30 நவம்பர், 2010

அதியுயர் பாதுகாப்பு வலயங்களிலுள்ள இளவாலை, வித்தகபுரத்தில் ஒரு மாதத்திற்குள் மீள்குடியேற்றம்

யாழ். குடா நாட்டில் அதியுயர் பாதுகாப்பு வலயங்களுக்குள் உள்ளடக்கப்பட்டிருந்த இளவாலை மற்றும் வித்தகபுரம் பிரதேசங்களில் அடுத்துவரும் ஒரு மாத காலத்திற்குள் மக்கள் மீளக்குடியமர்த்தப்படுவர் என்று மீள்குடியேற்றப் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் அப்பாத்துரை விநாயகமூர்த்தி கேட்டிருந்த வாய்மூல விடைக்கான வினாவுக்கு பதிலளிக்கும் வகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் தொடர்ந்தும் பதிலளிக்கையில், யாழ்ப்பாணம் அதிஉயர் பாதுகாப்பு வலயங்களில் வசித்த மக்களை கட்டம் கட்டமாக மீள்குடியேற்றி வருகிறோம்.

இதன்படி இளவாலை வட மேற்கு, வித்தகபுரம், இளவாலை வடக்கு ஆகிய பகுதிகளில் ஒருமாத காலத்தில் மக்கள் மீள்குடியேற்றப்பட உள்ளனர்.

இதேபோன்று மயிலிட்டியில் கண்ணி வெடி அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட் டுள்ளதோடு விரைவில் அங்கும் மீனவ குடும்பங்கள் மீள்குடியேற்றப்படுவர்.

மயிலிட்டி அதி உயர் பாதுகாப்பு வலயத்தில் உள்ளது.

அதிஉயர் பாதுகாப்பு வலயங்களில் உள்ள மக்களை கட்டம் கட்டமாக மீள்குடியேற்ற பாதுகாப்பு அமைச் சின் செயலாளர் அனுமதி வழங்கியுள்ளார்.

மயிலிட்டியில் மக்களை மீள் குடியேற்று வதற்காக கண்ணிவெடிகளை அகற்றுவதற்கு யாழ். இராணுவத்தளபதியுடன் பேசி நடவடிக்கை மேற்கொண்டுள்ளோம். இங்கு மக்களை மீள் குடியேற்ற ஏற் கனவே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

குறுக்கீடு: மயிலிட்டி அதி உயர் பாதுகாப்பு வலயத்தில் அமைந்திருப்பதாகக் கூறுவது தவறான தகவல் என அ. விநாயமூர்த்தி எம். பி. கூறினார்.

பதில்: இதற்குப் பதிலளித்த பிரதி அமைச்சர் மயிலிட்டி பாதுகாப்பு வல யத்திலே இருக்கிறது. அதனை அண்டிய கிராமங்களான இளவாலை வட மேற்கு, வித்தகபுரம், இளவாலை வடக்கு ஆகிய பகுதிளில் மக்கள் மீள் குடியேற்றப்பட உள்ளனர். அதே போன்று மயிலிட்டியிலும் மக்களை மீள் குடியேற்றுவதில் எதுவித தடையும் இல்லை என்றார்.
மேலும் இங்கே தொடர்க...

உலகின் தலைசிறந்த நாடாக இலங்கையை மேம்படுத்தும் பட்ஜெட் பிரதமர்


இந்த வரவு-செலவுத் திட்டத்தை முன்னெடுப்பதினூடாக எமது நாடு உலகில் தலை சிறந்த நாடாக அபிவிருத்தி அடைவதுடன் நாட்டில் புத்தெழுச்சியும் ஏற்படும் என்று பிரதமர் தி. மு. ஜயரத்ன நேற்று பாராளுமன்றத்தில் தெரிவி த்தார். வரவு-செலவுத் திட்டம் மீதான ஆறாவது நாள் விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

பிரதமர் தனதுரையில் மேலும் கூறியதாவது;

மக்களை ஏமாற்றி ஆட்சி பீடமேறி வந்த ஐ.தே.க. நாட்டை அபிவிருத்தி செய்ய எதுவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆனால் இந்த வரவு-செலவுத் திட்டத்தினூடாக நாட்டை பொருளாதார ரீதியில் மேம்படுத்தவும் உலகில் சிறந்த நாடாக முன்னேற்றவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு ள்ளது.

யுத்தம் காரணமாக சேதமடைந்த வட பகுதியை அபிவிருத்தி செய்ய பெரு மளவு நிதி செலவிடப்படுகிறது. இடம்பெயர்ந்த மக்களுக்கு வீடுகள் நிர்மாணிக்கப்பட்டு வருவதோடு வீதிகள், பாடசாலைகள், ஆஸ்பத்திரிகள் என்பன மீளமைக்கப்படுகின்றன. இதன் காரணமாக வேறு தேவைகளுக்கு ஒதுக்கும் காசு குறைவடைகிறது.

இந்த வரவு-செலவுத் திட்டத்தினூடாக கிராமங்களை அபிவிருத்தி செய்ய நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. வறியோருக்கான திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளதோடு கமநெகும, மகநெகும திட்டங்களுக் கும் கூடுதல் நிதி வழங்கப்பட்டு ள்ளது. பட்டதாரிகளுக்கு தொழில் வழங்கவும் கர்ப்பிணிகளுக்கு நிவாரணம் வழங்கவும் நடவடிக்கை எடுத்துள்ளது.

வெள்ளைக்காரர்கள் இங்கு கொண்டு வந்த பாண், பட்டர், சீனி போன்ற பல்வேறுபட்ட பொருட்களை ஓரம்கட்டி உள்நாட்டு உற்பத்திகளை ஊக்குவிக்க வேண்டும். எமக்குத் தேவையானவற்றை நாமே உற்பத்தி செய்ய வேண்டும். நாம் ஊடக வியலாளர்களின் சுதந்திர செயற்பாடுகளுக்கு இடையூறு செய்ததாக கடந்த காலத்தில் குற்றஞ்சாட்டப்பட்டது.

ஆனால் ஊடக வியலாளர்கள் கெளரவமாகவும் சுதந்திர மாகவும் செயற்படக்கூடிய சூழலை ஏற் படுத்தவும் ஊடகத்துறையை மேம்படுத்தவும் ஜனாதிபதி நடவடிக்கை எடுத்துள்ளார். இதன் படி ஊடகவியலாளர்களுக்கு புகைப்பட கருவி, கணனி என்பன கொள் வனவு செய்ய 50 மில்லியன் ஒதுக்கப் பட்டுள்ளது.

நாட்டில் 12 இலட்சம் அரச ஊழியர்களும் 6 இலட்சம் ஓய்வூதியம் பெறுவோரும் உள்ளனர். அரச ஊழியர்களுக்கு இப்போது 5 வீத சம்பள உயர்வு வழங்கப்பட்டுள்ளது. ஆனால் எதிர்காலத்தில் 25 ஆயிரம் ரூபா கூட வழங்க நாம் தயாராக உள் ளோம். அதனால் வீணாக அரச ஊழி யர்களை தூண்டிவிட வேண்டாமென்று எதிர்க்கட்சியை கோருகிறோம்.

கடந்த காலத்தில் பாகிஸ்தான் எமக்கு பலவகையிலும் உதவியது. பாகிஸ்தான் ஜனாதிபதி இங்கு வருகை தந்திருப்பது குறித்து பெருமையடைகிறோம். நாட்டின் எதிர்காலத்தைக் கருத்திற்கொண்டு இந்த வரவு-செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக வாக்களிக்குமாறு எதிர்க்கட்சியில் உள்ள இளம் பாராளுமன்ற உறுப்பினர்களிடம் வேண்டுகோள் விடுக்கின்றேன் என்றார்.
மேலும் இங்கே தொடர்க...

பண்டிகைக் காலத்தில் வெளிநாடுகளிலிருந்து அத்தியாவசிய பொருட்கள் தட்டுப்பாடு, விலையேற்றத்தை தடுப்பதில் அரசு தீவிர கவனம்


பண்டிகைக் காலங்களில் அத்தியாவசியப் பொருட்களின் விலைகளைக் கட்டுப்பாட்டு க்குள் வைத்திருப்பது தொடர்பில் தமது நேரடி கவனத்தைச் செலுத்தப் போவதாக வர்த்தக நுகர்வோர் விவகார அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரி வித்தார்.

அதேவேளை பிரேஸிலில் இருந்து சீனி இறக்குமதி செய்து குறைந்த விலையில் மக்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் தெரிவித்தார்.

புதிய அமைச்சரவையில் இரண்டாவது தடவையாகவும் வர்த்தக நுகர்வோர் விவகார அமைச்சராகப் பொறுப்பேற்று ள்ள அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ; மக்களுக்கு சுமை ஏற்படாத வகையில் தேவையான சகல அத்தியா வசியப் பொருட்க ளையும் பண்டிகைக் காலத்தில் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்து விநியோ கிக்க நடவடிக்கை எடுப்பதாகவும் தெரிவித்தார்.

போதுமானளவில் அரிசி கையிருப்பில் உள்ளதால் தேவைப்படும் ஏனைய அத்தியாவசியப் பொருட்களை இந்தியா, சீனா, ஜப்பான், அவுஸ்திரேலியா, துருக்கி போன்ற நாடுகளிலிருந்து இறக்குமதி செய்ய தீர்மானித்துள் ளதாகத் தெரிவித்தார்.

அனைத்துப் பொருட்களையும் கட்டுப்பாட்டு விலையில் மக்களுக்குப் பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படுமென தெரிவித்த அவர், பண்டிகைக் காலங்களில் தட்டுப்பாடின்றி பொருட்களை கொள்வனவு செய்வதும் உறுதி செய்யப்படும் எனவும் குறிப்பிட்டார். இதேவேளை, பிரேஸில் தூதுவர் பெட்ரோ ஹென்றிலொப்ஸ்சுக்கும் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ வுக்குமிடையிலான சந்திப்பொன்று வர்த் தக நுகர்வோர் அமைச்சில் நடைபெற்றது.

இச்சந்திப்பின் போது இரு நாடுகளுக்கும் பொதுவான பல்வேறு விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டதுடன் பிரேஸிலில் இருந்து சீனியை குறைந்த விலையில் இறக்குமதி செய்வதற்கு உதவுவதாக பிரேஸில் தூதுவர் தெரி வித்துள்ளார்.

அத்தியாவசியப் பொருட்கள் இறக்குமதி யில் அரசாங்கம் தலையிட்டு நேரடிக் கொள்வனவை மேற்கொள்ள வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியுள்ள அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, இடைத்தரகர் களின் தலையீடின்றி பொருட்களை கொள்வனவு செய்து குறைந்த விலையில் மக்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப் படுமெனவும் அமைச்சர் தெரிவித்தார்.

ராஜதந்திர ரீதியில் இது தொடர்பான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுமெனவும் குறிப்பிட்ட அமைச்சர் கறுப்புச் சந்தை வர்த்தகர்களுக்கு எதிராக செயற்படப் போவதாகவும் தெரிவித்தார்.
மேலும் இங்கே தொடர்க...

இலங்கை தற்போது பயங்கரவாதம் அற்ற நாடு; மிக விரைவில் முன்னேற்றம் அடைந்த நாடுகளின் பட்டியலிலும் சேரும்

பாகிஸ்தான் ஜனாதிபதி கூறுகிறார்

உலகிலே பயங்கரவாதம் இல்லாத ஒருசில நாடுகளில் இலங்கையும் இணைந்துள்ளது. உலகிலே அபிவிருத்தியடைந்த நாடுகளின் பட்டியலில் இணைவதற்கும் தற்போது இலங்கைக்கு வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாக பாகிஸ்தான் ஜனாதிபதி ஆஷிப் அலி சர்தாரி குறிப்பிட்டார்.

பயங்கரவாதத்தின் மூலம் துன்புறுத்தப்படுகின்ற ஒரு நாடு என்ற வகையில் பயங்கரவாதத்தின் கொடூர செயற்பாடுகள் பற்றி பாகிஸ்தான் நன்கறியும் என்று குறிப்பிடுகின்ற சர்தாரி பயங்கரவாதத்திற்கு முடிவு கட்டியுள்ள இலங்கைக்கு இன்று நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி உலகிலே அபிவிருத்தியடைந்த நாடாக மாறுவதற்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் கூறினார்.

இலங்கைக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே காணப்படும் உறவு பற்றி குறிப்பிட்ட பாகிஸ்தான் ஜனாதிபதி சர்தாரி, தாம் இங்கே வந்ததற்கான நோக்கம் இரு நாடுகளுக்கும் இடையிலான நட்பினை மேலும் வலுப்படுத்துவதாகும். இந்த நாட்டின் டொலர்களை எமது நாட்டிற்கு கொண்டு செல்லும் நோக்கம் தமது பயணத்தில் கிடையாது எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

இலங்கை - பாகிஸ்தான் பாராளுமன்ற நட்புறவுச் சங்கத்தின் அழைப்பின் பேரில் நேற்று (29) கோட்டே பாராளுமன்றக் கட்டடத் தொகுதிக்கு வருகைதந்த பகிஸ்தான் ஜனாதிபதி மேற்கண்டவாறு குறிப்பிட்டார். சபாநாயகர் சமல் ராஜபக்ஷ பாகிஸ்தான் ஜனாதிபதியை வரவேற்றார்.

இங்கு அவர் மேலும் கூறியதாவது,

இலங்கையில் புதிய முதலீட்டு வாய்ப்புகளை ஏற்படுத்துவதற்கு தாம் எதிர் பார்த்து உள்ளதாகவும், ஸ்ரீலங்கன் விமான சேவை பாகிஸ்தானுக்கு வருகைத் தரு மென தாம் நம்புவதாகவும் அவர் மேலும் கூறினார். “பாகிஸ்தான் விமான சேவையைச் சேர்ந்த விமானங்கள் தற்போது இலங்கைக்கு வருகின்றன. எமது இரு நாடுகளுக்கும் இடையேயும் காணப்படும் நீண்டகால நட்புறவினை பேணி வருவது இரு நாடு களினதும் பொறுப்பாகும்.

இலங்கை எனக்கு வழங்கிய மகத்தான வரவேற்பினை நான் பெரிதும் மதிக்கிறேன்” இவ்வாறு சர்தாரி கூறினார். இதன் போது கருத்துத் தெரிவித்த சபாநாயகர் சமல் ராஜபக்ஷ, இரு நாடுகளினதும் கடந்தகால உறவுகள் பற்றி நினைவுகூர்ந்தார். முக்கியமாக இந்த நாட்டின் பயங்கரவாதத்தை ஒழிப்பதற்கு பாகிஸ்தான் முக்கிய பங்காற்றியதாக குறிப்பிட்டார்.

இலங்கைக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே 2005 ஆம் ஆண்டில் செய்து கொள்ளப்பட்ட சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தின் மூலம் இரு நாடுகளும் பாரிய நன்மை அடைந்து வருவதாகவும் சபாநாயகர் சமல் ராஜபக்ஷ இதன்போது சுட்டிக்காட்டினார். நேற்று (29) முற்பகல் 11.30 மணியளவில் பாராளுமன்றத்திற்கு வருகைதந்த பாகிஸ்தான் ஜனாதிபதி உள்ளிட்ட தூதுக்குழுவினர் சுமார் இரண்டு மணித்தியாலங்கள் அங்கு தங்கியிருந்தனர்.

சபாநாயகரின் உத்தியோகபூர்வ அறையில் பிரதமர் டி.எம். ஜயரட்னவுடன் பாகிஸ்தான் ஜனாதிபதி சிறிய கலந்துரையாடல் ஒன்றிலும் ஈடுபட்டார். இலங்கை எனக்கு வழங்கிய மகத்தான வரவேற்பினை நான் பெரிதும் மதிக்கிறேன்” இவ்வாறு சர்தாரி கூறினார். இதன் போது கருத்துத் தெரிவித்த சபாநாயகர் சமல் ராஜபக்ஷ, இரு நாடுகளினதும் கடந்தகால உறவுகள் பற்றி நினைவுகூர்ந்தார். முக்கியமாக இந்த நாட்டின் பயங்கரவாதத்தை ஒழிப்பதற்கு பாகிஸ்தான் முக்கிய பங்காற்றியதாக குறிப்பிட்டார்.

இலங்கைக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே 2005 ஆம் ஆண்டில் செய்து கொள்ளப்பட்ட சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தின் மூலம் இரு நாடுகளும் பாரிய நன்மை அடைந்து வருவதாகவும் சபாநாயகர் சமல் ராஜபக்ஷ இதன்போது சுட்டிக்காட்டினார். நேற்று (29) முற்பகல் 11.30 மணியளவில் பாராளுமன்றத்திற்கு வருகைதந்த பாகிஸ்தான் ஜனாதிபதி உள்ளிட்ட தூதுக்குழுவினர் சுமார் இரண்டு மணித்தியாலங்கள் அங்கு தங்கியிருந்தனர்.

சபாநாயகரின் உத்தியோகபூர்வ அறையில் பிரதமர் டி.எம். ஜயரட்னவுடன் பாகிஸ்தான் ஜனாதிபதி சிறிய கலந்துரையாடல் ஒன்றிலும் ஈடுபட்டார்.
மேலும் இங்கே தொடர்க...

நாட்டின் எப்பாகத்திலும் இனவிகிதாசாரத்தை மாற்றும் முயற்சியில் அரசு ஈடுபடவில்லை






நாட்டின் எந்த ஒரு பிரதேசத்திலும் எந்த ஓர் இனத்தினதும் இன விகிதாசாரத்தை மாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வில்லை என்று அமைச்சர் பசில் ராஜபக்ஷ நேற்று (29) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

இன விகிதாசாரத்தை மாற்றும் எந்த குடியேற்றத்தையும் அரசாங்கம் மேற்கொள்ளவில்லை என்றும் அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்தார்.

வரவு - செலவுத் திட்டத்தின் ஆறாவது நாள் விவாதத்தை நிறைவு செய்து வைத்து அமைச்சர் உரையாற்றினார்.

