14 டிசம்பர், 2010

வடக்கு முகாம்களில் உள்ள மக்களுக்கு 45 மில்லியன் ரூபா செலவில் உலர் உணவு வழங்க ஏற்பாடு



வடக்கு முகாம்களில் தங்கியுள்ள மக்களுக்கு 45 மில்லியன் ரூபா செலவில் உலர் உணவுப் பொருட்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மீள்குயேற்ற அமைச்சர் குணரத்தன வீரக்கோன் தெரிவித்தார்.

யாழ்ப்பாணம்,வவுனியா, கிளிநொச்சி, முல்லைத்தீவு ஆகிய முகாம்களில் உள்ள மக்களுக்கே இப் பொருட்கள் வழங்கப்பட உள்ளது.

இம்மாதம் 18 ஆம் திகதி யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்ய உள்ள மீள்குடியேற்ற அமைச்சர் வீரக்கோண் மக்களை நேரடியாக சந்தித்து அவர்களுடன் கலந்துரையாடி அவர்களுக்கு இப் பொருட்களை நேரடியாக அவர்களின் கையிலேயே வழங்க உள்ளதாகவும் தெரிவித்தார்.

ஆறு நாட்கள் விஜயம் மேறகொண்டு செல்லும் மீள்குடியேற்ற அமைச்சர், 10 ஆயிரம் பொதிகளை கொண்ட பருப்பு, மாவு, அரிசி, சீனி உள்ளிட்ட பாய், தலையனை முதலான பொருட்களை வழங்க உள்ளதாக தெரிவித்தார்.
மேலும் இங்கே தொடர்க...

அந்தார்ட்டிகாவில் மூழ்கியது கொரியக் கப்பல்: 5 பேர் பலி - 15 பேர் மாயம்

கொரிய நாட்டிற்கு சொந்தமான கப்பல் ஒன்று அந்தார்ட்டிகா கடல் பகுதியில் மூழ்கியுள்ளது. இதில் பயணித்த 20 மாலுமிகளுள் 5 பேர் பலியாகியுள்ளதாகவும் மேலும் 15 பேரை காணவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.

கப்பல் மூழ்கியதற்கு காரணம் என்ன என்பது இதுவரை கண்டறியப்படவில்லை.

காணாமல் போனவர்களை தேடும் பணியில் இரண்டு தென்கொரியக் கப்பல்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. கப்பலை மீட்கும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுவருவதாக வெளிநாட்டுச் செய்திச் சேவைகள் தெரிவிக்கின்றன.
மேலும் இங்கே தொடர்க...

சரணடைந்த புலி உறுப்பினர்கள் மீள்குடியேற்றம் தொடர்பில் செயலமர்வு









விடுதலை புலிகள் இயக்கத்;திலிருந்து சரணடைந்த முன்னாள் போராளிகளை மீள்குடியேற்ற புனர்வாழ்வு ஆணையாளர் திணைக்களம் நடவடிக்கை எடுத்துவருகின்றது.

இதுதொடர்பாக ஆராயும் சமய சமூக தலைவர்களுக்கான விழிப்புணர்வு செயலமர்வு இன்று மண்முனை வடக்கு பிரதேச செயலக மண்டபத்தில் நடைபெற்றது.

புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம் பிரிகேடியர் சுதந்த ரணசிங்க தலைமையில் ஆரம்பமான இச் செயலமர்வில் மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம், மாவட்ட பிரிகேடியர் மஹிந்ந முதலிகே பௌத்த, இஸ்லாமிய, கிறிஸ்தவ, இந்து சமய தலைவர்கள் பிரதேச செயலாளர்கள், கிராம உத்தியோகத்தர்கள், திணைக்கள தலைவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
மேலும் இங்கே தொடர்க...

மூத்த பத்திரிகையாளர் டேவிட் ராஜு காலமானார்




















வீரகேசரி பத்திரிகையின் செய்தி ஆசிரியரா கவும் பிரதி ஆசிரி யராகவும் இருந்து அப்பத்திரி கையின் வளர்ச்சிக்கு 1952ம் ஆண்டு முதல் 1984 வரை மகத்தான பணியாற்றிய திரு. ஈ.வி. டேவிட் ராஜு நேற்று முற்பகல் கொழும்பிலுள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் மரணமானார். இறக்கும்போது இவருக்கு வயது 75 ஆகும்.

யாழ். மாவட்டத்தைச் சேர்ந்த வேலணையை பிறப் பிடமாகக்கொண்ட டேவிட் ராஜு, கண்டி மாநகரில் அலுவலக நிருபராக பணி யாற்றிய பின்னர் 1954ல் ஆசிரிய பீடத்தில் சேர்ந்து கொண்டார்.

1984ல் இருந்து 2002 வரை சவூதி அரேபி யாவில் மன்னர் மாளிகையில் பணியா ற்றிய இவர், 2002ல் நாடு திரும்பிய பின்னர் தினக்குரல் பத்திரிகை யில் செய்தித்துறை மற்றும் விளம்பரத்துறையில் ஆலோச கராக பணியாற்றினார். வீரகேசரி யில் கலாமன்றம் என்ற பகுதியின் மூலம் கலை, இலக்கிய, நாடகத்துறைக்கு டேவிட் ராஜு பெரும்பங்க ளிப்பு செய்தார்.

இவரது பிள்ளைகள் வெளிநாட்டில் உயர் பதவிகளை வகித்து வருகிறார்கள்.
மேலும் இங்கே தொடர்க...

ரூ. 207 கோடியில் யாழ், கிளிநொச்சியில் பாரிய குடிநீர்திட்டம் மூன்றரை இலட்சம் மக்களுக்கு நன்மை


207 கோடி ரூபா செலவில் யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சிக்கான பாரிய குடிநீர் திட்டமொன்று முன்னெடுக்கப்படவுள்ளதாக யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி இமெல்டா சுகுமார் தெரிவித்தார்.

இந்த குடிநீர் திட்டத்தின் மூலம் யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களைச் சேர்ந்த மூன்றரை இலட்சம் மக்கள் நன்மையடையவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். பல்கட்டங்களாக முன்னெடுக்கப்படவுள்ள இந்த பாரிய குடிநீர் விநியோகத் திட்டத்தின் முதற்கட்டம் 2015ம் ஆண்டளவில் நிறைவடையவுள்ளது.

இலங்கை அரசாங்கமும், ஆசிய அபிவிருத்தி வங்கியும் இதற்கான பெருமளவிலான நிதி ஒதுக்கீட்டை வழங்கியுள்ளன.

யாழ்ப்பாணம், கொடிகாமம், சாவக்கச்சேரி, கைதடி, நாவற்குழி, நல்லூர், கோப்பாய், கரவெட்டி, சங்கானை, சண்டிலிப்பாய், காரைநகர், அச்சுவேலி, ஆவரங்கால், பருத்தித்துறை, பளை, வல்வெட்டித்துறை, நெடுந்தீவு, மருதங்கேணி தீவுப்பகுதிகள் மற்றும் கிளிநொச்சி ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த மக்கள் இதன் மூலம் பெரிதும் நன்மையடையவுள்ளனர்.

இரணமடு நீர்த்தேக்கத்திலிருந்து தண் ணீர் கொண்டு செல்லப்பட்டு பரந்தன் பகுதியில் வைத்து பம்ப் பண்ணப்பட்டு பரந்தன் மற்றும் பளை பகுதியிலுள்ள தேக்கங்களில் வைத்து சுத்திகரிக்கப்பட்ட பின்னர் யாழ் குடா நாட்டிற்கும், கிளி நொச்சிக்கும் விநியோகிக்கப்படவுள்ளதாக அரசாங்க அதிபர் சுட்டிக்காட்டினார்.

கிளிநொச்சி – யாழ்ப்பாணம் நீர்விநி யோகத் திட்டம் 20,000 மில்லியன் ரூபா செலவில் முன்னெடுக்கப்படவுள்ளது. இலங்கை அரசாங்கம், ஆசிய அபிவிருத்தி வங்கி மற்றும் ஜய்க்கா போன்றன இதற் கான நிதியுதவிகளை வழங்கவுள்ளன. இதன் மூலம் 3 இலட்சம் மக்கள் நன்மையடைய வுள்ளனர்.

பருத்தித்துறை நீர்விநியோகத்திட்டம் ஐ.எப்.ஆர்.சி மற்றும் ஆசிய அபிவிருத்தி நிதியத்தின் ஊடாக முன்னெடுக்கப்பட வுள்ளன. இதற்கென 515 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதுடன் 20 ஆயிரம் மக்கள் நன்மையடையவுள்ளனர்.

வல்வெட்டித்துறை நீர்விநியோகத் திட்டம் உலக வங்கியின் 225 மில்லியன் ரூபா ஒதுக்கீட்டில் முன்னெடுக்கப்பட வுள்ளது. இதன் மூலம் 10 ஆயிரம் மக் கள் நன்மையடையவுள்ளனர் என்றார்.

இதேவேளை, மருதங்கேணியிலுள்ள 10 ஆயிரம் மக்களுக்கு குடிநீர் விநியோகிக் கும் பொருட்டு 25 மில்லியன் ரூபாவும், நெடுந்தீவிலுள்ள 4 ஆயிரம் குடும்பத்திற் கென 12.75 மில்லியன் ரூபாவும் மேலதிகமாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அரசாங்க அதிபர் குறிப்பிட்டார்.

தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையின் ஊடாக முன்னெடுக்கப்படும் இத்திட்டத்திற்குத் தேவையான சகல ஆலோசனைகளை பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஸில் ராஜபக்ஷ, வட மாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜி.ஏ.சந்திரசிறி ஆகியோர் வழங்கி வருவதாக குறிப்பிட்ட அரசாங்க அதிபர், இத்திட்டத்திற்கான சாத்தியக் கூற்று ஆய்வு நடத்தப்பட்டு அறிக்கைகளும் தயாரிக்கப்பட்டுள்ளன என்றார்.
மேலும் இங்கே தொடர்க...

பெரும்பான்மை சமூகத்தை புண்படுத்தாத அரசியல் தீர்வே நல்லிணக்கத்தை ஏற்படுத்தும்




நல்லிணக்க ஆணைக்குழு முன் பிரதியமைச்சர் முரளிதரன்
பிரபா தான் நினைத்ததையே செய்தார்; ரஜீவ்காந்தியின் கொலை பாரிய தவறு
பெரும்பான்மை சமூகத்தைப் புண்படுத்தாத வகையில் முன்வைக்கப்படும் தீர்வுத் திட்டமே சமூகங்களு க்கிடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தக்கூ டியதாக அமை யும் எனப் பிரதி அமைச்சர் விநாயகமூர்த்திமுரளிதரன் தெரிவித்தார்.

சமூகங்களுக்கிடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்த வேண்டுமாயின் பெரும்பான்மை சமூகத்தைப் புண்படுத்தாத அரசியல் தீர்வு அவசியம். தற்பொழுது மாகாண சபைகள் ஊடாகவே தீர்வுகள் முன்வைக்கப்படுகின்றன. அந்தந்த மாகாண மக்களே சுயமாக ஆட்சி செய்யக்கூடிய வகையில் அதிகார ங்களை வழங்கினால் அது திருப்திகரமான தீர்வாக அமையும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

கொழும்பு லக்ஷ்மன் கதிர்காமர் நிலையத்தில் நேற்று நடைபெற்ற கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு முன்னிலையின் அமர்வில் சாட்சிய மளிக்கும் போதே பிரதி அமைச்சர் இவ்வாறு கூறினார். அங்கு மேலும் சாட்சியமளித்த அவர்.

மாகாண சபைகளுக்கு தேவையற்ற அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டும் எனச் சில கட்சிகள் கோரி க்கை விடுத்து வருகின்றன. குறிப்பாக மாகாணங்களுக்குப் பொலிஸ் அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டுமெனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியும் கூறி வருகின்றன. இவ்வாறான கோரிக்கைகள் தேவையற்றவை. இலங்கை ஒரு மிகவும் சிறிய நாடு இவ்வாறான அதிகாரங்களை வழங்குமாறு கோருவதானது பெரும்பான்மை சமூகத்திற்கு மீண்டும் சந்தேகத்தைத் தோற்றுவிப்பதாக அமைந்துவிடும்.

தமிழ் மக்கள் மத்தியில் பொருளாதார வளர்ச்சியை ஏற்படுத்தி சிறந்த கல்வி வசதிகளை வழங்கி தமிழ் மக்களுக்கும் சமநிலைப் பதவிகளை வழங்குவதன் மூலம் தமிழர்களைத் திருப்திப்படுத்த முடியும். கடந்த காலங்களில் தமிழர்கள் பலர் உயர் பதவிகளிலிருந்தார்கள். ஆனால், 30 வருடங்களாகத் தொடர்ந்த போர்ச் சூழல் காரணமாக தமிழர்களுக்கான பதவி வாய்ப்புக்கள் குறைந்துள்ளன. தமிழர்களுக்கு மீண்டும் சமநிலைப் பதவிகள் வழங்கும் சூழல் தோற்றுவிக்கப்பட வேண்டும்.

தமிழ்க் கட்சிகள் சிறு சிறு கட்சிகளாகப் பிரிந்திருக்கின்றன. முதலில் அவர்களுக்கிடையில் ஒற்றுமை ஏற்படுத்தப்பட வேண்டும். தமிழ்க் கட்சிகள் தனித்து நின்று கோஷங்களை எழுப்பாமல் ஜனாதிபதியுடன் நேரடியாகச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்திப் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாணமுடியும். ஜனாதிபதி அதற்குத் தயாராகவே உள்ளார். தமிழர்களுக்கும் சமஉரிமை வழங்கப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உறுதியாகவே உள்ளார்.

யுத்தத்தால் பாதிக்கப்பட்ட வடக்கு, கிழக்குப் பகுதிகளில் அரசாங்கம் பல்வேறு அபிவிருத்திப் பணிகளை ஆரம்பித்து முன்னெடுத்துச் செல்கிறது. பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியோ ஏனைய கட்சிகளோ இதனை விளங்கிக் கொள்ளாமல் சத்தமிடுகின்றன.

மோதல்களால் பாதிக்கப்பட்ட அனைத்து மக்களுக்கும் நட்டஈடுகள் வழங்கப்பட வேண்டும். குறிப்பாக வடக்கு, கிழக்கில் மோதல்களால் கணவன்மாரை இழந்த 80 விதவைகள் தமது வாழ்வாதாரத்தைக் கட்டியெழுப்பு வதற்கான பல்வேறு செய்திட்டங்களை அரசாங்கம் ஏற்கனவே ஆரம்பித்து நடைமுறைப்படுத்தியிருப்பதுடன், ஏனையவர்களுக்கான உதவிகளும் வழங்கப்படும்.

காத்தான்குடி பள்ளிவாசலில் படுகொலை செய்யப்பட்ட முஸ்லிம் மக்களின் குடும்பங்களுக்கான நஷ்டஈடுகள் வழங்கப்பட வேண்டும். இந்த விடயம் தொடர்பாக பிரதி அமைச்சர் ஹிஸ்புல்லா ஜனாதிபதியுடன் பேசியுள்ளார். நானும் இது பற்றி ஜனாதிபதியுடன் கலந்துரையாடியுள்ளேன்.

1983ம் ஆண்டு கலவரத்தைத் தொடர்ந்தே நான் உட்பட தமிழ் இளைஞர்கள் பலர் புலிகள் இயக்கத்தில் இணைந்து கொண்டோம். எனினும், 2002ம் ஆண்டு நடைபெற்ற சமாதானப் பேச்சுவார்த்தைகளில் புலிகள் இணக்கம் காணாததைத் தொடர்ந்து அந்த அமைப்பிலிருந்து விலகி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் இணைந்து சமாதானத்தை நிலைநாட்டுவதற்கு எனது ஆதரவை வழங்கி வருகின்றேன்.

2002ம் ஆண்டு நடைபெற்ற சமாதானப் பேச்சுவார்த்தைகளிலும், அதற்கு முன்னர் நடைபெற்ற பேச்சுவார்த்தைகளிலும் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் அர்ப்பணிப்புடன் கலந்து கொள்ளவில்லை. எப்பொழுது புலிகள் பலவீனம் அடைகிறார்களோ அப்போது சமாதானப் பேச்சுக்குச் செல்வார்கள். பின்னர் தம்மைப் பலப்படுத்திய பின்னர் போராடுவார்கள்.

2002ம் அண்டு நடைபெற்ற 6 சுற்றுப் பேச்சுவார்த்தைகளில் நான் கலந்து கொண்டிருந்தேன். இப்பேச்சுவார்த்தையில் ஏதாவது ஒரு தீர்வுக்குச் செல்லவேண்டும் என எமது குழுவுக்குத் தலைமை தாங்கிய அன்ரன் பாலசிங்கத்திடம் நான் வலியுறுத்தியிருந்தேன். ஏதாவது ஒரு ஒப்பந்தத்தின் அடிப்படையிலேயே சமாதானப் பேச்சுக்களைத் தொடரமுடியும் என்பதால் சமஷ்டித்தீர்வைக் கவனத்தில் கொள்வது என்ற உடன்படிக்கையில் கைச்சாத்திடுமாறு நான் வலியுறுத்தினேன்.

எனினும், பாலசிங்கமும் ஏனையவர்களும் அஞ்சினார்கள். நான் பிரபாகரனுடன் பேசுகிறேன். நீங்கள் ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுங்கள் என்று கூறியே ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது.

நாடு திரும்பிய பின்னர் அவ்வொப்ப ந்தத்தை நான் பிரபாகரனிடம் கையளித்தேன். ஆத்திரமடைந்த அவர் ஒப்பந்தத்தைத் தூக்கியெறிந்ததுடன், தமிழ் மக்களை நான் காட்டிக் கொடுத்துவிட்டதாகவும் குற்றஞ்சாட்டினார். அதன் பின்னரே நான் புலிகள் இயக்கத்திலிருந்து விலகி ஜனாதிபதியுடன் இணைந்து சமாதானத்துக்கு ஆதரவு வழங்கத் தீர்மானித்தேன்.

மோதல்கள் மூலம் வெற்றி கொள்ளமுடியாது. வன்முறைகளைக் கைவிட்டு ஏதாவது ஒரு தீர்வை நோக்கிச் செல்வோம் என பல தடவைகள் நான் பிரபாகரனுக்குத் கூறியிருந்தேன். ஆனால், அவர் எவற்றையும் செவிமடுக்கவில்லை. தான் நினைத்ததை மாத்திரமே நிறைவேற்றினார். இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தியைப் படுகொலை செய்தமையே புலிகள் செய்த பாரிய தவறு.

கடந்த கால அரசாங்கங்கள் விடுதலைப் புலிகளின் தந்திரோபாயங்களைச் சரியாகப் புரிந்து செயற்படவில்லை. பிழையாக விளங்கிக் கொண்டமையாலேயே மோதல்கள் உக்கிரமடைந்தன. தமிழ்த் தலைவர்களும் இனவாதத்தையே தூண்டிவிட்டனர்.

ஆனால் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ விடுதலைப் புலிகளின் தந்திரோபாயத்தை நன்கு புரிந்து கொண்டு செயற்பட்டார். புலிகள் இயக்கத்துக்குப் பேச்சுவார்த்தைகளில் கலந்து கொள்ள சந்தர்ப்பம் வழங்கிய போதும் அவர்கள் தம்மைப் பலப்படுத்திக் கொள்வதற்கு ஜனாதிபதி அவகாசம் வழங்கவில்லை. அவர்களை அழிப்பது என்ற நிலைப்பாட்டில் உறுதியாகச் செயற்பட்டமையால் புலிகளை ஒழிக்கமுடிந்தது.

அதேநேரம், வடபகுதியில் சிங்களக் குடியேற்றங்கள் நடைபெறுவதாகப் பிரசாரங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. +ஞிரி!ழ எதுவும் நடைபெறவில்லை. 30 வருடங்களுக்கு முன்னர் வடக்கு, கிழக்கில் வசித்த மக்கள் தமது சொந்த இடங்களில் சென்று வாழ விரும்புகின்றனர். அவர்களைள நாம் மீள்குடியமர்த்த வேண்டும். தமது சொந்தக் காணிகள் பற்றிய ஆவணங்களைக் கொண்டவர்கள் அவர்களின் இடங்களில் குடியமர்த்தப்படுகின்றனர். அரசாங்கக் காணிகளில் அவர்களைக் குடியமர்த்துங்கள் என ஜனாதிபதியோ வேறு யாருமோ எமக்குக் கூறவில்லை என்றும் அவர் கூறினார்.
மேலும் இங்கே தொடர்க...

புதிய இன்புளுவென்ஸா வைரஸ் நாடெங்கும் மீண்டும் தீவிரம் தடிமன், இருமல், காய்ச்சல், உடல்வலி இருந்தால் சிகிச்சை பெறுங்கள்



நாடெங்கிலும் புதிய இன்புளுவென்ஸா ஏ (எச்1 என் 1) வைரஸ் காய்ச்சல் தீவிரமடைந்திருப்பதாக சுகாதார அமைச்சின் நோய் பரவல் தடுப்புப் பிரிவின் பிரதம மருத்துவ நிபுணர் சுதத் பீரிஸ் நேற்றுத் தெரிவித்தார்.

தடிமன், இருமல் மற்றும் கடும் காய்ச்சல், உடல் வலி போன்றவாறான அறிகுறிகள் தென்பட்டால் தாமதியாது அரசாங்க மருத்துவ நிபுணரை அணுகி சிகிச்சை பெற்றுக் கொள்ளுமாறும் அவர் பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் குறிப்பிடுகையில், புதிய இன்புளுவென்ஸா ஏ (எச் 1 என் 1) வைரஸ் நோய் நாட்டின் பல பிரதேசங்களிலும் பரவியுள்ளது. கடந்த செப்டம்பர் மாதம் 20ஆம் திகதி முதல் டிசம்பர் மாதம் 10ம் திகதி வரையும் 242 பேர் இந்நோய்க்கு உள்ளாகியுள்ளனர்.

தற்போது நாடெங்கிலும் பரவியுள்ள இந்நோய்க்கு 1-10 வயதுக்கும், 21-30 வயதுக்கும் இடைப்பட்டோரே பெரிதும் உள்ளாகியுள்ளனர். இந்நோய் யாழ்ப்பாணம், மன்னார், கிளிநொச்சி, திருமலை, மட்டக்களப்பு, அம்பாறை உட்பட சகல மாவட்டங்களிலும் பரவி இருந்தாலும் கொழும்பு மாவட்டத்திலேயே இந்நோய்க்கு அதிகளவிலானோர் உள்ளாகி இருக்கின்றனர்.

அதேவேளை, புதிய இன்புளுவென்ஸா ஏ (எச்1 என் 1) வைரஸ் நோயிலிருந்து பாதுகாப்புப் பெற்றுக் கொள்ளுவதற்கு ஏற்றவகையில் நாள்பட்ட நுரையீரல் நோய், ஆஸ்தமா, நீரிழிவு நோய்கள், சிறுநீரக நோய்கள் எச். ஐ. வி/ எயிட்ஸ் போன்றவாறான நோய்களுக்கு உள்ளாகி இருப்பவர் ணீகளுக்குத் தடுப்பு மருந்து வழங்கப்படுகின்றன. அரசாங்க ஆஸ்பத்திரிகள் மற்றும் மருத்துவ அதிகாரிகள் அலு வலகங்கள் ஊடாக இத்தடுப்பு வழங் கப்பட்டு வருகின்றன. இத்திட்டத்திற்கென 15 லட்சம் தடுப்பு மருந்து தருவிக்கப் பட்டுள்ளது என்றார்.
மேலும் இங்கே தொடர்க...

சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கு ஓய்வ+தியத் திட்டம் ஆவணங்கள் நிதியமைச்சிடம் கையளிப்பு - ஜனாதிபதி






சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் களுக்கு ஓய்வூதியத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்தத் தீர்மானித்துள்ளதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

அது தொடர்பான பூர்வாங்க நடவடிக்கைகள் இடம்பெறுவதாகத் தெரிவித்த ஜனாதிபதி அதற்கான ஆவணங்களை நிதியமைச்சுக்குக் கையளிக்கும் நடவடிக்கைகள் இடம் பெறுவதாகவும் குறிப்பிட்டார்.

எவ்வாறாயினும் சமுர்த்தி உத்தியோக த்தர்கள் ஓய்வு பெற்றதும் அவர்களை சமுர்த்தி உதவி பெறுவோர் அணியில் இணைய இடமளிக்கமாட்டோமெனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

சமுர்த்தி மற்றும் விவசாய ஆராய்ச்சி உத்தியோகத்தர்கள் சங்கத்தின் 11 வது வருடாந்த மாநாடு நேற்று அலரி மாளிகையில் நடைபெற்றது. மேற்படி நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார்.

நாடளாவிய ரீதியில் பல்லாயிரக்கணக்கான தொழிற்சங்க உறுப்பினர்கள் கலந்து கொண்ட இந்நிகழ்வில் ஜனாதிபதி மேலும் உரையாற்றுகையில்;

திட்டமிட்ட செயற்பாடுகளின் மூலம் நாட்டை அபிவிருத்தியில் கட்டியெழுப்பும் எதிர்காலத் திட்டத்தை முன்னெடுக்க வேண்டியுள்ளது. அடிப்படை வசதிகள் அனைத்தும் கிராமப்புறங்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் வடக்கு, கிழக்கு மாகாணங்கள் முழுமையாக அழிக்கப்பட்டி ருந்தன. அப்பிரதேசங்களை நாம் மீள கட்டியெழுப்பி வருகிறோம். 30 வருடகாலம் பயங்கரவாதத்தினால் பாதிக்கப்பட்ட மக்கள் மீண்டும் தலை நிமிர்வதற்கு நாம் வழிவகை செய்ய வேண்டும். ஏனைய பிரதேச மக்கள் போன்று சுதந்திரமாக வாழக்கூடிய உரிமையையும் சூழலையும் அவர்களுக்குப் பெற்றுக்கொடுக்க வேண்டியதும் நம் அனைவரினதும் பொறுப்பாகும். அதனை நாம் நிறை வேற்றுவோம்.

2012 ஆம் ஆண்டுக்குள் நம் நாட்டில் சகல கிராமங்களுக்கும் மின்சாரத்தைப் பெற்றுக்கொடுப்பதுடன் வீதிகள், பாட சாலைகள், ஆஸ்பத்திரிகள் உள்ளிட்ட அனைத்தையும் மீள கட்டியெழுப்புவோம். பாரிய அபிவிருத்தித்திட்டங்கள் பல தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன. இவை எதிர்கால சந்ததிக்கான முதலீடுகளாகும்.

போதைப்பொருள் மூலம் இருவர், மூவர் கோடீஸ்வரராகின்றனர். எனினும் இலட்சக்கணக்கான அப்பாவி இளைஞர்கள் அதற்குப் பலியாகின்றனர். அவ்வாறு இளைஞர்கள் பலியாவதைத் தடுப்பதா. அல்லது சம்பந்தப்பட்டவர்களுக்குத் தண்டனை வழங்குவதா என்பதே எம்முன் எழும் கேள்வியாகும். நாட்டை இந் நிலையிலிருந்து மாற்ற வேண்டியுள்ளது.

கடந்த காலங்களில் நாடு பயங்கரவாத யுத்தத்தை எதிர்கொண்டது. சமூகங்கள் அச்சத்தில் வாழ்ந்த யுகம் அது. நாம் அந்த சூழலை இல்லாதொழித்து மக்களுக்கு சுதந்திரம் பெற்றுக்கொடுத்தோம். மக்களின் சுதந்திரத்திற்காக எமது சுதந்திரத்தை இழந்தோம். எனினும் இன்று நாம் மக்களின் அபிலாஷைகளை நிறைவேற்றி னோம் என்ற திருப்தியை அடைய முடிகிறது.

சமுர்த்தி உத்தியோகத்தர்கள் தமது பொறுப்புக்களை உணர்ந்து செயற்பட வேண்டும். மக்களுக்கு மிக நெருக்கமாக சேவை செய்யக்கூடியவர்கள் நீங்களே. இன்று சிலர் தமக்கான பொறுப்பினை மறந்துள்ளனர். பேச்சுவார்த்தைக்கு முன்வராத தொழிற்சங்கங்கள் இன்றுள்ளன. சில தொழிற்சங்கத்தினர் வெளிநாடுகளுக்குச் சென்று இலங்கைக்கு ஜீ.எஸ்.பி. வரிச் சலுகை வழங்கக்கூடாது என்கின்றனர். அதற்கான கடிதங்களை அனுப்புகின்றனர். அத்தகையோருக்கு அங்கு பெருமளவு பணம் கிடைக்கின்றது.

அவர்கள் நாட்டையும் இனத்தையும் காட்டிக்கொடுப்பவர்கள். நாம் எங்கு சென்றாலும் நாட்டிற்கு கெளரவமளிப்பவர்கள் எனவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.

நேற்றைய இந்நிகழ்வில் மேற்படி தொழிற்சங்க ஊழியர்கள் சிலருக்கு கடன் உதவிகளும் சிறந்த சேவைக்கான விருதும் வழங்கப்பட்டன.
மேலும் இங்கே தொடர்க...