30 மே, 2010

மன்னார் மாணவர் மத்தியில் கையடக்கத் தொலைபேசி பாவனை : பெற்றோர்



மன்னாரில் கல்வி கற்கும் பாடசாலை மாணவர்கள் தொடர்ந்தும் கையடக்கத் தொலை பேசிகளைப் பயன்படுத்தி வருவதனால், அவர்களின் கற்றல் நடவடிக்கைகள் பாதிப்படைந்து வருவதாக சமூக ஆர்வலர்கள், மாணவர்களின் பெற்றோர் ஆகியோர் கவலை தெரிவிக்கின்றனர்.

பாடசாலைகளில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள போதும், மாணவர்கள் மறைமுகமாக கையடக்கத் தொலை பேசிகளை பாடசாலைகளுக்கு கொண்டு சென்று பயன்படுத்தி வருவதாகப் பெற்றோர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

அதேவேளை, மாணவர்கள் மாலை நேர வகுப்புக்களுக்குச் செல்லும் போது கையடக்கத் தொலைபேசிகளில் பதிவு செய்து வைத்துள்ள சினிமாப் பாடல்களை உரத்த சத்தமாகப் போட்டுக் கேட்டுக் கொண்டே வீதிகளில் நடந்து செல்வதாக சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

சில மாணவர்கள் ஆபாச வீடியோக் காட்சிகளைப் பதிவு செய்து பாடசாலைகளுக்கும் தனியார் கல்வி நிலையங்களுக்கும் கொண்டு சென்று பார்ப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.

எனவே பாடசாலை நிர்வாகமும் தனியார் நிறுவனங்களும் இவ்விடயத்தில் கவனம் செலுத்தி கையடக்கத் தொலைபேசி பாவனைகளைக் கட்டுப்படுத்த உடன் நடவடிக்கை எடுக்குமாறு சமூக ஆர்வலர்களும் பெற்றோர்களும் கோரிக்கை விடுக்கின்றனர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக