16 ஜூன், 2010

தண்டவாளம் தகர்ப்பு: “விசாரணைக்கு அழைத்து சென்ற 9 பேர் பற்றி அறிக்கை தாருங்கள்


விழுப்புரம் அருகே உள்ள சித்தணி கிராமத்தில் குண்டு வைத்து தண்டவாளம் தகர்க்கப்பட்டது. இதில் மலைக்கோட்டை எக்ஸ்பிரஸ் ரெயில் அதிர்ஷ்டசமாக தப்பியது. 2 ஆயிரம் பயணிகள் உயிர் தப்பினர்.

குண்டு வெடிப்பு நடைபெற்ற இடத்தில் கிடந்த துண்டு பிரசுரங்களில் ராஜபக்சேவுக்கு எதிராக வாசகங்கள் எழுதப்பட்டிருந்தது. பிரபாகரனின் தம்பிகள் என அதில் குறிப்பிடப்பட்டிருந் தது. இதையடுத்து, விடுதலைப்புலிகள் ஆதரவு இயக்கத்தைச் சேர்ந்தவர்கள்தான் குண்டு வெடிப்பை நிகழ்த்தியிருக்க வேண்டும் என போலீசார் சந்தேகிக்கிறார்கள்.

இதன் அடிப்படையில் தனியார் தொலைக்காட்சி நிருபர் ஜோதி நரசிம்மன், தமிழர் தேசிய இயக்கத்தின் மாவட்ட நிர்வாகி தமிழ் வேங்கை உள்பட 8 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். கடந்த 4 நாட்களாக ரகசிய இடத்தில் வைத்து இவர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

இதற்கிடையே குண்டு வெடிப்பு நடந்ததற்கு முந்தையநாள் அந்த பகுதியில் பழைய குண்டு வெடிப்பு வழக்கு குற்றவாளிகளான மாறன், ரேடியோ வெங்கடேசன் ஆகிய 2 பேரும் சுற்றித்திரிந்தது தெரிய வந்துள்ளது.

மாறன் கும்பகோணத்தை அடுத்த அணைக்கரையை பகுதியை சேர்ந்தவர். தமிழர் விடுதலைப்படை உள்பட பல தமிழ் அமைப்புகளுடன் தொடர்பு உடையவர். வீரப்பனிடம் இருந்து பணம் பெற்று வந்ததாக இவர் மீது வழக்கு உள்ளது.

கடந்த 1993-ம் ஆண்டு பண்ருட்டியை அடுத்த முத்தாண்டிகுப்பம் போலீஸ் நிலையத்தை தகர்க்க மாறனின் கூட்டாளியான லெனின் என்பவர் சைக் கிளில் வெடிகுண்டு கொண்டு வந்தார். அப்போது திடீரென குண்டு வெடித்து பலியானார்.

1992-ம் ஆண்டு குள்ளஞ்சாவடி, சிதம்பரம் அண்ணா மலைநகர் போலீஸ் நிலையங்கள் குண்டுவைத்து தகர்க்கப்பட்டது. ஒரு போலீஸ்காரர் பலியானார். 1991-ம் ஆண்டு சிதம்பரம் புத்தூர் போலீஸ் நிலையம் தகர்க்கப்பட்டது. இந்த 2 சம்பவங்களிலும் மாறனுக்கு தொடர்பு உள்ளது.

கடந்த 1993-ம் ஆண்டு நெய்வேலி அருகே உள்ள சேப்ளாநத்தம் பகுதியில் தமிழர் விடுதலை படை அமைப்பை சேர்ந்த சின்ன தம்பி என்பவர் வெடிகுண்டு எடுத்து வரும்போது குண்டு வெடித்து பலியானார்.

அதே ஆண்டில் விழுப்புரம் காந்திசிலை குண்டுவைத்து தகர்க்கப்பட்டது. இதில் மாறனும், ரேடியோ வெங்கடேசனும் முக்கிய குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டனர். இந்த வழக்கில் ஜாமீனில் வெளிவந்த இருவரும் தலைமறைவானார்கள்.

சித்தணியில் ரெயில் தண்டவாளம் தகர்க்கப்பட்டதற்கு முந்தைய நாள் இவர்கள் அந்த பகுதியில் சுற்றித்திரிந்ததாக தகவல் கிடைத்துள்ளதால் அவர்கள் தற்போது எங்கு இருக்கிறார்கள்? என்பது குறித்தும் அவர்களது நடவடிக்கைகள் குறித்தும் போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள்.

தமிழ் தீவிரவாதிகளான மாறனும், வெங்கடேசனும் பல்வேறு வழக்குகளில் சம்பந் தப்பட்டவர்கள். மாறன் சிறையில் இருந்தபடியே பட்டப்படிப்பை முடித்து பி.எச்.டி. படிப்பையும் நிறைவு செய்துள்ளார்.

ரேடியோ வெங்கடேசனுக்கு, கன்னட நடிகர் ராஜ்குமார் கடத்தலில் தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது. சிறையில் இருந்து வெளிவந்து தலைமறைவாக உள்ள இருவரையும் பிடிக்க போலீசார் வலைவிரித்துள்ளன





மேலும் இங்கே தொடர்க...

கர்நாடக போலீசுக்கு ரஞ்சிதா கடிதம் உடல்நிலை பாதித்துள்ளது; விசாரணைக்கு வர இயலாது




நித்யானந்தா சாமியாரும் நடிகை ரஞ்சிதாவும் நெருக்கமாக இருப்பது போன்று வெளியான வீடியோ படம் பரபரப்பை ஏற்படுத்தியது.

நித்யானந்தா மீது கற்பழிப்பு வழக்கு பதிவு செய்து கர்நாடகா,போலீசார் கைது செய்தனர். கோர்ட்டு உத்தரவின் பேரில் சிறையில் அடைக்கப்பட்டார். 51 நாட்கள் சிறை வாசத்துக்கு பிறகு தற்போது ஜாமீனில் விடுதலையாகியுள்ளார்.

நித்யானந்தா வழக்கில் ரஞ்சிதாவின் சாட்சியம் முக்கியமானதாக கருதப்படுகிறது. எனவே அவரை போலீசார் வலைவீசி தேடினர். சென்னை தியாகராயநகரில் ரஞ்சிதாவுக்கு வீடு உள்ளது. அங்கும் தேடி வந்தனர். ஆனால் அவ்வீடு ஆபாச சி.டி வெளியானதில் இருந்து பூட்டியே கிடக்கிறது. கேரளா, ஐதராபாத், பகுதிகளிலும் ரஞ்சிதாவுக்கு நெருக்கமானவர்கள் வீடுகளிலும் தேடினர். எங்கும் கிடைக்கவில்லை. போலீசில் ஆஜராகும்படி அவரது வீடுகளில் சம்மன் ஒட்டப்பட்டது. ஆனாலும் வரவில்லை.

இதையடுத்து அவரை கைது செய்வதற்காக கோர்ட்டில் ஆர்டர் வாங்கும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டனர்.

இந்த நிலையில் அமெரிக்காவில் உள்ள தந்தை வீட்டில் ரஞ்சிதா இருப்பது தற்போது தெரியவந்துள்ளது. நித்யானந்தாவை கைது செய்த உடனேயே அமெரிக்காவுக்கு தப்பிச்சென்று விட்டாராம். வீடியோ காட்சிகள் போலியானவை என்று இருவருமே ஆரம் பத்தில் மறுத்தனர். ஆனால் தடய அறிவியல் சோதனைகளில் அந்த வீடியோ காட்சிகள் உண்மை என நிரூபிக்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இதனால் போலீசார் தன்னை கைது செய்யக் கூடும் என்று பயந்து ரஞ்சிதா அமெரிக்காவுக்கு ஓடிவிட்டதாக கூறப்படுகிறது.

அமெரிக்காவில் இருந்து கர்நாடக சி.ஐ.டி. போலீசாருக்கு ரஞ்சிதா கடிதம் அனுப்பியுள்ளார். அதில் தனக்கு உடல் நிலை பாதிக்து கப்பட்டுள்ளது என்றும் எனவே விசாரணைக்கு வர இயலாது என்றும் குறிப்பிட்டு உள்ளார்.

ரஞ்சிதாவிடம் வாக்கு மூலம் பெற்று நித்யானந்தாவுக்கு கிடுக்கிபிடி போட போலீசார் திட்டமிட்டு இருந்தனர். இந்த கடிதத்தால் அது நிறைவேறாமல் போனது. நித்யானந்தா ஆதரவாளர்களும் ரஞ்சிதா போலீசில் சிக்காமல் இருக்க வேண்டுமென விரும்புகிறார்கள். வழக்கு முடியும் வரை அவர் தலைமறைவாகவே இருப்பார் என கூறப்படுகிறது.

ஆனாலும் ரஞ்சிதா வருகையை எதிர்பார்த்து விமான நிலையங்களில் ரகசிய போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

ஜெயிலில் இருந்து வந்த நித்யானந்தாவுக்கு கோர்ட்டு ஆசிரமத்தை விட்டு வெளியே போகக்கூடாது என்றும் ஆன்மீக வகுப்புகள் நடத்தக் கூடாது என்றும் நிபந்தனைகள் விதித்துள்ளது. தற்போது அவர் பிடதி ஆசிரமத்தில் பஞ்சத பஸ்தா யாகம் நடத்தி வருகிறார். வட்ட வடிவில் குழி வெட்டி அதில் சுள்ளிகளை போட்டு நெருப்பை எரிய வைத்து நடுவில் உட்கார்ந்து தியானம் செய்கிறார்.

காலை 2 மணி நேரமும் மாலை 2 மணிநேரமும் இந்த தியானத்தை செய்கிறார். இந்த தியானம் வட இந்தியாவில் மிகவும் பிரசித்தமானது ஆகும். உடம்பில் உள்ள கெட்ட சக்திகள் இந்த தியானம் மூலம் வெளியேற்றப்பட்டு மனம் திடமாகும்.
மேலும் இங்கே தொடர்க...

மன்னிப்பு தந்துவிட்டதால் சென்னை கோர்ட்டில் தொடரப்பட்ட என் மீதான வழக்கு செல்லாது: டக்ளஸ் தேவானந்தா சொல்கிறார்


இலங்கை மந்திரி டக்ளஸ் தேவானந்தா நிருபர்களிடம் கூறியதாவது:-

1986-ல் இடம் பெற்ற சென்னை சூளைமேடு துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பில் 1987-ம் ஆண்டில் இலங்கை இந்திய ஒப்பந்தத்தின்படி எனக்கு இலங்கை ஜனாதிபதியால் மன்னிப்பு வழங்கப்பட்டது.

1990-ம் ஆண்டு மே மாதம் நான் இந்தியாவில் இருந்து நாடு கடத்தப்பட்டபோது இது தொடர்பான ஆவணத்தில் கையெத்திட்டேன்.

முன்னாள் போராளிகளுக்கு மன்னிப்பு வழங்கி அவர்களுக்கு புனர்வாழ்வளிக்கும் விஷயத்தில் இலங்கைக்கு இந்திய அரசு உதவும் என்று இலங்கை இந்திய ஒப்பந்தத்தில் மிகத் தெளிவாக கூறப்பட்டுள்ளது.

1989 முதல் 1990 வரையான காலப்பகுதிகளில் சூளைமேடு துப்பாக்கி சூடு சம்பந்த வழக்கு சென்னை ஐகோர்ட்டில் இருந்தபோது மேற்படி வாசகத்தை எனது வக்கீல் எனக்கு வாசித்து காட்டினார். இலங்கை- இந்திய ஒப்பந்தத்தை அடுத்து எனக்கு எதிராக எந்த வழக்கும் இல்லை.

அதன்பின்னர் சூளைமேடு துப்பாக்கி சூட்டு சம்பவம் தொடர்பில் சென்னையிலோ அல்லது வேறெந்த இடத்திலுமோ எவரும் பிரச்சினை கிளப்ப வில்லை.

பொதுமன்னிப்பு வழங்கப்பட்ட பின்னர் நான் தனிப்பட்ட மற்றும் அரசியல் காரணங்களுக்காக பல தடவைகள் இந்தியா சென்று வந்துள்ளேன்.

குறுகிய அரசியல் காரணங்களுக்காகவே இந்த விஷயம் இப்போது மீண்டும் சென்னை ஐகோர்ட்டில் கொண்டு வரப்பட்டுள்ளது.

இது செல்லுபடியற்ற ஒரு வழக்கு. இது தொடர்பில் என்னை சென்னை நீதிமன்றத்திலோ அல்லது இலங்கை நீதிமன்றத்திலோ ஆஜர்படுத்த முடியாது.

இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் இங்கே தொடர்க...

இந்தோனேசியாவில் நிலநடுக்கம்: இருவர் பலி



மனோக்வாரி, ஜூன் 16: இந்தோனேசியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்துக்கு இருவர் பலியாகியுள்ளனர். புதன்கிழமை ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.1 ஆக பதிவாகியுள்ளது.

யாபென் தீவில் தென்கிழக்கு கடற்கரையோரம் நிலநடுக்கம் ஏற்பட்டது. அதனால், வீடுகள் இடிந்து விழுந்து இடிபாடுகளில் சிக்கி இருவர் பலியாகியுள்ளனர். சுமார் 150 வீடுகள் சேதம் அடைந்துள்ளன.

70,000 மக்கள் தொகையைக் கொண்ட இத்தீவில், சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டதால் பாதுகாப்பான இடத்துக்கு மக்கள் மாற்றப்பட்டுள்ளனர். ஆனால் சுனாமி எச்சரிக்கையை இந்தோனேசிய அரசு ஒரு மணி நேரத்தில் விலக்கிக் கொண்டது.
மேலும் இங்கே தொடர்க...

தமிழர் விவகாரம்:ஆய்வு செய்கிறார் ஐ.நா., உயரதிகாரி


நியூயார்க்:இலங்கைத் தமிழர் விவகாரம் குறித்து ஆய்வு செய்வதற்காக, ஐ.நா., உயரதிகாரி லின் பாஸ்கோ இலங்கை புறப்பட்டுச் சென்றார்.இலங்கையில் கடந்த ஆண்டு நடந்த இறுதிக் கட்ட போருக்கு பின், தமிழர்களை மறு குடியமர்த்தும் பணி தற்போது அங்கு தீவிரமாக நடந்து வருகிறது. இந்நிலையில், இலங்கைத் தமிழர் பிரச்னைக்கான அரசியல் தீர்வு, மறு குடியமர்த்தல், மனித உரிமை மீறல், நிவாரணப் பணிகள் குறித்து ஆய்வு செய்வதற்காக, ஐ.நா., அரசியல் விவகாரங்களுக்கான துணைச் செயலர் லின் பாஸ்கோ, நியூயார்க்கில் இருந்து நேற்று கொழும்பு புறப்பட்டுச் சென்றார்.இலங்கையில் அதிபர் ராஜபக்ஷே மற்றும் அமைச்சர்கள், அதிகாரிகளுடன் அவர் இதுகுறித்து விரிவான ஆலோசனை நடத்துவார் என, ஐ.நா., வட்டாரங்கள் தெரிவித்தன.
மேலும் இங்கே தொடர்க...

ஆசிய சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலை அதிகரிப்பு





சிங்கப்பூர் : ஆசிய சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலை அதிகரித்துள்ளது. நியூயார்க் மெயின் கான்ட்ராக்ட் லைட் ஸ்வீட் ரக கச்சா எண்ணெய்யின் ஜூலை டெலிவரிக்கான விலை பேரல் ஒன்றுக்கு 16 சென்டுகள் அதிகரித்து 77.10 அமெரிக்க டாலராக இருந்தது. பிரண்ட் நார்த் ஸீ கச்சா எண்ணெய்யின் ஆகஸ்ட் டெலிவரிக்கான விலை 35 சென்டுகள் அதிகரித்து 77.45 அமெரிக்க டாலராக வர்த்தகமாகியிருந்தது.
மேலும் இங்கே தொடர்க...

