27 மே, 2010

குழந்தை கடத்தல் வழக்கில் பாதிரியார் கைது




கிருஷ்ணகிரி : குழந்தை கடத்தல் வழக்கில் தொடர்புடைய, விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த, மேலும் ஒரு பாதிரியார் கைது செய்யப்பட்டார். கிருஷ்ணகிரியில், மூன்று மாத ஆண் குழந்தை மற்றும் மூன்று வயது சிறுவன் ஆகியோரை கடத்திய, தனலட்சுமி (35) மற்றும் சென்னை கிரிஜா, கணவர் சிவா, ராணி மற்றும் பாதிரியார் அல்போன்ஸ் சேவியர் ஆகிய ஐந்து பேரை போலீசார் கைது செய்தனர். கடத்தப்பட்ட இரு சிறுவர்களை மீட்டு, பெற்றோரிடம் ஒப்படைத்தனர். குழந்தைகள் கடத்தல் தொடர்பாக, விழுப்புரம் மாவட்டம் ரெட்டணையை சேர்ந்த, பாதிரியார் செல்வம் (44) என்பவரை போலீசார் கைது செய்தனர். பாதிரியார் செல்வத்திடம் நடத்திய விசாரணையில், கிடைத்த தகவலின்படி, கிரிஜாவை காவலில் எடுத்து விசாரிக்க, போலீசார் கிருஷ்ணகிரி குற்றவியல் நடுவர் மன்றத்தில், மனுதாக்கல் செய்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக