29 மார்ச், 2010

பொன்சேகா மருமகனை கண்டு பிடித்து கொடுத்தால் ரூ.10 லட்சம் பரிசு இலங்கை அரசு அறிவிப்பு







இலங்கை முன்னாள் ராணுவ தளபதி சரத் பொன்சேகாவின் மருமகன் திலக ரத்னேயை கண்டு பிடித்து கொடுப்பவர்களுக்கு ரூ.10 லட்சம் பரிசு அளிப்பதாக இலங்கை அரசு அறிவித்துள்ளது.

ராணுவ தளவாடங்களில் ஊழல்

இலங்கை முன்னாள் ராணுவ தலைமை தளபதி சரத் பொன்சேகா, அதிபர் தேர்தலில் தோல்வி அடைந்ததும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். கடந்த மூன்று மாதங்களுக்கு மேல் சிறையில் உள்ள அவர் மீது ஏராளமான குற்றச்சாட்டுகள் கூறப்பட்டுள்ளன. மேலும், அவருடைய மருமகன் தனுனா திலக ரத்னே மீதும் பல்வேறு குற்றச்சாட்டுகளை இலங்கை அரசு தெரிவித்து இருக்கிறது.

திலக ரத்னேவுக்கு சொந்தமான நிறுவனம் மூலமாக ராணுவத்துக்கு தளவாடங்கள் வாங்கியதில் ஊழல் நடந்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டு, சி..டி. விசாரணை நடைபெற்று வருகிறது. தற்போது, தலைமறைவாக இருக்கும் திலக ரத்னேவுக்கு எதிராக கடந்த பிப்ரவரி மாதம் கைது வாரண்டு பிறப்பிக்கப்பட்டது. இந்த மாத தொடக்கத்தில், மீண்டும் கைது வாரண்டு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ரூ.4 கோடி பறிமுதல்

மேலும், சர்வதேச போலீசின் உதவியையும் இலங்கை அரசு கேட்டுள்ளது. வெளிநாடுகளில் திலக ரத்னே பெயரில் உள்ள வங்கி கணக்குகளை ஆய்வு செய்யவும் இலங்கை அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்கிடையே, தனுனா திலக ரத்னேயின் தயார் அசோகா திலக ரத்னே, இலங்கையில் இரண்டு வங்கிகளில் வைத்திருந்த பணத்தை சி..டி. போலீசார் பறிமுதல் செய்தனர்.

ஒரு வங்கியில் இருந்து ரூ.21/2 கோடியும் மற்றொரு வங்கியில் இருந்து ரூ.11/2 கோடியும் கைப்பற்றப்பட்டன. அதே நேரத்தில், கொழும்பு மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் திலக ரத்னேவுக்கு எதிரான ராணுவ பேர ஊழல் வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது. கடந்த 17-ந் தேதி அன்று அந்த வழக்கு விசாரணைக்கு வந்தது.

ரூ.10 லட்சம் பரிசு

அப்போது, `திலக ரத்னேயை கண்டு பிடித்து கொடுப்பவர்களுக்கு ரூ.10 லட்சம் பரிசு தொகை அளிக்கப்படும்' என சி..டி. தரப்பு சார்பாக கோர்ட்டில் தெரிவிக்கப்பட்டது.

சி..டி. தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில், `இலங்கையில் தான் திலக ரத்னே இருக்கிறார். ரோமிங் செல்போனை பயன் படுத்திக் கொண்டு, வெளிநாட்டில் இருப்பது போன்ற தோற்றத்தை உருவாக்கி வருகிறார். எனவே, இலங்கை முழுவதும் அவரை தேடும் பணி முடுக்கி விடப்பட்டு இருக்கிறது. மேலும், அவரை பிடித்து கொடுத்தாலோ அல்லது அவருடைய இருப்பிடம் குறித்து தகவல் அளித்தாலோ ரூ.10 லட்சம் பரிசு வழங்குவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. திலக ரத்னே பற்றி தகவல் கிடைத்தால் சி..டி. துறைக்கு தெரிவிக்குமாறும் மக்களுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டு இருக்கிறது' என்று குறிப்பிடப் பட்டுள்ளது.
மேலும் இங்கே தொடர்க...

தைவானில்96 வயது முதியவர் 30 வயது இளம் பெண்ணை திருமணம்


தைவானில்96 வயது முதியவர் 30 வயது இளம் பெண்ணை திருமணம் செய்ததன் மூலம் அந்நாட்டின் மிகவும் வயதான மணமகன் என்ற பெயரைப் பெற்றுள்ளார்.
தெற்கு தைவானின் டைனன் பகுதியில் உள்ள டாவோயிஸ்ட் கோயிலில் அர்ச்சகராக உள்ளார் லின் சுங். இவர் அண்மையில் சீனாவின் ஹுனன் மாநிலம் மெயின்லேண்ட் பகுதியைச் சேர்ந்த 30 வயது பெண்ணை திருமணம் செய்து கொண்டதாக தைபேயிலிருந்து வெளிவரும் ஆப்பிள் டெய்லி இதழ் செய்தி வெளியிட்டுள்ளது. இதனால், நாடெங்கும் இப்போது இவரைப் பற்றிய பேச்சுதான் அடிபடுகிறது. லின் இதுவரை திருமணமே செய்துகொள்ளாமல் தனிமையாக வசித்து வந்தாலும், இரண்டு பிள்ளைகளை தத்து எடுத்துள்ளார்.
இதுகுறித்து லின் கூறுகையில், ள்ள்உன்னுடைய வாழ்க்கைத் துணை ஹுனன் பகுதியில் உள்ளார். அவரை தேடிப் போய் மணந்து கொள் என்று கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு, கடவுள் என்னிடம் கூறினார். அதன்படி அவளை மணந்து கொண்டேன். இதுவரை நான் திருமணம் செய்து கொள்ளவே இல்லை. வயதான காலத்தில் எனக்கு ஒரு துணை தேவைப்படுகிறது. எனவே, இப்போது திருமணம் செய்து கொண்டதில் என்ன தவறு?ளிளி என்றார் லின்.
லின்னின் தத்துப் பிள்ளைகளில் ஒருவர், தனது அப்பாவின் திருமணத்துக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தார். அதையும் மீறி இந்த திருமணம் நடைபெற்றுள்ளது. சீனாவில் உள்ள மனைவியை தைவானுக்கு அழைத்து வர முயற்சியில் லின் ஈடுபட்டுள்ளார்.
கடந்த 2009ம் ஆண்டில் சீனா, ஹாங்காங் மற்றும் மக்காவ் பகுதியைச் சேர்ந்தபெண்களை 13 ஆயிரம் தைவானியர்கள் மணந்து கொண்டனர். இது கடந்த ஆண்டில் வெளிநாட்டு பெண்களை மணந்த தைவானியர்களில் 60 சதவீதம் ஆகும்.
மேலும் இங்கே தொடர்க...

சிறார்களின் பாதுகாப்பில் பெற்றோரின் அக்கறை பிரதானம்




பணத்துக்காக அல்லது தனிப்பட்ட விரோதம் காரணமாக குழந்தைகளைக் கடத்துதல், கொலை செய்தல் போன்ற செயல்கள் உண்மையிலேயே மிகக் கொடூரமானவையா கும். காட்டுமிராண்டித்தனத்தின் உச்சமென்றும் இதனைக் கூறலாம்.

இத்தகைய கொடூர சம்பவமொன்று யாழ்ப்பாணம், சாவகச் சேரியில் இடம்பெற்றிருக்கிறது. சாவகச்சேரி இந்துக் கல்லூ ரியில் பயின்ற திருச்செல்வம் கபில்நாத் என்ற பதினேழு வயது மாணவன் இரண்டு வாரங்களுக்கு முன்னர் கப்பம் பெறுபவதற்காகக் கடத்தப்பட்டுள்ளான். இறுதியில் அம் மாணவன் கொலை செய்யப்பட்டு சடலமாகி மீட்கப்பட் டுள்ளான்.

அம்மாணவன் கடத்தப்பட்டதற்கான நோக்கம் பெரும் பணத்தைக் கப்பமாகப் பெறுவதற்காகவென்று விசாரணை மூலம் தெரியவந்துள்ளது. வர்த்தகரான தந்தையிடம் மூன்று கோடி ரூபா பணம் பெறுவதற்காகவே அம்மாணவன் கடத் தப்பட்டுள்ளான். கடத்தல்காரரின் நோக்கம் நிறைவேறாமல் போனதால் அம்மாணவன் பரிதாபமாகக் கொலை செய்யப் பட்டுள்ளான்.

இச்சம்பவம் தொடர்பாக பொலிஸார் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். ஒருசிலர் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேற்படி படுகொலைச் சம்பவம் தொடர்பான துப்பு விரைவில் துலங்கிவிடுமென நம்பப்படுகிறது.

இது போன்ற கொடூர சம்பவம் குறித்து மக்கள் விழிப் புணர்வுடன் இருப்பது அவசியம். பணத்துக்காக எந்த வொரு கொடிய காரியத்திலும் ஈடுபடும் காட்டுமிராண் டித்தனமான சுபாவம் சிலருக்குள்ளே இயற்கையாகக் காணப்படுகிறது. இதுபோன்ற வன்முறை குணாம்சம் கொண்டோர் யாழ்ப்பாணத்தில் மட்டுமின்றி எங்குமே இருக்கக் கூடும். இத்தகைய கொடிய குணம் எந்தவொரு இனத்துக்குமோ மதத்துக்குமோ உரியதல்ல.... இவர்கள் இனத்துக்கும் மதத்துக்கும் அப்பாற்பட்ட மிருக இனத்தைச் சேர்ந்தவர்கள் என்றே கூற வேண்டும். இக்கொடியவர்களி டமிருந்து சிறார்களைப் பாதுகாப்பதில் பெற்றோர் மத்தியில் அவதானம் தேவை.

பணத்துக்காக சின்னஞ்சிறார்களைக் கடத்திய சம்பவங்கள் நாட்டில் முன்னரும் பரவலாக இடம்பெற்றுள்ளன. இவ் விதம் கடத்தப்பட்ட சிறார்கள் படுகொலை செய்யப்பட்ட பரிதாபங்களும் நிகழ்ந்துள்ளன. அதேசமயம் மேற்படி படுபாதகர்கள் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் கொல் லப்பட்ட சம்பவங்களையும் நாமறிவோம்.

பச்சிளம் பாலகர்களின் உயிரில் விளையாடும் இத்தகைய கயவர்கள் விடயத்தில் முதலில் அவதானமாக இருக்க வேண்டியவர்கள் பெற்றோராவர். பாடசாலை, ரியூஷன் போன்ற இடங்களுக்கு சிறார்களைத் தனியாக அனுப்புவது பாதுகாப்பானதல்ல. நம்பிக்கையான நபர் ஒருவரின் துணையுடன் அனுப்புவதே சிறந்ததாகும். கொடியவர்களிட மிருந்து குழந்தைகளைப் பாதுகாப்பதற்கு இதுவே உகந்த வழி. பிள்ளைகளின் பாதுகாப்பில் பெற்றோர் உரிய கவனம் செலுத்தாமையே இதுபோன்ற விபரீத சம்பவங்களுக்குக் காரணமாக அமைகிறது.

எமது நாட்டில் சிறுவர்களின் பாதுகாப்பு மற்றும் நலன்கள் தொடர்பாக உரிய சட்ட ஏற்பாடுகள் உள்ளன. சிறுவர் பாது காப்பு தொடர்பில் பொலிஸாரின் கடந்த காலப் பணிகள் மெச்சத்தக்கவை. கடத்தல்காரர்கள் பலர் கடந்த காலத்தில் பொலிஸாரால் கைதாகியமை ஞாபகமிருக்கலாம். இவ்விட யத்தில் பொலிஸார் விசேட கவனமெடுத்து விசாரணை மேற்கொள்கின்றனர்.

எனினும் பெற்றோர் முன்னேற்பாட்டுடன் நடந்துகொள்வதே இங்கு முக்கியம்.
மேலும் இங்கே தொடர்க...

புதிய அரசியலமைப்பை கொண்டுவரும் நோக்கமில்லை, பல்வேறு வகையான திருத்தங்களை மேற்கொள்வோம்-அரசு



எமது அடுத்த அரசாங்கத்தில் புதிய அரசியல் யாப்பு கொண்டுவரப்படமாட்டாது. ஆனால் தற்போதைய அரசியல் யாப்பில் பல்வேறு வகையிலான மாற்றங்களை கொண்டுவர எதிர்பார்க்கின்றோம். மஹிந்த சிந்தனை வேலைத்திட்டத்தில் இது தொடர்பில் தெளிவாக விளக்கப்பட்டுள்ளது என்று சுற்றாடல் மற்றும் இயற்கைவள அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்தார். அரசியலமைப்பில் இடம்பெற்றுள்ள 17 ஆவது திருத்தச் சட்டத்தில் பல்வேறு குறைபாடுகள் காணப்படுகின்றன. எனவே அந்தக் குறைபாடுகளை நிவர்த்தி செய்யவும் நடவடிக்கைகளை மேற்கொள்வோம் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.

கொழும்பு மகாவலி கேந்திர நிலையத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை நடைபெற்ற விசேட செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு மேலும் கூறியதாவது,

எமது அரசாங்கம் புதிய அரசியலமைப்பு ஒன்றை கொண்டுவரப்போவதாகவும் வெளிநாடுகளின் தேவைக்கு ஏற்ப அது அமைக்கப்பட்டுவருவதாகவும் சில தரப்பினர் தெரிவித்துள்ளனர். ஆனால் ஒரு விடயத்தை இங்கு தெளிவாக குறிப்பிடுகின்றோம். அதாவது புதிய அரசியலமைப்பை கொண்டுவரும் நோக்கம் அரசாங்கத்துக்கு இல்லை. அதனை பாராளுமன்றத்திடம் நாங்கள் விட்டுவிடுகின்றோம். ஆனால் தற்போதைய அரசியலமைப்பில் பல்வேறு வகையான திருத்தங்களை நாங்கள் மேற்கொள்வோம். எவ்வாறான திருத்தங்கள் மேற்கொள்ளப்படும் என்று மஹிந்த சிந்தனை எதிர்கால நோக்கு வேலைத்திட்டத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெளிவாக குறிப்பிட்டுள்ளார்.

அதாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை நீதிமன்றத்துக்கும் பாராளுமன்றத்துக்கும் பொறுப்புக்கூறும் ஒரு பதவியாக மாற்றியமைத்தல், குறிப்பாக ஜனாதிபதி பதவியை பொறுப்புக்கூறும் பதவியாக மாற்றியமைத்தல், மேலும் பிரதேச மற்றும் தொகுதி முறைமை ஆகியவற்றைக்கொண்ட கலப்பு தேர்தல் முறைமை ஒன்றை அறிமுகப்படுத்தல், அமைச்சு ஆலோசனைக் குழுக்களை மேலும் பலப்படுத்தல், பாராளுமன்றத்துக்கு இருக்கின்ற நிதி தொடர்பான அதிகாரங்களை மேலும் பலப்படுத்தல், அரச நிறுவனங்களை பலப்படுத்தல், அத்துடன் பிரதேச சபைகளுக்கான அதிகாரங்களை விஸ்தரித்தல், கிராம சபைகளை உருவாக்குதல் போன்ற அரசியலமைப்பு திருத்தங்கள் தொடர்பில் மஹிந்த சிந்தனை வேலைத்திட்டத்தில் தெளிவாக குறிபிடப்பட்டுள்ளது.

மேலும் அரசியலமைப்பின் 17 ஆவது திருத்தச் சட்டத்திலும் அது உருவாக்கப்பட்ட விதத்திலும் பல்வேறு குறைபாடுகள் காணப்படுகின்றன. முக்கியமாக அரசியலமைப்பு பேரவை நிறுவப்படும் முறையில் பல குறைபாடுகள் காணப்படுகின்றன. ஆனால் 17 ஆவது திருத்தச் சட்டத்தின் நோக்கத்தை நாங்கள் ஏற்றுக்கொள்கின்றோம். அதில் எந்த சிக்கலும் இல்லை. பாரபட்சமற்ற முறையில் செயற்படும் நோக்கில் சுயாதீன ஆணைக்குழுக்கள் செயற்படுவது சிறந்தது. ஆனால் 17 ஆவது திருத்தச் சட்டத்தில் உள்ள குறைபாடுகள் நீக்கப்பட்டு சுயாதீன ஆணைக்குழுக்களை நியமிக்கவேண்டும் என்ற நிலைப்பாட்டில் அரசாங்கம் இருக்கின்றது. அதாவது ஏனைய நாடுகளில் எவ்வாறு இந்த சுயாதீன ஆணைக்குழுக்கள் செயற்படுகின்றன மற்றும் நிறுவப்படுகின்றன என்பது தொடர்பில் ஆராய்ந்துபார்க்கவேண்டும். ஒற்றையாட்சி முறையின் கீழ் அரசியலமைப்பில் மாற்றங்களுக்கு செல்வதற்கு அரசாங்கம் தயாராக இருக்கின்றது.
மேலும் இங்கே தொடர்க...

வன்னி மாவட்டத்தில் நங்கூரம் சின்னத்தில் போட்டியிடும் புளொட் வேட்பாளரான

வன்னி மாவட்டத்தில் நங்கூரம் சின்னத்தில் போட்டியிடும் புளொட் வேட்பாளரான புளொட் தலைவர் திரு.தருமலிங்கம் சித்தார்த்தன் தலைமையிலான புளொட் பிரதிநிதிகளும், ஆதரவாளர்களும் தேர்தல் பிரச்சாரப் பணிகளுக்காக நேற்றையதினம் அண்ணாநகர் மற்றும் மகாறம்பைக்குளம் பிரதேசங்களுக்கு விஜயம்செய்து அப்பகுதி மக்களுடன் கலந்துரையாடியுள்ளனர். அண்ணாநகரிலும் மகாறம்பைக்குளத்திலும் அப்பகுதி மக்களால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இரு கூட்டங்களிலும் புளொட் தலைவர் பங்கேற்று உரையாற்றினார். இது தொடர்பிலான நிழற்படங்கள் இங்கு தரப்படுகின்றன.


12


மேலும் இங்கே தொடர்க...

சரத் பொன்சேகா தொடர்பான விசாரணைகளுக்கு புதிய குழு நியமனம்





இராணுவப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கு எதிரான விசாரணைகளை மேற்கொள்ள புதிதாக மூன்று நீதிபதிகள் குழு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

கொத்தலாவல பாதுகாப்பு கல்லூரியின் மேஜர் ஜெனரல் மிலிந்த பீரிஸ் குழுவின் தலைவராக பணியாற்றுவார் எனவும் தென்பிராந்திய பாதுகாப்பு தலைமையாளர் மேஜர் ஜெனரல் லலித் தோலகல மற்றும் யாழ்ப்பாண படைகளின் தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த ஹத்துருசிங்க ஆகியோர் உறுப்பினர்களாக பணியாற்றுவார்கள் எனவும் தெரிவக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே சரத் பொன்சேகாவுக்கு எதிரான இரண்டு வழக்குகளுக்கும் ஒரு குழு நியமிக்கப்பட்டமை சட்டத்திற்கு விரோதமானது எனச் சுட்டிக் காட்டப்பட்டதைத் தொடர்ந்தே இந்த புதிய குழு நியமிக்கப்பட்டுள்ளது. _
மேலும் இங்கே தொடர்க...

பொன்சேகாவின் உடல் நிலை தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருவதாக அனோமா பொன்சேகா தெரிவிப்பு




இராணுவப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் சரத்பொன்சேகாவின் உடல் நிலை தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருவதாக அனோமா பொன்சேகா தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று நடைப்பெற்ற ஜனநாயக தேசிய கூட்டமைப்பின் ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அனோமா பொன்சேகா இது தொடர்பான விடயங்களை தெரிவித்துள்ளார்.

ஜெனரல் சரத் சரத்பொன்சேகா தற்போது இருமல் மூலம் பாதிக்கபட்டுள்ளதாகவும், இவ்வாறான நோய்கள் வரக்கூடாது எனவும், இந் நோயினால் தனது கனவர் பெரும் துன்பத்தை எதிர்நோக்கியுள்ளதாகவும் அனோமா பொன்சேகா தெரிவித்துள்ளார். _
மேலும் இங்கே தொடர்க...

புளொட் தலைவர் த.சித்தார்த்தன், புளொட் வன்னி மாவட்ட அமைப்பாளர் க.சிவநேசன் (பவன்) மகாறம்பைக்குளம் உள்ளிட்ட பிரதேச மக்களுடன் சந்திப்பு





மாவட்டத்தில் நங்கூரம் சின்னத்தில் போட்டியிடும் புளொட் வேட்பாளர்களான புளொட் தலைவர் திரு.த.சித்தார்த்தன், புளொட் வன்னிப் பிராந்திய அமைப்பாளர் க.சிவநேசன்(பவன்) மற்றும் புளொட் பிரதிநிதிகளும், ஆதரவாளர்களும் இன்று வவுனியா பகுதிகளில் தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தனர். இதன்போது புளொட் தலைவர் த.சித்தார்த்தன் தலைமையிலான பிரதிநிதிகளும், ஆதரவாளர்களும் அண்ணாநகர் மற்றும் மகாறம்பைக்குளம் பிரதேசங்களுக்குச் சென்று அப்பகுதி மக்களுடன் கலந்துரையாடியுள்ளனர்.

அண்ணாநகரிலும் மகாறம்பைக்குளத்திலும் அப்பகுதி மக்களால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இரு கூட்டங்கள் நடைபெற்றன. இங்கு உரையாற்றிய அப்பகுதி கிராமிய அபிவிருத்திச் சங்கம், மாதர் சங்கம், விளையாட்டு கழகங்கள் என்பவற்றின் பிரதிநிதிகள், புளொட் அமைப்பினர் கடந்த காலங்களில் இப்பகுதிகளில் மேற்கொண்டிருந்த வேலைத்திட்டங்களை வரவேற்றுப் பேசியதுடன், கடந்த பத்து வருடகாலமாக புளொட் பிரதிநிதிகள் பாராளுமன்றத்தில் இல்லாததன் காரணத்தினால் 2000ஆம் ஆண்டுக்குப் பிறகு இப்பகுதிகளில் எந்தவொரு வேலைத்திட்டமும் முன்னெடுக்கப்படவில்லை என்பதையும், எவ்வித அபிவிருத்தியும் செய்யப்படவில்லை என்பதையும் சுட்டிக்காட்டினர்.

அத்துடன் இம்முறை பொதுத் தேர்தலின்போது நங்கூரம் சின்னத்தில் போட்டியிடும் புளொட் வேட்பாளர்கள் தெரிவுசெய்யப்படுவதன் மூலமே இப்பகுதியின் அபிவிருத்திப் பணிகளையும், இடம்பெயர்ந்த மக்களின் அவலங்களையும் போக்க முடியுமென்றும் தெரிவித்துள்ளனர். இங்கு உரையாற்றிய புளொட் தலைவர் தி.த.சித்தார்த்தன் அவர்கள், கடந்த காலங்களில் புளொட் அமைப்பு இப்பகுதிகளில் மேற்கொண்ட வேலைத்திட்டங்கள் தொடர்பிலும், அபிவிருத்திப் பணிகள் தொடர்பிலும் விளக்கிக் கூறினார். அத்துடன் தொடர்ந்தும் நாம் இப்பகுதிகளில் பல்வேறு அபிவிருத்திப பணிகளை மேற்கொள்ளவுள்ளோம். இதுவே எமது முக்கிய நோக்கமாகும். எனவே மக்கள் அனைவரும் நங்கூரம் சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு பூரண ஆதரவை வழங்க வேண்டுமென்றும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை இராசேந்திரன்குளம் பகுதிக்கு விஜயம் செய்திருந்த புளொட் அமைப்பின் வன்னிப் பிராந்திய அமைப்பாளர் க.சிவநேசன் (பவன்) உள்ளிட்ட பிரதிநிதிகள் அப்பகுதி மக்களைச் சந்தித்துள்ளனர். அங்கு அப்பகுதி மக்களால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கூட்டத்திலும் புளொட் அமைப்பாளர் க.சிவநேசன் பங்கேற்று உரையாற்றினார். இதன்போது, அப்பகுதியில் கடந்தகாலங்களில் புளொட் அமைப்பினால் மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்திகள் மற்றும் வேலைத்திட்டங்கள் தொடர்பில் எடுத்துக் கூறியதுடன், இப்பணிகளை தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்வதற்கு மக்களின் ஒத்துழைப்பு மிகவும் அவசியமாகிறது என்றும், இதற்கு பொதுத் தேர்தலில் நங்கூரம் சின்னத்தில் போட்டியிடும் புளொட் வேட்பாளர்களுக்கு மக்கள் பூரண ஆதரவினை வழங்க வேண்டுமென்றும் தெரிவித்துள்ளார்.

இங்கு உரையாற்றிய அப்பகுதி கிராமிய அபிவிருத்தி சங்கம், மாதர் சங்கம், விளையாட்டு சங்கம் ஆகியவற்றின் பிரதிநிதிகள், கடந்த காலங்களில் புளொட் அமைப்பு மேற்கொண்ட பணிகளை நினைவுபடுத்தியதுடன், புளொட் வேட்பாளர்கள் தெரிவுசெய்யப்படுவதன் மூலமே தமது பிரதேசங்களை அபிவிருத்தி செய்ய முடியுமென்பதையும் சுட்டிக்காட்டினர். அத்துடன் எதிர்வரும் பொதுத்தேர்தலில் புளொட் வேட்பாளர்களுக்கு பூரண ஆதரவுவழங்க வேண்டுமென்றும், அவர்கள் பாராளுமன்ற உறுப்பினர்களாக தெரிவு செய்யப்படுவதன் மூலமே கடந்த 10வருட காலமாக மேற்கொள்ளப்படாதிருந்த வேலைத்திட்டங்களையும், அபிவிருத்திகளையும் முன்னெடுக்க முடியுமென்றும் சுட்டிக்காட்டியுள்ளனர்.
மேலும் இங்கே தொடர்க...

நுரைச்சோலை, சம்பூர் தவிர அனல் மின் நிலையங்கள் எதனையும் நிர்மாணிப்பதில்லையென அரசு முடிவு






நுரைச்சோலை மற்றும் சம்பூர் அனல் மின் நிலையங்கள் தவிர வேறு அனல் மின் நிலையங்கள் எதனையும் நிர்மாணிப்பதில்லை என அரசாங்கம் தீர்மானித்துள்ளது. சூரிய, காற்று, உயிரியல்வாயு போன்று மாற்று முறைகள் மூலம் மின் உற்பத்தி செய்வது குறித்து கூடுதல் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. சூழல் மாசடைவதை தடுப்பதற்காகவே இவ்வாறு அரசு நடவடிக்கை எடுத்துள்ளதாக சுற்றாடல் இயற்கை வள அமைச்சர் சம்பிக ரணவக்க தெரிவித்தார்.

மகாவலி நிலையத்தில் நேற்று (28) நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் பேசிய அவர் மேலும் கூறியதாவது, அனல் மின் நிலையங்களினால் சூழல்மாசு ஏற்படுவதனாலே இனிமேல் அனல் மின் நிலையங்கள் அமைக்காதிருக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. சர்வதேச காபன் கோட்டாவின் பிரகாரம் தனி நபருக்கான சேதனக்கழிவு அளவு 2100 ஆகும்.

இலங்கை தனி நபர் ஒருவரின் சேதனக் கழிவு அளவு 600 ஆகும். இரு அனல் மின் நிலையங்கள் அமைக்கப்படுவதன் மூலம் சேதனைக்கழிவு அளவு 400 ஆல் அதிகரிக்கும். மரங்களும் காபனை உறிஞ்சுவதால் இந்தத் தொகை மேலும் குறைவடையும் என்றார்.
மேலும் இங்கே தொடர்க...