26 ஜூன், 2011

இனப்படுகொலை குற்றச்சாட்டு : முதன்முறையாக ஒரு பெண்ணுக்கு ஆயுள் தண்டனை


ருவாண்டா நாட்டில் இனப்படுகொலைகள் புரிந்த குற்றவாளியாக இனங்காணப்பட்ட அந்நாட்டின் முன்னாள் பெண் அமைச்சர் மற்றும் அவரது மகன் ஆகியோருக்கு ஆயுள் தண்டனை வழங்கி ஐ.நா. போர்க்குற்றவியல் நீதிமன்றமொன்று தீர்ப்பளித்துள்ளது.

போவுலின் நீயிராமாசுஹூகோ (65) என்ற அப்பெண் அக்காலப்பகுதியில் ருவாண்டாவின் குடும்ப மற்றும் பெண்கள் விவகார அமைச்சராக இருந்தவர். இவரின் மகனான ஆர்சனி நடாஹோபலி முன்னாள் இராணுவ தலைவராக இருந்தவர்.

இவர்கள் 1994 ஆம் ஆண்டுப்பகுதியில் 'ஹூடூ' இனத்தவர்களைக் கடத்தி பாலியல் வல்லுறவுகள் மற்றும் இனப்படுகொலைகளை மேற்கொள்ள கட்டளையிட்டதுடன் உதவியுமுள்ளதாக சாட்சிகளுடன் நிரூபிக்கப்பட்டுள்ளது.

இதனைத்தொடர்ந்து டன்சானியாவில் உள்ள ருவாண்டாவுக்கான ஐ.நா.வின் சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் இவர்களுக்கு ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளது. இதன் போது மேலும் 4 பேருக்கும் தண்டனை வழங்கப்பட்டதாகக் கூறப்படுகிறது..

அவர்கள் முன்னாள் ஆளுநர்களான சில்வெயின் நசாபிமான, அல்போன்ஸ் நடசிராயோ மற்றும் அக்காலப்பகுதியில் நகரப்பிதாக்களாக கடமையாற்றிய ஜோசப் கன்யபாசி, எலியி நட்யாம்பஜே ஆகியோரவர்

பத்து வருடங்களுக்கு முன்னர் தொடரப்பட்ட இவ்வழக்கு மேற்படி தீர்ப்புடன் நிறைவுக்கு வந்தது.

ருவாண்டாவில் 1994 ஆம் ஆண்டுப்பகுதியில் டூட்சி மற்றும் ஹூட்டு இனத்தவர்கள் சுமார் 800,000 பேர் கொல்லப்பட்டனர்.

இனப்படுகொலை குற்றச்சாட்டின் பேரில் தண்டனை வழங்கப்பட்ட முதல் பெண்மணி இவர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
மேலும் இங்கே தொடர்க...

வடக்கு கிழக்கிலிருந்து இராணுவத்தினரை அகற்றுமாறு மலேஷிய எம்.பி.கள் கோரிக்கை


வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களிலிருந்து இராணுவத்தினரை வெளியேற்றுமாறு மலேஷிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

குறித்த மாகாணங்களிலுள்ள இராணுவத்தினரை வெளியேற்றி மீண்டும் அந்த பகுதிகளில் குடியியல் நிர்வாகத்தை ஏற்படுத்த வேண்டும் எனக் கோரி மகஜர் ஒன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இந்த மகஜர் மலேஷியாவிலுள்ள இலங்கைத் தூதுவர் டி.டி. ரணசிங்கவிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

குறித்த மகஜரில் இடம்பெயர்ந்து தற்காலிக முகாம்களிலுள்ள மக்களின் அடிப்படை வாழ்க்கைத் தரத்தினை மேம்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற பல கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் யுத்தக் குற்றச்சாட்டுக்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் அந்நாட்டு நாடாளுமன்றத்தில் விவாதம் ஒன்று நடைபெற வேண்டும் என மலேஷிய நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் பிரேரணை ஒன்று முன்வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

எனினும்“ இறைமையயுள்ள ஒரு நாட்டின் வெளிவிவகார கொள்கையில் நாம் தலையிட முடியாது எனக் கோரி மலேஷிய நாடாளுமன்ற பிரதி சபாநாயகர் குறித்த பிரேரணையை விவாதத்திற்கு எடுத்துக்கொள்ள மறுப்பு தெரிவித்திருந்தார்.

இந்நிலையிலே அந்நாட்டு எதிர்க்கட்சியினரால் குறித்த மகஜர் மலேஷியாவிற்கான இலங்கை தூதுவரிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
மேலும் இங்கே தொடர்க...

சனல் 4 காணொளி நாடு முழுவதும் இலவசமாக வழங்க ஐ.தே.க. நடவடிக்கை

நிபுணர்குழு அறிக்கையின் சிங்கள மொழிபெயர்ப்பு மற்றும் சனல் 4 காணொளி என்பவற்றை நாடு முழுவதும் இலவசமாக விநியோகிப்பதற்கு ஐ.தே.க. தீர்மானித்துள்ளது.

அண்மையில் நடைபெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழுக் கூட்டத்தில் அது தொடர்பான முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

அதன் முதற்கட்டமாக எதிர்வரும் ஜூலை மாதம் 4ஆம் திகதி கண்டியில் நடைபெறவுள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் பிரசாரக் கூட்டத்தில் வைத்து அவை விநியோகிக்கப்படவுள்ளன.

நிபுணர்குழு அறிக்கையின் சிங்கள மொழிபெயர்ப்பை பொதுமக்கள் மத்தியில் விநியோகிப்பதற்கென ஐக்கிய தேசியக் கட்சி ஏற்கெனவே தீர்மானித்திருந்தது. அதன் பின் அண்மையில் சனல் 4 தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது இந்நிலையில் அதனையும் இணைத்து பொதுமக்கள் மத்தியில் விநியோகிக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அறிய முடிகின்றது.

ஆனாலும் ஐக்கிய தேசியக் கட்சியின் பெரும்பாலான நாடாளுமன்ற உறுப்பினர்கள் கட்சியின் தீர்மானத்துக்கு எதிராக கருத்து வெளியிட்டுள்ளார்கள்.

இவ்வாறான கட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சி தனது அரசியல் நலனை விட நாட்டு நலன் தொடர்பில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டுமென்று அவர்கள் வலியுறுத்தியுள்ளனர். ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான பாலித ரங்கே பண்டார, சுஜீவ சேனசிங்க போன்றோரே கட்சியின் தீர்மானத்துக்கு எதிராக கடுமையான முறையில் கருத்துக்களை வெளியிட்டுள்ளார்கள் என்றும் அறிய முடிகின்றது.
மேலும் இங்கே தொடர்க...

சர்வதேச நீதிமன்றத்தில் இலங்கை மீது வழக்கு தொடர மன்னிப்புச் சபை முடிவு

இலங்கைக்கு எதிராக சர்வதேச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர சர்வதேச மன்னிப்புச் சபை நடவடிக்கை எடுத்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

சனல் 4 தொலைக்காட்சி இலங்கையில் இடம்பெற்றதாக கூறப்படும் மனித உரிமை மீறல் காட்சிகளை வெளியிட்டது. இவ்வாறு வெளியிடப்பட்ட காட்சிகள் போலியானவை என அரசாங்கத்தினால் தொடர்ந்தும் கருத்துக்கள் வெளியிடப்பட்டு வருகின்றது.

இந்நிலையில் இலங்கைக்கு எதிராக சர்வதேச நீதிமன்றத்தில் வழக்கு தொடரவுள்ளதாக சர்வதேச மன்னிப்புச் சபை தெரிவித்துள்ளது.

இலங்கைக்கு எதிராக வழக்கு தொடர்வது குறித்து கடந்த 23 ஆம் திகதி கனடாவில் நடைபெற்ற கூட்டத்தின் போது சர்வதேச மன்னிப்புச் சபை கலந்தாலோசித்துள்ளது.

இந்த கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்திற்கமைய பிரித்தானியா மற்றும் சுவிட்ஸர்லாந்தின் ஒத்துழைப்புடன் இலங்கைக்கு எதிராக வழக்குத் தொடரப்பட உள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.
மேலும் இங்கே தொடர்க...