தொடர்ந்து உரையாற்றிய அமைச்சர் பசில் ராஜபக்ஷ மேலும் கூறுகையில்,

ஜனாதிபதியின் இரண்டாவது பதவியேற்புக் குப் பின்னர் சமர்ப்பிக்கப்பட்ட முதலாவது வரவு - செலவுத் திட்டம் இதுவாகும். இந்த விவாதத்தின் நிறைவு உரையை இரண்டு பிரிவுக ளாக ஆற்ற விரும்புகிறேன். முதலில் எதிர்க் கட்சியினர் முன்வைத்த விமர்சனங்களுக்குப் பதில் அளிக்க விரும்புகிறேன்.

வரவு செலவுத்திட்டத்திற்கு எதிராக வாக்களிக்காதிருக்க தமிழ்த் தேசிய கூட்டமைப்பு எடுத்த முடிவைப் பாராட்டுகிறேன். வடக்கின் மீள்குடியேற்றப் பணிகளுக்கு ஒத்துழைப்பதாகவும் அவர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.

வடக்கில் மீள்குடியேற்றம் என்பது சுலபமானது அல்ல. சகல கட்டமைப்புகளும் அழிக்கப் பட்ட நிலையில் பெரும் தொகை யான கண்ணிவெடிகள் புதைக்கப்பட்ட சூழ்நிலையில் இந்தப் பணிகளை மேற்கொள்கின்றோம். முதலில் கண்ணிவெடிகளை அகற்றும் பணிகளை மேற்கொள்கின்றோம். சிலர், மீள்குடியேற்றத்திற்கு நிதி ஒதுக்கப்பட வில்லை என்று கூறுகிறார்கள்.

வடக்கு நீர்ப்பாசனத்திற்கென 1385 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. வீதி புனரமைப்புக்கென 1065 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. கண்ணிவெடிகளை அகற்ற 700 மில்லியன் செலவிடப்பட்டுள்ளது. இவ்வாறு வடக்கு அபிவிருத்திக்கென இரண்டு இலட்சத்து 44 ஆயிரத்து 835 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.

எனவே மக்களைத் தவறாக வழிநடத் தாதீர்கள். நாடு முன்னேறுவதற்கு நீர், மின்சாரம் இன்றியமையாத வளங்களாகும்.

தமிழ்த் தேசிய கூட்டமைப்பு எம்முடன் இணைந்து செயற்பட முன்வந்துள்ளமை பாராட்டத்தக்கது. வடக்கு, கிழக்கு மக்கள் கடந்த தேர்தல்களில் தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கும் அரசாங்கத்தின் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்குமே வாக்களித்துள்ளனர்.

வடக்கில் இந்திய இராணுவம் இருந்த போதும் சரி. போர் நிறுத்த உடன்படிக்கை அமுலில் இருந்த காலமானாலும் சரி உயர் பாதுகாப்பு வலயங்களில் யாரும் மீளக்குடியமர்த்தப்படவில்லை. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவே முதன் முதலாகத் தமிழ் மக்களைக் குடியமர்த்தினார். 20 வருடங்களுக்கு முன் இடம்பெயர்ந்த முஸ்லிம்களைக்கூட குடியமர்த்தவில்லை.

நாட்டின் எந்த ஒரு பிரதேசத்திலும் எந்த ஒரு இனத்தினதும் இன விகிதாசாரத்தைக் குறைக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வில்லை. அந்த மக்களின் உரிமைகளைப் பெற்றுத்தருவோம்.

பல அரச நிறுவனங்கள் நஷ்டத்தில் இயங்குவதாக ஐ.தே.க. குற்றஞ்சாட்டியது. ஆனால் 38 அரச நிறுவனங்கள் இலாபமீட்டுவது குறித்து அவர்கள் எதுவும் கூறவில்லை. 2009 இல் 11,981 மில்லியன் ரூபா இலாபம் ஈட்டப்பட்டது. ஆனால் 2010 இல் இன்றுவரை 20 மில்லியன் ரூபா இலாபம் கிடைத்துள்ளது. இந்த வருட முடிவில் 26 மில்லியன் ரூபாவாக இது அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நஷ்டம் ஈட்டும் அரச நிறுவனங்களை இலாபமீட்ட வைக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த வரவு - செலவுத் திட்டம் எந்த மாதிரி என எதிர்க் கட்சி கேள்வி எழுப்பியது. இது இலங்கை மாதிரி ‘மஹிந்த சிந்தனை’ மாதிரியாகவே இந்த வரவு - செலவுத் திட்டம் முன்வைக்கப்பட்டுள்ளது.

தோட்டப் பகுதி உட்பட சகல இனப் பிரிவினரையும் உள்ளடக்கியதாகவே வரவு - செலவுத் திட்டம் முன்வைக்கப் பட்டுள்ளது.

மின் கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளதாக எதிர்க் கட்சி குற்றச்சாட்டியது. ஆனால் 90 அலகிற்கு அதிகம் பயன்படுத்தினாலே கட்டணம் உயரும். மொத்த மின் பாவனையாளர்களில் 70 வீதமானவர்கள் 90 அலகை விட குறைவாகவே பயன்படுத்துகின்றனர். குறைவாக மின்சாரம் பயன்படுத்துவதை ஊக்குவிப்பதற்காகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அமைச்சர்கள் மற்றும் எம்.பிகளுக்கும் 90 அலகிற்கு குறைவாக மின்சாரத்தை பாவிக்குமாறு கோருகிறோம்.

சிறிய மற்றும் நடுத்தர வியாபாரிகளுக்கு கட்டண உயர்வு அமுலாகாது. பாடசாலைகள், மதஸ்தலங்களுக்கான மின் கட்டணம் 25 வீதத்தினால் குறைக்கப்பட்டு ள்ளது. எதிர்வரும் போகத்தின் போது 1550 மில்லியன் மெற்றிக்தொன் நெல் அறுவடை எதிர்பார்க்கப்படுகிறது. இதன் படி இந்த வருடத்தில் 4189 மெற்றிக்தொன் மொத்த நெல் உற்பத்தி எதிர்பார்க்கப்படுகிறது. இது 17 வீத அதிகரிப்பாகும். இதனூடாக சுதந்திரத்தின் பின் அதிகூடிய நெல் உற்பத்தி இந்த வருடத்திலே பதிவாகிறது. வடக்கு, கிழக்கிலும் இம்முறை கூடுதலான நிலங்களில் நெல் பயிரிடப்பட்டுள்ளது.

குரக்கன் மற்றும் உழுந்து உற்பத்தியில் தன்னிறைவு காணும் வகையில் இம்முறை வன்னிப் பிரதேசத்தில் குரக்கன் மற்றும் உழுந்து பயிரிடப்பட்டுள்ளது.

மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாக பதவி ஏற்றது முதல் அரச ஊழியர்களுக்கு பல்வேறு நிவாரணங்கள் அளிக்கப்பட்டு வந்தன. இம்முறை வரவு - செலவுத் திட்டத்தினூடாக குறைந்தது 1250 ரூபா சம்பளம் அதிகரிக்கிறது. சிலருக்கு 3 ஆயிரம் ரூபாவுக்கு மேல் உயருகிறது.

2010 இல் மின் உற்பத்தி 10 வீதத்தினால் அதிகரித்துள்ளது. வடக்கு, கிழக்கிலும் மின் உற்பத்தியில் இணைந்துள்ளதே இதற்குக் காரணம். வடக்கு, கிழக்கில் மின் உற்பத்தியை 50 வீதத்தினால் உயர்த்தத் திட்டமிட்டுள்ளோம். படகுகளின் பதிவுக் கட்டணம், திருத்தக் கட்டணம் என்பன நீக்கப்பட்டுள்ளன.
மேலும் இங்கே தொடர்க...

29 நவம்பர், 2010

ஜனாதிபதி நாளை லண்டன் விஜயம்

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்க்ஷ நாளை லண்டனுக்கு மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொள்ள உள்ளதாக அரசாங்க இணையத்தள செய்திகள் தெரிவிக்கின்றன.

ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தின் அழைப்பை ஏற்று விஜயம் செய்யும் ஜனாதிபதி பல்கலைக்கழகத்தின் மாணவர் சங்க அமர்வொன்றில் விஷேட உரையாற்ற உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் இங்கே தொடர்க...

குவைத்திலிருந்து நிர்க்கதி நிலைக்குள்ளான 85 பேர் இன்று இலங்கை வருகை

குவைத் நாட்டில் நிர்க்கதி நிலைக்குள்ளான 85 பேர் இன்று இலங்கை வரவுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் அறிவித்துள்ளது.

அந்நாட்டில் நிர்க்கதி நிலைக்குள்ளானவர்களில் மேலும் 360 பேரை இலங்கைக்கு அழைத்துவர நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. இவர்கள் கொழும்பு, கண்டி மற்றும் கிழக்கு மாகாணம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்களாவர்.

இலங்கையைச் சேர்ந்த 2ஆயிரம் பேர் இவ்வாறு வெளிநாடுகளில் நிர்க்கதியாகியுள்ளனர் என வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் பணிப்பாளர் கிங்ஸ்லி ரணவக்க தெரிவித்துள்ளார்.
மேலும் இங்கே தொடர்க...

டொலர்கள் மூலம் கொடுக்கல் வாங்கல் முறையை முடிவுக்கு கொண்டுவர வேண்டும்: பாக்.ஜனாதிபதி

அமெரிக்க டொலர்கள் மூலம் கொடுக்கல் வாங்கல்கள் மேற்கொள்ளும் யுகத்தை முடிவுக்குக் கொண்டுவந்து நாடுகளுக்கிடையே பண்டமாற்று முறைமையை ஏற்படுத்தி அபிவிருத்தி காண வேண்டும் என்று பாகிஸ்தான் ஜனாதிபதி ஆஸீப் அலி சர்தாரி தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கு விஜயம் செய்துள்ள பாகிஸ்தான் ஜனாதிபதி ஆஸீப் அலி சர்தாரியை நேற்று ஞாயிற்றுக்கிழமை ஹில்டன் ஹோட்டலில் பிரதமர் டி.எம். ஜயரத்ன சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியபோதே பாகிஸ்தான் ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.

இந்த பேச்சுவார்த்தைகளின் போது மேலும் கருத்து தெரிவித்த பாகிஸ்தான் ஜனாதிபதி,

இலங்கைக்கும் பாகிஸ்தானுக்குமிடையே நீண்ட காலமாக ராஜதந்திர உறவுகள் இருந்து வருகிறது. அதனை மேலும் வலுப்படுத்திக் கொள்ள வேண்டியது காலத்தின் தேவையாகும். இங்கு பயங்கரவாதத்தை ஒழிப்பதற்கு எம்மாலான ஒத்துழைப்புக்களை வழங்கினோம். அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகள் அமெரிக்க டொலர்கள் மூலம் கொடுக்கல் வாங்கல்கள் மேற்கொண்ட யுகத்தை முடிவுக்கு கொண்டு வர வேண்டும்.

அதற்கு பதிலாக எம்மைப் போன்ற நாடுகள் பண்டமாற்று முறைமை ஊடாக அபிவிருத்தியின் இலக்குகளை நோக்கிச் செல்ல வேண்டும். இலங்கையின் நிர்மாணப் பணிகளுக்கு தேவையான இரும்பு மற்றும் சீமெந்து உட்பட தேவையான பொருட்களை பாகிஸ்தானால் வழங்க முடியும். மேலும் இலங்கையில் சீனி உற்பத்தியை மேம்படுத்துவதற்கு தேவையான ஒத்துழைப்பை வழங்கவும் நாம் தயாராக உள்ளோம்.

இரண்டு நாடுகளுக்கிடையேயான வர்த்தக உடன்படிக்கையினை பலப்படுத்தி வர்த்தக அடித்தளமொன்றை ஏற்படுத்திக் கொள்ள சந்தர்ப்பம் கிடைத்துள்ளது" என்று கூறினார்.
மேலும் இங்கே தொடர்க...

சிறுமி மீது பாலியல் வல்லுறவு : 62 வயது நபர் கைது


வாழச்சேனை நாசிவன் தீவு பகுதியில் எட்டு வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த 62 வயதுடைய நபரொருவரை நேற்றிரவு கைது செய்துள்ளதாக வாழச்சேனை பொலிஸ் நிலைய அதிகாரி எமது இணையத்தளத்திற்கு தெரிவித்தார்.

குறித்த சிறுமி வாழச்சேனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு வைத்தியசாலையில் அனுமதிக்க உள்ளதாகவும் தெரிவித்தார்.

சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட நபரை இன்று நீதிமன்றில் ஆஜர் செய்ய உள்ளனர்.
மேலும் இங்கே தொடர்க...

சவூதி மீனவர்களுக்கு இலங்கை கடற்பரப்பில் மீன்பிடிக்க அனுமதி: அமைச்சர் ராஜித

இலங்கை ஆழ்கடற்பரப்பில் மீன்பிடிப்பதற்கு சவூதி அரேபிய மீனவர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது என மீன்பிடித்துறை அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.

''இலங்கையைச் சுற்றியுள்ள கடற்பரப்பில் 400 சவூதி அரேபிய மீனவர்களுக்கு இத்திட்டத்தின் மூலம் மீன்பிடிக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. இவர்கள் பிடிக்கும் மீன் வகைகளில் 20 சதவீதத்தை இலங்கைக்கு வழங்க வேண்டும்.
இதுதொடர்பான ஒப்பந்தம் டிசம்பர் முதல் வாரமளவில் கைச்சாத்திடப்படவுள்ளது" என அவர் மேலும் தெரிவித்தார்.
மேலும் இங்கே தொடர்க...

இலங்கையை வெளிநாட்டவர்களுக்கு தாரைவார்க்கும் வரவு செலவுத் திட்டம் : ஜே.வி.பி

உலகின் விமர்சனத்திற்குள்ளான புதிய லிபரல்வாத, காலனித்துவ நாடாக இலங்கையை வெளிநாட்டவர்களுக்கு "தாரைவார்க்கும்' வரவு செலவுத் திட்டத்தையே அரசாங்கம் முன்வைத்துள்ளது என்று ஜே.வி.பி.யின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா குற்றம் சாட்டினார்.

பௌத்த குருமார்கள் முன்னிலையில் உறுதியளித்த சம்பள உயர்வை வழங்காத ஜனாதிபதி ஒரு "பொய்காரர்' என்றும் அவர் தெரிவித்தார். பெலவத்தையிலுள்ள ஜே.வி.பி.யின் தலைமையகத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் உரையாற்றும் போதே ரில்வின் சில்வா இதனைத் தெரிவித்தார்.

இங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,

மக்களுக்கு சலுகைகளை வழங்காத அரச ஊழியர்களுக்கு உறுதியளித்த ரூபா 2500 சம்பள உயர்வை வழங்காத வரவு செலவு திட்டம் என்பதே எமக்கு மேலோட்டமாகத் தெரியும் விடயமாகும். ஆனால் இதனை ஆழமாக ஆராய்ந்தபோது நாட்டின் பொருளாதாரத்தை வெளிநாட்டவர்களுக்கு தாரைவார்க்கும் சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளை செயல்படுத்தும் வரவு செலவுத் திட்டம் என்பதே உண்மையாகும்.

முதலீட்டு நிதியை வெளிநாட்டவர்களுக்கு ஏற்ற விதத்தில் இலகுவாக்கி நிதிச் சட்டங்களையும் அவர்களுக்கு சார்பாக மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

எனவே உலக நாடுகளிலிருந்து எந்தத் "திருடர்களும்' இங்கு வந்து முதலீடு செய்யும் ஆபத்தான நிலை தோன்றியுள்ளது. அமைச்சுப் பதவிகளுக்காக சிறப்புரிமைகளுக்காகவும் தேசப் பற்றுள்ள தேசிய பொருளாதாரத்தை கட்டிக் காக்கும் அரசாங்கம் என புகழ் பாடிக் கொண்டிருப்போர் ரணில் விக்கிரமசிங்கவை விட புதிய லிபரல்வாதக் கொள்கையை முன்னெடுக்கும் ஜனாதிபதி தொடர்பில் மௌனம் சாதிக்கின்றனர்.

நிதியமைச்சின் செயலாளர் பி.பீ. ஜயசுந்தரவே உலகின் சிறந்த லிபரல்வாதி ஜனாதிபதி என புகழ் பாடியுள்ளார். இன்று விவசாயம் புறம்தள்ளப்பட்டுள்ளது. சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதற்காக சூதாட்டம் சட்டமாக்கப்பட்டுள்ளது.

இதற்காக ஹிக்கடுவை கண்காட்சி, ஐபா என பல்வேறு கலாசார சீரழிவு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. "மதுவுக்கு முற்றுப்புள்ளி' எனக் கூறும் அரசாங்கம் நாடு முழுவதும் மதுபானச் சாலைகளை ஆரம்பிக்கின்றது.சூதாட்ட வலயங்கள் அமைக்கப்படுகின்றன. சுற்றுலாத்துறைக்கான பொருளாதார அபிவிருத்தி என்பது எமது நாட்டுக்கு பொருந்தாத விடயமாகும். இது நாட்டில் கலாசார சீரழிவை ஏற்படுத்தும்.

வெளிநாட்டவர்களை சந்தோஷப்படுத்தி உறவினர்களுக்கு உழைப்பதற்கு வழிவகுக்கும் அனைத்து திட்டங்களும் உள்ளடக்கப்பட்டுள்ளன.
மேலும் இங்கே தொடர்க...

கிருஷ்ணாவுடனான தமிழ்க் கூட்டமைப்பு, அரங்கம் ஆகியவற்றின் சந்திப்பு இறுதி நேரத்தில் ரத்து

உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இலங்கைக்கு வந்திருந்த இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தமிழ்க் கட்சிகளின் அரங்கம், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆகிய கட்சிகளை சந்தித்து பேச இருந்த போதிலும் இந்தச் சந்திப்புக்கள் இறுதி நேரத்தில் ரத்துச்செய்யப்பட்டுள் ளன. நாட்டின் சீரற்ற காலநிலை காரணமாக ஏற்கனவே தயாரிக்கப்பட்ட நிகழ்ச்சி நிரலில் மாற்றம் ஏற்படுத்தப்பட்டமையினாலேயே இந்தச் சந்திப்புக்கள் இரத்துச் செய்யப்பட்டதாக குறித்த கட்சிகளுக்கு இந்தியத் தூதரகம் அறிவித்துள்ளது.

இலங்கை வந்திருந்த கிருஷ்ணா, யாழ்ப்பாணத்திற்கான விஜயம் மற்றும் அங்கு ஏற்பாடாகியிருந்த நிகழ்வுகளுக்குப் பின்னர் நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணியளவில் தமிழ் தேசியக் கூட்டமைப்பையும், அதனைத் தொடர்ந்து தமிழ்க்கட்சிகளின் அரங்கம், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆகிய கட்சிகளையும் சந்தித்துப் பேச நேரம் ஒதுக்கப்பட்டிருந்தது.

எனினும் நேற்று முன்தினம் சனிக்கிழமை காலநிலை மாற்றம் காரணமாக அன்று மாலை நடைபெறவிருந்த நிகழ்வுகள், நேற்று ஞாயிற்றுக்கிழமைக்கு மாற்றப்பட்டன. இதன் பிரகாரம் அம்பாந்தோட்டையில் புதிதாக இந்திய கிளை தூதுவர் ஆலயம் திறந்து வைப்பதற்கென அமைச்சர் கிருஷ்ணா நேற்று அங்கு சென்றிருந்தார். இதுவே சந்திப்பு இடம் பெறாமைக்கான காரணம் என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.

நேற்று காலை அம்பாந்தோட்டைக்கு விஜயம் செய்த எஸ்.எம். கிருஷ்ணா அங்கிருந்து நேரடியாக கட்டுநாயக்கா விமான நிலையம் சென்று நாடு திரும்பியுள்ளார்.

இதேவேளை தமிழ் கட்சிகளின் அரங்கத்தில் இடம் பெற்றுள்ள கட்சித் தலைவர்கள் நேற்று கொழும்பில் கூடி கிருஷ்ணாவைச் சந்தித்து மகஜர் கொடுப்பதற்கான ஏற்பாடுகளில் ஈடுபட்டுள்ளனர். இறுதி நேரத்தில் இந்தச் சந்திப்பு ரத்து செய்யப்பட்டதையடுத்து மகஜரை கையளிக்க முடியாத நிலை அரங்கத்தினருக்கு ஏற்பட்டது
மேலும் இங்கே தொடர்க...

அரசியல் இணக்கப்பாட்டை வளர்ப்பதற்கு அரசாங்கத்துக்கு உதவத் தயார் : அமெரிக்க தூதுவர் பற்றீஷியா

பாதுகாப்பை வலுப்படுத்தவும் பொருளாதார அபிவிருத்தியை மேலும் விருத்தி செய்யவும் அரசியல் இணக்கப்பாட்டை வளர்ப்பதற்கும் இலங்கை அரசாங்கத்துக்கு உதவ அமெரிக்கா தயாராகவுள்ளது என்று இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் பற்றீஷியா ஏ. பியூடெனிஸ் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, உலகம் பூராக ஐக்கிய அமெரிக்காவின் உறவுகளுக்கு ஜீவனூட்ட ஜனாதிபதி ஒபாமாவும் இராஜாங்க செயலாளர் ஹிலரி ரொட்ஹம் கிளின்டனும் முன்னுரிமை கொடுத்துள்ளனர்.

அவர்கள் தற்போதைய அமெரிக்க உறவுகளுக்கு வலுவூட்டவும் அன்றாட சவால்களை முறியடிக்கக் கட்டியெழுப்பப்படும் உறவுகளுக்கு அதாவது காலநிலை மாற்றங்கள், அணு ஆயுத அச்சுறுத்தல்கள், நோய் மற்றும் வறுமை ஒழித்தல் போன்ற சவால்களை புதிய உறவுகளுக்கு வலுவூட்டவும் பாடுபடுகின்றனர். இந்த முயற்சிகளில் நாமும் ஒரு பங்காளி என்பதையிட்டு இலங்கைக்கான ஐக்கிய அமெரிக்க தூதுவர் என்ற முறையில் நான் பெருமைப்படுகிறேன்.

பாதுகாப்பை வலுவூட்டவும் பொருளாதார அபிவிருத்தியை மேலும் விருத்தி செய்யவும் அரசியல் இணக்கப்பாட்டை வளர்ப்பதற்கும் இலங்கை அரசாங்கத்துக்கும் இலங்கை வாசிகளுக்கும் உதவ ஐக்கிய அமெரிக்கா மிகவும் பாடுபட்டுள்ளது.

இரு நாடுகளுக்குமிடையிலான வர்த்தக நடவடிக்கைகளை மேலும் விருத்தி செய்ய அமெரிக்க வர்த்தகக் குழுவை வரவழைத்தோம். தமது வாழ்க்கையை மீண்டும் கட்டியெழுப்பும் முகமாக மோதல் பிரதேச மக்களுக்கு புதுச் செயல்திறன்களை பயிற்றுவிப்பதற்காக எமது அபிவிருத்தி முகவரான யுஎஸ்எயிட் பல உள்ளூர் நிறுவனங்களுடன் தோழமை பூண்டுள்ளது.

இராணுவத்தின் கண்ணிவெடி அகற்றும் பிரிவிற்கு நாம் வழங்கும் 1.5 மில்லியன் அமெரிக்க டொலர் உதவியின் முதல்கட்ட உதவி கடந்த வாரம் இராணுவத்திடம் கையளிக்கப்பட்டது. 2009 ஆம் ஆண்டு முதல் ஐக்கிய அமெரிக்க 180 மில்லியன் அமெரிக்க டொலரிலான உதவிகளை இலங்கைக்கு வழங்கியுள்ளது.

கடந்த சில நாட்களாக ஊடகத் துறையில் மிகவும் அதிகமாகப் பேசப்படும் விடயமாக அமெரிக்க பாதுகாப்புத் திணைக்களத்தின் கணினியிலிருந்து களவாடப்பட்ட ஆவணங்கள் அமைந்துள்ளது. இந்த ஆவணங்களின் நம்பகத்தன்மையை என்னால் உறுதி செய்ய முடியாது. ஆயினும் இரகசியமாக வைத்திருக்க வேண்டிய தகவல்கள் வெளியாகியமை சம்பந்தமாக ஐக்கிய அமெரிக்காவின் ஆழ்ந்த அனுதாபத்தை நான் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். இந்தச் செயலை நாம் கண்டிக்கின்றோம்.

தூதுவர்கள் தம்மைச் சந்திப்பவர்களிடம் நேர்மையான பேச்சுவார்த்தை நடத்த வேண்டியுள்ளது. ஆகையால் பேச்சுவார்த்தையில் அடங்கியவை இரகசியமாக அமைய வேண்டும். ஏனைய அரசாங்கங்களுடன் சர்வதேச உறவுகள் பற்றி கலந்துரையாடும் போது அது நேர்மையானதாக இருக்க வேண்டும். இல்லாவிட்டால் சமாதானம், பாதுகாப்பு மற்றும் சர்வதேச உறுதித் தன்மையைப் பேண முடியாது.
மேலும் இங்கே தொடர்க...

முன்னை நாள் விடுதலைப் புலிகள் அமைப்பின் உறுப்பினர் ஆதவனின் விசேட செய்தி வன்னியிலிருந்து


புலம்பெயர் தேசங்களில் எமது பெயரால் நீங்கள் நடாத்தும் இழிசெயலை நிறுத்துங்கள் என முன்னாள் புலி ஒருவர் தனது வேண்டுதலை கே.பி யின் இணையத்தளத்தில் பதிவு செய்துள்ளார். நபரின் பதிவில் புலம்பெயர் தமிழரின் புலித்தொழில் சார்பாக விரிவாக விபரிக்கப்பட்டுள்ளதுடன் , பிரபாகரனை தமிழர்கள் தலைவர் என ?ஏற்றுக்கொள்வதாயின் பிரபாகரன் இறுதி நேரத்தில் புலிகளியக்கத்தின் புலம்பெயர் தலைவராக கே.பி யை நியமனம் செய்திருந்ததையும் ஏற்றுக்கொள்ளவேண்டும் என வக்காலத்துவேறு வாங்கியுள்ளார். குறிப்பிட்ட பதிவில் புலிகள் தமிழ் மக்களுக்காக போராடியதாகவும் அவர் குறிப்பிடுகின்றார். புலிகள் மக்களுக்காக போராடினார்களா அன்றில் தமது சொந்த தேவைகளுக்காக போராடினார்களா என்பதற்கு குறிப்பிட்ட முன்னாள் புலியின் பதிவே சான்று. புலிகள் இவ்வாறு காலத்திற்கு காலம் தமது இழிசெயல்களை மறைப்பதற்காக மாறி மாறி நிறம்மாறும் விலங்குபோன்று மற்றவர் மீது குற்றம் சுமத்துவது வரலாற்றினூடாக கண்டிருக்கின்றோம்.

அவரது பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது.

முன்னைய கட்டுரையில் புலம்பெயர் சூழலில் மாவீரர் தினத்தை நினைவு கொள்ளுவதிலுள்ள போலித்தனங்கள் குறித்து கேள்வி எழுப்பியிருந்தோம். மீண்டும் அது குறித்து மேலும் சில விடயங்களை எங்கள் புலம்பெயர் மக்களுடன் பகிர்ந்து கொள்ள விழைகின்றோம். சீனாவில் இப்படியொரு கருத்துண்டுமரம் சும்மா இருந்தாலும் காற்று விடுவதில்லைபெரும்பாலும் எங்களுடைய நிலைமையும் அப்படிப்பட்ட ஒன்றுதான். உங்களது செயல்கள் எங்களது மௌனத்தை கலைக்கிறது. நாங்கள் சாவை உதைத்துக் கொண்டு வாழ்வதற்கான போராட்டத்தில் இருக்கிறோம். தினமும் செய்திகளைப் படித்து, அது குறித்தெல்லாம் விவாதம் செய்யுமளவிற்கு, மனதிலும் உடலிலும் எங்களுக்கு தென்பில்லை நன்பகளே! ஆனாலும் இனியும் நாங்கள் மௌனமாக இருந்தால் நீங்கள் எங்கள் நிர்வாணம் மறைக்கும் கோவணங்களையும் விலைபேசத் தயங்கப் போவதில்லை ஏனெனில் உங்களது தேவையெல்லாம் பணம் சம்பாதிப்பதற்கான வழிகள் மட்டுமே. எனவே இனியும் அமைதி காப்பது சரியல்ல என்பதை உணர்ந்தே இதனை பதிவு செய்ய விழைகின்றோம். பொறுமைக்கும் ஒரு எலை உண்டல்லவா!

சமீப நாட்களாக, நாங்கள் அவதானித்து வருகின்ற சில சம்பவங்களை முன்னிறுத்தி விவாதிப்பதே இந்தக் கட்டுரையின் நோக்கம்.

எங்கள் மக்களும், எங்கள் சரணடைந்த போராளிகளும் அடுத்த வேளை உணவுக்காக கையேந்திக் கொண்டிருக்கும் போது, நீங்கள் புலம்பெயர் நாடுகளில், எங்கள் மரணமடைந்த போராளிகளை நினைவு கொள்வதாக அறிவிக்கின்றீர்கள். இறந்து கொண்டிக்கும் எங்கள் உறவுகளைக் காப்பாற்ற முடியாத உங்களது சுயநலத்தையும், சந்தர்ப்ப வாதத்தையும் எண்ணி ஆரம்பத்தில் மனம் நொந்திருந்தாலும், சரி எங்கள் உடன்பிறப்புக்கள் போல் வாழ்ந்த சகோதரர்களையும், சகோதரிகளையும்தானே நினைவு கொள்ளுகின்றீர்கள் என்று உள்ளுர மகிழ்ந்தோம். நாங்கள் பசியோடும் வேதனையோடும் இருந்த போதும் அவர்களது தியாகம் இப்படியாவது மக்களால் நினைவு கொள்ளப்படுகிறதே என்பதையெண்ணி மகிழ்சியடையாமல் இருக்க முடியவில்லை. ஆனால் அது கூட உண்மையல்ல உங்கள் பணம் சம்பாதிக்கும் பேராசையின் வெளிப்பாடுகளில் ஒன்றுதான் என்பதை அறிந்த போது எங்களால் எப்படி அமைதியாக இருக்க முடியும். போராட்டம் நடந்து கொண்டிந்த காலத்திலும் அதன் வலிகளை எந்தவகையிலும் அனுபவித்தறியாத சிலர் புலம்பெயர் மக்களின் உள்ளார்ந்த ஈடுபாட்டை வியாபாரமாக்கினீர்கள். உங்களைப் போன்றவர்களின் கேவலமான செயற்பாடுகளை அறிந்திருந்த போதும், நாங்கள் எங்கள் மக்களுக்காக எல்லாவற்றையும் சகித்துக்கொண்டோம். இன்று ஒரு மிகப்பெரிய அழிவை சந்தித்த பின்னர் போராட்டம் முற்றுப்பெற்று விட்டது. எங்கள் போராட்டம் ஓய்தாலும் உங்கள் பணம் சம்பாதிக்கு சூதாட்டம் மட்டும் இன்னும் ஓயவில்லை. போராட்ட காலத்தில் போராட்டத்தை விற்றீர்கள், இன்று அதில் இறந்தவர்களின் தியாகங்களை ஏலம் போட்டு விற்கிறீர்கள். இதனை மனச்சாட்சியுள்ள எந்த மனிதனால் சகித்துக் கொள்ள முடியும்? உங்களது ஊடக பலத்தாலும், அடியாள் பலத்தாலும் இந்த உண்மையை புலம்பெயர்ந்த சாதாரண மக்கள் அறியாத வண்ணம் நீங்கள் தடுத்து வைத்திருக்கலாம், ஆனாலும் தங்கள் மனச்சாட்சிக்கு மதிப்பளிக்கும் நல்ல மனிதர்களும் இருப்பார்கள் என்ற நம்பிக்கையில்தான் இந்த விடயங்களை பகிரங்கமாகப் பேசுகின்றோம். எங்களின் இந்தக் குரல்கள், நல்லுள்ளம் கொண்ட ஒரு சிலரையாவது உசுப்பும், செயலுக்கு தூண்டும்; என்பதில் இம்மியளவும் எங்களுக்கு சந்தேகமில்லை.

ஏதோ நடந்துவிட்டுப் போகட்டுமே என்று எங்களால் அமைதியாக இருக்க முடியாது. ஏனென்றால் உங்களது சூதாட்டத்தால் கேவலப்படுத்தப்படுவது எங்கள் சகபோராளிகளின் தியாகங்கள், பாதிக்கப்பட்டுக் கொண்டிருப்பது எங்கள் மக்கள். அவர்கள்தான் போராட்டத்தால் எல்லாவற்றையும் தொலைத்து உருக்குலைந்து போனவர்கள். ஒரு காலத்தில், விருந்தோம்பல் என்றால் வன்னி என்று சொன்ன காலம் போய் பசி,பட்டினி. நோய் என்றால் வன்னி என்று சொல்லும் நிலைமை உருவாகியிருக்கிறது. இப்படியொரு நிலைமையில், தொடர்ந்தும் எங்களைக் காட்சிப் பொருளாக்கி அரசியல் செய்யும் உங்கள் கேவலமான செயல்களை எங்களால் அனுமதிக்க முடியாது. எங்களால் மட்டுமல்ல, மனிச்சாட்சியுள்ள எந்தவொரு புலம்பெயர் தமிழரும் இதனை ஏற்றுக் கொள்ள மாட்டார் என்றே நாங்கள் நம்புகிறோம்.

இன்று பலகோடி ரூபாய் செலவில், மாவீரர் தினக் கொண்டாட்டங்களை நடாத்திக் கொண்டு இருக்கின்றீர்கள். கொண்டாடுவதற்கு இது மகிழ்சிக்குரிய விடயமா அல்லது திருவிழாக் கோலம் கொண்டு அனுஸ்டிப்பதற்கு இதென்ன கோயில் நிகழ்வா? பின்னர் எதற்கு இந்த ஆடம்பரங்கள்? யாருடைய நன்மைக்காக இது மேற்கொள்ளப்படுகிறது? எங்கள் தன்னலமற்று இறந்த, அந்த போராளிகள் மீது உங்களுக்கு உண்மையிலேயே ஈடுபாடிருந்தால், எந்தவித ஆடம்பரமும் இல்லாமல் அவர்களை நினைவு கொண்டிருக்க முடியும். ஆனால் நீங்கள் அப்படிச் செய்யவில்லை ஏன்? பதில் பணம் சம்பாதிக்க வழி இல்லாமல் போய்விடும் என்பதுதானே! உண்மையில் இதற்கும் மக்களின் உள்ளார்ந்த ஈடுபாட்டிற்கும் ஒரு தொடர்புமில்லை என்பதை நாங்கள் நன்கு அறிவோம். இவ்வாறான இழிவுகள் ஒருபுறம் என்றால்;, மறுபுறம் யார் யாரோ, இம்முறை மாவீரர் தின உரை ஆற்றவுள்ளதாக பிறிதொரு நகைச்சுவையான செய்தியும் வெளிவந்து கொண்டிருகிறது. இதுவும் நாம் முன்னர் குறிப்பிட்டது போன்று எமது கடந்தகாலத்தை இழிவுபடுத்தும் செயல்தான்.

ஒருவகையில் புலம்பெயர் நாடுகளில் மேற்கொள்ளப்படும் இவ்வாறான மாவீரர் தின நிகழ்வுகள் மேலும் உருத்திரகுமார் உரை நிகழ்த்தும் கதையெல்லாம், கோடாம்பாக்க தமிழ் சினிமாவின் மூலம் பணம் சம்பாதிப்பதற்கு ஒப்பானது. அங்கு இளைஞர்கள், யுவதிகள் மத்தியில் இருக்கும் உணர்வுகளை கிளறுவதன் மூலம் பணம் சேர்கிறது. இங்கு, எங்கள் மக்கள், போராளிகள் மீதும் அவர்களது தன்னலமற்ற அர்ப்பணிப்பு மீதும் கொண்டிருக்கும் உள்ளார்ந்த உணர்வை ஆதாரமாகக் கொண்டு உங்கள் பணம் பெருகுகிறது. அந்த தன்னலமற்ற மனிதர்களை முதலீடாகக் கொண்டு உங்களது குடும்பங்கள் செல்வச் செழிப்பில் வளர்கிறது. இப்படியொரு அவலம் உலக விடுதலைப் போராட்ட வரலாறுகளில் எங்குமே கானக்கிடைக்காத ஒன்று. உலகில் பல தேசங்களில் போராட்டங்கள் நடந்திருக்கின்றன. அவற்றில் சிலதே வெற்றி பெற்றிருக்கின்றன. தோல்வியடைந்த இடங்களில் எங்கும் இது போன்றதொரு கேவலமான அநீதி போராடிய மக்களுக்கு, அந்த மக்களின் ஒரு பகுதியினரால் மேற்கொள்ளப்பட்டதில்லை. சொந்த உறவுகளையே அந்த மக்களின் ஒரு பகுதியினர் போராட்டத்தின் பேரால் ஏமாற்றி பிழைக்கும் அவலத்தை இங்குதான் நாம் கான்கிறோம்.

புலம்பெயர் உறவுகளே! போராட்டம் பற்றியும் அதன் முடிவு பற்றியும் பேசுவதற்கும் உரித்துடைவர்கள் ஈழத்திலேயே இருக்கின்றனர். எந்தவொரு முடிவும் ஈழத்தில் இருந்தே எடுக்கப்படும். அரசியல், அடையாளம் அனைத்தும் நாங்கள்தான். எனவே நீங்கள் அங்கு எடுக்கும் பிழையான உணர்ச்சி வேக முடிவுகள் எங்களையே பாதிக்கும் என்பதை உணர்ந்து செயற்படுங்கள். நீங்கள் எடுக்கும் முடிவுகள் எங்களைப் பாதிக்கும் போது அதில் தலையிடுவது எங்களைப் பொருத்தவரையில் தவிர்க்க முடியாத ஒன்றாகும் ஏனெனில் அது எங்களின் உயிர்வாழ்தலோடு சம்மந்தப்பட்டது. இன்று இன்னொரு கதையும் சிலர் சொல்ல முற்படுகின்றனர். ஈழத்தில் சிறையுண்டு கிடக்கும் போராளிகள் எல்லாம் அரசாங்கத்தின் முன் கையுயர்த்தியவர்கள், கோழைத்தனமாக சரணடைந்தவர்கள், அவர்களுக்கு போராட்டம் பற்றிக் கதைப்பதற்கு தகுதியில்லை என்றவாறும் சில அபிப்பிராயங்கள் உலவுகின்றன. அவ்வாறாயின் 17ஆம் திகதி சரணடைந்து பின்னர் ஏதோ ஊழல்களின் துணையில் தப்பியோடியவர்களை எந்தக் கணக்கில் சோப்பது. போராட்டத்தின் வலியையே உணராது இடைத்தரகர்களாக இருந்த வியாபாரிகள் தமிழ்த் தேசியம் பேசுவதை என்னவென்று சொல்வது. சமீபத்தில் உருத்திரகுமாரன் கொடுத்த நேர்காணல் ஒன்றில், களத்தில் இருக்க வேண்டியதில்லை ஒரு புரிந்துனர்வுடன் பணியாற்றினால் போதுமானது என்னும் தொனியில் பேசியிருந்தார். இதற்கு திலகர் முன்னர் களத்துடன் தொடர்பற்று வெளிநாட்டில் பணியாற்றியதையும் அதனை 'மேதகு' அங்கீகரித்ததையும் குறிப்பிட்டிருக்கிறார். முன்னர் பிரபாகரன், குறிப்பிட்டதொரு சூழலில் சொன்ன விடயத்தை தனது இன்றைய தான்தோறித்தனமான, சிறுபிள்ளைத்தனமான செயற்பாடுகளுக்கான நியாயமாகக் காட்டிக் கொள்ள முற்படுகின்றார் உருத்திரா. பிரபாகரன் சொன்னவற்றிற்கெல்லாம் கட்டுப்படுவது உண்மையாயின் அவர் இறுதியாக அமைப்பின் சர்வதேச பொறுப்புக்கள் அனைத்தையும் ஒப்படைத்தது கே.பியிடம் அல்லவா, அப்படியாயின் போராட்டம் அரசியல் அனைத்தையும் தீர்மானிக்கும் தகுதி கே.பிக்கு மட்டுமல்லவா உண்டு. இங்கு உரத்திரகுமாரனோ அல்லது புலம்பெயர் சூழலில் இரவு அரசியல் செய்யும் நபர்களோ, அனைவருமே ஈழத்து மக்களையும் போராட்டத்தின் மீதும் அதன் தலைமை மீதும் பற்றுக் கொண்டிருந்த புலம்பெயர் மக்களையும் ஏய்த்துப் பிழைக்கும் பித்தலாட்டமொன்றில் ஈடுபட்டிருப்பது தெளிவாகிறது.. உருத்திரா தன்னை நியாயப்படுத்துவதற்கு திலகரின் கடந்த காலத்தை புரட்டுகிறார் ஆனால் திலகரின் மனைவி, பிள்ளை இப்போதும் கிளிநொச்சியில் சாப்பிட வழியின்றி இருப்பதை மறந்துவிட்டார். நாம் மேலே குறிப்பிட்டது போன்று. ஈழத் தமிழர்கள் எதிர்காலத்துடன் தொடர்புபட்ட எந்தவொரு விடயத்தையும் களத்தில் நிலைகொண்டு இருப்பவர்களே எடுக்க முடியும். அதுதான் சரியானதும், பாதிக்கப்பட்ட மக்கள் விரும்புவதும். வெளிநாடுகளில் இருந்து கொண்டு எல்லாவற்றையும் செய்யலாம் என்றால் தீபன். சொர்ணம், ஜெயம் இப்படியான தளபதிகள் எல்லாம் உயிரை மாய்த்திருக்கத் தேவையில்லையே! எல்லோரும் குளிருக்கான அங்கிகளைப் போட்டுக் கொண்டு அமெரிக்காவிலும், நோர்வேயிலும் இருந்து போராடியிருக்கலாமே. இத்தனை அழிவுகளையும் வேதனைகளையும் எங்கள் மக்களும் சந்தித்திருக்க வேண்டி வந்திருக்காதே. தமிழில் ஒரு பழமொழி சொல்லுவார்கள், கேக்கிறவன் கேனயன் என்றால் எல்லாம் சொல்லலாம், அது மாதிரித்தான் இருக்கிறது உருத்திரகுமார்களின் கதை.

எனவே இனியாவது மக்களை ஏய்த்துப் பிழைக்கும் இவ்வாறான செயல்களை மக்கள் இனங்கண்டு கொள்ள வேண்டும். பாதிக்கப்பட்ட மக்களும் போராளிகளும் இது குறித்து தெளிவாகவே இருக்கின்றனர். இப்போது தெளிவடைய வேண்டிய பொறுப்பில் புலம்பெயர்
மக்கள்தான் இருக்கின்றனர். அவர்களின் அறியாமையை, உண்மையான ஈடுபாட்டை இவ்வாறான அரசியல் வியாபாரிகள் பயன்படுத்திக் கொள்ள விழைகின்றனர்.

நாங்கள் உங்களைச் சிந்திக் கூடாது என்று கூறவில்லை. நாங்கள் உங்களை செயற்படக் கூடாது என்று கூறவும் இல்லை. ஆனால் உங்கள் செயற்பாடுகள் எங்களின் வாழ்வை மீட்டெடுக்கும் வகையில் அமைய வேண்டுமென்றே கூறுகின்றோம். அது வீழ்ந்து கிடக்கும் எங்களின் ஆயிரக்கணக்கான போராளிகளின் வாழ்வை புதுப்பிப்பிதாக அமைய வெண்டுமென்றே கூறகின்றோம். அங்கவீனமடைந்த, முகங்கள் சிதைந்த ஆண் பெண் போராளிகளின் வாழ்வில் ஒளியேற்ற வேண்டுமென்றே கூறுகின்றோம். அவ்வாறில்லாது, மீண்டும் எங்களின் குருதி பார்த்து வசனம் சொல்லும் ஆசையை கைவிடுங்கள் என்றே சொல்லுகின்றோம். எங்கள் ஒப்பாரிச் சத்தம் கேட்க ஆசைப்படாதீர்கள் என்றே சொல்லுகின்றோம். எங்கள் பேச்சின் எல்லை இவ்வளவுதான். தயவு கூர்ந்து புரிந்து கொள்ளுங்கள். எங்கள் களமாடி வீழ்ந்த பெண் போராளி கப்டன் வானதியின் கவிதை வரிகள் இவை – 'எழுதாத என் கவிதையை எழுங்களேன். எல்லையில் என் துப்பாக்கி எழுந்து நிற்பதால், எழுந்துவர என்னால் முடியவில்லை' – எங்களாலும் எழுந்து வர இயலவில்லை உறவுகளே! மழைக் காலம் என்பதால், எங்கள் பிள்ளைகளுடன் ஓதுங்கிக் கொள்வதற்கு ஒரு கூடு தேடிக் கொண்டிருக்கிறோம், பசி தரும் வலியுடன். எங்களை இந்த துயரத்திலிருந்து மீட்க வாருங்கள். தத்தளித்துக் கொண்டிருக்கும் எங்கள் தலைமுறை கரைசேர உதவுங்கள். முடியாவிட்டால் சில ஆறுதல் வார்த்தைகளையாவது சொல்லுங்கள். இனியும் இழப்பதற்கு எங்களிடம் குருதியில்லை.

இங்கு பசியில் அழும் குழந்தைக்கு ஒரு நேர பால் வாங்கி தரவிரும்பாத நீங்கள்- பட்டினியில் மயங்கும் முதியோருக்கு ஒரு நேர கஞ்சி ஊற்ற விரும்பாத நிங்கள் தேசியம்! சுயநிர்ணயம்! சுயாட்சி! என்றெல்லாம் கூறி எங்களை உங்கள் நலனுக்கான பகடைக் காய்களாக்க முயற்சிக்காதீர்கள்.

வீழந்து கிடக்கும் எமக்கு உதவ விரும்பாத நீங்கள், உதவ முன்வருபவர்களையும் மிரட்டி துரோகி பட்டம் சூட்டி அடாவடித்தனம் செய்யும் நீங்கள் எங்களது அரசியல் உரிமையில் மட்டும் அக்கறை காட்டுவதனை எப்படி நம்புவது?

ஆடு நனைகிறது என்று ஓநாய் அழுவதாகச் சொல்வதை எந்த அடிப்படையில் நம்புவது.



மேலும் இங்கே தொடர்க...

இந்தியா, இலங்கையின் மிகப் பெரிய வர்த்தக பங்காளி எஸ்.எம். கிருஷ்ணா


இந்தியா இலங்கையின் மிகப்பெரிய வர்த்தகப் பங்காளியாகுமென இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா தெரிவித்தார்.

அம்பாந்தோட்டை புது வீதியில் இந்திய துணைத் தூதரக அலுவலகத்தை திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

அவர் இங்கு தொடர்ந்து உரையாற்றும் போது மேலும் தெரிவித்ததாவது, இலங்கை, இந்தியாவின் தெற்காசிய வர்த்தகப் பங்காளிகளில் ஒன்றாகும். 2000 ஆம் ஆண்டில் அமுலுக்கு வந்த இருதரப்பு சுதந்திர வர்த்தக உடன்படிக்கையின் மூலம் எட்டு ஆண்டுகளில் மொத்த வர்த்தகப் புரள்வு ஐந்து மடங்காக அதிகரித்தது.

இந்தியாவிற்கான இலங்கையின் ஏற்றுமதி சென்ற வருடத்திலிருந்து 50 சதவீதத்திற்கு கூடுதலாக அதிகரித்தது. இலங்கையின் நான்கு பாரிய முதலீட்டாளர்களில் இந்தியாவும் ஒன்றாகும். இந்தியாவில் இலங்கையின் முதலீடுகளும் குறிப்பிடத் தகுந்த வளர்ச்சியை அடைந்துள்ளன. எங்கள் அபிவிருத்திக்கான ஒத்துழைப்பு வடக்கு, தெற்கு உட்பட நாடுபூராவும் வளர்ச்சியடைந்துள்ளது.

என்னுடைய நாட்டுடன் நீண்ட வரலாற்று ரீதியான பிணைப்பினைக் கொண்ட ஒரு தேசத்துடனான இணைப்பை வலுவாக்கும் அவாவின் பிரதி பலிப்பாகும். சமய, கலாசார மற்றும் மொழி சம்பந்தப்பட்ட எமது இரு நாடுகளின் பிணைப்பானது பல நூற்றாண்டுகள் பழைமை வாய்ந்தது.

இலங்கையும் இந்தியாவும் சமய அனுஸ்டானங்களில் ஒத்த கொள்கைகளை யும், இணைப்புக்களை உண்டாக்கியுள்ளன. பிரமாண்டமான ஆயிரம் தூண்களையுடைய விஷ்ணு கோயில் முந்திய காலத்தில் தேவேந்திர முனையில் இருந்துள்ளது. இன்னுமொன்றையும் நாங்கள் மறக்க முடியாது. அது இந்துத் தமிழர்களும், பெளத்த சிங்களவர்களும் ஒரே இடத்தில் வழிபடும் முருகக் கடவுள் அல்லது ஸ்கந்த என்றழைக்கப்படும் தெய்வம் கோயில் கொண்டுள்ள கதிர்காமமாகும்.

எமக்கிடையேயுள்ள தொடர்புகள் பலதரப்பட்டவையும் சரித்திர ரீதியானவையுமாகும். எமது நட்பினதும் ஒத்துழைப்பினதும் முழுமையான ஆற்றலின் முழுமையான பிரயோசனத்தை பெற்றுக்கொள்வதே எங்கள் முன்னுள்ள சவாலாகும். யுத்தம் முடிவடைந்ததுடன் அதற்கான நேரம் வந்துள்ளது என நான் நம்புகிறேன்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இந்திய விஜயம் இரு தரப்பு உறவுகளில் ஒரு புதிய அத்தியாயத்தை ஏற்படுத்தியது. அபிவிருத்தியினை துரிதப்படுத்துவதற்கும் எமது இணைப்புக்களையும் பழைமை வாய்ந்த கலாசாரப் பிணைப்புக்களையும் புத்தூக்கம் பெறச் செய்யவும் பொருளாதார கடப்பாடுகளை துரிதப்படுத்தவும் எமது பிரதமரும் ஜனாதிபதியும் இணக்கம் தெரிவித்தனர்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அம்பாந் தோட்டையையும் அதன் சுற்றுப்புறங்களை யும் பாரிய பிராந்திய மையமாக அபிவிருத்தி செய்ய திட்டமிட்டுளார். எனவே தென்பகுதியில் ஒரு துணைத் தூதரக அலுவலகத்தை திறப்பதற்கு தீர்மானித்ததுடன் அதை அம்பாந்தோட்டையில் திறப்பதானது வர்த்தகம், வணிக முதலீடுகள், கலாசாரம் மற்றும் சுற்றுலாத்துறை ஆகிய துறைகளில் இப்பிராந்தியத்துடன் இந்தியாவுக்குள்ள இறுக்கமான பிணைப்புக்களை கட்டியெழுப்புவதற்காகவே ஆகும் என தெரிவித்தார்.
மேலும் இங்கே தொடர்க...

இலங்கை - பாகிஸ்தான் தலைவர்கள் இருதரப்பு பேச்சு நான்கு முக்கிய உடன்படிக்கைகள் கைச்சாத்து

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கும், பாகிஸ்தான் ஜனாதிபதி ஆஸிப் அலி சர்தாரிக்குமிடையில் ஜனாதிபதி செயலகத்தில் நேற்று இரு தரப்பு பேச்சுவார்த்தை இடம்பெற்றதுடன் இரு நாடுகளுக்குமிடை யிலான நான்கு முக்கிய உடன்படிக்கைகளும் கைச்சாத்திடப்பட்டன.

ஒரு மணித்தியாலம் வரை நீடித்த மேற்படி பேச்சுவார்த்தையையடுத்து இரு நாடுகளினதும் பிரதிநிதிகள் கலந்து கொண்ட பேச்சுவார்த்தையொன்றும் இடம்பெற்றது.

இரு நாட்டுத் தலைவர்களின் பேச்சுவார்த்தையின் போது பாகிஸ்தானில் இலங்கை கிரிக்கெட் வீரர்களின் மீது நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவம் தொடர்பில் தமது கவலையினைத் தெரிவிப்பதாக பாகிஸ்தானிய ஜனாதிபதி குறிப்பிட்டார்.

அதேவேளை, இலங்கை மக்களை பயங்கரவாதத்திலிருந்து மீட்டெடுத்தமைக்காக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ துலைமையிலான அரசாங்கத்துக்குத் தமது பாராட்டுக்களைத் தெரிவித்த அவர்; பிராந்திய ரீதியில் பயங்கரவாதத்தை தோற்கடிப்பதற்கு இலங்கையின் அனுபவம் மிக முக்கியமானது எனவும் அவர் குறிப்பிட்டார்.

இரு நாடுகளுக்கிடையில் வர்த்தக நடவடிக்கைகளை மேலும் விரிவுபடுத்துவது தொடர்பில் இரு நாட்டுத் தலைவர்களும் கவனம் செலுத்தியதுடன் இலங்கையின் தேயிலை மற்றும் மாணிக்கக் கற்களை பாகிஸ்தானுக்கு ஏற்றுமதி செய்வதற்குள்ள வாய்ப்புகள் சம்பந்தமாகவும் கலந்துரையாடப்பட்டன.

இலங்கையின் மாணிக்கக் கல் தொழில் துறையில் உபயோகப்படுத்தப்படும் தொழில் நுட்ப நுணுக்கங்களை பாகிஸ்தானுக்குப் பெற்றுக் கொடுக்குமாறு பாகிஸ்தான் ஜனாதிபதி கேட்டுக் கொண்டதையடுத்து இலங்கை ஜனாதிபதி அதனைக் கவனத்திற் கொண்டார்.

இலங்கையின் மருத்துவத்துறை ஈட்டியுள்ள வளர்ச்சி தொடர்பில் பாகிஸ்தான் ஜனாதிபதி தமது பாராட்டுக்களைத் தெரிவித்தார்.

பாகிஸ்தான் தாதியருக்கு பயிற்சிகளை வழங்கக் கூடிய தாதியர்களை இலங்கையிலிருந்து தமது நாட்டுக்கு பெற்றுக் கொடுப்பது தொடர்பிலும் அவர் இலங்கை ஜனாதிபதியின் கவனத்திற்குக் கொண்டு வந்தார்.

அத்துடன் இலங்கையிலிருந்து ஆங்கிலம் மற்றும் கணித ஆசிரியர்களின் ஒத்துழைப்பினை பாகிஸ்தானின் கல்வித் துறைக்கு பெற்றுக்கொள்வது சம்பந்தமாக பாகிஸ்தான் ஜனாதிபதி முன்வைத்த வேண்டுகோள் தொடர்பிலும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கவனம் செலுத்தினார்.

இதன்போது கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, தமது இரண்டாவது பதவி ஏற்போடு பாகிஸ்தான் ஜனாதிபதியின் இலங்கை விஜயம் அமைந்துள்ளதால் இரு நாடுகளுக்குமிடையி லான நல்லுறவுகள் மேலும் வலுப்பட இது சிறந்த வாய்ப்பாகும் எனவும் குறிப்பிட்டார்.

அத்துடன் அமைதிச் சூழல் நிறைந்த இலங்கையில் முதலீடுகளை மேற்கொள்வ தற்காக பாகிஸ்தான் முதலீட்டாளர்களை அனுப்புமாறு கேட்டுக்கொண்ட ஜனாதிபதி; அதற்கான வசதிகளை செய்து கொடுப்பதாகவும் தெரிவித்தார்.

பாகிஸ்தான் ஜனாதிபதி மேலும் தெரிவிக்கையில்; இலங்கையில் எதிர்கால தலைமுறையினரை போதைப் பொருளிலிருந்து பாதுகாக்க இலங்கை அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கைகளுக்கு விசேட பாராட்டுக்களைத் தெரிவித்த பாகிஸ்தான் ஜனாதிபதி; பிராந்திய ரீதியில் போதை உபயோகத்தை ஒழிப்பதற்கு பிராந்திய நாடுகள் இணைந்து செயற்திட்டமொன்றை நடைமுறைப்படுத்த வேண்டுமெனவும் குறிப்பிட்டார்.

இரண்டு நாடுகளுக்குமிடையில் வங்கி நடவடிக்கைகளை மேம்படுத்துவது தொடர்பிலும் இரு நாட்டுத் தலைவர்களும் கலந்துரையாடினர்.

இருதரப்பு பேச்சுவார்த்தைகளையடுத்து இரு நாடுகளுக்குமிடையில் நான்கு உடன்படிக்கைகளும் கைச்சாத்திடப்பட்டன.

இதன்படி ராஜதந்திர மற்றும் உத்தியோகபூர்வ கடவுச்சீட்டுகளை வைத்திருப்போருக்காக விசா இன்றி இரு நாடுகளுக்குமிடையில் பயணங்களை மேற்கொள்ள வாய்ப்புகள்.

இரு நாடுகளுக்குமிடையில் விவசாயம் சம்பந்தமான ஒத்துழைப்பு விடயங்களில் புரிந்துணர்வு.

சுங்க நடவடிக்கைகளில் தனித்துவமான நிர்வாக ரீதியான ஒத்துழைப்பு.

கலை மற்றும் உருவாக்கத்திறன் தொடர்பான ஒத்துழைப்பினை மேம்படுத்தல் போன்ற நான்கு உடன்படிக்கைகளில் இரு நாட்டுத் தலைவர்களினதும் முன்னிலையில் கைச்சாத்திடப்பட்டன.

மேற்படி உடன்படிக்கைகளில் இலங்கை அரசாங்கத்தின் சார்பில் வெளிவிவகார அமைச்சர் ஜீ. எல். பீரிஸ் விவசாய அமைச்சின் செயலாளர் கே. ஏ. கருணாதிலக்க, சுங்கப் பணிப்பாளர் நாயகம் சுதர்மா கருணாரத்ன, நுண்கலைப் பல்கலைக்கழக உபவேந்தர் ஜயசேன கோட்டகொட ஆகியோரும் பாகிஸ்தான் அரசாங்கத்தின் சார்பில் அந்நாட்டின் வெளிவிவகார அமைச்சர் மக்டூம் ஷா மஹ்மூத் குரேஷி, பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் லியாகி பலோச் ஆகியோரும் கைச்சாத்திட்டனர்.

பாகிஸ்தான் தூதுக் குழுவில் அந்நாட்டின் வெளிவிவகார அமைச்சர் மக்டூம் ஷா மஹ்மூத் குரேஷி, பாதுகாப்பு அமைச்சர் அகமட் முக்தார், நிதியமைச்சர் சைப் முரப் அலி ஷா, உயர்ஸ்தானிகர் கூமா லியாகி பலோச், ஜனாதிபதியின் பிரதம செயலாளர் எம். சல்மான் பாரூக், மேலதிக செயலாளர் பாரூக் அமில், பாதுகாப்பு செயலாளர் சையிட் மொகமட் அட்னன் ஆகியோர் பங்கேற்றனர்.

இலங்கையின் சார்பில் அமைச்சர்கள் ஜீ. எல். பீரிஸ், ஏ. எச். எம். பெளஸி, கலாநிதி சரத் அமுனுகம, பந்துல குணவர்தன, டி. பி. ஏக்கநாயக்க, மஹிந்த யாப்பா அபேவர்தன, பாராளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்தன, ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க, பிரதம பதவிநிலை அதிகாரி காமினி செனரத் ஆகியோர் பங்கேற் றனர்.
மேலும் இங்கே தொடர்க...

பல பகுதிகளிலும் கடும் மழை: 9 ஆயிரம் குடும்பங்கள் பாதிப்பு யாழ்., மன்னார், கற்பிட்டி, சிலாபம் பகுதிகளில் வெள்ளம்


நாட்டின் பல பகுதிகளிலும் கடந்த சில தினங்களாகப் பெய்துவரும் மழை காரணமாக 8646 குடும்பங்களைச் சேர்ந்த 35 ஆயிரத்து 395 பேர் பாதிக்கப்பட்டிருப்பதாக அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பேச்சாளர் பிரதீப் கொடுப்பிலி நேற்றுத் தெரிவித்தார்.

மழை காரணமாகப் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உடனுக்குடன் சமைத்த உணவு மற்றும் உலர் உணவு நிவாரணம் வழங்குவதற்கு மாவட்ட செயலாளர்கள் ஊடாக ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருப் பதாக அனர்த்த முகாமைத்துவ அமைச்சின் அதிகாரியொருவர் கூறினார்.

இம்மழை காரணமாக மன்னார் மாவட்டத்தில் 101 வீடுகளும், புத்தளம் மாவட்டத்தில் 21 வீடுகளும் பகுதியாக சேதமடைந்திருப்பதாக அனர்த்த முகாமைத்துவ நிலையப் பேச்சாளர் கூறினார். யாழ்ப்பாணம் மற்றும் புத்தளம் மாவட்டங்களில் மழை காரணமாகப் பாதிக்கப்பட்டவர்களில் 1283 குடும்பங்கள் 17 முகாம்களில் தங்க வைக்கப்பட்டி ருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அவர் மேலும் கூறுகையில், இம்மழை காரணமாக புத்தளம் மாவட்டத்தில் 1231 குடும்பங்களைச் சேர்ந்த 6164 பேரும், மன்னார் மாவட்டத்தில் 5855 குடும்பங்களைச் சேர்ந்த 23 ஆயிரத்து 680 பேரும், யாழ். மாவட்டத்தில் 1354 குடும்பங்களைச் சேர்ந்த 4988 பேரும், மொனறாகலை மாவட்டத்தில் 82 குடும்பங்களைச் சேர்ந்த 560 பேரும், வவுனியா மாவட்டத்தில் மெனிக்பாமில் 47 குடும்பங்களும், கிளிநொச்சி மாவட்டத்தில் 77 குடும்பங்களும் பாதிக்கப்பட்டுள்ளன என்றார்.

இம்மழையினால் புத்தளம் மாவட்டத்தில் சிலாபம் பிரதேச செயலகப் பிரிவில் 803 குடும்பங்களைச் சேர்ந்த 4764 பேரும், கல்பிட்டி பிரதேச செயலகப் பிரிவில் 68 குடும்பங்களைச் சேர்ந்த 170 பேரும், நவகத்தேகம பிரதேச செயலகப்பிரிவில் 292 குடும்பங்களைச் சேர்ந்த 1010 பேரும், கருவலகஸ்வெவ பிரதேச செயலகப் பிரிவில் 68 குடும்பங்களைச் சேர்ந்த 270 பேரும் மன்னார் மாவட்டத்தில் முசலி பிரதேச செயலகப்பிரிவில் 971 குடும்பங்களைச் சேர்ந்த 3930 பேரும், மன்னார் நகர் பிரதேச செயலகப் பிரிவில் 2183 குடும்பங்களைச் சேர்ந்த 9485 பேரும், மாந்தை மேற்கு பிரதேச செயலகப் பிரிவில் 224 குடும்பங்களைச் சேர்ந்த 939 பேரும், மடு பிரதேச செயலகப் பிரிவில் 2015 குடும்பங்களைச் சேர்ந்த 7562 பேரும், யாழ். பிரதேச செயலகப் பிரிவில் 670 குடும்பங்களைச் சேர்ந்த 2504 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் இங்கே தொடர்க...

கொரியன் குடாவில் பாரிய வெடியோசைகள் ; தீப்பிளம்புகள்

அமெரிக்கா, தென் கொரியா பயிற்சியை
ஆரம்பித்ததால் விண்ணும் மண்ணும் அதிர்ந்தன



வட கொரியா மீது எத்தகைய தாக்குதல் கள் தொடுக்கப்பட்டாலும் அதன் எதிரொலி மிகக் கடுமையாக இருக்குமென வட கொரியா கடுமையான தொனியில் எச்சரித்தது. கொரியன் குடாவை நோக்கி அமெரிக்க தென்கொரிய இராணுவங்கள் முன்னேறிவரும் நிலையில் ஜோர்ஜ் வாஷிங்டன் என்ற மிகப் பெரிய போர்க்கப்பலும் களத்தில் இறங்கியுள்ளன.

இதில் விமான ஓடுபாதைகள் ஏவுகணைத் தளங்கள் உள்ளிட்ட நவீன இராணுவ, ஆயுத உபகரணங்களும் உள்ளன. வட கொரியாவை இலக்கு வைக்கும் தாக்குதல் திசையை நோக்கி ஜோர்ஜ் வாஷிங்டன் என்ற இந்தக் கப்பல் மையம் கொண்டுள்ளது.

இந்நிலையில் தென் கொரிய, அமெரிக்க இராணுவங்கள் ஏற்கனவே திட்டமிட்டிருந்த நான்கு நாள் போர்ப்பயிற்சியை நேற்று ஆரம்பித்த மைக்கான ஆதாரமாக பாரிய வெடியோசை கள் விண்ணையும், மண்ணையும் அதிர வைத்ததாகப் பிரதேசவாசிகள் தெரிவித்தனர்.

வட, தென் கொரிய எல்லைகளிலுள்ள பொதுமக்கள் அச்சம் காரணமாக வேறு இடங்களை நோக்கி நகர்ந்தனர். வானம் புகை மண்டலமாகவும் எங்கும் தீப்பிளம்புகளும் தென்பட்டதை இரண்டு எல்லைகளிலிருந்தும் பார்க்கக் கூடியதாக இருந்தது. வட கொரியா வானைமுட்டிச் சென்று தாக்கும் நீண்ட தூரம் பாயும் ஏவுகணைகளை கரை ஓரத்திற்குக் கொண்டுவந்தது.

அந்நாட்டு விமானங்களும் விண்ணில் வட்டமிட்டவண்ணமிருந்தன. தென் கொரியாவைப் பொறுமைகாக்குமாறு கோரும் பொருட்டு சீனாவின் வெளிநாட்டமைச்சர் அவசரமாகப் புறப்பட்டு நேற்று தென் கொரியத் தலைநகர் வந்தார்.

இவர் தென் கொரிய ஜனாதிபதியுடன் விரிவான பேச்சுக்களையும் நடத்தினார். ஆனால் நான்கு நாள் போர்ப்பயிற்சி ஏற்கனவே திட்டமிட்டபடி நடைபெறுமென்பதை தென்கொரியா திட்டவட்டமாக அறிவித்துவிட்டது.

பேச்சுவார்த்தை பலனளிக்காவிட்டாலும் பயிற்சிகளின் போது இராணுவ மோதல்கள் ஏற்படுவதைத் தவிர்க்கும்படி சீன வெளிநாட்டமைச்சர் கேட்டுக்கொண்டார். சென்றவாரம் தென்கொரியா மீது வடகொரியா ஐம்பது ஏவுகணைகளை ஏவியது. இதனால் இந்த முறுகல் நிலையேற்பட்டது.
மேலும் இங்கே தொடர்க...

வட மாகாண அபிவிருத்தி பற்றி ஆராய வவுனியாவில் 3 நாள் மாநாடு


வட மாகாணத்தின் முதலீடு, வளங்கள் தொடர்பாக விரிவாக ஆராயும் பொருட்டு ‘உள்ளூராட்சி மாநாடும், கண்காட்சி ஒன்றும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக வட மாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜீ. ஏ. சந்திரசிறி தெரிவித்தார்.

ஜனவரி மாதம் 28ம் திகதி முதல் 30ம் திகதி வரை மூன்று நாட்கள் வவுனியாவில் நடைபெறவுள்ள இந்த மாநாட்டின் போது வட மாகாண அபிவிருத்திக்கான ஐந்தாண்டு திட்டங்கள் தயாரிப்பது தொடர்பாகவும் ஆராயப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். இதற்காக ஏசியன் பவுண்டேசன், ஜி. டி. இஸட் ஆகியன 200 இலட்சம் ரூபா நிதியுதவி வழங்க வுள்ளதாகவும் ஆளுநர் சுட்டிக்காட்டினார்.

மஹிந்த சிந்தனையில் கூறப்பட்டுள்ள ‘உள்ளூர் மட்ட அபிவிருத்தி ஊடான தேசிய அபிவிருத்தி’ என்ற தொனிப் பொருளுக்கு அமைய இந்த மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக வவுனியாவுக் கான உள்ளுராட்சிப் பிராந்திய உதவி ஆணையாளர் எஸ். அட்சுதன் தெரிவித்தார்.

வட மாகாண ஆளுநர் தலைமையில் நடைபெறவுள்ள இந்த மாநாட்டில் அமைச்சர்கள், முக்கியஸ்தர்கள் பலர் கலந்து கொள்ளவுள்ளனர்.

ஆரம்ப மற்றும் இறுதி நாள் வைபவங்கள் வவுனியா நகர சபை கலாசார மண்டபத் திலும் கண்காட்சி நகர சபை மைதானத்தி லும், பொருளாதார ஆளுகை என்ற மாநாடு கச்சேரி மாநாட்டு மண்படத்திலும் இடம்பெறவுள்ளன. தொழில்நுட்ப அறிமுகம், தகவல் பங்கீடு, கல்வி மற்றும் திறன் அபிவிருத்தி போன்ற துறையை மேம்படுத்துவது தொடர்பாக இதன் போது கூடுதல் கவனம் செலுத்தப்பட வுள்ளது.

அபிவிருத்திக்கு தனியார் துறை, பொது மக்கள் மற்றும் ஏனைய உள்ளூராட்சி மன்றங்களின் ஒத்துழைப்பு பெற்றுக்கொள்ளுதல் போன்றவையே இதன் பிரதான நோக்கமாகும் என்றும் எஸ். அட்சுதன் குறிப்பிட்டார்.
மேலும் இங்கே தொடர்க...

நாட்டின் பல பகுதிகளில் நேற்று மின்சாரத்தடை


நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் நேற்று பிற்பகல் 2.50 மணி முதல் மின்சாரத்தடை ஏற்பட்டது. கொத்மலை - பியகமைக்கிடையிலான தேசிய மின்னிணைப்புப் பரிமாற்றத் தொகுதியில் நேற்றைய தினம் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறே இதற்குக் காரணமென மின்வலு எரிசக்தி அமைச்சு தெரிவித்தது.

இது தொடர்பில் அமைச்சின் உயரதிகாரி யொருவர் தெரிவிக்கையில்,

கொத்மலை - பியகம தேசிய மின்னி ணைப்புப் பரிமாற்றத் தொகுதியில் நேற்று 2.50 மணியளவில் திடீரென ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் மின் துண்டிப்பு ஏற்பட்டது. இது தொடர்பில் மின்சார சபைக்குப் பல முறைப்பாடுகள் வந்தன.

மேற்படி மின்துண்டிப்பினால் கொத்மலை - பியகம மின்னிணைப்பு பரிமாற்றத் தொகுதியூடாக மின்சாரத்தைப் பெற்றுக்கொள் ளும் மின் பாவனையாளர்கள் அசெளகரிய ங்களுக்குள்ளாகினர்.

இத்தொழில்நுட்பக் கோளாறைப் பரிசோதித்து திருத்தும் நோக்கில் கொழும்பிலிருந்து விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டதுடன் அக்குழு உடனடியாகவே தமது செயற்பாடுகளை ஆரம்பித்தன.

இதனையடுத்து எவ்வளவு விரைவாக மின்சாரத்தை வழங்க முடியுமோ அந்தளவு விரைவாக மின்சாரத்தை வழங்குவதற்கான சகல நடவடிக்கைகளையும் மின்வலு எரிசக்தி அமைச்சு மேற்கொண்டதாகவும் அவ்வதிகாரி மேலும் தெரிவித்தார்.
மேலும் இங்கே தொடர்க...

