1 பிப்ரவரி, 2011

இந்தியாவே எமது பாதுகாவலன்; அதை சகோதரனாகவும் தமிழகத்தை உறவினராகவும் நாம் பார்க்கவேண்டும்: பீலிக்ஸ்




புலிகள் பலமடைவதற்கு 1983 ஆம் ஆண்டு நடைபெற்ற கறுப்பு ஜூலை சம்பவமே பிரதான காரணமாகும். கறுப்பு ஜூலை சம்பவம் தொடர்பில் நாங்கள் வருத்தம் தெரிவித்தாக வேண்டும். மேலும், இந்தியாவை நாம் எமது சகோதரனாகவும் தமிழகத்தை உறவினராகவும் பார்க்கவேண்டும். இந்தியாவை எமது பாதுகாவலனாக வைத்துக்கொள்வதுடன், அந்நாட்டை மீறி எந்த நடவடிக்கையிலும் ஈடுபடக்கூடாது என்று சமூக சேவை அமைச்சர் பீலிக்ஸ் பெரேரா தெரிவித்தார்.

கொழும்பில் நேற்று நடைபெற்ற கற்றறிந்த பாடங்களும், நல்லிணக்கமும் தொடர்பான ஆணைக்குழுவின் அமர்வில் கலந்துகொண்டு சாட்சியமளிக்கையிலேயே அமைச் சர் பீலிக்ஸ் பெரேரா மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அமைச்சர் அங்கு மேலும் கூறியதாவது:

யாழ்ப்பாண மண் மிகவும் செழிப்பானது. அங்குள்ள மக்களும் சிறந்த முறையில் விவசாய நடவடிக்கைகளில் ஈடுபடுவார்கள். 1980களில் யாழ்ப்பாணத்தில் விவசாய உற்பத்தி அதிகளவில் காணப்பட்டது. ஆனால், தற்போது மிகவும் குறைந்துவிட்டது. அங்கு விவசாய உற்பத்தி அதிகரிக்கப்பட வேண்டும். அந்த மக்களின் உற்பத்திகளை நாம் விலைக்கு வாங்கவேண்டும்.

1983 ஆம் ஆண்டு நாம் பாரிய தவறு ஒன்றைச் செய்தோம். அந்த ஆண்டின் கறுப்பு ஜூலைச் சம்பவமே புலிகள் பாரியளவில் பலமடைவதற்கான முக்கிய காரணமாகும். யாழ்ப்பாணத்தில் அன்று 13 படைவீரர்கள் உயிரிழந்ததும் அவர்களின் சொந்த இடங்களில் நல்லடக்கம் செய்திருக்கலாம். ஆனால், இறந்தவர்களின் உடல்களை கொழும்புக்குக் கொண்டுவந்து அன்று வன்முறை இடம்பெறுவதற்கு சிலர் வழிவகுத்தனர். சர்வதேச மட்டத்தில் எமக்கு பாரிய அபகீர்த்தி ஏற்பட்டது. புலிகளும் பலமடைந்தனர். பலர் நாட்டைவிட்டு வெளியேறினர். நான் எனது பகுதியில் தமிழ் மக்களைப் பாதுகாத்தேன் என்பதனை இந்த இடத்தில் குறிப்பிட வேண்டும்.

இதேவேளை, இந்தியாவை நாம் சகோதரனாகவும் தமிழகத்தை உறவினராகவும் பார்க்கவேண்டும். இந்தியாவை எமது பாதுகாவலனாக வைத்துக்கொள்வதுடன், அந்த நாட்டை மீறி எந்த நடவடிக்கையிலும் ஈடுபடக்கூடாது. எமது வெளிவிவகாரக் கொள்கையை உருவாக்கும் போது இந்தியா குறித்து அதிகளவில் சிந்திக்கவேண்டியது அவசியமாகும்.

தமிழகத்தில் ஐந்து கோடி தமிழ் மக்கள் உள்ளனர். எனவே, தமிழகத்துடன் நாங்கள் சிறந்த உறவைப் பேணவேண்டும். எமது நாட்டின் எதிர்காலம் சிறப்பாக அமைய நாம் தமிழகத்துடன் சிறந்த உறவைப் பேணவேண்டும். தமிழகத்தைக் கோபமூட்டினால் எதிர்காலத்தில் எமக்குப் பிரச்சினைகள் வரலாம். இந்தியாவுக்கு விரோதமான எந்தவொரு நடவடிக்கையிலும் நாங்கள் ஈடுபடக் கூடாது. அந்த நாட்டை எமது பாதுகாவலனாகப் பார்க்கவேண்டியது அவசியமாகும். உண்மையில் இந்தியா எமது பாதுகாவலனாகவே செயற்படும். இலங்கையில் பிரிவினை ஏற்படுவதற்கோ, தனிநாடு அமைவதற்கோ இந்தியா ஒருபோதும் இடமளிக்காது.

தனிநாடொன்று அமைந்தால் இந்தியாவுக்குப் பிரச்சினை ஏற்படும் என்பது அந்த நாட்டுக்குத் தெரியும். எனவே, சீனாவிடம் மாட்டுவண்டியை வாங்கினால் இந்தியாவிடம் மாடுகளையாவது பெறவேண்டும். எந்தவொரு வகையிலும் இந்தியாவை புறக்கணிக்கவோ பகைத்துக்கொள்ளவோ கூடாது. இந்தியாவில் தேர்தல் நடத்தப்பட்டபோது நாங்கள் இலங்கையில் கனரக ஆயுதப் பாவனையை நிறுத்தியிருந்தோம். இது உண்மையில் சிறந்த நகர்வாகும்.

வடக்கில் அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும். யாழ்ப்பாண மக்கள் சிறந்த முறையில் கல்வி கற்பவர்கள். முன்னர் அரச சேவையில் அதிகமான அளவில் வடக்கு மக்களே இருந்தனர். மேலும், அவர்கள் கல்வியை ஒருபோதும் கைவிடவில்லை. எனது ஆசிரியராக இருந்தவர் ஆனந்தசங்கரி என்பதனை இந்த இடத்தில் தெரிவிக்கின்றேன். 1983 ஆம் ஆண்டுக்கு முன்னர் தமிழ் மக்களுக்கு பாரிய அநீதி ஏற்பட்டதக்ஷிக நான் கருதவில்லை. அப்போதைய அரசியல்வாதிகள் சுயநல அரசியலுக்காகப் பிரிவினையை முன்வைத்தனர். தனிநாட்டுப் பிரகடனத்தை வெளியிட்டனர். வடக்கு மக்கள் ஜனநாயகத்தை எதிர்த்தனர் என்று நான் ஒருபோதும் கூறமாட்டேன். ஆனால், புலிகள் அவர்களுக்குப் பாரிய தடையாக இருந்தனர். மேலும், பொன்னம்பலம் மற்றும் இராமநாதன் போன்ற தலைவர்களுக்குப் பின்னர் அவர்களைப் போன்ற தலைவர்கள் யாழ்ப்பாணத்தில் உருவாகவில்லை.

எமது அரசாங்கம் மனிதாபிமான நடவடிக்கைகயை மேற்கொண்டு மக்களை மீட்டெடுத்தது. அந்த வேலைத்திட்டத்தின் போது இராணுவத்தினர் சிறப்பாக செயற்பட்டனர். எங்களுக்கு முப்படையினருடன் சிறந்த தொடர்புகள் உள்ளன. படையினருக்கு உணவு வழங்கும் நிறுவனம் ஒன்றை எனது மனைவி நடத்திவருகின்றார். எனவே, அவர்களைப் பற்றித் தெரியும். இந்த யுத்தம் தமிழ் மக்களுக்கு எதிராக நடத்தப்படவில்லை.

மாறாக, பயங்கரவாதத்துக்கு எதிராகவே நடத்தப்பட்டது. அத்துடன், இனரீதியிலோ மதரீதியிலோ நாட்டில் அரசியல் கட்சிகள் இருக்கக் கூடாது என்று நான் எண்ணுகின்றேன். அதனைத் தடுப்பதற்கு அரசியலமைப்பில் திருத்தங்கள் கொண்டுவரப்பட வேண்டும்.
மேலும் இங்கே தொடர்க...

அரசுக்கு எதிராக 9ஆம் திகதி கொழும்பில் மாபெரும் பேரணி

அரசாங்கத்தின் சர்வதிகார ஆட்சியை எதிர்த்தும் சரத்பொன்சேகாவை விடுதலை செய்யுமாறு வலியுறுத்தியும் எதிர்வரும் 9ஆம் திகதி கொழும்பில் மாபெரும் ஆர்ப்பாட்டப் பேரணியை நடத்தவுள்ளதாக ஐ.தே.க அறிவித்தது.

இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டப் பேரணியில் கட்சி பேதமின்றி அனைவரையும் கலந்து கொள்ளுமாறும் அக்கட்சி அழைப்பு விடுத்தது.

கொழும்பில் நேற்றுத் திங்கட்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் உரையாற்றும் போதே ஐ.தே கட்சி எம்.பி. மங்களசமரவீர இதனைத் தெரிவித்தார்.

இங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில் எதிர்வரும் 9ஆம் திகதி புதன்கிழமை மாலை 4.00 மணிக்கு கொழும்பு லிப்ரன் சுற்று வட்டத்தில் இவ் எதிர்ப்பு ஆர்ப்பாட்டப் பேரணி நடத்தப்படவுள்ளது. அன்றைய தினம் சரத்பொன்சேகாவை பலாத்காரமாக கடத்திய நாளாகும். ஊடக அடக்குமுறை சர்வதிகார ஆட்சி வடக்கு, கிழக்கில் மக்கள் கடத்தப்படுதல் காணாமல் போதல் கொலைகள் மற்றும் கொழும்பில் வீடுகள் நிர்மூலமாக்கப்படுதல் உட்பட வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு சரத்பொன்சேகாவின் விடுதலை போன்ற விடயங்களை முன்னிறுத்தியே இப்பேரணி நடைபெறவுள்ளது என்றார்.
மேலும் இங்கே தொடர்க...

காரைக்காலில் 2500 மீனவர்கள் கைது




தமிழக மீனவர்கள் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தி வரும் இலங்கை கடற்படையை கண்டித்து காரைக்காலில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது 2500 மீனவர்கள் பொலி ஸாரால் கைது செய்யப்பட்டனர்.

நேற்று நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தின் போது மீனவர்களுக்கு ஆதரவாக கடையடைப்பு நடத்தப்பட்டதுடன் பேரூந்துகளும் இயங்காதிருந்தமையினால் அப்பகுதியில் இயல்பு நிலை பாதிப்படைந்திருந்திருந்து.

மேலும் இந்த ஆர்ப்பாட்டத்தின் போது வீதி மறியலில் ஈடுபட்ட மீனவர்கள் 2500 மீனவர்களை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டனர்.
மேலும் இங்கே தொடர்க...

தமிழக மீனவர் மீதான தாக்குதல் பின்னணியை இலங்கை ஆராயும் நிருபமாராவுக்கு அதிகாரிகள் விளக்கம்





இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான கடற்பரப்பில் இந்திய மீனவர்கள் இருவர் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக முழுமையான விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என இந்திய வெளிவிவகார அமைச்சின் செயலாளர் நிருபமா ராவ் கேட்டுக்கொண்டுள்ளார்.

நேற்று முன்தினம் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்ட நிருபமாராவ் நேற்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள், வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ. எல். பீரிஸ், ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க, பாதுகாப்புச் செயலாளர், கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் வெளிவிவகாரச் செயலாளர் சி. ஆர். ஜெயசிங்கவையும் சந்தித்திருந்தார்.

இச்சந்திப்பின் போதே இந்திய மீனவர்களின் படுகொலை குறித்த விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என்ற வேண்டு கோளை அவர் முன்வைத்திருந்தார். எதிர்காலத்தில் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறாதிருப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

திசைமாறி இலங்கைக் கடற்பரப்பிற்குள் நுழையும் இந்திய மீனவர்கள் உட்பட அனைத்து மீனவர்களையும் மனிதாபிமா னத்துடன் நடத்தும் கொள்கையையே இலங்கை கொண்டிருப்பதாக நிருப மாராவுக்கு விளக்கமளித்த இலங்கை அதிகாரிகள் தெரிவித்தனர்.

இரு நாடுக ளுக்குமிடையில் இருதரப்பு உறவுகளைப் பேணிவரும் நிலையில் இந்திய மற்றும் இலங்கை மீனவர்களின் வாழ்வாதாரத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் விடயத்தில் இலங்கை கூடுதல் கவனம் செலுத்தும். எனவே, இச்சம்பவத்தின் பின்னணியினை இலங்கை அரசாங்கம் ஆராயும் என்றும் நிருபமாராவுக்கு இலங்கை அதிகாரிகள் கூறியிருப்பதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

இச்சம்பவம் குறித்து விசாரணைகள் தொடர்கின்ற அதேநேரம் இந்தியத் தரப்பிலிருந்தும் தகவல்களை வழங்குமாறு இலங்கை அதிகாரிகள் கேட்டுக் கொண் டுள்ளனர்.

எந்தவொரு சந்தர்ப்பத்திலும் இந்த விவகாரத்தில் பலாத்காரத்தை பயன்படுத்துவது நியாயமற்றதென இருதரப்பும் இணக்கம் கண்டுள்ளது.

சர்வதேச கடல் எல்லையை மீறும் மீனவர்கள் குறித்து 2008 ஆம் ஆண்டு அக்டோபர் 26ஆம் திகதி மீன்பிடி தொடர்பான இணை அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருப்பதற்கு அமைய நடத்தப்பட வேண்டும் என்பதையும் இரு தரப்பும் சுட்டிக்காட்டியிருந்ததாக வெளிவிவகார அமைச்சு மேலும் தெரி வித்துள்ளது.

மீனவர்கள் சர்வதேச எல்லையைத் தாண்டும் தறுவாய்களில் செயற்பா டாகக் கூடிய நடைமுறை ஒழுங்கு களையிட்டு 2008 ஒக்டோபர் 26 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட மீன் பிடித்தல் ஒழுங்குகள் சம்பந்தமான இணைந்த அறிக்கையானது இப்படி யான நிகழ்வுகளைக் குறைத்துள்ளது.

அபாயமின்மையையும் பாதுகாப் பையும் வலுப்படுத்தும் பொருட்டு தற்போது நடைபெற்ற சம்பவங்க ளின் அடிப்படையில் நடைமுறைப் படுத்த வேண்டிய ஒழுங்குகளை யிட்டுப் பேச்சுவார்த்தை நடத்து வதன் அவசியத்தையிட்டு அவர்கள் இணக்கம் கண்டனர்.

இதன்படி மீன்பிடி சம்பந்தமான அடுத்த இணைந்த செயலமர்வுக் கூட்டத்தை விரைவில் கூட்டுவ தற்கும் இரு பகுதியினரினதும் மீன் பிடித்தல் சம்பந்தமான பிரச்சினை கள் பலவற்றை இது ஆராயு மெனவும் தீர்மானிக்கப்பட்டது. இந்த இணைந்த செயலமர்வுக் குழு வானது மீன்வளத்துறையின் அபிவி ருத்தி மற்றும் ஒத்துழைப் பிற்காகப் பிரேரணையில் உள்ள புரிந்துணர்வு ஒப்பந்தத்தையிட்டும் ஆராயும்.

இரு நாட்டினதும் மீனவர்களின் சபைகளுக்கிடையேயும் தொடர் பாடல்களை விரிவாக்கம் செய்யவும் ஊக்குவிப்பதற்கும் தீர்மானிக்கப் பட்டது.

இப்படியான தொடர்புகள் இரு பகுதியினருக்கும் பரஸ்பர நன்மை பயப்பதை உறுதியாக் கியுள்ளது.
மேலும் இங்கே தொடர்க...

வடக்கு, கிழக்கு உட்பட நாட்டின் பல பகுதிகளில் மீண்டும் மழை மட்டு., திருமலையில் வெள்ள அபாயம் நிரம்பி வழியும் நிலையில் 29 குளங்கள்






வடக்கு, கிழக்கு உட்பட நாட்டின் பல்வேறு பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழையை அடுத்து கிழக்கு மாகாணத்தின் சில பகுதிகளில் வெள்ள நிலை ஏற்பட்டுள்ளது.

