1 மே, 2011

இலங்கையில் புதிய முதலீடுகளை மேற்கொள்ள அமெரிக்கா தயார்

கடந்த ஆண்டு ஒக்டோபர் மாதம் அமெரிக்க மற்றும் இலங்கை வர்த்தக அமைப்பினால் மேற்கொள்ளப்பட்ட சந்திப்புக்களை அடுத்து பல அமெரிக்க முதலீட்டாளர்கள் இலங்கையில் புதிய முதலீடுகளை செய்ய தயாராகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவைச் சேர்ந்த வர்த்தகர்கள் கடந்த மார்ச் மாதம் இலங்கைக்கு விஜயம் செய்திருந்தனர். இந்த விஜயத்தின் மூலம் இலங்கையின் வர்த்தக கள நிலைகளை ஆராய்ந்த வர்த்த பிரதிநிதிகள் புதிய முதலீடுகளை செய்யவுள்ளதாக கைத்தொழில் மற்றும் வாணிப அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.
மேலும் இங்கே தொடர்க...

புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் புலி உறுப்பினர்கள் 500 பேரை வெசாக் பண்டிகையின் போது விடுதலை

புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் புலி உறுப்பினர்கள் 500 பேரை வெசாக் பண்டிகையின் போது சமூக வாழ்வில் இணைக்கப்படவுள்ளதாக புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலை மறுசீரமைப்பு அமைச்சின் செயலாளர் ஏ. திசானாயக்க தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கடுயில், இறுதிக் கட்ட யுத்தத்தின் போது 11ஆயிரத்து 898 முன்னாள் புலி உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டனர். இவர்களில் 6ஆயிரத்து 528 பேர் இதுவரையில் புனர்வாழ்வளிக்கப்பட்டு சமூக வாழ்வில் இணைக்கப்பட்டுள்ளனர் என்றார்.
மேலும் இங்கே தொடர்க...

லிபியாவில் நேட்டோ படைகள் கடும் தாக்குதல்: கடாபியின் இளையன் மகன், 3 பேரக்குழந்தைகள் பலி

லிபியாவின் மீது நேட்டோ படைகள் நடத்திவரும் விமானத்தாக்குதலில் அந்நாட்டு ஜனாதிபதி கடாபியின் இளையமகனான சயிப் அல் அராப் கடாபி மற்றும் கடாபியின் பேரக்குழந்தைகள் 3 பேர் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இத்தகவலை அந்நாட்டு அரசின் செய்தி தொடர்பாளர் மூஸா இப்ராஹிம் உறுதி செய்துள்ளார்.

இதேவேளை கடாயின் இளையமகன் கொல்லப்பட்டது குறித்து நேட்டோ படைகள் உறுதியான தகவல்கள் தெரிவிக்கவில்லை.

திரிபோலி நகரில் வசித்து வந்த கடாபியின் இளையமகனின் வீட்டை நேட்டோ படைகள் தாக்கியபோது கடாபியும் அவரது மனைவியும் அங்கேயே இருந்துள்ளனர்.

எனினும் அவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர்பிழைத்ததாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடாபியின் இளையமகனான சயிப் அல் அராப் கடாபி (29) ஜேர்மனியில் கல்விகற்றவர் என்பது குறிபிடத்தக்கது
மேலும் இங்கே தொடர்க...

இலங்கை உள்விவகாரங்களில் சர்வதேசம் தலையிட தேவை இல்லை: சீனா

இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள பிரச்சினைகளை அந்த நாடும் இலங்கை மக்களுமே கையாள வேண்டும். இதனை விடுத்து இந்த விடயங்களில் சர்வதேசம் தலையிடக் கூடாது சீனா இன்று தெரிவித்துள்ளது.

இலங்கையில் இடம்பெற்ற இறுதிக் கட்ட யுத்தத்தில் அரசினால் இழைக்கப்பட்டதாக கூறம் யுத்தக் குற்றங்கள் தொடர்பான ஐக்கிய நாடுகள் சபை நிபுணர் குழுவின் அறிக்கை குறித்துத் கருத்துத் தெரிவிக்கையிலேயே சீன வெளிவிவகார அமைச்சின் பேச்சாளரான ஹொங் லீ இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து கருத்துத் தெரிவித்த அவர், ஐ.நா. நிபுணர் குழு அறிக்கையை சீனா முழுமையாக அறிந்துள்ளது. இதேவேளை, இலங்கை அரசாங்கம் உள்ளுரில் ஆணைக் குழு ஒன்றை நியமித்து விசாரணைகளை உள்ளுர் மட்டத்தில் நடத்தி வருகிறது.

இந்த விடயங்களைச் இலங்கை அரசாங்கமும் அந்த நாட்டு மக்களும் கையாண்டு தீர்த்துக் கொள்வர் என நாம் நம்புகிறோம். ஆகவே, சர்வதேசம் இந்தப் பிரச்சினைகளில் தலையிடாது இலங்கையின் அபிவிருத்திக்குத் தேவையான பங்களிப்பை வழங்க வேண்டும். என அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் இங்கே தொடர்க...

தமிழ் அரசியல் கைதியின் உண்ணாவிரதம் 6 ஆவது நாளாகவும் தொடர்கின்றது


புதிய மெகஸின் சிறைச்சாலையில் தனது விடுதலையை வலியுறுத்தி உண்ணாவிரதம் இருந்துவரும் அஞ்சலோவின் போராட்டம் இன்று 6 ஆவது நாளாகவும் தொடர்கின்றது.

உடல்நிலை தளர்வடைந்த நிலையிலும் எதுவித ஆகாரமும் இன்றி தனது போராட்டத்தில் உறுதியாக இருப்பதாகவும் நீதி அமைச்சர் அல்லது சட்டமா அதிபர் தன்னை நேரில் வந்து சந்தித்து தனது விடுதலை தொடர்பான கோரிக்கையை ஆராயவேண்டும் என தாம் விரும்புவதாகவும் அஞ்சலோ தெரிவித்துள்ளார்.

நேற்றைய தினம் இவரது உண்ணாவிரத போராட்டத்தை பலாத்காரமாக முடிவுக்கு கொண்டுவர அதிகாரிகள் முயற்சித்த போதும் கைதிகளின் எதிர்ப்பை அடுத்து அது கைவிடப்பட்டது.
மேலும் இங்கே தொடர்க...

மே தினத்தை முன்னிட்டு கொழும்பில் மூடப்படும் வீதிகள்



மே தின ஊர்வலத்தை முன்னிட்டு கொழும்பின் சில வீதிகள் மூடப்படவுள்ளன எனப் போக்குவரத்து பொலிஸ் பிரிவு தெரிவித்துள்ளது.

இதற்கமைய எவ்.ஆர். சேனநாயக்க மாவத்தை கன்னங்கர வீதிச் சமிக்ஞை சந்தியில் இருந்து தர்மபால மாவத்தை வரை மூடப்படவுள்ளது. அத்துடன் கிறீன் பாத் ஹோர்ட்டன் சுற்று வட்டத்தில் இருந்து பொது நூலகசாலை சுற்று வட்டம் வரையும், பேஸ் லைன் வீதி தெமட்டகொடை சந்தியில் இருந்து பொரளை சந்தி வரையும், பார்க் வீதி பார்க் வீதியில் இருந்து இசிபத்தன சந்திவரையும் மூடப் படும்.

அனைத்து மே தின ஊர்வலங்களும் இடம்பெறும் வேளையில், அந்தந்த வீதிகளில் இருந்து ஊர்வலங்கள் சென்று நிறைவடையும் வரை குறித்த வீதிகள் மூடப்பட்டிருக்குமென்றும் தெரிவித்துள்ளது.
மேலும் இங்கே தொடர்க...

சர்வதேச விசாரணைக்குப் போதுமான அதாரங்கள் நிபுணர் குழு அறிக்கையில் உள்ளது:ஐ.நா முன்னாள் பேச்சாளர்



சர்வதேச விசாரணைகளை முன்னெடுப்பதற்குத் தேவையான அனைத்துத் தகவல்களும் ஆதாரங்களும் ஐ.நா. நிபுணர் குழு அறிக்கையில் உள்ளன. எனவே எவ்வித நடவடிக்கைகளையும் மேற்கொள்ளாதிருப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது. இவ்வாறு இலங்கைக்கான ஐ.நா.வின் முன்னாள் பேச்சாளர் கோர்டன் வைஸ் தெரிவித்துள்ளார்.எதையுமே முன்னெடுக்காது இருந்தவாறு, சர்வதேச சட்டங்களிலும் நியமங்களிலும் நாம் நம்பிக்கை கொண்டுள்ளோம் என்று கூறுவது என்ன நியாயம் எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

நேர்த்தியாக எழுதப்பட்ட, மிகத் தெளிவான, தீர்மானமான அறிக்கையினை நிபுணர்கள் குழு உருவாக்கியுள்ளது. சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தால், ஒரு சர்வதேச விசாரணையை முன்னெடுப்பதற்கு ஏதுவான முழுமையான நம்பகத்தன்மை கொண்டதாக இந்த அறிக்கை அமைந்துள்ளது என நோர்வே யின் "அக்சிடீடூஙீச்ஙூசிடீடூ' நாளிதழுக்கு வழங் கிய செவ்வியிலேயே கோர்டன் வைஸ் இதனைத் தெரிவித்துள்ளார். சர்வதேச விசாரணையை முன்னெடுக்கும் அதிகாரம் ஐக்கிய நாடுகள் சபைக்கு இல்லையெனில், சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் நேரடியாக அதற்கான முனைப்பினை மேற்கொள்ள வேண்டுமெனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக "யுகவநக்ஷீ‘ழளவநக்ஷீ' நாளிதழில் வெளிவந்துள்ள கட்டுரையில்,

இலங்கை அரசாங்கம் போர்க்குற்றங்கள் புரிந்திருப்பதில் எவ்வித சந்தேகங்களும் இல்லை. 2009இன் போரின் இறுதி மாதங்களில் நடந்தேறியவை தொடர்பான நம்பகமான தகவல்களை ஐ.நா. நிபுணர் குழு அறிக்கை கொண்டிருப்பதாக இறுதிக்கட்டப் போர் நடைபெற்ற காலம் வரை இலங்கைக்கான ஐ.நா. பேச்சாளராக கடமையாற்றிய கோர்டன் வைஸ் தெரிவித்துள்ளார்.

பத்து மாதங்களாக ஆவணங்கள் பெறப்பட்டும் சாட்சிகளுடனான நேர்காணல்கள் மூலமாகவும் பெறப்பட்ட ஆதாரங்களைக் கொண்டு ஐ.நா. நிபுணர் குழுவின் அறிக்கை உருவாக்கப்பட்டுள்ளது. ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ மூனால் நியமிக்கப்பட்ட மூன்று சுயாதீனமான நீதித்துறை நிபுணர்களினால் அறிக்கை உருவாக்கப்பட்டுள்ளது. இலங்கை அரசாங்கப் படைகளுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் எதிரான கடுமையான குற்றச்சாட்டுகள் அதில் முன்வைக்கப்பட்டுள்ளன. ஆயினும் பெருமளவு குற்றச் சாட்டுக்கள் வெற்றிபெற்ற தரப்பான அரசாங்கத் தரப்பை நோக்கியே முன்வைக்கப்பட்டுள்ளன. இறுதிக்கட்டப் போரில் அரசாங்கப் படைகளின் தாக்குதல்களினாலேயே பெருமெண்ணிக்கையிலான பொதுமக்கள் கொல்லப்பட்டனர் என அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

3 லட்சத்து 30 ஆயிரம் வரையான தமிழர்கள் வட பிரதேசத்தின் குறுகிய நிலப்பரப்பு ஒன்றுக்குள் ஒதுங்கியிருக்க, அரசாங்கப் படைகள் அவர்கள் மீது கனரக ஆட்லறிகள் மூலம் தாக்குதல்களை நடத்தியது. அத்தோடு தற்காலிக மருத்துவமனைகள் மற்றும் உணவு விநியோகப் பாதைகள் மீதும் அரசாங்கப் படைகள் தாக்குதல்களை நடத்தியுள்ளன என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசாங்கப் படைகள் பொது மக்களையும் விடுதலைப் புலிப் போராளிகளையும் படுகொலை செய்துள்ளன. கைது செய்யப்பட்ட பெண்கள் படையினரால் பாலியல் வல்லுறவுக்கும் உட்படுத்தப்பட்டுள்ளனர்.

ஐ.நா. நிபுணர் குழு அறிக்கையில் முன்வைக்கப்பட்டிருக்கும் குற்றச்சாட்டுக்களை முற்றாக மறுத்துள்ள இலங்கை அரசாங்கம் அதனைக் கண்டித்தும் உள்ளது. விடுதலைப் புலிகளின் தலைமை மீதும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன. போர்ப் பிரதேசத்திலிருந்து மக்களை வெளியேற விடாது புலிகள் தடுத்துள்ளனர். வெளியேற முயற்சித்த மக்கள் மீது அவர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.

நேர்த்தியாக எழுதப்பட்ட மிகத் தெளிவான தீர்மானமான அறிக்கையை நிபுணர்கள் குழு உருவாக்கியுள்ளது. இறுதிக் கட்டப் போரில் நடந்தேறியவை தொடர்பாக நான் எவ்வாறான தீர்மானத்தைக் கொண்டிருந்தேனோ, அதே தீர்மானத்திற்கே நிபுணர் குழுவும் வந்துள்ளது. சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தால், ஒரு சர்வதேச விசாரணையை முன்னெடுப்பதற்கு ஏதுவான முழுமையான நம்பகத்தன்மை கொண்டதாக இந்த அறிக்கை அமைந்துள்ளது என கோர்டன் வைஸ் தெரிவித்துள்ளார்.

இதேவேளை இலங்கைத் தீவின் இன முரண்பாடு தொடர்பான தனது நூலை கோர்டன் வைஸ் விரைவில் வெளியிட உள்ளார். இறுதிக் கட்டப் போரில் உண்மையில் என்ன நடந்தது என்பதை மறைப்பதில் இலங்கை அரசாங்கம் கடந்த இரண்டு ஆண்டுகள் வெற்றி கண்டுள்ளது. எனவே, தீர்மானமான நடவடிக்கைகளை இப்பொழுது மேற்கொண்டாக வேண்டும். எமக்குத் தேவையான தகவல்களையும் ஆதாரங்களையும் இந்த அறிக்கை தருகின்றது. எதையுமே மேற்கொள்ளாதிருப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. எதையுமே முன்னெடுக்காது இருந்தவாறு, சர்வதேச சட்டங்களிலும் நியமங்களிலும் நாம் நம்பிக்கை கொண்டுள்ளோம் என்று கூறுவது எவ்வாறு நியாயமானதாக இருக்கும் என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும் இங்கே தொடர்க...

