7 ஏப்ரல், 2010

தேர்தல் பிரசாரத்துக்கு சென்ற ஜெயசூர்யா ஆதரவாளர்கள் மீது மர்ம மனிதர்கள் துப்பாக்கி சூடு





இலங்கையில் பாராளுமன்றத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. தேர்தல் பிரசாரம் உச்சக் கட்டத்தை எட்டியுள்ளது. தேர்தலில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு சார்பில் மாத்தலை மாவட்டத்தில் கிரிக்கெட் வீரர் ஜெயசூர்யா போட்டியிடுகிறார். அவர் ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகளில் விளையாடுவதற்காக இந்தியா வந்துள்ளார்.

இதனால் அவருக்காக அவரது ஆதரவாளர்கள் தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். நேற்று ஜெயசூர்யாவின் பிரத்யேக செயலாளர் தலைமையில் தேர்தல் பிரசாரம் நடந்தது.

ஒரு இடத்தில் பிரசாரத்தை முடித்துவிட்டு ஜெயசூர்யா ஆதரவாளர்கள் மற்றொரு இடத்துக்கு காரில் சென்று கொண்டிருந்தனர். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம மனிதர்கள் ஜெயசூர்யா ஆதரவாளர்கள் மீது சரமாரியாக துப்பாக்கியால் சுட்டனர்.

இதில் ஜெயசூர்யாவின் பிரத்யேக செயலாளர் நூலிழையில் உயிர் தப்பினார். இதுகுறித்து தகவல் அறிந்ததும் ஜெயசூர்யா அதிர்ச்சி அடைந்தார்.

தற்போது சென்னையில் உள்ள அவர், போனில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சேயுடன் தொடர்பு கொண்டு இதுபற்றி பேசினார். அதன்பேரில் துப்பாக்கி சூடு நடத்தியவர்களை பிடிக்க தனிப்படை உருவாக்கப்பட்டுள்ளது.
மேலும் இங்கே தொடர்க...

நாடாளுமன்றத்துக்கு ஜனாதிபதி நேற்று வருகை


ஆறாவது நாடாளுமன்றத்தின் இறுதி அமர்வுகளைக் கண்காணிப்பதற்கென நேற்று வருகை தந்த ஜனாதிபதி மஹிந்தராஜபக்ஷ ஆளும், எதிர்கட்சி உறுப்பினர்களைச் சந்தித்தார். அத்துடன் மேற்படி உறுப்பினர்களுடனேயே மதிய உணவையும் உண்டார்.

பெப்ரவரி மாதம் 9 ஆம் திகதி நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு தேர்தலும் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் அவசரகாலச் சட்டத்தை நீடித்துக் கொள்வதற்கென மார்ச் மாதம் 9 ஆம் திகதி ஜனாதிபதியின் விசேட அறிவித்தலின் பிரகாரம் நாடாளுமன்றம் கூட்டப்பட்டது.

அன்றைய தினம் அவசரகாலச் சட்டத்தை நீடித்துக்கொண்டதன் பின்னர் சபை ஏப்ரல் 6 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டது. இதன்படி நேற்று செவ்வாய்க்கிழமை நாடாளுமன்ற விசேட அமர்வுகள் மீண்டும் இடம்பெற்றன.

அவசர காலச் சட்டத்தை மேலும் ஒரு மாதத்திற்கு நீடித்துக் கொள்வதற்கான நேற்றைய அமர்வின் வாத, பிரதி வாதங்களை அவதானிப்பதற்காகவே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நாடாளுமன்றத்துக்கு வருகை தந்தார்.

நாடாளுமன்றக் கட்டிடத் தொகுதியில் அமையப் பெற்றுள்ள ஜனாதிபதிக்கான அலுவலகத்தில் இருந்தவாறே அமர்வுகளை ஜனாதிபதி அவதானித்தார். சபை அமர்வுகள் நிறைவடைந்ததன் பின்னர், பகலுணவுக்காக சென்ற உறுப்பினர்களைச் சந்தித்து நலம் விசாரித்து அவர்களுடன் சேர்ந்து உணவருந்தினார்.

அதேவேளை, நாடாளுமன்ற அலுவலர்கள் மற்றும் உத்தியோகத்தர்களையும் சந்தித்து நலம் விசாரித்தார்.
மேலும் இங்கே தொடர்க...

சீனத்தில் சிக்கியது யெதியா?

:

கீழை நாடுகளில் குறிப்பாக,​​ இந்தியாவின் இமயமலைப் பகுதியில் மனிதர்களின் கண்களுக்கே தெரியாமல் நடமாடுவதாகக் கருதப்படும் யெதி என்ற பிராணியைக் கைப்பற்றிவிட்டதாக சீனா தெரிவிக்கிறது.​ அது யெதிதானா என்பது உறுதிப்படுத்தப்படவில்லை.

​ இமயமலையில் யெதி என்கிற பனி மனிதன் உலவுவதாகவும்,​​ மிகப்பெரிய கால் தடங்களைக் கொண்டு அது யெதிதான் என்று தாங்கள் ஊகிப்பதாகவும் ஆராய்ச்சியாளர்கள் கூறுவதுண்டு.​ அத்துடன் அந்த யெதியைப் பற்றிய கர்ண பரம்பரைக் கதைகளும் உலவுவதால் ஆராய்ச்சியாளர்கள் யெதியைத் தேடி அலைந்து கொண்டே இருக்கிறார்கள்.

​ இமயமலையில் மலையேறும் குழுக்களைச் சேர்ந்த சில வீரர்களும் விறகு வெட்டவோ,​​ தண்ணீர் எடுத்துவரவோ சென்ற கிராமவாசிகளும் யெதியைப் பார்த்திருக்கிறார்கள்.​ ஆனால் யெதி நடந்து செல்லும் வேகத்துக்குத் தங்களால் ஈடு கொடுக்க முடியாததால் பின் தொடர முடிந்ததில்லை என்றே தெரிவித்துள்ளனர்.​ யெதியின் காலடித்தடம் மிகப்பெரியது.​ எனவே அதன் உருவமும் மிகப் பெரியதாகவே இருக்க வேண்டும் என்று கருதுகின்றனர்.

​ இந்த நிலையில் மத்திய சீனாவில் சிசுவான் மாகாணத்தில் வினோதப் பிராணியை வேட்டைக்காரர்கள் கண்ணிவைத்து பிடித்திருக்கின்றனர்.​ ஆனால் அது யெதிதான் என்று உறுதியாக்கப்படவில்லை.

​ கரடியைபோன்ற உருவம் ஆனால் கரடியைப் போல ரோமங்கள் இல்லை,​​ கங்காரு போல வால் -​ ஆனால் கங்காருவைப் போல துள்ளிக் குதிக்கவில்லை,கரடியைப் போல கட்டைக் குரல் இல்லை,​​ பூனையைப் போன்ற மென்மையான குரல் ஆகியவற்றுடன் இருக்கிறது இந்த வினோதப் பிராணி.​ பிடிபட்டது முதலே விடாமல் கத்திக் கொண்டிருக்கிறது.​ அது தன் இனத்தாரை துணைக்கு அழைப்பதைப் போலத் தெரிகிறது.​ ஆனால் அதன் இனத்தைச் சேர்ந்த இன்னொரு பிராணி எதுவும் அது வைக்கப்பட்டுள்ள கூண்டுக்கு வரவேயில்லை.​ மரங்கள் அடர்ந்த காட்டுப் பகுதியில் இது பிடிபட்டது.​ கரடியைப் போல உருவம் என்பதால் தூரத்திலிருந்து பார்க்க மனிதனைப் போன்றே தெரிந்தது.​ ஆனால் அது மூர்க்கத்தனமாக எதையும் செய்யவில்லை.

​ இப்போது அந்தப் பிராணியை பெய்ஜிங்கில் உயர் ஆராய்ச்சியாளர்களின் பார்வைக்காக எடுத்துச் சென்றுள்ளனர்.​ விரைவில் மேல் விவரங்கள் தெரியக்கூடும்.
மேலும் இங்கே தொடர்க...

துருக்கியில் ராணுவப் புரட்சிக்கு முயற்சி: ​​19 அதிகாரிகள் கைது

: துருக்கியில் ராணுவப் புரட்சி மூலம் நாட்டைக் கைப்பற்ற சதி திட்டம் தீட்டிய அந்நாட்டு ராணுவ அதிகாரிகள் 19 பேர் கைது செய்யப்பட்டனர்.

​ துருக்கியில் 1960-ம் ஆண்டில் இருந்து இதுவரை 4 தடவை ராணுவம் புரட்சியின் மூலம் நாட்டைக் கைப்பற்றியுள்ளது.​ தற்போது 5-வது தடவையாக புரட்சி மூலம் நாட்டைக் கைப்பற்ற ராணுவ அதிகாரிகள் சிலர் திட்டம் தீட்டியுள்ளனர்.​ இவர்களுக்கு உடந்தையாக சில ஓய்வுபெற்ற ராணுவ அதிகாரிகளும் இருந்துள்ளனர்.

​ ராணுவ அதிகாரிகளின் இந்த சதி திட்டம் குறித்து அரசுக்கு தெரியவரவே,​​ அதிரடி நடவடிக்கையில் இறங்கி ராணுவ அதிகாரிகளின் சதி திட்டத்தை முறியடித்தது.

​ அரசுக்கு கிடைத்த தகவலை அடுத்து இதுபோன்ற அதிகாரிகளை கண்டறிந்து உடனே கைது செய்யுமாறு போலீஸýக்கு ரகசிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.​ இதையடுத்து நாட்டில் உள்ள 14 முக்கிய நகரங்களில் போலீஸ் ரகசிய விசாரணை நடத்தி சதி திட்டம் தீட்டிய ராணுவ அதிகாரிகளை கைது செய்தனர்.

​ அரசுக்கு எதிராக சதி திட்டம் தீட்டிய 19 அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசு செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.​

ஆனால் சந்தேகத்தின் பேரில் 95-க்கும் ​ மேற்பட்டோரை போலீஸக்ஷ்ர் கைது செய்துள்ளதாக அந்நாட்டு நீதித்துறை அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.

அதிகாரம் குறைப்பால் விரக்தி:​​ துருக்கியில் ஒருகாலத்தில் அரசியலில் ராணுவத்தின் செல்வாக்கு மேலோங்கி இருந்தது.​ இதற்கு பிரதமர் தயீப் எர்டோகன் ஆட்சிக்கு வந்ததும் முடிவு கட்ட விரும்பினார்.​ ராணுவத்தின் அதிகாரத்தை குறைத்தல்,​​ குற்றம் செய்யும் ராணுவ அதிகாரிகளை சிவில் நீதிமன்றங்களில் விசாரித்தல் உள்ளிட்ட ராணுவ துறைக்கு எதிரான பல்வேறு நடவடிக்கைகளை அதிரடியாக எடுத்தார்.

​ இதை ராணுவ அதிகாரிகள் சிலர் விரும்பவில்லை.​ ராணுவப் புரட்சி மூலம் தயீப் எர்டோகனை ஆட்சிப் பீடத்தில் இருந்து தூக்கியெறிந்துவிட்டு நாட்டை கைப்பற்ற முடிவெடுத்தனர்.​ அதற்கான சதி திட்டத்தை துரிதமாக தீட்டிவந்தனர்.​ ஆனால் அரசின் அதிரடி நடவடிக்கையால் அவர்கள் சதி திட்டம் முறியடிக்கப்பட்டது.​
மேலும் இங்கே தொடர்க...

ஐந்து வருட காலத்தில் திட்டமிட்ட பொருளாதார இலக்கு


மத்திய வங்கி ஆளுநர் கப்ரால்


எதிர்வரும் ஐந்து வருட காலத்தில் அரசாங்கம் திட்டமிட்டுள்ள பொருளாதார இலக்குகளை அடைவதற்கான பொறுப்புகளை புதிய அரசாங்கத்தில் நியமிக்கப்படும் அமைச்சர்களுக்கு நேரடியாக வழங்க வேண்டும்.

இதன் மூலமே ஜனாதிபதி எதிர்பார்க்கும் தனிநபர் வருமானத்தை 4000 டொலராக அதிகரிப்பது என்ற பொருளாதார இலக்குகளை அடைய முடியும் என மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்தார்.

மத்திய வங்கியின் 2009ஆம் ஆண்டின் ஆண்டறிக்கை நேற்று (5) வெளியிடப்பட்டது.

இங்கு உரையாற்றிய அவர் மேலும் கூறியதாவது :- 2009 ஆம் ஆண்டில் பல்வேறு சவால்களுக்கு நாடு முகம் கொடுத்தது. ரூபாயின் பெறுமதி 200 டொலராக உயரும் என சிலர் குறிப்பிட்டனர். ஆனால் சகல சவால்களுக்கும் முகம் கொடுத்து மத்திய தர பொருளாதார வளர்ச்சி பெறப்பட்டுள்ளது.

யுத்தத்திற்கு முகம் கொடுப்பதில் மட்டுமன்றி பொருளாதாரத்தை முன்னெடுப்பதிலும் ஜனாதிபதி சரியான வழிகளைப் பின்பற்றியுள்ளார்.

வடக்கு, கிழக்கு மாகாணங்களும் தேசிய பொருளாதாரத்துடன் இணைக்கப்பட்டுள்ளன.

பிரதான உட்கட்டமைப்பு வசதிக்கு 6.4 பில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவிடப்படுகிறது. ஆனால் மகாவலி திட்டத்துக்கு 1.5 பில்லியன் டொலர்களே செலவிடப்பட்டது.
மேலும் இங்கே தொடர்க...

9 ஆம் திகதி அரச, வங்கி விடுமுறை

எதிர்வரும் 9 ஆம் திகதி அரச மற்றும் விசேட வங்கி விடுமுறை தினமாக அரசாங்கம் பிரகடனப் படுத்தியுள்ளது.

பொது நிர்வாக உள்நாட்டு அலுவல்கள் அமைச்சின் செயலாளர் டி.திஸாநாயக்க இதற்கான அறிவித் தலை விடுத்துள்ளார்.

எனவே, அரச கூட்டுத்தாபன ங்களின், நியதிச் சபைகளின் தலைவர்கள், மற்றும் தொழில் தருநர்கள் அனைவரையும், தங்களது அனைத்து ஊழியர்களுக்கும் 2010ஆம் ஆண்டு ஏப்பிரல் மாதம் 9ஆம் திகதி வெள்ளிக்கிழமை விடுமுறை வழங் குமாறு தொழிலமைச்சர் அதாவுத செனவிரட்ன கேட்டுள்ளார்.
மேலும் இங்கே தொடர்க...

முடிவுகளை அறிவிக்கும் நிலையங்களில் கண்காணிப்பாளருக்கு அனுமதி


பொதுத் தேர்தல் முடிவுகளை அறிவிக்கும் மாவட்ட நிலையங்களைக் கண்காணிப்பதற்கு தேர்தல் செயலகம் முதற் தடவையாக அனுமதி வழங்கியுள்ளது.

தேர்தல்கள் கண்காணிப்பு பணியில் நீண்ட காலமாக ஈடுபட்டு வரும் பெப்ரல் அமைப்புக்கும், தேர்தல் வன்முறைகளை கண்காணிப்பதற்கான மத்திய நிலையத்திற்கும் இந்த அனுமதி வழங்கப்பட்டிருக்கின்றது.

தேர்தல்களை வாக்குச் சாவடிகளுக்குள் இருந்தபடி கண்காணிப்பதற்கு தேர்தல் செயலகம் இவ்விரு ஸ்தாபனங்களுக்கும் ஏற்கனவே அனுமதி வழங்கி இருப்பது தெரிந்ததே.

இதேவேளை பெப்ரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹண ஹெட்டியாராச்சி தேர்தல் ஆணையாளர் தயானந்த திஸாநாயக்காவை நேற்று சந்தித்துக் கலந்துரையாடினார்.

இச் சந்திப்பின் போது தேர்தல் முடிவுகளை அறிவிக்கும் மாவட்ட நிலையங்களைக் கண்காணிக்கும் பணியின் வரையறைகள் குறித்து கலந்துரையாடப்பட்டதாக பெப்ரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளரான ஹெட்டியாராச்சி கூறினார்.

தேர்தல் முடிவுகளை அறிவிக்கும் மாவட்ட நிலையங்களைக் கண்காணிக்கும் பணியில் 24 பேர் ஈடுபடுத்தப்படுவர். இவர்களில் 22 பேர் மாவட்டத்திற்கு ஒருவர் படியும், இருவர் தேர்தல் செயலகத்திலும் பணியில் ஈடுபடுவர்.
மேலும் இங்கே தொடர்க...

எவ்வித அச்சமுமின்றி வாக்களிக்க செல்லுங்கள்


எந்தவிதமான அச்சமுமின்றி பொது மக்கள் நேர காலத்துடன் வாக்களிக்கச் செல்லுமாறு பொலிஸ் மா அதிபர் மஹிந்த பாலசூரிய வேண்டுகோள் விடுத்துள்ளார்.

பொதுத் தேர்தலை முன்னிட்டு திட்டமிட்ட படி உச்ச கட்ட பாதுகாப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவித்த அவர் தேர்தலின் போதும் அதன் பின்னரும் ஏற்படக்கூடிய எந்த ஒரு நிலைமைகளையும் சமாளிக்க பொலிஸாரும், பாதுகாப்புப் படையினரும் தயார் நிலையில் இருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

பொதுத் தேர்தலுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பாக ஊடகங்களுக்கு விளக்கமளிக்கும் விசேட செய்தியாளர் மாநாடு நேற்று மாலை பொலிஸ் தலைமையகத்தில் நடைபெற்றது. பொலிஸ் மா அதிபர் மேலும் உரையா ற்றுகையில், தேர்தல்கள் ஆணையாளரின் வேண்டு கோளுக்கு இணங்க அமைதியானதும், சுதந்திரமானதுமான தேர்தல் ஒன்றை நடத்த தேவையான சகல ஒத்துழைப்புக்களை பொலிஸாரும், பாதுகாப்பு படையினரும் வழங்குவர்.

தேர்தல் சட்ட விதிமுறைகளை பொலிஸாரும், பாதுகாப்புப் படையினரும் கண்டிப்பாக அமுல்படுத்தத் தேவையான அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்த பொலிஸ் மா அதிபர் சட்ட விதிமுறைகளை மீறுவோருக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூறினார்.

அதன் விளைவுகளை சம்பந்தப்பட்டவர்கள் எதிர் கொள்ள தயாராக இருக்க வேண்டும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

தேர்தல் பாதுகாப்பு கடமையில் 58 ஆயிரத்திற்கு அதிகமான பொலிஸாரும் அவர்களுக்கு உதவியாக 19,800 முப்படையினர்கள் மற்றும் 2 ஆயிரம் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர்களும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என்றார்.

கடந்த தேர்தல்களுடன் ஒப்பிடுகையில் இந்த தேர்தல் காலத்தின் போது பாரிய அசம்பாவிதங்களோ வன்முறைச் சம்பவங்களோ இடம்பெறவில்லை என்று தெரிவித்த அவர் இதுவரை 298 முறைப்பாடுகளே பதிவு செய்யப்பட்டுள்ளது என்றும் குறிப்பட்டார்.

298 முறைப்பாடுகள் தொடர்பாக 301 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் 206 பேர் கைது செய்யப்படவுள்ளனர் என்றும் அவர் தெரிவித்தார்.

தேர்தல் தினத்தன்று அசம்பாவிதங்கள் எதுவும் இடம்பெறுவதை தடுக்கும் வகையில் சகல பொலிஸ் நிலையங்களையும் அண்மித்த பகுதியில் வீதித் தடைகள் அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த பொலிஸ் மா அதிபர் இதன் மூலம் சட்டவிரோத செயற்பாடுகள் இடம்பெறுவதை தடுக்க முடிவதுடன் ஆயுதங்களுடன் நடமாடுபவர்களை கைது செய்ய முடியும் எனவும் தெரிவித்தார்.
மேலும் இங்கே தொடர்க...

பொதுத் தேர்தல் நாளைமறுதினம் நாடெங்கும் உச்ச பாதுகாப்பு


*காலை 7 முதல் மாலை 4 மணிவரை வாக்களிப்பு

* 196 பேரை தெரிவு செய்ய 7620 பேர் களத்தில்

*மோசடி, குழப்பம் நிரூபணமானால் வாக்கெடுப்பு இரத்து

*58,700 பொலிஸ், அதிரடிப்படையினர் கடமையில்


ஏழாவது பாராளுமன்றத் தேர்தல் நாளை மறுதினம் (08) நடைபெறவுள்ளது. வாக்களிப்பு காலை 7 மணி முதல் பிற்பகல் 4 மணி வரை இடம்பெற உள்ளதோடு நேரகாலத்துடன் சென்று வாக்களிக்குமாறு தேர்தல்கள் ஆணையாளர் சகல வாக்காளர்களையும் கேட்டுள்ளார்.

225 உறுப்பினர்களைக் கொண்ட பாராளுமன்றத்தில் 196 உறுப்பினர்களை நேரடியாக தெரிவு செய்வதற்காக இந்தத் தேர்தல் நடத்தப்படுகிறது. 29 உறுப்பினர்கள் தேசியப் பட்டியல் மூலம் தெரிவு செய்யப்பட உள்ளனர்.

கடந்த பெப்ரவரி ஒன்பதாம் திகதி பாராளுமன்றம் கலைக்கப்பட்டு தேர்தல் அறிவிப்பு வெளியிடப்பட்டது. பெப்ரவரி 19ஆம் திகதி முதல் 26 ஆம் திகதி வரை வேட்பு மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன.

196 உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்காக 36 அரசியல் கட்சிகளும் 301 சுயேச்சைக் குழுக்களும் போட்டியிடுகின்றன. இவைகளின் சார்பாக 7620 பேர் போட்டியிடுகின்றனர். 2008 ஆம் ஆண்டு வாக்காளர் இடாப்பின் பிரகாரம் தேர்தல் நடைபெறுவதால் இம்முறை ஒரு கோடியே 40 இலட்சத்து 88 ஆயிரத்து 500 பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர்.

நாடு பூராவும் அமைக்கப்பட்டுள்ள 11,875 வாக்களிப்பு நிலையங்களில் வாக்களிப்பு நடைபெற ஏற்பாடாகியுள்ளது. வாக்குகளை எண்ணுவதற்காக 1,130 வாக்குகள் எண்ணும் நிலையங்களும் அமைக்க ப்பட்டுள்ளதாக தேர்தல்கள் திணைக்களம் தெரிவித்தது.

இடம்பெயர்ந்தோர்

இடம்பெயர்ந்தவர்கள் வாக்களிப்பதற்காக 48 வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப் பட்டுள்ளன. இவர்களை வாக்களிப்பு நிலையங்களுக்கு அழைத்துச் செல்வதற்காக 55 பஸ்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் தேர்தல் தினத்தன்று காலை 6 மணிக்கு காமினி மகா வித்தியாலயத்தில் இருந்து மேற்படி பஸ்கள் புறப்படும் என்று அறிவிக்க ப்படுகிறது. தேர்தல் கடமைகளில் 3 இலட்சம் அரசாங்க ஊழியர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர். இம்முறை கடந்த ஜனாதிபதித் தேர்தலை விட 50 ஆயிரம் பேர் கூடுதலாக சேவையில் ஈடுபடுத்தப்படுகின்றனர்.

தேர்தல் கடமையில் ஈடுபடும் அரசாங்க ஊழியர்களும் பொலிஸாரும் நேற்று (6) முதல் தமது வாக்களிப்பு நிலையங்களுக்கு செல்லத் தொடங்கியுள்ளதாக தேர்தல் திணைக்களம் கூறியது.

தபால் மூல வாக்களிப்புகள் கடந்த 25 மற்றும் 26ஆம் திகதிகளில் நடைபெற்றன. தபால் மூலம் வாக்களிப்பதற்கு 4 இலட்சத்து 77,110 பேர் விண்ணப்பித்திருந்தனர். இதில் 61,678 விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டதால் 4 இலட்சத்து 15432 பேருக்கே தபால் மூலம் வாக்களிக்க அனுமதி வழங்கப்பட்டது. தபால் மூல வாக்களிப்பு தினங்களில் வாக்களிக்க முடியாதவர்களுக்காக மார்ச் 30, 31 ஆம் திகதிகளில் வாக்களிக்க சந்தர்ப்பம் வழங்கப்பட்டிருந்தது.

கடும் பாதுகாப்பு

தேர்தலை முன்னிட்டு 58,700 பொலிஸாரும் மற்றும் அதிரடிப்படையினரும் தேர்தல் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 19,500 முப்படையினர் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ்மா அதிபர் அறிவித்துள்ளார். இது தவிர நாடு முழுவதும் உள்ள 413 பொலிஸ் பிரிவுகளிலும் உள்ள பொலிஸார் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். வாக்குச் சாவடிகள், வாக்குகள் எண்ணும் நிலையங்கள், வாக்குப் பெட்டிகள் எடுத்துச் செல்லும் பஸ்கள் என்பவற்றுக்கு பாதுகாப்பு வழங்க விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. வாக்களிப்பு நிலையங்களுக்குச் செல்லும் வீதிகளில் வீதித் தடைகள், இடப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட உள்ளதோடு ரோந்து நடவடிக்கையிலும் பொலிஸார் ஈடுபடுத்தப்பட உள்ளதாக தேர்தல் நடவடிக்கைகளுக்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் காமினி நவரத்ன கூறினார். தீவிர கண்காணிப்புக்கென நியமிக்கப்பட்டுள்ள 2584 நடமாடும் பாதுகாப்புப் பிரிவுகளும் நேற்று முன்தினம் முதல் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

வாக்களிப்பு நிலையங்களில் அசம்பாவிதங்கள் நடைபெற்றால் அதனை முறியடிப்பதற்காக துப்பாக்கிப் பிரயோகம் செய்வதற்கும் பொலிஸாருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பொலிஸார் தேர்தலுக்கு மறுதினம் வரை பாதுகாப்புக் கடமையில் ஈடுபடுத்தப்பட உள்ளதாகவும் அறிவிக்கப்படுகிறது.

இதேவேளை, நாடு பூராவும், சகல சட்டவிரோத கட்அவுட்கள், சுவரொட்டிகள் கொடிகள் என்பன அகற்றப்பட்டு வருவதாகவும் இதற்காக சிற்றூழியர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் காமினி நவரத்ன தெரிவித்தார். தேர்தல் பிரசாரங்கள் 5ஆம் திகதி நள்ளிரவு முதல் முடிவடைந்ததையடுத்து பிரதான கட்சிக் காரியாலயங்கள் தவிர்ந்த கட்சி காரியாலயங்கள் அகற்றப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

