6 ஏப்ரல், 2010

ஐ.ம.சு கூ.ஆதரவாளர்களுக்கும் ஐ.தே.மு .ஆதரவாளர்களுக்கு இடையில் மன்னாரில் சற்று முன்னர் மோதல்

ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் ஆதரவாளர்களுக்கும் ஐக்கிய தேசிய முன்னணியின் ஆதரவாளர்களுக்கு இடையில் மன்னார் உப்புக்குளம் கிராமத்தில் சற்று முன் மோதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

மன்னார் உப்புக் குளம் கிராமத்தில் ஆளும் கட்சியில் போட்டியிடும் அமைச்சர் ரிசாட்பதியுதீன் அலுவலகமும் சற்றுத் தொலைவில் எதிர் கட்சியில் போட்டியிடும் நூர்தின் மசூரின் காரியாலயங்களும்,உடைக்கப்பட்டுள்ளதாகவும் எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்
மேலும் இங்கே தொடர்க...

அமெரிக்கா, மெக்சிகோவில் பயங்கர நிலநடுக்கம்: கட்டிடம் இடிந்து ஒருவர் பலி





அமெரிக்கா மற்றும் மெக்சிகோ நாட்டில் நேற்று மாலை 3.40 மணிக்கு (இந்திய நேரப்படி இரவு 10.40 மணிக்கு) பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் மெக்சிகலி, அல்பிரடோ, எல்கோபெடோ ஆகிய நகரங்களில் வீடுகள், கட்டிடங்கள் குலுங்கின.

இதனால் பீதி அடைந்த மக்கள் வீடுகளை விட்டு வெளியேறினர். ரோடு களில் தஞ்சம் அடைந்தனர். இந்த நிலநடுக்கம் காரணமாக சில கட்டிடங்களின் சுவர்கள் இடிந்து விழுந்தன. பல இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.

கட்டிட இடிபாடுகளில் சிக்கி ஒருவர் உயிரிழந்தார். மேலும் தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை. இதற்கிடையே இந்த நில நடுக்கம் அமெரிக்காவில் கலிபோர்னியா, அரிசோனா மாகாணங்களிலும் நில நடுக்கம் ஏற்பட்டது.

அங்கு திஜுனா, லாஸ் ஏஞ்சல்ஸ், பாஜா நகரங்களில் மக்கள் பீதி அடைந்தனர். வீடுகளை விட்டு ஓட்டம் பிடித்தனர். அங்கும் மின்இணைப்பு மற்றும் டெலிபோன் இணைப்புகளும் துண்டானது.

அங்கு ஏற்பட்ட சேத விவரங்கள், உயிர்சேதங்கள் குறித்த தகவல்கள் வெளியிடப்படவில்லை. நில நடுக்கத்தால் மெக்சிகோவில் உள்ள மெக்சிகலி நகரில் உள்ள ஒரு ஓட்டல் சுவர்கள் மற்றும் மேல் தளங்களில் விரிசல்கள் ஏற்பட்டுள்ளன.

நிலநடுக்கத்தின்போது இந்த ஓட்டலில் தங்கியிருந்தவர்கள் அனைவரும் வெளியில் ஓடிவிட்டனர். இதனால் யாருக்கும் காயம் எதுவும் ஏற்படவில்லை. இந்நகரம் பாஜா கலிபோர்னியா அருகே உள்ளது.

தொடக்கத்தில் 6.9 ரிக்டர் அளவில் இருந்த நிலநடுக்கம் பின்னர் 7.2 ஆக பதிவானது. மெக்சிகலியின் தென் கிழக்கில் இருந்து கவுதலாப் விக்டோரியா நகரின் அருகே பூமியில் 30 மைல் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

இந்த தகவலை அமெரிக்காவின் புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மெக்சிகோவில் சுமார் 10 லட்சம் பேர் வாழ்கின்றனர். இது அமெரிக்க எல்லையில் உள்ளது.
மேலும் இங்கே தொடர்க...

சரத் பொன்சேகா நலமாக இருக்கிறார் : இராணுவப் பேச்சாளர்



ஜெனரல் சரத் பொன்சேகாவின் உடல்நிலை மோசமடைந்து வருவதாக அவருடைய பாரியார் கூறியதை முற்றாக மறுத்துள்ள இராணுவப் பேச்சாளர், சரத் பொன்சேகாவின் உடல்நிலையில் எந்தவித பாதிப்பும் இல்லை எனத் தெரிவித்துள்ளார்.

தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையத்தில் இன்று மாலை நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே இராணுவப் பேச்சாளர் இதனைக் குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

"கொழும்பு தேசிய வைத்தியசாலையைச் சேர்ந்த விசேட வைத்திய நிபுணர் ஒருவர், ஜெனரல் சரத் பொன்சேகாவின் உடல்நிலை குறித்து இன்று பரிசோதனை செய்தார். அவருடன் கடற்படையைச் சேர்ந்த விசேட வைத்தியர் ஒருவரும் மேலும் ஒரு வைத்தியரும் அங்கிருந்தனர்.

திருமதி பொன்சேகா குறிப்பிடுவதுபோல அவருடைய உடல்நிலையில் எந்தவித பாதிப்பும் இல்லை என வைத்தியர்கள் தெரிவித்தனர். இவ்வாறிருக்கையில், மக்கள் மத்தியில் வேறு விதமாகப் பிரசாரங்கள் மேற்கொள்வதைச் சம்பந்தப்பட்டவர்கள் தவிர்த்துக்கொள்ள வேண்டும்" என்றார்.

ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கு உரிய வைத்திய வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளதாக, இராணுவப் பேச்சாளர் பிரசாத் சமரசிங்க பொய் கூறுகிறார் என திருமதி பொன்சேகா இன்று காலை நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
மேலும் இங்கே தொடர்க...