28 அக்டோபர், 2009

28.10.2009 தாயகக்குரல் 25

இலங்கையில் முதலில் நடைபெறப் போகும் தேர்தல் ஜனாதிபதி தேர்தலா? அல்லது பொதுத் தேர்தலா? என்ற கேள்விகளுக்கு விடை கிடைக்காத நிலையில் ஜனாதிபதி தேர்தலில் எதிர்கட்சிகள் சார்பில் ஒரு பொது வேட்பாளரை நிறுத்த வேண்டும் என்ற யோசனைகள் வெளிவரத் தொடங்கியுள்ளன. தேர்தல்கள் உரிய காலத்தில் நடைபெறுவதானால் முதலில் நடைபெற வேண்டிய தேர்தல் 2010 ஏப்ரலில் பாராளுமன்றத் தேர்தலாகும்.

ஜனாதிபதி தேர்தல் 2011 பிற்பகுதியில் நடைபெறவேண்டும். ஆனால் யுத்தத்தில் புலிகளை அரசாங்கம் வெற்றிகொண்டதால் ஜனாதிபதியின் செல்வாக்கு உச்சமடைந்த நிலையில் 2010 ஜனவரியில் முன்கூட்டியே ஜனாதிபதி தேர்தல் நடைபெறலாம் என்ற கருத்து மேலோங்கியிருந்தன. ஆனால் தென்மாகண சபைத் தேர்தலுக்குபின்னர் ஜனாதிபதி தேர்தல் முதலில் நடக்குமா அல்லது பொதுத் தேர்தல் முதலில் நடக்குமா என்ற சந்தேகங்களை செய்தி ஊடகங்கள் ஏழுப்பியிருந்தன. இந்த சந்தேகங்களுக்கு விடை 15ம் திகதி நடைபெறும் ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியின் மகாநாட்டில் முடிவெடுக்கப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.

அதேநேரம் ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களில் பெரும்பாலோர் 2010 ஜனவரியில் ஜனாதிபதி தேர்தலையும் ஏப்ரல் மாதத்தில் பொதுத் தேர்தலையும் நடத்துவதையே விரும்புவதாக செய்திகள் தெரிவிக்கின்றன. ஆனால்; இரண்டு தேர்தல்களும் ஒரே தினத்தில் நடைபெறக்கூடிய சாத்தியப்பாடுகள் அதிகரித்துள்ளதாகவும் அது தொடர்பாக ஜனாதிபதி ஆராய்ந்து வருவதாகவும் ஊடகத்துறை அமைச்சர் லக்ஷ்மன யாப்பா தெரிவித்துள்ளார்.


ஜனாதிபதி தேர்தல் முதலில் நடைபெறும் பட்சத்தில் மிகவும் பலவீனப்பட்டுள்ள நிலையில் உள்ள ஐக்கிய தேசியக் கட்சியால் மகிந்த ராஜபக்ஷாவுக்கு பலமான போட்டியை ஏற்படுத்தமுடியாது. எனவேதான் எதிர்கட்சிகளை இணைத்து ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையில் ஒரு கூட்டணியை அமைத்து அந்தக் கூட்டணி சார்பில் பொது வேட்பாளர் ஒருவரை ஜனாதிபதி தேர்தலில் நிறுத்தும் முயற்சியில் ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சி மக்கள் பிரிவுத் தலைவர் மங்கள சமரவீர ஈடுபட்டுள்ளார். இந்த நிலையில்தான் முன்னாள் இராணுவத் தளபதியும் தற்போது கூட்டுப்படை பிரதானியுமான ஜெனரல் சரத் பொன்சேகா எதிர்கட்சி கூட்டணியின் சார்பில் ஜனாதிபதி தேர்தலில் பொது வேட்பாளராக போட்டியிடுவார் என்ற செய்திகள் வெளிவந்தன. சரத் பொன்சேகா ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட முன்வருவாரா இல்லையா என்பது தெரியாத நிலையில், இராணுவத்தினர் அரசியலில் ஈடுபடுவது தடை செய்யப்பட்டுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது.

இராணுவத்தினர் வேலையை இராஜினாமா செய்தோ, ஓய்வு பெற்ற பின்னரோ தேர்தலில் போட்டியிடுவதை யாரும் தடுக்கமுடியாது எனவும் சரத் பொன்சேகா அரசியலுக்கு வந்தால் தங்களுக்கு பேராபத்து என்பதாலேயே அவர்மீது அரசாங்கம் அவதூறு கற்பிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாகவும் ரணில் தெரிவிக்கிறார். இராணுவத்தினரை முதல் தடவையாக தென்மாகாண சபைத்த தேர்தலில் போட்டியிட வைத்தது அரசாங்கமே எனவும் ரணில் தெரிவிக்கிறார். இன்னொரு பக்கம் புதிய ஹெல உறுமய கட்சி முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவை அரசியலுக்கு வரும்படி அழைப்பு விடுத்திருக்கிறது. படையினருக்கு தலைமை தாங்கி யுத்தத்தில் வெற்றி பெற்ற இராணுவத் தளபதிக்கு நாட்டுக்கு தலைமைதாங்கி வழி நடத்த ஏன் முடியாது எனவும் அக்கட்சி கேள்வி எழுப்பியுள்ளது. எதிர்கட்சி கூட்டணி சார்பில் ஜனாதிபதி வேட்பாளராக ஜெனரல் சரத் பொன்சேகா நியமிக்கப்படவுள்ளதாக வெளியாகியிருந்த செய்தி குறித்து தமிழ் தேசியக் கூட்டமைப்பு கடுமையான எதிர்ப்பு தெரிவித்துள்ளது. பொது வேட்பாளராக சரத் பொன்சேகாவை நியமிக்கும் திட்டத்தைக் கைவிடுமாறு எதிர்கட்சிகளின் கூட்டணியிடம் தமிழ் தேசியக் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது. எதிர்கட்சிகளின் பொது வேட்பாளர் பட்டியலில் முன்னாள் நீதியரசர் சரத் என்.டி.சில்வாவும் இருப்பதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.


தமிழ் மக்களைப் பொறுத்தவரை ஜனாதிபதி தேர்தலில் எந்தக்கட்சி சார்பில் யார் நிற்கிறார் என்பதல்ல பிரச்சினை. ஜனாதிபதி வேட்பாளர் தமிழ் மக்கள் பிரச்சினையில் என்ன தீர்வை முன்வைக்கிறார்கள் என்பதுதான் முக்கியம். எதிர்கட்சிகள் கூட்டணியில் உள்ள கட்சிகள் அல்லது பொது வேட்பாளரை ஆதரிப்பதாக கூறும் கட்சிகளின் பொதுவான கோட்பாடு நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை ஒழிப்பதுதான் .இந்தக் கூட்டணியில் தமிழ் தேசியக் கூட்டமைப்பும் இணையப்போவதாகவும் செய்திகள் வெளி வந்தன. ஆனால் முஸ்லிம் காங்கிரசுடன் ஒரு உடன்பாட்டுக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு வந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. எதிர்க்கட்சிகளின் கூட்டணிக்கு தலைமை தாங்கும் ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கா இனப்பிரச்சினை தொடர்பாக கட்சியின் நிலைப்பாடு என்ன என்பது பற்றி இதுவரை எதுவும் தெரிவிக்கவில்லை.

இந்தக் கூட்டை ஆதரிக்கும் சில கட்சிகள் இனப்பிரச்சினையில் இனவாதப் போக்கை கொண்டவர்கள். இவர்கள் இனப்பிரச்சினைக்கு தீர்வாக 13வது திருத்தத்தை அமுல் படுத்தப்படுவதைக்கூட எதிர்ப்பவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ஜனாதிபதி தேர்தலில் எதிர்க் கட்சிகளின் பொது வேட்பாளராக சரத் பொன்சேகாவை நியமிக்கக்கூடாது என கூறும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு எதிர்கட்சிகள் சார்பில் நிறுத்தப்போகும் வேட்பாளரையே ஆதரிக்கப்போகிறார்களோ என்ற சந்தேகத்தை உருவாகியுள்ளது.
இதற்கிடையே தமிழ் முஸ்லிம் கட்சிகளிடையே ஒரு கூட்டமைப்பை உருவாக்கும் முயற்சிகளும் நடைபெறுகின்றது.

இந்த கூட்டமைப்பு தேர்தலை நோக்கமாக கொண்டதல்ல என்றும் சிறுபான்மையினரின் பலத்தை எடுத்துக் காட்டுவதற்கும் இரு சமூகங்களினதும் உரிமைகளையும் தேவைகளையும் பெற்றுக்கொள்வதற்குமான கூட்டமைப்பாகவே இருக்கும் எனவும் தேர்தல் இரண்டாம் பட்சமே எனவும் தெரிவிக்கப்படுகின்றது. தமிழர்களும் முஸ்லிம்களும் தங்களது உரிமைகளுக்கான போராட்டத்தை ஜனநாயக வழிகளிலேயே மேற்கொள்ளுதல் வேண்டும் என்பதால் தமிழ் முஸ்லிம் மக்களுக்கிடையிலான கூட்டமைப்பு ஏற்படுதல் அவசியமே. ஆனால் தமிழ் முஸ்லிம் கட்சிகள் இணைந்தால் மட்டும் போதாது. மக்களும் இணையவேண்டும். அப்போதுதான் தமிழ் முஸ்லிம் கூட்டமைப்பு அர்த்தமுள்ளதாக இருக்கும்.

மேலும் இங்கே தொடர்க...
கெப். கொலராடோ கப்பல் நிவாரணப்பொருள் விநியோகம் தொடர்பில் செஞ்சிலுவைச் சங்க அதிகாரிகள் வவுனியா அரசஅதிபர் சந்திப்பு-
ஐக்கிய தேசியக் கூட்டமைப்பு வெற்றிபெற்றதும் நிறைவேற்று ஜனாதிபதி முறைமை நீக்கப்படுமென ஐ.தே.கட்சி தெரிவிப்பு-

ஜனாதிபதித் தேர்தலுக்கான திகதி அறிவிக்கப்பட்டவுடன் அனைவரும் ஆச்சரியப்படும் வகையில் ஐக்கிய தேசியக் கூட்டமைப்பின் பொது வேட்பாளரை அறிவிக்கவுள்ளதாக ஐ.தே.கட்சி தெரிவித்துள்ளது. கொழும்பில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின்போது அக்கட்சியின் பொதுச்செயலர் திஸ்ஸ அத்தநாயக்க இதனைத் தெரிவித்துள்ளார். தற்போது இக்கூட்டமைப்பில் 04 பிரதான கட்சிகள் மற்றும் 20 அமைப்புகள் தம்முடன் கைகோர்த்து நிற்கின்றன. நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதி முறைமையை நீக்குவதே இந்தப் பொதுக் கூட்டமைப்பின் பிரதான நோக்கமாகும். ஜே.வி.பி உள்ளிட்ட ஏனைய கூட்டமைப்புகளிலுள்ள உறுப்பினர்களையும் எம்முடன் இணைந்து கொள்ளுமாறு அழைப்பு விடுக்கிறோம், ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய தேசியக் கூட்டமைப்பு வெற்றிபெற்றதும் நிறைவேற்று ஜனாதிபதி முறைமை நீக்கப்படுவதுடன், அமைச்சர்களின் எண்ணிக்கையை 35ஆக குறைப்பதற்கு அரசியலமைப்பில் திருத்தமும் கொண்டுவரப்படும் என்றும் திஸ்ஸ அத்தநாயக்க மேலும் கூறியுள்ளார்.


இலங்கைச் செஞ்சிலுவைச் சங்கத்தின் அதிகாரிகள் இன்று வவுனியா அரசாங்க அதிபர் பீ.எஸ்.எம்.சார்ள்ஸை சந்தித்து கெப் கொலராடோ கப்பலின் நிவாரணப் பொருட்களை விநியோகிப்பது தொடர்பில் கலந்துரையாடியுள்ளனர். கெப் கொலராடோ கப்பலின் 884தொன் நிவாரணப் பொருட்கள் இடம்பெயர்ந்தோர்க்காக அனுப்பப்பட்டுள்ளன. கடந்த ஜூலை 31ம் திகதி கெப் கொலராடோ கப்பலில் இந்தப்பொருட்கள் கொழும்புக்கு கொண்டுவரப்பட்டன. இந்நிலையில் சில மாதங்களின் பின்னர் இப்பொருட்கள் கடந்த சனிக்கிழமையன்று துறைமுக அதிகாரசபையினால் விடுவிக்கப்பட்டது. இதனையடுத்து அவை வவுனியாவுக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளன. இந்நிலையில் இந்நிவாரணப் பொருட்களின் தர நிர்ணயம் தொடர்பில் இலங்கை தர நிர்ணய சபை இன்று அறிக்கை வெளியிடுமென எதிர்பார்க்கப்படுகின்றது.

மேலும் இங்கே தொடர்க...
ஏ9 பாதையின் ஊடான அம்புலன்ஸ் சேவைகள் இன்றுமுதல் ஆரம்பம்-
நிறைவேற்று ஜனாதிபதி முறைமை இல்லாதிருந்தால் பிரபாகரன் இன்னும் உயிருடன்தான் இருந்திருப்பாரென அமைச்சர் டிலான் பெரேரா தெரிவிப்பு-

தொழிற்சங்க போராட்டம் என்ற பெயரில் ஜே.வி.பியானது அரசியல் கிளர்ச்சியில் ஈடுபட்டு வருகிறதென அமைச்சர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார். நிறைவேற்று ஜனாதிபதி முறைமையானது இந்த நாட்டில் இல்லாதிருந்திருந்தால் பிரபாகரன் இன்னும் உயிருடன்தான் இருந்திருப்பார். 2004ம் ஆண்டில் பதவியில் இருந்த சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க பல அமைச்சுக்களை நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையின்கீழ் பெற்றுக்கொண்டார். அவ்வாறு செயற்பட்டிருக்காவிட்டால் ஐக்கிய தேசியக் கட்சியே ஆட்சிபீடத்தில் இருந்திருக்கும். நிறைவேற்று ஜனாதிபதி முறைமை காரணமாக யுத்தத்தின்போது வெற்றிகரமான தீர்மானங்களை செயற்படுத்த முடிந்தது. நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையில் குறைபாடுகள் இருக்குமாயின் அவற்றைத் திருத்திக் கொள்ளவேண்டும். இதற்காக புத்திஜீவிகளின் ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்ள முடியும் என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.9 பாதையின் ஊடான அம்புலன்ஸ் போக்குவரத்து சேவைகள் இன்றுமுதல் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் நோயாளர்களை யாழ்ப்பாணத்திலிருந்து தீவிர சிகிச்சைகளுக்காக கொழும்பு உள்ளிட்ட பிற மாவட்டங்களுக்கு தரைவழியின் ஊடாக அழைத்துவர முடிந்துள்ளது. இந்த சேவையின் முதற்கட்டமாக சென்ற். ஜோன்ஸ் அம்புலன்ஸ் சேவை மூலம் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு யாழ்ப்பாணத்திலிருந்து ஒருதொகுதி நோயாளர்கள் இன்று அழைத்துவரப்பட்டுள்ளனர்.
மேலும் இங்கே தொடர்க...
இலங்கை வந்துள்ள இந்திய இராணுவக் குழு - கோத்தபாயா சந்திப்பு

சர்வதேச விசாரணைகளுக்கு இணங்கியுள்ளமை ஒரு மாயை:மனித உரிமைகள் கண்காணிப்பகம்




விசாரணைகளைத் தவிர்க்கும் பொருட்டு இலங்கை அரசாங்கம் மாயையான சூழலைத் தோற்றுவித்து, சர்வதேச போர்க் குற்றம் தொடர்பான விசாரணைகளுக்கு இணங்கியுள்ளதாக மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.

இந்த வருடத்தின் ஜனவரி - மே மாதங்களுக்கு இடைப்பட்ட காலப்பகுதியில் இடம்பெற்ற சர்வதேச மனிதாபிமானமற்ற போர் சட்ட முறைகளுக்கு எதிரான யுத்த குற்றங்கள் தொடர்பில் அமெரிக்க ராஜாங்க திணைக்களம் கடந்த 22 ஆம் திகதி அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தது.

யுத்த காலப்பகுதியில் ஐக்கிய நாடுகள் சபையின் அறிக்கையின் படி, 7000 பொது மக்கள் கொல்லப்பட்டதுடன், 13,000 இற்கும் அதிகமான மக்கள் காயமடைந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசாங்கம் போர்க் காலத்தில் பொது இடங்களான வைத்தியசாலைகள் மற்றும் பொது நிலையங்களை இலக்கு வைத்து எறிகணை வீச்சுக்களை மேற்கொண்டிருந்தமை வெளிப்படையான உண்மை. இதனை ஐக்கிய நாடுகள் சபையின் செய்மதிப்படங்களும் உறுதி செய்திருந்தன.

இந்த நிலையில், அவற்றுக்கு எதிராக சர்வதேசத்தின் விசாரணைகளை மேற்கொள்வதற்கு சர்வதேச ரீதியாக வலியுறுத்தல்கள் விடுக்கப்பட்டு வருகின்றன.

எனினும் அவற்றை நிராகரித்து வந்த இலங்கை அரசாங்கம், தற்போது அதனைத் தவிர்ப்பதாக உள்நாட்டு பக்கச் சார்பான நிபுணர்களை நியமித்து விசாரணை நடத்துவதாகவும், உண்மை நிலையினை நீதியான முறையில் சர்வதேச விசாரணைக் குழுவே கண்டறியும் எனவும் மனித உரிமைகளுக்கான ஆசிய பிராந்திய செயற்பாட்டாளர் பிரட் அடம்ஸ் தெரிவித்துள்ளார்


வந்துள்ள உயர் கட்டளை கற்கைநெறியை பயிலும் இந்திய இராணுவ அதிகாரிகள் குழு பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது.

கொழும்பில் உள்ள பாதுகாப்பு அமைச்சில் இந்தச் சந்திப்பு இடம்பெற்றது.

பிரிகேடியர் மொனி சன்டி தலைமையில் 14 அதிகாரிகள் அடங்கிய இந்தக் குழுவில் இந்தியாவின் இராணுவ மற்றும் விமானப்படை உயர் அதிகாரிகள் அடங்குகின்றனர்
மேலும் இங்கே தொடர்க...
புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த ஒருவர் வவுனியாவில் கைது


மலேசியாவில் தடுத்து வைக்கப்பட்டிருந்தோரில் 66 இலங்கையர்கள் விடுதலை

தடுத்து வைக்கப்பட்டிருந்த 66 இலங்கையர்களையும் அந்நாட்டு குடிவரவு அதிகாரிகள் விடுவித்துள்ளனர். விடுவிக்கப்பட்ட அனைவரையும் ஐ.நா அகதிகளுக்கான உயர்ஸ்தானிகராலய (யுன்.என்.எச்.சிஆர்)அதிகாரிகளிடம் குடிவரவு அதிகாரிகள் ஒப்படைத்துள்ளதாக தெரியவருகின்றது.

இவர்கள் அனைவரும் நாடொன்றுக்கு செல்ல அனுமதிக்கப்படும் வரை, அவர்களைப் பாதுகாக்கும் நோக்கில் இன்று இரு பஸ்களில் ஏற்றி தலைநகர் கோலாலம்பூருக்கு அழைத்துச் சென்றுள்ளதாக ஐ.நா. அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

உரிய பயண ஆவணங்கள் இன்றி மலேசியாவில் தங்கியிருந்த 105 இலங்கையர்கள் கைது செய்யப்பட்டு கடந்த செப்டெம்பர் மாதம் முதல் மலேசியாவின் தென் மாநிலமான ஜொகூரிலுள்ள தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டனர்.

இதனையடுத்து யு.என்.எச்.சி.ஆர். தமக்கு அகதி அந்தஸ்து தர வேண்டுமென கோரி, கடந்த வாரம் முதல் ஆறு பேர் உண்ணாவிரதமிருந்தனர்.இவர்களுள் சிலர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.அத்துடன் மேலும் 21 பேரை விடுதலை செய்வதற்கான நடவடிக்கைகள் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருவதாக மாநில குடிவரவு உதவி பணிப்பாளர் அம்ரன் அஹ்மட் தெரிவித்துள்ளார்.

தடுத்து வைக்கப்பட்டிருந்த இலங்கையர்களை விடுதலை செய்வதற்கான நடவடிக்கைகளை துரிதப்படுத்தி அவர்களை விடுதலை செய்தமைக்காக யு.என்.எச்.சி.ஆரின் வெளிவிவகார உறவுகளுக்கான அதிகாரி ஜன்ரே இஸ்மாயில் மலேசிய அரசாங்கத்திற்கு நன்றி தெரிவித்துள்ளார்.தடுத்து வைக்கப்பட்டுள்ள ஏனையோரையும் விடுதலை செய்வதற்கான நடவடிக்கைகளை தொடர்ந்தும் தாம் மேற்கொள்வதாக அவர் மேலும் தெரிவித்தார்

பாதுகாப்புப் பிரிவினருக்கு உளவுத் தகவல்களை வழங்கும் போர்வையில் மறைந்திருந்த தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

மறைத்து வைக்கப்பட்ட ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்கள் தொடர்பான தகவல்களை வழங்குவதாக தெரிவித்து பொலிசாருடன் இணைந்து செயற்பட்ட இந்நபர், புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் நெருங்கிய சகா என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

சிவனேசராஜா வினோத்குமார் என்ற நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டவர் எனத் தெரிவிக்கப்படுகிறது.

இலங்கைக் கடற்படையினர், இராணுவத்தினர் மீது தாக்குதல் நடத்தும் நடவடிக்கைகளில் குறித்த நபர் நேரடியாகத் தொடர்புபட்டுள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது.

மெனிக்பாம் முகாமில் தங்கியிருந்த குறித்த நபர் தாமாகவே புலிகள் பற்றிய தகவல்களை வழங்குவதாக தெரிவித்துப் பொலிஸாரிடம் சரணடைந்ததாகக் குறிப்பிடப்படுகிறது.

ஆயுதங்கள் மறைத்து வைக்கப்பட்டுள்ளதாக இவர் வழங்கிய உளவுத் தகவல்கள் போலியானவை எனப் பொலிஸார் தகவல் வெளியிட்டுள்ளனர்.

சிங்களவர் ஒருவரைப் போன்று நடித்து இவர் தெற்கில் தகவல்களைத் திரட்டியுள்ளதாக விசாரணைகளின் மூலம் தெரிய வந்துள்ளது
மேலும் இங்கே தொடர்க...