28 அக்டோபர், 2010

டக்ளஸ் தேவானந்தா தேடப்படும் குற்றவாளி: சென்னை உயர் நீதிமன்றம்

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தேடப்படும் குற்றிவாளியா என சென்னை உயர் நீதிமன்றம் எதிர்வரும் நவம்பர் 2 ஆம் திகதி தீர்ப்பு வழங்க உள்ளது.

செ‌ன்னை‌யி‌ல் 24 ஆ‌ண்டுகளு‌க்கு மு‌ன்பு நட‌ந்த கொலை வழ‌க்‌கி‌‌ல் ட‌க்ள‌ஸ் தேவான‌ந்தா ‌‌மீது கு‌ற்ற‌ச்சா‌ற்று ப‌திவு செ‌ய்ய‌ப்ப‌ட்டது. இ‌ந்த வழ‌க்கு செ‌ன்னை ‌எழு‌ம்பூ‌ர் ‌நீ‌திம‌ன்ற‌த்‌‌தி‌ல் நட‌ந்து வ‌ந்தது.

இ‌ந்த வழ‌க்‌கி‌ல் ஆஜராகாததா‌ல் தேட‌ப்படு‌ம் கு‌ற்றவா‌ளியாக ட‌க்ள‌ஸ் தேவான‌ந்தா ‌நீ‌திம‌ன்ற‌த்‌தா‌ல் அ‌றி‌வி‌க்க‌ப்‌ப‌ட்டா‌ர்.

ச‌மீப‌த்த‌ி‌ல் டெ‌ல்‌லி வ‌ந்த ட‌க்ள‌ஸ் தேவான‌ந்தாவை கைது செ‌ய்ய‌க் கோ‌ரி செ‌ன்னை உய‌ர் ‌நீ‌திம‌ன்ற‌த்த‌ி‌ல் வழ‌க்கு‌ தொடர‌ப்ப‌ட்டது. இ‌ந்த வழ‌க்கின் ‌விசா‌ரணை‌ நட‌ந்து கொ‌ண்டிரு‌ந்தபோது இல‌‌ங்கை செ‌ன்று ‌வி‌ட்டா‌ர் ட‌க்ள‌ஸ் தேவான‌ந்தா‌.

இ‌ந்‌நிலை‌யி‌ல்இ தேட‌ப்படு‌ம் கு‌ற்றவா‌ளி என அ‌றி‌வி‌த்ததை ‌‌நீ‌க்க‌க் கோ‌‌ரி செ‌ன்னை உய‌ர் ‌நீ‌திம‌ன்ற‌த்‌தி‌ல் ட‌க்ள‌ஸ் தேவான‌ந்தா மனு‌த் தா‌க்க‌‌ல் செ‌‌ய்தா‌ர்.

இ‌ந்த மனு‌ ‌மீதான ‌விசாரணை இ‌ன்று முடி‌ந்ததை‌த் தொட‌ர்‌ந்து ‌தீ‌ர்‌ப்பை நவ‌ம்ப‌ர் 2ஆ‌ம் தே‌தி‌க்கு ‌நீ‌திப‌தி அ‌க்ப‌ல் அ‌லி த‌ள்‌ளிவை‌த்து‌ள்ளா‌ர்
மேலும் இங்கே தொடர்க...

யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு விவசாய நடவடிக்கைகளுக்காக நீர் இறைக்கும் இயந்திரங்கள் கையளிப்பு

மாந்தை மேற்குப் பிரதேசச் செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட பகுதிகளில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களை தலைமையாகக் கொண்ட குடும்பப் பெண்களுக்கு விவசாய நடவடிக்கைகளை மேற்கொள்ளுவதற்காக மன்னார் சுகவாழ்வு மன்றத்தினால் நீர் இறைக்கும் இயந்திரங்கள் இன்று காலை வழங்கிவைக்கப்பட்டது.

கிராம சேவையாளர்களின் உதவியுடன் தெரிவு செய்யப்பட்ட யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட குடும்பப் பெண்களுக்கே மேற்படி உதவிகள் கட்டம் கட்டமாக வழங்கப்பட்டு வருகின்றது.

சுகவாழ்வு மன்றத்தின் இயக்குனர் ஜீவன் அமரசிங்க தலைமையில், சுகவாழ்வு மன்றத்தின் சிரேஷ்ட முகாமையாளர் டி.எஸ்.பல்பொல மற்றும் சுகவாழ்வு மன்ற அதிகாரி உமா ராஜலஷ்மி ஆகியோர் மாந்தை மேற்குப் பகுதிக்குச் சென்று வழங்கி வைத்தனர்.
மேலும் இங்கே தொடர்க...

சந்திரிகா குமாரதுங்க மீதான தற்கொலை தாக்குதல் :எதிரிக்கு 30 வருட கடூழிய சிறை

முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவை தற்கொலை தாக்குதல் மூலம் கொல்ல முயற்சித்ததாக குற்றம் சாட்டி தொடரப்பட்ட வழக்கில் பிரதான எதிரியான வவுனியா நாவற்குளத்தைச் சேர்ந்த சக்திவேல் இலங்கேஸ்வரனுக்கு 30 வருட கடூழிய சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி டபிள்யூ. ரி.எம். பி.டி. வராவெல இந்தத் தீர்ப்பினை நேற்று வழங்கினார்.

கொழும்பு நகரசபை மைதானத்தில் 1999 ஆம் ஆண்டில் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தல் பிரசாரக்கூட்டத்தில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்கவை இலக்கு வைத்து தற்கொலை குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டது. இந்தத் தாக்குதலில் சந்திரிகா குமாரதுங்க காயமடைந்ததுடன் 27 பேர் கொல்லப்பட்டும், மேலும் 80 பேர் காயமடைந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

இந்த சம்பவத்தையடுத்து கைது செய்யப்பட்ட சக்திவேல் இலங்கேஸ்வரன் மீது குற்றம்சாட்டி சட்டமா அதிபர் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு விசாரணை கடந்த சில வருடங்களாக விசாரிக்கப்பட்டு நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது. விசாரணையின் போது எதிரி குற்றத்தினை ஒப்புக்கொண்டிருந்தார்.

இந்த வழக்கில் எதிரி மீது 28 குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டிருந்தது. இதனையடுத்து எதிரிக்கு 30 வருட கடூழிய சிறை தண்டணை விதிக்கப்பட்டது. சம்பவத்தின் போது தற்கொலை குண்டு தாக்குதலினால் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்கவுக்கு மரணம் சம்பவித்திருக்குமானால் ஜனாதிபதி தேர்தல் இடை நிறுத்தப்பட்டிருக்கும் இதனால் தேர்தல்கள் திணைக்களத்திற்கு சுமார் 6 கோடி ரூபா நட்டம் ஏற்பட்டிருக்கும் என்றும் நீதிபதி தனது தீர்ப்பில் குறிப்பிட்டார். அத்துடன் குண்டை வெடிக்கவைத்து பலரின் உயிரை காவு கொண்டமைக்காகவே இந்தத் தண்டனையை வழங்குவதாகவும் நீதிபதி தனது தீர்ப்பில் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும் இங்கே தொடர்க...

இலங்கையின் மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்கள் குறித்து பக்கச்சார்பற்ற விசாரணை அவசியம்

இலங்கை போரின் இறுதிக்கட்டத்தில் நடந்ததாக குற்றஞ்சாட்டப்படும் மனித உரிமை மீறல்கள் குறித்து உறுதிப்படுத்துவதற்கு சர்வதேச, பக்கச் சார்பற்ற விசாரணை ஒன்று அவசியம் என பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரன் நேற்று பிரித்தானிய பாராளுமன்றத்தில் கூறியுள்ளார்.

பாராளுமன்ற உறுப்பினரான சிவோண் மக்டொனால்ட் கேட்ட கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கையிலேயே பிரதமர் இவ்வாறு கூறியுள்ளார். இலங்கையின் அந்தஸ்தை சர்வதேச மட்டத்தில் உயர்த்துவதற்கு மக்கள் தொடர்பு நிறுவனம் ஒன்றை பயன்படுத்தி எவ்வளவு முயற்சிக்கின்ற போதிலும், அங்கு படுகொலைகள் மற்றும் மனித உரிமை மீறல்கள் நடந்ததாக மேலும் ஆதாரங்கள் வந்துகொண்டிருக்கும் நிலையில் அவை குறித்து உறுதி செய்வதற்கு ஒரு சர்வதேச பக்கச்சார்பற்ற விசாரணை அவசியம் என்ற தனது கருத்துடன் பிரித்தானிய பிரதமர் உடன்படுகின்றாரா என்று பாராளுமன்ற உறுப்பினர் கேட்டிருந்தார்.

இலங்கையில் என்ன நடந்தது என்பதை அறிய எமக்கு ஒரு பக்கச்சார்பற்ற விசாரணைஅவசியம். செய்தித் தாள்களிலும், தொலைக்காட்சிகளிலும் அவை குறித்து நாம் பார்க்கிறோம்.ஆகவே பாராளுமன்ற உறுப்பினர் கூறியவை சரியா என்பதை உறுதி செய்ய ஒரு பக்கச்சார்பற்ற விசாரணை அங்கு அவசியம் என்றார் பிரிட்டிஷ் பிரதமர். இந்த விடயம் குறித்து பி.பி.சி.யிடம் தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் சிவோண் மக்டொனால்ட்டிடம், இந்த விடயத்தில் பிரித்தானியா தான் அங்கம் வகிக்கும் .நா. பாதுகாப்புச் சபையில் ரஷ்யாவும் சீனாவும் இந்த விடயத்தில் முரணாக இருக்கும் நிலையில் அது சிரமம் என்று கூறினார்.

அதேவேளை இலங்கை அரசாங்கத்தினால் நடத்தப்படும் படிப்பினைகள் மற்றும் நல்லிணக்கத்துக்கான ஆணைக்குழுவின் விசாரணையின் மூலம் அங்கு இடம்பெற்ற சம்பவங்கள் குறித்து உறுதி செய்ய முடியாது என்றும் அந்த விசாரணை பக்கச்சார்பற்ற வகையில் நடக்கும் என்பதில் தமக்கு நம்பிக்கை கிடையாது என்றும் சிவோண் மக்டொனால்ட் கூறினார்.
மேலும் இங்கே தொடர்க...

சந்திரிகா கொலை முயற்சி : குற்றவாளிக்கு கடூழிய சிறை


இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவை தற்கொலை தாக்குதல் மூலம் கொலை செய்ய முயற்சி செய்த பிரதான குற்றவாளி என இனங்காணப்பட்டவருக்கு நேற்று கொழும்பு மேல் நீதிமன்றம் கடூழிய சிறைத்தண்டனையை விதித்து தீர்ப்பளித்தது.

இந்த சம்பவத்தின் போது மேற் கொள்ளப்பட்டதாக கூறப்படும் 28 குற் றச்சாட்டுகளுடன் தொடர்பு கொண்டமையை ஏற்றுக்கொண்ட வவுனியா நாவற்குளத்தைச் சேர்ந்த சத்திவேல் இலங்கேஸ்வரன் என்பவருக்கே 30 வருட கடூழியச் சிறைத் தண்டனையை மேல் நீதிமன்ற நீதிபதி டபிள்யூ. ரி.எம்.பி.டி. வராவெள, வழங்கினார்.

சம்பவத்தின் போது தற்கொலைக் குண்டு வெடிப்பினால் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவுக்கு மரணம் சம்பவித்திருக்குமானால் ஜனாதிபதித் தேர்தல் இடைநிறுத்தப் பட்டிருக்கும். இதனால் தேர்தல் திணைக்களத்திற்கு சுமார் ஆறு கோடி ரூபா நட்டம் ஏற்பட்டிருக்கும் என நீதி பதி தமது தீர்ப்பின் போது குறிப்பிட்டார்.

அத்துடன், கொலை முயற்சியின் போது துப்பாக்கியால் தாக்குதல் நடத்தியிருக்க கூடிய நிலையிலிருந்த போதும் குண்டை வெடிக்கவைத்து பல உயிர்களை காவுகொள்ள செய்தமையைக் கொண்டே குற்றவாளிக்கு இந்த தண்ட னையை வழங்குவதாக நீதிபதி தமது தீர்ப்பில் குறிப்பிட்டார்.
மேலும் இங்கே தொடர்க...

2000 இரத்தினக் கற்களை வயிற்றில் கடத்திய இலங்கையர் சென்னையில் கைது

இரண்டாயிரம் நவரத்தினக் கற்களை வயிற்றுக்குள் விழுங்கி கடத்திச் சென்ற இலங்கை நபர் சென்னை விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பில் இருந்து சென்னைக்கு சென்ற விமானத்தில் வந்த பயணிகளிடம் விமான நிலைய அதிகாரிகள் சோதனை மேற்கொண்டுள்ளனர். அப்போது முகமது சபீக் என்பவர் மீது விமான நிலைய அதிகாரிகளுக்கு சந்தேகம் எழுந்துள்ளது. இதையடுத்து அவரை சோதனை செய்துள்ளனர். மேலும் சந்தேகம் அடைந்த விமான நிலைய அதிகாரிகள் அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

மருத்துவமனையில் அவருக்கு ஸ்கான் செய்யப்பட்டது. அதில் வயிற்றில் நவரத்தின கற்கள் இருப்பது தெரியவந்தது. பின்னர் உரிய முறையில் மருத்துவ சிகிச்சை அளித்து அவரிடம் இருந்து நவரத்தின கற்கள் மீற்கப்பட்டுள்ளன. சுமார் 2 ஆயிரம் நவரத்தின கற்கள் இருந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பறிமுதல் செய்யப்பட்ட நவரத்தின கற்களின் மதிப்பு ஒன்றரை கோடி ரூபாய் என சென்னை புறநகர் காவல்துறை ஆணையர் ஜாக்கிட் தெரிவித்தார். நவரத்தின கற்களை கடத்தி வர தனக்கு இந்திய மதிப்பின்படி 10 ஆயிரம் ரூபாய் கொடுப்பதாக சிலர் கூறியதாக முகமது சபீக் பொலிஸாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்.

முகமது சபீக் பின்னணியில் உள்ள கடத்தல் கும்பலை தீவிரமாக தேடி வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர் என இந்திய செய்தி அறிக்கைகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இங்கே தொடர்க...

மலசலக் குழியிலிருந்து குழந்தை உயிருடன் மீட்பு


பிறந்து பத்து நாட்களேயான சிசு ஒன்று பாடசாலை புத்தகப் பையொன்றில் போட்டு மலசலக் குழியொன்றுக்குள் இருந்து உயிருடன் மீட்கப்பட்டுள்ளதாக வெலிமட பொலிஸார் தெரிவிக்கின்றனர். நேற்று (27) காலையில் வெலிமட லந்தேகம பஹலகபில வெல என்ற இடத்திலுள்ள வீடொன்றுக்கு அருகாமையிலிருந்த மலசல குழியொன்றுக்குள் இருந்து இந்த ஆண் சிசு மீட்கப்பட்டுள்ளது.

நேற்று அதிகாலை வேளை 5.30 மணியளவில் குழந்தையொன்றின் அழுகுரல் தொடர்ந்து கேட்ட வண்ணம் இருந்துள்ளது. அதனையடுத்து பிரதேசவாசிகள் தேடுதல் நடத்தியுள்ளனர்.

அப்போது அங்கு மலசலக்குழியொன்றுக்கு அருகாமையில் அந்த சத்தம் வந்துள்ளது. அதனையடுத்து தேடுதல் நடத்திய கிராம வாசிகள் மலசல குழியொன்றுக்குள் புத்தக பையொன்றை கண்டு எடுத்துள்ளனர். தற்போது குழந்தை ஆரோக்கியமாகவுள்ளது. வெலிமட பொலிஸார் குழந்தையின் தாயைத்தேடி வருகின்றனர்.
மேலும் இங்கே தொடர்க...

முதலீட்டாளர் குழு இன்று வன்னி விஜயம் தொழிற்சாலைகள் அமைக்கும் இடங்களை பார்வையிடுவர்


வட மாகாணத்தில் பல கோடி ரூபா செலவில் பாரிய முதலீடுகளை மேற்கொள்ளவுள்ள ஆறு முன்னணி நிறுவனங்களின் பிரதிநிதிகள் முதற்கட்டமாக இன்று வவுனியா விஜயம் செய்யவுள்ளனர்.

ஒவ்வொரு நிறுவனமும் பல கோடி ரூபா செலவில் தாம் புதிதாக நிர்மா ணிக்கவுள்ள தொழிற்சாலைகளை அமைப்பதற்குத் தேவையான இடங்களை நேரில் சென்று பார்வையிட்டு அடையாளம் காணவுள்ளதாக வட மாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜி. ஏ. சந்திரசிறி தெரிவித்தார்.

வட மாகாணத்தில் முதலீடு செய்ய இணக்கம் தெரிவித்த பிரென்டிக்ஸ், ஹைத்ராமணி, மாஸ் ஹோல்டிங், டைமெக்ஸ் ஓவிட் ஆகிய நிறுவனங்களின் பிரதிநிதிகளுக்கும், தனக்கும் இடையில் வவுனியாவில் இன்று விசேட சந்திப்பு ஒன்றும் இடம்பெறவுள்ளதாக ஆளுநர் மேலும் தெரிவித்தார்.

வட பகுதியில் மீள்குடியேற்ற நடவடிக் கைகள் இறுதிக் கட்டத்தை அடைந்துள்ள நிலையில், கைத்தொழில் துறையை அபிவிருத்தி செய்யும் பொருட்டும் புதிய தொழில் வாய்ப்புக்களை ஏற்படுத்தும் வகையிலும் அமைச்சர் பசில் ராஜபக்ஷவின் ஆலோசனைக்கமைய இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக ஆளுநர் சுட்டிக் காட்டினார்.

முதலீட்டாளர் குழுவினருடன், இலங்கை முதலீட்டுச் சபை, சுற்றாடல் திணைக்கள அதிகாரிகளும் இன்று வவுனியா செல்லவுள்ளனர். வவுனியா நகர், வவுனியா வடக்கு, செட்டிக்குளம் மற்றும் நெலுங்குளம் பகுதிகளுக்கே இந்த முதலீட்டாளர்கள் நேரில் சென்று காணிகளை அடையாளங் காணவுள்ளனர்.

சுற்றாடல் மற்றும் வனவள திணைக்களங் களின் அறிக்கை பெறப்பட்டவுடன் சில வாரங்களில் தொழிற்சாலைகளை நிர்மாணிக்கும் பணிகளை ஆரம்பிக்க மேற்படி முன்னணி நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளதாகவும் ஆளுநர் தெரிவித்தார்.

இலங்கை முதலீட்டுச் சபையின் ஊடாக மேற்படி தொழிற்சாலைகள் அமைக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட வுள்ளதாக தெரிவித்த ஆளுநர், இதற்குத் தேவையான சகல ஒத்துழைப்புக்களையும் வட மாகாண சபை மேற்கொண்டுள்ளது என்றும் தெரிவித்தார்.

யாழ். கிளிநொச்சி பகுதிகளிலும் தொழிற்சாலைகள் நிறுவப்பட்டு வருவதாகச் சுட்டிக்காட்டிய ஆளுநர், இது போன்ற தொழிற்சாலைகள் அமைக்கப்படுவதன் மூலம் வட மாகாணத்திலுள்ள இளைஞர், யுவதிகளுக்கு தொழில் வாய்ப்புக்களை பெற சிறந்த சந்தர்ப்பமாக அமையும் என்றும் இவர்களுக்கு புதிய தொழில் வாய்ப்புகளை பெற்றுக் கொடுக்க முடியும் என்றும் தெரிவித்தார்.
மேலும் இங்கே தொடர்க...

25 கிலோ கஞ்சா கலந்த பாபுல் ஆட்டுப்பட்டித் தெருவில் கண்டுபிடிப்பு


25 கிலோ கிராம் எடையுள்ள கஞ்சா கலந்த பாபுல் மற்றும் அதற்காகப் பயன்படுத்தப்படும் கஞ்சா கலந்த புகையிலை என்பன கொழும்பு ஆட்டுப்பட்டித் தெருவில் வைத்து மீட்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரசாந்த ஜயக்கொடி கூறினார். இது அண்மைக் காலத்தில் பிடிபட்ட அதிகூடுதலான பாபுல் தொகையாகும்.

ஆட்டுப்பட்டித் தெருவில் மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதலின் போது கஞ்சா கலந்த பாபுல் வைத்திருந்த இருவர் கைது செய்யப்பட்டனர். இவர்களி டமிருந்து கிடைத்த தகவலின்படி ஆட்டிப்பட்டித் தெருவில் உள்ள இரு களஞ்சியங்களில் மறைத்து வைக்கப்பட்டிருந்த கஞ்சா கலந்த பாபுல், பாபுல் தயாரிப்பதற்காக இந்தியாவில் இருந்து தருவிக் கப்பட்ட 20 இலட்சம் பெறுமதி யான கஞ்சா கலந்து புகையிலை, பல்வேறு போதை ஏற்படுத்தும் பொருட்கள் என்பனவும் மீட்கப் பட்டதாக பொலிஸார் கூறினர்

சந்தேக நபர்கள் நேற்று மாளி காகந்த நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டனர்.
மேலும் இங்கே தொடர்க...

இந்தோனேசியாவில் சுனாமி, எரிமலை வெடிப்பு 180 பலி: 500க்கு மேல் மாயம்


இந்தோனேசியாவின் ஜாவாத் தீவுகளில் ஏற்பட்ட சுனாமித் தாக்கம் மற்றும் எரிமலை வெடிப்புக்களால் 180 பேர் கொல்லப்பட்டிருப்பதுடன் 500 ற்கும் அதிகமானவர்கள் காணாமல் போயுள்ளனர்.

இந்தோனேசியாவின் மேற்குப் பகுதித் தீவான மெத்தாவியில் திங்கட்கிழமை 7.7 ரிச்டர் அளவில் ஏற்பட்ட நில நடுக்கத்தைத் தொடர்ந்து ஏற்பட்ட சுனாமித் தாக்கத்தில் 10 கிராமங்கள் முற் றாகச் சேதமடைந்துள்ளதுடன் 154 பேர் கொல்லப்பட்டனர். 10 அடி உயரத்துக்கு சுனாமி அலைகள் தாக்கியுள்ளன. அதே நேரம் ஜாவாத் தீவுகளிலுள்ள மெராப்பி எரி மலை தீக் குழம்பை கக்கியதில் அதில் சிக்கி 26 பேர் உயிரிழந்துள்ளனர். சுனாமித் தாக்கத்துக்குள்ளான பகுதிக் கடல் கொந் தளிப்புடன் காணப்படுவதால் நேற்றைய தினமே மீட்புப் பணியாளர்கள் விமானங்கள் மூலமும் ஹெலிகொப்டர்கள் மூலம் அப் பகுதியைச் சென்றடைந்தனர். பாதிக்கப்பட்ட மக்களுக்கான உடனடி நிவாரணங்களும், மருந்துப் பொருள்களும் அனுப்பி வைக் கப்பட்டுள்ளன. இந்தோனேசியாவில் மீண்டும் நில நடுக்கம் ஏற்பட்டதால், கடலில் 10 அடி உயரத்துக்கு சிறிய அளவில் சுனாமி ஏற்பட்டது. மென்டாவாய் தீவுகளில் 20 கி.மீ. தூரத்துக்கு சுனாமியால் ஏற்பட்ட அலைகள் புகுந்தன. இந்தச் சுனாமியில் சிக்கி மென்டாவாய் தீவுகளில் 150 வீடு கள் சேதம் அடைந்தன. மென்டாவாய் தீவுகளில் தெற்கு பகாய் என்ற இடத்தில் உள்ள பெலு மொங்கா உள்ளிட்ட பல கிராமங்களைச் சேர்ந்த பெண்கள், குழந் தைகள் உட்பட 380 பேர், வெள்ளத்தில் சிக்கிக் காணாமல் போய்விட்டனர். மலகோபா என்ற கிராமத்தில் 80 சதவீத வீடுகள் அழிந்துவிட்டன. உணவுத் தட் டுப்பாடும் ஏற்பட்டுள்ளது. தீவுகளின் அரு கில், படகில் சுற்றுலா மேற்கொண்டிருந்த 10 ஆஸ்திரேலியர்கள் பற்றிய தகவல் எதுவும் கிடைக்கவில்லை.
மேலும் இங்கே தொடர்க...