20 நவம்பர், 2010

புனித மக்காவில் இலங்கையர் ஐவர் மரணம்

இலங்கையிலிருந்து இம்முறை புனித ஹஜ் கடமைக்காக மக்கா சென்ற 5 பேர் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு தெரிவிக்கின்றது.

இம்மரணங்கள் இயற்கையானவை எனவும் அவ்வமைச்சு தெரிவிக்கின்றது.

இவர்களில் கொழும்பு மற்றும் மாத்தறையைச் சேர்ந்த இருவர் கடந்த புதன்கிழமை உயிரிழந்துள்ளனர்.

மற்றைய இருவரின் சடலங்கள் இதுவரை அடையாளங் காணப்படவில்லை.

அடையாளங் காணப்பட்ட பின்னர் ஜனாஸாக்களை கூடிய விரைவில் இலங்கை கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படுமெனவும், அவ்வமைச்சு தெரிவிக்கின்றது.

ஏற்கனவே காத்தான்குடியைச் சேர்ந்த பெண் ஒருவர் மரணமடைந்து, அவரது ஜனாஸா அங்கேயே நல்லடக்கம் செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
மேலும் இங்கே தொடர்க...

நிவாரணக் கிராமங்களின் எண்ணிக்கை 2 ஆக குறைப்பு புதிதாக நிர்மாணிக்கப்பட்ட 50 வீடுகள் இன்று கையளிப்பு

மீளக்குடியேறுவதற்காக முகாம்களில் காத்திருப்பவர்களின் எண்ணிக்கை குறைவடைந்துள்ளதால் தற்பொழுது ஐந்தாக செயற்படும் முகாம்களை இரண்டாகக் குறைத்துச் செயற்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதற்கான ஏற்பாடுகள் நேற்று முன்தினம் (18) ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் அலுவலகம் தெரிவித்தது, இதன்படி வலயம் நான்கிலிருந்த மக்கள் கதிர்காமர் முகாமுடன் இணைக்கப்பட்டுள்ளனர். அதே போன்று வலயம் 2, 3 ஆகிய வற்றில் தங்கியுள்ள மக்கள் வலயம் ஒன்றில் தங்க வைக்கப்படுவார்கள். சுமார் 18 ஆயிரம் பேர் வரை மட்டுமே இன்னமும் மீளக்குடியமர்த்தப்பட வேண்டியுள்ளனர். இதனால் நிர்வாக செயற்பாடுகளின் வசதி கருதி இரண்டு முகாம்களை மட்டும் செயற்படுத்த முடிவு செய்யப்பட்டு ள்ளதாக வவுனியா மாவட்டச் செயலகத்தின் பேச்சாளர் ஒருவர் தினகரனுக்குத் தெரிவித்தார். இதேவேளை, வவுனியா மற்றும் செட்டிக்குளம் ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளில் 518 புதிய வீடுகள் நிர்மாணிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். கற்குளம், நேரியகுளம் பகுதிகளில் ஓர் அரச சார்பற்ற நிறுவனம் இந்த வீடுகளை நிர்மாணித்துள்ளதாகவும் விரைவில் பயனாளிகளுக்குப் பொறுப் பளிக்கப்படுமென்றும் அவர் கூறினார்.

அதேநேரம், கனகராயன்குளத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள 50 வீடுகள் இன்று உரிய பயனாளிகளிடம் ஒப்படைக்கப்படுமென்றும் மாவட்டச் செயலகப் பேச்சாளர் குறிப்பிட்டார்.
மேலும் இங்கே தொடர்க...

வடக்கு, கிழக்கு உட்பட நாடெங்கும் மக்கள் மகிழ்ச்சிக் கொண்டாட்டம்



ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினது இரண்டாவது பதவியேற்பு வைபவத்தை யிட்டு வடக்கு, கிழக்கு உட்பட நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் பல்வேறு வைபவங்கள் நடைபெற்றன. இதனையிட்டு, பட்டாசுகள் கொளுத்தப்பட்டு மகிழ்ச்சியார வாரம் செய்யப்பட்டதோடு பாற்சோறு, இனிப்புக்களும் பரிமாறப்பட்டதாக நமது பிராந்திய நிருபர்கள் தெரிவிக்கின்றனர்.

அதேநேரத்தில் வடக்கில் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, மன்னார் மாவட்டங்களிலும் கிழக்கில், திருகோணமலை மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களிலும் ஜனாதிபதியின் இரண்டாவது பதவிக்காலத்துக்கான பதவியேற்பு வைபவத்தை ஒட்டி விசேட நிகழ்வுகளிலும், கொண்டாட்டங்களிலும் மக்கள் ஈடுபட்டுள்ளனர்.

இப்பகுதிகளிலுள்ள பெளத்த, இந்து, கிறிஸ்தவ, முஸ்லிம் வழிபாட்டுத் தலங்களில் இரண்டாவது தடவை ஜனாதிபதியாக பதவியேற்கும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு நல்லாசி வேண்டி விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெற்றன.

பொதுமக்கள் பட்டாசுகள் கொளுத்தி ஜனாதிபதியின் பதவியேற்பை மிகவும் மகிழ்ச்சிகரமாக கொண்டாடியதுடன் இனிப்புப் பண்டங்களையும் பரிமாறிக்கொண்டனர்.

இந்நிகழ்வுகள், நாட்டின் வடக்குக், கிழக்கு பகுதிகள் மட்டுமன்றி வட மத்திய மாகாணம், மத்திய மாகாணம் தென் மாகாணம், ஊவா மாகாணம் உட்பட நாட்டின் 9 மாகாணங்களிலும் சிறப்புற நடைபெற்றன.

அம்பாறையில் விசேட வைபவங்கள்

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இரண்டாவது பதவிப் பிரமாணத்தை முன்னிட்டும் பிறந்த தினத்தையொட்டியும் அம்பாறை மாவட்டத்தில் பல்வேறு வைபவங்களுடன் மத வழிபாடுகளும் இடம்பெற்றன.

நேற்று வெள்ளிக்கிழமை (19) அம்பாறை மாவட்டத்திலுள்ள பொத்துவில், திருக்கோவில், அக்கரைப்பற்று, அட்டாளைச்சேனை, நிந்தவூர், சம்மாந்துறை, லகுகல, அம்பாறை, இறக்காமம், சாய்ந்தமருது, கல்முனை, காரைதீவு, நாவிதன்வெளி, உகண மற்றும் சேரங்கடவெல போன்ற பிரதேச செயலகப் பிரிவுகளில் ஜனாதிபதியின் இரண்டாவது பதவியேற்பு நிகழ்வுகள் இடம்பெற்றன.

இப்பிரதேசங்களிலுள்ள கிராமங்களில் ஜனாதிபதியின் கட்அவுட்களும், பதாகைகளும், வாழ்த்துப் பலகைகளும் தொங்கவிடப்பட்டிருந்தன.

அரச மற்றும் தனியார் நிறுவனங்களில் தேசியக் கொடிகள் ஏற்றப்பட்டிருந்ததுடன் மின் விளக்குகளாலும் அலங்கரிக்கப் பட்டிருந்தன.

விகாரைகள், கோயில்கள், பள்ளிவாசல்கள் மற்றும் தேவாலயங்களில் ஜனாதிபதிக்கும் நாட்டு மக்களுக்கும் நல்லாசி வேண்டி மத வழிபாடுகள் இடம்பெற்றன. சில முஸ்லிம் பிரதேசங்களில் ஜும்ஆத் தொழுகையின் பின் விசேட பிரார்த்தனை வைபவங்களும் நடைபெற்றன.

வெவ்வேறு இடங்களில் ‘தெயட்ட செவன’ திட்டத்தின் கீழ் மரநடுகைத் திட்டங்களும் சிரமதானப் பணிகளும் நடைபெற்றன.

யாழ்ப்பாணத்தில் பல்வேறு நிகழ்வுகள்

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இரண்டாவது முறையாக பதவியேற்பதை கெளரவிக்கு முகமாக யாழ்ப்பாணத்திலும் பல நிகழ்வுகள் இடம்பெற்றன. சகல திணைக்களங்கள், வங்கிக் கிளைகள், கூட்டுஸ்தாபனங்கள், வைத்தியசாலைகள், கல்விக் கூடங்கள், நியதிச் சபைகள் வணக்கஸ்தலங்கள், படை முகாம்கள் என சகல இடங்களிலும் காலை 10.07 மணிக்கு தேசியக் கொடி ஏற்றி பணியாள ர்கள் கொடிவணக்கத்தில் ஈடுபட்டனர்.

அங்கெல்லாம் நடந்த நிகழ்வுகளில் ஜனாதிபதியின் சேவையைப் பபாராட்டியதுடன் புதிய பதவிக் காலத்தில் நாட்டை பொருளாதார சுபீட்சமிக்கதாக உருவாக்குவார் என நம்பிக்கை வெளியிட்டனர்.

யாழ்ப்பாணம் ஸ்ரீ நாக விகாரையில் விசேட பூஜைகளும் அதனைத் தொடர்ந்து ஏழைகளுக்கு உணவுப் பார்சல்கள் இடம்பெற்றன. பருத்தித்துறை போக்குவரத்துச் சபை சங்கானை பலநோக்குக் கூட்டுறவுச் சங்கம் ஆகியவற்றில் விழாக்களும் இடம்பெற்றன. நேற்றிரவு வங்கிகளும் மின்சாரசபை அலுவலகங்கள் வர்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தன.

இரத்தினபுரி மாவட்டத்தில்

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இரண்டாவது பதவியேற்பு வைபவத்தை முன்னிட்டு இரத்தினபுரி, காவத்தை, குருவிட்ட, எஹலியகொடை, கலவான, நிவித்தகலை, பலாங்கொடை, கொடக்கவெல, எம்பிலிபிட்டிய, இறக்குவானை, கொலன்ன, பெல்மதுளை, பல்லேபெந்த, ஆகிய நகரங்கள் மற்றும் கிராமங்களில் ஜனாதிபதியின் பதாதைகள் கட்டப்பட்டு மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தன.

இதேவேளை நேற்றுக் காலை ஜனாதிபதி பதவியேற்பு நிகழ்வு நடைபெற்ற வேளை இரத்தினபுரி மாவட்டத்தில் மேற்படி நகரங்கள், கிராமங்களில் உள்ள இந்து ஆலயங்கள், பெளத்த ஆலயங்கள், கிறிஸ்தவ, முஸ்லிம் ஆலயங்களில் விசேட பூஜை வழிபாடுகளும் இடம்பெற்றன.

மேற்படி வைபவத்தை முன்னிட்டு இரத்தினபுரி மாவட்டத்தில் பல்வேறு கிராம பகுதிகளில் கமநெகும, கெமிதிரிய ஆகிய அபிவிருத்தி திட்டங்கள் மூலம் உட்கட்டமைப்பு அபிவிருத்தி பணிகள் ஆரம்பித்து வைக்கப்பட்டன.

அத்தோடு பூர்த்தி செய்யப்பட்ட அபிவிருத்தித் திட்டங்களும் திறந்து வைக்கப்பட்டன.

பதுளையில்

‘சரித்திர நாயகர்’ ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் 2வது பதவியேற்பு விசேட வைபவத்தை முன்னிட்டு பதுளையிலும் மற்றும் பிரதேசங்களிலும் பல்வேறு விசேட நிகழ்வுகள் சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.

பதுளை நகரில் ‘பட்டாசு’ கொளுத்தி பொதுமக்கள் பெருமக்கள் தமது பெருமகிழ்ச்சியைத் தெரிவித்தனர்.

ஜனாதிபதி மஹிந்தவை வாழ்த்தி பதாதைகள், கொடிகள், அமைக்கப்பட்டிருந்தன.

சர்வமத ஸ்தலங்களிலும் விசேட நிகழ்வுகள், பிரார்த்தனைகள் இடம்பெற்றன.

பதுளை - புவக்கொடமுல்ல மஸ்ஜிதுல் ஜென்னத் பள்ளிவாசலில் ‘முதல் குத்பாவை’ நிகழ்த்திய இரத்தினபுரி கலீல் மெளலவி வரலாற்று முக்கியத்துவமிக்க இத்தினத்தில் ஜனாதிபதிக்கும், சகல நாட்டு மக்களுக்கும் இறை ஆசிவேண்டி விசேட பிரார்த்தனை புரிந்தார்.

அம்பாந்தோட்டை

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பிறந்த தினம், இரண்டாவது பதவியேற்பினை முன்னிட்டு நேற்று அம்பாந்தோட்டையில் உள்ள பாடசாலைகள், அரச நிறுவனங்கள், கூட்டுத்தாபனங்கள், தனியார் நிறுவனங்கள் என்பனவற்றில் தேசிய கொடி ஏற்றப்பட்டு ஜனாதிபதிக்கும் வாழ்த்து தெரிவித்து பாரிய படங்களும் தொங்கவிடப்பட்டுள்ளன.

பாடசாலைகள், விகாரைகள், பள்ளிவாசல்கள் என்பனவற்றில் ஜனாதிபதிக்கு ஆசி வேண்டி விசேட வழிபாடுகளும் நடைபெற்று வருகின்றன.
மேலும் இங்கே தொடர்க...

பேராயர் மல்கம் ரஞ்சித் இன்று கருதினால் ஆகிறார் வத்திக்கானில் விசேட வைபவம்


பேராயர் பேரருட்திரு மல்கம் ரஞ்சித் ஆண்டகை இலங்கையின் இரண்டாவது கருதினாலாக இன்று திருநிலைப்படுத்தப்படவுள்ளார்.

வத்திக்கான புனித பேதுருவான வர் பேராலயத்தில் நடைபெறும் விசேட வைபவத்தின் போது பரிசுத்த பாப்பரசர் 16வது ஆசிர்வாதப்பர் மல்கம் ரஞ்சித் ஆண்டகையை கருதினாலாக திருநிலைப்படுத்துவார். அந்த நிகழ்வு இன்று காலை 10.30 மணிக்கு இடம்பெறவுள்ளது.

கடந்த மாதம் கத்தோலிக்கத் திருச் சபையின் புதிய கருதினால்களின் பெயர்களை பரிசுத்த பாப்பரசர் உத்தியோகபூர்வமாக அறிவித்தார். அதற்கிணங்க இன்றைய திருநிலைப்படுத்தல் நிகழ்வில் பேராயர் மெல்கம் ரஞ்சித் ஆண்டகையுடன் 24 பேர் கருதினால்களாக பதவியேற்கின்றனர்.

புதிய கருதினால் பேரருட்திரு மெல்கம் ரஞ்சித் ஆண்டகையின் முதலாவது திருப்பலி வத்திக்கான பேராலயத்தில் எதிர்வரும் 23ம் திகதி நடைபெறுவதுடன், 27ம் திகதி அவர் மீண்டும் நாடு திரும்புகிறார். கட்டுநாயக்கா விமான நிலையத்தில் அவருக்கு மகத்தான வரவேற்பளிக்கப்பட்டு தேவத்தை பெஸிலிக்காவரை அவர் ஊர்வலமாக அழைத்து வருவதற்கான ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதனையடுத்து நன்றித் திருப்பலியொன் றையும் அவர் நிறைவேற்றவுள்ளார். அதேவேளை, எதிர்வரும் டிசம்பர் 4ம் திகதி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பிரதமர் டி.எம். ஜயரட்ன உட்பட சிரேஷ்ட அமைச்சர்கள் பங்கேற்கும் வைபவமொன்றும் இடம்பெறவுள்ளது.
மேலும் இங்கே தொடர்க...

இந்த யுவதியை உங்களுக் தெரியுமா?






வன்னியில் இறுதி யுத்தத்தின் போது மீட்கப்பட்ட யுவதி ஒருவர் தற்போது பூந்தோட்டம் பொலி ஸாரின் பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளார்.

21 வயதான விஜயகுமாரி அல்லது செந்தில் குமாரி என்ற பெயருடைய இவரின் தந்தையார் ரமேஷ் என்றும் தாயார் ராஜலக்ஷ்மி என்றும் தெரிவித்தார். நுவரெலியா லபுசிகலே பகுதியைச் சேர்ந்தவர் என பொலிஸாரிடம் இவர் தெரிவித்துள்ளார்.

படத்தில் காணப்படும் இவரின் தாய், தந்தையர் அல்லது உறவினர்கள் பூந்தோட்டம் பொலிஸாருடன் தொடர்பு கொள்ளுமாறும் இவரை அழைத்துச் செல்லுமாறும் பொலிஸார் கேட்டுக் கொள்கின்றனர்.

தனது வதிவிடத்தை சரியாக குறிப்பிட்டு கூற முடியாத நிலைமையில் இவர் இருப்பதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
மேலும் இங்கே தொடர்க...

சுபவேளையில் ஜனாதிபதி நேற்று பதவியேற்பு; காலிமுகத்திடல் விழாக்கோலம்; கண்கவர் நிகழ்வுகள்






ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இரண்டாவது பதவிப்பிரமாண வைபவம் நேற்று கொழும்பு காலிமுகத்திடலுக்கு அருகாமையில் உள்ள ஜனாதிபதி செயலக முன்றலில் வெகு விமரிசையாக நடைபெற்றது.

நேற்று மு.ப. 10.16க்கு சுபவேளையில் பிரதம நீதியரசர் அசோக டீ சில்வா முன்னிலையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இரண்டாவது தடவையாக நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக சத்தியப் பிரமாணம் செய்துகொண்டார்.

இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த வைபவத்தையொட்டி காலிமுகத்திடல் களைகட்டியிருந்ததுடன் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டிருந்தன.

முப்படையினரின் அணி வகுப்புடன் ஆரம்பமான இவ் வைபவத்திற்கு சிறப்பதிதிகளாக பிரதமர் டி. எம். ஜயரட்ண, மாலைதீவு ஜனாதிபதி, பூட்டான் பிரதமர், சபாநாயகர் சமல் ராஜபக்ஷ, அரசாங்கத்தின் சிரேஷ்ட அமைச்சர்கள், ராஜதந்திரிகள், மதத் தலைவர்கள், பாராளுமன்ற உறுப்பினர்களும் முக்கியஸ்தர்கள் பலரும் கலந்துகொண்டனர். ஜனாதிபதி செயலக முன்றலில் விசேட அரங்குகள் அமைக்கப்பட்டிருந்ததுடன் சூரிய பகவானின் இலாஞ்சனை பொறிக்கப்பட்ட விசேட மேடையில் சத்தியப் பிரமாணம் உத்தியோகபூர்வமாக நடைபெற்றதுடன் ஜனாதிபதியின் இரண்டாவது பதவியேற்பு தொடர்பான உத்தியோகபூர்வ அறிவித்தலை ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க தமிழ், சிங்கள, ஆங்கில மொழிகளில் நாட்டு மக்களுக்கு பகிரங்கமாக அறிவித்தார்.

முப்படைத் தளபதிகள் மற்றும் தமது பாரியார் புதல்வர்கள் சகிதம் இந்நிகழ்வில் ஜனாதிபதி பிரசன்னமாகியிருந்தார்.

உத்தியோகபூர்வ பதவியேற்பு நிகழ்வையடுத்து முப்படையினரின் மரியாதை அணிவகுப்பு இடம்பெற்றது. அத்துடன் 21 மரியாதை பீரங்கி வேட்டுக்களும் தீர்க்கப்பட்டன. நிகழ்வில் கலந்துகொண்டோர் தேசியக் கொடிகளை அசைத்து தமது மகிழ்ச்சியையும் வாழ்த்தினையும் தெரிவித்ததுடன் சுற்றுச் சூழலில் பட்டாசு கொளுத்தி பொதுமக்கள் தமது மகிழ்ச்சியை வெளிப்ப டுத்தினர். அதனைத் தொடர்ந்து கலாசார மத ரீதியான பல்வேறு அம்சங்கள் இடம்பெற்றன
மேலும் இங்கே தொடர்க...

வடக்கில் மக்களிடம் அதிகாரங்களை ஒப்படைப்பதே எமது எதிர்பார்ப்பு’ ஜனாதிபதி






வடக்கு மக்கள் மாகாண சபைக்கும் உள்ளூராட்சி சபைகளுக்கும் தமது பிரதிநிதிகளை தேர்ந்தெடுக்க சந்தர்ப்பம் வழங்குவதோடு அதனூடாக அதிகாரங்களை மக்கள் கைகளிலேயே ஒப்படைப்பதே தமது எதிர்பார்ப்பாகுமென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

வடக்கு, கிழக்கில் முன்னொருபோது மில்லாதவாறு செயற்றிட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்ட ஜனாதிபதி, அங்கு இடம்பெறும் ஒவ் வொரு அபிவிருத்தியும் பயங்கரவாதத்திற் கான வழிகளை மூடும் எனவும் தெரிவித்தார்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இரண்டாவது பதவியேற்பு நிகழ்வு நேற்று காலி முகத்திடலிலுள்ள ஜனாதிபதி செயலகக் கட்டிட முன்றலில் நடைபெற்றது. பிரதமர் டி.எம். ஜயரட்ன, சிரேஷ்ட அமைச் சர்கள், மதத் தலைவர்கள், ராஜதந்திரிகள் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் முக்கியஸ்தர்கள் பலரும் கலந்துகொண்ட இந்நிகழ்வில் நாட்டு மக்களுக்கு உரையாற் றும்போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார்.

அவர் தமதுரையில் மேலும் தெரிவித்த தாவது; ஐந்து வருடங்களுக்கு முன்னர் நீங்கள் என்னிடம் ஒப்படைத்த நாட்டை விட சிறந்த நாடொன்றிலேயே தற்போது நீங்கள் வாழ்கின்ஹர்கள் என்பது உண்மை.

வழங்கப்பட்ட பொறுப்பினை நிறை வேற்றி முன்பிருந்ததை விட சிறப்பான நாட்டைக் கட்டியெழுப்பிய பின் மக்கள் முன் உரையாற்றும் தலைவன் நான் என்பதில் மகிழ்ச்சியடைகின்றேன்.

கடந்த 2005 நவம்பர் 19ம் திகதி நான் பதவியேற்று நாட்டைப் பொறுப்பேற்றபோது இந்த நாடு இரண்டாகப் பிளவுபட்டிருந்தது.

இரவு பகல் எனப் பாராமல் பெரும் எதிர்ப்புகளுக்கு மத்தியிலும் பொறுப்புடனும் அர்ப்பணிப்புடனும் நான் செயற்பட்டமை சகலரும் அறிந்ததே.

அதனைத் தொடர்ந்து கடந்த வருடம் மே 19ம் திகதி பயங்கரவாதத்தை வென்று உலகின் பாராட்டைப் பெற்றுக்கொண்ட துடன் நாட்டை ஒன்றிணைத்தோம்.

இன்று நவம்பர் 19ம் திகதி எமது தாய் நாட்டை உலகின் முன்னிலையில் இலங் கையை உன்னத நாடாக உயர்த்துவதற்கான எதிர்பார்ப்புடனேயே பொறுப்பேற்கிறேன். 2005ம் ஆண்டு மஹிந்த சிந்தனை கொள் கைத் திட்டத்தை முன்வைத்து அதன் மூலம் நாட்டை மீட்டு ஐக்கியப்படுத்தினோம். இன்று முதல் மஹிந்த சிந்தனையின் எதிர் காலத் திட்டம் ஆரம்பமாவதுடன் அதன் மூலம் உலகின் உன்னத நாடாக இலங்கையைக் கட்டியெழுப்புவதே எமது இலக்கு. 2005 ல் இருந்தது போன்று பன்மடங்கு பலம் தன்னம்பிக்கையுடனேயே இம்முறை நாம் நாட்டைப் பொறுப்பேற்றுள்ளோம்.

நம்மில் பெரும்பாலானோர் தெற்கில் இரண்டு கிளர்ச்சியையும் வடக்கில் 30 வருட பிரிவினைவாதத்தையும் கண்டுணர்ந் தவர்கள். பிரிவினைவாதத்தைப் போன்றே கிளர்ச்சியின் மூலமும் நமது தாய்நாடு உலகப் படத்தில் அடிமட்டத்திற்கு வீழ்ச்சி யுற்றமையை நாம் கண்டுள்ளோம்.

இதனால் இன்னும் 20 அல்லது 30 வருடங்களில் நாடு மீண்டும் இரத்த ஆற்றில் மிதப்பதைத் தடுக்கவும் உலகின் முன்னி லையில் நாம் தனித்துவமாக எழுந்து நிற்கவும் வழிவகை செய்வதே எமது முதன்மையான நடவடிக்கையாகவேண்டும்.

அதற்காக எமது தாய் நாட்டில் இனங் களுக்கிடையிலான சமத்துவம் சமாதானம் நிலைப்பதற்கு வழி செய்வது அவசியம். அதனால்தான் நாட்டின் மக்கள் தொகையில் நூற்றுக்கு 80 வீதம் வாழும் கிராமப் பிரதேசங்களை முன்னேற்றுவதற்கு மஹிந்த சிந்தனை மூலம் தீர்மானித்தோம்.

இதனால் கொழும்பிற்கு வெளியே நகரங்கள் கிராமங்களில் கவிழ்ந்திருந்த இருள் நீங்கி ஒளியேற்பட்டுள்ளது. ஐந்து துறைமுகங்கள் ஏற்படுத்தப்பட்டதும் இத்தகைய பகுதிகள் உயர் பொருளாதார வலயங்களாக மாற்றம்பெறுவது உறுதி.

பாரிய அபிவிருத்தியை முன்னெடுக்கும் போது இன்னும் பல நகரங்கள் கட்டி யெழுப்பப்படும். இதன் மூலம் வர்த்தகம் வேலை வாய்ப்புத்துறைகளில் பாரிய முன்னேற்றம் ஏற்படும். பயங்கரவாதத் திடமிருந்து மீட்கப்பட்ட நாடு 2012 இறுதிக்குள் இருளிலிருந்து மீட்கப்பட்ட நாடாக ஒளிபெறும்.

அது மட்டுமன்றி எமது மின்சாரத் திட்டங்களின் மூலம் நாட்டின் சகல குடும்பங்களும் ஒளிபெறுவதும் உறுதி

எம்முன் உள்ள எதிர்காலமானது நாட்டிற்காக நாம் அனைவரும் உழைக்க வேண்டிய காலமாகும். பயனுள்ளதாகவும் வருமான மீட்டுவதாகவும் நாட்டை உயர்த்துவதே எமது எதிர்பார்ப்பு.

எமக்கு எமது இளைய தலைமுறை யினரின் மீது அதீத நம்பிக்கையுள்ளது. எமது இளைஞர்கள் முப்படைகளிலும் இணைந்து உலகம் பாராட்டும் வெற்றியை ஈட்டித் தந்தமையை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.

எமது எதிர்கால சந்ததியினர் முன்மொழி யிலும் கற்றுத் தேர்ந்து தொழில்நுட்ப ரீதியில் 75 வீதமாக முன்னேற்றமடைவதையே நாம் எதிர்பார்ப்பாகக் கொண்டுள்ளோம். நாம் இந்த நாட்டை அறிவின் கேந்திரமாக் கும்போதுஅவர்கள் அத்தகைய நிலையை எட்ட முடியும் என்பதே எமது நம்பிக்கை.

எமது நாட்டின் பிரச்சினைகளை இனங்காணவும் அதனைத் தீர்க்கவும் போதிய தெளிவு எம்மிடமுண்டு. இலங்கை வளர்ச்சியடைந்து வரும் நாடுகளின் ஒரு மாதிரி அல்ல. எந்தவொரு கருத்தை தெரிவிப்பதற்கும் தீர்மானங்களை எடுப்பதற்கும் உரித்துடையவர்கள்.

எமது நாட்டுக்குச் சாதகமான தீர்வையே நாம் தேடுவோம். பயங்கரவாதிகளினது எதிர்பார்ப்பும் மக்களுடைய எதிர்பார்ப்பும் ஒன்றல்ல என்பதை நாம் அறிவோம். வரலாற்றில் முன்னெப்போதும் இல்லாத செயற் திட்டங்களை நாம் வடக்கு கிழக்கில் மேற்கொண்டுள்ளோம்.

வடக்கு, கிழக்கில் இடம்பெறும் சகல அபிவிருத்திகளும் பயங்கரவாதத்திற்கான வழிகளை இல்லாதொழிப்பது உறுதி. வறுமையை ஒழிப்பதும் உட்கட்டமைப்பு வசதிகளை வழங்குவதும் அரசியல் தீர்வின் பாரிய பகுதியாகும் என்பதே எனது நம்பிக்கை.

வடக்கு மக்கள் ஜனாதிபதித் தேர்தலில் சுதந்திரமாக வாக்களித்துள்ளார்கள். பொதுத் தேர்தலில் தமது பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுத்துள்ளனர். எதிர்காலத்தின் உள்ளூராட்சி சபைகளுக்குப் பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுக்கும் வாய்ப்பு அவர்களுக்கு வழங்கப்படும். இதன் மூலம் மக்கள் கைகளிலேயே அதிகாரங்களை வழங்க நாம் எதிர்பார்க்கின்றோம்.

எமது வெளிநாட்டுக் கொள்கையானது பிளவுபடாத கொள்கையாகும். கடந்த யுகத்தில் தேசிய பாதுகாப்புக்காக நாம் பல நாடுகளுடன் இணக்கப்பாட்டுடன் செயற்பட்டோம். தற்போது உருவாகியுள்ள அபிவிருத்தி யுகத்தில் அதற்காக 1திங்ழி ஒத்துழைப்பு வழங்கும் நாடுகளுடன் நட்புக்கரம் நீட்டுவோம்.

சமாதானமின்றி அபிவிருத்தியில்லை. அபிவிருத்தியின்றி சமாதானமில்லை. அதனால் தேசிய பாதுகாப்புக்காக நட்புறவு கொண்ட நாடுகளுடன் உறவுகளை பலப்படுத்திக்கொண்டு புதிய தொடர்புகளை ஏற்படுத்தவும் நாம் நடவடிக்கை எடுப்போம்.

கஷ்டமான விடயங்கள் என கைவிடுவது எமது கலாசாரமல்ல. நாட்டை மீட்பது மட்டுமன்றி தற்காலத்தில் இந்த சமூகம் மீள முடியாது என சிலர் நினைக்கின்ற பிரச்சினைகளுக்கும் தீர்வு காண்பதற்கு நாம் பின்னிற்கப்போவதில்லை.

கடந்த பொதுத் தேர்தல் மற்றும் ஜனாதிபதித் தேர்தலிலும் தொகுதி வாரியாக வேறு எந்த நாடும் எட்ட முடியாத வெற்றியை நாம் பெற்றுள்ளோம். பாதாள உலகமற்ற சட்டவிரோத செயல்களற்ற, கப்பம், ஆயுதப் பரிமாற்றமற்ற நாட்டை கட்டியெழுப்புவதே எமது எதிர்பார்ப்பு.

எதிர்கால வெற்றிகளின் முக்கிய பங்காளிகளாக இந்நாட்டுப் பிரஜைகள் அனைவரும் திகழவேண்டும் என்பதே எமது அவா. அதற்காக இன, மத, குல, அரசியல், கட்சி பேதமின்றி எம்முடன் இணையுமாறு நான் அழைப்பு விடுக்கின்றேன்.

இந்நாட்டை உயர்ந்த இடத்திற்கு நான் கொண்டு வந்துள்ளேன். நீங்கள் என்னை உயர்த்துவதற்கு வேறு இடமில்லை. எனது தாய்நாடு அன்றி உயர்ந்தது என்று எனக்கு எதுவுமில்லை.

நான் ஓய்வு பெற்ற நாளில் மெதமுலன வீட்டிலேயே இருப்பேன். அந்நாட்களில் இந்த நாட்டின் பிரஜையொருவர் என்னை வந்து பார்த்து ‘நீங்கள் நாட்டுக்கு செய்ய வேண்டிய கடமையை நிறைவேற்றியுள்ழர்கள்’ என பெருமையுடன் கூறினால் அதுவே எனக்கு பெரும் திருப்தி எனவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.
மேலும் இங்கே தொடர்க...