11 மே, 2010

ஈரான் ஏவுகணை சோதனை






ஈரான் நேற்று முதன் முதலாக கடலுக்குள் குறைந்த தூரம் சென்று தாக்கக் கூடிய ஏவுகணை சோதனை நடத்தியது. அதன் பெயர் பாஜா-5. இது சுமார் 75 கி.மீ. தூரம் சென்று இலக்கை தாக்கக்கூடியது.

இதற்கு முன்பு போரின்போது இது பயன்படுத்தப்படவில்லை. தற்போதுதான் முதன் முதலாக வளைகுடா கடலில் தண்ணீருக்குள் ஏவி சோதித்து பார்க்கப்பட்டது. இந்த தகவலை ராணுவ துணை தலைமை அதிகாரி கியோமர்ஸ் ஹைதரி தெரிவித்தார்.

ஏற்கனவே இந்த ஏவு கணை கடலுக்கு வெளியே ஏவி சோதனை நடத்தப் பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் இங்கே தொடர்க...

அடையாளம் தெரிவதற்காக இரும்பு கம்பியை காய்ச்சி சூடு போடும் மாவோயிஸ்டுகள்





இந்தியாவில் 6 மாநிலங்களில் மாவோயிஸ்டுகள் மிக வலிமையாக உள்ளனர். அவர்கள் மத்திய பாதுகாப்புப்படை வீரர்களை எதிர்த்து போரிடுவதற்காக பல்வேறு ரகசிய குழுக்களை உருவாக்கி உள்ளனர்.

இந்த குழுக்களில் எஸ்ஏஎஸ் என்றழைக்கப்படும் சிறப்பு நடவடிக்கை குழுவும் ஒன்று. இந்த குழுவில் 20 வயதுக்குட்பட்ட இளைஞர்களே இருப்பார்கள். இவர்கள் அனைவரும் அனைத்து வகை ஆயுதங்களையும் கையாள பயிற்சி பெறுகின்றனர். சமீபகாலமாக இவர்கள் தற்கொலை தாக்கு தலிலும் ஈடுபடுகிறார்கள்.

இந்த சிறப்பு குழுவில் எல்லா மாவோயிஸ்டுகளாலும் இடம் பெற இயலாது. துடிப்புள்ள இளைஞர்கள் மட்டுமே சேர்க்கப்படுவார்கள்.

அவர்கள் தனித்து அடையாளம் தெரிய வேண்டும் என்பதற்காக சிறப்புக் குழுக்களில் உள்ள மாவோயிஸ்டுகளின் கைகளில் குறியீடு இடப்படுகிறது. இரும்பு கம்பியை காய்ச்சி சூடு போட்டு குறியிடப்படும்.

வலது கையின் கீழ்ப்பகுதியில் இந்த குறியீடும் நம்பரும் இடம்பெறும். ஒரு மாவோயிஸ்டு எந்த மாநிலத்தின், எந்த பகுதியை சேர்ந்தவர் என்பதை சூடு வைத்துள்ள குறியீடு மூலம் கண்டுபிடித்து விடலாம்.

சமீபத்தில் மேற்குவங்க போலீசாரிடம் சுசீல் ஹெம் பிராம் என்ற மாவோயிஸ்டு சிறப்பு குழு தீவிரவாதி சிக்கினான். அவனிடம் இருந்து இந்த தகவல்கள் தெரியவந்துள்ளன.
மேலும் இங்கே தொடர்க...

பிரதி ஊடக அமைச்சர் நியமிக்கப்படமாட்டார்

ஊடக மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சுக்கென இம்முறை பிரதி அமைச்சரை நியமிக்காமல் விடுவதற்கு ஜனாதிபதி தீர்மானித்துள்ளதாக அலரிமாளிகை வட்டாரங்கள் தெரிவித்தன.

ஊடக மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல அமைச்சின் சகல நடவடிக்கைகளையும் மேற்கொள்வார் எனவும் அதனால் அந்த அமைச்சுக்கு பிரதியமைச்சரை இம்முறை நியமிக்காமல் விடுவதற்கு ஜனாதிபதி நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

புதிய அமைச்சரவையில் ஊடகத்துறை பிரதியமைச்சராக மேர்வின் சில்வா நியமிக்கப்பட்ட போதிலும் கடந்த 5 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட அமைச்சரவை மறுசீரமைப்பின் போது அவர் தனது பிரதியமைச்சர் பதவியை இராஜினாமா செய்துகொண்டதுடன் அவருக்கு நெடுஞ்சாலைகள் பிரதியமைச்சர் பதவியே வழங்கப்பட்டது.
மேலும் இங்கே தொடர்க...

பொன்சேகா நாளை நீதிமன்றில் ஆஜர்



ஜனநாயக தேசிய கூட்டணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் இராணுவ தளபதியும் பாதுகாப்பு படைகளின் பிரதானியுமான ஜெனரல் சரத் பொன்சேகா நீதிமன்றத்தில் புதன்கிழமை ஆஜர்படுத்தப்படவிருக்கின்றார்.

இதனையொட்டி புதுக்கடை மஜிட்ரேட் நீதிமன்ற கட்டிடத்தொகுதி இராணுவத்தினரால் கடும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டது.முல்லைத்தீவில் இறுதி யுத்தத்தின் போது வெள்ளைக்கொடியை ஏந்திவந்த துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொள்ளுமாறு பாதுகாப்பு செயலாளர் உத்தரவிட்டதாக அவர் கூறியது தொடர்பில் விசாரிப்பதற்கே பொன்சேகாவை நீதிமன்றத்திற்கு அழைத்துவருவதற்கு இரகசிய பொலிஸார் நீதிமன்றிடம் கோரியிருந்தனர்.
மேலும் இங்கே தொடர்க...

இங்கிலாந்தில் கன்சர்வேடிவ் கட்சி நடத்தும் பேச்சுவார்த்தையில் இன்று முடிவு புதிய அரசு 25-ந் தேதிக்குள் பதவி ஏற்கிறது



இங்கிலாந்தில் புதிய அரசு அமைப்பது தொடர்பாக, லிபரல் ஜனநாயாக கட்சியுடன் கன்சர்வேடிவ் கட்சி நடத்தும் பேச்சுவார்த்தையில் இன்று முடிவு எட்டப்படுகிறது. புதிய அரசு, 25-ந் தேதிக்குள் பதவி ஏற்க உள்ளது.

தனிப்பெரும்பான்மை இல்லை

இங்கிலாந்தில் கடந்த வாரம் நடந்த பாராளுமன்ற தேர்தலில் எந்த கட்சிக்கும் தனிப் பெரும்பான்மை கிடைக்கவில்லை. தற்போது, ஆட்சி செய்து வரும் தொழிலாளர் கட்சி தோல்வியடைந்தது. மொத்தம் உள்ள 650 இடங்களில் 258 இடங்களை மட்டுமே அந்த கட்சி பெற்றது. ஆனால், எதிர்க்கட்சியான கன்சர்வேடிவ் கட்சிக்கு 306 இடங்கள் கிடைத்தன.

எனினும், ஆட்சி அமைப்பதற்கு இந்த எண்ணிக்கை போதாது. அதே நேரத்தில் மூன்றாவது இடத்தை பிடித்த லிபரல் ஜனநாயக கட்சிக்கு 57 இடங்கள் கிடைத்தன. அந்த கட்சியின் ஆதரவோடுதான் புதிய அரசு அமைக்க முடியும். எனவே, அந்த கட்சியோடு கன்சர்வேடிவ் கட்சி பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

வர்த்தகத்தில் மாற்றம்

பேச்சுவார்த்தை நடத்துவதற்காக இரண்டு கட்சிகள் சார்பிலும் தனி குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. கடந்த ஒரு வாரமாக பேச்சுவார்த்தைகள் நடந்தபோதிலும் உடன்பாடு எட்டப்படவில்லை. சில முக்கிய இலாகாக்களின் காபினெட் மந்திரி பதவியை லிபரல் கட்சி கேட்கிறது. அதைத் தொடர்ந்து, அந்த கட்சியின் தலைவர் நிக் கிளவுக்குடன் கன்சர்வேடிவ் கட்சி தலைவர் டேவிட் கேமரூன் பேச்சு நடத்தினார்.

இதற்கிடையே, தற்போதைய பிரதமர் கார்டன் பிரவுனும், தொழிலாளர் கட்சி சார்பாக நிக் கிளவுக்குடன் பேச்சு நடத்தினார். இது போன்ற இழுபறியான நிலைமையால் இங்கிலாந்து வர்த்தகத்திலும் சுணக்கம் ஏற்பட்டுள்ளது. பங்குச் சந்தை குறியீட்டு எண்களில் பெரிய மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. அரசியல் நெருக்கடி தீர வேண்டும் என நிதிச் சந்தை மற்றும் வர்த்தக நிறுவனங்கள் வலியுறுத்தி வருகின்றன.

இன்று இறுதி முடிவு

இதனால், கன்சர்வேடிவ் கட்சிக்கும் லிபரல் கட்சிக்கும் இடையே இன்று உடன்பாடு எட்டப்படும் என்று தெரிகிறது. இந்த தகவலை, தற்போதைய பாராளுமன்றத்தின் சபாநாயகர் அலிஸ்டைர் டார்லிங் தெரிவித்தார்.

இதுபற்றி அவர் கூறுகையில், "பேச்சுவார்த்தைகள் நீடித்து வருவது நல்லதல்ல என்று கருதுகிறேன். லிபரல் கட்சியும், கன்சர்வேடிவ் கட்சியும் மீண்டும் பேச்சு வார்த்தை நடத்த இருப்பதாக அறிந்தேன். இந்த பேச்சு வார்த்தையில், கூட்டணி உண்டா? இல்லையா? என்பது குறித்து இறுதி முடிவு காணப்படும் என்று உறுதியாக நம்புகிறேன்'' என்றார்.

25-ந் தேதிக்குள்

தொங்கு பாராளுமன்றம் அமையும் என்பதை எதிர்பார்த்து தேர்தலுக்கு முன்பே சில புதிய வழிகாட்டு நெறிமுறைகளை மந்திரிசபை செயலாளர் குஸ் ஓ டொன்னல் சமர்ப்பித்து இருந்தார். அதன்படி, 25-ந் தேதிக்குள் புதிய அரசு பதவியேற்க வேண்டும். அன்றைய தினம், புதிய பாராளுமன்றத்தில் இங்கிலாந்து ராணி உரையாற்றுவார்.

எனவே, முதல் மூன்று இடங்களை பிடித்துள்ள கட்சிகள் ஒன்று சேர்ந்து 25-ந் தேதிக்குள் ஒரு உடன்பாட்டுக்கு வருவது அவசியம். மேலும், புதிய வழிகாட்டு விதிகளின்படி, உடனடியாக மீண்டும் தேர்தல் நடத்துவதும் தடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
மேலும் இங்கே தொடர்க...

தமிழ்ச்செல்வன் குடும்பம் இந்தியா செல்ல அனுமதி :



விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப. தமிழ்ச்செல்வனின் குடும்பத்தினர் இந்தியாவில் அரசியல் புகலிடம் கோரவிருப்பதாக பிரதி மீள்குடியேற்ற அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்தார்.

விடுதலைப் புலிகளுடனான இறுதிக்கட்ட யுத்த நடவடிக்கைகளின்போது கைதுசெய்யப்பட்ட தமிழ்ச்செல்வனின் குடும்பத்தினர் தற்போது இராணுவத்தினரின் பாதுகாப்பில் தங்க வைக்கட்டிருக்கின்றனர்.

தமிழ்ச்செல்வனின் குடும்பத்தினரை இராணுவத்தினர் நன்றாகப் பராமரித்து வருவதாகவும் பிரதி மீள்குடியேற்ற அமைச்சர் குறிப்பிட்டார்.

தமிழ்ச்செல்வனின் குடும்பத்தினர் இந்தியாவுக்குச் செல்வதற்கான அனுமதி கோருவதாகவும், அவர்களது கோரிக்கை கவனத்திற்கொள்ளப்பட்டிருப்பதாகவும் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்தார்.

தமிழ்ச்செல்வனின் குடும்பத்தினர் போராளிகள் அல்லர் என்பதுடன், அவர்கள் பொதுமக்கள் எனவும் பிரதி மீள்குடியேற்ற அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் சுட்டிக்காட்டினார்.

அவர்களின் கோரிக்கை தொடர்பில் அரசாங்கத்தின் கவனத்திற்கு தான் கொண்டுசெல்லவிருப்பதாகவும் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்தார்.
மேலும் இங்கே தொடர்க...

கராச்சி ஏர்போட்டில் ஷூ பாம்பர் கைது

Tamil news paper, Tamil daily news paper, Tamil news, Tamil movie news, Tamil news paper online, political news, business news, financial news, sports news, today news, India news, world news, daily news update

கராச்சி : ஷூ பாமுடன் மத்திய கிழக்கு நாடுகளுக்கு செல்ல முயன்ற பாகிஸ்தான் தீவிரவாதி ஒருவனை கராச்சி விமான நிலையத்தில் பாதுகாப்பு படையினர் கைது செய்துள்ளனர்.
இதுகுறித்து விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகள் கூறியதாவது:
சிவில் இன்ஜினியரான பைஸ் முகமது (30) என்பவன் விமான நிலையத்துக்குள் வந்துள்ளான். விமானத்தில் ஏறுவதற்கு முன் அவனை சோதனை செய்தபோது சோதனை கருவி சத்தம் எழுப்பியது. சந்தேகமடைந்த போலீசார் உடனடியாக சோதனையிட்டதில் அவன் அணிந்திருந்த ஷூவில் நான்கு பாட்டரிகள் மற்றும் வெடிக்கச் செய்யும் ஒயர்களுடன், ஆப் மற்றும் ஆன் செய்யும் பட்டன்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
பைஸ் முகமதுவிடம் நடத்திய விசாரணையில், அவன் கராச்சியில் வசித்து வந்ததும் தாய் ஏர்வேஸ் விமானம் மூலம் மஸ்கட் செல்ல திட்டமிட்டதும் தெரியவந்தது.
விமானத்தில் சென்று கொண்டிருக்கும் போது இந்த வெடிபொருளை வெடிக்கச் செய்திருந்தால் பெரும் ஆபத்து நிகழ்ந்திருக்கும். ஆனால் இவனை விமான நிலையத்திலேயே கைது செய்ததால் பெரும் ஆபத்து தவிர்க்கப்பட்டு உள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனர். வடமேற்கு பகுதியான கைபர் பக்துன்கவாவில் இயங்கி வரும் தலிபான் மற்றும் இஸ்லாமிய தீவிரவாத அமைப்பை சேர்ந்தவனாக இருக்கலாம் என கராச்சி போலீசார் தெரிவித்தனர்.
மேலும் இங்கே தொடர்க...

வாடகை தாயின் இரட்டையருக்கு அனுமதி மறுப்பு



இஸ்ரேலை சேர்ந்த ஓரினச்சேர்க்கை ஆண், இந்திய வாடகைத் தாய் மூலம் பெற்ற இரட்டைக் குழந்தைகள் இஸ்ரேல் வர அனுமதி மறுக்கப்பட்டு உள்ளது.
டான் கோல்ட்பெர்க் என்பவர், இஸ்ரேலில் தனியாக வசிக்கிறார். அவருக்கு குழந்தை ஆசை வந்தது. மும்பையை சேர்ந்த வாடகைத் தாய் மூலம் செயற்கை கருவூட்டல் முறையில் சமீபத்தில் இரட்டைக் குழந்தைகள் பிறந்தன. அவற்றுடன் நாடு திரும்ப முயன்றார் டான்.
ஆனால், குழந்தைகளுக்கு தந்தை என்று சோதனையில் டான் நிரூபித்த பிறகே அனுமதி என்று இஸ்ரேல் குடும்ப நீதிமன்றம் கூறி விட்டது. எனவே, கடந்த 2 மாதங்களாக மும்பை ஓட்டலில் கைக்குழந்தைகளுடன் டான் தங்கியுள்ளார். தாய்நாட்டின் அனுமதியை எதிர்பார்த்து காத்திருக்கிறார்.
மேலும் இங்கே தொடர்க...

பார்வதி அம்மாள் இலங்கை திரும்பினார்- சிவாஜிலிங்கம்




விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனின் தாயாரான பார்வதி அம்மாள் மலேசியாவிலிருந்து இன்று மாலை இலங்கை வந்தடைந்ததாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம் வீரகேசரி இணையதளத்திற்கு தெரிவித்தார்.

பார்வதி அம்மாள் சிகிச்சை பெறுவதற்காக இந்தியாவுக்கு செல்வார் என எதிர்பார்க்கப்பட்ட போதும் இந்தியா அவருக்கான அனுமதியை வழங்கவில்லை. இந் நிலையில் மலேசியா ஒரு மாதம் தங்குமிடம் வீசாவை வழங்கி சிகிச்சை பெற அனுமதியளித்திருந்தது.

எனினும் பார்வதி அம்மாள் இன்று மாலை யாரும் எதிர்பாராத வகையில் கொழும்பு சர்வதேச கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தார் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம் எமது இணையதளத்துக்கு மேலும் தெரிவித்தார்.
மேலும் இங்கே தொடர்க...

கொழும்பில் 79 பிச்சைக்காரர்கள் கைது

கொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளிலுள்ள பிச்சைக்காரர்கள் 79 பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்கள் பிச்சைக்காரர்கள் போன்று நடமாடுவதாக பொலிஸாருக்குக் கிடைத்த தகவலையடுத்தே இவர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.

எனினும் ரயில் மற்றும் பஸ்களில் பிச்சை எடுப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளமையினால் வீதிகளில் பிச்சைக்காரர்களின் எண்ணிக்கை அதிகமாயுள்ளதால் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக மற்றுமொரு தகவல் தெரிவித்தது. இவர்கள் கொம்பனித்தெரு பொலிஸ் நிலையத்துக்குச் சொந்தமான கட்டடமொன்றில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
மேலும் இங்கே தொடர்க...

கண்ணிவெடி அகற்றும் போது பிரெஞ்சு அதிகாரி மரணம்






வவுனியாவுக்கு அப்பாலுள்ள இரணை இலுப்பை குளத்தில் மேற்கொள்ளப்படும் கண்ணிவெடி அகற்றும் பணியின் போது பிரான்ஸ் நாட்டு அதிகாரியொருவர் நேற்று உயிரிழந்துள்ளார்.

கண்ணிவெடி அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்தபோது திடீரென கண்ணவெடி வெடித்ததன் காரணமாகவே உயிரிழப்பு நேர்ந்துள்ளது என்று எப். எஸ். டி. நிறுவனத்தின் வவுனியா மாவட்ட முகாமையாளர் எஸ். தியாகேந்திரன் தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், எப். எஸ். டி. நிறுவனம் இலங்கையில் கண்ணிவெடி அகற்றும் பணியில் ஈடுபட்டுவரும் நிறுவனங்களில் ஒன்றாகும். இது சுவிஸ் நாட்டு அமைப்பாகும். இந்நிறுவனத்தில் தொழில் நுட்ப உத்யோகத்தராகப் பணியாற்றி வந்த பிரான்ஸ் நாட்டவரே உயிரிழந்துள்ளார்.

இரணை இலுப்பைக்குளத்தில் நேற்று காலை கண்ணிவெடி அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்த போது திடீரென கண்ணி வெடியொன்று வெடித்ததால் இந் நபர் உயிரிழந்திருக்கிறார்.

இந் நபர் கண்ணி வெடி விபத்துக்கு உள்ளானதும் உடனடியாக எப். எஸ். டி. நிறுவனத்தின் மருத்துவக் குழுவுக்கு அறிவிக்கப்பட்டது. உடனடியாக மருத்துவக் குழுவினர் அம்புலன்ஸ் வண்டியில் விரைந்த போது வண்டி விபத்துக்குள்ளானதில் சாரதியும், மருத்துவ குழு உறுப்பினர் ஒருவரும் படுகாயமடைந்துள்ளனர். இவர்கள் சிகிச்சைக்காக வவுனியா ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கண்ணிவெடி விபத்தில் உயிரிழந்த பிரான்ஸ் நாட்டவரின் சடலமும் வவுனியா சவச்சாலையில் வைக்கப்பட்டுள்ளது என்றார்.
மேலும் இங்கே தொடர்க...

நாட்டின் அபிவிருத்திக்கு அரச அதிகாரிகளின் அர்ப்பணிப்பு அவசியம்


யுத்தமற்ற அமைதிச் சூழலை வாய்ப்பாக்கிக் கொண்டு நாட்டை பொருளாதாரத்திலும் அபிவிருத்தியிலும் கட்டியெழுப்புவதற்கு அரச அதிகாரிகள் அர்ப்பணிப்புடன் செயற்படுவது அவசியமென பிரதி நிதியமைச்சர் கலாநிதி சரத் அமுனுகம தெரிவித்தார்.

ஆசியாவின் முன்னோடி நாடாக இலங்கையைக் கட்டியெழுப்பும் செயற்பாடுகளுக்கு முழுமையான பங்களிப்பை நிதியமைச்சின் மூலம் வழங்குவதாக தெரிவித்த அவர் நாட்டின் பொருளாதார கேந்திரமாகவுள்ள நிதியமைச்சின் செயற்பாடுகளை பாமர மக்களும் அறிந்து கொள்ளும் வகையில் நடவடிக் கைகளை மேற்கொள்ளப் போவ தாகவும் தெரிவித்தார்.

புதிய பிரதிநிதியமைச்சரான கலாநிதி சரத் அமுனுகம நேற்று நிதியமைச்சில் தமது பொறுப்புக்களை உத்தியோகபூர்வமாகக் கையேற்றார்.

நேற்றுக்காலை சுபவேளையில் மத அனுஷ் டானங்களுடன் நடைபெற்ற இந்நிகழ்வில் நிதியமைச்சின் செயலாளர் பி.பி. ஜயசுந்தர உட்பட அமைச்சின் உயரதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர். அமைச்சின் அதிகாரிகள் மத்தியில் உரையாற்றிய பிரதியமைச்சர் மேலும் தெரி வித்ததாவது,

நாட்டில் நிலவிய யுத்த சூழல் கார ணமாக சர்வதேச நாடுகள் எமக்கு உதவு வதற்கு முன்வராத காலம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டுள்ளது.

யுத்தம் நிலவிய காலத்தில் அரச அதிகாரிகளின் மனநிலையும் சரியானதாக இருக்கவில்லை. தற்போது சிறந்த சூழல் உருவாகியுள்ளது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அதற்கான வழி வகுத்துள்ளார்.

இன்றைய சூழல் நாட்டைப் பொரு ளாதாரத்திலும் அபிவிருத்தியிலும் கட்டி யெழுப்ப மிகவும் உகந்ததாகவுள்ளது. அரச அதிகாரிகள் தம் அர்ப்பணிப்புடனான சேவையினால் முழுமையான பங்களிப்பை வழங்க வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் உரையாற்றிய நிதியமைச்சின் செயலாளர் பி.பி. ஜயசுந்தர நாட்டின் பொருளாதார ஏற்றத்தை நிர்ணயிக்கும் நிதியமைச்சில் சரத் அமுனுகம போன்ற நிர்வாகத்திறன் மிக்க அமைச்சர்கள் பங்கேற்பது மிகச் சிறந்ததொன்றாகும்.

நாடு சுனாமி பேரழிவினால் சிக்கித்தவித்த வேளையில், அப்போதும் பிரதி நிதி யமைச்சராகவிருந்து தேசிய சர்வதேச ரீதியில் உதவிகளைப் பெற்றுக்கொள்ள தமது திறமையைப் பயன்படுத்தியவர் அமைச்சர் சரத் அமுனுகம.

நிர்வாகத்திறன் கொண்ட அமைச்சர்களில் இவர் முக்கியம் பெறுபவர் எனவும் தெரிவித்தார்.
மேலும் இங்கே தொடர்க...

ஒரு மாதத்தினுள் மருந்துத் தட்டுப்பாடு முற்றாக நீக்கம் அமைச்சர் மைத்திரி







அரச வைத்தியசாலைகளில் நிலவி வரும் மருந்துத் தட்டுப்பாட்டை நிவர்த்திக்கும் வகையில் 47 மருந்துவகைகள் நேற்று முன்தினம் முதல் ஆஸ்பத்திரிகளுக்கு விநியோகிக்கப்பட்டு வருகின்றன.

இரு வாரங்களில் மேலும் 97 வகை மருத்துகள் கிடைக்க உள்ளதோடு ஒரு மாதத்தினுள் மருந்துத் தட்டுப்பாடு முற்றாக தீர்க்கப்படும் என சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேன கூறினார்.

மகாவலி கேந்திர நிலையத்தில் நேற்று (10) நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் உரையாற்றிய அவர் மேலும் கூறியதாவது,

எதிர்வரும் காலத்தில் இவ்வாறான மருந்துத் தட்டுப்பாடுகள் ஏற்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஓரிரு வாரங்களில் ஆஸ்பத்திரிகளில் காணப்படும் மருந்துத் தட்டுப்பாடு சுமூக நிலைக்கு வரும்.

மருந்துக் கம்பனிகள் தொடர்பிலும் உரிய நடைமுறைகளை பின்பற்ற உள்ளோம். தேவையான மருந்து வகைகளை விமானப் படை விமானம் மூலம் தருவிக்க ஜனாதிபதியும் பாதுகாப்புச் செயலாளரும் அனுமதி வழங்கியுள்ளனர் என்றார்.
மேலும் இங்கே தொடர்க...

500 முன்னாள் புலி உறுப்பினர்கள் இவ்வாரம் பெற்றோரிடம் ஒப்படைப்பு





புனர்வாழ்வு அளிக்கப்பட்ட முன்னாள் புலி உறுப்பினர்கள் 500 பேர் இவ்வாரம் தமது பெற்றோர், உறவினர்களிடம் ஒப்படைக்கப்படவுள்ளனர் என்று புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம் பிரிகேடியர் சுதந்த ரணசிங்க தெரிவித்தார்.

இம்மாதம் 12 ஆம் திகதி தொடக்கம் 18 ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள் வெற்றிவாரம் கொண்டாடப்படவுள்ள அதேசமயம் புனர்வாழ்வு அளிக்கப்பட்ட ஐநூறு பேரை விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

உறவினர்களிடம் ஒப்படைக்கப்படவுள்ள ஐநூறு பேரில் சிறுவர்கள், பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் சாதாரண பொது மக்களும் அடங்குவர் என்றும் குறிப்பிட்டார்.

நாளாந்தம் சமூக நடவடிக்கையில் ஈடுபடுவதற்குத் தேவையான சகல பயிற்சிகளும் இவர்களுக்கு வழங்கப்ப ட்டுள்ளதுடன் போதிய வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டுள்ளன என்றும் பிரிகேடியர் சுட்டிக்காட்டினார்.

உளவியல் ரீதியில், விசேட பயிற்சிகளும், ஆளுமை, தலைமைத்துவம், குழுச் செயற்பாடு, விளையாட்டு ஆகிய துறையில் போதிய பயிற்சிகள் வழங்கப்பட்டு சமூக நடவடிக்கையில் ஈடுபடுவதற்கு பொருத்தமானவர்கள் என அடையாளங் காணப்பட்டவர்களே உறவினர்களிடம் ஒப்படைக்கப்படவுள்ளனர் என்றும் பிரிகேடியர் மேலும் தெரிவித்தார்.
மேலும் இங்கே தொடர்க...

செனற்சபை, தேர்தல் முறை மாற்றம் 17வது திருத்தத்துக்குத் திருத்தம் ஜூன் மாதத்தில் அரசியலமைப்பு மாற்றம்





அரசியல் யாப்பில் பல்வேறு திருத்தங்களை செய்வதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. இது தொடர்பான திருத்த மசோதா இரு வாரங்களுக்குள் அமைச்சரவை அனுமதிக்காக சமர்ப்பிக்கப்படும். ஒரு மாதத்தினுள் அரசியல் யாப்பு திருத்த மசோதாவை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க உள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி செயலாளரும் அமைச்சருமான மைத்திரிபால சிறிசேன கூறினார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் மாநாடு நேற்று (10) மகாவலி கேந்திர நிலையத்தில் நடைபெற்றது. அமைச்சர் மேலும் கூறியதாவது,

பொருளாதாரத்தை பலப்படுத்தவும் மஹிந்த சிந்தனை தொலைநோக்கின் பிரகாரம் ஆசியாவின் முன்னோடியாக இலங்கையை அபிவிருத்தி செய்யவும் ஏற்றவாறு அரசியலமைப்பில் திருத்தங்களை மேற்கொள்ள அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்காக அமைச்சர் ஜீ. எல். பீரிஸின் தலைமையில் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

தேர்தல் முறையில் மாற்றம், 17 ஆவது திருத்த சட்டத்தில் திருத்தம், செனட் சபை அடங்கலான பல திருத்தங்கள் அரசியலமைப்பில் மேற்கொள்ளப்படவுள் ளன. அரசியலமைப்பு திருத்த மசோதா தயாரிக்கப்பட்டு வருகிறது. திருத்த மசோதா இரு வாரங்களில் அமைச்சரவை யின் அனுமதிக்காக சமர்ப்பிக்கப்படும். ஜூன் மாதத்தில் திருத்த மசோதா பாராளுமன்றத்தில் சமர்ப் பிக்கப்பட்டு நிறைவேற்றப்படவுள்ளது.

பாராளுமன்ற தெரிவுக் குழுவில் இந்த திருத்த மசோதா சமர்ப்பிக்கப்படும்போது சட்ட திருத்தம் தொடர்பில் எதிர்க்கட்சி களுக்கு தமது யோசனைகளை முன்வைக்க முடியும். தற்பொழுதுள்ள தேர்தல் முறை யினால் பிரதேசத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் உறுப்பினர்கள் தெரிவாவதில்லை. விருப்பு வாக்கு முறையினாலும் பல்வேறு பிரச்சினைகள் ஏற்படுகிறது.

உள்ளூராட்சி சபைத் தேர்தலில் கிரா மத்திற்கு ஒரு உறுப்பினர் தெரிவாகும் வகையில் மாற்றப்படும். 17ஆவது திருத் தச் சட்டத்தை பலப்படுத்தவும் அதனூடாக சுயாதீன ஆணைக் குழுக்களை திறம்பட இயங்க வைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

செனட் சபைக்கு 9 மாகாணங்களில் இருந்தும் ஒரு பிரதிநிதி தெரிவாக உள் ளார். குறைந்த பட்சம் 25 உறுப்பினர்கள் செனட் சபையில் அங்கம் வகிப்பர்.

இன ரீதியான பிரச்சினைகள், அர சியலமைப்பு அடிப்படையிலான பிரச் சினைகள் தொடர் பில் மாகாண சபைக் கும் மத்திய அரசாங்கத்திற்குமிடையில் தொடர்பு ஏற்படுத்தும் வகையில் செனட் சபை செயற்படும் என்றார்.

அமைச்சர் சுசில் பிரேம் ஜெயந்த் கூறிய தாவது, ஏதும் இனத்தை பாதிக்கும் விடய த்தை அடிப்படையாகக் கொண்ட சட்டம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டாலும் செனட் சபையில் அது குறித்து ஆராயப்பட்டு அதில் திருத்தம் செய்ய முடியும்.
மேலும் இங்கே தொடர்க...

நாட்டை கட்டியெழுப்பும் செயற்பாடுகளுக்கு சர்வதேசம் கைகொடுக்க வேண்டும் வெளிநாட்டு தூதுவர்கள், இராஜதந்திரிகள் மத்தியில் ஜனாதிபதி உரை; நல்லிணக்க ஆணைக்குழ



இனங்களுக்கிடையில் நல்லுறவை ஏற்படுத்தி நாட்டைப் பொருளாதாரத்தில் கட்டியெழுப்பும் அரசாங்கத்தின் நடவடிக்கைகளுக்கு சர்வதேச நாடுகள் கைகொடுக்க வேண்டுமென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கேட்டுக் கொண்டார்.

கடந்த கால நெருக்கடியான நிலைமைகளை ஆராய்வதற்காக நல்லிணக்க ஆணைக்குழுவொன்றை நியமிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாகத் தெரிவித்த ஜனாதிபதி அத்தகைய துன்பங்களை எதிர்கால சந்ததியினர் எதிர்கொள்ள ஒருபோதும் இடமளிக்கப் போவதில்லை எனவும் தெரிவித்தார்.

வெளிநாட்டுத் தூதுவர்கள், உயர்ஸ்தானி கர்கள் இராஜதந்திரிகளை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்றுச் சந்தித்தார். ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற இவ் விசேட வைபவத்தில் உரையாற்றும் போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார்.

ஜனாதிபதி தனதுரையில், மேலும் தெரிவித்ததாவது, உங்களில் பலர் நீண்ட காலமாக இலங்கையில் சேவை செய்தவர்கள். இதற்கு முன் நான் உங்களை நாட்டில் பாரிய பகுதியொன்று புலிகளின் அதிகாரத்திலிருந்த போதே சந்தித்திருக்கிறேன்.

அன்று போலவே இன்றும் ஜனநாயகம் மற்றும் மனித சுதந்திரத்தை எமது அரசாங்கம் மதிக்கிறது. நாட்டில் ஜனநாயகத்தை நிலைநாட்ட வேறு வழியில்லாத சந்தர்ப்பத்திலேயே சகல இன மக்களுக்கும் அச்சுறுத்தலாக விருந்த பயங்கரவாதத்துக்கு எதிராக நாம் நடவடிக்கை எடுக்க வேண்டி ஏற்பட்டது.

புலிகளுடன் சமாதானப் பேச்சுவார்த்தை நடாத்துவதற்கு நாம் பல முறை முயற்சித்துள்ளோம். நான் முதல் தடவை ஜனாதிபதியாக பதவியேற்றதும் புலிகளின் தலைவரைச் சந்திப்பதற்கான விருப்பத்தை வெளிப்படையாகத் தெரிவித்தேன்.

ஜெனீவா மற்றும் ஒஸ்லோ பேச்சுவார்த்தைகளில் நாம் பெரும் எதிர்பார்ப்பைக் கொண்டிருந்தோம். அதற்காக நாம் உயர் மட்டப் பிரதிநிதிகளை அனுப்பினோம். எனினும் அந்த முயற்சி தோல்வியடைந்தது.

உலகில் மிக மோசமான பயங்கரவாதக் குழுவுடன் நாம்யுத்தம் புரிந்த போதும் நாம் முழுமையான ஜனநாயக உரிமையைப் பாதுகாப்பதில் மிகக் கவனமாக செயற்பட்டதைப் பெருமையுடன் கூற முடியும்.

புலிகளுக்கெதிரான மனிதாபிமான நடவடிக்கைகளின் போது இடம்பெயர்ந்த 2,60,000 மக்களில் 70 வீதமானோரை நாம் இந்த குறுகிய காலத்தில் மீள்குடியமர்த் தியுள்ளோம்.

அவசரக் கால சட்டத்தில் திருத்தம் மேற்கொண்டுள்ளோம். அதில் பல சரத்துக்களை நீக்கியுள்ளோம். இதனை மிகவும் கவனமாகவே மேற்கொண்டோம். புலிகளின் ஆயுதங்கள் இப்போதும் பெருந்தொகையாகக் கண்டுபிடிக்கப்பட்டு வருகின்றன. நாடு கடந்த அரசசொன்றை நிறுவுவதற்காக புலிகள் நிதி சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர். அதற்கான தேர்தலொன்றை நடத்தவும் முயற்சித்தனர்.

இது போன்று வெளிநாடுகளில் இடம்பெறும் சூழ்ச்சிகளை நேரடியாக எம்மால் கட்டுப்படுத்த முடியாது. அதனால்தான் அவசரகால சட்டத்தை மேலும் தொடர முடிவெடுத்தோம். பயங்கரவாதத்தினால் பல உலக நாடுகள் பேரழிவுகளைச் சந்தித்துள்ளமையை நாம் அறிவோம். பல இலட்சக்கணக்கான மக்கள் இதனால் இடம்பெயரவும் நேர்ந்துள்ளது. இதனால் எமது தேசிய பாதுகாப்பில் நாம் முக்கிய கவனம் செலுத்த வேண்டியுள்ளது.

முரண்பாடான தவறான கருத்துக்கள், பிரசாரங்கள் சர்வதேச ரீதியில் சில சக்திகளால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அவை உண்மைக்குப் புறம்பானவை.

இத்தகைய அச்சுறுத்தல்களுக்கு இலங்கை மீண்டும் முகங்கொடுக்க நேரிடுமோ என்பதில் அரசாங்கம் மிக கவனமாகச் செயற்படுகிறது. அதனால் நாட்டின் பாதுகாப்பில் நாம் முக்கிய கவனம் செலுத்தி வருகிறோம்.

நான் இது சம்பந்தமாக வெளிநாட்டுத் தூதுவர்களாகிய உங்களுக்குத் தெளிவுபடுத்தியுள்ளேன். இதனைக் கருத்திற் கொண்டு நீங்கள் உங்கள் நாடு களில் இது தொடர்பாகத் தெளிவுபடுத்துவது முக்கியம். இது விடயத்தில் தூதுவர்கள் அனைவரும் கூடுதல் கவனத்தைச் செலுத்த வேண்டியதன்

முக்கியத்துவத்தை நாம் வலியுறுத்து கிறேன். பல முரண்பாடான கருத்துக்கள் நிலவுகின்ற போதும் அரசாங்கத்துடனும் வெளிநாட்டமைச்சுடனும் தொடர்பு கொண்டு அதன் உண்மைத் தன்மையை சர்வதேச நாடுகளுக்குத் தெளிவுபடுத்தி எமது நாடுகளுக்கிடையிலான நல்லுறவினை மேலும் பலப்படுத்த தூதுவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டியுள்ளது.

நாம் எமது கலாசாரம் மரபுரிமைகளுடன் கட்டுப்பட்டவர்கள். அதற்கிணங்கவே நாம் தீர்மானங்களை மேற்கொள்கிறோம். ஐக்கிய நாடுகள் சபையுடனும் நாம் இத்தகைய விதமாகவே நட்புறவை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கின்றோம். மனித உரிமை மற்றும் இன நல்லிணக்கம் போன்றே மதங்களுக்கிடையிலான நட்பு றவில் இலங்கை முன்னுதாரணமாக வுள்ளது. அதனால்தான் எத்தகைய பிரச்சினை வந்தாலும் பேச்சுவார்த்தை மூலம் அத னைத் தீர்க்க முடிகின்றது. இதனால் மனித உரிமை மற்றும் இன நல்லுறவு தொடர்பில் ஆழமான உணர்வுண்டு.

தேசிய நல்லுறவில் ஏற்பட்ட பாதிப்பு களைச் சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டுமென்பதில் எமது அரசாங்கம் கவனமெடுத்துள்ளது. அதற்காக மீளிணக்க ஆணைக் குழுவொன்றை விரைவில் நியமிக்கத் தீர்மானித்துள்ளோம். அதற்கான பூர்வாங்க நடவடிக்கைகள் தற்போது நிறைவு பெற்றுள்ளன.

மூன்று தசாப்த காலங்கள் தந்த துயரங் களை எதிர்கால சந்ததியும் சந்திப்பதற்கு நாம் இடமளிக்க முடியாது. 2002ம் ஆண்டு பெப்ரவரியில் இடம்பெற்ற புரிந்துணர்வு உடன்படிக்கை அதன் வீழ்ச்சி முதல் 2009 மே மாதம் இடம்பெற்ற நெருக்கடி நிலைமை வரை ஆராய்வதற்கு இவ்வாணைக் குழுவுக்கு உரிமையுண்டு. இந்த ஆணைக்குழுவில் அங்கம் வசிப்போர். நாட்டின் கெளரவத்தையும் சுயாதீனத்தையும் நம்பகத் தன்மையையும் பாதுகாக்கும் வகையில் மிகுந்த அர்ப்பணிப்புடன் செயற்படுபவர் என்பது எனது நம்பிக்கை.

இதேவேளை விரைவில் வட மாகாண சபைத் தேர்தலை நடத்தவும் நாம் எதிர்பார்க்கின்றோம்.

இதேவேளை எமக்கு மிகவும் இக்கட் டான சூழ்நிலை ஏற்பட்ட போது சர்வ தேச சமூகம் எம்முடன் சேர்ந்திருந்ததை கூறியாக வேண்டும். அதே போன்று சர்வதேச நாணய நிதியம் எமது அபிவிருத்தி நட வடிக்கைகளில் திருத்தி தரும் வகையில் பங்களிப்பு செய்ததையும் இச்சந்தர்ப்பத்தில் நினைவுகூர வேண்டும்.

உலகளாவிய பிணைப்பை போன்றே ஸ்திரம் எமது அனைவருக்கும் பொதுவான பொறுப்பு என நாம் நம்புகிறோம். அதற்கேற்ப ஐக்கிய நாடுகள் அமைப்பு உட்பட்ட பல்தரப்பு மேடைகளில் எமது பாரம்பரிய நடைமுறைகளை தொடர்ந்தும் பேணவிரும்புகிறோம்.

நேற்றைய இந்நிகழ்வில் அமைச் சர்கள் பசில் ராஜபக்ஷ, ஜீ.எல். பீரிஸ், பிரதி அமைச்சர் கீதாஞ்சன குணவர் தன, பாதுகாப்புச் செயலாளர் கோதா பய ராஜபக்ஷ உட்பட முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
மேலும் இங்கே தொடர்க...