திருகோணமலை, மட்டக்களப்பு, அநுராதபுரம், பொலன்னறுவை, அம்பாறை மற்றும் பதுளை மாவட்டங்களில் 29 குளங்கள் நிரம்பி வழிவதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்தது. பாரிய வெள்ளத்தின் பின் இயல்பு நிலைக்குத் திரும்பியிருந்த கிழக்கு மக்கள் தொடர் மழையினால் மீண்டும் பாதிக்கப் பட்டுள்ளனர்.

மீண்டும் வெள்ளம் ஏற்பட்டால் அதற்கு முகம் கொடுப்பதற்கான சகல முன்னேற்பாடுகளும் மேற்கொள்ளப் பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ அமைச்சர் தினகரனுக்குத் தெரிவித்தார். இது தொடர்பில் அரச அதிபர்கள் மற்றும் அமைச்சு அதிகாரிகளுக்கு ஆலோசனைகள் வழங்கியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இலங்கைக்கு அருகில் கிழக்கே மீண்டும் ஏற்பட்டுள்ள தாழமுக்கம் காரணமாகவே வடக்கு, கிழக்கு, வட மத்திய, மத்திய, ஊவா மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களில் மழை பெய்து வருவதாக கால நிலை அவதான நிலையம் கூறியது. ஏனைய பிரதேசங்களில் மாலை அல்லது இரவு வேளைகளில் இடியுடன் கூடிய மழை எதிர்பார்க்கப்படுகிறது.

நேற்று காலை 8.00 மணியுடன் முடி வடைந்த 24 மணி நேரத்தில் திருகோண மலையில் 92.8 மி. மீ. உம் வவுனியாவில் 92.0 மி. மீ. உம் கூடுதலாக மழை பெய்துள்ளது.

தொடர் மழையினால் நாட்டிலுள்ள 59 குளங்களில் 58 குளங்களின் நீர் மட்டம் 75 வீதத்தை விட அதிகரித்துள்ள தாக நீர்ப்பாசனத் திணைக்கள நீர்வள முகாமைத்துவ பிரதிப் பணிப்பாளர் ஜானகி மீகஸ்தென்ன கூறினார்.

திருகோணமலையில் 3 குளங்களும் பொலன்னறுவையில் 4 குளங்களும் அநுராதபுரத்தில் 8 குளங்களும் குருணாகலை யில் 8 குளங்களும் பதுளையில் 4 குளங் களும் வவுனியாவில் இரு குளங்களும் நிரம்பி வழிவதாகவும் அவர் தெரிவித்தார். பராக்கிரம சமுத்திரத்தின் 8 வான் கதவு களும் கவுடுல்ல அணைக்கட்டின் 8 வான் கதவுகளும் ராஜாங்கனை அணைக் கட்டின் 2 வான் கதவுகளும் மின்னேரிய குளத்தின் 7 வான் கதவுகளும் திறந்து விடப்பட்டுள்ளன.

வெள்ளம் காரணமாக திருகோணமலை மாவட்டத்தில் 92 குடும்பங்களைச் சேர்ந்த 362 பேர் பாதிக்கப்பட்டு மூன்று முகாம் களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். வெருகலில் 5 குடும்பங்களும் தம்பலகாமத் தில் 19 குடும்பங்களும் குச்சவெளியில் 50 குடும்பங்களும் பாதிக்கப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையம் கூறியது.

பாதிக்கப்படும் மக்களுக்குத் தேவையான சகல உதவிகளும் வழங்க நடவடிக்கை எடுத்துள்ளதாக அமைச்சர் மஹிந்த சமரவீர கூறினார்.



திருகோணமலை மாவட்டத்தில் பெய்து வரும் கடும் மழை காரணமாக அறுவடைக்கு தயார் நிலையில் இருந்த நெல் வயல்கள் பெரிதும் பாதிக்கப்பட் டுள்ளதுடன் புல்மோட்டை பிரதேசத்திலுள்ள சுமார் 3500 ஏக்கர் நெல் வயல்கள் (அறுவடைக்கு தயார் நிலையில் இருந்த) கைவிடக் கூடிய நிலையில் இருப்பதாக பாதிக்கப்பட்ட விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.

கடந்த காலங்களை விட இம்முறை விவசாயிகள் எதிர்பார்த்தது போல நல்ல விளைச்சல் கிடைக்கக் கூடியதாக இருந்தும் தொடர்ந்து பெய்து வரும் மழையால் நெல் வயல்களை அறுவடை செய்ய முடியாதுள்ளதாகவும் நீரில் மூழ்கியுள்ளதாலும் விவசாயிகள் நெல் வயல்களை கைவிட வேண்டியுள்ளதாக பாதிக்கப்பட்ட விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.



மூதூர் பிரதேசத்தில் கடந்த இரு தினங்களாக மீண்டும் அடை மழை தொடர்ந்து பெய்து வருகின்றது.

இதனால் வெள்ளம் காரணமாக இடம் பெயர்ந்து மீண்டும் சொந்த இருப்பிடம் திரும்பிய பல நூற்றுக்கணக்க ண்ன குடும்பங்களும் பெரும் சிரமம டைந்துள்ளனர்.

அகதி முகாம்களிலும், உறவினர் இல் லங்களிலும் தங்கியிருந்த அனைத்து மக்களும் தமது இருப்பிடங்களுக்கு திரும்பியுள்ளனர். தொடர்ந்தும் மழை பெய்வதினால் மழை நீர் தேங்கி நிற்கின்றது.



மட்டக்களப்பு மாவட்டத்தில் மீண்டும் அடை மழை பெய்து வருகின்றது. கடந்த வெள்ள அனர்த்தங்களின் பின்பு தமது சொந்த இடங்களுக்கு மீளச் சென்ற பாதிக்கப்பட்ட பொது மக்கள் மீண்டும் பாதிக்கப்பட வேண்டிய நிலையை எதிர்நோக்கியுள்ளனர்.

இவ் அடை மழை காரணமாக மட்டு – மாவட்டத்தின் கல்குடாத் தொகுதியில் ஓட்டமாவடி, வாழைச்சேனை, காவத்த முனை, பிறைந்துரைச்சேனை, மாவடிச் சேனை, செம்மண்ஓடை கிராமங்கள் மீளவும் வெள்ள நிலையை எதிர்கொண் டுள்ளன.

இப் பிரதேச வீதிகளனைத்தும் நீரில் மூழ்கியுள்ளதுடன், வெட்டப்பட்ட வடிகான்களை மக்கள் மூடியுள்ளதால் இவற்றை மீண்டும் வெட்டி நீரை வெளியேற்ற வேண்டி ஏற்பட்டுள்ளது. அத்தோடு இம்மழையினால் பாடசாலை களும் பாதிக்கப்பட்டுள்ளன.


பதுளை மாவட்டத்திலும் தொடர்ந்து பெரு மழை பெய்து வருவதினால், மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாக

மாவட்டத்தின் ஆறுகள் மற்றும் நீர் நிலைகள் அனைத்தும் நீர் நிறைந்து, வெள்ளம் பெருக்கெடுத்துள்ளது. இதனால், ஆறுகளை, நீர் நிலைகளை, மலைப் பகுதிகளை அண்மித்து வாழ்ந்து வரும் மக்கள் மிகவும் அவதானத்துடன் இருக்கும் படியும், அபாயம் ஏற்படும் இடங்களிலி ருந்து மக்களை வெளியேறும்படியும் பதுளை மாவட்ட அரச அதிபர் ரோகனகீர்த்தி திசாநாயக்க கேட்டுள்ளார்.

மேலும் பதுளை மாவட்டத்தில் சில இடங்களில் மண் சரிவு ஏற்பட்டுள்ளன.



திருகோணமலையில் பெய்து வரும் அடை மழை காரணமாக திருகோணமலை, லவ்லேன், பாளத்தோட்டம், கேணியடி, துளசிபுரம், மட்டிக்களி, குச்சிவெளி, அடம்போடை, காசிம்நகர், 2ம் வட்டாரம், இறக்கக்கண்டி, வாழையூற்று, இக்பால் நகர், கோபாலபுரம் ஆகிய தாழ் நிலங் களில் மீண்டும் வெள்ளம் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

கடந்த வெள்ளம் காரணமாக பாதிக் கப்பட்டு தப்பிப் பிழைத்த வேளாண்மைகள் அறுவடை செய்தவர்கள் இம்மழை காரணமாக பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் இங்கே தொடர்க...

லங்கா இ - நியூஸ்’ அலுவலகத்துக்கு தீ உடன் விசாரணைக்கு ஜனாதிபதி உத்தரவு






மாலபேயிலுள்ள லங்கா இ.நியூஸ் நிறுவனத்தில் நேற்று அதிகாலை திடீரென தீவிபத்து ஏற்பட்டுள்ளது.

இந்தச் சம்பவம் நேற்று அதிகாலை 3.25 அளவில் இடம்பெற்றுள்ளதாக தலங்கம பொலிஸார் தெரிவித்தனர்.

அதிகாலை தலங்கம பொலிஸணுக்கு கிடைக்கப்பெற்ற தகவலை அடுத்து அங்கு விரைந்த பொலிஸார் பிரதேச பொது மக்களின் ஒத்துழைப்புடன் தீயை அணைக்க உடனடி நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இ. நியூஸ் அலுவலகத்தின் நுழை வாயிலுள்ள பிரதான கதவு உடைக் கப்பட்டுள்ளதாக ஆரம்ப விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

அலுவலகத்தின் உபரகணங்கள் இயந்திரங்கள் பல தீயில் எரிந்து நாச மாகியுள்ளன. மேற்படி நிறுவனத்திற்குள் தீ பற்றிக் கொண்டதா அல்லது தீ வைக் கப்பட்டுள்ளனவா என்பது தொடர்பான விசாரணைகளை உடனடியாக பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.

கொழும்பு தெற்கு பிரதேசத்திற்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் தயா சமரவீரவின் ஆலோசனைக்கமைய விசேட பொலிஸ் குழு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

இதேவேளை லங்கா இ.நியூஸ் நிறுவன தீ வைப்பு சம்பவம் தொடர்பில் உடனடி விசாரணைகளை மேற்கொண்டு சம்பந்தப்பட்டோரை கைது செய்ய நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் பொலிஸ் மா அதிபர் மஹிந்த பாலசூரியவுக்குப் பணிப்புரை விடுத்துள்ளார்.

இத்தகைய நாசகார செயலை மேற்கொண்டோர் மீது பாரபட்சமற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் இது தொடர்பில் விசாரணை நடத்தி அறிக்கையொன்றை தமக்குச் சமர்ப்பிக்குமாறும் ஜனாதிபதி கேட்டக் கொண்டுள்ளார்.

மாலபேயிலுள்ள இ-நியூஸ் நிறுவனம் நேற்று அதிகாலை இனந்தெரியாதோரின் தீ வைப்புக்கு இலக்காகியுள்ளது. தலங்கம பொலிஸார் இது தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை லங்கா ஈ-நியூஸ் ஊடக நிறுவனத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்டமை அரசாங்கத்துக்கு அபகீர்த்தி ஏற்படுத்துவதற்காக மேற்கொள்ளப்பட்ட மிலேச்சத்தனமான செயல் என்று மக்கள் தொடர்பாடல் மற்றும் தகவல் துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.

இது தொடர்பாக மக்கள் தொடர்பாடல் மற்றும் தகவல் அமைச்சு விடுத்துள்ள ஊடக அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது,

தேர்தலுக்கு வேட்பு முனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையிலும், நாட்டில் முக்கியமான நிகழ்வுகள் இடம்பெறும் வேளையிலும் இவ்வாறு ஊடகவியலாளர்கள் மீதும் ஊடக நிறுவனங்கள் மீதும் தாக்குதல் நடத்தி அந்த குற்றத்தை அரசாங்கத்தின் மீது சுமத்தி அரசாங்கத்துக்கு அபகீர்த்தி ஏற்படுத்துவது இவர்களின் நோக்கமாகும் என்று கூறும் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல, இடைக்கிடை இடம்பெறும் ஊடகவியலாளர்கள் காணாமற் போதல் அல்லது கொலை செய்யப்படுதல் ஆகிய நிகழ்வுகளை பாரிய சம்பவங்களாக சித்தரித்தல் மூலம் இந்த நிலையை நன்கு உணர்ந்து கொள்ள முடியும் என்று அமைச்சர் குறிப்பிடுகிறார்.
மேலும் இங்கே தொடர்க...

அமைச்சர் டக்ளஸ் - நிருபமாராவ் நேற்று சந்தித்துப் பேச்சு வடக்கு மீனவர் பிரச்சினை தொடர்பில் ஆராய்வு




இலங்கைக்கான விஜயத்தை மேற்கொண்டுள்ள இந்திய வெளி விவகாரச் செயலாளர் திருமதி நிருபமாராவ் தலைமையிலான உயர்மட்ட பிரதிநிதிகள் குழுவினர் நேற்று இலங்கை வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸை சந்தித்துக் கலந்துரையாடினர்.

இச்சந்திப்பில் ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகமும் பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தாவும் கலந்து கொண்டார்.

மேற்படி கலந்துரையாடலின் போது இலங்கை மீனவர்கள் எதிர்நோக்கியிருக்கும் பிரச்சினைகள் தொடர்பாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெளிவாகவும் விரிவாகவும் எடுத்துரைத்தார்.

இதன் பிரகாரம், வட மாகாண மீனவர்கள் முகங்கொடுத்து வருகின்ற பிரச்சினைகள் தொடர்பில் தெளிவுபடுத்திய அமைச்சர், கடந்த சுமார் 30 வருட கால யுத்த அனர்த்தத்திற்குப் பின்னர் இம்மீனவர்கள் சுதந்திரமாக தொழிலில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் இந்திய மீனவர்களது டோலர் படகுகளினால் பாரிய பிரச்சினைகளுக்கு உள்ளாகியுள்ளனர்.

இந்த டோலர் படகுகள் இந்தியாவின் கடல் எல்லைக்குட்பட்ட வளங்களை அழித்தொழித்து விட்டு இப்போது எமது கடற்பகுதிகளிலுள்ள வளங்களை அழித்து வருவது மட்டுமல்லாமல் எமது மீனவர்களது வலைகளை பாரிய அளவில் சேதமாக்கியும் எமது மீனவர்களை அச்சுறுத்தியும் வருகின்றன என சுட்டிக்காட்டினார்.

எனவே, இதற்கொரு முடிவு விரைவாக காணப்படுவது ஆரோக்கியமானதாகும். ஆகவே இருதரப்பினரும் சந்தித்து பரஸ்பரம் தங்களுடைய பிரச்சினைகளை பரிமாறிக் கலந்துரையாடுவதன் மூலம் இந்தப் பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியும் என அவர் கூறினார்.

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்த கருத்துகளுக்கு மேற்படி இந்திய உயர்மட்ட பிரதநிதிகள் குழுவினர் இணக்கம் தெரிவித்துள்ளனர்.
மேலும் இங்கே தொடர்க...

33 அடி நீளம் ; 16 அடி சுற்றளவு பருத்தித்துறையில் இராட்சத திமிங்கிலம் கரையொதுங்கியது

பருத்தித்துறை முனைக் கடற்கரையில் இராட்சத திமிங்கிலம் இறந்த நிலையில் நேற்று (திங்கள்) காலை 5.30 மணியளவில் கரை ஒதுங்கியது.

33 அடி நீளமும், 16 அடி சுற்று வட்ட மும் கொண்ட இத்திமிங்கிலத்தின் நிறை 5ஆயிரம் கிலோ தொடக்கம் 10 ஆயிரம் கிலோ வரை இருக்கலாம் என பிரதேச மீனவர்கள் தெரிவித்தனர்.

கரையில் இருந்து 200 மீற்றர் தூரத்தில் முருகைக் கற்பாறைக்குள் சிக்குண்ட நிலையில் இருக்கும் திமிங்கிலத்தை மீட்க பருத்தித்துறை பொலிசார் பிரதேச செயலாளரின் ஒத்துழைப்புடன் நடவடிக்கை களை மேற்கொண்டுள்ளனர்.

பெருந்திரளான பொதுமக்கள் கரை யொதுங்கிய திமிங்கிலத்தை பார்த்துச் சென்றனர்.
மேலும் இங்கே தொடர்க...