31 மே, 2010

தோல்வியடைந்த முன்னாள் அமைச்சர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்களைஇல்லங்களில் இருந்து வெளியேறுமாறு எச்சரிக்கை

அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ இல்லங்களில் ,வெளியேறாது தொடர்ந்தும் அங்கு தங்கியிருக்கும் தேர்தலில் தோல்வியடைந்த முன்னாள் அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களை அங்கிருந்து வெளியேறுமாறு பொதுநிர்வாகம் மற்றும் உள்நாட்டு அலுவல்கள் அமைச்சு எச்சரிக்கை விடுத்துள்ளது.

கெப்படிகொல மாவத்தையில் உள்ள அரசாங்கத்திற்கு சொந்தமான உத்தியோபூர்வ இல்லங்களில் தங்கியிருந்த முன்னாள் அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களை தேர்தல் முடிவடைந்து இருவாரங்களுக்குள் அங்கிருந்து வெளியேறுமாறு அறிவிக்கப்பட்டிருந்த போதிலும் அவர்கள் எவரும் இதுவரை அங்கிருந்து வெளியேறவில்லை.

இந்த வீடுகளில் தங்கியிருக்கும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.எஸ்.செல்லசாமி மற்றும் துரைரட்ணசிங்கம் ஆகியோர் இம்மாதம் இறுதி வரை அங்கு தங்கியிருக்க அனுமதி கோரியிருந்தனர். வேறு எவரும் அவ்வாறான கோரிக்கைகளை விடுவிக்கவில்லை எனவும் இதன் காரணமாக அரச உடமைகளை கையகப்படுத்தும் சட்டத்தின் கீழ் வழக்கு தாக்கல் செய்து பிஸ்கல் அதிகாரத்தை பயன்படுத்தி வீடுகளை கைப்பற்றவுள்ளதாகவும் பொதுநிர்வாக மற்றும் உள்நாட்டு அலுவல்கள் அமைச்சின் செயலாளர் டி.திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக