
கொழும்பு : இலங்கை பார்லிமென்டில், அதிபர் ராஜபக்ஷேவை மூன்றாவது முறையாக தேர்ந்தெடுக்கும் சட்டத் திருத்த மசோதா நிறைவேற்றப்படும் பட்சத்தில் அதுதான், ஜனநாயகம் என்கிற சவப்பெட்டி மீது அடிக்கப்படும் கடைசி ஆணி என, இலங்கை ராணுவத்தின் முன்னாள் தலைமை தளபதி சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். மேலும், இது போன்ற சட்டத் திருத்தங்கள் ராணுவ ஆட்சிக்கு வழிவகுக்கும் என்றும் எச்சரித்துள்ளார்.இலங்கையில் விடுதலைப்புலிகளை ஒழித்ததில் முக்கிய பங்கு வகித்தவர் முன்னாள் ராணுவ தலைமை தளபதி சரத் பொன்சேகா. இவர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை அடுக்கிய ராஜபக்ஷே அரசு, அவரை கைது செய்து சிறையில் அடைத்தது.இந்நிலையில், இரண்டாவது முறையாக அதிபராக பதவியேற்றுள்ள ராஜபக்ஷேவை, மூன்றாவது முறையாக தேர்ந்தெடுக்கும் அரசியலமைப்பு சட்டத் திருத்த மசோதா, இலங்கை பார்லிமென்டில் தாக்கலாக உள்ளது.இந்த மசோதாவிற்கு சரத் பொன்சேகா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். தற்போது இலங்கை எம்.பி.,யாக உள்ள அவர் மேலும் கூறியதாவது:இந்த மசோதா தாக்கல் செய்யப்படும் பட்சத்தில் அதுதான், ஜனநாயகத்தின் இருண்ட நாள். இந்த சட்டத் திருத்தம், ஜனநாயகம் என்கிற சவப்பெட்டி மீது அடிக்கப்படும் கடைசி ஆணி. இந்த திருத்த மசோதா விவகாரத்தில் எதிர்க்கட்சிகளின் நிலைப்பாடு என்ன என்பதில் குழப்பம் ஏற்பட்டுள்ளது. தன்னலம் கருதி சில எம்.பி.,க்கள் இந்த மசோதாவை ஆதரிக்கின்றனர். இவ்வாறு சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
சியின் சார்பில் நுவரெலியா மாவட்டத்தில் போட்டியிட்டு வெற்றிபெற்ற நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீரங்கா 18ஆவது அரசியலமைப்பு சீர்திருத்தத்திற்கு ஆதரவாக வாக்களித்துள்ளார்.
றணை பிரதேச சபை அங்கத்தவர்கள் 18ஆவது அரசியலமைப்பு திருத்தத்துக்கு ஆதரவளித்து அக்குறணை நகரில் இன்று பிற்பகல் பேரணியொன்றை நடாத்தினர்.
நடவடிக்கை நல்லிணக்கத்தையோ தேசிய ஒற்றுமையையோ இந்த நாட்டில் ஏற்படுத்துவதாக தெரிய வில்லையென மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் சோமவன்ச அமரசிங்க தெரிவித்தார்.
தந்திரக் கூட்டமைப்பின் கம்பஹா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மேர்வின் சில்வாவிற்கு மீளவும் பிரதி அமைச்சு பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.







ஒருவரை மோசமான முறையில் தாக்கிய பொலிஸ் உத்தியோகத்தருக்குப் பிரித்தானிய நீதி மன்றமொன்று 6 மாத சிறைத் தண்டனை வழங்கி தீர்ப்பளித்தது.


காண சபையின் விவசாய மீன்பிடி அமைச்சினால் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள மீனவர்களுக்கு மீன்பிடி தோணிகள் மற்றும் மீன்பிடி உபகரணங்கள் என்பன நேற்று மாலை வழங்கப்பட்டன.





வது அரசியலமைப்பு திருத்தத்திற்கு ஆதரவாக ஐக்கிய தேசிய கட்சியைச் சேர்ந்த 16 உறுப்பினர்கள் வாக்களிக்கவுள்ளனர் என பிரதமர் டி.எம் ஜயரத்ன நாடாளுமன்றத்தில் இன்று முற்பகல் தெரிவித்தார்.
வது அரசியமைப்பு சீர்திருத்தத்திற்கு ஆதரவளித்தும், எதிர்ப்பு தெரிவித்தும் கொழும்பில் ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன.