28 மே, 2010

ஜெர்மனியில் புலிகளுக்காக நிதி திரட்டிய பெண் இலங்கையில் கைது




ஜெர்மனியில் புலிகள் இயக்கத்திற்கு நிதி திரட்டி வந்ததாகக் கூறப்படும் பெண்ணொருவர் இலங்கையில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளதாக அரச தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இலங்கையில் யுத்தம் இடம்பெற்றுக் கொண்டிருந்த வேளையில் அதற்கெதிராக ஜெர்மனியில் பாரிய போராட்டங்களை முன்னெடுத்தவர் இவரென்று கூறப்படுவதுடன், ஜெர்மனியிலுள்ள இந்திய தூதரகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டம் நடத்தியவர்களில் முக்கியமானவர் இவரென்றும் தெரிவிக்கப்படுகின்றது. இவர் புத்தளம் பகுதியைச் சேர்ந்த ஒருவரது உறவினராவர். தற்போது இவர் குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.






கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக