17 ஜனவரி, 2010

தமிழ்க் கூடட்மைப்பு பாராளுமன்ற உறுப்பினர் சந்திரநேரு சந்திரகாந்தன் துப்பாக்கிச்சூட்டில் காயம்-

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அம்பாறை மாவட்ட எம்.பி சந்திரநேரு சந்திரகாந்தனின் கைத்துப்பாக்கி தவறுதலாக வெடித்தமையால் காயமடைந்துள்ளார். இச்சம்பவம் இன்றுபிற்பகல் 3.30மணியளவில் இடம்பெற்றதாக திருக்கோவில் பொலீசார் தெரிவித்துள்ளனர். திருக்கோவில் பிரதேசத்திலுள்ள தனது இல்லத்தில் கட்சி ஆதரவாளர்களுடன் கலந்துரையாடிக் கொண்டிருக்கும் வேளையிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றதாகவும் பொலீசார் குறிப்பிட்டுள்ளனர். இதன்போது காலில் காயமடைந்த பாராளுமன்ற உறுப்பினர் சந்திரநேரு சந்திரகாந்தன் தற்போது அக்கரைப்பற்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைபெற்று வருவதாக கூறப்படுகின்றது. இச்சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை திருக்கோவில் பொலீசார் மேற்கொண்டு வருகின்றனர்.

புலிகளின் பொறுப்பாளர் கேணல் ராம் கைதாகவில்லை

-இராணுவப் பேச்சாளர்- புலிகளின் முக்கிய பொறுப்பாளர்களில் ஒருவரான கேணல் ராம் இதுவரை கைதாகவில்லை என இராணுப்பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்துள்ளார். கேணல் ராம் கைதுசெய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டதாக ஜெனரல் சரத்பொன்சேகா தரப்பினர் வெளியிட்டுவரும் பிரச்சாரங்கள் உண்மைக்குப் புறம்பானவை என அவர் மறுப்பறிக்கையும் விடுத்துள்ளார். கேணல் ராம் மீண்டும் பயங்கரவாத நடவடிக்கைகளை மேற்கொள்ளக்கூடும் எனவும், இதனால் தேர்தலுக்கும், பொதுமக்களுக்கும் பாதிப்பு ஏற்படக்கூடும் எனவும் ஜெனரல் சரத் பொன்சேகா தரப்பினர் எச்சரிக்கை விடுத்துள்ளதாக ஆங்கில ஊடகமொன்று கூறியுள்ளது. குறித்த புலி பொறுப்பாளர் கிழக்கு காட்டுப் பகுதியில் மறைந்திருக்கக் கூடுமென இராணுவத்தினர் சந்தேகித்துள்ளனர்.

மாத்தளை நகரசபை உறுப்பினரின் வீட்டின்மீது துப்பாக்கிச்சூடு-

மாத்தளை நகரசபை உறுப்பினர் ஒருவரின் வீட்டின்மீது நேற்றிரவு துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அச்சுறுத்தல் விடுப்பதற்காக இந்த துப்பாக்கிப் பிரயோகம் நடத்தப்பட்டிருக்கலாமென பொலீசார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். சம்பவத்துடன் தொடர்புடையவர்களை அடையாளம் காண்பதற்கான விசாரணைகளை பொலீசார் ஆரம்பித்துள்ளனர். இதனிடையே கேகாலை மாவனல்ல பகுதியில் நேற்றுப்பிற்பகல் இரு குழுக்களிடையே ஏற்பட்ட தகராறு முற்றியதால் அமைதியின்னை ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. இதன்போது கற்களும் தடிகளும் வீசி தாக்குதல் நடத்தப்பட்டதால் எதிர்க்கட்சி ஆதரவாளர்களின் வாகனங்களுக்கு சேதமேற்பட்டுள்ளதாக பொலீசார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவத்தின்போது தமது வீட்டுக் கூரைக்கு சேதமேற்பட்டுள்ளதாக ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பிரதேச அரசியல்வாதியொருவர் முறைப்பாடு செய்துள்ளதாகவும், இது தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் தேர்தல் நடவடிக்கைகளுக்குப் பொறுப்பான சிரேஸ்ட பிரதிப் பொலீஸ் மாஅதிபர் காமினி நவரத்ன தெரிவித்துள்ளர்.

ஆளும்கட்சி அதிகளவில் அரச சொத்து துஸ்பிரயோகம்-

பாக்கியசோதி சரவணமுத்து- ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு அதிகளவில் அரசாங்க சொத்து துஸ்பிரயோகத்தில் ஈடுபட்டுவருவதாக மாற்றுக் கொள்கைகளுக்கான கேந்திர நிலையத்தின் தலைவர் பாக்கியசோதி சரவணமுத்து தெரிவித்துள்ளார். அரச ஊடகங்கள் மிகவும் மோசமான முறையில் தேர்தல் சட்டங்களை மீறிச் செயற்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. அரசஅதிகாரிகள், கட்டடங்கள், வாகனங்கள் உள்ளிட்ட அரச சொத்துக்கள் துஸ்பிரயோகம் செய்யப்படுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் மற்றும் லேக்ஹவுஸ் ஊடக நிறுவனம் ஆகியன அரச சொத்துக்களை துஸ்பிரயோகம் செய்வதாக அவர் குறிப்பிட்டுள்ளார். பொது சொத்துக்கள் தனிப்பட்ட அரசியல்கட்சிகளின் தேவைகளுக்கு பயன்படுத்தப்படக் கூடாது எனவும், பொதுமக்களின் நலன்களுக்காக பயன்படுத்தப்பட வேண்டும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 17வது திருத்தச் சட்டமூலம் அமுல்படுத்தப்படும் வரையில் சுயாதீனமான முறையில் தேர்தல்களை நடத்துவதில் சிக்கல்நிலை தொடரும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.


தாண்டிக்குளம் பஸ் விபத்தில் இருவர் பலி, 13பேர் காயம்-

வவுனியா தாண்டிக்குளத்தை அண்மித்துள்ள கொக்குவெளி பிரதேசத்தில் அமைந்துள்ள 561வது படைப்பிரிவின் தலைமையகத்திற்கு அருகில் பயணிகள் பஸ் ஒன்று விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்துள்ளனர். இந்த பஸ் விபத்து இன்றுஅதிகாலை 1மணியளவில் இடம்பெற்றதாக வவுனியா பொலீசார் தெரிவித்துள்ளனர். யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த தனியார் பஸ் வண்டியொன்று வேகத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் வீதியைவிட்டு விலகி மரத்தில் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. இவ்விபத்தில் குறித்த பஸ்சின் சாரதியும், பயணியொருவருமே உயிரிழந்துள்ளனர். இதன்போது மேலும் 13பேர் காயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைபெற்று வருகின்றனர்.
மேலும் இங்கே தொடர்க...
தேசிய சுதந்திர முன்னணியின் குற்றச்சாட்டை அமெரிக்காஇ நோர்வே தூதரங்கள் மறுப்பு

No Image
ஜனாதிபதி தேர்த லில் சரத் பொன்சேகாவுக்கு ஆதரவளிப்பதற்குஇ தேசிய சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஸாமிலுக்கு கொடுப்பதற்காக நோர்வேயும் அமெரிக்காவும் நிதி வழங்கியதாக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டை அந்த இரண்டு நாடுகளும் மறுத்துள்ளன.

மற்றொரு நாட்டின் தேர்தலில் தலையிடுவதை தாம் விரும்பவில்லை நோர்வே தமது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.இந்தநிலையில்இ தமது நாடு குறித்த நிதியை வழங்கியதாக தெரிவிக்கப்பட்ட குற்றச்சாட்டை இலங்கையில் உள்ள நோர்வே தூதரகம் மறுத்துள்ளது.

இதேவேளை அமெரிக்காவும் தம்மீதான இந்தக்குற்றச்சாட்டை மறுத்துள்ளது. இலங்கையின் தேர்தலில் யார் வெற்றிபெற்றாலும் ஜனநாயகம் முன்னெடுக்கப்படவேண்டும் என கோரியுள்ள இலங்கையில் உள்ள அமெரிக்க தூதரகம்இ வெற்றிபெற்றவருடன் இணைந்து செயற்பட அமெரிக்கா தயாராக உள்ளது என்றும் தெரிவித்துள்ளது
மேலும் இங்கே தொடர்க...

புனர்வாழ்வு அளிக்கப்பட்ட 566 முன்னாள் போராளிகள் விடுதலை

No Image
அரசாங்கப் பா து காப்புப் படையினரிடம் சரணடைந்துஇ புனர்வாழ்வு அளிக்கப்பட்ட தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்களில் 566 போ் இன்றைய தினம் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்களைஇ அவர்களது உறவினர்கள் மற்றும் பெற்றோரிடம் வவுனியாவில் வைத்து ஒப்படைத்ததாக நீதி மற்றும் சட்ட மறுசீரமைப்பு அமைச்சின் செயலாளர் சுகத கம்லத் தெரிவித்துள்ளார்.

புனருத்தாபன நிலையங்களில் விடுதலைப் புலிகளின் மனநிலை விருத்தி செய்யும் விசேட செயற்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

விடுதலை செய்யப்பட்டவர்கள் அவர்களது சொந்த இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது




தாய்லாந்து ஐ.டீ.சி சிறையில் உள்ள இலங்கை அகதிகள் உண்ணாவிரதப் போராட்டம்


தா No Image ய்லாந்து பா ங்கொக் நகரிலுள்ள ஸ்வொன் புளு என்னுமிடத்தில் அமைந்துள்ள தாய்லாந்து குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் ஐ.டீ.சி சிறையில் நீண்டகாலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள யூ.என்.எச்.சீ.ஆர் இலங்கை அகதிகள் எதிர்வரும் 18 ஆம் திகதி முதல் உண்ணாவிரதப் போராட்டத்தினை ஆரம்பிக்கவுள்ளனர்.

பல வருடங்களாக ஐ.டீ.சீ சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் இந்த யூ.என்.எச்.சீ.ஆர் அகதிகள் மேற்படி ஐ.சீ.சி சிறைச்சாலையிலிருந்து தங்களை விடுதலை செய்யும்படியும் அல்லது வேறொரு அகதிகள் முகாமிற்கு தங்களை மாற்றும்படியும் கோரி மேற்படி உண்ணாவிரதப் போராட்டத்தினை ஆரம்பிக்கவுள்ளனர்.

மேற்படி கைதிகள் ஆண்கள்இ பெண்கள் மற்றும் சிறுவர்கள் என வெவ்வேறாகப் பிரிக்கப்பட்டு குற்றவியல் கைதிகள் போன்று சுமார் மூன்று வருடங்களுக்கும் மேலாக எவ்வித அடிப்படை வசதிகளுமற்ற வகையில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இவர்களின் விடுதலைக்கான முன்னெடுப்புக்கள் எதுவுமின்றி இவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதால் இவர்கள் தங்களை மிக விரைவில் விடுதலை செய்ய வேண்டும் அல்லது வேறொரு அகதி முகாமிற்கு மாற்றவேண்டும் என்றும் கோரியே மேற்படி உண்ணாவிரத்தை மேற்கொள்ளவுள்ளனர்.

இவர்களின் நிலைமைகள் மற்றும் விடுதலை தொடர்பிலும்இ இவர்கள் முன்னெடுக்கவிருக்கும் உண்ணாவிரதம் பற்றியும் மனித உரிமை நிறுவனம்இ தாய்லாந்திலுள்ள யூ.என்.எச்.சீ.ஆர் அலுவலகம்இ ஜெனீவா யூ.என்.எச்.சீ.ஆர் அலுவலகம். சிறுவர் பாதுகாப்புச் சபை போன்ற நிறுவனங்களுக்கு எழுத்து மூலமாகவும்இ மின்னஞ்சல் மூலமாகவும் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அறிவிக்கப்பட்டிருந்தும் இதுவரை எந்தவொரு மனித உரிமை நிறுவனமும் அவர்களைச் சென்று பார்வையிட்டு அவர்களின் பிரச்சினைகளை கேட்டறியாத நிலையில்இ 15ஆம் திகதி மாலை 5.00 மணியளவில் தாய்லாந்திலுள்ள மனித உரிமைகள் நிறுவன அதிகாரிகள் சிறையிலுள்ள ஆண்இ பெண்இ சிறுவர்கள் என அகதிகள் அனைவரையும் சென்று பார்வையிட்டு அவர்கள் முன்னெடுக்கவுள்ள உண்ணாவிரதம் சம்பந்தமாக உரையாடியுள்ளனர்.

அவ்வாறு உரையாடியுள்ள போதிலும்இ உண்ணாவிரதத்தை கைவிடுவது பற்றியோ அல்லது உண்ணாவிரதத்தை ஆரம்பிக்க வேண்டாமென்றோ தெரிவிக்காத இவர்கள் உண்ணா விரதத்திற்கான காரணங்களை நிவிர்த்திப்பது தொடர்பிலும் எந்தவித அறிவித்தலையோ கருத்துக்களையோ தெரிவிக்காது திரும்பிச் சென்றுள்ளனர்.

இவ்வாறான நிலைமையில் திட்டமிட்டபடி எதிர்வரும் 18.01.2010 அன்று உண்ணாவிரதப் போராட்டம் ஆரம்பிக்கப்படுமென தாய்லாந்து சிறையிலுள்ள அகதிகள் தெரிவிக்கின்றனர்.

கேணல் ராம் ஒருபோதும் கைது செய்யப்படவில்லை:இராணுவ பேச்சாளர்


தமிழீழ விடுதலை No Image ப்புலிகளின் தளபதிகளில் ஒருவ ரான கேணல் ராம்இ அரசாங்க த்தி னால் விடுவிக்க ப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளர் சரத் பொன்சேகாவின் தரப்பு தெரிவித்திருந்ததை அரச தரப்பு மறுத்துள்ளது.

தடுப்பு காவலில் இருந்து தமிழீழ விடுதலைப்புலிகளின் தளபதிகளில் ஒருவரான கேணல் ராம் விடுவிக்கப்பட்டுள்ளதாக சரத் பொன்சேகாவின் தரப்பு அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டுள்ளது.

இந்தநிலையில் கேணல் ராம் மறைந்திருக்கும் தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு தலைமை தாங்கும் நிலை ஏற்படலாம் என தெரிவித்துள்ள அந்த அறிக்கையில்இ இது தேர்தலை மாத்திரமன்றி பொதுமக்களின் வாழ்க்கையையும் சீர்குலைக்கும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதேவேளை இந்த அறிக்கை தொடர்பில் கருத்துரைத்துள்ளஇ இலங்கை இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்காரஇ கேணல் ராம் என்ற தமிழீழ விடுதலைப்புலிகளின் தளபதியை படையினர் ஒருபோதும் கைதுசெய்திருக்கவில்லை எனக்குறிப்பிட்டுள்ளார். கேணல் ராம் கிழக்கில் மறைந்திருக்கலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.


ஐ.நா தலைமையகத்தை டுபாய்க்கு மாற்ற நடவடிக்கை

News Photo
2015ஆம் ஆண்டில் ஐக்கியநாடுகள் சபையின் தலைமையகத்தை நியூயார்க்கிலிருந்து டுபாய்க்கு மாற்றுவதற்கான முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. ஐக்கியநாடுகள் சபைக்கு தலைமையகம் அமைப்பதற்கான இடம் தர தயார் என துபாய் அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது .ஏற்கனவே இந்த வாய்ப்பு சிங்கப்பூருக்கு இருந்தது.

ஐக்கிய நாடுகள் சபையின் தலைமையகம் அமெரிக்காவில் செயல்பட அமெரிக்காவுக்கு விருப்பமில்லாத காரணத்தால் அதனை நியூயார்க்கிலிருந்து மாற்றுவதற்கான தீர்மானம் எடுக்கப்பட்டது. ஆனால் உலக நாடுகளின் தலைமையகமான ஐக்கியநாடுகள் சபைக்கு உலக நாடுகள் அனைத்திற்கும் எளிதில் செல்வதற்கான இடமாக இருக்க வேண்டுமென்பது இதன் முக்கிய நோக்கமாகும்.

இது தொடர்பான பேச்சுவார்த்தைகளுக்கு .நா அதிகாரிகளை அழைத்துள்ள டுபாய் அரசு தலைமையகத்தை துபாயில் அமைப்பதால் ஏற்படும் சாதகங்களை குறித்து .நா அதிகாரிகளுக்கு தெளிவுப்படுத்த தயாரென்றும் கூறியுள்ளது.

பூகோள அமைப்பில் டுபாய்க்கு நிறைய சிறப்புகள் உண்டு. உலகத்தின் எந்த மூலையிலிருந்தும் எளிதாக சென்றடையக் கூடிய நகரம்இ உலகத்திலேயே மாநாடு நடத்துவதற்கான இடமாகவும் துபாய் கருதப்படுகிறது. சர்வதேச தரத்திலான அடிப்படை வசதி வாய்ப்புகள் நிறைந்த இடமாகவும் துபாய் கருதப்படுகிறது. கடல்வழிஇ விமான வழிஇ சாலை வழி போக்குவரத்து வாய்ப்புகள் ஐக்கியநாட்டு சபை போன்ற எப்பொழுதும் பரபரப்பாக இயங்கும் அமைப்பிற்கு ஏற்ற இடமாக துபாய் கருத்தில் கொள்ளப்படுகிறது.

உலக சமாதானத்திற்கும்இ பொருளாதார முன்னேற்றத்திற்காகவும் .நா நடத்தும் முயற்சிகளுக்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாகத்தான் .நா வின் தலைமையகத்தை துபாய்க்கு கொண்டுவருவதற்கான முயற்சி என்றும் அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது. இத்தகைய முயற்சிகள் அதிகமான தொடர் பங்களிப்பை உறுதிச்செய்யும் விதமாக .நா தலைமையகத்தின் இடம் மாற்றம் தங்களுக்கு உதவும் என துபாய் அரசு அறிவித்துள்ளது.

இதற்கிடையே போர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்டுள்ள செய்தியில் .நா சபை அமெரிக்காவில் இருப்பதால் செலவுகள் அதிகரித்து அது அமெரிக்கா குடிமகன்கள் மீது வரிச்சுமையை ஏற்படுத்துவதாக கூறியுள்ளது சர்ச்சையை கிளப்பியுள்ளது. இந்த செய்தி அறிக்கையிலும் ஆப்பிரிக்காஇ ஆசியாஇ ஐரோப்பா நாடுகளில் அதிக வசதிகள் உள்ள துபாய்தான் எதிர்காலத்தில் உலகத்தின் தலைமையகமாக சிறந்தது என்றும் "யுனைட்டட் நேசன்ஸ் சிட்டி" துபாய் என்றும் கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இங்கே தொடர்க...

ஜனநாயகத்திற்கான மாறுதல்: கனடாவில் இடம்பெற்ற சுந்தரம் நினைவுதினம்!

நேற்றையதினம் கனடா ரொறன்ரோ நகரில் புதிய பாதை ஆசிரியர் சுந்தரம் அவர்களின் 28வது நினைவுதினம் மிகவும் சிறப்பாக நேற்றையதினம் மண்டபம் நிறைந்த பார்வையாளர்களுடன் இடம்பெற்றது. மார்க்கம் 2401 டெனிசன் வீதியில் அமைந்துள்ள மண்டபத்தில் நேற்றுமாலை 5:00 மணிக்கு நிகழ்வுகள் மௌன அஞ்சலியுடன் ஆரம்பமானது. ஜனநாயகத்திற்கான மாற்றத்தின் வெளிப்பாட்டை நேற்றைய கூட்டத்தில் வெளிப்படையாகவே காணமுடிந்தது.

பல்வேறு பாதைகள் கொள்கைகளை கொண்ட பலரும் மேற்படி நினைவுகூரல் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றினர். புளொட் அமைப்பின் சார்பில் சாரங்கன் அவர்களின் தொகுப்புடன் கூடிய ஆரம்ப உரையுடன் ஆரம்பமான நிகழ்வில் மாணவர் பொதுமன்றத்தின் பொது செயலர் டேவிற்சன். யாழ் நோர்த்தன் பிறின்ரஸ் உரிமையாளரும் இடதுசாரி உறுப்பினருமான மணியம், இலங்கை சட்டத்தரணி சிவகுருநாதன், யாழ் பல்கலைக்கழக முன்னைநாள் மாணவர் ஜக்கியா ஆகியோர் உரையாற்றியதுடன். சுpங்கப்ப+ரில் இருந்து சுப்பிரமணியம் வள்ளியம்மை அவர்களினால் சுந்தரம் தொடர்பாக எழுதி அனுப்பி வைக்கப்பட்ட கவிதையை நிரஞ்சன் அவர்களும், தமிழீழ மக்கள் விடுதலை கழகத்தின் தலைமையகத்தினால் அனுப்பிவைக்கப்பட்ட செய்தியை செல்வம் அவர்கள் வாசித்தார், சுந்தரம் தொடர்பான நற்பண்புகளுடன் கூடிய சுந்தரத்தின் இயல்பினை சிம்ஹராஜ்வர்மா அவர்களும் எடுத்துக் கூறினார்.


ஊடகங்களின் தவறுகளும் இன்றுவரை அவை ஒருபக்கசார்பாக நடந்து கொள்வது உட்பட, மக்களுக்கு உண்மையை எடுத்துகூற தயங்குவது குறித்தும் இதனால் தமிழினத்திற்கு ஏற்பட்ட பாதிப்புகள், அழிவுகள் குறித்து எடுத்துரைக்கப்பட்டு இனியாவது ஊடகங்கள் உண்மையை எழுதவேண்டும் என்று நேற்றைய கூட்டத்தில் கலந்து கொண்டு பேசியோர் வலியுறுத்தினார்.

இங்கு உரையாற்றிய இளைஞர் மாணவர் பொதுமன்றத்தின் பொது செயலர் டேவிற்சன் அவர்கள் உரையாற்றுகையில், ஆயுதபோராட்டம் என்ன நோக்கத்திற்காக ஆரம்பிக்கப்பட்டதோ அல்லது தொடங்கியதோ அது அழிக்கப்பட்டதாக கூறப்பட்டாலும் உண்மையாகவே அது அழிக்கப்படவில்லை. ஏன்ன நோக்கத்திற்காக ஆரம்பிக்கப்பட்டதோ அதற்கான தீர்வு இன்னும் கிடைக்கவில்லை. அவை தீர்க்கப்படாவிட்டால் மீண்டும் ஒருமுறை பயங்கரவாதம் தலைதூக்கலாம் என்றும் தெரிவித்ததுடன். தமிழ் அமைப்புக்களின் ஜக்கியத்தை எடுத்துக்கூறியதுடன் அதற்கான சூழ்நிலை கடந்த ஆண்டு மே மாதத்துடன் தோன்றியுள்ளதையும் அதற்கான முன்னேற்பாடுகள் அண்மையில் யாழ் வீரசிங்க மண்டபத்தில் இடம்பெற்ற கூட்டத்தில் தமிழ் தலைவர்கள் எல்லோரும் ஒரேமேடையில் தோன்றியுள்ளது மூலம் நல்லதொரு ஜனநாயக மாற்றத்திற்கான தோன்றல் ஏற்பட்டுள்ளது என்றும் டேவிற்சன் அவர்கள் உரையாற்றினர்.

இங்கு உரையாற்றிய யாழ் நோர்த்தன் பிரின்ரஸ் உரிமையாளர் மணியம் அவர்கள் உரையாற்றுகையில், சுந்தரத்தின் முற்போக்கு சிந்தனைகளையும், அவரது நற்பண்புகைளயும் எடுத்து கூறியதுடன், புதியபாதை பத்திரிகை அச்சிடுவதற்கு உதவியவமை பற்றியும் அப்போது உள்ள அச்சமான சூழிநிலையிலும், பத்திரிகை வெளியீட்டுக்கான முயற்சிகளில் சுந்தரம் கொண்டிருந்த அர்ப்பணிப்புக்களையும் சுந்தரத்தின் தீர்க்கமான செயற்பாடுகளையும் நினைவுகூர்ந்து கொண்டார்.

யாழ் பல்கலைக்கழகத்தின் முன்னைநாள் மருத்துவபீட மாணவன் ஜக்கியசீலன் அவர்கள் உரையாற்றுகையில் பேச்சு சுதந்திரம் எவ்வாறு மறுக்கப்பட்டது என்பதை நினைகூர்ந்து கொண்டதுடன், யாழ் பல்கலைக்கழகத்திற்குள் 1985களில் பேச்சு சுதந்திரம் மறுக்கப்பட்டமை போன்றவற்றை மிகவும் சுவார்சியமான எடுத்து கூறி பார்வையாளர்களை சுவார்சியப்படுத்தினார்.

பொதுவாகவே நேற்றைய நினைவுதின கூட்டம் மிகவும் சிறப்பாக நடைபெற்றதுடன், இவ்வாறக தொடர்ந்து ஜனநாயக மாற்றத்திற்கான கூட்டங்கள் நடாத்தப்பட வேண்டும் என்றும் இவ்வாறாக மேலும் பல கூட்டங்கள் நடாத்தப்பட்டு மாற்று ஜனநாயகத்திற்கான சூழ்நிலை விரிவுபடுத்தப்பட வேண்டும் என்றும் கூட்டத்தில் கலந்து கொண்டோர் தமது கருத்துக்களை பரிமாறிக்கொண்டனர். இறுதியாக புளொட் உறுப்பினர் ரமேஸ் அவர்களின் நண்றியுரையுடன் நினைவுகூரல் நிகழ்வு சிறப்புடன் நிறைவுபெற்றது..

தொகுப்பு: கண்ணன்.
மேலும் இங்கே தொடர்க...
அரசியல் தீர்வுக்கு கூட்டமைப்பும் தயாரில்லை

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் யாரை ஆதரிக்க வேண்டும் என்பதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பிளவுபட்டு நிற்கின்றது. இதில் எந்த அணி சரியானது என்பதிலும் பார்க்க இவர்கள் தமிழ் மக்களின் சார்பில் பேசுவதற்குத் தார்மீக அடிப்படையில் தகுதி உள்ளவர்களா என்பது பிரதானமான கேள்வி.

பாராளுமன்றத் தேர்தலில் தமிழ் மக்களால் தெரிவு செய்யப்பட்டவர்கள் என்று ஒருவேளை இவர்கள் உரிமை கோரலாம். அன்று நடந்ததைத் தேர்தல் என்று கூறுவது மிகப் பெரிய பகிடி. அணியொன்றின் பிரதான வேட்பாளர் தனது வாக்கை அளிப்பதற்கு இயலாதவாறு வன்முறையாளர்களால் தடுக்கப்பட்டார். வாக்களிப்பு நிலையங்களில் புலிகளின் காட்டாட்சியே நடந்தது. இப்படியான தேர்தலில் கிடைத்த வெற்றியை மக்களின் தீர்ப்பு எனக் கூறுவதைப் போன்ற வேடிக்கை வேறெதுவும் இருக்க முடியாது.

எனவேஇ அந்தத் தேர்தல் வெற்றியை ஒருபுறத்தில் தள்ளிவிட்டு இவர்களுடைய செயற்பாட்டின் அடிப்படையிலேயே பார்க்க வேண்டும்.

பாராளுமன்ற உறுப்பினர்களாகப் பதவியேற்ற பின் இனப் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கான எந்த முயற்சியிலும் இவர்கள் ஈடுபடவில்லை. புலிகள் காட்டிய பாதையில் கண்ணை மூடிக்கொண்டு பயணித்தார்கள். இந்தப் பயணத்தின் விளைவாகத் தமிழ் மக்களுக்கு இவர்கள் விளைவித்த தீங்கு கொஞ்ச நஞ்சமல்ல. உடைமை அழிவுகளும் உயிரிழப்புகளும் இடம் பெயர்வுகளும் அகதி வாழ்க்கையும் இவர்களின் பிழையான கொள்கையினால் ஏற்பட்ட விளைவுகள்.

இத்தனைக்கும் தார்மீகப் பொறுப்பேற்று இவர்கள் அரசியலிலிருந்து ஒதுங்கியிருக்க வேண்டும். ஆனால் மீண்டும் அரசியல் களத்துக்கு வந்திருக்கின்றார்கள். வந்தவர்கள் தமிழ் மக்களின் பிரதான பிரச்சினையான இனப் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கான திட்டமொன்றை முன்வைத்துச் செயற்படுவதற்குத் தயாராக முன்வந்திருக்க வேண்டும். ஆனால் இவர்களிடம் தீர்வுத்திட்டம் எதுவும் இல்லை. கொள்கைத் திட்டமொன்றைத் தயாரித்துக் கொண்டிருப்பதாகக் கிட்டத்தட்ட ஒரு வருடமாகச் சொல்லிக் கொண்டிருக்கின்றார்கள். இப்போதும் வெறுங்கை தான். தமிழ் மக்களின் பிரதான பிரச்சினையான இனப் பிரச்சினையின் தீர்வுக்கான கொள்கைத் திட்டம் எதுவுமே இல்லாமல் தமிழ் மக்களுக்குத் தலைமை தாங்குவதாகக் கூறுவதும் தேர்தலில் இம்மக்கள் எப்படி வாக்களிக்க வேண்டுமென வழிகாட்டுவதும் நகைப்புக்கிடமானவை.

சரத் பொன்சேகா கையொப்பமிட்டுத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத் தலைவரிடம் கையளித்ததாகப் பத்திரிகைகளில் வெளியாகிய ஆவணத்தில் சில விடயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. கூட்டமைப்புத் தலைவர்களுக்கும் பொன்சேகாவுக்குமிடையே இடம் பெற்ற பேச்சுவார்த்தையில் எட்டப்பட்ட உடன்பாடுகளே அவை. இனப் பிரச்சினைக்கான தீர்வு பற்றி அந்த ஆவணத்தில் எதுவும் இல்லை. இனப் பிரச்சினைக்குத் தீர்வு காணும் நோக்கம் பொன்சேகாவுக்கு இல்லை என்பதே இதன் அர்த்தம். இதற்குத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் உடன்பாடாக இருப்பது தான் புதுமை.


ஹேலீஸின் முதலாவது காட்சியகம் யாழ்ப்பாணத்தில்

யாழ்ப்பாணத்தில் தனது பல தசாப்தகால பழமையான உறவுக ளுக்கு புத்துயிர் அளிக்கும் வகையில் ஹேலீஸ் குழுமம் ‘ஹேலீஸ் உலகம்’ எனும் தொனிப்பொருளில் அதன் முதலாவது காட்சியகத்தை தொடங்கியுள்ளது.

இலங்கையில் ஒரே கூரையின் கீழ் பல்வேறு உற்பத்திகளையும் சேவைகளையும் வழங்குவதில் முன்னணி வகிக்கும் ஹேலீஸ் அதன் கூட்டாண்மை இலட்சினையின் கீழ் புதிய காட்சியகத்தை டிசம்பர் மாதம் 28ம் திகதி யாழ்ப்பாணத்தில் தொடங்கி வைத்தது. ஸ்டான்லி வீதியில் அமைந்துள்ள இதேபோன்ற காட்சியகங்கள் பின்னர் கொழும்பிலும் திறந்துவைக்கப்படும் என்று ஹேலீஸ் குழுமம் அறிவித்துள்ளது.

‘ஹேலீஸ் அதன் உற்பத்திகள் மற்றும் சேவைகள் ஊடாக ஒரே இடத்தில் இருந்து பெருந்திரளான மக்களுக்கு தனது குழுமத்தின் பிரதிநித்துவத்தை வழங்குவது என்பது ஹேலீஸ் மேற்கொண்டுள்ள வர்த்தகத்தைப் பொறுத்தமட்டில் பாரிய சவால் மிக்க ஒரு செயலாகும்” என ஹேலீஸ் குழுமத்தின் தலைவர் மொஹான் பண்டிதகே தெரிவித்தார். எவ்வாறாயினும் இந்தப் பணியை மேற்கொள்ளளநாம் கணிசமான முயற்சிகளை மேற்கொண்டுள்ளோம். நாட்டில் யுத்தத்திற்குப் பிந்திய மறுசீரமைப்பில் ஹேலீஸின் பங்களிப்பை வழங்கும் வகையில் யாழ்ப்பாணத்தை எமது முதலாவது தெரிவாக நாம் எடுத்துள்ளதோடு வட பகுதியுடனான வரலாற்றுத் தொடர்புகளை மீளக்கட்டியெழு ப்பவும் உறுதிபூண்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

வடபகுதியில் விவசாய சமூகத்தினர் மத்தியில் ஹேலீஸின் பெயர் நன்கு அறியப்பட்ட ஒன்றாகும். 1960 களின் ஆரம்பம் முதல் குடாநாட்டு விவசாயிகளுக்கு தேவையான விவசாய உள்ணுடுகளையும் ஆலோசனைச் சேவைகளையும் ஹேலீஸ் வழங்கி வருகின்றது. ‘துரதிஸ்டவசமாக எமது குழுமத்தின் பல புதிய உற்பத்திகளும் சேவைகளும் கடந்த 25 வருடங்களாக வட பிராந்தியத்தை சென்றடைய முடியாத நிலை காணப்பட்டது. இயலுமான வரைக்கும் விரைவாக இந்த நிலையை மாற்றியமைக்க நாம் எண்ணியுள்ளோம்” என மொஹான் பண்டிதகே மேலும் தெரிவித்தார்.

இலக்கம் 47 ஸ்டான்லி வீதி யாழ்ப்பாணம் என்ற முகவரியில் அமைந்துள்ள ஹேலீஸ் வர்த்தக காட்சியமான ‘ஹேலீஸ் உலகம்’ சுமார் 2000 சதுர அடி பரப்பளவு கொண்ட இரு மாடிக் கட்டிடமாகும். முதலாவது மாடியில் தும்புப் பொருட்கள் முதல் றப்பர் தரைமெத்தைகள் மற்றும் உறைகள்இ குஷன்கள்இமெத்தைகள்இ வீட்டுப்பாவனைக்கான றப்பர் கையுறைகள்இ காபன் செறிவு கொண்ட முகக் கவசங்கள் வாசனை நீக்கிப் பொருட்கள்இ தனிநபர் ஆரோக்கியப் பொருட்கள் மிக வேகமாக விற்பனையாகும் நுகர்வோர் பாவனைப் பொருட்கள் மற்றும் கெமராக்கள்இ பலிம்கள்இ விவசாய உள்ணுடுகள்இ பெறுமதிக் கூட்பட்ட விவசாய உற்பத்திகள்இ விவசாய உபகரணங்கள் மற்றும் மின்பிறப்பாக்கிகள் என பல்வேறு உற்பத்திப் பொருட்கள் இங்கு வைக்கப்பட்டுள்ளன.

மேலும் இந்த விற்பனைக் கூடத்தின் மூலம் போக்குவரத்துஇ சரக்குச்சேவை என்பன தொடர்பான போக்குவரத்துச் சேவைகள்இ அவைபற்றிய தகவல்கள் என்பனவற்றையும் பெற்றுக் கொள்ளக்கூடியதாக இருக்கும்
ஜனநாயகத்தை குழிதோண்டி புதைக்கும் செயல்

நாட்டின் ஆறாவது ஜனாதிபதியைத் தெரிவு செய்வதற்கான தேர் தலுக்கு இன்னும் ஒன்பது நாட்கள் மாத்திரமே இருக்கின்றன. ஜனநாயக முறையில் தங்கள் தலைவரைத் தெரிவு செய்வத ற்கு மக்கள் தயாராகிவிட்டனர்.

சகல பகுதிகளிலும் தேர்தல் பிரசாரங்கள் சூடுபிடித்துள்ளன. முக்கிய வேட்பாளர்கள் சூறாவளிப் பிரசாரத்தில் இறங்கியிருக்கின்றனர்.

என்றாலும்இ பணத்தை முதன்மைப்படுத்தி மக்கள் சக்தியைக் கொச்சைப் படுத்தும் செயல்களில் பொன்சேகா தலைமையிலான எதிரணியினர் செயற்பட்டு வருவது அம்பலத்திற்கு வந்திருக்கிறது.

ஜனநாயக விழுமியங்களுக்குள் தங்களது கொள்கைகளை முன்வைத்து மக்கள் ஆதரவைப் பெற்று செயற்படுவதே தார்மீகம். நிறைவேற்ற முடி யாத வாக்குறுதிகளை முன்வைப்பதும்இ நாட்டுக்காக அர்ப்பணிப்புடன் செயற்படும் தலைவர்கள் மீது சேறுபூசும் பிரசாரங்களை முன்வைப் பதும் எந்த வகையிலும் ஏற்புடையதல்ல. இத்தகைய முயற்சிகளில் தோற் றுப் போன எதிர்க்கட்சிகளின் வேட்பாளர் மற்றொரு முயற்சியிலும் ஈடுபடத் தொடங்கியுள்ளார்.

தங்களது பிரசார நடவடிக்கைகளுக்காக கோடிக் கணக்கில் பணம் கொடு த்து முக்கியஸ்தர்களைப் பிடிக்கும் படுமோசமான செயற்பாடுகளில் இறங்கியிருப்பது அம்பலத்திற்கு வந்துள்ளது.

இந்நாட்டில் பயங்கரவாதம் முற்றாக முறியடிக்கப்பட்டு ஜனநாயகம் நிலை நிறுத்தப்பட்டிருக்கிறது. இந்த நிலையில்இ ஜனநாயகத்தை அடியோடு குழிதோண்டிப் புதைக்கும் கைங்கரியத்தில் எதிரணியினர் இறங்கி இரு ப்பது நாட்டு மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது.

தேசிய சுதந்திர முன்னணி பாராளுமன்ற உறுப்பினர் முஹமட் முஸம்மில் என்பவரை பொன்சேகாவுக்கு ஆதரவு வழங்கக் கூறி 300 இலட்சம் (30 மில்லியன்) ரூபா வழங்கப்பட்டுள்ளது.

கொழும்பு சபையர் ஹோட் டலில் 205வது அறையில் இந்தப் பணப் பரிமாற்றம் இடம்பெற்றிருக்கி றது. ஜனாதிபதித் தேர்தல் சுயேச்சை வேட்பாளர் மயோன் முஸ்தபா வும்இ அரச தரப்பிலிருந்து பொன்சேகா தரப்புக்குத் தாவிய துஆ கட்சி யின் தலைவர் ஹாபீஸ் நமர் அஹமட்டும் இந்த பரிமாற்றத்தில் ஈடு பட்டுள்ளனர். பத்தறமுல்லையில் நடந்த செய்தியாளர் மாநாட்டில் முஹ மட் முஸம்மில் வீடியோ ஆதாரங்களுடன் இதனை வெளிப்படுத்தினார்.

ஒரு பாராளுமன்ற உறுப்பினரை தங்கள் பக்கம் இழுப்பதற்கு 300 இலட்சம் ரூபா வழங்கப்படுகிறதென்றால்!? நினைத்துக் கூடப்பார்க்க முடியவில்லை.

இதனை ஒரு சாதாரண விடயமாக எடைபோட்டுவிடமுடியாது. வெளி நாட்டுச் சக்திகளும்இ தேசத்தை அழிக்க முயல்பவர்களும் இதன் பின் னணியில் இருக்கிறார்களென்பது பெரும் தொகைப் பணப்பரிமாற்றத் தின் மூலம் அம்பலத்திற்கு வந்திருக்கிறது.

நாட்டு மக்கள் இது குறித்து மிகவும் விழிப்புடன் இருக்க வேண்டும். இலட்சக் கணக்கான ரூபா ய்கள் வழங்கப்படும்போது வெளிநாட்டு தூதரக அதிகாரியொருவரும் இருந்ததாக முஸம்மில் கூறுகிறார். இதில் சம்பந்தப்பட்டதாகக் கூறப்ப டும் தூதரகம் இதனை மறுத்துள்ளது.

என்றாலும்இ நாட்டை அழிக்க முய லும் வெளிநாட்டு சக்திகள் எதிரணியினரின் வடிவத்தில் கால் ஊன்ற முற்படுகிறார்கள் என்பதற்கு நல்லதொரு ஆதாரம் கிடைத்திருக்கிறது.

மக்களின் ஜனநாயகக் குரல்களை நசித்து பணத்தின் மூலம் சகலதையும் நிறைவேற்ற முடியுமென அன்னத்தைச் சின்னமாகக் கொண்டவர்கள் நினைப்பது இந்த நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் ஏற்புடை யதல்ல. ஜனநாயகப் படுகொலைக்கு ஒப்பானதாகவே இதனைக் கொள்ளலாம்.

ஆட்சிக்கு வந்தால் ஊழல் மோசடிகளை ஒழித்து விடுவோமென தேர்தல் வாக்குறுதி


புனர்வாழ்வு முகாம்களிலிருந்த 566 பேர் நேற்று பெற்றோரிடம் ஒப்படைப்பு


படையினரிடம் சரணடைந்து புனர்வாழ்வு முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளவர்களுள் மேலும் 566 பேர் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

வவுனியா காமினி மகா வித்தியாலயம்இ பம்பைமடு உட்பட வவுனியாவிலுள்ள புனர்வாழ்வு முகாம்களிலிருந்து தெரிவு செய்யப்பட்ட இவர்கள் 566 பேரும்இ வவுனியா மாவட்ட நீதிமன்றத்தின் அருகே பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

புலிகளினால் பலாத்காரமாக சிறுவர் படையணிக்கு சேர்க்கப்பட்டிருந்த சிறுவர் சிறுமியர்களில் சிலரும்இ புலிகள் இயக்கத்தில் மிகவும் அடி மட்டத்தில் செயலாற்றிக் கொண்டிருந்தவர்களில் சிலருமே இவ்வாறு விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

இதேபோன்று பூந்தோட்டம் புனர்வாழ்வு முகாமிலிருந்தும் சுமார் 1000 பேர் அண்மையில் விடுதலை செய்யப்பட்டனர்.

சரணடைந்த முன்னாள் புலி உறுப்பின ர்கள் அனைவரும் விடுதலை செய்யப்படும் அரசின் திட்டத்திற்கமைய எதிர்வரும் காலங்களில் மேலும் சிலரும் விடுதலை செய்யப்படவுள்ளனர்.

ரூ. 3 கோடி முஸம்மிலுக்கு வழங்கிய விவகாரம்:
பொன்சேகாவின் ஊழலை மறைக்கும் முயற்சி அம்பலம்;
இன்றும் பல திடுக்கிடும் தகவல்கள்

சரத் பொன்சேகாவின் ஆயுத ஊழல் மோசடிகளை மூடிமறைக்க வும்இ அவருக்கு ஆதரவு வழங்குவதற் குமாக மூன்று கோடி ரூபாவை இலஞ்சமாக வழங்கியுள்ள விடயம் பொய்யானது என எவரேனும் தெரி வித்தால் அவை அனைத்தும் ஒலிஃ ஒளி நாடாக்களுடன் நிரூபிக்க முடி யும் என தேசிய சுதந்திர முன்னணி யின் பேச்சாளர் நேற்று தெரிவித் தார்.

தேசிய சுதந்திர முன்னணி பாரா ளுமன்ற உறுப்பினர் மொஹமட் முஸம்மிலுக்கு மூன்று கோடி ரூபாவை வழங்கிய விடயம் பற்றி மேலும் புதிய தகவல்கள் இன்றைய செய்தியாளர் மாநாட்டிலும் தெரிவி க்கப்படும் என்றும் அந்தப் பேச்சா ளர் மேலும் தெரிவித்தார்.

சரத் பொன்சேகாவின் ஆயுத ஊழ ல்கள் தொடர்பாக ஜே. என். பி. தலைவர் விமல் வீரவங்ச முன் வைத்திருக்கும் குற்றச்சாட்டுகள் பொய் யானவை என தெரிவிக்க வேண்டும் என்றும் அதேவேளை ஜனாதிபதி தேர்தலில் சரத் பொன்சேகாவுக்கு ஆதரவை வழங்க வேண்டும் என் றும் கூறி மொஹமட் முஸம்மிலு க்கு கட்டுக்கட்டாக பணத்தை வழங் கியுள்ளனர்.

இந்தப் பணக் கொடுக்கல் வாங்க ல்கள்இ நடந்த சம்பாஷணைகள் அடங்கிய ஒலிஃஒளி நாடாக்களையும் ஜே. என். பி. தலைவர் விமல் வீரவங்ச ஊடகங்களுக்கு காண்பித்தார்.

அரசாங்க தரப்பு எம்.பிக்க மூன்று கோடி ரூபா பணத்திற்கு விலை பேசும் தேசத்துரோக செயல்களை நாட்டு மக்களுக்கு அம்பலப்படுத் தும் நோக்குடன் ஜே. என். பி. தலைவர் விமல் வீரவங்சவின் அறி வுறுத்தலின் படி மொஹமட் முஸ ம்மில் நடவடிக்கையை மேற்கொண் டிருந்தார்.

இதன்படி வெள்ளவத்தை சபயார் ஹோட்டலில் அறையொன்றில் முதலாவதாக 10 இலட்சம் ரூபா முற்பணமாக வழங்கப்பட்டுள்ளது.

சரத் பொன்சேகாவுக்கு முஸம்மி லின் ஆதரவை பெற்றுக்கொள்வத ற்கான இடைத் தரகராக மயோன் முஸ்தபா எம். பியே இருந்துள்ள மையும் அம்பலமாகியுள்ளது.

300 இலட்சம் ரூபா பேரம் பேசப்பட்டு முடிவானதன் பின்னர் ரணில் விக்கிரமசிங்கஇ மங்கள சமரவீரஇ ரவி கருணாநாயக்கஇ மலிக் சமரவிக்கிரம ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கான ஆயத்தமொன்றையும் மயோன் முஸ்தபா ஏற்பாடு செய்திருக்கிறார்.

இதில் சரத் பொன்சேகாவுடன் பேசு மாறும் ரணில் மற்றும் ரவி கருணா நாயக்க ஆகியோர் முஸம்மிலிடம் தெரிவித்துள்ளதாக தெரிவித்தார்.

வெள்ளவத்தை சபயார் ஹோட்டல் அறையில் முற்பணமாக வழங்கப்பட்ட 10 இலட்சம் ரூபா வுடன் தொடர்புடைய ஒலிநாடா வும் ஜே. என். பி.யினர் வசமுள் ளது. இந்த ஒலி நாடாவில் மயோன் முஸ்தபா மற்றும் நோர்வே தூதரக அதிகாரி ஒருவரும் இருந்ததாகவும் மொஹமட் முஸம்மில் தெரிவித் தார்
மேலும் இங்கே தொடர்க...