28 நவம்பர், 2010

இலங்கையில் புனர்வாழ்வு பணிகள் திருப்தி அளிக்கிறதா?:கனிமொழி

இலங்கையில் தமிழர் புனரமைப்பு பணிகள் இந்திய அரசுக்கு திருப்தி அளிக்கிறதா என்று, கனிமொழி எம்.பி.,கேள்வி எழுப்பியுள்ளார்.

இலங்கையில், உள்நாட்டில் இடம்பெயர்ந்த தமிழ் மக்களுக்கு வீடு கட்ட மத்திய அரசு வழங்கியுள்ளள பணத்தை இலங்கை அரசு சரிவர பயன்படுத்தி வருகிறதா? அந்தப் பணிகள், இந்திய அரசுக்கு திருப்தி அளிக்கிறதா? இலங்கை தமிழர்களுக்கு சம அதிகாரம் வழங்க வகை செய்யும் 13வது திருத்தத்தை அமல்படுத்த இலங்கை அரசு தயாராக உள்ளதா என்று கனிமொழி எம்.பி. கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்த கேள்விகளுக்கு மத்திய வெளியுறவுத்துறை இணையமைச்சர் பிரனீத் கவுர் அளித்துள்ள பதிலில்,

இலங்கையில் இடம் பெயர்ந்த இலங்கை தமிழர்களுக்கு வீடு கட்டிக் கொடுக்க இந்திய அரசு முன்வந்துள்ளது. இந்த ஆண்டு இறுதிக்குள், முகாம்களில் உள்ள அனைத்து தமிழர்களும் மீள்குடியமர்த்தப்பட்டு விடுவார்கள் இலங்கை அரசு உறுதி அளித்துள்ளது.தமிழர் அமைப்புகள் மற்றும் பிறரையும் இணைத்து, அதிகார பரவல் குறித்து இலங்கை அரசு பேச்சு நடத்த வேண்டும் என்று இந்தியா தரப்பில் வலியுறுத்தப்பட்டது.

கடந்த ஜூன் மாதம் இந்தியாவிற்கு விஜயம் செய்த இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ, அனைத்து சமுதாயத்தினரும் ஏற்றுக்கொள்ளும் அரசியல் தீர்வு காண முயற்சி எடுப்பதாக உறூதியளித்ததாக இணையமைச்சர் பிரனீத் கவுர் தெரிவித்துள்ளார்.
மேலும் இங்கே தொடர்க...

தூத்துக்குடிக்கும் இலங்கைக்கும் இடையில் கப்பல் சேவை வெகுவிரைவில்

தூத்துக்குடிக்கும் இலங்கைக்கும் இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்குவது குறித்து மத்திய அமைச்சரவை கூட்டத்தில் விவாதிக்கப்பட்டு அறிவிக்கப்படும் என இந்திய மத்திய கப்பல் போக்குவரத்துத்துறை அமைச்சர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் நிலவும் அமைதியான சூழ் நிலையை தொடர்ந்து தூத்துக்குடிக்கும் இலங்கைக்கும் இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்து ஆரம்பிப்பதற்கான பேச்சுவார்த்தைகளை இந்தியா மற்றும் இலங்கை அரசாங்ககங்கள் மேற்கொண்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
மேலும் இங்கே தொடர்க...

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக புதிய துணைவேந்தருக்காக மூவர் தெரிவு

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக புதிய துணைவேந்தருக்காக மூவரர் தெரிவுசெய்யப்பட்டு ஜனாதிபதிக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திற்கு புதிய துணைவேந்தரினை தேர்வு செய்வதற்கான தேர்தல் நேற்றுசனிக்கிழமை நடைபெற்றது. தற்போதய துணைவேந்தர் என்.சண்முகலிங்கள் உள்ளிட்ட 12 பேர் துணைவேந்தர் பதவிக்குவிண்ணப்பித்தனர்.

தெரிவு சபையில் இருந்து 21 பேர் தலா 3வாக்குகள் மூலம் வாக்களித்தனர்.இவர்களில் தற்போதய துணைவேந்தர் பேராசிரியர் என்.சண்முகலிங்கன், பேராசிரியர் வசந்திஅரசரத்தினம், பெராசிரியர் ரட்ணஜீவன் ஹோல் ஆகிய மூவரும் தெரிவு செய்யப்பட்டு பதிவாளரால் ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இவர்களில் ஒருவரை ஜனாதிபதி தெரிவு செய்யவுள்ளதுடன், அத்துணைவேந்தர் அடுத்த வருடத்தில் இருந்து புதிய துணைவேந்தராக பதவியேற்பார்.
மேலும் இங்கே தொடர்க...

சிங்களவர்கள் குடியேறுவதற்கு ஏற்ப யாழ். தேசவழமைச் சட்டம் மாற்றப்பட வேண்டும்-ஐ.தே.க எம்.பி

யாழ்ப்பாணத்தில் வழக்கிலுள்ள தேசவழமைச் சட்டத்தைத் திருத்த வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சியின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சுஜீவ சேனசிங்க நேற்று நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.வரவு செலவுத் திட்டம் மீதான பிரேரணையின் மீது அவர் உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார். தொடர்ந்து உரையாற்றியபோது அவர் மேலும் கூறியதாவது:

கொழும்பில் சகல இன மக்களும் ஒற்று மையாக வாழ்கின்றனர். இதேபோன்று யாழ்ப் பாணத்திலும் சகல இன மக்களும் வாழ வேண்டும். இதனால் சிங்கள மக்கள் அங்கு குடியேறுவதற்கு ஏற்ப தேச வழமைச் சட்டத் தில் திருத்தம் செய்யப்பட வேண்டும்.

யாழ்ப்பாணத்தில் சிங்கள குடியேற்றங்கள் இடம்பெறுவதாகத் தமிழ்த் தேசியக் கூட்ட மைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் கூறியதற்குப் பதிலளிக்கும் முகமா கவே நாடாளுமன்ற உறுப்பினர் சுஜீவ சேனசிங்க இவ்வாறு தெரிவித்தார். அமைச்சர் பஷில் ராஜபக்ஷ ஓர் இனவாதி யல்ல எனவும் அவர் இவ்விடயத்தை ஆராய் வார் எனவும் சுஜீவ சேனசிங்க எம்.பி. கூறி னார்.
மேலும் இங்கே தொடர்க...

உல்லாசப் பயணத் துறையில் சீனா 450 மில். அமெரிக்க டொலர் முதலீடு படைத் தலைமையகம் உள்ள இடங்களில் உல்லாச ஹோட்டல்கள்

சுற்றுலாக் கைத்தொழில் துறை யில் உலகின் முன்னணி நிறுவன மாகத் திகழும் சீனாவின் சங்கிரில்லா நிறுவனம் இலங்கையின் உல்லாசப் பயணத் துறையில் 450 மில்லியன் அமெரிக்க டொலர்களை முதலிட முன்வந்திருப்பதாக பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ நேற்று தெரிவித்தார்.

இந்த முதலீடு தொடர்பான உடன்படிக்கை நேற்று முன்தினம் நிதி அமைச்சில் கைச்சாத்திடப்பட்ட தாகவும் கூறினார்.

இந்த முதலீட்டின் மூலம் இராணுவ தலைமையகம் அமைவுற்றிருக்கும் பிரதேசம் அடங்கலான பகுதியில் உல்லாச ஹோட்டல் நிர்மாணிக்கப்படும் எனவும் அவர் குறிப் பிட்டார். இராணுவ தலைமையகம் உள் ளிட்ட முப்படை தலைமையகங்களும் பத்தர முல்லையிலுள்ள 55 ஏக்கர் விஸ் தீரணம் கொண்ட காணியில் அமைக்கப்படும் எனவும் அவர் கூறினார்.

களுத்துறை தீயணைப்பு மற்றும் அனர்த்த சேவைப் பிரிவு, களுத்துறை நகர சபையின் இணைய தள அங்குரார்ப்பண வைபவம் என்பன பிரதியமைச்சர் ரோகித அபேகுண வர்தன தலைமையில் களுத்துறை நகர மண்டப வளாகத்தில் நேற்று நடைபெற்றது. இந் நிகழ்வில் ஜனாதிபதி மஹிந்த ராஜ பக்ஷ சார்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில், நாம் ஒவ்வொருவரும் தம் பொறுப்புக்களை சரியான துறையில் நிறைவேற்றினால் நாட்டி லுள்ள பெரும்பாலான பிரச்சினைகள் தீர்ந்து விடும். இதனை எவரும் மறுக்க முடியாது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ 2005ம் ஆண்டில் ஜனாதிபதியாகப் பதவி ஏற்றதும் என்னை பாதுகாப்பு அமைச்சு செயலாளராக நியமித்தார். அன்று அவர் என்னிடம் வழங்கிய பொறுப்பை அவரது வழிகாட்டலின் கீழ் முழுமையாக நிறை வேற்றியுள்ளேன். இப்போது ஜனாதிபதியின் இரண்டாவது பதவிக் காலம். மஹிந்த சிந்தனை தொலைநோக்கின் அடிப்படையில் நாட்டைப் பொருளாதார ரீதியாக மேம் படுத்தும் பொறுப்பு எம் எல்லோரிடமும் ஒப்படைக்கப்பட்டிருக்கின்றது. இதனூடாக நாட்டு மக்களின் வாழ்க்கைத்தரம் மேம் படுத்தப்பட வேண்டும்.

அந்தடிப்படையில் நாட்டின் உட்கட்ட மைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கு துரித நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கின்றது. இதன் பயனாக வெளிநாட்டு முதலீடுகள் நாட்டுக்குள் வரத் தொடங்கியுள்ளன.

கடந்த முப்பது வருடங்களாக நாட்டில் யுத்தம் நிலவியது. இதன் காரணத்தினால் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இங்கு வரவும், முதலிடவும் அச்சப்பட்டார்கள். இப்போது அப்படியான நிலைமை இல்லை. வெளிநாட்டு முதலீட்டாளர்கள் பெரும் ஆர்வத்துடன் இங்கு முதலிட முன்வருகின் றார்கள். இவர்களுக்கு தேவையான வசதி களை ஏற்படுத்திக் கொடுப்பது எமது கடமை யாகும். அதன் மூலம் தான் இலங்கையை அதிசயம்மிக்க நாடாக அபிவிருத்தி செய்ய முடியும்.

இந்தவகையில் சுற்றுலாத் துறையில் உலகில் முன்னணி நிறுவனமாகத் திகழும் ச்கிரில்லா இங்கு 450 மில்லியன் அமெரிக்க டொலர்களை உல்லாசப் பய ணத்துறையில் முதலிட முன்வந்திருக்கின்றது. இவ்வாறு பல முதலீடுகள் நாட்டுக்குள் வந்த வண்ணமுள்ளன. இம்முதலீடுகள் நாட்டில் தொழில் வாய்ப்புக்களை உரு வாக்கும். அப்போது எல்லோரும் அரச தொழிலை மாத்திரம் எதிர்பார்த்திருக்கும் நிலைமை நீங்கும். அத்தோடு எமது மக்களின் திறன்களை மேம்படுத்துவதன் மூலமும் அவர்கள் தொழில் வாய்ப்புக்களைப் பெற்றுக் கொள்ளுவதும் சுயதொழில்களில் ஈடுபடுவதும் இலகுவாகி விடும்.

இவ்வாறான நடவடிக்கைகளின் மூலம் நாடு பொருளாதார ரீதியாக வளர்ச்சி பெறு வதுடன் மக்களின் வாழ்க்கைத் தரமும் மேம்படும் என்றார்.

இந்நிகழ்வில் பிரதியமைச்சர் ரோகித அபேகுணவர்தன பயங்கரவாதத்தை ஒழித்த மைக்காக பாதுகாப்பு அமைச்சு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு நினைவுச் சின்னம் வழங்கி கெளரவித்தார்.

இந்நிகழ்வில் பிரதியமைச்சர் ரெஜினோல்ட் குரே, களுத்துறை நகர சபைத் தலைவர் எம். எஸ். எம். முபாரக், பிரதித் தலைவர் எம். எம். ஜெளபர் உட்பட முக்கியஸ்தர்கள் பலரும் கலந்துகொண்டார்கள்.
மேலும் இங்கே தொடர்க...

அதிகாரப் பகிர்வு அரசியல் தீர்வுக்கான சூழலை ஏற்படுத்தும்




யாழ். இந்திய துணைத்தூதரகத்தை திறந்து வைத்து கிருஷ்ணா உரை

13வது அரசியலமைப்புத் திருத்தத்தின் அடிப்படையில் அமைந்த அர்த்தமுள்ள அதிகாரப் பகிர்வுப் பொதி ஒரு நிரந்தர அரசியல் தீர்வுக்கான சூழ்நிலையை ஏற்படுத்துமென நம்புவதாக இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா தெரிவித்தார்.

யாழ்ப்பாணம் பலாலி வீதியில் அமைக்கப்பட்டிருக்கும் இந்தியத்துணைத் தூதரகத்தை நேற்றுத் திறந்துவைத்து உரையாற்றியபோதே அவர் இவ்வாறு கூறினார்.

அனைத்து சமூகங் களையும் உள்ளடக்கி இது தொடர்பிலான பேச்சுவார்த்தைகள் விரைவில் ஆரம்பிக் கப்படும் எனக் கருதுகிறோம் என்றார்.

அங்கு மேலும் உரையாற்றிய அவர்,

இது மாத்திரமன்றி இடம்பெயர்ந்த மக்களுக்கான நிவாரணம் மற்றும் மீள்குடியேற்றம் தொடர்பிலும் நாங்கள் அக்கறை செலுத்தியுள்ளோம்.

முன்னர் மோதல் பகுதியாகவிருந்த இவ்விடத்தில் சமாதானம் தோன்றியுள்ளது. இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் பல்லாண்டு காலமாகக் காணப்படும் தொடர்புகளை மீண்டும் புதுப்பித்துக் கொள்வதற்கே இரண்டு நாடுகளும் முன்னுரிமை அளிக்கின்றன.

மடு - தலை மன்னார் மற்றும் ஓமந்தை - பளை புகையிரதப் பாதைகளை அமைக்கும் பணிகளும் சமகாலத்தில் ஆரம்ப மாகும். இந்தப் பிராந்தியம் அமைதிக்கும் இயல்பு நிலைக்கும் திரும்பும்போது இரு நாடுகளுக்கு இடையேயான பழைய தொடர்புகளை மீண்டும் தொடர்வதற்கு முன்னுரிமையளிக்க வேண்டியது இரு நாடுகளினதும் கடப்பாடாகும். இதைக் கருத்தில் கொண்டு கொழும்பு - தூத்துக்குடி மற்றும் தலை மன்னார் - இராமேஸ்வரம் கப்பல் சேவைகளைத் திரும்பவும் ஆரம்பிப்பதற்கு வேண்டிய புரிந்துணர்வு ஒப்பந்தமொன்றிற்கான பேச்சு வார்த்தைகளைச் சமீபத்தில் நிறை வேற்றியுள்ளோம்.

தலை மன்னாரிலுள்ள பழைய கப்பல் துறையும் மீளமைக்கப்படும். காங்கேசன் துறைத் துறைமுகப் புனரமைப்பு மற்றும் மீள் நிர்மாணப் பணிகளை நாம் ஏற்கெனவே ஆரம்பித்துள்ளோம்.

இது யாழ்ப்பாண வாணிபத்தின் மைய மாக மீண்டும் உயிர்பெறும். கலிமர் முனை யானது காங்கேசன்துறையிலிருந்து 40 கடல் மைல் தூரத்திலேயே உள்ளது.

பலாலி விமான நிலையத்தை மீண்டும் அபிவிருத்தி செய்து இந்தியாவுக்கு மிடையேயும் மற்றும் உள்நாட்டு விமான சேவைகளுக்கும் பொருத்தமானதாக இலங்கை அரசாங்கம் அபிவிருத்தி செய்யுமென நம்புகிறோம்.

எதிர்வரும் வருடங்களில் இத்தகைய பல்தரப்புத் தொடர்புகள் மக்களுக்கும் மக்களுக்குமிடையேயான தொடர்புகளை மட்டுமன்றி இரு நாடுகளின் உள்நாட்டுப் பொருளாதாரத்திற்கும் ஒரு செயலூக் கத்தை அளிக்குமென நாம் நம்புகின்றோம்.

கடந்த மாதங்களில் தங்களுடைய சொந்த இடங்களில் மீள்குடியேற்றம் செய்யப் பட்ட மக்களுக்கு அவர்கள் தற்காலிகத் தங்கு மிடங்களை அமைத்துக் கொள்ளும் பொருட்டு கூரைத்தகடுகள் சீமெந்து போன்ற வற்றையும் சிறிய அளவில் அவர்கள் தோட்ட வேலைகளை ஆரம் பிக்கும் பொருட்டு விவசாய உபகர ணங்களையும் வழங்கினோம்.

நாங்கள் தற்போது வடமாகாணத்தின் புனருத்தாரணம் மற்றும் மீள்நிர்மாணப் பணிகளில் ஈடுபடுவதன் மூலம் இலங்கை அரசாங்கத்தின் முயற்சிகளுக்குத் துணையாக வுள்ளோம்.

யாழ்ப்பாணத்தின் கலாசார எழுச்சிக்குப் புத்தூக்கமளிக்கும் முகமாக இந்திய உத வித் தூதரக அலுவலகம் யாழ்ப்பாணத்தில் ஒரு கலாசார நிலையத்தை அமைப்பதற்கும் துரையப்பா விளையாட்டரங்கைச் செப்ப னிடுவதற்கும் வேண்டிய உதவிகளை வழங்கும்.

மன்னாரிலுள்ள திருக்கேதீஸ்வரம் ஆலயத்தைப் புனருத்தாரணம் செய்யும் பணியையும் இந்தியா ஏற்றுள்ளது.

யாழ்ப்பாணத்தில் துணைத் தூதரக அலுவலகத்தைத் திறப்பதற்கான சகல ஒத்தாசைகளையும் வழங்கிய அனைவருக்கும் எனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்ளு கிறேன்.

அவர்களுடைய ஒத்துழைப்பும் உதவி களும் மேலும் தொடருமென எதிர்பார்க் கின்றேன். இத்தகைய அபிவிருத்தியானது எதிர்காலத்தில் இரு நாடுகளுக்குமான உறவுகளை மேலும் மேலோங்கச் செய்யு மென்பதில் எனக்குச் சந்தேகமில்லை என்று தெரிவித்தார்.

நேற்றைய தினம் யாழ்ப்பாணம் சென்ற இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா, யாழ். மாவட்ட விவசாய அமைப்புகளுக்கு 300 உழவு இயந்திரங்களை கையளித்தார்.

இந்நிகழ்வு யாழ். பொது நூலகத்திற்கு முன்னால் நடைபெற்றது.

அதன் பின்னர் பலாலி வீதியில் அமைக் கப்பட்டுள்ள இந்தியத் துணைத் தூதரகத் தையும் திறந்து வைத்தார். அங்கிருந்து அரியாலை சென்ற அவர் இடம்பெயர்ந்த மக்களுக்கு வழங்கப்பட விருக்கும் 50,000 வீட்டுத்திட்டத்தின் ஆரம்ப கட்டமாக 1000 வீடுகளை அமைக்கும் திட்டத்தை அங்குரார்ப்பணம் செய்து வைத்தார்.

கீரிமலை, நகுலேஸ்வரம் கோவிலுக்கும் இந்திய வெளிவிவகார அமைச்சர் விஜயம் செய்திருந்தார்.

மதவாச்சிக்கும் தலைமன்னாருக்கும் இடையிலான புகையிரதப் பாதைகளை அமைக்கும் பணியை அங்குரார்ப்பணம் செய்வதற்கு இந்திய வெளிவிவகார அமைச்சர் யாழ்ப்பாணத்திலிருந்து மதவாச்சி புறப்பட்டுச் சென்றார்.
மேலும் இங்கே தொடர்க...

இனவாதத்தை தூண்டுவதே மங்களவின் நோக்கம்

கிளிநொச்சியில் ஆயிரம் இராணுவக் குடும்பங்களை குடியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், வடக்கில் இந்து மத அனுஷ்டானங்களை மேற்கொள்ள இராணுவம் தடை விதித்ததாகவும், எதிர்க்கட்சி தெரிவித்த குற்றச்சாட்டை அரசாங்கம் நேற்று நிராகரித்தது.

இனவாதக் கருத்துக்களினால் தேசிய பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காண்பது தூரமாகும் எனவும், நாட்டில் அரசியல் தீர்வு ஏற்படுத்த தமிழ் தேசிய கூட்டமைப்பும் அரசாங்கமும் இணைந்து செயற்பட வேண்டும் எனவும் அமைச்சர் டிலான் பெரேரா தெரிவித்தார். வரவு செலவுத் திட்டம் மீதான 5 ஆவது நாள் விவாதத்தில் உரையாற்றுகையிலே அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார். அமைச்சர் மேலும் கூறியதாவது,

யுத்தம் முடிவடைந்துள்ள நிலையில் சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்கள் கைகோர்த்து பயணம் செல்ல வேண்டிய காலம் இது. ஆனால், மங்கள சமரவீர எம்.பி. பிரிவினைவாதத்தை தூண்டி, நாட்டில் மீண்டும் ஒரு யுத்தத்தை ஏற்படுத்தும் வகையில் இனவாதக் கருத்துகளை சபையில் வெளியிட்டார். அவரின் கருத்துகளை ஊக்குவிக்க வேண்டாமென தமிழ் தேசிய கூட்டமைப்பு எம்.பிக்களை கோருகிறேன். ஏனென்றால், இத்தகைய நடவடிக்கை தேசிய பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காண்பதை தூரமாக்கும். இனவாதத்தை தூண்டிவிட்டு, அதனூடாக மீண்டும் யுத்தமொன்றை ஏற்படுத்துவதே மங்களவின் நோக்கமாகும். சுரேஷ் பிரேமச்சந்திரன் ஆற்றிய உரையின் காபன் பிரதியாகவே மங்களவின் உரை அமைந்தது.

நாட்டைத் துண்டு போட்டு பிரச்சினைக்கு தீர்வு காண முடியாது. அரசியல் தீர்வொன்றை எட்டுவதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பும் நாமும் கைகோர்த்து செயற்படவேண்டும்.

கிளிநொச்சியில் ஆயிரம் இராணுவ வீரர்களின் குடும்பங்களை குடியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மங்கள சமரவீர தெரிவித்தது முற்றிலும் தவறான கருத்தாகும். அவ்வாறு எதுவித குடியேற்றங்களும் மேற்கொள்ளப்படவில்லை. வடக்கு, கிழக்கு உட்பட நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் இராணுவ முகாம்களே அமைக்கப்படுகின்றன. தமிழ் மக்களும் இராணுவ முகாம்கள் அமைக்குமாறு கேட்கின்றனர்.

வடக்கு, கிழக்கில் தமிழ் மத உற்சவம் நடத்த இராணுவம் தடைவிதித்ததாக அவர் தெரிவித்த குற்றச்சாட்டும் முற்றிலும் தவறானதாகும். எந்த மத அனுஷ்டானத்தையும் நாம் தடை செய்யவில்லை. ஆனால் மத வைபவம் என்ற போர்வையில் பயங்கரவாதிகளை படைவீரர்களாக அனுஷ்டிக்க இடமளிக்கமாட்டோம். நாட்டுக்குள் மீண்டும் பயங்கரவாதத்தை தூண்டிவிட மேற்கொள்ளும் முயற்சிக்கு இடமளிக்க முடியாது என்றார்.

வடக்கில் திட்டமிட்டு இராணுவ குடும்பங்களை குடியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், இந்து மத அனுஷ்டானங்கள் மேற்கொள்ள தடை விதிக்கப்பட்டதாகவும் மங்கள சமரவீர தனது உரையின்போது கூறுனார். அவரின் உரையை பாராட்டி தமிழ் தேசிய கூட்டமைப்பு எம்.பி. அரியநேத்திரன் அடுத்து உரையாற்றினார். இதற்கு பதிலளித்து உரையாற்றியபோதே அமைச்சர் மேற்கண்ட கருத்துகளை கூறினார்.
மேலும் இங்கே தொடர்க...

பாக். ஜனாதிபதிக்கு பிரமாண்ட வரவேற்பு

விமான நிலையத்தில் இராணுவ அணிவகுப்பு மரியாதை; இருதரப்பு பேச்சு இன்று ஆரம்பம்பாகிஸ்தான் ஜனாதிபதி ஆசிஃப் அலி சர்தாரி நேற்று பிற்பகல் இலங்கை வந்தடைந்தார்.

நேற்று பிற்பகல் 4.30 மணி அளவில் கட்டுநாயக்க விமான நிலையம் வந்தடைந்த அவரை, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வரவேற்றார். ஜனாதிபதி சர்தாரிக்கு விமான நிலையத்தில் பிரமாண்டமான வரவேற்பளிக்கப்பட்டது.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அழைப்பையேற்று நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு வருகை தந்துள்ள சர்தாரிக்கு செங்கம்பள வரவேற்பளிக்கப்பட்டதுடன் இராணுவ அணிவகுப்பு மரியாதையும் வழங்கிக் கெளரவிக்கப்பட்டது.

எதிர்வரும் 30ம் திகதி வரை இலங்கையில் தங்கியிருக்கும் சர்தாரி, இலங்கை அரசியல் தலைவர்களையும் சந்தித்துப் பேசுவார்.

இவர் இன்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, பிரதமர் தி. மு. ஜயரட்ன, அமைச்சர் ஜீ. எல். பீரிஸ் ஆகியோரைச் சந்தித்து இரு தரப்பு உறவுகள் தொடர்பான உத்தியோகபூர்வ பேச்சுவார்த்தைகளை நடத்துவார்.

பாகிஸ்தான் ஜனாதிபதியுடன் 40 பேர் கொண்ட உயர் மட்டக் குழுவினரும் வருகை தந்துள்ளனர்.

பாகிஸ்தான் வெளிவிவகார அமைச்சர் மஹ்மூத் குரோமி, பாதுகாப்பு அமைச்சர் அஹமட் முக்தார், பாக். வர்த்தக சம்மேளனத் தலைவர் மற்றும் வர்த்தக பிரதிநிதிகள் ஆகியோர் இதில் அடங்குவர்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இரண்டாவது தடவையாகப் பதவிப் பிரமாணம் செய்ததன் பின்னர் இலங்கைக்கு வருகை தரும் முதலாவது வெளிநாட்டுத் தலைவர் சர்தாரி ஆவார்.

இருதரப்புப் பேச்சுவார்த்தைகளின் போது பொருளாதார விடயங்களுக்கு முன்னுரிமை வழங்கப்படுமென எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக சீபா வர்த்தக உடன்படிக்கை தொடர்பாக ஆராயப்படலாமென எதிர்பார்க்கப்படுகிறது.

பாகிஸ்தான் இலங்கையுடன் மிக நீண்டகாலம் நட்புறவு பேணும் நாடு. பல்வேறு இக்கட்டான காலகட்டங்களில் இலங்கைக்கு கைகொடுத்து உதவிய நாடு.

பாகிஸ்தான் பிரதமர் யூசுப் ராஸா கிலானி 2008ம் ஆண்டு இலங்கைக்கு வருகை தந்திருந்தார். சார்க் அமைப்பின் உறுப்பினர் என்ற வகையில் அவரது விஜயம் அமைந்திருந்தது.

ஜனாதிபதி பர்வேஷ் முஷரஃப் 2002ம் ஆண்டு பாக். அரச தலைவராக வருகை தந்திருந்தார்.
மேலும் இங்கே தொடர்க...

27 நவம்பர், 2010

கொரிய தீபகற்பத்தில் போர் மேகம்: வடகொரியா மீண்டும் எச்சரிக்கை



தென் கொரியாவிற்கெதிராக எந் நேரத்திலும் போர் தொடுக்க தாம் தயாராக இருப்பதாக வடகொரியா எச்சரித்துள்ளது.

மேலும் அமெரிக்கப் படைகளுடனான தென்கொரியாவின் போர் ஒத்திகைகள் நிறுத்தப்பட வேண்டுமெனவும் அது தெரிவித்துள்ளது.

75 போ‌ர் ‌விமான‌ங்க‌ள், 6000 படைவீரர்களுடன் ‌வீர‌ர்களுட‌ன் அமெ‌ரி‌க்கா‌வி‌ன் யு.எ‌‌ஸ்.எ‌ஸ் வொ‌‌ஷி‌ங்ட‌ன் எ‌ன்ற போ‌ர் க‌ப்ப‌ல் கொ‌ரிய ‌தீபக‌ற்ப‌த்‌திற்கு வருகைதந்துள்ளது.

அமெ‌‌ரி‌க்காவு‌ம், தெ‌ன் கொ‌ரியாவு‌ம் இணை‌ந்து அங்கு போ‌ர் ஒ‌த்‌திகை நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளன.

இந்நிலையில் நேற்றும் வட கொரியா 'யொங்பயொங்' தீவுகளின் மீது 2 ஆவது தடவையாகவும் ஆட்லறித்தாக்குதல்களை நடத்தியிருந்தது.

இதனைத்தொடர்ந்து வட கொ‌ரியா ‌மீது போ‌ர் தொடு‌க்க வே‌ண்டு‌ம் எ‌ன்று தெ‌ன் கொ‌ரியாவில் போராட்டங்கள் நடைபெற்றுவருகின்றன.

தெ‌ன் கொ‌ரியா‌‌வி‌ன் 'யொங்பயொங்' ‌தீ‌வி‌ல் வட கொ‌ரியா அண்மையில் பீரங்கித்தாக்குதல்களை நடத்தியது இ‌தி‌ல் 4 பே‌ர் உ‌யி‌ரிழ‌ந்தன‌ர்.

இத‌ற்கு ப‌‌திலடியாக தெ‌ன் கொ‌‌ரியாவு‌ம், வட கொ‌ரியா ‌மீது தா‌க்குத‌ல் நட‌த்‌தியது.

மேலும் அவ்விடத்தில் வசித்த சுமார் 1200 பேர் அங்கிருந்து வெளியேறினர்.

அங்கு தொடரும் இப்பதற்ற சூழ்நிலையால் எந்நேரமும் போர் மூளும் அபாயம் நிலவுவதாக கொரிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன

.
மேலும் இங்கே தொடர்க...

இளைஞர் பாராளுமன்ற தேர்தல் : மட்டு, மாவட்டத்தில் வாக்களிப்பு ஆரம்பம்

நாடளாவிய ரீதியில் நடைபெறுகின்ற இளைஞர் பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்களிப்பு இன்று காலை 8 மணிக்கு ஆரம்பமாகியுள்ளது. 331 பேரை தெரிவு செய்ய ஆயிரத்து 638 பேர் போட்டியிடுகின்றனர். ஒவ்வொரு பிரதேச செயலகத்திலும் வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மாலை 4 மணிக்கு வாக்களிப்பு நிறைவடையுமென கிழக்கு மாகாண புதிய இளைஞர் சேவைகள் மன்ற பணிப்பாளர் கே.தவராஜா தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் 14 பிரதேச செயலகங்களிலும் 14 வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இம்மாவட்டத்தில் சுமார் 20 ஆயிரம் பேர் வாக்களிக்கத்தகுதி பெற்றுள்ளனர்.

வாக்களிப்பதற்கான நேரம் முடிவடைந்தவுடன் குறித்த வாக்களிப்பு நிலையத்திலேயே வாக்குகள் எண்ணப்பட்டு இன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கடவுள்ளன.

நாடளாவிய ரீதியில் இத்தேர்தல் மூலமாக 331 பேர் இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர்களாக தெரிவு செய்யப்படவுள்ளனர். தெரிவு செய்யப்படும் உறுப்பினர்கள் எதிர்வரும் ஜனவரிமாதம் 12ஆம் திகதி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொள்ளவுள்ளனர்.
மேலும் இங்கே தொடர்க...

'ஈழமா? படிப்பா?" யாழ், பல்கலைக்கழகத்தில் மாணவர்களை அச்சுறுத்தும் சுவரொட்டிகள்

மாணவர்களை அச்சுறுத்தும் விதமாக 'ஈழமா? படிப்பா?" என்று வாசகமிட்ட சுவரொட்டிகள் யாழ்ப்பாண பல்கலைக்கழத்தில் ஒட்டப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வளாகத்திலும் விடுதிகளிலும் மாணவர்களை அச்சுறுத்தும் வகையில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.

அச்சுவரொட்டிகளில் படிப்பா? ஈழமா? என்ற கேள்விக்குறியில் வீடுகள் எரிந்த நிலையிலான படங்களும், அழிவுகளின் படங்களும் காணப்பட்டன.

இறுதியில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் என போடப்பட்டிருந்தது. இருந்தும் இது யாழ்ப்பாண மாணவர் ஒன்றியத்தினால் ஒட்டப்படவில்லையெனவும் இனந்தெரியாத யாரோ ஒட்டியுள்ளனர் என்றும் மாணவர் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
மேலும் இங்கே தொடர்க...

கிளிவெட்டி நலன்புரி முகாம்களில் தங்கியுள்ள மக்கள் மழையால் பாதிப்பு

திருகோணமலை மாவட்டத்தின் மூதூர் கிழக்கில் இருந்து இடம்பெயர்ந்து கிளிவெட்டி உள்ளிட்ட நலன்புரி முகாம்களில் வசித்து வரும் இடம்பெயர்ந்த மக்கள் மழை காரணமாக பல்வேறு பிரச்சினைகளுக்குள்ளாகி வருகின்றனர்.

மழை காரணமாக கிளிவெட்டி, பட்டித்திடல், மணற்சேனை, கட்டைபறிச்சான் ஆகிய இடங்களில் உள்ள நலன்புரி நிலைய மக்களே இவ்வாறு சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர்.

கிளிவெட்டியில் 570 குடும்பங்களும், மணற்சேனையில் 90 குடும்பங்களும், பட்டித்திடலில் 230 குடும்பங்களும், கட்டைபறிச்சானில் 372 குடும்பங்கள் தங்கியுள்ளன.

இடம்பெயர்ந்து மீள்குடியேற்றப்பட்ட மக்கள் ஒரளவு தொழில் மற்றும் முயற்சிகளில் ஈடுபடும் நிலையில் பாதிக்கப்பட்ட இம்மக்கள் தொடர்ந்து நலன் புரிநிலையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

உலக உணவுத்திட்டம் தவிர வேறு எந்த ஆதாரமும் இன்றி வாழும் இம்மக்களை மீளக் குடியமர்த்துவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர்கள் தெரிவித்துள்ள போதும் இதுவரை நடவடிக்கை எதுவும் மேற்கொள்ளப்படவில்லை என இங்குள்ள மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

மூதூர் கிழக்கில் உள்ள சம்பூரில் அனல் மின்னிலயம் அமைக்கும் இடம் தவிர்ந்த சம்பூர் கூனித்தீவு கிராமங்களின் பகுதிகளிலாவது மீள்குடியேற அனுமதியுங்கள் என்று மக்கள் கூறிவருகின்றனர்.
மேலும் இங்கே தொடர்க...

இலங்கையில் முதலீடு செய்துள்ள வெளிநாட்டு வர்த்தகர்களுக்கு புதிய விசாமுறை அறிமுகம்

இலங்கையில் முதலீடுகளை செய்துள்ள வெளிநாட்டு வர்த்தகர்களுக்கு விரும்பியபோது வந்து செல்வதற்கான விசா முறை அறிமுகம் செய்யப்படவுள்ளது என பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்தார்.

கொழும்பு ஹில்டன் ஹோட்டலில் நேற்று நடைபெற்ற வைபவமொன்றில் உரையாற்றும்போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

வெளிநாடுகளில் உள்ள இலங்கை தூதரகங்களின் பரிந்துரைகளின் அடிப்படையில் இந்த விசாக்கள் வழங்கப்படவுள்ளது. இலங்கையில் முதலீடு செய்துள்ள வெளிநாட்டு வர்த்தகர்கள் இதுவரைகாலமாக சுற்றுலா விசாக்களிலேயே இலங்கைக்கு வருகின்றனர்.

எனவே விரும்பியபோது தடைகள் இன்றி இலங்கைக்கு வந்து செல்வதற்காக 'மல்டிபல்' விசா முறையொன்றை அரசாங்கம் அறிமுகப்படுத்தப்படவுள்ளது என அவர் மேலும் தெரிவித்தார்.
மேலும் இங்கே தொடர்க...

கொழும்பு நகரில் 83 ஆயிரத்து 237 சட்டவிரோத வீடுகள்: விமல் வீரவன்ச

கொழும்பு நகரில் 2 ஆயிரத்து 165 ஏக்கர் நிலப்பரப்பில் 83 ஆயிரத்து 237 சட்டவிரோத வீடுகள் இருப்பதாக நிர்மாணத்துறை, பொறியியல் மற்றும் வீடமைப்பு வசதிகள் அமைச்சர் விமல் வீரவன்ச நேற்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில்,

'' கொழும்பு மாவட்டத்தில் 4 பேர்ச்சஸ் நிலத்தில் குறைந்த வசதிகளைக் கொண்ட ஒரு லட்சத்து 7 ஆயிரத்து 554 வீடுகள் காணப்படுகின்றன. இந்த குறைந்த வசதிகளைக் கொண்ட வீடுகளில் வசிப்பவர்களுக்காகவே 70 ஆயிரம் வீடுகளை அமைக்க வரவு செலவுத் திட்டத்தில் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது " எனத் தெரிவித்தார்.
மேலும் இங்கே தொடர்க...

அதிகாரத்தை பரவலாக்காது அபிவிருத்தியினால் ஏற்படும் சமாதானம் நிலைத்திருக்காது : செல்வராசா எம்.பி.

அபிவிருத்திக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எதிர்ப்பு இல்லை. யுத்தம் நிறைவடைந்துள்ள நாட்டில் அதிகாரத்தைப் பரவலாக்க வேண்டும். அதிகாரப் பரவலாக்கல் இல்லாத இடத்தில் அபிவிருத்தியினால் ஏற்படும் சமாதானம் நிலைத்திருக்காது என்று கூட்டமைப்பின் மட்டக்களப்பு எம்.பியான பொன். செல்வராசா தெரிவித்தார்.

அதிகாரம் கொண்ட ஜனாதிபதியினால் அதிகாரத்தை பரவலாக்க முடியும். அவருக்கு நாட்டில் எதிரி இல்லை. இருந்த ஒரேயொரு எதிரியும் சிறைவாசம் அனுபவிக்கின்றார் என்றும் அவர் சொன்னார். பாராளுமன்றத்தில் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற வரவு செலவுத்திட்டம் மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,

தமிழ் மக்கள் எதிர்நோக்குகின்ற நல்லிணக்க விவகாரம் எதுவுமே 2011 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் குறிப்பிடவில்லை. தமிழ் மக்களுக்கு ஏதாவது ஜனாதிபதி கூறுவார் என எதிர்பார்த்தனர். இறுதியில் ஏமாற்றமே கிடைத்தது.

அபிவிருத்திக்கு முன்னுரிமை கொடுக்கப்படும் என ஜனாதிபதி கூறியுள்ளார். எனினும் யுத்தம் நிறைவடைந்த நாட்டில் அபிவிருத்திக்கு முக்கியத்துவம் கொடுப்பதை விட மக்களின் நலன்மேம்பாட்டிற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என ஜேர்மனிய பிரதிநிதி கூறியுள்ளார்.

வியட்நாமில் யுத்தம் நிறைவடைந்ததன் பின்னர் அபிவிருத்திக்கு முன்னுரிமை கொடுக்கவில்லை. மக்களின் நலனுக்கே முன்னுரிமை கொடுக்கப்பட்டது. அதனால்தான் மக்கள் அந்த அரசாங்கத்தின் மீது நம்பிக்கை கொண்டனர்.

அபிவிருத்திக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு தடையில்லை. ஆனால் அதிகார பரவலாக்கல் முக்கியமானது. அவை இங்கு முன்னெடுக்கப்பட வேண்டும். அதிகார பரவலாக்கல் இல்லாத இடத்தில் அபிவிருத்தியினால் ஏற்படும் சமாதானம் நிலைத்திருக்காது. அதிகாரத்தை பரவலாக்குவதற்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை தேவை என்று அரசாங்கம் அன்று கூறியது. மூன்றில் இரண்டு பெரும்பான்மை ஜனாதிபதிக்கு இருக்கின்றது. அவருக்கு அதிகாரமும் இருக்கின்றது. இவ்வாறான நிலையில் தமிழ் மக்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றுவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

படையினரின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த 3000 ரூபாவும், படையினரின் மூன்றாவது குடும்பத்திற்கு ஒரு இலட்சம் ரூபாவும் வழங்குவதற்கு முன் மொழியப்பட்டுள்ளது. இதனை நாங்கள் எதிர்க்கவில்லை.

போரினால் அவையவங்களை இழந்த அப்பாவி தமிழ் மக்கள், விடுவிக்கப்பட்ட புலிகளின் பழைய வீரர்கள் வாழ்க்கையை செவ்வனே நடத்த முடியாது தவிக்கின்றனர்.

இராணுவ குடும்பத்தினருக்கு வழங்குகின்ற சலுகைகளை பாதிக்கப்பட்ட தமிழ் குடும்பத்தினருக்கும் வழங்க வேண்டும். அது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும் என வினயமாக கேட்டுக் கொள்கின்றேன்.

வேலையற்ற பட்டதாரிகளுக்கு தொழில் வழங்கப்படும் என அரசாங்கம் முன்மொழிந்துள்ளது. வேலை வழங்கக் கோரி ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்படுகின்றன. மட்டக்களப்பில் நடத்தப்பட்ட எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் நானும் மூன்று எம்.பிக்களும் பங்கேற்றோம். அதனால் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டோம். நல்லதை நல்லது என்றும் தவறை தவறு என்றுமே கூறுவோம். சகலதையும் விமர்சிக்க மாட்டோம்.

ஜனாதிபதிக்கு இன்று எதிரி என்று யாருமே இல்லை. இருந்த ஒரு எதிரியும் சிறைவாசம் அனுபவித்து வருகின்றார். இவ்வாறானதொரு சந்தர்ப்பத்தையும் தருணத்தையும் அரசாங்கமும் ஜனாதிபதியும் தவற விட்டு விடக் கூடாது என வலியுறுத்தி கூறுகின்றோம்.

எங்களுடைய இலட்சக்கணக்கான மக்கள் வாழ்க்கையை தொலைத்து விட்டனர். அவர்களின் வாழ்க்கையை மேம்படுத்த அதிகாரத்தை பரவலாக்க வேண்டும்.

கிழக்கு மாகாணம் 2007 ஆம் ஆண்டு விடுவிக்கப்பட்டது. அதற்கு பின்னர் மட்டக்களப்பு மாவட்டத்தில் மட்டும் 150 பேரை காணவில்லை. இதற்கு யார் பொறுப்பு கூறப் போகின்றார்கள். இராணுவத்தினரா? புலிகளா? எனினும் மக்கள் இன்னும் கண்ணீரும் கம்பலையுமக்ஷிக இருக்கின்றனர்.

இதனால் இளம் மனைவியர் மற்றும் பெற்றோர்கள் தவித்து கொண்டிருக்கின்றனர். அதற்கெதிராக வடக்கு கிழக்கில் மட்டுமன்றி கொழும்பிலும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டன.
மேலும் இங்கே தொடர்க...

வன்னியிலிருந்து இடம்பெயர்ந்து வந்த மக்கள் வைப்பிலிட்ட தொகையினை பட்டியலிட்ட ஜனாதிபதி



யுத்தத்தின் இறுதிக் காலகட்டத்தில் வன்னியிலிருந்து வவுனியாவுக்கு வந்த தமிழ் மக்கள் முகாம்களில் அமைக்கப்பட்ட வங்கிகளில் வைப்புச் செய்த பணம் மற்றும் நகைகளின் விபரங்களை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்று தமிழ்க் கட்சிகளின் அரங்கத்துடனான சந்திப்பின்போது எடுத்துக்கூறியுள்ளார்.

இராமநாதன் முகாமில் அமைக்கப்பட்டிருந்த வங்கியில் 400 மில்லியன் ரூபா வைப்பிலிடப்பட்டதாகவும் மனிக்பாம் முகாமில் 973 மில்லியன் ரூபா வைப்பிலிடப்பட்டதாகவும் கிளிநொச்சியில் 1.43 பில்லியன் ரூபா வைப்பிலிடப்பட்டதாகவும் முகாம்களில் அமைக்கப்பட்டிருந்த இலங்கை வங்கியில் 500 மில்லியன் ரூபா வைப்பிலிடப்பட்டதாகவும் ஜனாதிபதி கூறியுள்ளார்.

இதேபோல் மாங்குளத்தில் 650 பேரின் கணக்குகளில் 278 மில்லியன் ரூபா வைப்பிலிடப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார். இதனைவிட இராணுவம் வன்னியில் கைப்பற்றிய தங்கம் வங்கிகளில் 16 பெட்டகங்களில் வைக்கப்பட்டுள்ளதாகவும் அதன் பெறுமதி 400 மில்லியன் ரூபா எனவும் இராணுவத்தினர் 800 மில்லியன் ரூபா பணத்தினை கைப்பற்றி வங்கியில் வைப்பிலிட்டுள்ளதாகவும் ஜனாதிபதி இந்தச் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.

இடம்பெயர்ந்த மக்கள் மீளக் குடியேறிய நிலையில் அவர்களுக்கு நஷ்ட ஈடு வழங்கவேண்டும் என தமிழ்க்கட்சிகளின் அரங்கத்தினர் கோரிக்கை விடுத்தபோதே ஜனாதிபதி புள்ளிவிபரங்களுடன் இவற்றைத் தெரிவித்ததாக சந்திப்பில் கலந்துகொண்ட தமிழ்க்கட்சியொன்றின் தலைவர் தெரிவித்தார்.
மேலும் இங்கே தொடர்க...

அரசியல் தீர்வு தொடர்பான விடயத்தை இலங்கை அரசாங்கம் புறந்தள்ளவில்லை : பீரிஸ்

அரசியல் தீர்வு தொடர்பான விடயத்தை இலங்கை அரசாங்கம் புறந்தள்ளி வைக்கவில்லை. ஆனால், தற்போது மனிதாபிமான மற்றும் உடனடி விடயங்களுக்கு முன்னுரிமை அளித்து செயற்படுகின்றோம். அண்மையில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு மற்றும் ஈ.பி.டி.பி. ஆகிய கட்சிகளுடன் பேச்சு நடத்தியிருந்தோம். இன்று ( நேற்று ) தமிழ்க் கட்சிகளின் அரங்கம் ஜனாதிபதியை சந்திக்கின்றது. 10 தினங்களுக்கு முன்னர் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்மந்தனை ஜனாதிபதி சந்தித்து பேச்சு நடத்தியிருந்தார். நாங்கள் ஆலோசனைகளை நடத்தி வருகின்றோம் என்று வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் தெரிவித்தார்.

வெளிவிவகார அமைச்சில் நேற்று வெள்ளிக்கிழமை காலை நடைபெற்ற இலங்கை இந்திய நாடுகளுக்கு இடையிலான கூட்டு ஆணைக்குழுவின் ஏழாவது அமர்வில் கலந்துகொண்ட பின்னர் இரு நாடுகளினதும் வெளிவிவகார அமைச்சர்கள் கூட்டாக நடத்திய செய்தியாளர் மாநாட்டிலேயே பீரிஸ் இந்த விடயங்களை குறிப்பிட்டார்.

வெளிவிவகார அமைச்சர் அங்கு மேலும் கூறியதாவது: இலங்கை இந்திய நாடுகளுக்கு இடையிலான கூட்டு ஆணைக்குழுவின் ஏழாவது அமர்வு நடைபெற்றது. அதில் பல்வேறு விடயங்கள் உள்ளடக்கப்பட்டன. பல உடன்பாடுகளுக்கு நாங்கள் வந்தோம். இந்திய இலங்கை உறவுகளின் அடிப்படை விடயங்கள் ஆராயப்பட்டன.

நாங்கள் தற்போது சிறந்ததொரு சூழலில் சமாதானத்தை அனுபவித்து வருகின்றோம். அரசியல் ஸ்திரத்தன்மை ஏற்பட்டுள்ளது. இரு நாடுகளுக்கும் இடையில் பரஸ்பரம் புரிந்துணர்வுடன் செயற்படுவது குறித்து அர்ப்பணிப்புடன் இருக்கின்றோம்.

இடம்பெயர்ந்த மக்களை மீள்குடியேற்றுவதில் இந்தியா வழங்கிவரும் உதவிகள் நிலக்கண்ணிவெடிகளை அகற்றுவதில் வழங்கப்படும் ஒத்துழைப்பு வட மாகாணத்தில் விவசாய நடவடிக்களை கட்டியெழுப்ப இந்தியாவின் உதவி ஆகியவை தொடர்பில் கலந்துரையாடினோம்.

மேலும் ரயில்வே அபிவிருத்தி திட்டம் ஒன்றை ஆரம்பித்துவைக்க எஸ்.எம். கிருஷ்ணா மதவாச்சி செல்லவுள்ளார். ஆயிரம் வீடுகளை நிர்மாணிக்கும் வேலைத்திட்டத்தின் ஆரம்பித்துவைக்க அவர் யாழ்ப்பாணம் செல்லவுள்ளார். இடம்பெயர்ந்த மக்களுக்கான 50 ஆயிரம் வீடுகளை அமைக்கும் வேலைத்திட்டத்தின் ஒரு பகுதியாக இது உள்ளது. பொருளாதார விடயங்கள் குறித்து விரிவாக கலந்துரையாடினோம். உடன்பாட்டுக்கு வந்துள்ள விடயங்களை அமுல்படுத்துவது தொடர்பில் ஆராய்கின்றோம்.

இரு நாடுகளுக்கு இடையிலான மீனவர் விடயம் தொடர்பில் பேச்சு நடத்தினோம். அதாவது இவ்விடயம் தொடர்பில் கட்டமைப்பு ஒன்று உருவாக்கப்படவேண்டும் என்று உடன்பட்டோம். இது தொடர்பாக அவ்வப்போது எழுகின்ற பிரச்சினைகளுக்கு தீர்வுகாணும் பொருட்டே இந்த கட்டமைப்பு உருவாக்கப்படவேண்டும் என்று உடன்பட்டுள்ளோம். சுற்றுலாத்துறை தொடர்புத்துறை போன்றவற்றை பலப்படுத்துவது குறித்து ஆராய்ந்தோம்.

இலங்கை இந்தியாவுக்கு இடையில் கப்பல் சேவையை நடத்துவது தொடர்பில் இறுதி உடன்பாட்டுக்கு வந்துவிட்டோம் என்பதனை மகிழ்ச்சியுடன் அறிவிக்கின்றோம். இரு நாடுகளுக்கு இடையிலான பாதுகாப்பு ஒத்துழைப்பு தொடர்பிலும் பேச்சு நடத்தினோம். தகவல் தொழில் நுட்பத்தை கிராமப்புறங்களுக்கு கொண்டுசெல்லும் ஜனாதிபதியின் திட்டம் குறித்தும் யாழ். பல்கலைக்கழகத்தில் இந்தியாவின் உதவியுடன் அமைக்கப்படவுள்ள விவசாய பொறிறியல் பீடங்கள் குறித்தும் விரிவாக கலந்துரையாடினோம்.

இரு நாடுகளுக்கும் இடையிலான மாணவர் பறிமாற்றம் தொடர்பிலும் ஆராய்ந்தோம். இலங்கையில் 2600 ஆம் ஆண்டு பௌத்த விழாவில் இந்திய பிரதமர் மன்மோகன் சிங் கலந்துகொள்வார் என்று எதிர்பார்க்கின்றோம். யாழ்ப்பாணத்தில் இராஜதந்திர பிரதிநிதி அலுவலகத்தை இந்திய வெளிவிவகார அமைச்சர் திறந்துவைப்பதானது பாரிய மைல் கல்லாகும்.

கேள்வி: அரசியல் தீர்வு விடயம் குறித்து பேசப்பட்டதா?

பதில்: அரசியல் தீர்வு தொடர்பான விடயத்தை இலங்கை அரசாங்கம் புறந்தள்ளி வைக்கவில்லை. ஆனால் தற்போது மனிதாபிமான மற்றும் உடனடி விடயங்களுக்கு முன்னுரிமை அளித்து செயற்படுகின்றோம். அண்மையில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு ஈ.பி.டி.பி. ஆகிய கட்சிகளுடன் பேச்சு நடத்தியிருந்தோம். இன்று ( நேற்று ) தமிழ்க் கட்சிகளின் அரங்கம் ஜனாதிபதியை சந்திக்கின்றது. 10 தினங்களுக்கு முன்னர் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்மந்தனை ஜனாதிபதி சந்தித்து பேச்சு நடத்தியிருந்தார். நாங்கள் ஆலோசனைகளை நடத்தி வருகின்றோம். குழப்பகரமான நிலைமையில் எங்கிருந்தாவது ஒரு விடயத்தை ஆரம்பித்தாகவேண்டும்.

அதாவது மனிதாபிமான மற்றும் உடனடி விடயங்கள் போன்றவற்றுக்கே நாங்கள் முக்கியத்துவம் அளித்துள்ளோம். மீன்படி தொழில் விவசாயம் வீட்டுப் பிரச்சினை போக்குவரத்துப் பிரச்சினை நீர் விடயம் என்பன முதலில் ஆரக்ஷியப்படவேண்டும். எனவே நாங்கள் அங்கிருந்துதான் ஆரம்பிக்கவேண்டியுள்ளது. அதற்காக நீண்டகால விவகாரங்கள் புறந்தள்ளப்பட்டுள்ளதாக அர்த்தமில்லை. கருத்துக்களையும் ஆலோசனைகளையும் பெற்றுவருகின்றோம். எமது நிகழ்ச்சி நிரலில் அனைத்தும் விடயங்களும் உள்ளன
மேலும் இங்கே தொடர்க...