நிபுணர் குழு அறிக்கைக்கு தமிழ்க் கூட்டமைப்பு ஆதரவு தெரிவித்ததால் அரச தரப்பு அதிருப்தி



ஆதாரமற்ற ஐ.நா. நிபுணர் குழுவின் அறிக்கையை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வரவேற்று ஆதரித்து அறிக்கை வெளியிட்டது தொடர்பாக அரசாங்கத் தரப்பினர் அதிருப் தியை வெளியிட்டுள்ளனர்.

அரசாங்கத் தரப்புக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையில் நடைபெற்ற பேச்சுவார்த்தை கடந்த 29 ஆம் திகதி வெள்ளிக்கிழமை நடைபெற்ற போதே அரச தரப்பினர் தமது கடுமையான ஆட்சேபனையை தெரிவித்தனர். அத்துடன் இந்த அறிக்கை வெளிநாட்டு தூதுவர்களின் விருப்பப்படி வெளியிடப்பட்டதாகவும் அரச தரப்பினர் பேச்சு வார்த்தையின் போது குற்றம் தாம் அன்று நாடாளுமன்றத்தில் கூறியதையே ஐ.நா. நிபுணர் குழு அறிக்கையாக வெளியிட்டுள்ளது என சுட்டிக்காட்டியதுடன் எவரது தூண்டுகோலுமோ அல்லது ஆலோசனையோ இவ்வாறான அறிக்கையை வெளியிடுவதற்கு தேவையில்லை என்று சுட்டிக்காட்டியதுடன் எமது மக்களின் சார்பில் பேசுவதற்கு எமக்கு உள்ள உரிமையின் அடிப்படையிலும், தார்மிக கடமைகளின் அடிப்படையிலுமே ஐ.நா. நிபுணர் குழு தொடர்பாக அறிக்கை வெளியிட்டதாக கூட்டமைப்பினர் தெரிவித்துள்ளனர்.

அரச தரப்புக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கும் இடையிலான பேச்சு வார்த்தையின் போது அரசாங்க தரப்பில் இதுவரை கலந்து கொண்ட, முன்னாள் பிரதமரும் தற்போதைய சிரேஷ்ட அமைச்சருமான ரட்ணசிறி விக்கிரம நாயக்காவுக்குப் பதிலாக பொது ஜன ஐக்கிய முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர் ரஜீவ விஜேசிங்க கலந்து கொள்வார் என அரசாங்க தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேற்படி பேச்சுவார்த்தையில் அதிகாரப் பகிர்வு தொடர்பாக பேசுவதற்கு அரச தரப்பினர் இணங்கியதாகவும், அடுத்த கட்ட பேச்சுவார்த்தையின் போது இது குறித்து ஆராய்வதென தீர்மானிக்கப்பட்டதாக அறிய முடிகிறது.

அதிகார பரவலாக்கல் குறித்த விடயங்களை முன் வைக்குமாறு அரசாங்க தரப்பு கூட்டமைப்பினரை கேட்டுக் கொண்டுள்ளது. அதிகாரப் பகிர்வு தொடர்பாக ஏற்கனவே தாம் ஒரு பட்டியலை அரசாங்க தரப்பினரிடம் கையளித்திருப்பதால் புதிதாக பட்டியலில் கொடுக்க தேவையில்லை என கூட்டமைப்பின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேவேளையில் ஐ.நா. நிபுணர் குழுவின் அறிக்கைக்கு ஆதரவு தெரிவித்து கூட்டமைப்பினர் விடுத்த அறிக்கையால் சிங்கள மக்களிடம் கூட்டமைப்பு குறித்து நம்பிக்கையீனங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் கூட்டமைப்பினருடனான பேச்சுவார்த்தையை முன்னெடுப்பதில் தமக்கு சிக்கல்கள் தோன்றியிருப்பதாகவும் அரசாங்க தரப்பினர் தெரிவித்துள்ளனர்.
மேலும் இங்கே தொடர்க...

அரசியல் பிரமுகர்களின் ஜாதகங்கள் திருட்டு




இலங்கையின் மிகப் பிரபலமான பெண் ஜோதிடர்களில் ஒருவரான நிலூகா ஏக்கநாயக்க வீட்டில் மர்ம நபர்கள் புகுந்து, அங்கிருந்த அரசியல்வாதி களின் ஜாதகங்களை திருடிச் சென்றதாக கூறப்படுகிறது. மங்கள சமரவீர தனிக்கட்சி ஆரம்பித்தபோது, அதன் பொருளாளராகவும் நிலூகா பணியாற்றியுள்ளார்.

இலங்கையின் பிரபலமான ஜோதிடராக திகழும் இவரிடம், நாட்டின் முக்கிய அரசியல் பிரமுகர்கள் பலர் ஆலோசனை கேட்டு வருவது வழக்கம்.

இந் நிலையில், அவரது வீட்டுக் கதவு உடைக்கப்பட்டு, வீட்டில் இருந்து ஜோதிடக் குறிப்புகள் மட்டும் திருடப்பட்டுள்ளன.

கட்சி வேறுபாடின்றி நிலூகா ஏக்கநாயக்க விடம் அரசியல்வாதிகள் ஜோதிட ஆலோசனை பெற்றுவருவது வழக் கம். அதன் காரணமாக முக்கியமான அரசியல்வாதிகள் பலரின் ஜாதக குறிப்புகள் அவரிடம் பாதுகாப்பாக இருந்தன.

இந் நிலையில், அவரின் வீடு உடைக்கப்பட்டு, மிகவும் பாதுகாப்பான முறையில் சேமித்து வைக்கப்பட்டிருந்த முக்கிய அரசியல்வாதிகளின் ஜாதகக் குறிப்புகள் மட்டுமே திருடப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் இங்கே தொடர்க...

பிறந்த மண்ணுக்கு ஒரு துளி வியர்வை; நாட்டைக் காக்கும் மக்கள் அரண் அனைத்து மக்களும் ஓரணியில் திகழும் மேதினம்

உலகத்தில் வாழ்கின்ற வேலை செய்யும் மக்கள் மிக கோலாகலமாக தொழிலாளர் தினத்தைக் கொண்டாடுகின்ற இந்த நேரத்தில் எனது இதயம் நிறைந்த நல்வாழ்த்துக்களைத் தெரிவிக்க வாய்ப்பு கிடைத்ததை பெரும் பாக்கியமாகக் கருதுகிறேன்.

இவ்வாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ விடுத்துள்ள மேதின செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

அதில் மேலும் தெரிவித்துள்ளதாவது,

தெற்காசிய நாடுகளுக்கிடையே சர்வதேச தொழிலாளர் அமைப்பின் உடன்பாடுகளை மிக உயர் மட்டத்தில் நடைமுறைப்படுத்திய நாடு என்ற வகையில் நாம் பெற்றுள்ள வரவேற்பை சர்வதேச தொழிலாளர் தினத்தில் பெருமையுடன் நினைவு கூருகின்றேன். அத்துடன் எமது நாட்டில் பொருளாதார வளர்ச்சியை நூற்றுக்கு எட்டு வீதம் உயர்த்துவதற்கு தமது உழைப்பை பயனுறுதி மிக்க வகையில் பயன்படுத்திய மக்களுக்கு மகத்துவம் மிக்க இந்நாளில் முதற்கண் எனது நன்றி உரித்தாகுக.

விபத்துக்களுக்குப் பலியாகின்ற ஊழியர்களுக்குச் செலுத்த வேண்டிய நட்டஈட்டுத் தொகையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அத்துடன் தொழிலாளர் நட்டஈட்டுக் கட்டளைச் சட்டமும் காலத்துகந்த வகையில் திருத்தப்பட்டுள்ளது. சிறுவர்களை உழைப்பாளிகளாக ஈடுபடுத்துவதை முற்றாக ஒழிப்பதற்கு உரிய சட்டங்களும் ஒழுங்கு விதிகளும் இயற்றப்பட்டுள்ளன. நமது பெண்மணிகள் நாட்டின் உழைப்போர் செயலணியில் தீவிரமாகப் பங்கேற்றுள்ளனர். ஆகவே அவர்களின் உரிமைகள், சிறப்புரிமைகள் தொடர்பாக சட்டங்களைப் பலப்படுத்த வேண்டியது நடைமுறைத் தேவையாகும். அது தொடர்பாக அரசு தீவிரமாகக் கவனம் செலுத்தி வருகின்றது.

இந்நாட்டில் வேலை செய்கின்ற மக்கள் எதிர்நோக்கிய மிகப் பெரிய சவால் பயங்கரவாதமாகும். பயங்கரவாதத்தை தோல்வியுறச் செய்ய நாம் அடியெடுத்து வைத்தபோது இந்நாட்டில் வேலை செய்கின்ற மக்களிமிடருந்து கிடைத்த ஒத்துழைப்பு அதுபற்றி நமது நாட்டு தொழிலாளர்களிடம் இருந்த அறிவார்ந்த தன்மையை எடுத்துக் காட்டியது. பயங்கரவாதத்துக்கு எதிராகப் போராடுகின்ற போது வேலை நிறுத்தங்களில் அல்லது எவ்வித நாசகார செயல்களிலும் நமது நாட்டு தொழிலாளர்கள் ஈடுபடவில்லை. பயங்கரவாதத்தை தோல்வியுறச் செய்யும் பொருட்டு நமது நாட்டில் மக்கள் காட்டிய அர்ப்பணிப்பு பொறுமை என்பவை உலக தொழிலாளர்களுக்கே மாபெரும் கெளரவமாகும்.

நாம் தோல்வியுறச் செய்த பயங்கரவாதத்திற்கு உயிரூட்டுகின்ற சதி உலகத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இது பாரிய அர்ப்பணிப்புடனும் பொறுமையுடனும் பயங்கரவாதத்தை தோல்வியுறச் செய்து மக்கள் பெற்ற வெற்றியைப் பறித்துக் கொள்ளும் செயலாகும். அந்த வெற்றியைப் பாதுகாத்துக் கொள்வதற்காக அன்று வேலை செய்கின்ற மக்கள் ஒற்றுமையாக ஏந்திய ஆயுதம் பெரும் பொறுப்புடன் ஏந்தப்பட்டது என்பதை நான் அறிவேன்.

கடந்த காலத்திலிருந்து தொழிற் சங்கங்களும் அதன் தலைவர்களும் துணிச்சலுடன் பெற்றுக் கொண்ட ஊழியர்களின் உரிமைகளையும் தொழிற் சங்கங்களின் வெற்றியையும் காத்தக் கொள்ளுமுகமாக “பிறந்த மண்ணுக்கு ஒரு துளி வியர்வை, நாட்டைக் காக்கும் மக்கள் கோட்டை" என்ற தொனிப் பொருளுடன் இம்முறை அனைத்து வேலை செய்யும் மக்களும் ஒன்று சேர்வார்கள் என நான் நம்புகின்றேன்.

வேலை செய்கின்ற மக்களுக்கும் தொழிற் சங்க இயக்கங்களுக்கும் வெற்றி மேல் வெற்றி கிட்டுக எனப் பிரார்த்திக்கின்றேன் என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும் இங்கே தொடர்க...

இன, மத, மொழி, கட்சி, பிரதேச வேறுபாடுகளை மறந்து நாட்டின் இறைமையை பாதுகாக்க

இன, மத, மொழி, கட்சி, பிரதேச வேறுபாடுகளை மறந்து
நாட்டின் இறைமையை பாதுகாக்க ஒன்றிணையும் மக்கள் பேரணி
இன்று கொழும்பில் கூடும் மக்கள் ஜனத்திரள்
சர்ச்சைக்குரிய தருஸ்மன் அறிக்கைக்கு எதிர்ப்பு


சர்வதேச அழுத்தங்கள், சதி முயற்சிகளை முறியடிக்கும் வகையில் இலங்கையின் இறைமையை பாதுகாக்கும் விதத்தில் தொழிலாளர் வர்க்கத்தினருடன் இனம், மதம், மொழி, கட்சி வேறுபாடின்றி அனைத்து மக்களும் ஓரணி திரளும் மேதினமாக இன்றைய மே தின ஊர்வலங்கள் நடைபெறுகின்றன.

போர்க்குற்றவாளியாக இலங்கையை சித்தரிக்க முயலும் சர்ச்சைக்குரிய தருஸ்மன் அறிக்கையை கண்டித்தும் இலங்கையின் நற்பெயருக்கு களங்கத்தை ஏற்படுத்தவும் முயலும் சர்வதேச சதி முயற்சிகளை கண்டித்தும் தொழிலாளர் வர்க்கத்தினருடன் மக்கள் இன்று அணி திரள்கின்றனர்.

கொழும்பிலும், மலையகத்திலும் வெவ்வேறு பகுதிகளிலும் பல்வேறு அரசியல் கட்சிகள் தொழிற்சங்கங்கள் மேதின ஊர்வலங் களையும் மேதின கூட்டங்களையும் நடத்தினாலும் சர்வதேச சதி முயற்சிகளிலிருந்து இலங்கையின் இறைமையை பாது காப்பதை பிரதான நோக்காகக் கொண்டதாகவே அமையவுள்ளன.

தொழிலாளர் வர்த்தகத்தினரின் உரிமைகளை வென்றெடுக்கும் நோக்கத்தில் நடைபெறும் மே தின ஊர்வலங்கள் வரலாற்றில் முதல் முறையாக இலங்கையிலுள்ள அனைத்து மக்களும் அணி திரளும் மேதினமாக நடைபெறுகிறது.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் மேதின ஊர்வலம் வடக்கு, கிழக்கு, மலையகம் உட்பட லட்சக்கணக்கான மக்களின் பங்களிப்புடன் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் இன்று வரலாற்றுச் சிறப்புமிக்க மேதினமாக கொழும்பு மாநகர சபை முன்றலில் நடைபெறுகிறது.

“பிறந்த மண்ணுக்கு ஒரு துளி வியர்வை, நாட்டை காப்பதற்கு மக்கள் அரண்" என்ற தொனிப்பொருளுக்கு அமைய மக்கள் ஓரணியாக திகழ்கின்றமை வரலாற்றில் ஒரு எடுத்துக் காட்டாக அமையும் என அரசியல் அவதானிகள் தெரிவித்தனர்.

பொரளை கெம்பல் மைதானத்தில் ஆரம்பமாகும் ஐக்கிய மே தின ஊர்வலம், பொரளை சந்தி, வோர்ட் பிளேஸ், சொய்சா சுற்றுவட்டம், அலெக்ஸாண்டர் பிளேஸ், ஊடாக கொழும்பு மாநகர சபை மைதானத்தை வந்தடையும்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் ஐக்கிய மே தின கூட்டம் ஆரம்பமாகும். சிரேஷ்ட அமைச்சர்கள், பிரதியமைச்சர்கள், எம். பிக்கள், ஆகியோரும், தொழிற்சங்க வாதிகள், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் அங்கம் வகிக்கும் கட்சிப் பிரதிநிதிகள் பலர் இக் கூட்டத்தில் கலந்து கொள்ளவுள்ளனர்.

இதேவேளை இன்று இடம்பெறும் மே தினக் கூட்டத்தில் முஸ்லிம்கள் அனைவரும் பங்கேற்று அரசாங்கத்துக்கு முழு ஆதரவை வழங்குவதுடன் ஐ. நா. நிபுணர் குழுவின் அறிக்கைக்கு தமது ஒட்டு மொத்தமான எதிர்ப்பை வெளிக்காட்டுமாறு அகில இலங்கை ஜம் இய்யதுல் உலமா வேண்டுகோள் விடுத்துள்ளது.
மேலும் இங்கே தொடர்க...

தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகள், உரிமைகள் குறித்து ஈ.பி.டி.பி- அரச தரப்பு பேச்சுவார்த்தை

தமிழ் பேசும் மக்களின் அரசியல் அபிலாசைகள் மற்றும் அவர்கள் முகம் கொடுத்து வரும் வாழ்வியல் உரிமைகள் குறித்து ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியினருக்கும் அரச உயர் மட்ட குழுவினருக்கும் இடையிலான பேச்சு வார்த்தை நேற்று நடைபெற்றது.

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா தலைமையிலான குழுவினருக்கும் பேராசியர் ஜி. எல். பீரிஸ் தலைமையிலான அரச உயர் மட்ட குழுவினருக்கும் இடையில் ஜனாதிபதி காரியாலயத்தில் நடைபெற்ற இவ் விஷேட பேச்சு வார்த்தையின்போது ஈ.பி.டி.பி தரப்பால் தமிழ் மக்களின் பிரச்சினைகள் குறித்து எடுத்து விளக்கப்பட்டது.

நிரந்தர அரசியல் தீர்வு கிடைக்கும் வரை வடக்கு கிழக்கில் தமிழ் பேசும் மக்களின் பாரம்பரிய வாழ்விடங்களில் எதுவித குடியேற்ற மாற்றங்களும்; நிகழாது பாதுகாத்தல்.

நீண்ட காலமாக வடக்கு கிழக்கில் காணிகள் பகிர்ந்தளிக்கப்படாமல் இருக்கும் தமிழ் மக்களுக்கான காணிகளை பகிர்ந்தளித்தல்.

இடம்பெயர்ந்து துயரப்பட்ட தமிழ் மக்களுக்கென மேற்கொள்ளப்பட்டுவரும்; மீள் குடியேற்றங்களையும் வாழ்வாதார வசதிகளையும் மேலும் அர்த்தமுள்ளதாக உருவாக்கி கொடுத்தல்.

கடந்த கால யுத்தம் மற்றும் ஏனைய காரணங்களினால் வேலையற்றிருக்கும் அனைவருக்கும் வேலை வாய்ப்புகளை வழங்கும் முகமாக வடக்கு கிழக்கில் பல்வேறு தொழிற்றுறைகளை ஊக்குவித்தல்.

பொலிஸ் மற்றும் பாதுகாப்பு படைகளில் தமிழ் பேசும் இளைஞர் யுவதிகளை கணிசமான அளவு இணைத்தல்.

யுத்தம் முடிவிற்கு கொண்டுவரப்பட்ட காரணத்தினால் அவசர கால சட்டத்தை விரைவில் நீக்குவதற்கான கால வரையறை ஒன்றை வகுத்து செயற்படல். தடுத்து வைக்கப்பட்டிருப்போரின் பெயர், விபரங்களை அவர்களது பெற்றோர் அல்லது உறவினர்களுக்கு உடன் தெரியப்படுத்துவதோடு அவர்களை விடுவிப்பதற்கான நடவடிக்கையினை துரிதப்படுத்துதல். நீண்டகாலமாக அரசியல் காரணங்களுக்காக சிறைகளில் இருக்கும் அனைவரையும் விடுதலை செய்வதற்கான நம்பிக்கை தரும் நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல்.

அரச திணைக்களங்கள் மற்றும் நிறுவனங்களில் உள்ள வெற்றிடங்களை நிரப்புவதன் மூலம் வேலை வாய்ப்புகளை வழங்குவதோடு சிவில் நிர்வாகத்தை மேலும் சிறப்புற இயங்க வைத்தல். இனங்களுக்கிடையில் தேசிய நல்லிணக்கம் என்பது பரஸ்பரம் ஏற்படும் வகையிலான ஏற்பாடுகளை உரிய முறையில் முன்னெடுத்தல்.

புலம்பெயர்ந்து வாழும் தமிழ் மக்கள் தமது தாயகத்தில் முதலீடுகளை மேற்கொள்ளவதற்கும், கலாசார உறவுகளை பேணவதற்கும் உரிய வசதிகளை உருவாக்கும் நோக்கிலான நம்பிக்கை தரும் ஏற்பாடுகளை முன்னெடுத்தல்.

அரச கரும மொழிக்கொள்கையின் அடிப்படையில் தமிழ் மொழி அமுலாக்கலை முழுமையாக நடைமுறைப்படுத்தும் வகையில் பொலிஸ் நி;லையங்களில் தமிழில் முறைப்பாடு பதிவு செய்வதற்குரிய நடவடிக்கைகளை எடுத்தல்.

நீதித்துறை மற்றும் அரசாங்க அலகுகளுடன் தமிழில் தொடர்பு கொள்ளுவதற்கு வசதியாக, வடக்கு கிழக்கிற்கு வெளியே செறிந்து வாழும் தமிழ் பேசும் மக்களின் வசதி கருதி அரச நிறுவனங்களில் மொழிபெயர்ப்பாளர்களை நியமித்தல்.

தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை பூர்த்தி செய்யும் வகையில் இலங்கை-இந்திய ஒப்பந்தத்தின் பிரகாரம் உருவாக்கப்பட்ட 13 வது திருத்தச்சட்டத்தை முழுமையாக அமுல் படுத்துவதில் ஆரம்பித்து அதற்கான மேலதிக அதிகாரங்களை வழங்குதல்.

மாகாண நிர்வாகத்திற்கும், மத்திய அரசிற்கும் இருக்கும் அதிகாரங்களைத் தவிர, இரண்டிற்கும் இடையில் இருக்கும் இணைப்பு பட்டியலில் உள்ள அதிகாரங்களையும் மாகாண நிர்வாகத்திற்குரிய அதிகாரங்களோடு இணைத்தல். இதன் மூலம் அதிகாரப்பகிர்வினை வழங்குதல்.

மேற்படி அதிகாரப்பகிர்வையும், சிறுபான்மை இனங்களின் உரிமைகளையும் பாதுகாப்பதற்கும், தமிழ் மக்கள் எதுவித தடைகளுமின்றி சம உரிமைகளை உரிய முறையில் அனுபவித்து சுதந்திர பிரஜைகளாக வாழ்வதற்கான ஏற்பாடக இரண்டாவது சபை ஒன்றை நிறுவுதல்.

இவைகளையே 13 வது திருத்தச்சட்டத்திற்கு மேலதிகமாக வழங்கப்பட வேண்டிய அதிகாரங்களாக நடைமுறைப்படுத்துதல்.

ஈழ மக்கள் ஜனநாயக கட்சியினரால் அரச உயர் மட்ட குழுவினரிடம் பரிந்துரைக்கப்பட்ட மேற்குறித்த விடயங்கள் யாவும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அவர்களின் மேலான கவனத்திற்கு கொண்டு செல்லப்படுவதாக தெரிவிக்கப்பட்டதோடு தொடர்ந்தும் இரு தரப்பு பேச்சு வார்த்தைகள் நடைபெறும் என்றும் தீர்மானிக்கப்பட்டது.

தமிழ் மக்கள் இலங்கையர்களாக இருக்க வேண்டும் என்பதற்காக தமிழர்கள் என்ற அடையாளத்தையோ அன்றி தமிழர்களாக இருக்க வேண்டும் என்பதற்காக இலங்கையர்கள் என்ற அடையாளத்தையோ ஒரு போதும் விட்டுக்கொடுக்க தயாரில்லை என்ற நியாயபூர்வமான எண்ணங்களையும், உணர்வுகளையும் புரிந்து கொண்டு அரசாங்கம் இக்கோரிக்கைகள் அனைத்தையும் விரைவாக நடைமுறைபடுத்த சகல வழிகளிலும் தாம் ஒத்துழைப்பு வழங்குவதாகவும் ஈ.பி.டி.பி தரப்பால் உறுதி வழங்கப்பட்டது.

தமிழ் மக்களுக்கான அரசியலுரிமை பிரச்சினையானது தீராப்பிரச்சினையாக நீண்ட காலமாக நீண்டு செல்வதற்கான காரணம் என்பது நடை முறைச்சாத்தியங்களுக்கு அப்பால் நின்று சிந்தித்ததே என்பதால் நடை முறைச்சாத்தியமான அணுகுமுறையினையே தாம் முன்வைத்திருப்தாகவும் ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் தரப்பால் எடுத்து விளக்கப்பட்டது.

தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகள் மற்றும் நடைமுறை வாழ்வியல் உரிமைகள் குறித்து பேசப்பட்ட இவ் விஷேட பேச்சு வார்த்தையில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் சார்பில் செயலாளர் நாயகமும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா, நாடாளுமன்ற உறுப்பினரும் நாடாளுமன்ற குழுக்களின் பிரதி தலைவருமான அசோக் சந்திரகுமார், கட்சியின் நிர்வாக செயலாளர் அ. இராசமாணிக்கம், அமைச்சரின் இணைப்பதிகாரி றொபின் ராஜ்குமார், அமைச்சரின் பிரத்தியேக செயலாளர் கே. தயானந்தா ஆகியோரும் அரச சார்பில் அமைச்சர்களான பேராசிரியர். ஜீ. எல்.பீரிஸ், நிமல் சிறிபால டி சில்வா, மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களான ரஜீவ விஜேசிங்க, சஜித் வாஸ் குணவர்த்தன ஆகியோரும் கலந்து கொண்டனர்.
மேலும் இங்கே தொடர்க...