8 அக்டோபர், 2009

கிழ. மாகாண அரசியல்வாதிகளின் பாதுகாப்பிற்கு மீண்டும் பாதுகாப்பு படையினர்
சட்டவிரோதமாக துணி விற்பனையில் ஈடுபட்ட 5 இந்திய வியாபாரிகள் கைதாகி பிணையில் விடுதலை




மட்டக்களப்பு வாகரைப் பிரதேசத்தில் தங்கியிருந்து சட்ட விரோதமான முறையில் துணி வியாபாரத்தில் ஈடுபட்டார்கள் என்ற குற்றத்தின் பேரில் ஐந்து இந்திய வியாபாரிகள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு

நீதிமன்ற உத்தரவின் பேரில் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

சுற்றுலாப் பயணிகளுக்கான விசா பெற்று நாட்டிற்குள் நுழைந்து துணி வியாபாரத்தில் ஈடுபட்டதாக வாகரைப் பொலிஸார் குறிப்பிட்ட சந்தேக நபர்களை விற்பனைப் பொருட்களுடன் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தி சமர்ப்பித்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர்.

வாகரையிலுள்ள வீடொன்றில் தங்கியிருந்து வியாபாரத்தில் ஈடுபட்டு வந்த இந்நபர்கள் நேற்றிரவு கைது செய்யப்பட்டுள்ளனர்.

தமிழ்நாட்டைச் சேர்ந்த இராமையா மகாலிங்கம் ,மாரியப்பன் அழகுசாமி ,மாரியப்பன் முருகேசன் ,வெங்கடாசலம் முணியாண்டி ,சின்னவேலு இராமு, ஆகிய குறிப்பிட்ட சந்தேக நபர்கள் இன்று வாழைச்சேனை மாவட்ட நீதிமன்றத்தில் நீதிபதி ரீ.சரவணராஜா முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

சந்தேக நபர்களை தலா ரூபா 50 ஆயிரம் சரீரப் பிணையில் செல்ல அனுமதித்த நீதிபதி கடவுச் சீட்டை நீதிமன்ற பதிவாளரிடம் ஒப்படைத்து வெளிநடமாட்டத்தின் நிமித்தம் அதன் போட்டோ பிரதியை பெற்றுக் கொள்ளுமாறும் சந்தேக நபர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.

பொலிஸார் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்வதற்கு எதிர்வரும் 15 ஆம் திகதி வரை கால அவகாசம் வழங்கிய நீதிபதி அன்யை தினம் சந்தேக நபர்களை மீண்டும் ஆஜராக வேண்டும் என்றும் தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்


கிழக்கு மாகாணத்திலுள்ள உள்ளுராட்சி சபைகளின் தலைவர்கள் மற்றும் உறுப்பினர்களுக்கும் அரசியல் கட்சிகளின் அலுவலகங்களுக்கும் ஏற்கனவே வழங்கப்பட்டு வாபஸ் பெறப்பட்டிருந்த பொலிஸ் பாதுகாப்பு மீண்டும வழங்கப்பட்டுள்ளது.

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் டெலோ, புளொட், . பி. டி. பி., .பி.ஆர்.எல்.எப் ஆகிய கட்சிகளின் அலுவலகங்களுக்கும் உள்ளுராட்சி சபைகளின் தலைவர்கள் உட்பட உறுப்பினர்களுக்கும் ஏற்கனவே வழங்கப்பட்டிருந்த பொலிஸ் பாதுகாப்பு நேற்று முன்தினம் முதல் எவ்வித முன் அறிவித்தல்களுமின்றி திடீரென பொலிஸ் தலைமையகத்தின் உத்தரவின் பேரில் வாபஸ் பெறப்பட்டன.

இதன் காரணமாக இவ் அலுவலகங்களுக்கும் குறித்த நபர்களுக்கும் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபட்டிருந்த பொலிஸார் தாம் சேவையாற்றும் பொலிஸ் நிலையங்களுக்கு திரும்பினர்.

அரசியல் கட்சிகளின் தலைவர்கள் இதுகுறித்து பாதுகாப்பு உயர் மட்டத்தின் கவனத்திற்கு கொண்டு வந்து மீண்டும் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தியதையடுத்து வாபஸ் பெறப்பட்டிருந்த பொலிஸ் பாதுகாப்பு 48 மணி நேரத்திற்குள் மீண்டும் வழங்கப்பட்டுள்ளது.

இதனை உறுதிப்படுத்தியுள்ள கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் .பி.ஆர்.எல்.எப் பத்மநாபா அணியின் தலைவருமான இரா. துரைத்தினம் திருகோணமலையிலுள்ள தமது கட்சி அலுவலக்திற்கு நேற்று மாலையும் மட்டக்களப்பிலுளள் அலுவலகத்திற்கு இன்று காலையும் பொலிஸார் மீண்டும் பாதுகாப்பு கடமைகளுக்கு திரும்பயுள்ளதாக கூறினார்.

தமது கட்சியைச் சேர்ந்த உள்ளுராட்சி சபை உறுப்பினர்களுக்கும் பொலிஸ் பாதுகாப்பு மீண்டும் வழங்கப்பட்டுள்ளதாகவும் இது தொடர்பாக அவர் குறிப்பிட்டார்
மேலும் இங்கே தொடர்க...
பிரான்ஸ் கடற்படை கப்பல் மீது சோமாலிய கடற்கொள்ளையர்கள்
தவறுதலாகதாக்குதல்


10 இலங்கையர்கள் இந்தியாவில் தங்கியிருக்க அனுமதி மறுப்பு









எடையுடன் இந்தியக் கடற்பரப்பில் பயணித்த பிரான்ஸ் நாட்டு கடற்படைக் கப்பல் சோமாலிய கடற்கொள்ளையர்களின் தாக்குதலிற்கு இலக்காகியுள்ளது.

160 மீற்றர் நீளமுடைய பிரான்ஸ் கடற்படைக் கப்பலான 'த குறூ ஒப் லா சோமே' மீது சோமாலிய கடற்கொள்ளையர்கள் தாக்கியுள்ளனர்.

சிறிய ரக ஆயுதங்களுடன் இரு படகுகளில் வந்த கடற்கொள்ளையர்கள் இக் கப்பலை வர்த்தகக் கப்பல் என எண்ணி கொள்ளையிடும் நோக்கத்துடன் முன்னேறி தாக்கியுள்ளனர். ஐந்து கடற்கொள்ளையர்களை கடற்படையினர் கைது செய்துள்ளனர் என பேச்சாளர் அட்மிரல் கிரிஸ்டோபி பிரசுக் தெரிவித்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

தாங்கள் தவறுதலாக தாக்கியது கடற்படை கப்பல் என அறிந்த கொள்ளையர்கள் அங்கிருந்து தப்பிச்செல்ல முற்பட்டுள்ளனர். எனினும் அவர்களை துரத்திய கடற்படையினர் ஒரு படகில் இருந்த கொள்ளையர்களை மட்டும் கைது செய்துள்ளனர். அச்சமயம் மற்ற படகில் வந்த கொள்ளையர்கள் தப்பிச் சென்றுள்ளதாக பாரிஸில் வைத்து அட்மிரல் கிரிஸ்டோபி பிரசுக் தெரிவித்துள்ளார்.



தமிழீழ விடுதலைப்புலிகளின் ஆதரவாளர்கள் என கருதப்படும் 10 இலங்கைத் தமிழர்கள், இந்தியாவில் தங்கியிருக்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

தேசிய பாதுகாப்பை கருத்திற் கொண்டே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாட்டு பொலிஸ் தெரிவித்துள்ளது.

தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு ஆயுதம் சேகரித்தனர் என்ற சந்தேகத்தின் பேரில் செங்கல்பட்டு சிறப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 64 பேரில் இந்த 10 பேரும் அடங்குகின்றனர்.

வயது மற்றும் உடல் நலம் என்பவற்றை கருத்திற் கொண்டு விடுதலை செய்யப்பட்டுள்ள இவர்கள் நாட்டில் இருந்து வெளியேற தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. இந்தநிலையில் அவர்கள் இந்தியாவிலேயே தங்கியிருக்க வேண்டும் என்று விடுத்துள்ள கோரிக்கையை தமிழக பொலிஸ் நிராகரித்துள்ளது. தமிழகம் செங்கல்பட்டு சிறப்பு முகாம்களில் வாழும் ஈழத்தமிழர்கள் தண்ணீர் கூட அருந்தாமல் சாகும் வரை உண்ணாவிரதம் இருந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது
மேலும் இங்கே தொடர்க...




வவுனியா கோவில்குளம் சிவன்கோவிலில் தங்கியிருந்த கர்ப்பிணித்தாய்மாகள் யாழ் செல்ல புதனன்று அனுமதி மறுப்பு
இடம்பெயர் மக்களின் நடமாடும் சுதந்திரம் மறுக்கப்படுவது .நா. சாசனத்துக்கு முரணானது:ஜேன் லம்பெர்ட்





வவனியா கோவில்குளம் சிவன்கோவிலில் தங்க வைக்கப்பட்டிருந்த கர்ப்பிணித் தாய்மார்களின் குடும்பத்தினர்களைக் கொண்ட 300 பேருக்கு யாழ்ப்பாணம் செல்வதற்குப் புதனன்று வவுனியா ஈரப்பெரியகுளம் சோதனைச்சாவடியில் படையினர் அனுமதி மறுத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

யாழ்ப்பாணத்தில் உள்ள தமது சொந்த இடங்களுக்குச் செல்வதற்கான உரிய இராணுவத்தினரின் ஆவணங்களை எதிர்பார்த்து இவர்கள் கடந்த சில தினங்களாக வவுனியா கோவில்குளம் சிவன்கோவில் கல்யாண மண்டபத்தில் தங்கியிருந்து வருகின்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர்களை யாழ்ப்பாணத்திற்கு அனுப்பி வைப்பதற்காக புதனன்கிழமை காலை வவுனியா செயலக அதிகாரிகள் பஸ் வண்டிகளில் ஈரப்பெரியகுளம் சோதனைச்சாவடிக்கு அழைத்துச் சென்ற போதிலும், இவர்களுக்கான ஆவணங்கள் இன்னும் வந்து சேரவில்லை என்பதால் இவர்களை யாழ்ப்பாணத்திற்கு அனுப்ப முடியாதென அங்கிருந்த பாதுகாப்புத்துறை அதிகாரிகள் தெரிவித்ததையடுத்து. இவர்கள் மீண்டும் பஸ் வண்டிகளில் ஏற்றப்பட்டு கோவில்குளம் சிவன்கோவிலில் கொண்டு வந்து இறக்கப்பட்டுள்ளார்கள்.

மனிக்பாம் முகாம்களில் இருந்து விடுவிக்கப்படுகின்ற கர்ப்பிணித்தாய்மார்கள் அடங்கியோரின் குடும்ப விபரங்கள் வவுனியா செயலகத்திலிருந்து யாழ்ப்பாணத்திற்கு அனுப்பப்பட்டு, யாழ் அரச அதிபர் இவர்களுக்குரிய ஆவணங்களை உரிய இராணுவ அதிகாரிகளிடமிருந்து பெற்று அனுப்பிய பின்பே இவர்கள் பிரயாணம் செய்ய அனுமதிக்கப்படுகின்றார்கள்.


எனினும் புதன்கிழமை இத்தகைய அனுமதி பெறப்படுவதற்கு முன்பே சிவன்கோவிலில் இருந்த 300 பேரையும் மூட்டை முடிச்சுகளுடன் அதிகாரிகள் ஈரப்பெரியகுளத்திற்கு பஸ் வண்டிகளில் அழைத்துச் சென்றதாக யாழ் செயலக வட்டாரங்கள் தெரிவித்தன.

கர்ப்பிணித் தாய்மார்களும், கைக்குழந்தைகளைக் கொண்ட தாய்மார்களும், தமது உடல் நிலைமையைக் கருத்திற் கொள்ளாமல் அதிகாரிகள் தங்களை வீணாக இடத்திற்கு இடம் பஸ் வண்டிகளில் ஏற்றி அலைக்கழிப்பதாகக் கவலை தெரிவித்துள்ளார்கள







மேலும் இங்கே தொடர்க...
கொஸ்கொட வாகன விபத்தில் மூவர் பலி; 11 பேர் காயம்

வவு. பூந்தோட்டத்தில் சந்தேக நபர் ஒருவர் சுட்டுக் கொலை





- இன்று அதிகாலை 12.25 மணியளவில், கொஸ்கொடவில் இடம்பெற்ற வாகன விபத்தில் மூவர் பலியாகினர்: 11 பேர் காயமடைந்தனர் எனப் பொலிஸார் தெரிவித்தனர்.

தெனியாவிலிருந்து கொழும்பு நோக்கி வந்த இன்டர்சிட்டி பஸ்ஸ{டன் களுத்துறையிலிருந்த வந்த இ.போ.ச பஸ் மோதியதில் இவ்விபத்து நிகழ்ந்துள்ளதாகக் கூறப்படுகின்றது.

விபத்தில், இன்டர்சிட்டி பஸ் சாரதி உட்பட மூவர் உயிரிழந்துள்ளனர் எனப் பொலிஸார் தெரிவித்தனர்


வவுனியா, பூந்தோட்டம் பிரதேசத்தில் உள்ள சீநகர் பகுதியில் சந்தேகத்திற்கு இடமான மூவரை கைது செய்ய மேற்கொண்ட முயற்சியின்போது இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நேற்று முன்தினம் மாலை சந்தேகத்திற்கிடமான மூவர் அப்பகுதியில் நடமாடியபோது, அவர்கள் குறித்து அறிய பிரதேச மக்கள் முயற்சித்தனர்.

அப்போது அவர்களில் இருவர் கைத்துப்பாக்கி மற்றும் கைக்குண்டைக் காட்டி மக்களை அச்சுறுத்தியுள்ளனர் எனவும், பின்னர் தப்பிச் செல்ல முயன்ற சந்தேக நபர்கள் பொலிஸார் இருந்த திசையை நோக்கி துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டனர் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

இதனையடுத்து பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் அந்த நபர்களில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார் என்று கூறப்படுகிறது.

இரண்டாமவர் தம்மிடம் இருந்த கைக்குண்டை மற்றைய சந்தேக நபரை நோக்கி வீசிய போதிலும் அது வெடிக்கவில்லை எனவும், அந்தக் குண்டை வீசிவிட்டு அங்கிருந்து அவர் தப்பிச் சென்றுள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூன்றாவது நபரும் தப்பிச் செல்ல முயன்ற போது, அவரை பொலிஸார் கைது செய்துள்ளனர் எனவும் கூறப்படுகிறது.

கைதுசெய்யப்பட்ட நபரிடம் தாம் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகப் பொலிஸார் தெரிவித்தனர்
மேலும் இங்கே தொடர்க...