26 ஆகஸ்ட், 2009

தாயககுரல் 16

26.08.2009

இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு குறித்து ஆராய நியமிக்கப்பட்ட சர்வகட்சி பிரதிநிதிகள் குழு அதில் பங்குபற்றிய 13 அரசியல் கட்சிகளின் பொது இணக்கப்பாட்டுடன் தயாரிக்கப்பட்ட தீர்வு யோசனை அறிக்கையின் சாராம்சம் ஜனாதியிடம் கையளிக்கப்பட்டதாவும் அறிக்கை தொடர்பாக ஜனாதிபதியின் நிலைப்பாட்டை குழு எதிர்பார்த்துக் கொண்டிருப்பதாகவும் குழுவின் தலைவரான அமைச்சர் திஸ்ஸ விதாரண தெரிவித்துள்ளார்.

கடந்த காலங்களில் அரசால் முன்வைக்கப்பட்ட தீர்வுத்திட்டங்களில் அரசியல் கட்சிகளின் பங்களிப்பு இல்லை என்ற குற்றச்சாட்டுகள் இருந்து வந்துள்ளன. ஆனால் சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழு இனப்பிரச்சினை தீர்வு தொடர்பாக தங்கள் கருத்துக்களை எழுத்துமூலம் தெரிவிக்க பொது அமைப்புகள், அரசியல் கட்சிகள், தனிமனிதர்களுக்கு சந்தர்ப்பம் கொடுத்திருந்தது. சர்வகட்சிக்குழுவில் அங்கம் வகித்த அரசியல் கட்சிகளினால் இவை விவாதிக்கப்பட்டு பொது இணக்கப்பாடு கண்டு தயாரிக்கப்ட்ட அறிக்கையின் சாராம்சமே ஜனாதியிடம் கையளிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.


அரசாங்கம் வைக்கும் தீர்வு தமிழ் மக்களின் அபிலாஷைகளை நிறைவேற்றுமா இல்லையா என்பதுதான் இன்று மக்கள் மனதில் உள்ள சந்தேகம்;

சர்வட்சி பிரதிநிதிகள் குழுவில் பிரதான எதிர்கட்சிகளான ஐக்கிய தேசியக் கட்சி, தமிழ் தேசியக் கூட்டமைப்பு, மக்கள் விடுதலை முன்னணி என்;பன பங்குபற்றவில்லை. ஐக்கிய தேசியக் கட்சியும், தமிழ் தேசியக் கூட்டமைப்பும் இனப்பிரச்சினைக்கு தீர்வு காணவேண்டும்; எனக் கூறினாலும் இவர்கள் இனப்பிரச்சினை தீர்வு தொடர்பாக எந்த அறிக்கையும் சமர்ப்பிக்கவில்லை. அதேவேளை இவர்கள் இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காண்பதை எதிர்க்கும் இனவாத கட்சிகளுடன் இணைந்து சர்வகட்சி பிரதிநிதிகள் குழுவை விமர்சிப்;பதில் ஒற்றுமையாக செயல்படுகின்றனர்.

சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழு தயாரித்த தீர்வுத்;திட்டத்தில் மேல்சபை (செனற்) ஒன்று அமைப்பது தொடர்பாகவும், நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை மாற்றுவது தொடர்பாகவும் பரிந்துரை செய்யப்பட்டிருப்பதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்த தீர்வுத்திட்டம்; 13வது திருத்தத்திற்கு மேலாகவே இருக்கும் என கடந்த காலங்களில் குழுவின் தலைவர் தெரிவித்திருந்தமை இங்கு குறிப்பிடவேண்டும். 13வது திருத்தத்திற்கு அப்பால் சென்று அரசியல் தீர்வை வழங்கப்போவதாக ஜனாதிபதியின் ஆலோசகரும், பாராளுமன்ற உறுப்பினருமான பசில் ராஜபக்ஷவும் தெரிவித்துவந்தார்.

இதே வேளையில் 13வது திருத்தம் அமுல்படுத்தப்படாது எனவும் காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்கள் மாகாணசபைக்கு பகிர்ந்தளிக்கப்படமாட்டாது எனவும் ஜனாதிபதி உறுதியளித்ததாலேயே அரசுடன் தாங்கள் இணைந்திருப்பதாகவும் அதிகாரப் பகிர்வுகுறித்து பேசுவது நேரத்தை வீணடிப்பதாகும் எனவும் அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் கட்சியான தேசிய சுதந்திர முன்னணியின்(ஜே.வி.பி.யில் இருந்து பிரிந்தவர்கள்) தலைவர் விமல் வீரவம்ச தெரிவிக்கிறார்.


13வது திருத்தத்தை நடைமுறைப்படுத்துவது அரசாங்கத்தின் அரசியல் நிலைப்பாடாக இருந்தாலும் அதை நடைமுறைப்படுத்துவதில் சிக்கல் தோன்றியுள்ளதாக தெரிவிக்கும் அமைச்சர் மகிந்த சமரசிங்க, இலங்கை போன்ற சிறிய நாட்டில் பொலிஸ் அதிகாரம் மத்திய அரசிடமே இருக்கவேண்டும் என்று அரசில் அங்கம் வகிக்கும் தேசிய சுதந்திர முன்னணி, ஹெலஉருமய போன்ற கட்சிகள் கூறுவதாக தெரிவித்துள்ளார்.


குழுவின் அறிக்கை தொடர்பாக ஜனாதிபதியின் நிலைப்பாட்டை இப்போதைக்கு வெளியிடுவாரா என்பது சந்தேகமே. நவம்பரில் நடைபெறலாம் என எதிர்பார்க்கப்படும் ஜனாதிபதி தேர்தலும், அதன் பின்னர் நடைபெறும் என எதிர்பார்க்கப்படும் பொதுத்தேர்தல் என்பன முடியும்வரை இனப்பிரச்சினைக்கான தீர்வு எதையும் அரசிடம் இருந்து எதிர்பார்க்கமுடியாது எனஅரசியல் அவதானிகள் கருதுகின்றனர்.


யுத்தம் முடிந்துவிட்டதால் இப்போது அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் கட்சிகளிடையே அடுத்து என்ன என்ற குழப்பம் ஏற்பட்டுள்ளதாக சுதந்திரக்கட்சி மக்கள் பிரிவுத் தலைவர் மங்கள சமரவீர எம்.பி. தெரிவிக்கிறார். கடந்த 30 வருடகாலமாக இடம்பெற்ற யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவந்தபோதிலும் சமாதானத்தை ஏற்படுத்துவதில் அரசு தோல்வியடைந்து விட்டதாக கூறும் மங்கள சமரவீர இனப்பிரச்சினைக்கு சரியான தீர்வைக் காணவில்லை என்றாhல் ஆபத்தான விளைவுகள் ஏற்படும். என அரசை எச்சரித்திருப்பதுடன் அரசியல் தீர்வு விடயத்தில் தனது நிலைப்பாட்டை ஜனாதிபதி பகிரங்கமாக அறிவிக்கவேண்டும்; எனவும் கேட்டுள்ளார்.


1983 இனக்கலவரம் நடைபெற்று 26 ஆண்டுகளின் பின்னர் இப்போதான் அந்த இனஒழிப்பு குறித்து ஐக்கிய தேசியக் கட்சிக்கு மனதை உறுத்தி பாவமன்னிப்பு கோருகிறது. தேசத்தின் பெரும்பான்மை மக்கள் என்ற வகையில் சிங்களவர்கள் சிறுபான்மை மக்களுக்கு தவறு இழைத்துள்ளனர். 1983ல் தமிழ் மக்களுக்கு எதிராக சிங்கள மக்கள் தவறுகளை செய்தனர் என்று ஐக்கிய தேசியக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன செனவிரத்தின தெரிவித்துள்ளார்.

கடந்த காலங்களிலும் மாறிமாறி ஆட்சிக்கு வந்த அரசுகள் தமிழ் மக்களுக்கு இழைக்கும் அநீதிகள் குறித்து அந்த அரசுகளில் அங்கம் வகித்த சிங்களத்

தலைவர்கள் பலர் விமர்சித்;திருந்த போதிலும் அந்த அநீதிகளுக்கு எதிரான தமிழ் மக்களின் போராட்டங்களுக்கு அவர்கள் ஆதரவு வழங்கவில்லை

1989 ஒக்டோபர் மாதம் ஐக்கிய தேசியக் கட்சி அனைத்துக் கட்சி மகாநாட்டுக்கென ஜனாதிபதியிடம் பிரேரணைகள் சமர்ப்பித்தபோது கருத்து தெரிவித்த காமினி திசநாயக்கா, இலங்கை சுதந்திரம் பெற்ற பின் இலங்கைக்கு அவசியமான கலாச்சார,சமூக மறுமலர்ச்சியை ஏற்படுத்த ஐக்கிய தேசியக் கட்சி அரசு தவறியதாலேயே 1956ம் ஆண்டுக்குப்பின் இனரீதியான அமைதியின்மை தோன்றியது எனத் தெரிவித்திருந்தார்.

கடந்த கால அரசியல்வாதிகள் நாட்டு மக்களுக்கு உண்மையை வெளிப்படுத்தாது மக்களை தவறான பாதையில் வழி நடத்தியதன் காரணமாகவே நாம் இன்று பெரும் சிக்கலில் அகப்பட்டுள்ளோம் என 1989 ஒக்டோபரில் ராஜாங்க அமைச்சராக இருந்த ரணசிங்கா தெரிவித்திருந்தார்.

இவருடைய கருத்து சிங்கள தலைவர்களுக்கு மாத்திரமல்ல தமிழ் தலைவர்களுக்கும் பொருந்தும்..
மேலும் இங்கே தொடர்க...
ரஸ்யாவிடமிருந்து இறக்குமதிகளை அதிகரிப்பது தொடர்பில் ஆராயுமாறு கோரிக்கை-

ரஸ்யாவிடமிருந்து இறக்குமதிகளை அதிகரிப்பதற்கான சாத்தியக்கூறுகள் தொடர்பில் ஆராயுமாறு இலங்கைக்கான ரஸ்யத் தூதுவர் கிலாடிமெல் ஈ பிகாலோ கோரியுள்ளார். இலங்கை மற்றும் ரஸ்யா ஆகிய நாடுகளுக்கிடையிலான வர்த்தக நடவடிக்கைகளில் ரஸ்யா பாதகத் தன்மையை எட்டியுள்ளது. இலங்கைக்கான ஏற்றுமதி நடவடிக்கைகள் ரஸ்யாவில் மிகக் குறைவாகக் காணப்படுகின்றமையே இதற்குக் காரணமாகும். யுத்தம் நிறைவடைந்துள்ள காலப்பகுதியில் ரஸ்யாவின் முதலீட்டாளர்கள் மற்றும் இலங்கைக்கான சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது என்றும் அவர் கூறியுள்ளார். இலங்கைக்கும் ரஸ்யாவுக்குமிடையிலான வர்த்தக நடவடிக்கைகளில் சமநிலைமையைப் பேணுமாறும் ரஸ்யத் தூதுவர் கிலாடிமெல் ஈ பிகாலோ கோரிக்கை விடுத்துள்ளார்.

மேலும் இங்கே தொடர்க...
மாத்தறையில் இருந்து பருத்தித்துறைக்கு சமாதான பாதயாத்திரை-

மாத்தறையில் இருந்து பருத்தித்துறைக்கு சமாதான பாத யாத்திரையை மூன்று சாரணர்கள் நேற்றுக்காலை ஆரம்பித்துள்ளனர். மாத்தறை தெவேந்திரமுனையில் இருந்து இந்த யாத்திரை ஆரம்பமாகியுள்ளது. பி.எல்.ஹசன் சணங்க, காந்த குணவர்த்தனா, பிரசாத் மஞ்சுல ஆகிய மூன்று சாரணர்களே இந்தப் பாதயாத்திரையை நடத்துகின்றனர். வவுனியாவை வந்தடைந்து அங்கிருந்து ஏ9 ஊடாக பாதயாத்திரையாக யாழ்ப்பாணம் சென்று பருத்தித்துறை முனையில் யாத்திரையை அவர்கள் பூர்த்தி செய்யவுள்ளனர். இவர்கள் தமது பாத யாத்திரையின்போது இரவு நேரங்களில் வழிபாட்டுத் தலங்கள், மத நிலையங்கள் மற்றும் பொலிஸ், இராணுவ முகாம்களிலும் தங்கவுள்ளனர்.

மேலும் இங்கே தொடர்க...
இடம்பெயர்ந்து அம்பாறை, ஆலையடிவேம்பு பிரதேசங்களில் உள்ள மக்களின் வாழ்வதாரத்தை மேம்படுத்த நடவடிக்கை-

யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட திருமலை மற்றும் மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களிலிருந்து இடம்பெயர்ந்து அம்பாறை, ஆலையடிவேம்பு பிரதேசங்களில் தங்கியிருக்கும் மக்களின் வாழ்வதாரத்தை மேம்படுத்த அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. இதன்படி 20யுவதிகளுக்கு ஆறு மாதகால தையல் பயிற்சியும், 20ஆயிரம் ரூபாய் பெறுமதியான தையல் உபகரணங்களும் பகிர்ந்தளிக்கப்பட்டதாக அந்த அமைச்சு குறிப்பிட்டுள்ளது. அத்துடன் ஆறுமாத தையல் பயிற்சி நெறியை நிறைவுசெய்தவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்படுவதுடன், இது தொடர்பிலான கண்காட்சிகள் நடத்தப்படவுள்ளதாகவும் அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.


மேலும் இங்கே தொடர்க...
புலிகளுக்கு உதவிய சந்தேகநபர் சென்னையில் கைது-

இந்திய விசேட காவல்துறையினரால் நேற்று சென்னையில் வைத்து புலிகளுக்கு உதவியவர் என்ற சந்தேகத்தின்பேரில் இலங்கையர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். இவர் தமிழகத்தில் கடந்த 1999ம் ஆண்டுமுதல் 18வருடங்களாக சந்தேகத்தின்பேரில் தேடப்பட்டு வந்த ஒருவரென்று தமிழக பொலீசார் கூறியுள்ளனர். ஜோன் பிரபாகரன் என்ற பெயரையுடையவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். இவர் போலியான கடவுச்சீட்டு உள்ளிட்ட ஆவணங்களுடன் தமிழகத்தில் வசித்து வந்ததாகவும், புலிகளுக்கும், சட்டவிரோதமாக வெளிநாடுகளுக்கு தப்பிச்செல்ல முற்படுபவர்களுக்கும் போலியான ஆவணங்களை பெற்றுக் கொடுத்திருப்பதாகவும் இவர்மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

மேலும் இங்கே தொடர்க...
மதகுருமார் மீள் குடிஎற்ரம்



வுனியா முகாம்களில் தடுத்துவைக்கப்பட்டுள்ள மதகுமார்களையும் அவர்களின் குடும்பத்தினரையும் சொந்த இடங்களுக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்து மதகுருமார் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் 400 பேரும் கத்தோலிக்க மதகுருமார் ஆறு பேரும் கன்னியாஸ்திரிமார் இருவரும் அவர்களின் சொந்த இடங்களுக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாக வவுனியா அரசாங்க அதிபர் திருமதி பீ.எஸ்.எம் சார்ல்ஸ் தெரிவித்தார்.

மன்னார்,யாழ்ப்பாணம்,வவுனியா மற்றும் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த இந்த மதகுருமாரை அவர்களின் சொந்த இடங்களுக்கு அனுப்பிவைக்க இந்து கலாசார திணைக்கள அதிகாரிகளுடன் இணைந்து ஏற்பாடுகளை மேற்கொண்டு வருவதாக அவர் குறிப்பிட்டார்.


மேலும் இங்கே தொடர்க...