பயங்கரவாதம் தோற்கடிக்கப்பட்டு ஓராண்டு பூர்த்தி: தேசிய வெற்றி விழா, இராணுவ அணிவகுப்பில் முப்படை மற்றும் பொலிஸார் 9 ஆயிரம் பேர்

கொழும்பு காலி முகத்திடலில் எதிர்வரும் 18 ஆம் திகதி நடைபெறவுள்ள தேசிய வெற்றி விழா கொண்டாட்டம் மற்றும் இராணுவ வெற்றி அணிவகுப்பில் முப்படை மற்றும் பொலிஸார் ஒன்பது ஆயிரம் பேர் இம்முறை பங்கு கொள்ளவுள்ளதாக இராணுவப் பேச்சாளர் மேஜர் ஜெனரல் பிரசாத் சமரசிங்க தெரிவித்தார்.

புலிகளை அல்லது பிரபாகரனை தோற்கடித்தமைக்கான கொண்டாட்டமாக அன்றி நாடு முழுவதையும் பயங்கரவாதத் திலிருந்து விடுவித்தமைக்கான கொண்டா ட்டமாக வருடந்தோறும் இதனை கொண்டாட அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தேசிய பாதுகாப்பு விவகாரங்களுக்கான பேச்சாளரும், தகவல் மற்றும் ஊடகத்துறை அமைச்சருமான கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.

கொழும்பிலுள்ள தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையத் தில் விசேட செய்தியாளர் மாநாடு நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட இராணுவப் பேச்சாளர் மேஜர் ஜெனரல் பிரசாத் சமரசிங்க மேலும் விளக்கமளிக்கையில்:- பயங்கரவாதம் தோற்கடிக்கப்பட்டு, ஓராண்டு பூர்த்தியை முன்னிட்டு நடைபெறவுள்ள இந்த அணிவகுப்பின்போது வழமையை விட வித்தியாசமான முறையில் முப்படையினரும் தமது சாகசங்களை காண்பிக்கவுள்ளனர்.

தேசிய வெற்றி விழா கொண்டாட்டம் மற்றும் இராணுவ வெற்றி அணிவகுப்பு காலை 8 மணிக்கு காலி முகத்திடலிலும், அன்றைய தினம் மாலை 4.30 மணிக்கு படை வீரர்களின் தேசிய நினைவுதின வைபவம் பாராளுமன்ற மைதானத்திலும் நடைபெறவுள்ளன.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் இந்நிகழ்வுகள் நடைபெறவுள்ளன.

வழக்கமான அணிவகுப்புக்கு மேலதிகமாக இறுதிக்கட்ட படை நடவடிக்கையில் கலந்து கொண்ட பெரும்பாலான படை வீரர்கள் முதற் தடவையாக பங்கு கொண்டு பயங்கரவாதம் முறியடிக்கப்பட்டமை தொடர்பில் செயல் முறையில் காண்பிக்கவுள்ளதுடன் அதற்காக பயன்படுத்திய கனரக ஆயுதங்கள் மற்றும் உபகரணங்களையும் கொண்டுவரவுள்ளனர்.

கடற்படை அணிவகுப்பு ஆயிரம் கடற் படையினர் பங்குபற்றவுள்ளதுடன் இறுதிக்கட்ட நடவடிக்கையின் போது பயன்படுத்தப்பட்ட அதிவேக டோராக்கள், தாக்குதல் படகுகள், கடற்படை கப்பல்களினதும் சாகசங்களை காலி முகத்திடல் கடலில் காண்பிக்கவுள்ளனர்.

விமானப் படை அணிவகுப்பு 1400 விமானப் படை வீரர்கள் பங்கு பற்றவுள்ளதுடன் கபீர், எம். ஐ. – 27 உட்பட தாக்குதல் விமானங்கள் வான்பரப்பில் தமது சாகசங்களை காண்பிக்கவுள்ளன என்றும் குறிப்பிட்டார்.
மேலும் இங்கே தொடர்க...

கிளிநொச்சி மாவட்டம் பல்வேறு அபிவிருத்தி திட்டங்கள் நாளை வைபவ ரீதியாக ஆரம்பம்


வடக்கு வசந்தம் திட்டத்தின் கீழ் கிளிநொச்சி மாவட்டத்தில் பல்வேறு அபிவிருத்தித் திட்டங்கள் நாளை 17ம் திகதி வைபவ நீதியாக ஆரம்பித்து வைக்கப்படவுள்ளது.

ஆஸ்பத்திரி கட்டிடத் தொகுதி, இரண்டு கூட்டுறவு மொத்த விற்பனை நிலையங்கள், தொழிற் பயிற்சி மத்திய நிலையம், இலங்கை மின்சார சபையின் அலுவலகம், தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் மாவட்ட அலுவலகம், கணனி மத்திய நிலையம் ஆகியன திறந்து வைக்கப்பட விருக்கின்றன. அதேநேரம் இ. போ. சபையின் மூன்று புதிய பஸ் சேவைகள், நன்னீர் மீன் வளர்ப்பு திட்டம் என்பனவும் தொடக்கி வைக்கப்படவுள்ளன. 60 விளையாட்டுக்கழகங்களுக்கு விளையாட்டு உபகரணங்களும் பகிர்ந்தளிக்கப்பட வுள்ளன.

இவற்றுக்கு மேலதிகமாக கண்காட்சி கால்பந்தாட்டப் போட்டியும், கலாசார நிகழ்ச்சிகளும் இடம்பெறவுள்ளன. இவ்வைபவங்களில் அமைச்சர்களும், இளைஞருக்கான நாளை அமைப்பின் தலைவரும், ஹம்பாந்தோட்டை மாவட்ட எம்.பி. யுமான நாமல் ராஜபக்ஷ உட்பட பல பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றவுள்ளனர்.
மேலும் இங்கே தொடர்க...

தமிழ், சிங்கள எழுத்தாளர்கள் ஜனாதிபதியுடன் சந்திப்பு ஏழு கோரிக்கைகளுடன் மகஜரும் கையளிப்பு


தமிழ், சிங்கள எழுத்தாளர்கள் தாம் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு மகஜர் ஒன்றைக் கையளித்துள்ளனர்.

நேற்று முன்தினம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை அலரிமாளிகையில் நேரில் சந்தித்து தமது படைப்புக்களைக் கையளித் துள்ள இவர்கள் தமது படைப்புக்களின் சந்தைப்படுத்தல், அச்சிடலுக்கான உதவிகள் உட்பட ஏழுகோரிக்கைகள் அடங்கிய மகஜர் ஒன்றை ஜனாதிபதிக்கு கையளித்துள்ளனர்.

தமிழ், சிங்கள எழுத்தாளர் ஒன்றியத்தின் சார்பில் இந்த எழுத்தாளர்கள் ஜனாதிபதியைச் சந்தித்ததுடன் ஜனாதிபதியின் செயற்பாடுகளுக்குப் பூரண ஒத்துழைப்பு வழங்குவதாகவும் தெரிவித்துள்ளனர்.

அத்துடன் மேற்படி ஒன்றியத்தின் செயற்பாடுகளுக்காக தனியான மண்டபமொன்றையும் தமது மகஜரில் கோரியுள்ளதுடன் அமைச்சுக்கள் மூலம் தமது நூல்களைக் கொள்வனவு செய்வது சம்பந்தமாகவும் அம்மகஜரில் தெரிவித்துள்ளனர்.

இச்சந்திப்பில் தமிழ் சிங்கள எழுத்தாளர் ஒன்றியத்தின் சார்பில் நாடறிந்த எழுத்தாளர்களான தெனகம சிறிவர்தன, தெளிவத்தை ஜோசப், அந்தனி ஜீவா, திக்குவல்லை கமால், ஏ.கே. ஏ. ரஸாக், திருமதி பத்மா சோமகாந்தன், ரவி இரத்தினவேல், மொகமட் ராசிக், எஸ்.அரியநாதன், வஜிர பிரபாத் விஜேசிங்க உட்பட எழுத்தாளர்கள் பலரும் அமைச்சர்களான டளஸ் அழகப்பெரும, பந்துல குணவர்தன மற்றும் லேக்ஹவுஸ் நிறுவனத் தலைவர் பந்துல பத்மகுமாரவும் கலந்து கொண்டுள்ளனர்
மேலும் இங்கே தொடர்க...

பொதுநலவாய பாராளுமன்ற கூட்டத் தொடர்: சரத் பொன்சேகா பங்குபற்ற சட்டரீதியான அங்கீகாரம் வேண்டும்






கென்யாவில் நடைபெறவுள்ள பொதுந லவாய பாராளுமன்ற அமைப்பின் கூட்டத் தொடரில் பாராளுமன்ற உறுப்பி னர் சரத் பொன்சேகா பங்குபற்றுவதாயின் சட்ட ரீதியான அங்கீகாரத்தை பெறவேண்டும் என்று தேசிய பாதுகாப்புக்கான பேச்சாளர், தகவல் ஊடகத்துறை அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.

தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையத்தில் நேற்றுக்காலை நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் அமைச்சர் மேலும் குறிப்பிடுகையில்:- பொதுநலவாய பாராளுமன்ற அமைப்பின் மாநாட்டில் கலந்துகொள்வதற்காக சரத் பொன்சேகா எம்.பியின் பெயர் சிபாரிசு செய்யப்பட்டுள்ளது. பாராளுமன்ற உறுப்பினர் என்ற வகையில் அது அவருக்குரிய வரப்பிரசாதமாகும்.

எனினும், பொன்சேகா பல்வேறு குற்றச்சாட்டு தொடர்பில் பிணையில் செல்ல அனுமதிக்கப்படாது, தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள சந்தேக நபராவார். அந்த அடிப்படையில் அவர் நீதிமன்ற அங்கீகாரம் பெற்றே செல்ல முடியும் என்றார்.

பாராளுமன்ற வரப்பிரசாதத்திற்கு அமைய அங்கீகாரம் அவருக்கு வழங்கப் பட்டாலும் நாட்டின் சட்ட விதிமுறைகளை ஒருபோதும் மீற முடியாது. அவ்வாறு செல்ல தேவை யாயின் சட்ட விதிமுறை களை பயன்படுத்த வேண்டும். அதற்கான சுதந்திரம் அவருக்கு உண்டு என்றும் தெரிவித்தார்.

தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையத்தின் பணிப்பாளர் நாயகம் லக்ஷ்மன் ஹுலுகல்லே, இராணுவப் பேச்சாளர் மேஜர் ஜெனரல் பிரசாத் சமரசிங்க, கடற்படைப் பேச்சாளர் கெப்டன் அதுல செனரத், விமானப் படைப் பேச்சாளர் குறூப் கெப்டன் ஜனக நாணயக்கார மற்றும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பொலிஸ் அத்தியடசகர் பிரிஷாந்த ஜயகொடி ஆகியோர் கலந்து கொண்டனர்.
மேலும் இங்கே தொடர்க...

இருபது வருடங்களின் பின்னர் முல்லை. அபிவிருத்தி குழுக் கூட்டம் மாவட்ட துரித அபிவிருத்திக்கு 6 குழுக்கள் நியமனம்



முல்லைத்தீவு மாவட்டத்தில் அரசாங்கம் முன்னெடுத்து வரும் அபிவிருத்திப் பணிகளை துரிதப்படுத்தும் பொருட்டு தலா ஐவர் அடங்கிய ஆறு முக்கிய குழுக்கள் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் நியமிக்கப்பட்டுள்ளன.



இதேவேளை, செப்டெம்பர் மாதத்தில் முன்னெடுக்கவுள்ள அடுத்த போகத்தின்போது முல்லைத்தீவு மாவட்டத்தின் 25 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்களில் பயிர் செய்கைகளை மேற்கொள்ளவும், 9620 ஏக்கர் நிலப்பரப்பில் உப உணவு பயிர்ச் செய்கைகளை மேற்கொள்ளவும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக வட மாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜி.ஏ. சந்திரசிறி தினகரனுக்குத் தெரிவித்தார்.

முல்லைத்தீவு மாவட்டத்தின் அபிவிருத்திக் குழு கூட்டம் வன்னி மாவட்ட எம்.பி.யும், கைத்தொழில் வாணிபத் துறை அமைச்சருமான ரிஷாத் பதியுத்தீன், வட மாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜி.ஏ. சந்திரசிறி ஆகியோரின் கூட்டுத் தலைமையில் நேற்றுக் காலை முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.

சுமார் 20 வருடங்களுக்கு பிறகு முல்லைத்தீவு மாவட்டத்தின் அபிவிருத்திக் குழுக்கூட்டம் நேற்றைய தினம் நடைபெற்றதாக தெரிவித்த அமைச்சர் ரிஷாத் பதியுத்தீன், பல்வேறு முக்கிய விடயங்கள் தொடர்பாக விரிவாக ஆராயப்பட்ட தாகவும் குறிப்பிட்டார்.

நேற்று நடைபெற்ற இந்த முதலாவது அபிவிருத்திக் குழு கூட்டத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், சிவசக்தி ஆனந்தன், ஹுனைஸ் பாரூக் எம்.பி., வட மாகாண பிரதம செயலாளர், முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி இமெல்டா சுகுமார், இராணுவ உயர் அதிகாரிகள் உட்பட அரசாங்க அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர்.

வட மாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜி.ஏ. சந்திரசிறி இந்த கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்கள் தொடர்பாக மேலும் தகவல் தருகையில்,

திட்டமிடல், வீடமைப்பு, மீன்பிடி, உள்ளூராட்சி, நீர், மின்சாரம், உட்கட்டமைப்பு, வீதி அபிவிருத்தி மற்றும் விவசாயம் ஆகிய துறைகள் உள்ளடங்கலாகவே ஆறு குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன.

இது தவிர, கல்வி, சுகாதாரம், போக்குவரத்து, பனை அபிவிருத்தி மற்றும் பல்வேறு முக்கிய விடயங்கள் தொடர்பாகவும் விரிவாக ஆராயப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் தலைமையில் பிரதேச செயலாளர்கள் உள்ளடங்கியதாக மாவட்ட திட்டமிடல் குழு நியமிக்கப்பட்டுள்ளது.

துரிதமாக மீளப்பெறல் திட்டம், நீண்டகால அவிவிருத்தி திட்டம், வருடாந்த அபிவிருத்தி திட்டம் தொடர்பாக ஆராய்ந்து அதற்கான நடவடிக்கைகள் தொடர்பான அறிக்கைகளை இந்தக் குழு சமர்ப்பிக்கவுள்ளது என்று குறிப்பிட்டார்.

விவசாய அபிவிருத்தி திட்டத்தின் கீழ் 25 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பில் பயிர்ச் செய்கைகளை மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது. தற்போது 5000 ஏக்கர் காணியில் பயிர்ச் செய்கை மேற்கொள்ளப்பட்டுள்ள என்றார்.

விவசாய அபிவிருத்தி திட்டத்தின் கீழ் 2 ஏக்கர் நிலப்பரப்பை அபிவிருத்தி செய்ய தலா பத்தாயிரம் ரூபா வீதம் அரசாங்கம் வழங்க தீர்மானித்துள்ளதுடன், தலா ஒரு ஏக்கர் நிலப்பரப்பிற்கு உலக உணவுத் திட்டத்தின் கீழ் மூன்று புசல் நெல்கதிர் வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது என்றும் குறிப்பிட்டார்.

இந்த மாவட்டத்திலுள்ள மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் பொருட்டு 35 ஆயிரம் கோழிக் குஞ்சுகளை வழங்கவும் திட்டமிடப்பட்டுள்ளது என்றார். இதேவேளை, முல்லைத்தீவு மாவட்டத்தில் மீளக்குடியமர்த்தப்பட்டு வரும் மக்களின் நலனை கருத்திற்கொண்டு 3277 வீடுகள் அரசாங்கத்தினால் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ளதுடன் 2100 வீடுகள் மீள் நிர்மாணிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் ரிஷாத் பதியுத்தீன் தெரிவித்தார்.

முல்லை மாவட்டத்திலுள்ள அதிகமான பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன் 60 வீதமான மாணவர்களின் வருகையும், 80 வீதமான ஆசிரியர்களின் வருகையும் காணப்படுவதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார். இதேவேளை வவுனியா மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டம் நேற்று மாலை இடம்பெற்றது.
மேலும் இங்கே தொடர்க...