21 டிசம்பர், 2009

சர்வதேச விண்வெளி மையத்துக்கு 3 வீரர்களுடன் பறந்த ரஷிய ராக்கெட்


அமெரிக்கா, ரஷியா, ஜப்பான், ஜெர்மனி உள் ளிட்ட நாடுகள் இணைந்து விண்ணில் சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தை கட்டி வருகின்றனர். இதற்கு தேவையான பொருட்கள் ராக்கெட் மூலம் கொண்டு செல்லப்படுகிறது?

இந்நிலையில் ரஷியாவின் சோயுஷ் டி.எம்.ஏ-17 என்ற விண்வெளி ஓடம் ராக்கெட்டுடன் இணைக்கப்பட்டு கஜகஸ்தானில் உள்ள பைகோனுர் காஸ் மோட்ரோம் விண்வெளி தளத்தில் இருந்து சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்துக்கு அனுப்பப்பட்டது.

இதில், ரஷியாவின் ஒலெக் கோதோவ், அமெரிக்கா நாசாலின் டிமோதி கீமர் மற்றும் ஜப்பானின் சோய்சி நொகுசிர் ஆகிய விண்வெளி வீரர்கள் பயணம் செய்தனர்.

திட்டமிட்டபடி சோயுஷ் டி.எம்.ஏ. -17 விண்வெளி ஓடத்துடன் கஜகஸ்தானில் உள்ள பைகோனூர் காஸ் மோட்ரோம் தளத்தில் இருந்து இன்று அதிகாலை 1 மணியளவில் ராக்கெட் ஏவப்பட்டது.

விண்வெளியை அடைந் ததும் சோயுஷ் டி.என்.ஏ.-17 விண்வெளி ஓடம் சுற்றுப்பாதையில் வெற்றிகரமாக பறந்தது. இதை தொடர்ந்து விஞ்ஞானிகள் கை தட்டி மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர்.

வருகிற 23-ந் தேதி இந்த 3 வீரர்களும் சர்வதேச விண்வெளி மையத்தை சென்றடைகின்றனர். அங்கு ஏற்கனவே தங்கி யிருக்கும் அமெரிக்க வீரர் ஜெப்வில்லியம்ஸ், ரஷிய வீரர் மாசிம்சரேவ் ஆகியோருடன் இணைந்து பணியாற்றுவார்கள்.
அவர்களில் வில்லியம்ஸ், சரேவ் ஆகியோர் வருகிற மார்ச் மாதம் பூமிக்கு திரும்புவார்கள். தற்போது சென்றுள்ள 3 வீரர்கள் 126 நாட்கள் அங்கு தங்கியிருந்து விட்டு மே மாதம் பூமிக்கு திரும்புவார்கள் என்று ரஷிய விண்வெளி ஆராய்ச்சி மைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும் இங்கே தொடர்க...

புலிகளிடையே ஏற்பட்ட பிளவுக்கும் எனக்கும் எவ்வித தொடர்பும் இல்லை:அலி சாகீர் மௌலானா
No Image



2004 ஆம் ஆண்டு கிழக்கு மாகாணத்தில் விடுதலைப் புலிகள் அமைப்பில் ஏற்பட்ட பிளவுக்கும் தனக்கும் எவ்வித தொடர்பும் இருக்கவில்லை என அமெரிக்காவில் தங்கியிருந்து நேற்று நாடு திரும்பியுள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அலி சாகீர் மௌலானா வலியுறுத்திக் கூறுகின்றார்.

விடுதலைப் புலிகள் அமைப்பில் பிளவு ஏற்பட்ட பின்பு தனக்கு ஏற்பட்ட பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் காரணமாகவே அந்நேரத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை ராஜனாமா செய்து விட்டு நாட்டை விட்டு வெளிறே வேண்டியிருந்ததாகவும்,ஆனால் தற்போது அப்படியான சூழ்நிலை இல்லை என்றும் அவர் குறிப்பிடுகின்றார்.

தான் மீண்டும் அரசியலில் பிரவேசிக்க வேண்டும் என பலரும் எதிர்பார்ப்பதால்,ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியுடன் இணைந்து அரசியலில் ஈடுபடப் போவதாகவும் அலி சாகீர் மௌலானா எமது செய்திச் சேவைக்குத் தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,

" 2006 ஆம் ஆண்டு எனக்கு அச்சுறுத்தல்களும் பயமுறுத்தல்களும் ஏற்பட்ட போது ஐக்கிய தேசியக் கட்சி என்னை தனிமைப்படுத்தி விட்டது.இதனால் தான் நாட்டை விட்டு வெளியேற வேண்டிய நிலை ஏற்பட்டது.

2007 ஆம் ஆண்டு ஐ.நா. கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக அமெரிக்கா வந்திருந்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ என்னைச் சந்தித்து நாடு திரும்பி மீண்டும் அரசியலில் ஈடுபடுமாறும், பாதுகாப்பான நிலை இருப்பதாகவும் தெரிவித்திருந்தார்.அத்துடன் இலங்கை தூதராலயத்தில் உயர் பதவியொன்றையும் வழங்கியிருந்தார்"என்றார்.

விடுதலைப் புலிகள் அமைப்பை பலவீனப்படுத்தியது தமது கட்சியே என ஐக்கிய தேசியக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூறி வருவது பற்றி அவரிடம் கேட்ட போது,

"ஐக்கிய தேசிய கட்சி செயலாளர் இதில் என்னை தொடர்புபடுத்திக் கூறியிருப்பது எனக்கு களங்கத்தை ஏற்படுத்தியுள்ளது மட்டுமல்ல அது அவர்களினது அரசியல் நோக்கத்தை கொண்டது.

விடுதலைப் புலிகள் அமைப்பிலிருந்து தற்போதைய அமைச்சர் விநாயகமூர்த்தி முரளீதரன் அன்று பிரிந்திருந்தார்.இந்தப் பிரிவுக்கும் எனக்கும் எந்த வித தொடர்பும் இல்லை.அன்று மோதல் தவிர்ப்புக்கான முயற்சிகளில் நாம் ஈடுபட்டோமே தவிர விடுதலைப் புலிகளை பலவீனப்படுத்தும் நோக்கத்துடன் செயல்படவில்லை. அது ஒரு மனிதாபிமான நடவடிக்கையே " என்று பதிலளித்தார் அலி சாகீர் மௌலானா.

இதற்கிடையில் நேற்று நாடு திரும்பியதும் அவர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவைச் சந்தித்து தனது ஆதரவைத் தெரிவித்துள்ளார்.


சண்டே லீடர் பத்திரிகைக்கு எதிராக பாதுகாப்புச் செயலாளர் வழக்குத் தாக்கல்

No Image


பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ, சண்டே லீடர் பத்திரிகைக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப் போவதாக அறிவித்துள்ளார்.

குறித்த பத்திரிகை பாதுகாப்புச் செயலாளருக்கு அபகீர்த்தியை ஏற்படுத்தும் வகையில் செய்திகளை வெளியிட்டதால், அதற்கு நட்ட ஈடாக நூறு கோடி ரூபாவை வழங்க வேண்டுமென்று பாதுகாப்புச் செயலாளரின் சட்டத்தரணி சனத் விஜேவர்தன, சண்டே லீடர் வெளியீட்டாளருக்கும் அதன் பிரதம ஆசிரியருக்கும் கோரிக்கைக் கடிதம் (வக்கீல் நோட்டிஸ்) அனுப்பி வைத்துள்ளதாக அரச தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

நட்டஈட்டை வழங்க மறுக்கும் பட்சத்தில் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்படுமெனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேநேரம், கல்கிஸை நீதிமன்றத்தில் பத்திரிகை நிறுவனத்தினர் அளித்த வாக்குறுதியை மீறி செய்தி வெளியிட்டமை தொடர்பாகவும் வழக்குத் தாக்கல் செய்யப்படவுள்ளது.

கடந்த டிசம்பர் ஆறாம் திகதியும் 13 ஆம் திகதியும் சண்டே லீடர் பத்திரிகையில் வெளியான செய்திகள், பாதுகாப்புச் செயலாளருக்கு அபகீர்த்தியை ஏற் படுத்தியிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்புச் செயலாளருக்கு எதிராக அவதூறான செய்திகளை வெளியிடக்கூடாதென கல்கிஸை நீதிமன்றத்தில் தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தும், அவ்வாறான செய்திகளை வெளியிட்டிருப்பதாக சண்டே லீடர் பத்திரிகையின் வெளியீட்டாளர் லால் விக்கிரமதுங்க மற்றும் அதன் பிரதம ஆசிரியர் ஆகியோருக்கு எதிராகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.



சிவாஜி, மயோன் போட்டியிடுவதைத் தமிழ்-முஸ்லிம் மக்கள் ஏற்கப் போவதில்லை : கணபதி கனகராஜ்
No Image



நாடாளுமன்ற உறுப்பினர்களான சிவாஜிலிங்கம், மயோன் முஸ்தபா போன்றவர்கள் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதைத் தமிழ் -முஸ்லிம் மக்கள் ஒருபோதும் ஏற்றுக் கொள்ளப் போவதில்லை என இலங்கைத் தொழிலாளர் ஐக்கிய முன்னணியின் பொதுச் செயலாளரும் மத்திய மாகாணசபை உறுப்பினருமான கணபதி கனகராஜ் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில் அவர் மேலும் தெரிவித்திருப்பதாவது :

"ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுகின்ற சிறுபான்மை இன வேட்பாளர்கள் தமது சொந்த இனத்தின் அபிலாசைகளை மனதிற் கொள்ள வேண்டுமே தவிர, மாற்று வேட்பாளர்களினதோ,நாட்டிற்கு வெளியே இருந்து வருகின்ற அழுத்தங்களுக்கோ களம் அமைக்கும் நோக்கத்தோடு இவ்வாறான இக்கட்டான காலகட்டத்தில் செயலாற்றக் கூடாது.

தமிழ் பேசும் மக்களின் வாக்குகளைச் சிதறடிக்கும் நோக்கில் நாடாளுமன்ற உறுப்பினர்களான சிவாஜிலிங்கம், மயோன் முஸ்தபா போன்றவர்கள் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதைத் தமிழ்-முஸ்லிம் மக்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை. தற்போதைய அரசாங்கம் இனப்பிரச்சினை தொடர்பாக மிக தெளிவான தீர்மானத்தை நடைமுறைப்படுத்தி முடித்துவிட்டது.

ஒரு புறத்தில் பயங்கரவாதத்தை ஒழிப்பதாகக் கூறிக்கொண்டு யுத்தத்தை நடத்திய அதே நேரத்தில் இனப்பிரச்சினையைத் தீர்க்கப் போவதாக சொல்லிக் கொண்டு சர்வகட்சி மாநாடு, இனப்பிரச்சினைக்கான தீர்வுத்திட்டம் என்பனவற்றில் வெறுமனே காலத்தைக் கடத்திவந்தது. இதன்மூலம் சர்வதேசத்திற்கும் சமாதான விரும்பிகளுக்கும் போக்குக் காட்டி யுத்தத்தின் கொடூரத்தை வெளி உலகத்திற்கு குறைத்துக் காட்டியது.

யுத்தம் முடிவடைந்தவுடன் இனப்பிரச்சினைக்கான தீர்வுத்திட்டம் கிடப்பிலே போடப்பட்டு விட்டது. திஸ்ஸ விதாரன குழுவின் விதந்துரைப்புகள் தேவையற்றவை எனவும் தெரிவிக்கப்பட்டது. இந்த அரசாங்கத்தைப் பொறுத்த வரை தமிழ்ப்பேசும் மக்களின் நியாமான அரசியல் அபிலாஷைகளை ஆயுதத்தால் அடக்கி ஒடுக்கவேண்டும் என்ற தனது நோக்கத்தை நிறைவேற்றி முடித்துவிட்டது.

இந்த நிலையில் திக்குத் தெரியாமல் தடுமாறிக் கொண்டிருக்கின்ற தமிழ் மக்கள் மீண்டும் தம்மை சுதாகரித்துக் கொண்டு எழுவதற்கு முன், அவர்களையே பயன்படுத்தி தேர்தலை வெற்றிக்கொள்ள முயற்சிக்கிறது. இதில் சிவாஜிலிங்கம் போன்றவர்கள் பகடைக்காய்களாக பயன்படுத்தப்படுகின்றார்கள்.

இலங்கைத் தொழிலாளர் ஐக்கிய முன்னணி, எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளர் சரத்பொன்சேகாவை ஆதரிப்பதற்கு பிரதான காரணம் இன்று தமிழ் மக்கள் எதிர்நோக்குகின்ற சொல்லொணாத் துன்பங்களுக்கு ஒரு சிறு ஆறுதலாவது கிடைக்குமென்பதால்தான். நொந்து நூலாய்போன சமூகம் தலை நிமிர்ந்து நிற்க ஒரு வாய்ப்பை ஏற்படுத்துவதற்கு மலையக மக்களின் வாக்குகள் பயன்படும் என்பது எமது எதிர்பார்ப்பு.

மலையக மக்களினதும், தோட்டத் தொழிலாளர்களினதும் எவ்விதமான எதிர்பார்ப்பையும் இன்றைய ஜனாதிபதி நிறைவேற்றவில்லை. கடந்த ஜனாதிபதி தேர்தலின்போது, ஊழல் பேர்வழிகளாக ஜனாதிபதியினால் இனங்காணப்பட்ட மலையகத் தமிழ்க் கட்சித் தலைமைகளையே தற்போதும் தனது அரசியல் கூட்டாளிகளாகியிருக்கிறார்.

இவ்வாறான மலையக அரசியல்வாதிகள் சரத் பொன்சேகா ஜனாதிபதியானதும் அவருடன் இணைந்து கொள்ளவும் தயாராகவே இருக்கிறார்கள். பொது வேட்பாளர் சரத் பொன்சேகா தற்போதைய ஆட்சியை மாற்றுவதற்கான மிக சிறந்த தெரிவாக இனங்காணப்பட்டுள்ளார்.

எனவே அவருடைய வெற்றி பெரும்பாலும் நிச்சயிக்கப்பட்டுவிட்டது. எனவே மக்கள் பேசும் மக்கள் அனைவரும் ஐதேக பொது வேட்பாளருக்கே வாக்களிக்க வேண்டுமென இலங்கைத் தொழிலாளர் ஐக்கிய முன்னணி சகலரிடமும் வேண்டுகோள் விடுக்கின்றது." இவ்வாறு அந்த அறிக்கையில் அவர் தெரிவித்துள்ளார்.



பிரி. இணை அமைச்சர் இலங்கை வருகை : மனித உரிமை அமைப்புக்கள் கண்டனம்

No Image


இலங்கை அரசை மனித உரிமை மீறல்களுக்காக பிரிட்டன் அரசு கடுமையாக விமர்சித்து, ஓரிரு தினங்களில் அந்த நாட்டின் கலாசார ஊடகத்துறை இணையமைச்சர் இலங்கைக்கு கிறிஸ்மஸ் விடுமுறை சுற்றுப்பயணத்தை மேற்கொண்டுள்ளமையை மனித உரிமை அமைப்புகள் கடுமையாகக் கண்டித்துள்ளன.

பிரிட்டிஷ் பிரதமர் கோர்டன் பிரவுண், இலங்கை அடுத்த பொதுநலவாய உச்சிமாநாட்டை நடத்துவதைத் தடுத்து நிறுத்தினார். அந்த நாட்டின் வெளிவிவகார அமைச்சர் டேவிட் மில்லிபாண்ட் கடந்த வாரம் பொதுச்சபையில் இலங்கை நிலவரம் குறித்துக் கவலை தெரிவித்தார்.

இந்நிலையில் பிரிட்டனின் கலாசார ஊடகப் பிரதிமைச்சர் பென் பிரிட்சோ கடந்த வெள்ளிக்கிழமை உல்லாசப் பயணம் ஒன்றை மேற்கொண்டு இலங்கைக்கு வந்துள்ளார்.

பிரிட்டனின் உல்லாசப் பயணத்துறை இணை அமைச்சரான பிரிட்சோ, இலங்கையில் விடுமுறையைக் கழிப்பதன் மூலம் ஏன் அந்த நாட்டுக்கு ஆதரவளிக்கின்றார் என மனித உரிமை அமைப்புக்கள் கண்டனம் தெரிவித்துள்ளன.

பிரிட்டிஷ் அமைச்சருக்கு இலங்கை முழுவதும் உல்லாசப் பயணம் மேற்கொள்வதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதேவேளை, ஆயிரக்கணக்கான இலங்கைத் தமிழ் மக்கள் தொடர்ந்தும் முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என சர்வதேச மனித உரிமைக் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.

பிரிட்சோ இலங்கை முழுவதும் செல்ல வேண்டும். பின்னர் தன்னைப் போல் சுதந்திரமாக நடமாட முடியாமல் தடுப்பு முகாம்களில் வைக்கப்பட்டுள்ள மக்களின் நிலை குறித்துப் பகிரங்கமாக அதிருப்தி வெளியிடவேண்டும் என சர்வதேச மனித உரிமைக் கண்காணிப்பகத்தின் சட்ட மற்றும் கொள்கை இயக்குநர் ஜேம்ஸ் ரொஸ் தெரிவித்துள்ளார்.

பிரிட்சோ இலங்கைக்குச் சென்றால், பிரிட்டிஷ் அரசு அந்நாட்டின் மனித உரிமை நிலவரம் குறித்துப் பகிரங்கமாகக் கருத்துத் தெரிவிக்க வேண்டும் என்றும் அவர் கோரியுள்ளார்.
மேலும் இங்கே தொடர்க...

விடுதலை புலிகளின் ஆயுதக் கப்பல் கைப்பற்றப்பட்டுள்ளது

No Image


தமிழீழ விடுதலை புலிகளுடையது என சந்தேகிக்கப்படும் பிறின்ஸஸ் கிரிஸ்டீனா கப்பல் கைப்பற்றப்பட்டு கொழும்புக்கு கொண்டுவரப்படவுள்ளதாக இலங்கை கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.

83 மீற்றர் நீளமுடையதும், பனாமா நாட்டு கொடியுடனும் காணப்பட்ட இக்கப்பல் , தற்போது இலங்கை அரசாங்கத்தினால் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்படும் விடுதலை புலிகளுக்கு ஆயுதங்கள் விநியோகிக்கும் கேபி எனப்படும் குமரன் பத்மநாதன் வழங்கிய தகவல்களின் அடிப்படையிலேயே கைப்பற்றப்பட்டுள்ளது.



இந்தியாவின் ஆலோசனையின் அடிப்படையில் நாட்டை காட்டிக்கொடுக்கும் அரசாங்கம்-ரில்வின் சில்வா

No Image
யுத்தம் முடிவடைந்ததன் பின்னர் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கின் ஆலோசனையின்படியே அரசாங்கம் செயற்படுகின்றது. இந்தியாவின் ஆலோசனையின் அடிப்படையில் நாட்டைக் காட்டிக் கொடுக்கும் செயலில் அரசாங்கம் ஈடுபடுகின்றது. இதற்கான தெளிவான ஆதாரங்கள் உள்ளன என்று ஜே.வி.பி.யின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்தார். பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவும் ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் பசில் ராஜபக்ஷவும் நாட்டை நேசிப்பது உண்மையானால் தமது அமெரிக்க குடியுரிமைகளை ரத்துச் செய்து காட்டட்டும் பார்க்கலாம் என்றும் அவர் சவால் விடுத்தார்.

ஜே.வி.பி.யின் விஷேட செய்தியாளர் மாநாடு நேற்று ஞாயிற்றுக்கிழமை பத்தரமுல்லையில் அமைந்துள்ள கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்றபோதே டில்வின் சில்வா மேற்கண்டவாறு கூறினார்.

இவர் இங்கு தொடர்ந்தும் கூறியதாவது,

""வேட்பு மனுத் தாக்கலின் பின்னர் எதிரணிகளின் பொது ஜனாதிபதி வேட்பாளர் ஜெனரல் சரத் பொன்சேகாவின் பிரசார நடவடிக்கைகள் சூடுபிடித்துள்ள நிலையில் தாம் எதிர்கொள்ள உள்ள பாரிய தோல்வியை தடுக்க பொய் பிரசாரங்களை பொது மக்களிடையே அரசாங்கம் மேற்கொண்டு வருகின்றது. சர்வதேச சதிகளுக்கு நாட்டை காட்டிக் கொடுக்கும் செயலில் ஜெனரல் சரத் பொன்சேகா ஈடுபட்டுள்ளதாக ஆதாரம் இல்லாத குற்றச்சாட்டுக்களை அரசாங்கம் முன்வைத்துள்ளது.

ஆனால் அரசாங்கம் நாட்டை காட்டிக் கொடுத்தும் சர்வதேச சதிகளுக்கு நாட்டை அடமானம் வைத்துள்ளமைக்குமான ஆதாரங்கள் பல உள்ளன. பாதுகாப்பு தொடர்பிலான ஒப்பந்தம் ஒன்றை அமெரிக்கத் தூதுவர் ஊடாக கைச்சாத்திட்டதன் பிரகாரம் அமெரிக்க படையினர் தமது தேவைகளுக்காக இலங்கையை பயன்படுத்தக்கூடிய நிலைமை உருவாக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் ஊடகமொன்றில் வெளியான செய்தியில் இலங்கையில் யுத்தத்தின் பின்னர் இராணுவ தளபதி உட்பட ஏனைய இராணுவ அதிகாரிகள் பதவி மாற்றம் செய்யப்பட்டதற்கு இந்திய பிரதமர் மன்மோகன் சிங்கே பின்னணியில் உள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக இலங்கை அரசாங்கம் மௌனம் காத்து வருகின்றது.

அதே போன்று எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஆதரவு வழங்குவதற்காக ஈ.பி.டி.பி. தலைவர் டக்ளஸ் தேவானந்தா நாட்டை பிரிக்கும் நிபந்தனைகளை முன்வைத்துள்ளார். இது குறித்தும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மௌனம் சாதித்து வருகின்றார். இது போன்று பல எழுத்து மூலமான ஆதாரங்களை நாட்டு மக்களுக்கும் காட்ட முடியும்.

தேசப் பற்று என்று கூறிக்கொண்டு நாட்டை பாரியளவில் காட்டிக் கொடுப்பது அரசாங்கமேயாகும். தமது ஜனாதிபதி பதவிக்காகவும் அதிகாரங்களுக்காகவும் யாரையும் ஏமாற்றக்கூடிய சந்தர்ப்பவாதிகளின் கூடாரமே இந்த அரசாங்கமாகும். ஜெனரல் சரத் பொன்சேகா இலங்கை பிரஜை இல்லையென்றால் எவ்வாறு இராணுவ தளபதி பொறுப்பு உட்பட யுத்தத்தின் பின்னரான ஏனைய பல பதவிகளை அரசாங்கம் வழங்க முன்வந்தது? இவ்வாறான செயற்பாடுகளினாலும் பொய் பிரசாரங்களினாலும் அரசாங்கத்தின் உண்மையான தோற்றம் தெரிய வந்துள்ளது.


வியன்னா மாநாட்டில் ஜனாதிபதி தேர்தல் குறித்து ஆராயவில்லை- சம்பந்தன் எம்.பி. கூறுகிறார்

No Image




யுத்தத்திற்குப் பின்னரான வடகிழக்கை கட்டியெழுப்புவது மற்றும் அப்பகுதிகளில் அபிவிருத்தி வேலைத்திட்டங்களை மேற்கொள்வது உள்ளிட்ட செயற்திட்டங்களில் புலம்பெயர் தமிழ் மக்களினதும் பங்களிப்பு வழங்கப்பட வேண்டும் என வியன்னாவில் நடைபெற்ற ஐந்து நாள் மாநாட்டின்போது இணக்கம் காணப்பட்டுள்ளது. மேலும், இந்த மாநாட்டில் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக உத்தியோகபூர்வமான முறையில் கலந்துரையாடப்படவில்லை எனவும் அதுதொடர்பில் எவ்விதமான தீர்மானமும் எடுக்கப்படவில்லை என்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற குழுத் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்தார்.

வியன்னா நகரில் கடந்த 14ஆம் திகதி தொடக்கம் 18ஆம் திகதி வரை நடைபெற்ற வடகிழக்கு தமிழ் பிரதிநிதிகள் மற்றும் புலம்பெயர் நாடுகளின் தமிழ் பிரதிநிதிகள் கலந்து கொண்ட விசேட மாநாட்டில் இரா. சம்பந்தன் எம்.பி.யும் பங்குபற்றியிருந்தார். இந்நிலையில், இந்த மாநாட்டில் கலந்துரையாடப்பட்ட விடயங்கள் தொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

சம்பந்தன் எம்.பி. இதுதொடர்பில் மேலும் கூறியதாவது:

ஆஸ்திரியா மற்றும் சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகளின் அனுசரணையில் வியன்னாவில் ஐந்து நாள் மாநாடொன்று நடைபெற்றது. இம்மாநாட்டில் வடகிழக்கு தமிழ் பிரதிநிதிகள் மற்றும் புலம்பெயர் தமிழ் மக்களின் பிரதிநிதிகள் ஆகியோர் முதல் தடவையாக சந்தித்து கலந்துரையாடினர்.

இலங்கையிலிருந்து இம்மாநாட்டில் சுரேஸ்பிரமேச்சந்திரன் எம்.பி., கிழக்கு மாகாண சபை முதலமைச்சரின் செயலாளர் கலாநிதி விக்னேஸ்வரன், அரசசார்பற்ற நிறுவனமொன்றின் சார்பில் சாந்தி சச்சிதானந்தன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம் எம்.பி. உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். மேலும், கனடா, அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளின் புலம்பெயர் தமிழ் மக்களின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.

இதன்போது முக்கியமாக இடம்பெயர்ந்துள்ள மக்களின் மீள்குடியேற்றம் அவர்களுக்கான வசதிகள், வடகிழக்கு அபிவிருத்தி வேலைத்திட்டங்கள், அதியுயர் பாதுகாப்பு வலயங்களில் இருந்து இடம்பெயர்ந்துள்ள மக்களின் நிலைமை, வடமாகாணத்திலிருந்து இடம்பெயர்ந்துள்ள முஸ்லிம் மக்களின் மீள்குடியேற்றம் போன்ற விடயங்கள் குறித்து விரிவாக ஆராயப்பட்டது.

மேலும், இந்த அபிவிருத்தி வேலைத்திட்டங்களில் புலம்பெயர் மக்களும் பங்கெடுக்க வேண்டும் என இணக்கம் காணப்பட்டது. வடகிழக்கு தமிழ் பிரதிநிதிகளும் புலம்பெயர் மக்களின் பிரதிநிதிகளும் முதல் தடவையாக சந்தித்து பேச்சு நடத்தியமை மிகவும் பயனுள்ள விடயமாக அமைந்தது என்று கூறலாம்.



தமிழ் தேசிய க்கூட்டமைப்பு ஆதரிக்காவிட்டாலும் பெரும்பாலான உறுப்பினர்கள் ஒத்துழைப்பு வழங்குவர்-அமைச்சர் யாப்பா நம்பிக்கை

No Image


தமிழ்த் தேசிய கூட்டமைப்பு எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் வேட்பாளர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை ஆதரிக்கும் என்று நம்புகின்றோம். எமது அரசாங்கம் வடக்கில் பாரிய அபிவிருத்தி வேலைத்திட்டங்களை மேற்கொண்டு வருகின்றது என்று ஊடகத்துறை அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்த்தன தெரிவித்தார். ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே அமைச்சர் இந்த விடயத்தை குறிப்பிட்டார்.

அவர் இது தொடர்பில் மேலும் கூறியதாவது:

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் யாருக்கு ஆதரவு வழங்குவது என்பது தொடர்பில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு இதுவரை தீர்மானிக்கவில்லை என்று தெரிகின்றது.

எனினும் விரைவில் எந்த வேட்பாளருக்கு ஆதரவளிப்பது என்பது தொடர்பில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு தீர்மானிக்கும் நிலைமை காணப்படுகின்றது. அந்தவகையில் அவர்கள் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பை ஆதரிப்பார்கள் என்று நம்புகின்றோம்.

ஒருவேளை தமிழ்த் தேசிய கூட்டமைப்பு அரசாங்கத்தை ஆதரிக்காமல் இருப்பதற்கு தீர்மானித்தாலும் கூட்டமைப்பின் பெரும்பாலான உறுப்பினர்கள் அரசாங்கத்துக்கு ஒத்தழைப்பு வழங்குவார்கள் என்று நம்புகின்றோம்.

காரணம் தமிழ் மக்களுக்கு எமது அரசாங்கம் விடுதலையை பெற்றுக்கொடுத்தது. மேலும் வடக்கு கிழக்கு பகுதிகளை அரசாங்கம் துரித கதியில் அபிவிருத்தி செய்துவருகின்றது.

எனவே ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் முடிவெடுக்கும்போது தமிழ்க் கூட்டமைப்பு இவ்விடயங்களை ஆராய்ந்து தீர்மானம் எடுக்கும் என்று நம்புகின்றோம்.
மேலும் இங்கே தொடர்க...
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் எதிர்க்கட்சித் தலைவரை இன்றிரவு சந்திக்க ஏற்பாடு









தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களான இரா.சம்பந்தன், செல்வம் அடைக்கலநாதன் உள்ளிட்ட நால்வர் இன்றிரவு ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவைச் சந்திக்கவுள்ளனர். இதேவேளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களை மீண்டும் சந்திப்பதற்கு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அழைப்பு விடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது. ஜனாதிபதியுடனான சந்திப்பு எப்போது நடைபெறுமென்பது இதுவரை தீர்மானிக்கப்படவில்லையென்றும் தெரியவருகிறது. ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமது ஆதரவு யாருக்கு என்பது குறித்த அறிவித்தலை இதுவரை விடுக்காதநிலையில் பிரதான இரு வேட்பாளர்களினதும் தரப்புக்கள் பேச்சுவார்த்தைகளை நடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
மேலும் இங்கே தொடர்க...
இந்தோனேஷிய கடற்படையால் இலங்கை அகதிகள் மீட்பு

ஜகார்த்தா, டிச. 20: படகுகள் மூலம் தப்பி வந்த இலங்கையைச் சேர்ந்த அகதிகள் இந்தோனேஷிய கடற்படையால் மீட்கப்பட்டதாக வெளியுறவுத் துறையினர் தெரிவித்துள்ளனர். இலங்கையைச் சேர்ந்த 13 பேர் அங்கிருந்து 2 படகுகளில் ஆஸ்திரேலியாவிற்கு சென்று கொண்டிருந்தனர். இந்நிலையில் சனிக்கிழமை அவர்கள் இந்தோனேஷிய பாதுகாப்பு படையால் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளதாக அந்நாட்டின் வெளியுறவுத் துறை அமைச்சர் சுஜோத்மிக்கோ தெரிவித்தார்.
மேலும் இங்கே தொடர்க...



தாய் நாட்டை முன்னிறுத்தி அனைவரும் ஒன்றிணைய வேண்டிய காலம் வந்துள்ளது


ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ

பயங்கரவாத சவாலை வெற்றிகொண்டுவிட் டோம், இனி அபிவிருத்தி சவாலை வெற்றி கொள்ள வேண்டியுள்ளது.

எமது தேசிய பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதன் மூல மும் நாட்டின் உணவுத் தேவையை பூர்த்தி செய்துகொள்வதன் மூலமும் நாட்டை வளமான எதிர்காலத்துக்கு கொண்டு செல்ல அரசியலை மறந்துவிட்டு தாய் நாட்டை முன்னிறுத்தி அனைவரும் ஒன்றிணையவேண்டிய காலம் வந்துள்ளது என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கூறினார்.

ஜனாதிபதி நேற்று (19) குருணாகல் மாவட்ட புத்தி ஜீவிகளையும் வியாபார சமூகத்தினரையும் சந்தித்தார். அவர்களிடையே உரையாற்றியபோதே ஜனாதிபதி மேற்கண்டவாறு கூறினார். தொடர்ந்து பேசிய அவர் அங்கு மேலும் கூறியதாவது,

நாட்டில் ஜனநாயகத்தை பாதுகாப்பது எமது முக்கிய அபிலாஷையாகும் பயங்கரவாதத்தை தோற்கடித்தது நாட்டின் அனைத்து மக்களினதும் ஜனநாயக உரிமைகளை பாதுகாப்பதற்கேயாகும். வடக்கு கிழக்கு மக்கள் சுதந்திரமாக தமது தொழில்களில் ஈடுபடக் கூடிய வாய்ப்பு அதன் மூலமே கிடைத்திருக்கிறது.

அன்று அபிவிருத்தி இன்றி இருந்த வடக்கு பிரதேசத்தில் இன்று முதலீட்டு வாய்ப்புகள் பெருகியுள்ளதுடன் சிங்களம், தமிழ், முஸ்லிம் என அனைத்து மக்களையும் நாட்டின் அபிவிருத்திக்காக இட்டுச் செல்லவும் அவர்கள் அனைவரும் ஒன்றிணையவேண்டும்.

யுத்தம் காரணமாக அபிவிருத்தி வேலைகளை செய்ய முடியாதிருப்பதாக அனைத்து தலைவர்களும் அனைத்து அரசாங்கங்களும் கூறின. அந்த நிலையை நாங்கள் மாத்தினோம். பாரிய அபிவிருத்தித் திட்டங்களை ஏற்படுத்தினோம்.

2009 ஆம் ஆண்டளவில் பாரிய அளவில் மின்வெட்டு இடம்பெறும் என்று கூறினார்கள். நாங்கள் புதிய மின் திட்டங்களை ஆரம்பித்து தேவையான மின்சாரத்தை அதிகரித்தோம்.



யுத்த வெற்றிக்கு வழிகாட்டிய தலைமைக்கு சவால் விடமுடியாது

கோத்தாபய ராஜபக்ஷ

முப்படையினருக்கு தேவையான தலைமைத்துவத்தை வழங்கி, உள்நாட்டு வெளிநாட்டு சக்திகளுக்கு சிறப்பாக முகம் கொடுத்து யுத்தத்தை வெற்றிகொள்ள வழிகாட்டிய ஜனாதிபதியின் தலைமைத்துவத்துக்கு எவரும் சவால்விட முடியாது என்று பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ தெரிவித்தார்.

தாய் நாட்டுக்காக உயிர் நீத்த சிங்க ரெஜிமன்ட்டைச் சேர்ந்த படைவீரர்களை கெளரவிக்கும் 21 வது நினைவு தின வைபவம் அம்பேபுஸ்ஸவில் உள்ள சிங்க ரெஜிமன்ட் தலைமையகத்தில் இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஜகத் ஜயசூரியவின் தலைமையில் நடைபெற்றது.

இதன் போது பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷவின் விசேட செய்தியை இராணுவத் தளபதி வாசித்தார். அதில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது:-

நாட்டின் ஆட்புல ஒருமைப்பாட்டு க்காகவும், இறைமைக்காகவும் உயிரை பணயம் வைத்து யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்து சமாதானத்தின் கதவுகளை திறப்பதற்காக பங்களிப்பு செய்த படைவீரர்களை கெளரவிப்பதில் மகிழ்ச்சிய டைகின்றோம்.

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமைத்துவம், மற்றும் வழிகாட்டலின் மூலம் முப்படையினர், பொலிஸ் மற்றும் சிவில் பாதுகாப்புப் படையினரின் பலம், தைரியம், அர்ப்பணிப்பு காரணமாக 30 வருட காலம் நிலவிய பயங்கரவாத யுத்தத்தை நிறைவுக்குக் கொண்டுவர முடிந்தது.

முப்படையினர் மற்றும் பொலிஸாரை பலப்படுத்தி 80 ஆயிரமாக இருந்த இராணுவத்தின் ஆளணி பலத்தை முப்படைகளின் தளபதியான ஜனாதிபதி கடந்த மூன்று வருட காலத்திற்குள் 2 இலட்சத்து 20 ஆயிரமாக அதிகரித்ததுடன் களமுனையிலுள்ள தளபதிகளுக்குத் தேவையான ஆளணியையும் பெற்றுக்கொடு த்தார்.

படையினருக்கும், களமுனைக்கும் தேவையான நவீன ஆயுதங்கள், உபகர ணங்கள் மற்றும் வளங்களை பெற்றுக் கொடுத்து எந்தவித வெளிநாட்டு சக்திகளுக்கும் தலைசாய்க்காது செயற்பட்ட ஜனாதிபதியின் உன்னதமான தலைமைத் துவத்தை கெளரவத்துடன் நினைவுகூர வேண்டும்.

இந்த யுத்தத்தை வெற்றிபெற முடியாது என்பதே வெளிநாட்டு நிபு ணர்களினதும், தலைவர்களினதும் கருத்தாக இருந்தது. யுத்தக்கள வெற்றிகளை அவமதித்தவர்களும், இந்த நாட்டில் இருந்தனர். இதனையும் பொருட்படுத்தாது மனோ வழிமையுடன் தலைமைத்து வத்தையும் கட்டளையிடும் தளபதிகளுக்கு தேவையான சகல ஒத்துழைப்புக்களையும், உறுதியையும் ஜனாதிபதி வழங்கினார்.

1987 ஆம் ஆண்டு ஜுன் மாதம் நடைபெற்ற வடமராட்சி யுத்தத்தை இந்த இடத்தில் நினைவுகூர கடமைப்பட்டுள்ளேன். யுத்தவெற்றிகள் கண்ணுக்கு எட்டிய தூரத்தில் இருந்த போதிலும் சரியான அரசியல் தலைமைத் துவம் இல்லாமலும், வெளிநாட்டு அழுத்தங்கள் காரணமாகவும் யுத்தம் இடையில் நிறுத்தப்பட்டது.

ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டு வெளிநாடுகளில் பேச்சுவார்த்தை நடத்தி பிரபாகரனுக்கு தொடர்ந்து போராட்டத்தை முன்னெடுத்துச் செல்ல அன்றிருந்த அரசியல் தலைமைத்துவம் நடவடிக்கை எடுத்ததை எவரும் மறக்கவில்லை. ஆனால் உயிரை பணயம் வைத்து முன்னோக்கிச் சென்ற உங்களது பிள்ளைகள், கணவன் மார்கள், தந்தையர்கள் தமது தனிப்பட்ட வாழ்க்கை குறித்து யோசிக்கவில்லை.

முப்படையினரின் நலன்கள், மோதலுக்கு தேவையான வளங்கள் தலைமைத்துவம் இல்லாமையே இந்த யுத்தம் இதுவரை காலம் நீடிப்பதற்குக் காரணமாக இருந்தது.

தரைவழி பாதுகாப்பை இராணுவத்தி னரும், வெளிநாடுகளிலிருந்து கொண்டுவர ப்படும் ஆயுதங்கள் புலிகளின் கரங்களை சென்றடையாமல் அவற்றை அழித்தொழி க்கும் பணியை கடற்படையினரும், நவீன விமானங்களை பயன்படுத்தி எதிரிகளின் தளங்களை விமானப்படையினர் அழித்தும் சிறப்பாக ஒத்துழைப்பை வழங்கினர் என்றார்.


மலையக மக்களின் அரசியல் உரிமைகளை உறுதிப்படுத்த தற்போதைய அரசு முன்வந்துள்ளது



மலையக மக்கள் முன்னணி கூட்டத்தில் அமைச்சர் சந்திரசேகரன் தெரிவிப்பு; பசில் எம்.பியும் பங்கேற்பு

மலையக மக்களின் எதிர்கால அரசியல் உரிமைகளை உறுதிப்படுத்தவும், அவர்களது சமூக மேம்பாட்டை உத்தரவாதப்படுத்தவும் பல அடிப்படை கோரிக்கைகளை பிரதான அரசியல் கட்சிகளிடம் முன்வைத்ததையடுத்து இக் கோரிக்கைகளை தற்போதைய அரசு ஏற்றுக்கொண்டுள்ளதுடன் அதனை குறிப்பிட்ட காலவரையறைக்குள் நடைமுறைப்படுத்தவும் இணங்கியிருப்பதாக மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் அமைச்சருமான பெ. சந்திரசேகரன் நேற்று (20) ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக கட்சியின் கூட்டத்தில் பேசும்போது கூறினார்.

பசில் எம்.பியும் பங்குகொண்ட இக் கூட்டத்தில் அவர் தொடர்ந்து பேசியபோது மேலும் கூறியதாவது, மலையக மக்களின் எதிர்கால அரசியல் உரிமைகளை உறுதிப்படுத்தவும் மலையக மக்களின் சமூக மேம்பாட்டை உத்தரவாதப்படுத்தவும் பல அடிப்படை கோரிக்கைகளை பிரதான அரசியல் கட்சிகளுக்கு முன்வைத்தோம்.

ஜனாதிபதி வேட்பாளர்களைப் பற்றி பல்வேறு விதமான விமர்சனங்களும் அர்த்தமுள்ள அரசியல் பார்வையும் தமிழ் மக்களுக்கு இருந்தாலும் மலையக மக்களின் தேவைகளுக்கும் எதிர்பார்ப்புகளுக்கும் ஆட்சி பொறுப்பில் இருப்பவர்களுக்கு அழுத்தம் கொடுப்பதன் மூலமே நாம் எதையும் சாதிக்க முடியும்.

எவர் ஆட்சி அமைத்தாலும் அவர்கள் மூலமே மலையக மக்களின் அபிலாஷை களை நிறைவேற்ற முடியும் என்பதே யதார்த்த நிலையாகும். இந்த நிலைப் பாட்டை அடித்தளமாகக் கொண்டுதான் மலையக மக்கள் முன்னணி ஜனாதிபதி தேர்தலை கவனிக்கின்றது. எமது கோரிக் கைகளை தற்போதைய அரசு ஏற்றுக் கொண்டுள்ளதோடு குறிப்பிட்ட காலை வரையறைக்குள் அதனை நடைமுறைப்படுத்தவும் இணங்கியிருக்கின்றது. தோட்டத் தொழிலாளர்களின் குடியிருப்புகளை மாற்றி சொந்தக் காணியில் தனித்தனி வீடுகளில் வாழ்கின்ற மாற்றத்தை ஏற்படுத்தி லயன் முறை வாழ்க்கையிலிருந்து நமது மக்களை மீட்டெடுக்க வேண்டும்.

மலையக இளம் சந்ததியினர் மத்தியில் பூதாகரமாக உருவாகி வரும் வேலையில்லா பிரச்சினைக்கு தீர்வை ஏற்படுத்தியாக வேண்டும்.

மலையக சமூகத்தை பொருளாதார ரீதியில் மேம்படுத்த தொழில் முயற்சிகளுக்கு வாய்ப்பு ஏற்படுத்திக்கொடுக்க வேண்டும்.

பின்தங்கிய சமூகமாக இருக்கின்ற நமது சமூகத்தை தரமுயர்ந்த சமூகமாக மாற்றுவதற்கு சகல வாய்ப்புகளையும் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். அதிகார பரவலாக்களில் மலையக மக்களும் இணைந்துகொள்ளும் விதத்தில் புதிய பிரதேச செயலகங்களும் போதிய உள்ளூராட்சி சபைகளும் ஏற்படுத்தப்படுவதோடு நமது மக்கள் சனத் தொகைக்கு ஏற்ப பிரதிநிதித்துவம் பாராளுமன்றம் தொடங்கி சகல ஆட்சி சபைகளிலும் எமது பிரதிநிதித்துவம் உத்தரவாதப்படுத்தப்படல் வேண்டும். அவசரகால தடைச் சட்டத்தின் கீழும் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழும் கைது செய்யப்பட்டு விசாரணைகள் முடிந்தும் தடுத்து வைக்கப்பட்டிருக்கின்ற அப்பாவி தமிழ் இளைஞர்கள் விடுதலை செய்யப்படவேண்டும்.

அந்த சட்டத்தின் 23ம் விதியை நீக்குவதன் மூலம் தற்போது இன்னல்களுக்கு உள்ளாகி வரும் தமிழர்களுக்கு சுதந்திர வாழ்வுரிமையை ஏற்படுத்தியாக வேண்டும்.

புதிய தொழில் நியமனங்களிலும் பதவி, தரம் உயர்த்தப்படுதலும் பின் தங்கிய சமூகம் என்ற ரீதியில் இந்திய வம்சாவளி மலையக தமிழர்களுக்கு விசேட ஏற்பாடுகளை அறிமுகப்படுத்த வேண்டும். மலையக மக்களுக்காக நுவரெலியா மாவட்டத்தில் தனியான தமிழ் பல்கலைக் கழகம் ஒன்று அமைக்கப்படல் வேண்டும்.

இத்தகைய கோரிக்கைகளில் நாம் வெற்றி பெற்றால்தான் ஏனைய சமூகங்களுக்கு நிகரான எமது சமூகத்தையும் உறுமாற்ற முடியும்.

இந்த தெளிவோடும் உறுதியோடும் ஜனாதிபதி தேர்தலில் அரசோடு இணக்கப்பாட்டுக்கு வந்திருக்கின்றோம்.


மேலும் இங்கே தொடர்க...