27 ஜனவரி, 2010

நிறைவேற்று அதிகாரமுடைய ஆறாவது ஜனாதிபதியாக மகிந்தா மீண்டும்-


நிறைவேற்று அதிகாரமுடைய 06வது ஜனாதிபதியைத் தெரிவுசெய்வதற்காக நடந்துமுடிந்த தேர்தலில் மகிந்த ராஜபக்ச அவர்கள் 60,15,934 வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றுள்ளார். இந்தவகையில் அவர் இலங்கையின் அடுத்த ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ளார். மக்களின் வாக்குகளின் அடிப்படையில் 57.88வீதம் வாக்குகள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு அளிக்கப்பட்டுள்ளது. அதேபோல் எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளர் சரத்பொன்சேகா 41,73,185 வாக்குகளை பெற்றுள்ளார். இந்தவகையில் அவருக்கு 40.15சதவீத வாக்குகள் அளிக்கப்பட்டுள்ளன. இதனடிப்படையில் நோக்கும்போது இந்த ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அவர்கள் அமோக வெற்றியினை ஈட்டியுள்ளதுடன், ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் இரண்டாவது ஆட்சியும் ஆரம்பமாகியுள்ளது. இம்முறை தேர்தலில் மொத்தமாக பதிவுசெய்யப்பட்ட வாக்குகளின் எண்ணிக்கை 14,088,500 என்பதுடன் இவற்றுள் 10,495,451 வாக்குகள் அளிக்கப்பட்டுள்ளன. இதில் 10,3,93,613 வாக்குகள் செல்லுபடியான வாக்குகள் என்பதுடன் நிராகரிக்கப்பட்ட வாக்குகள் 10,1838ஆகும். மகிந்த ராஜபக்ச அவர்கள் எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளர் ஜெனரல் சரத்பொன்சேகாவை விட 18,42,749 மேலதிக வாக்குகளைப் பெற்று வெற்றிபெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

எனது வெற்றியானது நாட்டு மக்களின் வெற்றி-ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச-


6வது நிறைவேற்று அதிகார ஜனாதிபதியைத் தெரியும் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு வேட்பாளர் என்றரீதியில் தாம் அடைந்த வெற்றி, மக்களின் வெற்றியாகக் கருதப்பட வேண்டுமென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அறிவித்துள்ளார். மக்களினால் தமக்கு வழங்கப்பட்ட இந்த ஆணையை முழுமையாக ஏற்றுக்கொள்வதாக அவர் தெரிவித்துள்ளார். மாபெரும் வெற்றியாக இதனை கருதவேண்டும் எனவும், மக்களின் தெரிவு இந்த வாக்கெடுப்பில் வெளிப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஜனநாயக முறைமை தொடர்பில் மக்கள் நன்கு அறிந்துள்ளதாகவும், அதன் வெளிப்பாடே இத்தேர்தல் வெற்றியென்றும் அவர் தெரிவித்துள்ளார். நாட்டை கட்டியெழுப்புவதற்கு அனைவரும் அணிதிரண்டு ஒன்றிணைய வேண்டியகாலம் மலர்ந்துள்ளதென அவர் குறிப்பிட்டுள்ளார். தமக்கு வாக்களித்தோருக்கும், வாக்காளிக்காதோருக்கும் தாமே ஜனாதிபதியெனவும், அனைத்து மக்களும் சட்டத்தின்முன் சமமானவர்களே எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

தெம்பிலிகல குண்டுத் தாக்குதில் பௌத்த துறவியும் மற்றொருவரும் உயிரிழப்பு-

கம்பளை தெம்பிலிகல பிரதேசத்தில் இன்று 27ம் திகதி அதிகாலையில் இடம்பெற்ற கைக்குண்டு தாக்குதலில் பிக்கு ஒருவர் உள்ளிட்ட 02பேர் உயிரிழந்துள்ளனர். கம்பளை பொலிஸ்பிரிவுக்கு உட்பட்ட தெம்பிலிகலவிலுள்ள பௌத்த விஹாரையின்மீது நடத்தப்பட்ட கைக்குண்டுத்தாக்குதலில் படுகாயமடைந்த பௌத்தபிக்கு ஒருவரும் மேலுமொருவரும் உடனடியாக கம்பளை வைத்தியசாலைக்குக் கொண்டுசெல்லப்பட்டு அவசரசிகிச்சை அளிக்கப்பட்டபோதும் அவ்விருவரும் உயிரிழந்ததாக கம்பளை பொலிஸார் தெரித்துள்ளனர். இந்தத்தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடையவர்களை கைதுசெய்யும் நடவடிக்கைகளில் கம்பளை பொலிஸார் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் கம்பளை, நாவலப்பிட்டி ஆகிய பிரதேசங்களில் அசாதாரண நிலைமைகளைக் கட்டுப்படுத்தும் வகையில் இன்றுநண்பகல் 12 மணியளவில் கம்பளை மற்றும் நாவலப்பிட்டி பொலிஸ் பிரிவுகளில் விசேட பொலிஸ் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

தேர்தல்கள் ஆணையாளருக்கும், பொலீஸ் மாஅதிபருக்கும் பொது வேட்பாளர் கடிதம் அனுப்பிவைப்பு-


தனது உயிரின் பாதுகாப்புக்கும், சுதந்திரமான நடமாட்டத்துக்குமான பாதுகாப்பு சூழ்நிலையை ஏற்படுத்த நடவடிக்கையெடுக்குமாறு பொலீஸ் மாஅதிபருக்கும் பாதுகாப்பு தரப்பினருக்கும் உத்தரவிடுமாறு ஜெனரல் சரத்பொன்சேகா தேர்தல்கள் ஆணையாளரைக் கடிதமொன்றின் மூலம் கேட்டுள்ளார். தான் தற்போது எதிர்நோக்கியுள்ள நிலைமைகளை விளக்கியே அவர் தேர்தல் ஆணையாளருக்கு கடிதம் அனுப்பி வைத்துள்ளதாக கூறப்படுகிறது. தான் தங்கியிருக்கும் விடுதியைச் சூழ பெருமளவு படையினரும், பொலீஸ் அதிகாரிகளும் நின்றுகொண்டு அங்கு சென்றுவரும் அனைவரையும் சோதனையிடுவதுடன், தாம் வெளியில் செல்ல முடியாத விதத்தில் செயற்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். தன்னைக் கைதுசெய்ய அரசாங்கம் பிரயத்தனம் செய்வதாகவும், தான் தங்கியிருக்கும் விடுதிக்குள் படைவீரர்கள் உள்நுழைய முயல்வதாகவும் தெரிவித்துள்ள அவர், தனக்கு ஆதரவு வழங்கிய பலருக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாகவும் தேர்தல் ஆணையாளருக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். தேர்தல் நடைபெற்ற நேற்றைய தினத்தில் தன்னைக் கைதுசெய்ய அரசு உத்தரவிட்டுள்ளதாக கிடைத்த தகவலுக்கமைய தான் கொழும்பிலுள்ள குறித்த தனியார் விடுதிக்கு சென்று தங்கியிருந்ததாகவும் அதன்பின் தாம் வெளியில்செல்ல முடியாதவிதத்தில் நேற்றிரவு 11மணியளவில் படைவீரர்கள் சுற்றிவளைத்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். கொழும்பு சினமன் லேக் வியூ ஹோட்டலில் அவர் தங்கியுள்ளதாக கூறப்படுகின்றது.
மேலும் இங்கே தொடர்க...
6வது ஜனாதிபதி தேர்தலின் அனைத்து வேட்பாளர்களும் பெற்ற மொத்த



No Image


வாக்குகள்..!!!!
வேட்பாளர்.. பெற்றவாக்குகள்.. (வீதம்)..
மகிந்த ராஜபக்ச 6015934 (57.88)
சரத் பொன்சேகா 4173185 (40.15)
மொகமட் காசின் மொகமட் இஸ்மாயில் 39226 (0.38)
அச்சல அசோக சுரவீர 26266 (0.25)
சன்ன ஜானக்க சுகத்சிறி கமகே 23290 (0.22)
டபிள்யூ.வீ.மகிமான் ரஞ்சித் 18747 (0.18)
பீ.டீ.பி.சொலமன் அணுர லியனகே 14220 (0.14)
சரத் மனமேந்திரா 9684 (0.09)
எம்.கே.சிவாஜிலிங்கம் 9662 (0.09)
உக்குபண்டா விஜேகோன் 9381 (0.09)
லால் பெரேரா 9353 (0.09)
சிறிதுங்க ஜயசூரிய 8352 (0.08)
விக்கிரமபாகு கருணாரத்ன 7055 (0.07)
இட்ருஸ் மொகமட் இல்லியாஸ் 6131 (0.06)
விஜே டயஸ் 4195 (0.04)
சேனத் பின்னடுவ 3523 (0.03)
மொகமட் முஸ்தபா 3134 (0.03)
பத்தரமுல்ல சீலரத்ன தேரர் 2770 (0.03)
உபாலி சரத் கொஹன்கே 144 (0.03)
சேனாரத்ன டீ சில்வா 2620 (0.03)
அருண டீ சொய்சா 2618 (0.02)
முத்து பண்டார தெமினிமுல்ல 2007 (0.02)
மேலும் இங்கே தொடர்க...
மஹிந்த ராஜபக்சா 56 .வீத வாக்குகள் பெற்று மீண்டும் ஜனாதிபதி ஆசனத்தில்அமர்வார்
இது உறுதி




No Image

மஹிந்த ராஜபக்சா 56 இவீத வாக்குகள் பெற்று மீண்டும் ஜனாதிபதி ஆசனத்தில் அமர்வார்இது உறுதி என்று எமது கணிப்பீட்டில் காணப்படுகிறது வடக்கு மாகாண மக்கள் ஆதரவு கிழக்கு மாகாண மக்கள் ஆதரவு முழுமையாக மஹிந்தா அரசையே
விரும்புகிறது இப்பொழுது தமிழ் சிங்க மக்கள் நின்மதியை தேடி அலைகின்றார்கள் அது மஹிந்தா அரசால் தான் தரமுடியும் என்று எண்ணுகிறார்கள் யுத்தத்திற்கு பின் 6.மாத காலத்தி நாடு எத்தனையோ மாற்றங்களை எட்டியுள்ளது தமிழ் சிங்கள இனம் என்ற பேதமின்றி இலங்கையின் முழு பகுதிகளுக்கும் தமிழ் சிங்களமக்கள் சென்றுவரக்கூடிய சூழல் உள்ளது தபோது இலங்கை ஐரோப்பாக்கு நிகராக வளர்ந்து வருவதை
காண முடிகிறது .

மற்றும் தமிழ் மக்கள் பிரச்சை அறிந்தவர் மஹிந்த அவருடன்
பேசி ஒரு அரசியல் தீர்வை காணலாம் புதிதாக ஒருவர் வந்தால் அவருக்கு இலங்கையின் சாசனத்தை தெரிந்து மற்றும் அரசியல் கட்சிகளுடன் ஒரு புரிந்துணர்வை ஏற்படுத்தி ஒரு முடிவிற்கு வர ..3 .4 .ஆண்டுகள் தேவைஅதற்குள் அடுத்த ஜனாதி பதி தேர்தல் வந்துவிடும் இப்படி போனால் எமதுஇலங்கை பிரச்சனை . 60 .ஆண்டுகளாக இழுபட்டது போல் இனிமேலும்இழுபடவண்ணம் ஒரு அரசியல் தீர்வை எட்டுவதற்கு ஜனாதிபதி மஹிந்தராஜபஹ்சா அவர்களுக்கு இலங்கை மக்கள் வாக்களிப்பார்கள் என எமதுகணிப்பிட்டில் காணப்படுகிறது
இதுவே எமது நிலைபாடும் கூட மஹிந்த ராஜபக்சா வெற்றி நிச்சியம்
மேலும் இங்கே தொடர்க...
ஜனாதிபதி தேர்தல் அமைதி சூழலில் நடந்தது: பெப்ரல்

ஜனாதிபதி தேர்தல் சமாதானமான அமைதிமிக்க சூழலில் நடந்து முடிந்ததாக சுதந்திரமானதும் நீதியானதுமான தேர்தல்களுக்கான மக்கள் செயற்பாடு (டஅஊஊதஉக) அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளது.

மேற்படி அமைப்பை சேர்ந்த கண்காணிப்பாளர்களுக்கு 71 முறைப்பாடுகள் கிடைத்ததாகவும் இவற்றில் 35 முறைப்பாடுகளே உறுதிப்படுத்தப்பட்டதா கவும் அதில் நான்கு முறைப்பாடுகள் மட்டுமே பாரதூரமானதாக இருப்பதாகவும் அந்த அறிக்கையில் மேலும் கூறிப்ப ட்டுள்ளது.

தேர்தல் தினம் அமைதியாகவும் தேர்தல் சட்டத்தை பாரதூரமாக மீறும் சம்பவங்கள் இடம்பெறாமல் இருந்ததாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்ட போதிலும் முன்னர் கிடைத்த தகவல்களின்படி அமைப்புக்கு 757 முறைப்பாடுகள் கிடைத்திருப்பதாகவும் அதில் 578 உறுதிப்படுத்தப்பட்டதாகவும் அதில் 300 பாரதூரமானவை என்றும் அந்த அறிக்கையில் மேலும் கூறப்பட்டிருந்தது.
மேலும் இங்கே தொடர்க...
பொன்சேகா தேர்தல் விதிமுறைகளை மீறியதாக ஐ.ம.சு.மு. தேர்தல் ஆணையாளரிடம் முறைப்பாடு


ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்கெடுப் புக்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போதே எதிரணியின் ஜனாதிபதி வேட்பாளர் சரத் பொன்சேகா இலத்திரனியல் ஊடகங்களில் தோன்றி பேசியமை தேர்தல் விதிமுறைகளை மீறியுள்ளதாக ஐ. ம. சு. முன்னணி செயலாளர் அமைச்சர் சுசில் பிரேமஜயந்த் தெரிவித்தார்.

இந்த விடயம் தொடர்பாக தேர்தல் ஆணையாளரிடம் எழுத்து மூலம் முறைப்பாடு உடனடியாக செய்யப்பட்டதாக அவர் மேலும் தெரிவித்தார்.

ஜனாதிபதி தேர்தலுக்கான பிரசார நடவடிக்கைகள் அனைத்தும் கடந்த 23ம் திகதி நள்ளிரவுடன் முடிவடைந்துள்ள நிலையில் சரத் பொன்சேகா இலத்திரனியல் ஊடகங்களில் பேசியுள்ளமை தேர்தல் விதிமுறைகளை பாரிய அளவில் மீறியுள்ளார் என்றும் அமைச்சர் இங்கு சுட்டிக்காட்டினார்.

கொழும்பிலுள்ள தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையத்தில் நேற்று இரவு நடைபெற்ற விசேட செய்தியாளர் மாநாட்டில் அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த மேலும் தெரிவிக்கையில்,

தனக்குரிய வாக்குரிமை கிடைக்காமையை காரணமாக்கிக் கொண்டு செய்துள்ள தவறு தொடர்பாக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை சுட்டிக்காட்டியே தேர்தல் ஆணையாளருக்கு எழுத்து மூலம் அறிவித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

சரத் பொன்சேகா மட்டுமல்ல எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, முன்னாள் பிரதம நீதியரசர் ஆகியோர் தேர்தல் விதிமுறைகளை மீறி இலத்திரனியல் ஊட கங்களில் பேசியுள்ளனர் என்றும் அமைச்சர் தெரிவித்தார். ஜனாதிபதி தேர்தல் பிரசார நடவடிக்கை முடிவடைந்த குறிப்பிட்ட தினம் நள்ளிரவிலிருந்து ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி எதுவித பிரசார நட வடிக்கைகளிலும் ஈடுபடவில்லை என்றும் குறிப்பிட்டார்.

இலங்கையின் வரலாற்றில் ஐந்து நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிகள் இருந்த போதிலும் வரலாற்றில் முதல் தடவையாக இது போன்று சம்பளத்திற்கு முகம் கொடுக்க நேரிட்டுள்ளதாக தெரிவித்த அமைச்சர் எதிரணியினர் நாட்டு மக்களை ஏமாற்றியுள்ளதாகவும் குறிப்பிட்டனர்.

அமைச்சர்களான ரோஹித போகொல்லாகம, தினேஷ் குணவர்தன, பேராசிரியர் ஜீ. எல். பீரிஸ், டாக்டர் ராஜித சேனரத்ன, சம்பிக்க ரணவக்க, பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்ச, முன்னாள் அமைச்சர். எஸ். பி. திசாநாயக்க ஆகியோர் கலந்து கொண்டனர்.
மேலும் இங்கே தொடர்க...
ஜனாதிபத்தி தேர்தல் முடிவு

News Photo
.................
மஹிந்த .........................சரத்

மாத்தறை மாவட்டம் . 36428................. .. ....17219.

காலி மாவட்டம் ........... 25797. .2.............. . .. 27625 .

கண்டி ,,,,,,,,,,,,,,,..,,,,........ 22703. ................ . .. 15338 .

பதுளை ........................ ... 23758...................... .. 21946.

மோனராகேல ...... ........46731..................... ... 19990.

காலி அம்பம்கோடா . 33488........................ 19191.

கண்டி சென்கலகட ....... 28444........................ 25243.

மாத்தளை ......................... 32818........................ 25991.

ரத்னபுரா .............................. 31514...................... 14009.

தெகிவளை ....................... 19457........................ 24441.

யாழ் ...................................... 3296 ......................... 7914.

களுத்தறை ........................ 51330..................... 29719 .

ரத்னபுற கல்மாதுல ...... 34773 ............... 24283.

அனுராதபுர கக்கிரவ ..... 34101................. 18431.






மொத்தம்


மஹிந்த .............. . 1017963 .
பொன்சேகா .......684264.


வாக்கு எண்ணப்படும் தொகுதிஅனைத்திலும் மஹிந்தராயபக்சா முன்னணியில்
உள்ளார்
மேலும் இங்கே தொடர்க...
இதுவரை கிடைத்த தபால் மூலவாக்குகள்

News Photo
மேலும் இங்கே தொடர்க...
மேலும் இங்கே தொடர்க...
மஹிந்த ராஜபக்சா 56 .வீத வாக்குகள் பெற்று மீண்டும் ஜனாதிபதி ஆசனத்தில்அமர்வார்
இது உறுதி

No Image




மஹிந்த ராஜபக்சா 56 இவீத வாக்குகள் பெற்று மீண்டும் ஜனாதிபதி ஆசனத்தில் அமர்வார்இது உறுதி என்று எமது கணிப்பீட்டில் காணப்படுகிறது வடக்கு மாகாண மக்கள் ஆதரவு கிழக்கு மாகாண மக்கள் ஆதரவு முழுமையாக மஹிந்தா அரசையே
விரும்புகிறது இப்பொழுது தமிழ் சிங்கள மக்கள் நின்மதியை தேடி அலைகின்றார்கள் அது மஹிந்தா அரசால் தான் தரமுடியும் என்று எண்ணுகிறார்கள் யுத்தத்திற்கு பின் 6.மாத காலத்தி நாடு எத்தனையோ மாற்றங்களை எட்டியுள்ளது தமிழ் சிங்கள இனம் என்ற பேதமின்றி இலங்கையின் முழு பகுதிகளுக்கும் தமிழ் சிங்களமக்கள் சென்றுவரக்கூடிய சூழல் உள்ளது தபோது இலங்கை ஐரோப்பாக்கு நிகராக வளர்ந்து வருவதை
காண முடிகிறது .

மற்றும் தமிழ் மக்கள் பிரச்சை அறிந்தவர் மஹிந்த அவருடன்
பேசி ஒரு அரசியல் தீர்வை காணலாம் புதிதாக ஒருவர் வந்தால் அவருக்கு இலங்கையின் சாசனத்தை தெரிந்து மற்றும் அரசியல் கட்சிகளுடன் ஒரு புரிந்துணர்வை ஏற்படுத்தி ஒரு முடிவிற்கு வர ..3 .4 .ஆண்டுகள் தேவைஅதற்குள் அடுத்த ஜனாதி பதி தேர்தல் வந்துவிடும் இப்படி போனால் எமதுஇலங்கை பிரச்சனை . 60 .ஆண்டுகளாக இழுபட்டது போல் இனிமேலும்இழுபடவண்ணம் ஒரு அரசியல் தீர்வை எட்டுவதற்கு ஜனாதிபதி மஹிந்தராஜபஹ்சா அவர்களுக்கு இலங்கை மக்கள் வாக்களிப்பார்கள் என எமதுகணிப்பிட்டில் காணப்படுகிறது
இதுவே எமது நிலைபாடும் கூட மஹிந்த ராஜபக்சா வெற்றி நிச்சியம்

நடைபெற்று முடிந்த ஜனாதிபதி தேர்தலில் வெளியாகியுள்ள தபால் மூல வாக்களிப்பில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முன்னிலையில் உள்ளார். புத்தளம் மாவட்டத்தின் தபால் மூல வாக்கெடுப்பில் ராஜபக்ஷ 4988 வாக்குகளை பெற்று 66.70 வீத வாக்குகளை பெற்றுள்ளார். சரத் பொன்சேகா 2,464 வாக்குகளை பெற்று 32.95 வீத வாக்குகளை பெற்றுள்ளார்.

மொனறாகல மாவட்டம்
மகிந்த ராஜபக்ஷ 8871 வாக்குகளை பெற்று 69.76 வீத வாக்குகளை பெற்றுள்ளார். சரத் பொன்சேகா 3,795 வாக்குகளை பெற்று 29.84 வீத வாக்குகளை பெற்றுள்ளார்.

இரத்தினபுரி மாவட்டம்
மஹிந்த ராஜபக்ஷ 9,458 வாக்குகளை பெற்று 69.33 வீத வாக்குகளை பெற்றுள்ளார். சரத் பொன்சேகா 4143 வாக்குகளை பெற்று 30.37 வீத வாக்குகளை பெற்றுள்ளார்.

மேலும் இங்கே தொடர்க...