8 டிசம்பர், 2010

1,60,000 பேர் மீள்குடியேற்றம் என்ற பெயரில் உறவினர்களின் வீடுகளில் தங்கியுள்ளனர்:மாவை எம்.பி


மீள்குடியேற்றப்படுவதற்கு இன்னும் 23 ஆயிரம் பேரே எஞ்சியிருப்பதாக அரசு கூறியிருக்கின்றபோதிலும் ஒரு இலட்சத்து 60 ஆயிரம் பேர் மீள்குடியேற்றம் என்ற பெயரில் தற்காலிக தங்குமிடங்களிலோ அல்லது உறவினர்,நண்பர்களது வீடுகளிலோ தங்கியிருக்கின்றனர் என்று தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் செயலாளரும் யாழ். மாவட்ட எம்.பி.யுமான மாவை சேனாதிராஜா நேற்று சபையில் தெரிவித்தார்.

மோசமான காலநிலை மழை வெள்ளம் ஆகியவற்றால் மீள்குடியேற்ற பிரதேசங்கள் வெள்ளக்காடாகியுள்ளன. மக்கள் ஒதுங்குவதற்கு இடமில்லாமல் பசியிலும் பட்டினியிலும் அவல நிலைக்குள்ளாகியுள்ளனர். பாதுகாப்பான ஏற்பாடுகள் எதுவும் அங்கு இல்லை. எனவே அரசாங்கம் மீள்குடியேற்ற அமைப்பும் உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற வரவு செலவுத்திட்டம் மீதான ஏழாம் நாள் விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில் காலநிலை மாற்றத்தால் முழு நாடும் மழை வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ளது. இது வடக்கு கிழக்கில் அதிகமாகும். மீள்குடியேற்றப் பிரதேசங்களில் கட்டுக்கடங்காத வெள்ளம் ஏற்பட்டுள்ளதால் அங்கு பாரிய அவலம் காணப்படுகிறது.

இந்த நிலைமைகளை நாம் முன்னரே எடுத்துக்கூறியிருந்தோம். வருடத்தின் செப்டெம்பர் மாதத்தின் பின்னர் வடக்கு கிழக்கில் இவ்வாறான அனர்த்தம் வரும் என்பதையும் எனவே அதற்கு மாற்று நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் வலியுறுத்தியிருந்தோம்.

இன்று மீள்குடியமர்த்தப்பட்டதாகக் கூறப்படுகின்ற மக்கள் வெள்ளத்தினாலும் மழையிலும் பாதிக்கப்பட்டு பாதுகாப்பான இடங்கள் இன்றி பசி பட்டினியுடன் அவலப்படுகின்றனர். இதனை இங்கு வேதனையுடன் தெரிவிக்கின்றோம், கடந்த 27 ஆம் திகதி வலிகாமம் வடக்கில் ஒரு தொகுதி மக்கள் மீள்குடியேற்றப்பட்டனர்.ஆனாலும் இவர்களுக்கு தேவையான வசதிவாய்ப்புகள் பெற்றுக் கொடுக்கப்படவில்லை. இவர்களது இழப்புக்கள் குறித்து எந்த விதமான மதிப்பீடுகளும் மேற்கொள்ளப்படவில்லை.

இங்கிருந்து 26 ஆயிரம் குடும்பங்களைச் சேர்ந்த 81 ஆயிரம் பேர் இடம்பெயர்ந்துள்ளனர். இங்கு இன்னும் 21 ஆயிரம் குடும்பங்களை மீள்குடியேற்றப்படவிருக்கின்றனர். வடமராட்சி கிழக்குக்கான போக்குவரத்து தற்போது துண்டிக்கப்பட்டுள்ளது. அங்கு வெள்ள அபாயம் ஏற்பட்டிருக்கின்றது. இன்னும் 23 ஆயிரம் பேரே மீள்குடியமர்த்தப்படவிருப்பதாக அரசாங்கம் பாராளுமன்றத்திலும் அதற்கு வெளியிலும் கூறிவருகின்றது. ஆனால் ஒரு லட்சத்து 60 ஆயிரம் மக்கள் இன்னும் முகாம்களிலும் உறவினர்களது வீடுகளிலும் தற்காலிக முகாம்களிலும் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

முல்லைத்தீவின் கேப்பாப்பிளவு என்ற இடத்தில் 300 குடும்பங்கள் மீள்குடியேற்றப்படவேண்டும். ஆனால் இங்கு 7 கிலோ மீற்றர் தூரத்திற்கு உயர் பாதுகாப்பு வலயமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அந்த மக்கள் அங்கு மீள்குடியேற்றப்படவில்லை. சம்பூரைச் சேர்ந்த சுமார் 6000 குடும்பங்கள் 5 வருடங்களாக அநாதரவாக்கப்பட்டுள்ள நிலையில் காணப்படுகின்றனர். இவர்களும் மோசமான அவலத்தை எதிர்நோக்கியுள்ளனர். இவ்விடயங்களில் அரசாங்கம் உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும்.

தமிழகத்தின் கரையோரப் பிரதேசங்கள் இவ்வாறு இயற்கை அனர்த்தத்திற்கு உள்ளாகும் சந்தர்ப்பங்களில் அங்குள்ள அரசு உடனடியாக கூடி ஆராய்ந்து துரித நடவடிக்கைகளை மேற்கொள்கின்றது. இது இலங்கையிலும் பேணப்படவேண்டும் மழையின் பாதிப்புக்கு உள்ளாகின்ற வன்னி நிலப்பரப்பு தொடர்பில் மீள்குடியேற்ற அமைச்சு உள்ளிட்ட அதிகாரிகள் ஜனாதிபதியுடன் கூடி ஆராய்ந்து உடனடி தீர்வுகளையும் நிவாரணங்களையும் கொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கேட்டுக்கொள்கின்றேன். ஏனெனில் காலநிலை மாற்றத்தின் போது வடக்கு கிழக்கு கரையோரப் பிரதேசமே பெரிதும் பாதிக்கப்படுகின்றது. எனவே இதன் தொடர்பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் முகமாக விசேட ஆணைக்குழுவொன்றினை அமைத்து அந்த மக்களைப் பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்குமாறும் கோரிக்கை விடுக்கின்றேன். மீள்குடியேற்றப்பட்ட மக்கள் ஒருபுறத்தில் வசதிவாய்ப்புகள் நிவாரணங்கள் அற்ற நிலையில் இருக்கின்ற அதேவேளை மறுபுறத்தில் பசி பட்டினி மற்றும் மழை வெள்ளத்தினால் பாரிய பாதிப்புக்களுக்கு உள்ளாகியிருக்கின்றனர். இவர்களுக்கான நிவாரணங்களைப் பெற்றுக்கொடுக்குமாறு கேட்கிறேன் என்றார்.
மேலும் இங்கே தொடர்க...

விக்கிலீக்ஸ் ஸ்தாபகருக்கு பிணை வழங்க நீதிமன்றம் மறுப்பு

பாலியல் குற்றச்சாட்டின்பேரில் கைதுசெய்யப்பட்டுள்ள விக்கிலீக்ஸ் ஸ்தாபகர் ஜூலியன் அசாஞ்ஞேவிற்கு பிணைவழங்க பிரித்தானிய நீதிமன்றம் மறுத்துவிட்டது.

மேலும் இவரை இம்மாதம் 14 ஆம் திகதிவரை தடுத்துவைக்கும் படியும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பிரித்தானிய நேரப்படி நேற்று காலை 9.00 மணிக்கு கைதுசெய்யப்பட்ட ஜூலியன் அசாஞ்ஞே வெஸ்மினிஸ்டர் மஜிஸ்திரேட் நீதிமன்றத்தின் முன் நேற்று நிறுத்தப்பட்டார்.

எனினும் இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள அவரின் சட்டத்தரணி இது சர்வதேச சதியெனவும் சுவீடன் மீது பிரியோகிக்கப்பட்டுள்ள அழுத்தம் காரணமாகவே அந் நாட்டு நீதிமன்றம் இவருக்கு பிடியாணை விடுத்துள்ளதெனவும் தெரிவித்துள்ளார்.
மேலும் இங்கே தொடர்க...

இரணைமடுக் குளத்தின் வான் கதவுகள் திறப்பு



அடைமழை காரணமாக இரணைமடுக்குளம் நிரம்பியுள்ளது. குளத்தின் பதினொரு வான் கதவுகளும் திறந்து விடப்பட்டு நீர் வெளியேறிக் கொண்டிருப்பதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

முப்பது அடி உயரத்துக்கு நீரைத் தேக்கி வைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது.

வான்கதவுகளால் நீர் வெளியேறுவதை தென்னிலங்கையிலிருந்து வரும் பெருந்திரளான பொதுமக்களும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளும் ஆர்வத்துடன் பார்வையிடுகின்றனர்.
மேலும் இங்கே தொடர்க...

ஆணாக மாறிய பெண் - மாத்தறையில் வித்தியாசமான வழக்கு

தன்னை ஓர் ஆண் எனக் கூறி மற்றுமொரு யுவதியை திருமணம் முடித்த பெண் ஒருவரை மாத்தறை நீதவான் நீதிமன்றம் 5ஆயிரம் ரூபா சரீரப் பிணையில் செல்ல அனுமதித்துள்ளது.

திக்வெல்ல, அழுத்கொடை நிரோசா பிரியங்கா என்ற பெண் (வயது 32) வனிகசிங்க சாரங்க குமார என்ற போலியான ஆணினது பெயரில் மாத்தறை தெவிநுவரை என்ற இடத்தைச் சேர்ந்த 23 வயது யுவதி ஒருவரை திருமணம் செய்தாக பொலீஸார் வழக்குத்தாக்கல் செய்தனர். இரண்டு குழந்தைகளின் தாய் ஒருவர் தன்னை ஆண் எனக்கூறி யுவதி ஒருவரை திருமுணம் செய்துகொண்டுள்ளார்.

அவர் இராணுவத்தில் பணியாற்றுவதாகவும் கூறியுள்ளார். ஆணாக நடிப்பவர் ஒரு பெண் என பொலிஸார் உறுதியாக நீதிமன்றுக்குக் கூறினர். இதையடுத்து முறைப்பாட்டை விசாரித்த மத்தறை நீதவான் உதேஷ் ரனதுங்க மேற்படி சம்பவத்துடன் தொடர் புடையவரை மாத்தறை மாவட்ட வைத்திய சாலையின் சட்டவைத்திய அதிகாரி முன் நிறுத்தி சம்பந்தப் பட்டவர் ஆணா? பெண்ணா? எனப் பரிசோதித்து அறிக்கை சமர்ப்பிக்கும்படி மாத்தறை சிறைச்சாலை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

அதனையடுத்து அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு சந்தேக நபர் ஒரு பெண் என உறுதிப் படுத்தப்பட்டது. சந்தேக நபரை 5000 ரூபா பிணையில் செல்ல நீதவான் அனுமதி வழங்கினார்.
மேலும் இங்கே தொடர்க...

வெளிநாடுகளிலுள்ள இலங்கையர்களுக்கும் கட்டியெழுப்பியுள்ள சமாதானம் சொந்தம்:ஜனாதிபதி



நாட்டின் அனைத்து மாணவர்களுக்கும் சிங்களம், தமிழ் ஆங்கிலமொழியை கற்பிக்கும் மும்மொழி வேலைத்திட்டத்தை ஆரம்பித்துள்ளோம்.

வடக்கு கிழக்கு பகுதிகளில் இடம்பெயர்ந்த மக்களை மீள்குடியேற்றி பாரிய அபிவிருத்தித் திட்டங்களை மேற்கொண்டு வருகின்றோம். பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் மேற்கொள்ளப்படுகின்ற அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் அரசியல் தீர்வின் மிகப்பெரிய அங்கமாகும். அத்துடன் தேசிய ஒற்றுமையை கட்டியெழுப்புகின்றோம் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். நாம் தற்போது கட்டியெழுப்பியுள்ள சமாதானமானது வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களுக்கும் சொந்தமாகும்.

அந்த சமாதானத்தை பேண ஒத்துழைப்பு வழங்குவது சமாதானத்தை மதிக்கின்ற ஒருவரின் கடமையாகும். சமாதானத்தை கட்டியெழுப்ப வேண்டுமாயின் இலங்கை தொடர்பில் உண்மையை சர்வதேசத்துக்கு கூறவேண்டும். உண்மைக்காக அர்ப்பணிக்காதவர்களினால் சமாதானத்தையோ சுதந்திரத்தையோ வெற்றிக்கொள்ள முடியாது. தாம் பிறந்த நாட்டின் மக்களுக்கு அன்பு செலுத்தாத ஒருவரினால் உலகத்துக்கு நல்லெண்ணத்தை வெளிப்படுத்த முடியாது என்றும் அவர் குறிப்பிட்டார்.

பரிசுத்த பாப்பரசரினால் கர்தினாலாக திருநிலைப்படுத்தப்பட்டுள்ள கத்தோலிக்க திருச்சபையின் பேராயர் மல்கம் ரஞ்சித் வண. பிதாவை வரவேற்கும் உத்தியோகபூர்வ நிகழ்வு நேற்று முன்தினம் திங்கட்கிழமை மாலை கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.

அதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே ஜனாதிபதி மேற்கண்டவாறு குறிப்பிட்டார். ஜனாதிபதி அங்கு மேலும் கூறியதாவது:

இலங்கை கத்தோலிக்க மக்களுக்கு இந்த யுகமானது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என்பது அனைவருக்கும் தெரிந்த விடயமாகும். ஒருபக்கம் இது இயேசுவின் பிறப்பை கொண்டாடும் காலமாகும். அதேபோன்று மூன்று தசாப்தங்களாக கத்தோலிக்க மக்கள் எதிர்பாத்திருந்த சமாதானம் அடையப்பட்டுள்ள காலமாகும். அத்துடன் ஆசியாவுக்கு கிடைத்த ஒரேயோரு கர்தினால் பதவி இலங்கைக்கு சொந்தமாகியுள்ளது. அது இந்நாட்டின் கத்தோலிக்க மக்களுக்கு கிடைத்த ஆசிர்வாதம் என்பதுடன் பாரிய வெற்றி என்று நான் கருதுகின்றேன்.

அர்ப்பணிப்பு

மல்கம் ரஞ்சித் ஆண்டகையின் விசேட அர்ப்பணிப்பு மற்றும் சேவை காரணமாகவே அவர் கர்தினாலாக திருநிலைப்படுத்தப்பட்டுள்ளார் என்பதனை நாம் விவாதமின்றி ஏற்றுக்கொள்ளவேண்டும். மல்கம் ரஞ்சித் ஆண்டகை சிறு வயது முதலே சமய வாழ்க்கையில் ஆழமாக ஈடுபட்ட ஒருவராவார். சிறு வயது முதல் சமய வாழ்வின் புனித தன்மையை கண்டுவந்த அவர் சமய கல்வியை பெற்ற காலத்தில் படிப்படியாக சமய வாழ்வின் முக்கியத்துவத்தை புரிந்துகொண்டிருப்பார் என்று நம்புகின்றோம்.

மல்கம் ரஞ்சித் ஆண்டகையான உங்களிடம் நாங்கள் கண்ட பல்வேறு சிறந்த குணாம்சங்கள் உள்ளன. எந்த இடத்திலும் சேவைக்காக உங்களை அர்ப்பனித்தவர் நீங்கள். நீங்கள் களுத்துறை பகுதிக்கு பொறுப்பாக இருந்தபோது சுனாமி அனர்த்தம் ஏற்பட்ட காலத்தில் அம்மக்களுக்கு செய்த சேவை வழங்கிய பாதுகாப்பு மற்றும் அவர்களின் வாழ்க்கையை கட்டியெழுப்ப மேற்கொண்ட உதவியை அந்த மக்கள் இன்றும் நினைவுகூறுகின்றனர்.

பிரபலத்துக்காக செய்யவில்லை

நீங்கள் இரத்தினபுரியில் இருந்த காலத்தில் கத்தோலிக்க மக்களுக்கு மட்டுமின்றி அனைத்து மக்களுக்கும் சேவை செய்தீர்கள். குடிசையில் வாழும் மக்கள் குடிசையிலேயே வாழவேண்டும் என்று நீங்கள் ஒருபோதும் நினைத்ததில்லை. அவ்வாறான மக்கள் மாடி வீடு அல்லது வேறு வீடுகளுக்கு செல்லவேண்டும் என்று நீங்கள் கருதினீர்கள். யாருடையதும் பாராட்டுக்காகவோ பிரபலத்துக்காகவோ நீங்கள் இதனை செய்யவில்லை. நீங்கள் இந்நாட்டின் சிறுவர் சந்ததியினருக்காக செய்த சேவையானது நாங்கள் உங்களின் குணாம்சத்தை மதிக்கின்ற மற்றுமொரு விடயமாகும். செத் சரண என்ற வேலைத்திட்டத்தை ஆரம்பித்து இன மத பேதமின்றி பிள்ளைகளின் கல்வியை கட்டியெழுப்ப நடவடிக்கை எடுத்தீர்கள். மனிதனுக்கு கிடைத்த மனித தன்மையை அபிமானத்துடன் பயன்படுத்தவே இவற்றை நீங்கள் செய்தீர்கள். மனிதத்தன்மைக்கு பொருத்தமான வகையில் மனிதத்தன்மையின் உச்ச பயனை பெறுவதற்கான வழியை காட்டிக்கொடுப்பது மத தலைவர் ஒருவரின் கடமையாகும். அடிப்படைவாதிகளாக முடியாது

வெளிநாடுகளிலும் நீங்கள் பாரிய நேர்மையான சேவைகளை வழங்கியுள்ளீர்கள். இந்தோனேஷியா கிழக்கு தீமோர் ஆகிய நாடுகளில் வத்திக்கானின் தூதுவராக கடமையாற்றியுள்ள நீங்கள் உலக கத்தோலிக்க மக்கள் மத்தியிலும் பெற்றுக்கொண்டுள்ள புகழ் தொடர்பில் நாங்கள் பெருமையடைகின்றோம். நீங்கள் அனைத்து சமயத்தவருடனும் மிகவும் சுமுகமாக செயற்படும் ஒருவர். பௌத்தராகட்டும் இயேசுவாகட்டும். வார்த்தைகளை பின்பற்றும் ஒருவர் ஒருபோதும் அடிப்படைவாதிகளாக முடியாது. தமது மதத்துக்கு கௌரவம் கிடைக்கவேண்டுமானால் ஏனைய மதங்களுக்கு கௌரவம் செலுத்தவேண்டும். இவ்வாறு மதிப்பதனால்தான் ஏனைய மதத்தினர் உங்களை மதிக்கின்றனர்.

எமது நாடு ஒருபோதும் மதக் கலவரம் மத யுத்தம் ஆகியன இருந்த நாடல்ல. சம்பிரதாயபூர்வமாகவே நாங்கள் மதங்களை மதிப்பவர்கள். எமக்கு சமய சகவாழ்வு என்பது புதிய விடயமல்ல.

தடைகளுக்கு முடிவு

சமயங்களை பின்பற்றுவதற்கு இருந்த உரிமையை பயங்கரவாதிகள் பறித்துகொண்டமையே 30 வருடங்களாக சமயங்களுக்கு இருந்த பாரிய பிரச்சினையாகும். கத்தோலிக்கர்கள் மடுவுக்கு செல்வதற்கு காணப்பட்ட தடை இந்துக்கள் கதிர்காமம் செல்ல காணப்பட்ட தடை பௌத்தவர்கள் நாகவிஹாரைக்கு செல்ல காணப்பட்ட தடை மற்றும் முஸ்லிம் மக்கள் காத்தான்குடி சமய ஸ்தானத்துக்கு செல்வதற்கான தடை என அனைத்தும் முடிந்துவிட்டன. இன்று கிழக்கிலிருந்து இந்து மக்கள் கதிர்காமம் செல்கின்றனர். தேவேந்திர முனையிலிருந்து மக்கள் மன்னார் மடு தேவாலயத்துக்கு செல்கின்றனர். பௌத்தர்கள் நாகவிஹாரைக்கு செல்கின்றனர். இதனமூலம் சமய சகவாழ்வு புலப்படுகின்றது. மடு தேவாலய பூமியில் பயங்கரவாதிகள் ஏற்படுத்திய பதுங்கு குழிகளை அழித்துவிட்ட அதே வேகத்தில் பயங்கரவாதிகளினால் அழிக்கப்பட்ட அனைத்து தேவாலயங்களையும் புனரமைக்க ஆரம்பிக்கப்பட்டது. மும்மொழிக் கல்வி

நாம் தற்போது இந்நாட்டின் அனைத்து மாணவர்களுக்கும் சிங்களம் தமிழ் ஆங்கில மொழியை கற்பிக்கும் மும்மொழி வேலைத்திட்டத்தை ஆரம்பித்துள்ளோம். வடக்கு கிழக்கு பகுதிகளில் இடம்பெயர்ந்த மக்கள் மீள்குடியேற்றி பாரிய அபிவிருத்தி திட்டங்களை மேற்கொண்டு வருகின்றோம். மேலும் நாட்டில் வறுமையை ஒழிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமை உங்களுக்கு தெரியும். அதற்கக்ஷிக உங்களின் ஆசீர்வாதம் கிடைக்கும். எனவே பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் மேற்கொள்ளப்படுகின்ற அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் அரசியல் தீர்வின் மிகப்பெரிய அங்கமாகும். தேசிய ஒற்றுமையை கட்டியெழுப்புகின்றோம். எமது கர்தினால் ஊடாக இந்த நாட்டின் ஒற்றுமைக்கு மேற்கொள்ளப்பட்ட சேவையை எங்களால் மறக்க முடியாது.

கௌரவதத்துடன் குறிப்பிடுகின்றேன்

வத்திக்கான் அல்லது உலகில் பல நாடுகளில் சேøவாயற்றினாலும் தாய்நாடு தொடர்பில் உங்களுக்குள் சிறந்த கௌரவம் காணப்பட்டது. அன்று ஸ்ரீமாவோ பண்டாரநாயக்கவின் குடியுரிமை பறிக்கப்பட்டபோது நாட்டு மக்களிடம் காணப்பட்ட வேதனையை பற்றி உங்களுக்கு தெரியும். அவரின் குடியுரிமையை பறித்தமைக்கு எதிராக பேசிய கத்தோலிக்க குருமார்களுக்கு இடையில் நீங்களும் இருந்தமையை கௌரவதத்துடன் குறிப்பிடுகின்றேன்.

வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களுக்கும் சொந்தம்

மேலும் கடந்தகாலங்களில் தாய்நாடு அசௌகரியத்துக்கு உட்பட்டிருந்த காலத்தில் நீங்கள் வழங்கிய சேவையை மதிக்கின்றோம். நாட்டில் சமாதானத்தை ஏற்படுத்த நீங்கள் வழங்கிய சேவை பாராட்டுக்குரியது. நாம் தற்போது கட்டியெழுப்பியுள்ள சமாதானமானது வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களுக்கும் சொந்தமாகும். அந்த சமாதானத்தை பேண ஒத்துழைப்பு வழங்குவது சமாதானத்தை மதிக்கின்ற ஒருவரின் கடமையாகும். சமாதானத்தை கட்டியெழுப்ப வேண்டுமாயின் இலங்கை தொடர்பில் உண்மையை சர்வதேசத்துக்கு கூறவேண்டும். உண்மைக்காக அர்ப்பணிக்காதவர்களினால் சமாதானத்தையோ சுதந்திரத்தையோ வெற்றிக்கொள்ள முடியாது. தாம் பிறந்த நாட்டின் மக்களுக்கு அன்பு செலுத்தாத ஒருவரினால் உலகத்துக்கு நல்லெண்ணத்தை வெளிப்படுத்த முடியாது.

அன்பும் இரக்கமும் இருக்கின்றது

நான் ஒரு பௌத்தன். நீங்கள் ஒரு சிரேஷ்ட கத்தோலிக்க மதகுரு. உங்களைப்பற்றி பாரிய கௌரவம் உள்ளது. உங்களுக்குள் என்னைப்பற்றி அன்பும் இரக்கமும் இருக்கின்றது என்பதும் எங்களுக்கு தெரியும். எமக்கிடையில் காணப்படுகின்ற இந்த நட்பு பௌத்த இந்து கத்தோலிக்க இஸ்லாம் மக்கள் மத்தியிலும் காணப்படவேண்டும் என்று பிரார்த்திக்கின்றேன்.
மேலும் இங்கே தொடர்க...

பிரி. ஆர்ப்பாட்டத்தில் புலிக்கொடி; சிங்கள வார்த்தைப் பிரயோகங்கள் :பீரிஸ்

"கீத்ரோ' விமான நிலையத்தில் இடம் பெற்ற ஆர்ப்பாட்டத்தில் புலிக்கொடி ஏந்தப்பட்டிருந்ததுடன் சிங்கள வார்த்தை பிரயோகம் இடம் பெற்றதை நான் என் காதால் கேட் டேன். அதில் பல பின்னணி இருக்கி ன்றது என வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல். பீரிஸ் தெரிவித்தார். அச்சு றுத்தல் இருக்கின்றது என்று வீட்டில் ஒளிந்துகொண்டிருந்தால் ஜனாதி பதியினால் எந்தவொரு வெளி நாட்டிற்கும் செல்ல முடியாது. ஆனால் ஜனாதிபதி அஞ்சாதவர் என்றும் அவர் சொன்னார்.

பாராளுமன்றத்தில் நேற்று நடை பெற்ற வெளி விவகார அமைச்சு மீதான குழு நிலை விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,

ஜனாதிபதியின் பயணத்தை தடுப்பதற்கும் பெரிய பிரித்தானியாவில் அவரை கைது செய்வதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியிருந்தன அந்த சவால்களை ஏற்றுக் கொண்டே ஜனாதிபதி பயணித்தார்.

ஜனாதிபதியை கைது செய்வதற்கு சட்டத்தில் இடமில்லை. சவாலை ஏற்றுக் கொண்டு எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தை அவர் 50 சதத்திற்கு கூட கணக்கில் எடுக்கவில்லை. அச்சுறுத்தலுக்கு இனங்காத சிறைச்சாலைக்கு செல்வதற்கும் தயாரான துணிச்சல் மிக்க தலைவர் அவராவார்.

புலிகள் பெரும் தொகையை செலவழித்து பிரான்ஸ், ஜேர்மனி உள்ளிட்ட நாடுகளிலிருந்து பெருந்திரளான புலி ஆதரவாளர்களை திரட்டுவதற்கு முயற்சித்தனர். எனினும் அங்கு 600 பேர் மட்டுமே இருந்தனர். அதில் சிங்கள வார்த்தை பிரயோகம் இடம் பெற்றதை என் கண்ணால் நான் கண்டேன் அதில் பல பின்னணி இருக்கின்றது. போக வேண்டாம் என ஜனாதிபதிக்கு பலரும் ஆலோசனை வழங்கினர். ஆனால் ஆர்ப்பாட்டத்திற்கும் பாதயாத்திரைக்கும் அஞ்சி ஓடுபவன் நாள் அல்ல என்று தெரிந்து கொண்டே தீர்மானத்தை எடுத்தார்.

யார் வெற்றி, யார் தோல்வி என்று பார்க்க முடியாது. ஒக்ஸ்போட் பல்கலைக்கழக சங்கத்தின் கடிதத்தை பார்க்க வேண்டும். பாதுகாப்பு காரணத்தை கருத்தில் கொண்டு அழைப்பிதழை வாபஸ் பெற்றுக் கொள்வதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அச்சுறுத்தியே ஜனாதிபதியின் உரையை இடை நிறுத்தினர். தனது நிலைப்பாட்டை உலகிற்கே கூறுவேன் என்று கூறிய நாட்டு தலைவர் என்று பெருமைப்பட வேண்டும். புலிகள் தாலாட்டுகின்றனர். இது முழுமையான துரோகத்தனமான நடவடிக்கையாகும். சவாலுக்கு அஞ்சி வீட்டில் ஒளிந்திருந்தால் ஜனாதிபதியால் எந்தவொரு நாட்டிற்கும் செல்ல முடியாது என்றார்.
மேலும் இங்கே தொடர்க...

விக்கிலீக்ஸ் இணையத்தள நிறுவுனர் பிரித்தானியாவில் கைது


அமெரிக்கா உட்பட பல்வேறு நாடுகளின் இரகசிய ஆவணங் களை இணையத்தளத்தில் பகிரங்கப்படுத்தி உலகளாவிய ரீதியில் பரபரப்பை ஏற்படுத்திய விக்கிலீக்ஸ் இணையத் தளத்தின் நிறுவுனர் யூலியன் அசான்ஞ்ச் பிரித்தானியப் பொலிஸாரினால் நேற்று கைது செய்யப்பட்டார்.

பாலியல் குற்றச்சாட்டுத் தொடர்பில் யூலியன் அசான்ஞ் சைக் கைது செய்யுமாறு சுவீடன் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்திருந்தது. ஐரோப்பிய ஒன்றிய பிடியாணைக்கு அமைவாக யூலியனை நேற்று ஜீ. எம். ரி. நேரப்படி 9.30 மணிக்கு (இலங்கை 3 மணி) அவரைக் கைது செய்ததாக பிரித்தானியப் பொலிஸார் அறிவித்துள்ளனர்.

வுஸ்திரேலியாவைப் பிறப்பிடமாகக் கொண்ட 39 வயதுடைய யூலியன் அசான்ஞ்ச் அமெரிக்கா உட்பட பல்வேறு நாடுகள் தமக்கிடையில் பகிர்ந்துகொண்ட முக்கிய தகவல்கள் மற்றும் ஆவணங்களை விக்கிலீக்ஸ் எனும் இணையத்தளத்தின் மூலம் பகிரங்கப்படுத்தியிருந்தார். இதனால் உலக நாடுகள் பல்வேறு நெருக்கடிகளை எதிர்கொண்டிருந்த நிலையில், பாலியல் குற்றச்சாட்டுத் தொடர்பில் அவரைக் கைது செய்யுமாறு சுவீடன் உத்தரவிட்டிருந்தது.

அமெரிக்காவின் ஈராக்குக்கு எதிரான நடவடிக்கைகள் உட்பட அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தால் பரிமாறப்பட்ட இரகசியமான ஆவணங்கள், தகவல்கள் விக்கிலீக்ஸ் இணையத்தளத்தில் பகிரங்கப்படுத்தப்பட்டதால் பெரும் சர்ச்சை ஏற்பட்டிருந்தது. இலங்கை தொடர்பிலும் 3 ஆயிரத்துக்கும் அதிகமான ஆவணங்கள் விக்கிலீக்ஸ் இணையத்தளத்தில் பகிரங்கப்படுத்தப்பட்டிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.
மேலும் இங்கே தொடர்க...

கிளிநொச்சி மாவட்டம் காணி உரிமை பெற்றோருக்கு விரைவில் விசேட அறிவிப்பு



கிளிநொச்சி மாவட்டத்தில் காணி உரிமை உள்ள நிலையில், வெளிமாவட்ட ங்களிலும் புலம்பெயர் நாடுகளிலும் வாழும் மக்களுக்கான அறிவிப்பொன்றை காணி அமைச்சு விரைவில் வெளியி டவுள்ளது.

காணி உரிமைபற்றியும் எதிர்நோக்கும் பிரச்சினை பற்றியும் தகவல்களைப் பெற்றுத் தருவதற்குக் குறித்த ஒரு கால அவகாசத்தை வழங்கும் வகையில் இந்த அறிவிப்பு வெளியாகுமென்று கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ரூபவதி கேதீஸ்வரன் தினகரனுக்குத் தெரிவித்தார்.

கிளிநொச்சி மாவட்ட கிராமங்கள் தோறும் தற்போது உதவி அரசாங்க அதிபர்கள் தகவல்களைத் திரட்டி வருகிறார்கள். தகவல்கள் திரட்டப்பட்டதும் காணி உரிமையாளர்களை உறுதிப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். இது குறித்து உதவி அரசாங்க அதிபர்கள் சகலரையும் அழைத்து அறிவுறுத்தல் வழங்கியுள்ளதாக அரச அதிபர் கூறினார்.

பிரச்சினைகள் உள்ள கிராமங்களில் தகவல்கள் திரட்டப்பட்டதும் எதிர்வரும் 23ம் திகதி கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் மீளாய்வுக் கூட்டமொன்று நடைபெற ஏற்பாடாகியுள்ளதாகக் குறிப்பிட்ட அரச அதிபர் திருமதி ரூபவதி, காணி அமைச்சின் முக்கிய அதிகாரிகள் பலரும் இந்த மீளாய்வுக் கட்டத்தில் கலந்து கொள்வார்களென்று தெரிவித்தார்.

மீளாய்வுக் கூட்டத்திற்குப் பின்னர், வெளி பிரதேசங்களில் உள்ளவர்களுக்கான ஓர் அறிவிப்பு வெளியிடப்படுமென்றும் அரச அதிபர் கூறினார்.

காணி உரிமை பிரச்சினை தொடர்பாக ஆராய்ந்து “பிம்சவிய” திட்டத்தின் கீழ் தீர்வினைப் பெற்றுக் கொடுக்கும் அரச அதிபர் நடவடிக்கை எடுத்து வருகிறார். இதன் மூலம் காணி உறுதி இல்லாதவர்களுக்கு அவற்றைப் பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மேலும் இங்கே தொடர்க...

பாடப்புத்தகம் விநியோகிக்கும் தேசிய நிகழ்வு இன்று திருகோணமலையில்


பாடசாலை மாணவர்களுக்குப் பாடப் புத்தகங்களை விநியோகிக்கும் தேசிய நிகழ்வு இன்று (08) புதன்கிழமை காலை திருகோணமலையில் நடைபெறுகிறது.

மூவாயிரம் மில்லியன் ரூபாய் பெறுமதியான 36 மில்லியன் பாடப்புத்தகங்கள் இன்று விநியோகிக்கப்படு கின்றன. திருகோணமலை, ஒரிஸ்ஹில் விவேகானந்தா வித்தியாலயத்தில் தேசிய நிகழ்வு நடைபெறுகிறது. இந் நிகழ்வுக்கு கல்வி அமைச்சர் பந்துல குணவர்தன தலைமை தாங்குகிறார்.

இந்தத் தேசிய நிகழ்வையொட்டி மாகாண முதலமைச்சர்களின் பங்கேற்புடன், பாட நூல் விநியோக நிகழ்வு மாகாண மட்டத்திலும் நடைபெறுவதாக கல்வி வெளியீட்டுத் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் டபிள்யூ. எம். என். ஜே. புஷ்பகுமார தெரிவித்தார். பாடப் புத்தகங்களைச் சிறப்பாகப் பயன்படுத்திய மாணவர்களுக்குப் பரிசில்களை வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மேலும் இங்கே தொடர்க...

வெளிநாட்டு அழுத்தங்களை பொருட்படுத்தாது நாட்டு நலனை கருதி முடிவுகளை எடுத்தவர் ஸ்ரீமாவோ பண்டாரநாயக்கா ஜனாதிபதி


வெளிநாட்டவர்களின் அழுத்தங்களைப் பொருட்படுத்தாது நாட்டினதும், நாட்டு மக்களினதும் நலன்களை முன்நிறுத்தியே முன்னாள் பிரதமர் மறைந்த ஸ்ரீமாவோ பண்டாரநாயக்கா முடிவுகளை எடுத்தார் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்றுத் தெரிவித்தார்.

உலகின் முதலாவது பெண் பிரதமராக மறைந்த ஸ்ரீமாவோ பண்டாரநாயக்கா பதவியேற்றதன் ஐம்பதாவது ஆண்டு நினைவு விழா நேற்று கொழும்பில் நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

கொழும்பு – 7லுள்ள ஸ்ரீமாவோ பண்டாரநாயக்கா ஞாபகார்த்த கண்காட்சி மண்டபத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தொடர்ந்தும் உரையாற்றுகையில், முன்னாள் பிரதமரான மறைந்த ஸ்ரீமாவோ பண்டாரநாயக்கா உலகின் முதலாவது பிரதமராக நியமனம் பெற்றமை இலங்கைக்கு மாத்திரமல்லாமல் முழு உலகுக்குமே பெரும் கெளரவமாகும்.

இதன் மூலம் முழு பெண் சமுதாயத்திற்கும் கெளரவமும் அந்தஸ்தும் கிடைக்கப்பெற்றது. எமது மறைந்த பிரதமர் ஸ்ரீமாவோ பண்டார நாயக்காவை முன்மாதிரியாகக் கொண்டுதான் இந்தியாவின் முன்னாள் பிரதமர் மறைந்த இந்திரா காந்தி, பிரித்தானியாவின் முன்னாள் பிரதமர் மாகிரட் தட்சர் போன்றோர் பிரதமர்களாக உருவாகினர்.

முன்னாள் பிரதமரான மறைந்த ஸ்ரீமாவோ பண்டாரநாயக்கா ஒரு இக்கட்டான சூழ்நிலையில் தான் அரச தலைமைப் பதவியான பிரதமர் பதவியைப் பொறுப்பெடுத்தார். 1956ம் ஆண்டில் முன்னாள் பிரதமரான மறைந்த எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்கா விட்டுச் சென்ற இடத்திலிருந்து தமது அரசியல் பணிகளை முன்னெடுத்தார்.

அவர் ஒரு முன்மாதிரிமிக்க அரசியல் தலைவராக மாத்திரமல்லாமல் அன்பு நிறைந்த சிறந்த தாயாகவும் விளங்கினார். இவர் வெளிநாட்டு அழுத்தங்களைப் பொருட்படுத்தாது நாட்டினதும், நாட்டு மக்களினதும் நலன்களை முன்நிறுத்தி தீர்க்கமான முடிவுகளை எடுத்தார். குறிப்பாக பாடசாலைகள், பெற்றோலிய நிறுவனம், காப்புறுதி நிறுவனம் என்பவற்றை அரச உடைமையாக்கினார்.

காணி உச்ச வரம்பு சட்டத்தை அறிமுகப்படுத்தினார். இவ்வாறான நடவடிக்கைகளை கண்டு, கோதுமை மாவுக்கு வழங்கிவரும் மானியத்தை நிறுத்தப்போவதாக வெளிநாட்டினர் அச்சுறுத்தினர். இருப்பினும் அந்த அச்சுறுத்தல்களை பொருட்படுத்தாது தமது தீர்மானங்களை துணிகரமாக முன்னெடுத்தார்.

காணி உச்ச வரம்பு சட்டத்தின் மூலம் தமக்கு நஷ்டம் ஏற்படுவதையும் பாராது நாட்டு மக்களின் நலன் கருதி அச்சட்டத்தை செயலுருப்படுத்தினார்.

இவற்றின் விளைவாக சில சக்திகள் அவருக்கு எதிராக செயற்பட்டன. இருப்பினும் நாட்டின் ஏழை மக்களின் நலன்களை கருத்திற்கொண்டே தமது அனைத்து முடிவுகளையும் அவர் எடுத்தார்.

அவரது அரசியல் ஞானம், வெளிநாட்டுக் கொள்கை என்பவற்றை மதிக்கின்றோம். அவரது இந்த கொள்கையின் பயன்களை இன்றும் நாம் அனுபவித்துக்கொண்டிருக்கின்றோம்.

நாம் வெளிநாடுகளுக்கு செல்லும்போது, அன்று சிறுகுழந்தைகளாக இருந்து முன்னாள் பிரதமரான மறைந்த ஸ்ரீமாவோ பண்டாரநாயக்காவை வரவேற்றவர்கள் இன்று அந்தந்த நாடுகளின் தலைவர்களாக விளங்குகின்றனர்.

அவர்கள் மறைந்த முன்னாள் பிரதமரை நினைவு கூருகின்றனர்.

மறைந்த முன்னாள் பிரதமரான ஸ்ரீமாவோ பண்டாரநாயக்காவின் அரசியல் நோக்கங்களை பின்பற்றி அவர் தலைமை வகித்த ஸ்ரீல.சு. கட்சியைக் கட்யெழுப்பவென நாம் பல நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றோம்.

நான் தேர்தலில் போட்டியிட 1970ல் வேட்பு மனு குழுவுக்கு முன்பாக நேர்முகப் பரீட்சைக்குச் சென்றிருந்த சமயம் அங்கிருந்த அன்றைய சிரேஷ்ட அமைச்சர்கள் என்னை விடவும் எனது சகோதரனை அபேட்சகராக நியமிக்கவே விரும்பினர்.

இருப்பினும் மறைந்த முன்னாள் பிரதமரான ஸ்ரீமாவோ பண்டாரநாயக்கா என்னையே அபேட்சகராக நியமிக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார். அந்த நிகழ்வு இன்றும் என் மனதில் பசுமையாக உள்ளது.

இதேபோல் என்னை ஹம்பாந்தோட்டை மாவட்ட ஒருங்கிணைப்பு பாராளுமன்ற உறுப்பினராக நியமித்த சமயம் நான் மாவட்ட செயலாளரிடம் பதவியைப் பொறுப்பெடுக்க சென்ற சமயம், மறைந்த முன்னாள் பிரதமர் ஸ்ரீமாவோ பண்டாரநாயக்கா தொலைபேசி ஊடாக மாவட்ட செயலாளருடன் தொடர்புகொண்டு ‘மஹிந்தவை நன்றாகப் பார்த்துக்கொள்ளுங்கள்’ என்று கூறினார். இவ்வாறு தான் ஏனையவர்களுடனும் அவர் அன்பாகவும், ஒரு சிறந்த தாயாகவும் நடந்துகொண்டார்.

அவர் பிரதமராக பதவியேற்ற ஐம்பதாவது ஆண்டு பூர்த்தியாகும் இந்த சந்தர்ப்பத்தில் அவரது வழிகாட்டல்களை பின்பற்றி தாய்நாட்டின் அபிவிருத்திக்காகவும், சுதந்திரத்திற்காகவும் தேவையான நடவடிக்கைகளை முன்னெடுக்க எமது அரசாங்கமும், கட்சியும் ஒருபோதும் பின்னிற்காது என்றார்.

இந்நிகழ்வின்போது முன்னாள் பிரதமர் மறைந்த ஸ்ரீமாவோ பண்டாரநாயக்கா தொடர்பான நூலொன்றும் வெளியிடப்பட்டது.

இந்நூலின் முதல் பிரதி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு வழங்கி வெளியிடப்பட்டது.

இந்நிகழ்வில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்கா குமாரதுங்க, சுனேத்திரா பண்டாரநாயக்கா, பிரதமர் டி.எம். ஜயரட்ன, அமைச்சர்கள் ஏ. எச். எம். பெளஸி, ரவூப் ஹக்கீம், மைத்திரிபால சிறிசேன, சுசில் பிரேம ஜயந்த், பேராசிரியர் ஜீ. எல். பீரிஸ், மேல் மாகாண ஆளுநர் எஸ். அலவி மெளலானா, பிரதியமைச்சர்கள், வெளிநாட்டுத் தூதுவர்கள் உட்பட முக்கியஸ்தர்கள் பலரும் கலந்துகொண்டார் கள்.
மேலும் இங்கே தொடர்க...

ரிசானா நஃபீக் மீதான மரண தண்டனை இடைநிறுத்தம்


இலங்கை பணிப்பெண் ரிசானா நஃபீக்கிற்கு சவூதி அரேபிய நீதிமன்றம் விதித்துள்ள மரண தண்டனை இடைநிறுத்தப் பட்டுள்ளது.

இலங்கை அரசாங்கத்தின் வேண்டுகோளுக் கிணங்க சவூதி அரேபியா இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு ஊக்குவிப்பு அமைச்சர் டிலான் பெரேரா நேற்று (07) பாராளுமன்றத்தில் இதனைத் தெரிவித்தார்.

இலங்கை பணிப்பெண்ணான ரிசானா நஃபீக்கிற்கான தண்டனை உள்ளிட்ட விடயங்கள் ஷரீஆ சட்டத்திற்கிணங்கவே முன்னெடுக்கப்படுகின்றன. அந்நாட்டு மன்னருக்குக் கூட அதனைமீறி செயற்பட முடியாத நிலை உள்ளது.

எனினும் அவரது விடுதலைக்கான சகல முயற்சிகளையும் அரசாங்கம் தொடர்ந்து முன்னெடுத்து வருவதாகவும் அமைச்சர் தெரிவித்தார். வரவு- செலவுத் திட்ட குழுநிலை விவாதத்தில் உரையாற்றிய அமைச்சர் டிலான் பெரேரா கூறியதாவது,

“வெளிநாட்டு வேலைவாய்ப்புக்காக செல்லும் இலங்கையர்கள் முகங்கொடுக்கும் நெருக்கடிகளைத் தடுப்பதற்கு விசேட செயற்திட்டங்கள் அடுத்த வருடம் முதல் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

இதன் ஒரு அம்சமாக வேலைவாய்ப்பு முகவர் நிலையங்களைப் போன்றே அதன் கீழ் இயங்கும் உப முகவர் நிலையங்களையும் வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தில் பதிவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.

முகவர் நிலையங்களுக்கு கீழ் இயங்கும் உப முகவர் நிலையங்களையும் பணிய கத்தில் பதிவதற்கு அடுத்த வருடம் முதல் புதிய நடைமுறையொன்று அமுல்படுத்தப்படும்.

அதேவேளை, தொழிற்பயிற்சிகளை வழங்கவும் வெளிநாட்டு வேலைவாய்ப்பில் ஈடுபடுவோருக்கு மாவட்ட ரீதியில் வழங்கப்படும் பயிற்சிகளுக்கு மேலதிகமாக மூன்று நாள் விசேட பயிற்சிகளை வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்படும்.

அத்துடன் அவர்களுக்கான நலன்புரி திட்டங்கள் பல செயற்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்படும்.

வெளிநாட்டு வேலைவாய்ப்பை முடித்துக் கொண்டு நாடு திரும்பும் பணிப்பெண்கள் விமான நிலையத்திலும் பணிப்பெண்கள் போன்றே நடத்தப்படுகின்றனர். அவர்களுக்கான வரவேற்பும் திருப்திகரமாக இல்லை.

அவர்களுக்கு உரிய மதிப்பை வழங்கி சிறந்த வரவேற்பளிக்கவென விசேட நடவடிக்கைகள் எடுக்கப்படும். அவர்களை இனங்காணபதற்கென விசேட அடையாள அட்டையொன்றும் வழங்கப்படும் என்றார்.
மேலும் இங்கே தொடர்க...

ஜனாதிபதியின் லண்டன் விஜயம் துணிச்சல் மிக்க செயல் சபையில் அமைச்சர் ஜீ. எல். பீரிஸ் பெருமிதம்


தனது பயணத்தை தடுக்கவும் கைது செய்வதற்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக தகவல் கிடைத்த நிலையில் அவை எதற்கும் அஞ்சாது தைரியமாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பிரித்தானிய பயணத்தை மேற்கொண்டதாக வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ. எல். பீரிஸ் நேற்று பாராளுமன்றத்தில் உரையாற்றும் போது தெரிவித்தார்.

பிரித்தானிய பயணத்தை ரத்துச் செய்யுமாறு சிலர் ஜனாதிபதியை கோரிய போதும், தான் தவறு எதுவும் செய்யவில்லை எனவும் பயங்கரவாதத்தின் பிடியில் இருந்து தாய் நாட்டை மீட்டது தவறு எனின் அதற்காக சிறை செல்லவும் தயார் என்றும் மன தைரியத்துடன் ஒக்ஸ்போர்ட் சங்க அழைப்பை அவர் ஏற்றதாக அமைச்சர் கூறினார்.

வெளிவிவகார அமைச்சின் மீதான குழுநிலை விவாதத்தில் நேற்று உரையாற்றிய அமைச்சர் மேலும் குறிப்பிட்டதாவது:-

நமது ஜனாதிபதி பயந்தாங்கொள்ளியல்ல. சவால்களுக்கு தைரியமாக முகம் கொடுப்பவர். அவர் ஒரு போதும் சவால்களில் இருந்து தப்பி ஓடுபவரல்ல. அதனாலே ஒக்ஸ்போர்ட் சங்க அழைப்பை ஏற்று பிரித்தானியாவுக்கு சென்றார்.

தனது பிரித்தானிய பயணத்தை தடுக்க பல்வேறு முயற்சிகள் முன்னெடுக்கப்படு வதாக முன்கூட்டியே ஜனாதிபதி அறிந்திருந்தார். புலி ஆதரவாளர்கள் பெருமளவு நிதி செலவிட்டு ஜனாதிபதியின் உரையை தடுக்க முயற்சி செய்தனர். பிரான்ஸ், ஜெர்மனி, சுவிஸ் ஆகிய நாடுகளில் இருந்து புலி ஆதரவாளர்கள் அழைத்து வரப்பட்டனர்.

தனக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்த முயற்சி நடப்பதாக அறிந்திருந்த போதும் அவர் அதற்கு முகம் கொடுக்க அஞ்சவில்லை. ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழக உரையினூடாக சர்வதேச சமூகத்திற்கு கருத்துக் கூற அவர் விரும்பினார்.

ஆனால், புலி ஆதரவாளர்களின் அழுத்தம் காரணமாக ஜனாதிபதியின் உரை ரத்துச் செய்யப்பட்டது. இது தொடர்பில் ஒக்ஸ்போர்ட் சங்கம் விளக்கமளித்து கடிதமொன்றை அனுப்பியது.

உங்களது உரையை கேட்க ஆவலாக இருந்தோம். ஆனால் பாதுகாப்பு தொடர்பில் கிடைத்த தகவலின்படி உங்கள் உரையை ரத்துச் செய்ய நேரிட்டது. நீங்கள் பல்கலைக்கழகத்திற்கு வருகையில் ஆர்ப்பாட்டம் நடத்த தயாராவதாக தகவல் கிடைத்தது. பொலிஸாரிடம் பாதுகாப்பு கோரினோம். ஆனால் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படும் எனவும் இதனால் குழப்பம் ஏற்படலாம் எனவும் பொலிஸார் கூறியதாக அந்தக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது. அச்சுறுத்தல் இருந்தும் தைரியமாக பிரித்தானியாவுக்குச் சென்ற ஜனாதிபதி குறித்து நாம் பெருமையடைகிறோம்.

யுத்த குற்றச் சாட்டு குறித்து விசாரணை செய்ய வேண்டுமென்று கூறிய கரு ஜயசூரிய தான் அவ்வாறு கூறவில்லை. தலைப்பில் தான் அவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளதாக தற்பொழுது கூறுகிறார். எல். ரி. ரி. ஈ. கொடியை தூக்கி ஆர்ப்பாட்டம் நடத்தியவர்களை பாதுகாக்க அவர் முயல்கிறார். புலி ஆதரவாளர்களை திருப்திப்படுத்தவே அவர் யுத்தக் குற்றச்சாட்டு பற்றி அறிக்கை விட்டுள்ளார். இது பெரும் துரோகமாகும். ஜனாதிபதிக்கு எதிரான இந்த சதி நாட்டுக்கு செய்த அவமதிப்பாகும். இவ்வாறு அமைச்சர் ஜி. எல். பீரிஸ் குறிப்பிட்டார்.
மேலும் இங்கே தொடர்க...

1983 ஜூலை 25 மற்றும் 27இல் கொழும்பு வெலிக்கடைச் சிறை,

1983 ஜூலை 25 மற்றும் 27இல் கொழும்பு வெலிக்கடைச் சிறை, ஈழத்தின் தமிழர்களுக்கு மறந்துவிட முடியாத பாடம் ஒன்றினைப் புகட்டியது. அரசாங்கமும் அதிகாரிகளும் இணைந்து நிறைவேற்றிய இந்தப் படுகொலைகள் தமிழர்கள் தனித்தே வாழவேண்டும் என்பதனை உறுதிப்படுத்தியது.

24 ஜூலை இரவு 12மணிக்கு சற்று மேலாக வெலிக்கடையின் முக்கிய வாயில் பகுதியிலிருந்து மக்களது கூச்சலிடும் சத்தமானது எங்களைத் தட்டி எழுப்பியது. விழித்துக்கொண்ட நாம் காவலுக்கு நின்றவரை அழைத்து “என்ன சத்தம்” கேட்கிறது என்று கேட்டதற்கு அப்படி ஒன்றும் இல்லையே, அது சும்மா என்று நழுவி விட்டார். அந்தச் சத்தத்தைத் தொடர்ந்து வானத்தை நோக்கி சுடப்பட்ட துப்பாக்கி வேட்டுக்களும் கேட்டன. எங்கள் எவருக்குமே என்ன நிகழ்வென்பது தெரியாது.

25 ஆம் திகதி காலை பத்துமணியளவில் பெரும் புகையானது எங்கள் சிறை ஜன்னல் வழியாக தெரியத் தொடங்கியது. அப்போதுதான் எம்மவர் பரபரப்படைந்தனர். சப்பல் வார்ட்((chapel ward)) என்று அழைக்கப்பட்ட தரைத் தளத்தின் “பி” பிரிவில் தண்டிக்கப்படாத விடுதலைப் போராளிகள் 27பேரும். “டி” பிரிவில் தண்டிக்கப்பட்ட மற்றும் விசாரணை முடிவடையாத மொத்தம் 35 பேருமாக மொத்தம் 52பேர் அன்றைய தினம் சிறையின் அறைகளில் அடைக்கப்பட்டிருந்தோம்.

“டி” பகுதியில் திருவாளர். குட்டிமணி. தங்கத்துரை உட்பட 35பேரும் இரு;நதனர். எங்களை தினமும் காலை பத்தரை மணியளவில் சூரிய வெளிச்சம் படுவதற்காக அரை மணிநேரம், முள் கம்பிகளால் பத்து அடி உயரத்துக்கு பாதுகாக்கப்பட்ட பகுதி ஒன்றுக்கு அழைத்துச் செல்வர்.

அன்றைய தினமான ஜூலை 25ம் நாள் காலை பத்துமணிக்கே “டி” பிரிவு போராளிகளை அழைத்துச் சென்றிருந்தனர் அதிகாரிகள். பத்தரை மணியளவில் எங்கள் பகுதியினரை அழைத்தச் சென்றனர். திருவாளர். குட்டிமணியும் ஏனையோரும் அவசர அவசரமாக அதிகாரிகளால் அவர்களது அறைகளுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அந்தவேளை, நண்பர் குட்டிமணி எனது அருகில் வந்து யாழ்ப்பாணத்தில் 13 ஆமிக்காரரை சுட்டுக் கொன்று விட்டார்களாம். அதனால் கொழும்பில் கலவரமாம் என்று கூறி முடிப்பதற்குள் அதிகாரிகள் அவரை நேரமாகிறது என்று அழைத்துச் சென்றுவிட்டனர்.

இதன் பின்னர்தான் “பி” பகுதியிலிருந்த எமக்கு வெளியில் நடந்தவை பற்றித் தெரியவந்தன. எங்களுக்கு அன்று பத்து நிமிடங்கள்தான் கொடுத்திருப்பார்கள் வெய்யிலில் நிற்பதற்கு, உடனே அறைகளுக்கு திரும்பிச் செல்லுமாறு உத்தரவிடடனர் அதிகாரிகள். எதற்காக எங்களை அவசரப்படுத்துகிறார்கள் என்பது புரியவில்லை. சிறை மதில்களுக்கப்பால் நாலாபுறமும் புகை மண்டலங்களாகக் காட்சியளித்தது. இது இப்படி அது அப்படி என்று எமக்குள்ளாக கருத்து பறிமாற்றங்கள் ஆனால். வேளியில் நடப்பவைப் பற்றி உண்மை எதுவும் தெரியாது.

பகல் ஒன்று முப்பது மணிக்கு உணவுக்குப் பின் அடைக்கப்பட்ட அறைகளின் இரும்புக் கம்பிகளில் சாய்ந்தபடி வெளியில் நடப்பவை பற்றிய கற்பனையில் மூழ்கியிருந்தோம். எங்கள் அறைகளானது 8அடி நீளம் 6 அடி அகலம் கொண்டது. ஒவ்வொருவரும் தனித் தனி அறைகளில் அடைக்கப்பட்டிருந்தோம்.

பிற்பகல் இரண்டுக்கும் இரண்டு முப்பது மணிக்கும் இடையில் பெருந்திரளான மக்கள் கூடி கூச்சலிடும் சத்தம் கேட்டது. திகைத்து எழுந்து நின்று காதுகளைக் கூர்மையாக்கி இரும்புக் கம்பிகளினூடே செலுத்தினர் ஒவ்வொருவரும். அந்தக் கூச்சல் அனைவரையும் மிரளவைத்தது. இப்படி ஓர் கூச்சலை எங்கள் வாழ்நாளில் கேட்டிருக்கவில்லை. ஏனெனில் அன்றைய வெலிக்கடைச் சிறையின் மொத்தக் கைதிகள் இரண்டாயிரம். இவர்கள் அனைவரும் ஆவேசத்துடன் ஆத்திரம் கொண்டு எங்கள் சிறைக் கொட்டடியை நோக்கி நகர்கின்றனர்.

இந்தச் சிங்களக் கைதிகள் அனைவரும் தண்டிக்கப்பட்டக் கைதிகள். விடுதலையோ அரசியல் நோக்கமோ இவர்களுக்குக் கிடையாது. பலதரப்பட்ட குற்றச் செயல்களுக்காகத் தண்டிக்கப்பட்டவர்கள் இவர்கள். அரச இராணுவத்தினரால் தூண்டப்பட்டு “சிங்கள ஜனதாவ ஜயவேவா” (சிங்கள் மக்கள் வாழ்க) என்று முழங்கிக் கொண்டு குட்டிமணி ஜெகன் ஆகியோர் தங்கியிருந்த “டி” பிரிவுக்குள் செம்மறி ஆட்டுக் கூட்டம் போல் இடிபட்டுக்கொண்டு நுழைந்தனர்.

கைகளில் கொலைக் கருவிகள்! வேலிக்கடைச் சிறை பலதரப்பட்ட தொழற்சாலைகளைக் கொண்டது. அந்தத் தொழிற்சாலைகளுக்குள் இருந்த கருக்கான கோடாலி, கத்தி, கடப்பாரை, சுத்தியல், இரும்பிக் கம்பிகள், நீழமான சாவிகள், மரக்கட்டைகள், மரமறுக்கும் உடைந்த வாள்கள், அடுப்பெரிக்கும் விறகு கட்டைகள் என்று சிங்களக் குற்றவாளிகள் படை கையிலேந்திக் கொண்டு புகுந்தது.

திருவாளர். குட்டிமணி தங்கியிருந்த பகுதிக்குள் புகுந்த அந்தக் காடையர் படை ஒவ்வொரு அறையாகத் திறந்து, உள்ளே புகுந்து தங்கள் ஆயுதங்களால் எம்மவரைக் கொன்றனர். வெறுங்கையுடன் ஒவ்வொருவர் ஒரு அறையில், இரண்டாயிரம் சிங்களக் காடையர்கள், கதவுகளின் திறப்புகள் அவர்களது கையில், பேரிரைச்சல், இந்தக் கூட்டத்தை வெறுங்ககையுடன் எந்த வீரனால் தாக்குப்பிடிக்கமுடியும்.

ஒவ்வொரு சிங்களவரின் ஆயுதமும் “டி” பிரிவிலிருந்த 35 பேரையும் தாக்கியது. இறந்து கிடந்த எம்மவர்களை முறைவைத்து அந்தக் காடையர்கள் தாக்கினர். மதியம் 2 மணி முதல் பிற்பகல் நாலே முக்கால் மணிவரை இந்த இரண்டாயிரம் பேரும் எங்கள் இனத்தவரின் சதைகளை கழுகுகள் போன்று பிய்த்தெடுத்தனர்.

இறுதியாக ஐந்து மணியளவில் சிறையின் அதிபர் (சுப்ரின்டென்ட்) சப்பல் வார்டின் மத்திய பகுதிக்கு வந்தார். அதன் முதலாவது மாடியில் ஏறி நின்று சிங்களக் கைதிகளை நோக்கி சிங்களத்தில் உரை ஒன்று நிகழ்த்தினார். அவ்வுரை பின்வருமாறு:

நீங்கள் எங்கள் மக்களது உணர்வுகளைப் பிரதிபலித்துள்ளீர்கள். எங்களது இராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதற்கு நாங்கள் சரியான பதில் கொடுத்துள்ளோம். இவர்கள், (நண்பர் குட்டிமணி இருந்த பகுதியான வலப்புறத்தைக் காண்பித்து) கொலைகாரர்கள், எங்கள் இனத்தவரைக் கொன்றாலும், இராணுவத்தினரைக் கொன்றாலும் நாங்கள் அவற்றுக்குத் தக்கபதிலடி கொடுப்போம்.

இன்றைய தினம் எங்கள் சரித்திரத்தில் முக்கியமான நாள், எங்கள் இனமும் இளைஞர்களும் நினைத்ததை நீங்கள் செய்து முடித்துள்ளீர்கள். உங்களது இந்த உணர்வுபூர்வமான யுத்தத்துக்கு நான் தலை வணங்குகிறேன். உங்களது உணர்வுகளை நான் மதிக்கிறேன். இந்த நாடு சிங்கள இனத்துக்கு உரியது என்பதனை நீங்கள் ஏனையோருக்கு உணர்த்தியுள்ளீர்கள். நீங்கள் இதுவரை செய்தது போதும், இந்தப் பகுதியினை (நாம் இருந்த பகுதியினை இடது கை மூலம் காண்பித்து) பிறகு பார்த்துக் கொள்வோம். ஆதலால் நீங்கள் அனைவரும் அமைதியாக உங்கள் உங்கள் பகுதிகளுக்குச் செல்லலாம் என்று கூறி முடித்தார்.

சிங்களக் கைதிகள் தங்கள் கைகளிலிருந்த ஆயுதங்களுடன் எங்கள் அறைகளைப்பார்த்து முறைத்தபடி வெளியே இருந்த அரச மரத்தடியை நோக்கி நகர்ந்தனர். அவர்கள் கொண்டு சென்ற கருவிகளில் எங்கள் இனத்தவரின் இரத்தக்கறைகள் படிந்திருந்தன.

சிறை அதிபர் அனைவரையும் விலக்கிக் கொண்டு சிறைவாசலை அடைந்தார். சிறிது நேரத்தில் சிறையின் முக்கிய வாசல் கதவு திறக்கப்பட்டது. ஓர் இசுசு லொறி உள்ளே நுழைந்தது. அரச மரத்தைச் சுற்றி வந்த அந்த லொறி எங்கள் சப்பல் வார்டைப் பார்த்து திரும்பி நின்று கொண்டது.

மீண்டும் சிங்களக் கைதிகள் உள்ளே நுழைந்தனர். எங்கள் போராளிகளின் உடல்களை நான்கு பேர் வீதம் இரண்டு கைகளுக்கும் இரண்டு பேர், இரண்டு கால்களுக்கும் இரண்டு பேர் என்று தூக்கிக்கொண்டு வந்து லொறியின் பின்புறத்தில் நின்று கொண்டு, இறந்த எங்கள் இனத்தவரின் உடல்களை முன்னும் பின்னுமாக ஆட்டி, வேகம் அதிகரித்ததும் வீசி எறிந்தனர் லொறியின் உள்பகுதிக்குள்.

அரச மரத்தின் கீழ் நின்ற லொறியினுள் எங்கள் இளைஞர்கள் இவ்விதமாக நிரப்பப்பட்டனர். இந்த இறந்த உடல்களுக்குள் ஒருவர் உயிருடன் இருந்தார். குவிக்கப்பட்ட அவர்களுள் எழுந்திருக்க ஒருவர் முயற்சிப்பதைக் கண்ட சிங்கள கைதி ஒருவர் மீண்டும் லொறியினுள் ஏறி ஏனைய உடல்கள் மீது நின்று கொண்டு எழுந்திருக்க முயற்சித்தவரது தலையில் ஓங்கி தன் கையிலிருந்த கோடாலியினால் கொத்தினார். தலை இரண்டாகப் பிளந்து மீண்டும் சரிந்தது தமிழரது உடல் பினமாக.

வீரசாகசம் புரிந்தவர் போன்று குதித்தார் அந்தக் காடையர். லொறியைச் சுற்றி பெருங்கூட்டம். இந்தக் கூட்டத்தினூடே மயில் வாகனன் என்ற சிறுவன் தென்பட்டான்.

அச் சிறுவன் குட்டிமணி அவர்கள் இருந்த “டி” வார்டில் அடைக்கப்பட்டிருந்தான். அன்றைய எங்கள் இயக்கமான புளொட் இயக்கத்தைச் சேர்ந்தவன்தான் சிறுவன் மயில்வாகனன். (வயது 16). “டி” வார்டில் கூட்டம் அதிகரித்ததால் கதவு திறக்கப்படும் போது மறைந்து நின்று கூட்டத்தோடு கூட்டமாக வெளியே வந்து அரச மரத்தடியில் நின்று கொண்டிருந்தான். சிங்களக் கைதிகளுக்கு அவனைத் தெரியாது.

ஆனால், “டி” வார்டில் காவலுக்கு நின்ற சிறை அதிகாரி சிறுவன் மயில் வாகனனைக் கண்டு கொண்டார். ஓடிச் சென்ற அந்தக் காவலாளி சிங்களக் கைதி ஒருவரின் கையிலிருந்த கத்தி ஒன்றினைப் பறித்து மயில் வாகனனது தலைமயிரைப் பிடித்து முன்னோக்கி இழுத்துக் கொண்டு ஓங்கி அவனது வயிற்றில் பல முறைக் குத்தினார். மயில் வாகனன் தரையில் வீழ்ந்தான். காவலாளி வீரநடை போட அவரை சிங்களக் கைதிகள் தோள்மீது தூக்கி “ஜெயவேவா” என்று கோசமிட்டனர்.

பின்னர் மயில் வாகனனும் லொறியினுள் தூக்கி வீசப்பட்டான்.

நீண்ட நேரம் காத்திருந்த அந்த லொறி இரவு சுமார் ஏழு மணியளவில் மீண்டும் முக்கிய வாயில் வழியாக வெளியேறியது. எமக்கு அருகிலிருந்த எங்கள் போராளிகள் பிணக்குவியலாக, நாசிகளின் கூடாரத்தை விட்டு சவக்குளிகளுக்குச் சென்றது போல் கொண்டு செல்லப்பட்டது.

நடந்து முடிந்த சம்பவங்கள் அனைத்தையும் “பி” வார்டின் முதல் செல்லிருந்த நானும் எனக்கு எதிர்புறம் இருந்த சிவ சுப்பிரமணியம் அவர்களும் நேரடியாகவும் ஜன்னல் வழியாகவும் அவதானித்துக் கொண்டிருந்தோம். இதே போன்று அரசமரப் பகுதியின் பக்கமாக இருந்த ஜன்னல் வழியாகவும் எங்களில் சிலரும் இவற்றினைக் கண்டு ஒருவருக்கொருவர் செய்திகளைப் பரிமாறிக் கொண்டிருந்தனர்.

இப்போது நேரம் இரவு ஒன்பது முப்பது மணி ஆகிவிட்டது. அனைவரும் விழி பிதுங்க அடுத்த நிகழ்வுக்காக காத்திருந்தோம். “பி” வார்டின் கதவு திறக்கப்பட்டது. இரண்டு மூன்று கறுத்தக் கோட் அணிந்தவர்கள் சிறை அதிகாரிகளுடன் பதுங்கிப் பதுங்கி நுழைந்தனர். 28 அறைகள் கொண்ட எங்கள் பகுதியை சற்றுத் தள்ளி நின்றே ஒரு நோட்டம் விட்டனர்.

எனது அறையின் முன் வந்து நின்ற கறுத்த கோட் அணிந்தவர் தன்னை ஆங்கிலத்தில் அறிமுகப்படுத்திக் கொண்டார்.

“நான் முதன்மை நீதிபதி, இங்கு நடைபெற்ற சம்பவங்கள் பற்றி நீங்கள் சாட்சி சொல்ல விரும்புகிறீர்களா? என்றார். ஆம், நான் சாட்சி சொல்ல விரும்புகிறேன் என்றேன். எனது அறையைச் சைகையினால் காண்பித்த நீதிபதி, முதன்மை ஜெயிலரிடம் திறக்கும்படி கூறிவிட்டு, ஒவ்வொரு அறையாகச் சென்று சாட்சி சொல்ல விரும்புகிறீர்களா? என்று கேட்டுக் கொண்டு மீண்டும் எனது அறை முன்பு வந்து நின்றார்.

எனது அறை திறக்கப்பட்டது. நான் வெளியில் வந்தபோது, தம்பாபிள்ளை மகேஸ்வரன் அவர்களும் தானும் சாட்சியம் சொல்ல வேண்டும் என்று கூறினார். முதலில் கேட்கும் போது பேசாமல் இருந்துவிட்டு இப்போது எதற்காக என்று கோபித்த ஜெயிலரைக் கவனித்த முதன்மை நீதிபதி அவரையும் அழைத்து வரும்படி உத்தரவிட்டார்.

எங்கள் இருவரையும் அழைத்துக் கொண்டு முதன்மை ஜெயிலரது அலுவலகத்துக்குச் சென்றனர். வாசலில் போடப்பட்டிருந்த வாங்கில் அமரும்படி கூறினர். சரியாக இரவு பத்து முப்பது மணியளவில் எனது பெயரைச் சொல்லி உள்ளே அழைத்தனர்.

உள்ளே பெரிய மேசை ஒன்று போடப்பட்டிருந்தது. மறுமுனையில் முதன்மை நீதிபதியும் தட்டெழுத்தாளரும் இருக்க, எதிர் முனையில் எனக்கென ஓர் நாற்காலி இருந்தது. அதனைச் சைகையின் மூலம் காட்டி அமரும்படி சொன்னார் நீதிபதி. நானும் அமர்ந்து கொண்டு மேசையின் இருபுறமும் அமர்ந்திருந்தவர்களைக் கவணித்தேன். வெள்ளை உடையில் அமர்ந்திருந்த நபரை எங்கோ பார்த்தது போன்ற உணர்வு ஏற்பட்டது. கிரகித்துக் கொண்டேன். அவர்தான் திருவாளர் குட்டிமணி தங்கத்துரை ஆகியோருக்கு தூக்குத் தண்டனை கொடுக்கவேண்டும் என்று நீதி மன்றத்தில் வாதாடிய அரசு தரப்பு சட்டத்தரணி “திலக் மாறப்பன”. அவருக்கு அருகில் முதன்மை ஜெயிலரும் அவர்களின் எதிர் புறத்தில் சிறையின் அதிபரும் இருந்தனர்.

நீதிபதி என்னைப் பார்த்து வாக்கு மூலத்தை ஆரம்பிக்கலாமா? என்று கேட்டார். மாறப்பனயைப் பார்த்து, “இவரை முதலில் வெளியில் அனுப்புங்கள்” என்று கூறினேன். நீதிபதி அவரைப் பார்த்தார், அவர் எதுவும் பேசாமல் வெளியே சென்றார். மீண்டும் நான் முதன்மை ஜெயிலரையும், சிறை அதிகாரியையும் பார்த்தேன். விளங்கிக் கொண்ட நீதிபதி, அவர்கள் இருவரையும் வெளியே செல்லும்படி கூறினார். அவர்களும் வெளியே சென்று விட்டனர். இப்போது நீதிபதியும் தட்டெழுத்தாளரும்தான் அந்த அலுவலகத்தில் இருந்தோம். மீண்டும் என்னைப் பார்த்த நீதிபதி “இப்போது ஆரம்பிக்கலாமா” என்றார்.

சாட்சியை ஆரம்பிக்கலாமா என்று கேட்ட நீதிபதியிடம், நான் நிதானமாகக் கூறினேன். தாங்கள் எங்களது “பி” வார்டின் மேற்பகுதியினைப் பார்த்தீர்கள். கொலையாளிகள் எங்கள் பகுதியையும் உடைத்து உள்ளே நுழைய முனைந்தார்கள். அதன் அடையாளங்கள் அங்கே இருந்தன. நான் சாட்சியம் சொல்லிவிட்டு, அதே பகுதிக்குச் சென்றால் இதே கொலையாளிகள் மீண்டும் எங்கள் பகுதிக்குள் புகுந்து இதே போன்ற படுகொலைகளைச் செய்யலாம்.

எனவே, எங்கள் அனைவரையும் வேறு சிறைச் சாலைக்கு மாற்றினால் நான் சாட்சியம் சொல்கிறேன் என்று ஆணித் தரமாகக் கூறினேன். சற்று யோசித்த நீதிபதி நீங்கள் சொல்வதிலும் நியாயம் உண்டு. ஆனால் சிறைமாற்றம் என்பது என்னால் செய்ய முடியாது. இப்பிரச்சினையை நான் ஜனாதிபதி ஜெயவர்த்தனாவிடம் எடுத்துச் சொல்லி விரைவில் மாற்றம் செய்கிறேன் என்று கூறியவர் எழுந்து சென்று முதன்மை ஜெயிலரை அழைத்தார்.

உள்ளே வந்த முதன்மை ஜெயிலரிடத்து சிறை வளாகத்தில் வேறு தனியான இடம் இருக்கிறதா என்று விசாரித்தார். அதற்குப் பதிலளித்த ஜெயிலர் செக்கிறிகேசன் (நடீகிஙுடீகிஹசிடுச்டூ) பகுதி இருக்கிறது அதனைப் பயன்படுத்தலாம் என்றார்.

என்னைப் பார்த்த நீதிபதி, உங்களை இப்போது இருக்கும் பகுதியிலிருந்து வேறு பகுதிக்கு இன்று இரவே மாற்றுகிறோம் என்றதும், இந்த வாய்ப்பை பயன்படுத்த வேண்டும் என்பதற்காக “தாங்கள் உறுதியளித்தால் நான் சாட்சியம் தருகிறேன்: என்றேன்.

ஜெயிலரை வெளியில் அனுப்பிவிட்டு, எனது பெயர் முகவரியினை தட்டச்சில் பதிவு செய்து கொண்டு முதல் கேள்வியினைக் கேட்டார் நீதிபதி: நீங்கள் நடந்த சம்பவங்களை நேரில் பார்த்தீர்களா? ஆம் என்றும் சொல்ல முடியாது இல்லை என்றும் சொல்ல முடியாத நிலையில், இல்லை என்று சொன்னால் சாட்சியம் செல்லாது என்று எடுத்த எடுப்பிலேயே விசாரணையை முடித்துவிடுவார்கள் என்று நினைத்த நான் “ஆம் பார்த்தேன்” என்று பதில் கூறினேன்.

“டி” பகுதியில் இருந்தவர்கள் எப்படிக் கொல்லப்பட்டார்கள் என்பது நேரிடையாக நாம் யாரும் பார்த்ததில்லை. அதே வேளை எங்களுக்கு ஐம்பதடி தொலைவில், ஆயுதங்களுடன் புகுந்து இரண்டாயிரம் பேர் சேர்ந்து அடித்துக் கொலை செய்துவிட்டு, இரத்தக் கரையுடன் கோசமிட்டுச் செல்வதையும் எம் இனத்தவர் இரத்தத்தால் குழிப்பாட்டப்பட்டு அடையாளம் தெரியாத அளவு லொறியினுள் தூக்கி வீசப்படுவதைப் பார்த்த நாம் எப்படி எம்மவருக்காக சாட்சியம் சொல்லாதிருப்பது என்ற அடிப்படையில்தான் நான் சாட்சியம் சொல்ல முன்வந்தேன்.

அதே வேளை, நாங்கள் இருந்த பகுதியில் தொடர்ந்தும் இருந்தால் மீண்டும் நாமும் கொல்லப்படுவோம் என்ற அச்சத்தினால் எஞ்சிய எம்மவரை இந்தச் சிறையிலிருந்து வேறு பாதுகாப்பான சிறைக்கு மாற்றவேண்டும். எனவே, சாட்சியம் சொல்வதன் மூலம் இந்தக் கோரிக்கையை முன்வைத்து பயந்து போயிருக்கும் எங்கள் தோழர்களை மீட்டுவிடலாம் என்ற முடிவினாலேயே நான் சாட்சியம் சொல்வது என்று முடிவுசெய்தேன்.

நீதிபதியின் அடுத்தக் கேள்வி, நீங்கள் எவற்றை எல்லாம் பார்த்தீர்கள்?

எண்ணமுடியாத கூட்டம், கைகளில் ஆயுதங்களுடன் நண்பர்கள் குட்டிமணி, தங்கத்துரை, ஜெகன் போன்றோர் தங்கியிருந்த “டி” வார்ட் பகுதியினுள் புகுந்ததை நான் நேரில் பார்த்தேன். அவர்களுள் பலரை என்னால் அடையாளம் காட்ட முடியும். ஏறக்குறைய இரண்டு மணித்தியாலங்களுக்கு மேலாக ஆயுதங்களுடன் சென்றவர்கள் உள்ளே புகுந்து சத்தமிட்டுக் கொண்டு தாக்குவதும், பின்னர் இரத்தம் தோய்ந்த ஆயுதங்களுடன் வெளியே வருவதும், வெளியே ஆயுதங்களுடன் காத்திருப்போர்களுக்கு சந்தர்ப்பம் கொடுத்து அவர்களும் எம்மவர் பிணங்களைத் தாக்கிவிட்டு கோசமிட்டுக் கொண்டு வெளியேறியதை நான் பார்த்தேன்.

நீதிபதி: இவை அனைத்தும் தற்செயலாக நடந்தவைதானே? இல்லை! இவை அனைத்தும் திட்டமிடப்பட்டே நடந்தவை என்றேன். எப்படிச் சொல்கிறீர்கள் என்று நீதிபதி கேட்டார்? நேற்று இரவு சிறைவாசலில் பலர் கோசமிடுவதும், பின்னர் துப்பாக்கிச் சத்தமும் கேட்டது. இந்தச் சம்பவம் எங்களுக்கு எதிராக நடந்தவை என்றே நினைக்கிறேன். அடுத்ததாக, மதிய உணவு வழங்கிய பின் தண்டிக்கப்பட்ட கைதிகள் உட்பட அனைவருமே அவரவர் அறைகளில் அடைக்கப்பட்டு விடுவார்கள். ஆனால், இன்று அப்படி எவரும் அடைக்கப்படவில்லை. உணவு எடுத்துச் சென்றவர்கள் மீண்டும் அரசமரத்தின் கீழ் கூடிநின்றதை நான் பார்த்தேன்.

நீதிபதி, அப்படிக் கூடி நின்றவர்கள் என்ன செய்தார்கள்? அப்படிக் கூடி நின்றவர்கள் மேலும் பலரைத் திரட்டிக்கொண்டு கோசமிட்டபடி நண்பர் குட்டிமணி இருந்த பகுதிக்குள் புகுந்தனர். அந்தக் கூட்டத்தினுள் சிறை அதிகாரிகளும் இருந்தனர். மரத்தின் கீழ் நின்றவர்களுடன் சிறை அதிகாரிகள் கதைத்துக்கொண்டு நின்றதையும் நான் பார்த்தேன். சிறை அதிகாரிகள் அவர்களைத் தடுப்பதற்குப் பதிலாக அவர்களுடன் இணைந்து கோசமிட்டதையும் நான் நேரிடையாகப் பார்த்தேன்.

நீதிபதி:, நீங்கள் அவர்களை அடையாளம் காட்ட முடியுமா? இந்தச் சிறையை விட்டு வேறு சிறைக்கு மாற்றினால் அவர்களை அடையாளம் காட்டமுடியும் என்று கூறினேன்.

நீதிபதி: ழு.மு. இதனைப் பின்னர் பார்த்துக்கொள்ளலாம். நடைபெற்ற சம்பவங்கள் கைதிகளும் காவலாளிகளும் இணைந்து செய்தனர் என்று கூறுகிறீர்களா? ஆம்! மேலதிகாரிகளும் சேர்ந்து செய்தனர் என்றேன்.

நீதிபதி: எப்படிச் சொல்கிறீர்கள்? மேலதிகாரிகள் அனுமதியின்றி சிறைக்காவலர்கள் தாங்களாகவே மதிய உணவுடன் மூடப்படுபவர்களைத் திறந்துவிட முடியாது. மதிய உணவு வழங்கப்பட்டவுடன் சிறை வளாகமே வெறிச்சோடி கிடக்கும். ஆனால், இன்று மதியம் இரண்டு மணியளவிலும் மொத்தச் சிறைக் கைதிகளும் சிறை மைதானத்திலும், அரச மரத்தடியிலும் முதன்மைச் சிறை அதிகாரியின் அலுவலகத்தின் முன்னும் கூடியிருந்தனர். எனவே, மேல் அதிகாரிகளின் உத்தரவின் பேரில்தான் இவை நடைபெற்றன.

நீதிபதி: மேல் அதிகாரிகள் என்று யாரைக் குறிப்பிடுகிறீர்கள்? முதன்மை ஜெயிலரும் (இகீடுடீக் ஒஹடுங்ச்ஙு) மற்றும் சிறை அதிபரும் (நசீஙீஙுடுடூசிடீடூக்ஷடீடூசி) என்றேன். நீதிபதி: எப்படி? எம்மவர்கள் கொலை செய்யப்பட்டு முடிந்ததும் சிறை அதிபர் ஆற்றிய உரையினை முழுவதுமாக கூறினேன். மேலும் இந்தச் சம்பவம் நடந்த ஐந்து நிமிடங்களில் ஒரு விமானம் (கெலிகாப்டர்) மிகவும் தாழ்வாக பறந்து கிட்டத்தட்ட ஆறு ஏழு முறை சுற்றி வந்து நடந்தவற்றை அவதானித்துச் சென்றது. எங்களுக்கு, விமானத்தின் ஓசை மிக சத்தமாக கேட்டது. இதிலிருந்து இந்தச் சம்பவம் தற்செயலாக நடந்தது அல்ல. திட்டமிட்டு நடத்தப்பட்ட சதி என்று கூறினேன். அமைதியாக சிறிது நேரம் யோசனையின் பின் நீதிபதி மீண்டும்.

நீதிபதி: அப்படியாயின் உங்கள் கூற்றுப்படி இவை அனைத்தும் திட்டமிடப்பட்டு மேல் அதிகாரிகளால் நிறைவேற்றப்பட்டவை என்கீறீர்களா? ஆம்! என்றேன்.

நீதிபதி: வேறு என்ன சொல்ல விரும்புகிறீர்கள்? எஞ்சியுள்ள எங்கள் அனைவருக்கும் இந்தச் சிறையில் பாதுகாப்பு இல்லை எனவே, எங்களைப் பாதுகாப்பான சிறைக்கு மாற்ற வேண்டும். நடந்து முடிந்த சம்பவங்களுக்கும் கொலைகளுக்கும் சரியான முறையில் விசாரணை நடத்தப்பட்டு குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கப்பட வேண்டும். இவையே நான் சொல்ல விரும்புவது என்று கூறி முடித்தேன் படித்து பார்க்கும் படி கூறி வாக்குமூலத்தின் கீழ் எனது கையெழுத்தைப் பெற்றுக் கொண்டார் நீதிபதி.

பின்னர் சிறை அதிகாரிகளை நீதிபதி அழைத்து, என்னை அழைத்துச் செல்லுமாறும், வெளியில் காத்திருந்த மகேஸ்வரனை உள்ளே அழைத்து வரும்படியும் உத்தரவிட்டார்.

வெளியே சென்ற என்னை மகேஸ்வரன் அவர்கள் இருந்த வாங்கில் இருக்கும் படி கூறி மகேஸ்வரன் அவர்களை விசாரணைக்காக உள்ளே அழைத்துச் சென்றனர். அப்போதைய நேரம் சுமார் இரவு இரண்டு மணியிருக்கும்.

உள்ளே சென்ற மகேஸ்வரன் அவர்கள் பத்து நிமிடங்களில் மீண்டும் வெளியே வந்தார். அவர் அவ்வளவு வேகமாக என்ன வாக்கு மூலம் கொடுத்தார் என்பது எனக்குத் தெரியாது. வெளியே வந்ததும் சற்று முன்னால் மகேஸ்வரன் அவர்களையும், பின்னால் என்னையும் அழைத்துக் கொண்டு ஏறக்குறைய முன்னூறு மீற்றர் தொலைவில் இருக்கும் எங்கள் கொட்டடியை நோக்கி நடந்து சென்று கொண்டிருக்கும் வேளை,

மகேஸ்வரன் அவர்கள் தன்னருகில் வந்துகொண்டிருக்கும் சிறைக் காவலாளிகளுடன் கதைக்கத் தொடங்கினார். அப்போது ஒரு காவலாளி சிங்களத்தில் கேட்டார். குட்டி மணி பல பேரைக் கொலை செய்துள்ளார். அதனால் அவரைக் கொன்றது சரிதானே என்று மகேஸ்வரனிடத்து கேட்டனர்.

அதற்குப் பதலளித்த மகேஸ்வரன் அவர்கள், குட்டிமணி பலபேரைக் கொன்ற கொலையாளிதான். அவர் கொல்லப்பட்டதில் நான் கவலையடையவில்லை. ஆனால், அவருடன் இருந்த அப்பாவி இளைஞர்கள் கொல்லப்பட்டதுதான் எனக்குக் கவலை என்று பதிலளித்தார். அடுத்த சம்பாசனை ஆரம்பிப்பதற்கு முன்னர் நான் சத்தமாக மகேஸ்வரன் அவர்களை அழைத்து என்ன கதை சொல்கிறீர்கள் என்றேன்!

மகேஸ்வரன் அவர்கள் மௌனமாகிவிட்டார். இந்த வேளையில் தண்டிக்கப்பட்ட கைதிகளின் பகுதி மூடப்படாமல் மேல் தளத்தில் நின்றவர்கள் எங்களைப்பார்த்து சாட்சியா சொல்லிவிட்டு வருகிறீர்கள். உங்களையும் கொல்வோம் என்று ஒன்று சேர்ந்து சத்தம் போட்டனர்.

எங்கள் பகுதிக்கு வந்ததும், எங்கள் தோழர்கள் நடந்தவைபற்றி வினவினர். நடந்தவற்றைக் கூறினேன். சிலர் நின்மதியடைந்தனர். இன்று இரவு வேறு பகுதிக்கு மாற்றிவிடுவார்கள் என்பது அவர்களது திருப்தியாக இருந்தது. மேலும் சிலரோ இது தேவையில்லாத வேலை. எங்களுக்கு எந்தப் பாதுகாப்பும் இல்லாத போது எதற்காக சாட்சியம் சொல்ல வேண்டும் என்று சிலர் கூறினர்.

இறந்த எங்கள் சக போராளிகளுக்காக நான் சாட்சியம் சொல்லச் சென்றது தப்பானதோ என்று என்னை எண்ணத் தூண்டியது. இதனால், கேள்வி எழுப்பிய அனைவருக்கும் நான் விளக்கம் கொடுக்கவேண்டியதானது.

நூன் கொடுத்த விளக்கம் பின்வருமாறு இருந்தது: நாங்கள் அனைவரும் விடுதலைக்காகப் போராட முன்வந்தோம். “டி” பகுதியில் இருந்தவர்களும் அதே நோக்கத்துடன் செயல்பட்டுவந்தவர்கள்தான். நாங்கள் வேறு வேறு இயக்களாக இருக்கலாம். நோக்கம் ஒன்றுதான். சக போராளிகள் படுகொலை செய்யப்பட்டு வீழ்ந்து கிடக்கும் போது, நாம் கண்ணால் கண்டவற்றைக் கூட சாட்சியாக சொல்ல முடியாத அளவு பயந்தவர்களாக இருந்தால் நாங்கள் போராடவே வந்திருக்கக் கூடாது. குட்டிமணி ஆட்களின் பகுதிக்குள் நுழைந்ததற்குப் பதிலாக அந்தக் கொலைகாரர்கள் எங்களது பகுதிக்குள் நுழைந்திருந்தால் நாம் யாருமே இப்போது உயிருடன் இருந்திருக்க முடியாது.

நாங்கள் தப்பித்துக் கொள்வதற்காக அவர்கள் உயிர்த் தியாகம் செய்துள்ளனர் என்பதே சரியானது. நாங்கள் கண்டவற்றை சாட்சியமாகச் சொல்வதற்கு முன்வரவில்லை என்றால் பிற உலகம் எங்களைப் பற்றி மோசமாக விமர்சிக்கும் எங்கள் இனத்தவருக்காக சிங்களக் காடையரா சாட்சி சொல்லப் போகிறார்கள். சாட்சிகளே இல்லை என்று திசை திருப்பி விடும் சிங்கள அரசு.

எங்களுக்கு உள்ள ஒரே பயம் சிங்களக் கைதிகள் திருப்பியும் தாக்குவார்கள் என்பதுதான். இந்தப் பகுதியிலிருந்து மாற்றுவோம் என்ற உறுதியின் பின்னர்தான் நான் சாட்சியம் சொன்னேன். அதனையும் மீறி தாக்கப்பட்டால் நான் அதனைச் சந்திக்கத்தான் வேண்டும். நேற்றே நாம் இறந்துவிட்டோம் என்று நினைத்துப் பார்த்தால் இனி ஒருதடவை இறப்பதற்குப் பயப்படவேண்டியதில்லை. எந்தப் பிரச்சினை வந்தாலும் அதற்கு முகம் கொடுப்போம் என்று உறுதி எடுத்தால் எவற்றுக்கும் பயப்படவேண்டியதில்லை என்று கதைத்துக்கொண்டிருக்கையில் சிறைக் காவலாளிகள் மிகவும் அவரச அவசரமாக வந்து எங்கள் அறைக்கதவுகளைத் திறந்தனர்.

வரிசையாக, அடுத்தக் கொட்டடியான செக்கிறிகேசனுக்கு நடத்திச் செல்லப்பட்டோம். அங்கே எட்டு அறைகள்தான் இருந்தன. நாம் 27 பேர், ஒவ்வொரு அறையிலும் மூன்று பேராக அடைக்கப்பட்டோம். 24 பேர் போக மேற்கொண்டும் மூன்று பேர் எஞ்சியிருந்தனர். அந்த மூன்று பேரையும் ஒவ்வொரு அறையிலும் அடைத்து மூன்று அறைகளை நால்வர் ஆக்கினர்.

இரவு முழுவதும் யாருக்கும் உறக்கமில்லை எங்களை இந்த எட்டு அறைகளிலும் அடைத்துவிட்டு காவலர்கள் அந்தக் கூட்டத்தின் வாசலில் நின்று கொண்டனர். எங்கள் அறைகளுக்கு தனித்தனி இரும்புக்கம்பிகளாலான கதவுகள் இருந்த போதிலும் இந்த எட்டு அறைகளுக்கும் சேர்த்து ஓர் பொதுவான கம்பிக்கதவும் இருந்தது. அந்தக் கம்பிக்கதவின் அருகேதான் காவலாளிகள் நிற்கின்றனர்.
மேலும் இங்கே தொடர்க...