தேர்தல் முடிவடைந்து ஒரு வாரம் வரை ஊர்வலங்கள், பேரணிகள், ஆர்ப்பாட்டங்கள் என்பவற்றுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை வாக்களிப்பு நிலையமொன்றில் குழப்பங்களோ முறைகேடுகளோ இடம்பெற்றால் குறித்த வாக்களிப்பு நிலையத்தின் வாக்கெடுப்பை நிறுத்துமாறு தெரிவத்தாட்சி அதிகாரிகளுக்கு தேர்தல் ஆணையாளர் அறிவுறுத்தல் வழங்கியுள்ளார். தேர்தல் தினத்தில் முறைகேடுகள் நடந்தால் அதனை கவனிப்பதற்காக சகல பிரதேசங்களிலும் இணைப்புக் காரியாலயங்கள் அமைக்கப்பட்டுள்ளதோடு இவை இன்று (7) முதல் இயங்கும் என்றும் தேர்தல் திணைக்களம் கூறியது.

இந்த பிரதேச கண்காணிப்புப் பிரிவுகளுக்கு ஒரு உதவித் தெரிவத்தாட்சி அதிகாரி இரு பொலிஸார் மற்றும் மூன்று தேர்தல் அதிகாரிகள் வீதம் நியமிக்கப்பட்டுள்ளனர்.

சுதந்திரமானதும் நீதியானதுமான தேர்தலை நடத்துவதற்கான சகல ஏற்பாடுகளையும் முன்னெடுத்துள்ளதாக தேர்தல் திணைக்களம் கூறியது. சுதந்திரமாக தேர்தல்களை நடத்துவதற்கு ஒத்துழைக்குமாறு சகல அரசியல் கட்சிகளையும் வேட்பாளர்களையும் தேர்தல் ஆணையாளர் கோரியுள்ளார்.

வாக்களிப்பு நடைபெறுவதற்கு முன்னர் வாக்குப் பெட்டிகளுக்குள் ஸ்ரிக்கர்கள் ஒட்டுவதற்கு கட்சி பிரதிநிதிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதன் பின்னர் வாக்குப் பெட்டிகள் ‘சீல்’ வைக்கப்படும் எனத் தேர்தல் திணைக்களம் கூறுகிறது. இம்முறை தேர்தலில் கூடுதலான வேட்பாளர்கள் போட்டியிடுவதால் சில பகுதிகளுக்கு கூடுதலான வாக்குப் பெட்டிகள் அனுப்பப்பட உள்ளன. அத்தகைய வாக்குச் சாவடிகளில் கூடுதலான அரச ஊழியர்களை ஈடுபடுத்தவும் உள்ளதாக ‘>சூ>ஞ் திணைக்களம் தெரிவித்தது.

திகாமடுல்ல மாவட்டத்தில் 18 கட்சிகளும் 48 சுயேச்சைக் குழுக்களும் போட்டியிடுவதால் மிக நீளமான வாக்குச் சீட்டு தயாரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தேர்தலை முன்னிட்டு 19 ஆயிரம் கண்காணிப்பாளர்களை தேர்தல் கண்காணிப்புப் பணிகளில் ஈடுபடுத்த தேர்தல் கண்காணிப்புக் குழுக்கள் முடிவு செய்துள்ளன. பெப்ரல் அமைப்பு 9 ஆயிரம் கண்காணிப்பாளர்களையும் கெபே அமைப்பு 6,500 கண்காணிப்பாளர்களையும் ஈடுபடுத்த உள்ளன. இது தவிர நடமாடும் கண்காணிப்புக் குழுக்களையும் ஈடுபடுத்த அவை முடிவு செய்துள்ளன.

இதேவேளை முதலாவது பொதுத் தேர்தல் முடிவு நாளை (8) நள்ளிரவு 12 மணியளவில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 9ஆம் திகதி சகல முடிவுகளும் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய பாராளுமன்றம் ஏப்ரல் 22 ஆம் திகதி கூடும்.
மேலும் இங்கே தொடர்க...