கப்பட்டு வந்தது. தமிழரான இலங்கையின் முன்னாள் வெளிநாட்டமைச்சர் 2005 இல் படுகொலை செய்ததானது இவ்வமைப்பின் சர்வதேச பின்புலத்துக்கு இறுதி அடியாக இருந்திருக்கலாம். இச்சூழலில் எல்ரிரிஈ க்கு எதிரான அதன் இறுதித் தாக்குதலுக்காக இலங்கை அரசாங்கம் ஏனைய நாடுகளுடன் பங்காளர் உறவுகளை கட்டியெழுப்ப முயற்சிகளை மேற்கொண்டது.

45. 2005 ஆம் ஆண்டில் நடந்தேறிய தேர்தல்களின் பின்னர், போர் நிறுத்த ஒப்பந்தத்தின் ஏற்பாடுகளைத் தாம் மதிக்கப் போவதாக அரசாங்கமும் எல்.ரி.ரி.ஈ. இனரும் உறுதியளித்த போதிலும், 2006 ஆகஸ்டில் மீண்டும் பாரிய அளவிலான ஆயுதந்தாங்கிய போராட்டம் ஆரம்பிக்கும் வரை இரு தரப்பினரும் தமது இராணுவச் சீண்டல்களைத் தொடர்ந்தனர். கிழக்கு மாகாணத்தில் அரச கட்டுப்பாட்டில் இருந்த பல்லாயிரக்கணக்கான விவசாயிகளுக்கு நீர்ப்பாசன வசதியை வழங்கும் மாவில் ஆறு நீர்த்தேக்கத்தின் அணைக் கதவுகளை எல்ரிரிஈ மூடியதும், எல்.ரி.ரி.ஈ. இன் பிடியில் இருந்து கிழக்கு மாகாணத்தை மீட்பதற்காக ஆயிரக்கணக்கான படைவீரர்களை தாக்குதல் நடவடிக்கையில் அரசாங்கம் ஈடுபடுத்தியது. கருணாப் பிரிவினரின் உதவியுடன், சுமார் இரு தசாப்தங்களின் பின்னர் முதற்தடவையாக 2007 ஜூலை மாதத்தில் அரசாங்கம் முழுமையாக கிழக்கு மாகாணத்தைத் தன் வசப்படுத்தியது.

(18)

46. கிழக்கு மாகாணத்தில் மற்றும் 2008 ஜனவரியில் வட மாகாணத்தின் சில பகுதிகளில் அரசாங்கப் படையினர் அடைந்த இராணுவ வெற்றி காரணமாக எல்.ரி.ரி.ஈ. வன்னிப் பிரதேசத்தில் மாத்திரம் பாரிய இடப்பரப்பை தன் ஆதிக்கத்தில் வைத்திருக்க முடிந்தது. குறிப்பாக வன்னிப் பிரதேசத்தின் நான்கு மாவட்டங்களுள், தமது நடைமுறைத் தலைநகரான கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு ஆகிய பிரதேசங்கள்“ எல்.ரி.ரி.ஈ. இன் முழுமையான கட்டுப்பாட்டில் இருந்தன. வவுனியாவின் வட பகுதி, வடமேற்கு மன்னார் மற்றும் யாழ்ப்பாண தீபகற்பத்தில் சிறிய சில நிலப்பரப்புக்களையும் அது தன் கட்டுப்பாட்டில் கொண்டிருந்தது.

47. கிழக்கில் கிடைத்த இராணுவ வெற்றியினால் உற்சாகமடைந்த அரசாங்கம், கிட்டத்தட்ட இரு வருடங்களாக மேற்கொண்ட போர்த் தந்திரத் தயாரிப்புக்களின் பின்னர் 2008 ஜனவரி 16ஆம் திகதி முழு அளவிலானதொரு இராணுவ நடவடிக்கையை அறிவித்தது. ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம், டோக்கியோ இணைத் தலைமைகள் மற்றும் ஏனைய உறுப்பு நாடுகள் யுத்த நிறுத்த ஒப்பந்தத்தை ரத்துச் செய்வதற்கான மற்றும் இராணுவத் தீர்வொன்றைப் பெறுவதற்கான அரசாங்கத்தின் தீர்மானம் பாரிய விளைவுகளை ஏற்படுத்தும் என எச்சரிக்கை விடுத்த போதிலும், அதன் இடப்பரப்பில் பயங்கரவாதத்துக்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான அரசாங்கத்தின் உரிமையையும் ஏற்றுக் கொண்டன. 2008 பெப்ரவரி நடுப்பகுதியளவில், நாடு பூராவும் தற்கொலைத் தாக்குதல்களை எல்ரிரிஈ தீவிரப்படுத்திய போது யுத்தப் பிரதேசத்துக்கு வெளியேயுள்ள பொதுமக்கள் மீதான யுத்தத்தின் தாக்கம் அச்சுறுத்தும் நிலையை அடைந்தது. அரசாங்கத்தின் வான் குண்டுத் தாக்குதல்களும் ஆழ ஊடுருவித் தாக்கும் நடவடிக்கைகளும் யுத்தப் பிரதேசங்களில் உள்ள பொதுமக்களை மேலும் தாக்கமுறச் செய்தன. 2008 செட்டெம்பரில் கிளிநொச்சியை நோக்கிய அதன் இறுதி இராணுவத் தாக்குதலை அரசாங்கம் மேற்கொண்டது. ஐஐஐ. குற்றஞ்சாட்டப்பட்ட மீறல்களின் சுபாவம் மற்றும் நோக்கெல்லை

48. அதன் ஆணைப் பிரகாரம், செயலாளர் நாயகத்துக்கு ஆலோசனை வழங்குவதற்காக "குற்றஞ்சாட்டப்பட்ட மீறல்களின் சுபாவம் மற்றும் நோக்கெல்லையைக் கவனத்துக்கெடுத்து' யுத்தத்தின் இறுதிக் கட்டங்களின் போது (செப்டெம்பர் 2008 மே 2009) மற்றும் அதனை உடனடுத்து நடைபெற்றதாகக் குற்றஞ்சாட்டப்பட்ட சர்வதேச மனிதாபிமான மற்றும் மனித உரிமைகள் சட்ட மீறல்கள் பற்றி இப்போது குழு கவனம் செலுத்துகிறது. குற்றச்சாட்டுக்களின் சுபாவம் மற்றும் நோக்கெல்லையே குழு பொறுப்புக்கூறல் பற்றி வழங்கும் ஆலோசனையின் இயல்பை நிர்ணயிக்கிறது. அத்தியாயம் ஐஏ இல், இம்மீறல்கள், நிரூபிக்கப்படின், சர்வதேச சட்டத்தை மீறியதாக அமையுமா என்பதை நிர்ணயிப்பதற்காக இக்குற்றச்சாட்டுக்களை சட்டக் கண்ணோட்டத்தில் குழு சீர்தூக்கிப் பார்க்கிறது.

(19)

அ. குற்றச்சாட்டுக்களைச் சீர்தூக்கிப் பார்ப்பதற்கான முறைமை

49. யுத்தத்தின் இறுதிக் கட்டங்கள் தொடர்பாக விடுக்கப்பட்ட குற்றச்சாட்டுக்களை கவனமாக ஆராய்ந்து அவற்றின் உண்மையை எடைபோடுவதின் அடிப்படையில் குழுவின் மதிப்பீடு அமைந்துள்ளது. எழுத்து மூலமான தகவல்கள் மற்றும் பல்வேறு நபர்களுடன் மேற்கொள்ளப்பட்ட நேர்காணல்கள் ஆகியவற்றை குழுவின் பரிசீலனை உள்ளடக்கியது.

அறிக்கைகள், ஆவணங்கள் மற்றும் பல்வேறு முகவர்கள், திணைக்களங்கள், நிதியங்கள், அலுவலகங்கள் மற்றும் ஐ.நா. வேலைத் திட்டங்கள், ஏனைய அரசாங்கத்துக்கிடையிலான அமைப்புக்கள், அரச சார்பற்ற அமைப்புக்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் அத்துடன் இலங்கை பற்றிய நிபுணர்களை உள்ளிட்ட தனி நபர்களினால் எழுதப்பட்ட ஏனைய விவரணங்கள் ஆகியவற்றை எழுத்து மூலமான மூலங்கள் கொண்டிருந்தன.
மேலும் இங்கே தொடர்க...

துட்டகைமுனு சரிதம் பூண்டு நடிக்கும் மேர்வின் சில்வா

துட்டகைமுனுவின் சரிதம் பூண்டு அமைச்சர் மேர்வின் சில்வா நடிக்கும் ஷசுரங்கா லொவின் எவித்ஞூ (தேவலோகத்திலிருந்து வருகை தந்துள்ள) என்ற திரைப்படம் இன்று சீகிரியாவில் ஒளிப்பதிவு செய்யப்பட்டது.

அமைச்சர் அரசியல் மேடைகளில் தான் துட்டகைமுனுவின் வாரிசு என்று அடிக்கடி கூறிக் கொள்வார்.

தான் சிறு வயது முதலே துட்டகைமுனுவின் குணவியல்புகளை வரவேற்பதாகக் கூறிவந்தார்.

இதனையடுத்து துட்டகைமுனு வேடத்தில் திரைப்படத்தில் நடிப்பதற்கும் அமைச்சர் மேர்வின் தயாராகி விட்டார்.
மேலும் இங்கே தொடர்க...

4000 க்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் குழுவுக்குக் கிடைத்தன ஐ.நா. நிபுணர் குழுவின் அறிக்கை பாகம் (02)

(05) 11. அதன் நடவடிக்கையின் ஆரம்பத்தில் இருந்தே, செயலாளர் நாயகம் மற்றும் ஐ.நா. வின் சிரேக்ஷ்ட அலுவலர்கள், அது செயலாளர் நாயகத்துக்கு அறிக்கை விடுத்து இறுதியில் ஆலோசனை வழங்கிய போதிலும், அதன் ஆணையை நிறைவேற்றுவதில் சுயேச்சையாக நடவடிக்கை எடுப்பதற்கு அதற்கு அதிகாரம் உண்டு என குழுவுக்குத் தெளிவாக விளக்கியுள்ளனர். மேலும், பின்வரும் சந்தர்ப்பங்களில் இலங்கை அரசாங்கத்தை விட்டும் சுயேச்சையாக குழு இருக்கும் என்பதை ஐ.நா. குழுவிற்குத் தெளிவுபடுத்தியுள்ளது.

2. குழுவின் காலம் சார்ந்த வரையறைப் பொறுப்பு

12. "யுத்தத்தின் இறுதிக் கட்டங்கள்' தொடர்பான கூட்டு அறிக்கையினைச் செயற்படுத்துவது பற்றி செயலாளர் நாயகத்துக்கு ஆலோசனை வழகுவதை வரையறை ஆணை தேவைப்படுத்துகிறது. குற்றம் சாட்டப்பட்ட சர்வதேச சட்டப் பாரிய மீறல்கள் அநேகமானவை நேர்ந்த யுத்தத்தின் மிக உக்கிரமான கட்டத்தை உள்ளடக்கிய 2008 செப்டம்பர் முதல் 2009 மே வரையிலான காலப்பகுதிக்கு குழு கவனம் செலுத்தியது. எல்.ரி.ரி.ஈ. இன் நடப்பிலுள்ள தலைநகரான கிளிநொச்சி மீது அரசாங்கம் இறுதி இராணுவத் தாக்குதல் மேற்கொண்டதற்கு 2008 செப்டெம்பர் ஒத்திருக்கிறது. வன்னியில் செயற்படும் சர்வதேச அமைப்புக்களில் தொழில்புரியும் சர்வதேச பணியாட்களின் பாதுகாப்புக்குத் தொடர்ந்தும் உத்தரவாதம் அளிக்க முடியாது என்ற அரசாங்கத்தின் அறிவிப்பினைத் தொடர்ந்து சர்வதேச யுத்த அவதானிப்பு முடிவடைந்ததற்கும் அது ஒத்திருக்கிறது. 2009 மே மாதம் யுத்தத்தின் முடிவையும் எல்.ரி.ரி.ஈ. இன் இராணுவத் தோல்வியையும் குறிக்கிறது.

13. சூழ்நிலைத் தொடர்பினை வழங்குவதற்காக, மேலே விவரிக்கப்பட்ட இறுதிக் கட்டங்களுக்கு முந்திய விடயங்கள் பற்றி சில சமயங்களில் குழு கலந்துரையாடுகிறது. மேலும், யுத்தத்தின் முடிவுக்கு முன்னர் அல்லது அதனுடன் நெருக்கமாக தொடர்புபட்ட, யுத்தத்தின் இறுதிக் கட்டங்கள் மற்றும் மோதல்கள் முடிவுக்கு வந்த பின்னரும் தொடர்ந்தவை சில சந்தர்ப்பங்களில் இன்றுவரை இடம்பெறுவது போன்ற மனிதாபிமான மற்றும் மனித உரிமைகள் சட்டங்களின் மீறல்கள் பற்றியும் குழு அறிந்துள்ளது. ஆயுதம் தாங்கிய மோதலுடன் நெருக்கமற்ற, குறிப்பாக இலங்கையின் ஏனைய பாகங்களில் தற்போது நடைபெறுவதாகக் குற்றம் சாட்டப்பட்ட மீறல்கள் பற்றி குழு கவனம் செலுத்தவில்லை. (06) 3. குற்றம் சாட்டப்பட்ட மீறல்கள் தொடர்பான விடயங்கள்

14. குற்றம் சாட்டப்பட்ட சர்வதேச மற்றும் மனித உரிமைகள் சட்டத்தின் மீறல்கள் தொடர்பாக வரையறை ஆணை உள்ளது. மனிதாபிமான சட்டம் தொடர்பில், மோதல்களில் ஈடுபடாதவர்கள் மற்றும் தொடர்ந்தும் ஈடுபடாதவர்கள் அத்துடன் நலன்புரி வழிகள் மற்றும் முறைமைகள் தொடர்பான ஜெனீவா கோட்பாடுகளில் வழங்கப்பட்டுள்ள தோதான வழக்கமான விதிமுறைகள் பற்றி குழு கவனம் செலுத்துகிறது. மனித உரிமைகள் சட்டத்தைப் பொறுத்தவரை, இலங்கை ஒப்புதல் அளித்துள்ள சர்வதேச மனித உரிமைகள் ஒப்பந்தங்கள் மீது கவனம் செலுத்தி அரசியல் மற்றும் சிவில் உரிமைகள் அத்துடன் பொருளாதார, சமூக மற்றும் கலாசார உரிமைகள் ஆகியவை பற்றி குழு கவனம் செலுத்துகிறது. இந்நடவடிக்கையின் போது, பெண்கள் மற்றும் குழந்தைகள் மீது ஆயுதந் தாங்கிய மோதல் ஏற்படுத்தும் தாக்கம் தொடர்பான ஐ.நா. பாதுகாப்புச் சபை தீர்மானங்கள் பரஸ்பரம் ஒன்றை ஒன்று உறுதிப்படுத்துவதை குழு நினைவூட்டுகிறதோடு, நிலையான சமாதானம் மற்றும் மீளிணக்கப்பாடு ஆகியவை மீது அவற்றின் விளைவான தாக்கத்தையும் இனங்காண்கிறது. இலங்கையின் உள்நாட்டுச் சட்டங்கள் சர்வதேச மனிதாபிமான மற்றும் மனித உரிமைகள் சட்டம் அத்துடன் பொறுப்புக் கூறல் பற்றிய ஏனைய சட்டங்கள் உள்ளடக்குகிறது என்ற அளவில்,இலங்கையின் சட்டம் மற்றும் தோதான நிறுவனங்களும் ஆராயப்படுகின்றன. இறுதியாக, யுத்தத்தின் முக்கிய பாத்திரங்களான அரசாங்கம் மற்றும் எல்.ரி.ரி.ஈ. ஆகியவற்றின் மீறல்கள் பற்றிய குற்றச் சாட்டுக்களை குழு ஆராய்கிறது.

(07) (இ) செயற்றிட்டம்

15. ஆய்வுரிமை வரம்பின் படி, குழு அதற்கே உரித்தான முறைமைகளை அபிவிருத்தி செய்வதோடு, செயலகமொன்று அதற்கு உதவி வழங்கும். 2010 செப்டெம்பர் நடுப்பகுதி அளவில் அதன் உத்தியோகபூர்வ நடவடிக்கைகளை ஆரம்பிப்பதற்கு இரண்டு மாதங்களுக்கு முன்பு, ஐக்கிய நாடுகள் அமைப்பினுள் தொழில் புரியும் நெறிசார்ந்த தொழில்புரிவோர்களிடையே இருந்து செயலகம் ஒன்று திரட்டப்பட்டது. மேலும், வேறு வகையாய் கிடைக்காத ஆலோசனையைப் பெற்றுக் கொள்வதற்காக புற உசாத்துணையாளர்களின் சேவையை குழு பெற்றுக் கொண்டது. ஐக்கிய நாடுகள் செயலகத்தில் ஏற்கனவே உள்ள பல்வேறு திணைக்களங்களின் பிரதிநிதிகளைக் கொண்ட மேற்கோள் குழுவொன்றும் குழுவுக்கு உதவியளித்தது.

16. குழுவின் செயல் திட்டம் இரு கட்டங்களாக நெறிப்படுத்தப்பட்டது. முதற் கட்டத்தில், அதன் ஆய்வுரிமை வரம்பு தொடர்பான நிபுணத்துவம் அல்லது அனுபவம் உள்ள தனி நபர்கள் மற்றும் நிறுவனங்களிடம் இருந்து இலங்கையின் ஆயுதந் தாங்கிய மோதல் பற்றிய பல்வேறு தகவல்களை குழு சேகரித்தது. இவ்வாறான சில தகவல்கள் எழுத்து வடிவத்தல் உதா: அரசாங்க, ஐ.நா. அல்லது அரச சார்பற்ற அமைப்புக்களின் அறிக்கைகள் மற்றும் குழுவுக்கு இரகசியமான முறையில் வழங்கப்பட்ட தகவல்கள் மூலமாகக் கிடைத்தன. ஏனைய தகவல்கள் குழுவின் பல கூட்டங்கள் மற்றும் அதன் செயலகத்தின் மூலமும் பெறப்பட்டன. யுத்தத்தின் இறுதிக் கட்டங்களின் போது நடந்தேறிய நிகழ்வுகளினால் நேரடியாகப் பாதிக்கப்பட்ட ஐ.நா. மற்றும் சர்வதேச அமைப்புக்களின் அலுவலர்கள் அத்துடன் அரசாங்கங்களின் பிரதிநிதிகள், அரச சார்பற்ற அமைப்புக்கள் மற்றும் தனிநபர்கள் ஆகியோருடன் குழு சந்திப்புக்களை நடத்தியது. அதன் நடவடிக்கையின் இரண்டாம் கட்டத்தின் போது, குழு இவ்வறிக்கையின் நகலைத் தயாரித்தது. பிரசுரிப்பதற்கு ஏதுவான வகையில் இவ்வறிக்கை வரையப்பட்டது.

17. பரவலாக பொதுமக்களின் தொடர்பு கொள்வது தொடர்பில், அக்கறைகொண்ட அமைப்புக்கள் மற்றும் தனிநபர்கள் எழுத்து மூலமாக முறையீடுகளைச் சமர்ப்பிக்குமாறு பொதுவானதொரு அழைப்பு விடுக்கப்பட்டது. 2010 ஒக்டோபர் 21ஆம் திகதி, குழுவின் பணியாட்டொகுதித் தலைவர், அறிவித்தலின் பிரதியொன்றை இணைத்து அது ஐ.நா. இணையத்தளத்தில் வெளியிடப்படும் என்று அறிவித்து இத்தீர்மானம் பற்றி இலங்கையின் நிரந்தரப் பிரதிநிதிக்கு அறிவுறுத்தப்பட்டது. ஆங்கில அறிவித்தல் 2010 ஒக்டோபர் 27 ஆம் திகதி பிரசுரிக்கப்பட்டதோடு, சிங்கள மற்றும் தமிழ் மொழிகளிலான அறிவித்தல்கள் பின்னர் பிரசுரிக்கப்பட்டன. கருத்துக்களைச் சமர்ப்பிப்பதற்கு ஆரம்பத்தில் கடைசித் திகதியாகக் குறிப்பிடப்பட்ட 2010 டிசம்பர் 15ஆம் திகதி பின்னர் 2010 டிசம்பர் 31ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டது. 2010 டிசம்பர் 31ஆம் திகதி இருந்தவாறாக, 2,300க்கும் மேற்பட்டவர்களிடம் இருந்து 4,000 க்கும் அதிகமான முறையீடுகள் குழுவுக்குக் கிடைக்கப் பெற்றன.

(08) 18. குறிப்பிட்டதொரு வகைகளிலான மீறல்கள் அல்லது இறுதிக் கட்டங்களின் போதான குறிப்பிட்டதொரு காலப்பகுதிகள் தொடர்பானதாக மற்றும் மனித உரிமைகள் அல்லது மனிதாபிமான சட்டத்தின் குறித்துரைக்கப்பட்ட மீறல்கள் தொடர்பாக கிடைக்கப்பெற்ற முறையீடுகளில் கணிசமானவை இருந்தன. ஆவணப்படுத்தப்பட்ட தகவல், நிகழ்வுகளின் பட்டியல்கள் அல்லது பாதிக்கப்பட்டோர், நிழற்படங்கள் மற்றும் வீடியோப் படங்கள் ஆகியவற்றை உள்ளடக்கின. பாரபட்சமற்றவையாக பகுப்பாய்வு ரீதியிலான மட்டுப்படுத்தப்பட்ட சில முறையீடுகள் பொதுவான தகவல்கள், போக்குகள் அல்லது நிலைமை பற்றிய குறிப்பின் அம்சங்களின் பகுப்பாய்வினை வழங்கின. பொதுவான தகவல்கள் ஊடக அறிக்கைகள், இணையத் தொடர்புகள் பொதுவாகக் கிடைக்கக் கூடிய மூலங்களில் இருந்து பெறப்பட்ட தகவல்கள் மற்றும் வரலாற்று ரீதியிலான விளக்கங்கள் குழுவுக்குச் சமர்ப்பிக்கப்பட்ட முறையீடுகளில் அடங்கின. இறுதியாக, உண்மையினை அடிப்படையாக அல்லது பகுப்பாய்வினைக் கொண்டிராத நடவடிக்கை எடுக்குமாறும் குறிப்பான பரிந்துரைகளைச் செய்யுமாறும் குழுவினை வேண்டிக் கொண்டவை பெறப்பட்ட கணிசமான முறையீடுகளில் அடங்கின.

19. முறையீடுகளை ஒவ்வொன்றாக குழுவினால் சரி பிழை பார்க்க முடியவில்லை என்பதால் குற்றச்சாட்டுக்கள் தொடர்பான ஏற்றுக் கொள்ளப்படக் கூடிய தன்மையினை நிறைவு செய்யவும் குழுவின் நியதிக்கேற்ப அவை நேரடி மூலமாகப் பாவிக்கப்படவில்லை (அத்தியாயம் டிடி அ பார்க்கவும்). சில விடயங்களில், முறையீடுகள் தகவலின் ஏனைய மூலங்களை உறுதிப்படுத்துவதற்கு உதவின. யுத்தத்தின் இறுதிக் கட்டங்கள் தொடர்பாக மாத்திரமன்றி மேலும் விரிவாக கடந்த காலம் தொடர்பாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டிய அவசரத் தேவையை குழுவின் காலம் சார்ந்த ஆணைக்கு முன்பதான நிகழ்வுகளை உள்ளிட்டதாகக் கிடைக்கப்பெற்ற கணிசமான முறையீடுகள் வலியுறுத்திக் காட்டுகின்றன.

ஈ. இலங்கை அரசாங்கத்துடனான இணைச் செயற்பாடு 20. அதன் ஆரம்பந்தொட்டு, அதன் ஆணையை அமுல் செய்வது பற்றி இலங்கை அரசாங்கத்துடன் கலந்துரையாடி பொறுப்புக்கூறும் விடயங்கள் தொடர்பாக நடவடிக்கை எடுப்பதில் அரசாங்கத்தின் நோக்கம் எவ்வாறாக உள்ளது என்பதை அறிவதற்காகக் குழு விருப்பம் கொண்டிருந்தது. உண்மையிலேயே, குழு அரசாங்கத்துக்கானதொரு மூலவளமாகச் செயற்படலாம் என்பதாக குழுவுக்கும் அரசாங்கத்துக்கும் செயலாளர் நாயகம் தன் நம்பிக்கையைத் தெரிவித்திருந்தார். குறிப்பாக, உள்நாட்டிலேயே அபிவிருத்தி செய்யப்பட்ட பொறுப்புக்கூறல் பற்றியதொரு பொறித்தொகுதி என பகிரங்கமாக அரசாங்கம் குறிப்பிட்டுள்ள கற்ற பாடங்கள் மற்றும் மீளிணக்கப்பாட்டு ஆணைக்குழுவுடன் தொடர்புகளைப் பேணுவது பெறுமதி மிக்கதாகும் என்ற நிலைப்பாட்டின தொடர்ச்சியுமாகக் குழு பேணி வந்துள்ளது. அதேநேரத்தில், பொறுப்புக்கூறலைப் பொறுத்தவரையில் ஏனைய உள்நாட்டு நிறுவனங்களுக்கும் பாரியதொரு பங்களிப்பு உண்டு என குழு கருதியதோடு, அரசாங்கத்தினுடாக அவற்றுடனும் தொடர்புகளைப் பேண குழு முயற்சிகளை மேற்கொண்டது.

(09) 21. இவ்விளக்கம் எடுத்துக் காட்டுவது போன்று, 2010 செப்டெம்பர் ஆரம்பத்தில் இருந்து குழு அதன் ஆணையை நிறைவு செய்யும் சந்தர்ப்பம் நெருங்கும் வரை, இலங்கை அரசாங்கத்துடன் கலந்துரையாட சொல் மூலமும் எழுத்து மூலமும் பலதடகைள் குழு முயற்சியினை மேற்கொண்டது. குழுவின் நோக்கெல்லை செயலாளர் நாயகத்துக்கு ஆலோசனை வழங்குவதாக உள்ளதாகவும் ஏதும் புலனாய்வினை மேற்கொள்வதில் அது ஈடுபடவில்லை என்பதை உள்ளிட்டவாறு இலங்கை அரசாங்கத்துக்கு குழுவும் ஐ.நா. அலுவலர்களும் பலதடவை தெளிவுபடுத்தியுள்ளனர். குழுவுடன் எதுவிதத் தொடர்பாடலும் இன்றிப் பல மாதங்களுக்குப் பின்னர் இலங்கைக்கு வருமாறு அரசாங்கம் குழுவுக்கு அழைப்பு விடுத்த போதிலும் அத்தகைய விஜயத்துக்கான ஏற்பாடுகள் பற்றிக் கலந்துரையாடாமல் அதன் நிலைப்பாட்டை முழுமையாக மாற்றிக் கொண்டது. குழு கற்ற பாடங்கள் மற்றும் மீளிணக்க ஆணைக்குழுவுக்கு "பிரதிநிதித்துவங்களை' மாத்திரம் செய்யலாம் என 2010 டிசம்பர் மாதம் கடித மூலம் அரசாங்கம் வற்புறுத்திய போதிலும் நாட்டுக்கான விஜயத்தை மேற்கொள்வதற்கான அதன் விருப்பத்தைக் குழு வலியுறுத்தியது. இதனையும் 2011 ஜனவரி ஆரம்பத்தில் வழங்கிய குறிப்பொன்றின் மூலம் அரசாங்கம் நிராகரித்ததோடு அதன் பின்னர் விஜயம் பற்றி மேற்கொண்டு எதுவித தொடர்பினையும் பேணவில்லை. மாறாக, கற்ற பாடங்கள் மற்றும் மீளிணக்கப்பாடு பற்றிய ஆணைக்குழு மற்றும் ஏனைய உள்நாட்டுப் பொறித்தொகுதிகள் பற்றிய குழுவின் கேள்விகளுக்கு எழுத்து மூலமான பதிலை ஜனவரி இறுதி அளவில் அனுப்பி வைத்ததோடு கற்ற பாடங்கள் மற்றும் மீளிணக்கப்பாட்டு ஆணைக்குழுவின் எந்தவொரு உறுப்பினரையும் உள்ளடக்காத சிறியதொரு தூதுக்குழுவினை நியூயோர்க்குக்கு அது அனுப்பி வைத்தது.

22. இலங்கைக்கான விஜயத்தை மேற்கொண்டு கற்ற பாடங்கள் மற்றும் மீளிணக்கப்பாட்டு ஆணைக்குழு அத்துடன் பொறுப்புக்கூறல் தொடர்பான விடயங்களில் ஈடுபட்டுள்ள பலதரப்பட்டட அதிகாரிகளைக் குழு சந்திப்பதற்கு இலங்கை அரசாங்கம் அனுமதி வழங்கவில்லை என்பதையிட்டு குழு கவலை தெரிவிக்கிறது. இலங்கைக்கு விஜயம் செய்வது அதன் நடவடிக்கைகளுக்கு அவசியமானதல்ல என்றிருந்த போதிலும், கற்ற பாடங்கள் மற்றும் மீளிணக்கப்பாட்டு ஆணைக்குழு மற்றும் அரசாங்க அலுவலர்களைச் சந்தித்து, அவர்களின் கருத்துக்களை மேலும் நேரடியாகக் கேட்டு அவர்களுடன் நிபுணத்துவத்தைப் பகிர்ந்து கொள்வதற்கு (வேறு வழிகளில் உத்தியோகபூர்வ கருத்துக்களை உறுதிப்படுத்திக் கொள்வதற்கு குழு முடிந்த போதிலும்) குழுவுக்கு ஒரு சந்தர்ப்பத்தை வழங்கியிருக்கும். எழுத்து மூலமான பதில்களையும் இலங்கை அதிகாரிகளுடனான நேருக்கு நேரான உரையாடலுக்கான சந்தர்ப்பத்தை குழு வரவேற்ற போதிலும், அப்படியானதொரு ஈடுபாட்டிற்காக குழு முயற்சி செய்யவில்லை.

உ. குழுவினது பதிவுகளின் இரகசியத் தன்மை

23. பின்னர் தகவலைப் பிரயோகிப்பது பற்றிய முழுமையான இரகசியத்தன்மையின் உறுதிப்பாட்டின் பேரில் சில சந்தர்ப்பங்களில் எழுத்து மூலமான மற்றும் வாய் மூலமான சமர்ப்பணங்கள் குழுவுக்குக் கிடைக்கப் பெற்றன. இது பற்றி அறிவுரை வழங்கிய சட்ட விவகாரங்கள் அலுவலகம், செயலாளர் நாயகத்தின் "தகவலின் பதிவு நுட்பத்தன்மை, வகைப்படுத்தல் மற்றும் கையாளுதல்' தொடர்பான அறிக்கையின் (குகூ/குஎஆ/2007/6) ஏற்பாடுகளை அதன் பதிவுகளுக்கு உரியதாய்க் கருதலாம் என உறுதிப்படுத்தியது. ஒரு (10) ஆவணத்தை "கண்டிப்பான இரகசியத்தன்மை' என வகைப்படுத்தி அதற்கான பிரவேசத்தை 20 வருட காலத்துக்கு மட்டுப்படுத்துவதோடு அதனைத் தொடர்ந்தும் தடுத்து வைத்தல் அல்லது வெளியிடுதல் தொடர்பான நியாயம் பற்றிய மீளாய்வொன்றை மேற்கொள்ளலாம் என்பதற்கான ஏற்பாட்டினை இவ்வறிக்கை விளக்குகிறது. மேலும், குழுவின் நடவடிக்கைகளுக்குத் தேவைப்படும் மற்றும் தோதானவிடத்து, பின்னர் பிரயோகிப்பது தொடர்பான கண்டிப்பான இரகசியத்தன்மை பற்றிய உறுதிப்பாட்டினை குழு வழங்கலாம் என்பதை சட்ட விவகாரங்கள் அலுவலகங்கள் உறுதிப்படுத்தியது. இதன் விளைவாக, குழுவின் பொருள் செறிந்த பதிவுகள் கிட்டத்தட்ட முழுமையாக "கண்டிப்பான இரகசியத்தன்மை' எனவும், சில விடயங்கள் தொடர்பாக எதிர்கால பாவனை பற்றிய மேலதிகப் பாதுகாப்புடனும் வகைப்படுத்தப்படும்.

டிடி. மோதலுக்கான வரலாற்று ரீதியிலான மற்றும் அரசியல் பின்னணி

24. கிட்டத்தட்ட மூன்று தசாப்தங்கள் நடைபெற்று வந்த மூர்க்கத்தனமான மோதலின் பின்னர், 2009 மே 19ஆம் திகதி தமிழீழ விடுதலைப் புலிகள் (எல்.ரி.ரி.ஈ) மீதான அதன் வெற்றியை இலங்கை அரசாங்கம் பிரகடனப்படுத்தியது. யுத்தத்தின் இறுதிக் கட்டங்களின் போது சர்வதேச மனிதாபிமான மற்றும் சர்வதேச மனித உரிமைகள் சட்டத்தின் மீறல்கள் பற்றிய ஏராளமான குற்றச்சாட்டுக்கள் விடுக்கப்பட்டதோடு, அவை பற்றி செயலாளர் நாயகத்துக்கு ஆலோசனை வழங்குவது குழுவுக்குப் பொறுப்பு சாட்டப்பட்டது. இலங்கையின் சிக்கலான மற்றும் எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்ட அரசியல் வரலாற்றினை கூறுபடுத்தி ஆராய்வது குழுவின் பணியல்ல. இருந்த போதிலும், யுத்தத்தின் இறுதிக் கட்டங்களை தோதான அரசியல் மற்றும் சமூகப் பின்னணியின் கண்ணோட்டத்தில் ஆராய்வதற்காக, மோதலின் வரலாற்றின் சில அம்சங்களை கவனத்துக்கு எடுத்துக் கொள்ள வேண்டியது அவசியம் என குழு கண்டது.

25. இலங்கை ஜனநாயக சோஷலிசக் குடியரசு இந்தியாவின் தென் கிழக்குக் கரைக்கு 18 மைல்களுக்கு அப்பால் இந்திய சமுத்திரத்தில் உள்ள தீவு தேசமாகும். இலங்கை 21 மில்லியன் சனத்தொகையைக் கொண்ட இனத்துவ, மொழிவாரியான அத்துடன் சமயம் தொடர்பான பன்முகத் தன்மையுடையதொரு நாடு என்பதோடு, அதில் 74 சதவீதத்தினர் அதிகமாக பௌத்தர்களை உள்ளடக்கிய சிங்கள மொழி பேசும் சிங்களவர்களாகவும், 18 சதவீதத்தினர் அநேகமாக இந்துக்களான தமிழ் மொழியைப் பேசும் தமிழர்களாகவும் (இலங்கைத் தமிழர் மற்றும் இந்திய தமிழர்கள் என முறையே 13 சதவீதத்தையும் 5 சதவீதத்தையும் உள்ளடக்கியதாக), மற்றும் 7 சதவீதத்தினர் இஸ்லாம் மதத்தை அனுஷ்டிக்கும் பொதுவாகத் தமிழ் மொழியைப் பேசும் சோனகர்கள் மற்றும் மலேயர்களைக் கொண்ட முஸ்லிம்களாகவும் மற்றும் 1 சதவீதத்தினர் ஏனையவர்களுள் பறங்கியர் மற்றும் ஆதிவாசிகளைக் கொண்ட சிறிய இனத்துவச் சமூகங்களைச் சேர்ந்தவர்களாகவும் உள்ளனர். சில சமூகங்களில் சிறிய வீதத்தினராக கிறிஸ்தவர்கள் உள்ளனர்.

26. முதலில் போர்த்துக்கேயர், அடுத்து ஒல்லாந்தர் மற்றும் இறுதியாக பிரித்தானியர்களின் 4 நூற்றாண்டுகள் தொடர்ந்த காலனித்துவ ஆட்சிக்குப் பின்னர். பிரித்தானியாவிடம் இருந்து 1948 இல் இலங்கைக்கு சுதந்திரம் கிடைத்தது. சுதந்திரத்துக்குப் பின்னர் பல்வேறு இனத்துவச் சமூகங்களை உள்ளடக்கியதாகச் சிங்களவர் ஆதிக்கம் செலுத்தும் சிங்களப் பெரும்பான்மையைக் கொண்ட அரசாங்கம் இலங்கையை ஆட்சி செய்து வந்தது. சகலருக்குமான வாக்குரிமை, பல்கட்சி அமைப்பு மற்றும் துடிப்பானதொரு தேர்தல் செயற்பாடு, அத்துடன் ஆண்கள் மற்றும் பெண்கள் ஆகிய இரு சாராருக்குமான உயர் நிலையிலான எழுத்தறிவு, குறைந்த சிசு மரண வீதம் போன்ற முக்கியமான மனித அபிவிருத்திச் சித்திகள் ஆகியவற்றை உள்ளிட்ட உறுதியான ஜனநாயகச் சுட்டிகளை இலங்கையின் நீண்ட கால யுத்தம் பற்றிய வரலாற்றுடன் தெளிவாக ஒப்பிடக் கூடியதாகவுள்ளது

(11) அ. இனத்துவமும் அரசியலும்

27. அரசியல் மற்றும் இனத்துவக் கோடுகளூடான ஆழமானதொரு விரிசலின் வன்முறைப் பிரதிபலிப்பாக இலங்கையின் ஆயுதந் தாங்கிய மோதல் இருந்துள்ளது.

1. இனத்துவம் சார்ந்த தேசியவாதத்தின் தோற்றம் 28. சுதந்திரத்தின் பின், அரசியல் பிரமுகர்கள் குறுகிய கால அரசியல் இலாபங்களுக்கு முன்னுரிமை வழங்கி, நீண்ட கால கொள்கைகளுக்கு மேலாக சமுதாயம் சார்ந்த அத்துடன் இனத்துவ வாத மன உணர்ச்சிகளை கவர்வதற்கான ஒரு போக்கினைக் கொண்டிருந்தனர். நீண்ட கால கொள்கைகள் பிரஜைகளின் பல்கலாசார இயல்பினைப் போதியளவு பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் சகலரையும் உள்ளிட்டதொரு நாட்டைக் கட்டியெழுப்பியிருக்கலாம். இத்தகைய செயற்பாடு மற்றும் பிரிவுகள் காரணமாக ஒருமைப்படுத்தும் தேசிய தனித்தன்மை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. அதே வேளையில், சிங்களபௌத்த தேசியவாதம் செயற்பட ஆரம்பித்தது, பௌத்த மதத்தின் பரிசுத்த இல்லமாகிய இலங்கையின் பாதுகாப்பாளர்கள் என்பதாக சிங்களவர்களுக்கு தனிச்சிறப்பினைக் கொண்டதொரு தன்மையை வலியுறுத்தியது. இக்காரணிகள் இலங்கையில் நாடு, அரசாட்சி மற்றும் இனங்களுக்கிடையிலான தொடர்புகளைப் பாழாக்கி நீண்டகால விளைவுகளை ஏற்படுத்தியது.

29. 1970ஆம் ஆண்டுகளில், ஒரு புறம் வகுப்பு அடிப்படையிலான ஓரங்கட்டலால் விரக்தியடைந்த தெற்கின் இளம் சிங்களவர்கள் மற்றும் இனத்துவ அடிப்படையிலான ஓரங்கட்டலால் விரக்தியடைந்த வடக்கைச் சேர்ந்த இளம் தமிழர்கள் மறு பக்கம் உருவாகி வரும் நாடு சம்பந்தப்பட்ட வகையில் வெவ்வேறு விதமான எதிர்ச்செயலில் ஈடுபட்டு, தீவிரவாதத்தின் பக்கம் திரும்பி, அரசுக்கு எதிரான ஆயுதந்தாங்கிய புரட்சிகளில் ஈடுபட்டனர். அரசாங்கம் இவ்வியக்கங்களை தேசிய பாதுகாப்புக்கான அச்சுறுத்தலாகக் கணித்து, அடிப்படையான அரசியல் சிக்கல்களைத் தீர்ப்பதை விடுத்து, அரச அதிகாரத்துக்கு எதிரான சவால்களான காணாமல்போதல்கள், சட்டத்துக்குப் புறம்பான கொலைகள் மற்றும் சித்திரவதை உள்ளிட்ட அடக்குமுறையினைக் கொண்டு எதிர்கொண்டது.

30. வேறுபாடு காட்டும் அரசாங்கக் கொள்கைகள் மற்றும் 1950ஆம் ஆண்டுகளில் தமிழர்களுக்கு எதிரான கலவரம் ஆகியவற்றைத் தொடர்ந்து, காந்தியின் அகிம்சா வழியைப் பின்பற்றி ஆரம்பித்த உரிமைகளுக்கான தமிழ் போராட்டம், தனி நாடு என்ற கோரிக்கையை மையமாகக் கொண்டு மேலும் மேலும் தமிழ் தீவிரவாதம் மற்றும் ஆயுதம் ஏந்திய புரட்சியை தோற்றுவித்தது. ஒத்துப்போவதில் இருந்து பிரிவினை வாதத்துக்கு கலந்துரையாடல் மாறியபோது, 1970ஆம் ஆண்டுகளில் எல்.ரி.ரி.ஈ. உள்ளிட்ட பல தமிழ் அரசியல்தீவிரவாதக் குழுக்கள் தோன்றின. ஆயுதந்தாங்கிய தமிழ் குழுக்கள் பாதுகாப்புப் படையினருக்கு எதிராக மேற்கொண்ட தாக்குதல்களுக்குச் சமாந்தரமாக சிங்கள தேசியவாதிகள் தமிழர்களுக்கு எதிராக மேற்கொண்ட கடுமையான அடக்கு முறை தீவிரமடைந்தது. 1977, 1979, 1981 மற்றும் 1983 இல் தமிழர்களுக்கு எதிரான வன்முறைகளை அரசாங்கத்தில் இருந்த சில சக்திகள் உற்சாகப்படுத்தின அல்லது சில சந்தர்ப்பங்களில் அவற்றுக்கு அனுசரணை வழங்கின. இந்த வன்முறை 1983இல் ஆகப் பரவலாக நடைபெற்ற தமிழர்களுக்கு எதிரான தாக்குதல்களின் உச்ச நிலையை அடைந்தது. அரசாங்கத்துக்குச் சொந்தமான பேருந்துகளில் சிங்களக் கும்பல்கள் போக்குவரத்துச் செய்யப்பட்டதோடு தமிழர்களை இனங்கண்டு அவர்களை இலக்குப் பார்ப்பதற்காக உத்தியோகபூர்வமான வாக்காளர் பதிவேடுகள் பிரயோகிக்கப்பட்டன. ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்ததோடு பாரிய அளவில் இடம் பெயர்வு, தமிழர்களின் சொத்துக்களுக்கான சேதம் அத்துடன் தமிழர்களின் புலம்பெயர்வு நேர்ந்தது. வடக்கு மாகாணமான யாழ்ப்பாணத்தில் 13 இலங்கை இராணுவ வீரர்களை எல்.ரி.ரி.ஈ. கொலை செய்ததற்குப் பதிலாக இத்தாக்குதல்கள் நடைபெற்றதாக அரசாங்கம் உறுதியாகக் கூறியது. இவ்வாறாக, 1983ஆம் ஆண்டுக்கு முன்னர் இரு தரப்பினருக்கிடையிலான வன்செயல்கள் நேர்ந்த போதிலும், அரசாங்கத்துக்கும் எல்.ரி.ரி.ஈ. இனருக்கும் இடையிலான யுத்தத்தின் ஆரம்பம் 1983 எனப் பொதுவாகக் கருதப்படுகிறது. 2. தமிழீழ விடுதலைப் புலிகள் (எல்.ரி.ரி.ஈ) 31. 1983ஆம் ஆண்டின் இனக் கலவரங்களுக்குப் பின்னர் தமிழர்களுக்கு எதிரான அடக்குமுறை மும்முரமடைந்த போது, தமிழ் சமூகமும் மேலும் தீவிரவாதத்தில் ஆழ்ந்து, தமிழ் நாட்டில் பயிற்சி மற்றும் அமைப்புக்கு ஏதுவான சூழலைப் பிரயோசனப் படுத்தியதோடு, தீவிரவாதக் குழுக்களின் அணிகளும் அதிகரித்தன. தமிழ் விடுதலை இயக்கமாக ஆரம்பித்த எல்.ரி.ரி.ஈ, நாளடைவில் மிகவும் ஒழுங்கு சார்ந்த மற்றும் தமிழ் தீவிரவாதக் குழுக்களிடையே மிகவும் தேசியவாதத்தைக் கொண்டதாகவும் மாறி 1980ஆம் ஆண்டுகளின் நடுப்பகுதியில் பிரிவினைவாத நிகழ்ச்சி நிரலை அரவணைக்கும் தலையாய சக்தியாக தலைதூக்கியது. இக்கால கட்டத்தின் போது, எல்.ரி.ரி.ஈ. ஏனைய தமிழ் குழுக்களை பணிய வைப்பதற்காக கூடிய அளவிலான வன்முறைப் போக்கினைக் கடைப்பிடித்ததோடு, தாமாகவே நியமிக்கப்பட்டட தமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகள் தாம் என்பதை அவர்கள் வலியுறுத்தினர். அதன் புதிரான தலைவர், வேலுப்பிள்ளை பிரபாகரன், முழுமையான விசுவாசத்தையும் அர்ப்பணிப்பையும் அதிகாரத்துடன் கோரியதோடு பக்தி சார்ந்ததொரு ஆதரவாளர்களை உருவாக்கினார். தமக்குள்ளே எந்தவொரு கருத்து வேறுபாட்டையும் சகிக்காததோடு, அரசாங்கத்துடன் செயற்படுவோர் அல்லது ஒத்துழைப்போர் எனச் சந்தேகிக்கப்படுபவர்கள் துரோகிகள் என்று முத்திரை குத்தப்பட்டு அநேகமாக எல்.ரி.ரி.ஈ. இனால் கொலை செய்யப்பட்டார்கள். தமிழர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட எல்.ரி.ரி.ஈ. இன் வன்முறை தமிழ் சமுதாயத்தினுள் ஆழ்ந்த பயத்தையும் சந்தேகத்தையும் தோற்றுவித்தது.
மேலும் இங்கே தொடர்க...

28 ஏப்ரல், 2011

போர்க்குற்ற செயல்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும்

இலங்கையின் போர்க் குற்ற செயல்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட வேண் டும் என்று தி.மு.க. உயர்நிலை செயல்திட்டக் குழுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஸ்பெக்ட்ரம் வழக்கில் முதல்வர் கருணாநிதியின் மகள் கனிமொழியின் பெயர் கூட்டுச் சதியாளராக சேர்க்கப்பட்டுள்ள நிலையில் தி.மு.க. நேற்று தனது உயர் நிலை செயல் திட்டக் குழுக் கூட்டத்தைக் கூட்டியது.

அதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில், இலங்கை போர்க்குற்ற செயல்களுக்கு எதி ராக நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

இக் கூட்டத்திற்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் கருணாநிதி, இலங் கை யில் நடந்த போர்க்குற்றத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என் பதை தி.மு.க. வலியுறுத்துகிறது. அங்கு வாழும் மக்களிடையே சமத்துவ நிலை ஏற் பட வழி வகுக்கப்பட வேண்டும்.

இலங்கையில் நடந்த போரின் போது மனித உரிமை மீறலில் ஈடுபட்டு அதற்குக் கார ண மானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். சர்வதேச ஆணையம் இந்த மனித உரிமை மீறல் குறித்து விசாரிக்க இந்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என் று தெரிவித்தார்.

தனி ஈழமே தி.மு.க.வின் குறிக்கோள்: இதற்கு முன்னதாக கூட்டத்தில் பேசிய கருணாநிதி, தனி ஈழமே தி.மு.க.வின் குறிக் கோள். இலங்கை போர் குற்றத்துக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும். இல ங் கைப் போரில் மனித உரிமை மீறலுக்கு காரணமானோர் மீது நடவடிக்கை தேவை. சர்வதேச ஆணையம் விசாரிக்க இந்திய அரசு வலியுறுத்த வேண்டும் என்றார்.

காங்கிரஸுக்குப் பதிலடியாக இலங்கை விவகாரம்:

சி.பி.ஐ. மூலம் மத்திய அரசு, தி.மு.க.வுக்கு அடுத்தடுத்து நெருக்கடி கொடுத்து வரு வதற்கு பதிலடியாக, தி.மு.க. இலங்கை விவகாரத்தை கையில் எடு த் துள்ளதாகவே தெரிகிறது.

இலங்கையில் நடந்த போர்க்குற்றம் தொடர்பாக விசாரிக்க நியமிக்கப்பட்ட ஐ.நா. நிபுணர் குழு தனது அறிக்கையை வெளியிட்டுள்ளதைத் தொடர்ந்து இதுதொடர்பாக இந் திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தி.மு.க. தீர்மானம் நிறைவேற்றியி ரு ப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

மேலும் இதுதொடர்பாக தி.மு.க., போராட்டங்களையும் அறிவிக்கலாம் என்றும் எதிர் பார்க்கப்படுகிறது.
மேலும் இங்கே தொடர்க...

ஐ.நா.வுக்கும் இலங்கைக்கும் இடையில் ஆரோக்கியமான உறவு நிலவுகின்றது: டலஸ்

ஐக்கிய நாடுகள் சபைக்கும் இலங்கை அரசாங்கத்துக்கும் இடையில் எவ்விதமான முரண்பாடுகளும் இல்லை. ஐ.நா.வுக்கும் இலங்கைக்கும் இடையில் மிகவும் ஆரோக்கியமான உறவு நிலவுகின்றது. தற்போதைய நிலைமையில் சர்வதேச நாடுகள் இலங்கையின் பக்கத்தில் நிற்கவேண்டும் என்று கோரிக்கை விடுக்கின்றோம் என அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்தார்.

கொழும்பில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு மேலும் கூறியதாவது ஐக்கிய நாடுகள் சபைக்கும் இலங்கைக்கும் இடையிலேக்ஷி அல்லது பான் கீ மூனுக்கும் எமக்கும் இடையிலோ எவ்விதமான தனிப்பட்ட பிரச்சினையுமில்லை. செயலாளரினால் நியமிக்கப்பட்ட நிபுணர் குழுவின் செயற்பாட்டையே நாங்கள் எதிர்க்கின்றோம். அதாவது ஐக்கிய நாடுகள் சபையில் அங்கத்துவம் பெற்றிருப்பதை நாங்கள் பெருமையாகவும் கௌரவமாகவும் கருதுகின்றோம்.

தற்போது இலங்கையை அசௌகரியப்படுத்தும் வகையில் ஐ.நா. நிபுணர் குழு அறிக்கை வெளியிட்டுள்ளது.“ இந்நிலையில் ஒரு விடயத்தை நினைவுபடுத்தவேண்டும். 2001 ஆம் ஆண்டு அமெரிக்காவில் பயங்கரவாத தாக்குதல் நடைபெற்றதன் பின்னர் அமெரிக்கா பயங்கரவாதத்துக்கு எதிரான யுத்தத்தை ஆரம்பித்தது.

இந்நிலையில் அமெரிக்கா உள்ளிட்ட பயங்கரவாதத்துக்கு எதிராக யுத்தம் செய்யும் அனைத்து நாடுகளுக்கும் இந்த அறிக்கை சவால் விடுத்துள்ளது என்பதனை வலியுறுத்துகின்றோம். எனவே உலக நாடுகள் இந்த அறிக்கை விடயத்தில் தவறான முன்னுதாரணத்தை வெளிக்காட்டிவிடக் கூடாது.

இந்த விடயத்தில் உலக நாடுகள் எமது பக்கமே இருக்கவேண்டும் என்று கோரிக்கை விடுக்கின்றோம். நாங்கள் எமது கால்களில் எழுந்து நிற்க முயற்சிக்கையில் அதற்கு தடையாக இருக்கவேண்டாம் என்று கோருகின்றோம்.

ஐ.நா. நிபுணர் குழு அறிக்கையை வெளியிட்ட ஏப்ரல் 24 ஆம் திகதி நாங்கள் முன்னாள் போராளிகள் 700 பேரை விடுவித்தோம். முன்னாள் போராளிகளின் சித்திரக் கண்காட்சி கொழும்பில் ஆரம்பமாகியது. எனவே இந்த விடயத்தில் நாட்டின் சகல அரசியல் கட்சிகளும் எம்முடன் ஒன்றிணைந்து செயற்படவேண்டும் என்று கோரிக்கை விடுக்கின்றோம்.
மேலும் இங்கே தொடர்க...

அறிக்கை குறித்து விவாதிக்க பாராளுமன்றத்தை கூட்டவும்: திருமாவளவன்

ஐ.நா. நிபுணர் குழுவின் அறிக்கை தொடர்பில் விவாதிப்பதற்கு பாராளுமன்றக் கூட்டத் தொடரை உடனடியாக கூட்ட வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவரும் எம்.பியுமான தொல். திருமாவளவன் கோரிக்கை விடுத்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, படுகொலைகளை உறுதிப்படுத்தி ஐ.நா. அறிக்கை வெளிவந்துள்ள நிலையில் இலங்கை அரசு மீது சர்வதேச நெறிமுறைகளுக்கு ஏற்ப நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்கு இந்திய அரசு ஐ.நா. மன்றத்தை வலியுறுத்த வேண்டும். ஐ.நா. அறிக்கையை விவாதிப்பதற்காக பாராளுமன்றக் கூட்டத்தை உடனடியாகக் கூட்ட வேண்டும்.

இலங்கைப் போரின் இறுதிக்கட்டத்தில் பல்லாயிரக் கணக்கான தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதை ஐ.நா. அறிக்கை உறுதிப்படுத்தியிருக்கிறது. இலங்கை அரசாங்கம் ஈவிரக்கமற்ற முறையில் தமிழர்களைக் கொன்றதையும், உலக நாடுகளை ஏமாற்றியதையும் செஞ்சிலுவைச் சங்கம், ஐ.நா. மன்றம் முதலான சர்வதேச அமைப்புகளையும் அங்கே செயல்பட விடாமல் தடுத்ததையும் ஐ.நா. அறிக்கை சுட்டிக் காட்டியுள்ளது.

போர் முடிந்ததற்குப் பிறகும் இலங்கை அரசு ஏராளமான தமிழர்களைப் படுகொலை செய்து வருவதையும் தமிழ்ப் பெண்களை பாலியல் வல்லுறவுக்கு ஆட்படுத்தி வருவதையும் ஐ.நா. அறிக்கை உறுதிப்படுத்தியுள்ளது. இத்தகவல்கள் வெளியுலகைச் சென்றடையாதவாறு ஊடகவியலாளர்களையும் மனித உரிமை ஆர்வலர்களையும் வெள்ளை வேன்களில் கடத்திக் கொலை செய்வதையும் ஐ.நா. அறிக்கை உறுதிப்படுத்தியுள்ளது.

அது மட்டுமன்றி இலங்கையில் நீதித்துறை சுதந்திரமாக இயங்கவில்லை என்பதையும் தற்போது இலங்கை அரசால் அமைக்கப்பட்டுள்ள விசாரணை ஆணையம் கண் துடைப்புக்காக அமைக்கப்பட்ட ஓர் அமைப்புதான் என்பதனையும் ஐ.நா. அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது.

இந்நிலையில் இலங்கையில் நடைபெற்ற இனப் படுகொலைகளை விசாரித்து அதற்குக் காரணமான ராஜபக்ஷ உள்ளிட்டவர்களைத் தண்டிப்பதற்கு சர்வதேச அளவிலான நடவடிக்கைகள் அவசியம் என்பதையும் ஐ.நா. அறிக்கை தெளிவுப்படுத்தியுள்ளது. அங்கு தமிழ் மக்கள் சமத்துவத்தோடு வாழ்வதற்குத் தேவையான அரசியல் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்பதை ஐ.நா. அறிக்கை வலியுறுத்தியுள்ளது.

நாம் இதுவரையில் கூறி வந்த குற்றச்சாட்டுகள் அனைத்தும் உண்மையானவைதான் என்பதை ஐ.நா. அறிக்கை உறுதிப்படுத்தியிருக்கிறது. இந்நிலையில் இந்திய அரசும், இங்குள்ள அரசியல் கட்சிகளும் மற்றும் தமிழ்த் தேசிய அமைப்புகளும் உறுதியாகக் குரல் எழுப்பி ஈழத் தமிழர்களின் உரிமைகளைக் காப்பாற்றிட முன்வர வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் வலியுறுத்துகிறது.

1. இலங்கையில் நடைபெற்றது போர்க்குற்றங்கள்தான் என ஐ.நா. அறிக்கை கூறியிருக்கிறது. அவை போர்க் குற்றங்கள் மட்டுமல்ல. அது ஓர் இனப் படுகொலை. அங்கு கொல்லப்பட்டவர்கள் ஒரு குறிப்பிட்ட சிறுபான்மை இனத்தைச் சேர்ந்தவர்கள் என்கிற காரணத்தாலேயே கொல்லப்பட்டுள்ளனர். இந்த அம்சத்தை ஐ.நா. அறிக்கை கவனத்தில் கொள்ளவில்லை. எனவே இலங்கையில் நடந்தவற்றை போர்க்குற்றங்கள் (ஙிச்ணூ இணிட்ஞுண்) என்று மட்டும் பார்க்காமல் அவற்றை ஓர் இனப் படுகொலையாகப் பார்க்க வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் வலியுறுத்துகிறது.

2. இலங்கை இறுதி யுத்தத்தின்போது சீனா, இந்தியா உள்ளிட்ட பல நாடுகள் இலங்கை அரசுக்கு உதவியதாக செய்திகள் வெளிவந்தன. ஐ.நா. அமைப்பைச் சார்ந்த சில அதிகாரிகளும் கூட உதவி செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டது. இத்தகைய குற்றச்சாட்டுகளை விசாரிக்க ஐ.நா. மனித உரிமை அமைப்பு தனியே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் வலியுறுத்துகிறது.

3. இலங்கை அரசின் மீது போர்க் குற்ற விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என முயற்சிகள் எடுக்கப்பட்டபோது கியூபா, ரஷ்யா, சீனா உள்ளிட்ட கம்யூனிஸ நாடுகள்தான் அம்முயற்சியைத் தடுத்து இலங்கையை கைப்பற்றின. கம்யூனிஸ நாடுகள் என்ற போர்வையில் தமிழினப் படுகொலையை ஊக்குவித்த இந்நாடுகளின் நோக்கம் அம்பலப்படுத்தப்பட வேண்டும். இந்தியாவில் உள்ள இடதுசாரிக் கட்சிகள் மேற்கண்ட நாடுகளோடு அரசியல் ரீதியாக எந்தத் தொடர்பையும் வைத்துக் கொள்ள மாட்டோம் எனப் பகிரங்கமாக அறிவிக்க வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் வலியுறுத்துகிறது.

4. பாதுகாப்புக் காரணம் என்று சொல்லி சர்வதேச அரங்குகளில் இலங்கையை இந்தியா ஆதரித்து வருகிறது. இனிமேல் அந்த நிலை தொடரக்கூடாது. இலங்கையுடனான வெளியுறவுக் கொள்கையை மறு ஆய்வு செய்ய தமிழக அரசோடும் தமிழ்நாட்டு அரசியல் கட்சிகளோடும் இந்திய அரசு கலந்தாலோசிக்க வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் இந்திய அரசை வலியுறுத்துகிறது.

5. ஐ.நா. அறிக்கை ஈழத் தமிழ் மக்களுக்கு மட்டுமல்ல தமிழ் இனம் முழுமைக்குமே ஒரு முக்கிய அறிக்கையாகும். அது மட்டுமல்லாமல் தெற்காசியாவில் முக்கியத்துவத்தோடு திகழும் இந்தியாவுக்கும் இந்த அறிக்கை முக்கியமானதாகும். எனவே இந்த அறிக்கையை விவாதிப்பதற்காக உடனடியாக நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டத்தைக் கூட்ட வேண்டும் என இந்திய அரசை விடுதலைச் சிறுத்தைகள் வலியுறுத்துகின்றது.
மேலும் இங்கே தொடர்க...

காட்டுப்புலி வசமாக மாட்டிக்கொண்டது : பலாங்கொடையில் சம்பவம்

பலாங்கொடை மாராத்தென்ன தோட்டப் பகுதியில் பொதுமக்களை அச்சுறுத்தி வந்த புலி ஒன்றிறை வன ஜீவராசிகள் பிரிவினரும் பொலிஸாரும்; இணைந்து நேற்று பிற்பகல் வேளையில் பிடித்துள்ளனர்.

மாராத்தென்ன தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்த தொழிலாளர்கள் தேயிலைச் செடிகளுக்கிடையில் ஒரு வித சத்தம் கேட்டதைத் தொடர்ந்து அங்கு ஆராய்ந்து பார்த்த போது மஞ்சள் நிறத்துடன் கூடிய விசாலமான புலி ஒன்றிருப்பதைக் கண்டுள்ளனர்.

இந்தப்புலிக் குறித்து தோட்டத் தொழிலாளர்கள் தோட்ட முகாமையாளரின் ஊடாக மாராத்தென்ன பொலிஸாருக்கும் வன ஜீவராசிகள் பிரிவினக்கும் அறிவித்தனர். அந்தப்பகுதிக்கு வருகைத்தந்த பொலிஸாரும் வன ஜீவராசிகள் பிரிவினரும் பல மணிநேர போராட்டத்திற்குப் பிறகு புலியைப் பிடித்துள்ளனர்.
மேலும் இங்கே தொடர்க...

ஜனாதிபதி, இராணுவத்தினர் மீது சேறுபூசுவதற்கு அனுமதியோம்

ஐக்கிய நாடுகள் சபையின் நிபுணர் குழுவுக்கு அறிக்கை ஒன்றை தயாரிப்பதற்கு எவ்விதமான அதிகாரமுமில்லை. அதேபோன்று அந்த அறிக்கையை வெளியிடுவதற்கு பான் கீ மூனுக்கு எந்தவிதமான உரிமையுமில்லை. இந்த அறிக்கையை இலங்கை அரசாங்கம் நிராகரிப்பதுடன் கடுமையாக எதிர்க்கின்றது. ஜனாதிபதி, பாதுகாப்பு செயலாளர் மற்றும் இராணுவ வீரர்கள் மீது சேறுபூசப்படுவதற்கு ஒருபோதும் இடமளிக்கமாட்டோம் என்று நான்கு முக்கிய அமைச்சர்கள் ஒன்றிணைந்து அறிவித்தனர்.

ஐ.நா. குழுவின் இந்த செயற்பாடு தொடர்பில் உள்நாட்டில் மக்களை தெளிவுபடுத்தவுள்ளதுடன் சர்வதேச மட்டத்தில் எமது நிலைப்பாட்டை விளக்கிக்கூறவுள்ளோம். மேலும் நிபுணர் குழு விவகாரம் தற்போது முடிந்துவிட்டது. இதற்கு அப்பால் செயற்பட தனக்கு அதிகாரம் இல்லை என்று பான் கீ. மூன் கூறிவிட்டார். ஆனால் ஐ.நா. பாதுகாப்பு சபையும் மனித உரிமை பேரவையும் கோரிக்கை விடுத்தால் அடுத்தக்கட்ட நகர்வு இடம்பெறும். ஆனால் அந்த அமைப்புக்கள் கோரிக்கை விடுக்காது என்று நம்புகின்றோம் எனவும் அமைச்சர்கள் சுட்டிக்காட்டினர்.

நேற்று கொழும்பில் நடைபெற்ற விசேட செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அமைச்சர்கள் மேற்கண்டவாறு குறிப்பிட்டனர். அமைச்சர்களான சரத் அமுனுகம, நிமால் சிறிபால டி. சில்வா, டலஸ் அழகப்பெரும, சுசில் பிரேம்ஜயந்த ஆகியோர் இதில் கலந்துகொண்டனர்.

அமைச்சர் நிமால் சிறிபால டி. சில்வா குறிப்பிடுகையில் : இந்த குழுவின் நியமனம் அவசியமற்றது என்று நாங்கள் ஆரம்பத்தில் இருந்தே கூறிவருகின்றோம். இந்தக் குழுவானது தனக்கு ஆலோசனை வழங்கவே நியமிக்கப்பட்டதாக பான் கீ. மூன் கூறினார். அந்த வகையில் நிபுணர் குழுவுக்கு அறிக்கை தயாரித்து வெளியிட சட்டம் யாப்பு மற்றும் பண்பியல் ரீதியாக எவ்வித அதிகாரமும் இல்லை. இது பாதுகாப்பு சபையினதோ அல்லது மனித உரிமை பேரவையினதோ அனுமதியுடன் நியமிக்கப்படவில்லை.

வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் வெளியிடப்பட்டுள்ள விடயங்கள் பக்கச்சார்பானவையாகும். இலங்கைக்கு பாதகமான வகையில் வெளியிடப்பட்டுள்ளது. புதிய பயணம் ஒன்றை நாங்கள் செல்ல ஆயத்தமாகும்போது இவ்வாறு எம்மை அசௌகரியப்படுத்த முயற்சிப்பது தொடர்பில் கவலையடைகின்றோம். எமது எதிர்ப்பை வெளியிடுகின்றோம். சர்வதேச ஊடங்களுக்கும் புலம்பெயர் மக்களுக்கும் இது மகிழ்ச்சியான விடயமாக இருக்கலாம். நாங்கள் இந்த அறிக்கையை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளமாட்டோம். ஜனாதிபதி பாதுகாப்பு செயலாளர் மற்றும் இராணுவ வீரர்கள் மீது சேறுப்பூசப்படுவதற்கு ஒருபோதும் இடமளிக்கமாட்டோம். இலங்கைக்கு எதிராக சர்வதேச மட்டத்தில் பாரிய சதித்திட்டம் ஒன்று மேற்கொள்ளப்படுகின்றது. ஆரம்பத்திலிருந்து புலிகள் இந்த நாட்டை பிரிப்பதற்கு முயற்சித்தனர். தற்போது அதனை வேறு வடிவத்தில் சர்வதேச மட்டத்தில் புலிகளும் புலம்பெயர் மக்களும் மேற்கொள்வதை காண முடிகின்றது. ஐ.நா. குழுவின் இந்த செயற்பாடு குறித்து உள்நாட்டில் மக்களை தெளிவுபடுத்தவுள்ளதுடன் சர்வதேச மட்டத்தில் எமது நிலைப்பாட்டை விளக்கிக்கூறவுள்ளோம்.

இராஜதந்திர ரீதியாகவும் பல நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளோம். பேசிக்கொண்டிருப்பதைவிட இந்த விடயத்தை செயலில் காட்டுவோம். ஐ.நா. பாதுகாப்பு சபை மற்றும் மனித உரிமை பேரவைக்கும் தெளிவுபடுத்துவோம். மேலும் இந்த அறிக்கை சமநிலையானது என்பதனை காட்டுவதற்காக புலிகளின் மீறல்களையும் குறிப்பிட்டுள்ளனர். ஆனால் புலிகளுக்கு இதில் சிறந்த சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. எப்படியிருப்பினும் நாங்கள் இந்த அறிக்கை தயாரிக்கப்பட்ட மற்றும் வெளியிடப்பட்ட விதம் சட்டவிரோதமானது என்ற நிலைப்பாட்டில் இருக்கின்றோம் என்றார்.

சரத் அமுனுகம அமைச்சர் சரத் அமுனுகம குறிப்பிடுகையில் :

பான் கீ. மூன் இந்த அறிக்கையை ஒருபக்கச்சார்பாகவே வெளியிட்டுள்ளார். இதனை நாங்கள் கண்டிக்கின்றோம். அத்துடன் நிராகரிக்கின்றோம். இவ்வாறு விசாரணை ஒன்று நடத்த ஐ.நா. விடம் யார் கோரிக்கை விடுத்தது என்று கேள்வியெழுப்புகின்றோம். அதாவது நாடு ஒன்றில் ஆட்சி மாற்றம் நிகழ்ந்தால் இவ்வாறான கோரிக்கைகள் விடுக்கப்படும். ஆனால் இலங்கையிலிருந்து அவ்விதத்தில் எந்த கோரிக்கையும் விடுக்கப்படவில்லை. இந்த நாட்டு மக்கள் மிக அண்மையில் மூன்று தடவைகள் ஜனாதிபதியையும் அரசாங்கத்தையும் பாரிய விதத்தில் அங்கீகரித்துள்ளனர்.

இதேவேளை எமது உள்ளக விடயங்களை ஆராய கற்றறிந்த பாடங்களும் நல்லிணக்கமும் குறித்த ஆணைக்குழுவை நியமித்துள்ளோம். அந்தக் குழு சிறப்பாக செயற்பட்டுள்ளது. இந்நிலையில் ஐ.நா.“வின் குழுவானது எங்கிருந்து தகவல்களை பெற்றது என்று வினவுகின்றோம். எவ்விதமான ஆதாரங்களோ ஆவணங்களோ இன்றி குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. முன்னாள் இலங்கை ஐ.நா. அலுவலகத்தின் பேச்சாளர் கோர்டன் வைஸ் பல்வேறு கருத்துக்களை வெளியிட்டு வருகின்றார். ஆனால் அவ்வாறு உத்தியோகத்தர் ஒருவர் ஐ.நா. சட்டத்தின் பிரகக்ஷிரம் தகவல்களை வெளியிட முடியாது. நானும் ஐ.நா. வில் பணிபுரிந்துள்ளேன். ஐ.நா. உத்தியோகத்தர் என்ற வகையில் பெறும் தகவல்களை வெளியிட முடியாது என்றார்.

அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த கருத்து வெளியிடுகையில் :

சர்ச்சையை ஏற்படுத்திய இந்த அறிக்கையை நாங்கள் எதிர்க்கின்றோம். நிராகரிக்கின்றோம். நிரூபிக்கப்பட முடியாத குற்றச்சாட்டுக்களை அறிக்கையில் முன்வைத்துள்ளனர். ஐக்கிய நாடுகள் சபை சமாதானத்தை ஏற்படுத்தவே முயற்சிக்கவேண்டும். மாறாக பிரிவினை ஏற்படுத்த முயற்சிக்கக்கூடாது. புலிகள் மிகப்பெரிய பயங்கரவாத அமைப்பாகும். இந்திய நாட்டின் முன்னாள் பிரதமரை கொலை செய்த குற்றச்சாட்டில் பிரபாகரனுக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இந்தக் குழுவில் இடம்பெற்றுள்ள மூன்று உறுப்பினர்கள் தொடர்பிலும் நம்பகத்தன்மை இல்லாமல் உள்ளது. அவர்களின் கடந்தகால வரலாறுகள் குறித்து எங்களுக்கு தெரியும். நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை மே மாதம் 15 ஆம் திகதி வெளிவரவுள்ளது. அதற்கிடையில் பாரிய இடைவெளியை ஏற்படுத்த முயற்சிக்கின்றனர். வடக்கு கிழக்கில் பல மடங்கு அபிவிருத்திகள் இடம்பெற்றுவருகின்றன.

இந்நிலையில் நாங்கள் இவ்வாறு அபிவிருத்தியை நோக்கி செயற்படுகையில் ஜனாதிபதியை இலக்குவைத்து சில தரப்புக்கள் செயற்பாடுகளை மேற்கொள்கின்றன. இவ்வாறான முயற்சிகளை தோற்கடிக்க இராஜதந்திர முயற்சிகளை நாங்கள் மேற்கொள்வோம். இராணுவத்தினருக்கு களங்கம் ஏற்பத்தும் செயற்பாடுகளுக்கு இடமளிக்கமாட்டோம் என்றார்.

அமைச்சர் டலஸ் அமைச்சர் டலஸ் அழகப்பெரும குறிப்பிடுகையில் :

மீண்டும் உலகில் பாரிய யுத்தம் ஒன்று இடம்பெறக்கூடாது என்பதற்காகவே இந்த ஐக்கிய நாடுகள் சபை ஸ்தாபிக்கப்பட்டது. ஆனால் 1945 ஆம் ஆண்டிலிருந்து மூன்று தசாப்தங்களாக பணிப்போரை சமாளிப்பதிலேயே ஐ.நா. காலத்தை கழித்தது. அதன் பின்னர் எந்தவொரு விடயத்தையும் யுத்தத்தினால் தீர்க்க முடியாது என்றும் பேச்சுவார்த்தையினாலேயே தீர்க்க முடியும் என்றும் ஒரு கொள்கையை ஐ.நா. கொண்டுவந்தது. அது தொடர்பில் பல்கலைக்கழகங்களில் பாடத்திட்டங்கள் வந்தன. முரண்பாட்டு தீர்வு முரண்பாட்டு முகாமைத்துவம் என பாடத்திட்டங்கள் உருவெடுத்தன. இவ்வாறான காலகட்டத்தில் ஜனாதிபதி எமது நாட்டின் பிரச்சினையை தீர்த்து வைத்தார்.

இந்த வெற்றியை ஒரு சிலரால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. அதனால் இவ்வாறான விடயங்களை கொண்டுவருகின்றனர். செயலாளர் நாயகம் நியமித்த நிபுணர் குழுவுக்கு அறிக்கை ஒன்றை வெளியிடுவதற்கு எவ்விதமான உரிமையும் இல்லை.

அறிக்கையை வெளியிடுவதற்கு ஐ.நா. வின் யாப்பு சட்டம் மற்றும் பண்பியல் ரீதியாக எவ்விதமான உரிமையும் இல்லை. எனவே அந்த அறிக்கையை நாங்கள் நிராகரிக்கின்றோம். அதன் உள்ளடக்கங்கள் குறித்து பேசிக்கொண்டிருக்க தயாரில்லை. அதாவது இதனை உலகில் தோன்றியுள்ள புதுவிதமான நவீன அரசியல் காலணித்துவம் என்று கூற முடியும்.
மேலும் இங்கே தொடர்க...

விலை அதிகரிப்பு, வரி விதிப்பு மதுபானம், சிகரட் மூலம் ரூ. 17,000 கோடி வருமானம்




மதுபானம் மற்றும் சிகரட் என்பன மீதான விலைகள் அதிகரிக்கப்பட்டதாலும் வரி விதிக்கப்பட்டதன் மூலமும் கடந்த 10 வருட காலத்தில் 17,074 கோடி ரூபா வருமானம் பெறப்பட்டதாக பிரதிநிதி அமைச்சர் கீதாஞ்சன குணவர்தன நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

வாய் மூல விடைக்காக ரவி கருணாநாயக்க எம்.பி. எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த அவர் மேலும் கூறியதாவது, 2000 ஆம் ஆண்டில் 247 ரூபாவாக இருந்த வெளிநாட்டு மதுபான விலை 2011ல் 1003 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது. 2003ல் 190 ரூபாவாக இருந்த வைன் 718 ரூபாவாகவும் 2000 ஆம் ஆண்டில் 213 ரூபாவாக இருந்த தென்னை மற்றும் பதப்படுத்திய மதுபானம் 213 ரூபாவில் இருந்து 863 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

2000 ஆம் ஆண்டில் 4.82 ரூபாவாக இருந்த 84 மி.மீ.க்கு அதிகமான சிகரெட் 2010 டிசம்பர் ஆகும் போது 15 ரூபாவாக உயர்த்தப்பட்டது. 84 மி.மீ. ரக சிகரெட் 4.30 ரூபாவில் இருந்து 12.10 ரூபாவாக உயர்த்தப்பட்டது.

கடந்த 10 வருட காலத்தில் மதுவரி மூலம் 1,62,108.90 மில்லியன் ரூபா வருமானம் பெறப்பட்டது. சிகரெட் விலை அதிகரிப்பின் மூலமாக 9,635 மில்லியன் வருமானம் கிடைத்தது.

சிகரெட் மீது 12 வீத பெறுமதி சேர் வரியும் 2 வீத சேதக் கட்டுமான வரியும் பெறப்படுவதோடு ஒரு கிராம் புகையிலைக்கு 10 ரூபா வரி அறவிடப்படுகிறது.

உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் ஒரு லீற்றர் மதுபானத்திற்கு 12 வீத பெறுமதி சேர் வரியும் 2 வீத தேசக்கட்டுமான வரியும் ஒரு வீத பொருளாதார சேவைக் கட்டணமும் அறவிடப்படுகிறது.
மேலும் இங்கே தொடர்க...

பாராளுமன்றம் 35 நிமிடங்களில் ஒத்திவைப்பு

பாராளுமன்ற அமர்வு நேற்றைய தினம் 35 நிமிடங்களில் ஒத்திவைக்கப்பட்டது.

நேற்றைய தினம் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படவிருந்த நான்கு சட்ட மூலங்கள் பிற்போடப்பட்டதால் 35 நிமிடங்களுக்குள் பாராளுமன்றம் ஒத்தி வைக்கப்பட்டது.

நேற்றுப் பிற்பகல் ஒரு மணிக்குப் பாராளுமன்றம் பிரதி சபாநாயகர் சந்திம வீரக்கொடியின் தலைமையில் கூடியது. ஊழியர் ஓய்வூதிய நன்மைகள் நிதியச் சட்ட மூலம் உட்பட நான்கு சட்ட மூலங்கள் நேற்று சபையில் சமர்ப்பிக்கப்படவிருந்தன. எனினும் ஊழியர் ஓய்வூதிய நன்மைகள் நிதியச் சட்ட மூலத்திற்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டதையடுத்து மேற்படி நான்கு சட்ட மூலங்களும் விவாதத்துக்கு எடுத் துக் கொள்ளப்படாமல் ஒத்திப் போடப்பட்டன. இதன் காரணமாகவே நேற்றைய சபை அமர்வு 1.35 மணியுடன் நிறைவு பெற்றன.
மேலும் இங்கே தொடர்க...

4 எயார் பஸ் விமானங்கள் டிசம்பருக்குள் கொள்வனவு முதல் விமானம் அடுத்த மாதம்




ஸ்ரீலங்கன் மற்றும் மிஹின் லங்கா விமான நிறு வனங்களுக்கு மேலும் நான்கு புதிய எயார் பஸ் விமானங் கள் இவ்வாண்டு முடிவடைவதற்குள் கொள் வனவு செய்யப்படும்.

இதன் மூலம் இவ்விரு விமான நிறுவனங்களுக்கு இருக்கும் விமானங்களின் எண்ணிக்கை 30 ஆக அதிகரிக்கப்படும் என்று சிவில் விமான போக்குவரத்து அமைச்சர் பிரியங்கர ஜெயரத்ன தெரிவித்தார்.

இந்த நான்கு புதிய எயார் பஸ் விமா னங்களில் முதலாவது விமானம் அடுத்த மாதம் இங்கு வந்து சேரும். எஞ்சிய விமானங்கள் இவ்வாண்டு முடிவடைவதற்குள் இலங்கைக்கு வந்து சேரும். சிவில் விமான சேவை போக்குவரத்து அமைச்சில் நடைபெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றிய அமைச்சர் ஆசியாவிலுள்ள விமான நிறுவனங்களில் ஸ்ரீலங்கன் விமான நிறுவனம் முதல் தரத்திற்கு உயர்த்தப்படும் என்று தெரிவித்தார்.

இதே வேளையில் எமது நாட்டின் விமான நிலையங்கள் அனைத்தும் அபிவிருத்தி செய்யப்படும். ஹம்பாந்தோட்டையில் மத்தளயில் இலங்கையின் இரண்டாவது சர்வதேச விமான நிலையம் ஆரம்பிக்கப்படும் என்றும் கூறினார். மத்தள விமான நிலையத்தை நிர்மாணிப்பதற்கு அரசாங்கம் 209 மில்லியன் டொலர்களை செலவிட இருப்பதாகவும் அமைச்சர் கூறினார்.
மேலும் இங்கே தொடர்க...

தருஸ்மன் அறிக்கை சட்டரீதியானதல்ல ஒருதலைப்பட்சம் என சு.க நிராகரிப்பு






சர்ச்சைக்குரிய தருஸ்மன் அறிக்கை சட்ட ரீதியானது அல்ல. ஒரு தலைப்பட்சமாக வெளியிடப்பட்ட ஒரு அறிக்கை. இதனை முழுமையாக நிராகரிப்பதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தலைவர்கள் நேற்று தெரிவித்தனர். அறிக்கை வெளியிடப்பட்டமைக்கு கட்சி என்ற வகையில் தமது கண்டனத்தையும், அதிருப்தியையும் தெரிவித்துக்கொள்வதாகவும் தலைவர்கள் தெரிவித்தனர்.

இவ்வாறான ஒரு அறிக்கையை வெளியிடவோ, தயாரிப்பதற்கோ, சட்ட ரீதியான, சாசன ரீதியான, ஒழுக்க ரீதியான உரிமை கிடையாது என்றே ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தெரிவிக்கிறது என கட்சியின் சிரேஷ்ட தலைவர்களான அமைச்சர்களான நிமால் சிறிபால டி சில்வா, சுசில் பிரேம ஜயந்த, சரத் அமுனுகம, டலஸ் அழகப்பெரும ஆகியோர் நேற்று தெரிவித்தனர்.

சர்ச்சைக்குரிய தருஸ்மன் அறிக்கை பற்றி ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நிலைப்பாடு தொடர்பாக தெரிவிக்கும் நோக்குடன் மகாவலி கேந்திர நிலையத்தில் நடத்தப்பட்ட விசேட செய்தியாளர் மாநாட்டின்போதே அவர்கள் இதனைத் தெரிவித்தனர்.இது ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகத்திற்கு ஆலோசனை வழங்குவதற்காக நியமிக்கப்பட்ட ஒரு ஆலோசனைக் குழு மட்டுமே.

இந்த குழு நியமிக்கப்படும் போதே அதனை இலங்கை அரசு எதிர்த்தது. இவ்வாறான ஒரு குழு நியமிப்பதற்கான அவசியம் இல்லை என்பதை ஆரம்பம் முதலே எமது அரசு வலியுறுத்தி வந்தது. இதுவே எமது அரசினதும் கட்சியினதும் நிலைப்பாடாகும்.

ஐ.நா. செயலாளர் நாயகத்திற்கு ஆலோசனை வழங்குவதற்காகவே குழு நியமிக்கப்படுகிறதே தவிர இலங்கையில் நடைபெற்றதாகக் கூறப்படும் சம்பவங்கள் தொடர்பாக விசாரணைகள் நடத்துவதற்கல்ல என்பதையும் ஐ.நாடுகள் செயலாளர் நாயகமும் தெரிவித்திருந்தார்.

எனவே இந்த குழுவின் அறிக்கையை வெளியிடவோ அல்லது வேறு எந்த விதமான நடவடிக்கைகளுக்காகவும் பயன்படுத்தவோ அவர்களுக்கு சட்ட ரீதியான, சாசன ரீதியான, ஒழுக்க ரீதியான உரிமை கிடையாது. அவர்கள் ஐ.நா. செயலாளருக்கு ஆலோசனை வழங்குவதற்காக மட்டும் இதனை பயன்படுத்த வேண்டும்.

ஐ.நா. சபையின், ஐ.நாவின் பாதுகாப்பு சபையின் அல்லது, வேறு அமைப்பின் அனுமதி பெறப்படாமலேயே இந்தக் குழு நியமிக்கப்பட்டுள்ளது. எனவே ஒருதலைப்பட்சமாக ஐ.நா. செயலாளரினால் எடுத்த முடிவுக்கமைய அமைக்கப்பட்ட குழு அத்துடன் ஒருதலைப்பட்சமாக நடத்தப்பட்ட விசாரணைகளின் அறிக்கையே இது என ஸ்ரீல. சுதந்திர கட்சியின் சிரேஷ்ட உபதலைவர் அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உப தலைவர் அமைச்சர் கலாநிதி சரத் அமுனுகம

இலங்கையில் நடைபெற்றதாக கூறப்படும் சம்பவங்கள் தொடர்பாக விசாரணைகள் நடத்துவதற்கு நல்லிணக்க ஆணைக்குழு நியமிக்கப்பட்டுள்ளது. இந்தக் குழு மிகவும், சுதந்திரமாக வடக்கு, கிழக்கு உட்பட நாடு முழுவதும் சென்று விசாரணை நடத்துகிறது. இந்த விசாரணைகள் அனைத்தும் வெளிப்படைத் தன்மையாக நடத்தப்படுகிறது.

இவ்வாறான விசாரணைகளின் அறிக்கை வெளியிடப்படும் வரை அறிக்கையை வெளியிடவேண்டாம் என இந்த நாட்டிலுள்ள புத்தி ஜீவிகள், அமைப்புகள் பல வேண்டுகோள் விடுத்திருந்தன. எனினும் இவற்றை பொருட்படுத்தாமல் தருஸ்மன் அறிக்கை வெளியிடப்பட்டது.

இதனை ஐ.நா. நிபுணர் குழு என ஊடகங்கள் தப்பான அர்த்தத்துடன் அழைக்கிறது. இது ஒன்றும் நிபுணர் குழு அல்ல. ஐ.நா. செயலாளருக்கு ஆலோசனை வழங்க நியமிக்கப்பட்ட ஆலோசனைக் குழு மட்டுமே.

பொதுசன ஐக்கிய முன்னணியின் பொதுச் செயலாளர் அமைச்சர் சுசில் பிரேம ஜயந்த எம்.பி.

ஐக்கிய நாடுகள் சபையின் சாசனத்தின் பிரகாரம் உலக நாடுகள் மத்தியில் சமாதானத்தையும் ஐக்கியத்தையும் ஏற்படுத்துவதே பிரதான நோக்கம்.

எனினும் அறிக்கை வெளியிட்டதன் மூலம் ஐக்கியப்படுத்துவதற்கு பதிலாக பிளவை ஏற்படுத்துவதுடன் பிளவை மேலும் மேலும் அதிகரிப்பதாக அமையும்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் தலைமையிலான எமது அரசு புலிகள் இயக்கத்தை முற்றாக ஒழித்துள்ளது. இன்னும் உலக நாடுகள் சில புலிகள் இயக்கத்தை தடைசெய்துள்ளது. புலிகள் இயக்கம் ராஜீவ் காந்தியை படுகொலை செய்தார்கள். நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு பிரபாகரன் தான் குற்றவாளி என்பதையும் நிரூபித்தார்கள்.

இந்தியாவின் இந்த நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு எதிராக எவரேனும் சவால் விடுத்தார்களா? இல்லை. உலகில் எந்த ஒரு நாடும், எந்த ஒரு அமைப்பும் இது தவறு எனக் கூறவில்லை.

இவ்வாறான ஒரு புலிகள் அமைப்பை பரிசுத்தமானவர்கள் என காண்பிக்கப் பார்க்கிறார்கள்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொருளாளர் அமைச்சர் டலஸ் அழகப் பெரும எம்.பி

ஐக்கிய நாடுகள் சபைக்கும் இலங்கைக்கும் இடையே முரண்பாடு என்றும், ஐ.நா. செயலாளருக்கும் இலங்கைக்கும் இடையே முரண்பாடு என்றும் ஐ.நா. வுக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களுக்கும் இடையே தனிப்பட்ட முரண்பாடு ஏற்பட்டுள்ளது என்றும் சிலர் வெளிக்காட்ட முனைகிறார்கள் என்பது எமக்கு நன்றாக தெரிகிறது.

எனினும் ஐ.நாவுக்கும் இலங்கைக்கும் ஐ.நா. செயலாளருக்கும் ஜனாதிபதி அவர்களுக்கும் இடையில் எந்தவொரு தனிப்பட்ட முரண்பாடுகளும் கிடையாது என்பதை பொறுப்புடன் கூற விரும்புகிறேன். இவ்வாறான ஒரு சந்தர்ப்பத்திலும் ஐ.நாவின் உறுப்புரிமை பெற்றுள்ளமையின் ஊடாக அதன் கெளரவத்தை பேணுவோம். உறுப்புரிமை பெற்றுள்ளதை கெளரவமாகவும் கருதுகிறோம்.

ஐ.நா செயலாளர் நாயகத்திற்கு ஆலோசனை வழங்கவென நியமிக்கப்பட்ட குழு உறுப்பினர் சிலரது தனிப்பட்ட கருத்துக்களை அமைப்பின் கருத்துக்களாக அர்த்தப்படுத்துவதற்கு எடுக்கப்பட்ட ஒரு முயற்சியே இது என்றும் டலஸ் அழகப்பெரும குறிப்பிட்டார்.
மேலும் இங்கே தொடர்க...

வடக்கு சிவில் நிர்வாகத்தில் இராணுவ தலையீடு இல்லை

நாட்டின் வடபகுதியில் சிவில் நிர்வாகம் செயலிழந்து அங்கு இராணுவ ஆட்சியே நடைபெறுகிறதென்று ஜே.வி.பியின் பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்த கருத்துக்கு வட இலங்கையில் உள்ள அரச ஊழியர்களும், பொதுமக்களும் தங்கள் வன்மையான எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.

யாழ் மாவட்டத்தில் அரசாங்க நிர்வாகத்தின் தலைமை அதிகாரியான யாழ் அரசாங்க அதிபர் திருமதி இமெல்டா சுகுமாருடன் தினகரன் நிருபர் தொடர்பு கொண்டு பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத்தின் இந்தக் கூற்றில் உண்மை இருக்கிறதா? என்று வினவிய போது, இது அப்பட்டமான தவறான கருத்து என்றும், வேண்டுமென்றே அரசாங்கத்தின் மீது குற்றம் சுமத்தும் எண்ணத்துடன், விஜித ஹேரத் நடந்து கொள்வது நல்லதல்ல என்று சொன்னார்.

இராணுவத்தினரும், பொலிஸாரும் சிவில் நிர்வாகத்தில் தலையிட்டு வருகிறார்களா? என்று நாம் கேட்ட கேள்விக்கு தொடர்ந்தும் பதிலளித்த யாழ் அரசாங்க அதிபர், இராணுவத்தினரும், பொலிஸாரும் சிவில் நிர்வாகத்தை சீரான முறையில் நடத்துவதற்கு தனக்கும் தனது அதிகாரிகளுக்கும் பூரண ஒத்துழைப்பை நல்குகிறார்கள் என்று தெரிவித்தார்.

இராணுவத்தினர் தன்னுடன் ஒன்றிணைந்து யாழ் மாவட்டத்தின் சகல அரச பணிகளுக்கும் உதவியையும், ஒத்துழைப்பையும் மனமுவந்து தருகிறார்கள். இராணுவத்தினர் எந்நேரமும் தங்களுக்கு உதவி செய்ய தயாராக இருக்கிறார்கள் என்று பாராட்டுத் தெரிவித்தார்.

யாழ் மாவட்டத்தில் அதி உயர் பாதுகாப்பு வலயத்தில் புதைக்கப்பட்டிருந்த தரைக்கண்ணி வெடிகளை அகற்றுவதற்கு இராணுவத்தின் பொறியியல் பிரிவு செய்த உதவியை தம்மால் மறக்க முடியாது என்றும், அதனால் தனது நிர்வாகத்திற்கு அங்கு 17,000 குடிபெயர்ந்த மக்களை மீள் குடியேற்றும் சாதனையை வெற்றிகரமாக நிறைவேற்ற முடிந்தது என்றும் கூறினார்.

இவ்விதம், எவ்வித பிரச்சினையுமின்றி அமைதியான முறையில் இந்த மக்களை உயர் பாதுகாப்பு வலயத்தில் மீள்குடியேற்றிமை குறித்து தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா மற்றும் சுரேஸ் பிரேமச்சந்திரன் ஆகியோர் தன்னை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்ததாகவும் திருமதி இமெல்டா சுகுமார் கூறினார்.

யாழ் மாவட்டத்தில் உயர்பாதுகாப்பு வலயத்தில் தொடர்ந்தும் மக்களை பாதுகாப்பான முறையில் மீள் குடியமர்த்த வேண்டுமென்று இவ்விரு தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் விடுத்த வேண்டுகோளை இராணுவத்தினர் மற்றும் பொலிஸாரின் பூரண ஒத்துழைப்புடன் தற்போது ஒழுங்குகளை செய்து வருவதாகவும் கூறினார்.

யாழ் மாவட்டத்தில் இன்று வன்முறைகள், கொலை, குடும்பத்தகராறுகள் போன்ற பிரச்சினைகள் அதிகரித்து வருவதாக சில ஊடகங்கள் வெளியிடும் கருத்துக்கள் யதார்த்த பூர்வமானவையல்ல. இது யாழ்ப்பாண மாவட்டத்திற்கு மாத்திரம் உரித்தான ஒரு பிரச்சினையல்ல என்றும், இது நாட்டின் நாலா பக்கங்களிலும் இருந்து வரும் சமூகப் பிரச்சினை என்றும் தெரிவித்தார்.

இத்தகைய குடும்பத் தகராறுகளை நல்ல ஆலோசனைகளின் மூலம் இல்லாமல் செய்வதற்கு சிவில் நிர்வாகம், இராணுவ மற்றும் பொலிஸ் உத்தியோகத்தரின் உதவியுடன் அறிவுறுத்தல் பயிற்சி பாசறைகளை நடத்துவதுடன் விளையாட்டு விழாக்கள், கலைநிகழ்ச்சிகள், மத நிகழ்ச்சிகள் போன்றவற்றையும் ஒழுங்கு செய்து வருவதாகவும் கூறினார்.

வெளிநாடுகளில் சொகுசான வாழ்க்கையை மேற்கொண்டுவரும் புலம்பெயர்ந்த தமிழர்கள், தொடர்ந்தும் அந்நாடுகளில் அகதி அந்தஸ்துடன் செல்வாக்குடன் வாழ வேண்டுமென்ற சுயநல நோக்கத்துடன் டயஸ்போரா என்று அழைக்கப்படும் இந்த புலம்பெயர்ந்த இலங்கைத் தமிழர்கள், இலங்கையில் தமிழர்கள் கொடுமைப்படுத்தப்படுகிறார்கள் என்ற போலிப் பிரசாரத்தை இனிமேலாவது நிறுத்திவிட்டு வடபகுதியில் உள்ள தமிழ் மக்களின் நல்வாழ்விற்கு அவர்கள் பொருளாதார ரீதியில் உதவி செய்ய முன்வர வேண்டும் என்றும் யாழ் அரசாங்க அதிபர் மேலும் தெரிவித்தார்.

சமீபத்தில் ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி திட்டப்பிரிவு வடபகுதியில் மேற்கொண்ட தரைக்கண்ணி வெடிகளை அகற்றும் நிகழ்வின் ஆரம்ப நாள் வைபவத்தில் தன்னால் தவிர்க்க முடியாத காரணங்களினால் கலந்து கொள்ள முடியவில்லை என்றும் அதற்கு அவுஸ்திரேலியாவில் உள்ள புலம்பெயர்ந்த தமிழர்கள் தன்னை நியாயமற்ற முறையில் குற்றம் சுமத்தி கண்டித்திருப்பதாக அவர் தெரிவித்தார்.

தாம் பல வருடங்கள் முல்லைத்தீவின் அரசாங்க அதிபராக இருந்த காரணத்தினால் அங்குள்ள இராஜ கோபுர திறப்பு விழாவில் கலந்து கொள்ளுமாறு தமக்கு அவ் ஆலயத்தின் அரங்காவலர்கள் விடுத்த ‘8!ரிக்கையை ஏற்றுக்கொண்டு சென்றமையால்தான் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள முடியவில்லையென அவர் தெரிவித்தார்.

யாழ் மாவட்டத்தின் அரச ஊழியர்களும், இராணுவத்தினரும் பொலிஸாரும் ஒரே அணியாக இணைந்து ஒருவருக்கொருவர் பரஸ்பரம் உதவிகளை நல்கி, அப்பகுதி மக்களின் மீள்குடியேற்றம், விவசாய அபிவிருத்தி உட்பட பலதரப்பட்ட அபிவிருத்தித் திட்டங்களுக்கு சிறந்த சேவைகளை செய்து வருவதாகவும், இராணுவத்தினர் சிவில் நிர்வாகத்தில் அநாவசியமாக தலையிடுகிறார்கள் என்ற குற்றச்சாட்டில் எவ்வித உண்மையுமில்லை என்று யாழ் அரசாங்க அதிபர் தெரிவித்தார்.

வடபகுதியில் தற்போது பூரண சமாதானம் நிலவியுள்ளமையால் அங்குள்ள ஹோட்டல்கள் மற்றும் வர்த்தக நிறுவனங்கள் சிறப்பான முறையில் தமது நடவடிக்கை களை மேற்கொண்டு வருகின்றன.

அத்துடன், உல்லாச பிரயாணிகளின் வருகையும் நாளாந்தம் அதிகரித்து வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
மேலும் இங்கே தொடர்க...

ஐ.நா. அறிக்கைக்கு எதிராக மட்டு.மாநகர சபையில் கண்டனத்தீர்மானம்



ஐ.நா. நிபுணர்குழு அறிக்கைக்கு எதிராக மட்டக்களப்பு மாநகர சபை கண்டனத் தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளது.

இன்று காலை மாநகர மேயர் திருமதி சிவகீதா பிரபாகரன் தலைமையில் கூடிய மாநகர சபை உறுப்பினர்கள் கண்டனத்தீர்மானத்தை நிறைவேற்றினர்.

ஸ்ரீலங்காசுதந்திரக் கட்சி மற்றும் புளொட், ஈ.பி.ஆர்.எல்.எப் உறுப்பினர்கள் இவ்வமர்வில் கலந்து கொண்டனர்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், ஈரோஸ், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சிகளின் உறுப்பினர்கள் சபையில் சமுகமளித்திருக்கவில்லை. இதேவேளை கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் தலைமையிலான தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் உறுப்பினரும் பிரதி மேயருமான ஜோர்ஜ் பிள்ளையும் இவமர்விற்கு சமுகமளித்திருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் இங்கே தொடர்க...

27 ஏப்ரல், 2011

ஐ.நா. அறிக்கை தொடர்பாக இலங்கையுடன் விரைவில் பேச்சு:





ஐ.நா. அறிக்கை தொடர்பாக இலங்கையுடன் விரைவில் பேச்சு: இந்திய தெரிவிப்பு
ஐ.நா. அறிக்கை விரைவில் அறிக்கையை கவனமாக ஆராய்ந்து வருவதாகவும் விரைவில் பேசவுள்ளதாகவும் இந்திய வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்த அறிக்கையை கவனமாகப் ஆராய வேண்டிய தேவையுள்ளது என்றும் இந்த விவகாரம் தொடர்பாக இலங்கை அரசாங்கத்துடன் விரைவில் இந்தியா தொடர்பு கொண்டு பேசும் என்றும் இந்திய வெளிவிவகார அமைச்சு பேச்சாளர் கூறியுள்ளார்.
மேலும் இங்கே தொடர்க...

ஐ.நா அறிக்கைக்கு கனேடிய லிபரல் கட்சி ஆதரவு

ஐ.நா. அறிக்கைக்கு ஆதரவளிக்கப்போவதாக கனேடிய லிபரல் கட்சித் தலைவர் மைக்கல் இக்னேட்டிவ் தெரிவித்துள்ளார்.

தேர்தல் பிரசாரத்தின் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் இலங்கையில் உண்மையான சமாதானத்தையும் நீதியையும் காண வேண்டுமாயின் ஐ.நா. நிபுணர்குழுவினால் தெரிவிக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் முறையாக விசாரிக்கப்பட வேண்டும் என்றார்.
மேலும் இங்கே தொடர்க...

இலங்கை மீது பொருளாதாரத் தடை விதிக்கவேண்டும்: ஜெயலலிதா வலியுறுத்தல்

இலங்கை மீது பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும் என்று அ.தி.மு.க. பொதுச்செயலர் ஜெயலலிதா வலியுறுத்தியுள்ளார் என்று இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், இலங்கையிலுள்ள மக்கள் அனைவரும் சமமாக நடத்தப்பட வேண்டும் என்பதை உறுதி செய்ய அந்நாட்டு அரசை வலியுறுத்தும் வகையில் இந்தியா முன்னின்று நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தேவைப்பட்டால் எதற்கும் அடிபணியாத இலங்கை அரசின் மீது பொருளாதாரத் தடைகளை ஏற்படுத்த வேண்டும் என்றும் தனது அறிக்கையில் வலியுறுத்தியுள்ளார்.
மேலும் இங்கே தொடர்க...

போர்க் குற்றங்கள் தொடர்பில் மேலும் விசாரணைகள் அவசியம்: நவநீதம்பிள்ளை வலியுறுத்து

இலங்கையில் இறுதிக்கட்ட யுத்தத்தின்போது இடம்பெற்றதாகக் கூறப்படும் குற்றங்கள் தொடர்பில் மேலும் விசாரணைகள் அவசியமென ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகளுக்கான ஆணையாளர் நவனீதம் பிள்ளை வலியுறுத்தியுள்ளார்.

இறுதிக்கட்ட யுத்தத்தின் போது அரச மற்றும் விடுதலைப் புலிகளினால் யுத்தக் குற்றங்கள் இழைக்கப்பட்டுள்ளதாக ஐ.நாவினால் நியமிக்கப்பட்ட 3 பேரைக்கொண்ட குழுவினால் சமர்ப்பிக்கப்பட்ட ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதால் இது தொடர்பில் விசாரணை அவசியமென அவர் தெரிவித்துள்ளார்.

இந்த அறிக்கையானது சர்வதேச சமூகத்தினை மிகவும் பாதித்திருப்பதாகவும் பாரபட்சமற்ற விசாரணையொன்று அவசியமெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் இங்கே தொடர்க...

புதிய 20 தூதுவர்கள் மற்றும் ஓர் உயர்ஸ்தானிகர் ஜனாதிபதியிடம் நியமனக் கடிதங்களை சமர்ப்பித்தனர்

புதிய 20 தூதுவர்கள் மற்றும் ஓர் உயர்ஸ்தானிகர் ஆகியோர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ்விடம் தமது நியமனக் கடிதங்களை சமர்ப்பித்தனர்.

ஜனாதிபதி செயலகத்தில் இவர்கள் தமது நியமனக் கடிதங்களைக் கையளித்ததாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இதற்கமைய இத்தாலி, கொரியா, வியட்நாம், பிலிப்பைன்ஸ், பெல்ஜியம் ஆகிய நாடுகளின் 5 தூதுவர்களும் தென்னாபிரிக்காவின் உயர்ஸ்தானிகரும் தமது நியமனக் கடிதங்களை கையளித்துள்ளனர்
மேலும் இங்கே தொடர்க...

திருகோணமலை சிறையில் இருந்து நால்வர் தப்பியோட்டம்


திருகோணமலை சிறையிலிருந்து நான்கு பேர் தப்பிச் சென்றுள்ளதாக அறிவிக்கப்படுகிறது.

வர்த்தகர் ஒருவரிடமிருந்து கப்பம் பெற்றவர்கள் எனக் குற்றம் சுமத்தப்பட்ட நால்வரே இவ்வாறு தப்பிச் சென்றுள்ளதாகக் கூறப்படுகிறது.
மேலும் இங்கே தொடர்க...

போதைப் பொருள் கடத்த முயன்ற நபர் ஒருவர் கைது

இந்தியாவிலிருந்து இலங்கைக்கு 15 கிலோகிராம் கஞ்சாவை கடத்த முயன்ற நபர் ஒருவரை பேசாலைக் கடற்; பரப்பில் வைத்து கடற்படையினர் கைது செய்துள்ளனர்.

பேசாலையைச் சேர்ந்த இவர் கடற்படையிடமிருந்து கடலில் மீன் பிடிப்பதற்கான அனுமதியைப் பெற்ற போதும்; கஞ்சா கடத்தலில் ஈடுபட்டுள்ளமை தெரியவந்துள்ளது.
மேலும் இங்கே தொடர்க...

ஐ.நா. அறிக்கையை வரவேற்கும் அமெரிக்கா

ஐ.நா. நிபுணர் குழுவின் அறிக்கையை அமெரிக்கா வரவேற்பதாக ஐ.நாவுக்கான அமெரிக்கத் தூதுவர் சுசான் ரைஸ் தெரிவித்துள்ளார்.

இலங்கை மீதான பதிலளிக்கும் கடப்பாடு குறித்து நிபுணர் குழுவின் அறிக்கை வலியுறுத்தியுள்ளதாகவும் போர்க் குற்ற விசாரணைகளையும் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டவர்களை சட்டத்தின் முன் நிறுத்தவும் இவ்வறிக்கை உதவும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் இங்கே தொடர்க...

உறுப்பு நாடுகள் இணக்கம் தெரிவித்தால் மாத்திரமே சுயாதீன சர்வதேச விசாரணை: பான் கீ மூன்

2009 மே மாதம் இறுதிக்கட்ட யுத்தத்தின் போது இடம் பெற்றதாகக் கூறப்படும் போர் குற்றங்கள் தொடர்பில் ஐ.நா. உறுப்பு நாடுகள் இணக்கம் தெரிவித்தால் மாத்திரமே சுயாதீனமான சர்வதேச விசாரணைக்கு தன்னால் உத்தரவிட முடியும் என ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ மூன் தெரிவித்துள்ளார்.

இலங்கை தொடர்பான நிபுணர்கள் குழுவின் அறிக்கையை வெளியிட்ட பின்னர் ஐ.நா. விடுத்துள்ள அறிக்கை ஒன்றில் சர்வதேச விசாரணைகள் இடம் பெற இலங்கையின் ஒப்புதல் வேண்டும்.

அல்லது ஓர் பொருத்தமான சர்வதேச அரங்கத்தில் உறுப்பு நாடுகள் இதற்கான தீர்மானத்தை மேற்கொள்ள வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இருந்த போதிலும் பொருத்தமான சர்வதேச அரங்கம் என்று கருதப்படுவது யாது? என்பது தொடர்பில் பான் கீ மூனின் அறிக்கையில் எதுவும் பிரஸ்தாபிக்கப்படவில்லை. இது ஐ.நா. பாதுகாப்புச்சபை, பொதுச்சபை, அல்லது மனித உரிமைகள் அமைப்பாக இருக்க முடியும்.

விடுதலைப் புலிகளுக்கு எதிரான இறுதிக்கட்ட போரில் பல்லாயிரக்கணக்கான உயிர்கள் பலியாகியிருக்கலாம். இதுவே யுத்தக் குற்றத்துக்கும் காரணமாகியிருக்கலாம். எனவே இலங்கை அரசாங்கமும், தமிழீழ விடுதலைப் புலிகளும் போர் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் விசாரணைக்குட்படுத்தப்பட வேண்டும் என ஐ.நா. நிபுணர்கள் குழு தனது அறிக்கையில் பரிந்துரைத்துள்ளது.

மேலும் யுத்தத்தின் இறுதிக்கட்டத்தின் போது ஐக்கிய நாடுகளின் நடவடிக்கை குறித்து ஓர் விசாரணை நடத்தப்படுமென ஐ.நா. செயலாளர் நாயகம் கூறியுள்ளார். இவ்வாறான விசாரணை ஒன்றை நடத்த வேண்டுமென பான் கீ மூன் நியமித்த குழு சிபார்சு செய்துள்ளமை தொடர்பிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார். இருதரப்பினரும் சர்வதேச மனித நேயம் மற்றும் மனித உரிமைச் சட்டங்களை மீறியமைக்கான குற்றஞ்சாட்டுமளவுக்கு ஆதாரமான சான்றுகள் கண்டறியப்பட்டுள்ளதாக மூவரடங்கிய நிபுணர்கள் குழுவின் 200 பக்க அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் ஐக்கிய நாடுகள் சபையின் அரசியல் இணை நிறுவனங்கள் என்பனவும் பொதுமக்களைப் பாதுகாக்கத் தவறிவிட்டன என்றும் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

சர்வதேச மனித உரிமைகள் சட்டம், சர்வதேச மனிதாபிமானச் சட்டம் என்பவை பாரிய அளவில் இருதரப்பினாலும் மீறப்பட்டமைக்கு ஆதாரங்கள் உள்ளதாக கூறும் ஐ.நா. அறிக்கை அவற்றுள் சில யுத்தக் குற்றங்கள், ஏனையவை மனிதாபிமானத்துக்கு எதிரான குற்றச் செயல்கள் என்றும் சுட்டிக்காட்டியுள்ளது. இலங்கையில் இறுதிக்கட்ட யுத்தத்தின்போது இடம்பெற்றதாக கூறப்படும் யுத்தக் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் முழுமையாக பொறுப்புக்கூறுதல் மற்றும் நீதியை நிலைநாட்டுதல் தொடர்பில் ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ மூனினால் நியமிக்கப்பட்ட மூவரடங்கிய குழு அரசாங்கமும் விடுதலை புலிகளும் மேற்கொண்ட போர்க் குற்றங்கள் தொடர்பில் நீதியான விசாரணை ஒன்று மேற்கொள்ளப்படவேண்டும் என முன்வைத்த அறிக்கை நேற்று முன்தினம் ஐக்கிய நாடுகள் சபையினால் பகிரங்கப்படுத்தப்பட்டுள்ளது.

கடந்த 12 ஆம் திகதி ஐ.நா. செயலாளர் நாயகத்திடம் சமர்ப்பிக்கப்பட்ட இந்த அறிக்கையை பொது மக்களின் ஆர்வம் மற்றும் வெளிப்படைத்தன்மையை கருத்திற்கொண்டு பகிரங்கப்படுத்துவதற்கான தீர்மானம் எடுக்கப்பட்டதாக பான் கீ மூனின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

முழுமையான பொறுப்புக்கூறுதல் மற்றும் நீதியை நிலைநாட்டுதல் மூலம் இலங்கை அரசும் மக்களும் தேசிய நல்லிணக்க மற்றும் அமைதியை ஏற்படுத்த முடியும் என்று பான் கீ மூன் நம்புவதாக அவரது பேச்சாளர் மேலும் குறிப்பிட்டுள்ளார். அரசாங்கத்தினாலும் தமிழீழ விடுதலை புலிகளினாலும் மீறப்பட்டதாக கூறப்படும் சர்வதேச மனிதாபிமானம் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பான குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் நிபுணர்கள் குழு முன்வைத்த தீர்மானங்களையும் விதந்துரைகளையும் ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ மூன் மிகவும் கவனமாக ஆய்வு செய்தார். அதில் சில நம்பகத்தன்மையுடைய யுத்தக் குற்றச்சாட்டுக்களும் மனிதாபிமானத்துக்கு எதிரான குற்றச் செயல்களும் அடங்கியுள்ளன.

யுத்தத்தின் இறுதிக் கட்டத்தில் பரந்தளவிலான ஷெல் தாக்குதல்கள் காரணமாக பொது மக்கள் படுகொலைகள் செய்யப்பட்டமை, மனிதாபிமான உதவிகளை மறுத்தமை உட்பட நம்பகத்தன்மையுடன் கூடிய ஐந்து வகையான மீறல்களை இலங்கை அரசாங்கம் மேற்கொண்டதாக நிபுணர்கள் குழு கண்டறிந்துள்ளது. அதேபோன்று பொது மக்களை மனித கேடயமாக பயன்படுத்தியமை, புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்தும் வெளியேற முயன்ற சிவிலியன்களை படுகொலை செய்தமை உ ட்பட ஆறு வகையான மீறல்களை புலிகள் மேற்கொண்டதாகவும் நிபுணர்கள் குழு குற்றஞ்சாட்டியுள்ளது. மீறல்கள் தொடர்பான குற்றச்சாட்டுக்களுக்கு பொறுப்புக்கூறும் தன்மை இலங்கை அரசாங்கத்துக்கு முதலில் உள்ளதாக நிபுணர் குழுவின் விதந்துரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

யுத்தம் முடிவுக்கு வந்தததைத் தொடர்ந்து தெற்காசிய நாடுகளுக்கான விஜயத்தை பான் கீ மூன் மேற்கொண்டதைத் தொடர்ந்து இந்த மூவரடங்கிய நிபுணர்கள் குழு அமைக்கப்பட்டது.

இந்த மூவரடங்கிய நிபுணர் குழுவில் இந்தோனேஷியாவை சேர்ந்த மர்சுகி தருஷ்மன், தென்னாபிரிக்காவை சேர்ந்த யஸ்மின் சூக்கா மற்றும் அமெரிக்காவை சேர்ந்த ஸ்டீவன் ரட்னர் ஆகியோர் அடங்கியுள்ளனர். அவர்கள் தங்கள் பணியை கடந்த வருடம் செப்டெம்பர் மாதம் ஆரம்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
மேலும் இங்கே தொடர்க...

அறிக்கையை நாம் நிராகரிப்பதனால் உள்ளடக்கம் குறித்து அக்கறையில்லை
ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகத்தின் நிபுணர் குழு இலங்கை தொடர்பில் அறிக்கை வெளியிட்டுள்ளமையை உலகில் தோன்றியுள்ள புதுவிதமான நவீன அரசியல் காலனித்துவ முயற்சி என்று கூறலாம்.

இவ்வாறு ஒரு அறிக்கையை வெளியிடுவதற்கு ஐ.நா. வின் யாப்பு சட்டம் மற்றும் பண்பியல் ரீதியாக எவ்விதமான உரி மையும் இல்லை என்று ஸ்ரீலங்கக்ஷி சுதந்திரக் கட்சியின் பொருளாளரும் அமைச்சருமான டலஸ் அழகப்பெரும தெரிவித்தார்.

இந்த அறிக்கையை நாங்கள் முழுமையாக நிராகரிப்பதனால் அதன் உள்ளடக்கம் குறித்து பேசவிரும்பவில்லை. எனினும் ஐ.நா. நிபுணர் குழு முன்வைத்துள்ள குற்றச்சாட்டுக்களில் ஒன்றையாவது நிரூபிக்கட்டும் பார்க்கலாம் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார். ஐ.நா. நிபுணர் குழுவின் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளமை தொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே அமைச்சர் அழகப்பெரும மேற்கண்ட விடயங்களை கூறினார்.

அவர் இவ்விடயம் குறித்து மேலும் கூறியதாவது: ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் நியமித்த நிபுணர் குழுவுக்கு இவ்வாறு அறிக்கை ஒன்றை வெளியிடுவதற்கு எவ்விதமான உரிமையும் இல்லை என்று நாங்கள் ஆரம்பத்திலிருந்து கூறிவருகின்றோம்.

அதாவது இவ்வாறு ஒரு அறிக்கையை வெளியிடுவதற்கு ஐ.நா. வின் யாப்பு சட்டம் மற்றும் பண்பியல் ரீதியாக எவ்விதமான உரிமையும் இல்லை. எனவே அந்த அறிக்கையை நாங்கள் நிராகரிப்பதனால் அதன் உள்ளடக்கங்கள் குறித்து பேசிக்கொண்டிருக்க விரும்பவில்லை.

ஆனால் ஐ.நா. நிபுணர் குழு முன்வைத்துள்ள குற்றச்சாட்டுக்களில் ஒன்றையாவது நிரூபிக்கட்டும் பார்க்கலாம். ஆதாரமற்ற வகையில் விடயங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.

அதாவது இதனை உலகில் தோன்றியுள்ள புதுவிதமான நவீன அரசியல் காலணித்துவம் என்று கூற முடியும். நாங்கள் யுத்தம் முடிவடைந்ததன் பின்னர் நாட்டின் பொருளாதார அபிவிருத்தி குறித்து வேலைத்திட்டங்களை முன்னெடுப்பதுடன் தமிழ்த் தேசிய கூட்டமைப்புடன் பேச்சுவார்த்தையை நடத்திவருகின்றோம்.

நாங்கள் ஒற்றுமையாக வாழ்வதற்கு தேவையான வேலைத்திட்டங்களை மேற்கொண்டிருக்கின்ற நிலையில் ஐக்கிய நாடுகள் சபை நாட்டில் பிரிவினையை ஏற்படுத்த முயற்சிக்கின்றது.

30 வருடகால யுத்தத்தின் பின்னர் நாட்டில் மக்கள் அமைதியாக வாழ்கின்றனர். முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி மாவட்ட மக்களுக்கு தற்போதுதான் சுதந்திரமாக வாக்களிப்பதற்கு சந்தர்ப்பம் கிடைத்துள்ளது.
மேலும் இங்கே தொடர்க...

ரஷ்யா மற்றும் சீனா கொடுத்த அழுத்தமே பான் கீ மூனின் பின்வாங்கலுக்கு காரணம்

ஐக்கிய நாடுகள் சபையின் சட்டதிட்டங்களுக்கு அப்பாற்பட்டு செயலாளர் நாயகத்தின் நிபுணர் குழு தயாரித்துள்ள அறிக்கையை நாங்கள் முழுமையாக எதிர்க்கின்றோம். இது தொடர்பில் உள்நாட்டு மற்றும் சர்வதேச ரீதியில் தெளிவுபடுத்தல்களை மேற்கொள்ளவுள்ளோம். உள்நாட்டில் மக்களை தெளிவுபடுத்தும் நோக்கில் நாடளாவிய ரீதியில் கருத்தரங்குகளை நடத்த ஏற்பாடுகளை செய்துள்ளோம் என்று சுதந்திர பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

மேலும் இந்த விடயம் குறித்து ரஷ்யாவும் சீனாவும் கொடுத்த அழுத்தம் காரணமாகவே ஐ.நா. செயலாளர் நாயகம் தனது நிலைப்பாட்டில் பின்வாங்கியுள்ளார். அதாவது ஆரம்பத்தில் கடும் தொனியில் செயற்பட்ட பான் கீ மூன் தற்போது உறுப்பு நாடுகள் இணக்கம் வெளியிட்டால் மட்டுமே சர்வதேச விசாரணை ஒன்றுக்கு செல்ல முடியும் என்று கூறியுள்ளார் எனவும் சங்கம் குறிப்பிட்டது.

அந்த வகையில் ஐ.நா. வின் செயற்பாட்டினால் இலங்கையில் ஏதாவது குழப்பங்கள் ஏற்படின் அல்லது சமாதான நிலைமையில் விரிசல் ஏற்படின் அதற்கான முழுப் பொறுப்பையும் ஐ.நா. செயலாளரே ஏற்கவேண்டும் என்றும் விரிவுரையாளர் சங்கம் கூறுகிறது.

கொழும்பு மகாவலி கேந்திர நிலையத்தில் நேற்று நடைபெற்ற விசேட செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட இந்த சங்கத்தின் பிரதிநிதிகள் மேற்கண்ட விடயங்களை குறிப்பிட்டனர்.

சுதந்திர பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சங்கத்தின் தலைவரும் பேராதனை பல்கலைக்கழகத்தின் விரிவுரையாளருமான கலாநிதி விஜித்த நாணயக்கார கருத்து வெளியிடுகையில் :

இந்த நெருக்கடியான சூழலில் நாட்டில் அனைவரும் இன மத கட்சி பேதமின்றி ஒற்றுமையுடன் செயற்படவேண்டும். ஜனநாயக ரீதியில் தெரிவு செய்யப்பட்ட அரசாங்கம் ஒன்றுக்கு எதிராக ஐக்கிய நாடுகள் சபை செயற்படுவதை ஏற்க முடியாது. 26 வருடகால பயங்கரவாதத்தையே அரசாங்கம் தோற்கடித்தது. அந்த வகையில் தற்போது பொருளாதார அபிவிருத்தியை நோக்கி பயணிக்கும் எமது நாட்டுக்கு அச்சுறுத்தல் விடுக்கும் வகையில் ஐ.நா. நிபுணர் குழு செயற்பட்டுள்ளது. அதனை ஏற்க முடியாது. எனவே எமது நாட்டின் இறைமைக்கு எதிராக செயற்படும் நிலைமை தொடர்பில் நாங்கள் அவதானத்துடன் செயற்படவேண்டும். நாட்டின் அரசியல் ஸ்திரத்தன்மையை குழப்புவதற்கு இடமளிக்க முடியாது. யுத்தம் முடிவடைந்தததிலிருந்து புலிகளின் சர்வதேச செயற்பாட்டாளர்கள் பாரியளவில் செயற்பட்டுக்கொண்டிருக்கின்றனர். தற்போது இந்த நிபுணர் குழு விடயமானது எமது நாட்டுக்கு எதிரான சதித்திட்டங்களின் ஒரு அங்கம் மட்டுமேயாகும். எனவே அனைவரும் முன்வந்து முழு மனதுடன் இந்த அறிக்கையை நிராகரிக்கவேண்டும் என்றார்.

கொழும்பு பல்கலைக்கழகத்தின் விரிவுரையாளர் எம். எஸ். அனீஸ் கருத்து வெளியிடுகையில் :

உலகில் மிகவும் பலமான பயங்கரவாத அமைப்பையே அரசாங்கம் தோற்கடித்துள்ளது. வடக்கு கிழக்கு மாகாணங்களின் மக்களை மீட்கும் நோக்கிலேயே இந்த பயங்கரவாதத்துக்கு எதிரான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. தற்போது யுத்தம் முடிவடைந்துவிட்டது. இந்நிலையில் ஐக்கிய நாடுகள் சபையின் நிபுணர் குழு தயாரித்துள்ள அறிக்கையானது உள்நோக்கம் கொண்டது.

பயங்கரவாதம் தோற்கடிக்கப்பட்டமை காரணமாக முழுமையாக வடக்கு கிழக்கு வாழ் தமிழ் மக்களே நன்மையடைந்தனர். அவர்கள் இன்று சுதந்திர காற்றை சுவாசிக்கின்றனர். அந்த வகையில் இலங்கைக்கு சர்வதேச ரீதியில் அபகீர்த்தி ஏற்படும் வகையில் நிபுணர் குழு செயற்பட்டுள்ளதை வன்மையாக கண்டிக்கின்றோம்.

இந்த அறிக்கையானது எமது நாட்டின் இறைமைக்கு சவால்விடக்கூடியதாக உள்ளது. 1983 ஆம் ஆண்டிலிருந்து 2009 ஆம் ஆண்டுவரை புலிகளால் சுமார் 75 ஆயிரம் பேர் கொல்லப்பட்டனர். தமிழ் சிங்களம் மற்றும் முஸ்லிம் என்ற வேறுபாடின்றி கொன்றொழித்தனர்.

அப்போது இந்த ஐக்கிய நாடுகள் சபை எங்கே இருந்தது? அதன் செயலாளர் என்ன செய்துகொண்டிருந்தார்? மக்களால் உருவாக்கப்பட்ட அரசுக்கு எதிராக ஐக்கிய நாடுகள் சபையினால் செயற்பட முடியுமா?

1988 ஆம் ஆண்டு நடைபெற்ற ஜே.வி.பி. பிரச்சினையில் 60 ஆயிரம் இளைஞர்கள் கொல்லப்பட்டனர். அப்போது இந்த ஐக்கிய நாடுகள் சபை ஏன் வாய் திறக்கவில்லை? இந்த நிபுணர் குழுவின் அறிக்கையில் உள்நோக்கம் உள்ளது. இலங்கைக்கு அபகீர்த்தியை ஏற்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

எனவே இதன் பின்னணியில் சர்வதேச சதித்திட்டம் ஒன்று உள்ளது. இந்த சந்தர்ப்பத்தில் நாங்கள் கட்சிபேதங்களை மறந்து நாட்டுக்காக ஒற்றுமையுடன் செயற்பட வேண்டும் என்றார்.

கொழும்பு பல்கலைக்கழகத்தின் சட்டத்துறை விரிவுரையாளர் பிரதீப மஹாஹேவா கருத்து வெளியிடுகையில் :

ஐக்கிய நாடுகள் இவ்வாறு குழுவை நியமித்து அறிக்கை தயாரித்துள்ளதை ஏற்க முடியாது. இந்த விடயத்தில் ரஷ்யா மற்றும் சீனா ஆகிய வீட்டோ அதிகாரம் கொண்ட நாடுகள் இலங்கைக்கு ஆதரவாக செயற்படுகின்றன.

இந்த நாடுகளின் அழுத்தம் காரணமாக ஐ.நா. செயலாளர் நாயகம் பின்வாங்கியுள்ளார். அதாவது ஆரம்பத்தில் கடும் தொனியில் செயற்பட்ட பான் கீ மூன் தற்போது உறுப்பு நாடுகள் இணக்கம் வெளியிட்டால் மட்டுமே சர்வதேச விசாரணை ஒன்றுக்கு செல்ல முடியும் என்று கூறியுள்ளார்.

எனவே தற்போதைய நிலைமையில் ஐ.நா. வின் செயற்பாட்டினால் இலங்கையில் ஏதாவது குழப்பங்கள் ஏற்படின் அல்லது சமாதான நிலைமையில் விரிசல் ஏற்படின் அதற்கான முழுப் பொறுப்பையும் ஐ.நா. செயலாளரே ஏற்கவேண்டும். மேலும் ரஷ்யா மற்றும் சீனா ஆகிய வீட்டோ அதிகாரம் கொண்ட நாடுகள் இலங்கைக்கு ஆதரவாக உள்ளமையினால் இந்த அறிக்கையினை ஐ.நா. வின் பாதுகாப்பு சபைக்கு கொண்டு செல்ல முடியாது.

மேலும் எமது வெளிநாட்டு தூதுவர்கள் சற்று உற்சாகமாக செயற்பட்டு சர்வதேச ரீதியில் இலங்கைக்கு எதிராக மேற்கொள்ளப்படும் முயற்சிகளை தோற்கடிக்க முன்வரவேண்டும் என்றார்.

சுதந்திர பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சங்கத்தின் செயலாளர் அஜித் திசாநாயக்க குறிப்பிடுகையில் :

இது எமது ஆரம்ப முயற்சி மட்டுமேயாகும். இந்த நாட்டின் இலவசக் கல்வியை பெற்ற நாங்கள் நாட்டுக்காக செயற்படவேண்டியது கட்டாயமாகும். எனவே ஐ.நா.வின் இந்த விடயம் தொடர்பில் உள்நாட்டு மற்றும் சர்வதேச ரீதியில் தெளிவுபடுத்தல்களை மேற்கொள்ளவுள்ளோம்.

உள்நாட்டில் மக்களை தெளிவுபடுத்தும் நோக்கில் நாடளாவிய ரீதியில் கருத்தரங்குகளை நடத்த ஏற்பாடுகளை செய்துள்ளோம். கற்றறிந்த பாடங்களும் நல்லிணக்கமும் தொடர்பான ஆணைக்குழுவின் அறிக்கை மே மாதம் 15 ஆம் திகதிக்கு முன்னர் வெளிவரவுள்ளது. இந்நிலையில் அதற்கு முன்னர் இவ்வாறு அறிக்கை வெளியிடுவது முறையற்ற விடயமாகும் என்றார்.
மேலும் இங்கே தொடர்க...